மனித நேயம்

193 views
Skip to first unread message

Girija Varadharajan

unread,
Aug 30, 2009, 3:37:34 AM8/30/09
to santhav...@googlegroups.com
29 -08-09 அன்று சிங்கப்பூரில் கடற்கரைச் சாலையில் கவி மாலை என்ற நிகழ்ச்சியில் நான் படித்த மனித நேயம் என்ற தலைப்பிலான  கவிதை, குழு உறுப்பினர் தம் கருத்துக்களை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

 
நேயம்  பிறக்கும்   நினைந்தாலே மற்றவரின்
காயம் வரவழைக்கும் கண்ணீரில் - மாயமில்லை
தன்னலம்  போக்கித் தவிப்போர்க்(கு) அழைப்பின்றி
முன்ன(ம்)  உதவு  முனைந்து.                                               (1)
 
மனிதனே !  நேயம் மறப்பாய் ஆயின்
மனிதனே  அல்லன், மனங்கொள் - புனிதமாம்
தொண்டு பிறர்பால்  துணையிருந்(து) ஆற்றினால்
உண்டுனக் கென்று(ம்)  உயர்வு.                                             (2)
 
உயரம்   அடையவழி ஒன்றே பிறரின்
துயரம் துடைப்பாய் துரிதம் - அயர்வின்றிப் 
போக்கினால் துன்பம் பிறர்காணும்  போதுநீ,
ஆக்க(ம்) அடைவா(ய்) அறி                                                  (3)
 
அறிவுக்(கு) அடையாள(ம்)  அன்போ(டு)  அகற்றல்
பிறிதுயிர்  காண்கின்ற பீழை- செறிவுமிக
வள்ளுவன் சொன்னதை **  வாழ்வின் நெறியாகக்
கொள்ளுதல் நேயமாம் கூறு.                                              (4)
 
குளிரால் வாட்டம் ; கொடுத்திடு  போர்வை,
தளிருக்கும்  ஊற்றுவாய் தண்ணீர் - துளியேனும்
ஈவிரக்கம் கொள்வாய்  இயலாத பேர்மீது
பாவிப்பாய் பாரிலிது  பண்பு.                                                (5)
 
பண்பின் வெளிப்பாடு பாசம் பரிவுமாம்
அன்பின் வழிய(து)  அவையிரண்டும் - மன்பதையும்
நேசக் கரம்நீட்டி நேயம் மிகுந்தாரைப்
பாசமொடு போற்றும் பணிந்து.                                          (6)
 
தன்னலம் போற்றுகிற தன்மை களைந்ததன்
பின்னரே நேயம் பிறந்திடும்  - மன்னுலகில்
மற்றவர் துன்பத்தை மட்டின்றித் தான்முழுதும்
உற்றதாய்க் கொள்ளல்  உயர்வு.                                          (7)
 
தீமை பிறர்கண்டால் தீர்மான மாயதனை
நாமே அடைந்ததாய் நம்பிடுவோம் - பூமியில்
அல்ல(ல்)  அடைந்தாரை அண்டி அதுதன்னை
ஒல்லை  களைவோ(ம்) உணர்ந்து .                                    (8)
 
வாடு(ம்)  உயிர்கண்டு வாடும்  மனத்தைக் 
கூடும்  வரையிலும்  கொண்டிடுவாய்  - நாடியே 
காசினியின்   துன்பம் களைந்து கனிவுடன் 
நேசக்  கரம்நீட்டு  நீ.                                                               (9)
 
வாட்ட(ம்)  உறுவாரை வந்தணைந்து வற்றாது 
காட்டவர் பால்நீ  கருணைமிக  - பாட்டில் 
உரைத்த  பலவற்றை உள்ளம் முழுதும் 
நிரைத்தென்றும்  நேயவழி நில்.                                         (10)     
    
 
**அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய், தன்நோய் போல் போற்றாக் கடை
 
            
Varadharajan
Email:  girijavar...@gmail.com

K.R. Kumar

unread,
Aug 30, 2009, 4:45:31 AM8/30/09
to santhav...@googlegroups.com
அன்று நானும் இந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.
 
படித்தது-பிடித்தது-படைத்தது என்னும் அங்கத்தில் பல கவிஞர்கள்(?) பல கவிதை(?)களைப் படைத்தனர். ஒன்றிரண்டைத்தவிர ஒன்றும் சுவாரசியமாக இல்லை.
 
நண்பர் வரதராஜன் பல நாட்களுக்கு முன் எழுதியிருந்த “இமயம் பெரிதோ இயம்பு” என்னும் ஈற்றடியில் ஒரு பதிகம் பாடினார். பிறகு அவை அனுமதியுடன் “நிழல் தேடும் சூரியன்” என்னும் தலைப்பில் ஒரு பதிகம் பாடினார். (எல்லாம் மரபு வெண்பாக்கள்).
 
பிறகு மலேசியாவிலிருந்து வந்த ஒரு பேச்சாளர் “கம்பனும் கண்ணதாசனும்” என்னும் தலைப்பில் சுமார் 20 நிமிடங்கள் பேசினார்(?).
 
ஹரி போன்ற ஜாம்பவான்கள் எழுத்தைப் படித்த பின்னும், வரதராஜன்
போன்றோர் இதுவரை “கம்பனைப் பற்றி(இராமாயாணம்) பேசிய பேச்சுகளைக் கேட்டபின்னும்  அவ்வளவாக ஒரு தாக்கம் ஏற்படுத்தவில்லை.
 
ஒரு சுவாரஸ்யமான செய்தி.
 
அன்றைய நிகழ்ச்சிக்குப் போட்டிக்கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தலைப்பு “மனித நேயம்”. ஆனால் ”வரதன்” அவற்றை போட்டிக்காக எழுதவில்லை என்று கூறி போட்டி ஏற்பாட்டாளரிடம் கொடுக்க மறுத்துவிட்டார். போட்டிக்கு வந்த கவிதைகள் யாவற்றையும் வரதராஜனிடமே கொடுத்து அறுவரை தேர்ந்தெடுக்கும் பணியையும் ஏற்பாட்டாளர் அவரிடமே கொடுத்துவிட்டனர்.
 
பிறகு நிகழ்ச்சி அறிவிப்பாளர் ”கம்பன் வரதன்” இப்பொழுது மனித நேயம் பற்றி  கவிதை படைப்பார் என்று அறிவித்தார். அப்பொழுது வரதராஜன் பக்கத்தில்தான் நான் உட்கார்ந்திருந்தேன். அறிவிப்பைக் கேட்டவுடன் வரதன் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார் (கம்பன் வரதன் யாரென்று பார்க்க!). பிறகு நான்தான் அவரைத்தட்டி உம்மைதான் கூபிடுகிறார்கள் ஸ்வாமி, போய் உங்கள் கவிதையைப் படையுங்கள் என்றபின் “மனித நேயம்” தலைப்பில் அவரது வெண்பாக்களைப் படைத்தார்.
 
அவருக்கு அறிவிப்பாளர் “கம்பன் வரதன்” என்ற விளிப் பட்டத்தை அளித்ததையே அவர் உணரவில்லை. அவருக்கு அத்தனை பணிவான குணம் (humble). அவரின் நட்பு கிடைத்ததற்கு இறைவனுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.
 
எனது அபிப்பிராயம் :
 
இவரது வெண்பாக்களை போட்டிக்குக் கொடுத்திருந்தால் கட்டாயம் அவருக்குதான் முதல் பரிசு கிடைதிருக்கும்.  போட்டிக்கு வந்த மற்ற கவிதைகள் இவற்றிற்கு முன் “ஜுஜுபீ”. 
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/8/30 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Siva Siva

unread,
Aug 30, 2009, 8:12:06 AM8/30/09
to santhav...@googlegroups.com
நல்ல கருத்துடைய பாடல்கள். உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/8/30 Girija Varadharajan <girijavar...@gmail.com>

29 -08-09 அன்று சிங்கப்பூரில் கடற்கரைச் சாலையில் கவி மாலை என்ற நிகழ்ச்சியில் நான் படித்த மனித நேயம் என்ற தலைப்பிலான  கவிதை, குழு உறுப்பினர் தம் கருத்துக்களை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

 
நேயம்  பிறக்கும்   நினைந்தாலே மற்றவரின்
காயம் வரவழைக்கும் கண்ணீரில் - மாயமில்லை
தன்னலம்  போக்கித் தவிப்போர்க்(கு) அழைப்பின்றி
முன்ன(ம்)  உதவு  முனைந்து.                                               (1)
 
மனிதனே !  நேயம் மறப்பாய் ஆயின்
மனிதனே  அல்லன், மனங்கொள் - புனிதமாம்
தொண்டு பிறர்பால்  துணையிருந்(து) ஆற்றினால்
உண்டுனக் கென்று(ம்)  உயர்வு.                                             (2)

"மனிதனே !  நேயம் மறப்பாய் ஆயின் மனிதனே  அல்லன்" - 'மனிதனே', 'மறப்பாய்' என முன்னிலையில் சொன்னதால், 'அல்லன்' என்னாமல் 'அல்லை' என்றிருந்திருக்கவேண்டும்.
 
 
உயரம்   அடையவழி ஒன்றே பிறரின்
துயரம் துடைப்பாய் துரிதம் - அயர்வின்றிப் 
போக்கினால் துன்பம் பிறர்காணும்  போதுநீ,
ஆக்க(ம்) அடைவா(ய்) அறி                                                  (3)
 

சில இடங்களில் சொற்களை இன்னும் சற்று எளிய முறையில் அமைத்தால் பாடலின் ஓட்டம் இன்னும் சிறக்கும் என எனக்குத் தோன்றுகிறது.

"அயர்வின்றிப் போக்கினால் துன்பம் பிறர்காணும்  போதுநீ, ஆக்க(ம்) அடைவா(ய்) அறி" - இதைப் "பிறர் துன்பம் காணும்போது நீ அயர்வின்றிப் போக்கினால் ஆக்கம் அடைவாய் அறி" என்று பொருள்கொள்ளவேண்டும் என எண்ணுகிறேன்.


அறிவுக்(கு) அடையாள(ம்)  அன்போ(டு)  அகற்றல்
பிறிதுயிர்  காண்கின்ற பீழை- செறிவுமிக
வள்ளுவன் சொன்னதை **  வாழ்வின் நெறியாகக்
கொள்ளுதல் நேயமாம் கூறு.                                              (4)
 
குளிரால் வாட்டம் ; கொடுத்திடு  போர்வை,
தளிருக்கும்  ஊற்றுவாய் தண்ணீர் - துளியேனும்
ஈவிரக்கம் கொள்வாய்  இயலாத பேர்மீது
பாவிப்பாய் பாரிலிது  பண்பு.                                                (5)
 
பண்பின் வெளிப்பாடு பாசம் பரிவுமாம்
அன்பின் வழிய(து)  அவையிரண்டும் - மன்பதையும்
நேசக் கரம்நீட்டி நேயம் மிகுந்தாரைப்
பாசமொடு போற்றும் பணிந்து.                                          (6)

நேசம், நேயம் - பொருள்வேறுபாடு உண்டா?
 
தன்னலம் போற்றுகிற தன்மை களைந்ததன்
பின்னரே நேயம் பிறந்திடும்  - மன்னுலகில்
மற்றவர் துன்பத்தை மட்டின்றித் தான்முழுதும்
உற்றதாய்க் கொள்ளல்  உயர்வு.                                          (7)
 
தீமை பிறர்கண்டால் தீர்மான மாயதனை
நாமே அடைந்ததாய் நம்பிடுவோம் - பூமியில்
அல்ல(ல்)  அடைந்தாரை அண்டி அதுதன்னை
ஒல்லை  களைவோ(ம்) உணர்ந்து .                                    (8)
 
வாடு(ம்)  உயிர்கண்டு வாடும்  மனத்தைக் 
கூடும்  வரையிலும்  கொண்டிடுவாய்  - நாடியே 
காசினியின்   துன்பம் களைந்து கனிவுடன் 
நேசக்  கரம்நீட்டு  நீ.                                                               (9)
 
வாட்ட(ம்)  உறுவாரை வந்தணைந்து வற்றாது 
காட்டவர் பால்நீ  கருணைமிக  - பாட்டில் 
உரைத்த  பலவற்றை உள்ளம் முழுதும் 
நிரைத்தென்றும்  நேயவழி நில்.                                         (10)     
    
 
**அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய், தன்நோய் போல் போற்றாக் கடை
 
            
Varadharajan
Email:  girijavar...@gmail.com






--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Girija Varadharajan

unread,
Aug 30, 2009, 6:33:48 PM8/30/09
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா.
 
உங்கள் வழிகாட்டலுக்கு.
 
அல்லன் என்பதை அல்லை என்று மாற்றிவிடுகிறேன்.நல்லதொரு வடிவம் நீங்கள் சொன்னது. கவிதையின் அழகு கூடுகிறது.
 
பிறர் துன்பம் காணும்  போது,   நீ அயர்வின்றிப்  போக்கினால் , ஆக்கம் அடைவாய் அறி 
 
என்று நீங்கள் குறிப்பிட்ட எண்ணத்தில் தான் வடித்தேன். இன்னும் நேரிடையாகச் சொல்வதுதான்  சிறப்பு என்பதை உணர்கிறேன். அந்த முயற்சியில் இறங்கினேன்.  கவிதயை அன்று மாலையிலேயே  படிக்க வேண்டிய கட்டாயத்தினால் அம்முயற்சியைக்  கைவிட்டு,  தற்போதைய வடிவத்தில் எழுதினேன் .
 
பள்ளி நாட்களில்( சுமமர்  50 ஆண்டுகளுக்கும் முன்னர் )  " கொண்டு கூட்டுப் பொருள் " என்று  இதனை எனக்கு என் தமிழாசிரியர் கற்பித்ததாக ஞாபகம்.  

அன்புடனும் நன்றியுடனும்,
 
வரத ராஜன். அ.கி.
 
 
2009/8/30 Siva Siva <naya...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Aug 30, 2009, 9:49:19 PM8/30/09
to santhav...@googlegroups.com
 

வெண்பாக்கள் நன்றாக விரைகின்றன.

மனிதனே நேயம் மறப்பாய் ஆயின் -  மறப்பாய் ஆயின் - தளை தட்டுகிறது

 ilanthai

2009/8/30 Girija Varadharajan <girijavar...@gmail.com>
29 -08-09 அன்று சிங்கப்பூரில் கடற்கரைச் சாலையில் கவி மாலை என்ற நிகழ்ச்சியில் நான் படித்த மனித நேயம் என்ற தலைப்பிலான  கவிதை, குழு உறுப்பினர் தம் கருத்துக்களை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 30, 2009, 11:16:42 PM8/30/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள ராஜன்,
வெண்பாக்கள் மிகவும் அருமையாக அமைந்துள்ளன. கருத்தோட்டத்தையும் தொய்வில்லாத நடையையும் மிகவும் இரசித்தேன் பாராட்டுகள்!
சிவ சிவாவின் வினாவிற்கு நீங்கள் அளித்த ’கொண்டு கூட்டுப் பொருள்’ விளக்கம் சரியானதே.
அனந்த்
30-8-2009
 
2009/8/30 Girija Varadharajan <girijavar...@gmail.com>

srinivasan s

unread,
Aug 31, 2009, 1:30:18 AM8/31/09
to santhav...@googlegroups.com
நேயத்தைப் பற்றி நிறைவான பாசுரங்கள்
தூயதாக்கும் நமது சிந்தையினை! -- ஆய
கலைகள அனைத்திருந்தும் காக்குமோ நம்மை
இலையேல் சிறிதுநே யம்?
 
தவறு இருப்பின் மன்னிக்கவும்.
அன்புடன்
அன்பில் சீனிவாசன்

 

Girija Varadharajan

unread,
Aug 31, 2009, 4:36:32 AM8/31/09
to santhav...@googlegroups.com
 
அன்புள்ள இலந்தை ஐயா,
 
பிழை சுட்டியமைக்கு நன்றி ஐயா.
 
"மனிதனே நேயம் மறந்திடுவாய் ஆயின்"
 
என்று மாற்றிகொள்கிறேன்
 
 
வரத ராஜன்
 
2009/8/31 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>


--
Thanks and Regards
Girija

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

அகரம்.அமுதா

unread,
Aug 31, 2009, 6:24:15 AM8/31/09
to சந்தவசந்தம்
கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.
(ஒரு ஓரமாக அமர்ந்திருந்து விட்டு வந்துவிட்டேன்). அய்யா கம்பன்
வரதனாரின் பாமழையில் நனைந்தின்பம் கொண்டேன். அப்பொழுதே அவரைப் பார்த்து
வாழ்த்துக்கூற வேண்டும் எனநினைந்தும் தவிர்த்துவிட்டேன். வாழ்த்த அகவை
எனக்கில்லையெனினும் அய்யா கம்பன் வரதனாருக்கென் வாழ்த்துக்களைக்
காணிக்கையாக்குகிறேன். வாழ்க.

நன்பா பலவடித்து நல்லவையில் வாசிக்கும்
அன்பாளர் அய்யா வரதனார்க் -கன்பனிவன்
பல்லாண்டு வாழ்கவெனப் பாடுகிறேன்! பைந்தமிழின்
சொல்லாண்டு பாக்குச்செய்(வீர்) தொண்டு!

அகரம் அமுதா

On Aug 31, 4:36 pm, Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
wrote:


> அன்புள்ள இலந்தை ஐயா,
>
> பிழை சுட்டியமைக்கு நன்றி ஐயா.
>
> "மனிதனே நேயம் மறந்திடுவாய் ஆயின்"
>
> என்று மாற்றிகொள்கிறேன்
>
> வரத ராஜன்
>

> 2009/8/31 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > வெண்பாக்கள் நன்றாக விரைகின்றன.
>
> > மனிதனே நேயம் மறப்பாய் ஆயின் -  மறப்பாய் ஆயின் - தளை தட்டுகிறது
>
> >  ilanthai

> >  2009/8/30 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>

> >> Email:  girijavaradhara...@gmail.com


>
> --
> Thanks and Regards
> Girija
>
> Girija Varadharajan
> Executive Life Planner
> Great Eastern Life Assurance Co Ltd
> HP:  91852063

> Email:  girijavaradhara...@gmail.com- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Aug 31, 2009, 7:59:54 AM8/31/09
to santhav...@googlegroups.com
யாரும் யாரையும் வாழ்த்தலாம். அதில் வயது குறுக்கிடாது. (அன்றெனில் 80 வயதுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை 'வாழ்க' எனச் சொல்லத் தொண்டர்கள் இரார்!)

ஈர் ஐயங்கள்.

1) நன்பா? நற்பா? இரண்டுமே சரியா?

2) தமிழ்க்குத் தொண்டு - படித்துள்ளேன். பாவிற்குத் தொண்டு செய்வதுபோல் சொல்லும் எடுத்துக்காட்டுகள் உள்ளனவா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/8/31 அகரம்.அமுதா <agrama...@gmail.com>

கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.
(ஒரு ஓரமாக அமர்ந்திருந்து விட்டு வந்துவிட்டேன்). அய்யா கம்பன்
வரதனாரின் பாமழையில் நனைந்தின்பம் கொண்டேன். அப்பொழுதே அவரைப் பார்த்து
வாழ்த்துக்கூற வேண்டும் எனநினைந்தும் தவிர்த்துவிட்டேன். வாழ்த்த அகவை
எனக்கில்லையெனினும் அய்யா கம்பன் வரதனாருக்கென் வாழ்த்துக்களைக்
காணிக்கையாக்குகிறேன். வாழ்க.

நன்பா பலவடித்து நல்லவையில் வாசிக்கும்
அன்பாளர் அய்யா வரதனார்க் -கன்பனிவன்
பல்லாண்டு வாழ்கவெனப் பாடுகிறேன்! பைந்தமிழின்
சொல்லாண்டு பாக்குச்செய்(வீர்) தொண்டு!

அகரம் அமுதா

Girija Varadharajan

unread,
Aug 31, 2009, 8:24:35 AM8/31/09
to santhav...@googlegroups.com
நன்றி அகரம் அமுதா,
 
வரும் ஞாயிறு  செப்டம்பர் ஆறாம் நாள் , இலக்கிய வட்டத்தில்
 
ஒரு பரதனும் ஓராயிரம் இராமனும்
 
என்ற தலைப்பில் நான் பேச வாய்ப்புத்  தந்துள்ளார்கள். 
 
கம்பனின் சொலாட்சியில் களிக்க, நீங்களும் உங்கள் நண்பர்களும் வந்து இலக்கிய வட்டத்திற்கு ஆதரவு  தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
 
 
அன்புடன் வரத ராஜன்.
 
 

 
2009/8/31 அகரம்.அமுதா <agrama...@gmail.com>
கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.

(ஒரு ஓரமாக அமர்ந்திருந்து விட்டு வந்துவிட்டேன்). அய்யா கம்பன்
வரதனாரின் பாமழையில் நனைந்தின்பம் கொண்டேன். அப்பொழுதே அவரைப் பார்த்து
வாழ்த்துக்கூற வேணெப்டம்பர்டும் எனநினைந்தும் தவிர்த்துவிட்டேன். வாழ்த்த அகவை

K.R. Kumar

unread,
Aug 31, 2009, 10:29:57 AM8/31/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள அகரம் அமுதா,
 
பல நாட்களாக உங்களைச் சந்திக்க அடியேனும் வரதராஜன் ஐயாவும் விருப்பம் கொண்டுள்ளோம். நாம் மீண்டும் கூடுமிடத்தில் தங்களை தயவு செய்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/8/31 அகரம்.அமுதா <agrama...@gmail.com>
கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.

nahupoliyan

unread,
Aug 31, 2009, 2:38:51 PM8/31/09
to சந்தவசந்தம்
நேசம், நேயம் - பொருள்வேறுபாடு உண்டா? கிடையாது.
நன்பா? நற்பா? இரண்டுமே சரியா? நற்பா


On Aug 31, 4:59 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> யாரும் யாரையும் வாழ்த்தலாம். அதில் வயது குறுக்கிடாது. (அன்றெனில் 80
> வயதுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை 'வாழ்க' எனச் சொல்லத் தொண்டர்கள்
> இரார்!)
>
> ஈர் ஐயங்கள்.
>
> 1) நன்பா? நற்பா? இரண்டுமே சரியா?
>
> 2) தமிழ்க்குத் தொண்டு - படித்துள்ளேன். பாவிற்குத் தொண்டு செய்வதுபோல்
> சொல்லும் எடுத்துக்காட்டுகள் உள்ளனவா?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/8/31 அகரம்.அமுதா <agramamuth...@gmail.com>


>
> > கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.
> > (ஒரு ஓரமாக அமர்ந்திருந்து விட்டு வந்துவிட்டேன்). அய்யா கம்பன்
> > வரதனாரின் பாமழையில் நனைந்தின்பம் கொண்டேன். அப்பொழுதே அவரைப் பார்த்து
> > வாழ்த்துக்கூற வேண்டும் எனநினைந்தும் தவிர்த்துவிட்டேன். வாழ்த்த அகவை
> > எனக்கில்லையெனினும் அய்யா கம்பன் வரதனாருக்கென் வாழ்த்துக்களைக்
> > காணிக்கையாக்குகிறேன். வாழ்க.
>
> > நன்பா பலவடித்து நல்லவையில் வாசிக்கும்
> > அன்பாளர் அய்யா வரதனார்க் -கன்பனிவன்
> > பல்லாண்டு வாழ்கவெனப் பாடுகிறேன்! பைந்தமிழின்
> > சொல்லாண்டு பாக்குச்செய்(வீர்) தொண்டு!
>
> > அகரம் அமுதா
>

> --http://nayanmars.netne.net/

Kaviyogi Vedham

unread,
Aug 31, 2009, 6:05:54 PM8/31/09
to santhav...@googlegroups.com
ரொம்ப அருமை.மனித நேயம் மிக்க அழகிய கருத்துடன் இருந்தன.
 வாழ்க வரதர்!
(அத்தாழை --பெருமாள் பற்றிய வெண்பாக்கள் ரெடியா?-- நினைவூட்டல்
 என் தியானத்தில் மீண்டும்.)-,
 யோகியார்
2009/8/30 Girija Varadharajan <girijavar...@gmail.com>
29 -08-09 அன்று சிங்கப்பூரில் கடற்கரைச் சாலையில் கவி மாலை என்ற நிகழ்ச்சியில் நான் படித்த மனித நேயம் என்ற தலைப்பிலான  கவிதை, குழு உறுப்பினர் தம் கருத்துக்களை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
மறப்பாய் ஆயின்
 
நேயம்  பிறக்கும்   நினைந்தாலே மற்றவரின்
காயம் வரவழைக்கும் கண்ணீரில் - மாயமில்லை
தன்னலம்  போக்கித் தவிப்போர்க்(கு) அழைப்பின்றி
முன்ன(ம்)  உதவு  முனைந்து.                                               (1)
 
மனிதனே !  நேயம் மறப்பாய் ஆயின்
மனிதனே  அல்லன், மனங்கொள் - புனிதமாம்
தொண்டு பிறர்பால்  துணையிருந்(து) ஆற்றினால்
உண்டுனக் கென்று(ம்)  உயர்வு.                                             (2)
 
உயரம்   அடையவழி ஒன்றே பிறரின்
துயரம் துடைப்பாய் துரிதம் - அயர்வின்றிப் 
போக்கினால் துன்பம் பிறர்காணும்  போதுநீ,
ஆக்க(ம்) அடைவா(ய்) அறி                                                  (3)
 
அறிவுக்(கு) அடையாள(ம்)  அன்போ(டு)  அகற்றல்
பிறிதுயிர்  காண்கின்ற பீழை- செறிவுமிக
வள்ளுவன் சொன்னதை **  வாழ்வின் நெறியாகக்
கொள்ளுதல் நேயமாம் கூறு.                                              (4)
 
குளிரால் வாட்டம் ; கொடுத்திடு  போர்வை,
தளிருக்கும்  ஊற்றுவாய் தண்ணீர் - துளியேனும்
ஈவிரக்கம் கொள்வாய்  இயலாத பேர்மீது
பாவிப்பாய் பாரிலிது  பண்பு.                                                (5)
 டன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

அகரம்.அமுதா

unread,
Sep 1, 2009, 6:36:54 AM9/1/09
to சந்தவசந்தம்
/////1) நன்பா? நற்பா? இரண்டுமே சரியா? //////

நன்பா புணர்ச்சிவிதிப்படி நற்பா எனவாகும். நான் அடியெதுகை நோக்கி நன்பா
என எழுதினேன்.


/////2) தமிழ்க்குத் தொண்டு - படித்துள்ளேன். பாவிற்குத் தொண்டு


செய்வதுபோல்

சொல்லும் எடுத்துக்காட்டுகள் உள்ளனவா?//////

சிந்திக்க வைக்கும் வினா! விடைகூற இயலவில்லை. இதுபோன்ற தடுமாற்றங்கள்
நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன். சுட்டியமைக்கு நன்றிகள் அய்யா! சிவா
அவர்களே!

//////நன்றி அகரம் அமுதா,


வரும் ஞாயிறு செப்டம்பர் ஆறாம் நாள் , இலக்கிய வட்டத்தில்


ஒரு பரதனும் ஓராயிரம் இராமனும்


என்ற தலைப்பில் நான் பேச வாய்ப்புத் தந்துள்ளார்கள்.


கம்பனின் சொலாட்சியில் களிக்க, நீங்களும் உங்கள் நண்பர்களும் வந்து
இலக்கிய

வட்டத்திற்கு ஆதரவு தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்./////


கண்டிப்பாக வரமுயல்கிறேன் அய்யா!

On Sep 1, 6:05 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> > ரொம்ப அருமை.மனித நேயம் மிக்க அழகிய கருத்துடன் இருந்தன.
>
>  வாழ்க வரதர்!
> (அத்தாழை --பெருமாள் பற்றிய வெண்பாக்கள் ரெடியா?-- நினைவூட்டல்
>  என் தியானத்தில் மீண்டும்.)-,
>  யோகியார்
>
>
>

> > 2009/8/30 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>

> >>  டன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!- Hide quoted text -

அகரம்.அமுதா

unread,
Sep 2, 2009, 6:10:22 AM9/2/09
to சந்தவசந்தம்
"பாக்குச்செய் தொண்டு!" இதைப் "பார்க்குச்செய் தொண்டு!" எனமாற்றி
அமைத்தால் நலம் எனக்கருதுகிறேன். சரிதானே!?

> > - Show quoted text -- Hide quoted text -

அகரம்.அமுதா

unread,
Sep 3, 2009, 9:23:42 PM9/3/09
to சந்தவசந்தம்
கீழ்வரும் வெண்பா, சிங்கை இலக்கிய வட்டத்தில் "ஒரு பரதனும் ஓராயிரம்
இராமனும்" என்னும் தலைப்பில் பேசவிருக்கும் அன்பர் கிரிஜா வரதராசனார்
அவர்களுக்கு.....

(கம்பராமாயணத்தைச் சுருக்கி ஒரு வெண்பாவுக்குள் சொன்னால்
எப்படியிருக்கும் என்ற கற்பனையில் தோன்றியது.....)


அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகவுலவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!


அமுதன்

Hari Krishnan

unread,
Sep 3, 2009, 11:14:48 PM9/3/09
to santhav...@googlegroups.com


2009/9/4 அகரம்.அமுதா agrama...@gmail.com


(கம்பராமாயணத்தைச் சுருக்கி ஒரு வெண்பாவுக்குள் சொன்னால்
எப்படியிருக்கும் என்ற கற்பனையில் தோன்றியது.....)


அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகவுலவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!
உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இராவணனை இராவண்ணன் என்று வெண்பா சௌகரியத்துக்காக மாற்றியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  இரா-வண்ணன், இருட்டு நிறத்தவன் என்று பொருள்கொண்டாலும் ராவணனுக்கு இந்தப் பெயர் பொருந்துமானாலும், ராமனும் இரா வண்ணன்தான்.  ஆனால் அவன் கரிய பகலவன்.  கருநாயிறு அனையான். 
 
கம்பன் பல பெயர்களைத் தமிழில் மாற்றினான்.  ரக்தாட்சனைக் குருதிக்கண்ணன் என்றும்; மகாபார்சுவானை மாபெரும் பக்கன் என்றும் (யாகசத்ருவா அல்லது வேறு பெயரா...நினைவுக்கு வரவில்லை) வேள்விப் பகைவன் என்றும் மாற்றியிருக்கிறான்.  இதைப் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள்.  இருந்தபோதிலும் ஆதாரமான பெயர்களை மாற்றவில்லை.  கும்பகர்ணனைக் குடக்காதன் என்று மாற்றவில்லை; சூர்ப்பணகையை முறநகத்தி என்று மாற்றவில்லை.  ராவணனுடைய பெயரையும் மாற்றவில்லை.  ராவணனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் தசக்ரீவன்.  பின்னர் தசமுகன், தசானனன் என்றெல்லாம் அறியப்பட்டான். ராவணன் என்ற பெயரைத் தந்தவர் சிவன்.  கைலாச மலையின் அடியில் அகப்பட்டுக்கொண்ட சமயத்தில் வலிபொறுக்க முடியாமல் அவன் அலறிய அலறல் எல்லா திசைகளையும் செவிடுபடுத்தியது என்பதால், ‘வாய்விட்டு அலறியவன்’ என்ற பொருளில் சிவன் ‘ராவணன்’ என்ற பெயரை தசானனனுக்குச் சூட்டினார். 
 
இப்படிப்பட்ட பெயர்களை கொஞ்சம்போற தட்டி நிமித்தி வளைத்துக் கொள்வதில் தவறில்லை என்றாலும், அப்படி மாற்றும்போது அந்தந்தப் பெயரின் அடிப்படைப் பொருளில் பேதம் தோன்றாமல் கையாள்வது அவசியம் என்பது என் இரண்டு சல்லி.  கூடுமானவரை வகையுளியைத் தவிர்க்க முடியுமானால் வெண்பா அழகாக இருக்கும்.
 
வையகத்துக் கில்லை மனமே நினக்குநலம்
செய்யக் கருதியிவை செப்புவேன் - பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையும் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர்
 
என்று பாரதி செய்ததைப் போல.  தொடர்ந்து வரும் வகையுளிகள் இயற்கையான ஓட்டத்தைக் குலைக்கின்றன என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.  ஆகா ஓகோக்களைக் காட்டிலும் அபிப்பிராயங்களையும் மதிப்பீர்கள் என்ற எண்ணத்தில் சொல்லிவிட்டேன்.  இதற்காகவும் இங்கே நிலவும் பொதுவான மரபை மீறியதற்காகவும் மன்னிக்க வேண்டுகிறேன். 



--
அன்புடன்,
ஹரிகி.

அகரம்.அமுதா

unread,
Sep 4, 2009, 2:27:25 AM9/4/09
to சந்தவசந்தம்
அய்யய்யோ! தங்கள் கருத்துக்களைத் தவறாக எடுத்துக்கொள்வதற்கில்லை. தங்கள்
கருத்திலுள்ள பொருண்மையை உணர்கிறேன். பொதுவாக வகையுளி செய்வதில் எனக்கும்
விருப்பமிருப்பதில்லை. அப்படியே வகையுளி செய்தாலும் மிக அருகி வருமாறே
செய்வேன். அப்பாடலில் தவிர்க்கமுடியவில்லை. மேலும் ராவணனை இரா வண்ணன்
எனப்பகுத்தது தளைக்காகவே. அப்படிப் பிரிப்பதால் அவன் நிறத்தைக்
குறிப்பதாக இருக்கும் எனக்கருதிப் பிரித்தேன். அவ்வளவே! தங்கள்
கருத்துக்களை மதிக்கிறேன். நன்றிகள் அய்யா!

On 4 Sep, 11:14, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/9/4 அகரம்.அமுதா agramamuth...@gmail.com

Kaviyogi Vedham

unread,
Sep 4, 2009, 9:32:32 AM9/4/09
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com
தசக்கிரீவன் என்றால் பத்து கழுத்துடையான் என்பதே..(க்ரீவ:=கழுத்து) பத்தென்றால் தலையும் பத்து இருக்கும்னேன்.
ஹயக்ரீவ ஸ்வாமி எனில் குதிரைக்(ஹய:=குதிரை)கழுத்துடைய ஸ்வாமி
என்றாகும்மே!அதுசரி..அமுதா உங்கள் சுருக்க வெண்பா அழகே தான்.
என் கோப்பில் முக்கியம் என்று’ சொல்லிச் சேமித்துவைத்தேன்.இராவண்ணன் எனில் ராவணன் என்றே அனைவரும் பொருள் கொண்டு படித்தோம்.தவறில்லை..தவிர்க்க முடியா இடத்தில் வகையுளியும் தவறே இல்லை..கிவாஜ.. அவர்களின் வெண்பாக்களைப்பாருங்கள்..பலவும் வகையுளி கலந்தே இருக்கும்.(ஆயின் அவரது ‘கவிபாடலாம்’ நூலில் வகையுளி தவிர்க்கச்சொல்வார்!!)
யோகியார்

2009/9/3 அகரம்.அமுதா <agrama...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Sep 4, 2009, 9:49:19 AM9/4/09
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com
நீங்கள் சொல்வது சரி ஹரி,
 ‘கொஞ்சம் போல நம்ம சௌகரியத்துக்காகப் பழைய பெயர்களைத்
தட்டி கொட்டி வளைப்பதில்(கொஞ்சம் போல!!) சரியே அதுவும் வெண்பா வுக்குள்   ‘அத்தை’ நுழைக்கையில்..
திருமால்  என்ற நல்ல பெயரை மாலன் என்று நாம் மாற்றவிலையா?
 பிரபந்தங்களில் யாரும் அவரை மாலன் என்று இட்டதாக கியாபகம்’ இல்லை.(மாலன்=மயக்கத்தைக் கொடுப்பவன்?)
 முற்போது காந்தி கணக்கு எனில் காந்தி வைத்திருந்த கணக்கு எனு நல்ல பொருள் கிட்டியது.
தற்போது ?..நாலு பழம் வாங்கியபின்,காந்தி கணக்கில் வச்சுக்கோப்பா! என்று கிராமத்துக்கடையில் சொல்லிப்பாருங்கள். படங்களில்..வடிவேலுவின்சட்டை கிழிந்தமாதிரி நம் சட்டையையும் கிழித்துப்பின்னிப் பெடலெடுத்துவிடுவான் எந்தப் பெட்டிக்கடைக்காரனும்.
 ..அதேமாதிரி..நாமம் போட்டார் அந்த’ஸ்வாமிகள்!’ எனில் அக்காலத்தில்
நல்ல பொருள் இருந்ததே!..இப்போது கிராமத்தில் கூட அது தப்பர்த்தமாக அல்லவா பொருள் படுகிறது!..ம்ம்ம்! எல்லாம் காலத்தின் கோலம் ஸ்வாமீ!..இன்னா? நானு சொல்றது பிரிஞ்சுதா?
யோகியார்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2009/9/3 Hari Krishnan <hari.har...@gmail.com>


2009/9/4 அகரம்.அமுதா agrama...@gmail.com
அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகவுலவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!
உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இராவணனை இராவண்ணன் என்று வெண்பா சௌகரியத்துக்காக மாற்றியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  இரா-வண்ணன், இருட்டு நிறத்தவன் என்று பொருள்கொண்டாலும் ராவணனுக்கு இந்தப் பெயர் பொருந்துமானாலும், ராமனும் இரா வண்ணன்தான்.  ஆனால் அவன் கரிய பகலவன்.  கருநாயிறு அனையான். 
 
கம்பன் பல பெயர்களைத் தமிழில் மாற்றினான்.  ரக்தாட்சனைக் குருதிக்கண்ணன் என்றும்; மகாபார்சுவானை மாபெரும் பக்கன் என்றும் (யாகசத்ருவா அல்லது வேறு பெயரா...நினைவுக்கு வரவில்லை) வேள்விப் பகைவன் என்றும் மாற்றியிருக்கிறான்.  இதைப் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள்.  இருந்தபோதிலும் ஆதாரமான பெயர்களை மாற்றவில்லை.  கும்பகர்ணனைக் குடக்காதன் என்று மாற்றவில்லை; சூர்ப்பணகையை முறநகத்தி என்று மாற்றவில்லை.  ராவணனுடைய பெயரையும் மாற்றவில்லை.  ராவணனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் தசக்ரீவன்.  பின்னர் தசமுகன், தசானனன் என்றெல்லாம் அறியப்பட்டான். ராவணன் என்ற பெயரைத் தந்தவர் சிவன்.  கைலாச மலையின் அடியில் அகப்பட்டுக்கொண்ட சமயத்தில் வலிபொறுக்க முடியாமல் அவன் அலறிய அலறல் எல்லா திசைகளையும் செவிடுபடுத்தியது என்பதால், ‘வாய்விட்டு அலறியவன்’ என்ற பொருளில் சிவன் ‘ராவணன்’ என்ற பெயரை தசானனனுக்குச் சூட்டினார். 
 
இப்படிப்பட்ட பெயர்களை கொஞ்சம்போலத்.. தட்டி நிமித்தி வளைத்துக் கொள்வதில் தவறில்லை என்றாலும், அப்படி மாற்றும்போது அந்தந்தப் பெயரின் அடிப்படைப் பொருளில் பேதம் தோன்றாமல் கையாள்வது அவசியம் ..

அகரம்.அமுதா

unread,
Sep 5, 2009, 2:41:20 AM9/5/09
to சந்தவசந்தம்
யோகியார் அவர்களின் "காந்திக் கணக்கு", "நாமம்" போன்ற நகைச்சுவை
விளக்கங்களைப் படித்துப் படித்துச் சிரித்தேன். மேலும் தளை கருதி இரா
வண்ணன் என்றே இருக்கலாம் என்ற தங்களின் தீர்ப்பை ஏற்கின்றேன். நன்றிகள்.
மற்றும் வாழ்த்துக்கள்.

On Sep 4, 9:49 pm, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> நீங்கள் சொல்வது சரி ஹரி,
>  ‘கொஞ்சம் போல நம்ம சௌகரியத்துக்காகப் பழைய பெயர்களைத்
> தட்டி கொட்டி வளைப்பதில்(கொஞ்சம் போல!!) சரியே அதுவும் வெண்பா வுக்குள்
> ‘அத்தை’ நுழைக்கையில்..
> திருமால்  என்ற நல்ல பெயரை மாலன் என்று நாம் மாற்றவிலையா?
>  பிரபந்தங்களில் யாரும் அவரை மாலன் என்று இட்டதாக கியாபகம்’
> இல்லை.(மாலன்=மயக்கத்தைக் கொடுப்பவன்?)
>  முற்போது காந்தி கணக்கு எனில் காந்தி வைத்திருந்த கணக்கு எனு நல்ல பொருள்
> கிட்டியது.
> தற்போது ?..நாலு பழம் வாங்கியபின்,காந்தி கணக்கில் வச்சுக்கோப்பா! என்று
> கிராமத்துக்கடையில் சொல்லிப்பாருங்கள். படங்களில்..வடிவேலுவின்சட்டை
> கிழிந்தமாதிரி நம் சட்டையையும் கிழித்துப்பின்னிப் பெடலெடுத்துவிடுவான் எந்தப்
> பெட்டிக்கடைக்காரனும்.
>  ..அதேமாதிரி..நாமம் போட்டார் அந்த’ஸ்வாமிகள்!’ எனில் அக்காலத்தில்
> நல்ல பொருள் இருந்ததே!..இப்போது கிராமத்தில் கூட அது தப்பர்த்தமாக அல்லவா
> பொருள் படுகிறது!..ம்ம்ம்! எல்லாம் காலத்தின் கோலம் ஸ்வாமீ!..இன்னா? நானு
> சொல்றது பிரிஞ்சுதா?
> யோகியார்
> &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
>

> 2009/9/3 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>


>
>
>
>
>
> > 2009/9/4 அகரம்.அமுதா agramamuth...@gmail.com
>

> >> அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
> >> சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
> >> தாவி அனுமன் தகவுலவு கண்டுவரப்
> >> பாவியிரா வண்ணனினம் பாழ்!
>
> > உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இராவணனை இராவண்ணன் என்று வெண்பா
> > சௌகரியத்துக்காக மாற்றியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  இரா-வண்ணன்,
> > இருட்டு நிறத்தவன் என்று பொருள்கொண்டாலும் ராவணனுக்கு இந்தப் பெயர்
> > பொருந்துமானாலும், ராமனும் இரா வண்ணன்தான்.  ஆனால் அவன் கரிய பகலவன்.
> > கருநாயிறு அனையான்.
>
> > கம்பன் பல பெயர்களைத் தமிழில் மாற்றினான்.  ரக்தாட்சனைக் குருதிக்கண்ணன்
> > என்றும்; மகாபார்சுவானை மாபெரும் பக்கன் என்றும் (யாகசத்ருவா அல்லது வேறு
> > பெயரா...நினைவுக்கு வரவில்லை) வேள்விப் பகைவன் என்றும் மாற்றியிருக்கிறான்.
> > இதைப் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள்.  இருந்தபோதிலும் ஆதாரமான பெயர்களை
> > மாற்றவில்லை.  கும்பகர்ணனைக் குடக்காதன் என்று மாற்றவில்லை; சூர்ப்பணகையை
> > முறநகத்தி என்று மாற்றவில்லை.  ராவணனுடைய பெயரையும் மாற்றவில்லை.  ராவணனுக்குப்
> > பெற்றோர் வைத்த பெயர் தசக்ரீவன்.  பின்னர் தசமுகன், தசானனன் என்றெல்லாம்
> > அறியப்பட்டான். ராவணன் என்ற பெயரைத் தந்தவர் சிவன்.  கைலாச மலையின் அடியில்
> > அகப்பட்டுக்கொண்ட சமயத்தில் வலிபொறுக்க முடியாமல் அவன் அலறிய அலறல் எல்லா
> > திசைகளையும் செவிடுபடுத்தியது என்பதால், ‘வாய்விட்டு அலறியவன்’ என்ற பொருளில்
> > சிவன் ‘ராவணன்’ என்ற பெயரை தசானனனுக்குச் சூட்டினார்.
>
> > இப்படிப்பட்ட பெயர்களை கொஞ்சம்போலத்.. தட்டி நிமித்தி வளைத்துக் கொள்வதில்
> > தவறில்லை என்றாலும், அப்படி மாற்றும்போது அந்தந்தப் பெயரின் அடிப்படைப்

> > பொருளில் பேதம் தோன்றாமல் கையாள்வது அவசியம் ..- Hide quoted text -

அகரம்.அமுதா

unread,
Sep 5, 2009, 3:04:31 AM9/5/09
to சந்தவசந்தம்
யோகியார் குறிப்பிடும் கிவாஜ --- கிவா ஜகந்நாதன் அவர்கள் தானே!
அவர்களின் வெண்பாக்கள் தங்களிடம் இருப்பின் சிறந்தவற்றை
அறியத்தாருங்களேன். நன்றி

> > - Show quoted text -- Hide quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages