உங்கள் வாழ்க்கையில் சந்தித்த சிரமங்கள், ஏறிய சிகரங்கள், வென்ற டிராகன்கள்...
அனைத்தையும் உங்கள் பிள்ளைகளை அமரவைத்து சொல்லவும்
உங்கள் அப்பா, அம்மா பற்றியும், தாத்தா பாட்டி பற்றியும் ஜாதிப்பெருமையாக இல்லாமல் முன்னோர் வரலாறாக சொல்லவும்.
அப்போதுதான் வம்சத்தின் வரலாறு வழி, வழியாக அடுத்த தலைமுறைக்கு சென்றுசேரும்.
இல்லையெனில் உங்கள் மகன் ஏதோ நடிகனுக்கு பால்குடம் தூக்கிக்கொண்டிருப்பான். மகள் அவனது போட்டோவை ஸ்க்ரீன் சேவராக வைத்திருப்பாள்.
உங்கள் பிள்ளைகள் ஆதர்சமாக நினைத்து பெருமைப்பட ஒரு ஹீரோ தேவை.
அந்த இடத்தை நீங்கள் நிரப்பவில்லையெனில் சம்பந்தமே இல்லாத இன்னொருவன் நிரப்புவான்.
அவன் குடித்தால் உங்கள் மகன் குடிப்பான், அவன் காதல் மன்னனாக இருந்தால் உங்கள் மகனும் காதல் மன்னனாக மாற முயல்வான்.
உங்கள் பிள்ளைகள் உங்களை ஆதர்சமாக நினைக்கும் அளவுக்கு தகுதிகளை நீங்கள் வளர்த்துக்கொள்ளவும்.
அதன்பின் நிழல் நாயகர்களை அவர்கள் வணங்கமாட்டார்கள்.
--