என்னோடு வேலை பார்க்கும் சகோதரர் பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிரமாத்தைச் சேர்ந்தவர். கடந்த 4 வருடங்களாக சொந்த நாட்டைத் துறந்து துபையில் பணி செய்து வருகின்றார். இந்தியாவிற்கு விடுப்பில் சென்று தனது திருமணத்தை முடித்து திரும்பினார். அங்கு அவர் தனது மனைவியுடன் வாழ்ந்த காலம் 28 நாட்கள் மட்டுமே.
மிக வேகமாகக் கழிந்த விடுப்பு, அன்பு மனைவியிடமிருந்து பிரிந்தது போன்றவையால் கண்ணீருடன் பறந்தார் விமானத்தில். மீண்டும் வேலையில் சேர்ந்தாகிவிட்டது.
விடுப்பு மிகக் குறைவு என்றாலும் அவர்கள் வாழ்ந்த குறுகிய கால வாழ்க்கைக்கு அடையாளமாய் அவரின் அன்பு மனைவி மகிழ்ச்சியான செய்தியை தொலைபேசியில் தெரிவித்தாள். வெளிநாடுகளில் வாழும் நமக்கு சந்தோஷமும், துக்கமும் தொலைபேசியில்தானே. அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரிடமும் கூறி அங்கலாய்த்தார்.
நண்பரின் சந்தோஷத்தில் பங்கெடுப்பது நமது கடமையல்லவா? விடுவோமா என்ன? அன்றே பார்ட்டி வேண்டும் என்று அடம் பிடித்து, மதிய உணவை ஒரு பெரிய ஹோட்டலில் ஆர்டர் செய்து, சாப்பிட்டு, சிரித்து, மகிழ்ந்து, கிண்டலடித்து குதூகலமாக கழிந்தது அன்றைய பொழுது.
நாட்கள் நகர்ந்தன. 4 மாதம் போனதே தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு முன் தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்றும், துஆ செய்யுமாறும் கூறினார். சிறிது நேரத்தில் தன் குழந்தை பிறந்து இறந்து விட்டது என்ற அதிர்ச்சி தகவலை கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீரோடு சொன்னார். நமக்கும் அந்தத் துயரின் வலி தெரியுமல்லவா? ஆறுத....thodaravum
- See more at: http://www.thoothuonline.com/archives/47636#sthash.WFFuYUfz.dpuf| Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |