கவிதை பாட அழைத்தார். பேச அல்ல. தினமணி நிருபர்...Please take a note.
Lackluster performance - இதுக்கு அழகான தமிழ் வார்த்த ஆராச்சும்
சொல்லுங்க சார். கயல்விழியின் கவிதைக்கு டைம்ஸ் ஆஃப் இண்டியாவுல
இப்படித்தான் கேப்ஷன் குடுத்திருக்காய்ங்க. கயல்விழி கவிதையை
மனப்பாடமாகச் சொன்னார் என்பது தவிர சிறப்பாகக் குறிப்பிட வேறெதுவும்
இல்லை.
வைரம் வழமை போல் ‘ஏ தமிழே’தான்!
விவேகா, நான் ரசிக்கும் நா.மு., தமிழச்சி தங்கபாண்டியன் எல்லாரும் கவிதை
வாசித்ததுகூட lukewarm recitation என்பதாகவே எனது பார்வைக்குப்பட்டது.
இருக்கிறார்கள்
முதல் நாடு.மாநாட்டு கவியரங்கத்தில் "நனைந்தார்' கருணாநிதி : மூன்றரை மணி நேரம் விடாது பொழிந்தது "மழை'ஜூன் 25,2010,15:51உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள், இஞ்சிக்குடி சுப்ரமணியம் குழுவினரின் மங்கல இசையுடன் இன்று காலை 9.00 மணிக்கு துவங்கின. முதல் நிகழ்ச்சியாக, "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' என்ற தலைப்பிலான கவியரங்கம், கவிஞர் வைரமுத்து தலைமையில் நடந்தது. கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நெல்லை ஜெயந்தா, தமிழச்சி தங்கபாண்டியன், மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் கருணநிதி, விவேகா, நா.முத்துக்குமார், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.![]()
பார்வையாளர் அரங்கில், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சி என்பதால், அரங்கில் பல ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். "யாரை அழைத்து வந்து கவியரங்கத்தை தொடங்கி வைப்பேன்...?' என்ற கவிதை வரிகளுடன் ஈரோடு தமிழன்பன், கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.
"கலைஞர் என்பது
தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்,
ஆனால், அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...
அவரது கபால களஞ்சியத்தில்
ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டை
கொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்
இவர் இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்
இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...'