"வண்டுதிர்க்கும் பூக்கள்

5 views
Skip to first unread message

kavianban kalam

unread,
Sep 15, 2010, 12:51:31 PM9/15/10
to தமிழிலக்கியம்
வண்டுதிர்க்கும் பூக்களாய் வாடும் நிலைதனை
கண்டுதிர்க்கும் எந்தன் கவிதை மலர்களை
கண்டுணர்ந்து கொள்ளாத காதலி யுள்ளமதைக்
கண்டுகொண்டே என்மனம் பேசும்.

...
வண்டுதிர்க்கும் பூக்களாய் வாடு மதனாலே;
உண்டுமகிழ்ந் துன்னை உதறிடு வேனென்று
கொண்டுள்ள எண்ணத்தால் கொன்று விடாதுடன்
விண்டுவிடு உண்மை நலம்.


வண்டுதிர்க்கும் பூக்களாய் வாழ்வு மடியாது;
தண்டுபோ லுன்னையேத் தாங்கிடு வேனென்று
பண்டுதமிழ் காதல் படித்த நமதுள்ளம்
கொண்டுள்ள பாடம் காண்.


வண்டுதிர்க்கும் பூக்களாய் வாழ்வு குலைந்தாலும்
மீண்டும் மலர்ந்திட மீண்டு வரவேண்டு மென்றுநான்
வேண்டும் தொழுகையில் வேண்டினே னென்றுநான்
ஈண்டு பகர்தல் சிறப்பு

"கவியன்பன் கலாம்”, அதிராம்பட்டினம்

Reply all
Reply to author
Forward
0 new messages