ஏக இறைவனின் திருப்பெயரால்....தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்.
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகம் மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழ் பேசக் கூடிய மக்கள் மத்தியில் நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கும் அரும் பணிகளை உயிரைப் பணயம் வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.
ஏக இறைவனுக்கு இணை வைக்கும் ஷிர்க்கை எதிர்த்து தொடர் பிரச்சாரம், அதை அடுத்து வரதட்சனை எனும் பகல் கொள்ளையை எதிர்த்து தொடர் பிரச்சாரம், கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு மறுக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு எதிரான தொடர் பிரச்சாரம், சூனியத்துக்கு எதிரான இடைவிடாத பிரச்சாரம், அதன் வரிசையில் முஸ்லீமக்ளை தீவிரவாதிகளாகவும், இஸ்லாம் பயஙகரவாதத்தை போதிப்பதாக மீடியாக்களில் பரப்பி வரும் பொய் பிரசாரத்தை முறியடிப்பதற்காக மார்க்க அடிப்படையின் ஆதாரத்தில் ஒரு மாத காலம் தீவிர பிரச்சாரம் செய்வதாக முடிவெடுத்து உலகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்டம், மண்டலங்களில் பிரச்சாரம் சூடு பறந்து வருகிறது.
கீழே அதற்கான ஆதாரங்கள் அடுக்கடுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.