கங்கை கொண்ட சோழன்

49 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Sep 14, 2013, 4:13:28 AM9/14/13
to sanka...@googlegroups.com

சமீபத்தில் பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழன் இரண்டு பாகங்கள் படித்தேன். சரித்திர நாவல் என்று எது கிடைத்தாலும் நான் விடுவதில்லை. அப்படியே இதுவும். 


ராஜேந்திரனின் கங்கை படையெடுப்பை மையமாக கொண்டு நாவல் நகர்கிறது. முதல் இரண்டு பாகமும் மேலை சாளுக்கியத்தின் மீதான படையெடுப்பை ஒட்டி நடந்த நிகழ்வை விவரிக்கிறது. பெண்களை மானபங்கபடுத்த அனுமதிப்பது, எதிரி நாட்டு ஊர்களை கொளுத்துவது, கொள்ளையடிப்பது என போர்க்களங்களில் நடக்கும் எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறார்., அப்போது இருந்த அந்தணர்களின் திமிர்த்தனத்தை, வர்ண பேதங்களை நன்றாகவே எழுதி உள்ளார்.


கல்கி, சாண்டில்யன், விக்கிரமன் இவர்களுடன் நோக்கும்போது பாலகுமாரனின் நாவல்கள் கொஞ்சம் விறுவிறுப்பு குறைவே. மனதை மயக்கும் காதல் கட்சிகள், சிலிர்க்க வைக்கும் போர் வியூகங்கள் இல்லாமல் கொஞ்சம் மெதுவாகவே கதை நகருகிறது. மூன்றாம் பகுதி வந்தவுடன் வாங்கலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன்!


நாவலில் அச்சிடப்பட்ட சில படங்கள்...


ராஜேந்திரனும் அவனது ஐந்து மனைவிகளும்




கோவணம்தான் ஆடையோ!! ராஜேந்திரனது படைத் தளபதிகள்



பின்பக்கமும் மார்பும் திறந்த நிலையில் ஆடை இல்லாத ஓர் தேவரடியாள்




Reply all
Reply to author
Forward
0 new messages