வாழ்வே, யாவர்க்கும், புதிதே! புதிதே!

3 views
Skip to first unread message

Balu Guruswamy

unread,
Dec 31, 2012, 10:57:47 AM12/31/12
to theyva-...@googlegroups.com, sanmarkk...@googlegroups.com, ramarkishnan subramanian, Arumugam vetriselvan, C.Rajendiran
வருடம் புதிதாய் வந்தது.

புதிதாய் வந்த வருடம்,

யாவரையும்,

புதிதாய் இருக்கச் சொன்னது.


புதிதாய் இருப்பது  என்பது 

மகிழ்ச்சி மாறாமல் இருப்பது.


மகிழ்ச்சி மாறாமல் இருப்பது,

எல்லோருக்கும்  மகிழ்வைத் தருவது,

எப்போதும்  மகிழ்ந்து  இருப்பதுவே

என்றும் புதிதாய் இருப்பது!


என்றும் புதிதாய் இருப்பது 

எண்ணமும் செயலும் நன்றே 

நினைவதும் நன்றே செய்வதுமாம்!


என்றும் புதிதாய் இருப்பது 

இளையோர் யாவரும் 

பிழையற வாழ்தலும் 

வாழ்வில் நிலையுற நிற்றலுமாம்!


என்றும் புதிதாய் இருப்பது 

மக்கள் யாவரும் 

மாசற்ற வாழ்வில் 

மனநிறைவு அடைவதுமாம்!



என்றும் புதிதாய் இருப்பது 

ஊரெங்கும் உண்மையே நிறைந்து 

உலகெங்கும் உள்ளன்பில்  உறைவதுமாம்! 
  

நாம்,

என்றும் புதிதாய் இருந்துவிட்டால்,

வருடம் புதிதே!

வாழ்வும் புதிதே!

வளமும் புதிதே !


எனவே நண்ப,

விழைவில் மட்டும் புதிதாய் இராமல்,

விளைவு யாவும் புதிதாய் நிறைவோம்!

பின்,

வருடம் மட்டுமல்ல, வாழ்வே,

யாவர்க்கும், புதிதே! புதிதே!



பாலு குருசுவாமி.    

  




 





 



Reply all
Reply to author
Forward
0 new messages