Groups
Groups
Sign in
Groups
Groups
Sanmarkkam Groups
Conversations
About
Send feedback
Help
Fwd: மனுமுறைகண்ட வாசகம்..(வள்ளற்பெருமானார்)
4 views
Skip to first unread message
Venkatachalam Subramanian
unread,
Jan 18, 2016, 11:01:10 PM
1/18/16
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to santhav...@googlegroups.com
s
’AumSriSaiRam
மனுமுறைகண்ட வாசகம்..(வள்ளற்பெருமானார்)
நல்லோர் மனத்தை நடுங்கச்செய்தேனோ !
வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ !
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ !
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தோனோ !
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ !
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ !
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ !
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ !
உயிர்க் கொலை செய்வோருக்கு உபகாரஞ் செய்தேனோ !
களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ !
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ !
ஆசை காட்டி மோசம் செய்தேனோ !
வரவு போக்கொழிய வழியடைத்தேனோ !
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ !
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ !
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ !
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ !
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ !
கற்பழிந் தவளைக் கலந்திருந்தேனோ !
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ !
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ !
கருப்ப மழித்துக் களித் திருந்தேனோ !
குருவை வணங்கக் கூசி நின்றேனோ !
குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ !
கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ !
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ !
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ !
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ !
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ !
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ !
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ !
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ !
வெயிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ !
பகை கொண்டு அயலோர் பயிர் அழித்தேனோ !
பொது மண்டபத்தைப் போயிடித் தேனோ !
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ !
சிவனடியாரைச் சீறி வைதேனோ !
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ !
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ !
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ !
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ !
(<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o<>o)
ஓம் வெ.சுப்பிரமணியன்
Reply all
Reply to author
Forward
0 new messages