Fwd: ஓம் குறிப்புகள்

2 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Aug 26, 2015, 12:45:13 AM8/26/15
to palsuvai


சோடாய் மரத்தில் புறா இரண்டு இருந்திடத்து 
      உறவுகண்டே வேடுவன்
தோலாமல் அவை எய்யவேண்டும் என்று ஒருகணை
       தொடுத்து வில்வாங்கி நிற்க
ஊடு ஆடி எழும்பிடில் அடிப்பதற்கு 
      உளவு ராசாளி  கூட
உயரப்பறந்து கொண்டே திரிய அப்போது
       உதைத்த சிலைவேடன் அடியில்
சேடாக வல்விடம் தீண்டவே அவன் விழச்
       சிலையில் தொடுத்த வாளி
சென்று ராசாளி மெய்த்தைத் துவிழ அவ்விரு 
      சிறைப் புறா வாழ்ந்தது அன்றோ
வாடாமல் இவை எலாம் உன் செயல்கள் அல்லாது என்
      மனச்செயலினால் வருமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு
      மலை மேவு குமரேசனே.
பொருள்:-
​ம​
யில் ஏறி விளையாடும் குகனே! வயல் சூழ மலைமேல் இருக்கின்ற குமரேசனே! தெய்வச்செயல் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதைக் கூறக்கேட்டு அருள் செய்வாயாக..
     சோடாய் என்ற மரத்தில் இரண்டு புறாக்கள் சேர்ந்திருந்தன. அதைப் பார்த்த வேடன் ஒருவன், ‘குறிதவறாமல் அவற்றை அம்புகொண்டு வீழ்த்த வேண்டும் ’ என்று அம்பு தொடுத்து நின்றான். அப்போது அந்த மரத்தின் மேலே புறாக்கள் எழுந்து பறந்தால் அடிப்பதற்கு ஒரு வல்லூறு காத்திருந்தது. அந்த நிலையில் வேடன் அம்பு எய்தபோது, அவ
​ன்​
காலைப் பாம்பு தீண்டியது. அதனால் அவன் தரையில் வீழ, அவன் விட்ட அம்பு மேலே பறந்து திரியும் வல்லூறு பறவை மேல் பாய, அது இறந்து தரையில் விழுந்தது. அப்போது சோடாய் மரத்திலிருந்த இரண்டு புறாக்களும் ஆனந்தமாய்ப் பறந்து சென்றன. குறைபாடு இல்லாமல் இப்படியெல்லாம் நடப்பது என் உள்ளக் கருத்தினாலோ, என் முயற்சியாலோ அல்லவே!  இவை அனைத்தும் முருகா! உன் செயலால்தான் நடைபெறுகிறது என்பதை நான் நன்கு அறிவேன்.
           திரு குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் பாடல் 85.
ஒவ்வொரு நாளும் நாம் இறைவனால் காப்பாற்றப் படுகிறோம் என்பதை உணராமலேயே நாம் இறைவனால் காப்பாற்றப் படுகிறோம்.
இறைவன் திருவருள்.
​ஓம்
வெ.சுப்பிரமணியன்​

Reply all
Reply to author
Forward
0 new messages