பக்கத்து வீட்டு மாமாவுக்கும் மாமிக்கும் ஒரே வயதில் தான் கல்யாணம் நடந்தது. இப்போது மாமி இன்னும் மினுமினுப்பாக இருக்க மாமா வத்திப் போன கொத்தவரங்காய் போல ஆகி விட்டாரே என்று கேட்டால் அதற்கு பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.எனவே மாதவிலக்கு நிற்கும் வரை பெண்கள் வேகமாக வயதாவதில் இருந்து இயற்கையாகவே காக்கப்படுகிறார்கள். (சந்ததிகளை தன் உடம்பில் வைத்து உருவாக்கித் தருவதால் பெண்களுக்கு இயற்கையே கொடுத்த சலுகை! ஆண்களைப் பார்த்து அஸ்கு புஸ்கு, நீ சும்மா ஆரம்பிச்சு தானே வைத்தாய்? என்கிறது இயற்கை) ஆண்களோ கல்யாணம் ஆன மறுநாளில் இருந்தே அப்பா ஆவதற்கு தயார் ஆகிறார்களோ இல்லையோ 'அங்கிள்' ஆவதற்குத் தயார் ஆகி விடுகிறார்கள்.
இன்னொரு ஆச்சரியமான தகவல்: அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்களாம். மணிக்கொருதரம் பிரிஜ்ஜை திறந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கும் போது உங்கள் இஞ்சின் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இந்த வெப்பமே உங்கள் செல்களை அரித்து விடுகிறது. ஆக்சிஜன் நன்றாக எரிந்து மேலும் அதிக free radicals ஐ தோற்றுவிக்கிறது.சில பேர் உயிர்வாழ்வதே சாப்பாட்டுக்கு தான். இப்படி பட்டினி கிடந்து நீண்ட நாள் வாழத்தான் வேண்டுமா? பஜ்ஜி போண்டா வடை மிக்சர் ஜிலேபி மைசூர்பா இதெல்லாம் சாப்பிடாமல் தொண்ணூறு வயது வரை இருந்தென்ன லாபம் என்பார்கள்.
என் கருப்பையில் ஒரு
மகவு வந்து அமரும் என்று
என் மனப்பையில் ஒரு
கனவு வந்து அமர்ந்தது...
அது
இன்று நேற்றல்ல
சிறுமி என்ற
சிற்றுடை நீக்கி நான்
பெண்ணான நாளில்-
என் கருமுட்டைகள்
காலம் கனிந்து
எமக்கு உயிர் தா உயிர் தா என்று
உரக்கக் கதறி
உயிர் விட்டு வெடித்த ஒரு
பொன்னான நாளில்...
ஆனால் ஏனோ
என்
மார்பை உரச ஒரு
தாலி வந்து அமர்ந்த பின்னும்-என்
வயிறை உரச ஒரு
வாரிசு வந்து அமரவில்லை...
முத்தம் விளக்க ஒரு
மணாளன் இருந்த போதும்
என்
மூன்று நாள்
ரத்தம் விலக்க
ஒரு
ரத்தினம் வாய்க்கவில்லை....
யாராவது சொல்லுங்கள்,
உள்ளுக்குள் ஓர்
உயிரை சுமக்கும் சுகம் எவ்வாறு இருக்கும்?
ஆயிரம் தேவதைகளால்
ஆசிர்வதிக்கப் பட்டது போன்றா?
மலை மேல் மலர்ந்த மூலிகைப் பூக்கள்
ஒரு சேர நம்
தலை மேல் விழுந்தது போன்றா?
சொர்கத்தின் நதி ஒன்று
பக்கத்தில் பாய்வது போன்றா?
அமுதக் கலசம் ஒன்று நம்
அடிவயிற்றில் அமர்ந்திருப்பது போன்றா?
மலரைப் படைத்த
மகேசன் ஏனோ அதற்கு
மகரந்தம் மறுத்தான்...
கருவை சுமக்கும் வயிறை ஏனோ
கவலையை சுமக்க
சபித்தான்....
போட்ட விதை
பூமி துளைக்கவில்லை என்று-
உழவன் அழுதால்-அவன்
உள்ளம் தேற்ற
உறவுகள் உண்டு
தான் ஒரு மலடி என்று
மண் அழுதால் அதன்
கண் துடைக்க ஒரு
கரம் தான் எங்குண்டு??
மடி கனக்காததால்
இன்று என்
மனம் கனக்கிறது
இணைந்த மறு நாளே
இன்பச் செய்தி கேட்கும்
அவசர உறவுகளுக்கிடையே
என்
அடிமனம் அழுகிறது
என் குழந்தை படுத்து ஏற்படும்
மடி ஈரம்...
மார்பை முட்டிப்
பாலுண்ணும் போது
மெலிதாய்க் கேட்கும் மோகன ராகம்...
பிஞ்சுக் கரங்களின்
தொடுதலில் விளையும்
தாய்மையின் இன்பம்...
இவையெல்லாம் ஏழை எனக்கு
எட்டாத கனியா?
மாரைப் படைத்து
பாலை மறுத்த இறைவா
இது என்
மாயப் பிறவியின் வினையா?
அய்யா இறைவா
காற்று தூங்கவா என்
கருப்பையை வைத்தாய்
அதற்குள்
உயிர் நுழையாமல் எந்த
ஊசி கொண்டு தைத்தாய்??
பேறு வலி என்னைப்
புறக்கணித்து விட்டதால்
வேறு வலிகள் என்னை
வாடகைக்கு எடுத்தன...
பேறு வலியாவது -பிள்ளை ஒன்று
பிறக்கும் மட்டும்
எந்தன் இதயத்தின் வலிகளோ
இனி நான் இறக்கும் மட்டும்!
என் குழந்தைக்காய் நான்
எழுதிய
தாலாட்டு வரிகள்- எனக்கு
ஒப்பாரியாய் மாறி என்
உயிரைக் குடித்தன...
என்
உறவுகளே!
உடன் பிறவா சகோதரியரே!
பத்து மாதம் மூச்சடக்கி
பனிக்குடத்தில் முத்தொன்று எடுத்த
தாய்க்குலங்களே ! இறுதியாக ஒன்று மட்டும்!
திங்கள் நிகர்த்த சிசுவொன்று
என்னைத் தீண்டாததால் நான்
தீண்டத்தகாதவள் அல்ல..
பாவை மகவொன்று என்னைப்
புறக்கணித்ததால் நான் ஒரு
பாவி மகள் அல்ல..
தொப்புள் -
கொடி ஏந்தாத மகவை என்
மடியாவது ஏந்தட்டும் தாருங்கள்!
மார்பில் சீரம் சுரக்கா விடினும்
நெஞ்சில்
ஈரம் சுரக்கும் என்று இனி மேல் அறியுங்கள்..
கரு அமரும்
அறை காலி என்பதால்
என்னை அரைப்பெண் என்று
நாவில் அரைப்பதை விடுங்கள்!
உங்கள் மகவு
கண்ணனாக இருக்கலாம்-ஆனால்
நான் ஒன்றும்
பூதனி அல்ல! தயங்காமல் கொடுங்கள்!
ஆம்
பெற்றவளுக்கு ஒரு பிள்ளை..
பெறாதவளுக்கு பல பிள்ளை..
உங்கள் மகவை இனிமேல்
உரிமையாய்த் தாருங்கள்!
ஏனென்றால்
என் வயிறு ஒரு குழந்தையை
பிரசவிக்காவிடிலும்-
நான் கொஞ்சும்
ஒவ்வொரு குழந்தைக்கும்
என் இதயம்
ஒரு தாயைப் பிரசவிக்கிறது....
சமுத்ரா
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அப்புடி ஆகலைன்னா விலகுகிறேன் நு எழுதி குடுத்துட்டு போயிர்ரீன்களா..
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நடத்துங்க நடத்துங்க... பின்தொடர்றோம்..
--
என்றும் அன்புடன்,
ரமேஷ்
---
Sent via Epic Browser
வெல்கம்...:-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
![]() |
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் கண்மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்? |
//அப்போதெல்லாம் பொருள் சம்பாதிக்க வெளியே செல்லும் தலைவன் ,மழைக் காலம் தொடங்கியதும் தவறாமல் வந்து விடுவேன் என்று தலைவியிடம் சொல்வான். மழையும் தவறாமல் அந்தந்த பருவத்தில் பெய்யும். ...இப்போதெல்லாம் எப்போது மழை பெய்யும் என்று கணிப்பது பெரும்பாடாக உள்ளது. குளிர்காலத்தில் மழை வருகிறது ..பருவமழை பொய்த்து விடுகிறது...அப்படி ஒரு தலைவன் சொல்லி சென்று விடுகிறான். மழையும் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள்; தோழி "அடியே , இது சும்மானாச்சும் டம்மி மழை.பருவமழை அல்ல..முட்டாள்மேகங்கள் தவறாக கடல்நீரை குடித்து விட்டு வேளைகெட்ட வேளையில் பெய்கின்றன.எனவே மழைக்காலம் இன்னும் வரவில்லை. நீ வருந்தாதே என்று தேற்றுகிறாள்.
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல....
-மறந்தாவது மழை பொழியாதா என்று ஏங்க வேண்டியிருக்கிறது இப்போது!முட்டாள் மேகங்கள் இப்போது மிகவும் புத்திசாலி ஆகி விட்டன என்று தோன்றுகிறது.//