பாண்டியன் பக்கங்கள்!

33 views
Skip to first unread message

rajupandian raju

unread,
Feb 6, 2012, 1:14:48 AM2/6/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
வானத்தில் ஹைக்கூ!
1)

மேகங்களில்
பொம்மை செய்து
விளையாடும் குழந்தை
காற்று!
     ******
2)

காற்றில் கரையும்
பலவண்ண  கற்பூரம்
வானவில்!
    ******
3)

கீழ்நோக்கி வளரும்
மழையின் வேர்கள்
வானத்தில் இருக்கிறது
மின்னலாக!
     ******
4)

பதினெட்டு பட்டிக்கும்
ஒரே ஸ்பீக்கர்
இடி!
     ******









நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/
cloud.kavithai.jpg
vanavil.hikoo.jpg
minnal.hikoo.jpg
minnal-idi.kavithai.jpg

senshe senshe

unread,
Feb 6, 2012, 1:17:16 AM2/6/12
to panb...@googlegroups.com
பண்புடனில் தொடர்ந்து கவிஞர்கள் உருவாகி உலா வருதல் கவிதைக்கான குழுமமாக மாறும் வாய்ப்பாக எண்ண முடிகிறது. வாழ்த்துகள் கவிஞர்களே!

Umanath Selvan

unread,
Feb 6, 2012, 1:21:57 AM2/6/12
to panb...@googlegroups.com
பாண்டியன் பழைய ஆளு சென்ஷி. பல வருஷம் காணமல் போயிட்டார்(ன்).

விழியன்
http://vizhiyan.wordpress.com


2012/2/6 senshe senshe <me.s...@gmail.com>
பண்புடனில் தொடர்ந்து கவிஞர்கள் உருவாகி உலா வருதல் கவிதைக்கான குழுமமாக மாறும் வாய்ப்பாக எண்ண முடிகிறது. வாழ்த்துகள் கவிஞர்களே!

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

நம்பிக்கைபாண்டியன்

unread,
Feb 6, 2012, 1:27:32 AM2/6/12
to பண்புடன்
ஆமாம், விழியா பணிசூழல் மாறிவிட்டதால் இந்த இடைவெளி, இனி கொஞ்சம்
மாறுமென்று நினைக்கிறேன்!

On Feb 6, 11:21 am, Umanath Selvan <umana...@gmail.com> wrote:
> பாண்டியன் பழைய ஆளு சென்ஷி. பல வருஷம் காணமல் போயிட்டார்(ன்).
>
> விழியன்http://vizhiyan.wordpress.com
>

> 2012/2/6 senshe senshe <me.sen...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Feb 6, 2012, 1:28:49 AM2/6/12
to panb...@googlegroups.com
தம்பி பாண்டியனை நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி.

senshe senshe

unread,
Feb 6, 2012, 1:30:55 AM2/6/12
to panb...@googlegroups.com
ஓஹ் அப்படியா.. மகிழ்வான செய்தி..

2012/2/6 Umanath Selvan <uman...@gmail.com>



--
- senshe

rajupandian raju

unread,
Feb 6, 2012, 7:06:16 AM2/6/12
to panb...@googlegroups.com
வரவேற்புக்கு நன்றி மஞ்சூர் அண்ணா, சென்ஷி. மீண்டும்  குழும நண்பர்களுடன் இணைவதில் எனக்கும் மகிழ்ச்சியே!

2012/2/6 senshe senshe <me.s...@gmail.com>



--

காமேஷ்

unread,
Feb 7, 2012, 12:52:59 AM2/7/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
வாங்க வாங்க ந.பாண்டியன்.

ரொம்ப நாள் ஆச்சே உங்களை பாத்து !



2012/2/6 rajupandian raju <nambika...@gmail.com>
338.gif

rajupandian raju

unread,
Feb 10, 2012, 12:48:38 AM2/10/12
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கும் நன்றி விஜி!

வரவேற்புக்கு மகிழ்ச்சி காமேஷ்



2012/2/7 காமேஷ் <kame...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
338.gif

rajupandian raju

unread,
Feb 10, 2012, 12:55:35 AM2/10/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com


தாமதமாகத் தொடங்கி
நீடித்துப் பெய்யும்
மரத்தடி மழையாகவே
உன் காதல்!


**************************


அவசியங்கள் எதுவுமற்று
அன்பால் எழுதப்பட்டதால்
நிபந்தனைகளின்றி நீடிக்கிறது
நம் இருவருக்கும் 
பொதுவிலான
கற்பெனும் நற்குணம்!

 

**********************************


*வலிமையான முத்தம்*


மகிழ்ச்சி
நிறைந்த நேரங்களில்,
ஆசையாக‌
உதடுகளில்
கொடுத்ததை விட! 


கவலை
மிகுந்த தருணங்களில்
ஆறுதலாக‌
நெற்றியில் கொடுத்தது
அதிகம் இனிக்குதடி!

 

******************************

rain girl.kavithai.jpg
anbu.kavithai.jpg
mutham.kavithai.jpg

rajupandian raju

unread,
Feb 16, 2012, 1:18:05 AM2/16/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
மரண குறிப்புகள்

என்மரணம்
நிகழந்தது தெரிந்ததும்,
எனைப்பற்றி
ஒவ்வொருவரும்
பேசிக்கொண்டிருந்ததையெல்லாம்
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் கடவுள்!
எனக்கான இடம்
சொர்கத்திலா? நரகத்திலா?
என்பதை தீர்மானிக்க!

                          -நம்பிக்கைபாண்டியன்

2012/2/10 rajupandian raju <nambika...@gmail.com>
kavithai.marana kurippu.jpg

rajupandian raju

unread,
Feb 24, 2012, 7:05:18 AM2/24/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
பாம்பு  பூரான்
தெருநாய், என
தன் அனுமதியின்றி
வீட்டிற்குள் நுழையும்
எந்த  ஒரு உயிரையும்
அடித்து விரட்டியோ, கொன்றோ
வெளியேற்றுகிறான் மனிதன்!

காடுகளை அழித்து
வயல்களை நகராக்கி
குடியேறும் மனிதர்களை
என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கின்றன
விலங்குகளும் பறவைகளும் !
kavithai.Birds.jpg

ஜோ (Joseph P.K.)

unread,
Feb 24, 2012, 12:53:09 PM2/24/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
அருமையான வரிகள்.

2012/2/24 rajupandian raju <nambika...@gmail.com>
விழித்துக்கொண்டிருக்கின்றன
விலங்குகளும் பறவைகளும் !


--


ன்புடன்  ஜோ
--------------------------------------------------------------------------------------------


rajupandian raju

unread,
Mar 1, 2012, 5:51:27 AM3/1/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
:):):):):) கருத்துக்களுக்கு நன்றி விஜி, ஜோ,

2012/2/24 ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

rajupandian raju

unread,
Mar 1, 2012, 5:55:56 AM3/1/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
நீ
சாலையோரத்தில்
ஒதுங்கி நிற்கும்போது
அடர்த்தியாக
பெய்துகொண்டிருந்த மழை
நடக்க ஆரம்பித்ததும்
மாறிவிடுகிறது
சிறு தூரலாக...

**************************

உன் ஊரின்
பெயர் தாங்கி
என்னைக்
கடந்து செல்லும்
ஒவ்வொரு
பேருந்தின் பின்னாலும்
ஓடிக்கொண்டிருக்கிறது
என் மனது!

**************************

நான் எழுதும்
ஒவ்வொரு 
கவிதைக்கும்
ஒரு முத்தம் என்கிறாய்
என் டைரி
நிரம்பி வழிகிறது!

*********************************
kavithai.rain girl.jpg
kavithai.bus love.jpg
kavithai.kiss diary.jpg

rajupandian raju

unread,
Mar 5, 2012, 4:00:29 AM3/5/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

சில பெண்ணியவாதிகள் 

ஒழுக்க
குணங்களுக்கு பெயர்
அடிமைத்தனம்!

ஆபாசமின்றி
ஆடை உடுத்தச் சொன்னால்
ஆணாதிக்கம்!

அருவருப்பின்றி
கவிதை எழுதச் சொன்னால்
அடக்குமுறை!

சட்டங்கள்
பாதுகாப்பதற்கல்ல
பழி வாங்குவதற்கே!

அர்த்தங்கள்
மாறி வருகின்றன
சில பெண்ணியவாதிகளின்
அகராதிகளில்!

                     

குறிப்பு: - பெண்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் பல சிறந்த பெண்ணியவாதிகளை பெரிதும் மதிக்கிறேன், ஆனால் சிலரோ, சில பெண்களின் அர்த்தமற்ற ஆணவத்தையும், தவறுகளையும் பெண்ணியம் என்ற போர்வைக்குள் மறைக்கின்றனர் (நியாயப்படுத்துகின்றனர்), அதில் எனக்கு உடன்பாடு இல்லை அந்த சிலருக்காக எழுதப்பட்டதே இந்த கவிதை!


நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.in/


kavithai.girl's urimai.jpg

rajupandian raju

unread,
Mar 5, 2012, 4:33:06 AM3/5/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
அந்த அர்த்தங்களை பட்டியலிடுங்களேன். மேலும் அது காலம் காலமாக யாரால் எப்படி சொல்லப்பட்டு வருகிறது என்பதையும் சொல்லிடுங்களேன். பிறகு பெண்ணியம் என்ன சொல்லுது என பார்க்கலாம் 

இதைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு சர்ச்சைகள் இருக்கின்றன!

பெண்ணியம் என்ற வாத‌த்தை தவறாக பயண்படுத்தும் சிலருக்காக எழுதியது!


சிலரில் நீங்களும் ஒருவர் என்றால் நேரிலோ,  தொலைபேசியிலோ  எனக்கு தெரிந்த கருத்துக்களை விளக்குகிறேன்!

கம்ப்யூட்டரில் அமர்ந்து மெயிலில் விவாதிக்கும் அளவுக்கு வேலை பார்க்கும் யோகம் எனக்கு இல்லைங்க!

2012/3/5 Thenusha Eswaram <eswar...@gmail.com>
அந்த அர்த்தங்களை பட்டியலிடுங்களேன். மேலும் அது காலம் காலமாக யாரால் எப்படி சொல்லப்பட்டு வருகிறது என்பதையும் சொல்லிடுங்களேன். பிறகு பெண்ணியம் என்ன சொல்லுது என பார்க்கலாம் 


2012/3/5 rajupandian raju <nambika...@gmail.com>
பொதுவில் ஒரு அர்த்தம் (தோராயமாக) இருக்கிறது!
அவரவர் பார்வைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது!

2012/3/5 Thenusha Eswaram <eswar...@gmail.com>
ஒழுக்கம் என்பது என்ன ? 

ஆபாசம் என்பதன் வரைவிலக்கணம் என்ன ? 

அருவருப்பான கவிதை எது ? 

இவற்றையெல்லாம் வரைமுறை செய்தது யார் ? 


2012/3/5 rajupandian raju <nambika...@gmail.com>

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.



--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.



--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/

rajupandian raju

unread,
Mar 6, 2012, 7:17:49 AM3/6/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
தொலைபேசியில் விவாதிக்கும் அளவுக்கு இது எனக்கு அவசியமாக படவில்லை!

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் சொன்னால் புரியாது, பக்கம் பக்கமாக எழுதி விளக்கவேண்டும்! அப்போதும் ஏற்காமல் எதிர் கேள்விகள் கேட்பீர்கள் அதற்கும் பதில் சொல்ல வேண்டும்! அந்த அளவிற்கு கம்ப்யூட்டரில் அமர்ந்து  பதில் சொல்லும் சூழல் எனக்கு இல்லை என்பதால் அப்படி கூறினேன், தவறு இருந்தால் மன்னிக்கவும்,



ஆனால் நீங்கள் பெண்களை குறைகூறும் நோக்கில் எழுதி இருப்பதால் மடலிட்டேன். 

நான் எழுதிய கவிதை பொறுமையாக படிக்கவும்! அதில் தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ளேன் சில பெண்ணியவாதிகள் என்று, சில என்ற வார்த்தைக்கு குறைந்த சதவிகிதம் என்ற அர்த்தம் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே? இதனால்தான் கவிதைக்குள்ளும்  பின்வரும் குறிப்பிலும் சில, பல என்ற வார்த்தைகளை வண்ணங்களால் வேறுபடுத்திக் காட்டியிருப்பேன்!


ஒழுக்கம் என்பது என்ன ? 

ஆபாசம் என்பதன் வரைவிலக்கணம் என்ன ? ..........................
......................................
இவற்றையெல்லாம் வரைமுறை செய்தது யார் ? .......

அந்த அர்த்தங்களை பட்டியலிடுங்களேன். மேலும் அது காலம் காலமாக யாரால் எப்படி சொல்லப்பட்டு வருகிறது என்பதையும் சொல்லிடுங்களேன். பிறகு பெண்ணியம் என்ன சொல்லுது என பார்க்கலாம் 


இது எப்படி இருக்கிறது தெரியுமா அம்மாவுக்கு அம்மா என்று பெயரிட்டது யார், அப்பாவுக்கு அப்பா என்று பெயரிட்டது யார் என்று கேட்பதுபோல் இருக்கிறது! இதையெல்லாம் தனி நபரால் உருவாக்கப்படவில்லை, நாம் வாழும் சூழலில் நம்மைச்சுற்றி நமக்கு நல்லது என்று (சிறுகுறைகள் இருந்தாலும் ) தானாக உருவாகிக்கொண்ட (அல்லது) நாமாக உருவாக்கிக்கொண்டது! ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது!

தெளிவாக நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருப்பின் உங்கள் கவிதையும் சரியான கருத்தென ஏற்றுக் கொண்டிருப்பேன்.

நிச்சயம் பதில் அளிக்கிறேன், அது தெளிவானதா என்பது உங்கள் புரிதலில் இருக்கிறது!

அந்த கவிதையில் வரும் வரிகளை என் பார்வையில் எதை நினைத்து எழுதினேன் என்றால்.........

ஒழுக்க
குணங்களுக்கு பெயர்
அடிமைத்தனம்!


ஒழுக்கம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நியதிகளைக் கொண்டுள்ளனர், அது அவரவர் உடல்,மனம், சூழ்நிலை சார்ந்தது!
பொதுவான நியதி என்று பார்த்தால், பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருப்பது ஒழுக்கக்கேடாக கருதப்படுகிறது! அன்று முதல் இன்றுவரை ஆண்களே இந்த தவறை அதிகம் செய்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை! ஆனால் பெண்கள் ஆண்கள் அளவிற்கு இல்லை, பெண்களில் ஒழுங்கீனமானவ்ர்கள் குறைவு, ஆனால் சமீபகாலமாக அதிகரித்துவருகிறார்கள் அதை நியாப்படுத்துவத்ற்கு பெண்கள் ஒன்றும் அடிமை இல்லை, ஆணுக்குச்சமமாக நாங்களும் தவறு செய்வோம்  என்று பெண்ணியத்தை காரணமாக்குகிறார்கள்!
உதராணத்திற்கு  மும்பை, சென்னை,பெங்களூரு, போன்ற பெருநகரங்களில் சனிக்கிழமை இரவு பார்ட்டியில் மது அருத்திவிட்டு யாருடன், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தவறான பாதையில் செல்பவர்களை நினைத்து எழுதியது இந்த வரிகள்!


ஆபாசமின்றி
ஆடை உடுத்தச் சொன்னால்
ஆணாதிக்கம்!

ஆடைகள் என்பதும் அவரவர் விருப்பம்தான், சபை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறதே! அது இல்லாவிட்டடால் நிர்வாணமாக கூட யாரும் வரலாம், ஜீன்ஸ், டி.சர்ட் அணிவதை எல்லாம் ஆபாசம் என்று சொல்ல முடியாது!

