காணும் மரமிருக்க காணா வேர் தேடும்
நானும் எதிரிருக்க ஞானம் ஊர் தேடும்
மோனம் மனதிருக்க அறிவு பேர் போகும்
நானது அறிந்திருக்க நாயகன் நானாகும்.
தோற்றப் பொருளாக நம்மைப் போன்ற ஜீவர்கள் இறை வடிவாக இருக்க
இறைவனின் உண்மை சொருபத்தை தேடி அலைகிறோம்.
நான் என்னும் ஆனவம் நம்மை பற்றியிருக்கும் வரை
இறைவனை அறிய முடியாமல் ஞானம் பெறுவதற்காக
வெளியில் தேடுவோம்.
மனம் தன்னுடைய சேட்டைகளை விட்டு மோன நிலையினை
அடைந்து விட்ட்ல் அறிவு மனம் சார்ந்த நிலை மாறி
சுத்த அறிவாக மாறும்.
நான் யார் என்று அறியும் அறிவினை பெற்று விட்டால்
அது ஆன்மா என்பதும் அதனுள் விளங்கும்
இறைவன் அதுவும் தானே என்பது உணரப் பெற்றால்
இறை அனுபவம் பெற்று இறை வடிவமாக மாறலாம்.