Fwd: மனுமுறைகண்ட வாசகம்..(வள்ளற்பெருமானார்)

4 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Jan 18, 2016, 11:01:10 PM1/18/16
to santhav...@googlegroups.com
 
 
​s​
’AumSriSaiRam

மனுமுறைகண்ட வாசகம்..(வள்ளற்பெருமானார்)

  • நல்லோர் மனத்தை நடுங்கச்செய்தேனோ !
  • வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ !
  • தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ !
  • கலந்த சினேகரைக் கலகஞ் செய்தோனோ !
  • மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ !
  • குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ !
  • தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ !
  • மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ !
  • உயிர்க் கொலை செய்வோருக்கு உபகாரஞ் செய்தேனோ !
  • களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ !
  • பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ !
  • ஆசை காட்டி மோசம் செய்தேனோ !
  • வரவு போக்கொழிய வழியடைத்தேனோ !
  • வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ !
  • பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ !
  • இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ!
  • கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ !
  • நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ !
  • கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ !
  • கற்பழிந் தவளைக் கலந்திருந்தேனோ !
  • காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ !
  • கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ !
  • கருப்ப மழித்துக் களித் திருந்தேனோ !
  • குருவை வணங்கக் கூசி நின்றேனோ !
  • குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ !
  • கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ !
  • பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ !
  • பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ !
  • கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ !
  • ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ !
  • கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ !
  • அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ !
  • குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ !
  • வெயிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ ! 
  • பகை கொண்டு அயலோர் பயிர் அழித்தேனோ !
  • பொது மண்டபத்தைப் போயிடித் தேனோ !
  • ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ !
  • சிவனடியாரைச் சீறி வைதேனோ !
  • தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ !
  • சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ !
  • தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ !
  • தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ !
  • (<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o)
ஓம் வெ.சுப்பிரமணியன்


Reply all
Reply to author
Forward
0 new messages