கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்

1,177 views
Skip to first unread message

மரவண்டு

unread,
Jun 23, 2011, 10:06:09 AM6/23/11
to பண்புடன்
நண்பர்களே

நாளை கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாள் (ஜூன் 24), கண்ணதாசனைப் பற்றி
தாங்கள் அறிந்த செய்திகளையும் , இணையத்தில் படித்தவைகளையும் இங்கே வந்து
கொட்டுங்கள்

என்றும் அன்ப்கலா
கணேஷ்

Kandavel Rajan

unread,
Jun 23, 2011, 10:09:10 AM6/23/11
to panb...@googlegroups.com
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.


--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

Omprakash

unread,
Jun 23, 2011, 10:23:14 AM6/23/11
to panb...@googlegroups.com
அவரை பற்றி சொல்லும் எல்லா செய்தியும் மிக பழையதாகவே இருக்க வாய்ப்புள்ளது.
எனக்கு பிடித்த பாடல் ஒன்று உண்டு “ பிறக்கும் போதும் அழுகின்றாய்” என்ற பாடல்( இது கண்ணதாசனுடைய பாடல் தானே?)

Kandavel Rajan

unread,
Jun 23, 2011, 10:25:52 AM6/23/11
to panb...@googlegroups.com


2011/6/23 Omprakash <vi.omp...@gmail.com>

அவரை பற்றி சொல்லும் எல்லா செய்தியும் மிக பழையதாகவே இருக்க வாய்ப்புள்ளது.
எனக்கு பிடித்த பாடல் ஒன்று உண்டு “ பிறக்கும் போதும் அழுகின்றாய்” என்ற பாடல்( இது கண்ணதாசனுடைய பாடல் தானே?)


பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்…இயற்கை சிரிக்கும்..

அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்…. பெரும் பேரின்பம்..

பிறக்கும் போதும் அழுகின்றாய்

இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே

படம் : கவலை இல்லாத மனிதன்
பாடல் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர் : சந்திரபாபு JP
வரிகள் : கண்ணதாசன்

Gokul Kumaran

unread,
Jun 23, 2011, 10:29:22 AM6/23/11
to panb...@googlegroups.com
ஏதோ ஒரு படத்தில் டாக்டரிடம் சிகிச்சை பெற்று விட்டு ஒரு கவிதை சொல்லுவார் கண்ணதாசன்.

”ஆஹா, என்ன கவிதை, அது தான் கண்ணதாசன்” என்று உளம் மகிழ்வார் டாக்டர். (நாகேஷ் என்று நினைக்கிறேன்)

“அது தான் ஃபீஸ்” என்று சொல்லி கமுக்கமாக கண்ணதாசன் கிளம்பிவிடுவார்.

என்ன படம் என்று ஞாபகமில்லை.


--
Gokul Kumaran

Omprakash

unread,
Jun 23, 2011, 10:30:37 AM6/23/11
to panb...@googlegroups.com

அபூர்வ ராகங்கள்
2011/6/23 Gokul Kumaran <gokul...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

வில்லன் .

unread,
Jun 23, 2011, 10:31:06 AM6/23/11
to panb...@googlegroups.com
அபூர்வ ராஹ்

2011/6/23 Gokul Kumaran <gokul...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

இது என்ன கடவுளே! 
புரியாது கடவுளே!
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்!

Gokul Kumaran

unread,
Jun 23, 2011, 10:34:55 AM6/23/11
to panb...@googlegroups.com
அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடலில் எல்லா வரிகளுமே மே என்று முடிந்திருக்கும்.

மே மாதத்துக்குள் பாட்டு வந்தாகணும்னு தயாரிப்பாளர் நச்சரித்ததால், நொந்து போய் எல்லா வரிகளுமே மே என்னும் எழுத்தில் முடித்ததாக சொல்வார்கள்.

--
Gokul Kumaran

Kandavel Rajan

unread,
Jun 23, 2011, 10:39:05 AM6/23/11
to panb...@googlegroups.com


2011/6/23 Gokul Kumaran <gokul...@gmail.com>

அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடலில் எல்லா வரிகளுமே மே என்று முடிந்திருக்கும்.

மே மாதத்துக்குள் பாட்டு வந்தாகணும்னு தயாரிப்பாளர் நச்சரித்ததால், நொந்து போய் எல்லா வரிகளுமே மே என்னும் எழுத்தில் முடித்ததாக சொல்வார்கள்.




பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை…

பெரிய (!) கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் ஒரு படநிறுவனம் பாட்டு எழுதித் தர வேண்டியது. அவரும் அன்புடன் இசைந்திருந்தார். 1973-ம் ஆண்டு மே திங்கள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால் தவறாது முன்கூட்டியே எழுதித் தர வற்புறுத்தவே, கவியரசு சரியென்று சொன்னார்.. என்றாலும் வழக்கம் போல மறந்துவிட்டார்.. பட நிறுவனத்தாரோ பயணம் கிளம்பும் முன் ஒருமுறை மே மாதம் என்று நினைவூட்டி புறப்பட்டனர்.. பலனில்லாமல் போகவே, போய் இறங்கிய பின்பு மணிக்கொரு முறை மே மாதம்… மே மாதம் என்று நச்சரித்தனர்..

எரிச்சல் தாளாத கவிஞர் எழுதினார்…

“அன்பு நடமாடும் கலைக்கூடமே… ஆசை மழை மேகமே.. “

அவன்தான் மனிதன் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த பிரபலப் பாடலின் அத்தனை அடிகளுமே “மே” என்றுதான் முடியும்…!



http://sundaresann.wordpress.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A/

Snabak Vinod (SV)

unread,
Jun 23, 2011, 10:44:05 AM6/23/11
to panb...@googlegroups.com
இப்படி கவிஞரின் அனைத்து பாடல்களுக்குமே அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்திற்கும் பாடல் வரிகளுக்கும் தொடர்பு உண்டு என்பார்கள்...
 
சில உதாரணங்கள் நான் அறிந்தவை:
* ஒரு கோப்பையிலே குடியுருப்பு கோலமயில் என் துணையிருப்பு
* ஆடுக்குட்டி முட்டையிட்டு
இப்படிப் பல பாடல்கள்....

2011/6/23 Kandavel Rajan <kandav...@gmail.com>

Omprakash

unread,
Jun 23, 2011, 10:43:05 AM6/23/11
to panb...@googlegroups.com


சார் இந்த பாட்டு எழுத உந்துதலா எது இருந்தது அவருக்கு?

Gokul Kumaran

unread,
Jun 23, 2011, 10:56:39 AM6/23/11
to panb...@googlegroups.com
இது முன்னாடியே எழுதியது. இன்னொரு வாட்டி. ஹிஹிஹி!


oo0oo


நம்மாலே எதுவுமே செய்ய முடியாத பட்சத்தில், சுலபமா செய்யக்கூடிய ஒன்னே ஒன்னு கடவுள்
மேலே பழி போடுறது.

இது கண்ணதாசனுக்கு கை வந்த கலை. அப்படிக் கடவுள் மேலே பழி போட்டு கண்ணதாசன்
எழுதிய எல்லாப் பாடலும் பிடிக்கும்.


001.

படம்: வசந்த மாளிகை

கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி?

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்


002.

படம்: குலமகள் ராதை

உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி


ஒரு மனதை உறங்க விட்டான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி


உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி

003.

படம்: வானம்பாடி

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் துயரினிலே மூழ்கவேண்டும்
அவன் பெண்ணென்றால் என்னவென்று
உணரவேண்டும்.......


004.

படம்: நீதி.

கடவுள் என் வாழ்வில் கடன்காரன்
கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்
ஏழைகள் வாழ்வில் விளையாடும்
இறைவா நீ கூட குடிகாரன்


போதை வந்த போது புத்தி இல்லையே
புத்தி வந்த போது நண்பன் இல்லையே

நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்

005.

படம்: சிம்லா ஸ்பெஷல்

உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா

உனதாணை பாடுகின்றேன்
நான் ரொம்ப நாளா


006.

படம்: உயர்ந்தவர்கள்

ஜேசுதாஸ், ஜானகி

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன
தாம் விளையாட



உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன
தாம் விளையாட

உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால்
பூசாரி இல்லையா


007

படம்: என் அண்ணன்

கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே

நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி - மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி


சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் - இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் - இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்


008

படம்: எங்கள் தங்க ராஜா

கற்பாம் மானமாம் ஹே
கண்ணகியாம் சீதையாம்
கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதய்யா அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்

தாய்மொழியாம் தாய் நாடாம் தாய்மையெனும் பண்பாம்
இங்கு சத்தியமாம் தத்துவமாம் தர்மமென்னும் ஒன்றாம்
கண்ணீரில் மிதக்குதய்யா கற்பு என்னும் ஓடம்
கண்ணீரில் மிதக்குதய்யா கற்பு என்னும் ஓடம்
இது கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் ஏன் கடவுளுக்கும் பாடம்


oo0oo


இதுபோல் இன்னும் நிறைய இருக்கலாம். இப்பொழுது ஞாபகம் வந்தது இவ்வளவு தான்.





--
Gokul Kumaran

Snabak Vinod (SV)

unread,
Jun 23, 2011, 10:57:32 AM6/23/11
to panb...@googlegroups.com
* ஒரு கோப்பையிலே குடியுருப்பு கோலமயில் என் துணையிருப்பு - அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிய வரிகள்.... :))

* ஆடுக்குட்டி முட்டையிட்டு - கவிஞரின் வரிகளுக்கே(பெரும்பாலான பாடல்களுக்கு) வி.ரா. கூட்டணி இசை அமைக்க, இளையராசா என்ற புதிய இசையமைப்பாளர் இசைக்கு பாடல் வரிகள் எழுதச் சொல்லவே ஒவ்வாத செயல்களை பட்டியலிட்டாராம் கவிஞர்.... இதனை அறிந்து வரியும் இசையும்(கவிஞரும் ராசாவும்) சிறுது நாட்கள் பகையுடன் இருந்ததாகவும் பின் நட்பாகி தன் கடைசி பாடலை மூன்றாம் பிறை படத்திற்கு எழுதிக் கொடுத்ததும் நான் கேள்விப்பட்ட செய்தி....
 
கவிஞரின் சாதனைகளையும் திறமையையும் அளவிட முடியாது... பல படைப்புகள் அதற்கு சான்று.... ஒரு மெட்டுக்கு பல வார்த்தைகளை கொண்டு அவரால் நிரப்ப இயலும், பிறரால் அதை யோசிக்கக் கூட முடியாது என 'எங்கேயும் எப்போதும்' பாடல் உருவாகும் போது கூட இருந்த எழுத்தாளர் சுஜாதா கூறுகிறார்....
 
சங்க கால தமிழ் (செய்யுள் நடை)இலக்கியங்களை தாண்டி தற்போதைய தமிழ் (உரைநடை, கவிதை நடை)இலக்கியங்களில் பாரதி, பாரதிதாசன் வரிசையில் முடிசூடா மன்னன் கண்ணதாசன் என்ற ஒப்பற்றக் கவி...

2011/6/23 Omprakash <vi.omp...@gmail.com>


சார் இந்த பாட்டு எழுத உந்துதலா எது இருந்தது அவருக்கு?

--

Omprakash

unread,
Jun 23, 2011, 11:25:07 AM6/23/11
to panb...@googlegroups.com

  M.S.விஸ்வநாதனிடமும் கண்ணதாசன் மெட்டுக்குதான் பாட்டெழுதினார் பாட்டுக்கு மெட்டு போட்டது K.V.மகாதேவன்.

//* ஆடுக்குட்டி முட்டையிட்டு - கவிஞரின் வரிகளுக்கே(பெரும்பாலான பாடல்களுக்கு) வி.ரா. கூட்டணி இசை அமைக்க, இளையராசா என்ற புதிய இசையமைப்பாளர் இசைக்கு பாடல் வரிகள் எழுதச் சொல்லவே ஒவ்வாத செயல்களை பட்டியலிட்டாராம் கவிஞர்//

Kandavel Rajan

unread,
Jun 23, 2011, 11:40:56 AM6/23/11
to panb...@googlegroups.com
அபிராமி அந்தாதியில் வரும் பாடல்களான,
 
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிரிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மரிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
 
வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம் 
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும், 
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற் 
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.
 
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து 
மரித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி 
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில் 
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
 
என்ற பாடல்களின் தாக்கமும் அவருடைய கவியுள்ளத்தில் இருந்திருக்கிறது என்பது அவர் இயற்றிய திரைப்பாடல் ஒன்றில் தெரிய வருகிறது. 
 
 
திரைப் படம்: வீர அபிமன்யு 
பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ் 
இசை: கே.வி. மஹாதேவன் 
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆண்டு: 1965
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் 
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் 
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் 
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் 
உனைத் தேன் என நான் நினைத்தேன் 
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் 
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் 
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் 
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் 
உனைத் தேன் என நான் நினைத்தேன் 
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
 
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என 
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன் 
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என 
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன் 
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு 
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில் 
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் 
உனைத் தேன் என நான் நினைத்தேன் 
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
 
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென 
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென 
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் 
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன் 
இல்லாதபடி கதை முடித்தேன்
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன் 
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
 
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
 
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன் 
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
 
நன்றி...ஆகிரா

Shylaja N

unread,
Jun 23, 2011, 11:59:40 AM6/23/11
to panb...@googlegroups.com

கண்ணதாசன் ஒரு படத்துக்குப் பாட்டெழுதினார்
.
'
எண்ணிரண்டு பதினாறு வயது - அவள்
கண்ணிரண்டில் காணுதம்மா காதல் கொண்ட மனது
!
பாடல் பதிவானதும் படத்தயாரிப்பாளரும் இயக்குநரும் கவிஞரிடம் கேட்டார்கள், என்ன கவிஞரே ! இப்படி எழுதிவிட்டீர்களே! கதா நாயகிக்கு (தேவிகா) இப்போது வயது பதினாறா? என்று.
கவிஞர் சொன்னார்
, பாட்டை நன்றாகக் கேள்! என்றார். அவர்களுக்குப் புரியவில்லை.
எண்ணி இரண்டு பதினாறு என்று தானே எழுதினேன் என்றார்!
.

-

2011/6/23 Kandavel Rajan <kandav...@gmail.com>

Kandavel Rajan

unread,
Jun 23, 2011, 12:11:37 PM6/23/11
to panb...@googlegroups.com
"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட - அவை

இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன
தாம் விளையாட"
  • மொழித்திறன்
  • செவித்திறன்
அற்ற ஓர் ஆணும் பெண்ணும் மணந்து கொள்கின்றனர். ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களின் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இதைவிட சிறப்பாகவும் துல்லியமாகவும் ஒரு திரைப்படப் பாடலில் பதிவு செய்ய இயலுமா?
 
மற்றொரு திரைப்படத்தில், தான் காதலித்த பெண் மற்றொருவனை மணந்துகொண்டு அந்தக் கணவனுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். அந்தக் கணவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மருத்துவனான அந்தக் காதலனுக்கு ஏற்பட்டு விடுகிறது.
 
அந்தச் சூழ்நிலைக்கு ஒரு பாடல்......
 
 
"வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!"
 
 
தமது எழுதுகோலால் திரைவானில் நவரசங்களையும் அனாயாசமாக அள்ளித் தெளித்த அற்புத மேதை கவியரசர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல் வரிகளே இவை.
 

Kandavel Rajan

unread,
Jun 23, 2011, 12:21:59 PM6/23/11
to panb...@googlegroups.com
"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே!
 
 
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே!"
 
 
இப்படிப்பட்ட இலக்கிய நயம் கமழும் நல்ல தமிழ் வரிகளை ஒரு திரைப்படப் பாடலின் பல்லவியாக அமைப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.
 
 
இப்பாடல் ஈட்டிய பெருவெற்றி, திரைப்படப் பாடல்களை எளிமை என்கிற பெயரில் மலினப்படுத்திக் கொண்டிருந்த பல மாய்மாலக்காரர்களின் வாயை அடைத்தது.
 
 
அதுபோலவே தனது பாடலின் முதல் வரியிலேயே இரசிகனின் மனதைச் சுண்டியிழுப்பதில் வல்லவர் கண்ணதாசன்.
 
 
 
"பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே"
 
 
"சொன்னது நீதானா?"
 
 
"நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும்
நலந்தானா?"
 
 
"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால்
என்னாவது?"
 
 
"ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்?"
 
 
"ஒருநாள் போதுமா?"
 
 
"ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்"
 
 
"ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாய்?"
 
 
"எங்கிருந்தாலும் வாழ்க!"
 
 
என்று கூறிக்கொண்டே போகலாம்.
 
 
மேலும் ஒரு பாடலில் முதல் மூன்று வரிகளை ஒரே மாதிரி அமைத்துவிட்டு நான்காவது வரியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தைத் தருவதும் இவர் வழக்கம்.
 
 
"கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
கையழகு பார்த்தால் பூ எதற்கு?
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு?"
 
 
"அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்?"
 
 
"ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு"
 
 
"கூடிவந்த மேகமென்று கூந்தலைத் தொட்டார் - வண்
குவளைபோல மலர்ந்ததென்று கண்களைத் தொட்டார்
ஓடிவந்த கனிகளென்று இதழ்களைத் தொட்டார் - தொட்டால்
ஒடியுமென்று இடையை மட்டும் தொடாமல் விட்டார்!"
 
 
பல்வேறு புராண, இதிகாச இலக்கியங்களை கவிஞர் ஆழ்ந்து அறிந்திருந்ததனால் இவரது ஒருசில பாடல்களில் அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு துவக்கமாகத் தெரியும்.
 
 
"காலங்களில் அவள் வசந்தம்" (பகவத்கீதை)
 
 
"தோள் கண்டேன் தோளே கண்டேன்" (கம்பர்)
 
 
"நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
 நதி செய்த குற்றம் இல்லை" (கம்பர்)
 
 
"அன்றொரு நாள் இதே நிலவில்" (பாரி மகளிர்)
 
 
"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி" (சித்தர்கள்)
 
 
"உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே" (குறள்)
 
 
"கண்வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்" (கம்பர்)
 
 
"மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே" (கம்பர்)
 
 
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே" (வள்ளலார்)
 
 
"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" (அருணகிரிநாதர்)
 
 
"சொல்லடி அபிராமி" (பாரதி)
 
 
"உன் கண்ணில் நீர் வழிந்தால்" (பாரதி)
 
 
"வாயின் சிவப்பை விழி வாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்க" (கலிங்கத்துப் பரணி)
 
 
இப்படி ஏராளம்.
 
 
ஆனால் அந்த ஓரிரு வரிகளைத் தொடர்ந்து அப்பாடலை கவிஞர் கட்டமைக்கும் விதம் அபாரம்.
உதாரணமாக,
 
 
"உன் கண்ணில் நீர் வழிந்தால்" பாடலின் சரணத்தில் வரும்
 
 
"பேருக்கு பிள்ளையுண்டு - பேசும்
 பேச்சுக்கு சொந்தம் உண்டு - என்
 தேவையை யாரறிவார்? உன்னைப்போல்
 தெய்வம் ஒன்றே அறியும்!"

என்கிற வரிகள் கல் மனதையும் கரையச் செய்யுமே.

 
 
அதுபோலவே "நலந்தானா" பாடலின் சரணத்தில் வரும்
 
 
"கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட சேதியை கேட்டவுடன் - இந்த
பெண்பட்ட பாட்டை யாரறிவார்?"
 
 
என்ற வரிகளும் மிகவும் வியந்து இரசிக்கத் தக்கவை.
 
 
ஒரு திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் நேரில் பார்க்காமலே காதல் கொள்கின்றனர். நாயகியைத் தேடி வரும் நாயகன் நாயகியின் தோழியை நாயகி என நினைத்துப் பழக, தோழியும் அவனை விரும்புகிறாள். அப்போது நாயகி தோழியைப் பார்த்து பாடும் ஒரு பாடலில்,
 
 
"கடலும் வானும் உள்ளவரை - தென்றல்
காற்று நடந்து செல்லும்வரை
வளர்க உந்தன் பள்ளியறை - நீ
வாழ வைப்பாய் அந்த நல்லவரை!"
 
என்று எழுதியிருப்பார்.
 
 
இதனை எப்படி வெறும் திரைப்படப் பாடல் என்று ஒதுக்க முடியும்?
 
 
"இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!'
 
 
என்றும்
 
 
"எறும்பு தோலை உரித்துப் பார்க்க யானை வந்தது
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்தது'
 
 
என்றும் பெரிய தத்துவங்களை எளிமையாக கூறி இரசிக்க வைப்பார் கண்ணதாசன்.
 
 
கல்லூரி வாழ்வின் பிரிவு நிலை பாடலான
 
 
"பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே"
 
 
பாடல் ஒலிக்காத கல்லூரிகள் இன்றுவரை இல்லை. அதிலும் அப்பாடலின் சரணத்தில் வரும்
 
 
"எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ?"
 
 
போன்ற வரிகளே கண்ணதாசனை தனித்துவம்மிக்க கவிஞராக அடையாளப்படுத்துகின்றன.
 
 
ஒரு படத்தில்,
 
 
"நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!"
 
 
என்று எழுதியவர் வேறொரு படத்தில்
 
 
"மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று!"
 
 
எல்லாவித உணர்ச்சிகளையும் சித்திரிப்பதில் கண்ணதாசன் வல்லவர். ஆயினும் அவரது காதல் தோல்வி பாடல்களே அவரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது என்று கூறுவது மிகையன்று.

"நினைக்கத் தெரிந்த மனமே - உனக்கு

மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே - உனக்கு
விலகத் தெரியாதா?"

"எனது கைகள் மீட்டும்போது

வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது."
 
 
"உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை"
 
 
"எங்கிருந்தாலும் வாழ்க - உன்
இதயம் அமைதியில் வாழ்க"
 
 
"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்"
 
 
இப்படிப் பலப்பல.
 
 
காதலில் தோல்வியுற்று கையறு நிலையில் கலங்கி நிற்கும் நம் இளைஞனின் மனக்குமுறலை கவிஞர் ஒரு படத்தில் பாடலாக வடித்திருப்பதை காண்போம்.

"எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?"
 
 
என்று தொடங்கும் அந்தப் பாடல் பல ஊர்களின் பெயரை தன் நிலையோடு ஒப்பிட்டுக் கூறிவிட்டு இறுதியில்,
 
 
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டுவிட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!
கீழூரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா!
மேலூரு போவதற்கும்
வேளைவர வில்லையடா!
 
 
என்று முடியும்.
 
 
மானுட வாழ்வின் சாரத்தை மையாக்கி திரைப்படப் பாடல்களை உருவாக்கிய அந்த மகத்தான கவிஞனை வெறும் திரைப்படப் பாடலாசிரியர் என்று கூறி தமிழுலகம் ஒருபோதும் ஒதுக்காது; ஒதுக்கவும் இயலாது.
 
ஏனெனில் "கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!"
 
 
 
கட்டுரையாளர்:- திரைப்பட இயக்குநர் - வசனகர்த்தா

நன்றி:- தினமணி

Sankar Kumar

unread,
Jun 24, 2011, 12:33:14 AM6/24/11
to panb...@googlegroups.com
நான் படித்தறிந்த ஒரு நிகழ்வும், பாடலும்.
 

ஈ.வெ.கி. சம்பத்துடன் திமுகவிலிருந்து விலகி, த. தே. க. தொடங்கியபின்னர், காங்கிரஸில் சேர காமராஜருக்கு தூது விட்டிருந்தார்.
வழக்கம்போல, 'ஆகட்டும் பார்க்கலாம்' மட்டுமே பதில்!
மேற்கொண்டு தகவல் இல்லாத நேரத்தில், பஞ்சவர்ணக்கிளி என்னும் படத்துக்குப் பாட்டெழுதணும்.
எழுதினார்....படத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பாட்டை!
 
'அந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!'
 
விரைவிலேயே அழைப்பும் வந்துவிட்டது!
 
யுகக் கவிஞன் அவன்!
 
இன்னொரு வேடிக்கைச் சம்பவம்.
 
காமராஜரே வந்துவிட்ட ஒரு கூட்டத்துக்கு கவிஞர் எப்போதும் போலத் தாமதமாக வருகிறார்.
காமராஜ் முகத்தில் கோபக் கனல்!
அவரைப் பார்க்காமல் குனிந்தபடியே போய் அமர்கிறார்.
உடனே பேச அழைக்கிறார்கள்!
 
மைக்கைப் பிடித்ததும்,...
 
"இங்கிருக்கும் எல்லாருக்கும் ஏதோ ஒரு மதம் இருக்கு. நீ இந்து, அவர் கிறிஸ்தவர், இவர் முஸ்லீம் என.
ஆனால், என் மதம் என்னன்னு இப்போ சொல்றேன்.
என் மதம் எப்போதுமே தா....மதம்!"
 
என்றதும் காமராஜரே சிரித்து விட்டாராம்!

VJagadeesh

unread,
Jun 24, 2011, 12:34:00 AM6/24/11
to panb...@googlegroups.com

அந்த சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி பாடல் பஞசவர்ண கிளியா!

 

அது பட்டனத்தில் பூதம் இல்லையா? கே.ஆர்.விஜயா, சி.ஐ.டி.சங்கர் நடித்தது

Sankar Kumar

unread,
Jun 24, 2011, 12:39:55 AM6/24/11
to panb...@googlegroups.com
ஆம். பட்டணத்தில் பூதம்தான். கவனக்குறைவு!:((
 
பஞ்சவர்ணக்கிளி பாடல் தமிழுக்கு அமுதென்று பேர் என்னும் பாவேந்தர் பாடல்!

2011/6/24 VJagadeesh <VJaga...@prouindia.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
Sincerely,
Sankarkumar

VJagadeesh

unread,
Jun 24, 2011, 12:37:53 AM6/24/11
to panb...@googlegroups.com

பட்டணத்தில் பூதம் படத்தில் தான் இந்த பாடல்.

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of VJagadeesh
Sent: Friday, June 24, 2011 10:04 AM
To: panb...@googlegroups.com
Subject: RE: [
பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்

 

அந்த சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி பாடல் பஞசவர்ண கிளியா!

 

அது பட்டனத்தில் பூதம் இல்லையா? கே.ஆர்.விஜயா, சி.ஐ.டி.சங்கர் நடித்தது

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Sankar Kumar

பஞ்சவர்ணக்கிளி என்னும் படத்துக்குப் பாட்டெழுதணும்.

எழுதினார்....படத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பாட்டை!

 

'அந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி - என்னைச்

சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!'

 

--

Sankar Kumar

unread,
Jun 24, 2011, 12:42:33 AM6/24/11
to panb...@googlegroups.com
நம்ம 'வாத்தியார்' சுப்பையா சார் தன்னோட ப்ளாக்ல, கவிஞரைப் பத்தி பல நிகழ்வுகளை ஒரு 3 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்.
தேடிப் பார்த்து 'லிங்க்'கறேன்.

VJagadeesh

unread,
Jun 24, 2011, 12:41:39 AM6/24/11
to panb...@googlegroups.com

எதுக்கு படம் பஞ்சவர்ணகிளி என்பதற்காகவா?

 

சந்திரவதனா அவர்களின் தளத்தில் இப்பாடல் இருக்கிறது பட்டணத்தில் பூதம் என்று படத்தின் பெயரை போட்டு.

 

நீங்கள் சொன்ன காரணமும் பின்னூட்டம் ஒன்றில் இருக்கிறது.

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Sankar Kumar
Subject: Re: [
பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்

 

தேடிப் பார்த்து 'லிங்க்'கறேன்.

--

Sankar Kumar

unread,
Jun 24, 2011, 12:48:12 AM6/24/11
to panb...@googlegroups.com
.இல்லீங்க. நினைவிலிருந்துதான் தட்டச்சினேன்.
மேற்கொண்டு பல தகவல்கள் கவிஞரைப் பத்தி அங்கே இருக்குன்னு சுப்பையா சாரைக் காட்டினேன்!

2011/6/24 VJagadeesh <VJaga...@prouindia.com>

VJagadeesh

unread,
Jun 24, 2011, 12:46:22 AM6/24/11
to panb...@googlegroups.com

நானு என்னடா வரவர டாக்க்டரு எதை சொன்னாலும் மறுப்பு சொல்லிக்கிட்டே இருக்காரேனு தோணிச்சி.

 

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Sankar Kumar
Sent: Friday, June 24, 2011 10:18 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்

 

.இல்லீங்க. நினைவிலிருந்துதான் தட்டச்சினேன்.

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 12:54:17 AM6/24/11
to panb...@googlegroups.com
கண்ணதாசன் பதில்கள்: அனுபவம் அசிங்கமாகத்தான் இருக்கும்


கே: உங்களுடைய கருத்துக்களுக்கு அடிப்படையாக இருந்து சிந்திக்க வைத்தவர் யார்?

பதில்: வறுமை, வசதியின்மை, ஊராரின் கேலிப்பேச்சு - இம்மூன்றுமே
    
கே: பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே....? எங்கே ஆண்களை பற்றி சிறு கவிதை பாடுங்கள்...

பதில்: என்னுடய மூதாதையரை விட நான் கெட்டிக்காரன் அல்ல...ஆண் என்பவனே அபத்தம். அவனைப் பற்றி பாடுவதற்கு என்ன இருக்கிறது?   

கே: தங்கள் பாடல்களை கேட்கும் போது என் மனதில் உயர்ந்து நிற்கும் தாங்கள், தங்கள் கதைகளை படிக்கும் போது மிகவும் இறங்கிவிடுகிறீர்களே...இக்குறையை நிவர்த்திக்க முயலுவீர்களா?

பதில்: பாடல்கள் கற்பனையில் பிறக்கின்றன. கதைகள் அனுபவத்தில் பிறக்கின்றன. கற்பனைகளை விட அனுபவம் எப்போதும் அசிங்கமாகத்தான் இருக்கும்

கே: உங்களுக்கே பிடிக்காத கெட்ட குணங்கள் உங்களிடத்தில் உண்டா?

பதில்: நிறைய இருப்பதால்தான் தடுமாறுகிறேன். நண்பர்களை நம்புவது, அரசியலில் நாணயத்தோடு இருப்பது, யார் மீதும் இரக்கம் காட்டுவது - இவற்றை விட மட்டமான கெட்ட குணங்கள் என்ன இருக்கிறது?
  
கே: தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிக்கும், தேர்தலில் வென்றுவிட்ட அரசியல்வாதிக்கும் என்ன வேறுபாடு? 

பதில்: நிற்பவன் தனக்குத் தானே எமன்! வெற்றி பெற்றவன் பிறருக்கு எமன்.

கே: அரசியல் மேடைக்கும், இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: அரசியல் மேடை, மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது; இலக்கிய மேடை, முட்டாள்தனத்தைத் தெளிய வைப்பதற்காகப் போடப்படுவது. 

கே: இப்போதுள்ள கவிஞர்களில் தங்களுக்குப் பிடித்தமான கவிஞர்கள் உளரா?  

பதில்: நிறையப்பேர் இருக்கிறார்கள். சீதை பத்தினி என்றால் அநுசூயை வருத்தப்படுவாளே?  மற்றவர்கள் வருத்தத்திற்கு அஞ்சி பெயர்களைச் சொல்லாமல் விடுகிறேன்.

கே: இந்தியாவிலேயே சிறந்த நடிகர் யார்?

பதில்: பி.யு. சின்னப்பாதான். ஏனென்றால் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நான் படமே பார்த்ததில்லை.

கே: தாங்கள் எப்போதும் 'காமத்தை' மையமாக வைத்தே எழுதுகிறேர்களே....ஏன்?

பதில்: காமம் எப்போதும் 'மைய'மாகத்தான் இருக்கும்.

கே: இறைவன் படைப்பில் தங்களை அதிசயிக்க வைத்தது எது?

பதில்: ஒரு துளி விந்து, ஆயிரக்கணக்கான நரம்பு எலும்புகள் கொண்ட குழந்தையாவது.


Sankar Kumar

unread,
Jun 24, 2011, 12:55:20 AM6/24/11
to panb...@googlegroups.com
இதென்ன புதுக்கதை!
 
இன்னிக்கு ரெய்னாவுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் கொடுக்கணும்னு உங்அ சார்பா ொொல்லியிருந்தது மறந்து போச்சா?
 
வரவர அவசர அவசரமாப் படிச்ச்சிட்டு 'டைப்'புறீங்க இப்பல்லாம்! :)))

2011/6/24 VJagadeesh <VJaga...@prouindia.com>

VJagadeesh

unread,
Jun 24, 2011, 12:55:31 AM6/24/11
to panb...@googlegroups.com

அப்ப ஏன் கோஹ்லிக்கு சப்போர்ட் பண்ணிங்க.

 

(இப்படிதான் ஒரு த்ரெட் மொக்கையை நோக்கி நகர்கிறது :))

 

வுடுங்க நாம கந்த வேல் போட்ட பதிவை படிப்போம்,

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Sankar Kumar
Sent: Friday, June 24, 2011 10:25 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்

 

இதென்ன புதுக்கதை!

Naresh Kumar

unread,
Jun 24, 2011, 1:01:06 AM6/24/11
to panb...@googlegroups.com
//வரவர அவசர அவசரமாப் படிச்ச்சிட்டு 'டைப்'புறீங்க இப்பல்லாம்! :)))//

அது கூட பரவாயில்லை... சமயங்கள்ல, யாரு அனுப்புனதுன்னு மட்டும் பாத்துட்டு டைப் பண்ணிடுறாரு....

VJagadeesh

unread,
Jun 24, 2011, 12:58:59 AM6/24/11
to panb...@googlegroups.com

முதல் தடவை ஆசாத் ஜியை சந்திச்சப்போ வைரமுத்துவை பற்றி ஒரு பேச்சு வந்தது.

என்னனு மறந்துட்டேன். ஆனா நான் சொன்னது வறுமையிலேதான் நல்ல நல்ல கவிதைகள், கதைகள் இலக்கியம் பிறக்குது.

வைரமுத்து நல்லா சம்பாதிச்சதாலதான் முன்பு அளவிற்கு அவரது கவிதைகள் இல்லையென்று சொன்ன நியாபகம்.

 

அப்போ ஆசாத் ஜி சொன்னது கண்ணதாசன் மிகப்பெரிய கோடிஸ்வரர் என்றார்.

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Kandavel Rajan
Sent: Friday, June 24, 2011 10:24 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்

 

கண்ணதாசன் பதில்கள்: அனுபவம் அசிங்கமாகத்தான் இருக்கும்

மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:03:34 AM6/24/11
to பண்புடன்
நேற்றிரவிலிருந்து எனது வீட்டுக் கணிணியில் USB போர்ட் வேலை
செய்யவில்லை , அதனால் இணையத்திற்கு வரமுடியவில்லை.
மக்கள்ஸ் .. கண்ணதாசனைப் பற்றி தூள் கிளப்பிட்டிங்க. ஒவ்வொன்னா
படிச்சிட்டு வாரேன்..

மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:08:31 AM6/24/11
to பண்புடன்

On Jun 24, 9:58 am, "VJagadeesh" <VJagade...@prouindia.com> wrote:
> முதல் தடவை ஆசாத் ஜியை சந்திச்சப்போ வைரமுத்துவை பற்றி ஒரு பேச்சு வந்தது.
>
> என்னனு மறந்துட்டேன். ஆனா நான் சொன்னது வறுமையிலேதான் நல்ல நல்ல கவிதைகள், கதைகள் இலக்கியம் பிறக்குது.
>
> வைரமுத்து நல்லா சம்பாதிச்சதாலதான் முன்பு அளவிற்கு அவரது கவிதைகள் இல்லையென்று சொன்ன நியாபகம்.
>
> அப்போ ஆசாத் ஜி சொன்னது கண்ணதாசன் மிகப்பெரிய கோடிஸ்வரர் என்றார்.


கண்ணதாசன் கோடீஸ்வரர் தான் ..ஆனா சொந்தப் படம் எடுத்து எடுத்து
போண்டியாயிட்டாரு. கவலையில்லாத மனிதன் எடுத்தாரு கவலையுள்ள மனிதனா
ஆயிட்டாரு. கடன் சுமையை கழிக்கிறதுக்குன்னே ரொம்ப பாட்டு எழுதுனார்.
இப்பவும் தியாகராய நகரில் இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்துக்கு
போனீங்கன்னா , கண்ணதாசனோட அம்பாஸிட்டர் காரு சும்மா கம்பீரமா நிக்கும்.

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 1:11:02 AM6/24/11
to panb...@googlegroups.com
கண்ணதாசன் பதில்கள்: என் குரு யார்?


கே: கவிதைகளின் இடையிலே பிறமொழிச் சொற்கள் கலந்து கவி புனைவது சரியா? அது நம் மொழி வளத்தைக் குறைக்காதா? 


பதில்: வழக்குச் சொற்களைத் தள்ளிவிடுவதால்தான் மொழி வளம் குறைகிறது. உலகத்தை ஆங்கிலம் ஆக்கிரமித்துக்கொண்டது, வட்டாடர வழக்குகளை ஏற்றுக்கொண்டதாலேயே.


கே: 'கண்ணதாசன்' இதழில் 'அரிதாரமே இறைவன் படைத்த உண்மை. அழகாக முடியுமானால், நடிகன் நாட்டுத் தலைவனாவதும் நடக்கக்கூடியதே' என்று எழுதியிருந்தீர்களே? நடிகர்களான எம்.ஜி. எம்.ஜி.ஆரும், ரீகனும் நாட்டுத் தலைவர்களாகி நாடாளுகிரார்களே...உங்கள் கருத்தை மாற்றிக் கொண்டீர்களா?


பதில்:உண்மைதான். காலத்தால் எவ்வள்ளவோ கருத்துக்கள் மாறி விடுகின்றன. அனுபவங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது மடத்தனம். அனுபவம் என் கருத்தைப் பொய்யாக்கிவிட்டது என்பதைக் கூச்சமில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.


கே : நீங்கள் குறுகிய நேரத்தில் எழுதிய பாடல் எது?

பதில்: 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் வரும் 'முத்தான முத்தல்லவோ '


கே: அரசன் அன்று கொள்வான், அதனால் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் தெய்வம் நின்று கொல்லும். அதனால் பிரச்சனை பெரிதாக உருவாகிவிடுமல்லவா?

பதில்: பிரச்சனை எவ்வளவு பெரிதாகிறதோ, அவ்வளவுக்கு அழிவும் பெரிதாக இருக்கும்.சந்தேகமே இல்லை. நோயை முற்ற விட்டு அறுப்பதும், மருத்துவத்தில் ஒரு சரியான பகுதியாகும். பிறகு அந்த 'நோய்' வரவே வராது.


கே: பெண் - கவிதை இரண்டையும் ஒப்பிடுங்கள்?

பதில்: பெண் எப்போதும் அனுபவிக்கத் தக்கவள். கவிதை ஓய்விருக்கும் போது மட்டுமே.

கே: 'காமதாசன்' என்ற பட்டப்பெயரை உங்களுக்கு வழங்கலாம் என்றிருக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்: இடையில் 'ராஜ' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 'காமம்' என்றால் அன்பும் என்றொரு பொருளும் உண்டு.

கே: பிறர் இயற்றிய பாடல்களில் உங்களைக் கவர்ந்த பாடல்?

பதில்: சகுந்தலையில் வரும் பாபநாசம் சிவன் அவர்களின் பாடலான 'சொல்லு குழாந்தாய்' என்ற பாடல்.


கே: இவ்வளவு காலம் அரசியலில் மாட்டித் தவித்தீர்கள். இரண்டு வரிகளில் அந்த அனுபவத்தை படம் பிடியுங்களேன்?

பதில் : அரசியல் எனது உருவத்தை சிதைத்துக் காட்டியிருக்கிறது. ஆனால் என் சுயசரிதையின் பக்கங்களை அதிகரித்திருக்கிறது.

கே: கவிஞன் வாக்கு பொய்க்காது என்னும் கூற்று பற்றித் தங்கள் கருத்து யாது? தங்கள் வாக்கு எத்தன்மையது?

பதில்: மனப்பூர்வமாக, லாபம் கருதாது, தோன்றுகின்ற உணர்ச்சியை அப்படியே வடித்து வைக்கும் யாருடைய நேர்மையான வாக்கும் பொய்க்கவே பொய்க்காது.

கே: தங்களின் குரு யார்?

பதில்: நான் செய்த முட்டாள்தனமே!



மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:12:32 AM6/24/11
to பண்புடன்
>
> பிறக்கும் போதும் அழுகின்றாய்
> இறக்கும் போதும் அழுகின்றாய்

இந்தப் பாட்டோட பல்லவியை மட்டும் சந்திரபாபு எடுத்துக் கொடுத்ததா படித்த
நினைவு , தவறாகவும் இருக்கலாம்

VJagadeesh

unread,
Jun 24, 2011, 1:10:56 AM6/24/11
to panb...@googlegroups.com

சூப்பரப்பு

மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:15:32 AM6/24/11
to பண்புடன்

>> பாட்டுக்கு மெட்டு போட்டது K.V.மகாதேவன்.

K.V.மகாதேவன் :

இவரை எல்லோரும் செல்லமா மாமான்னு கூப்பிடுவாங்கலாம் , SPB மேடைகளில்
அடிக்கடி இவரைப் பற்றி பேசுவார்.

VJagadeesh

unread,
Jun 24, 2011, 1:14:48 AM6/24/11
to panb...@googlegroups.com
இரண்டு வருடங்கள் முன்பே கண்ணதாசனைப்பற்றி குழுவில் மடல் போட்டிருந்தோம் என நினைக்கிறேன்.

அப்போது நான் கண்ணதாசனின் பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தபாடல் உயர்ந்த உள்ளம் படத்தில் வரும்

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா.... என்ற பாடல்.

அந்த பாடல் சில வாரங்களுக்கு முன் என் கணிணியில் இருந்து தவறுதலாக டெலிட் ஆகிவிட்டது.


யாராவது வைத்திருந்தால் பாடலை இணைக்கவும். சுட்டி வேண்டாம்.


“உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா”

“அதை உணர்ந்துகொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா”

மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:20:27 AM6/24/11
to பண்புடன்
>
> ஈ.வெ.கி. சம்பத்துடன் திமுகவிலிருந்து விலகி, த. தே. க. தொடங்கியபின்னர், காங்கிரஸில் சேர காமராஜருக்கு தூது விட்டிருந்தார்.
>
> வழக்கம்போல, 'ஆகட்டும் பார்க்கலாம்' மட்டுமே பதில்!
>

கண்ணதாசன் காங்கிரஸுக்கு போனதுக்கப்புறம், எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு சில
காலம் பாடல்கள் எழுத்வதைத் தவிர்த்தார்.

VJagadeesh

unread,
Jun 24, 2011, 1:27:56 AM6/24/11
to panb...@googlegroups.com
காற்று வாங்க போனேன் பாடல் கவியரசரா இல்லை வாலியா? யாரா இருந்தா என்ன. இது என்ன எஸ் பி பி குழுமமா மனோ பாட்டுக்கு தடை சொல்ல!

நடை பழகும் போது தென்றல்

விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போது

நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்

அதை கேட்டு வாங்கி போனாள் அந்த

கன்னி என்ன ஆனாள்!

பாண்டி போகும் போது பேருந்தில் என் நான் பார்த்த அந்த பெண் (பாதியிலேயே இறங்கிவிட்டாள்) இப்பாடலுக்கு பொருத்தமான பேரழகுடன் இருந்தாள்.


-----Original Message-----
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ???????
Sent: Friday, June 24, 2011 10:50 AM
To: பண்புடன்
Subject: [பண்புடன்] Re: கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்

>

மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:32:52 AM6/24/11
to பண்புடன்

On Jun 24, 10:14 am, "VJagadeesh" <VJagade...@prouindia.com> wrote:
> இரண்டு வருடங்கள் முன்பே கண்ணதாசனைப்பற்றி குழுவில் மடல் போட்டிருந்தோம் என நினைக்கிறேன்.
>
> அப்போது நான் கண்ணதாசனின் பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தபாடல் உயர்ந்த உள்ளம் படத்தில் வரும்


இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இந்தப் பாடலை சென்னை எலெக்ட்ரிக் ட்ரெயினில் கண் பார்வையற்ற ஒரு
முதிய்வர் பாடிகொண்டே யாசகம் செய்தார் . அந்த முதியவருக்காகவே கண்ணதாசன்
அந்தப் பாடலை எழுதியதாக நினைத்துக் கொண்டேன்.

0

காட்பாடிக்கு ஒருமுறை நண்பர் ஒருவரது புதுமனை புகுவிழாவிற்காகச்
சென்றிருந்தேன்.பிரியாணி போடுகிறார்கள் என்று அறிந்து கொண்ட குடிமகன்கள்
சிலர் ஏற்கனவே அடித்து விட்டு பிரியாணி சாப்பிட வந்திருந்தனர். அதில் ஒரு
குடிமகன் என்னிடம் வந்து, "அள்ளிக் கொடுத்து வாழ்ந்தவர் நெஞ்சம் ஆனந்தப்
பூந்தோப்பு" என்று பாடிவிட்டு குடிப்பதற்கு 100 ரூபாய் கேட்டான் :)

..

கூட இருந்து குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும் ...


மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:36:42 AM6/24/11
to பண்புடன்

On Jun 24, 10:27 am, "VJagadeesh" <VJagade...@prouindia.com> wrote:
> காற்று வாங்க போனேன் பாடல் கவியரசரா இல்லை வாலியா? யாரா இருந்தா என்ன. இது என்ன எஸ் பி பி குழுமமா மனோ பாட்டுக்கு தடை சொல்ல!


ஹா ஹா கண்ணதாசன் எழுதுனது தான்

0

கோபுரத்து கலசம் அதை ஆடைகள் மூட
கூந்தல் முதல் பாதம் வரை ஆசைகள் ஓட

இது வாலிபக் கவிஞர் ..:P

மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:38:29 AM6/24/11
to பண்புடன்
On Jun 23, 7:34 pm, Gokul Kumaran <gokuldu...@gmail.com> wrote:
> அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடலில் எல்லா வரிகளுமே மே என்று முடிந்திருக்கும்.
>
> மே மாதத்துக்குள் பாட்டு வந்தாகணும்னு தயாரிப்பாளர் நச்சரித்ததால், நொந்து போய்
> எல்லா வரிகளுமே மே என்னும் எழுத்தில் முடித்ததாக சொல்வார்கள்.

ஹ்ம் .. கேள்விப் பட்டதில்லை நன்றி கோகுல் சார்

VJagadeesh

unread,
Jun 24, 2011, 1:36:53 AM6/24/11
to panb...@googlegroups.com
என் செல்போனில் சர்ச் பண்ணி பார்த்தேன். பேவரைட் சாங்க்ஸ்னு ஏதோ ப்ளாக்.

அதுல பாடல் ஆசிரியர் வாலி என போட்டிருக்கு.

மீண்டும் கோகிலா படத்தில் வரும் சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோன்றுதடி பாடல் கண்ணதாசனுடையது.

அதோ ஒரு ப்ளாகில் பாரதியார் எனப்போட்டிருக்கிறார்கள்.

பாரதியார் கண்ணம்மாவை பாடினார்....

கண்ணதாசன் செல்லம்மாவை பாடிவிட்டார்...



-----Original Message-----
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ???????
Sent: Friday, June 24, 2011 11:07 AM
To: பண்புடன்
Subject: [பண்புடன்] Re: கவிதைகளின் தலைமகன் கண்ணதாசன்



மரவண்டு

unread,
Jun 24, 2011, 1:41:59 AM6/24/11
to பண்புடன்
>
> பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
> அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு.
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு.

ஆசாத்

unread,
Jun 24, 2011, 1:53:53 AM6/24/11
to பண்புடன்
> <VJagade...@prouindia.com> wrote:
> அப்போ ஆசாத் ஜி சொன்னது கண்ணதாசன் மிகப்பெரிய கோடிஸ்வரர் என்றார்.

இப்பொழுதும் நான் அதே எண்ணத்துடன்தான் இருக்கிறேன். வறுமை மட்டுமே சிறந்த
படைப்பு உருவாகக் காரணம் கிடையாது. வறுமை தொடர்பான வலிகள் வேண்டுமானால்
உணர்வுபூர்வமாக அந்தப் படைப்பில் இருக்க வறுமையும் ஒரு காரணமாக
இருக்கலாமேயன்றி, வறுமையில்தான் சிறந்த படைப்புகள் உண்டாகும் என்பதை
ஏற்பதற்கில்லை :-)

ஆசாத்

unread,
Jun 24, 2011, 1:55:36 AM6/24/11
to பண்புடன்
> இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
> நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இது வாலி!

சந்தேகந்தான். ஆத்தாடி மாரியம்மாவும் வாலின்னு போட்டிருக்காங்க. வாலி
திரைப்பாடல் தொகுப்பு - கண்ணதாசன் திரைப்பாடல் தொகுப்பு ரெண்டுலயும்
அவங்கதான் எழுதுனதுன்னு இடம்பெற்றிருக்கும் பாடல்கள் பத்துக்கு மேல்
இருக்கும். ஒரே குழப்பம்.

ஆசாத்

unread,
Jun 24, 2011, 1:56:14 AM6/24/11
to பண்புடன்
> சின்னவளை முகம் சிவந்தவளை

வாலி - புதியபூமி - எம்.ஜி.ஆர்.

ஆசாத்

unread,
Jun 24, 2011, 1:58:34 AM6/24/11
to பண்புடன்
> > காற்று வாங்க போனேன் பாடல் கவியரசரா இல்லை வாலியா?

> ஹா ஹா கண்ணதாசன் எழுதுனது தான்

கன்ஸ்,

கற்று வாங்கப் போனேன் - கண்ணதாசன் கெடையாது, வாலி.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:00:38 AM6/24/11
to பண்புடன்

On Jun 24, 10:56 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> > சின்னவளை முகம் சிவந்தவளை
>
> வாலி - புதியபூமி - எம்.ஜி.ஆர்.

வந்தாராம் வந்தாராம் சீமத் துரை ஹா, வாங்க அண்ணாத்த :)

கண்ணதாசனை குருவென்று கருதும் பிறைசூடன் அவர்கள் இன்று ஜெயா டிவியில்
சொன்னது
பட்டுக் கோட்டையார் இறந்ததும் அண்ணாத்துரை பாட்டுக் கோட்டை சரிந்தது எனக்
கூறினாராம்

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:01:43 AM6/24/11
to பண்புடன்

On Jun 24, 10:55 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> > இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
> > நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
>
> இது வாலி!
>
>

சில இடங்களில் கண்ணதாசன் எனப் போட்டிருக்கிறார்கள் . ஒரே குழப்பம்.

ஆசாத்

unread,
Jun 24, 2011, 2:03:13 AM6/24/11
to பண்புடன்
குலமகள் ராதை.

சிவாஜி சர்க்கஸ்ல பார் வெளையாடுவாரு. அவரு பேரு சந்திரன். அவரச் சந்திக்க
ச.தேவி போவாங்க, அப்ப அங்க சர்க்கஸ்ல இருக்ற தேவிகா அவர சாயந்திர ஷோவுல
பார் வெளையார்ரப்ப பாக்கலாமுன்னு சொல்லி ச.தேவியத் திருப்பி
அனுப்பிருவாங்க.

அப்ப பாட்டு...

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன்
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்

சிச்சுவேஷனுக்கு எழுதுறதுன்னா இது. கண்ணதாசன் பெரீ ஆள் சார்!

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:04:25 AM6/24/11
to பண்புடன்

ஓ, நன்றி

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:08:29 AM6/24/11
to பண்புடன்

On Jun 24, 10:56 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> > சின்னவளை முகம் சிவந்தவளை
>
> வாலி - புதியபூமி - எம்.ஜி.ஆர்.

டவுட்டா இருந்துச்சி அதனால தான் யார் எழுதுனதுன்னு போடல . தேன் தேன்
வர்ர மாதிரி வளை வளைன்னு வருது அதான் போட்டேன்.

இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ

இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
இரு கைகளினாலே கொய்யாப்பூ

என் உள்ளமெனும் சின்னஞ்சிறு பூவை
இவள் கிள்ளி கிள்ளி பறித்துக் கொண்ட பூவை

இதுவும் வாலிதான்

இந்தப் பாட்டுக்கு நான் ஊர் ஊரா அலைஞ்சது எனக்குத் தான் தெரியும் :)

ஆசாத்

unread,
Jun 24, 2011, 2:11:31 AM6/24/11
to பண்புடன்
தேடிவந்த மாப்பிள்ளைல,

’பூ வைத்தப் பூவைக்கு பூக்கள் சொந்தமா?’ன்ற பாட்டு, ஹீரோ ஒரு வக்கீலு.
கண்ணதாசன் பாட்ட முடிச்சுட்டாரு. அதுல ரெண்டு முணு வரிங்க.

ஆண்:
நான் தொடுப்பேன் காதல் வழக்கு!

பெண்:
போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் - நான்
போதுமென்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்

அப்படி எழுதிட்டு. என்னவோ யோசிச்சு. இந்த வரிய மாத்தச் சொன்னா

பெண்:
போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் - உங்கள்
பொன்மனத்தைச் சாட்சி வைத்து வெற்றிகொள்ளுங்கள்

அப்படீனு எழுதிக் குடுத்துட்டுப் போனாராம்.

வாத்தியார் கேட்டவொடனே கரெக்டா இந்தவரில கைய வெச்சாராம். ஆமாங்க ஏற்கெனவே
நீங்க இதுல கை வெப்பீங்கன்னு தெரிஞ்சு கவிஞர் ஆல்டர்னேட் வரியும்
குடுத்திருக்காருன்னாங்களாம். ரெகார்டானது பொன்மனத்தை சாட்சி
வெச்சதுதான்.

அதான் கண்ணதாசனோட எக்ஸ்பீரியன்ஸ். அவரு பெரீ ஆள் சார்.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:12:35 AM6/24/11
to பண்புடன்
> பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
> இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
> இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன்
> எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்

சூப்பர் அண்ணாத்த , சுசிலா ஹிட்ஸ்னு வர்ர சிடில இந்த மாதிரி பாடுலாம்
இருக்கிறது. எனக்கு ஒரு கேசட்டுல தான் இந்தப் பாட்டு கிடைச்சது.

ஆசாத்

unread,
Jun 24, 2011, 2:17:20 AM6/24/11
to பண்புடன்
> இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ
> இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ

கன்ஸ்,

ஹீரோ நிழல்கள் ரவியோ?

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:22:27 AM6/24/11
to பண்புடன்

> சிச்சுவேஷனுக்கு எழுதுறதுன்னா இது. கண்ணதாசன் பெரீ ஆள் சார்!

ஆயிரத்தில் ஒருவனுக்கு ஒரு பாட்டு எழுதுறப்போ , வாலி வளைச்சு வளைச்சு
வரிகள் எழுதுனாராம். ஆனா பாருங்க எம்.ஜி.ஆருக்கு திருப்தியே இல்லையாம் ,
கண்ணதாசன் கிட்ட எழுதச் சொல்லலாமான்னு எம்.ஜி.ஆர்ட்ட கேட்டாங்களாம்.
அப்போ கண்ணதாசன் காங்கிரஸ்ல இருந்தார் , சரி கேட்டு பாருங்கன்னு
சொல்லிட்டு போய்ட்டாராம். கண்ணதாசனிடம் சூழலை விளக்கியதும் , கார்ல
போகும் போதே கண்ணதாசன் சொல்லச் சொல்ல இராம.கண்ணப்பன் எழுதுனாராம்.

அந்தப் பாட்டு தான் அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்.

0

ம.பொ.சி மாதிரி , கண்ணதாசனும் தனக்கு உதவியாளர்களை வைத்திருந்தார்.
இவர்களது வேலை கவிஞர் சொல்லச் சொல்ல பாடல் வரிகளை எழுதிக் கொண்டே
வருவதாகும். காண்ணதாசனிடம் தமிழ்ப்பித்தன் , பஞ்சு அருணாச்சலம்
இராம.கண்னப்பான் ஆகிய மூவரும்
உதவியாளர்காக இருந்தனர். முதல் 300 பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள்
எல்லாம் கவிஞர் சொல்லச் சொல்ல இந்த உதவியாளார்கள் எழுதப்பட்டவை தான்.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:24:23 AM6/24/11
to பண்புடன்

மோகன்

Movie : தாம்பத்யம் ஒரு சங்கீதம்
மோகன் , சுலோச்சனா

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:26:36 AM6/24/11
to பண்புடன்

மாப்பு .. இந்த மாதிரி பாட்டுலாம் இருக்காதுன்னு சொல்லவந்தேன்

ஆசாத்

unread,
Jun 24, 2011, 2:27:06 AM6/24/11
to பண்புடன்
திரைப்பாடல்கள எளிமைப்படுத்துனது, முன்னோர்கள் எழுதுன வரிகள
எடுத்தாண்டது, ரெண்டுக்கும் கண்ணதான்தான் தமிழ்ல முன்னோடி.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:32:13 AM6/24/11
to பண்புடன்
>
> அப்படி எழுதிட்டு. என்னவோ யோசிச்சு. இந்த வரிய மாத்தச் சொன்னா
>
> பெண்:
> போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் - உங்கள்
> பொன்மனத்தைச் சாட்சி வைத்து வெற்றிகொள்ளுங்கள்
>


சூப்பர் கேள்விப்பட்டதில்லை :)

பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ? அது யாரோ?

இந்தப் பாட்டு கண்ணதாசனான்னு கரெக்டா தெரியாது

ஆனா இப்படிக் கேள்வி கேக்குற மாதிரி கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எல்லாமே
செம ஹிட் லிஸ்ட் வச்சிருக்கேன் , அப்புறமா அனுப்புறேன்

ஆசாத்

unread,
Jun 24, 2011, 2:33:57 AM6/24/11
to பண்புடன்
https://groups.google.com/group/panbudan/browse_thread/thread/74f553a0a65a589c/f40fb2e41b2a3133?hl=en


நானொலிக்கும் பேச்சுக்குள் அங்கு மிங்கும்
. நற்றமிழின் சொல்லாடல் வேண்டி யன்று
வானொலியின் அருகாமை பால பாடம்
. வந்ததெனச் சொன்னாலும் குற்ற மில்லை!
ஏனொலித்த திப்பாடல் என்றெண் ணாமல்
. என்றென்றும் அழகியலில் நீந்தி நெஞ்சில்
தேனொலிக்கும் கவியரசு நீயு ரைத்துத்
. தெரிவித்த இலக்கியத்தில் வாழ்ந்த துண்டு!


அத்திக்காய் அரிச்சுவடி சொல்லித் தந்தாய்
. அவள்பறந்து போனதையும் பார்க்க வைத்தாய்
முத்தத்தில் மோகத்தில் மூழ்கி நின்றாய்
. முக்கண்ணர் நாகத்தை நீதி கேட்டாய்
சித்தத்தில் வேதாந்தம் வேண்டி யன்று
. சீராறு கட்டளைகள் பாடி வைத்தாய்
எத்திக்கில் உன்பாடல் செல்ல வில்லை
. என்றுன்னைப் பேசாத நெஞ்ச மில்லை


எல்லைகள் திரையுலகில் மட்டு மில்லை
. எழுதியவை இவையென்ற எல்லை யில்லை
சொல்லுக்குள் பொய்யுரைகள் கொண்ட தில்லை
. சோகத்தை எழுதாமல் விட்ட தில்லை
கல்லெறிந்து வைத்தாலும் தமிழைத் தானே
. கவிதைகளாய் எறிந்திட்ட சிந்தை செய்கை
இல்லையொரு திரைக்கவிஞன் இங்கே யின்று
. இவரைப்போல் என்றுரைத்தால் பொய்யாய்ப் போமோ?

மரவண்டு

unread,
Jun 24, 2011, 2:55:12 AM6/24/11
to பண்புடன்
மக்களே இந்த தொடுப்பிற்குச் சென்று படியுங்கள் . மிக
நீ..............ளமான பதிவு என்பதால் இங்கே வெட்டி ஒட்டமுடியவில்லை.
கட்டுரையில் சில
தகவல் பிழைகள் இருக்கலாம்.

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/kannadhasan/


Gokul Kumaran

unread,
Jun 24, 2011, 3:07:21 AM6/24/11
to panb...@googlegroups.com
ஆசாத்ஜி,

இது மாட்டுக்கார வேலன்.

ஐ லவ் யூ
ஐ லவ் யூ
ஐ லவ் லவ் யூ

2011/6/24 ஆசாத் <banu...@gmail.com>

தேடிவந்த மாப்பிள்ளைல,

’பூ வைத்தப் பூவைக்கு பூக்கள் சொந்தமா?’ன்ற பாட்டு, ஹீரோ ஒரு வக்கீலு.
கண்ணதாசன் பாட்ட முடிச்சுட்டாரு. அதுல ரெண்டு முணு வரிங்க.

--
Gokul Kumaran

மரவண்டு

unread,
Jun 24, 2011, 3:10:07 AM6/24/11
to பண்புடன்

On Jun 24, 12:07 pm, Gokul Kumaran <gokuldu...@gmail.com> wrote:
> ஆசாத்ஜி,
>
> இது மாட்டுக்கார வேலன்.
>
> ஐ லவ் யூ
> ஐ லவ் யூ
> ஐ லவ் லவ் யூ

அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது.

Gokul Kumaran

unread,
Jun 24, 2011, 3:18:13 AM6/24/11
to panb...@googlegroups.com
இது உன்னை நான் சந்தித்தேன்

சுரேஷ்-ரேவதி..!

இது யார் எழுதியதோ?

2011/6/24 மரவண்டு <mara...@gmail.com>



On Jun 24, 12:07 pm, Gokul Kumaran <gokuldu...@gmail.com> wrote:

அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது.


--
Gokul Kumaran

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 3:25:29 AM6/24/11
to panb...@googlegroups.com


2011/6/24 Gokul Kumaran <gokul...@gmail.com>

இது உன்னை நான் சந்தித்தேன்

சுரேஷ்-ரேவதி..!

இது யார் எழுதியதோ?



வாலி.....



--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 3:30:56 AM6/24/11
to panb...@googlegroups.com

பட்டப்படிப்பு படிக்கத்தான் நினைத்திருந்தேன்
கொட்டும் மொழி மழையிற் குளிக்கத்தான் நினைத்திருந்தேன்
ஆனால் எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர்
இட்டார்;பின் ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்
கல்வியிலான் வாழ்வு கரைகாணாத் தோணியெனக்
கலங்கினேன்; கற்றோரைக் கண்டு கரையில் நின்றேன்.

- கண்ணதாசன்


Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 3:32:39 AM6/24/11
to panb...@googlegroups.com

எம்.ஜி.ஆரிடமிருந்து வேறுபட்டு, அரசியல் மேடைகளில் அவரை விளாச ஆரம்பித்தார் கண்ணதாசன்.

“பணத்தோட்டம்” படத்தில் ‘ஜவ்வாது மேடையிட்டு“ப் பாடலை கண்ணதாசன் எழுதியிருந்த நேரம்.

“செம்மாதுளை பிளந்து தா தா தா” என்பது சரணத்தின் கடைசி வரி. “இப்போதுதான் எம்.ஜி.ஆருக்கு ‘தாத்தா பாடல்’ எழுதிவிட்டு வருகிறேன்” என்றாராம் கண்ணதாசன்.

தன்னுடைய கடைசி படம்வரை இளம் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆருக்கு வயதாகி விட்டது என்று 1962-63-ல் கிண்டலடித்தார் கண்ணதாசன்

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 3:41:39 AM6/24/11
to panb...@googlegroups.com

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கவிஞர் கண்ணதாசன்

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 3:53:41 AM6/24/11
to panb...@googlegroups.com

“காயமே இது பொய்யடா/ வெறும் காற்றடித்த பையடா/ மாயனாராம் மண்ணு குயவன் செய்த/ மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,

 “கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு/ காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு/ எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்/ எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?”- என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லாரும் புரிகின்ற மொழியில்

 “பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்

சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே

தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?”

 என்று பாடியிருப்பான்.

Trp Raja

unread,
Jun 24, 2011, 4:06:15 AM6/24/11
to panb...@googlegroups.com


காவியத்தலைவன் கண்ணதாசன் ஒரு கவிப்பெருங்கடல். அவரின் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே தமிழன்னையை அலங்கரிக்கும் நவநாகரீக அணிகலன்கள். அந்தக் கவிதைக்கடலில் எழுந்த அலை அடித்தபோது எங்கோ பட்டுத் தெறித்த ஓர் நீர்த்திவலை போன்றதுதான் என் கவியறிவு. ஆனால் அந்தக் கடலின் ஓர் ஓரத்தில் மூழ்கி எழுந்து மகிழ்வது என் அவா அந்த அனுபவத்தினை நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் நோக்கம். 

இந்த வாரம் கவியரசர் பகவத்கீதையை எமக்கு புரியவைக்கும் முயற்சியின் ஓர் அங்கத்தினைப் பார்ப்போம்.

ீதையின் கூற்று

பூர்யமானம் அசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப : ப்ரவிசந்தி யத்வத்
த்வத்வத்காம யம் ப்ரவிசந்தி ஸர்வே

ஸ சாந்திமாப்நோதி ந காமகாமீ

என்ன? ஒன்றுமே புரியவில்லையா? வருத்தப்படாதீர்கள். எனக்கும்தான் புரியவில்லை. ஆனால் கவிச்சக்கரவர்த்தியின் முயற்சியின் முழு வெற்றியையும் உணர வேண்டுமானால் கீதையை அப்படியே கூறி பின்பு அதை அவர் எப்படி கையாளுகின்றார் என்று அறியத் தரவேண்டும் .

மேலே கூறிய கீதையின் விளக்கம்

கடல் நிறைந்து காணப்படும். அதனுள் எவ்வளவு மழைத் தண்ணீர் வந்து எவ்வழியில் சேர்ந்தாலும் அது ஒரு போதும் துள்ளிக் குதித்து கரையை மீறுவது கிடையாது. அதே போன்று அந்தக் கடலின் நீர் வெய்யிலின் நிமித்தம் நீராவியாகிப் போகின்றது. இருந்தபோதும் அது ஒருபோதும் உள்ளே சென்று மறைவதில்லை, என்றுமே நிலைகுலையாது அமைதியாக உள்ளது. நிலையான உள்ளம் கொண்ட மனிதன் ஒருபோதும் கலங்க மாட்டான். ஆனால் உள்ளம் நிலையற்று இருப்பவன் ஒருபோதும் அமைதியடையமாட்டான்.

கண்ணனுக்கு தாசனான கண்ணதாசன் கண்ணனின் கீதையை எப்படி எம் மத்தியில் புகுத்துகின்றார் என்று பார்ப்போம்.

அவன்தான் மனிதன் படத்திலே வரும் ஆட்டுவித்தால் யாரொருவர் எனும் பாடலில் மேற்கூறிய கீதையின் விளக்கத்தை சாதாரண தமிழில் கண்ணாதாசன் தனக்கே உரிய பாணியில் கூறுவதைப் பாருங்கள்:

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் 
துன்பமெல்லாம் விலகும் கண்ணா


எவ்வளவு பெரிய தத்துவம்! எவ்வளவு பெரிய கீதையின் கூற்று! எப்படி எளிமையாக மக்கள் அனைவருக்கும் புரியக் கூடிய வகையில் கவியரசர் கூறியிருக்கின்றார்!

இந்த வியத்தகு கவிஞரின் அற்றலை எடுத்துக்காட்ட இன்னுமோர் உதாரணமாக பட்டினத்தாரின் பாடலை அவர் எப்படி எளிமைப்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்:

பட்டினத்தாரின் பாடல்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே
விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும்
சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை
புண்ணிய பாவமுமே


இதன் கருத்து:

செல்வமும் உறவும் வருவது வீடுவரைதான். கதறி அழும் மனைவி வருவது வீதி வரை மட்டும்தான். அடித்துக் கொண்டு அழும் பிள்ளையின் விஜயம் சுடுகாடு மட்டும்தான். ஆனால் கடைசி வரை கூட வருவது செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான்.

பட்டினத்தாரின் இப்பாடலைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் அந்த ஞானியின் தத்துவத்தை எவ்வாறு எம்மிடையே கவிஞர் உலவ விடுகின்றார் என்று பாருங்கள் நண்பர்களே !

பாதகாணிக்கை எனும் படத்தில் வரும் பாடலிது:

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ 


கவனித்தீர்களானால் கடைசி வரியான பாவமும் புண்ணியமும்தான் கடைசிவரை கூடவரும் என்ற வாக்கியத்தை கவிஞர் விட்டு விட்டார். இதைப்பற்றி நண்பர் ஒருவர் வினவியதற்கு கவிஞர், “அப்படி ஓர் அருமையான வாக்கியத்தை சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு. அதனால் தான் அதை பாடலில் குறிப்பிடவில்லை” என்றாராம்.

மற்றவரின் ஆற்றலை மதிக்கும் மனப்பான்மை கவிஞரிடம் சிகரம் தொட்டு நிற்பதைப் பார்த்தீர்களா?
இன்று பட்டினத்தாரின் கருத்தை பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கச் செய்த கவிஞரின் ஆற்றலை என்னவென்பது!

by சக்தி தாசன் 

நன்றி : வெப் உலகம் 

Trp Raja

unread,
Jun 24, 2011, 4:16:13 AM6/24/11
to panb...@googlegroups.com
 தான் ஐக்கியமாகப் போவது ஆண்டவனோடு என்று முடிவு கட்டி விட்டார் பாருங்கள். ஆசைகளின் மத்தியில், போகத்தை விளக்கிக் கொண்டே அதை ஆன்மீகத்தில் முடிக்கும் திறன் கொண்டிருந்தவர் தான் கவியரசர்.

அது மட்டுமா? எல்லோரும்தான் சாகப் போகிறோம்; அதில் இப்படி வாழ்ந்த நான் பெரியவனா, இல்லை இதையெல்லாம் வெறுத்துப் பொய் என்று சொன்ன அந்தத் தத்துவ சன்மார்க்க வாதிகள் பெரியவரா? என்றொரு கேள்வியைக் கேட்டு ஒரு ஆழ்ந்த வாதத்திற்கே தலைப்பிட்டு விடுகிறார்.

காமுகனும் மாண்டான், கடவுள் நெறி பேசும்
மாமுனியும் மாண்டான், மாற்றத்திலே யார் பெரியார்?


இப்படியெல்லாம் மது, மங்கை என்று வாழ்ந்த ஒருவர் தனது வாழ்வின் மாற்றங்களிலெல்லாம் ஒரு புது அர்த்ததைக் கண்டு அதன் மூலம் தனது வெறுக்கத்தக்க பாகத்தைக் கூட வெளிப்படையாக எமக்குக் காட்டி, தமிழ் எனும் பூக்கொண்டு ஆராதித்தவர் தான் கவிஞர்.

இப்படி இன்பக் கடலில் நீந்திக் களித்தவர், களைத்து விட்டார் போங்கள்! சலித்துக் கொள்கிறார். பிறக்கிறது ஞானம். உதிக்கிறது கவிதை.

காதலெனும் போதையுற்று 
மாதர்சுக வாதைபட்டுக்
காமரசம் கொண்டதடி மஞ்சம் - இன்று
ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!

மேனி பட்ட பாடும் - பல
ராணி பட்ட பாடும் - என்னை
ஞானி எனச் செய்ததடி இன்று - எமன்
நாளை வந்த போதும் அது நன்று!

ஆடும் வரை ஆடி உடல்
ஆடுகின்ற காலம் வந்து
தேடுதடி தேவன் அவன் வீட்டை - அவன்
தேடவில்லை இன்னும் எந்தன் ஏட்டை!

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 4:18:11 AM6/24/11
to panb...@googlegroups.com

 “இரவுக்கு ஆயிரம் கண்கள்,

பகலுக்கு ஒன்றே ஒன்று

அறிவுக்கு ஆயிரம் கண்கள்,

உறவுக்கு ஒன்றே ஒன்று”

 பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையிலிருந்து முதல் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் இரண்டாம் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் எடுத்து (இளந்தலைமுறையினருக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில் ‘சுட்டு’) அழகுற தன் பாடலில் கோர்வையாக கையாண்டிருப்பான். அந்த ஆங்கிலக் கவிதை இதுதான் :

 The night has a thousand eyes,

And the day but one;

Yet the light of the bright world dies

With the dying sun.

The mind has a thousand eyes,

And the heart but one:

Yet the light of a whole life dies

When love is done.

Naresh Kumar

unread,
Jun 24, 2011, 4:23:07 AM6/24/11
to panb...@googlegroups.com
மிக அருமையான இழை...

மனம் இனம்புரொயா ஒன்றைத் தேடும் சமயங்களிலெல்லாம், வாசிக்கத்தூண்டும் ஒரு இழை

மக்களுக்கு நன்றிகள்...

Trp Raja

unread,
Jun 24, 2011, 4:29:11 AM6/24/11
to panb...@googlegroups.com
பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்


பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமேயில்லை. என்ன இறைமையின் ஆரம்பத்தை இதற்குப் போய் ஒப்பிடுகிறாரே கவிஞர் என ஆதங்கப்படுகிறீர்களா?

ஆரம்பத்தை ஒன்றிலிருந்து ஆரம்பித்திருக்கலாமே! இல்லை முக்கால், அரை,கால் என அளவுகள் ஒன்றிற்குப் பின்னாலும் ஓர் அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. எனவே நாம் கையை விரிக்கும் பூஜ்ஜியத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார். பூஜ்ஜியம் அதாவது தனக்கென ஒரு பெறுமானமும் அற்ற, லாப நட்டம் வேண்டாத ஓர் ஆரம்பம். இதைத்தவிர எதை நாம் ஆரம்பத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம்?

கவிஞர் கூற விளைவது என்னவெனில், எதுவுமேயற்ற ஒரு தற்பெருமயில்லா ராஜ்ஜியத்தின் தலைவன்தான் இறைவன். தனக்கென ஒரு பெறுமதியைக் கொண்டிருக்கா விட்டாலும், 1, 2,3 என்னும்  இலக்கங்கள் தமது பெறுமதியை ஏற்றிக் கொள்வது தம் பின்னால் சேர்க்கும் பூஜ்ஜியத்தின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. அதேபோல, இறைவனின் சேர்க்கை இல்லா வாழ்க்கை பெறுமானமற்றது என்கிறார் கவிஞர்.

அது மட்டுமல்ல. இந்த ராஜ்ஜியத்தின் தலைவனை எவன் புரிந்து கொள்கிறானோ அவன் மனிதன் அல்ல இறைவன் என்று நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது. இங்கே கவிஞர் அந்த ராஜ்ஜியத்தின் தலைவனை அறிந்து கொண்டால், அந்தத் தலைவனே இறைவன் என்று கூறுகிறார்.

தென்னை இள நீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்


பலவிதமான உறைகளாலே மறைக்கப்பட்டு இருப்பதுதான் தென்னங்காய். அதனுள் இருக்கும் தேங்காயையோ அன்றி இளநீரையோ அதைத் தாங்கியிருக்கும் ஓட்டையோ பார்த்த மாத்திரத்தில் தெரிந்து கொள்ள முடியாது. எமக்கப்பாற்பட்ட சக்தி என்று எம்மால் நோக்கப்படும் அந்த இறைவனும் அதைப் போன்றவனே என்று எம் கண்முன்னே, பாமர மனிதனுக்குக் கூடத் தெரியக்கூடிய ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டுகிறார் கவியரசர்.

எம் மனத்திலுள்ள ஆணவம் எனும் அந்த மாயையை எத்தனையோ சிரமப்பட்டு அகற்றினாலே அங்கு இறைவன் எனும் உண்மையை அறிகிறோம்.

இங்கே நான் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகவாதிகளுக்கு ஒன்றைக் கூற விழைகிறேன். நீங்கள் ஆணவம் என்னும் மாயையினைக் களைந்து இறைவனைக் காணுகிறீ£ர்கள் என்று கூட எண்ணத் தேவையில்லை. உங்களின் உள்ளத் தெளிவு எனும் உண்மையைக் காணுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். மனச்சஞ்சலங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தெளிவான, அமைதியான சிந்தனை நீரோட்டத்தைக் காணுவதாக எடுத்துக் கொள்ளுங்கள். கவிஞர் இங்கே கூற விழைவது அதுதான்.

Trp Raja

unread,
Jun 24, 2011, 4:30:53 AM6/24/11
to panb...@googlegroups.com
கண்ணதாசன் கூற்று 

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் ஊசலாடிக்கொண்டிருப்பதல்ல பிறப்பின் நோக்கம். சுகமான சிந்தனைக்கு அவகாசம் வேண்டும். அது எங்கே கிடைக்குமோ அங்கே; எப்படிக் கிடைக்குமோ அப்படி; எதனால் கிடைக்குமோ அதனால் கொண்டுவரப்பட வேண்டும்.

புள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்கள் ஆகின்றன. எண்ணங்கள் பூர்த்தியடையும்போது அதற்கு நிம்மதி என்று பெயர் வருகிறது. எது தேவையோ அதைப்பெற்றுவிட முயற்சி செய்வோம்; இல்லையேல் விட்டுவிடத் தயாராகுவோம். காரணம் எமக்குத் தேவை நிம்மதி.

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 4:32:43 AM6/24/11
to panb...@googlegroups.com

திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.

 “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்திருப்பான் கவிஞன்.

 வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?

 தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது.



Trp Raja

unread,
Jun 24, 2011, 4:33:59 AM6/24/11
to panb...@googlegroups.com
இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதினாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது -
இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா!


நம் வாழ்க்கை இறைவனிடம் வாங்கிய இரவல். அவன் அதைத் திருப்பிக் கேட்கும்போது நாம் கொடுக்காமல் இருந்துவிட முடியுமா? அப்படிச் சொல்லி விட்டால் கூட அவன் விட்டு விடுவானா? மறைந்தவருக்கும் எமக்கும் உள்ள நெருக்கமான, உருக்கமான, உன்னதமான உறவைச் சுட்டிக்காட்டி, கூக்குரல் போட்டு அழுது புரள்வதினாலே, மாண்டு போன அந்த உயிரை என்ன எமக்கு மீண்டும் தந்து விடுவானா? மனமே துயரை மறந்து ஆறுதல் அடைந்துவிடு என்கிறார் கவிஞர். 

அடுத்தென்ன?

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந் தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா!
போனால் போகட்டும் போடா!


இந்தப் பாடல் ஒலிக்கும் காட்சியில் வரும் அந்தக் கணவன் ஒரு டாக்டர். தனது மனைவியின் மரணத்தைத் தடுக்க வகை சொல்லாக் கல்வி என்ன கல்வி என்று விரக்தியின் விளிம்பில் அங்கலாய்ப்பது போல் பாடலைப் புனைந்திருக்கிறார் கவிஞர். அப்படி அந்தக் கல்வியின் மூலம் வகையறிந்திருந்தால் என் அன்பு மனைவி இப்படி தீயினுள் கருகும் நிலையை நான் கண்ணுற வேண்டி வந்திருக்காதே என்று வெம்புகிறான். என்ன சொல்ல விழைகிறார் கவிஞர்? இறைவனின் இந்த உயிரழிப்புத் தத்துவத்தைப் புகட்ட எந்தக் கல்வியுமே கிடையாது. துயர் எவருக்குமே பொதுவானது. மரணம் வரும்போது இருப்பவன், இல்லாதவன், கற்றவன், கல்லாதவன் என்று வேறுபாடு பாராட்டுவது கிடையாது.

முடிவாக நமக்கு ஓர் அருமையான, ஓர் எளிமையான தத்துவத்தைக் கூறுகிறா அமரர் கண்ணதாசன். 'என்னிடம் பணம் இருக்கிறது. என்னிடம் அறிவு இருக்கிறது. என்னிடம் அழகு இருக்கிறது. நான் உயர்ந்தவன். அவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு பொய்மையில் உழலும் மனிதரைப் பார்த்துக் கவிஞர் சிரிக்கிறார். நீங்கள் எல்லோருமே இறைவன் எனும் இயக்குனர் இயக்கும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. அவன்தான் எல்லாம் தெரிந்தவன். நமது வருகையும் மறைவும் அவன் கையிலேயே இருக்கிறது.

நண்பர்களே! கவிஞர் கண்ணதாசன் எனும் அந்த உயரிய கலைஞன் எனக்கு வாழ்க்கையில் விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்கள், அவரது படைப்புகளே! அது உள்ளோர், இல்லாதோர் எனும் பாகுபாடின்றி அனைவரின் ஆளுகைக்கும் உட்பட்டது. அதை ரசிப்பதற்கு எங்கள் இதயத்தின் மனிதத்துவப் பகுதியைக் கொஞ்சம் திறந்தால் போதும்.

'சுனாமி' எனும் அந்த இயற்கையின் கொடூரத் தாண்டவத்திற்குத் தம்மைப் பலிகொடுத்தவர்கள், அவர்தம் உறவினர்கள் ஆகியோரின் இழப்புக்கள் ஈடுகட்ட முடியாதவை. ஆனால் புண்பட்ட இதயத்திற்குக் கொஞ்சம் களிம்பு தடவுவது போல மனதைத் தேற்றும் சிலவற்றை நினைவு கூறுவோம்.

கடலோடு ஐக்கியமாகிவிட்ட உதிரத்தின் உறவுகளுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்! உறவுகளை இழந்து ஏதிலிகளாகியவர்களுக்கு உறவுகளாய் நாமுள்ளோம்.

Trp Raja

unread,
Jun 24, 2011, 4:39:10 AM6/24/11
to panb...@googlegroups.com
பெண்கள் காதல் வயப்படும் போது அவர்களின் உணர்வுகளை அடக்க மிகவும் எத்தனிப்பார்கள். அப்படியிருந்தும் தனது மனதைக் கொள்ளை கொண்டவனின் நினைவுகள் தலைதூக்கும் போது தன்னையும் அறியாமல் வார்த்தைகளாக வெளிப்படும் ஒரு நிகழ்வாக கவியரசர் 'காதல்' எனும் அந்த ரசத்தைப் பிழிந்து எமக்குப் பானமாகத் தருகிறார் பாருங்கள்.

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கள்ளும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப்படகுச் செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள 


தமிழெனும் கனியெடுத்து, சந்தமெனும் தேன் தடவி தவிக்கின்ற வாய்க்கு விருந்தாக்கும் வல்லமை கவியரசரின் தனித்திறமை.

அடுத்தொரு ரசமான 'கோபம்' எனும் அந்த ரசத்தின் திறத்தைக் கவியரசரின் கவித்திறமையில் பார்ப்போமா? இனி வரும் இந்த உதாரணத்திற்கு மற்றுமொரு சிறப்புமுண்டாம். கவிஞரின் திறமையில் பொறாமை கொண்டவர்கள் அவரின் பாடல்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த காலத்தில் தன் பதிலைப் பாடலாகப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் இந்தப் பாடலை யாத்திருந்தார் என்றொரு கருத்து நிலவுகிறது. பாடலைப் பார்ப்போமா?

நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு
இந்தக் கவிதையைக் குறை சொல்லுவோரை
இந்தக் கழியால் அடிப்பேன் வாடா
நீ கம்பனைப் படித்தவனோடா இல்லைக்
காகிதம் தின்னும் மூடா மூடா

ஆமெனும் முன்னே ஆயிரம் பாட்டை
அள்ளி அள்ளி வீசட்டுமா
அப்போதும் கூட புரியல்லையென்னா
சொல்லிச் சொல்லி உதைக்கட்டுமா
வல்லினம், மெல்லினம்
நல்ல இடையினம் என்னும் கம்பை எடுத்து
வெண்பா, அரசி எனும் விதம் விதமான சாட்டை தொடுத்து (நான் போட்டால்)

Kandavel Rajan

unread,
Jun 24, 2011, 4:40:26 AM6/24/11
to panb...@googlegroups.com

இடை ஆராய்ச்சியில் கண்ணதாசன் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர் என்று சொல்ல வேண்டும்.

“நாடகம் ஆடும் இடையழகு” என்றும்  “சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன” என்றும் விதவிதமான கற்பனையைக் கலந்து விருந்து படைப்பார். சொல்லவரும் கருத்துக்களில் ஒரு நளினமிருக்கும்; ஆபாசம் இருக்காது.

விஷயங்களை விரசம் கலக்காமல்; சூசகமாக; சர்க்கரை கலந்த சூரணமாகத் (Sugar Coated pills.. என்பார்களே) தருவதில் கண்ணதாசன் கில்லாடி மட்டுமல்ல பலே.. பலே.. கில்லாடி!!.

‘எடைக்கு எடை’ நாணயம் கொடுப்பதுபோல் இதற்காகவே இவருக்கு ‘இடைக்கு இடை’ ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.

‘தடியிடை’ எந்தக் கவிஞனுக்கும் பிடிக்காது போலும். கவிஞன் ‘மெல்லிடை’ என்றான்.‘கொடியிடை’ என்று சொல்லிப் பார்த்தான். திருப்தி இல்லை. இன்னும் சற்று மெலிய வைத்து  ‘நூலிடை’ என்றான். ஊஹூம் அவன் எதிர்பார்த்த ‘எஃபெக்ட்’ கிடைக்கவில்லை. கடைசியில் “இடையே இல்லை” என்று சொல்லி விமோசனம் அடைந்துக் கொண்டான்.

நடையா இது நடையா – ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா? இது இடையா? – அது
இல்லாததுபோல் இருக்குது.

என்ற கண்ணதாசனின் பாடல் கலக்கலான உதாரணம். (இடையே இல்லாவிட்டால் பி.சி.சர்க்கார் மேஜிக் -ஷோவில் காட்டுவதுபோல் உடல் வேறு, கால் வேறாக அல்லவா போய்விடும் என்றெல்லாம் கேள்விகள் கேட்டு என்னைப் படுத்தக்கூடாது)

மனுஷன், இடியுடன்-மின்னலை இணைத்து பாடியிருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இடையுடன்-மின்னலை இணைத்து நிறைய பாடியிருக்கிறார்.

“இல்லை என்று சொல்வதுந்தன்
இடையல்லவா – மின்னல்
இடையல்லவா”

என்ற வரிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மின்னல் வெட்டினால் கண்கள் கூசும் அல்லவா? அப்படியொரு மின்சார வெட்டாம், அந்த இடையில்.

இடையின் மீது கரிசனம் முற்றிப் போய் கவிஞருக்கு சில சமயம் ‘கிலி’ தொற்றிக் கொள்ளும். இடையை இவ்வளவு மெல்லியதாக எழுதி விட்டோமே, ஒடிந்து விட்டால் என்னவாகும் என்ற பயம் ஏற்பட்டுவிடும். அடுத்த வரியில் அவரே அதற்கு ‘சமாளிபிகேஷன்’ செய்து ‘சால்ஜாப்பும்’ கூறிவிடுவார்.
 
ஒடிவது போல் இடை இருக்கும்” என்ற கேள்வி பிறக்க “இருக்கட்டுமே!” என்ற பதிலும் தொடர்ந்து வரும். நாயகி நடந்து போனாலே கவிஞருக்கு வெலவெலக்கத் தொடங்கி விடும்.

“மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!
முல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்
சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்!”

என்ற தன் பயத்தை வெளிக்காட்டி விடுவார். நாயகி ‘ஸ்லோமோஷனில்’ நடந்து போவதுதான் கவிஞருக்கு பிடிக்கும் போலும். வேகமாக நடந்தால் ஆபத்து என்று அபாயச் சங்கு முழங்குகிறார்.

இந்த ‘இடை’ சமாச்சாரங்களைத் தொடங்கி வைத்தது கம்பனா அல்லது அவனுக்கு முந்திய கொம்பனா என்று சரியாக சொல்லத் தெரியவில்லை.

“இழைந்த நூலினை மணிக்குடஞ்
சுமக்கின்ற தென்னக்
குழைந்த நுண்ணிடைக் குவியளா
வனமுலைக் கொம்பே”

என்கிறார் கம்பர். “மணிக்குடங்களை தாங்க இயலாமல் வளையும் கொடிபோல உன் இடை இருக்கிறது என்று திருவாய் மலர்ந்தருள்கிறார்.

‘இடை’ என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது, நாம் சற்று வித்தியாமாக எழுதிப் பார்க்கலாம் என்று முயன்று வம்பில் மாட்டிக் கொண்ட கவிஞர்களும் உண்டு.

“குறுக்குச் சிறுத்தவளே” என்றும் ”ஒல்லி ஒல்லி இடுப்பே/ ஒட்டியாணம் எதுக்கு?/ ஒத்த விரல் மோதிரம்/ போதுமடி உனக்கு…” என்றெல்லாம் மாற்று வார்த்தைகளைப் போட்டு மகிழ்ந்துக் கொண்டார்கள்.

நயாகராவுக்கு, வயாகரா என்று எதுகை மோனை போட்டதைப் போல் “இடுப்பு” என்று முடியும் வரிக்கு “அடுப்பு” என்று “ரைமிங் வோர்ட்ஸ்” போட்ட பாடலாசிரியர்களை நினைத்தாலே எனக்கு கடுப்பு வருகிறது.

வைரமுத்து “இஞ்சி இடுப்பழகி” என்று ஏடாகூடமாக எழுதப் போய் தமிழ்மக்கள் அனைவருமே தொல்காப்பியர்களாக மாறி “இஞ்சி இடுப்பழகி”க்கு அருஞ்சொற்பொருள் தேட ஆரம்பித்து விட்டார்கள். 

இஞ்சியைக் கையிலேந்தி அவரவர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவை அறிவித்தார்கள். “இஞ்சியானது உருவத்தில்  பெருத்தும் இடையில் சிறுத்தும் இருப்பதனால் இஞ்சி எடுப்பழகி” என்று கூறியிருக்கக் கூடும் என்று சில பிரகஸ்பதிகள் பிரகடனம் செய்தார்கள்.

இஞ்சியை தினந்தோறும் கரைத்துக் குடித்தால் இடையானது உடுக்கையைப் போன்று குறுகி விடும் என்று சித்தவைத்திய சிகாமணிகளாய் வேறுசிலர் வியாக்யானம் தந்தார்கள்.

வில்லங்கம் பிடித்த ஒரு பத்திரிக்கை விவகாரமான ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டு தாய்க்குலத்தின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகும் அளவுக்கு அந்த தமிழினக் கவிஞரை தாறுமாறாக மாட்டி விட்டது.

ரேஸில் ஓடுகின்ற குதிரை மிடுக்காக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அதன் வாலுக்கடியில் இஞ்சியைச் செருகி விடுவார்களாம். அதனால் ஏற்படும் எரிச்சலைத் தாங்க முடியாத குதிரைகள் தாங்கித் தாங்கி நடக்குமாம். இது கேட்டு மாதர் சங்கத்தார் எப்படி கொதித்துப் போயிருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனைச் செய்துக் கொள்ளலாம்.

கண்ணதாசனிடமிருந்து வெளிப்பட்ட ‘மூடுமந்திர’ நளின பாஷை மற்ற கவிஞர்களிடத்தில் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.

“எப்படி? எப்படி? சமைஞ்சது எப்படி?” மற்றும் “கட்டிப்புடி கட்டிபுடிடா” போன்ற பட்டவர்த்தனமான பாஷையில் வாலிபக் கவிஞர் வாலி கையாண்ட வார்த்தைகள் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.

“மடி மேலே அழகு சிலை ,
இதழ் மேலே கனியின் சுவை,
இடை மேலே பருவ சுமை,
இது தானே இனிய கதை!”

என்ற கவிஞர் வாலியின் வரிகளில் விரசம் மேலோங்கி இருப்பதை நாம் காண முடிகிறது. தணிக்கைக் குழுவின் கத்தரிக்கோலுக்கும் ஆளாகியது.

“மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடா
சற்றே நிமிர்ந்தேன்
தலைசுற்றிப் போனேன்
அடடா அவனே வள்ளலடா”

என்ற வைரமுத்து பாடல் வரிகள் “பச்சை” என்று குற்றம் சொல்ல முடியாதென்றாலும் ஒரு விதமான “மைல்ட் ஷாக்” ஏற்படுத்தும் ரகம்தான்.

“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?”

என்ற கண்ணதாசனின் பாடலில் “சின்ன இடை இருந்தும் என்னை என் தலைவன் வெறுத்து விட்டானா?” என்று தலைவி நம்மைப் பார்த்து கேட்கையில் நமக்கே அந்த பாத்திரத்தின்மேல் இரு இனம் புரியாத இரக்கம் ஏற்படுகிறது.

“யாருக்கு மாப்பிள்ளை யாரோ..
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?”

என்று தலைவி பாடுவாள். கைப்பிடிக்க போகின்ற கணவன் எப்படி இருப்பானோ என்ற கவலை அவளிடத்திலிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படும்.

“ஊரறிய மாலையிடுவாரோ..
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ..
சீர் வரிசை தேடி வருவாரோ..
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ..”

என்ற வரிகளில் “உள்ளத்தழகை பார்க்காமல், உடலழகை மட்டும் மோகிக்கும் கணவன் வாய்த்து விட்டால் நம் நிலைமை என்னாகுமோ? ஏதாகுமோ?”  என்று நாயகி கவலையுறுகையில் நமக்கும் அவள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது,

படிப்போர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள்தான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கக் கூடிய முழுமையான வெற்றி.

கண்ணதாசனின் மற்றொரு ‘மாஸ்டர் பீஸ்’ “அன்புள்ள மன்னவனே!” என்று தொடங்கும் காதற் கடித பாடல்.  

“இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?”

என்ற சந்தேகத்தை நாயகன் கிளப்ப

“இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா”

என்ற நெத்தியடி பதில் நாயகியிடமிருந்து வரும். எவ்வளவு நாசுக்கான ‘இடை’ வருணனை?

எகிப்து போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘இடை நடன’த்திற்கு ஆங்கிலப் பெயரோ “பெல்லி டான்ஸ்”. தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமெனில் “தொந்தி நடனம்” என்றோ “தொப்பை நடனம்” என்றோ கண்றாவியாக மொழிபெயர்க்க வேண்டிவரும்.

முத்தமிழ் என்று போற்றப்படும் நம் மொழிக்கு வல்லினத்திலிருந்தும், மெல்லினத்திலிருந்தும், இடையினத்திலிருந்தும் ஒவ்வொரு எழுத்தினை தேர்ந்தெடுத்து “தமிழ்” என்ற இனிமையான பெயரைச் சூட்டிய நம் மூதாதையர்களுக்கு ஒரு “ஓ” போட வேண்டும்.

அம்சமாக (‘மடிப்பு ஹம்ஸா’ அல்ல) பெயர் வைப்பதில் தமிழனுக்கு மிஞ்சி யாருமே இல்லை எனலாம். மனித உடம்பில் இடைப்பட்ட பகுதிக்கு “இடை” என்ற எத்துணைப் பொருத்தமானப் பெயர் !!!!

- அப்துல் கையூம்

Trp Raja

unread,
Jun 24, 2011, 4:46:41 AM6/24/11
to panb...@googlegroups.com
வாழ்க்கையின் யதார்த்ததை எமது தெய்வங்களின் வடிவங்களோடு சம்மந்தப்படுத்திச் சாதாரண மனிதனுக்கும் புரியக் கூடிய வகையில் கவிஞர் பாடல் தந்திருப்பதன் வகையைப் பார்த்தீர்களா? எங்கே அடுத்த பகுதியைப் பார்ப்போம்!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதருக்கு ஒளவை சொன்னது
அது ஒளவை சொன்னது
அதில் அர்த்தமுள்ளது


உண்மை தானே! ஒரு மனிதனின் நிலை உயர்ந்திருக்கும் போது தான் தனது தலையை உயர்த்தி இந்த உலகம் பார்க்கிறது! ஆனால் அதே மனிதனின் நிலை தாழ்ந்து வந்தாலோ அவனது நிழல் கூட அவனை மிதித்துத் தான் போகிறதாம்.

******

தேனார் செந்தமிழமுதைத்
திகட்டாமல் செய்தவன்
மெய் தீயில் வேக
போனாற் போகட்டுமெனப்
பொழிந்த திரு
வாய் தீயிற் புகைந்து போக
மானார் தம் முத்தமொடும்
மதுக் கோப்பை
மாந்தியவன் மறைந்து போக
தானே எந் தமிழினிமேல்
தடம் பார்த்துப்
போகுமிடம் தனிமைதானே!
கூற்றுவன் தன் அழைப்பிதழைக்
கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
நீ எரிவதிலும்
அவன் பாட்டை
எழுந்து பாடு


தனக்குத் தானே இரங்கற்பா தான் மறைவதற்குப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே எழுதி வைத்த அந்தக் கவித்தலைமகன் நிச்சயமாய் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறான். அனைத்து உள்ளங்களையும் தமிழால் கட்டிப்போட்டு வைத்துள்ளான்.

இங்கே மீண்டும் கவியரசரின் வார்த்தைகளில்,


வாழ்க்கையில் என் சிறகுகள் கவிந்து கொண்டு இருக்கும். எந்த நேரமும் இவை விரியும்.

சலனம் இல்லாமல், சபலம் இல்லாமல் அவை பறந்து போகும்.

முடிவின் எல்லை நோக்கி அவை பயணம் போகும் போது, நான் இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

நான் மீண்டும் பிறப்பேன்

பிறந்து முதலில் இருந்தே துவங்குவேன்

மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வேன்.


ஆசாத்

unread,
Jun 24, 2011, 5:23:04 AM6/24/11
to பண்புடன்
> <kandavelra...@gmail.com> wrote:
> “பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்

கந்தவேல்ஜி,

இதுல ஒரு இஷ்யூ இருக்கு.

இத்த எழுதுனது கா.மு.ஷெரீஃப், ஆனா, படத்துல கா.மு.ஷெரீஃப் பேரு வராது.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 6:11:08 AM6/24/11
to பண்புடன்

On Jun 24, 1:40 pm, Kandavel Rajan <kandavelra...@gmail.com> wrote:
> *இடை ஆராய்ச்சியில் கண்ணதாசன் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர் என்று சொல்ல வேண்டும்.


சூப்பர் கந்தவேல் சார்

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே
அது ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே - இது வாலி

0

பவளமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன்கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ - ஹி ஹி இது கண்ணதாசன் :P

மரவண்டு

unread,
Jun 24, 2011, 6:18:13 AM6/24/11
to பண்புடன்

On Jun 23, 8:59 pm, Shylaja N <shyla...@gmail.com> wrote:
> கண்ணதாசன் ஒரு படத்துக்குப் பாட்டெழுதினார்
> .
> '
> எண்ணிரண்டு பதினாறு வயது - அவள்
> கண்ணிரண்டில் காணுதம்மா காதல் கொண்ட மனது
> !
> பாடல் பதிவானதும் படத்தயாரிப்பாளரும் இயக்குநரும் கவிஞரிடம் கேட்டார்கள், என்ன
> கவிஞரே ! இப்படி எழுதிவிட்டீர்களே! கதா நாயகிக்கு (தேவிகா) இப்போது வயது
> பதினாறா? என்று.
> கவிஞர் சொன்னார்
> , பாட்டை நன்றாகக் கேள்! என்றார். அவர்களுக்குப் புரியவில்லை.
> எண்ணி இரண்டு பதினாறு என்று தானே எழுதினேன் என்றார்!

சூப்பர் ஷைலு , வெல் சமாளிப்பு

ஐம்பதிலும் ஆசை வரும் இந்தப் பாட்டு எழுதுன கண்ணதாசனுக்கும் 50 வயசுக்கு
மேல, நடிச்ச சிவாஜிக்கும் 50 வயசுக்கு மேல , பாடுன டி.எம்.எஸ் கும் 50
வயசுக்கு மேல ...

BTW , ஷைலு உங்களுக்கு 50 துக்கு கொஞ்சம் தான கீழ ?

மரவண்டு

unread,
Jun 24, 2011, 6:27:11 AM6/24/11
to பண்புடன்
>
> நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
> நடந்த இளந்தென்றலே - வளர்
> பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
> பொலிந்த தமிழ் மன்றமே!"
>


ஒரு மேடையில் கண்ணப்பன் என்றொருவர் கண்ணதாசனின் தாலாட்டுப் பாடல்களின்
சிறப்புகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.


" நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே"

"இதையெல்லாம் கவிஞர் எப்படிப் பாடினார் ? " என்று கேட்டுவிட்டு ,
மேடையில் வீற்றிருந்த கண்ணதாசனை நோக்கி " சொல்லடா வாய் திறந்து..." என்று
நிறுத்தவே கண்ணதாசன் உட்பட எல்லோருமே திகைத்து கண்ணப்பனைப்
பார்த்தார்கள்.

கண்ணப்பன் உடனே

" சொல்லடா வாய் திறந்து அம்மா என்று ..
சொர்க்கமே தோன்றுதடா உன்னால் இன்று "

என்று கவிஞரின் வேறு ஒரு தாலாட்டு பாடலைப் பாடியிருக்கிறார்.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 6:39:25 AM6/24/11
to பண்புடன்
கண்ணதாசனுக்கு மொத்தம் மூன்று மனைவிகள். கண்ணாத்தாள் , பார்வதி ,
வள்ளியம்மாள்.
பிள்ளைகள் மொத்தம் 15 , வள்ளியம்மாளுக்குப் பிறந்தவர் தான் விஷாலி
கண்ணதாசன்.
ஒரு மகனுக்கு அண்ணாத்துரை என்று பெயரிட்டிருக்கிறார் கண்ணதாசன் , டேய்
அண்ணாத்துரை என்று கூப்பிடுவதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு துரை என்றே
அவரைக் கூப்பிடுவாராம் . இந்த துரை சினிமாவில் விவேக்குடன் காமெடிக்
காட்சிகளில் நடித்துள்ளார்.

0

நான் முதன்முதலில் அண்ணாவை ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் தான்
சந்தித்தேன் . என்.எஸ்.கே என்னை அவரிடம் அழைத்துச் சென்றார் , அவரின்
எடுப்பான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது .எளிமையான மனிதர் வஞ்சகம்
இல்லாத மனிதர் . தமிழ் நடையில் மிகச்சிறந்த ஓட்டம் கொண்டுவந்தது அவர்
தானே ! பற்பல புதிய சொற்களை உருவாக்கியவர் அவர் . அவர் முக்காற்பங்கு
கவிஞர் காற்பங்கு அரசியல் வாதி - (கண்ணதாசன்)

மரவண்டு

unread,
Jun 24, 2011, 6:52:35 AM6/24/11
to பண்புடன்
> காமராஜரே வந்துவிட்ட ஒரு கூட்டத்துக்கு கவிஞர் எப்போதும் போலத் தாமதமாக
> வருகிறார்.

ஒருமுறை ஜனாதிபதி விருது வாங்குவதற்கு தனது அண்ணன் ஏ.எல் சீனிவாசனுடன்
சென்றிருக்கிறார் கண்ணதாசன்.நிகழ்ச்சி நேரத்தில் கண்ணதாசன் அயர்ந்து
தூங்கி விட்டார் . பிறகு ஏ.எல். சீனிவாசன் தான் அந்த விருதை
ஜனாதிபதியிடமிருந்து வாங்கி வந்திருக்கிறார் .

0

கண்ணதாசனுக்கு அவரது அண்ணன் ஏ.எல் சீனிவாசன் மேல் அளவு கடந்த பாசம் .
பாசமிகு அண்ணன் தவறியதும் தீராத துயரத்தில் இருந்தார் கண்ணதாசன் . அடுத்த
ஒருவாரத்தில் கண்ணதாசன் மகள் கலைச் செல்வி
சொக்கலிங்கத்திற்கு(பார்வதிக்குப் பிறந்தவர்) ஆண் குழந்தை
பிறந்திருக்கிறது. " என் அண்ணன் தான் எனக்குப் பேரனாகப்
பிறந்திருக்கிறார் .. " என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினாராம்
கண்ணதாசன்.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 6:54:23 AM6/24/11
to பண்புடன்
>> " என் அண்ணன் தான் எனக்குப் பேரனாகப் பிறந்திருக்கிறார் .. "  என்று உணர்ச்சிப்
>> பெருக்கோடு கூறினாராம் கண்ணதாசன்.

பேரனுக்கு கண்ணதாசன் வைத்த பெயர் சீனிவாசன்.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 7:08:12 AM6/24/11
to பண்புடன்
ஒருநாள் கண்ணதாசன் எம்.எஸ்.வியை தொலைபேசியில் அழைத்து, " விசு எனக்காகக்
காத்திருக்காதே , அவசரம்னா வேறு யாரையாவது வைத்து பாட்டு எழுதிக்கோ "
என்று கூறிவிட்டு, பதிலுக்குக் கூட காத்திருக்காமல் தொலைபேசியைக் கீழே
வைத்து விட்டார் . கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது கண்ணதாசனுக்கு.
சின்னக் குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுகின்றார். " 40 வருஷப்
பழக்கம் ! விசு கேட்டு நான் இல்லைன்னு சொன்னதில்லை. முதல் முதலா
முடியாதுன்னு சொன்னதுனால என்னால தாங்க முடியலை " என்று கூறி விட்டு ஓ வென
அழுதாராம் கண்ணதாசன்.

0

ஒரு மேடைக் கச்சேரியில் எம்.எஸ்.விஸ்வநாதன்

" மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே! "

பாடலைப் பாடிவிட்டு , " இந்த மாதிரி பாடல்களையெல்லாம் என் நண்பன்
கண்ணதாசன் ஒருவனாலேயே எழுதமுடியும் " என்று கூறி விட்டு...

" புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்.. " என்று பாடியிருக்கிறார்.


மரவண்டு

unread,
Jun 24, 2011, 7:12:44 AM6/24/11
to பண்புடன்

> *“செம்மாதுளை பிளந்து தா தா தா”* என்பது சரணத்தின் கடைசி வரி. *“இப்போதுதான்
> எம்.ஜி.ஆருக்கு ‘தாத்தா பாடல்’* *எழுதிவிட்டு வருகிறேன்”* என்றாராம் கண்ணதாசன்.

தொட்டான் .. தடவினான் என்று எழுதினால் செக்ஸ் , அன்றைய இரவு இன்பமயமாக
இருந்தது என எழுதினால் இலக்கியம் - கண்ணதாசன்

மரவண்டு

unread,
Jun 24, 2011, 7:20:30 AM6/24/11
to பண்புடன்
> சாகித்ய அகாதமி விருது  பெற்றவர்.
>
> நட்புடன்,
> *கந்தவேல் ராஜன் ச.*


ஆசை லயத்தில் கட்டுண்ட மனிதனை ஆட்டிப் படைப்பவை மூன்று . அவை .. பதவி ,
பொருள் , பெண் (சேரமான் காதலி)

0

சேரமான் காதலி நாவலுக்காகத் தான் கண்ணதாசனுக்கு சாகித்ய அகடமி விருது
கிடைத்தது (1980) . கண்ணதாசன் கவிதைகளுக்கு விருது கொடுக்காமல் நாவலுக்கு
விருது கொடுத்திருக்கிறார்களே என்று பொருமினார்களாம் கண்ணதாசனின்
தாசன்கள்.

மரவண்டு

unread,
Jun 24, 2011, 7:27:10 AM6/24/11
to பண்புடன்
> பட்டினத்தாரின் இப்பாடலைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். ஆனால்
> அந்த ஞானியின் தத்துவத்தை எவ்வாறு எம்மிடையே கவிஞர் உலவ விடுகின்றார் என்று
> பாருங்கள் நண்பர்களே !
>
> பாதகாணிக்கை எனும் படத்தில் வரும் பாடலிது:
>
> வீடு வரை உறவு
> வீதி வரை மனைவி
> காடு வரை பிள்ளை
> கடைசி வரை யாரோ


பட்டினத்தார் சொன்ன தத்துவம் பல்கலைகழக நூல்நிலையத்தைத் தொட்டதே தவிர
பாமரனைத் தொட்டதில்லை . " போனால் போகட்டும் போடா .. இந்த பூமியில்
நிலையாய் வாழ்ந்தவர் யாரடா " என்று சுலபமாக எல்லோரையும் தொட்டவர்
கண்ணதாசன் - ( அமுதவன் )

0

பட்டுக் கோட்டையாரின் பாடல்கள் பாமரத்தனமான மக்களை பெரிதும் கவரும்
வகையில் எழுதப்பட்டவை , ஆனால் கண்ணதாசனின் பாடல்களோ பண்டிதர் பாமரர் அகிய
இருபாலரையும் ஒருங்கே ஈர்க்கும் (வாலி)

மரவண்டு

unread,
Jun 24, 2011, 7:30:39 AM6/24/11
to பண்புடன்
On Jun 24, 1:39 pm, Trp Raja <trpr...@gmail.com> wrote:
> பெண்கள் காதல் வயப்படும் போது அவர்களின் உணர்வுகளை அடக்க மிகவும்

" சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மானிடனே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிடமாட்டாயா ? "

இப்படியெல்லாம் இனி யார் எழுதப் போகிறார்கள் - தமிழருவி மணியன்

மரவண்டு

unread,
Jun 24, 2011, 7:41:58 AM6/24/11
to பண்புடன்

> சிச்சுவேஷனுக்கு எழுதுறதுன்னா இது. கண்ணதாசன் பெரீ ஆள் சார்!

நெஞ்சில் ஓர் ஆலயத்தில் முத்துராமன் ஒரு புற்று நோயாளி . நாளை
இறந்துவிடுவோம் என்ற நினைப்பு. மனைவியை அழைத்து , உன்னை மணக் கோலத்தில்
பார்க்க விரும்புகிறேன் . நகைகளை அணிந்து கொண்டு பட்டுப் புடவை கட்டி
பூச்சூடி பொட்டோடு வா , என் ஆசையை நிறைவேற்றி வை என முத்து ராமன்
தேவிகாவிடம் சொல்வார். இந்த இடத்தில் தேவிகா பாடுவது போல் ஒரு பாட்டு
வெண்டுமென கவிஞரிடம் சொன்னேன்.

ஒரு நிமிடம் கூட இருக்காது , நான்கே வரிகளில் நான் சொன்ன சம்பவத்தை
உருக்கமாக உருவாக்கித் தந்தார்.

" என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தைப் பார்த்துக்கொள்ள துடித்தாயோ .. ? "

இந்த முதல் நான்கு வரிகளும் என்னை உலுக்கிவிட்டது.கண்ணீர்விட்டழுதேன்.
படம் பார்த்தவர்களை முத்துராமன் தன் நடிப்பினாலும் கவிஞர் தன்
சொல்லாற்றலாலும் நெகிழவைத்துவிட்டார்கள்.
- ( டைரக்டர் ஸ்ரீதர் )

http://www.youtube.com/watch?v=8ljoY1c4P0c

மரவண்டு

unread,
Jun 24, 2011, 7:52:49 AM6/24/11
to பண்புடன்
TRP ராஜா சார் ரொம்ப நன்றி. இந்த இழை 100 மடல்களைத் தாண்டி வெற்றிகரமாக
ஓடவேண்டும் :)

N. Ganesan

unread,
Jun 24, 2011, 8:27:54 AM6/24/11
to பண்புடன்

On Jun 23, 9:29 am, Gokul Kumaran <gokuldu...@gmail.com> wrote:
> ஏதோ ஒரு படத்தில் டாக்டரிடம் சிகிச்சை பெற்று விட்டு ஒரு கவிதை சொல்லுவார்
> கண்ணதாசன்.
>
> ”ஆஹா, என்ன கவிதை, அது தான் கண்ணதாசன்” என்று உளம் மகிழ்வார் டாக்டர். (நாகேஷ்
> என்று நினைக்கிறேன்)
>
> “அது தான் ஃபீஸ்” என்று சொல்லி கமுக்கமாக கண்ணதாசன் கிளம்பிவிடுவார்.
>
> என்ன படம் என்று ஞாபகமில்லை.
>
> --
> *Gokul Kumaran*

அந்தப் பாட்டையும், சீர்பிரித்து எழுதியும் காட்டியுள்ளேன்.

நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்:
http://nganesan.blogspot.com/2009/02/nagesh.html

நா. கணேசன்
நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்:
http://nganesan.blogspot.com

Trp Raja

unread,
Jun 24, 2011, 8:36:16 AM6/24/11
to panb...@googlegroups.com
2011/6/24 மரவண்டு <mara...@gmail.com>

TRP ராஜா சார் ரொம்ப நன்றி. இந்த இழை 100 மடல்களைத் தாண்டி வெற்றிகரமாக
ஓடவேண்டும் :)


இவ்விழை தொடங்கி பல புதிய தவல்கள் அளித்த உங்களுக்கும் தொடர்ந்து பகிர்த்து வரும் நண்பர்களுக்கும் நன்றி!  
கவலைய விடுங்க ஜி ,ஓடவைத்துடுவோம். :-)

***********************************

இரண்டு அடிகளில் ஒரு பொருள் தத்துவத்தை எடுத்தியம்பும், தமிழ்ப்பெரும் இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளை எவ்வாறு எமது கவியரசர் சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு வருகிறார் என்று இப்போது பார்ப்போம்.

யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும்
 

காதல் பருவமதில் காளையும், கன்னியும் எதிர் எதிரே. கன்னி மனமதில் குடிபுகுந்த காளையினைக் கண்டுவிட்டால், அம்பு போன்ற அவள் பார்வை அவனைத் துளைத்தெடுக்க விரும்பாதா என்ன? ஆனால் கன்னியவள் கூடப் பிறந்த நாணம் எனும் விலங்கு அவளைத் தன்னிச்சை போல நடக்க விட்டு விடுமா?

அவன் அவளைப் பார்க்க, அவள் தரை பார்க்க, அவன் விண் பார்க்க, அவள் அவன் முகம் பார்க்க, காதல் பாடத்தின் அரிச்சுவடி, ஆரம்பம் அதுதானே!

கவியரசர் இக்குறளைத் திரைகானமாக்கி எமக்கு விருந்தாக்குகிறார்.

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே 


எத்தகைய எளிமையான விளக்கத்தின் மூலம் தமிழால் எம்மைத் தாலாட்டி, வள்ளுவனை சமுதாயத்தின் அடிமட்ட மனிதன் வரை அழைத்து வந்து விடுகிறார் கவிஞர்.

அது மட்டுமா? அதிலே கலந்திருக்கும் கருத்தைக் கவனியுங்கள். அவன் அவளைப் பார்க்கும் போது அவள் எங்கே பார்க்கின்றாள்? தமிழ் நங்கையின் தனிப்பெருஞ் சீதனமான நாணம் தலையெடுக்க அவள் வதனம் கீழ் நோக்கி, கண்கள் மண்ணைப் பார்க்கின்றனவாம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! எம்மண் பெண்களின் பெருங்குணமே மண் பார்த்து நடப்பது தான்.

அப்போது எம் ஏறு போல் பீடு நடையிடும் காளை என்ன செய்கிறான்? மெதுவாக விண்ணைப் பார்க்கிறானாம். அடடா இந்த வேளைக்காகத் தானே காத்திருந்தேன் என்று அந்தப் பூமகள் தன் உள்ளங்கவர் கள்வனைப் பார்க்கிறாளாம்.

Naresh Kumar

unread,
Jun 24, 2011, 8:39:15 AM6/24/11
to panb...@googlegroups.com
இழை நூறு அடிப்ப(த்த)தற்கு வாழ்த்துக்கள்...
It is loading more messages.
0 new messages