தேனியில் 10 ரூபாய் உணவகம்

11 views
Skip to first unread message

Thevan

unread,
Feb 28, 2021, 5:25:51 AM2/28/21
to panbudan, vallamai
தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் மனிதநேய காப்பகம் மற்றும் பள்ளி
நடத்தி வந்த பால்பாண்டி ஏற்கனவே பல சாதனைகளைச் செய்துள்ளார். குறிப்பாக
தேனி மாவட்டத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றிக்
காண்பித்தார். தற்போது இவரது காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் 10 ரூபாய்க்கு
சாப்பாடு வழங்கும் கதிர் உணவகத்தை தொடங்கியுள்ளார். அதிலும் இவ்வளவு
பணம் ஆகிறது என்று யாரும் கேட்டு வாங்குவதில்லை. சாப்பிடுபவர்கள் கடையில்
உள்ள உண்டியிலில் பணம் போட்டால் போதுமானது. பணம் இல்லாதவர்கள் பணம்
கொடுக்காமலும் சென்று விடலாம். இந்த உணவகம் தேனி அரசு மருத்துவமனை
அருகேயுள்ள கானா விலக்கு காவல் நிலையத்தின் எதிராக மெயின்
ரோட்டிலிருந்து சிறிது உள்ளே திறக்கப்பட்டுள்ளது. இது தேனி
மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு
பெரிதும் உதவியாக உள்ளது. இட்லி, வடை தோசை, சப்பாத்தி, தயிர் சாதம்,
தக்காளி சாதம் போன்ற உணவுகளும், சில நேரங்களில் சாப்பாடும் விற்பனை
செய்யப்படுகிறது. கடந்த (2020) டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தக் கடை
செயல்பட்டு வருகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது என்று கேட்டபோது,
சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் பணம் போட்டு விடுகிறார்கள். மற்றபடி
நன்கொடையாளர்களிடமிருந்து காய்கறி அரிசி போன்றவற்றைப் பெற்று கடையை
நடத்துகிறோம் என்று பால்பாண்டி தெரிவித்தார்.
http://perumalthevannews.blogspot.com/2021/02/10.html
Reply all
Reply to author
Forward
0 new messages