ஆனால் கால் பங்கு மார்பகம் முக்கால் பங்கு தொடை  ஆடைக்கு வெளியே தெரியுமளவிற்கு அணிவது என்னைப் பொறுத்தவரை ஆபாசமே, சமீபத்தில் மதுரையில் கோவிலுக்கு சென்று வரிசையில் நின்றிருந்தபோது, அங்கு சென்னையை சேர்ந்த ஒரு கல்லூரியின்  mba மாணவர்கள் சுற்றுலா வந்திருந்தனர்,  அதில் சில பெண்கள் இறுக்கமான மிக மிக மெல்லிய, கழுத்து மிக இறக்கமாய் ,கை இல்லாத பணியன் மாதிரி உடை அணிந்திருந்தனர்! கோவிலுக்கு வந்திருந்தவர்களின் பலரது கவனம் அவர்கள் மேல்தான் இருந்தது, சிலர் கோபத்தோடு பார்த்தனர், சிலர் ஜொள்லோடு பார்த்தனர், கோவிலுக்கு வரும்போது நாகரீகமாக  உடையணியும் பக்குவம் வேண்டாமா? என நாம் கேட்டால் , உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது, ஆணாதிக்கத்தால் பெண்ணை ஒடுக்குகிறீர்கள் என்று சொல்லும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்காக எழுதப்பட்டதே இந்த வரிகள்!


அருவருப்பின்றி
கவிதை எழுதச் சொன்னால்
அடக்குமுறை!

எழுத்து என்பது சுதந்திரம் வாய்ந்தது, அதில் யாரும் யாரையும் நீ இப்படித்தான் எழுதவேண்டும் இப்படி எழுதக்கூடாது என்று கட்டுப்படுத்த முடியாது, பாலியல் குறித்தும், அந்தரங்கம் குறித்தும் ஆண்களும் பெண்களும் நிறையவே கவிதை எழுதுகிறார்கள், அதில் எழுதும் கொச்சையான  வார்த்தைகள்  கவிதைக்கு மிக அவசியமாக இருக்கும்போது ஆபாசமாகவோ அருவருப்பாகவோ தோன்றாது, ஆனால் கவிதைக்கு அவசியமின்றி சில வார்த்தைகளை திணிக்கும்போது அது ஆபாசமாகிவிடுகிறது! அது ஆண் எழுதினாலும் சரி, பெண் எழுதினாலும் சரி எல்லாம் ஒன்றுதான்.

இன்று நிறைய பெண்கள் நன்றாக கவிதை எழுதுகிறார்கள், அதில் சிலர் சதா பாலியல் அந்தரங்கம் என்றே எழுதுகிறார்கள்! அதில் சில கவிதைகள் அவசியமற்ற வார்த்தைகளால் மிக கொச்சையாக இருப்பதாக, சொன்னாலோ, வேண்டுகோள் வைத்தாலோ, உடனே  நான் பெண் என்பதால் என்னை அடக்கப்பார்க்கிறீர்கள், பெண்ணியத்தை காப்பாற்றுவேன் என் சொல்லும் சில பெண் கவிஞர்கள்( மிக மிக குறைவு) இருக்கிறார்கள், அவர்களை நினைத்து எழுதப்பட்டதே இந்த வரிகள்!

எழுத்திற்கும் சபை நாகரீகம் இருக்கிறது! ஒருவர் தொடர்ந்து ஆபாச கதைகளை எழுதி நம் குழுமத்தில் வெளியிட்டால் நம் குழும உறுப்பினர்கள் அதை கண்டிப்பது சரிதானே!

உதாரணத்திற்கு கீழே உள்ள இந்த கவிதையை படியுங்கள், என்னைப்பொறுத்தவரை தேவையின்றி திணிக்கப்பட கொச்சை வார்த்தைகளால் இது அருவருப்பான கவிதை! உங்கள் பார்வை எப்படியோ எனக்கு தெரியாது!


http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in/2010/01/blog-post.html


சட்டங்கள்
பாதுகாப்பதற்கல்ல
பழி வாங்குவதற்கே!

பெண்களின் உரிமைக்கு பலம் சேர்க்கும் வகையில் பல சட்டங்கள் அவர்களுக்கு சாதகமாக உள்ளது வரவேற்கப்படவேண்டிய விசயம்தான்! இன்றைய சூழலில் நீதிமன்றத்தில் உள்ள விவாகரத்து வழக்குகளில் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக 75% வழக்குகளில் ஆண்கள் காரணமாகவே இருப்பதாக வைத்துக்கொள்வோம், மீதமுள்ள 25% வழக்குகளில் பெண்கள்தான் முக்கிய காராணமாக இருகிறார்கள், அவ்வகை வழக்குகளில் பெண்கள் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆண்களையும் அவர்களின் குடும்பங்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிவிடுகிறார்கள்! அவர்களை நினைத்து எழுதப்பட்டதே இந்த வரிகள்!

இதற்கு உதாரணமாக பல கதைகளை சொல்லலாம் அவ்வளவு இருக்கிறது! உதாரணத்திற்கு இரு கதைகள்

மதுரையை சேர்ந்த எனது நண்பன் ஒரு பெண்னை காதலித்தான், இவன் கல்லூரியில் படிக்கும்போது அவன் பள்ளியில் படித்தான், இவன் வேலைக்கும் செல்லும்போது அவள் கல்லூரியி படித்தாள்,அவள் மிகவும் அழகாக நிறமாக இருப்பாள், அவளும் காதலித்தாள், இருவரும் ஏழ்மைகுடும்பம்தான்.இருவரும் காதல் வானில் சிறகடித்துப்பறந்தனர்!(ரூம் போட்டு). அவள் கல்லூரி முடித்தபோது  நண்பன் சென்னைக்கு வேலைக்குச்சென்றுவிட்டான், அந்த நேரத்தில் காதல் விசயம் தெரிந்து அப்பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர், பெண்ணின் அழகைப் பார்த்த பணக்கார மாப்பிள்ளை ஒருவர்(பெரிய மில் முதலாளியின் மகன்) திருமணத்திற்கு சம்மதிக்க, அப்பெண்ணோ வீட்டில் சரி என்று சொல்லிவிட்டு நண்பனிடம் எனக்கு மாப்பிள்ளை ப்டிக்கவில்லை உன்னுடன் ஓடி வருகிறேன் ஏற்பாடுகளை செய் என்று சொல்ல இவனும் ஏற்பாடுகளைச் செய்ய, திடீரென்று சில நாட்கள் பேசவில்லை! போன் நெஅம்பர் மாறிவிட்டது அப்பெண்ணின் தோழியிடம் விசாரித்ததில், திருமணம் நிச்சயமாகிவிட்டதென்ற தகவ்ல் தெரியவர, இவன் மனம் ஒடிந்துபோனான், சில நாட்களால் அழுதுகொண்டிருந்தான், ஒரு மாதம் தொடர்பே இல்லாமல் இருந்ததும் அதன் பாதிப்பு இவனுக்கு சற்றே குறைந்திருந்த நேரத்தில் அவளிடமிருந்து மீண்டும் போன்,
என்னை மன்னித்துவிடு ,மப்பிள்ளையுடன் போனில் பேசியதில் அவன் மிக மோசமானவனாக இருப்பன் போல , அதிக ஆபசமாக பேசுகிறான், என்று சொல்லி அழுதிருக்கிறாள், அவள் மாப்பிள்ளையோடு பேசும்போது confrence call  கொடுத்து அவன் பேசுவதை இவன் கேட்கும்படி செய்திருக்கிறாள்!, பிறகு இவனிடம் நான் உன்னையே திருமணம் செய்கிறேன் என்று அழுதிருக்கிறாள், இவனும் காதல் மயக்கத்தில், எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று நினைத்து, இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அந்த மாப்பிள்ளைக்கு அனுப்ப திருமணம் நின்று விட்டது, அதற்கு பிறகு அவள் பேசவில்லை போன் நம்பரும் மாறிவிட்டது! என்ன ஏது என்று தெரியாமல் இவன் தவிக்க, திடீரென்று நண்பனுடைய வீட்டு வாசலில் மகளிர் போலிஸ் வேன், ஈவ் டீசிங், பாலியல் தொந்தரவு, என பல புகார்கள் அப்பெண்ணும் அப்பெண்ணின் பெற்றோர்களும் சேர்ந்து கொடுத்ததால், கைது செய்ய வந்தோம் என்று சொல்ல அவன் சென்னையில் இருப்பதால், அவன் வரும் நீங்கள் ஸ்டேசனுக்கு வாருங்கள் என்று சொல்லி நண்பனின் பெற்றோர்களை அழைத்து சென்றுவிட்டார்கள், உடனே இரவு அவன் புறப்பட்டு மறுநால் காலை வரும் வரை அவன் பெற்றோர்களை விட வில்லை! அந்த செக்சன், இந்த செக்சன், அன்று பல பெண்ணுக்கு சாதமான பல சட்டங்களை சொல்லி முதலில் மிரட்டியவர்கள் இவன், அப்பெண்ணின் காதல் கடிதங்கள் வாழ்த்துமடல்கள்,சேர்ந்து எடுத்த மேலும் பல புகைப்படங்கள் மற்றும் வக்கீலோடு வந்ததும் சமரசம் பேசியிருக்கிறார்கள், பிறகு இவர்கள் காதல் சம்பந்தப்பட்ட அவன் வீட்டில் இருந்த அனைத்தையும் வாங்கிவைத்துவிட்டு, இருவருக்கும் இடையில்  இனி எந்த தொடர்பும் இருக்காது என நண்பனிடம் மட்டும் எழுதிவாங்கி வைத்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்! ஸ்டேசனுக்க வந்த பெண்ணிடம் இவன் பேச முயற்சித்தும் அவள் பேசாமல் சென்று விட்டாள்!
உடனே வளுக்கு வேறு இடத்திலும், சமீபத்தில் இவனுக்கு வேறு இடத்திலும் திருமணமாகிவிட்டது! இன்று வரை அந்த காதலின் வலி மறைந்துவிட்டாலும் என்னால் என் பெற்றோர்கள், ஒரு நாள்முழுக்க காவல் நிலையத்தில் இருக்கும்படி ஆகிவிட்டதே என்று புலம்புவான்!

மதுரையை சேர்ந்த உறவினர் நண்பர் ஒருவருக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது! பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்ப்பவர், ஒரு நண்பர் கொஞ்சம் இளகிய மனம் உடையவர்! பெண்ணோ சற்று கடுமையான மனம் கொண்டவர், திருமணமான ஒருவாரத்தில் அப்பெண்ணின் ஊருக்கே தனிக்குடித்தனமாக வந்தால்தான் இருப்பேன் உன் பெற்ரோர்களுடன் இருக்கமுடியாது எனச்சொல்லிவிட, இவனும் சரி பரவாயில்லை என்று அப்பெண்ணின் ஊருக்கே (கோவை) வேலை மாறி சென்றுவிட்டான், இருவரும் அவ்வப்போது சண்டையிட்டுக்கொள்வார்கள், அப்பெண் வேலைக்குச்செல்லவில்லை  செல்ல விருப்பமும் இல்லை, ஒரு ஆண்குழந்தை பிறந்தது, இரண்டுவயதும் ஆனது! சண்டைகள் தொடர்ந்தன, சண்டைக்கு காரணம் பணம் மட்டுமே! வாங்கும் சம்பளத்தை அப்படியே மனவியிடம் கொடுக்க வேண்டுமாம் அப்பெண்ணின் கையில், அவள் சொன்னதுபோலவே சில மாதங்கள் முதலில் கொடுத்துப்பார்த்தான், அப்பணத்தில் பெரும்பகுதியை இவர்கள் வீட்டருகிலேயே இருக்கும் அப்பெண்ணின் பெற்றோருக்கு செலவு செய்துவிடும் மனைவியின் குணம் பிடிக்காமல் பிறகு  பாதிசம்பளத்தை மட்டும் கொடுத்து வந்தான்!

இடைப்பட்ட 3 ஆண்டுகளில் ஒரு முறை கூட  நண்பனின் பெற்றோர்களைப்பார்க்க அப்பெண் வருவதில்லை! அவர்கள்தான் இங்கு வந்து மகனையும் பேரனையும் பார்த்துவிட்டு செல்வார்கள்!  பிறகு அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏதவது சொல்லி கொடுத்து தூண்டிவிட அதை சொல்லி அப்பெண் சண்டையிட , இருவருக்குமிடையே விரிசல் அதிகமாகி ஒரு நாள் கோபத்தில் உங்களால்தான் எங்களுக்குள் சண்டை என்று மாமனாரை  கோபத்தோடு திட்ட, அவர் இவனை அடித்துவிட இவனும் பதிலுக்கு அவரை அடித்துவிட சண்டை பெரிதாகி இவன் கிளம்பி மதுரைக்கு வந்துவிட்டான், அடுத்த சில நாளில் இவனைத்தேடி போலீஸ் வந்தது, வரதட்சனை கேட்டு அடித்தார், நண்பர்கள் முன்னிலையில் என்னை பாலியல் உறவுக்கு  அனுகினார் என அடுக்கடுகான குற்றசாட்டுகள்!

என் மேல் என் மனைவி எப்படி இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னாள் என்று அதிர்ந்து போனானாம், அங்கு சென்று பார்த்தால் மனைவி, மாமனார் இருவரும் போலீஸ் உதவியுடன், இனி நாங்கள் சொல்வதை கேட்பதாக இருந்தாள் இந்த வழக்கை முடித்துக்கொள்ளலாம், இல்லை என்றால் பெண்களுக்க்கு சாதகமான வழக்குகளில் நீ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்கள்! பிறகு இவனது உறவினர் ஒருவர் காவல்துறையில் உயர் பதவியில் உள்ளவர்கள் மூலமாக சில மாதமாக அங்கும் இங்கும் அலைந்து இனி என்ன ஆனாலும் சரி என்று விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டான், அவர்கள் அதற்கும் சம்மதிக்க்கவில்லை!
 வழக்கு நிலுவையில் ஒரு ஆண்டாக இருந்தது, இடையில் அவன் தன் குழந்தையை பார்க்க கூட அவர்கள் அனுமதிக்கவில்லை! இந்த சூழ்நிலையில் இவனுக்கு  பிரபல நிறுவனம் ஒன்றில் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வெளிமாநிலத்தில் வேலை கிடைத்தது! அடுத்த சில மாதங்களில் . தினமும் காதல்  காலந்த sms, மனைவியிடமிருந்து வர ஆரம்பித்தது, பிறகு தொடர்ந்தன போன் கால்கள் , ஆனாலும் இப்போது இவன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான், என்மீது இப்படி ஒரு குற்றம் சொன்னவளுடன் எப்படி வாழமுடியுமென்று, பிறகு பல நண்பர்கள், பெற்றோர்கள், எல்லோரும் சேர்ந்து "நீங்கள் செய்யும் தவறுக்கு அந்த குழந்தை என்ன செய்யும் , அதற்காக பார்" என வற்புறுத்த, அவனும் மனம் மாறி பிறகு ஒன்று சேர்ந்து இப்போது நன்றாக இருக்கிறார்கள், இருவரும் ஒன்றுசேர்ந்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி" என் என்மேல்  இப்படி ஒருபுகாரை கொடுத்தாய்" என்று கேட்டானாம்,  அதற்கு வக்கீலும், மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த மகளிர் நல ஆலோசகர்  ஒருவரும், இப்படி எல்லாம் புகார் கொடுத்தால்தான் ஆண்கள் பயந்துபோய் நம் வழிக்குவருவார்கள் என்று ஆலோசனை சொன்னதால், அப்படி புகார் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார் அவன் மனைவி!


விளக்கம் போதுமென்று நினைக்கிறேன், கவிதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள், நான் பொதுவாக பெண்களையோ, பெண்ணியம் பேசுபவர்களையோ குறை சொல்லவில்லை,  மிக மிக குறைந்த எண்ணிக்கையில்  உள்ள மேற்சொன்ன சில பெண்களையும், பெண்ணியம் பேசுபவர்களையும் பற்றி மட்டுமே எழுதப்பட்ட கவிதை இது

rajupandian raju

unread,
Mar 8, 2012, 4:00:03 AM3/8/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம்! 1- தொடர் பதிவு

http://npandian.blogspot.in/2012/03/1.html

rajupandian raju

unread,
Mar 13, 2012, 7:48:10 AM3/13/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம்! 2- தொடர் பதிவு

http://npandian.blogspot.in/2012/03/6.html

rajupandian raju

unread,
Mar 25, 2012, 3:22:18 PM3/25/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
வலியுணராதவர்கள்
நள்ளிரவில் 
அழும் குழந்தையை
தொந்தரவாக 
நினைக்கும் தம்பதிகள்
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை
குழந்தையற்றவர்களின் 
மனவலியை!


நட்பு

பத்திரிக்கை 
கொடுக்கப்படாத 
திருமணத்திற்கும்
நேரில் சென்று
வாழ்த்தும் குணம் 
நட்பில் மட்டுமே
சாத்தியமாகிறது!



ஏக்கம்

தினமும்
எங்கள் ஊரைக்

கடந்துதான் செல்கின்றன!
ஒருநாள் கூட‌
நின்றதேயில்லை
இந்த விமானங்கள்!


 



kavithai.child.jpg
kavithai.natpu.jpg
kavithai.flight.jpg

sk natarajan

unread,
Mar 25, 2012, 10:50:29 PM3/25/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
அருமை  ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

மஞ்சூர் ராசா

unread,
Mar 26, 2012, 3:55:05 AM3/26/12
to panb...@googlegroups.com
அனைத்தும் நல்லா இருக்கு

rajupandian raju

unread,
Mar 26, 2012, 5:35:49 AM3/26/12
to panb...@googlegroups.com
ரசித்தமைக்கு நன்றி நடராஜன் அய்யா & மஞ்சூர் அண்ணா

2012/3/26 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
அனைத்தும் நல்லா இருக்கு

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

rajupandian raju

unread,
Apr 12, 2012, 1:14:28 AM4/12/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
எழுதப்படாத நடைமுறைகள்!

1
ஒவ்வொரு ரயில்பயணத்திலும் தவறாமல் கிடைத்துவிடுகின்றன புதிதாய் சில அறிமுகங்கள்

2
ஊருக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளில் எடைகுறைந்த பையே(bag) மனைவியிடம் இருக்கிறது!

3
பேருந்து பயணத்தின் மூன்றுநபர் இருக்கையில் மூன்றாவதாக வரும் நபருக்கு, நடுவிலேயே இடமளிக்கப்படுகிறது!

4
குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதுதான் உணரத்துவங்குகிறோம் நமக்கு தெரிந்தது குறைவு தெரியாதது அதிகம் என்பதை!

5)

நேரம் கிடைக்கும்போது பேசிக்கொள்கிறார்கள் நண்பர்கள், பேசுவதற்காகவே நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் காதலர்கள்!
                                      
                                              --நம்பிக்கைபாண்டியன்

rajupandian raju

unread,
Apr 27, 2012, 3:44:42 AM4/27/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
என் ரயிலில் நீ!

சிறுவனாய் பயணித்த
முதல் ரயில் பயணத்தின்
உற்சாகத்தை
மீண்டும் உணர்ந்தேன்
உன்னுடனான
முதல் ரயில்பயணத்தில்...

*************************************

சில நேரங்களில்
அருகருகே அமர
இடம் கிடைத்தாலும்
எதிரே அமர்ந்து
பயணிப்பதையே விரும்புகிறேன்
உன்னை பார்த்துக்கொண்டே
பயணிப்பதால்!

***************************************

உன்னை வழியனுப்ப
வரும்போதெல்லாம்
உனக்கான ரயிலில்
நீ விடைபெற்றுச்
சென்ற பின்னும்
ரயில் நிலையத்தில்
சிறிதுநேரம் அமர்ந்துவிட்டே
வீடு திரும்புகிறேன்
அங்கு நிறைந்திருக்கும்
உன் நினைவுகளை
சுவாசிப்பதால்!


****************************************

--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
train love kavithai 1.jpg
train love kavithai 2.jpg
train love kavithai 3.jpg

rajupandian raju

unread,
Jun 25, 2012, 9:32:44 AM6/25/12
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

 

பழிக்குப் பழி!

அன்பளிப்பாக கிடைத்த‌
அரிய புத்த‌கமொன்று
கடித்து சிதைக்கப்பட்டிருந்தது
என் வீட்டு எலிகளால்!

கொலைவெறி கோபத்தில்
வீடெங்கும் தேடியதில்
கிடைத்ததென்னவோ
புதிதாய் பிறந்த 
சில கண்திறவா குட்டிகள்தான்!

வீதியில் எடுத்தெறிந்ததும்
தூக்கிச்சென்றன சில காகங்கள்
எலிகளின் எண்ணிக்கையை
குறைத்துவிட்டதாக எண்ணி
கோபம் தணிந்தேன்!

அடுத்த சில நாட்களில்
கடித்து குதறப்பட்டிருந்தன‌
அம்மாவின் 
விலை உயர்ந்த 
பட்டுப்புடவைகள்!

rajupandian raju

unread,
Aug 8, 2012, 7:55:24 AM8/8/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
மழலை கவிதைகள் 2 - படக்கவிதை


வராமல் 
சோறு ஊட்டும் பூச்சாண்டியும்
வந்து
சோறு ஊட்டும் நிலாவும்
காற்றிலேயே 
கவர்ந்து செல்கின்றனர்
குழந்தைகளின் முத்தங்களை!

****************************************
இரவுநேர
இரயில் பயணத்திலும்
இயற்கையை ரசிக்க முடிகிறது!
எதிர் இருக்கை குழந்தைகளால்!

*******************************
தூங்கும்பொழுது
சிரிக்கும் குழந்தைகள்
கடவுளுடன் பேசுகின்றவாம்!
கபடமற்ற 
சிரிப்பிருக்கும் இடங்களில்
கடவுள் இருப்பது சாத்தியம்தான்!

                         - நம்பிக்கைபாண்டியன்



child moon kavithai.jpg
train child kavithai.jpg
sleeping child kavithai.jpg

மோரு

unread,
Aug 8, 2012, 7:56:34 AM8/8/12
to panb...@googlegroups.com
லைக்ஸ் சாரே....

2012/8/8 rajupandian raju <nambika...@gmail.com>

மழலை கவிதைகள் 2 - படக்கவிதை



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Iyappan Krishnan

unread,
Aug 8, 2012, 7:57:29 AM8/8/12
to panb...@googlegroups.com
//

புதிதாய் பிறந்த 
சில கண்திறவா குட்டிகள்தான்!

வீதியில் எடுத்தெறிந்ததும்//


என்னக் கொடுமைங்க இது :( எலிக் குட்டின்னாலும் பாவம் இல்லைங்களா :(

மோரு

unread,
Aug 8, 2012, 8:03:00 AM8/8/12
to panb...@googlegroups.com
இத நான் படிக்கலையே எங்கிருந்த வந்தது?

2012/8/8 Iyappan Krishnan <iyappank...@gmail.com>


என்னக் கொடுமைங்க இது :( எலிக் குட்டின்னாலும் பாவம் இல்லைங்களா :(

rajupandian raju

unread,
Nov 5, 2012, 7:21:31 AM11/5/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
ரசித்த உள்ளங்களுக்கு நன்றிகள்

2012/8/18 விஜி <vselva...@gmail.com>
ஆஹாஹா,,,

 

குழந்தைக் கவிதைகளால் குதூகலிக்கிறது மனசு.
 
ஒரு மழலை வீட்டில் வந்த பின் 'மனசெல்லாம் மத்தாப்புத்தான்!...


2012/8/8 rajupandian raju <nambika...@gmail.com>

மழலை கவிதைகள் 2 - படக்கவிதை


வராமல் 
சோறு ஊட்டும் பூச்சாண்டியும்
வந்து
சோறு ஊட்டும் நிலாவும்
காற்றிலேயே 
கவர்ந்து செல்கின்றனர்
குழந்தைகளின் முத்தங்களை!<<<
 
 
அழகு!.

****************************************
இரவுநேர
இரயில் பயணத்திலும்
இயற்கையை ரசிக்க முடிகிறது!
எதிர் இருக்கை குழந்தைகளால்!<<
 
நிஜம் நிஜம்...

*******************************
தூங்கும்பொழுது
சிரிக்கும் குழந்தைகள்
கடவுளுடன் பேசுகின்றவாம்!
கபடமற்ற 
சிரிப்பிருக்கும் இடங்களில்
கடவுள் இருப்பது சாத்தியம்தான்!>>>
 
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!!! நான்
ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்'
 
 
என் மகளின் சிரிப்பினைக்கண்டபின்னர் 'என் செல்பேசியின் ஒலிப்பானது இந்தப்பாடல்!.

                         -

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.



--
நட்போடு விஜிசுதன்

"நாமார்க்கும் குடியல்லோம்"
 நமனை அஞ்சோம்"
http://www.karumpu.com
http://groups.google.com/group/muththamiz
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே ...

 

 

Silence is the only thing that can't be misquoted!



--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.



--
நட்புடன்

நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/

rajupandian raju

unread,
Nov 5, 2012, 7:26:01 AM11/5/12
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com

வீடு! - படக்கவிதை




வயல்களை அழித்து
வீட்டடி நிலமாக்கி
!
 
ஆறுகளை தோண்டி
வீடு கட்ட மணல் அள்ளி!

மலைகளை உடைத்து
ஜல்லி கற்களாக்கி!

நிலங்களை குடைந்து
சுண்ணாம்பில் சிமிண்டெடுத்து!

சுரங்கங்களில் சுரண்டிய‌
தாதுக்களில் கம்பியெடுத்து!

மரங்களை கொன்று!
நிலை கதவு, ஜன்னல் செய்து!

இயற்கை வளங்களை
கொள்ளையடித்து உருவாகிய வீட்டை

சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது  "என் வீடு" என...!
veedu.kavithai.jpg

Raju pandian

unread,
Feb 14, 2013, 5:50:40 AM2/14/13
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
Inline image 1


2012/11/5 rajupandian raju <nambika...@gmail.com>
kathal kavithai to wife.jpg

Raju pandian

unread,
Jul 26, 2013, 9:27:35 AM7/26/13
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
Inline image 1

கபீஷ் கவிதைகள்

                         1

தொட்டிலில் தூங்கும்போது
அவ்வப்போது அழுது சிணுங்கி
அருகினில் யாரேனும்
இருப்பதை உறுதி செய்து கொண்டு
தொடர்ந்து தூங்குகின்றன குழந்தைகள்!

                         2

தூக்கம், வலி ,பசி, என
தன் தேவைகள்  அனைத்தையும்
 "அழுகை" எனும்
ஒற்றை மொழியில்
சொல்லிவிடுகின்றன  குழந்தைகள்!

                          3

இத்தனை வருடங்களாய்
நான் தூங்கும் நேரங்களை 
நானே தீர்மானித்தேன்- இப்போதெல்லாம்
என் குழந்தை தீர்மானிக்கிறது by  அம்மா!

                           4

பொம்மைகளுடன்
விளையாடும்போது
அதன் விலைகளைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவதில்லை குழந்தைகள்!


(எனது மகன் கபீஷ்வர்  எனக்கு பரிசளித்த கவிதைகள் இவை!)



நம்பிக்கைபாண்டியன்



2013/2/14 Raju pandian <nambika...@gmail.com>
kabeeshwar.jpg
kathal kavithai to wife.jpg
kabeesh.kavithai.2.jpg
kabeesh.kavithai4.jpg
kabeesh.kavithai3.jpg
kabeesh.kavithai-1.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages