இன்னமும் அடங்காத 'கவிப்பே..ரரசு' வைரமுத்துவின் விளம்பர வெறி

50 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Apr 20, 2015, 1:01:09 PM4/20/15
to panbudan
இன்னமும் அடங்காத 'கவிப்பே..ரரசு' வைரமுத்துவின் விளம்பர வெறி! Posted by: Shankar Published: Monday, April 20, 2015, 19:36 [IST] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க:         ஷேர் செய்ய        ட்வீட் செய்ய        ஷேர் செய்ய        கருத்துக்கள்    மெயில் தனக்கு கிடைக்கும் மீடியா, மேடை, திரை... எதையும் பக்காவாகப் பயன்படுத்திக் கொள்வதில் வைரமுத்துவுக்கு நிகரில்லை. ஒருவரைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சாக்கில் தன் பெருமைகளை அதைவிடப் பிரமாதமாய் எடுத்து வைப்பதில் வித்தகர் வைரமுத்து. ஆனால் அவர் அப்படிச் செய்த ஒரு விஷயம், இப்போது சந்திக்கு வந்து கேலிக்குரியதாகிவிட்டது. அது அண்மையில் மறைந்த தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடர்பானது. என்ன அது? இதோ ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி இன்று வைரமுத்துவை 'வெளுத்து வாங்கி' எழுதியிருப்பதைப் படியுங்கள்: "சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன். ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று! அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது." -என்னத்தைச் சொல்றது... வைரமுத்து பார்க்காத புகழில்லை. இப்படி அற்பத்தனமாகவா மாட்டிக் கொள்ள வேண்டும்!

Read more at: http://tamil.filmibeat.com/news/jayakanthan-s-daughter-exposes-vairamuthu-034178.html?utm_source=article&utm_medium=fb-button&utm_campaign=article-fbshare

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Apr 20, 2015, 1:02:03 PM4/20/15
to panbudan


ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 20, 2015, 9:44:47 PM4/20/15
to panb...@googlegroups.com, zo...@googlegroups.com
ஜெயகாந்தன் மகள் வேறு.ஜெயகாந்தன் வேறு. ஜெயகாந்தனுடைய உடுக்கையை அவர் மகள் அடித்து விட முடியாது.அவர் ஒருவரால் மட்டுமே எழுத்தைக்கொண்டு சுருதியும் கூட்ட முடியும்;சுநாமியும் எழுப்ப முடியும்.அவர் தமிழை எதிர்த்தது கூட தமிழின் மீது கொண்ட 
ஒரு ஆவேசமான காதலில் தான். புளியமரத்துக்காரருடனும் 
இன்னும் இந்துத்துவாவை அடியில் புதைத்துக்கொண்டு "ஜெய" சேர்த்து தமிழ்ப்படைப்பு என்று தமிழை நையப்புடைத்துக்கொண்டிருந்த அந்த தமிழ்ப்புடைப்புக்காரருடன் அவர் கூட்டணி வைத்துக்கொண்ட நிலையையும் தமிழர்கள் அறிவார்கள்.ஏதோ நினைவு மறந்த நிலையில் கையொப்பம் பெறும் குடும்ப ஆவணம் போன்று கவிப்பேரரசு வாங்கிய கடிதம் பற்றிக்குறிப்பிடுகிறார்.எந்த எழுத்தாளனும் சுயமரியாதையை விட்டுத்தர 
இயலாத நிலையில் தான் இருப்பார்கள். எழுத்தாளர்கள் என்ற பெயரில் தமிழ்க்கவிஞர்களை அரை அங்குலமாவது மட்டம் தட்டிப் பார்க்கவேண்டும் என்ற போக்கு எந்த மொழி தேசங்களிலும் பார்க்க இயலாது நம் அருமைத் தமிழ் நாட்டைத்தவிர.

=================================================ருத்ரா

"முனைவர். க. சரவணன்"

unread,
Apr 20, 2015, 10:01:45 PM4/20/15
to panb...@googlegroups.com
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்!
ஜெயகாந்தன் எப்போதுமே நிலையான கொள்கைப் பிடிப்பு கொண்டவரல்ல என்பது அனைவரும் அறிவர்!
அவர் மகள் மட்டும் என்ன விதி விலக்கா?
தனது தந்தையைப் பற்றி வந்துள்ள அவதூரான செய்தியை அறிந்ததும் நீதி மன்றத்திற்கு சென்றிருக்கலாமல்லவா அவரது மகள்!
அதனை தனது வதனப் புத்தகத்தில் பதிவிடுவதற்கான அவசியமென்ன?
இப்பதிவுக்கு இன்னேரம் கிடைத்திருக்கும் சில நூறு விருப்பங்களையும், பின்னூட்டங்களையும் தவிற மிச்சம் எது?
சரி விடுங்கள்!
போலியான புகழுக்கு ஆசைப்பட்டே கவிஞர் வைரமுத்துவோ, அவரைச் சார்ந்தவர்களோ சுய நினைவின்றி இருந்த எழுத்தாளரிடம் கைய்யோப்பம் வாங்க முயன்று, அது முடியாமல், பழைய கையொப்பத்தைப் பயன்படுத்த ஒப்புதல் பெரும்போது எங்கே சென்றார் அவரது மகள்?
பக்கமிருந்து தடுக்கவேண்டியதுதானே?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

-- 
நீங்கள் என்னை,
கடலில் தூக்கிப்போட்டாலும்,
கட்டுமரமாகத்தான் மிதப்பேன்,
அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்,
கவிழ்ந்துவிடமாட்டேன்!
{கலைஞர்.
அன்புடன் முனைவர். க. சரவணன்.

செல்வன்

unread,
Apr 21, 2015, 12:05:04 AM4/21/15
to பண்புடன்
சென்ற ஆண்டுமுழுக்க ஜெயகாந்தன் சுயநினைவில் இல்லை என்கிறார்கள். அவர் எப்படி வைரமுத்து கவிதைகளை படித்து பாராட்டுகடிதமும் எழுதி அனுப்பி இருப்பார்?

மஞ்சூர் ராசா

unread,
Apr 21, 2015, 1:20:52 AM4/21/15
to பண்புடன்
ஆராய்ந்து எது உண்மை என்று விசாரிக்காமல் சந்தில் சிந்து பாடுவது பெரியோர்களுக்கு அழகல்ல.

2015-04-21 7:04 GMT+03:00 செல்வன் <hol...@gmail.com>:
சென்ற ஆண்டுமுழுக்க ஜெயகாந்தன் சுயநினைவில் இல்லை என்கிறார்கள். அவர் எப்படி வைரமுத்து கவிதைகளை படித்து பாராட்டுகடிதமும் எழுதி அனுப்பி இருப்பார்?

R.VENUGOPALAN

unread,
Apr 21, 2015, 1:58:57 AM4/21/15
to பண்புடன்
சீதாலட்சுமி அம்மாவுக்கும் ஜெயகாந்தனுக்கும் 40 வருட நட்பு. அவருடன் ஜே.கேயை நான் பார்க்கபோயிருந்தபோது இருவரும் பார்வையால்தான் பேசிக்கொண்டார்கள். வந்திருப்பது யாரென்று புரிந்து கொள்ளவே ஜெயகாந்தனுக்கு நிறைய நேரம் பிடித்தது.

என்ன செய்வது? வைரமுத்து சொன்னால் சரியென்று தலைட்யாட்டிவிட்டுப் போவதுதான் மரியாதை போலிருக்கிறது.  
--

R.VENUGOPALAN IYENGAR



தியாகு

unread,
Apr 21, 2015, 2:08:28 AM4/21/15
to பண்புடன்
//ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று! அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது." -என்னத்தைச் சொல்றது//

கவிஞர்களுக்கு புகழ் தேவை படுகிறது சரி
அதை எவ்விதத்திலாவது அடைய நினைக்கிறார்கள்

புகழ் = பணம்

என்கிற பார்முலாதான்

ஜெயகாந்தன் மகள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வைரமுத்து ஒரு புகழ் சுரண்டல் வாதி அதே நேரத்தில் இங்கு கருத்து கூறி இருக்கும் சிலர் ஜெயகாந்தன் தனது கருத்தை மாற்றி கொள்ளும் தன்மை உள்ளவர் என்றால் அவர் சுகவீனமாக இல்லை என்பதை நீரூபித்துதானே இதை சொல்லமுடியும்
தியாகு

-

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 21, 2015, 10:25:24 PM4/21/15
to panb...@googlegroups.com, zo...@googlegroups.com
Utter Crap...
 
Can I write some thing and say " This was said by Rudhra " ? Cant right ? Please read what is  written by Deepa.
 
If what she said is true,  No  person with right concious woud supprt Vairamuththu Just because he  is Poet,
 
When we have pre-judice mind, we drop any person to any low level, and keep others in very high level... that can happen only in our tamil society ... 
 
 
 //தமிழ்க்கவிஞர்களை//  :)) I know few of them, they dont even read what they have written..

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 22, 2015, 2:12:56 AM4/22/15
to panb...@googlegroups.com
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அச்ச உணர்வில் ஏதோ  ஒரு கடவுளுக்கு கையெடுத்துக்கும்பிடுவதை "கர்வ"மாக கருதிக்கொண்டிருப்பவர்கள் மனிதப்பரிமாணமே அவன் பேசும் மொழியில் தான் மலர்ந்துள்ளது எனும் மானிட சிறப்பை பெருமையாக எண்ணுவதை மட்டம் தட்டுவதை எப்படி அணுகுவது? எழுத்தாளர்களின் சில புரட்சிகர சிந்தனையில் தமிழ் பற்றி பெருமை கொள்ளும் எழுத்தாளர்கள் மீது அலர்ஜி கொண்டு எழுதியதை நாம் அறிவோம்.தமிழ் எழுத்தாளர்கள் "தமிழையே நக்கிக்கொண்டிருப்பவர்கள்"என்று
புரட்சிகரமாய் வந்த கருத்துகளும் இங்கே மிதக்கத்தான் செய்தன. மதிப்பிற்குரிய திரு.ஐயப்பன் கிருஷ்ணன் தமிழ்க்கவிஞர்களை எந்த‌
கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்று தெரியவில்லை.இருப்பினும் விமர்சனங்கள் படைப்பின் மீது வருவது ஆரோக்கியமானது.ஆனால்
தமிழ் மீது தமிழ் இனம் மீது அது ஒரு "படையெடுப்பு போல்" கூரிய‌ தாக்குதல்கள் தொடுக்கும்போதும் தமிழர்கள் தங்கள் சீற்றங்களை தாங்களே விழுங்கிக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறார்கள்.தலை நிமிர்ந்து நில்லடா என்று முணு முணுத்துக்கொள்வதற்கும்
கூட இவர்கள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை டிக்கட் வாங்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

========================================ருத்ரா

On Monday, April 20, 2015 at 10:01:09 AM UTC-7, காலப் பறவை wrote:

VJagadeesh

unread,
Apr 22, 2015, 2:44:30 AM4/22/15
to பண்புடன்
364.gif
35F.gif
33A.gif
361.gif

Omprakash

unread,
Apr 22, 2015, 6:47:07 AM4/22/15
to panb...@googlegroups.com
பத்மஸ்ரீ வைரமுத்து.... இதை ஒரு வேளை ஜெயகாந்தன் எழுதி இருந்தா டிக்கியில சிரிச்சுட்டுதான் எழுதி இருப்பாரு...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தெய்வம் நீ என் றுணர்..
364.gif
35F.gif
33A.gif
361.gif

Iyappan Krishnan

unread,
Apr 22, 2015, 11:48:59 AM4/22/15
to பண்புடன்

ருத்ரா ஐயா...

என்னைக்காச்சும் ஒரு நாள்..  சம்பந்தா சம்பத்துடன் பதில் போடுவீங்கன்னு எதிர் பார்க்கிறேன். 

கவிஞர்கள் குறித்து என் பார்வையா?? 

1000 பேரில் ஒருத்தர் கவிதை எழுதுகிறார்.. மிச்சம் பேர் எழுதுவதாக பாவனையில் இருக்கிறார்கள்.

திரு வெங்கட் ஸ்வாமிதான் அவர்களின் பிரபலமான விமர்சனம் ஒன்று உண்டு.

முப்பது வயதானவர்கள் எல்லாம் பிரதமராகலாம் என்பது போல.. இவர்களும் ஒருநாள் கவிதை எழுதலாம்.

ஆனால் வைரமுத்து கவிஞர் என்பதில் எனக்கு ஏதும்  சந்தேகம் இல்லை. கண்ணதாசன், மருதகாசி  பாட்டுக் கோட்டையார் என பல நல்ல கவிஞர்கள் வரிசையில்...  உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் அவரின் பல கவிதை தொகுப்புகள், திரைப்பாட்ல்களைப் படித்து தெளிந்து கொள்ளுங்கள்.

முக்கியமாக... இன்னொன்று பதில் போடும்போது... என்ன எழுதப் பட்டிருக்கிறது என்று  ஒருமுறையாவது படித்து புரிந்து அது சம்பந்தமாப பதிலை அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்..   கொட்டைப் பாக்கு விலை கேட்டால்  எட்டைய புரத்துக்கு வழி சொல்லும் பாங்கு அவ்வளவாக உசிதமற்றது பாருங்கள். அதான்
  நன்றி

--

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 22, 2015, 1:30:23 PM4/22/15
to panb...@googlegroups.com
//ஆனால் வைரமுத்து கவிஞர் என்பதில் எனக்கு ஏதும்  சந்தேகம் இல்லை//

அன்புக்குரிய திரு அய்யப்பன் கிருஷ்ணன் அவர்களே

உங்களால் சந்தேகப்படமுடியாத‌ ஒரு கவிஞருக்கு எப்படி ஒரு "விளம்பர வெறி"வந்திருக்க முடியும் என்ற சந்தேகமே நீங்கள் குறிப்பிட்ட "கொட்டைப்பாக்கு விலை"யையும் எட்டையபுரத்தையும் இங்கே முடிச்சு போடுகிறது.ஒரு எழுத்தாளனுக்கு அவன் கர்வமே எழுத்து எனும் சிந்தனையோட்டமுடைய எழுத்துவேந்தன் ஜெயகாந்தன் அவர்கள் கூட இப்படி "விளம்பர வெறி" என்று கொச்சைப்படுத்தப்படுவதை ஒத்துக்கொண்டிருக்க மாட்டார்.தமிழின் மீது தாக்குதல் தொடுக்கும் ஒரு எட்டப்பத்தனத்தை அடையாளம் கண்டதால் ஏற்படும் ஒரு வேதனை உணர்வே அன்றி வேறல்ல இது.உங்கள் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி.

=========================ருத்ரா 

On Monday, April 20, 2015 at 10:01:09 AM UTC-7, காலப் பறவை wrote:

Iyappan Krishnan

unread,
Apr 22, 2015, 1:51:45 PM4/22/15
to பண்புடன்

அவர் கவிஞர் என்ற ஒர்ரெ காரணத்தால் அப்படி செய்திருக்க முடியாது என்ற வாதம் எப்படி சரியாகும், அதற்கும் ஜெயகாந்தன்/ மகளின் பிறந்த சாதியை அவர் மகளை  குற்றம் கூறுவது எப்படி சரியாகும்,,??  மேலும் அவர் சொன்னது தவறுதான் என்று எந்த ஆதாரம் கொண்டு முடிவெடுத்தீர்கள்?  அந்த கடிதத்தின் உரையாடல் சமயம் தாங்கள் உடனிருந்தீர்களா?  இல்லை வேறு ஆதாரம் கிடைத்திருக்கிறதா??? சந்தேகத்தின் பலந் இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.

காலையில் கக்கூஸ் போக முடியவில்லை என்றாலும் அவள் தான் காரணம் என்று பிதற்றுபவர்களுக்கும், நீங்கள் அனுப்பிய இந்த மடல்களுக்கும் என்ன வித்யாசம்???

உங்களுக்கு வேண்டுமானால் கவிஞர்கள் அனைவரும் உலகமகா உத்தமர்கள் என்ற மாயை இருக்கலாம். ஆனால் அவர்களும் சாதாரண மணிதர்களே. என்பதை மறந்துவிடுகிறீர்கள்.

அவர் எழுதும் கவிதைகள் வேறு.. அதை ரசிப்பது வேறு. அவர் கவிஞர் ஆகவே தவறே செய்ய வாய்ப்பில்லை என்பது வேறு.

மேலும். நீங்கள் ஒரு விஷயம் சொல்லுகிறீர்கள். அது சரி அல்லது தவறு என்று ஆராயாமல் யாரோ சம்பந்தமே இல்லாத ஒருத்தர் வந்து நீங்கள் இந்த சாதியை சேர்ந்தவர், ஆகவே தான் நீங்கள் இப்படி கேவலமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அது ஏற்புடையதாகுமா??  

இதில் நாம் வள்ளுவனை பயின்றென்ன புறமும் அகமும் பயின்றென?

கவலை வேண்டாம் பாரதியையோ, அல்லது கம்பனையோ பயின்றதாய் உதாரணம் சொலல மாட்டேன்... ஏனென்றால்.  அவர்கள் அவாளாகவும் இந்த்துவரர்களாகவும் தான் கண்ணில் தெரிவார்கள்.

சாதி பற்றாளர்களையும் விட இந்த சாதி எதிர்ப்பாளர்கள் தான் ரொம்பவும் சாதியை விடாமல் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறீர்கள்
.

--

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 22, 2015, 2:54:33 PM4/22/15
to panb...@googlegroups.com

பேரன்புடையீர்.

"பூனைக்குட்டி பையிலிருந்து வெளியே வந்து விட்டது"

வெளியே வந்ததும் அது காலைக்கடன் கழிக்க கக்கூஸ் சென்று விட்டது என்பதும் தெரிந்து விட்டது.
கவிஞர்கள் என்றால் ரெண்டு கொம்பா என்று வேறு ஆவேசம் வந்து விட்டது.வால்மீகி வியாசர்கள் கூட கொம்பு முளைத்தவர்கள் தான்.இங்கு சாதியைப்பற்றிய குறிப்பு ஏதும் நான் வெளியிட வில்லை.பின் புலம் தமிழின் பகைப்புலம் மூட்டம் போட்டதோ என்ற உணர்வைத்தவிர வேறு ஏதும் இல்லை.இரண்டு எழுத்தாளர்கள் நடுவில் ஏதோ தெனாலிராமனுக்கும் அந்த பண்டிதருக்கும் நடுவே போட்டி ஏற்பட்டு வெறும் விரல் காட்டும் அசைவுகள் மூலம் அத்வைத துவைத பிரபஞ்சம் பற்றி எரிந்தது போல் ஒரு நாடகம் அரங்கேறியதைப்போல் பொம்மைக்கூத்து நடத்துவதைத்தான் நான் பார்க்கிறேன்.ஒரு ஜெயகாந்தன் இன்னொரு ஜெயகாந்தனை அவமானப்படுத்துவது போல் தான் பரபரப்பு ஏற்றப்பட்டு இங்கே பேசப்படுகிறது.

==============================================ருத்ரா 











On Monday, April 20, 2015 at 10:01:09 AM UTC-7, காலப் பறவை wrote:

மஞ்சூர் ராசா

unread,
Apr 22, 2015, 3:30:00 PM4/22/15
to பண்புடன்

வைரமுத்து செய்தது மாபெரும் தவறு. அவருக்கு வக்காலத்து வாங்குவது அதைவிட பெரும் தவறு.

--

Iyappan Krishnan

unread,
Apr 22, 2015, 10:13:04 PM4/22/15
to பண்புடன்

பேருக்கு அன்புடையீர்

நீங்கள் போட்ட முதல் பதிலிலேயே உங்களின் அடிப்படை நோக்கம் வெளியாகி பூனைக்குட்டி மெல்ல எட்டிப் பார்த்தது. அப்புறம் அடுத்து அடுத்த பதில்களில் உங்கள் பூனை வெளியே வந்து  களி நர்த்தனமே புரிகிறது..  ஆஹா பிள்ளாய்... கவிஞர்களையே எதிர்த்து கருத்து சொலல என்ன துணிவு என்று அப்படி ஆவேசத்துடன் சுவரைப் பிதாண்டுகிறது. இங்கே கவிஞர் என்று நான்சொன்னது திரு வைரமுத்து அவத்களை.. தங்களை என்று தவறாக நினைத்து சண்டைக்கு வரவேண்டாம்.

அப்புறம் நீங்கள்  சாதியைப்  பற்றி குறிப்பிடவில்லை என்று மடல்களைப் படிப்பவர்களில் ஒருத்தர் சொல்லச் சொல்லுங்கள்..  ஒருத்தர்... ஒரே ஒருத்தர் சொல்லட்டுமே

யாராவது எதிர் கேள்வி எழுப்பினால் உடனே

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது, நீ அவாள் அது தான் இப்படி பேசுகிறாய்... அவாளின் அடிவருடி, இந்த்துத்துவா என்று பேசுவதெல்லாம் உங்களை நீங்களே வெளிக் கொணர உதவும் பழைய கேவலமான யுக்தி. எதிராளியை அடிப்பதாக நினைத்து தன்னைத் தானே அடித்துக் கொள்ளும் மாசோகிஸத்தனம்.

எலும்பைக் கடித்ததும் தன் வாயினின்று வெளியாகும் இரத்தம் சுவைக்கும் நாய் நினைக்குமாம். ஆஹா.. இந்த எலும்பின் இரத்தம் எத்தன சூடாக சுவையாக இருக்கிறது என்று...

கவிஞன் என்றால் பெருங்கொம்பன் என்று  இல்லை. அப்படி ஏதும் சட்டம் இருந்தால் சொல்லுங்க்கள் தெரிந்துக் கொள்கிறேன்.  கம்பனையே, அடீ என்று சொன்னதற்காக பல தடவை அடா என்று விளித்தவர்களும் தமிழர் தான்...  கவிதை. அவரின் படைப்பு. அவரல்ல.

சரி.. அந்த சம்பவத்தின் போது தாங்கள் அருகிருந்தீரா? அல்லது ஏதும் ஆதாரம் உண்டா அப்படி இல்லை என்று???

இங்கேயே ஒருத்தர், ஜெயகாந்தன் எழுதக் கூடிய சூழலில் இருந்திருக்க முடியாது என்று நேரடி அனுபவத்திக் சொல்லி இருக்கிறார்.. உங்களுக்கு ஏதும் அப்படி அனுபவம் உண்டா??? இல்லை வைமு அவர்கள் கவிஞர் என்ற ஒரே காரணம் போதுமா??

கவிஞர் எனும் ஒரே காரணம் போதும் என்றால் கனிமொழி அவர்களை விசாரணை இன்றி வழக்குகளில் இருந்து விடுவிக்க போராடும் படி வேண்டுகிறேன். பெண்கள் கவிஞராகுவதை தடுக்க அரசாங்கமே எப்படி முட்டுக்கட்டை போடுகிறது பாருங்கள்..  ச் ச்ச்ச்... பாவம்

பின்குறிப்பு::
பதில் போடும் போது சம்பந்தா சம்பந்தமுடன் பதில் போடவும். மொபைலில் படிக்க, தட்டச்ச தாவு தீருகிறது

--

Ganesh Kumar

unread,
Apr 22, 2015, 10:40:42 PM4/22/15
to panb...@googlegroups.com
என்ன இங்க சண்டை என்ன இங்க சண்டை - கோவை சரளா குரலில் படிக்கவும் :)
>>> *--------------------------------------------------------------------------------------------------------------*
>>> *இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
>>> இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
>>> இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
>>>
>>> -------------------------------------------------------------------------------------------------------------------------
>>>
>>> *நொடியில் நொறுங்கியவனுக்காக......*
>>> <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html
>>> <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*

Ganesh Kumar

unread,
Apr 22, 2015, 10:41:48 PM4/22/15
to panb...@googlegroups.com
>>பதில் போடும் போது சம்பந்தா சம்பந்தமுடன் பதில் போடவும்

அவசரத்தில் சமந்தா சம்மதத்துடன் என்று படித்துத் தொலைத்தேன் , அதுவும்
நல்லாத்தானே இருக்கு :)

VJagadeesh

unread,
Apr 22, 2015, 11:35:46 PM4/22/15
to பண்புடன்
ROFL...

and Thanks Jeeves

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 23, 2015, 12:02:30 AM4/23/15
to panb...@googlegroups.com

On Thursday, April 23, 2015 at 10:40:42 AM UTC+8, Ganesh Kumar wrote:
என்ன இங்க சண்டை என்ன இங்க சண்டை - கோவை சரளா குரலில் படிக்கவும் :)
 
mmm.. keerikkum pambukkum sandai udaraangalam.. ( mahan kavunda mani  kuralil padikkavum.  )
:)))
 
 
 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 23, 2015, 12:03:10 AM4/23/15
to panb...@googlegroups.com
umakku nallaarukkum voy...... samntha nilaiya yosichchu paarum...

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 23, 2015, 1:40:27 AM4/23/15
to panb...@googlegroups.com
ஒரு பூனைக்குட்டிக்கே நாய் பேய் என்று இந்த தாவு தாவுகிறீர்களே.
அந்த "நச்சு வட்டத்தை" நீங்களே சுற்றி சுற்றி வந்து கீரி பாம்பு ஆட்டம் ஆடிக்கொள்ளுங்கள்.

========================================ருத்ரா

On Monday, April 20, 2015 at 10:01:09 AM UTC-7, காலப் பறவை wrote:

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 23, 2015, 2:20:56 AM4/23/15
to panb...@googlegroups.com
Oh Yeah?
 
You just again confirmed  me that I am right  on my understanding about your, that is  how you understand what is written :))  btw, Take time and please, please,  please read and understand what is written.
 
 Did you answer any of my single question ? Do you really have any thing to say about what i asked  and avoid talking  personal thingies ? Lets discuss about to the TOPIC posted not about personal things :) Dont just sling stone on the open air, it may fall down on your head..
 
Repeating again  - Try READ and UNDERSTAND and ANSWER  what is written so far.
 
thanks
Iyappan K

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 23, 2015, 3:31:06 AM4/23/15
to panb...@googlegroups.com


of course
it is nothing but
the crossing the Swords
in the air..
but the trigger is
an anti tamilian twist and thrust
from the
vested quarters..
You may pose the innocence
as just it is
a frenzy and fury
by a poet to the author
with some fishy deals..
but these reflect 
some evil designs to dilapidate
the ethnic justice
of long drawn struggle
of TAMILIANS and their sentiments.
These vicious chapters run for ages.
History licks its own wounds
making again the History
repeating its own History.

=========================================ruthraa






On Monday, April 20, 2015 at 10:01:09 AM UTC-7, காலப் பறவை wrote:

PRASATH

unread,
Apr 23, 2015, 4:22:22 AM4/23/15
to பண்புடன்

dont u have any work bro...

Naresh Kumar

unread,
Apr 23, 2015, 4:23:30 AM4/23/15
to பண்புடன்

+1

On Apr 23, 2015 11:22 AM, "PRASATH" <pras...@gmail.com> wrote:

dont u have any work bro...

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 23, 2015, 4:32:11 AM4/23/15
to panb...@googlegroups.com
Sorry Bro. Running away..
 
Durai ji. Kaiya pudichchi izuthiya GIF pleaes !

PRASATH

unread,
Apr 23, 2015, 4:49:11 AM4/23/15
to பண்புடன்

If u dont have, i have a lot to discuss in venbaa and mahabharatham... in which we can explore what we can learn further...

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 23, 2015, 6:07:54 AM4/23/15
to panb...@googlegroups.com
Lets start thread. I can always find time for these :D 

On Thursday, April 23, 2015 at 4:49:11 PM UTC+8, பிரசாத் வேணுகோபால் wrote:

தியாகு

unread,
Apr 23, 2015, 6:55:31 AM4/23/15
to பண்புடன்
/ஜெயகாந்தன் மகள் வேறு.ஜெயகாந்தன் வேறு. ஜெயகாந்தனுடைய உடுக்கையை அவர் மகள் அடித்து விட முடியாது.அவர் ஒருவரால் மட்டுமே எழுத்தைக்கொண்டு சுருதியும் கூட்ட முடியும்;சுநாமியும் எழுப்ப முடியும்.அவர் தமிழை எதிர்த்தது கூட தமிழின் மீது கொண்ட 
ஒரு ஆவேசமான காதலில் தான். புளியமரத்துக்காரருடனும் 
இன்னும் இந்துத்துவாவை அடியில் புதைத்துக்கொண்டு "ஜெய" சேர்த்து தமிழ்ப்படைப்பு என்று தமிழை நையப்புடைத்துக்கொண்டிருந்த அந்த தமிழ்ப்புடைப்புக்காரருடன் அவர் கூட்டணி வைத்துக்கொண்ட நிலையையும் தமிழர்கள் அறிவார்கள்.ஏதோ நினைவு மறந்த நிலையில் கையொப்பம் பெறும் குடும்ப ஆவணம் போன்று கவிப்பேரரசு வாங்கிய கடிதம் பற்றிக்குறிப்பிடுகிறார்.எந்த எழுத்தாளனும் சுயமரியாதையை விட்டுத்தர 
இயலாத நிலையில் தான் இருப்பார்கள். எழுத்தாளர்கள் என்ற பெயரில் தமிழ்க்கவிஞர்களை அரை அங்குலமாவது மட்டம் தட்டிப் பார்க்கவேண்டும் என்ற போக்கு எந்த மொழி தேசங்களிலும் பார்க்க இயலாது நம் அருமைத் தமிழ் நாட்டைத்தவிர.//

ருத்ரா அய்யா விசயமே புரியலை எனக்கு இந்த வரிகளை திரும்ப படிச்சப்புறம்தான் தாங்கள் எதோ தமிழர் ஆரிய பிரச்சனை பற்றி பேசுகிறீர்கள் என்று புரிந்தது

அய்யோ சாமி நான் வரலை இந்த விளையாட்டுக்கு

2015-04-23 15:37 GMT+05:30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>:
Lets start thread. I can always find time for these :D 

On Thursday, April 23, 2015 at 4:49:11 PM UTC+8, பிரசாத் வேணுகோபால் wrote:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

PRASATH

unread,
Apr 23, 2015, 7:05:11 AM4/23/15
to பண்புடன்

பழைய போட்டி மடலுக்கு உயிர் கொடுங்கள்... கைபேசி வழி தட்டச்சுவதால் பழைய மடல்களைத் தேடுவது சிரமமாயிருக்கிறது...

On 23 Apr 2015 15:37, "ஐயப்பன் கிருஷ்ணன்" <jee...@gmail.com> wrote:
Lets start thread. I can always find time for these :D 

On Thursday, April 23, 2015 at 4:49:11 PM UTC+8, பிரசாத் வேணுகோபால் wrote:

ஸ் பெ

unread,
Apr 24, 2015, 2:06:31 AM4/24/15
to panbudan
http://www.maamallan.com/2015/04/blog-post_24.html

வடுகப்பட்டி வைரமுத்துத் தேவர் உருவிய மராட்டிய தலித் இலக்கியம்

இந்த வார குமுதத்தில் வந்திருக்கும் வைரமுத்துவின் கதை வாசித்துப் பார்க்க வசதியாய்.


இழவெடுத்த கதையைப் படித்துவிட்டீர்களா. நல்லது. கதையின் கடைசி சீனை விட்டால் இந்தக் கதையில் என்ன இழவு எழுதப்பட்டு இருக்கிறது. அந்தக் கடைசீ சீனும் வறுமையின் கொடுமையைக் காட்ட பிணத்தின் வாயிலிருந்து வாய்க்கரிசியை எடுக்க வைக்கிறாராம் கவிப்பிச்சை. இந்த சீனுக்காகவே வலிந்து அவனுக்கு வைக்கப்பட்ட பழக்கம்தான் வேக வைக்காத அரிசியைத் தின்பதென்பது. அதன் காரணமாகவே அவனுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் அரிசிமணி. அவன் எப்படி செத்தான் என்பதுதான் ஒப்பேற்றப்பட்ட கதை. கதையே, இந்தக் காக்கா வலிப்பு வந்து எழுதிய கதையின் கடைசீ சீன்தான் என்றால், அது குமுதம் லெவலுக்குக்கூட கேவலம். அந்த சீனும் அற்பமாய் உருவப்பட்டது என்பது தெரிய வந்தால் அது எவ்வளவு பெரிய காமெடி. சினிமாவின் பேரரசுதான் எவ்வளவு பெரிய பிச்சைக்காரர்.

இப்போது இந்தக் கதையைப் படியுங்கள். எஸ்.வி. ராஜதுரையின் மொழிபெயர்ப்பு முழியைப் பெயர்க்காவிட்டாலும் கொஞ்சம் பல்லைக் கூசத்தான் செய்கிறது ஏனினும் பொருட்படுத்தாமல் படியுங்கள். நிதானமாய் முழுமையாய் கடைசி வரி வரை படியுங்கள். கதை உங்களை ஏமாற்றாது என்பது உறுதி. ஆஹா ஓஹோ கதையில்லைதான் ஆனால் கட்டாயம் நல்ல கதை.
உலகெங்கும் திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமாய் கூறப்பட்டுக்கொண்டிருக்கும் பேராசை பெரு நஷ்டம் என்கிற அதே விஷயம்தான். நூறாண்டுகளுக்கும் முன்னதாய் டால்ஸ்டாய் கூறிய ‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்’ (ஆங்கிலத்தில் இங்கே கிடைக்கிறது http://www.gutenberg.org/files/6157/6157-h/6157-h.htm) தொடங்கி, மராட்டிய தலித் இலக்கியவாதியான அண்ணாபாவ் சாத்தே (1 August 1920 – 18 July 1969) மயானத் தங்கம் வரை அவரவர் பின்னணியை வைத்து அதையேதான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 

பாவ் சாத்தே கதையைத் தொடங்குவதையும் முடிப்பதையும் பாருங்கள். எங்கே எப்படித் தொடங்கி எங்கே எப்படி முடிக்கிறார் என்று பாருங்கள். அவர் தலித்தாக பிறந்தார் தலித்துகளின் உரிமைக்காகப் போராடினார். ஆனால் அவர் எழுதிய கதையில் வரும் பீமா, தலித்தாகவா தெரிகிறான். டால்ஸ்டாய் காண்பித்த விவசாயி Pahom போலவே நம் எல்லோருடைய பிரதிநிதியாக அல்லவா இருக்கிறான். இதுதான் இலக்கியத்தின் வேலை. நம்மை நமக்கு நேரடியாய்க் காட்டாமல் வேறு எவனோ ஒருவனின் கதையை சொல்வதைப் போல நம்முடைய முகத்தின் லட்சணத்தை நமக்குக் காட்டிவிடுவது.

கதாபாத்திரம் வாழ நேரும் ஏழ்மையின் அவலத்தைக் கதையில் கூறியிருப்பினும் பாவ் சாத்தேவின் அக்கறை குவிந்து நிற்பதென்னவோ நேர்மையான உழைப்பில்தான். 

பணக்காரரான கவிப்பேராசையின் முனைப்பெல்லாம், ஏழ்மையை ஆரத்தி எடுத்து அரிச்சுவடி வாசகனின் அசட்டு உணர்ச்சியைத் தூண்டுவதில்தான். 

கவிஞர் எழுதிய கதையில் பாட்டு சீன் இல்லாமலா. அரிசிமணி பாட்டும் பாடுவான். வெட்டியானின் அஜிஸ்டெண்ட்டாய் இருக்கும் பிதாமகனை அப்படியே உருவி அரிசிமணியாய் கண்முன் நிறுத்தும் டைமண்டூவின் தெறம யாருக்கு வரும்.

வைரமுத்து கதாபாத்திரத்துக்கு அரிசிமணி என்று பெயர் வைத்து அவன் வெறும் அரிசியைத் தின்பதில் மட்டுமே நாட்டம் கொண்டவனாய் ‘படைக்கிறார்’. வெறும் அரிசியை மட்டுமே தின்பவன் ’அரிசின்னு நெனச்சி கொதிக்கிற உலையில கையை விட்டுட்டான்’  கொதிக்கிற உலையிலும் அது இன்னும் அரிசியாய்தான் இருக்கும் அல்லது படிப்பவர் கண்கள் குளமாக வேண்டுமானால் அது அரிசியாய்தான் இருந்தாக வேண்டும். 

அரிசி இல்லா கொடுமை சார் கொடுமை பசியின் பெருங்கொடுமை. ஓடினான் ஒடினான் நெருப்பு வைத்துவிட்டு வெட்டியான் சினிமா பார்க்க பஸ் ஏறி வெளியூருக்கே போய்விட்டாலும் இவன் ஓடினான் ஓடினான் எரிந்துகொண்டிருக்கும் பிணத்திடம் ஓடினான். எதற்கு, பிணத்துக்குப் போடப்பட்ட வாய்க்கரிசியை எரிந்துகொண்டிருக்கும் பிணத்தின் வாயில் இருந்து எடுத்துத் தின்பதற்காக. கொதிக்கும் உலையில் அரிசி அரிசியாகவே இருப்பதைப் போல முரடன் முத்துவின் கதையில் வரும் எரியும் பிணத்தின் வாயில் இருக்கும் அரிசி தீயாது கருகாது அப்படியே அரிசிமணியாகவே இருக்குமல்லாவா அதற்காக. பசி சார் பசி. பசிக் கொடுமை. உள்ளே விட்ட விரலை பிணத்தின் வாய் இறுகக் கவ்விக்கொண்டு விட்டது. வைரமுத்துவின் பேராசைப் பசிக் கொடுமையின் காரணமாக. அப்புறம் என்ன ஆயிற்று கதை முடிந்தாக வேண்டுமே அரிசிமணி பிணம் அடித்து விழுந்து செத்துவிட்டான். 

இவ்வளவு அசட்டுத் தனமாய் எழுதுவதைக் கூட சொந்தமாய் எழுதத் துப்பில்லை கவிப் பேரரசூவுக்கு. அண்ணாபாவ் சாத்தேவின் கிளைமாக்ஸைத் திருடி சிறுகதை வரிசையில் 16ஆவதாய் வாய்க்கரிசி போட்டுக்கொண்டிருக்கிறார். 

டால்ஸ்டாய்க்கோ அண்ணாபாவ் சாத்தேவுக்கோ வாசகனுக்கு அதிர்ச்சி அளிப்பதோ அவனது அசட்டுணர்ச்சியைத் தூண்டுவதோ அல்ல குறிக்கோள். அவனது விழிகளைத் திறப்பதே அவர்களுக்கு முக்கியம். அதனால்தான் அவை இலக்கியம். தலித் இலக்கியம் படைக்கிறேன் பேர்வழி என்று பாவ் சாத்தே பீமாவைப் பிணமாக்கி வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யவில்லை. பறப்பதை நினைத்து இருப்பதைக் கோட்டை விட்டாயே என்கிறார். கல்லுடைத்துக் கொண்டிருந்த பீமாவுக்கு வேலையில்லாமல் போனதிலிருந்து வேறுவழியின்று தொடங்கிய - பிணத்திலிருந்து பிடுங்கும் - குறுக்கு வழி மெல்ல மெல்ல அவனை இழுத்துக்கொள்ளத் தொடங்குகிறது. இதை நமது எந்த மோசமான காரியத்துடனும் வைத்துப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். எந்த மொசமான காரியத்தையுமே எல்லோரும் தொடங்குவது என்னவோ நிர்பந்தம் காரணமாகத்தான். ஆனால் தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை, ருசி கண்டுவிட்டோம் என்பதைத்தவிர. இந்தக் குறுக்குவழி தரும் உடனடி வசதி வாய்ப்புகள் நிரந்தரமான உழைப்பை, உழைக்கிற எண்ணத்தையே தகர்த்துவிடுகிறது. எதையாவது எழுதி ஒப்பேற்ற எங்கிருந்து திருடலாம் என்று புத்தகங்களைப் புரட்டும் வைரமுத்துவைப் போல. 

இதைத்தான் உணர்த்துகிறார் பாவ் சாத்தே இந்தக் கதையின் வாயிலாக. ஆனாலும் இதையெல்லாம் உணரமுடியாத உணரத் தேவையில்லாத அளவுக்கு வோர்ல்டு பேமஸ் ஆகிவிட்ட காரணத்தால், உணர்வுக் கொம்புகளற்று முழுக்க மொக்கையாகிவிட்டார் கவிப்பேரரசு. 

பாவ் சாத்தேவின் கதையின் இறுதியில், கல் குவாரியில் வேலை திரும்பவும் தொடங்கிவிட்டது ஆனால் விரல்கள் இல்லையே என பீமா அழுகிறான்.

விரல் ஜால வித்தகர் கதையின் இறுதியிலும் அழுகையை வைக்கிறார் வாசகனின் அசட்டுணர்ச்சியை டச் பண்ணுவதற்காக.

எவனோ எடுத்த சினிமாவிலிருந்து சினிமாக்காரன் சீன் திருடி சினிமா எடுத்தால் கலை. அதற்குப் பாராட்டு கேடையமெல்லாம் கிடைக்கும். 

அந்தத் திருட்டு சினிமாவை பஜார்காரன் சிடி போட்டு விற்றால் அது படுபயங்கரக் குற்றம். அவன் மீது குண்டர் சட்டம் பாயும். அட இதைக்கூட, எழை பஜார்க்காரனை ஹீரோவாய் வைத்து சிறுகதை வரிசையில் 17ஆவது சிறுகதையாய் எழுதலாமே. இந்தக் கதையை ஜெயகாந்தன் பாராட்டியதாய் குமுதத்தில் போட்டுக்கொள்ள முடியாது என்பது ஒன்றுதான் குறை. அது பரவாயில்லை. அதைத்தான் ஏற்கெனவே செய்தாயிற்றே.

Links to this post

துரை.ந.உ

unread,
Apr 24, 2015, 2:11:17 AM4/24/15
to பண்புடன்
தலைப்புல  நைசா ( நடு நிலையோட !) சாதியைச் சொருவி இருக்குறது ,,,,சூப்பரு 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 24, 2015, 2:17:29 AM4/24/15
to panb...@googlegroups.com
ச்சை இந்த கவிஞர்களின் மீது ஏன் தான் இப்படி பொய் சொல்லி அவதூறு சொல்கிறார்களோ....   No poet will do wrong thing in life. they are next to GOD, they dont do any mistake.
 

On Friday, April 24, 2015 at 2:06:31 PM UTC+8, காலப் பறவை wrote:

தியாகு

unread,
Apr 24, 2015, 2:34:34 AM4/24/15
to பண்புடன்
தோழர் இந்த மாமல்லன் பற்றி தெரியுமா

அவர் வசைக்கு யுனிவர்சிட்டி பட்டம் வாங்கினவர்

மேலும் இங்கு வடுகபட்டி கவிஞர் தமிழன் மற்றொரு எழுத்தாளர்

ஆரியர் என்கிற ரீதியா சண்டை நடந்துட்டு இருக்கு

(நான் எப்போ வந்தாலும்
குழுமத்தில சண்டை நடக்குது

அல்லது சண்டை நடக்கும் போது
 நான் வருகிறேன்

ஒன்று சண்டை போடுகிறேன் அல்லது
சண்டையை சமாதானம் செய்கிறேன்)
என்ற அப்பா டக்கர் கவிதையை உங்களுக்கு சமர்பித்து

இத்தோடு ஆரிய திராவிட சண்டையை விட்டு
பாட்டாளி வர்க்க சர்வாதிகார பார்வையை கைகொள்ளுங்கள்
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
Reply all
Reply to author
Forward
0 new messages