தொலைவு ஆகி, இரந்தோர்க்கு
ஒன்று ஈயாமை இழிவு என 2-11
மலை இறந்து செயல் சூழ்ந்த
பொருள் பொருள் ஆகுமோ - 2-12
நிலைஇய கற்பினாள், நீ
நீப்பின் வாழாதாள், 2-13
முலை ஆகம் பிரியாமை பொருள்
ஆயின் அல்லதை; 2-14
'(தம் பொருள்களை பிறர்க்கு வழங்கி)
தொலைத்து விட்டுத் நம்மை இரந்து நிற்பவர்க்கு
நாம் ஏதும் கொடாமற்போவது இழிவல்லவோ?' என்று கருதி,
மலை பல கடந்து பொருள் ஈட்டும் செயலில் துணிந்தனை.
அவ்வாறு ஈட்டும் பொருள் ஒரு பொருளாகுமோ?
நிலைபெற்ற கற்பினை உடையவளான,
நீ பிரிந்தால் உயிர் வாழாது மடிபவளான.
இவளது (தழுவிய) முலைமார்பை பிரியாதிருத்தல்
என்பதே உண்மையான செல்வம் அன்றி?
'எம்மிடம் ஏதும் இல்லை; உதவுக' என்று இரந்தவர்களுக்கு
எதாவது தராதிருந்தால், அது இழிவல்லவோ?' என்று
மலை பல கடந்து (பொருள் ஈட்டும்) செயலை செய்ய
நினைக்கின்றாய்.
அந்த பொருளும் ஒரு பொருளாகுமோ?
பழைய பண்பாட்டினின்றும் வழுவாமல்,
நீயே துணையென்று நின்னை மணந்தவளான,
இவளது தழுவுதல் தகும் மார்பை பிரியாமை
ஒரு பொருள் ஆகுமே அன்றி?
இடன் இன்றி இரந்தோர்க்கு
ஒன்று ஈயாமை இழிவு எனக் 2-19
கடன் இறந்து செயல் சூழ்ந்த
பொருள் பொருள் ஆகுமோ - 2-20
வடமீன் போல் தொழுது ஏத்த
வயங்கிய கற்பினாள் 2-21
தட மென் தோள் பிரியாமை
பொருள் ஆயின் அல்லதை; 2-22
'வேறு போக்கிடம் ஏதுமில்லை; உதவுக, என்று வந்தவர்க்கு
ஒன்றும் கொடாமலிருப்பது இழிவல்லவோ?' எனக் கருதி,
காடுகள் பலவும் கடந்து சென்று, பொருள் தேடி வருவதற்கு
நினைக்கின்றாயே,
அந்த பொருளும் ஒரு பொருளாகுமோ?
வடமீனை போல பலரும் தொழுது போற்ற விளங்கும்
உயர்ந்த கற்பினாள் நின் மனைவியின்
அகன்ற மெல்லிய தோள்களை பிரியாதிருத்தல்
உண்மையான பொருள் ஆகுமே அன்றி?'
என இவள், 2-23
புன்கண் கொண்டு இனையவும்,
பொருள் வயின் அகறல் 2-24
அன்பு அன்று, என்று யான்
கூற, அன்புற்றுக் 2-25
காழ் வரை நில்லாக் கடும்
களிற்று ஒருத்தல் 2-26
யாழ் வரைத் தங்கியாங்குத்,
தாழ்பு, நின் 2-27
தொல்கவின் தொலைதல் அஞ்சி,
என் 2-28
சொல்வரைத் தங்கினர்,
காதலோரே. 2-29
என்று, நான் உன்பால் சொல்லும்படியாக,
('ஆதலின், நின் கவலையை விட்டொழிப்பாயாக' என்பது வேண்டுகோள்.)
விளக்கம்:
'ஈதல் இசைபட வாழ்தலே' என்றாலும், பிறருக்கு இரங்கி ஈவதாகச் சொல்பவன், தன் உயிர்த்துணையான மனைவிக்கு ஏற்படும் துயரினைக் கருத வேண்டாவோ என்று சொல்வது இது. இல்வாழ்விலே, நுகர்தற்குரியதான கட்டிளமைப் பருவத்திலே, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரியாது வாழ்தல் ஒன்றே பிற செல்வத்திலும் புகழினும் சிறந்ததாகும் என்ற நெறியை வற்புறுத்துவது இதுவாகும்.
'பொருள் பொருளாகுமோ' என்பதனுள், முதலது செல்வம்; இரண்டாமது பொருள் பொதிந்த அறமுறை.