[Shirdi Sai Baba Sayings - Tamil] முக்தி

45 views
Skip to first unread message

Sathguru Shirdi SaiBaba

unread,
Jan 9, 2016, 4:31:45 PM1/9/16
to saibabasa...@googlegroups.com



ஏன் இந்த துயரம்? மாந்தர் பிறப்பது இறப்பதற்காகவே. ஒரு நாள் நாம் ஒவ்வொருவரும் இறப்போம். இறப்பும் வாழ்வும் இறைவனின்  லீலையின் வெளிப்பாடுகள். இரண்டையும் பிரிக்கமுடியாது. எல்லாவற்றிலும் நிறைந்து நிற்ப்பவர் ஈசன். எனினும், ( உண்மையில் பார்த்தால்) யாரும் பிறப்பதில்லை.
ஒருவரும் இறப்பதில்லை. உனது அகக்கண் மூலம் பார். அப்போது நீயே இறைவன், அவரிடமிருந்து வேறுப்பட்டவரல்ல என்பதை புரிந்துகொள்வாய். 
லாப நஷ்டம், பிறப்பு இறப்பு, இவை இறைவனின் கையில் இருப்பவை. ஆனால் எவ்வளவு கண்மூடித்தனமாக ஜனங்கள் இறைவனை மறந்து விடுகின்றனர்! உயிர் உள்ள வரை, வாழ்க்கையை கவனி, மரணம் வரும்போது துயருறாதே. இவ்வுடல் மண்ணால் ஆனது. பார், உண்மையில் எல்லாம் ஒன்றே. ஆகவே அது மண்ணுக்கே திரும்பச் சென்று விடுவது வருத்தப்பட வேண்டிய விஷயமல்ல.
 பிறப்பையும் இது போன்றே பார்க்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்தது பற்றி கொண்டாடி மகிழவேண்டாம். இது படைப்பின் போக்கு ( ஆதிகாலம் முதல் நிகழ்ந்து வருவது). அது உங்களை பாதிக்க வேண்டாம். எதற்கும் குதுகலிப்பதோ, விசனப்படுவதோ வேண்டாம். அப்படி இருந்தால் உங்களுக்கு துயரம் எங்கிருந்து வரும்?  துயரமின்மையே  முக்தி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


--
Posted By Sathguru Shirdi SaiBaba to Shirdi Sai Baba Sayings - Tamil at 1/10/2016 02:00:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages