[Shirdi Sai Baba Sayings - Tamil] நம்பிக்கை பொறுமை

227 views
Skip to first unread message

Sathguru Shirdi SaiBaba

unread,
Apr 9, 2015, 2:17:58 PM4/9/15
to saibabasa...@googlegroups.com
பாபா தனது பக்தர்களிடம் நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டு வார்த்தைகளை எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துவார்.
காரணம், நல்லவன் துன்பப்படும் போது, தாமாக அவனை வலியத் தேடிச் சென்று அவனுக்கு அனுக்கிரகம் செய்கிறார். இதற்காக அவர் மாறுவேடங்களில் சென்று கணக்கற்ற அற்புதங்களை திட்டமிட்டுச்செய்கிறார்.
வீட்டினுள்ளோ, வெளியிலோ, அல்லது வழியிலோ நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் என்னுடைய வெளிப்பாடுகளே.
அவர்கள் அனைவருள்ளும் நான் உறைகிறேன் (அத்:15-71) என்கிறார் பாபா. எந்த வடிவில் அவர் வருகிறார் என்பது தெரியாமலே நமக்கு நன்மை நடக்கும்.
ஏற்கனவே அவர் திட்டமிட்டு செயல்படுவதால், எந்த விக்ஷயத்திலும் அவரது பக்தன் அவசரப்படத்தேவையில்லை. பொறுமையாக அவரை நம்பிக்கொண்டிருந்தால்போதுமானது.
அவர் நினைப்பதே நடக்கும், அவரே வழியைக்காட்டுவார். நம்முடைய இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும் என பாபா கூறியிருக்கிறார். அதுவரை பொறுமை காக்க வேண்டும்.
எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் பொறுமையாக இருப்பது மட்டுமே நம்மை கரை சேர்க்கும் உபாயம் என பாபா கூறியிருக்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


--
Posted By Sathguru Shirdi SaiBaba to Shirdi Sai Baba Sayings - Tamil at 4/10/2015 02:17:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages