பிறரு​டைய தி​ரை விமர்சனங்கள்

177 views
Skip to first unread message

தமிழ்ப் பயணி

unread,
Nov 14, 2012, 3:08:41 AM11/14/12
to பண்புடன், tamil...@googlegroups.com
நம்மு​டைய தி​ரை விமர்சனங்க​ளையும் தாண்டி
இ​ணையத்தில் படிக்க கி​டைக்கும் பிறரு​டை நல்ல விமர்சனங்க​ளை இந்த இ​ழையில் பகிரலா​மே. எ​​வைக​ளை இங்​கே பகிரலாமுன்னு நான் நி​னைக்கி​றேன்னா...

1. தமிழ் தி​ரைப் படங்களாக இருக்கலாம்.
2. பிற​மொழி தி​ரைப் படங்களாக இருக்கலாம்.
3. குறும்படங்களாக இருக்கலாம்.
4. அட.. விளம்பர படங்களாகவும் இருக்கலாங்க.. :) :)

#பிறரு​டையதுதான் ​போடனும் என்று இல்​லே அவ்வப்​போது ​சொந்த சரக்​கையும் ​போடலாம்.
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி



Asif Meeran AJ

unread,
Nov 14, 2012, 3:12:15 AM11/14/12
to panb...@googlegroups.com
நிச்சயம் தமிழ்ப்பயணி
ஆனால் வெறுமனே வெட்டி ஒட்டாமல் அந்த விமர்சனம் அல்லது அந்தப் படம் குறித்த கருத்தையும் பகிர்ந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்

தமிழ்ப் பயணி

unread,
Nov 14, 2012, 3:13:13 AM11/14/12
to பண்புடன், tamil...@googlegroups.com

எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களு​டைய கட்டு​ரை மீள்பதிவு.

காந்தி வழிகாட்டுகிறார்


2009 ஆண்டு வெளியான ஹிந்திப்படம் Road to Sangam , வழக்கமான பொழுது போக்குப்படங்களுக்கு இடையில் இதன் வருகை கவனிக்கப்படாமலே போய்விட்டது, காந்தி குறித்து இந்தியாவில் எடுக்கபட்ட திரைப்படங்களில் முக்கியமான படமிது

இந்தப்படம் மூன்று தளங்களில் செயல்படுகிறது, ஒன்று, காந்தி குறித்து இன்றைய தலைமுறையினரிடம் உள்ள வெறுப்பை, அதன் பின்னுள்ள அரசியலை, அறியாமையைக் கவனப்படுத்துகிறது, இரண்டாவது இஸ்லாமிய சமூகம் மகாத்மா காந்தியை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது, மூன்றாவது, மதக்கலவரங்கள் உருவாகின்ற சூழலில் காந்தியின் முக்கியத்துவம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துகிறது

படத்தை இயக்கியிருப்பவர் அமித்ராய், அட்டன்பரோவின் காந்தியைப் போல இது பிரம்மாண்டமான செலவில் உருவாக்கபட்ட படமில்லை, ஆனால் உண்மையான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட யதார்த்தமான படம்.

அலகாபாத்தில் உள்ள கார் மெக்கானிக் ஹஸ்மத் பாய்,  எவ்வளவு மோசமான நிலையில் உள்ள காரின் என்ஜினையும் சரிசெய்து தந்துவிடக்கூடிய திறமைசாலி, வயதான மனிதர், நண்பர்களுடன் தினசரி நடைப்பயிற்சிக்குச் செல்வது அவரது வழக்கம், முதியவர்களின் நடைபயிற்சியைப் பற்றி வேடிக்கையான கிண்டலுடன் துவங்குகிறது படம்

ஒரு நாள் அவரிடம் V8 ford engine  ஒன்று சரிசெய்யப்படுவதற்காகக்  கொண்டு வரப்படுகிறது, அது மிகப்பழைய என்ஜின் என்பதால் சரிசெய்து தருவதற்கு கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று ஹஸ்மத் கேட்கிறார்,

ஒரு வாரத்தில் என்ஜினைச் சரி செய்து தரும்படி அவசரப்படுத்துகிறார்கள், அப்படி என்ன அவசரம் எனக்கேட்டபோது, அந்த என்ஜின் காந்தியின் அஸ்தியைச் சுமந்து சென்ற போர்டுவாகனத்தின் என்ஜின், சரித்திரப் புகழ்பெற்ற அந்த வண்டி மறுபடியும் தேவைப்படுகிறது என்பதால் என்ஜினை உடனே சரி செய்து தரும்படியாக கேட்கிறார்கள், அவரும் ஒத்துக் கொள்கிறார்,

இதற்கிடையில் அலகாபாத் நகரில் எதிர்பாராமல்  குண்டுவெடிப்பு நடைபெறுகிறது, இதில் தொடர்புடையவர்கள் என்று இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீஸ் விசாரணைக்கு அழைத்துப் போகிறது, அவர்கள் அப்பாவிகள் என இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுதிரண்டு  காவல்துறையினரிடம் முறையிடுகிறார்கள்,

ஆனால் காவல்துறை கைது செய்த இளைஞர்களை தீவிரவாதி என்று அடையாளப்படுத்தி, விடுதலை செய்ய மறுக்கிறது, அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் நாளில் இஸ்லாமிய அமைப்புகள் நியாயம் கேட்டுப் போராட்டம் செய்கிறார்கள்,

இந்தப் போராட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தப்படுகிறது, அதன்முடிவில் துப்பாக்கி சூடு நடந்து அப்பாவிகள் பலர் கொல்லப்படுகிறார்கள், இதில் ஒருவர் இஸ்லாமியத் தலைவரின் மகன், இதனால் ஊரே பதற்றமாகிறது

இந்தச் செயலை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் யாவும் ஒன்று சேர்ந்து கடை அடைப்பு நடத்துவது என முடிவு செய்கிறார்கள், அதன்படி கடை அடைப்பு துவங்குகிறது, இதனால் நகரமே காலியானது போலாகிறது

இன்னொரு பக்கம் மகாத்மா காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி கரைக்கப்படாமலே ஒரிசாவில் ஒரு கலயத்தில் பாதுகாத்து வைக்கபட்டிருப்பதாக அறிந்து அதை நீதிமன்றம் வழியாக மீட்டு, அலகாபாத்தின்  திரிவேணி சங்கமத்தில் கரைப்பதற்காக காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார்காந்தி ஒரு ஊர்வலம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன

காந்தியின் அஸ்திக் கலசத்தைத் தாங்கிச் செல்வதற்காகவே மீண்டும் அந்த வேன் தேவைப்படுகிறது என  காந்தி ஆசிர நிர்வாகிகள் அவசரப்படுகிறார்கள், சூழ்நிலையின் தீவிரம்  ஹஸ்மத்திற்குப் புரிகிறது,

ஆனால் தொடர்ந்த கடையடைப்பு காரணமாக அவரால் மெக்கானிக் ஷாப்பைத் திறந்து வேலை செய்யமுடியவில்லை, ஆகவே தன்னால் என்ஜினைச் சரி செய்யமுடியாது என்பதைச் சொல்லிவிடுவதற்காக காந்தி கமிட்டி தலைவரைப் பார்க்க  போகிறார் ஹஸ்மத்

தலைவர் வெளியே போயிருப்பதால் அவர் வரும்வரை அங்கிருந்த காந்தி ம்யூசியத்தைப் பார்வையிடுகிறார், ஆசிரமத்திலிருந்த காந்தியின் புகைப்படங்களையும் கடிதங்களையும் வாசிக்க வாசிக்க காந்தியின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், அவரது உயிர்தியாகம் யாவும் அவருக்குள் ஆழமான பாதிப்பை உருவாக்கிவிடுகிறது,

காந்தி போன்ற மகத்தான ஆளுமைக்குத் தன்னால் முடிந்த சிறிய உதவி என்று அந்தப் பணியை முடித்துத் தருவதாக உறுதி தருகிறார், ஆனால் கடையடைப்பை மீறி எப்படி வேலை செய்வது எனத்தெரியவில்லை, இதனால் இஸ்லாமிய அமைப்பின் தலைவரைச் சந்தித்து நடந்த விஷயங்களைச் சொல்லி தனக்குக் கடை திறக்க அனுமதி கேட்கிறார்,

மதத்தலைவரான ஒம்பூரி, காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர், அவருக்காக நீங்கள் கடைதிறக்ககூடாது என்று கோபப்படுகிறார். இல்லை அவர் இந்துகளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்று தான் கோட்ஸே காந்தியைச் சுட்டிருக்கிறான், நாம் அவரது உயிர்தியாகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஹஸ்மத்,

தங்களது கட்டுபாட்டினை மீறி ஹஸ்மத் கடையைத் திறந்தால் மதவிலக்கம் செய்யப்படுவார் என்று ஒம்பூரி அவரைக் கண்டிக்கிறார்.

ஹஸ்ரத் அமைதியான குரலில், தான் கடையைத் திறக்கப்போவதாகச் சொல்லி கிளம்புகிறார், ஹஸ்மத்தின் குடும்பம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது, அவர் உறுதியான நம்பிக்கையுடன் கடைச்சாவியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார், நகரவணிகர்கள் யாவரும் ஒன்று திரண்டுவந்து அவரை வழிமறித்து கடையைத் திறக்க கூடாது எனத்தடுக்கிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள், மத்துரோகி என திட்டுகிறார்கள், ஹஸ்மத் பாய் அமைதியாக தனது தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்கிறார், இதில் ஆத்திரமாகி ஒருவன் அவரிடமிருந்த கடைச்சாவியைப் பறித்துக் கொள்கிறான்

தனது கடைச்சாவியைப் பறித்தவன் தானே முன்வந்து கடையைத் திறக்க வேண்டும் என்று அந்த இடத்திலே உண்ணாவிரதம் இருக்கத் துவங்குகிறார், அப்படியே கிடந்து சாகட்டும் என்று அவரை கைவிட்டு ஊரார் போய்விடுகிறார்கள்,

ஆனால் விடாப்பிடியான உறுதியோடு அவர் பட்டறையின் முன்பாக இரவில் தனியே உட்கார்ந்திருக்கிறார், அவரிடமிருந்து சாவியைப் பறித்து சென்றவன் தனது தவறை உணர்கிறான், தானே சாவியைத் திரும்ப கொண்டுவந்து பட்டறையைத் திறந்துவிடுகிறான்

துருப்பிடித்துப் போன பழைய என்ஜினை சரிசெய்ய ஹஸ்மத் தனது நண்பர்களுடன் போராடுகிறார், முடிவில் வண்டி தயார் ஆகிறது, காந்தியின் அஸ்தி ஊர்வலம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன,

ஹஸ்மத், தனது பணிக்குக் கைமாறாக, காந்தியின் அஸ்தி தங்களது வீதியின் வழியாக கடந்து போக வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் வைக்கிறார், ஏற்கனவே மதக்கலவரமாக உள்ளது, இந்தச் சூழலில் அது தேவையற்ற பிரச்சனையை உண்டாக்கிவிடும் என கமிட்டியினர் பயப்படுகிறார்கள், அப்படி எதுவும் நடக்காது என்று ஹஸ்மத் பாய் உறுதி தருகிறார்

காந்தியின் அஸ்தி ஊர்வலமாக இஸ்லாமியக்குடியிருப்பு பகுதிக்குள் வரும்போது அதை வரவேற்க கூடாது என எதிர்ப்புக்குரல் வலுக்கிறது, ஆனால் காந்தியை நாம் முறையாக வரவேற்க வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிற்கும்  கடிதம் எழுதுகிறார் ஹஸ்மத்

முடிவில் காந்தி ஊர்வலம் வருகிறது, எங்கே கலவரம் மூண்டுவிடுமோ என்ற சூழலில் இஸ்லாமியக் குடியிருப்பு பகுதியில் ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு காந்தியின் அஸ்தியை வரவேற்று மரியாதை செய்து அதை உற்சாகமாகக் கொண்டு செல்கிறார்கள்,

காந்தியின் அஸ்தி அந்த நகரில் அதுவரையிருந்த கசப்புணர்வை அழித்துவிடுகிறது, யாவரும் ஒன்று திரண்டு திரிவேணி சங்கமத்தில் காந்தியின் அஸ்தியை கரைக்கப்போகிறார்கள்

காந்தியின் கொள்ளுப்பேரன் அஸ்திக்கலசத்தை கையில் ஏந்தி ஒரு படகில் சென்று சாம்பலை ஆற்றில் கரைக்கிறான், முடிவில்லாமல் ஒடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரில் காந்தியின் சாம்பல் கரைகிறது, கலயத்திலிருந்த மலர்கள் ஆற்றில் மிதந்து போகின்றன, துஷார் காந்தி கைகூப்பி வணங்குகிறார்

காந்தியின் புன்னகையைப் போல ஒளிர்கிறது ஆற்றின் தண்ணீர், இந்தியர்களின் மனதில் காந்தி என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார் என்ற நம்பிக்கையுடன் நிறைவுறுகிறது படம்

ஹஸ்மத் பாய் எப்படி காந்திய அறங்களை கைக்கொள்கிறார், அது எவ்வாறு அவர் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர், அது படம் பார்க்கின்றவர்களின் மனசாட்சியைத் தொடுகிறது

மிகவும் இயல்பான, சீரான திரைக்கதை, அழுத்தமான கதாபாத்திரங்கள், குறுங்கவிதைகள் போல ஒளிரும் காட்சிகள் இவையே படத்தின் பலம், பரேஷ் ரவால், ஒம்பூரி முக்கியக் கதாபத்திரங்களில் நடித்திருக்கிறார்கள், பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்,

புதிய இசையமைப்பில் வைஷ்ணவ ஜனதோ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது, படம் முடிந்தபிறகும் அப்பாடல் நம் மனதில் ஒலித்துக் கொண்டேயிருப்பது அதன் சிறப்பு.

காந்திய அறத்தின் முக்கியத்துவம் இன்றுள்ள சூழலில் எவ்வளவு அவசியம் என்பதை அழுத்தமாக படம் வலியுறுத்துகிறது, இதற்காக அவசியம் அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பேன்

•••



2012/11/14 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

நம்மு​டைய தி​ரை விமர்சனங்க​ளையும் தாண்டி
இ​ணையத்தில் படிக்க கி​டைக்கும் பிறரு​டை நல்ல விமர்சனங்க​ளை இந்த இ​ழையில் பகிரலா​மே. எ​​வைக​ளை இங்​கே பகிரலாமுன்னு நான் நி​னைக்கி​றேன்னா...

V Ramesh

unread,
Nov 14, 2012, 3:44:22 AM11/14/12
to பண்புடன்
விமர்சனமே படம் பார்க்க தூண்டுகிறது.. தேடி பிடிச்சு பார்க்கணும்.. பகிர்ந்தமைக்கு நன்றிங்க‌

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/11/14 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களு​டைய கட்டு​ரை மீள்பதிவு.



ஹாஜா மொஹைதீன்

unread,
Nov 14, 2012, 11:51:54 AM11/14/12
to panb...@googlegroups.com, நட்புடன், tamil...@googlegroups.com

துப்பாக்கி - சினிமா விமர்சனம்

from உண்மைத்தமிழன் by உண்மைத்தமிழன்
14-11-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ஆண்டின் இறுதியில் வந்திருக்கும் இன்னுமொரு வெற்றிப் படம். ஏழாம் அறிவில் விட்ட பெயரை இதில் மீண்டும் பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு மூட்டை லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதனை யோசிக்க வைக்காமல் கொண்டு சென்ற திரைக்கதையினால் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டர்களில் உச்சத்திற்குச் சென்றுள்ளது..! வெல்டன் துப்பாக்கி டீம்..!

முதல் பாராட்டு விஜய்க்குத்தான்.. எத்தனையோ நல்ல கேரக்டர்களை தனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொல்லி நிராகரித்தவர். 'தூள்' படத்தில் இவரே நடித்திருக்கலாம். 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'முகமூடி'யிலும் நடித்திருக்கலாம்.. தனக்கான வேடமில்லை என்று தவிர்த்திருக்கிறார். ஆனால் நடித்திருந்தால் விஜய்யின் கேரியருக்கு மிக முக்கியமான படங்களாக இவைகள் இருந்திருக்கலாம். இந்தப் படத்திலும் நடிக்காமல் போயிருந்தால் விஜய்க்குத்தான் நஷ்டமாகியிருக்கும்.. நல்லவேளை.. ஒத்துக் கொண்டு நடித்தமைக்கு முதல் வாழ்த்துகள் அவருக்கே..!


 

ராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக மும்பை வரும் ஜெகதீஷ் என்னும் கேப்டனான விஜய், பேருந்தில் குண்டு வைத்த தீவிரவாதியை தப்ப விட்டு அவனது அப்போதைய திட்டத்தை மொத்தமாக அழிக்கிறார். இதனால் வெகுண்டெழும் ஒரிஜினல் சூத்ரதாரி மும்பைக்கே பறந்து வந்து விஜய்யை தீர்த்துக் கட்டப் பார்க்க.. சூப்பர் ஹீரோ விஜய் எப்படி அவரை முறியடித்தார் என்பதுதான் இந்த 2.55 நிமிட படத்தின் கதைச் சுருக்கம்..!

முதல் அரை மணி நேரம் காஜல் அகர்வாலே நம்மைக் கட்டிப் போடுகிறார். அடுத்து விஜய் துப்பாக்கியை கையில் தூக்கிய நொடியில் இருந்து இறுதிவரையிலும் நம்மை அசையாமல் பார்த்துக் கொண்டவர் திரைக்கதை ஆசிரியரான ஏ.ஆர்.முருகதாஸ்தான்..! பாராட்டுக்கள்..!

விஜய்யின் பெர்பார்மென்ஸ் பல இடங்களில் இயக்குநரால் பளீச்சென்று இருக்கிறது..! என்னதான் நடிப்பு இருந்தாலும் வெளிக் கொணருவது இயக்குநர்கள்தானே..!? காஜல் அகர்வாலுடனான காதல் காட்சிகளில் விஜய் பழைய கில்லி காலத்துக்கே போனதுபோல் தோன்றுகிறது..! போட்டு வாங்குவதுபோல் சிகரெட் பழக்கம், குடிப் பழக்கத்தை காஜலிடம் கேட்டு அவர் மூலமாகவே தெரிந்து கொள்வதும்.. காதலை சி்ன்னப்புள்ளத்தனமாக வெளிப்படுத்துவதும் பார்க்கவே க்யூட்டாக இருந்தது..!

கேப்டன் விஜய்யாகவும் பரபரப்பாக பம்பரம் ஆடியிருக்கிறார்.. தீவிரவாதி மருத்துவமனையில் இருந்து  தப்பித்து ஓடும்போது கூடவே இவரும் ஓடியபடியே போடும் சண்டைக் காட்சியில் விஜய்யின் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது..! தங்கைகளை கடத்தியிருக்கும் தளபதி வில்லனிடம் கையை கன்னத்தில் வைத்து சொடக்குப் போட்டுவிட்டு சண்டைக்கு வரும் காட்சியில் பிரிவியூ தியேட்டரே அதிர்ந்தது..! ஐ ஆம் வெயிட்டிங் என்ற காட்சியில் இத்தனை அழுத்தம்  இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. இறுதியில் வில்லனிடம் தப்பித்து ஓடும் திட்டத்தோடு அவனை ஏத்திவிடும் விதமாக பேசும் பேச்சில் மாடுலேஷன் விஜய் ரசிகர்களுக்கு செமத்தியான தீனி..! அதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்தாலும், அதையும் ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

காஜல் வரும் காட்சிகளிலெல்லாம் ஸ்கிரீனே அழகாய் இருக்கிறது.. அண்டார்டிகா, கூகிள் பாடல் காட்சிகளில் அவருடைய நடனம் இளசுகளை ஆட்டம் போடத்தான வைக்கிறது.. அம்மணியின் இந்த தாளம் தப்பாத ஸ்டெப்புகள் தமிழ்ச் சினிமாவி்ல இன்னும் கொஞ்சம் கூடினால் அனுஷ்காவையும் ஓரம்கட்டலாம்..! கோபத்தில் சிந்திச் சிதறும் அந்த திண்டுக்கல் மலைக்கோட்டை போன்ற மூக்கின் மீதான குளோஸப் காட்சிகளெல்லாம் காஜலின் ஸ்பெஷலாட்டி.. “அந்த மேட்டர் பொண்ணே உன்னை வேணாம்னு சொல்லிருச்சே..” என்று சொல்லிக் காட்டி சிரிக்கும்போது காஜலின் சிரிப்பே ஆயிரம் முத்துக்களை சிந்துகிறது..! இறுதியில் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திக் கொள்ளும்படி விஜய் சொல்லும் காட்சியில் இந்த ஐஸ்கிரீம் பெண்ணை கண்ணீர் விட வைத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நமது வன்மையான கண்டனங்கள்..! காஜலைத் தவிர்த்து விஜய்யின் தங்கையாக வருபவரும், ஜெயராம் அழைத்து வரும் மேட்டர் பொண்ணுமே, கேமிராவுக்கு அழகாக இருக்கிறார்கள்..!  

ஜெயராம் சம்பந்தப்பட்ட காட்சியின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்க முடியாமல் கொண்டு போயிருப்பது குட்..! ஆனாலும் இவ்வளவு நீளம் தேவையில்லாதது.. இதனை சற்றுக் குறைத்திருக்கலாம்..! அல்லது முற்றிலுமாகவே நீக்கியிருக்கலாம்..! சத்யன் பரவாயில்லை.. “ஏண்டா உங்க வீட்ல கப்போர்ட்ல வேற எதையும் வைக்க மாட்டீங்களா..?” என்ற அவரது இடித்தலும் நன்று..! ஆனால் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில்தான் ஆயிரமாயிரம் லாஜிக் ஓட்டைகள்.. அதனாலென்ன பரவாயில்லை.. வடிவேலுவையோ, விவேக்கையோ வைத்திருந்தால் கூடுதலாக காட்சிகள் வைக்க வேண்டியிருந்திருக்கும். அவர்களுக்கும் போலீஸ் டிரெஸ் சூட்டாகியிருக்காது.. வேறு வழியில்லை..!

எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பின்பு அடுத்து பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.. பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார்.. காஜலை பெண் பார்க்க வரும் காட்சியில் அவரது இசையே தனி கேரக்டராகவே இசைக்கிறது.. கேட்கவே ரம்மியமாக இருந்தது.. மருத்துவமனை சண்டை காட்சி.. நாயுடன் ஓடும்போது திடுக்கென்று காட்சி  மாற்றத்தில் வரும் இசை.. காஜலுடனான லவ் பிரேக்கிங் காட்சிகள்.. மெயின் வில்லனின் வீட்டில் டிவி பார்க்கும்போது வரும் பின்னணி... குண்டு வெடிப்பின் கோரங்களைக் காட்டும் இசை.. இது போன்ற படங்களில் பின்னணி இசையும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் இயக்குநர்.. காட்சிகளோடு ஒன்ற வைப்பதில் இந்த இசையும் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது..! வாழ்த்துகள் ஹாரிஸ் ஸார்..!

ராணுவம், கேப்டன், ராணுவ நுண்ணறிவுப் பிரிவில் ஒரு ஆபீஸர் என்று விஜய்க்கு மகுடங்கள் சூட்டி களத்தில் இறக்கிவிட்டிருந்தாலும், இத்தனை கொலைகள் நடந்தும் மும்பை போலீஸ் அடக்கமாக இருந்திருக்கும் என்று சொல்லியிருப்பது மகா அபத்தம்..! அதிலும் சத்யன் தீவிரவாதிகளை பற்றி விஜய்யிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது பத்து முழம் பூவை காதில் சுற்றுவதற்குச் சமம்..! இப்படி ஒரு சப் இன்ஸ்பெக்டர் இருந்தால் பதவியிறக்கம்தான் கிடைக்குமே ஒழிய, பதவி உயர்வு கிடைக்காது..!

12 தீவிரவாதிகள் கொலை.. ஒரு கூடுதல் கண்காணிப்பாளர் கொலை.. அடுத்தடுத்து ராணுவ வீரர்கள் கொலை.. என்ன செய்யும் மும்பை..? போலீஸோடு இணைந்தே இதனைச் செய்வது போல காட்டியிருந்தாலும் கொஞ்சம் ஒத்துக் கொள்ளலாம்..! விஜய் ரசிகர்கள் தரும் காசு அளவுக்கு மும்பை போலீஸின் வருகை திரைக்கதையில் அழுத்தம் தராது என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்..! இது ச்சும்மா.. முழுக்க முழுக்க எண்ட்டர்டெயின்மெண்ட் என்று சொல்லியிருந்தால் இதையெல்லாம் கேட்காமலேயே இருந்திருக்கலாம்..!

படத்தின் முடிவில் “அனைத்து ராணுவத்தினருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்” என்று டைட்டில் கார்டு போட்டு படத்தை ரொம்பவே சீரியஸாக்கிவிட்டார்கள்..! இதைப் பார்த்து யாராவது ஒரு முன்னாள் ராணுவத்தினர் கேஸ் போடாமல் இருந்தாலே பெரிய விஷயம். நேற்றைக்கு படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே ஒரு இஸ்லாமிய அமைப்பு படத்தில் இஸ்லாமியர்களையே தீவிரவாதிகளாக உருவகம் செய்திருப்பதாகச் சொல்லி விஜய் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துவிட்டது.. என்ன செய்வது..? 

இந்து தீவிரவாதிகளைவிடவும், இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றி படமெடுப்பது இந்தியாவில் சுலபம் என்பது சினிமா இயக்குநர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் தைரியமாக எடுக்கிறார்கள்..! இதற்கு இயக்குநரின் பதில், “தொடர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம்தானே முன்னிலை வகிக்கிறது..” என்பதாகவே இருக்கும் என்பது உறுதி..!

ஆனால், இந்து தீவிரவாதம் பற்றி படமெடுத்து தான் கஷ்டப்பட விரும்பவில்லை என்பதை மறைமுகமாக இயக்குநர் இப்படி ஒத்துக் கொண்டு போவதை நாமும் கனத்த மனதோடு பார்த்துக் கொண்டிருப்போம்..! வேறு வழியில்லை..! 

என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422



2012/11/14 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
1. தமிழ் தி​ரைப் படங்களாக இருக்கலாம்.

ஸ் பெ

unread,
Nov 14, 2012, 1:25:16 PM11/14/12
to panb...@googlegroups.com

ஹாஜா மொஹைதீன்

unread,
Nov 14, 2012, 2:25:13 PM11/14/12
to panb...@googlegroups.com, நட்புடன்
from உண்மைத்தமிழன் by உண்மைத்தமிழன்
15-11-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 

சிம்பு என்றாலே விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகத்தைச் சுழிப்பது பொதுவான ரசிகர்களின் வழக்கம். சிம்புவுக்கு மட்டும்தான் அவரது ரசிகர்களைத் தவிர மற்ற நடிகர்களின் ரசிகர்களின் பேராதரவு கிடைப்பதில்லை.. இதனால்தான் அவரும் தனக்குப் பிடித்த நடிகர் ‘தல’தான் என்று பல முறை சொல்லிச் சொல்லி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்..!

ஆனால் படங்கள்தான் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன.. கடைசியாக வந்த ‘ஒஸ்தி’ படத்தினால் அதன் தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்களுக்கு இன்னமும் கிஸ்தி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘போடா போடி’ திரைக்கு வருமா வராதா என்ற சந்தேகம் நமக்கு மட்டுமல்ல.. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே இருந்து வந்திருக்கிறது..! கடைசியில் வழக்கம்போல எல்லா தரப்பு பஞ்சாயத்துக்களையும் சந்தித்துவிட்டே சந்திக்கு வந்திருக்கிறது இந்தப் படம்.

என்ன சொல்ல..? ராமராஜன் படங்களில்தான் கடைசியாக பார்த்தது... இது போன்ற ஆணாதிக்க வெறியை..! தமிழ், தமிழ்க் கலாச்சாரம், பெண், தாலி, புருஷன் என்று அக்மார்க் பி கிரேடு கதையை அப்படியே லண்டனுக்குக் கொண்டு சென்று அதனுடன் லவ்வையும் திணித்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக ஒரு படத்தைத் தயாரித்துத் தந்திருக்கும் இந்த்த் தைரியம் தமிழ்ச் சினிமாவில் சிம்புவைத் தவிர வேறு யாருக்கும் வராதுதான்..!


 
வரலட்சுமி ஒரு டான்ஸர். டான்ஸ் என்றால் உயிராக இருப்பவர். இவருடைய வாழ்க்கையில் திடீரென்று குறுக்கிடுகிறார் சிம்பு.. சிம்புவின் பொய்யான அலட்டல்களை உண்மை என்று நம்பி ஐ லவ் யூ சொல்லிவிடுகிறார் வரலட்சுமி. உடனேயே ஏத்துக்குறது ஆம்பளைத்தனம் இல்லியேன்னு கொஞ்சம் சுத்த விட்டுட்டு அப்புறமா இவரும் ஏத்துக்குறாரு.. கல்யாணமும் செஞ்சுக்குறாங்க.. இப்பவும் வரு, டான்ஸை விடலை.. இது சிம்புவுக்கு பிடிக்கலை. புள்ளை பொறந்துட்டா டான்ஸ் ஆட முடியாதுன்னு  வீணாப் போன சித்தப்பன் கணேஷ் பத்த வைக்க.. அந்த வேலையையும் செஞ்சு முடிக்கிறார் சிம்பு.. குழந்தையும் பிறக்கிறது. இப்போது சிம்புவின் இந்த தில்லாலங்கடி வேலை வருவுக்கு தெரிய வர.. அவர் கோபிக்கிறார். அந்த நேரத்தில் நடந்த ஒரு விபத்தில் குழந்தை உயிரிழக்க.. இருவரும் தற்காலிகமாக பிரிகிறார்கள்.

வரு டான்ஸில் மூழ்கிப் போய் வாழ்க்கையை மறந்து போய் இருக்க.. சிம்புவால் முடியவில்லை. மீண்டும் வருவை தேடிச் சென்று அழைக்கிறார். வருவும் வருகிறார். சில கண்டிஷன்களோடு.. தன்னுடைய நீண்ட நாள் கனவான டான்ஸ் போட்டியில் ஜெயிக்கணும்ன்னு நினைச்சு பல முயற்சிகள் செஞ்சுக்கிட்டிருக்காரு வரு.. அதுலேயும் அவ்வப்போது மண்ணையள்ளிப் போட்டு கெடுக்குறாரு சிம்பு.. கடைசியா அந்தப் போட்டில வரு கலந்துக்கிட்டா மட்டுமே தன்னோட இருப்பாங்கன்றதால சிம்புவும் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுறாரு.. ஜெயிக்கிறாங்க..! கடைசி சீன்ல இன்னமும் 14 ஆட்டம் இருக்குன்னு வரு சொல்ல.. இனிமே எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்ன்னுட்டு பெட்ரூம் கதவைச் சாத்தி நம்மளை வீட்டுக்கு அனுப்பிர்றாரு சிம்பு.. இம்புட்டுத்தான் கதை..!

சிம்பு தோன்றும் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் காட்சிக்கு காட்சி, ஷாட்டுக்கு ஷாட் அவர்தான் தோன்றுகிறார்.. அவரேதான் அதிகம் பேசுகிறார். சில இடங்களில் மாடுலேஷனிலேயே சிரிப்பை வரவழைத்திருக்கிறார். உடன் இருக்கும் சித்தப்பா கணேஷை பல இடங்களில் வாரி விடுவது குபீர் சிரிப்பு ரகம்..! நன்றாகவே டான்ஸ் ஆடுகிறார்.. அவ்வப்போது பன்ச் டயலாக்கும் அடிக்கிறார். தமிழ் கலாச்சாரம் பத்தி கிளாஸ் எடுக்கிறார். “பொண்ணை கட்டிப் பிடிக்கிறவன்.. முத்தம் கொடுக்கிறவனையெல்லாம் செருப்பாலேயே அடிக்கணும்”னு சிம்புவே சொல்றதுதான் ரொம்ப ரொம்பக் கொடுமை.. இதைக் கேட்பாரே இல்லையா..? 

நாமெல்லாம் தமிழர்கள்.. தமிழ்க் கலாச்சாரப்படி வாழணும்ன்னு நமக்கே அட்வைஸ் பண்றாரு.. பொண்டாட்டி காலைல எந்திரிச்சவுடனேயே புருஷன் காலை தொட்டுக் கும்பிடணும்ன்னு மணாளனே மங்கையின் பாக்கியம் காலத்துக்கே கூட்டிட்டுப் போயிட்டாரு..! என்னாச்சுன்னு தெரியலை.. ஒருவேளை தமிழகத்து பெண்கள் மத்தில தனக்கு நல்ல பேரு கிடைக்கணும்ன்னு சொல்லி முயற்சி பண்றாரோ..? என்ன செஞ்சாலும் சரி.. இந்தப் படம் கடைசிவரையிலும் ஆணாதிக்கத்தனத்தை போதிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை..!

வரலட்சுமி பாலே நடனத்தை முறைப்படி பயின்றவர்.. அனைத்து வகை நடனங்களும் அத்துப்படியாம். அதனாலேயே நடனக் காட்சிகளில் பிசகில்லாமல் ஆடியிருக்கிறார்.. இறுதியில் குத்துப் பாட்டிலும் அவரைக் களத்தில் இறக்கி ஆட விட்டிருக்கிறார்கள். சிம்பு படத்துல இது கூட இல்லைன்னாத்தான் பிரச்சினை..! வரலட்சுமியின் குரல் வித்தியாசமாக இருந்தாலும் ஆம்பளை குரல் போல இருப்பது கேட்க முடியவில்லை.. கொஞ்சம்ன்னாலும் பரவாயில்லை. படம் முழுக்கன்னா எப்படிங்க..? நடிப்பு..! ம்.. பரவாயில்லை ரகம்தான்.. காதலைத் தவிர மற்றதெல்லாம் வந்திருக்கிறது.. இயக்கம் செய்தவரிடம் திறமை இல்லாததால், இவரிடமிருந்து சரியான முறையில் நடிப்பை வெளிவர வைக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்..!

42 வயசானதால் ஷோபனா அம்மா கேரக்டருக்கு பிரமோஷன் வாங்கியிருக்கிறார். இவரும் நடனம் தெரிந்தவர் என்பதால்தான் கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களாம்.. ஆனால் நடனம்தான் இல்லை..! இவருடைய பேவரிட்டான கண்களைக்கூட சரியாகப் பயன்படுத்தத் தெரியாத இந்த இயக்குநரை என்னவென்று சொல்ல.. வேஸ்ட்டாகிவிட்டது..!

இசையமைத்திருப்பவர் தரண்.. என்னால் நம்பவே முடியவில்லை. பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் இரண்டாம் கட்டமாக மீண்டும் ஆர்டர் கொடுத்திருக்கிறதாம்..! அவ்வளவு டிமாண்டா..? அல்லது விளம்பரமா..? பல்லே சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு லவ் பண்ணலாமா? வேண்டாமா? என்ற வார்த்தையை மாத்தி மாத்திப் போட்டு பாடிக் கொல்லும் சிம்புவை நான் மன்னிக்கவே மாட்டேன்.. முடியலை.. ஆனா இந்தப் பாட்டு யூ டியூப்ல ரொம்பவே சக்ஸஸ்..!

விக்னேஷ் சிவன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். கல்யாணத்திற்காக தனது லட்சியத்தை இழக்க வேண்டுமா என்கிற ஒரு பெண்ணின் கதையாக சொல்ல வந்தவர், இடையில் கதாநாயகன் சிம்பு நுழைந்ததால், கதையைக் கோட்டைவிட்டுவிட்டு, திரைக்கதையையும் அநியாயத்திற்கு போண்டியாக்கிவிட்டார்..!

மீண்டும் மீண்டும் சிம்புவே வந்து வந்து பேசிக் கொண்டிருப்பதால் ஒரு அளவுக்கு மேல் ரசிக்க முடியவில்லை.. போதும்டா.. ஆளை விடுங்கடா என்று சொல்லும் அளவுக்கு சிம்பு மேல் வெறுப்பை கொண்டு வந்திருக்கிறார்கள்..! இது சிம்புவே வரவழைத்ததா என்றும் தெரியவில்லை..! சிம்புவின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் இது போன்ற ஒருவனின் கதை இது என்று சொல்லாமல், அவரே அப்படித்தான் என்பதாகவே கதை கொண்டு செல்லப்பட்டிருப்பதால் இடைவேளைக்கு பின்பு கதை எங்கே போகிறது என்றே தெரியவில்லை..!? கிளைமாக்ஸும் இன்னமும் கதை இருக்கிறது என்பது போல் முடித்திருக்க.. ஆளை விட்டால் போதும் என்ற மனப்பிராந்தியம்தான் ஏற்பட்டது..!

இப்படியெல்லாம் நாட்டின் சிச்சுவேஷன் தெரியாமல், ஹீரோத்தனத்தை உயர்த்துவதற்காகவே படமெடுப்பது தயாரிப்பாளரை பாழும் கிணற்றில் தள்ளுவதற்குச் சமம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், வாரி, வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதை படத்தின் ரிச்னெஸே சொல்கிறது..! பாடல் காட்சிகளுக்கு செட்டிங்க்ஸையே  டி.ஆர். படம் போல செய்திருக்கிறார்கள்..! ஏதோ போட்ட முதலீடாச்சும் இந்தத் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

காமேஷ்

unread,
Nov 14, 2012, 7:52:03 PM11/14/12
to nadp...@googlegroups.com, panb...@googlegroups.com
//படத்தின் முடிவில் “அனைத்து ராணுவத்தினருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்” என்று டைட்டில் கார்டு போட்டு படத்தை ரொம்பவே சீரியஸாக்கிவிட்டார்கள்.//

கொடுமை.


விமர்சனம் பார்க்க தூண்டுகிறது..

எங்க ஏரியாவில் எப்ப ரிலீஸ் ?

.........................




2012/11/15 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Nov 14, 2012, 9:21:09 PM11/14/12
to பண்புடன், tamil...@googlegroups.com
Ordinary – Malayalam Movie -
Priya Thambi
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இருந்து கவி (Gavi) என்கிற மலைக்கிராமத்திற்கு தினமும் ஒரு ’ஆர்டினரி’ அரசுப் பேருந்து பயணிக்கிறது… மாலையில் பத்தனம்திட்டா டெப்போவில் இருந்து கிளம்பும் பேருந்து இரவில் கவியில் தங்கி விட்டு, காலையில் மீண்டும் பத்தனம்திட்டா கிளம்பும்…. பேருந்தின் ஓட்டுநர் சுகு (பிஜு மேனன்), நடத்துனர் இரவி குட்டன் (குஞ்சாக்கோ போபன்) இருவரும் கவி கிராமத்திலேயே இரவில் தங்குகிறார்கள்.. அந்தப் பேருந்தில் தினமும் பயணிக்கும் பயணிகள், வழியில் அடிக்கடி நிற்கும் பேருந்து, கவி கிராம மக்கள் என அவர்களை சுற்றியே பயணிக்கிறது படம்….

கவி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார் ஆசிரியராக இருந்த வேணு (Lalu Alex)… வீட்டில் தங்கியிருக்கும் தன் நண்பரின் மகளுக்கும், சூரத்தில் வேலை செய்யும் தன் மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்..

நடத்துனர் சுகுவுக்கு அந்த கிராமத்தின் சூழ்நிலையோடு பொருந்த முடிகிறது… அதிக குளிர், பழக்கமில்லாத சூழ்நிலை என ஆரம்பத்தில் தடுமாறும் இரவிக்கும் அந்த சூழல் சீக்கிரமே பிடித்துப் போகிறது… மாலையில் கள்ளு குடித்து, நாடன் பாடல்கள் பாடி என உற்சாகமாக முடிகிறது அந்த கிராமத்தின் ஒவ்வொரு இரவும்…..

அந்த பேருந்தில் தினமும் பத்தனம்திட்டாவிற்கு வேலைக்கு செல்லும் கல்யாணி என்கிற பெண்ணோடு இரவிக்கு சின்ன ப்ரியம் வருகிறது… சின்ன, சின்ன சுவாரஸ்யங்களும், அதிகக் குளிருமாக நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் காலை கவியில் இருந்து கிளம்பும் பேருந்து, இன்ஜின் கோளாறு காரணமாக வழியில் நிற்கிறது… பயணிகள் வரும் ஜீப்புகளில் ஏறி செல்கிறார்கள்… மெக்கானிக் வந்து பேருந்தை தயார்படுத்த இரவாகி விடுகிறது. டிரைவர் சுகு அதிகம் குடித்திருப்பதால், இரவி பேருந்தை ஓட்டுகிறார்… பாட்டும், சிரிப்புமாக வந்து கொண்டிருக்கும் பேருந்தின் முன்பு ஒரு இளைஞன் வேகமாக வந்து விழ, அதிர்ச்சியில் வண்டியை நிறுத்துகிறார் இரவி.. தான் தான் அவனை இடித்து விட்டதாக, இரவி புலம்ப…. அவனை சமாதானப்படுத்தி அடிபட்டு கிடக்கும் அந்த இளைஞனை வேறு ஒரு ஜீப்பில் ஏற்றி அனுப்பி வைக்கிறார் சுகு….

அந்த இளைஞனின் பை ஒன்று சாலையில் கிடக்க, அதை தங்கள் அறைக்கு இருவரும் எடுத்து வருகிறார்கள். பட்டுப்புடவை, நகை கூடவே ஒரு புகைப்படமும் இருக்கிறது.. அப்போது தான் அடிபட்ட இளைஞன் பஞ்சாயத்து தலைவர் வேணுவின் மகன் தேவன் என்பது தெரிய வருகிறது… அடுத்த வாரம் அவனுக்கு அன்னாவோடு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில்… அவனுக்கு அடிபட்டதை வீட்டில் சொல்ல கிளம்புகிறான் இரவி.. தன் தங்கையின் திருமணம், போலீஸ் கேஸ் எனச் சொல்லி அவனைத் தடுக்கிறார் சுகு… மறுநாள் ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்து விட்டு முடிவெடுக்கலாம் என சுகு சொல்கிறார்…

மறுநாள் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்றும், விபத்தில் அடிபட்டவன் பற்றிய தகவல் இருவருக்கும் கிடைக்கவில்லை.. ஜீப் டிரைவரை தேடித் திரிகிறார்கள் சுகுவும் இரவியும்… பக்கத்தில் வேணுவின் வீடு திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.. மகன் சூரத்தில் இருந்து விரைவில் வரப் போவதாக வேணு சொல்லிக் கொண்டிருக்கிறார்… அப்போது போலீஸார் வந்து வேணுவின் மகன் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூற, மொத்த ஊரும் அதிர்ச்சி அடைகிறது…. அப்போதும் உண்மையை கூறப்போகும் இரவியை, சுகு தடுக்கிறார்…

இரவியும், சுகுவும் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்கள்… ஆனாலும் மருத்துவமனைக்கு ஜீப்பில் அனுப்பி வைத்த வேணுவின் மகன் தேவன்… பள்ளத்தாக்கில் போய் விழுந்தது எப்படி என அவர்களுக்கு புரியவில்லை… இதற்கிடையில் இவர்களது அறையில் இருக்கும் தேவனின் பையை அன்னா பார்த்து விடுகிறாள்… தான் பேருந்து ஓட்டும்போது விழுந்து அடிபட்டு தேவன் இறந்து விட்டதாக ஒத்துக் கொள்கிறான் இரவி… தேவனின் நண்பன் பத்ரன் இரவியை கடுமையாகத் தாக்குகிறான்… போலீஸார் வந்து தேவனையும், இரவியையும் கைது செய்து கொண்டு போகிறார்கள்… சுகுவின் தங்கை திருமணத்திற்காக நடந்த எல்லாத் தவறையும் தானே செய்ததாக ஒத்துக் கொள்கிறான் இரவி…

ஒரே நாளில் இரவி, சுகு, வேணு, அன்னா, கல்யாணி எல்லார் வாழ்வும் மாறிப்போகிறது… படத்தில் கடைசி அரைமணி நேரம் தான் பரபரப்பே… இரவி ஜாமீனில் வெளியே வந்து அந்த ஜீப் டிரைவரை தேடிச் செல்வது, தேவனின் நண்பன் பத்ரன் தான் அன்னா மேல் உள்ள காதலால் அவனைக் கொலை செய்தது தெரிய வருவது என நாம் முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்களுக்குள் படம் பயணித்து முடிகிறது… இதை நான் கதையாக சொல்வதை விட, பார்த்து உணர்வதே நல்ல அனுபவமாக இருக்க முடியும்…

ஒரே ஒரு பஸ்… ஒரு சிறிய கிராமம். பத்தே பத்து கேரக்டர்கள்.. ஒரு விபத்து இவர்களது வாழ்வில் நடத்தும் மாற்றங்கள்.. இதுதான் மொத்த படமும்.. கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாத திரைக்கதை தான் படத்தின் முழு பலமும்…

ஹோட்டலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அரைகுறை ஆங்கிலத்தில் தன் வீட்டிற்கு பேயிங் கெஸ்ட்டாக அழைத்து செல்லும் கல்யாணி, புதிதாக நடத்துனர் வேலைக்கு வரும் இரவி பேருந்திற்குள் நிற்கக் கூட முடியாமல் திணறுவது, மலைகிராம மக்களின் கள்ளும், நாடன் பாட்டுகளும் கலந்த கொண்டாட்டங்கள், எப்போதும் வழியில் நின்று தொல்லை கொடுக்கும் அரசுப் பேருந்து, பாட்டிலும், கையுமாக இருக்கும் மெக்கானிக் சலீம் என சின்னச்சின்ன விஷயங்கள் படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன.. வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துவதும் இதேபோல் சின்னச்சின்ன விஷயங்கள் தான் இல்லையா????

வாய்ப்பிருந்தால் படத்தை அவசியம் பாருங்கள்………….

துரை.ந.உ

unread,
Nov 14, 2012, 9:40:23 PM11/14/12
to panb...@googlegroups.com, tamil...@googlegroups.com
2012/11/14 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களு​டைய கட்டு​ரை மீள்பதிவு.


வாசிப்பனுபவமே எங்கோ கொண்டுசெல்கிறது ... பல இடங்களில் மனம் கலங்கிப்போனது ....
 பகிர்வுக்கு நன்றி 

வாக்கென்றால் சேரும் பழி'

 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Asif Meeran AJ

unread,
Nov 15, 2012, 1:09:24 AM11/15/12
to panb...@googlegroups.com
இந்த 'ஓர்டினரி' படம் ஆஹாஒ ஓஹோ எனப் பலராலும் சொலப்பட்டாலும் என்னைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை
இரண்டாம் பகுதியில் கதையில் ட்விஸ்ட் என்ற வகையில் ஒரே சொதப்பல்
ஒரே நாளில் இரவி, சுகு, வேணு, அன்னா, கல்யாணி எல்லார் வாழ்வும் மாறிப்போகிறது… படத்தில் கடைசி அரைமணி நேரம் தான் பரபரப்பே… இரவி ஜாமீனில் வெளியே வந்து அந்த ஜீப் டிரைவரை தேடிச் செல்வது, தேவனின் நண்பன் பத்ரன் தான் அன்னா மேல் உள்ள காதலால் அவனைக் கொலை செய்தது தெரிய வருவது என நாம் முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்களுக்குள் படம் பயணித்து முடிகிறது… இதை நான் கதையாக சொல்வதை விட, பார்த்து உணர்வதே நல்ல அனுபவமாக இருக்க முடியும்…
மொக்கை ட்விஸ்ட். எரிச்சல்தான் மிஞ்சியது. ஆனாலும் அவரவர்க்கு அதது என்று விட்டு விடலாம் :-)
ஒரே ஒரு பஸ்… ஒரு சிறிய கிராமம். பத்தே பத்து கேரக்டர்கள்.. ஒரு விபத்து இவர்களது வாழ்வில் நடத்தும் மாற்றங்கள்.. இதுதான் மொத்த படமும்..
இதுதான் படத்தின் ஒரே பலம்
பிஜூமேனோன், குஞ்சாக்கோ ஆகியோரின் நடிப்பும். மற்றபடி திரைக்கதை பிரமாதம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை

ஒருமுறை பார்க்கலாம் ..

senshe senshe

unread,
Nov 15, 2012, 1:14:20 AM11/15/12
to panb...@googlegroups.com
டிராஃபிக், சால்ட் என் பெப்பர் படங்களின் மூலம் ஆசிப் அலி நல்ல நடிகராக தெரிந்தார். ஓர்டினரியில் அவரது பாத்திர அறிமுகமும் அவரது நடிப்பும் மிகவும் கொடுமையானதாக இருந்தது.  குஞ்சாக்கோ கோபனை விட பிஜூமேனனின் பாத்திர படைப்பு மிகவும் பிடித்திருந்தது. அருமையான காட்சியமைப்புகள், இயற்கையழகு கொட்டிக்கிடக்கும் கெவி என்கிற மலைப்பிரதேசத்தின் மீதான காதலை அதிகரிக்க வைத்த திரைப்படம்.

2012/11/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே

வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
- senshe

விழியன்

unread,
Nov 15, 2012, 1:15:27 AM11/15/12
to panb...@googlegroups.com
சென்னையில் பிறமொழி திரைப்படங்கள் சீ.டிக்கள் எங்கே கிடைக்கின்றன? ஹாலிவுட் படங்கள் ஒன்றுவிடாமல் இருக்கு. மற்றமொழி படங்கள் பார்ப்பது அரிதாக இருக்கு. 

தமிழ்ப் பயணி

unread,
Nov 18, 2012, 5:43:29 AM11/18/12
to பண்புடன், tamil...@googlegroups.com

22 ஃபிமேல் கோட்டயம்

பெண்ணின் பொறுமையை பலவீனம் என எடைபோடக்கூடாது என்பதே இக்கதையின் மையக்கருத்து.

தனக்கு நடக்கும் அநியாயங்களுக்கு அவள் பொறுமையாய் இருப்பதாய் நினைத்தாலோ அல்லது என்ன செய்துவிடப் போகிறாள் எனநினத்தாலோ என்ன மாதிரி பழிவாங்கப்படலாம் என்பதை அருமையாக சொல்லி இருக்கின்றனர்.

டெஸ்ஸா.கே.ஆப்ரஹாம் போனில் டிகே என்றழைக்கப்படும் தினேஷுக்கு நன்றியும், தனது அன்பையும் சொல்கிறாள், முதல் காட்சியில்.
ஏன் இதெல்லாம், அவள் எங்கு செல்கிறாள், எதற்கு நன்றி என்பதுதான் மொத்தக்கதையும்.

கேரள சினிமாவில் அதிகம் தெரியாத முகங்கள்தான் படம் முழுக்க. எனக்குத் தெரிந்த ஒரே முகம் பிரதாப்போத்தன் மட்டுமே.

பெண்களை காதல் செய்வதுபோல வளைத்து சமூகத்தில் பலத்துடனும், வசதியுடனும் இருப்பவர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் நாகரிக பிம்ப் சிறிலுடன் காதல் வருகிறது டெஸ்ஸாவிற்கு. நர்ஸாக பணிபுரியும் டெஸ்ஸா, கனடா சென்று நர்சாக வேலை செய்ய முயல்கிறாள். அதற்காக ஏஜென்ஸிக்கு வரும்போது சிறிலை சந்திக்கிறாள். பின்னர் அது காதலாகி, அதன் பின்னர் காதலனால் அவள் அனுபவிக்கும் கொடுமைகளும், இவ்வளவு நம்பிய தனது காதலனின் நம்பிக்கைத் துரோகத்திற்கும், தன்னை கொடூரமாய்க் கற்பழித்த பிரதாப் போத்தனையும் பதிலடியாக பொறுமையாக டெஸ்ஸா பழிவாங்குகிறாள்.

பிரதாப் போத்தனுக்கு வித்தியாசமான மரன தண்டனையும் காதலனுக்கு வேறுவிதமான தண்டனையை கொடுக்கிறாள்.

பிரதாப்போத்தன் சமீபகாலமாக நிறைய திரைப்படங்களில் தலைகாட்டுகிறார். இந்தப்படத்தில் வித்தியாசமான வில்லன் வேடம். ஹெக்டேவாக வருகிறார். டெஸ்ஸாவிடம் கேன் ஐ ஹாவ் செக்ஸ் வித் யூ? எனக் கேட்கிறார். பதறும் டெஸ்ஸாவை அதிகபட்ச வன்முறையுடன் கற்பழிக்கிறார். மிக வன்முறையான காட்சி இது. பூந்த்தொட்டியால் டெஸ்ஸாவின் பின்மண்டையில் அடிக்கும்போது நமக்கு மயக்கம் வருகிறது.

உடலெங்கும், கடித்த தடமும், விரல்கள் உடைக்கப்பட்டு, கழுத்தில் காயமும் ஏற்படும் அளவு வன்முறையாக கற்பழிக்கப்படுகிறாள் டெஸ்ஸா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு வருகிறாள். சிறில் அவளை மிக ஆதூரமய்க் கவனித்துக் கொள்கிறான். டெஸ்ஸா எழுந்து நடமாடியதும் சிறில் பிரதாப் போத்தனுக்கு She is Ready என தகவல் அனுப்புகிறான். அப்போதுதான் சிறில்தான் வில்லன் என்பதே நமக்குத் தெரிய வருகிறது. சிறில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மன்னிப்பு கேட்க வரும் ஹெக்டே “Can I have sex with you one more time, please” எனக்கேட்கும்போது பகீரென்றிருக்கிறது. பிரதாப் போத்தன் வில்லனாக அருமையாக செய்திருக்கிறார்.

இரண்டாம் முறை கற்பழிக்கப்பட்டு டெஸ்ஸாவால் பிரச்சினை வரும் என்ற நிலை வரும்போது நம்மூர் ஸ்டைலில் அவளது கைப்பையில் போதைப்பொருளை வைத்து அவளை சிறைக்கு அனுப்புகின்றனர், சிறிலும், ஹெக்டேவும்.

சிறையில் கிடைக்கும் ஒரு தமிழ்ப்பெண் நட்பால் எப்படி காதலனையும், பிரதாப்போத்தனையும் பழிவாங்குகிறாள் என்பதே மீதிக்கதை.

பெங்களூரில் வாழும் கேரள நர்ஸ்களின் வாழ்க்கை கான்பிக்கப்படுகிறது. எப்படி பல பெண்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்கின்றனர் என்பதும், அவர்களுக்குள் நடக்கும் குறும்புகள், எல்லாம் இயல்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களில் சிலர் பனத்துக்காக சோரம்போவதுபோல கான்பித்திருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மலையாளப்படத்தில் அவர்கள் ஊர்ப்பெண்களைத்தான் காட்டியுள்ளனர். இருப்பினும் இப்படி சித்தரித்திருக்க வேண்டாம்.

சிறிலின் பின்புறம் குறித்து டெஸ்ஸாவின் அறைநண்பி அடிக்கும் கமெண்ட் இன்றைய இளவட்டங்களின் ஸ்டைல்போல.

பெண்ணின் ஆயுதமும், பலவீனமும் உடம்புதான் என்கிறார் கொலைக்குற்றத்திற்காக உள்ளே இருக்கும் சுபைதா எனும் தமிழ் பெண். அதை வைத்துதான் வில்லன்களைப் பழிவாங்கவும் செய்கிறார் டெஸ்ஸா.

ரீமா கலிங்கல் என்பர்தான் டெஸ்ஸாவக வருகிறார். டைட்டிலில் அவர்பெயர்தான் முதலில். ஃபாஹத் ஃபாஸில் சிறிலாக வருகிறார். சிறிலாக வரும்பவரின் முகம் அந்த கேரக்டரின் பலம். குழந்தைத்தனமான முகத்துடன் வெகுளித்தனமாக காதலும்,வில்லத்தனமும் செய்கிறார்.

திரைப்படங்களில் வில்லன்களின் இலக்கணம் மாறிக்கொண்டே வருகிறது உண்மையில் இதுதான் நிதர்சனம். வில்லன்கள் எனில் கடா மீசை வைத்துக் கொண்டு ஓட ஓட கற்பழிப்பதெல்லாம் பழைய ஸ்டைல். நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மிகச் சாதாரணமான ஆள் போன்ற தோற்றம் அளிப்பவர்கள்தான் இன்றைய வில்லன்கள்.

மொத்தமே சில கேரக்டர்களை வைத்துக்கொண்டு நல்ல திரைக்கதையின் மூலம் நம்மையெல்லாம் கட்டிப்போடுகிறார், இயக்குனர் ஆஷிக் அபு.

நல்ல ஒளிப்பதிவு. இயல்பான காட்சிகள். தேவையான இசை இவையெல்லாம் படத்தில் நல்ல விஷயங்கள். இவ்வளவுதூரம் தன்னை கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கியவன்மீது இன்னும் கரிசனம் இருப்பதுபோலக் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல். அதற்குக் காரணமாக சிறிலின் அம்மாவும் ஒரு நர்ஸ் என்பதால் உனக்கு இந்தத் தண்டனை என்கிறாள்.

மருத்துவமனையில் நோயாளியாக வரும் முதியவர் மனதைக் கவர்கிறார். அவரது சொத்தில் பாதியை டெஸ்ஸாவுக்கு எழுதிவைத்து அவர் டெஸ்ஸாவுக்கு எழுதும் கடிதம் அருமை.

பயங்கரமான ஃபைட் சீன்களோ, வெளிநாட்டு லொகேஷன்களில் பாட்டுகளோ, பஞ்ச் வசனங்களோ ஏதுமில்லை இப்படத்தில். ஆனால் எதோ ஒன்று முழுதும் கட்டிப்போடுகிறது.

கையில் காசும், பலமும் இருக்கிறது என்பதற்காக பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என நினைப்பவருக்கு ஒரு எச்சரிக்கை இப்படம். ஆனால் அதே ஆட்களைக் கொண்டுதான் தனது பழிவாங்கலையும் செய்கிறாள் என்பது ஒரு நகைமுரன்.

வெளியூர்களில் தனியாக வாழும் பெண்களுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்பதையும் காதல் என்ற பெயரில் தவறான ஆட்களிடம் சிக்கினால் என்ன ஆகும் என்பதையும் இது கோடி காட்டுகிறது. இது கேரள பெண்ணின் கதை மட்டுமல்ல. இந்தியாவில் எந்த ஒரு பெண்ணுக்கும் இது நடக்கலாம்.

முதலில் ஒருமுறை பார்த்திருந்தேன். மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டியது, இந்தப்படம்.

- ஜெய் ஹனுமான்

எச்சரிக்கை: இட்லிவடையில் பழைய ஆட்கள் திரும்ப வருகிறார்கள்...:-)

Asif Meeran AJ

unread,
Nov 18, 2012, 6:05:44 AM11/18/12
to panb...@googlegroups.com
கேரள சினிமாவில் அதிகம் தெரியாத முகங்கள்தான் படம் முழுக்க. எனக்குத் தெரிந்த ஒரே முகம் பிரதாப்போத்தன் மட்டுமே.

பாவம்தான் :-)
ஃபஹத் ஃபாசில், ரீமா கல்லிங்கல் இருவரின் அலாதியான நடிப்பு படத்தின் மிகப்பெரும் பலம்
 
பெங்களூரில் வாழும் கேரள நர்ஸ்களின் வாழ்க்கை கான்பிக்கப்படுகிறது. எப்படி பல பெண்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்கின்றனர் என்பதும், அவர்களுக்குள் நடக்கும் குறும்புகள், எல்லாம் இயல்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களில் சிலர் பனத்துக்காக சோரம்போவதுபோல கான்பித்திருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மலையாளப்படத்தில் அவர்கள் ஊர்ப்பெண்களைத்தான் காட்டியுள்ளனர். இருப்பினும் இப்படி சித்தரித்திருக்க வேண்டாம்.

:-) ரொம்ப நல்லவரு போலிருக்கு
வெளிநாடு செல்வதற்காகச் சில சமாதானங்களைச் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் பெண்களும் இருக்கவே செய்கின்றனர் என்பதை மேலோட்டமாகக் காட்டியதில் தவறொன்றுமில்லை
 
சிறிலின் பின்புறம் குறித்து டெஸ்ஸாவின் அறைநண்பி அடிக்கும் கமெண்ட் இன்றைய இளவட்டங்களின் ஸ்டைல்போல.

அது டெஸ்ஸாவின் தங்கை. என்ன படம் பார்த்தார் இவர்? :-)
 
நல்ல ஒளிப்பதிவு. இயல்பான காட்சிகள். தேவையான இசை இவையெல்லாம் படத்தில் நல்ல விஷயங்கள். இவ்வளவுதூரம் தன்னை கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கியவன்மீது இன்னும் கரிசனம் இருப்பதுபோலக் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல். அதற்குக் காரணமாக சிறிலின் அம்மாவும் ஒரு நர்ஸ் என்பதால் உனக்கு இந்தத் தண்டனை என்கிறாள்.

அது நெருடலாகக்கொள்ள முடியாது
அவ்னை அவள் நிஜமாகத்தான் காதலித்தாள் என்பதால் அவளது பெண் மனம் தடுமாறுவதையே அழகாகச் சொல்லியிருப்பார் இயக்குனர். தமிழ்ப்ப்டம் மாதிரியேதான் மலையாளப் படமும் இருக்கணுமா என்ன? :-)

விரிவாக பிறமொழித்திரைப்பட வரிசையில் எழுத வேண்டும்

senshe senshe

unread,
Nov 21, 2012, 6:48:34 AM11/21/12
to panb...@googlegroups.com

அறம் செய விரும்பு - ‘The Blind Side'

ஜெஸிலா | திரைவிமர்சனம் , விமர்சனம் | 0 மறுமொழிகள் | # | Ping Thamizmanam | Ping Thenkoodu


பெரும்பாலான படங்களில் நடிகர்கள் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் தான் அந்த கதாபாத்திரத்திற்கு நடுவே நாம் உட்கார்ந்து கொண்டு அவர்கள் வாழ்வு முறைகளைக் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படியான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது ‘தி பிளைண்ட் சைட்’.
2009 வெளிவந்த ஒரு அமெரிக்க கால்பந்து விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்கெல் ஓஹெர் என்பவரின் வாழ்வியல் தான் ’தி பிளைண்ட் சைட்’. உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு கிடைத்த பல விருதுகளில் 2010 சிறந்த நடிகைக்கான (Academy Award for Best Actress) ஆஸ்கர் விருது சான்ரா புல்லக்குக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை, தேர்ந்த, மிக இயல்பான, கொடுத்த கதாபாத்திரமாக மாறியதற்கான பரிசு. படத்தின் இயக்குனர் ஜான் லீ ஹன்குக் 2006-ல் வெளிவந்த புத்தகத்தைப் படிக்கும் போதே இந்தக் கதாபார்த்திரத்தில் இவர்கள் பொருந்துவார்கள் என்று நினைத்து சாதித்த படமா என்று தெரியவில்லை. ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உலா வரச் செய்திருப்பதின் வெற்றியே இந்தப் படம். ஒரு சில படங்களில் கதையின் கரு சிறியதாக இருக்கும் அதனை நீட்டி முழக்க பல காட்சியமைப்புகளும் அதுவும் தமிழ்ப்படமென்றால் கேட்கவே வேண்டாம் 5-6 பாடல் காட்சிகள், 4-5 சண்டைக்காட்சிகள், சிரிப்பு காட்சிகள் என்ற இடைச்செருகலாக துண்டு துண்டாகக் கிடக்கும். ஆனால் உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் அந்தந்த கதாபாத்திரத்தை ஒரே காட்சியில் புரிய வைக்கவும், நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கவும் மிகவும் தேர்ந்தெடுத்த காட்சிகளை அமைத்திருப்பது இந்தப் படத்திற்கு வலுவாக அமைந்திருக்கிறது.


நாம் அன்றாட வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். நம்மைப் போல் அல்லாதவர்களை அந்நியமாகக் கருதுவோம் - அது உருவத்தில், இனத்தில், மொழியில், நிறத்தில் எப்படியான வேற்றுமையாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படிப்பட்ட ஒருவரை நாம் கடந்தே சென்றிருப்போம். முகம் சுழித்திருப்போம், அருவருப்பு அடைந்திருப்போம். அப்படியில்லாமல் ஒவ்வொருவருக்குள்ளும் நற்குணங்களும், நல்ல திறமையும் ஒளிந்துகிடக்கிறது அதனை நாம் அறிவுக் கண்களால் பார்க்காமல் புறக் கண்களில் பார்த்து அதனைத் தவிர்த்து கடந்து செல்கிறோமென்று என்றாவது உணர்ந்ததுண்டா?


அப்படி ஒவ்வொருவரும் உணரத் தொடங்கினால் வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல இல்லாதவர்கள் இல்லாத உலகத்தை நாம் அமைத்திட முடியும். Don't judge a book by its cover என்று ஒரு ஆங்கிலச் சொற்றொடர் உண்டு அகத்தின் அழகு முகத்தில் சமயங்களில் தெரியாது நாம் தான் தேடியெடுக்க வேண்டுமென்று மனிதம் பேசும் படம் இது. இப்படித்தான் இந்தப் படத்தின் நாயகி லெய் ஆன் தொஹியும் (சான்ரா புல்லக்) இயல்பிலேயே அவருக்குள் இருக்கும் அவரது இரக்க குணம் மைக்கெல் ஒஹெர்ரை கடந்து செல்லும் போது அன்றைய தினத்தில் அவருக்கு உதவலாமென்று வீட்டிக்குள் அழைத்துச் சென்று, பின்பு தமது சொந்தப் புதல்வனாகவே தத்தெடுத்துக் கொள்ளும் அற்புதங்கள் நிகழ்கிறது. இதையெல்லாம் ஒரு நல்ல கிருத்தவரால்தான் முடியுமென்று மதத்தை சில இடங்களில் தூக்கிப்பிடித்தாலும் அது கதையை எந்த வகையிலும் சிதைக்கவில்லை.


கருப்பினத்தைச் சேர்ந்த மைக்கெல் ஓஹெர் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு கொண்டவர். ’கிங்காங் பக்கத்தில் ஆன் டாரோ இருப்பது போல் மைக்கெல் ஓஹெர் அருகே நீ’ என்று லெய் ஆன்னின் தோழிகள் கிண்டல் செய்யும் அளவிற்கு இருவருக்குள் அவ்வளவு உருவ வேற்றுமைகள் இருந்தாலும் தம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக்கிக் கொள்வதில் அவளுக்கு மட்டுமல்ல அவருடைய கணவர் சியான் மற்றும் குழந்தைகள் கோலின்ஸ், எஸ்ஜே ஆகியோருக்கும் விருப்பம் என்பதை காட்சியமைப்புகளிலேயே பிரமாதமாக காட்டியுள்ளார் இயக்குனர் ஜான் லீ.


”மைக்கெல் ஓஹெரை வீட்டில் ஒருவராக ஆக்கிக் கொள்வதால் பதின்ம வயதிலிருக்கும் உன் மகளுக்கு பாதுகாப்பில்லை” என்று மைக்கெல் இனத்தின் மீது நம்பிக்கையில்லாத வெள்ளைக்காரிகளைக் காரி உமிழ்கிறார் லெய் ஆன். தன் மனைவியின் சொற்களுக்கு மரியாதை தரும் சியான், மற்றவர்களுக்கு உதவுவதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி என்ற தன் மனைவியின் சுபாவத்தை புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் நல்ல கணவர். யாரென்ன கேலி பேசினாலும் இவர் என் சகோதரர் என்று பள்ளி நூலகத்தில் மைக்கெல் அருகே வந்து அமரும் கோலின்ஸின் முகபாவங்களே போதும் அவருக்கு அங்கு வசனமே தேவையற்றது. பத்து வயதில் தென்படும் எஸ்ஜேதான் மைக்கெலின் உற்ற தோழன் அமெரிக்க கால்பந்தில் மைக்கெலுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்தச் சிறுவன் தான். இப்படியான கதாபாத்திரங்களுடன் அழகாகக் கதை நகர்கிறது. இரவில் தாய் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ’ஃபெர்டினந்த் அண்ட் தி புல்’ (Ferdinand & the Bull) கதை கூட இந்தப் படத்தில் முக்கிய அம்சம் பெறுகிறது. நம்மூர் சீரியல் போல் பல மாதங்களுக்கு பிறகு பார்த்தாலும் புரியுமே அப்படியில்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.


கதைச்சுருக்கம் படிப்பதைவிட இந்தப் படத்தை தேடிப்பிடித்து பார்த்துவிடுங்கள் இரசிப்புத் தன்மையுடையவர்களுக்கு கட்டாயம் பிடிக்கும், எனக்குப் பிடித்தது போல.

தமிழ்ப் பயணி

unread,
Dec 5, 2012, 9:31:32 PM12/5/12
to பண்புடன், tamil...@googlegroups.com
`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’
Cartoonist Bala added a photo to his timeline.
ஹாஹாஹா....................................................................................................
`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பார்த்துட்டு வந்ததுல இருந்து இப்படிதான் சிரிப்ப அடக்க முடியல. வெகுநாளைக்குப் பிறகு வயிறு வலிக்க சிரிக்க வைத்தப்படம்.

மறுநாள் கல்யாணத்தை வைத்துக்கொண்டு நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட சென்றபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டதால், ஞாபக மறதி நோய்க்குள்ளாகும் ஒருவனுக்கு அந்த ரகசியத்தை வெளியே சொல்லாமல் அவனின் நண்பர்கள் எப்படி பாடுபட்டு திருமணத்தை நடத்தினார்கள் என்பது கதையின் குறுஞ்செய்தி. அதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.. வாழ்த்துகள் பாஸ்.

பீட்சாவில் மிரட்டிய விஜய் சேதுபதி இதில் இன்னும் உச்சத்தை தொட்டிருக்கிறார்.. `என்னாச்சி..’ என்று ஆரம்பிப்பதிலிருந்து.. `ப்ப்பப.. யார்ரா அந்த பொண்ணு.. பேய் மாதிரி இருக்குறா..’ என்று அவர் பண்ணும் அட்டகாச நடிப்பிற்கு தியேட்டர் சிரிப்பால் அதிர்கிறது.

அதேப்போல் நண்பர்களாக வரும் மூன்று பேரும் கொடுக்கும் முகபாவனைகளில் தான் என்னவொரு நடிப்பு. பெருவாரியாக படத்தில் இந்த நான்குபேருக்கும் க்ளோஸப் ஷாட் தான். நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்தில் வரும் மற்ற கேரக்டர்களான டாக்டர், அப்பா, அம்மா, பாசக்கார நாகராஜ் அண்ணன் என்று யாருமே சோடைப் போகவில்லை.

பாட்டு ஃபைட்டு குத்தாட்டம் பஞ்ச் டயலாக் இல்லாம படம் எடுத்தா யாரும் பார்க்க மாட்டாங்கன்னு எவன்டா சொன்னது. தியேட்டருக்குப்போய் பாருங்கள்.. மக்கள் கொண்டாடுகிறார்கள்.

குடும்பத்தோடு போய் திரையரங்கில் பார்க்கலாம்.
ஹாஹாஹா....................................................................................................
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பார்த்துட்டு வந்ததுல இருந்து இப்படிதான் சிரிப்ப அடக்க முடியல. வெகுநாளைக்குப் பிறகு வயிறு வலிக்க சிரிக்க வைத்தப்படம். 

மறுநாள் கல்யாணத்தை வைத்துக்கொண்டு நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட சென்றபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டதால், ஞாபக மறதி நோய்க்குள்ளாகும் ஒருவனுக்கு அந்த ரகசியத்தை வெளியே சொல்லாமல் அவனின் நண்பர்கள் எப்படி பாடுபட்டு திருமணத்தை நடத்தினார்கள் என்பது கதையின் குறுஞ்செய்தி. அதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.. வாழ்த்துகள் பாஸ். 

பீட்சாவில் மிரட்டிய விஜய் சேதுபதி இதில் இன்னும் உச்சத்தை தொட்டிருக்கிறார்.. என்னாச்சி..’ என்று ஆரம்பிப்பதிலிருந்து.. ப்ப்பப..  யார்ரா அந்த பொண்ணு.. பேய் மாதிரி இருக்குறா..’ என்று அவர் பண்ணும் அட்டகாச நடிப்பிற்கு தியேட்டர் சிரிப்பால் அதிர்கிறது. 

அதேப்போல் நண்பர்களாக வரும் மூன்று பேரும் கொடுக்கும் முகபாவனைகளில் தான் என்னவொரு நடிப்பு. பெருவாரியாக படத்தில் இந்த நான்குபேருக்கும் க்ளோஸப் ஷாட் தான். நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்தில் வரும் மற்ற கேரக்டர்களான டாக்டர், அப்பா, அம்மா, பாசக்கார நாகராஜ் அண்ணன் என்று யாருமே சோடைப் போகவில்லை.

பாட்டு ஃபைட்டு குத்தாட்டம் பஞ்ச் டயலாக் இல்லாம படம் எடுத்தா யாரும் பார்க்க மாட்டாங்கன்னு எவன்டா சொன்னது. தியேட்டருக்குப்போய் பாருங்கள்.. மக்கள் கொண்டாடுகிறார்கள். 

குடும்பத்தோடு போய் திரையரங்கில் பார்க்கலாம்.

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி


தமிழ்ப் பயணி

unread,
Dec 14, 2012, 8:46:18 PM12/14/12
to பண்புடன், tamil...@googlegroups.com

ஒரு சினிமாவே அல்ல

by jeyamohan

இயக்குநர் பரதனுடன் சேர்ந்து சினிமாக்களில் பணியாற்றிய நாட்களைப்பற்றி பேசும்போது பாராட்டுகளைக்கூட பரதன் தனக்கே உரிய முறையில்தான் வெளிப்படுத்துவார் என்று சொன்னார் இசையமைப்பாளர் ஜான்சன். ஏதாவது ஒரு பாடல் அல்லது ஒரு நடிப்பு மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றினால் ‘நல்லது…நீ செய்தது என்று சொல்ல முடியாது’ என்று சொல்வாராம் அவர். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் கலந்த ஒரு வரி அது என்றார் ஜான்சன்

ஆனால் ஒருவன் தன்னால் செய்ய முடியக்கூடியதன் எல்லையைத் தாண்டிச் செல்வதை தான் அவர் சொல்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். ஒழிமுறி என்ற படம் என்னை அத்தகைய ஒரு பரதவாக்கியத்தை நினைவுறுத்தியது. சினிமா என்னும் கலையின் இலக்கணத்தையும் அளவுகோல்களையும் கொண்டு வைத்து பார்த்தால் ஒழிமுறிக்கு பல குற்றங்களும் குறைவுகளும் இருக்கக்கூடும். ஆனால் ஒழிமுறியை பார்க்கும்போது நம் முன் நிறைவது சினிமாவுக்கு அப்பால் விரியும் ஒரு சமூகத்தின், அதன் மூன்று தலைமுறைகளின் சித்திரம்

பெண்களுக்கு முழு சொத்துரிமையும் தன் வீட்டிலேயே வாழ உரிமையும் இருந்த முதல் தலைமுறை. பெண் இன்னொரு வீட்டுக்குச் சென்று அங்கே அடிமையாக சுருங்கிவாழும் இரண்டாம் தலைமுறை. அவர்களின் வரலாறுகளை முன்வைக்க இயக்குநர் தேர்ந்தெடுத்து முன்வைக்கும் இன்றைய மூன்றாம்தலைமுறை. திறமையாக எழுதி இயக்கப்பட்ட இந்த படத்தில் அவை மூன்றும் நிரம்பியிருக்கின்றன

மொழியும் நிலப்பகுதியும் காலமும் பெரும்பாலும் பழக்கமற்றவை. ஆனால் நம் முன் தெளிந்துவரும் கதைமாந்தர்கள் மனதிற்குள் சென்று அமைபவர்கள். எவரையும் அஞ்சாத, எந்த நள்ளிரவிலும் தனித்து நடக்க தயங்காத, யாரங்கே என்று கேட்டால் நான் தான் இங்கே என்று திரும்பிநின்று சொல்லக்கூடிய பாட்டிகளை நான் கண்டிருக்கிறேன், இளமையில். ஆறுமணி ஆனபின்னர் தனியாக பெண்கள் வெளியே இறங்கி நடக்கமுடியாத ஒரு காலகட்டம் இன்று வந்திருக்கிறது. பாயும் தலையணையும் கையிலேந்தி வயல் வெளியில் தனியாக கதகளி கானச்செல்கிற அந்த பாட்டிகள் ஒரு வரலாற்று விந்தையாக ஆகிவிட்டனர்

நடிக்கத்தெரியாது என்று மலையாளி நிராகரித்த ஸ்வேதா மேனோன் என்ற நடிகை சென்ற நான்கு வருடங்களில் அடைந்த மாற்றம் ஆச்சரியமளிப்பது. எவரையும் அஞ்சாத அம்மச்சியாக ஸ்வேதா மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார். இளமையிலிருந்து முதுமைக்குச் செல்லும்போது நடையிலும் தோற்றத்திலும் வரும் கவனமில்லாமை மிக இயல்பாக அவரில் நிகழ்ந்திருக்கிறது

அன்பை வசையாக மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய, வீம்புக்கு குறைவில்லாத , தன்னை அஞ்சக்கூடியவர்களுக்கு முன்னால் சிம்மமாகவும் தன்னைவிட மேலானவர்களுக்கு முன்னால் ஆட்டுக்குட்டியாகவும் ஆகக்கூடிய, சாதாரணமான ஒருவரின் கதாபாத்திரம் லால் வழியாக கச்சிதமாக நிகழ்ந்திருக்கிறது. நட்சத்திர புகழில் நிலைகொள்வதனால் மம்மூட்டியும் மோகன்லாலும் இழப்பது இதைப்போன்ற கதாபாத்திரங்களைத்தான்

வாழ்க்கை முழுக்க சண்டைபோட்டு விலக்கி நிறுத்திய அம்மாவிற்கு நீர்க்கடன் கொடுக்கும்போது நினைவின் எடை தாளாமல் மனமுடைந்து கதறும் மைந்தர்கள் நமக்கு புதியவர்கள் அல்ல. வாழும்போது எதற்காக அந்த வெறுப்பும் வேகமும் என்று நாம் எத்தனையோ முறை நினைத்திருப்போம்

ஒருவரோடொருவர் மனம் திறந்து பேசாத , அஞ்சியும் அஞ்சவைத்தும் வாழ்ந்து வாழ்க்கையை இழந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்த தந்தையும் அவர் மகனும் கொள்ளும் உறவின் சித்திரம் இப்படத்தில் மிக நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. டிராஃபிக் படத்துக்குப்பின் ஆசிஃப் பெற்ற மிகச்சிறந்த கதாபாத்திரம் இது.

கணவன் மகன் ஆகிய இருவரை விட இன்னொரு உலகம் இல்லாத, அவர்களுக்காக மட்டும் வாழ்ந்து அதற்காக தன் பிறந்தவீட்டைக்கூட விலக்கிவிட்ட அம்மாக்களின் ஒரு தலைமுறையும் நாமறிந்ததே. என்னதான் தியாகம் செய்தாலும் கடைசியில் பிறர் அளிக்கும் குற்றவுணர்ச்சியை மட்டுமே திரும்பிப்பெறும் விதி கொண்டவர்கள். அவர்களுக்கு கருத்துக்கள் இருக்கக்கூடாது என கட்டாயப்படுத்துபவர்களே அவர்களுக்கு கருத்துக்கள் இல்லை என்று கிண்டல்செய்வதையும் கண்டுகொண்டிருக்கிறோம். இதெல்லாம் இன்றைய கேரளத்தின் உண்மைச்சித்திரங்கள்

மலையாளசினிமாவில் தன் காலடிகளை நிலைநாட்ட ஆரம்பித்திருக்கும் நந்துலாலுக்கு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம். இரண்டு நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் கோபகுமாரின் கதாபாத்திரமும் சிறப்பு. மலையாளசினிமா இந்த நடிகனை இன்னும்கூட நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

இதற்கெல்லாம் அப்பால் சற்றே கவனம் கலைந்தாலும் துண்டுதுண்டாக ஆகி மிக சலிப்பூட்டுவதாக ஆகக்கூடிய அபாயம் கொண்ட ஒரு கதையை மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் மதுபால். படம் முழுக்க வரக்கூடிய குறியீடுகளை முடிந்தவரை நுட்மபாக, நல்ல ரசிகன் மட்டுமே அடையக்கூடியதாக ஆக்கியிருப்பது படத்தை அழகானதாக ஆக்குகிறது

தீயவர் என தோன்றுபவர்களின் நன்மையும் பலவீனர் என தோன்றுபவர்களின் அகவலிமையும் மெல்ல கதை விரிய விரிய நம்மை வந்தடைகிறது. மரணத்தையும் வாழ்க்கையையும் பற்றியுள்ள நுட்பமான வரிகள் மிக முக்கியமானவை என்று தோன்றியது.

தீனிப்பிரியம், எதையும் குற்றம் சொல்வது முதலிய நாயர்குணங்களை விரிவாகவே படம் கேலிசெய்கிறது என்றாலும் ஒரு சினிமாவுக்கு அப்பால் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த பரிணாமத்தையே காட்டமுடிந்த இந்த சினிமா என்னை மிகவும் கவர்ந்தது

பரதனின் மொழியில் சொல்லப்போனால் ‘நன்றாக இருக்கிறது. ஒரு சினிமா என்றே சொல்லமுடியாது’

வாயனசாலா இதழ் [ http://vayanashala.info/cinema/blog-post-3890-html45359927co9/?utm_source=twitterfeed&utm_medium=twitter ]



2012/12/6 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’
Cartoonist Bala added a photo to his timeline.
--

Ramesh Murugan

unread,
Dec 18, 2012, 2:44:21 PM12/18/12
to tamil...@googlegroups.com, பண்புடன்
பகிர்ந்துக்கிட்டதுக்கு மிக்க நன்றி அண்ணே...
இப்பத்தான் படம் பார்த்து முடிச்சேன். சூப்பர் படம். எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். சமீபத்தில் பார்த்த மிக நல்ல படங்களுள் இதுவும் ஒன்று.

http://thepiratebay.se/torrent/7895482/Ozhimuri_%282012%29_Malayalam_Movie_DVDRip_x264_-_Exclusive

2012/12/15 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser


ஸ் பெ

unread,
Dec 18, 2012, 2:49:12 PM12/18/12
to panb...@googlegroups.com
தமிழர்களை கொச்சைபடுத்துவதை போல் எந்த வசனமும் இல்லை என உத்தரவாதம் தந்தால் பார்க்கிறேன்..

2012/12/18 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Ramesh Murugan

unread,
Dec 18, 2012, 2:54:24 PM12/18/12
to panb...@googlegroups.com
ஜெயமோகந்தான் வசனம் எழுதியிருக்கிறார்னு நினைக்கிறேன்... நாயர்களை பயங்கரமா கிண்டல் பண்ணியிருக்காரு. தமிழர்களை வேணும்னு வம்புக்கிழுக்கல... ஆனா கிடைச்ச இடத்திலெல்லாம் திருவிதாங்கூரையும் தமிழ்நாட்டையும் கலாய்ச்சிருக்காரு.

படம் தமிழ் - மலையாளம் பற்றியதல்ல. பெ|ண்களின் நிலையை ஆழமா உணர்த்தியபடம். திரைப்படம் மாதிரியும் இல்லை, ஆவணபடம் மாதிரியும் இல்லை. படம் முடிஞ்சதே தெரியல. அவ்ளோ ஈர்ப்பு சக்தி உள்ள படம். கண்டிப்பா பார்க்கலாம்.

2012/12/18 ஸ் பெ <stalinf...@gmail.com>
தமிழர்களை கொச்சைபடுத்துவதை போல் எந்த வசனமும் இல்லை என உத்தரவாதம் தந்தால் பார்க்கிறேன்..

2012/12/18 Ramesh Murugan <rames...@gmail.com>
பகிர்ந்துக்கிட்டதுக்கு மிக்க நன்றி அண்ணே...
இப்பத்தான் படம் பார்த்து முடிச்சேன். சூப்பர் படம். எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். சமீபத்தில் பார்த்த மிக நல்ல படங்களுள் இதுவும் ஒன்று.

http://thepiratebay.se/torrent/7895482/Ozhimuri_%282012%29_Malayalam_Movie_DVDRip_x264_-_Exclusive
 


2012/12/15 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஒரு சினிமாவே அல்ல
 

by jeyamohan



--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 

---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

 
 




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 

---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

தமிழ்ப் பயணி

unread,
Dec 18, 2012, 9:52:47 PM12/18/12
to tamil...@googlegroups.com, பண்புடன்
இந்த கட்டு​ரையுடன் மற்​றொரு கட்டு​ரை​யை பகிர நி​னைத்திருந்​தேன் மறந்து ​போச்சு.. :-) :-) ஒரு கட்டு​ரையின் பாதி மட்டும் இங்​கே.

ஒழிமுறி-கடிதங்கள் 

December 15, 2012

ஜெ,

ஒழிமுறி டிவிடி வாங்க முயன்றேன். எங்குமே இல்லை என்றார்கள்.டிவிட்டரில் ozhimuri என தேடினேன். ஒழிமுறி முழுக்க விற்றுவிட்டது என்று தெர்ந்தது [ https://twitter.com/search/realtime?q=ozhimuri&src=typd ] ஏராளமானவர்கள் பாராட்டியிருப்பதை பார்த்தேன். one of the best in recent times.. என்றும் The power of such a terrific script. என்றும் வாசித்தபோது நிறைவாக இருந்தது. இப்போதும் முழு அரங்கில் ஓடுவதாக ஒரு டிவிட்டர் செய்தி இருந்தது. உண்மையா?

சுவாமிநாதன்

அன்புள்ள சுவாமிநாதன்

மலையாள சினிமாவில் டிவிடி விற்பனை என்பது அதன் மொத்தவசூலில் முப்பது சதவீதம் வரை அளிக்கும் ஒரு களம். முறைப்படுத்தப்பட்ட டிவிடி விற்பனை இருப்பதன் விளைவு. தமிழில் அது முழுக்க முழுக்க திருட்டு டிவிடிக்காரர்களுக்குச் செல்கிறது.

ஒழிமுறி டிவிடி 65000 பிரதிகள் விற்றுவிட்டது. இரண்டாம்பதிப்பு ஒருலட்சம் பிரதிகள் நாளை வெளிவரும் என்றார்கள். கடைகளில் கிடைக்கும்.

ஒழிமுறி மூன்றுமாதம் முன்னரே திரையரங்கை விட்டுச் சென்றுவிட்டது. இன்று திருவனந்தபுரம் திரைவிழாவில்தான் முழு அரங்கில் காட்டப்பட்டது

ஜெ




2012/12/19 Ramesh Murugan <rames...@gmail.com>

பகிர்ந்துக்கிட்டதுக்கு மிக்க நன்றி அண்ணே...
இப்பத்தான் படம் பார்த்து முடிச்சேன். சூப்பர் படம். எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். சமீபத்தில் பார்த்த மிக நல்ல படங்களுள் இதுவும் ஒன்று.

http://thepiratebay.se/torrent/7895482/Ozhimuri_%282012%29_Malayalam_Movie_DVDRip_x264_-_Exclusive


2012/12/15 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஒரு சினிமாவே அல்ல

by jeyamohan




--

Omprakash

unread,
Dec 18, 2012, 11:59:06 PM12/18/12
to panb...@googlegroups.com
///ஒழிமுறி டிவிடி 65000 பிரதிகள் விற்றுவிட்டது. இரண்டாம்பதிப்பு ஒருலட்சம் பிரதிகள் நாளை வெளிவரும் என்றார்கள். கடைகளில் கிடைக்கும்.//

செம காமெடியா இருக்கு... இங்க எவனை கேட்டாளும் இப்படி ஒரு படம் வந்துச்சான்னு மேலயும் கீழயும் பார்க்குறானுங்க...

Gokul Kumaran

unread,
Dec 19, 2012, 12:06:52 AM12/19/12
to panb...@googlegroups.com
அலுவலகத்தில் ஒரு மலையாளியிடம் கேட்டேன்: "ஒழிமுறி படம் நல்ல படமா"?
 
அவன் சொல்றான்: கேட்டுண்டு, பட்ச பார்த்திட்டில்லை. ஏது படம் தமிழா மலையாளமா ?
 


 
2012/12/19 Omprakash <vi.omp...@gmail.com>

///ஒழிமுறி டிவிடி 65000 பிரதிகள் விற்றுவிட்டது. இரண்டாம்பதிப்பு ஒருலட்சம் பிரதிகள் நாளை வெளிவரும் என்றார்கள். கடைகளில் கிடைக்கும்.//

செம காமெடியா இருக்கு... இங்க எவனை கேட்டாளும் இப்படி ஒரு படம் வந்துச்சான்னு மேலயும் கீழயும் பார்க்குறானுங்க...



--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail


காமேஷ்

unread,
Dec 19, 2012, 12:48:06 AM12/19/12
to panb...@googlegroups.com
இவரும் ஒரு தயாரிப்பாளரோ என்னவோ ?

.........................



2012/12/19 Omprakash <vi.omp...@gmail.com>

ஸ் பெ

unread,
Dec 19, 2012, 6:14:36 PM12/19/12
to panb...@googlegroups.com
எத்தனை அற்புதமான படைப்பு... 
நெருங்கிய நண்பர் ஒருவரே இப்படம் தமிழர்களை கொச்சைப்படுத்துகிறது என சொன்னதாலையே விலகி இருந்தேன்.. வருந்துகிறேன்..ஜெயமோகனை படைப்புலகம் குறித்து நான் சிலாகிக்க இன்னும் ஒரு படைப்பு...

அடிமனதிலிருந்து... ஆதிக்கசாதிகளான நாயர்களுக்கும் எமக்குமான கடைசி கண்ணி நான்..என்ன உறவென்று அறியாமலே 'யாமானே' என நான் விளித்ததில் இருந்து உருவான என் கோபமும், என் மூத்தோர் வேதனையும் என்னோடே போகட்டுமே..எம்முடைய வரலாறு எழுதாமல் போனது எங்கள் பிழைகளால் அல்ல.. அவர்கள் ஆதிக்கவர்க்கமாக வாழ்ந்தார்கள் என்பதற்காக அவர்கள் வாழ்வியல் வரலாறாகாதா  என்ன??ஆனால், அவர்கள் வரலாற்றில் அவர்கள் உணர்த்தாமலோ எங்கோ பரவிக்கிடக்கிறது எம் முன்னோர் வியர்வை படிந்த வாழ்க்கை..

நன்றி மதுபால் 


2012/12/18 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

தமிழ்ப் பயணி

unread,
Dec 26, 2012, 11:22:25 AM12/26/12
to பண்புடன், tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்

இரவு 11:07
சென்னை உலகத் திரைப்பட விழாவும், நானும்..!

24-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பார்த்து வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவை இந்தாண்டு முழுமையாக பார்க்க முடியாதது எனது துரதிருஷ்டம். ஜெயா டிவியில் வேலையில் இருந்தபோதுகூட முன் அனுமதி பெற்று தினமும் படங்களை பார்த்து வந்தேன். சென்ற ஆண்டு நான் இருந்த புதிய தலைமுறை டிவியில் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் வழங்கி கெளரவித்திருந்தார்கள். இந்தாண்டு வேலை பார்க்கும் நிறுவனத்தில் கேட்டால் “லெட்டரை கொடுத்துவிட்டு வீட்டுக்கே போயிரு”ன்னு பதில் வரும் என்பதை நானே ஊகித்துக் கொண்டு, எனது அறிவுத் திறமையாலும், புத்திக் கூர்மையாலும் வேலையைக் காப்பாற்றிக் கொண்டு உலக சினிமாவை கைவிட்டுவிட்டேன்..!

57 நாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட படங்கள் என்று அட்டவணையில் சொல்லப்பட்டாலும் சில திரைப்படங்கள் மூன்று முறை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வராத திரைப்படங்களின் நேரத்தையும், எண்ணிக்கையையும் ஈடுகட்டின என்பதையும் சொல்ல வேண்டும்..! மாசிடோனியா, உருகுவே, தஜிகிஸ்தான், கஜகஸ்தான், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளும் இந்தாண்டு சென்னை உலக சினிமா ரேஸில் கலந்து கொண்டிருக்கின்றன..!

ஆனாலும் ஒரு பத்திரிகையாளனாக.. கடமையுணர்ச்சியுள்ள  பணியாளானாக துவக்க விழாவுக்கு சென்றிருந்தேன்.. எங்கோ தப்பித் தவறி வெளிநாட்டுக்கு வந்துவிட்டோமோ என்ற பீலிங்கிற்கு கொண்டு போய் விட்டன அரங்கேறிய நிகழ்ச்சிகள்..! நடப்பதோ சினிமா பற்றியது.. வாய்ப்பாட்டு, கஜல் பாட்டு, ஹிந்துஸ்தானி மியூஸிக், உலக இசையமைப்பாளர் ரஹ்மானின் புதல்வனின் பியானோ இசை என்று ஏதோ டிசம்பர் மாத இசைக் கச்சேரிக்கு வந்ததுபோல இருந்தது..!


மாநில அரசிடமிருந்து 50 லட்சம் ரூபாயை சுளையாக வாங்கியிருந்த காரணத்தினால் அம்மா புகழ் பாட ஒரு அடிமையை வரவழைத்திருந்தார்கள். செய்தித் துறை அமைச்சர் என்று சொல்லிக் கொண்ட அவர், “இத்தனை சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும்” என்று கட்சி மீட்டிங்கில் புழங்குவதுபோல முழங்கித் தள்ளி நீட்டி நெடித்து, முடிக்கும்போது யாருக்குமே கிடைக்காத கைதட்டலை அள்ளிக் கொண்டு போனார். தான் மட்டுமே சிறப்பாக பேசியதாக அவர் நினைத்திருப்பாரோ என்னவோ.. அப்படியொரு சந்தோஷம் மனுஷனுக்கு சீட்டுக்கு திரும்பும்போது..!

எப்போதும் மேடைப் பேச்சுதான் அவதிப்படும். அன்றைக்கு தமிழ்த்தாய் வாழ்த்தே பெரும் அவதிப்பட்டது..! அதிலும் சர்ச்சை நாயகன் அமீரினால்..! “தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் இந்த நிகழ்ச்சியைத் துவங்கியதே தப்பு.. தமிழிலும் சில நிகழ்ச்சிகளை வைத்திருக்கலாம்..” என்று ஆலோசனையை குற்றச்சாட்டாகவே வைத்துவிட்டுப் போனார்..!

பஞ்சாயத்துக்கே நாட்டாமையாகத் திகழும் சரத்குமார் தன் பேச்சின்போது இதற்கு தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று திடுதிப்பென்று தன் பேச்சின் ஊடேயே  “நான் இப்போ தமிழ்த் தாய் வாழ்த்து பாடுறேன்..” என்று சொல்லிவிட்டு பாடத் துவங்க.. அப்போதுவரையிலும் தூங்கிக் கொண்டிருந்த சிலரை எழுப்பி எழுந்திருக்க வைப்பதற்குள் பாடலே முடிந்தவிட்டது.. தமிழ்த்தாய் பாடிக் கொண்டிருந்தபோது அரங்கத்தின் பல மூலைகளில் இருந்தும் செல்போனில் ரிங்குகள் தொடர்ந்து கொண்டிருந்ததும், இந்த விழாவின் ஒரு சிறப்பம்சம்..! அரசியல்வியாதிகள் எங்கே, எதைத் தொட்டாலும் சர்வநாசம் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்..!


எங்கும், எல்லாமும் அம்மா மயத்துடன் துவக்கப்பட்ட இந்த விழாவின் துவக்க நாள் படத்தை பார்க்க முடியாத அளவுக்கு வீட்டு வேலைகள் இருந்ததால் அடியேன் பறந்துவிட்டேன்..! ஆனாலும் கிடைத்த கேப்பில் அடுத்த ஞாயிறன்று மட்டும் 4 படங்களை பார்க்க நேர்ந்தது..! மற்ற நாட்களில் கால்வாசி படம், முக்கால்வாசி படம், அரைவாசி படமாகவே சிலவற்றை பார்க்க முடிந்தது..! எனது கலையுலக வாழ்க்கையில் மிக மோசமான நாட்களாக இவற்றை நினைக்கிறேன்..!

KUMA (Austria), The Taste of Money (south Korea), Paradaise Love (Austria), Mystery (China) என்று பார்த்த படங்கள் நான்கும் நான்கு வகை.. இதில் பாரடைஸ் லவ் படத்தின் போது தமிழ் மக்களின் உலக சினிமா ஆர்வம் எதற்கு என்று புரிந்தது..! திரையில் ஓடிய கில்மா சீன்களுக்கெல்லாம் “ஓ” என்று கத்தி தங்களது புல்லரிப்பைக் காட்டியவர்கள், அவ்வப்போது அக்கம்பக்கம் அமர்ந்திருக்கும் பெண்களின் முகத்தையும் உற்று உற்றுப் பார்த்து மகிழ்ந்தார்கள்..! இதுகூட செய்யலைன்னா தமிழன்னு யாராவது ஒத்துக்குவாங்களா..? இந்த மாதிரி படத்தையெல்லாம் எவன் உலக சினிமால சேர்த்தான்..? சேர்க்கணும்..? பட்டவர்த்தனமான ஆபாசப் படம் இது..! அத்தோடு நிறவெறி, இனவெறியான வசனங்கள், காட்சியமைப்புகளோடு அதிர்ச்சியடையவே வைத்தது..!

உலக சினிமாக்களில் இரண்டே வகைதான்.. ஒன்று பாலியலுடன் சொல்லப்படும் உலக சினிமா. இன்னொன்று அது இல்லாமலேயே சொல்லப்படுவது.. இல்லாமலேயே சொல்லப்படுவதில் ஈரானிய திரைப்படங்கள்தான் சிறப்பானவை.. அவற்றுக்கு ஈடு அவைகள்தான்.. ஆனால் பாலியலையும் சேர்த்தே தூக்கிக் கொண்டு அலையும் திரைப்படங்களை பார்க்கத்தான் இங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது..! பாலியல் வறட்சி நாட்டில் எந்தத் திசை பார்த்தாலும் தென்படுகிறது என்பதை இது போன்ற படக் காட்சிகளிலும் காண முடிகிறது..!

'கிளிப்' என்ற செர்பிய படத்தின் கில்மா காட்சிகளுக்காகவே “ஒன்ஸ்மோர்” என்று கத்திய ரசிகர்களெல்லாம் இங்கே வந்திருந்தார்கள் என்றால் என்னத்த சொல்ல..? இந்தப் படத்தை பொறுமையாகப் பார்த்துவிட்டு வெளியேறிய ஜென்டில்மேனான வில்லன் நடிகர் மன்சூரலிகான்.. “நடிகை சுஹாசினி பொறுப்பில் இருக்கும் இது போன்ற விழாக்களில்  புளூபிலிம்களையெல்லாம் ஓட்டலாமா..?” என்று கண்டன அறிக்கைவிட.. மறுநாள் போடுவதாக இருந்த அந்தப் படத்தின் இரண்டாவது ஒளிபரப்பு “தொழில் நுட்பக் காரணங்களினால்” திரையிடப்பட முடியாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மன்சூரலிகான் என்னை மாதிரி ஆர்வத்துடன் தியேட்டருக்கு ஓடி வந்த பயபுள்ளைகளுக்கு நிசமாவே வில்லனாயிட்டாரு..! இவருக்கெதுக்கு இந்த வேலை..?

நடிகர் சிவகுமார், கேமிராவுமன் விஜயலட்சுமி, இயக்குநர் சற்குணம் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் டீம், போட்டிக்கு வந்த தமிழ்ச் சினிமாக்களை பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்..! ராணி சீதை ஹாலில் அட்டகாசமான ஒரு வெள்ளை ஸ்கிரீனை விரித்து வைத்து அதில் படங்களை ஒளிபரப்பி படம் பார்க்க வந்தவர்களைவிடவும், ஜட்ஜ்களை நோகடித்துவிட்டார்கள் விழா அமைப்பாளர்கள். பிலிம்களை தியேட்டர்களுக்கு வழங்க முடியாத சூழல் என்பதால் பொறுத்துக்குங்க என்று சொல்லிவிட்டதால், ஒளிப்பதிவை வைத்து மார்க் போடாமல் கதையை மட்டும் பார்த்து தேர்வு செய்திருப்பதாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்..!

திருட்டு டிவிடியில்கூட கிடைக்காத ‘ஆரண்யகாண்டம்’ திரைப்படத்தை காண ராணி சீதை ஹாலில் கட்டுக்கடங்காத கூட்டம். கூட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டார்கள் ஏற்பட்டாளர்கள். இதனால் அன்றைக்கு திரையிடப்படவில்லை..! மறுநாள் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிட்டார்கள். கூட்டம் அள்ளியது..! எப்படிடா இதை இத்தனை நாளா மிஸ் செஞ்சோம் என்ற வருத்தம், படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களின் முகத்திலேயே தெரிந்தது..! இந்தப் படத்தை இப்போ ரெண்டாவது ரவுண்ட்டா வெளியிட்டாலும் கூட்டம் பிச்சிரும்.. தயாரிப்பாளர் தன் ஈகோவை கைவிட்டுட்டு படத்தை ரிலீஸ் செய்ய முன் வருவாருன்னு நம்புறேன்..!

உலக சினிமா விழாவின் முக்கிய தியேட்டரான உட்லண்ட்ஸின் பாத்ரூம், டாய்லெட்டை பார்த்துவிட்டு உலக சினிமா இயக்குநர்களெல்லாம் அடுத்த முறை சென்னைக்கு வரவே கூடாது என்றுதான் நினைத்திருப்பார்கள்..! அவ்வளவு அழகாக இருந்தது..! இத்தனை செலவு செய்து விழா நடத்துபவர்கள் இதற்கு ஒரு வழியைச் செய்திருக்க வேண்டாமா..? ஒவ்வொரு வருடமும் இப்படி புலம்புவதே என்னைப் போன்ற சாதாரண ரசிகனின் வழக்கமாகிவிட்டது..! ஒரு அப்பாடக்கரான வெளிநாட்டவர் உச்சா போய்விட்டு கையைக் கழுவ தண்ணீர் இல்லாமலும், டிஸ்யூ பேப்பர் இல்லாமல் தேடி அலைபாய்ந்து, வெளியேயும் வந்து அங்கே, இங்கே என்று பார்த்து, பரிதவித்து.. கை நீட்டியவர்களிடத்தில் கை கொடுக்க மறுத்து சங்கடத்துடன் நின்றதையெல்லாம் காபியை குடித்தபடியே நான் ரசித்துக் கொண்டிருந்தது இந்த விழாவின் ஹைலைட் என்றே சொல்லலாம்..!

சென்ற முறை படம் துவங்கிய 15 நிமிடங்களுக்கு பிறகு ரசிகர்கள் யாரும் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விதிமுறையைக் கொண்டு வந்து கொடுமைப்படுத்தினார்கள். கில்மா சீன் ஓடிட்டிருக்கும்போது ஒருத்தர் குறுக்கால புகுந்து அந்த வரிசைக்கு போறதா.. இந்த வரிசைக்கு போறதான்னு யோசிச்சுக்கிட்டு நிப்பார் பாருங்க.. அப்பத்தான் கடுப்பே வரும்..!  அந்தக் கடுப்புக்கு இது சந்தோஷமாத்தான் இருந்தது..! ஆனா ஒரு சிலருக்குக் கோபம். “அவனவன் அரக்கப் பறக்க ஆபீஸுக்கு டிமிக்கி கொடுத்திட்டு வர்றான்.. இங்க வந்தா, உள்ள வுட மாட்டீங்களா..? கூட்டுடா பஞ்சாயத்தை..” என்று சென்ற முறையே ரத்தம் வராத அளவுக்கு சண்டையெல்லாம் நடந்திருந்தது.. அதனால், இந்த முறை சத்தமில்லாமல் அதனை தூக்கிவிட்டு எப்படியோ போய்த் தொலைங்கன்னு விட்டுட்டாங்க..

இன்னமும் நம்ம மக்கள்ஸ் சில பேரு நாகரிகத்தைக் கத்துக்கிடலையே..? ஒரு குண்டூசி சப்தம்கூட இல்லாமல் அமைதியா போய்க்கிட்டிருக்கும்போது மனசு முழுக்க படத்துக்குள்ள இருக்கும்போது, பின்னாடியோ முன்னாடியோ எவனோ ஒருத்தன் செல்போன்ல குசுகுசுன்னு பேசிக்கிட்டேயிருக்கான்..! எல்லா படத்துலேயும் எனக்கு இந்த அனுபவம் கிட்டியது.. செல்போனை பொண்டாட்டி மாதிரி பாவிக்கணும்னு இந்தப் பயபுள்ளைகளுக்கு தெரியலை.. இந்தியன் பனோரமாவின் ஒரு படத்தை திரையிட்ட போது அதன் இயக்குநரும் வந்திருந்தார். நம்மாளுகளோட செல்போன் அலம்பலை பார்த்து ரொம்பவே டென்ஷனாயிட்டாரு மனுஷன். கூடவே கடைசி நிமிஷத்துல படம் முடியறதுக்குள்ள லைட்டையும் போட்டு மக்களை வெளிய போன்னு சொல்லிட்டாங்க.. அந்த இயக்குநர் தொண்டை கிழிய கத்தி குமிச்சிட்டாரு..! ஆனாலும் கொஞ்ச நேரம் கழிச்சு கூலாகி அந்தப் படத்தை எப்படியெல்லாம் எடுத்தேன்றதை அரைமணி நேரமா சோப்பு போட்டு விளக்கிட்டுத்தான் போனாரு..!

வாலண்டியரா வந்து மாட்டின அடிமைகளா இந்த வருஷம் சிக்கினவங்க நியூ காலேஜ் பசங்க..! போன தடவை மாணவிகளையும் சேர்த்திருந்தாங்க.. ஆனாலும் நம்மாளுக கில்மா படம் போடும்போதெல்லாம் அந்தப் புள்ளைகளையும் சேர்த்து ராகிங் செய்து வைக்க.. இந்தத் தடவை பசங்களே போதும்னு முடிவு பண்ணிட்டாங்களாம்..! பயலுக பாவம்.. வாங்கிக் கொடுத்த டிபனுக்கும், மதியச் சோத்துக்கும், ராத்திரி குருமாவுக்கும் மேலேயே வேலை பார்த்து ஓய்ஞ்சுட்டாங்க.. இந்தப் பசங்க எடுத்த சில குறும்படங்களை கடைசி நாள் அன்னிக்கு அமிதாப் முன்னாடி திரையிட்டாங்க.. இருந்தாலும் தமிழ்ச் சினிமா பத்தி இல்லாம, பர்மா பஜார் டிவிடி கடைகள், சென்னை நகரம் பற்றி எடுத்திருந்தது ஒரு குறைதான்..!

கடந்த 9 வருஷமா உலகத் திரைப்பட விழால முன்னாடி நின்னுக்கிட்டிருந்த நடிகர் எஸ்.வி.சேகரை இந்த வருஷம் சுத்தமா காணோம்.. இவர்தான் இந்த அமைப்பின் துணைத் தலைவரும்கூட.. இப்போ இருக்காரா..? இல்லை சத்தமில்லாம தூக்கிட்டாங்களான்னு தெரியலை.. ஆனா சுஹாசினி தலைமைல பூர்ணிமா பாக்யராஜ், லிஸி, ரோகிணி, பாத்திமா பாபு, மோகன், ஷைலஜா, டாக்டர் ஷர்மிளா, டிவி நடிகர் ராகவ், அவர் மனைவி, மற்றும் சில பிரபலங்களெல்லாம் சேர்ந்து வாலண்டியரா வொர்க் பண்ணியிருக்காங்க.. அத்தனை பேருமே திரைப்பட விழாவின் யூனிபார்மை போட்டுக்கிட்டு 7 நாளும் அரங்கத்தை வளைய வந்தது மிகப் பெரிய விஷயம்..!

கடைசி நாள்ல அமிதாப்பச்சன் வர்றாருன்றதால ரொம்பவே டென்ஷனா இருந்தாங்க மக்கள்ஸ்.. லோக்கல் கேபிள் சேனலுக்குக்கூட அழைப்பு கொடுத்திருந்ததால 30 டிவி சேனல்ஸ் கேமிராவோட வந்து நின்னுட்டாங்க.. பார்வையாளர்களுக்கு நடுவுல அவங்க ஸ்டேண்ட் போட.. பின்னாடியிருந்த மக்கள்ஸ் எழுந்து வந்து கத்த.. செம கலாய்ச்சலாத்தான் இருந்தது..!


செம பந்தாவா பென்ஸ் கார்ல வந்திறங்கிய அமிதாப்ஜியை ஓயிலாட்டம், மயிலாட்டம் குழுவினர் ஆடி, ஆடி வரவேற்றனர்.. காரில் இருந்து இறங்கியதுமே அவர்களைப் பார்த்து திரும்பி கையசைத்துவிட்டுத்தான் படியேறினார் அமிதாப்.. என்ன வேகம்..? என்ன வேகம்..? நம்ம சூப்பர் ஸ்டாருக்கு பின்னாடி இம்புட்டு ஸ்பீடா நடக்குறது இந்த இளைஞர்தாங்க..! மகளிரணியினர் கையில் விளக்கேந்தி அமிதாப்பை வரவேற்றாலும், அதனை ரிசீவ் செய்யக்கூட முடியாத அளவுக்கு தள்ளுமுள்ளில் மாட்டிக் கொண்டார் அமிதாப்..!


இப்போதைய தொகுப்பாளர் உலகத்தின் சூப்பர் ஸ்டாரினி ரம்யாவும், பார்த்திபனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாங்க.. உலக சினிமான்னு சொல்லிட்டு சினிமா பத்தின நிகழ்ச்சியையோ, தமிழ்ச் சினிமா பற்றிய விஷயத்தையோ சொல்லவே கூடாதுன்னு முடிவே கட்டிட்டாங்க..  அமிதாப்பை ராஜகம்பீரமாக உட்கார வைத்து அவருடைய படத்தின் பாடலை பாடியபடியே அவரை ஓவியமா வரைஞ்சாரு ஒரு கில்லாடி ஓவியர்.. நச்சுன்னு இருந்துச்சு.. அமிதாப் பார்த்து அதிசயித்து அவரை இழுத்து அணைத்துக் கொண்டபோது எதிர்பார்க்காத அரங்கம் அதிர்ந்தது..!


பார்த்திபன் ‘ஆக்ரி ராஸ்தா’ ஷூட்டிங்கில் பாக்யராஜிடம் அஸோஸியட்டாக பணியாற்றியதை அமிதாப்பிடம் குறிப்பிட்டு, அதில் பாக்யராஜ் எப்படி அரைகுறை ஆங்கிலத்தில் அமிதாப்பிடம் காட்சிகளை விளக்குவார் என்பதை அவர் ஸ்டைலில் சொன்னது மட்டுமே மேடை தொகுப்பில் உருப்படியான விஷயம்..

12 தமிழ்ப் படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது கொடுக்கும்போது யாருக்கு, யார் விருது கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் விட்டதால், ஒவ்வொரு முறையும் பக்கத்தில் இருந்து ஹிந்து ராமிடம், “நானா..? நீங்களா..?” என்று கேட்டுவிட்டு எழுந்து, எழுந்து நின்ற அமிதாப்பின் பக்குவமான குணம் வெரி நைஸ்..! இதுல வெற்றி பெற்ற படங்களை பற்றிய கதைச் சுருக்கத்தை ஆன் தி ஸ்பாட்டில் சுஹாசினி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அமிதாப்புக்கு சொன்னதும், அடுத்த படங்களுக்கு அவர் அருகில் காதோரம் போய் மொழி பெயர்த்ததும் இது தமிழ்நாட்டில் நடக்கும் விழா என்பதை சொல்லாமல் சொல்லியது..!


“வணக்கம். என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நன்றிகள். எனக்கு இவ்வளவுதான் தமிழ்ல பேசத் தெரியும்..” என்று எழுதிக் கொடுத்ததை குனிந்த தலை நிமிராமல் சொன்னபோது  பச்சன்ஜியை ரொம்பவே புடிச்சுப் போச்சு.. மனுஷன் ரொம்ப அடக்கமாத்தான் இருக்காரு..! தர்மேந்திராவைவிடவும் அமிதாப் ஏன் இந்தியால அதிகமா தெரிஞ்சிருக்காருன்னா இதுதான் காரணம் போலிருக்கு..!


கூடவே தன் பேச்சில் நெகிழவும் வைத்தார் அமிதாப். அடுத்தடுத்த வருடங்களிலும் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால், பேப்பர் பொறுக்கிப் போடுறது.. மேடைல சேர் எடுத்துப் போடுறதுன்னு நிறைய சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன்னு சொன்னப்போ சுஹாசினி மட்டுமே எழுந்து நின்று கை தட்டினார்..! வந்திட்டு சும்மா போனா நல்லாயிருக்காதுன்னு நினைச்சாரோ என்னவோ 11 லட்சம் ரூபாயை தானமாவும் கொடுத்திட்டுப் போனாரு அமிதாப்ஜி.. வாழ்க அமிதாப்ஜி.. இந்தக் காசை வைச்சு தாஜ் கோரமெண்ட்டல்ல அன்னிக்கு நைட்டே தண்ணி ஆறா ஓடுனதா கேள்விப்பட்டேன்..! சரி.. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.. நமக்கென்ன..? அடுத்த வருஷமாச்சும் இந்த 11 லட்சத்துல உட்லண்ட்ஸ் பாத்ரூமை கிளீன் பண்ணி வைச்சுத் தொலைஞ்சா நல்லாயிருக்கும்..!

கடைசி படமும் பார்க்க முடியலை.. அவசரமா வீட்டுக்குக் கிளம்பினா வழக்கம்போல நம்ம அப்பன், கோவணான்டி அவன் வேலையைக் காட்டிட்டான்.. வண்டி மக்கர்.. ஸ்டார்ட்டிங் டிரபுள்.. உட்லண்ட்ஸ் பக்கத்து தெருவுல இருந்த கடைல காட்டி நாஸிலை கழட்டி சுத்தம் பண்ணி போட்டுட்டு கிளம்பினா மறுபடியும் நின்றுச்சு.. திரும்பவும் அதே கடைக்குத் தள்ளிட்டே வந்து பார்த்தா கடை மூடியாச்சு.. ராத்திரி 9 மணியாச்சு.. என்னடா இது சோதனைன்னு வழக்கம் போல புலம்பிக்கிட்டே ராயப்பேட்டைல இருந்து ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் வண்டியைத் தள்ளிக்கிட்டே போய் ஸ்டேஷன் வாசல்ல இருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர்கிட்ட  மெக்கானிக் கடை பத்தி விசாரிச்சு, அடுத்த 2 வது தெருல கொண்டு போய் கொடுத்து அந்த சாமிகிட்ட கால்ல விழுகாத குறையாத கெஞ்சி கூத்தாடி, நாஸிலை மாத்தின பின்னாடிதான் வண்டி ஸ்டார்ட் ஆச்சு..!

ச்சை.. போதும்டா சாமி..! ச்சும்மா கையை வீசிக்கிட்டு நடக்கிறதே கஷ்டம்.. இதுல வண்டியை வேற தள்ளிக்கிட்டே போகணும்ன்னா..! மவனே.. அந்த கோவணான்டி மட்டும் என் கைல சிக்கினான்.. கைமாதான்.. சொல்லி வைச்சிருங்க..!

Read more: http://truetamilans.blogspot.com/#ixzz2GAwLEQpH

Ramesh Murugan

unread,
Dec 27, 2012, 1:53:14 AM12/27/12
to tamil...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்
இப்படியான ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு நம்ம குழும நண்பர்கள் யாரும் போகலையா??

2012/12/26 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஸ் பெ

unread,
Jan 11, 2013, 5:07:54 PM1/11/13
to panb...@googlegroups.com
http://tamildigitalcinema.com/?p=46192



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பயணி

unread,
Feb 12, 2013, 8:50:48 PM2/12/13
to tamil...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்

வணீக சினிமா உனக்கு பிடிக்கலைன்னா, பிடிக்கலைன்னு மட்டும் சொல்லு...... இப்படி எடுத்திருக்கலாம்... அப்படி எடுத்திருக்கலாம்னு சொல்லாத. ஏன்னா அவன் வியாபாரி, அவன் வியாபாரம் பண்ணத்தான் சினிமா எடுக்குறான். அவனிடம் நீ முரண்பட்டால் எது நல்ல சினிமான்னு நீ எடுத்துக்காட்டு. நல்ல சினிமாவுக்கான தயாரிப்பாளரை தேடு. இல்லன்னா நீயே தயாரிச்சு இயக்கு. ஒரு வியாபாரிக்கிட்ட கலை படைப்பை எதிர்பார்க்காத....... தமிழ் சினிமாவை உலக சினிமாவோடு ஒப்பிட்டு பேசுவதும், அதுக்கு நிகராக இங்க படமில்லன்னு சொல்றதும் இப்போ பேஷன் ஆகிடுச்சு. உலக சினிமாவோடு ஒப்பிடும்போது தமிழ் சினிமா ஒரு குழந்தை, அதன் வளர்ச்சி இனிமேல்தான் ஆரம்பமாக போகுது, தமிழ் சினிமாவ கையப்பிடிச்சு உலகத்தரத்துக்கான அதன் வளர்ச்சிக்கு உயர்த்தப்போகிறவர்கள் இதே சென்னையின் நெரிசலான தெருக்கலின் மிக சிறிய அழுக்கடைந்த அறைகளில் வெளிச்சத்தை எதிர்ப்பார்த்துக் காத்துகிட்டு இருக்காங்க.........

# பாலுமகேந்திரா சாருடனான இன்றைய உரையாடலில் இருந்து


2012/12/27 Ramesh Murugan <rames...@gmail.com>

இப்படியான ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு நம்ம குழும நண்பர்கள் யாரும் போகலையா??


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பயணி

unread,
Feb 12, 2013, 8:59:24 PM2/12/13
to tamil...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்
திரு.ஹரன்பிரசன்னா அவர்கள் வ​லைபதிவிலிருந்து மீள்பதிவு.
13
Feb 2013

தமிழில் உலகத் திரைப்படங்கள் வரிசை – பகடி மற்றும் மகுடி

 ”படம் பார்த்துட்டீங்களா? நல்லா இருக்கா?”

“படம் பார்க்கும்போதே பாதிலயே ஃபேஸ்புக்ல மெசேஜ் போட்டிருந்தேனே. படம் செம மொக்கைன்னு.”

“ஓ ஸ்டேட்டஸ் மெசேஜ் நான் பார்க்கலை. அவ்ளோ மொக்கையாவா இருக்கு?”

“பகடி படத்தைதான கேக்குறீங்க? செம மொக்கைங்க. இடைவேளை வரை உட்கார முடியலை. அதுக்கு பின்னாடி நிக்கக்கூட முடியலை. ஓடித்தான் வெளிய வந்தேன்.”

“ஒருவேளை உங்களுக்கு புரியலையோ?’

“என்னங்க புரியலை? படம் மொக்கைன்றேன். சரி, இந்தப் படத்துல புரியறதுக்கு என்ன இருக்கு? ஒரே சினிமாத்தானம். சகிக்க முடியலை. எப்ப பாரு காதல் காதல்னு. சுதந்திரத்துக்கு முன்னாடி நடக்கற படமாம், அப்பவும் காதலைத்தான் காமிப்பாங்களாம். கருமம்.”

“உங்களுக்கு புரியலையோன்னுதான் தோணுது. உதாரணமா ஒரு சீன் வரும் பாருங்க. கதாநாயகனும் கதாநாயகியும் முதல்ல பார்க்கிற சீன். வாவ், கிளாசிக் இல்ல?”

“என்ன கிளாசிக்? நேரடியா பார்க்கவேண்டியதுதான? அதென்ன கீழ கிடக்கிற மழைத்தண்ணில பார்க்கிறது? சரிங்க, அதுக்கு எதுக்கு அஞ்சு நிமிஷம்? இப்படித்தாங்க படம் முழுக்க மெல்லா போவுது.”

“இல்லைங்க, அது மழைத்தண்ணி. கிட்டத்தட்ட சாக்கடை. அதுல ஹீரோவுக்கு ஹீரோயின் முகம் தெரியுது. ஹீரோயினுக்கு ஹீரோ முகம் தெரியுது. சாக்கடைல மலர்ந்த செந்தாமரை மாதிரி.”

“அடக்க்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை? அது ஒரு குறியீடுங்க. அப்ப மழைத்தண்ணில ஒரு பூ விழுது பார்த்தீங்களா? அது இன்னொரு குறியீடு.”

“என்னங்க இது குறியீடுன்னு சொல்றீங்க? அதுவும் வெறும் குறியீடா வருதே, சாதா சீனே வராதா?”

“முழுசா கேளுங்க, கடவுளே அந்தக் காதலை ஆதரிச்ச மாதிரியான ஃபிரேம்ங்க அது.”

“டைரக்டருக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு நினைச்சேனே.”

“அஃப்கோர்ஸ். அதான் மழைன்னு இயற்கையை வெச்சார். உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல, ஸோ அது உங்களுக்கு கடவுள்.”

“ஓ, இதெல்லாம் நாமளா வெச்சிக்கிறதுதான் இல்ல?”

“நோ நோ, படத்தோட குறியீடு சொல்ற சங்கதி அது. அந்த சீன்ல, பூ விழுந்த உடனே, தேங்கிக் கிடக்கிற மழைத்தண்ணி லேசா அசைஞ்சு திரும்பவும் ரெண்டு பேரோட முகமும் தெரியுது பாருங்க, ஒரு பெண் ஒரு பூ. அவ வரவும் சலனம். அவளுக்குன்னா, ஒரு ஆடவன் பூ தர்றவன். அவன் வரவும் சலனம். கிளாஸ் இல்லை? அதுமட்டுமில்லை, பின்னாடி வரபோற கஷ்டங்களெல்லாம் தெளிஞ்சு அவஙக் நல்லா வாழ்வாங்கன்னு சொல்ற மாதிரி இல்லை?”

“அப்ப அந்த சீனோட படம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றீங்களா? நான் இது தெரியாம கடைசி வரை இருந்து முழுப்படத்தையும் பார்த்துட்டேனே.”

“சே சே. டைரக்டர் எவ்ளோ ரசிச்சி எடுத்திருக்கான் பாருங்கன்னு சொல்லவந்தேன்.”

“படம் நாம ரசிச்சு எடுக்கத்தான எடுக்கணும்? சரி, அதுக்கும் எதாவது சொல்வீங்க.”

“கதையாவது உங்களுக்குப் புரியுதா?”

“என்னங்க புரிய இருக்கு? ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான். அப்ப சுதந்திரப் போராட்ட காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரி அதை எதிர்க்கிறான். ஏன்னா அவனுக்கு இவ மேல ஒரு கண்ணு. இவன் அவனை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்கிறான். இதுல என்ன புரியாம இருக்கு?”

“இல்லைங்க, அப்படி நேரடியா பார்க்கக்கூடாது.”

“படம் பார்க்கும்போது நான் கொஞ்சம் கோணலா தலையை சாச்சுத்தான் பார்ப்பேன். வீட்டுலயே கிண்டல் பண்ணுவாங்க.”

“அதைச் சொல்லலை. ஒரு படத்தை படமா பார்க்கக்கூடாது.”

“ஐயையோ. 30 வருஷமா அப்படித்தானே பார்த்துட்டேன்.”

“அதுதான் உங்க பிரச்சினையே. இப்ப பாருங்க. ஹீரோ ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறதை சும்மா காதலுக்காக எதிர்க்கிறான்னு நினைக்கக்கூடாது. இந்தியனைப் பொருத்தவரை பொண்ணுதான் மண்ணு. மண்ணுதான் நாடு. எனவே அவன் நாட்டுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறான்னு பாக்கணும்.”

“அடக்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை. அப்படித்தாங்க படத்தை பார்க்கணும்.”

“ஆனா படத்துல அதை சொல்லவே இல்லையேங்க.”

“சொல்லமாட்டாங்க. படம்னா அது கேக்கிறதுக்கு இல்லை. பாக்கிறதுக்கு.”

“என்னங்க மொதல்ல நேரா பாக்ககூடாதுன்னீங்க, இப்ப கேக்கக்கூடாதுன்றீங்க. தியேட்டருக்கு போய் என்னதான் பண்றது?”

“கிண்டல் பண்ணாதீங்க சார்.”

“யாரு நானா?”

“சரி விடுங்க, இப்ப பாருங்க அது வெறும் காதல் கதையாவா தோணுது? ஏன் அதை சுதந்திரக் காலத்துல வெச்சான்னு யோசிங்க. காதல்ங்கிறது ஒரு குறியீடு இங்க.”

“இந்த குறியீடுன்றதுதாங்க எனக்கு புரியலை. படத்துல பாட்டு வருது, ஃபைட்டு வருது, அதெல்லாமேவும் குறியீடுதான்றீங்களா?”

“சே சே. அதெல்லாம் சும்மா சீனுங்க.”

“ஏங்க எப்ப குறியீடு வருது எப்ப சாதா சீன் வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது? ஏன் இந்த டைரக்டர் குறியீடு வர்ற சீனெல்லாம் ஒரு ப்ளஸ் சிம்பல் போட்டுக் காமிக்கக்கூடாது?”

“இப்பத்தானே சொன்னேன், படம்ங்கிறது கேக்கிறது இல்லை, பார்க்கிறதுன்னு. நீங்களா யோசிக்கணும் சார்.”

“இல்லைங்க, நானும் ப்ளஸ் சிம்பலை காட்டத்தான் சொன்னேன், ப்ளஸ்னு சொல்லச் சொல்லலை.”

“கிண்டல் பண்ணாதீங்க சார். இன்னும் இது மாதிரி நிறைய சீன் இந்தப் படத்துல இருக்கு. ஒரு சீன்ல பாருங்க, அந்தப் பொண்ணோட அப்பா தற்கொலை பண்ணிக்கிற சீன்ல வெறும் கயிறு மட்டும் ஆடிக்கிட்டே இருக்கு பார்த்தீங்களா?”

“என்னது அவங்க அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாரா?”

“ஏன் அதிர்ச்சியாகறீங்க? அவங்க அப்பாதானே?”

“அது இல்லைங்க, அந்த கயிறு ஆடற சீன்ல நானும் அப்படித்தான் நினைச்சேன். நினைச்சேனா. அடுத்த சீன் வந்தது. வந்ததா. அதுல பார்த்தீங்கன்னா அவங்க அப்பா உயிரோட வாரான். அப்பாடின்னு எனக்கு அப்பதான் உசிரே வந்தது.”

“தப்புங்க, உசிரே போயிருக்கணும்.”

“அது படம் முடியும்போது நடந்ததுன்னு வைங்க.”

“சே, நான் அதைச் சொல்லலைங்க. அந்த கயிறு ஆடும்போது அவன் செத்தான்னு நினைச்சீங்களா? அதுவரைக்கும் சரி. அடுத்த சீன்ல அவன் ஏன் உயிரோட வர்றான்? அதுக்குப் பிறகும் ஏன் கயிறு ஆடிக்கிட்டே இருக்கு? ஏன்னா அவன் செத்த பொணமா நடமாடறான்னு அர்த்தம்.”

“அடக்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை இருக்கு. கயிறு ஏன் ஆடிக்கிட்டே இருக்கு, வீட்டுல அதை யாருமே அவுத்து எறியலையான்னு தோணுனா நீங்க சாதாரணமா பார்க்கிறீங்கன்னு அர்த்தம். ஆனா பாருங்க, அந்த வீட்டுல கயிறே இல்லை. கயிறுன்றது உங்க கற்பனை.”

“ஐயையோ இது பேய்ப்படமா அப்ப?”

“விளையாடாதீங்க சார். உண்மைல உங்க மூலமா படத்தை இயக்குநர் பார்க்கிறார். உங்களுக்கு அவன் செத்துட்டான்னு தோணனும்னு சொல்ல வர்றார். ஆனா பாருங்க அவன் சாகலை. அதாவது படத்தைப் பொருத்தவரைக்கும் சாகலை.”

“புரியலைங்க சார்.”

“இல்லைங்க இது ஒரு உத்தி.”

“மொதல்ல குறியீடுன்னு சொன்னீங்களே, அது மாதிரியா சார்?”

“இல்லைங்க அது குறியீடு. இது உத்தி.”

“ஓ.”

“இப்ப புரியுதா! என்ன உத்தின்னா, படத்தை படமாவும் பார்க்கணும். நீங்களாவும் பார்க்கணும். படத்துல உங்களுக்கே இடம் தர்றது.”

“இல்லைங்க, எனக்கு நடிப்பெல்லாம் வராது.”

“இல்லைங்க, பார்வையாளனா இடம் தர்றது. இது ஒரு உத்தி.”

“அந்நியன் படம் பார்க்கும்போதே நான் இப்படி பார்க்கலையேங்க.”

“அந்நியனெல்லாம் கேக்கிற படம். இது பார்க்கிற படம்.”

“அப்புறம் எதுக்குங்க இந்த படத்துல ம்யூசிக், பாட்டு, வசனமெல்லாம்.”

“குட் கொஸின். உண்மைல சொல்லப்போனா நீங்க ம்யூசிக், பாட்டு, வசனத்தையெல்லாம் கூட பார்க்கணும்.”

“என்ன சார் பயமுறுத்துறீங்க.”

“ஐமீன், அப்ர்சவ் பண்ணனும்னு சொல்லவந்தேன்.”

“அப்சர்வேஷனா? என்னங்க இது பேஷண்ட்டை ஐசியூல சேர்த்திருக்கிற மாதிரி சொல்றீங்க. வெறும் படம்தானே இது.”

“என்னங்க வெறும் படம்னு சொல்லிட்டீங்க. படம் முழுக்க குறியீடு உத்தின்னு கலக்கியிருக்காங்க. பின்நவீனத்துவப் படம். சாதா படத்தை பார்க்கிற கண்ணோட இதையும் பார்க்காதீங்க.”

“காதையும் கழட்டிட்டு கண்ணையும் கழட்டிட்டு நான் என்னத்தைங்க பார்க்கிறது.”

“வித்தியாசமான கண் ஐ மீன் கண்ணோட்டத்தோட பாருங்க. உங்களையும் ஒரு பிரதிக்குள்ள வெச்சிப் பார்க்க வைக்கிற படம் தமிழ்ல இதுதான் முதல்ல வந்திருக்கு. அதான் உங்க குழப்பமே.”

“பின் நவீனத்துவப் படம்னு என்னவோ சொன்னீங்களே, அப்படி ஒரு படம் வந்திருக்கா?”

“அது படம் பேரு இல்லைங்க. அது ஒரு உத்திங்க.”

“அதுவுமா?”

“பின்ன, ஒரு படம்னா சும்மா இல்லைங்க.”

“நான் நெஜமாவே சும்மான்னு நினைச்சுட்டேங்க.”

“அப்படி நினைக்காதீங்க. நீங்க வெறும் 60 ரூபாய் கொடுத்து பார்த்துடறதால உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வருது. இதுவே 6000 ரூபாய் கொடுத்து பார்த்தா இப்படி தோணுமா, யோசிச்சு பாருங்க.”

“ஐயையோ ஒரு படத்துக்கு 6000மா? நினைக்கவே நடுங்குதே. படம் நல்லா இல்லைன்னாகூட நான்லாம் நல்லா இருக்குன்னுதான் சொல்வேங்க.”

“எக்ஸாட்லி.”

“இன்னொரு சீன்ல ஒரு டவுட் எனக்கு. கேக்கவே ஒரு மாதிரி இருக்கு. ஆனாலும் உங்ககிட்ட கேளுங்க.”

“குட் குட் கமான். படத்தை இப்படி பேசிப் பேசித்தான் பார்க்கணும்.”

“தாயோளி, எங்க வீட்ல படம் பார்க்கும்போது பேசாத பேசாதன்னே வளர்த்துட்டானுங்க.”

“கூல், சரி, உங்க டவுட்டை கேளுங்க.”

“படத்துல கடைசி சீன்ல எல்லாம் முடிஞ்ச பின்னாடி ஏங்க பொண்ணோட அப்பா அழற மாதிரி வருது? நெஜமாவே புரியலை. நான்கூட அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சேன்.”

“இல்லைங்க, ஒரு படைப்பு முடியும்போதுதான் தொடங்கணும்.”

“என்னங்க இது, முடியும்போது முடிஞ்சாத்தான படம் முடியும். தொடர்ந்தா எப்பத்தான் படம் முடியும்.”

“யூ ஸீ, நீங்க அப்ப வேறாளாயிடறீங்க. நீங்க படத்துல இல்லை. வெளியில இருக்கிறீங்க. படம் என்னவோ திரைல முடிஞ்சிடுது. ஆனா உங்க மனசுல உங்களுக்கு நீங்களே எடுக்கிற படம் முடியறதே இல்லை.”

“நான் படம்லாம் எடுக்கிறதில்லைங்க.”

“நோ நோ, அதைச் சொல்லலை. உண்மைல ஒவ்வொருத்தன்குள்ளையும் ஒரு படம் இருக்கு. ஒரே படம்தான், ஆனா ஒவ்வொருத்தர்குள்ளையும் ஒவ்வொரு மாதிரி இருக்குன்றேன்.”

“புரியலைங்க, ஆனா கேக்க நல்லா இருக்கு.”

“புரியும். அவன் ஏன் அழறான்னு நீங்க யோசிக்கும்போது உங்களுக்கு பல காரணங்கள் வரலாம். இன்னொருத்தருக்கு இன்னும் பல காரணங்கள் வரலாம். அப்ப ஒவ்வொருத்தர் குள்ளையும் பல விதமா படம் தொடருது. அதுக்குத்தான் டைரக்டர் அப்படி அந்த சீனை வெச்சிருக்கார்.”

“அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சதை யோசிச்சா எனக்கே கேவலமா இருக்கு சார். எனக்கெல்லாம் பத்தாது சார். சரி சார், நீங்க யோசிச்சீங்களா சார், உங்களுக்கு என்ன என்ன காரணம்லாம் வந்தது?”

“ஸாரிங்க, நான் ரொம்ப வேலையா இருந்துட்டேன், யோசிக்கலை, ஆனா காரணம் இருக்கும்னு மட்டும் யோசிச்சிக்கிட்டேன். நீங்க சும்மாதானே இருக்கீங்க, யோசிச்சுப் பாருங்க.”

“ஆமா சார், நான்லாம் ரொம்ப வளரணும். இது தெரியாம பகடி படத்தை மொக்கைன்னு சொல்லிட்டேன். திரும்பப் போய் நல்லா இருக்குன்னு சொல்லவும் வெக்கமா இருக்கு.”

“நோ நோ, இதெல்லாம் இலக்கிய உலகத்தில் சாதாரணம்.”

“ஓ அப்படி ஒரு உலகம் இருக்கா சார். என்னை நினைச்சு எனக்கே கேவலமா இருக்கு சார்.”

“ஒரு படைப்பை முதல்ல நல்லா இல்லைன்னு சொல்லிட்டு, பின்னாடி அதுதான் உலகத் தரம்னு சொல்றதெல்லாம் இங்கே சகஜம். அதை மீள் பார்வை பண்ணனும். அவ்ளோதான்.”

“ஓ மீள் பார்வை இல்ல? நான் இன்னொரு தடவை பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டேன். படைப்பு இல்ல? சே, நான் படம்னு நினைச்சுட்டேன்.”

“வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியா வரும். மொத்தத்துல பகடி ஒரு உலகத் திரைப்படம்.”

“உலகத் திரைப்படமா? டைரக்டர் இதையாவது படத்துல சொல்லிருக்கலாம். நான் ஏதோ குன்னத்தூர் பொட்டைல இருக்கிற ஒருத்தன்ல  கல்லுப்பட்டில இருக்கிற பொண்ணுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கான்னு நினைச்சுட்டேன்.”

“உலகத் திரைப்படம்னு சொல்லமாட்டாங்க. நாம்தான் அதை உலகத் திரைப்படம்னு புரிஞ்சிக்கணும். ஏற்கெனவே சொன்னேனே, ஒரு படம் அது படம் அதோட அது உங்க படம்னு.”

“ஆமா, சொன்னீங்கள்ல. உலக திரைப்படம்னா என்ன சார்.”

“உலகத் திரைப்படம்னா… வெல்… வாட் ஐ கேன் ஸே இஸ்… வெல். ஐ கேன் ஸே இட் அ வேர்ல்ட் மூவி. பிரிஸைஸ்லி வேர்ல்ட் சினிமா”

“வேல்ர்ட் சினிமான்னா?”

“வாட் டூ சே, யெஸ், எக்ஸாட்லி, வேர்ல்ட் கிளாஸ் சினிமா.”

“ஓ. நான் உலக திரைப்படமெல்லாம் பார்த்ததில்லைன்றதால எனக்கு சட்டுன்னு பிடிபடலை. இப்ப கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருக்கு.”

“ஒரு படம் உலகத் திரைப்படமான்னு சொல்றதுக்கு நீங்க உலகத் திரைப்படமே பார்த்திருக்கவேண்டியதில்லைன்றதுதான் இதுல இருக்கிற ஐரனி.”

“ஓ ஐரனி. நாம இன்னும் நிறைய பேசணும் சார்.”

“பேசலாம் இல்லை பிரதர், விவாதிக்கணும். விவாதம். சரியா சொல்லணும், சரியா?”

“சரிங்க, நாம விவாதிப்போம்.”

“சரிங்க, இன்னொரு நாள் பார்ப்போம்.”

.

.

.

“என்ன சார் எப்படி இருக்கீங்க.”

“நீங்க சொன்னதெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு நேத்தும் ஒரு படம் பார்த்தீங்க.”

“ப்ரில்லியண்ட். என்ன படம்.”

“மகுடின்னு ஒண்ணு வந்திருக்கே அது.”

“ஓ அதுவா, செம மொக்கையாச்சே.”

“அப்படித்தாங்க நானும் நினைச்சேன். ஆனா விடலை. கண்ணை மூடி கொஞ்ச நேரம், காதைப் பொத்தி கொஞ்ச நேரம், யோசிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம், படம் போனதே தெரியலைங்க. சட்டுன்னு முடிஞ்சிட்டு. செம விறுவிறுப்பு.”

“அடச்சே, அது செம மொக்கை படங்க. அதுல என்ன இருக்குன்னு சொல்றீங்க?”

“என்ன சார் இது. வில்லன் ஹீரோவை அடிக்கிறான். ஹீரோ தோத்துடறான். முந்தாநாள் வரை எனக்கும் இது சப்புன்னுதான் இருந்திருக்கும். ஆனா நீங்கதான் சார் ஒரு படத்தை பார்க்கச் சொல்லிக்கொடுத்தீங்க. தெய்வம் சார் நீங்க. ஹீரோ சேரிலேர்ந்து வர்றான். வில்லன் சிட்டி. சிட்டிக்காரன் சேரியை அடிக்கிறானான்னு யோசிச்சேன் பாருங்க, என் ரத்தமெல்லாம் பொங்கிட்டு. டைரக்டரை நினைச்சுக்கிட்டு ஒரு புல்லரிப்போட அப்படியே கையைத் தட்டுனேன் பாருங்க. பக்கத்துல இருக்கிறவனெல்லாம் மெர்சலாயிட்டான். நல்லவேளை, ஒண்ணு ரெண்டு பேர்தான் இருந்தான்னு வைங்க.”

“இல்லைங்க, இது நீங்களா யோசிக்கிறது. இதுல என்ன குறியீடு இருக்கின்றீங்க.”

“ஆமாங்க, சட்டுன்னு அந்த வார்த்தை ஞாபகத்துக்கு வரலை. குறியீடு. மனசுல வெச்சிக்கணும். என்னா குறியீடு இல்லை?!”

“இல்லைங்க, இதுல குறியீடே இல்லை. எல்லாப் படத்துலயும்தான இப்படி வருது?”

“ஏன், எல்லாப் படத்துலயும் குறியீடு வரக்கூடாதா சார்?”

“அப்படீன்னா அது கிளிஷே.”

“அது யாரு கிளிஷே? அதை நீங்க அன்னைக்கு சொல்லலியே.”

“இல்லைங்க, அது வேற சங்கதி. ஆனா இந்த மகுடி மரண மொக்கைங்க. பகடி மாதிரி வராது.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இல்லைங்க, நீங்க அந்தப் படத்தோட டைரக்டர் யாருன்னு பார்த்துட்டுதான் குறியீடா கிளிஷேவான்னு பார்க்கணும்.”

“ஓ அப்படி வேற இருக்கா?”

“ஆமா, நீங்க நாளைக்கு வாங்க, நான் ஒரு லிஸ்ட் தர்றேன், அவங்க படத்துல மட்டும் நீங்க குறியீடு உத்தி பின்நவீனத்துவம் பார்த்தா போதும். மத்த படங்களெல்லாம் கிளிஷே.”

“இது கொஞ்சம் பெட்டரா இருக்குங்க.”

“நவ் யூ அர் கிளியர் ஐ கெஸ்.”

“ஆமாங்க.”

“இப்படியே பார்த்துப் பழகிட்டீங்க நீங்க என்னைவிடப் பெரியாளாயிடுவீங்க.”

“ரொம்ப சந்தோஷம் சார், ரொம்ப தேங்க்ஸ். லிஸ்ட்டை மறந்துடாதீங்க ப்ளீஸ்.”

[ஆப்த நண்பர் ஒருவர் கடல் திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது, சாத்தான் தலைகீழாகத் தொங்கும்போது தேவன் தலைகீழாகத் தெரிகிறார் என்று எழுதியிருந்தார். அதை இன்னொரு ஆப்த நண்பரும் சிலாகித்திருந்தார். அப்போது ஏற்பட்ட கடும் மனநெருக்கடியின்போது எழுதியது இது. அந்த இரு நண்பர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். :>]

sk natarajan

unread,
Feb 12, 2013, 9:28:45 PM2/12/13
to tamil...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்
ஹா ஹா ஹா

படித்து முடித்ததும்  தலை சுற்றுவது போல உணர்ந்தேன் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/2/13 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Feb 21, 2013, 11:18:58 AM2/21/13
to tamil...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்
பிரபல பத்திரிகை அலுவுலகத்திற்குள் சில மாதங்களுக்கு முன் சென்ற போது அவரைப் பார்த்தேன்.அவரை அதிகம் பரிச்சயம் இல்லா விட்டாலும் பல வருடங்களுக்கு முன்னாள் அவர் நான் திரைப் படம் எடுக்கும் விபரீத ஆசையில் இருந்த போது ஒரு ஸ்க்ரிப்டை கொடுக்க வந்திருந்தார்.

அது மிக சுமாராக இருந்தது.அப்பொழுது அவர் கமலிடம் பனி புரிந்து கொண்டு இருந்தார்.கமலின் மேல் ஒரு பிரமிப்பில் இருந்த சிலரில் அப்பொழுது நானும் ஒருவன்.கமலிடம் இருக்கிறார் என்றால் ஓரளவுக்கு விஷயம் தெரிந்தவரை இருப்பார் என்று நினைத்ததும் உண்டு.

அவர் இப்பொழுது அந்த சினிமா பத்திரிகையில் பொறுப்பாசிரியர் ஆக உள்ளார் உலகப் படங்களைப் பற்றி அவர் பொறுப்பில் இருக்கும் பத்திரிக்கையில் எழுதலாம் என்று கேட்டேன்.அதற்க்கு என்ன எழுதலாமே என்றார்.நான் ஆசிரியரிடம் அனுமதி வாங்கி விடுகிறேன் என்றார்.

அந்த தொடரை தொடங்க கிட்ட தட்ட பதினேழு முறை அவரை சந்திக்க வேண்டியதாயிற்று..மூன்று முறை ஒரே மேட்டரை மின் அஞ்சல் மூலமும் இரண்டு முறை பிரிண்ட் அவுட்டும் எடுத்து தர வேண்டியதாயிற்று.

நல்ல படங்களை பற்றி மட்டும் எழுத வேண்டும் என்று தீர்மானித் த நான் ஒரு பட்டியலும் தந்தேன்.

உலகத் திரைப் படங்களுக்கும் எனக்கும் ஒரு பிணைப்பு சுமார் முப்பது வருண்டங்களுக்கு முன்னமே ஏற்பட்டு விட்டது.

உலகின் பட மொழி எனக்கு வசியமாகிப் போனது.உன்னத திரைப்படங்களின் கதையும் காட்சிகளும் வசனங்களும் என் மனதில் ஆழப் பதிந்து விட்டன.

மாதம் இருமுறை இதழ் என்பதால் இரண்டு இதழ்களுக்கு கட்டுரை படங்கள் அணைந்தையும் தந்து விட்டேன்.

ஆனாலும் அவர் காலம் கடத்தி வந்தார்.பல மனிதர்களைப் படிக்க தெரிந்த எனக்கு அவரை படிக்க முடியாமல் போனது ஆச்ச்ரயமே!

கட்டுரை வரும் அச்சுக்கு ஏறும் சில நாட்களுக்கு முன் எனக்கு அவருடன் ஏற்பட்ட சந்திப்புகளில் சில விஷயங்கள் எனக்கு தெளிந்தன.

1. அவருக்கு உலகப் படங்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை

2.மின் அஞ்சலை எப்படி திறப்பது என்பதும் ,அஞ்சலில் இணைந்திருக்கும் படத்தை எப்படி இறக்குவது எனபதும் தெரியவில்லை.

3.ஒரு கட்டுரையின் அர்த்தம் பொருள் சிதையாமல் சுருக்க ,எடிட் செய்ய அவருக்கு தெரியவில்லை.

4.இதழியல் பற்றிய அடிப்படை அறிவு சுத்தமாய் இல்லை.

5.கமலிடம் வேலை செய்தவர்கள் உலகத் திரைப் படங்கள் பற்றி அறிந்திருப்பார்கள் என்றும் ஓரளவேனும் சினிமா அறிவு பெற்றவர்களாக ஆங்கில அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நாம் தீர்மானித்து விடக் கூடாது.

பத்திரிக்கைகளில் சில ஆசிரியர்கள் முட்டாள்களை தங்களுக்கு கீழ் வைத்திருப்பது போல் சினிமா உலகிலும் வைத்திருப்பார்கள் போல.

இது எனக்கு மிகவும் அதிர்ச்சி ஊட்டுவதாய் இருந்தது.

ஒரு பொறுப்புக்கு வருபவர் அந்த பொறுப்புக்கான அடிப்படை அறிவை பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது அந்த பொறுப்பு தனக்கு நட்பு மூலமாகவோ விதி வசத்தாலோ அமைந்தால் தன்னை அந்த பொறுப்புக்கு தகுதியானவராக விஷயம் ஞானங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நான் எழுதிய முதல் படம் பற்றிய தகவலில் காட்சியமைப்பின் விவரிப்பில் அந்த கதையின் மூல வேறான நிற வேறுபாட்டை பற்றிய வரிகளை வெட்டி வீசி விட்டார் வீணையின் நரம்புகளை பிய்த்து எறிவது போல.அதில் ஒரு வசனம் வரும் 'ஸ்டே த பக் அவுட் ஆப் மை டோர் என்று ,அந்த வாசகத்தை வைத்தே தன்னிடம் எழுத்து சம்பந்தப் பட்ட கோரிக்கையை வைக்கும் கருப்பு இன மாணவனிடம் வெள்ளை இன எழுத்தாளர் 'இதை வைத்தே ஐநூறு வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுதி வா என்பதாக (சொல்வதாக.) தெரிவிக்கும் காட்சி.

பக்கத்திற்கு பக்கம் நடிகைகளின் கொழுத்தப் பிரதேசங்களை வெளியிடும் அவர் கட்டுரயில் பக் என்கிற வார்த்தை வரக் கூடாது என்று அதை வெட்டி எறிந்து விட்டார். படத்தின் முக்கிய காட்சிகளில் அது ஓன்று.
ஃபைண்டிங்க் ஃபாரஸ்டர் என்கிற அந்த படத்தின் தலைப்பில் என் அக்கனா வரும் என்று கேட்டார் அக்கன்னா போடாமல் அதை போட்டால் பைண்டிங் என்கிற பொருள் படும்.அது சார்ந்த அல்லது காடுமானம் என்கிற பொருள் படும் மேலும் பாரஸ்டர்ரில் அக்கன்னா போடா விட்டால் அது வன வேட்டையாடுபவர் என பொருள் படும் என அவருக்கு ஆரம்ப பாடம் எடுக்கவும் வேண்டி இருந்தது.பத்த்ரிக்கையில் தொடராக ஒரு நல்ல விஷயத்தை எழுதலாம் என்று செல்பவர்கள் இது போன்ற பிரகஸ்பதிகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை தெரிவிக்கவே இந்த இடுகை..

அந்தப் படத்தின் உன்னதங்களை நீங்கள் படிக்கலாம்.

உலகத் திரைப்டங்களை அறிந்து கொள்ளுங்கள் - 1

சுப்ரஜா

ஃபைண்டிங்க் ஃபாரஸ்டர்

எத்தனைப் படங்கள் பார்த்தாலும் இந்தப் படத்தினைப் பார்த்த பிறகு உங்களுக்கு நல்லப் படம் என்று யாராவது கேட்டால் இந்தப் படத்தின் பெயர் தான் முதலில் நினைவில் வரும்.ஆங்கிலப் படங்கள் என்றாலே பலான காட்சிகள் கொண்ட படம் என்று தான் பலருக்கு இன்னமும் ஒரு எண்ணம் இருக்கிறது.மசாலாத் தன்மை இல்லாமல் ஒரு படத்தில் கொஞ்சமும் அசையாமல் உட்கார வைக்க முடியுமா?

முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் கஸ் வான் சாண்ட்.இவர் பிறந்தது அமெரிக்காவின் கெண்டுகி மாகாணத்தில் பிறந்தவர்.இவர் தொலைக் காட்சி விளம்பரங்களைத் தான் முதலில் எடுத்துக் கொண்டிருந்தார்.ஒவியக் காரர்,புகைப் படக் கலைஞர்,எழுத்தாளர் என பன் முகங்களைக் கொண்டிருந்தவர் முதலில் இயக்கியப் படம் மல நாச்( 1985 ) அதன் தொடர்ந்து பல முழு நீளப் படங்களையும் குறும் படங்களையும் எடுத்து குவித்தார்.இவரின் சில படங்கள்

Mala Noche (1985)
Drugstore Cowboy (1989)
My Own Private Idaho (1991)
Even Cowgirls Get the Blues (1993)
To Die For (1995)
Good Will Hunting (1997)
Psycho (1998)
Finding Forrester (2000)
Gerry (2002)
Elephant (2003)
Last Days (2005)
Paranoid Park (2007)
Milk (2008)
Restless (2011)
Promised Land (2012)

1960 ல் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் இயக்கிய சைகோவை இவர் மீண்டும் இயக்கினார்.ஹிட்ச்காக்கின் அதே சஸ்பென்ஸ் குறையாமல்,கதையையும் மாற்றாமல் வண்ணத்தில் இவர் 1998ல் இயக்கிய விதம் பலரை புருவம் உயர வைத்தது.இவரின் படங்கள் அனைத்தும் பரவலாகப் பாராட்டப் பட்டாலும் , பேரனாய்ட் பார்க்.,குட் வில் ஹண்டிங்,மில்க்(ஒரினச்சேர்க்கை),ப்ராமிஸ்ட் லேண்ட் ஆகியவை அதிக கவனத்தினை ஈர்த்தவை.

ஃபைண்டிங்க் ஃபாரஸ்டர் அதிக கவனம் பெற்றதற்கு காரணம் கதையின் மையம் இன்றும் அமெரிக்காவில் என்றோ துளிர்த்து இன்று மரமாய் வளர்ந்து நிற்கும் நிறப் பேதம் தான்.வெள்ளைக்காரன் புத்திசாலி.கருப்பு இனத்தவன் புத்தி குறைவானவன்,அவனுக்காக விதிக்கப் பட்ட வசிப்பிடம்,அவனுக்கான விளையாட்டு,வேலை எல்லாமே தீர்மானிக்கப் பட்டது என்பது போல் இன்றும் வெள்ளையனின் கருப்பு மனதில் இருக்கும் எண்ணம் தான்.

இதை நான் உரக்கச் சொல்வதற்கு காரணம் கதையும் கதையின் களமும்,போக்கும் நமக்கு தெரிவிக்கும் செய்திதான்.காட்சி அமைப்புகளிலும் சரி,வசனங்களிலும் சரி கருப்பு இனத்தவர்கள்ப் பற்றி அமெரிக்க வெள்ளையர்கள் வைத்திருக்கும் எண்ணம் தான் பிரதிபலிக்கிறது.

கதை

ஜமால் வாலஸ் பதினாறு வயது அமெரிக்க கருப்பு நிறத்தவன்.படத்தின் ஆரம்ப காட்சியில் ஜமால் புத்தகங்கள் சுற்றிக் கிடக்க படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியில் படுத்திருக்கிறான்.அவனது தாய் எழுப்புகிறாள்.கருப்பு இனத்தவர் மட்டுமே படிக்கும் பள்ளியின் பாஸ்கட் ஃபால் கோர்ட்டில் நண்பர்களை சந்திக்கிறான்.அவர்களது கண் படும் தூரத்தில் ரோடின் மறுப் பக்கம் உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடி கட்டடம்.அதில் தான் யாருடனும் பேசாத,ஒட்டாத எழுத்தாளர் வில்லியம் ஃபாரஸ்டர் வசிக்கிறார்.அவரது அடுக்கு மனையின் ஜன்னல் திரைச் சீலை எப்பொழுதாவது விலகும்.அதிலிருந்து தூர நோக்கியை வைத்து அவர் பார்ப்பதை சொல்கிறான் ஜமாலின் நண்பன் ஒருவன்.

''அவரை நம்மால் பார்க்க முடியாது,அவர் நம்மை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்"உளவியல் ரீதியான இந்த வசனமே நிறப் பேதத்தை உள் பொதித்து நிற்கிறது."அவர் வெளியிலேயே வராமல் இருக்கிறார்,எங்காவது யாரையாவது கொலை செய்து விட்டு இங்கு வந்து பதுங்கியிருக்கிறார்"என்று ஒருவன் சொல்ல அவர்களின் பேச்சு ஜமால் அவரது பிளாட்டின் உள்ளே போய் பார்த்து விட்டு வர வேண்டும் என்பதில் நிற்கிறது.ஜமாலும் நண்பர்களின் தூண்டுதலின் பேரில் உள்ளே போய் வர சம்மதிக்கிறான்.இரவில் அடுக்கு மாடி கட்டத்தின் பின் புற ஏணி வழியே ஏறி அவரது ஜன்னல் வழியே உள்ளே செல்லும் ஜமால் முதல் வேலையாக வீட்டின் வாசல் கதவுத் தாழ்ப்பாள்களை விலக்கி வைத்துக் கொள்கிறான்.பின் உள்ளே வட்டமிடுகிறான்.தொலைக் காட்சி ஒடிக் கொண்டிருக்கிறது.எங்குப் பார்த்தாலும் புத்த்தகங்கள்.டேபிள் மேல் இருக்கும் கத்தியை எடுத்து தனது ஷோல்டர் பேக்கில் வைத்துக் கொள்கிறான்.ஒவ்வொரு இடமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் போது தபாரென்று சப்தம் எழுப்பிக் கொண்டே குதிக்கிறது ஒரு உருவம்.அலறி அடித்துக் கொண்டு தனது ஷோல்டர் பேக்கை அப்படியே போட்டு விட்டு ஒடுகிறான்.மறு நாள் பள்ளிக்கு கிளம்பும் முன் பாஸ்கட் பாலை வீட்டிற்குள் தட்டிக் கொண்டே பள்ளிக்கு கிளம்ப அவன் தாய்,''மைக்கேல் ஜோர்டனின் ரேகைகளை வீடெங்கும் தரையில் பதிக்காதே"என்கிறார்.பேக் இல்லாமல் அவன் பள்ளிக்கு கிளம்புவதைப் பார்த்து ''ஸ்கூல் பேக் எங்கே?" என்று கேட்கிறாள்.அவன் பதில் சொல்லாமல் வெளியில் செல்கிறான்.

ஃபாஸ்கட் பால் கோர்ட்டில் அவன் தனியாக விளாயாடிக் கொண்டிருக்கும் வேளையில் நிமிர்ந்துப் பார்க்க அவன் பேக் ஜன்னலில் மாட்டி தொங்க விட்டிருப்பது தெரிகிறது.அப்பொழுது பி.எம்.டபுள்யூ காரில் ஒருவன் வந்து இறங்குகிறான்.அவன் மேலே உள்ள தனிமை ஆசாமிக்கு பொருட்களை சப்ளை செய்ய வந்தவன்.அவன் ஜமாலைப் பார்த்ததும் தனது கார் சரியாக பூட்டியிருக்கிறதா என தனது கீ செய்ன் மூலம் மறு உறுதி செய்கிறான்.ஜமாலை அது உறுத்துகிறது.

''நான் ஒன்றும் உங்கள் காரை செய்து விடப் போவதில்லை"என்கிறான்.அதற்கு அந்த வெள்ளைக் கார இளைஞன்,''இது வெறும் கார் மட்டுமில்லை,இது பி.எம்.டபுள்யூ'என்கிறான்.அவன் ஒரு கருப்பு நிற இளைஞனுக்கு அதிகம் கார் பற்றி என்னத் தெரிந்து இருக்கப் போகிறது என்கிற தொணியில் பேசுகிறான்.ஜமால் உடனே அந்த காரை உருவாக்கிய நிறுவனம் முதலில் ஏரோப்ளேன் செய்து கொண்டிருந்ததில் ஆரம்பித்து முதலில் அது ஒற்றை இஞ்சினில் செயல் பட்டதில் தொடர்ந்து சரித்திரம் முழுவது சொல்ல வெள்ளைக்கார இளைஞன் வாய் அடைத்து பொருட்கள இருந்த அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறான்.

இந்த தருணத்தில் ஜமாலின் முன்னால் அவன் ஸ்கூல் பேக் வந்து பொத்தென்று விழுகிறது.அதன் உள்ளே திறந்துப் பார்க்கிறான்.அவன் நோட்டில் எழுதி வைத்திருந்த கட்டுரைகள்,கதைகள் எல்லாம் திருத்தப் பட்டு,ஆலோசனைக் குறிப்புகளோடு உள்ளது.ஜமால் உந்தப் பட்டு அவரைப் பார்க்க செல்கிறான்.அவர் வீட்டின் ப்ளாட் கதவைத் தட்ட அவர் கதவைத் திறக்காமல் சின்னத் சதுரக் கதவைத் திறந்துப் பார்க்கிறார்.ஜமால்,''என்னுடைய மற்ற எழுத்துக்களைப் படிக்க முடியுமா?"என்று கேட்கிறான்.அவரோ,''ஸ்டே த ஃஃபக் அவுட் ஆஃப் மை ஹோம்" என்று சொல்லி அதையே ஐயாயிரம் வார்த்தைகளில் முதலில் எழுதி வரச் சொல்கிறார்.அதையும் எழுதித் தருகிறான்.இருவருக்குள்ளும் நட்பு மலர்கிறது.அவனுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கிறார்.தனது ஆர்டிகள் ஒன்றின் தொடக்கத்தை எடுத்துக் கொண்டு அவன் சொந்த வார்த்தைகளில் அந்த கட்டுரையைத் தொடர அனுமதிக்கிறார்.அது அந்த ஃப்ளாட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது எனவும் தன்னைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அவனிடம் நிபந்தனை விதிக்கிறார்.

வெளியில் செல்லாத அவரை பலவந்தமாக வெளியில் அழைத்துச் செல்லும் ஜமால் கூட்டத்தில் அவர் வழி தவறிய அவர் அன்சைட்டி அட்டாக் ஏற்பட்டு தெரு ஒரத்தில் முடங்கியிருப்பதைப் பார்த்து திரும்ப அழைத்து வருகிறான்.பின் வேறு ஒரு தருணத்தில் அவரை அவருக்குப் பரிச்சியமான யான்ங்கி ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்கிறான்.அங்கு அவர் தன் குடிகாரச் சகோதரன் இறந்தது மற்றும் தனது பெற்றோரின் மரணம் அனைத்தும் தன்னை தனிமைக்குத் தள்ளியதை சொல்கிறார்.

ஜமால் வெள்ளையர்கள் அதிகம் படிக்கும் மெய்லர் ஸ்கூலில் சேர அழைப்பு வருகிறது.அங்கு செல்லும் ஜமாலின் நிறம் பிடிக்காமல் அவனை மட்டம் தட்டும் இலக்கிய பேராசிரியர் க்ராஃபர்ட் அவனை வெறுக்கிறார்.அவன் அதிகம் படித்திருப்பதும்,எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அறிந்து இருப்பதும் அவரை பொறாமையும்,வெறுப்பும் கொள்ள வைக்கிறது.காரணம் அவர் எழுத்தில் சாதிக்க முயன்று தோற்றுப் போய் பேராசிரியர் ஆனவர்.

பள்ளியின் ஃபாஸ்கட் பால் டீமில் அவனுடன் விளையாடும் வெள்ளை இளைஞன்'நீயும் நானும் ஒன்றாக முடியாது,இருவரும் வேறுதான்''என்று தனது கருப்பின வெறுப்பை உமிழ்கிறான்.பள்ளியில் எழுத்துப் போட்டி வருகிறது.ஜமால் கலந்து கொள்கிறான்.அவனை மட்டம் தட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர் தான் அந்த போட்டியின் இறுதித் தீர்ப்பாளர்.

முடிவு நெருங்கும் நாளில் அவனுக்கு அலுவுலகத்தில் இருந்து அழைப்பு வருகிறது.பள்ளியின் கமிட்டி உறுப்பினர் முன் அவனை விசாரணக்கு உட்படுத்ததுகிறார் பேராசிரியர்.

''நீ போட்டிக்கு அனுப்பிய எழுத்தின் பெயர் குறிப்பிட்ட பத்திரிக்கையின் வெளி வந்த ,பிரபல எழுத்தாளர் வில்லியம் ஃபாரஸ்டர் உடையது,தவிர ஆரம்ப வரிகளை அப்படியே கையாடல் செய்திருக்கிறாய்,ஒன்று நீ அவரிடம் அனுமதி பெற்று இதை செய்திருக்க வேண்டும்,அல்லது அந்த கட்டுரையில் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும்"என்று அவனை கட்டம் கட்டுகிறார்.ஜமால் மௌனமாக இருக்க அவனை வருகிற டோர்மெண்ட் மட்டும் தான் ஃபாஸ்கட் பால் விளையாடலம் பின் அதில் இருந்தும் விலக்கப் படுவாய்,மற்றும் அவனுக்கு தரப் படும் அத்தனை கட்டணச் சலுகைகளும் விலக்கப் படும் என்கிற அதிர்ச்சித் தகவலையும் சொல்கிறார்.

வீடு திரும்பும் ஜமால் எழுத்தாளரிடம் விஷயத்தினைச் சொல்லி வருந்த அவர்,''நான் உன்னிடம் சொன்னேன்,இங்கே எழுதுவது இந்த இடத்தை விட்டு வெளியில் போக கூடது என்று,உன் தவறு"என்கிறார்.பேராசிரியர் யாரென கேட்க சொல்கிறான்.அவர் பெயரைக் கேட்டதுமே அவர் தான் எழுதி பிரபலமான பின் ஒரு நாவல் எழுதியதாகவும் அதை எந்த பதிப்பகமும் ஏற்காமல் திருப்பியனுப்பிய விஷயத்தினையும் சொல்கிறார்.

ஃபாஸ்கட் பால் டோரண்மெண்டில் மனம் ஒட்டாமல் ஆடித் தோற்கும் ஜமால் வெறுப்புடன் வீட்டிற்கு வந்து ஒரு நீண்ட கட்டுரையை எழுதி கவரில் போட்டு விட்டு சோர்ந்து படுத்து விடுகிறான்.கவரில் எழுத்தாளர் பெயரினையும் எழுதி வைத்து விடுகிறான்.வீட்டிற்குத் திரும்பும் அம்மாவும் சகோதரனும் அவன் சோர்வாக தூங்குவதைப் பார்க்கிறார்கள்.சகோதரன் ஜமால் வைத்து இருக்கும் கவரை எழுத்தாளரிடம் சேர்த்து விடுகிறான்.

போட்டி முடிவு நாளில் மாணவர்கள் குழிமியிருக்க எதிர்பாரமல் உள்ளே நுழையும் வில்லியம் ஃபாரஸ்டர் தன்னை மானவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு கட்டுரை ஒன்றை வாசிக்கிறார்.பேராசிரியர் க்ராஃப்ர்ட் அவரது அந்த வருகையும் வாசித்த கட்டுரையும் மாணவர்களுக்கு பெருத்த உந்துததலாய் இருக்கும் என்று சொல்லி அவரது வருகைக்கு காரணம் கேட்கிறார்.வில்லியம் ஃபாரஸ்டர் தனது நண்பர் ஒருவருக்கு போட்டியிலிருந்தும்,அங்கே கட்டுரை வாசிக்க அனுமதி வழங்காததும் தான் அங்கு வரக் காரணம் என்கிறார்.ஜமால் தனது நண்பன் என்றும் தன்னை காட்டிக் கொடுக்காமல் தன் கண்ணியத்தை,சத்தியத்தை காப்பாற்றியதாகவும் கூறுகிறார்.,பேராசிரியர் உங்கள் வருகை என் முடிவினை மாற்றாது என்கிறார்.வில்லியம் ஃபாரஸ்டர் தான் இப்பொழுது படித்ததே ஜமாலின் எழுத்துதான் என அரங்கமே கைத் தட்டுகிறது.குடும்பத்திலிருந்து விலகுதல் பற்றிய கட்டுரை அது.

பேராசிரியர் தன் முடிவை மாற்ற முடியாது என அப்பொழுதும் கூற பள்ளியின் கமிட்டி உறுப்பினர் பேராசிரியரை அமரச் செய்து,''ஜமால் இது நீ எழுதியது தானே''என்று கேட்டு உறுதி செய்து ஜமாலை பாராட்டி அந்த கட்டுரையே உள்ளே வைக்கிறார்.அவனது மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை வரும் போர்ட் மீட்டிங்கில் நீக்கப் படும் என்கிறார்.

ஜமாலிடம் தான் தன் சொந்த ஊருக்கு செல்வதாக சொல்லி வில்லியம் ஃபாரஸ்டர் செல்கிறார்.செமஸ்டர் முடிந்த நேரத்தில் இரண்டு வருடமாய் இருந்த கேன்ஸரில் அவர் இறந்து விட்டத் தகவலும் அவர் தன் ஃஃஃப்ளாட் மற்றும் உடைமகளை ஜமாலுக்கு எழுதி வைத்த தகவலும் வருகிறது அவரது வக்கில் மூலம்.அந்த ஃப்ளாட்டில் தாய் சகோதரனோடு நுழைகிறான் ஜமா.ஒரே நாவல் மூலம் பிரபலமான வில்லியம் ஃபாரஸ்டர் தனது இரண்டாவது நாவலை எழுதி அதற்கு ஜமால் தான் முன்னுரை எழுத வேண்டும் என்கிற குறிப்போடு வைத்து இருக்கிறார்.

படத்தில் மனதினை வருடும் காட்சிகளும் வசனங்களும் உண்டு.நம்மை ஆழ்ந்து பாத்திரங்களோடு கரைந்து விடச் செய்யும் திரைக்கதை.அந்த திரைக்கதையை மீறிய வசனம் அங்கு கிடையாது.

ஒரு காட்சியில் வில்லியம் ஃபாரஸ்டரிடம் ஜமால் வாலஸ்,''உங்கள் புத்தகத்தினை இன்றும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்"என்று கூற,''அவர் என்ன சொன்னாய்?''என்று கேட்பதின் அடுத்த காட்சியில் அந்த நாவலை லைப்ரரியில் கேட்கும் ஜமால்,''இருப்பத்து இரண்டு படிகளும் வெளியில் போய் இருக்கிறது"என லைப்ரரி ஊஷியர் சொல்லுவதில் தொடர்ந்து ஜமால் இருவருக்கும் டின்னர் வாங்கி வருவதிலும்,''சரிதான் நீங்கள் சொன்னது,நான் தோற்று விட்டேன்,இரண்டு பேருக்கும் பதிமூணு டாலர்,நீங்கள் சொன்னது சரி"என்கிறான்.

வில்லியம் ஃபாரஸ்டர் வசிக்கும் ஃப்ளாட் கருப்பர்கள் அதிகம் இருக்கும் மேஹேட்டன் ,ஃப்ராங்க்ஸ் பகுதியில் காட்டப் பட்டாலும் வெளிப் புறம் தான் அங்கு படமாக்க்ப பட்டது.உள் காட்சிகள் கனடாவின் டொரண்டோவில் படமாக்கப் பட்டது.

படத்தில் எழுத்தாளராக வந்தது ஷான் கானரி.ஜமால் வாலஸாக நடித்தது ராப் ஃப்ரௌன்.

எட்டு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப் பட்ட இந்தப் படம் முதலில் இரு நூறு தியேட்டர்களில் 11 மில்லியன் டாலர்கலை முதல் வாரத்தில் குவித்தது.பின் உலக அளவில் வெளிடப் பட்ட போது 80,049,764 அமெரிக்க மில்லியன் டாலர்களை வசூலித்தது.இந்த படத்தில் வரும் புத்தகத்தின் மூலம் பிரபலமான ஃபாரஸ்டர் பின் இந்த கதை பிரபல எழுத்தாளர் ஜெ.டி.சாலிஞ்சரின் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புகள் அந்த நாவலில் இருந்ததால் எதிர்ப்புக்குப் பின் புத்தகச் சந்தையில் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டார்.

இந்தப் படத்தில் எழுத்தாளராக நடித்த ஷான் கானரி இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதும் ஒரு உபரித் தகவல்

தமிழ்ப் பயணி

unread,
Feb 22, 2013, 2:31:01 AM2/22/13
to tamil...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்

செல்லுலோய்ட்- முன்னோடியின் கதை

எட்டாண்டுகளுக்கு முன்பு மலையாளத்திரையுலகின் பிதாமகர் என்று சொல்லத்தக்க நடிகர்-இயக்குநர் ஒருவர் என்னிடம் சொன்னார். ‘மலையாள சினிமாவின் தொடக்கப்புள்ளிகள் மூன்று நாடார்கள். மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள். நீ மலையாள சினிமாவின் நாற்றங்காலில் இருந்து வந்திருக்கிறாய்…’

அவர் குறிப்பிட்டது ஜெ.சி.டானியல் நாடார், சுந்தர்ராஜ் நாடார், சத்யநேசன் நாடார் என்ற நடிகர் சத்யன். மூவரும் உறவினர்கள் என்பதும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதும் இன்னும் ஆச்சரியம்.

சத்யன்

1893ல் குமரிமாவட்டத்தில் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர் ஜெ.சி.டானியேல். செல்வந்த நாடார் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா ஒரு அலோபதி மருத்துவர். நாகர்கோயிலில் உயர்நிலைப்படிப்பை முடித்து திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலைப்படிப்பை முடித்தார். அப்போது திருவனந்தபுரத்தில் காபிட்டால் என்ற திரையரங்கில் ஊமைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் மனம் ஈடுபட்ட அவர் திரைப்படக்கலையைப் படிப்பதற்காக சென்னைக்குச்சென்றார்.

ஆனால் சென்னை ஸ்டுடியோக்களுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கிருந்து மும்பைக்குச் சென்றார். மும்பையில் வெவ்வேறு படப்பிடிப்புநிலையங்களில் டானியேல் உதவியாளராகப் பணியாற்றினார். மெதுவாகத் திரைக்கலையைக் கற்றுத்தேர்ந்தார்.

ஜெ.சி.டானியேல் முதுமையில்

டானியேல் திருவனந்தபுரம் பேட்டை பகுதியில் ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்தார். பனச்சமூடு பகுதியில் அவருக்குத் தாய்வழிச்சொத்தாகக் கிடைத்த நூறு ஏக்கர் தென்னந்தோப்பை விற்று இந்த ஸ்டுடியோவை அமைத்தார். திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் அங்கே அமைந்தது. அதுதான் கேரள மண்ணின் முதல் திரைப்படத் தயாரிப்பரங்கு.

டானியேலுக்கு எல்லாமே சவால்களாக இருந்தன. முக்கியமாகத் தொழில்நுட்பப் பயிற்சி உள்ள ஊழியர்கள் அமையவில்லை. அவர்களை சென்னையிலிருந்தும் மும்பையில் இருந்தும் கொண்டுவரவேண்டியிருந்தது. படப்பிடிப்பு நிபுணர்கள் லண்டனில் இருந்து வந்தனர். அவர் நினைத்ததைவிட ஆறுமடங்கு அதிகமாக செலவு இழுத்தது. ஆனால் பிடிவாதக்காரரான டானியேல் படநிறுவனத்தை முழுமையாக்கிப் படத்தையும் எடுத்துமுடித்தார்

நான்குலட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஊமைப்படமான விகதகுமாரன் கேரளத்தின் முதல்படம். கேரள வாழ்க்கையைக் காட்டிய முதல் படம் அதுவே. 1928இல் ஆரம்பித்த படப்பிடிப்பு முடிந்து 1930 அக்டோபர் 23 ஆம் தேதி திருவனந்தபுரம் காப்பிட்டோல் அரங்கிலும் நாகர்கோயில் பயோனியர் அரங்கிலும் படம் வெளியாகியது.

விகதகுமாரன் அல்லது The Lost child என்பது படத்தின் தலைப்பு. முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்றை பூதநாதன் என்ற வில்லன் திருடிக்கொண்டு கொழும்பு சென்றுவிடுகிறான். அங்கே அந்தக்குழந்தையை ஒரு திருடனாக வளர்க்கிறான். திருடப்பட்ட சிறுவனின் தங்கை சரோஜம் அழகிய இளம்பெண்ணாக வளர்கிறாள். அவளை அந்த ஊருக்கு வரும் இளைஞன் சந்திரகுமார் காதலிக்கிறான்

மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் சந்திரகுமார் வழியில் கொழும்புவில் இறங்கும்போது பூதநாதனின் ஆட்களால் கொள்ளையடிக்கப்படுகிறான். பொருட்களை இழந்து கொழும்புவில் வேலைதேடி அலையும்போது காணாமல்போன இளைஞனான  அவன் சந்திக்கிறான். இருவரும் சேர்ந்து பூதநாதனிடமிருந்து தப்புகிறார்கள். ஊர் திரும்பும் சந்திரகுமார் சரோஜத்தைக் காண்கிறான். அந்த இளைஞனின் முதுகில் உள்ள மச்சத்தைக்கொண்டு அது தன் அண்ணன் தான் என்று அறிகிறாள் சரோஜம். அவன் அம்மா வந்து கண்ணீருடன் மகனைக் கட்டிப்பிடிக்கிறாள்

அப்போது பூதநாதன் அங்கே வருகிறான். கடுமையான சண்டை நடக்கிறது. பூதநாதனை சந்திரகுமார் அடித்து வீழ்த்துகிறான். பூதநாதன் தப்பி ஓட சந்திரகுமாரும் சரோஜமும் மணம்செய்துகொள்கிறார்கள். படம் மங்கலமாக முடிகிறது. இதுதான் விகதகுமாரனின் கதை

இதில் சந்திரகுமார் ஆக டானியேலே நடித்திருந்தார். கதையும் அவருடையதே. இயக்கியதும் டானியேல்தான். படப்பிடிப்பு திருவனந்தபுரத்திலும் கொழும்புவிலும் நடந்தது. டானியேல் அக்காலத்தில் முறையாக அடிமுறை கற்றவர். ஆகவே படத்தில் நான்கு கம்புச்சண்டைக்காட்சிகளும் ஒரு கைச்சண்டையும் இடம்பெற்றிருந்தன.

விகதகுமாரனில் ஒரு காட்சி

படத்தின் கதைநாயகியாக நடிக்க அக்காலத்தில் பெண்கள் தயாராகவில்லை. நாயகிக்காக மும்பையில் இருந்து கொண்டுவந்த பெண்ணுக்குக் கேரளப்பெண்ணாக நடிக்கத்தெரியவில்லை. ஆகவே டானியேல் ரோசம்மா என்ற ஒரு புலையர் சாதிப்பெண்ணைக் கண்டடைந்தார். அவள் ஏற்கனவே மேடைகளில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவள். அவளை நாயகியாக நடிக்கவைத்தார். அவளுக்கு ரோசி என்று பெயர் சூட்டினார்.

படம் வெளியான முதல்நாளே பெரும் எதிர்ப்பைச்சந்தித்தது. படத்தில் ஒரு புலையப்பெண் நாயர்பெண் போல உடையும் நகைகளும் அணிந்து நடிப்பதைக் கண்டு நாயர்களும் நம்பூதிரிகளும் கொதித்தெழுந்தார்கள். விகதகுமாரன் வெளியீட்டுக்கு வந்திருந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொண்டு அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தார். கேரளம் முழுக்க முதல்நாளே படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

பெரும் நஷ்டத்தைச் சந்தித்த டானியேல் கடன்காரர்களுக்குப் பதில் சொல்லமுடியாமல் மதுரைக்குத் தப்பி ஓடினார். அங்கே யாருக்கும்தெரியாமல் வாழ்ந்தார். அப்போது பல்மருத்துவம் கற்றுத் தேர்வெழுதி வென்று மருத்துவராக ஆனார். காரைக்குடியில் மருத்துவராகப் பணியாற்றினார். மீண்டும் வாழ்க்கை சீரடைந்தது

அப்போது அவரிடம் பல்மருத்துவம் செய்வதற்காக வந்த பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா டானியேலை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். வற்புறுத்தி சென்னைக்குக் கொண்டுசென்றார். ஆனால் அங்கே சின்னப்பாவைச்சுற்றி இருந்த ஒரு கும்பலும் சின்னப்பாவும் சேர்ந்துகொண்டு டானியேலின் மொத்தப்பணத்தையும் பிடுங்கிக்கொண்டு துரத்தியடித்தனர். அதே கும்பல் பின்னாளில் சின்னப்பாவையும் அனாதையாகத் துரத்தியடித்தது.

இரண்டுவருடம் நாடோடியாக அலைந்தபின் டானியேல் மனைவியிடம் வந்துசேர்ந்தார். அவரது மனைவி பெயர் ஜேனட். அவருக்கு நான்கு மகன்கள். அகஸ்தீஸ்வரத்திலும் நாகர்கோயிலிலும் டானியேல் பல்மருத்துவராகப் பணியாற்றினார். பிள்ளைகள் வெளியூருக்குப் பணிக்குச்சென்றார்கள். குடிப்பழக்கமிருந்தமையால் மிச்சமிருந்த பணத்தையும் இழந்து கடைசிக்காலத்தில் வறுமையால் மிகவும் வாடினார்.

அப்போது டானியேல் கேரள அரசின் நலிந்த திரைக்கலைஞர்களுக்கான பென்ஷனுக்காக விண்ணப்பம் செய்தார். அவர் எடுத்தபடம் மலையாளப்படம் அல்ல என்றும், அவர் கேரளத்தில் வாழ்கிறார் என்றும் சொல்லி அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. திட்டமிட்டு அவரை நிராகரித்தவர் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன். அது முழுக்கமுழுக்க சாதிப்பற்றின் விளைவு. முதல் மலையாளப் படம் என்று சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் எடுத்த பாலன் என்ற படத்தையே அதுவரையிலான வரலாறு சுட்டிக்காட்டிவந்தது. சுந்தரம் அய்யர், ராமகிருஷ்ணனும் அய்யர். அந்த வரலாறு மாற்றப்படுவதை மலையாற்றூர் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை.

டானியேலைப்பற்றி கேள்விப்பட்டு அவரைப்பற்றித் தொடர்ந்து எழுதி அவர்தான் மலையாள சினிமாவின் முதல்வர் என்பதை நிறுவப் பாடுபட்டவர் இதழாளரும் எழுத்தாளருமான சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் என்பவர். பாடலாசிரியர் வயலார் ராமவர்மாவும் முன் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவியில் இருக்கும் வரை எதுவும் நடக்கவில்லை. விகதகுமாரனின் பிரதி அழிந்துவிட்டது. டானியேலிடம் இருந்தது அந்தப்படத்தின் சில புகைப்படங்களும் விளம்பரப்பிரசுரங்களும் மட்டும்தான். அவற்றை மலையாற்றூர் ஏற்றுக்கொள்ளவில்லை.

1975இல் டானியேல் தன் 78 ஆவது வயதில் ஆதரவற்ற முதியவராகக் காலமானார். அதற்கு அடுத்தவருடம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவி விலகியபின் கேரள அரசின் கவனத்துக்கு டானியேலின் வரலாற்றைக் கொண்டு செல்லமுடிந்தது. அப்போது பதவிக்கு வந்த ஏ.கே.ஆண்டனியின் அரசு டானியேலின் விதவையான ஜேனட்டுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆணையிட்டது. டானியேலின் பங்களிப்பு வரலாற்றிலும் இடம்பெற்றது.

1992இல் கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி நிறுவனம் அளிக்கும் வாழ்நாள் சாதனைக்கான திரைவிருதுக்கு ஜெ.சி.டானியேல் விருது என்று பெயரிடப்பட்டது. டானியேல் இன்று மலையாளத் திரையின் முதல்வராக, பிதாமகராக வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்.

சுந்தர் ராஜின் மார்த்தாண்டவர்மாவில் ஒரு காட்சி

ஏ.சுந்தர்ராஜின் கதையும் வேறல்ல. அவர் 1933இல் மலையாளத்தின் முதல்பேசும்படமான மார்த்தாண்ட வர்மாவை எடுத்தார். வி.வி.ராவ் படத்தை இயக்கினார். ராஜேஸ்வரி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்காக அக்காலத்தில் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் சுந்தர்ராஜ் இந்தப்படத்தை எடுத்தார். இதுவும் ஒரேஒரு நாள்தான் ஓடியது. இப்படத்தின் கதை சி.வி.ராமன்பிள்ளை எழுதியது என்றும் உரியமுறையில் அனுமதிபெறாமல் படம் எடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டிப் படத்துக்கு எதிராக அந்நாவலை வெளியிட்ட நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. தடைபெற்றுப் படப்பெட்டிகளைக் கைப்பற்றியது. நொடித்துப்போன சுந்தர்ராஜ் ஊரைவிட்டு ஓடினார். நாகர்கோயிலில் முதியவயதில் கைவிடப்பட்டவராக இறந்தார்.

நல்லவேளையாக மார்த்தாண்டவர்மாவின் பிரதி சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணனால் மீட்கப்பட்டது. பதிப்பகம் மூடப்பட்டபின் அந்தத் திரைப்படப்பிரதி அவர்களின் கிடங்கில் கைவிடப்பட்டுக் கிடந்தது. சுந்தர்ராஜுக்குத் தன் படத்தின் மதிப்பு தெரிந்திருந்தமையால் நாற்பதுவருடங்களுக்குமேல் அவர் வருடம்தோறும் வந்து அந்த ஃபிலிமை சுத்தம்செய்து கொடுத்துவிட்டு செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஆகவே படம் பெரும்பாலும் தப்பித்தது.

சுந்தர்ராஜின் படமும் சாதிவெறியால்தான் தடுக்கப்பட்டது என்பது இன்று தெரிகிறது. அவர் எடுத்தது சி.வி.ராமன்பிள்ளையின் கதையை அல்ல. அன்று கேரளநாட்டார்வழக்கில் பிரபலமாக இருந்த மார்த்தாண்டவர்மாவின் தொன்மத்தைத்தான். அந்த தொன்மத்திற்கு சி.வி.ராமன்பிள்ளை உரிமைகொண்டாட முடியாது. ஆனால் அதை அன்றைய நீதிமன்றம் கருத்தில்கொள்ளவில்லை.

மலையாற்றூர் ராமகிருஷ்ணன் டானியேலை அங்கீகரிக்க மறுத்தது அவர் எடுத்தபடம் கிடைக்கவில்லை என்பதற்காக. ஆனால் மார்த்தாண்டவர்மா கிடைத்தபோதும் அதை அவர் கண்டுகொள்ள மறுத்தார். படத்தை பூனா ஃபிலிம் ஆர்கைவ்ஸ் வாங்கச்செய்வதில் சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் வெற்றிபெற்றார்

மூன்றாவது நாடாரான சத்யன் முதல் இருவருக்கு மாறாகத் திரைப்படத்தில் பெரும் வெற்றி பெற்றார். மலையாளத்திரையுலகின் அரசன் என்று அறியப்பட்டார். ‘சத்யனின் சிம்மாசனம்’ என்ற சொல்லாட்சியே மலையாளத்தில் உள்ளது. ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவர் அந்த சிம்மாசனத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தார் என்று சொல்வார்கள்.

*

ஜே.சி.டானியேலின் வாழ்க்கையைப்பற்றி சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் எழுதிய நூல், ஆர்.கோபாலகிருஷ்ணன் எடுத்த ஆவணப்படம் , ரோசியைப்பற்றி வினு ஆரகாம் எழுதிய ‘ நஷ்டநாயிகா’ என்னும் நாவல் ஆகியவற்றின் அடிப்படையில் கமல் திரைக்கதை எழுதி இயக்கிய ‘செல்லுலோய்ட்’ ஜெ..சி.டானியேலுக்கு மிக ஆத்மார்த்தமாக அளிக்கப்பட்ட மகத்தான நன்றியறிவிப்பு எனலாம்.

சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் [ஸ்ரீனிவாசன்] தற்செயலாக டானியேலைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடிச்சென்று அகஸ்தீஸ்வரத்தில் சந்திக்கிறார். மனக்கசப்படைந்து இருக்கும் டானியேல் முதலில் அவரை சந்திக்க விரும்புவதில்லை. மரியாதையுடன் திருப்பியனுப்புகிறார். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி ஜேனட்டிடம் ஒரு நீண்ட பேட்டி எடுக்கிறார். ஜேனட் அந்தப்படம் எடுக்கும்போது கூடவே இருந்தவர்

பேட்டி பிரசுரமானதை வாசித்துக்கேட்ட டானியேல் கோபாலகிருஷ்ணனை வரச்சொல்லிக் கடிதமனுப்புகிறார். தன்னுடைய திரைமுயற்சியைப்பற்றி விரிவாகச் சொல்கிறார். ஜேனட்டும் அவரும் உற்சாகமான இளமையுடன் திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள். நடிக்க ஆளில்லாமல் ரோசம்மாவைக் கண்டுபிடித்து அவளுக்குப்பயிற்சி கொடுத்து நடிக்கச்செய்கிறார்கள். அவள் பெயரை ரோசி என்று மாற்றுகிறார்கள்.

படம் வெளியானபோது சாதிவெறியர்களின் கடும் எதிர்ப்பு உருவாகிறது. படம் நிறுத்தப்படுகிறது. டானியேல் கடனாளியாக மதுரைக்குச்செல்கிறார். ரோசியின் வீட்டை எரித்து அவள் தந்தையைக் கடுமையாகத் தாக்குகிறார்கள் உயர்சாதியினர். தப்பி ஓடி இருளில் மறைகிறாள் ரோசி.[ ரோசி அதன்பின் செய்திகளில் வரவே இல்லை. அவளை ஒரு லாரி ஓட்டுநர் சாலையில் கண்டெடுத்து மணம் புரிந்துகொண்டதாகவும் 1970 வரை நாகர்கோயிலில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு]

மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி அவள் நடித்த படத்தைப்பார்க்க திரையரங்கில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தன் முகம் திரையில் தெரிவதை அவள் பார்க்கவேஇல்லை. அன்றைய இரவில் மறைந்த அவள் பின்னர் வெளிவரவும் இல்லை. இந்த உண்மைக்கதையில் இருக்கும் வரலாற்றுசோகம் படத்தில் அற்புதமாகப் பதிவாகியிருக்கிறது.

டானியேலை வெளிச்சத்துக்குக் கொண்டுவர சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் முயல்கிறார். வறுமையில் வாடும் டானியேலுக்கு ஒரு பென்ஷனாவது வாங்கிக்கொடுக்கலாமென நினைக்கிறார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் அதை எல்லாவகையிலும் தடுக்கிறார். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இப்படத்தில் பெயர்சொல்லப்பட்டு நேரடியாகக் குற்றம் சாட்டப்படுகிறார். ‘நீங்களும் அய்யர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரும் அய்யர்…அதுதான் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் இல்லையா?’ என சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் நேரடியாகக் கேட்பதுபோலவே படத்தில் காட்சி இருக்கிறது

இடதுசாரியாக இருந்த மலையாற்றூரின் சாதிய நோக்கு முன்னரே சிலரால் சொல்லப்பட்டுவிட்டதுதான். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனின் நூல் நாற்பதாண்டுகளுக்கு முன்னரே அதை நிறுவியும் விட்டது. ஆனால் சினிமா என்ற மாபெரும் ஊடகத்தின்மூலம் கேரளத்தின் முக்கியமான எழுத்தாளராகிய மலையாற்றூர் முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இனி அவரது எந்தப்படைப்பும் இயல்பான வாசிப்பைப் பெறமுடியாது. வருத்தமான விஷயம்தான் , ஆனால் வரலாறு ஈவிரக்கமற்றது.இனி எஞ்சிய நாள் முழுக்க டானியேல் ஒளியையும் மலையாற்றூர் இருளையும் பெறுவார்கள்!

டானியேல் அனாதையாக இறக்கிறார். அவர் இறந்தபின் அவர் அங்கீகரிக்கப்படுகிறார். அவரது தந்தையைப்பற்றிய ஆவணப்பட வெளியீட்டுவிழாவில் அவரது கடைசி மகன் ஹாரீஸ்நாடார் மேடையேறுகிறார். அந்த நாள் வரை அவர் தன் தந்தையைப் பொறுப்பில்லாத ஊதாரி என்று வெறுத்துவந்ததாகவும் அந்தமேடையில்தான் அவர் எப்படிப்பட்ட மாமனிதர் என்று தெரியவந்ததாகவும் ஹாரீஸ் சொல்கிறார்.

அந்தப்படச்சுருளை இளமையில் தீவைத்துக் கொளுத்தியவர் ஹாரீஸ்தான். ஆனால் அதற்காக வருந்தினாலும் டானியேல் மகனின் கோபத்தைப் புரிந்துகொள்கிறார். ஒருபோதும் அதை தன் மகன் அழித்தான் என்று அவர் சொல்லவில்லை. பல நிருபர்கள் கேட்டும்கூட அது அழிந்துவிட்டது என்று மட்டுமே சொன்னார், மகன் தீவைத்ததைச் சொல்லி அதை வரலாறாக ஆக்கவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்டதும் அங்கீகாரமில்லாமல் இறந்ததும் அந்தப் படம் அழிந்தமையால்தான்.

மேடையில் ஹாரீஸ் அப்படிப் படத்தை அழித்தவன் தானே என்கிறார். கண்ணீருடன் தன் தந்தையை அப்போது வெறுத்ததாகவும் இப்போது புரிந்துகொள்வதாகவும் சொல்கிறார். படம் மகனின் கண்ணீரில் முடிகிறது. அது மலையாள சினிமாவில் இன்றிருக்கும் அனைவரின் கண்ணீரும்தான். அனைவருமே டானியேலின் பிள்ளைகள் அல்லவா?

டானியேலாகவும் ஹாரீஸாகவும் பிரிதிவிராஜ் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒருவேளை அவரது திரைவாழ்க்கையின் மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும். இளமையில் கற்றறிந்த இளைஞனாக உற்சாகமும் துருதுருப்புமாக இருக்கும் டானியேல், பின் நொடித்துப்போய்க் கலங்கும் டானியேல், மீண்டு எழும் டாக்டர் டானியேல், கடைசியில் கைவிடப்பட்டு அனாதையாக சாகும் முதிய டானியேல். ஒவ்வொரு முகமும் மிகையற்ற கச்சிதம்.

டானியேலின் மனைவி ஜேனட் ஆக மம்தா மோகன்தாஸ் அழகாக நடித்திருக்கிறார். மற்ற சிறு கதாபாத்திரங்கள் எல்லாமே கச்சிதம். வயலார் ராமவர்மாவாக நடிப்பவரும் சரி மலையாற்றூராக நடிப்பவரும் சரி அப்படியே அவர்களின் சாயலில் இருக்கிறார்கள்.

படத்தின் மிகச்சிறந்த இன்னொரு நடிப்பு ரோசியாக நடிக்கும் புதுமுகம் சாந்த்னி. இந்த வரலாற்றுப்படத்தின் உணர்ச்சிமிக்க ஓர் அத்தியாயம் ரோசியின் வாழ்க்கை. தீண்டாமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தைச்சேர்ந்த புலையப்பெண் அவள். நகைகளோ நல்ல உடைகளோ அவளால் கனவில் கூட அடைய முடியாதவை. சட்டென்று அவை எல்லாமே அவளைத்தேடிவருகின்றன. தனக்களிக்கப்பட்ட உடைகளை உடைமாற்றும் அறையில் இருளில் நின்று மார்போடு அணைத்து அழும் ரோசி ஒரு மகத்தான கதாபாத்திரம்

சினிமா நவீன உலகம். அங்கே தீண்டாமை இல்லை. அங்கே ரோசி ஒரு நடிகை. ஆனால் ரோசியால் அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாற்காலியில் அமர முடியவில்லை. ஏன் சோறுகூட சாப்பிடமுடியவில்லை- கஞ்சி போதும் என்கிறாள். மெல்லமெல்ல அவள் அதற்குள் வந்து சேரும்போது படம் முடிகிறது. கனவு கலைகிறது. ரோசிக்கு ஊதியம் வழங்கி அவளை அனுப்பும்போது ஜேனெட் அவளுக்கு அவளுடைய உடைகளை அளிக்கிறாள். நாயர்பெண்ணாக வாழ்ந்த ரோசி புலையப்பெண்ணாக மீண்டும் மாறிக் கண்ணீருடன் விடைபெறுகிறாள். கனவு நினைவில் எஞ்சியிருப்பதுபோல அந்த உடை கையில் இருக்கிறது

தன்னுடைய சினிமாவைப்பார்க்க காபிடோல் திரையரங்குக்குச் செல்கிறாள் ரோசி. அவளை வற்புறுத்திக் கூட்டிவந்தவர் டானியேல்தான். ஆனால் தலைமைதாங்க வந்த வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொள்ளவே ரோசி உள்ளே விடப்படவில்லை. தன் முகத்தைத் திரையில் பார்க்கும் அதிருஷ்டம் அவளுக்குக் கிடைக்கவில்லை. அன்றிரவே வீடு கொளுத்தப்பட்டு அவள் துரத்தியடிக்கப்படுகிறாள். சினிமா என்னும் கனவு, தொழில்நுட்பம் உருவாக்கிய மாபெரும் மாற்று யதார்த்தம், அழிகிறது.

அழியவில்லை, அந்த வரலாற்றுக்கணத்தில் அது பிறக்கிறது என்று காட்டுகிறார் கமல். நுணுக்கமான இயக்கம் கொண்ட படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் செலுத்தப்பட்டிருக்கும் கவனம் குறியீட்டு ரீதியாக மேலும் மேலும் வாசிக்கப்படவேண்டியது.

உதாரணமாகத் திரைப்படத்திற்குள் நிகழும் யதார்த்தமும் வெளியே உள்ள சமூக யதார்த்தமும் தலைகீழாக இருப்பதைக் காட்டும் காட்சிகளைச் சுட்டிக்காட்டலாம். ’இப்போது ஏன் குத்துவிளக்கு, இது பகல் அல்லவா?’ என்கிறார் ஒருவர் படப்பிடிப்பின் போது. ‘சினிமாவுக்குள் இது இரவு’ என்கிறார் தொழில்நுட்பம் தெரிந்தவர். அங்கே புலையப்பெண் உயர்சாதிப்பெண்ணாக வந்து நிற்கிறாள். இங்கே அந்த ஆச்சரியம் தாளாமல் தவிக்கிறார்கள் பிறர்.

டானியேல் முதல்முறையாக ஃபிலிமைக் காணும் காட்சி அதை முழுமைசெய்கிறது. எல்லாக் காட்சியும் அதற்குள் தலைகீழாக இருக்கிறது. அவரது முகம் மலர்கிறது. ஆம், அவர் தான் கண்ட சமூக யதார்த்தத்தைத் தன் கலைக்குள் தலைகீழாக ஆக்கிவிட்டிருக்கிறார்.

அப்பாவின் நினைவுக்கூட்டத்துக்காக வரும் ஹாரீஸ் நாடார் வெளியே மோகன்லாலின் மசாலாப்படம் வெளியான அன்று பெட்டியுடன் நடனமிடும் ரசிகர் கும்பலைக் கண்டு திகைத்து பின் மெல்ல புன்முறுவல் செய்யும் காட்சி அதைப்போல மிக கவித்துவமானது.

படத்தின் அப்பட்டத்தன்மை மலையாளசினிமாவுக்கே உரியது. எல்லா வரலாற்றுமாந்தர்களும் குறைநிறைகளுடன் அப்படியே வருகிறார்கள். ‘தெரியாமல் முன்னோடியாக ஆகிவிட்டேன்…மன்னிக்கணும் மன்னிக்கணும்’ என்று நோய்ப்படுக்கையில் கைகூப்பும் சுந்தர்ராஜ் ஓர் எல்லை. மறுபக்கம் பி.யூ.சின்னப்பா ஒரு ஏமாற்றுப்பேர்வழியாக வருகிறார்.

மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மிகச்சிறந்த கலை இயக்கம் அமைந்திருக்கிறது. 1930 முதல் 1980 வரையிலான காலம் சரியாகவும் அழகாகவும் காட்சிக்குள் வந்திருந்தது. கலை இயக்குநர் . இந்தப்படத்தின் சிறப்பான அம்சம் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான வேணுவின் அற்புதமான ஒளிப்பதிவு. காலங்கள் வழியாக உணர்வுகள் வழியாக ஒழுகிச்செல்லும் அனுபவத்தை அளிக்கிறது இது.

திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் ஒரு ’ஃபிலிம் பிரேம்’ என்று உவமிக்கலாம். சமகாலம் என்பது அந்த புரஜக்டரின் ஒளிச்சட்டம். அந்தச் சதுரத்தின் வழியாக அவை வேகமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கணநேரம் மட்டுமே அவற்றின் ஆயுள். தன்னைக் காட்சியாக விரித்ததுமே அடுத்ததற்கு இடம் விட்டு அவை மறைகின்றன. ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒன்று நிரந்தரம் பெறுகிறது. விளக்கொளியில் எப்போதுமிருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது.

மரணப்படுக்கையில் டானியேல் கிடக்கிறார். மார்பைத் தடவிக்கொடுக்கிறார் ஜேனெட். எதிர்ச்சுவரில் இரவின் ஒளியில் நிழல்கள் ஆடுகின்றன. அதை ஒரு சினிமாவாகப் பார்த்துக்கொண்டே இறக்கிறார் டானியேல். அந்த ஒரு காட்சி மலையாள சினிமா உள்ளவரை அழியாமலிருக்கும்.

படம் பார்த்தபின் இயக்குநர் கமலிடம் தொலைபேசியில் பேசினேன். ’உங்கள் கருத்துக்காக எதிர்பார்த்திருந்தேன்’ என்று சொன்னார். ’ஒரு குமரிமாவட்டத்தினனாகப் பெருமைப்படுகிறேன். நன்றி சொல்கிறேன்’ என்று சொன்னேன்.

Omprakash

unread,
Feb 27, 2013, 3:35:31 AM2/27/13
to panb...@googlegroups.com
போன வாரமே போகனும்னு நினைத்தேன், இந்த வாரம் பார்க்கனும்...

காமேஷ்

unread,
Mar 31, 2013, 11:16:15 AM3/31/13
to பண்புடன்
The Mighty Peking Man

விழுந்து விழுந்து சிரிக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பாக்கலாம்..
இன்னைக்கு எங்க ஊர் டிவியில போட்டாங்க.. கிங்காங் படத்தின் ரி மேக்.

படத்தின் விபரம்
http://en.wikipedia.org/wiki/The_Mighty_Peking_Man

படத்தில் ஒரு பாராட்டப்பட வேண்டிய விசயம் ஹீரோயின் டாப்ஸ்
ஒரு மெல்லிய துணி காற்றில் அசைந்தால் விழுவது போல இருக்கும்..
ஆனா படம் முழுக்க விழவே விழாது.. 

Inline image 1

தமிழ்ப் பயணி

unread,
Apr 5, 2013, 10:13:32 PM4/5/13
to பண்புடன், tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
http://www.facebook.com/suryakumar512/posts/492020374204097

சே....!

ஜேம்ஸ் பாண்டு படங்கள் நமக்கு தெரியும். அந்த படத்தை பார்த்து ஒருவர் ரொம்பவும் சிலிர்த்து போய், நாமும் இப்படியான ஒரு கதையை எடுக்க வேண்டும் என முடிவு செய்து கதையில் ஒரு ஆண் கதாபாத்திரம் துப்பறிவதற்கு பதிலாக, ஒரு பெண் கதாபாத்திரம் துப்பறிவதாக மாற்றி போட்டு ஜேம்ஸ் பாண்டு கதையை, அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார். அதற்கு ரிவால்வர் ரீட்டா என்று பெயர் வைக்கிறார் என்று வைத்து கொள்வோம். இப்போது இந்த ரிவால்வர் ரீட்டாவை மற்றொருவர் பார்க்கிறார், இவரும் சிலிர்த்து போகிறார், நல்ல கதையாக இருக்கிறதே, நாமும் ஜெராக்ஸ் எடுத்து விடுவோம் என ஆசை பட்டு, பெண் கதாபாத்திரத்தை ஆண் கதாபாத்திரமாக மாற்றி போட்டு ஒரு படம் எடுக்கிறார். அதற்கு துப்பறியும் துரைசாமி என்ற பெயர் வைத்து ரிலீஸ் செய்கிறார் என்று வைத்து கொள்வோம்.

இப்போது என்ன ஆகும், ஜேம்ஸ் பாண்ட் படமும், துப்பறியும் துரைசாமி படமும் ஒன்று போலவே இருக்கும், இல்லையா... அதாகப்பட்டது A=B, B=C, So A==C. இதே தான் சேட்டை மற்றும் டெல்லி பெல்லியிலும் நடந்திருக்கிறது.

வில்லனின் வைர பொட்டலம் எங்கெங்கோ சுற்றி வந்து ஹீரோ கையில் சிக்கும், அதனால் ஹீரோவிற்கு ஏகப்பட்ட சிக்கல் வரும், அதையெல்லாம் ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்ற கதையை ஹிந்தி சினிமாவும், தமிழ் சினிமாவும் கண்டு கண்டு சலித்து போனதால் தான், நிறைய adults only விஷயங்களை சேர்த்து டெல்லி பெல்லி வெளிவந்தது, அந்த adults only விஷயம் தமிழக மக்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என்று எப்படியோ உளவுத்துறை உதவியுடன் கண்டுபிடித்து, ‘பலான’ விஷயங்களை மட்டும் எடுத்து விட்டு புதுப்பொலிவுடன் “சேட்டை” வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து விட்டு, திரையரங்கை விட்டு வெளியே வரும் மக்கள், ஏனோ ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு ஓடும் குழந்தைகள் போல், முண்டியடித்து வீட்டுக்கு ஓடுகின்றனர். அது தான் ஏன் என்று தெரியவில்லை....

இயக்குனர் கண்ணனுக்கு என் அனுதாபங்கள்...!

‘டெல்லி பெல்லி’ படம் அமோகமான வசூலை அள்ளியதால் கண்ணன் இப்படத்தினை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டியிருந்திருக்க கூடும், ஆனால் துயரம் என்னவென்றால், இந்த படம் எதற்காக ஹிட் ஆனது என்ற அடிப்படையை கூட அவர் புரிந்து கொள்ளாமல், ரீமேக்கில் குதித்து விட்டார். கதை பிரமாதமான கதை, அது தான் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்று நினைத்து விட்டாற் போலும்... ஆனால் மக்களுக்கு பிடித்தது அதில் இருந்த ‘பலான’ மேட்டர்களும், கெட்ட வார்த்தைகளும், அருவருப்பான நகைச்சுவைகளும் தான் என்று அவருக்கு புரியாமல் போய் விட்டது.

எழுதுவதற்கே சலிப்பாக இருக்கிறது.

Adults only படங்கள் இந்தியாவை தவிர நிறைய நாடுகளில் சக்கை போடு போடுகிறது. American Pie படம் மட்டுமே 8 பாகம் வெளியானது. Hardcore ஆன படங்களை விட “காமெடி கலந்த செக்ஸ்” படங்கள் தான் வசூலை அள்ளும். இப்படி பட்ட படங்கள் இந்தியாவில் மட்டும் வெளிவராமலே இருந்தது. காரணம் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்ற யூகம். அதனால், தலையில் துண்டு போர்த்தி வந்து பார்க்கும் அங்கிள்களுக்கு மட்டும் ஷகிலா படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருந்தது நம் திரை உலகம். அதிலும் கூட இப்போதெல்லாம், முன்பு போல் அதிகம் படம் வருவதில்லை என சகல திசைகளில் இருந்தும் புகார்கள் வர ஆரம்பித்து விட்டன. இப்படியான ஒரு கட்டத்தில் தான் ஆமிர் கான் தயாரிப்பில் டெல்லி பெல்லி வந்தது. ஒரு மைல் கல், ஓர் புரட்சி, ஓர் ஆராய்ச்சி என பத்திரிக்கைகள் வானளாவ புகழ்ந்தது.

படம் முழுக்க எத்தனை Fuck உச்சரித்தார்கள் என்று விரல் விட்டு எண்ண கூட முடியாது. சராமரி Fuck கள் படம் முழுக்க இருக்கும். ஒரு இந்திய சினிமாவை செக்ஸுவல் வெர்ஷனில் மாற்றியிருப்பார்கள்.

ஒரு கல்யாண வீட்டில், மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்ட போகும் சமயத்தில், மணப்பெண்ணின் உண்மை காதலன் உள்ளே புகுந்து “நிறுத்துங்க... அவ என்னோட காதலி” என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தியதை எத்தனை படத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் டெல்லி பெல்லி படத்தில் கல்யாண வீட்டில் புகுந்து “இந்த கல்யாணம் நடக்காது... this girl has given me blow job, and because, I am 21st century man, I’ve given her Oral pleasure also... ” என்று சொல்வான். இதெல்லாம் தமிழில் அப்படியே உருவி விட்டார்கள், ஏனென்றால் தமிழ் மக்கள் ஒழுக்கசீலர்கள் ஆயிற்றே.... இப்போது என்ன பிரச்சனையென்றால் சேட்டை படமும், பஞ்சதந்திரம் படமும் ஒன்று போலவே இருக்கிறது. கலகலப்பும் கூட....

மற்ற படி, படத்தில் எல்லாமே அட்டை காப்பி, தமிழகத்திகு ஒரு ஜெயம் ராஜா போதாது என்று மற்றுமொருவர் வந்தே விட்டார். கதைக்களத்தை கூட மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றவில்லை, இப்படியிருக்க எதற்கு இந்த படத்தை ரீமேக் செய்தார்கள் என்றே தெரியவில்லை. பேசாமல் ‘பிட்டு’ சீன்களை எல்லாம் உருவி விட்டு வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் செய்திருக்கலாம். கண்ணனுக்கு மொழிபெயர்ப்பு மேல் ஏன் நம்பிக்கையில்லை என எனக்கு புரியவில்லை, ஜாக்கி சான் படத்தையெல்லாம் மொழிபெயர்ப்பிற்காகவே போய் பார்க்கும் கூட்டம் இருக்கிறது என யாராவது அவரிடம் சொல்ல வேண்டும்.

கதைக்கு ஹன்சிகா தேவையே இல்லை. ஏதாவது சாதாரண ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டே போதும். ஆனால் ஹன்சிகாவை போட்டதுமில்லாமல் அவருக்கு வெயிட்டேஜ் கொடுக்கிறேன் என்று சொல்லி பாட்டு மேல் பாட்டாக போட்டு தியேட்டர் கேன்ட்டீனுக்கு நல்ல லாபம் கொடுத்தார்.

நாசர், ஒரு இடத்தில் ஹன்சிகாவிடம் நீ கடைசியாக ஆர்யாவை எங்கு வைத்து சந்தித்தாய் என்று கேட்பார். பீச்சில் வைத்து சந்தித்தேன் என்று ஒரே வார்த்தையாக சொல்லியிருக்கலாம். அதற்கு ஒரு ப்ளாஷ்பேக், அதில் ஒரு பாட்டு, 6 நிமிட ப்ளாஷ்பேக்கில், 5 நிமிடம் பாட்டு தான், ஒரே நிமிடம் தான் வசனம். என்னத்த சொல்வது, jab we met—ஐ கற்பழிப்பு செய்த கும்பல் என்று தெரிந்த போதே சுதாரித்து கொண்டிருந்திருக்க வேண்டும். சந்தானத்திற்காக போய் ஏமாந்தது தான் மிச்சம். சந்தானம் கஷ்டப்பட்டு அடிக்கும் காமெடிகள் எல்லாம், டெல்லி பெல்லி படத்தில் விஷுவலாகவே இருந்தது. வீணாக அதை கெடுத்தது தான் மிச்சம்.

படத்தில் குட்டி குட்டியாக ஏகப்பட்ட சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும், அதெல்லாம் சந்தானத்தாலே பாழாய் போனது. ஒரு காட்சியில், இம்ரான் கானும்(ஆர்யா), செனாஸும் (ஹன்சிகா) குடும்பத்தோடு உட்கார்ந்து மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். அப்போது அந்த அமைதியான வீட்டில், திடீரென்று 15 கடிகாரங்கள் ஒரே நேரத்தில் அலறி அடங்கும். எல்லோரும் செனாஸின் அம்மாவை திரும்பி பார்ப்பார்கள், அவள் சிரித்து கொண்டே “It;s one” என்பாள். அதாவது மணி ஒன்று. அப்படியானால் 12 மணி ஆனால் வீடு எப்படி அலறும் என்று நம் கற்பனைக்கு விட்டு விடுவார்கள். ஆனால் இந்த காட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவர்களாகவே நினைத்து கொண்டார்கள், அதனால் நீக்கி விட்டார்கள். ஏன் தான் தமிழனை எல்லாரும் முட்டாள் ஜந்து என நினைக்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் இதே தமிழகத்தில் தான் Da vince code –ம் மரண ஹிட் அடித்தது, அதை ஏன் நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என தெரியவில்லை.

இன்னும் நிறைய சொல்லலாம், ending title card பாட்டையே காணோம். அது தான் மிக மிக முக்கியமான பாட்டு, அதையே எடுத்து விட்டார்கள்.

எந்த ஜோசியர் “சே” என்கிற எழுத்தில் ஆரம்பிக்கும் படி படம் வையுங்கள் என்ற சொன்னாரோ தெரியவில்லை, சேட்டை என்று பெயர் வைத்து விட்டார்கள். படத்தின் பெயரை பெயருக்கு “சேட்டை டா” என்று இறுதியில் உபயோக படுத்த படுகிறது. அதை எதற்கு சொல்கிறார்கள் என்று யாருக்கு வெளிச்சமோ !

ஆனால் படக்குழுவினரின் ஜோசியரை நான் மிகவும் பாராட்டுகிறேன். அவருக்கு தான் படம் பார்த்து வெளியே வரும் மக்களின் ரியாக்ஷன் முன்னமே தெரிந்திருக்கிறது... ஜோசியம் எல்லாம் உண்மை தான் போல் இருக்கிறது....!



2013/3/31 காமேஷ் <kame...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

மஞ்சூர் ராசா

unread,
Apr 6, 2013, 5:07:47 AM4/6/13
to பண்புடன்
கலக்கல் விமர்சனம்


2013/4/6 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Apr 13, 2013, 1:06:48 AM4/13/13
to பண்புடன், tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்

தடுமாறி நிற்கும் சீரியல் உலகம்

சினிமா தியேட்டர்களுக்கு பெண்களின் வரத்து குறைந்த காரணம் டிவி சீரியல் என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட. பெண்களுக்கு விருப்பமான  கதைகள் தொலைக்காட்சியிலேயே வருவதால் சினிமாவிற்கு போவது குறையத்தான் செய்தது. திரைப்படம் தயாரித்த நிறுவனமெல்லாம் சீரியல் தயாரிக்க வந்து பெரும் லாபம் சம்பாதித்து வந்த காலமெல்லாம் கூட உண்டு. அப்ப இப்போதெல்லாம் சீரியல்கள் லாபமில்லையா? என்று கேட்டீர்களானால் இல்லை என்று குரலும் எங்க எங்களை சீரியல் எடுக்க விடுறாங்க என்கிற புலம்பலைத்தான் கேட்க முடிகிறது. புலம்பல் போராட்டமாய் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. விகடன், ராடன், திருமுருகன் போன்றவர்கள் தொடர்ந்து சீரியல் எடுத்து நன்றாக சம்பாதித்துக் கொண்டுதானேயிருக்கிறார்கள். எல்லா டிவிக்களிலும் மாலையிலிருந்து இரவு வரை ஏதேனும் ஒரு சீரியல் போய்க் கொண்டுதானேயிருக்கிறது பிறகென்ன? என்று கேட்கிறீர்களா? அங்கே தான் ப்ரச்சனையே ஆரம்பம்.

இன்றளவில் தமிழ் சீரியல்களின் மகாராஜா என்றால் அது சன் டிவிதான். என்னதான் இப்போது போட்டிக்கு நிறைய சேனல்கள் வந்திருந்தாலும், அதனுடய ஜி.ஆர்.பி குறைந்திருந்தாலும் தமிழ் சீரியல்களில் அதிகப் பட்ச டி.ஆர்.பியை தக்க வைத்துக் கொண்டிருப்பதில் நம்பர் ஒன் சன். சன்னில் ஸ்லாட் கிடைப்பது என்பது அப்படியொன்றும் சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு அரை மணிநேரத்தையும் விலைக்கு வாங்கித்தான் சீரியல் தயாரிக்க வேண்டும், பின்பு  அதை மார்கெட் செய்ய வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும்.இவர்களின் சீரியல்களுக்கு பிறகு விஜய் டிவி சீரியல்கள் சிலதைத் தவிர, வேறெந்த சேனலில் சீரியல் போட்டாலும் செல்ப் எடுக்காமல் போனதால் என்ன செய்வது என்று முழி பிதுங்கிக் கொண்டிருந்தனர் சேனல் வட்டாரம். குறைந்தபட்சம் ஒரு எபிசோடுக்கு 50 ஆயிரமாவது செலவு செய்தால் தான் ஓரளவுக்கு குவாலிட்டியான சீரியலை செய்ய முடியும். ஆனால் செலவு செய்யும் காசுக்கு சேனலே வெளியாருக்கு பணம் கொடுத்து தயாரித்து வாங்கிய சீரியல்களை சன்னின் சீரியலுக்கு போட்டியாய் மார்கெட் செய்ய முடியாமல் அரைகுறையாய் முடித்துவிட வேண்டிய கட்டாயம் எல்லாம் சிறு சேனல்களுக்கும் வர ஆரம்பித்தது. மாலை நேரத்தில் மக்களுக்கு சீரியல் தான் பெரும் டி.ஆர்.பி எனும் பட்சத்தில் சீரியல் போடாமல் இருந்தால் கிடைக்கிற டி.ஆர்.பியும் போய் விடும் அபாயம் இருப்பதால் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம். யோசித்தனர் சிறு சேனல் தயாரிப்பாளர்கள். சின்ன கல்லு பெத்த லாபம் என்ற தாரக மந்திரத்தை வைத்து அவர்கள் செய்த ஐடியாத்தான் டப்பிங் சீரியல்கள். தெலுங்கிலிருந்து தமிழில் ஆரம்பித்தார்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் மலையாள ஐய்யப்ப சீரியல்கள் மாலை நேர டி.ஆர்பியை பிடிக்க, ஏன் நாம் ஹிந்தி சீரியல்களை விலைக்கு வாங்கி டப் செய்து ஒளிபரப்பக்கூடாது என்று யோசனையில் கலர்ஸ் போன்ற சேனல்களில் வெளியாகி ஹிட்டத்துக் கொண்டிருக்கும் சீரியல்களை சல்லீசான விலையில் வாங்கி டப்பிங் செய்து ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். உதாரணமாய் ராஜ் டிவியில் சிந்து பைரவி என்கிற ஹிந்தி டப்பிங் சீரியல் மாலை நேர ப்ரைம் டைமில் நல்ல ரேட்டிங்கைப் பெற மற்ற சேனல்களும் அதையே பின்பற்ற ஆரம்பித்தது. 

பாலிமர், ஜீதமிழ், போன்ற சேனல்களுக்கு இப்போது நல்ல டி.ஆர்.பி தருவது இந்தி டப்பிங் சீரியல்களே. நல்ல ரிச்சான அட்மாஸ்பியர். பெரிய பட்ஜெட், அழகழகான நடிகைகள். நல்ல குவாலிட்டியான மேக்கிங் எல்லாம் ப்ளான் செய்தால் கூட நம் தமிழ் மொழியில் இந்த தரத்தை, பட்ஜெட்டை கொடுக்க முடியாது என்பதினால் சேனல்கள் நேரடி தமிழ் சீரியல்களை தயாரிப்பதற்கு பதிலாய் டப்பிங் சீரியல்களுக்கு தங்கள் பச்சைக் கொடியை காட்ட ஆரம்பித்தார்கள். இங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகியது.

சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்கள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அத்துனை சேனல்களிலும் ரெண்டு டெய்லி சீரியலாவது தயாரித்துக் கொண்டிருக்க, நடிக்க ஆர்வமாயிருக்கும் நடிக, நடிகைகள், எழுத்தாளர்கள், டெக்னீஷியன்கள், இயக்குனர்களுக்கு எல்லாம் அவர்களின் கனவு நினைவாகும் வாய்ப்பாக அமைந்திருந்தது.ஆனால் இந்த டப்பிங் சீரியல்களின் வரவால் இவர்களுக்கான வேலை வாய்ப்பு போனது. மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்த சிறு சிறு கேரக்டர்கள் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வாய்ப்பு இல்லாமல் மீண்டும் வறுமை நிலைக்கு சென்று விட்டார்கள். அங்கே இங்கே கஷ்டப்பட்டு எடிட் சூட் போட்டு ரெண்டு சீரியல் கையில் இருந்தால் பொழைச்சுக்கலாம் என்ற தொழில் நடத்திக் கொண்டிருந்த எடிட் சூட்டெல்லாம் இழுத்து மூடப்பட்டது. இப்படி தமிழ் டிவி சீரியல் உலகமே கிட்டத்தட்ட சன் / விஜய் டிவி சீரியல்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆட்டத்தை மூடிவிட,நூற்றுக் கணக்கில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சீரியல்கள் இன்றைக்கு மொத்தமாய் முப்பது நிகழ்ச்சிகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்தால் அதிசயம்தான். அதிலும் தற்போதைய ரியாலிட்டி ஷோக்களில் இன்வெஸ்ட் செய்தால் சீரியலை விட லாபம் அதிகமாகவும், இரண்டு சீரியல்கள் போடும் நேரத்தில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்று போட்டால் டி.ஆர்.பிக்கு டி.ஆர்பியும் ஆச்சு. செலவும் குறைத்தாகிவிட்டது என்று நினைக்க ஆரம்பித்தது சீரியல் உலகம்.

சீரியல் தயாரிப்பு என்பது ஒரு கட்டத்தில் குடிசை தொழில் போன்ற நிலையில் இருக்க, ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சீரியல்கள் எல்லாம் சன்னின் சீரியல் டி.ஆர்.பியோடு போட்டி போட முடியாமல் பட்ஜெட்டை குறைக்க ஆரம்பிக்க,கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் சீரியல்களின் தரமும் குறைய ஆர்மபித்தது. அதனால் பார்வையாளர்கள் குறைய ஆரமபித்தார்கள்.சேனல்காரர்கள் டப்பிங் சீரியல்களுக்கு போனதால் வேலை வாய்ப்பில்லாம இருக்கும் சீரியல் உலகம் கொஞ்சம் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தது சில வருடங்களுக்கு முன். ஆனால் சரியாய் யாரும் முன்நின்று நிற்காமல் போகவே சொதப்பலாயிற்று.  ஆனால் இதே போன்ற பெரும் பாதிப்பை தெலுங்கு சீரியல் உலகமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அங்கேயும் சீரியல்களின் தாதாவாக சன்னின் ஜெமினி டிவியிருக்க, அவ்ர்கள் கூட ஒன்றிரண்டு டப்பிங் சீரியல்களூக்கு மாறியிருக்க, ஈடிவி, மாடிவி, ஜீ தமிழ் போன்ற பிரபல சேனல்கள் டப்பிங் சீரியல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க,  இதை எதிர்த்து விஜய் யாதவ் என்கிற சீரியல் நடிகர் சேனல்களுக்கு எதிராய் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர இருக்கிறார்.

இந்த உண்ணாவிரத அறிப்பைத் தொடர்ந்து ஜெமினியும், ஈடிவியும், தங்கள் டப்பிங் சீரியல் ஒளிபரப்பை ஏப்ரல் 14 முதல் நிறுத்திக் கொள்வதாய் அறிவித்துள்ளது. ஒரு பக்கம் அட பரவாயில்லையே என்று தோன்றினாலும் இதனுள் ஒர் உள்குத்து இருப்பதாகவே படுகிறது. தமிழில் சமீபகாலமாய் பாலிமர் சேனலில் ரெண்டு ஹிந்தி டப்பிங் சீரியல்கள் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதை என்ன செய்வது என்று யோசித்த சன் தன் கைவரிசையை தன்னுடய எஸ்.சி.வி நெட்வொர்க்கில் அச்சேனலை கட் செய்து திருப்திப் படுத்திக் கொண்டது. அதே போலத்தான் அங்கேயும் காசு செலவு செய்து இவர்கள் தயாரிக்கும் சீரியல்களை விட டப்பிங் சீரியல் மூலமாய் குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற்றுக் கொண்டிருக்கும் சேனல்களை வீழ்த்த இது ஒர் பெரிய ஆயுதம் என்று கூட இவர்கள் இதற்கு ஆதரவு கொடுத்திருக்கக் கூடும். 

ஒரு பக்கம் வியாபாரரீதியாய் லாபம் தான் ஒர் தொழிலுக்கு ஆதாரம் என்றாலும் இன்னொரு பக்கம் பார்த்தால் யோசிக்க வேண்டிய விஷயமும் இருக்கிறது. நம் மண்ணின் கதைகளை, திறமைகளை வெளிக் கொணர வாய்ப்பேயில்லாம போய்விடக்கூடிய அபாயம்தான் அது.  ஹிந்தியில் நம் பட்ஜெட் சீரியல்களை டப்பிங்கில் வெளியிட முடியாது. அதற்கு அங்கே வியாபார வாய்ப்பேயில்லை. அதே போல மலையாளத்தில் தமிழ் சீரியல்களை டப் செய்து வெளியிட்டால் கலாச்சார ரீதியாகவே செட்டாகாது என்பதால் அதுவும் வேலைக்காகவில்லை. கன்னடத்தில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாய் டப்பிங் சீரியல்களுக்கு அனுமதி கிடையாது. நேரடியாய்த்தான் எடுத்து ஆக வேண்டும். அப்படியிருக்க, அங்கே எல்லா சேனல்களும் நேரடி கன்னட சீரியல் தயாரிப்பில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் போது ஏன் தெலுங்கில் முடியாது என்ற கேள்விதான் இந்த போராட்டத்திற்கு ஆரம்பம். நிச்சயம் இப்போராட்டம் வலுப்பெற்றால் தெலுங்கு டிவி உலகில் பெரும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  இதே போன்ற பாதிப்பினால் நலிந்து வரும் தமிழ் சீரியல் தயாரிப்பாளர்கள் டெக்னீஷியன்கள், நடிக,நடிகர்கள் ஏன் இந்த போராட்டைத்தை இங்கேயும் தொடர்க்கூடாது?
கேபிள் சங்கர்

தமிழ்ப் பயணி

unread,
Apr 13, 2013, 8:21:09 AM4/13/13
to பண்புடன், tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   12 , 2013  09:21:31 IST

Andhimazhai Image

நான் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னைஅடையார் பிலிம் இன்ஸ்டிட்டில் 1972-ல் சேர்ந்தேன். 1975-ல் படிப்பை முடித்தேன். ருத்ரய்யா என் வகுப்புத் தோழர். அவர் எங்கள் ஊருக்கு அருகில் தலைவாசலைச் சேர்ந்தவர். அவரது டிப்ளமோ படத்துக்கு நான்தான் காமிரா. படிப்பை முடித்த பின் டெல்லி தூர்தர்ஷனில் கொஞ்ச நாள் வேலைபார்த்தேன். பின் சென்னைக்கு திரும்பி வந்து இங்கே தூர்தர்ஷனில் சேர்ந்தேன். ருத்ரய்யாவும் அங்கே பணியாற்றினார்.  78-ல் சேலத்தில் இருந்து ஒரு ப்ரொட்யூசர் வந்திருந்தார்.

 

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாளை படமாக எடுக்க நினைத்தோம். கமல் நடிப்பதாக இருந்து அது பின்னர் கைவிடப்பட்டது.  இதற்கிடையில் ருத்ரய்யாதான் அவள் அப்படித்தான் படத்துக்கான் கருவினைச் சொன்னார். சோம சுந்தேரேஷ்வர் (ராஜேஷ்வர்) என்கிற எங்கள் திரைப்படக் கல்லூரி நண்பர் அதற்கு ஒன்லைன் தயார் செய்தார். அதை அனந்துவிடம் கொடுத்தோம். திரைக்கதையை ராஜேஷ்வர் எழுத பெரும்பாலும் வசனங்களை அனந்து எழுதினார். மீதியை வண்ணநிலவன் எழுதினார்.பாடல்களையும்அவரையேஎழுதச்சொன்னோம். அவர்மறுத்துவிட்டார்.

அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த படாபட் ஜெயலட்சுமியை தெரிவு செய்தோம். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் கமல் பிஸியாக இருந்தார். அவர் எப்போது ஓய்வாக இருக்கிறாரோ அப்போது தான் நாங்கள் படமெடுக்க முடியும் என்கிற நிலை. எங்களால் தேதிகளைக் கூற முடியாததால் படாபட் ஜெயலட்சுமியை நடிக்க வைக்க முடியவில்லை.

 

ஸ்ரீப்ரியாவை நடிக்க வைக்கலாம் என்று கமல் கூறினார். அப்போது அவரது ஆட்டுக்கார அலமேலு மிகபெரிய ஹிட். அவரே போன் செய்து ஸ்ரீப்ரியாவிடன் எங்களைக் கதைசொல்ல அனுப்பினார். நானும் ருத்ரய்யாவும் சென்றோம். அவர்ஒப்புக்கொண்டார். சம்பளம்எப்படிஎன்றோம். சொல்லிஅனுப்புகிறேன்என்றார். மேடம்ஒருலட்சரூபாய்வாங்குகிறார். இப்படத்துக்கு 30,000 ரூபாய்கொடுத்தால்போதும்என்றுதகவல்வந்தது. ஒப்புக்கொண்டோம். கமல்தான் இளையராஜாவையும் இப்படத்துக்கு புக் செய்தார். இது மட்டுமல்ல படத்துக்காக பலவிஷயங்களை கமல்தான் செய்தார்.

 

இப்படத்துக்கு கமலுடன் ரஜினியையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று அனந்து சொன்னார். அனந்து, கமல் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கேயே பேசி ரஜினியும் சம்மதித்தார். யாருக்கும் நாங்கள் அட்வான்ஸ் கொடுக்கவில்லை. பூஜை போட்டோம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் பட ஆபீசுக்கே வருவார்கள். ஆழ்வார்ப் பேட்டையில் அலுவலகம் போட்டிருந்தோம். எங்கள் அலுவலகத்தில் பேன் கிடையாது. மறுநாள் இளையராஜா வரப்போகிறார் என்பதால் முதல் நாள் மாலையே பேன் வாங்கிமாட்டினோம். ஆனால் இளையராஜா வந்தபோது மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.

 

மூன்று பாடல்கள் கம்போசிங். கண்ணதாசனை வைத்து பாடல்கள் எழுதலாம் என்று தீர்மானித்தோம். எங்கள் அலுவலகத்துக்குப் பக்கமே கண்ணதாசன் நடத்திய கவிதா ஹோட்டல். அங்குதான் கவிஞர் இருப்பார். இசையமைப்பாளர்கள் அங்கே செல்வார்கள். அங்கே இளையராஜா வேறு ஒரு பாடல் கம்போசிங்கிற்காக வருகிறேன். அங்கேயே வந்து விடுங்கள் என்றார். நடந்தே சென்றோம்.

 

பிரம்பு நாற்காலியில் பனியன் போட்டுக் கொண்டு கவிஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் வசந்தகாலக் கோலங்கள்.. வானில் விழுந்த கோடுகள் பாட்டு போல எங்களுக்கு வேண்டும் என்றோம். அவர் ஒரு 20 பல்லவிகளை எங்களுக்குச் சொன்னார். எதுவுமே பிடிக்க வில்லை. எங்களுக்கு முழு திருப்தி இல்லையென்றாலும் ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம். பாட்டெழுதிக் கொடுத்தார். படம் வெளியாகி ப்ளாப் ஆனதும் இப்படி ஒரு அபசகுனமான பாட்டை முதலில் எழுதினால் இப்படித்தான் ஆகும் என்று கூடச் சொன்னார்கள்.

 

சோவின் தம்பி அம்பியின் பள்ளியில் முதல் இரண்டு நாட்கள் இந்த பாட்டை எடுத்தோம். அடுத்து ஸ்ரீப்ரியா படப்பிடிப்பு. அவர் முதல் நாள் சேர் கொண்டு வந்திருந்தார். ஆனால் எங்கள் படப் பிடிப்பு விதமோ வழக்கத்தில் இருந்து வேறுபட்டு இருந்தது.  அங்கே யாருக்கும் சேர் இல்லை. அவர் புரிந்து கொண்டு மறுநாள் முதல் சேர் கொண்டு வரவில்லை. எங்களுடனே அவரும் தரையில் அமர்ந்து கொண்டார். சாப்பாடும் நாங்கள் ஆழ்வார்ப் பேட்டையில் ஒரு மெஸ்ஸில் சாப்பிடுவோம். அங்கிருந்து தான் உணவு வரும். லோ பட்ஜெட் படம். சுமாரான சாப்பாடு தான். அதைத் தான் கமல் உள்பட எல்லோரும் சாப்பிட்டார்கள்.

 

ரஜினி, கமல், நடிகர்கள் என்ன ஆடை அணிந்து படப்பிடிப்புக்கு வருகிறார்களோ அதுதான் அவர்களுக்கு அன்று ஆடை. ஆடை வடிவமைப்பாளர் என்று யாரும் இல்லை. மேக்கப்பும் இல்லை. எங்களுக்கு எப்போது என்ன எடுப்போம் என்றே தெரியாது. திடீரென்று போன்வரும். இன்னிக்கு கமல் ப்ரீயாக இருக்கிறார். எதாவது காட்சி எடுக்கலாமே என்று. உடனே மற்ற நடிகர்கள் யார் ப்ரியாக இருக்கிறார்கள் என்று பார்த்துஅவர்களைஅழைத்துஅனந்துசாரிடம்டயலாக்வாங்கி, லொகேஷன் பார்த்து படம் எடுப்போம். கமல்சார்வீடு, எங்கஅலுவலகம், ஸ்ரீபிரியா வீடு இப்படித்தான் படம் எடுத்தோம்.

 

நானும்சரி, ருத்ரய்யாவும் சரியாரிடமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கவில்லை. இளங்கன்று பயமறியாது என்பது போல துணிச்சலாக எடுத்தோம். நேரம் மிகவும் குறைவு. டிரைபாடில் வைத்து படம் பிடிக்க நேரம் ஆகும் என்பதால் பல காட்சிகளை நான் காமிராவை  கையில் வைத்தே எடுத்தேன்.  நேரம் சேமிப்பதற்காக கட் பண்ணி எடுக்க வேண்டிய பல சீன்களை ஒரே ஷாட்டில் எடுத்தோம். ஸ்ரீப்ரியா, கமல் இருவருமே ரீடேக்கே போகமாட்டார்கள். ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்து விடுவார்கள். மொத்த படமுமே 27000 அடியில் எடுத்தோம். கமலோ, ஸ்ரீப்ரியாவோ டப்பிங்கில் கூட ஒரே ஒரு முறை லூப்பைப் பார்ப்பார்கள். அப்படியே பேசிவிடுவார்கள்.

 

படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனை ஆகிவிட்டது. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, இளையராஜா கூட்டணியில் ஸ்ரீதர் தயாரிப்பில் அப்போது வெளியாகி இருந்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் நன்றாக ஓடியதால் எங்கள் படம் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை வைத்தே படம் எடுத்துவிட்டோம்.

 

படம் முடிந்து விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினோம். அன்று தான் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். படம் பார்த்தவுடன் அனைவர் முகத்திலும் சவக்களை! ரேட் குறைவாகத்தான் விற்றிருந்தோம். எனவே அனைவரும் பிரிண்டுகளை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் நல்ல தியேட்டர்களில் வெளியிடவில்லை. இப்படம் 1978 தீபாவளிக்குரிலீஸ். 12 படங்கள்ரிலீசாகின. கமலுக்குமூன்றுபடம். ரஜினிக்குமூன்றுபடம். ஆனந்தவிகடன் விமர்சனத்தில் எங்கள் படத்துக்குத்தான் குறைவான மார்க்.நூற்றுக்கு 28 மார்க்.

 

படம்வெளியானதும் மோசமான எதிர்வினை. சில இடங்களில் தியேட்டர் நாற்காலிகளை ரசிகர்கள் உடைத்ததாகத் தகவல். இரண்டே வாரத்தில் தமிழ்நாடு முழுக்க படம் தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்டு விட்டது. படம் ஓடவில்லை. நாங்கள்தோற்று விட்டோம் என்று நினைத்த போது ஓர் அதிசயம் நடந்தது. புகழ்பெற்றஇயக்குநர்மிருணாள்சென்சென்னைக்குவந்துதங்கினார். ஓர் இரவு எதாவது படம் பார்க்கலாமேஎன்றுஅவள்அப்படித்தான்படத்தைதியேட்டரில்பார்த்திருக்கிறார். மறுநாளேஅவர்தான்தங்கியிருந்தஓட்டலுக்குபத்திரிகையாளர்களைவரவழைத்துபடம்மிகவும்அற்புதமாகஉள்ளது. ஏன்நீங்கள்நல்லபடத்தைஆதரிப்பதில்லைஎன்றுபுகழ்ந்துபேட்டிகொடுத்தார். பத்திரிகைகள் அவர்பேட்டியைவெளியிட்டதுடன்ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, ருத்ரய்யாபேட்டிகளையும்வெளியிட்டன.

 

படம் ஓட ஆரம்பித்துவிட்டது. சென்னை, கோவை, திருச்சி, மதுரைபோன்றஇடங்களில் 100 நாள் ஓடியது.  இதற்குதமிழகஅரசின்மூன்றுவிருதுகள்கிடைத்தன. எனக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கிடைத்தது.  இதன் பின்னணியில் ஒரு சுவாரசியம் உள்ளது. அது 20 ஆண்டுகள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. அந்த விருதுக் குழுவில் இடம் பெற்றிருந்த சாருஹாசன் என்னிடம் சொன்னார். அப்போது கறுப்பு வெள்ளைப்படமாக இருந்தததால் ஒளிப்பதிவுக்கான சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் நடுவரான மார்கஸ் பாட்லேயிடம் அவள் அப்படித்தான் படத்தைப் போட்டுக் காட்டவில்லையாம். வண்ணப் படங்களை மட்டும் திரையிட்டுக் காட்டி ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தைப் அவர் தெரிவும் செய்துவிட்டார். சிறந்த இயக்கத்துக்கான படங்களைத் தேர்வு செய்யும் போது எதேச்சையாக மார்க்ஸ் பாட்லே வந்திருக்கிறார். அப்போது எங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார். அதில் ஒளிப்பதிவு அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. இதற்குத் தான் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.  ஏற்கெனவே ஒருவரைத் தெரிவு செய்து விட்டதால் அந்த ஆண்டு முதல் முதலாக இரண்டு விருது கொடுத்தார்கள். ஒன்று சிறந்த வண்ணப்பட ஒளிப்பதிவுக்காக; இன்னொன்று கருப்பு வெள்ளைக்காக எனக்கு.

 

(தொகுப்பு: முத்துமாறன்)

 

அந்திமழை ஏப்ரல்’2013 மாத இதழில் வெளியான சிறப்பு கட்டுரை

வில்லன்

unread,
Apr 13, 2013, 1:40:39 PM4/13/13
to panb...@googlegroups.com, tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
ருத்ரய்யா இந்த படத்தை ரீமேக் செய்யபோவதாக குமுதம் லைட்ஸ் ஆனில் போட்டிருந்தாங்க


--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக
முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

sk natarajan

unread,
Apr 13, 2013, 9:28:58 PM4/13/13
to tamil...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்
தொலைக் காட்சித் தொடர்களில்
ஒரு பக்கம் வளர்ச்சி
மறு பக்கம் வீழ்ச்சி
டப்பிங் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு
வசதி வாய்ந்த நிறுவனங்களின் ஆதிக்கம் 
வித்தியாசமான உலகம் இது 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/13 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

sk natarajan

unread,
Apr 13, 2013, 9:36:45 PM4/13/13
to tamil...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்
அவள் அப்படித்தான் படம் - நிதானமாக சென்றாலும் அருமையான படம்
அந்த நேரத்தில் ஐந்து லட்சம் இருந்தால் ஒரு படத்தினை எடுத்து விடலாம்
லேபை விட்டு பட சுருள் வரும்போது பணத்தை செட்டில் செய்யலாம்
படம் நான்கு வாரங்கள்   ஓடினாலே மிகப் பெரிய லாபம் கிடைத்தது
ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் ஓடினாலே போட்ட பணம் கைக்கு கிடைத்து விடும் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/13 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஹாஜா மொஹைதீன்

unread,
Apr 15, 2013, 6:28:12 AM4/15/13
to panb...@googlegroups.com

2013/4/14 sk natarajan <sknatar...@gmail.com>

அவள் அப்படித்தான் ப

ayalum njanum thammil -2012 /பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.




படம் எழுதுவதே குறைந்து போய் விட்டது...
அப்படியே எழுத உட்கார்ந்தாலும் நேரம் கிடைப்பதில்லை... அல்லது அன்று யாராவது அந்த படத்தை எழுதி விடுகின்றார்கள்.. அதனால் பார்த்த படத்தை பதிந்து விடுவோம்... டைம்பாஸ் படம்  எழுதி பல வருஷம் ஆகி விட்டது.

மலையாள படங்கள் நிறைய பார்க்கின்றேன்....  இதுவரை எத்தனை நல்ல படங்களை தவற விட்டு இருக்கின்றேன் என்று பார்க்கும் போது என் மீதே எனக்கு கோபம் கோபமாக வருகின்றது...  

நெகிழவைத்த திரைப்படங்கள் எவ்வளவோ இருக்கின்றன... ஆனால் அவைகள் எழுத நல்ல மனநிலை வேண்டும் ஏனோ தானோ என்று  அந்த படங்களை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை... 

அதனால் டைம்பாஸ் படத்தில் இருந்து  மலையாளபடத்தை ஆரம்பிப்போம்
லால் ஜோஸ் இயக்கத்தில் நடிகர் பிருத்திவிராஜ் நடித்த  ஆயாலும் நஜனும் தம்மில்..( எனக்கும் அவனுக்கும் இடையே) என்ற திரைப்படம் கேரளாவில் பிளாக்பஸ்டர் திரைப்படம்... அது பற்றி....

===========
ஆயாலும் நஜனும் தம்மில் படத்தின்  ஒன்லைன்.


அலட்சியமாக இருக்கும் போது ஒருவன் சந்திக்காத பிரச்சனைகளை நேர்மையாக   அவன் இருக்கும் போது சந்திப்பதே இந்த படத்தின் ஒன்லைன்.

=========
ஆயாலும் நஜனும் தம்மில் படத்தின் கதை என்ன?


பிருத்திவி, நரேன் ரெண்டு பேரும் டாக்டர்ஸ்க்கு படிக்கறாங்க.. ரொம்ப அலட்சியம் படிப்புல சின்சியாரிட்டி இல்லை...டாக்டர் தொழில் எவ்வளவு உயர்வான தொழில் என்று அறியாமல் அலட்சியமாக படிக்கின்றார்கள்... ஆனால்  கல்லூரி முடித்து மூனாரில் பிராதாப் போத்தன் நடத்தி வரும் மருத்துவமணைக்கு பணிக்கு பிருத்வி அவர் அப்பாவால் அனுப்பி வைக்கப்படுகின்றார்.. பிரதாப் போத்தனிடம் தொழில் கற்றுக்கொள்ளும் பிருத்திவி பல பிரச்சனைகளை அங்கே சந்திக்கின்றார்....  

அதன் பின் ஒரு சிறுமிக்கு  பெற்றோர் அனுமதி இல்லாமல் ஆப்பரேஷன் செய்ய, அந்த சிறுமி இறக்கின்றாள். அது கொலை பழியாக பிருத்வி மீது விழுகின்றது எப்படி அதில் இருந்து மீள்கின்றார் என்பது கதை.
=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

 இந்த படம் கேரளாவில் பிளாக் பஸ்டர் திரைப்படம்... எனக்கு பீல் குட்  இல்லாவிட்டாலும் இந்த படத்தை டைம்பாஸ் படமாக ரசிக்க முடியும்...

இந்த படத்தில் முதலில் நரேன் பாத்திரத்தில் குஞ்சக்கோ பூபன் நடிக்க கமிட் ஆகி இருந்தார்... தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் நடிக்காமல் போக  அந்த பாத்திரத்தை நரேன் செய்தார்.. நரேன்   நன்றாக நடித்து இருக்கின்றார்.

மருத்துவ தொழிலை உயர்வாக சித்தாரித்தாலும் அந்த துறையில் இருக்கும் தகிடுதத்தங்ளையும் சொல்லி இருக்கின்றார்கள்..

2008 இல் மிஸ் கேரளாவாக வாகை சூடி  தன் கேரியரை ஆரம்பித்த ரிமா கலிங்கல் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றார்... இந்த படத்தில் பெரிதாய்  வேலை  இல்லை என்றாலும் ரீமாவிடம் ஏதோ ஈர்ப்பு இருப்பதை மறக்க முடியாது..



பிரதாப் போத்தனுக்கு காட்பாதர் கேரக்டர்.... நன்றாகவே செய்து இருக்கின்றார்...22 பிமேல் கோட்டயம் படத்தில் வில்லன் கேரக்டர் இந்த படத்தில் நல்லவன் கேரக்டர் நாட்  பேட்.
ஷம்ருதாசுனில் ரம்யா நம்பிசன் போன்றவர்கள் தத்தம் பணிகளை சிறப்பாகவே   செய்து  இருக்கின்றார்கள்.- வழக்கம் போல கலாபவன் மணி தன் பாத்திரத்தை முழுமையாக ரசித்து செய்து இருக்கின்றார்...  பிருத்திவி காலில் விழுந்து தன்  பிள்ளையை காப்பாற்ற மன்றாட சொல்லும் காட்சி அருமை.

பிருத்வி மேல் விசாரனை வைக்க அங்கே பிரதாப் போத்தன் வந்து தன் தரப்பை சொல்லி விட்ட செல்லும் அந்த காட்சி ஒரு உணர்வுபூர்வமான காட்சி...

2012 ஆம் ஆண்டு கேரளா அரசின் சினிமா விருதில் நான்கு விருதுகளை தட்டிசென்றது இந்த திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது...

  சிறந்த நடிகர் , சிறந்த இயக்குனர், சிறந்த படம்... போன்ற  விருதுகளை பெற்றது.

தான் செய்த தவறுக்கு வருந்தி  கலாபவன் மணி மகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அவள் கால் தொட்டு  சாரி  சொல்லி விட்டு வரும் காட்சி நெகிழ்ச்சி.

============
படத்தின் டிரைலர்..


=============
படக்குழுவினர் விபரம்.

Directed by Lal Jose
Produced by Prem Prakash
Written by Bobby Sanjay
Starring Prithviraj
Pratap Pothen
Narain
Samvrutha Sunil
Rima Kallingal
Remya Nambeesan
Music by Ouseppachan
Cinematography Jomon T. John
Editing by Ranjan Abraham
Studio Prakash Movie Tone
Distributed by Century Films
Release date(s)
19 October 2012
Country India
Language Malayalam
Box office 270 million


==============
பைனல்கிக்.
ஒருவேளை மலையாளிகளுக்கு இந்த படம்  பீல் குட் முவீயாக  இருக்கலாம்... எனக்கு இந்த படத்தை டைம்பாஸ் திரைப்படம் என்று  சொல்லலாம். ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்பதில்  மாற்றம் இல்லை...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...




என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

ஹாஜா மொஹைதீன்

unread,
May 1, 2013, 4:38:53 PM5/1/13
to panb...@googlegroups.com, நட்புடன்

Emmanuel, Ladies & Gentleman

from மெட்ராஸ்பவன் by ! சிவகுமார் !

Emmanuel:
                                                               


சில காலமாக பீல்ட் அவுட் ஆகி இருந்த மம்முட்டி புதிய ரவுண்டில் வெற்றிகரமாக வலம் வர துவங்கிவிட்டார். அதற்கு இன்னொரு ஆதாரம்தான் இம்மானுவேல். சொற்ப சம்பளத்திற்கு ஒரு பழங்கால பத்திரிகை ஆபீசில் வேலைபார்க்கும் மம்முட்டிக்கு முற்றிலும் நவீன சூழலில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. நேர்மையான ஹீரோவான (!) இம்மானுவேலுக்கும்,தில்லுமுல்லு மேனேஜருக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் களம். 'என்னடா இந்தப்படம் சத்யம்ல ரிலீஸ் ஆகல?' என்று புலம்பும் சேட்டன்களுக்கு  பி.வி.ஆர்.தான் ஒரே நிவாரணி. நான் இம்மானுவேலை தரிசித்ததும் பி.வி.ஆர் நைட் ஷோவில் தான்.  

இன்சூரன்ஸ் வேலையில் சேர 25 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது என்பது கம்பனி பாலிசி. ஆனால் பலத்த சிபாரிசுடன் அந்த தடையை தகர்த்து இளைஞர்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்கிறார் மம்முட்டி. ஐந்து பேர் சேர்ந்து கேள்விக்கணைகளை தொடுக்க நிலைகுலைகிறார் இவர். 'சரி பரவாயில்லை. ஏதேனும் ஒரு பொருளை எம்மில் ஒருவருக்கு விற்றுக்காமியுங்கள்' என டெஸ்ட் வைக்கின்றனர். 

தனது பழைய செல்போன் கவரை  ஃபஹத்திடம் நீட்டி 'இதன் விலை 60 ரூபாயென ரோட்டோர வியாபாரி சொன்னான். என் மனைவி பேரம் பேசி 50 ரூபாய்க்கு வாங்கினாள். நீங்கள் 100 ரூபாய் தந்து இதை வாங்கினால் 2 00 ரூபாய்க்கு விற்பது எப்படி என செய்து காட்டுகிறேன்' என்கிறார் மம்முட்டி. 'பிடி 100 ரூபாயை' எனக்கூறி செல்போன் கவரை வாங்கிவிட்டு 'எங்கே உனது சாமர்த்தியத்தால் இதை 200 ரூபாய்க்கு விற்றுக்காட்டு பார்க்கலாம்' என  ஃபஹத் செல்போன் கவரை அவரிடம் மீண்டும் நீட்ட அதற்கு மம்முட்டியின் பதில் '50 ரூபாய் பொருளை 100 ரூபாய் தந்து வாங்கிவிட்டீர்கள். அதை மீண்டும் வாங்க நான் என்ன முட்டாளா?'. இதன் மூலம் வேலைக்கு செலக்ட் ஆகிவிடும் மம்முட்டி மீது அவ்வப்போது 'உர்ர்' முகம் காட்ட ஆரம்பிக்கிறார்  ஃபஹத். 
                                                               

மம்முட்டியை விட நடிப்பில் மிளிர்வது  ஃபஹத் தான். கார்ப்பரேட் சூழலுக்கு பாந்தமாக பொருந்தும் முகவெட்டு, நுனிநாக்கு ஆங்கிலம் கலந்த அதிகார தோரணை..அருமை. ஒத்துப்போகாத மேனேஜர்-தொழிலாளி  கெமிஸ்ட்ரி இவருக்கும், மம்முட்டிக்கும் இடையே பக்காவாக ஒத்துப்போகிறது. ஆபீஸ் ப்யூனாக சலீம். நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லாமல் போய்விட்டது இவருக்கு.  கேன்சர் நோயாளியாக தாமிரபரணி பானு. தலைமுடி உதிர்ந்து, உடலிளைத்த பெண்ணாக வரும் ஓரிரு காட்சிகளில் மேக்கப் தத்ரூபம். மேக்கப் மேனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள். சமீபத்தில் மறைந்த மூத்த நடிகை சுகுமாரி இன்சுரன்ஸ் பணத்திற்காக அலைச்சலுக்கு உள்ளாகும் சோகம் ததும்பும் கேரக்டரில் வந்து செல்ல, குட்டிக்கவியாக ஃபக்ரு  சில நிமிடங்கள் சிரிக்க வைத்துவிட்டு காணாமல் போகிறார். 

கோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவரிடம் இன்சுரன்ஸ் கேன்வாஸ் செய்ய மம்முட்டிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 'எனது காரை பாலோ செய்து வாருங்கள்' என அப்பெண் சொல்ல தனது டூவீலரில் பின்தொடர்கிறார் மம்முட்டி. சிக்னல் ஒன்றில் வண்டி நொண்டியடிக்க அதை அப்படியே விட்டுவிட்டு சில கிலோ மீட்டர் தூரம் காருக்கு பின்னாலேயே ஓடுகிறார் தலைவர். அதுவும் சாதாரண கார் அல்ல. 'ஆடி' காராம். எந்த சேட்டா இது?? 

மம்முட்டி மனைவியாக வரும் ரீனு சிம்ப்ளி & ஹோம்லி. குட்டிப்பையன் கவுரி சங்கர் பேசும் செல்லமான வசனங்கள் அனைத்தும் செவிக்கினிமை. தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் நடக்கும் தகிடுதத்தங்களை வெளிச்சம் போட்டி காட்டியிருக்கும் இயக்குனர் லால் ஜோஷிற்கு சபாஷ் போடலாம். படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வரும் நவீன ஆபீஸ் சூழல் முழுக்க செட் என்பதை நண்பர் சொல்லித்தான் கேள்விப்பட்டேன். எனவே கலை இயக்குனருக்கும் ஒரு சபாஷை மிச்சம் வைக்கலாம். 

அ ஃப்சல் இசையில் 'மனதுதிச்சது' பாடல் பலமுறை நம்மை கேட்கத்தூண்டும் க்யூட் க்ளாச்சிக். மொத்தத்தில் ஒருதரம் பார்க்கக்கூடிய  ஃபீல் குட் பேமிலி சினிமா இந்த இம்மானுவேல். 

sk natarajan

unread,
May 1, 2013, 10:12:00 PM5/1/13
to பண்புடன், தமிழ்ச் சிறகுகள்
இந்தப் படம் பார்த்தேன் அருமையான படம் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/15 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>

ஹாஜா மொஹைதீன்

unread,
May 2, 2013, 5:52:43 AM5/2/13
to panb...@googlegroups.com, நட்புடன்

2013/5/1 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>
Emmanuel, Ladies & Gentleman
 
சமீபகாலமாய் கமர்ஷியல் சினிமா வெற்றியின் செல்லப் பிள்ளையாய் வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம். அனிருத்தின் ரெண்டாவது படம். ஏற்கனவே பாடல்கள் ஹிட் லிஸ்டில் அலறிக் கொண்டிருக்கிறது.இப்படி பல ப்ளஸ்களை கொண்டு வெளி வந்திருக்கும் படம். எதிர்நீச்சல்.

சிவகார்த்திகேயன் ஒர் சாதாரணன். குஞ்சிதபாதம் என்கிற பெயரால் பெரும் அவமானத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கிறவன். ஒரு சுபயோக தினத்தில் தன் பெயரை ஹரீஷ் என மாற்றி வைத்துக் கொண்ட மனதிற்குப்  பிடித்த பெண்ணை சந்திக்கிறான் காதல் கொள்கிறான். எல்லாம் சிறப்பாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் பழைய பெயரின் காரணமாய் நடந்த ப்ரச்சனைகள் வெடித்து காதலில் விரிசலை உண்டாக்குகிறது. தன்னை ப்ரூவ் செய்ய ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் தன் ஒரே திறமையான ஒட்டத்திற்கு ஒர் வாய்ப்பு வருகிறது. அவருக்கு கோச்சாய் வருகிறார் நந்திதா. பின்பு என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் காண்க.
சிவகார்த்திகேயனுக்கு மிக இயல்பாய் அமைந்திருக்கும் கேரக்டர். மனிதர் வலிக்காமல் மிக கேசுவலாய் நடிக்கிறார். அதுவும் இப்படி அசமந்தத்தனமான கேரக்டர் என்றால் அல்வா. கூடவே கொடுக்காய் சதீஷ். ரெண்டு லைனுக்கு ஒரு முறை பஞ்ச் அடித்துக் கொண்டேயிருக்கிறார். ப்ரியா ஆனந்த் அழகாய் இருக்கிறார். அதை தவிர வேறொன்றும் இல்லை. ஒடுக்கப்பட்ட ஓட்டப்பந்தய வீராங்கனை பாத்திரத்தில் ஓட்டக்காரியாய் பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்யாவிட்டாலும் கேரக்டருக்கு பொருந்தியிருக்கிறார் நந்திதா. நேமாலஜிஸ்ட் மனோபாலா புன்முறுவல் பூக்க வைக்கிறார் என்றால், அவரிடம் பேர் மாற்ற வரும் நடிகர் அவரது ஒரிஜினல் பெயரான பாவாடை சாமியை முழுசாய் கூப்பிடாமல் பாதியாய் கூப்பிட்டு அதனால் படு அவதியை சொல்லுமிடம் செம. நந்திதாவுக்கு அப்பாவாக நடித்தவர் தான்  நடிக்கிறேனப்பு என்று நன்றாக தெரியும்படியாய் நடித்திருந்தார். அனிருத் கேமியோ பண்ணியிருக்கிறார். தனுஷும், நயந்தாராவும் ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார்கள். சும்மா டைம் பில்லிங்தான்.
படத்திற்கு பெரிய ப்ளஸ் அனிருத். பாட்டெல்லாம் பட்டாசாய் ஹிட்டித்திருக்கிறார். படம் முழுவதும் ரீரிக்கார்டிங்கில் வேறு கலக்கியிருக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸ் சீன்ஸ்.. க்ளாஸ். வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. சில காட்சிகளில்மட்டும் அவுட்டாப் ஃபோகஸ் தெரிந்தது.
எழுதி இயக்கியவர் செந்தில். முதல் பாதி முழுவதும் குஞ்சிதபாதம் மேட்டரையும், பிரியா ஆனந்தை கரெக்ட் செய்யும் முயற்சியிலேயும் கவனம் செலுத்தி நடு நடுவே நாலு பாட்டையும் போட்டு, சதீஷை வைத்து செந்தில் அடித்திருக்கும் லூட்டி செம காமெடி. இரண்டாம் பாதியில் தான் கதைக்கே வருகிறார்கள். அத்லெட்டிக் விஷயங்களை ஒரு பாடல் மாண்டேஜில் காட்டி விட்டு, நந்திதாவின் ப்ளாஷ்பேக்குக்கு போனது பெரிய ப்ளஸ். இருந்தாலும் க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் பெப் சேர்த்திருக்கலாம். படம் முடிந்ததும், வரும் ப்ளூபர்ஸில் வரும் காமெடி கொஞ்சம் அடல்ட் ரகமென்றாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பெயருக்காக காதலி கிடைக்கவில்லை என்பது கூட ஓகே அந்த பழைய பெயரை சொல்லாததினாலும், அந்த பெயர் இருந்த போது நடந்த ஒர் கலாட்ட சம்பவத்தினால் சிவகார்த்திகேயன் - ப்ரியா ஆனந்த் காதலில் விரிசல் விழுவது இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் அமைத்திருக்கலாம். அதே போல வள்ளியின் கதையில் அவரை ஆண் என்று சொல்லி நிருபித்து பதக்கங்களை திரும்ப வாங்கியதை, அதன் வலியை இன்னும் அழகாய் பதிவு செய்திருக்கலாம். ஒரு ஜனரஞ்சகமான, சம்மர் எண்டர்டெயினராய் அமைந்திருக்கிறது எதிர்நீச்சல்.

கேபிள் சங்கர்

ஹாஜா மொஹைதீன்

unread,
May 2, 2013, 5:54:14 AM5/2/13
to panb...@googlegroups.com, நட்புடன்

2013/5/2 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>
Emmanuel, Ladies & Gentleman

Delicious
TwitterLinkedInFacebookBufferMail
+Tag
மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் வலம் வந்து கொண்டிருக்கும் சி.வி.குமாரின் மூன்றாவது படைப்பு.  பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற ஹிட் படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் படம். நாளைய இயக்குனர் வெற்றியாளர் நலன் குமரசாமியின் இயக்கத்தில் வெளிவரும் படம். ஸ்டூடியோ க்ரீனின் அபாரமான, பப்ளிசிட்டி வேறு எதிர்பார்புக்கு கேட்க வேண்டுமா? 


சாப்ட்வேர் நண்பனின் காசில் வேலைக்கு போகாமல் அலாரம் வைத்து எழுந்து   குளித்து முடித்து சரக்கடிப்பதை மட்டுமே வேலையாய் வைத்திருக்கும் ரமேஷ். ஊரில் நயந்தாராவுக்கு கோயில் கட்டியதால் ஊர் கடத்தப்பட்ட சிம்ஹா, சாப்ட்வேர் கம்பெனியில் ஃபீமேல் ஹராஸ்மெண்ட் என்ற குற்றச்சாட்டில் மாட்டி வேலை போன சாப்ட்வேர் இளைஞர் அசோக் இவர்கள் மூவரும் நொந்து நூடூல்ஸ் ஆகி சரக்கடிக்க போன இடத்தில் ஹலூசினேஷனில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் அமெச்சூர் கடத்தல்காரர் விஜய சேதுபதி. இவருடன் இந்த மூவர் கூட்டணி கூட்டு சேருகிறது. அதன் பிறகு நடக்கும் அதிரிபுதிரி, ரோலர் கோஸ்டர் நிகழ்வுகள் தான் படம்.
ரொம்ப நாளாகிவிட்டது முழுக்க முழுக்க ஒர் ப்ளாக் காமெடி வகை ஆக்‌ஷன் திரில்லர் படம் பார்த்து. ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் லெதார்ஜிக்காக இருந்தாலும் விஜய் சேதுபதியின் கேரக்டர் வந்தவுடன் படம் டேக் ஆப் ஆகிவிடுகிறது. அதிலும் அவரது Kednapping  செய்வதற்கான 5 ரூல்கள் அட்டகாசம். ஒவ்வொரு ரூல்களை சொல்லும் போதும் அவர் சொல்லும் அரைகுறை இங்கிலீஷ் டயலாக் மாடுலேஷன்  க்ளாஸ். அமைச்சர் மகனை கடத்திவிட்டு, நாளைக்கு ஞாயித்துக்கிழமை நாங்க ஒர்க் பண்ணமாட்டோம் அதுனால் திங்கட்கிழமை அன்னைக்கு வந்து பணத்தை எங்க வைக்கிறதுன்னு சொல்றோம்னு சீரியஸாய் சொல்லுமிடம் செம காமெடி. ஊர் பட்ட அவசரத்திலும் அழுது கொண்டே ஒரு பீர் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் சிம்ஹா. ஏன் வேலைக்கு போகலைன்னு கேட்டதற்காக அரை மணி நேரம் லெக்சர் அடிக்கும் ரமேஷ். அப்பாவிடமிருந்து பணத்தை கறக்க, தன்னையே கடத்தி கொண்டு போகச் சொல்லும் கிடைக்கிற இடத்தில் எல்லாம் காசை அடிக்கும் கருணா, அரூபமாய் விஜய் சேதுபதியுடன் குடும்பம் நடத்தும் சஞ்சிதா, பேசா டெரர் வில்லன், ரவுடி டாக்டர், நம்பிக்கை கண்ணன் என்கிற பெயரில் போட்டுக் கொடுக்கும் சிவகுமார், சில்லறை இல்லை என்று சொன்னதற்காக தன்னை பிச்சைக்காரன் என்று சொல்லியதாய் வெறிபிடித்தலையும் அந்த பாபா தலைமுடி ஆள் என சுவாரஸ்ய கேரக்டர்களின் அணிவகுப்பு நடத்தியிருக்கிறார்கள்.

தினேஷின் ஒளிப்பதிவு தெளிவு.  வழக்கம் போல லியோவின் எடிட்டிங் படத்திற்கு தேவையான அளவிற்கு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களை விட, பின்னணியிசையில் மனிதர் சின்னச் சின்ன ஸ்ட்ரிங்கில் கலக்குகிறார். பாடல்களில் ரீட்ரோவை பயன்படுத்துவது சமயங்களில் நன்றாக இருந்தாலும் படத்தின் சுறுசுறுப்பை குறைக்கிறது. கார் ஆக்ஸிடெண்ட் ஷாட்களில் சிஜி சரியில்லை.
எழுதி இயக்கியவர் நலன்குமரசாமி. இவரது குறும்படங்களை பார்த்தவர்களுக்கு இவரது ரைட்டிங் ஸ்டைல் புரியும். இவரது பலமே சர்காஸ்டிக்காக அடிக்கும் சின்னச் சின்ன வசனங்கள் தான். “நல்ல மாமாவுக்கு ஒரு சூடு” “வீரம் அறவே கூடாது” ” நீ சாப்பிடுறது இட்லின்னு சட்னி கூட நம்பாதுடா” “சென்னையில என்ன பண்ணப் போறேன்னு முடிவில்லாம வந்தவன் தான் ஜெயிச்சிருக்கான்”விஜய் சேதுபதி பேசும் ப்ரோக்கன் இங்கிலீஷ் வசனங்கள். என தன் பலத்தை வைத்து சிக்ஸர் அடிக்கிறார். கடத்தல் செய்யப்பட்ட அப்பாவிடம் அந்த பெண்ணை விட்டே பேசச் சொல்லி அவரை  அசுவாசப்படுத்துவது, அவரிடமிருந்து பணத்தை அவருடன் போனில் பேசிக் கொண்டே நேரில் வந்து வாங்கிக் கொண்டே போகும் ஸ்டைல்.அத்துனை போலீஸ் இருக்கும் போது பணத்தை தூக்க செய்த ஒர் அட்டகாசமான போன்ற  ஐடியாக்கள் பட்டாசு.  போன் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை கடத்தியவுடன் கூட தன்னை கடத்தியதை உணராமல் போனில் பேசிக் கொண்டே வரும் பெண், கடத்தப்பட்ட குண்டு பையன் எனக்கென்னவோ நீங்க மாட்டிப்பீங்கன்னு தோணுது என்று சொல்லுமிடம், முதல்வர் சாப்ட்டுட்டிருக்காரு என்று சொல்லும் போது  உள்ளே டேபிளின் மேல் பீட்சாவை வைத்து சாப்பிடும் இடம். இப்படி சுவாரஸ்ய விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். முதலில் மெல்ல ஆரம்பிக்கும் திரைக்கதை மெல்ல சூடு பிடித்து இடைவேளை வரும் போது சூது நம்மை கவ்விக் கொண்டிருக்க வைத்து இருக்கிறார். 
குறையென்று பார்த்தால் இடைவேளைக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கேரக்டரை வைத்து பில்டப் செய்தது கொஞ்சம் ஓவர் தான். முதல் பாதியில் இருக்கும் சம்பவங்களின் நெருக்கம் இடைவேளைக்கு பிறகு இல்லாமல் திருடனை பிடிக்க போலீஸ் செய்யும் அட்ராசிட்டியான நடவடிக்கைகள் நம்மை பயமுறுத்துகிற அளவிற்கு படத்தில் அவர்களால் பாதிக்கப்பட போகும் விஜய் சேதுபதி கும்பலுக்கு வரவேயில்லை என்பதும். அவர்கள் எப்படியும் மாட்ட மாட்டார்கள் என்பது முன்பே தெரிந்துவிடுவதால் பெப் குறைந்து விடுகிறது. சஞ்சிதா ஷெட்டியின் கேரக்டர் சுவாரஸ்யமாய் இருந்தாலும் அவரை ஒர் ஹலூசினேசன் கேரக்டராய் வலம் வர வைக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஹெலிக்காப்டர் ஐடியா நன்றாக இருந்தாலும், ஜி.பி.எஸ் எல்லாம் வைத்திருக்கும் பேக்கை ஏன் போலீஸ் கண்டு பிடிக்க முடியவில்லை?. இப்படி திடீரென இரண்டாம் பாதியில் கதை நடுவில் அலை பாய்ந்த திரைக்கதை சட்டென சூடு பிடித்து க்ளைமேக்ஸேயில்லாத க்ளைமேக்ஸை வைத்து முடித்திருப்பது செம. சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் அது பற்றிய எண்ணமே வராத வகையில் ப்ரொடக்‌ஷன் இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படம் நெடுக குட்டிக் குட்டியாய் சுவாரஸ்ய கணங்களை மிக நுணுக்கமாய் வைத்து சாதாரண இடங்களைக் கூட அசாதரணமான இடமாய் மாற்றியமைத்த நலனின் திரைக்கதைக்கும், வித்யாசமான படங்களை தெரிந்தெடுத்து அதனை சரியான பட்ஜெட்டில் தயாரித்து வெற்றி பெற உழைக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துகள்

தமிழ்ப் பயணி

unread,
May 6, 2013, 8:40:15 AM5/6/13
to பண்புடன், tamil...@googlegroups.com

‘துளு’ சினிமாவின் மறுமலர்ச்சி!

பாறையில் விதைக்கப்பட்ட விதை முளைத்து மரம் ஆனால் சாதனைதானே? கன்னட சினிமாவே கால்காணி நிலத்தை வைத்துக்கொண்டு தத்தக்கா… பித்தக்கா… என்று தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த குட்டியூண்டு இண்டஸ்ட்ரிக்குள்ளும் அமீபா சைஸில் உருவான இன்னொரு இண்டஸ்ட்ரி முளைத்து வருவது அதிசயம். அவ்வாறு வீறுகொண்டு எழுந்துக் கொண்டிருப்பது ‘துளு’ சினிமா. தென் கர்நாடகாவிலும், கேரளாவின் சில இடங்களிலும் திராவிட மொழியான ‘துளு’ இன்னமும் வாழ்கிறது. மங்களூர், உடுப்பி, காசர்கோடு பகுதிகளில் துளு பேசுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

இந்திய சினிமாவுக்கு வயது நூறு என்றாலும் துளு சினிமா இன்னும் இளைஞன்தான். நாற்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. 1971ல் வெளிவந்த ‘என்ன தங்காடி’தான் துளுவில் வெளிவந்த முதல் திரைப்படம். பத்து, பதினைந்து தியேட்டர்களில் ஒரு படத்தை திரையிட முடிந்தாலே இன்றும் அது சாதனைதான். வருடத்துக்கு ஒன்று, இரண்டு திரைப்படங்கள் வந்தாலே ஆச்சரியம். இன்னும் மொத்தமாக நாற்பது படங்கள் கூட வரவில்லை. கன்னட சினிமாவில் பணிபுரிபவர்கள் பெத்த மனசு வைத்து அவ்வப்போது துளுவிலும் பங்காற்றுகிறார்கள் (தகவலுக்காக : உதயம் NH4 திரைப்படத்தின் நாயகி அஷ்ரிதா கூட துளுதான்).

இருந்தும் சில குறிப்பிடத்தக்க மைல்கற்களை துளு சினிமா எட்டியிருக்கிறது. இம்மொழியில் தயாரிக்கப்பட்ட ‘செப்டம்பர் 8’ இருபத்தி நான்கு மணி நேரத்தில் மொத்தமாக தயார் செய்யப்பட்டு உலகசாதனை படைத்தது. ஆசிய திரைப்படவிழாவான ஓசியன் சினிஃபேனில் ‘சுடா’ என்கிற துளு திரைப்படம், சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ’பங்காரு பட்லர்’ என்கிற திரைப்படம் நிறைய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை குவித்திருக்கிறது.
                               
மிகச்சிறுபான்மை மொழியான தங்கள் மொழியிலும் படங்களை எடுத்து ஆத்மதிருப்தி பட்டுக்கொண்டாலும், என்னதான் விருதுகளை குவித்தாலும் மற்ற மொழிப்படங்களை மாதிரி வணிகரீதியாக காசு பார்க்க முடியவில்லையே என்று துளுக்காரர்களுக்கு நீண்டநாள் ஏக்கம் இருந்தது. 2011ல் வெளிவந்த ‘ஓரியார்டோரி அசல்’ அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தது. பெரிய ரிஸ்க் எடுத்து ஒரு கோடியில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப்படம் ஒன்றரை கோடிக்கும் மேலாக வசூலித்து, துளுவில் படமெடுத்தால் துண்டைப்போட்டுக் கொண்டுதான் போகவேண்டும் என்கிற நிலையை மாற்றியமைத்திருக்கிறது. ‘துளுவின் வெற்றிகரமான முதல் சினிமா’ என்று அங்கிருக்கும் விமர்சகர்கள்(!) கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். பெங்களூர், மும்பை மாதிரி பெருநகரங்களிலும், இப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. விருது வாங்குவதற்கும், பெயர் பெருவதற்கும்தான் துளு சினிமா என்கிற நிலை இனியில்லை. துளுவர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், மலையாளர்கள், கொங்கணிகளும் இப்படத்தின் வெற்றியில் மகிழ்ந்தார்கள். ஆயிரம் மாச்சரியங்கள் இருந்தாலும் நம் பங்காளிக்கு ஒரு கவுரவம் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஓரியார்டோரி அசல்’ நாடகமாக மேடையில் ஏறியபோது துளுவர்கள் எப்படிப்பட்ட பரவசத்தை அடைந்தார்கள் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அந்த நாடகத்தை எழுதி இயக்கிய விஜயகுமார் கோடியால்பெய்ல் ஓவர்நைட் நட்சத்திரமாக மின்னினார். நாடகத்துக்கு கிடைத்த ஆதரவைக் காட்டிலும், அது சினிமாவாக எடுக்கப்பட்டால் பன்மடங்கு கிடைக்கும் என்று அவர் எண்ணினார். தயாரிப்பாளர்கள் அப்படி எண்ணவேண்டுமே?

director
இத்தனை ஆண்டுகளாக ஸ்க்ரிப்ட்டை புள்ளைத்தாய்ச்சி மாதிரி சுமந்துக்கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரின் வீட்டு வாசலாய் அலைந்ததுதான் மிச்சம். பணத்தைக் கொண்டு போய் கிணற்றில் போடச் சொல்கிறாயா? என்று விரட்டி அடித்தார்கள். கலைச்சேவைக்கு காசு செலவழிக்க எல்லாருக்குமா மனமிருக்கும். விஜயகுமார் சோர்ந்துவிடவில்லை. சிறுகச்சிறுக சேர்க்கும் டி.என்.எஸ்.சி. பேங்க் சிட்டுக்குருவியாய் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தார். நிறைய கடன் வாங்கினார். (அவருடைய படத்தைப் பாருங்கள், டொக்கு விழுந்துப்போய் பரிதாபமாக இருக்கிறார்). ஒரு கோடி ரூபாய் சேர்ந்ததும், தில்லாக பூஜையும் போட்டுவிட்டார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு எல்லாமே அவர்தான். ஸ்டார்ட், கட் சொல்லத் தெரியாது என்பதால் இயக்கத்தை மட்டும் ராஜசேகர் என்பவரிடம் கொடுத்துவிட்டார்.


கதை நடப்பதாக சொல்லப்படும் கோடியால்பெய்ல் பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. ‘ரியாலிட்டி வேண்டும். எனவே நோ செட்டிங்ஸ்’ என்று அவர் சொன்னாலும், செட்டிங்ஸ் போடவும் ஆர்ட் டைரக்டருக்கு பணம் கொடுக்கவும் அவரிடம் காசு இல்லை என்பதுதான் உண்மை. படத்தின் ஹீரோ சின்னத்திரையில் ஃபேமஸான லிங்கா ஷெட்டி. ஹீரோயின் ரம்யா பர்ணா. கொடுத்த காசுக்கு மேலேயே நடிக்கத் தயாராக இருந்தார்கள். துளு நாடகத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் பலரும் விஜயகுமாருக்கு கைகொடுக்க முன்வந்தார்கள். நவீன் படில், அரவிந்த் போலார், ராஜேஷ் பந்த்வால் போன்றோர் கிட்டத்தட்ட ஃப்ரீயாகவே நடித்தார்கள் என்று தகவல். கன்னட சினிமா ஆட்களான ரேகாதாஸ், லட்சுமிதேவி, சத்யஜித், ரேமண்ட் டிசவுசா போன்றவர்களும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். கன்னடத்தில் பிரபலமான இசையமைப்பாளரான குருகிரண் கவுரவ வேடத்தில் தோன்றினார்.

thulu2
துளு நாடகங்களுக்கு மறுமலர்ச்சி தந்த ‘ஓரியார்டோரி அசல்’, துளு சினிமாவுக்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் நம்பிக்கை. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு படமெடுத்த விஜயகுமாருக்கு, படம் வெளியானபின்பு நல்ல அறுவடை. கடன்காரர்களுக்கு என்னென்ன சாக்கு சொல்லவேண்டும் என்று திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தவருக்கு, அதற்கெல்லாம் அவசியமே படாமல் பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டியது. ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேலே லாபமாம். இன்னமும் தினமும் தன் கையை தானே கிள்ளிப் பார்த்து, தான் வாழ்வது கனவுலகில் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார் விஜயகுமார்.


படத்தின் கதை ரொம்ப சிம்பிள். வீட்டு ஓனருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்குமான பிரச்சினைகள். ஒரே காம்பவுண்டில் பல வீடுகள் வசிக்கும் முறையை ‘வட்டாரம்’ என்போம் இல்லையா (திருச்சியில் ‘ஸ்டோர்’ என்பார்களாமே?), அம்மாதிரி வட்டார வீடு ஒன்றில் நடக்கும் தினப்படி சம்பவங்கள்தான் கதை. முழுக்க முழுக்க விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை. வாடகைக்கு வசிக்கும் மூன்று குடும்பங்கள். அதில் ஒரு பையன் வீட்டு ஓனரின் பெண்ணையே எப்படியோ உஷார் செய்துவிடுகிறான். சில பல குழப்படிகளுக்கு பிறகு சுபம்.

thulu3
துளுவர்களின் ஏற்றம், தாழ்வு என்று அனைத்தையுமே மறைமுகமாக இப்படம் சுட்டிக் காட்டுகிறது. அம்மொழியை பேசுபவர்கள் இன்று சந்திக்கக்கூடிய சவால்கள் என்ன என்னவென்று அடையாளம் காட்டுகிறது. தங்களைப் பற்றிய கண்ணாடியாக இப்படம் அமைந்திருப்பதால், வெறிகொண்டு வெற்றியடைய வைத்திருக்கிறார்கள் துளுவர்கள். இப்படத்தை தொடர்ந்து துளுவில் மூன்று, நான்கு படங்கள் வந்துவிட்டன. நிறைய படங்கள் தயாரிப்பிலும் இருக்கிறது. இப்போதைய துளு படங்களின் டிரெண்ட் காமெடிதான். இந்த வெற்றி கர்நாடகாவில் பேசப்படும் மற்றைய சிறுபான்மை மொழிகளான கொடவா, பேரி போன்ற மொழிகளிலும் சினிமா எடுக்க தெம்பு கொடுத்திருக்கிறது.


சிறுகுழந்தைகள் கூட்டாஞ்சோறு விளையாடுவது மாதிரி படமெடுக்கிறார்கள். சுவைத்துப் பார்த்து, குறைகளை மறைத்து அவர்களது மனம் மலர பாராட்டலாம்.
                                     thulumovie1

(நன்றி : cinemobita.com)
எழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, May 06, 2013

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 8:53:39 AM5/6/13
to tamil...@googlegroups.com, பண்புடன்
http://en.wikipedia.org/wiki/Sundeep_Malani

என்னோட பழைய கொலீக் - துளு தான். இன்னைக்கு பெரிய டைரக்டர்.


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/5/6 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani?hl=en-GB.

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
May 6, 2013, 8:58:01 AM5/6/13
to panb...@googlegroups.com

எவ்வளவு சிறுபான்மை சமூகமாக இருந்தாலும் அவங்கவங்க மொழியை உயர்த்திப்பிடிக்கணும்னு இருக்காங்களே... நல்ல விஷயம்...

(அஷ்ரிதா ஷெட்டி துளுவா... பயனுள்ள் தகவல்)

--

ஸ் பெ

unread,
May 6, 2013, 9:46:34 AM5/6/13
to panbudan
:)))


2013/5/6 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages