பொய்தீண்டும் பேச்சாலே போய்விட்டாள் என்னையும்
விட்டுவிட்டுக் காதலையும் விற்றுவிட்டு; நானும்தான்
விட்டுவிட்டேன் காதல் உணர்வு.
கவலை கரைசேரக் காணா வழிகள்
அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில்
மூழ்கியேப் பார்த்தும் முடியாமல் என்றுமே
ஆழ்கடல் போலவே ஆச்சு.
நேசமென்னும் மேகம் நெருங்கியதால் நித்தமும்
பாசமென்றே என்மீது பெய்திட்ட முத்தமழை;
நெய்வடியும் ஈறிதழால் நீலியின் பொய்க்கவிதை
மெய்யன்று *மெய்யின்* உணர்வு.
முதற்கா தலும்முதல் முத்தமும் உள்ளே
உதற முடியாமல் உட்கார்ந்து கொண்டு
பதற்றம் தருமென்று பட்டவர் சொல்லும்
விதம்மெய் எனவறிந்தேன் நான்.
குறிப்பு: *மெய்யின்*=உடலின்
(”மெய்யென்று மேனியை யார் சொன்னது?”)
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூவிற்கு வருகை தர வழி: