புதுக்கவிதை என்றால் என்ன?

4,366 views
Skip to first unread message

வில்லன்

unread,
Aug 22, 2009, 1:14:00 AM8/22/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
நாம் அனுபவிக்கும் உணர்ச்சியை அப்படியே பிறரும் அனுபவிக்க தூண்டும்
உள்ளத்தினை வெளிபடுத்துவதே கலை எனலாம்.
 
உள்ளதை உள்ளபடி உரைக்காமல், உள்ளதை உண்ர்ந்தவாரு உரைகும் உன்னத கலை
கவிதைக்கலை
 
இலக்கிய வரலாற்றில் மிகவும் பழைமையானதாகவும், முதன்மையானதாகவும்
கவிதை இருந்து வருகிறது.
 
ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முந்தியதே கவிதைக்கலை, இது இக்காலத்தில் பல
பரிணாமங்களில் மிளிர்கிறது, தொடர்கிறது.
 
அந்தகாலம் முதல் இந்த காலம் வரை கவிதை பல்வேறு மாற்றங்களோடும்,
(உருவத்திலும், உள்ளடக்கத்திலும்) வளர்சி பெற்று வந்து கொண்டே தொடர்கிறது.
 
கவிதை உலகில் கருப்பொருட்களை விளக்கும் வண்ணம் அமைந்த
காதல் கவிதை, நீதி கவிதை, அருட்கவிதை,, கதைக்க்விதை, கைக்கிளைக்கவிதை
போற்றிக்கவிதை, தேசியக்கவிதை, கிராமிய கவிதை, புதுக்கவிதை முதலான
பல்வேறூ கவிதைகள் வரலாற்றில் கவிதைகள் பெற்ற மாற்றத்தை எடுத்து சொல்கின்றன,
 
 
இவற்றில் புதுக்கவிதையை பற்றி காண்போம்
 
 
புதுக்கவிதை (New Poetery) என்றால் என்ன ?
 
 
(தொடரும்ம்ம்ம்)
 
முனைவர் மு.வரதராசனார் அவரின் மாணவர் சி.சுப்பிரமண்யம் எம் ஏ, எம் லிட்...
அவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் புத்தகத்தில் இருந்து...................

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”

Naresh Kumar

unread,
Aug 23, 2009, 12:44:38 AM8/23/09
to panb...@googlegroups.com, முத்தமிழ், தமிழமுதம்
நல்ல தொடர் வில்லன்....

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Siddharth Venkatesan

unread,
Aug 24, 2009, 6:06:39 AM8/24/09
to panb...@googlegroups.com
வில்லன்... என்னாச்சு? தொடரலையா இத? இல்ல வாரம் ஒரு முறை தான்
புதுப்பிக்கப்படுமா? ;)

23 ஆகஸ்ட், 2009 7:44 am அன்று, Naresh Kumar<meet...@gmail.com> எழுதியது:

--
-----------------------------------------
http://angumingum.wordpress.com

மஞ்சூர் ராசா

unread,
Aug 24, 2009, 6:35:42 AM8/24/09
to panb...@googlegroups.com

தெரியாதது
யாரும் சொல்லித்தரவில்லை
தூத்துக்குடி துர்க்காவின்
துரோகம் இப்படித்தான்
இருக்குமென்று
இறந்து போன மாமாவின்
இரண்டாவது அத்தை
கட்டித் தொங்கவிடப்பட்டது
இன்றுவரை யாரும்
வாய்திறக்கவில்லை
பெரிய தம்பியின் சின்ன வீட்டு
விஷயம் பெற்றோருக்கே தெரியாது
வழக்கின் தீர்ப்பு
வாய்க்கரிசிக்கும் மிஞ்சாது என
வக்கீலுக்கு முன்னரே
எனக்குத் தெரிந்தது
கங்கை கொண்டான் பேருந்தின்
கடைசி இருக்கையில்
வாந்தி எடுக்கப்பட்டுள்ளதை
எச்சரித்தார் எவருமில்லை
நான் உட்காரும்வரை
எவரும் குறிப்பிடவில்லை
இசக்கியம்மன் சாமியாடி
வேண்டியவருக்கு மட்டும்தான்
குறிசொல்வாள் என்பதை
சபை நடுவே சப்தமில்லாக்
குசு போடும் நாசூக்கு
நவின்றார் எவர்
எனினும்
அசைபோட பசுவய்யா கவிதை
என்றிருந்தவனை
எல்லோரும் சொன்னார்கள்
இவன் எங்கே
உருப்படப் போறான் என்று

குமார்ஜி எழுதியது
நன்றி: http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_24.html

வில்லன்

unread,
Aug 24, 2009, 7:03:28 AM8/24/09
to panb...@googlegroups.com
இன்னிக்கு ரூம் போனதும் டைப் பண்ணி பேஸ்ட் பண்றேன்,
 
இரண்டு நாளா கொஞ்சம் அலைச்சல், அதான், தட்டச முடியலை,

வில்லன்

unread,
Aug 24, 2009, 10:28:45 AM8/24/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக்கவிதை என்றால் என்ன?

சொற்சிக்கனம், பேச்சுப்பாங்கு, பேச்சமைதி, புதுமைப்படிமப் பயன் பாடு(பிரயோகம்), தற்கால்ச் சொலாட்சி, உணர்ச்சி பாங்கு, தத்துவ நோக்கு, ஒலிநய அழுத்தம், உடனிகழ் கால உணர்வு, இன்றைய இக்கட்டான நிலை இவற்றை தன் உள்ளடக்கத்துகும், உருவத்திற்கும் பொருளாகவும், சாதனங்களாகவும் கொண்டு புதுக்குரலில் ஒலிப்பதுதான் இன்றைய புதுக்கவிதை
என்று புதுக்கவிதை பற்றி சி.சு.செல்லப்பா.

சங்கக்கவிதைகள், பக்தி இயக்கம், காவிய காலம் என்று வசதிக்கேற்ப பாகுபடுத்தி கொண்டமையை ஒட்டிப் பாரதிக்கு பின்னர் தோன்றிய திருப்பத்தை உணர்த்தவே புதுக்கவிதை என்ற சொற்பிரயோகம் 1910க்கு பிறகு, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் தோன்றிய NEW POETERY என்ற சொல்லின் மொழிப்பெயர்ப்பாக தோன்றியது என்றும், தமிழுக்கு புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதிதான் என்றாலும், இன்று அது ஒரு திருப்பம் அடைந்து சமதன்மை உண்டாக்கிச் சுயரூபம் பெற்று இருக்கிறது என்றும் குறிக்கின்றார்,

முன்னைய கவிதை மரபுகளை பின்பற்றி வரும் போது, அம் மரபுகள் போதாத நிலையில் புதிய மரபுகள் தோன்றி அவ்வக்காலத்தின் தேவைகளை நிறைவு செய்வது தவிர்க முடியாத வரலாற்று நியதியாக இருந்து வருகிறது.

புதுக்கவிதை மரபும் அத்தகையதே என்பது அறிஞர் கருத்து.


புதுக்கவிதையின் தோற்றம்



(தொடரும்ம்ம்)

வில்லன்

unread,
Aug 26, 2009, 10:09:36 AM8/26/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக்கவிதையின் தோற்றம்


20ம் நூற்றாண்டில் உரைநடையின் பொற்காலம் எனலாம், 20 நூற்றாண்டின் தொடக்கம் வரை மருத்துவம், நாடகம், ஜோதிடம் முதலிய அனைத்துத்துறைகளிலும் செய்யுளே தன் ஆதிக்கத்தை செலுத்தி கொண்டிருந்தது, உரைநடைகளிலும் எதுகை, மோனை முதலியன காணப்பட்டன.

ஐரோப்பியர்களின் வருகையால் நாடெங்கும் அச்சுக்கூடங்கள் தோன்றின, ஒரு சிலருக்கு என்றிருந்த கல்வி எல்லாருக்கும் என்ற நிலை ஏற்ப்பட்டது, செய்யுள் நடை விடைப்பெற்று உரைநடை வளரத்துவங்கின,

இந்த சமயத்தில் தம் மதங்களை பரப்ப வந்த பாதிரிமார்கள் உரைநடையில் பிரசாரங்களை எழுத துவங்கினர், பின்னர் அதை வசன நடைகளில் மாற்றலாயினர். பிறகு உரைநடை எல்லாவித இலக்கியங்களிலும் ஆட்சிபுரிய தொடங்கியது, சிறுகதை, புதினம் முதலான இலக்கிய துறைகள் வசனத்தின் ஆளுமையைப் பெற்றது, இவற்றின் தொடர்சியாக கவிதை துறைகளிலும் வசனம் தன் ஆதிக்கத்தை படர வைத்தது.

பழங்காலத்தில் செய்யுள் செல்வாக்கு பெற்றிருந்த போது, எவ்வாறு உரைநடை தன் செல்வாக்கை காட்டியதோ, அதே போல உரைநடை செல்வாக்கு பெற்றிருந்த போது அது தன் செல்வாக்கை கவிதையில் காட்டத்தொடங்கியது,

இதன் வெளிப்பாடே வசன்க்கவிதை.

வசனத்தின் செல்வாக்கை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே அன்றைய கவிதைகள் இருந்தன, குறிப்பாக பாரதிக்கு பின் வந்த பாரதிதாசன் முதலியோர்
வறிதே செய்யுளை நிரப்பும் பொருட்டு சொற்களை கையாண்டனர், சொற்சுருக்கமே கவிதை என்ற நிலைபோய், சொற்பெருக்கமே கவிதை என்ற நிலையில், வசனத்திலேயே கவிதை எழுதிடலாமே என்ற எண்ணம் வேறூன்ற தொடங்கியது, இந்த எண்ணமே நாளடையில் புதுக்கவிதை மலர்வதற்கு உரிய வித்தாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டு முதல் சனநாயக அரசுகள் தோன்ற, மக்கள் சுதந்திர நிழலில் இன்பம் காண துவங்கினர், தனிமனித சுதந்திரம் என்ற நோய் மக்களை பிடிக்க அதன் விளைவாக ஹிப்பி சமூகம் தோன்றியது. கட்டுப்பாட்டிற்கு எதிர்குரல் எழுப்புவது இச்சமூகத்தின் வாடிக்கை,

தன் குரலை எல்லா துறைகளிலும் பரப்புவதற்கும் இச்சமூகம் வழிவகுத்தது.
அரசியல், கல்வி, சமூகம், தொழிற்துறை என்ற துறைகளிலெல்லாம் ஏற்ப்பட்ட கட்டுப்பாட்டின் எதிர்குரல் கவிதை துறையிலும் கேட்க துவங்கியது.
சீர், தளை, அடி, தொடை போன்ற எந்த விதியும் கவிதைக்கு தேவையில்லை என்ற புதுக்குரல் கேட்கத்துவங்கின.

இந்த புதுக்குரலும், வசனக்கவிதையுமே புதுக்கவிதையின் தோற்றத்திற்கு காரணங்களாக அமைந்தன,

இதனை,



காலத்தின் பாதிப்பில் கூர்மை

தீட்டப்பட்ட அலகுகளால்

நாங்கள் புதிய

கானம் இசைக்கிறோம்,


என்ற புதுக்கவிஞர் ஒருவரின் புதுக்கவிதையால் தெளியலாம்.


அமெரிக்கச் செல்வாக்கு


(தொடரும்ம்)





துரை.ந.உ

unread,
Aug 26, 2009, 10:13:52 AM8/26/09
to thamizh...@googlegroups.com, தமிழ், முத்தமிழ், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
வில்லன் அய்யா
 
ஒரு சின்ன விண்ணப்பம்
அப்படியே வசனக் கவிதைக்கும் சிறிய விளக்கம் கொடுத்து விடுங்களேன்

 







ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

வில்லன்

unread,
Aug 26, 2009, 10:15:34 AM8/26/09
to thamizh...@googlegroups.com, தமிழ், முத்தமிழ், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
நீங்க இந்த அய்யாவை நிறுத்துங்க,

கண்டிப்பாக குறிப்பு கிடைச்சா கொடுக்கிறேன்


2009/8/26 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

வில்லன்

unread,
Aug 27, 2009, 10:04:41 AM8/27/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
அமெரிக்க செல்வாக்கு

1910ம் ஆண்டில் அமெரிக்காவில் பழைய ஆங்கில யாப்புக் கட்டுகோப்புகளை எதிர்த்து வால்ட் விட்மன் என்பவர் எதிர்ப்பு குரல் கொடுத்தார்.

யாப்பு பழமையின் சின்னம் ! நிலபிரவுத்துவத்தின் எச்சம் ! புதிய இலக்கியத்தின்
உரைநடைக்கும் செய்யுளுக்கும் இடையே எவ்வித வேற்றுமையும் இருத்தல் ஆகாது, விஞ்ஞானம், சமுதாயம் பற்றி விரிவாக எழுத வேண்டுமெனில் கவிதை, உரைநடையிடையே வேறுபாடு இருத்தல் கூடாது, பழைய ஆங்கில யாப்புகள் அடிமைதளைகள் என்றூ கூறுகிறார் வால்ட் விட்மன்.

இதனால் புதுக்கவிதை (New Poetry) என்றும், ப்ரெஞ்சு இலக்கியத்தை பின்பற்றி கட்டற்ற கவிதை ( Verse libre) என்றும் புதிய கவிதை முயற்சி தோன்றலாயிற்று,
இது இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் 1910க்கு பிறகு ஏற்ப்பட்டது,
ஏறத்தாழ இதே ஆண்டில்தான் பாரதி வால்ட் விட்மன் என்ற தலைப்பில் வசன கவிதை எழுதினார், வால்ட் விட்மனை, நகரம் என்ற தம் கட்டுரையில் மகான் என்று குறிப்பிடுவதால் வால்ட் விட்மனின் தாக்கத்தால் எழுத தொடங்கினார் எனலாம்.

இவருக்கு பின் புதுகவிதையில் நாட்டமிக ந.பிச்சமூர்த்தியும் வால்ட் விட்மன் கவிதைகள் தன்னை பெரிதும் பாதித்தது என்கிறார். விட்மனின் புல்லின் இதழ்கள் என்ற யாப்பு மரபையே கண்டிராத கவிதை தொகுப்பு (வசனகவிதை)
யிலிருந்து சில பகுதிகளை மொழி பெயர்த்து ம்னைதனை பாடுவேன் என்ற தலைப்பில் வெளியிட்டார்.

வால் விட்மனை தொடர்ந்து புதுகவிதைக்கு தொடந்து ஆக்கம் தந்தவர் எஸ்ரா பௌண்ட் (Ezre Bount)  என்பவர் ஆவார். 1912ல் டின்டன் என்பவருடன் சேர்ந்து புதுக்கவிதை பற்றிய ஒரு கொள்கையை ஏற்படுத்தினார்.

1. கவிதைக்குள்ளே அகம், புறம் எதையும் நேரிடையாய் இருத்தல் அவசியம், பொருளின் ஆன்மாவை சட்டென்று தொட வேண்டும்.

2. கவிதை வெளியீட்டுக்கு பயன்படாத ஒரு சொல்லை புகுத்தக்கூடாது, சொற்களை கூட்டினாலும் குறைத்தாலும் ஒரு படைப்பு மாறும்,சொல் ஆடம்பரத்திற்காகவோ தேவையற்ற அணி என்பதற்காகவோ சிறந்த படைப்பில் ஏதும் இடம் பெற கூடாது.

3. ஓசைக்கோப்பு அல்லது சொல்லின் இசை ஒழுங்கை கவனிக்க வேண்டுமே தவிர கடிகாரம் போல கணக்காய் போகின்ற முறையை பின்பற்றக்கூடாது,

இந்த மூன்று கருத்துக்களை தவிர வேறு 3 கருத்துக்களையும் எஸ்ரா பௌண்ட் தனியே விளக்குகிறார்.

1. தேவையற்ற சொற்களை வழங்குதல் கூடாது, ஒரு பொருளை விளக்காத அவசியம் இல்லாத அடைச்சொல்லை அகற்ற வேண்டும்.

2. உருவத்தை மழுங்க செய்யும் சொற்களை நீக்க வேண்டும்,

3. அருவ உவமைகளை தவிர்க வேண்டும். நாம் தொட்டு உணரக்கூடிய தூல உருவத்தை படைக்க வேண்டும்.


(மேலும் தொடரும்ம்ம்)

வில்லன்

unread,
Aug 28, 2009, 11:09:46 AM8/28/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
எஸ்ரா பௌண்டை தொடர்ந்து டி எஸ் எலியட் என்பவர் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வழிகோலினார்.

எலியட்டின் எழுத்துக்களும், எலியட்டின் வழியாக எஸ்ராவின் கருத்துக்களும்
உலகமெங்கும் பரவின. ஆங்கிலக் கல்வி வழி இந்தியாவிலும் பரவியது. வங்க மொழியிலும் வேறு சில மொழிகளிலும் இப்பாதிப்பு எற்பட்டது, தமிழும் இதிலிருந்து தப்பவில்லை.

பொதுவாக பார்க்கும் போது, உரைநடையின் செல்வாக்கு, மரபு கவிதையின் செறிவின்மை, சமுதாயத்தால் விளைந்த கட்டுப்பாட்டு வெறுப்பு, அமெரிக்க நாட்டுச் செல்வாக்கு என இவை தமிழில் புதுக்கவிதை தோன்றுவதற்கு காரணமாகின, ஆய்ந்து பார்போமானால், இதில் எதும் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது இல்லை என்பதும் அறிவியலால் ஏற்பட்ட பரிணாமம் என்பதும், சனநாயகத்தின் தாக்கத்தால் விளைந்த இலக்கிய விளைச்சல் என்பதும், ஆங்கிலக் கல்வியை விரும்பி தழுவிய தழுவல் என்பதும் விளங்கும்.

கவிதையின் கண்ணோட்டம் 


தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாறுச் சாரமாக திகழ்வது அதன் மானுடக் கண்ணோட்டம்தான், சங்கக் கவிஞர்கள் முதல் வள்ளுவன், இளங்கோ, சாத்தனார், கம்பன், பாரதி, பாரதிதாசன் வரை தமிழ்கவிதைக்கு ஒரு மானுடக்கண்ணோட்டம் உண்டு. இந்த கண்ணோட்டம் தான், வருங்காலத்தை பற்றி ஆக்க ரீதியிலான படைப்புக் கற்பனைதான் தமிழ்க்கவிதையில் தொடர்ந்து வரும் உயிர்ப்புள்ள சாரம்சமாகும். இந்த மனிதநேயக் கடுத்துக்கள் இடம் பெறும் கவிதைகளின் தொடர்சியாகத்தான் புதுக்கவிதை தோன்றி வளர்ந்து வருகிறது.


தமிழில் புதுக்கவிதை வளர்ச்சி 


புதுக்கவிதை ஒரு தோற்றமல்ல;  இது பரிணாம வளர்ச்சி என்று கூறும் ப்ரெஞ்சு திறனாய்வாளர் கஸ்டாவ் கான் மரபு யாப்பு கவிதையிலிருந்து புதிய கட்டற்ற கவிதையின் தோற்றத்திற்கான காரணங்களைக் கூறும் போது,

சந்தம் கண்ணுக்கு மிகையாக தோன்றுகிறது, அது மாற்றி அமைக்கப்படவேண்டும். அது துண்டிக்கத் தகதல்ல , அதற்கு விடுதலை கொடுத்து விடுவோம் என்று நயம் பட்க்கூறும் கஸ்டாவ் கான்,

வரிகளின் தொடக்கங்களில் தொடந்து உண்டாக்கப்படும் மணியோசையின் நாதத்தை அல்லது எல்லாச் சந்தத்தையும் நிறுத்தி விடுவோம்.

சந்தம் ஓரிடத்திற்கு மட்டும் சொந்தமல்ல, அது எல்லாச் சத்தத்துக்கும் சொந்தம். சந்தத்திற்கு சப்த மட்டும் இல்லை, அதில் சலன விழிப்பும் வேண்டும் என புதிய கோணத்தை சுட்டிக்காட்டுகிறார்.  கஸ்டாவ் கூறும் இக்காரணங்களையே 20ம் நூற்றாண்டின் புதுக்கவிதைக்கும் கூற வேண்டிய நிலை உள்ளது.

பாரதிதாசன் வழித்தோன்றல்களின் கவிஞர்களின் கவிதைகளில் ஒரே மாதிரியான உருவ உள்ளடக்கங்கள் இடம் பெற்றன.

உருவத்தின் கட்டுக்கோப்புக்கு யாப்பு முதலிடம் கொடுக்கப்பட்டுச் சிறப்பிக்கப் பெற்றது. உருவத்திற்கு மட்டும் சிறப்புக் கொடுக்கப்பட்டதால், செய்யுளே மிகுதியாக தோன்றியது.

புதுக்கவிஞர்கள் பலர் தம்முடைய தனி மனித அனுபவ்த்திற்கும் சமூக அனுபவத்திற்கும் வடிகாலை தேடிய போது, யாப்பு அவர்களை பின்னுக்கு தள்ளியது.

எனவே தமிழ் ஆசிரியர்கள் மட்டும் தமிழ்ப் புலவர்களாகச் செய்யுள் இயற்றிக் கொண்டிருந்தனர்.

தமிழ்க் கவிதைக்கு முதன் முதலாக உலகளாவிய பார்வையை வழங்கியவர் பாரதி. ஓருலக மனப்பான்மையையும், பொதுவுடைமைக் கோட்பாட்டையும், அறிவியல் முறையில் கவிதையில் புகுத்தியவர் இவரே.



(தொடரும்ம்ம்).

வில்லன்

unread,
Aug 29, 2009, 10:42:21 AM8/29/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
பாரதியின் கவிதையின் ஆளுமை தேசியத்திலிருந்து சர்வதேசியத்திற்கும் கொண்டு சென்றது,

பாரதிக்கு பின் இந்திய தேசியத்திலிருந்து தமிழ் தேசியத்திற்கு தமிழ் கவிதை தன்னளவில் சுருங்கியது. இதனால் தமிழ் கவிதை நாளுக்குநாள் மெலிவடைய, தேவையற்ற தேக்கம் உண்டானது.

தமிழ், தமிழினம், இயற்கை, காதல், பெண் விடுதலை, தனிமனிதத் துதி என்று கூறுகள் பிரித்துத் தமிழ் கவிதைகள் படைத்த பாரதிதாசன் வழித்தோன்றல்கள் இருகிளைகளாக பிரிந்த போது நா.காமராசன், இன்குலாப், சிற்பி, தமிழன்பன், மீரா போன்றோர் தேக்கத்தை தகர்த்தெறிந்தனர்.

கிபி 1920ல் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் புதுக்கவிதை முயற்சி தொடங்கியது. அதே காலக்கட்டத்தில் தமிழில் பாரதியின் வசனக்கவிதை முயற்சி வளர்ந்தது. 1930க்குப் பின்னர் பாரதியின் வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் ஆகியோர் தொடர்ந்து வளர்ந்தனர்.
1930-40 என்ற கால இடைவெளியில் கிராம ஊழியன், சிவாஜி, எழுத்து போன்றவை புதுக்கவிதையை வளர்த்தன.

புதுக்குரல்கள், பால் வீதி, கன்வுகள், கற்பனைகள், காகிதங்கள், விதி, அன்று வேறு கிழமை, உதய நிழல், தமிழ்நாட்டின் கவிதைகள், தமிழன்பன் கவிதைகள், வைகறை முதலிய புதுக்கவிதை தொகுப்புகள் வெளிவந்தன.
சில குட்டி கவிதை தொகுப்புகளும் வந்தன.


புதுக்கவிதையும், வசனக்கவிதையும் 

புதுக்கவிதை, வசனக்கவிதை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள் :

1. வசனகவிதை புதுக்கவிதை யாப்பு இல்லாதவை.

2. எதுகை, மோனை, இயைபுத் தொடைகள் அற்றவை.

3. இசை ஆதிக்கத்தை விட வசன ஆதிக்கத்திற்கு இடம் தந்து நிற்பவை.

இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகள் :

1. வசனக்கவிதை சற்று விரிவானது, சொற்செட்டு உடையது.

2. வசனக்கவிதையில் ஒரு வித இசை நயத்தை பெரும்பாலும் காணலாம்.
ஆனால், புதுக் கவிதையில் ஒருவித ஓசை நாம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அது காதுக்கு எளிதில் பிடிபடுவதில்லை.

இந்த வகையில் நோக்கும் போது மீராவின், கனவுகள், கற்பமைகள், காகிதங்கள் என்ற நூலையும், நா.காமராசனின் கறுப்பு மலர்களையும் புதுக்கவிதை என்பதை விட வசனகவிதை என்பதே பொருத்தமானது.


எனவே, நீண்டு ஓரளவு ஓசை நயத்தோடு வருகின்றவற்றை வசனக்கவிதை என்றும், சுருங்கி, இறுகி, அந்த அளவிற்கு ஓசை நயம் இல்லாது வருவனவற்றைப் புதுக்கவிதை என்றும் குறிக்கலாம்.


புதுக்கவிதைக்கு எதிர்ப்பு

வில்லன்

unread,
Aug 31, 2009, 10:52:18 AM8/31/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக்கவிதைக்கு எதிர்ப்பு 


காலம் காலமாக மரபில் ஊறிய தமிழர்கள், அம்மரபை மீறி எழுந்த புதுக்கவிதைக்குமப்
பெரும்ம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

1. தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் யாப்புக் கட்டுக்கோப்பில் நின்றே கவிதைகளை படைக்க முடியும். அவ்வாறு இருக்க வீணே யாப்பை புறக்கணிக்கின்றனர்.

2. புதுக்கவிதைகளில் எந்த ஓசை ஒழுங்கும் இல்லை.

3. வசனத்திற்கும் இன்றைய புதுகவிதைக்கும் இடையே வேற்றுமைகள் ஒன்றுமில்லை.

4. புதுக்கவிதையின் உள்ளடக்கங்களில் பாலும், பால் உறவும், விரக்தியுமே அமைகின்றன, இன்றைய சமுகத்தில் தெரியும் சிக்கலைப் பற்றிக் கவலை கொள்வதே இல்லை.

5. புதுக்கவிதை எளிதில் புரிவதில்லை

6. குறியீடு தெரியாவிடின் புதுக்கவிதைகளை சுவைக்க முடியாது.

7. கண்காட்சி கவிதைகள் கவிதைகளே அல்ல, என புதுக்கவிதைகளை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். உள்ளடக்கம், உருவம், உணர்த்துமுறை ஆகியவை புதுக்கவிதைகளில்
ஒழுங்காக அமையவில்லை என்பதும் இவர்கள் கருத்தாக காணப்படுகிறது.


கவிதையின் உருவம்
 

யாப்பு வரலாற்றை காணும் போது, யாப்பு என்பது நிலைபேறு அற்றது என்பதும், காலத்திற்கேற்ற கோலம் கொள்ளும் தன்மையுடையது என்பதை காணலாம்.

யாப்பு வரலாறு பொதுவாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, இவற்றின் இனங்கள், கட்டளை கலித்துறை, சிந்து, கண்ணி, களிப்பு. சீர், தளை முதலான புதுப்புது வடிவங்களை கொண்டு திகழ்கிறது.

இவற்றை காணும் போது, யாப்பு, காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளது தெளிவாகும். எனவே 20ம் நூற்றாண்டுக் கவிஞர்கள் அறிவியலும், அச்சியலும் தோன்றிய காலத்திற்கு ஏற்ப புதிய உருவங்களைப் படைத்ததுக் கொண்டதில் தடை ஒன்றும் இல்லை.


மேலும் புதுக்கவிதையின் வெற்றி என்பது அதன் உணர்த்தும் முறைகளிலேயே அமைகிறது, உருவத்திலும் அன்று, எனவே பழைய கால யாப்பு வடிவம் இல்லை என்பதால் புதுக்கவிதைகளைப் புறக்கணிக்க இயலாது.

புதுக்கவிதைகளில் ஒலிநயம் இல்லை என்றும் கூறிவிட முடியாது, தமக்கே உரிய ஏற்ற்த் தாழ்வுகளை இவை பெற்றிருக்கின்றன.


பூக்களில் நானும் ஒரு

பூவாய்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும்

பொன்விரல்கள் தீண்டலையே

பொன்விரல்கள் தீண்டலையே - நான்

பூமாலை ஆகலையே’

என்ற மேத்தாவின் கவிதையும், நா.காம்ராசனின் கறுப்பு மலர்களில் காணப்படும் சில கவிதைகளும் ஒலிநயம் மிக்க திகழ்வதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

புதுக்கவிதைகளில் யாப்பும் ஓசை நயமும் இல்லை என்று கூறுபவர்களுக்கு மறுப்புக்கான சான்றாக இவற்றை கொள்ளலாம்.



புதுக் கவிதையில் பாடுபொருள்

வில்லன்

unread,
Sep 1, 2009, 10:16:14 AM9/1/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக் கவிதையில் பாடுபொருள்


புதுக்கவிதைகளின் பாடுபொருளகளாக வாழ்க்கை, சாவு, இணைவிழைச்சுணர்வு, நிராசை, தனிமனித உணர்வு, கவிஞன் தொழில், எழுத்தாளன் தொழில், உவமை, படிமம், உருவகம், கூடார்த்தம் (Obscurity) ஆகியன இடம் பெறுகின்றன.

நடந்தே அழியணும் வழி

கொடுத்தே தீரணும் கடன்

செய்தே அழியணும் வேலை

அழுதே அழியணும் துக்கம்

வாழ்ந்தே முடியனும் வாழ்வு

இதுவே உலகின் நியதி.

என்று வாழ்க்கையை பற்றி வல்லிக்கண்ணன் கூறுகிறார்.

புதுக்கவிஞர்களில் ‘இண்டெலக்சுவல் கவி’ என்று பட்டம் சூட்டப்பெற்ற
டி.கே. துரைசாமி, ”இறப்பு” என்ற தலைப்பில் சாவு பற்றி இரண்டு கவிதைகளில் தம்
கருத்தை வெளியிடுகிறார்.

ஓலமிடும் நின்னுடுக்கை

ஓலமிடும் நின்னுடுக்கை

என ஓலமிடும் நின்னுடுக்கை

சாவுக்கும் அர்த்தமுண்டு

சம்போகத்தின் நாசமுண்டு.


‘பெண்ணும் இணைவிழைச்சும்’ என்ற தலைப்பில் தர்மு சிவராமு அவர்கள்,

பூவின் இதழ்ச்சுவருள்

வண்டு குரல் ஒலிகள்

மோதி மடிகிறது

முத்தத் திரை மறைவில்

பேச்சுப் புதைகிறது

ஆனால் சுத்தம் கதைக்கிறது

மௌனம் அதிர்கிறது.  என எழுதுகிறார்.

கறுப்பு வளையல்

கையுடன் ஒருத்தி

குனிந்து

வளைந்து

பெருக்கி போனாள்

வாசல் சுத்தமாச்சு

மனம் குப்பையாச்சு,

இக்கவிதை காமத்தையும் சாவையும் இணைத்துப் பாடுகிறது.

சத்தம் சரணம் கச்சாமி

காமம் சரணம் கச்சாமி

மரணம் மரணம் கச்சாமி


பொருட்பாலுக்குக்

காமத்துப்பாலை விற்கிறேன்

அதற்காக

அறத்துப்பால்

ஏன் அழுது புலம்புகிறது.

இவற்றையெல்லாம் கண்டு புதுக்கவிதையில் பாலும், பாலுறவும், நிராசையும் மட்டுமே இடம்பெறுகின்றன, சமூகப் பின்னணி ஒன்றும் அதில் இடம் பெறவில்லை என்று கூறுதல் இயலாது.

நான்கள் சேற்றில்

கால் வைக்காவிட்டால்

நீங்கள் சோற்றில்

கை வைக்க முடியாது

என்ற கவிதை, ஏழை உழவனின் உள்ளக்குமுறலாக வெளி வருகிறது.


நடைப்பாதையைப் பற்றி நா.காமராசன் குறிப்பிடும் போது,

ஏழைகள் உறங்கிட

இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட புழுதிக்கட்டில்

என சுட்டுகின்றார், இக்கவிதை அவரது சமுதாயப் பார்வைக்கு நல்லதோர் காட்டு.


ஏழையின் குடிசையில்

அடுப்பும் விளக்கும் தவிர

எல்லாமே எரிகின்றன

என வறுமையின் கொடுமையைப் படம்பிடிக்கிறார் இரா.வைரமுத்து.


முடிவாகக் காணும் போது, புதுக்கவிதையின் பாடு பொருள் மிக விரிவானது. அதில்
சமூக உணர்வும் உண்டு. பால், பாலுறவு, நிராசை போன்றவை இடம்பெற்ற வெற்றுக் கவிதைகளும் உண்டு.

எனவே பாடுபொருள்களில் சிலவற்றை மட்டும் கண்டுவிட்டுப் புதுக்கவிதைகளை எதிர்ப்பது பொருத்தமுடையதன்று.


புதுக்கவிதையில் உணர்த்துமுறை

வில்லன்

unread,
Sep 2, 2009, 10:52:41 AM9/2/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக்கவிதையில் உணர்த்துமுறை


புதுக்கவிதைகள் சில புரியாமல் போவதற்கு உணர்த்து முறையின் ஒழுங்கின்மையே காரணமாகும்.

1. சொல்ல வருகின்ற எல்லாக் கருத்துக்களையும் புதுக்கவிஞன் கூறுவதில்லை.

2. தான் கூறவரும் கருத்தினை இறுக்கமாகவும், செறிவாகவும் தர வேண்டும் என அவன் விரும்புகிறான்.

3. தான் கூறவரும் ஒன்றை மிகவும் நுட்பமாக கூறுகின்றான். சுவைஞனுக்கு அந்நுட்பத்தை புரிந்த் கொள்ள இயலாமல் போகிறது.

4. தான் ஏதேனும் ஒருசில குறியீடுகள் வைத்துக் கொண்டு எழுதுவதால், அக்குறியீடுகள் என்ன என்று தெரிகின்றவரை புதுக்கவிதை புரிவதில்லை.

இரண்டாம் உலக

தமிழ் மாநாட்டுக்குத்

திறக்கப்பட்டன சென்னையில்

இருபத்தியொரு

புதிய லெட்ரீன்கள்.

இதில் சென்னையில் 21 சிலைகள் நிறுவப்பட்டதையும், அவை பறவைகளுக்கு லெட்ரினாக இருந்தமையைக் குறிப்பாகப் புலப்படுத்தபடுகிறது.

5. இலக்கிய மேற்கோள்கள், பழம் புராண இதிகாச மேற்கோள்கள் புதுக்கவிதையின் உள்ளாக உறைந்து புதுக்கவிதையைப் புதிர்க் கவிதையாக்கி விடுகின்றன.

எடு ஒருகல்

ஏசு வருமுன்

வீசி எறி.

ஏசுக்கதை தெரிந்தாலொழிய இக் கவிதையைக் சுவைப்பதென்பது மிகவும் அரிது.

புதுக்கவிதையில் உணர்த்தும் முறையை காணும்போது தேவையான சொற்களை மட்டும் பெய்து கவிதையை உணர்த்தல், சில படிமங்களை அமைத்து உணர்த்தல், பொருட்களுக்கு ஏற்ப எழுத்துக்களை மாற்றி அமைத்து உரைத்தல், கண்காட்சிக் கவிதை அங்கதச் சுவை மிளிர உணர்த்தல் முதலிய பல்வேறு வகைகளை கையாளுகின்றனர்.

கணவன்

நிரபராதி என்று

நிரூபிக்க

நாணத்தை

மறந்த

குற்றவாளி

கண்ணகி என்ற தலைப்பில் தேவையான சொற்களை மட்டும் வைத்து பாடப்பட்ட கவிதை.


பூவின் இதழ்ச்சுவருள்

வண்டு குரல் ஒலிகள்

மோதி மடிகிறது

முத்தத் திரை மறைவில்

பேச்சுப் புதைகிறது

தர்மு சிவராமுவின் இக் கவிதை படிமக் கவிதைக்குச் சான்றாகும்.

கவிதையில் கூறவரும் பொருளும் உருவமும் இறுகிச் செறிந்திருக்கவேண்டும். பொருளையும் உருவத்தையும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்க வேண்டும். உள்ளடக்கத்தின் ஆதிக்கம் உருவத்தில் புலப்பட வேண்டும்,

அதனைக் கண்காட்சிக் கவிதை என்கின்றனர்.

முதுகு வளர

நீ

ண்

டு

விட்ட

கூந்தலுக்கு

மேலும் வளரத்

துடிதுடிப்பென்ன... என்ற எஸ். வைத்தீஸ்வரனின் ”ஆசை” என்ற கவிதை கண்காட்சிக்
கவிதைகளுக்கு சிறந்ததோர் காட்டு...


பாட்டி செத்த பத்தாம் விநாடி

பெரிய குழப்பம் -

பிணத்தை எரிப்பதா புதைப்பதா என்று...

உள்ளூர்ப் புலவர் ஒடி வந்தார்

பட்டி மன்றம் வைத்துப்

பார்த்தால் என்ன என்று

வெற்றுஒ பட்டி மன்றங்களின் சொற் குப்பை கூளங்களை நன்றாகவே கிண்டல் செய்கின்றது மீராவின் “ பாட்டி மன்றம் “


உருவத்திற்கும் உள்ளடகத்திற்கும் இருந்த காலம் போய், இன்று உணர்த்துமுறைக்கு ஒரு காலம்  வ்ந்துள்ளது. புதுக்கவிதைகளில் உள்ளடக்கத்திலிருந்து எளிதில் பிரிக்க முடியாதபடி செறிவாகப் பிணைந்து கிடகிறது.

உணர்த்து முறையைப் புதுக் கவிதை உயிராகப் போற்றுகிறது.


புதுக்கவிதையும் பேச்சு வழக்கும்

(தொடரும்ம்ம் திங்கள் கிழமையில்)


வில்லன்

unread,
Sep 12, 2009, 2:26:31 AM9/12/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக்கவிதையும் பேச்சு வழக்கும்
 
”சுதந்திரம்” என்ற தலைப்பில்
 
                  இரவினிலே வாங்கினோம்
 
                  இன்னும் விடியவே யில்லை
 
என்ற கவிதையில் பேச்சு வழக்கின் முழு அமைதியைக் காண முடிகிறது. கோடிக்கணக்கான பாட்டாளி மக்களிம்
ஏழ்மைக்கோலமும், பட்டினிக்கொடுமையும் நிழலுருவமாக நம்முன் காட்சி அளிக்கின்றன.
 
 
                நாங்கள் சேற்றில்.
 
                கால் வைத்தால்தான்
 
                நீங்கள் சோற்றில்
 
                கை வைக்க முடியும்
 
என்று நகரத்தாரின் ஆடம்பர வாழ்வை இடித்துக்காட்டும் போக்கில் அமைந்த கிராமிய கவிதையிலும்
பேச்சு வழக்கின் இறுக்கத்தை காணலாம்.
 
பாரதியின் சர்வதேசியப் பார்வையை மீண்டும் தமிழ்க் கவிதைக்கு வழங்கியவர்களில் இன்குலாப் ஒருவர்.
“கிரெளஞ்சவதத்திற்குக் கேள்விகள் இல்லையா? என்ற புதுக்கவிதையில் அமைந்த,
 
                   இந்த குருச்சேத்திரத்தில் எங்கள் கைகள்
 
                   ஆயுதங்களை கீழே போடவில்லை
     
                   மாறாக
 
                   எங்கள் கைகளில்தான் ஆயுதங்கள் இல்லை
 
என்ற வரிகள் விடுதலை பெறப் போராடும் ஒவ்வொரு நாட்டின் ஆத்ம தாகத்தையும் எதிரொளிக்கின்றன.
 
                  கண்மூடும்போது கனவுகள் சுரண்டின
 
                  கண்விழித்தபோது கனவான்கள் சுரண்டினர்
 
                  இருட்டறையில் வேர்த்துகிடக்கும் நாம்
 
                  இனிமேல் திறக்கப்போவது
 
                  சன்னல்களை யல்ல
 
                  கதவுகளையே
 
என்ற கோ.கேசவனின் கவிதை ஆண்டாண்டுக் காலமாகப் புதிய கொத்தடிமையில் சிக்கித் தவிக்கும் இந்திய
ஆத்மாவின் குரலாக கேட்கிறது.
 
இவ்வாறாக புதுக்கவிதைகளில் பேச்சு வழக்கின் பண்புகளும் காணப்படுகின்றன. யாரோ ஒரு தனிமனிதனின்
ஒற்றைக்க் குரலாக இல்லாமல் வீழ்ந்த மானுடத்தின் எழுச்சிக் குரலாய் அவை எதிரொலி செய்கின்றன.
 
 
புதுக் கவிதையும் பொதுவுடைமையும்
 
 
(தொடரும்ம்ம்)
 
                   

தமிழன் வேணு

unread,
Sep 12, 2009, 2:42:20 AM9/12/09
to thamizh...@googlegroups.com, panb...@googlegroups.com
புதுக்கவிதையும் பேச்சு வழக்கும்
 
”சுதந்திரம்” என்ற தலைப்பில்
 
                  இரவினிலே வாங்கினோம்
 
                  இன்னும் விடியவே யில்லை
 
என்ற கவிதையில் பேச்சு வழக்கின் முழு அமைதியைக் காண முடிகிறது. கோடிக்கணக்கான பாட்டாளி மக்களிம்
ஏழ்மைக்கோலமும், பட்டினிக்கொடுமையும் நிழலுருவமாக நம்முன் காட்சி அளிக்கின்றன.

என்ன தந்ததாம் இந்த சுதந்திரம்?
அப்பன் ஏந்திய திருவோட்டை
புத்திரனுக்குப்
புதுப்பித்துத் தந்தது! -கவிப்பேரரசு வைரமுத்து.
 
 
 
                நாங்கள் சேற்றில்.
 
                கால் வைத்தால்தான்
 
                நீங்கள் சோற்றில்
 
                கை வைக்க முடியும்

ஹையா!

"சோத்தில் நாம கையை வைக்க
 சேத்தில் வைப்பான் காலை..."

'தேவுடா தேவுடா" பாட்டுலே கவிஞர் வாலி எழுதியிருந்தாரே!
 
 என்று நகரத்தாரின் ஆடம்பர வாழ்வை இடித்துக்காட்டும் போக்கில் அமைந்த கிராமிய கவிதையிலும்
பேச்சு வழக்கின் இறுக்கத்தை காணலாம்.
 
பாரதியின் சர்வதேசியப் பார்வையை மீண்டும் தமிழ்க் கவிதைக்கு வழங்கியவர்களில் இன்குலாப் ஒருவர்.
“கிரெளஞ்சவதத்திற்குக் கேள்விகள் இல்லையா? என்ற புதுக்கவிதையில் அமைந்த,
 
                   இந்த குருச்சேத்திரத்தில் எங்கள் கைகள்
 
                   ஆயுதங்களை கீழே போடவில்லை
     
                   மாறாக
 
                   எங்கள் கைகளில்தான் ஆயுதங்கள் இல்லை
 
என்ற வரிகள் விடுதலை பெறப் போராடும் ஒவ்வொரு நாட்டின் ஆத்ம தாகத்தையும் எதிரொளிக்கின்றன.
 
                  கண்மூடும்போது கனவுகள் சுரண்டின
 
                  கண்விழித்தபோது கனவான்கள் சுரண்டினர்
 
                  இருட்டறையில் வேர்த்துகிடக்கும் நாம்
 
                  இனிமேல் திறக்கப்போவது
 
                  சன்னல்களை யல்ல
 
                  கதவுகளையே
 
என்ற கோ.கேசவனின் கவிதை ஆண்டாண்டுக் காலமாகப் புதிய கொத்தடிமையில் சிக்கித் தவிக்கும் இந்திய
ஆத்மாவின் குரலாக கேட்கிறது.
 
இவ்வாறாக புதுக்கவிதைகளில் பேச்சு வழக்கின் பண்புகளும் காணப்படுகின்றன. யாரோ ஒரு தனிமனிதனின்
ஒற்றைக்க் குரலாக இல்லாமல் வீழ்ந்த மானுடத்தின் எழுச்சிக் குரலாய் அவை எதிரொலி செய்கின்றன.
 
 
ஹும், நானும் வர வர கவிதை பற்றிய பதிவில் எல்லாம் பின்னூட்டம் போட ஆரம்பித்து விட்டேன். இது எங்கு போய் முடியுமோ? :-(

தமிழன் வேணு

வில்லன்

unread,
Sep 12, 2009, 3:05:12 AM9/12/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக் கவிதையும் பொதுவுடைமையும்
 
 
தனி உடமைச் சமுதாயத்தை உடைத்தெறிந்து பொது உடைமைச் சமுதாயத்தை காணவேண்டும் என்ற துடிப்பினை
புதுக்கவிகள் பல புலப்படுத்தி நிற்கின்றன.
 
            ஜகத்தினில் அனைவருக்கும் உணவில்லை எனவே
 
            அரசினை அழித்திடுவோம் - முதலாளி
 
            அரசினை அழித்திடுவோம்
 
            தொட்டிற் சனியன் தொடர்ந்தே அழுதது
 
            தூங்கிய மனிதர்கள் சலித்தனர்
 
            வட்டில் நோயால் தாயும் சேர்ந்தழ
 
            வறுமை நோய்க்கு மருந்துகள் உண்டோ...
 
இக்க்கவிதைகளில், புதுக்கவிஞர் ஒருவர், பசிக்குக் காரணமான தனி உடைமைச் சமுதாயத்தை உடைத்தெறிய முன்னேறுகிற உலகப் பெரும்படையைச் சுட்டிக்காட்டி, அதன் வெற்றியால் அலகில் பசி அழியும் என்ற நம்பிக்கையை ஏழை உள்ளங்களில் எழுப்புகிறார்.
 
                        பூமிச் சருகாம் பாலையைப்
 
                        முத்து பூத்த கடல்களாக்குவேன்
 
                        புயலைக் கூறுபடுத்தியே - கோடிப்
 
                        புதிய தென்றலாக்குவேன்
 
                        இரவில் விண்மீன் காசினை - செலுத்தி
 
                        இரவ லரோடு பேசுவேன்
 
                        இரவெரிக்கும் பரிதியை - ஏழை
 
                        விறகெரிக்க வீசுவேன்
 
 
என்ற நா.காமராசனின் சபதம்  பொதுவுடைமைச் சமுதாயத்தை ஏற்படுத்தத் துடிக்கும் உள்ளத்தின் எதிரொளியாக அமைகிறது
 
”குடிகாரன்” என்ற கவிதையில் நா.காமராசன் அவர்கள் கூறும்,
 
                     மாளிகைக்குப் பெர்மிட்டு
 
                     சேரிக்கு மட்டும் கைவிலங்கு
 
என்ற கூற்று, சமுதாயத்தின் போலி வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுவதாக அமைகிறது.
 
 
புதுக்கவிதையில் நாட்டுப்புறச் சாயல்

துரை.ந.உ

unread,
Sep 12, 2009, 3:18:50 AM9/12/09
to thiruvi...@googlegroups.com, தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், பண்புடன், vishalam's page
அன்பின் ஸ்ரீயே
அத்தனையும் அற்புதமே
 
உன்னாலே உன்னாலே
நானும் வளர்கிறேனே தன்னாலே

--பல சந்தேகங்கள் தீர்ந்தது (போல)
இப்பேதைக்கு  இப்போதைக்கு  :)
--

என்றும் அன்புடன்
--  துரை
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com

மஞ்சூர் ராசா

unread,
Sep 12, 2009, 3:22:28 AM9/12/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
அன்பின் ஸ்ரீ, தொடர்ந்து படிக்கிறேன்.
 
நன்றி.

வில்லன்

unread,
Sep 12, 2009, 8:21:33 AM9/12/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக்கவிதையில் நாட்டுப்புறச் சாயல்
 
 
நாட்டுப் பாடல்களில் பேச்சு வழக்கில் உள்ள வசனநடை வடிகட்டப்பட்டு, இயல்பாக, சொற்களுக்குள்ளே
ஒலிநயச் சேர்க்கை குன்றாத அளவிற்கு நாட்டுப்புற கவிதைகளாக வாழ்கின்றன. இதனால்தான்
நா.காமராசன், இன்குலாப், சிற்பி, செந்தமிழ் மாறன், புவியரசு போன்ற கவிஞர்கள் நாட்டுப்புற பாடல்களை
பின்பற்றி எழுதுகின்றனர்
 
“ ஒரு சேரிக்க்கிராமமும் தபால்காரன் மரணமும்” என்ற தலைப்பில் அமையுன் நா. காமராசனின் கவிதை
இதற்கு தக்கதோர் சான்றாகும்.
 
 
        மாசிப் பிறையடிக்கும்-
 
                சாத்திரிகள் சொல்லவேண்டும்
 
        மாசங்களிலே விளையாடும்
 
                மழைமேகம் சொல்ல வேண்டும்
 
        தரைஅழுகும் பறைச்சேரித்
 
                தரைமெழுக வந்ததுரை
 
        தரைக்குள்ளே போனதென்ன
 
                தனித்தூக்கம் ஆனதென்ன
 
         ஊர்க்கோடிச் சாவடியில்
 
                ஒளிவிளக்கு எரிஞ்சாலும்
 
         விழிவிளக்கு எரியலையே
 
                வியாசர் கதை முடியலையே
 
என்ற பாடல் நாட்டுப்புறப் பாங்கில் அமைந்த ஒன்றாகும்.
 
 
”என்னுடைய கனவு பூமியின்” என்ற கவிதையில் நா.காமராசன் அவர்கள் பாடும் வயல்வெளிப்பாட்டும்
நாட்டுப்புறப் பாங்கில் அமைந்ததுவே.
 
ஊரோரம் கிளிக்காடு
 
ஒவ்வொண்ணும் பஞ்சுவர்ணம்
 
பஞ்சுவர்ணக் கிளியுறங்கப்
 
பழத்தாலே கூடு செய்தோம்
 
பழத்தாலே கூடு செய்து
 
பவுர்ணமிப்பூ மெத்தையிட
 
கிழக்கே புயலடிக்க
 
கிளிச்சிறகு பறந்தோட
 
கிளியோ கிளி
 
பொலியோ பொலி
 
ஓ! பொலியோ பொலி.
 
புதுக்கவிதையில் இயற்கை
 

வில்லன்

unread,
Sep 12, 2009, 9:22:22 AM9/12/09
to தமிழ், முத்தமிழ், தென்றல், தமிழமுதம், திருவிளையாடல், பண்புடன், vishalam's page
புதுக் கவிதையில் இயற்கை
 
சங்க இலக்கியத்தில் இயற்கை என்பது பின்னணியாக அமைந்து அதன் மூலம் சில கருத்துக்களை
தெளியுமாறு அமைந்து கிடந்தது.
 
கவிஞன் தன் பல்வேறு கருத்துக்களை, நோக்கங்களை வெளிப்படுத்துவற்காகவே இயற்கையைப் பயன்படுத்திய
நிலை காணப்படுகிறது.
 
இன்று புதுக்கவிதையில், எவ்வித நோக்கமுமின்றி, இயற்கையிலுள்ள அழகை மட்டுமே சித்தரித்துக் காட்டுகின்ற
நிலையில் இயற்கை அமைகிறது. வெறும் இயற்கையை மட்டுமே அதன் அழகை மட்டுமே பாடுவது
இன்றைய புதுக்கவிஞர்களின் மரபாகத் திகழ்கிறது.
 
தளிர் பற்றிப் பாடவரும் நா.காமராசன் அவர்கள்,
 
இலைப்பிஞ்சு
 
விதைப்பட்டு
 
தாவர மின்னல்
 
வேர்த்தூ ரிகையின் ஓவியம்
 
என்றெல்லாம் அடுக்கிச் செல்கின்றார்,  கடலை பற்றி பாடும் போது,
 
வானத்திற்கும் பூமிக்குமாக
 
மழைநெசவு நடந்தபோது
 
அறுந்துபோன மின்னல் நூல்களை
 
நினைத்துப்போன மின்னல் நூல்களை
 
நினைத்துத்தான் நான்
 
அழுதுகொண்டிருக்கிறேன்
 
என்று கூறுவது கவியின்பம் நல்குவதாக அமைகிறது. வானவில்லைப் பற்றிப் பாடும்போது,
 
 
இயற்கை
 
ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி
 
ஒரு ஓவியத்தை சிருஷ்டித்தது
 
அதுதான் வானவில்
 
சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
 
துரும்புகூட
 
அழகாத்தான் இருக்கிறது.
 
என்று கூறுகின்றார்.
 
 
இவ்வாறாக புதுக்கவிதைகளில் இயற்கை எவ்விதத் தாக்கமும் இன்றி அழகுணர்சிக்காக
மட்டுமே கையாளப்படுகிறது.
 
புதுக்கவிதை -  ஒரு பொதுக் கண்ணோட்டம்
 
 
பொதுவாகச் சங்ககாலம் முதல் பிற்காலம் வரை தோன்றிய மரபுக் கவிதைகள் அனைத்துமே வாழும்
கவிதைகளாகத் திகழ்கின்றன என்று கூற முடியாது. அவற்றுள் ஒருசில மட்டும் நிலைபேறு உடையனவாக திகழ்கிறது
இவற்றில் மணிகளும் உண்டு. பதர்களும் உண்டு.
 
இவற்றைப்போலவே புதுக்கவிதைகளிலும் சில மணிகளும் உண்டு, பதர்களும் உண்டு, இவற்றில் கால வெள்ளத்தை
நீந்தி வாழ்வன மட்டும் பின்னாளில் வாழும் கவிதைகளாக மாறும்.
 
 
முடிவுரை
 
இவ்வாறாக வசனக்கவிதையின் ஆதிக்கத்தால் தோன்றிய புதுக்கவிதை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு
 
பிறகும் தன் ஆதிக்கத்தை தொடர்கிறது.
 
 
 
முற்றும்
 
 

வில்லன்

unread,
Jul 27, 2012, 11:11:45 AM7/27/12
to panb...@googlegroups.com, oms...@gmail.com
3 வருசத்துக்கு முன்னாடி ஒரு புத்தகத்துல இருந்து நானே பொறுமையா அலுவலகத்திலேயே தட்டச்சி அனுப்பிய
பதிவு... 

VJagadeesh

unread,
Jul 27, 2012, 11:12:49 AM7/27/12
to panb...@googlegroups.com, oms...@gmail.com
https://groups.google.com/forum/?fromgroups#!searchin/panbudan/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88$20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D$20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/panbudan/xxCniIMYcww/ljVG8FYoNisJ 

2012/7/27 வில்லன் <vom...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Reply all
Reply to author
Forward
0 new messages