************************கபிலரின் குறிஞ்சிக்கலி: 37.********************************
கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத், தொடை மாண்ட
கண்ணியன், வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்! 37-5
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன் வயின்,
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்;
பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; 'இன்னதூஉம்
காணான், கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் 37-10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத், 37-15
'தையால்! நன்று' என்று அவன் ஊக்கக், கை நெகிழ்பு,
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்; வாய்யாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான் மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென, 37-20
'ஒண் குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்!
----------------------------------------------------------------------
பொருள்:
கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத், தொடை மாண்ட
கண்ணியன், வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்!
*குளத்தில் உள்ள மலர் போன்ற (மை) உண்ட கண்ணை உடைய தோழியே! காண்பாயாக:
ஒருவன், வலிமை உடைய விலங்கின் காலடிகளை ஆய்பவன் போல; அவன் அழகாக கட்டிய கண்ணியை உடையவன்; கையில் வில்லை ஏந்தியவன்; என்னை நோக்கி தன் முக குறிப்பால் காட்டுதல் அல்லாது தான் உற்ற காதல் நோயை எனக்கு உரைக்க மாட்டான்; சென்று விடுவான்; பல நாளூம்.
அரும் சொற்பொருள்: கயம் - குளம்; வயம் - வலிமை; மான் -மா, விலங்கு; தொடை மாண்ட - மாண்புடன் தொடுக்கப்பட்ட; கண்ணி - தலையில் சூடும் மலர் கொத்து; நோக்குபு - நோக்கி; முன்னம் - குறிப்பு; உரைக்கல்லான் - உரைக்க மாட்டான்;
*********************************
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன் வயின்,
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்;
பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; 'இன்னதூஉம்
காணான், கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால்!
*(நானும்) பாயலில் கண் உறங்கேன், அவன் வசம் காதல் நோய் மிகுந்தேன். நெருக்கம் இல்லை என்றாலும் நானும் துயரால் வருந்தினேன். இந்த நிலையில், கண்முன் நின்று கூறுவது அவனால் இயலாது என்றால், அவனிடம் சொல்லுவதும் நமக்கு பெண்மை அல்லவே!. எதுவும் காணாமல் அவன் இறந்துபடுவானோ என்று, என் தோள்கள் மெலிந்து உற்ற துன்பத்தால் துணிந்து வெட்கமில்லாத ஒரு செயலை செய்தேன், நறு மணம் கொண்ட நுதலவளே!
அரும் பொருள்: பாயல் - படுக்கை; படர் - துன்பம்; கூர்தல் - மிகுதல்; வயின் - வசம்; சேய் - தொலைவு; கழிதல் - இறத்தல்; நுதல் - நெற்றி;
****************************************
-----------------------------------------------------------------------ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத், 37-15
'தையால்! நன்று' என்று அவன் ஊக்கக், கை நெகிழ்பு,
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்;
*இன கிளிகளை விரட்டுதல் மேற்கொண்டு காக்கும் தினைப்புனத்தின் அருகில் ஊயல் ஊர்ந்து நான் ஆட, ஒருநாள் அங்கு வந்தவனை, "ஐயா, என்னை சிறிது ஆட்டுக" என்று கூற, "பெண்ணே, நல்லது" என்று ஊக்கினான். அப்போது கை நெகிழ்ந்து வீழ்வதுபோல் பொய்யாக அவன் மார்பில் விழுந்தேன்.
அரும் சொற்பொருள்: ஏனல் - தினைப்புனம்; கடிந்து - விரட்டி, ஓம்பும் - காக்கும்; ஒரு ஞான்று - ஒருநாள்; ஊக்கி - ஆட்டுக; நெகிழ்பு - நழுவி;
****************************
--------------------------------------------------------வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான் மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென,
'ஒண் குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்!
*(அந்த என் செயலை) உண்மை என்று நம்பி உடனே என்னை எடுத்தான். தன் மார்பிலே ஏந்தியதை அறியாதவள்போல் கிடந்தேன். அந்நேரத்தில், நடப்பது என்ன என்று அறிந்து மயக்கம் தெளிந்தவள் போல் எழுவேன். அவனும், உடனே "ஒண்குழாய், செல்க!" என்று கூறி என்னை விடுவிக்கும் (அவளுக்கு அதனால் அவமானம் வரும் என்று கருதி) கண்ணோட்டம் கொண்டவனாக அங்கே காணப்பட்டான் அவன்.
அரும் சொற்பொருள்: வாயா - உண்மையா; செத்து - கருதி; ஆயிடை - அந்நேரத்தில்; ஒய்யென - விரைவாக; ஏற்று - மயக்கம் தெளிந்து;
ஒண்குழாய் - ஒளி பெற்ற குழைகளை உடையவளே; அங்கண் -கண்ணோட்டம்.
*************** கபிலரின் குறிஞ்சிக்கலி - 38 ஆம் பாடல்
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் 38-1
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக்கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல - 38-5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை,
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;
அரும் சொற் பொருள்:
வாங்கிய = வளைத்த ; ஈர்ஞ்சடை= (கங்கையால்) ஈர சடை, தொடி= வளை; தடக்கை = அகன்ற கை, உழப்பவன் = துன்புறுபவன்; உறுபுலி = ஊக்கம் மிகு புலி: ஏய்ப்ப = ஏமாற்ற, ஒப்ப; வேங்கை = வேங்கை மரம்; கறுவு = கறுவுதல் (பழி வாங்க துடிக்கும் சினம்); நீடு இரு விடர் அகம் - நெடிய இருண்ட மலை பக்கம்; சிலம்ப = ஒலிப்ப; கூய் = கூவி; கோடு = கொம்பு; புய்க்க = மீட்டு எடுக்க
பொருள்:
*கயிலையிலே சிவ தனுசுவை வளைத்த ஈர சடையை உடைய அந்தணனாகிய சிவன், உமையவளொடு அமர்ந்து இருந்தான். அப்போது பத்து தலைகளை உடைய, அரகர்களின் தலைவன் இராவணன், வளை பொலிந்த தன் கைகளை அடியில் புகுத்தி பின் அந்த மலையை எடுக்க முடியாமல் (அரற்றி) உழல்பவன் போல்,
புலியின் உருவம் என ஏமாறும் வண்ணம் பூக்களை பூத்திருந்த வேங்கை மரத்தின் அடியை சினத்தால் குத்திய மதம் கொண்ட யானை, நெடிய இருண்ட மலையகம் முழுதும் ஒலிக்குமாறு கூவி தன் கொம்புகளை மீட்டு எடுக்க முடியாமல் உழக்கும் நாட்டை உடையவனே! கேட்பாயாக!
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், 38-10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக் காண்!
*(கடப்பதற்கு) அரிய இடம் (காடு) என்று கருதாய். நீ (அங்கே) பாம்புகளை அஞ்சா மாட்டாய். அவ்வாறு நீ வருகின்ற போது, நீர் அற்ற நிலத்தின் பயிர்கள் போல் பொலிவு அழிந்து நின்ற இவள், விடியலில், மழையை பெற்ற புலத்தின் பயிர்கள் போல் அழகு பெறுகிறாள்,
அந்த அழகு தீராமல் காக்கும் ஓர் வழி உண்டு என்றால் சொல்லுவாயாக!
அரும் சொற்பொருள்: ஆர் = அரிய; அரவு= பாம்பு; புலம் = விளை நிலம்; புல்லென்றாள் = பொலிவு அல்லது அழகு இழந்தாள். வைகறை = விடியல்; கார் = மழை; கவின்= அழகு; திறன் = செய்திறன்; உரைத்தைக்காண் = சொல்வாயாக
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால், 38-14
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை,
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக் காண்;
*இருள் வழி என்று கருதாய்; நீ இரவு என்று அஞ்சாய்; அவ்வாறு நீ வருகின்ற போது, செல்வம் இல்லாதவன் இளமைக்காலம் போல் பொலிவு இழந்து நினற இவள், விடியலில், கொடை வழங்குவதில் வல்ல ஒருவனுடைய செல்வம் போல் அழகு பெறுவாள்.
அவ்வழகு (அவ்வழகுக்கு பிறர் காரணம் என்று) உணரா வண்ணம் காக்க ஒரு வழி இருக்கும் என்றால் சொல்லுவாயாக!
அரும் சொற்பொருள்: அருள் வல்லான் = கொடையில் சிறந்தவன்; அணி பெறும் = அழகு பெறும்; தெருளாமல் = உணராமல் (அவ்வழகு தலைவன் வருகையால் வந்தது என்று யாரும் உணரா வண்ணம்; உண்டேல் = உண்டு என்றால்;
அரும் சொற்பொருள்: மறம் = கொலைத்தொழில்; மூப்பு = முதுமை; சாரான் = சார்ந்து நில்லான்; ஆக்கம் = செல்வம்; திருத்தகும் = திருத்தம் பெறும்; புறம் கூறு = பழித்தல்;
அரும் சொற்பொருள்: விழுமம் = துயரம்; வேங்கை = ஒரு மரம்; விரிவு = பூக்கள் மலரும் காலம்; வீங்கு இறை = பருத்த முன் கை. (அக்காலத்தே, அவளது மெலிந்த முன் கைகள் பழைய அழகை பெற்று விடும்) ; பணைத் தோள் = மூங்கில் போன்ற தோள்கள்.
38 ஆம் பாடல் முற்றியது.
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள், 39-1
தாமரைக் கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உற தழீஇ போதந்தான் அகல் அகலம்,
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;
**'யாவரும் விரும்பும் விரைந்து ஓடும் வெள்ளத்தில், எம்முடன் கலந்து நீர் ஆடுகின்ற இவள் தாமரை ஒத்த தன் கண்களை மூடி, அஞ்சி கால் தளர்ந்து, வெள்ளத்தே போகும் போது, நீண்ட சுர புன்னையின் வாச மலர்களால் ஆன குளிர்ந்த மாலை அசைய, வெள்ளத்தே பாய்ந்து, பூண் அணிந்த இவள் மார்பை தன்னொடு தழுவி கரையில் போக விட்ட போது, 'அவனுடைய அகன்ற மார்பை இவளது வளர்கின்ற கொங்கைகள் கூடின', என்று பிறர் கூறுகின்றார். அந்த கூற்றாலே என்னுடைய தோழி நமக்கு அரிய மழையை பெய்விக்க நாம் விரும்பினால் அதை தரவல்ல பெருமை உடையவளே!
அரும் சொற் பொருள்: காமர் = விருப்பம்; தார் = மாலை; தயங்க = ஆட ஆகம் = மார்பு; போதந்தான் = போக விட்டான்; அகலம் = மார்பு; தருகிற்கும் = தரச் செய்யும்
அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் 39-7
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத்,
'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்;
**அவனும் மட்டும் என்ன? திணை புனத்தில் பரண் மேல் எரியும் அகில் புகை உண்டதால் ஒளி மழுங்கி திரியும் வானில் ஊரும் மதியம் மலை சென்று அடைந்தால், அதை தேனடை என்று மயங்கி, அந்த தேனை அழிக்க ஏணியை சமைத்திருக்கும் காடு அகன்ற நாட்டு தலைவனின் மகன்.
கபிலரின் குறிஞ்சிக்கலி - 39 ஆம் பாடல் தொடர்ச்சி...
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் 39-37
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொல்லோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொல்லோ?
*தோழி சொல்லியது: விண்ணை எட்டும் மலை நாட்டவனும் நீயும் திருமண நிகழ்ச்சியுள், முன்பே அறியாதவர் போல் நடந்து கொள்வீரோ? முன்பே அறியாதவர் போல் நடந்து கொள்வீராயின், நும் பழைய நட்பை நான் கண்டறியாதவள் போல் மறைத்துக்கொள்வேன் அல்லவோ?
அரும் சொற்பொருள்: தெரி இழாய்= தேர்ந்த அணிகலன்; கேள் - உறவு; புணர்ச்சி = கூட்டம்; வரை, கல், வெற்பு = மலை; குரவை= ஒரு வகை ஆடல், கொண்டுநிலை = ஒரு வகை பாட்டு; வரும் எல்லை= வரும் வரை; தமர், நமர்= உறவினர்; கடிதல் = ஒறுத்தல், தவிர்தல்; வதுவை = திருமண நிகழ்ச்சி; பண்டு = முன்பு ஒரு காலத்தில்; படர்தல் = நடத்தல்; கேண்மை = நட்பு; கரக்கிற்பென்= மறைப்பேன்; (கரத்தல் = மறைத்தல்)
தொடரும்.......
இருள் மேகம் தவழும் மலை நாட்டவன் மணக்கோலம் காணாமல் வெட்கத்தால் கையால் புதை பெறும் கண்களும் கண்கள் ஆகுமோ?
தலைவி: என்னம்மா, (அவர் மணக்கோலத்தை) நின் கண்ணால் காண்பேன் அன்றோ நான்!
**என்று நாம் சொல்லும் காலத்தே, நூல்நெறி அறிந்த, நீங்கள் இருவரும் கூடும் பொழுதை குறித்திட, தப்புதல் ஒருபோதும் அறியாத கணியை (சோதிடன்) முன்வைத்து, தகைமை மிக்க, தொகுத்தலும் வகுத்தலும் நன்கு அறிந்த சான்றோர்கள் புடை சூழ, மூங்கில் ஒத்த மெல்லிய உன் தோளில் ஊர்ந்த பசலையும் இவ் ஊரார் அம்பலும், நும் களவு கூட்டமும் எல்லாம் ஒருங்கே இனி நீங்க, நீண்டு உயர்ந்த மலையின் நாடனும் வந்தானே! பூப்போன்ற அழகும் மை உண்ட கண்ணும் இனி பொலிவதாக!
கபிலரின் குறிஞ்சிக்கலி - 40 ஆம் பாடல்.
அகவினம் பாடுவாம், தோழி! அமர்க் கண் 40-1
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சிப், 40-5
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்.
**மனதில் தோன்றின எல்லாம் பாடலாம் தோழி! முகத்துக்கு ஏற்ற கண்களும், மகிழ்ச்சி கொண்ட மொழியும் உடைய நல்ல மகளிர் நாணும் தன்மையை போல், அழகான தினைப்புனத்தில் முற்றி தாழ்ந்த தினையை உருவி, அரும்பு முகை வளர்ந்த சந்தன உரலில் இட்டு, முத்து பதிந்த யானை கொம்பால் வகையாக வடித்த உலக்கையை மாற்றி மாற்றி ஓங்கி இட்டு, பகை இல்லாத நோயான காதல் நோயை நமக்கு செய்தவனின் பயன் விளையும் மலையை வாழ்த்தி, அகவினம் பாடுவோம் நாம்.
ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்
தேன் நாறு கதுப்பினாய்! - யானும் ஒன்று ஏத்துகு -
வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை; 40-10
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள்
தொடுத்த தேன் சோரத், தயங்கும் - தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை;
** அழகிய நுதல், அழகிய கூந்தல், அழகிய மூங்கில் போலவும் அகன்ற மெல்லிய தோளும், தேன் மலர் நாறும் கன்னங்களும் உடையவளே! நானும் ஒன்று வாழ்த்துவேன்! மூங்கில் ஒலிக்கும் மலையகம் பற்றி நீ ஒன்று பாடுக!
தோழி பாடுவாள்:" கொடிச்சியர் கூப்பி முருகனின் மலையை தொழும் கைகள் போல, உயர்ந்த தேன்கொண்ட குலை ஆட காந்தள் மலரில் வைத்த தேன் ஒழுக அம்மலர்கள் அசையும் - அவனை சேர்ந்தவர்களின் துயரை தீர்ப்பானுடைய மலை."
(காந்தள் அசைவது கொடிச்சியர் முருகனை கூப்பி தொழும் கை போல தோன்றும்)
அரும் சொற் பொருள்: அகவினம் = மனதில் தோன்றினவற்றை குரலெடுத்து பாடும் பாட்டு. அமர் = பொருத்தமான; தட = அகன்ற; நரல் = ஒலிக்கும்; விடர் = மலை; கொடிச்சியர்= குறிஞ்சி நில பெண்டிர்; நறவு = தேன்; சோர = ஒழுக; வகை சால் = நன்கு வகுத்த(வடித்த); வயின் வயின் = (நீயும் நானும்) மாற்றி மாற்றி; ஓச்சி = ஓங்கி
கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து, 40-15
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே -
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லல் படுவான் மலை;
**கல்லாத ஆண் குரங்கு, பெரிய கூட்டமான சுற்றத்தாரிடம் சென்று தன் மெல்லிய விரலால் ஒரு பெண்குரங்கினை சுட்டி ,'இவளை எனக்கு மகட்கொடை தருக' என்றுணர்த்தும் தன்மையை கொண்டது அல்லவோ, தான் கூடின மகளிரின் பழைய எழில் வாடினால், அவர்களை விட தான் மிகவும் வருந்துகிற நம் தலைவனுடைய நாட்டின் மலை!!
அரும் சொற்பொருள்: கடுவன் = ஆண் குரங்கு; மந்தி= பெண்குரங்கு; செம்மற்று= தன்மையானது; தொல் = தொன்மை
புரி விரி, புதை துதை, பூத்ததைந்த தாழ் சினைத் 40-19
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான்
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்;
**தலைவி: முறுக்கு விரிந்து, மறைந்தும் செறிந்தும் உள்ள, பூக்கள் அடர்ந்த, தாழ்ந்த சினையில் உள்ள தளிர்கள் போன்ற அழகிய மேனி, அதன் தகைமை வாட நமக்கு நோய் செய்தவனுடைய அரிய மலைத்தொடரை நாம் பழித்து ஒன்று பாடுவோம் .
அரும் சொற்பொருள்: புரி = முறுக்கு அல்லது கூம்புதல், புதை = மறைந்த; துதை; அடர்ந்த; ததை; நெருங்கிய; வரை அடுக்கம் = மலைத்தொடர்; அழித்து = உண்மை அழித்து மற்றதை கூறல்.
விண் தோய் வரைப், பந்து எறிந்த அயா வீடத், 40-22
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே -
பெண்டிர் நலம் வௌவித் தண்சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை;
**விண்ணை தீண்டும் மலைப்பக்கத்தில், பந்து எறிந்து ஆடிய அயர்ச்சி அழிய, குளிர்ந்து பாயும் அருவியில் , தேவ மகளிர்கள் ஆடுவார்களே - தன் காதலியின் அழகை கவர்ந்து பின், குளிர்ச்சியான மலைச்சாரலில் மலர்தேன் உண்ணும் வண்டினைப்போல அவர்களை துறந்து செல்கின்றவனுடைய மலையில்.
அரும் சொற்பொருள்: தோய்= தொடும், தீண்டும்; அயா = அலைச்சல்; அரமகளிர் = அரம்பையர்; வெளவி = கவர்ந்து ( பிரிவால் அழகு வாட) ; தண்சாரல் = குளிர்ந்த மலைச்சாரல்; தாது = தேன்.
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற 40-26
கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை;
**தோழி: (அதே நேரத்தில்) ஒடுக்கம் இல்லாத அழகிய ஆண்யானை தான் விரும்பிய பெண் யானை உற்ற கடுமையான சூலால் உண்டான மசக்கைக்கு கருணை கொண்டு, நெடிய கொம்புகளின் கணுக்களில் முளைத்த இனிய கரும்பு போன்ற மூங்கில்களை வளைத்து கொடுக்கும், 'தன்னை சேர்ந்தவர்களை என்றும் நீங்க மாட்டோம்' என்று சொல்லும் தலைவனுடைய மலை.
அரும் சொற்பொருள்:ஒடுங்கா = மடிப்புக்கள் இல்லாத; வேழம் = களிறு; வீழ் = விரும்பிய; வயா= மசக்கை அல்லது சூல் காலத்து தோன்றும் ஆசை; கழை = மூங்கில்; கண்= மூங்கில் கணு; தீம் = இனிய; நீங்கலம் = நீங்க மாட்டேன்.
என நாம்,
தன் மலை பாட, நயவந்து கேட்டு அருளி, 40-31
மெய் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெறச்
செம்மலை ஆகிய மலை கிழவோனே!
**என்று நாம் ,
தன்னுடைய மலையை நாம் பாட, விரும்பி வந்து, கேட்டு, நம்மேல் கருணை கொண்டு, உண்மையான மகிழ்ச்சியுடன் வந்து நின்றானே, தழுவி மகிழ்ந்தறியா மெல்லிய முலை கொண்ட மார்பு அழகு பெறச்செய்யும் பெருந்தன்மை கொண்டவன் ஆனான், அந்த மலைக்கு உரிமையானவன்.
அரும் சொற்பொருள்: நய வந்து = நயந்து, விரும்பி; மெய்மலி= உண்மை மிகுந்த; புகுதந்தான் = திருமணம் பேச வந்து நின்றான். புணர்ந்து ஆரா= தழுவி மகிழா; செம்மலை = செம்மல் ஆனவன், செவ்விய தன்மையன்; மலை கிழவோன் = மலைக்கு உரிமையானவன்.
கபிலரின் குறிஞ்சிக்கலி - 40 ஆம் பாடல் முற்றும்.
கபிலரின் குறிஞ்சிக்கலி - 41 ஆம் பாடல்.
பாடுகம், வா - வாழி, தோழி! வயக் களிற்றுக் 41-1
கோடு உலக்கை ஆக, நல் சேம்பின் இலை சுளகா
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா - வாழி, தோழி! நல் தோழி! - பாடுற்று;
**நாம் பாடுவோம் வா, நீ வாழ்வாயாக தோழி! வலிமை கொண்ட யானையின் கொம்பினை உலக்கை ஆக்கி, நல்ல சேம்பு செடியின் இலையால் உரலை சுற்றி மறைத்து, அசைகின்ற மூங்கிலில் விளைந்த நெல்லை குற்றுதற்கான உரலுள் இட்டு, நாம் இருவரும் பாடுக்கொண்டே, வா தோழி, நல்ல தோழி, குற்றுவோம்.
அரும் சொற்பொருள்: வயக்களிறு = வலிமை கொண்ட ஆண்யானை; கோடு = தந்தம்; சுளகு= சுற்றி அமைக்கும் காப்பு, (முறங்களில் சிறிய வகை என்றும் கருதப்படும்); கழை= மூங்கில்; அறை =குற்றுதல் (பாறையில் அமைந்த உரல் எனவும் சொல்வர்); பாடுற்று = அழகு பெற;
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள், 41-5
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்துப்,
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்,
நெடு வரை ஆசினிப் பணவை ஏறிக்
கடு விசை கவணையில் கல் கை விடுதலின்,
இறு வரை வேங்கையின் ஒள் வீ சிதறி,
ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத்,
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,
நறு வடி மாவின் பை துணர் உழக்கிக்,
குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப்,
பலவின் பழத்துள் தங்கும், மலை கெழு வெற்பனைப்
பாடுகம், வா - வாழி, தோழி! நல் தோழி! - பாடுற்று;
**தலைவி: "தோன்றும் அருவி உடையதே; விளங்கித் தோன்றும் அருவி உடையதே; மழையின் காரணமாக தோன்றும் அருவி உடையதே- தான் சொல்லிய உறுதிமொழி
நிறைவேற்றாமல் பொய் சொல்லியவனுடைய மலை." (பொய் வலாளனுடைய் மலையிலும் மழை பெய்யுமா? அருவி பாய்கிறதே!)
பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ? 41-21
'அஞ்சல் ஓம்பு' என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்
திங்களுள் தீத் தோன்றியற்று;
**தோழி: தன் சூளுரையை தலைவன் பொய்த்தல் செய்பவனோ? பொய்த்தல் செய்பவனோ? 'அஞ்சுதல் தவிர்' என்று நம்மை சொல்லியவர் பொய்த்தல் செய்பவனோ? மலை அகன்ற நாட்டை உடைய்வன் வாய்மையில் பொய் தோன்றினால் நிலவில் தீ தோன்றியது என்று சொல்வதற்கு ஒப்பாகும். ( அவ்வாறு கூறாதே என்பதாகும்)
இள மழை ஆடும்; இள மழை ஆடும்; 41-25
இள மழை வைகலும் ஆடும் - என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று;
** தலைவி: புதிய மேகங்கள் ஆடும்; புதிய மேகங்கள் ஆடும்;
புதிய மேகங்கள் நாள்தோறும் ஆடுமே, என்னுடைய முன்னம் கையில் உள்ள வளைகளை நெகிழ்ந்து விழவும், இன்னும் வாராவனுடைய மலையில்?
வாராது அமைவானோ? வாராது அமைவானோ? 41-28
வாராது அமைகுவான் அல்லன்; மலை நாடன்,
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழல் கயத்து
நீருள் குவளை வெந்தற்று;
துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; 41-35
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் -
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று;
தோழி: நம்மை தலைவன் கைவிடுவான் அல்லன்; கைவிடுவான்அல்லன்;
மலைத்தொடருக்கு உரிமையான வெற்பன் நம்மை கைவிடுவான் அல்லன்-
அவன் நம்மோடு கொண்ட நட்புள் இவையெல்லாம் தோன்றினால், வானத்து
சுடரான கதிரவனுள் இருள் தோன்றியது போலாகும். ( எனவே நீ அங்கனம் கூறாதே!)
என ஆங்கு, 41-39
நன்று ஆகின்றால் -தோழி! நம் வள்ளையுள் 41-40
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,
மென் தோள் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனன், அம் மலை கிழவோற்கே.
**இங்கனமாக,
நன்று நடந்ததே, தோழி! நாம் நம் வள்ளை பாட்டில் ஒன்றி பாட, மறைந்து நின்று கேட்டு நம் மேல் கருணை கொண்டு. நம் மெல்லிய தோள்களுக்கு உரிமையானவன் வந்தானே! உன் தந்தையும் மணத்தையுடைய வேங்கை மரத்தின் கீழே இருந்து விரும்பி திருமணம் முடித்தான், உன்னை அந்த மலை நாட்டவனுக்கே!
அரும் சொற்பொருள்: மண்ணா = கழுவாத; துன்னான் = சேரான்; இனையவை= இவை போன்றவை; கிழவன் = உரிமை யுடையவன்; நயந்தனனன் இசைந்தனன்
கபிலரின் குறிஞ்சிக்கலி - 41 ஆம் பாடல் முற்றும்.
