உதிரத்தில் கலந்த உறவே...

21 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Aug 2, 2010, 2:24:13 PM8/2/10
to அருந்தமிழ் கேளீர்
என் உயிரே!
உயிர்தரும் உதிரமே!

என் இதயமே!
இதயமேந்தும் துடிப்பே!

என் விழியே!
விழிகாக்கும் இமையே!

என் குரலே!
குரல்கொடுக்கும் ஒலியே!

என் வினையே!
வினைதூண்டும் சிந்தையே!

என் உருவே!
உருவார்க்கும் கருவே!

என் வாசமே!
வாசம்உணரும் சுவாசமே!

என் கனவே!
கனவைத்தாங்கும் கற்பனையே!

என் உணர்வே!
உணர்வைத்தழுவும் உடலே!


--------------------------------------------------------------------------------------------------------

இவள்..!!

கார்வண்ண முகிலோ!
பால்வண்ண துகிலோ!

கவிபாடும் குயிலோ!
தோகைவிரித்தாடும் மயிலோ!

அணைதாவும் புனலோ!
நதிமேவும் நாணலோ!

இயற்கைசூடும் எழிலோ!
நதிகூடும் கடலோ!

வெம்மைநீக்கும் நிழலோ
வாடைபோக்கும் தனலோ

பிறைதாங்கிய‌ நுதலோ
பூவாங்கிய குழலோ

கார்கால சாரலோ!
இள்வேனிற் தென்றலோ!

Reply all
Reply to author
Forward
0 new messages