செய் முறை: மூங்கிலை மூன்று தினுசாகப் பிளக்கவேண்டும் .முறத்தைப்
புடைப்பதற்காகப் பிடிக்கும் பகுதியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு
பிளாச்சுகள் அமைந்திருக்கும். அவற்றுள் வெளிப்பக்கமுள்ள பிளச்சுக்கு
சலக்குடி என்று பெயர். இது (1மீ.X1.5செ.மீ.X1செ.மீ.) 1மீட்டர் நீளம், 1
செ.மீ. அகலம், 1 செ.மீ. கனம் என்ற அளவில் அமைந்திருக்கும். அதற்கும் உள்
பக்கமுள்ள பிளாச்சுக்கு கம்பை என்று பெயர். இது
(1மீ. X 3 செ.மீ. X 1செ.மீ.) என்ற அளவிலும், முன் பகுதியிலுள்ள பிளாச்சு
மூங்குடு எனப்படும் இதன் அளவு
(35 செ.மீX1.5 செ.மீ. X 1 செ.மீ. ) ஆகும். உள் பகுதியில் பின்னலுக்கு
பயன்படும் மெல்லிய பிளாச்சு அவுனி எனப்படும் . அளவு (1மீ. X 1 செ.மீ. X 2
மி.மீ.) இவற்றை முதலில் தயாரித்துக்கொண்டு பிறகு ஆண்கள் அடிபோட்டுத் தர
பெண்கள் பின்னுவர்.
முறத்தின் படிநிலைகள்:
1.மூங்கில்
2.சிம்பு
3.கம்ப
4.சலக்குடி
5.கட்டாக்கணத் துண்டு
6.அரணி (அடி போடுவதற்கு அரணி எனப் பெயர்)
7.தட்டு ( மூலை வளைப்பதர்கு முன் )
8.அவுந்தியம் ( மூலை வளைத்தபின் )
9.முறம்
முறம் செய்வதற்கான கருவிகள்
1. தட்டு அம்பு
2. வாள் அம்பு
3. கொடுவாள்
மூலப்பொருள்கள்
1.மூங்கில்
2.கட்டுக்கொடி
இருபது முறங்களுக்கான உற்பத்தி செலவு.
ஒரு மூங்கில கழி விலை ரூ. 100-
ஆண் ஆள் கூலி நான்கு நாட்களுக்கு : ரூ. 1200-
பெண் ஆள் கூலி நான்கு நாட்களுக்கு : ரூ. 800-
மொத்த செலவு : ரூ. 2100-
ஒரு முறத்தின் உற்பத்தி செலவு : ரூ. 105-
ஒரு முறம் விற்கும் விலை : ரூ। 75-
நூறு ரூபய்க்கு பஞ்சு வாங்கி நூத்து அம்பது ரூபாய்க்கு வித்தா லபமா
நட்டமா என்று ஒரு கணக்கினை எங்கள் ஊரில் கேட்க சிறுவர்களான நாங்கள் லாபம்
என்று கூற கணக்கு போட்ட தாத்தா நூத்து என்பதற்கு நூலாக நூத்து என
விளக்கியபின் நட்டம் என உணர்வோம்। அப்படித்தான் இருக்கிறது முறம்
விற்கும் தொட்டி நாயக்கர் வாழ்க்கை.
நாம் இன்னமும்,
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே நியாயமா ?”
என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய பாடலின் வரிகள் சிலவற்றை
எப்பொழுதாவது எண்ணிப் பார்க்கின்றோம்।
இடுகையிட்டது முனைவர் இரத்தின.புகழேந்தி நேரம் 1/09/2012 09:13:00 PM 1
தாய் மண்ணை நேசிப்பவன் மக்களையும் நிச்சயம் நேசிப்பான்। மக்களை
நேசிப்பவன் மெய்யான மனிதனாக இருப்பான்। மெய்யான மனிதனால் சமூகத்திற்குக்
கேடில்லை। நன்மையே விளையும் ।மக்கள் பலரால் மறந்துவிட்ட முறத்தையும், அதை
உருவாக்கும் மனிதரையும் நினைவூட்டியமைக்கு நன்றி। சமைப்பது வாயு
அடுப்பென்றாலும் குழம்பு, ரசம், அவியல் போன்றவை சென்னை வாழ் எங்கள்
வீட்டில் இன்றுவரை மண்சட்டியில்தான்। முற்றிலும் சைவமும் கூட। எப்படியோ
தங்கள் வலைப்பூ கண்ணிற்பட்டது எனது நல்வினையே। மீண்டும் நன்றி.
எனக்கும் நீங்கள் பேட்டி தகவல் சேகரித்தவர் வயதுதான்। ஒருவிரலில்தான்
எழுத்துப் பதிவு। வாழிய நீடு!
Posted 6 days ago by சீராசை சேதுபாலா