மறம் கொள் இரும் புலித் தொல்
முரண் தொலைத்த 42-1
முறம் செவி வாரணம்
முன் குளகு அருந்திக்
கறங்கு வெள்
அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இரும்
சோலை நல் மலை நாடன்
மறந்தான்
; மறக்க; இனி , எல்லா! நமக்குச்
சிறந்தமை
நாம் நற்கு அறிந்தனம்; ஆயின், அவன்
திறம்
கொல் யானைக் கோட்டால் வெதிர்
நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம்
வா , இகுளை! நாம்
வள்ளை அகவுவம்
, வா;
காணிய வா - வாழி தோழி! - வரைத்
தாழ்பு - 42-10
வாள் நிறம் கொண்ட அருவித்தே
, நம் அருளா
நாண் இலி நாட்டு
மலை;
*வீரம் கொண்ட பெரிய புலியின் பழைய எதிர்ப்பை தொலைத்த முறம் போன்ற செவிகளை உடைய யானையானது இளைய பசிய இலைகளை உண்டு, ஒலிக்கின்ற வெள்ளை அருவியின் ஓசையில் தூங்கும்
அதுபோலும் வளம்மிக்க அடர்ந்த சோலையை கொண்ட நம் மலைநாடன் நம்மை மறந்தான். மறந்து போகட்டும்! . இனி, அடியே! அவர் நமக்கு மிக வேண்டியவர் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இருப்பினும், அவனுடைய கொடுமையை, கொல்லும் தொழில் கொண்ட யானையின் கொம்பினால் மூங்கில் நெல்லை குற்றுகின்ற நாம் வள்ளை பாடலால் இசைப்போம் . தோழி! வள்ளை பாடலால் இசைப்போம் வா!காண வா!
- வாழி தோழி! மலையிலிருந்து தாழ்ந்துவரும் வெள்ளை நிறம் கொண்ட அருவியை கொண்டு விளங்குதே . நமக்கு அருள் செய்யாத, வெட்கம் இல்லாதவனுடைய , நாட்டின் மலை!அரும் சொற்பொருள்:
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ - 42-13
ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்?
*தன்னால் நுகரப்பட்டவர் நெஞ்சம் அழியுமாறு செய்வானோ? தானே ஒரு முடிவாக கொண்டு ஒரு பக்கம் சாயாத நேர்மையினை உடையது துலாக்கோல். அதுபோல, அவனும் சொல் தவறாத நேர்மையாளன். அறம் நிறைந்த நெஞ்சினன்.
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் 42-16
பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை;
*குளிர்ந்த மணமுள்ள கோங்கு மலர்ந்து உதிர்வதால் மலைகள் எல்லாம் பொன் அணி சூடிய மதயானைகளைப் போல தோன்றுகின்றனவே! நமக்கு அருளாமல் வறிதே ஆளுகின்றவனுடைய நாட்டின் மலைகள்!
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? - தன் மலை 42-19
நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்;
* பெருகும் நோய் நம்மை வருத்த விடுவானோ? அவன் மலை அருவி நீரினும் இனிய தன்மையை உடையவன், (அவனிடம் சென்று) வேண்டியவருக்குத் தேரும் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன்?
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் 42-22
மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று;
*அவன் மலை மேல் உயரத்தே கட்டிய தேன் கொண்ட தேன்கூடு மேகத்துள் நுழைகின்ற திங்கள் போல தேன்றுமே! என் அணிகலன்கள் நெகிழ்ந்து போகும் அளவு துன்பத்தை கொடுத்தவனுடைய குன்று!
எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி - 42-25
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்!
*இவ்வாறு நாங்கள் பாட, மறைவிலே நின்று காதலனும் கேட்டு விட்டான். கேட்டவன், தாழ்ந்த கரிய கூந்தலை உடைய என் தோழியை கைகவித்து பின்புறத்தை தன் இனிய சாயல் மார்பிலே அணைக்க, ஞாயிற்றின் முன்னர் இருள்போல, தேர்ந்த அணிகலன்களை அணிந்தவளுடைய மேனியின் பசலை மறைந்துவிட்டனவே!
சொற்பொருள்:
மறம் -வீரம்; இரும் -பெரிய; தொன்முரண் -பழம் பகை; குளகு -தழை உணவு; கறங்கு -ஒலிக்கின்ற; ஒலி -தாலாட்டுதல் போன்ற அருவி ஒலி; பிறங்கு -வளம் பெருகும்; மறக்க - மறப்பானாக; நற்கு -நன்கு; வெதிர் -மூங்கில்; நாண் இலி - நாண் அற்றவன்; ஓர்வு உற்று -ஆராய்தலை மேற்கொண்டு; ஒல்காத - சாயாத; கொன் -பயன் இன்மை; ஆளான் - செய்பவன்; அஃதாவது பயனில் செயல் புரிபவன். கூரும் நோய் - மிக்க நோய்; ஏய்ப்ப -அடைய; நெய்க்கண் இறால் -தேன் நிறைந்த தேனடை; எவ்வம் -துன்பம்; உறீஇயினான் - தந்தவன்; எல்லா -ஏடீ!
கபிலரின் குறிஞ்சிக்கலி - 47 ஆம் பாடல்
[ஓர் இளைஞன் ஒரு தலைவியைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றான். அவன் தோற்றமும், நிலையும் அவளுக்கும் பிடித்திருந்தது. என்ன செய்வது? எப்படி, யார் முதலில் உறவைத் தொடங்குவது? இந்த கவலை தீரும் பொருட்டு தோழி, தலைவி கேட்க, தனக்குள் தானே பேசுகின்றாள்.]
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும், உலகம் 47-1
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண், ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வண்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்
சொல்லும் சொல், கேட்டீ - சுடர் இழாய்! பல் மாணும்;
* என்னிடம் வந்து ஒருவன் சொல்லுகின்ற சொற்களைக் கேட்டாயோடீ! சுடரும் இழையணிந்தவளே! பலவகையிலும் பொருள்படும் அவற்றை கேள்:
என்னிடம், 'ஏதோ ஒன்றை இரப்பவனை போல எளிமையுடையவன் போலவும் காட்டி, ஏதேதோ சொல்லுகின்றான். உலகையே காக்கும் வலிமை உடையவன் போலவும் தோற்றுகின்றான். வல்லவர்களைப் பின் பற்றிச் சிறந்த அறிவுத்திறங்களை அறிந்தவன்போல தோற்றுகின்றான். நல்லவர்களிடம் தோன்றும் அடக்கமும் உடையவனாக இருக்கின்றான். இரவலர்களின் வறுமையைப் போக்க வல்லவன் போன்ற வளமுடையவன் போலவும் தோன்றுகிறான். அத்தகைய ஒருவன், தன் ஆண்மை தன்மைகளை எல்லாம் இழந்துவிட்டு, என்னிடம் :சொல்லும் பல மாட்சிமைப்பட்ட சொற்களை கேட்டு அருள்வாய், சுடரும் இழை அணீந்தவளே,
'வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின், 47-15
ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,
சூழும்கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்;
சூழும்கால், நறு நுதால்! நம் உளே சூழ்குவம்.
*'நீ அருளாவிடில், நான் உயிர் வாழேன்' என்பான் அவன். அவ்வாறாயின், 'இப் பெண் இவ்வளவு பேதையாகுபவளோ?' எனப் பலரும் பழி சொல்வார்களோ? அவ்வாறாயின், ஆராய்ந்தாலும், ஒரு முடிவும் அறியாமல் வருந்துகின்றேன். இனி (அவனுக்குச் செய்வதை) ஆராயும்போது, மணமுள்ள நுதலாளே!, நாம் இருவரும் சேர்ந்தே ஒரு முடிவுக்கு வருவோம்.
அவனை, 47-19
நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது;
'பேணினர்' எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன்
'வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக்
கூறுவென் போலக் காட்டி
மற்று அவன் மேஎவழி மேவாய் நெஞ்சே!
*(இதனைக் கேட்டபின், தோழி, தலைவி கேட்குமாறு, தானே தனக்குள் பேசுவதுபோல இப்படிக் கூறுகின்றாள்)
நாணம் நம்மை வருத்துதலால் அவனை போக்குதல் நமக்கும் அங்கே பொருந்தாது. அவன் நீத்தலை பேணினாள் எனும் பிறர் பழிக்கு ஆளாதல் பெண்மையின் இயல்பும் அன்று. அவன் 'தழுவிக் கொள்ள மாத்திரம் வருக' என்று கூறுவது போலக் காட்டுகின்றேன். அதன்பின், அவன் விருப்பத்தின்படி செல்வாய், நெஞ்சமே!
சொற்பொருள்:
எளிவந்த= எளியவனாக
மதுகை= வலிமை
புன்கண் = வருத்தம்
நீப்பின் - கை விடின்.
ஏழ்மை -ஈண்டு அறிவுக் குறைபாடு.
சூழ்தல் -ஆராய்தல்.
துணிகிற்றல் = முடிவு செய்தல்
அட = மிக
வௌவுதல் -மேற்கொள்ளுதல்.
மேஎவழி -தங்கி உள்ள இடம்.
மேவாய் -சென்று சேர்வாயாக.