வில்லுப்பாட்டு

17 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 14, 2025, 8:50:24 AM8/14/25
to சந்தவசந்தம்
கலைத் திருவிழா 2025-26

இந்த ஆண்டு தமிழ் நாடு முழுவதும் 
நடைபெறும் கலைத் திருவிழாவிற்கு மாணவர்களுக்காக 
எழுதிய வில்லுப்பாட்டு 

வில்லுப்பாட்டு கேட்க https://youtu.be/AH_ifgllf7Y?si=SB8jQIn1bdAJfvM3
பாடியவர் திருக்கண்ணபுரம் ப சங்கர் 

தலைப்பு: பசுமையும் பாரம்பரியமும்

தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லிசை பாட ஆமா
வில்லிசை பாட ஆமா
வந்தருள்வாய் கலைமகளே

கலகலப்பா பாட்டுப் பாடியே
கலக்க வந்தோம் ஆமா
கலக்க வந்தோம் ஆமா
தன்னானே தான னன்னே ஏஏஏஏ...

பசுமை பாரம்பரியம் பற்றி
வில்லிசையில் பாட வந்தோம்
பசுமை பாரம்பரியம் பற்றி
வில்லிசையில் பாட வந்தோம்

பசுந்தமிழ் மொழியாலே
கலைவிழாவில் ஆமா
கலைவிழாவில் ஆமா
கருத்துடனே பாட வந்தோம் ம்ம்.....

அனைவருக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம்
நாம இங்க பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் வில்லிசையில் பாட வந்திருக்கும் ஆமா

சரி முதல்ல பசுமைன்னா என்னன்னு சொல்லுங்கண்ணே ?

ஊரெங்கும் மரம் இருக்கும்
ஊர் நடுவே குளம் இருக்கும்
ஊரெங்கும் மரம் இருக்கும்
ஊர் நடுவே குளம் இருக்கும்

உள்ளத உள்ளபடியே
சொல்லுறேன் கேளு ஆமா
சொல்லுறேன் கேளு ஆமா
தன்னானே தான னன்னே ஏஏஏஏ...

 ஊர்ல எல்லா இடத்திலுமே பச்சை பசேல்லுனு
மரங்கள் வளர்ந்து இருக்கும் ,
குளத்துல பூக்கள் நிறைய பூத்திருக்கும்
சோலையில் காய் கனிகள் நிறைய இருக்கும்
வயலெங்கும் நெல் கரும்பு வாழை மஞ்சள் இஞ்சி மற்றும் காய்கறிகள் நிறைய வெளைஞ்சிருக்கும்.
இதெல்லாம் ஒன்று சேர்ந்தது தான் பசுமை .

ஓஹோ இப்பதான் பசுமைன்னா என்னன்னு புரிஞ்சுச்சு.

அப்ப நகரத்தில் இருக்கிற இவங்க எல்லாம் என்ன பண்ணலாம்?

கிராமத்துல ஊர பசுமையா வச்சிருக்கா மாதிரி, நகரத்துல வீட்டை பசுமை வீடா மாத்தலாம்
எது
பசுமை வீடா அப்படினா   என்னன்னு சொல்லுங்கண்ணே ?


மாடி தோட்டம் வைக்கோணும்
மழைநீரை சேமிக்கோணும்
மாடி தோட்டம் வைக்கோணும்
மழைநீரை சேமிக்கோணும்

மக்கும் மக்கா குப்பைகளை
தக்கபடியே ஆமா
தக்கபடியே ஆமா
தரம் பிரிக்க வேணுமுங்க.  ஆஆஆ..

இப்படி பிரிக்கப்பட்ட
மக்கும் குப்பைகளை மண்ணுக்கு உரமா மாத்தோணும்.
மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்தோணும்.

வீட்ல மாடி தோட்டத்தை வச்சு
வீட்டையே குளுமையாக்கலாம்.
நமக்கு தேவையான காய்கறிகளையும் விளைய வைக்கலாம்.
மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம் .

வீடு பசுமையான நாடு பசுமையா மாறும்.

சரி சரி பசுமைன்னா என்னன்னு நல்லா தெரிஞ்சுகிட்டோம்,   இப்ப பாரம்பரியம்  அப்படின்னா என்னன்னு சொல்லுங்கண்ணே ?

வழிவழியா வாழ்ந்து வந்த
வாழ்க்கை தான் பாரம்பரியம்
வழிவழியா வாழ்ந்து வந்த
வாழ்க்கை தான் பாரம்பரியம்

பழங்களும் காய்களும்
உண்டதும் பாரம்பரியம்
குழந்தைகள் விளையாடிய
விளையாட்டும் பாரம்பரியம்

நம்ப முன்னோர்கள் வழிவழியா எப்படி வாழ்ந்து வந்தாங்களோ அதுத்தான் பாரம்பரியம் , அதாவது அவர்களின் வாழ்க்கை முறை உணவு முறை விளையாட்டு முறை , மேலும் நாகரிக கலாச்சாரங்கள் இது எல்லாம் சேர்ந்ததுதான் பாரம்பரியம்.

நில்லுங்க நில்லுங்க இப்ப இருக்க பசங்களுக்கு
செல்லுல விளையாடுற விளையாட்டு தானே
தெரியும்.
இது என்ன பாரம்பரிய விளையாட்டு?
அத பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே

கபடி கண்ணாமூச்சி
கிட்டிப்புள் பல்லாங்குழி
கபடி கண்ணாமூச்சி
கிட்டிப்புள் பல்லாங்குழி

பம்பரம் பச்சை குதிரை
பரமபதம் கோலி குண்டு
பரமபதம் பச்சை குதிரை
பம்பரம் கோலி குண்டு

 மேலும் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு உறியடி
இத மாதிரி நிறைய விளையாட்டுகள் இருக்கு
மேலும் பாரம்பரிய கலைகள பாடுறேன் கேளுங்க.

கோலாட்டம் கும்மியாட்டம்
கரகாட்டம் மயிலாட்டம்
கோலாட்டம் கும்மியாட்டம்
கரகாட்டம் மயிலாட்டம்

வில்லுப்பாட்டு பரதம்
தெருக்கூத்து பொம்மலாட்டம்
வில்லுப்பாட்டு பரதம்
தெருக்கூத்து பொம்மலாட்டம்

மேலும் வீணை புல்லாங்குழல் மத்தளம் நாதஸ்வரமுன்னு நிறைய பாரம்பரிய இசைக்கருவிகளை  சொல்லிக்கிட்டே போலாம்.

அது மட்டும் இல்லாம
பாரம்பரிய உணவுகள் , திருவிழாக்கள்
மருத்துவம், அப்படின்னு இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். இவையெல்லாம்
நம்ம மகிழ்ச்சியாகவும் அன்பாகவும்
வாழறதுக்காக முன்னோர்கள் சொன்னது.

பசுமையும் பாரம்பரியம் பற்றி.
இப்போ உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் .

பாரம்பரிய வீட்ட காக்கும்
பசுமை நாட்டைக் காக்கும்

வாழியவே பல்லாண்டு காலம் !
பசுமையும் பாரம்பரியம்
பற்றியே கேட்டவர்கள் வாழியவே
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே

SSSV RANGAM சேனலை
Share subscribe செய்தவரும்
Like comment செய்தவரும் வாழியவே
எங்கள் நேயர்கள் எல்லாம் வாழியவே
அனைவரும் பல்லாண்டு வாழியவே

பெரியாருக்கும் தாய்மாருக்கும் எங்கள் நன்றி
உரியதாகுக  வாழிய வாழிய வாழியவே

ஆ ஆஆஆஆஆஆஆ .......

இமயவரம்பன்

unread,
Aug 14, 2025, 9:29:32 AM8/14/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
கவிதையும் கானமும் கருத்தும் மிகச் சிறப்பு!

- இமயவரம்பன் 

On Aug 14, 2025, at 8:50 AM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

கலைத் திருவிழா 2025-26
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/c1a3af6e-5bbe-4799-9a99-8c064587b822n%40googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Aug 14, 2025, 9:42:35 AM8/14/25
to santhav...@googlegroups.com
மிக நன்ற். பாரம்பர்யப்படி அமைந்திருக்கிறது. நல்வாழ்த்து

இலந்தை

On Thu, Aug 14, 2025 at 7:50 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
/d/msgid/santhavasantham/c1a3af6e-5bbe-4799-9a99-8c064587b822n%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 15, 2025, 3:55:17 PM8/15/25
to சந்தவசந்தம்
கருத்தளித்த திரு இமயவரம்பன் மற்றும் திரு இலந்தை ஆகிய இருவருக்கும் நன்றி 

Ram Ramakrishnan

unread,
Aug 15, 2025, 4:41:20 PM8/15/25
to santhav...@googlegroups.com
மிக அருமையான வில்லுப் பாட்டு, திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 15, 2025, at 15:55, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

கருத்தளித்த திரு இமயவரம்பன் மற்றும் திரு இலந்தை ஆகிய இருவருக்கும் நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages