[Shirdi Sai Baba Sayings - Tamil] பகவான்

37 views
Skip to first unread message

Sathguru Shirdi SaiBaba

unread,
Jan 8, 2016, 5:00:06 PM1/8/16
to saibabasa...@googlegroups.com




1911 - 1914 ஆண்டுகளில் ஷீரடியில் வாசம் செய்த காசிநாத் கோவிந்த உபாசினி மகராஜ் உணவு தயார் செய்து கொண்டிருப்பதை ஒரு கருப்பு நாய் கவனித்துக் கொண்டிருந்தது. அந்த நாய்க்கு உணவு எதுவும் அளிக்காமல் உபாசனி  மசூதிக்கு சென்று உணவை பாபாவுக்கு சமர்பித்தார்.

பாபா : ஏன் இதை இங்கே கொண்டு வந்தாய் ? நான் அங்கே இருந்தேன்.

உபசனி : பாபா! ஒரு கருப்பு நாய் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லையே?

பாபா : அந்த கருப்பு நாய் நான் தான்.

அன்று பாபா  உணவை ஏற்க மருத்துவிட்டார். மறுதினம் உபாசனி தனது இருப்பிடத்தில் நிவேதனம் தயார் செய்தார். நாய் எதுவும் காணப்படவில்லை. 
ஆனால் நோய் வாய்ப்பட்ட சூத்திரன் ஒருவன் சுவற்றில் சாய்ந்தவாறு உணவையே பார்த்துக் கொண்டிருந்தான். வைதீகரான உபாசனி அந்த இடத்திலிருந்து அவனை விரட்டி விட்டு உணவை பாபாவிடம் எடுத்துச் சென்றார்.

பாபா : நேற்று எனக்கு உணவு அளிக்கவில்லை. இன்றும் என்னை விரட்டி விட்டாய். ஏன் உணவை இங்கு கொண்டு வருகிறாய் ?

உபாசனி : பாபா ! அங்கே நீங்கள் எங்கிருந்தீர்கள் ?

பாபா : நான் சுவற்றின் மீது சாய்ந்தவாறு நின்றிருந்தேன்.

உபாசினி : என்ன ! தாங்கள் அத்தகைய மனிதனின் உள்ளும் இருக்கக்கூடுமா?

பாபா : ஆம், நான் எல்லாவற்றிலும், அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன்.

குறிப்பு : ஸ பூமிம் விச்வதோ(ஆ)வ்ருத்வா அத்யதிஷ்டத் தசாங்குலம்  (புருஷ ஸுக்தம்)

அதாவது, அவர் ( பகவான் ) வையகம் முழுவதும் வியாபித்து அதையும் கடந்து நிற்பவர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


--
Posted By Sathguru Shirdi SaiBaba to Shirdi Sai Baba Sayings - Tamil at 1/09/2016 06:00:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages