மெய்தீண்டும் மைவிழியாள்

7 views
Skip to first unread message

kavianban kalam

unread,
Dec 24, 2010, 11:01:34 AM12/24/10
to தமிழிலக்கியம்
மெய்தீண்டு மைவிழியால் மெய்தீண்டிய மைவிழியாள்

பொய்தீண்டும் பேச்சாலே போய்விட்டாள் என்னையும்

விட்டுவிட்டுக் காதலையும் விற்றுவிட்டு; நானும்தான்

விட்டுவிட்டேன் காதல் உணர்வு.

கவலை கரைசேரக் காணா வழிகள்

அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில்

மூழ்கியேப் பார்த்தும் முடியாமல் என்றுமே

ஆழ்கடல் போலவே ஆச்சு.

நேசமென்னும் மேகம் நெருங்கியதால் நித்தமும்

பாசமென்றே என்மீது பெய்திட்ட முத்தமழை;

நெய்வடியும் ஈறிதழால் நீலியின் பொய்க்கவிதை

மெய்யன்று *மெய்யின்* உணர்வு.

முதற்கா தலும்முதல் முத்தமும் உள்ளே

உதற முடியாமல் உட்கார்ந்து கொண்டு

பதற்றம் தருமென்று பட்டவர் சொல்லும்

விதம்மெய் எனவறிந்தேன் நான்.

குறிப்பு: *மெய்யின்*=உடலின்

(”மெய்யென்று மேனியை யார் சொன்னது?”)

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

எனது வலைப்பூவிற்கு வருகை தர வழி:


Reply all
Reply to author
Forward
0 new messages