அப்துல் ரகுமான் ஐயாவின் கவிதைகள்

4,887 views
Skip to first unread message

N Suresh

unread,
Oct 12, 2008, 11:39:16 AM10/12/08
to panb...@googlegroups.com
அப்துல் ரகுமான் கவிதைகள்
தூண்டில் இரை(கசல்)

நீ
கண்ணீர்த் துளிகளின்
கீரிடம் அணிந்து
புன்னகை என்னும்
அரியணையில்
அமர்ந்திருக்கிறாய்
*
உன் கிரணங்கள்
என் காட்டுக்குள்
ஊடுருவ முடியவில்லை
*

நீ விளையாடி
உடைப்பதற்காகவே
இதயங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றன
*

காதல் கவிதைகளைக்
கப்பல் செய்து
கண்ணீரில் விட்டுவிட்டேன்
*

என்னுயிரோ
உன்னிடத்தில்
உன்னுயிரோ
என்னிடத்தில்
மரணம் என்ன செய்யும்?
*

உன் கடிதம் வந்தது
திறக்காமலே
படித்து விட்டேன்
*

வயிற்றுக்காக
வாழ்ந்து
முகமிழந்து போனேன்
*

காதல் துயரமே!
வாழ்க
உன்னால்
மற்ற துயரங்களெல்லாம்
மறைந்துபோய்விட்டன

என்னைப் பிடிக்க
விதி
தன் தூண்டிலில் மாட்டிய
இரை நீ
*

நண்பன்

unread,
Oct 12, 2008, 4:40:41 PM10/12/08
to பண்புடன்
அருமையான குறுங்கவிதைகள்.

நன்றி, சுரேஷ், பகிர்ந்து கொண்டமைக்கு...

Gokul Kumaran

unread,
Oct 13, 2008, 5:01:03 AM10/13/08
to panb...@googlegroups.com

இதுவும் அப்துல் ரஹ்மான் கவிதைகள்:


உன் பாதையும்
என் பாதையும்
வெவ்வேறாக இருக்கலாம்
ஆனால் அவை
ஒரே கையின்
ரேகைகள்

**

நீ
கண்ணீரை விட
ஆழமானவள் (ன்)
சோகத்தை விட
அழகானவள் (ன்)

**

பாவத்திற்கு கிடைத்த
மன்னிப்பை போல
நீ எனக்குக் கிடைத்தாய்

என்னை மறந்துவிட்டதாகச்
சொல்கிறாய்
பிறகு ஏன்
உன் கண்ணில் நீர்

ஒவ்வொரு மூச்சும்
உன்னை சந்திக்கப்
புறப்படுகிறது
ஏமாற்றத்தோடு
திரும்புகிறது

**

நான் உன் மூச்சு
என்னை நீ விட்டாலும்
மீண்டும்
வாங்கித்தான் ஆகவேண்டும்

**

உன் மௌனத்தில்
என் காயம் உறங்க
இடம் கொடு

**

நீ
சொல்ல முடியாத
சொல்
சொல்ல முடியாததைச்
சொல்லும் சொல்

**

உன் வேர்கள்
என் கண்ணீரை
தேடி வருகின்றன

**

தண்ணீர்த் தொட்டி
மீன்களைப்போல
உனக்குள்ளேயே
நீந்திக் கொண்டிருக்கின்றது
என் எண்ணங்கள்

**

உன் கண்ணில்
நான் செத்து
மிதக்கிறேன்

**

கூடு கட்டத்
தன் உதிர்ந்த இறகுகளையே
பொறுக்கும் பறவையைப் போல
நான் உன் நினைவுகளைப்
பொறுக்குகிறேன்

**

என்னை
என்னிடத்தில் ஒப்படைத்தாய்
என்னை வைத்துக்கொண்டு
என்ன செய்வது என்று
தெரியவில்லை எனக்கு

**

என் வாழ்க்கைப்
பயணத்திற்குக்
கட்டுச் சோறாய்
உன் நினைவுகள்
தாகத்திற்கு அருந்தக்
கண்ணீர்

**

நீ நதி
நான் உன்னில் விழுந்த
சருகு
நீ எங்கே கொண்டு போகிறாயோ
அங்கேதான்
நான் போகமுடியும்

**

ஆயுள் முழுவதும்
உனக்காகக்
காத்திருக்கத் தயார்
மரணம் போல்
நீ நிச்சயமாக வருவதாயிருந்தால்

**

உன்னிடம் நடந்து
காயங்களோடு
திரும்புகிறது மனம்

**

மனம்
பசித்து அழும்போது
உன் நினைவுகள்
அள்ளி எடுத்து
பாலூட்டுகிறது

**

உன் நினைவுகளும்
தொட முடியாத
தூரத்திற்கு
போகிறேன்

என் பூக்களில் நீ
வசவுகளை எழுதிகிறாய்

**

நீ நடந்த
பாதையில் நடந்தேன்
காலில் தைத்தது
இதயச் சில்

**

உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்
ஊசியில் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரணைப்போல

**

பல் பிடுங்கிய பாம்பாய்
என்னை
உன் பெட்டிக்குள்
வைத்திருக்கிறாய்
நீ விரும்பும் போது
மகுடி ஊதி
ஆட வைக்கிறாய்

பிரிந்து போகின்றவளே
நீ திரும்பிப் பார்க்காவிட்டாலும்
உன் இதயம்
திரும்பிப்பார்கிறது

**

நீ பலவீனமானவள்
ஆனால்
உன் ஆயுதங்கள்
பயங்கரமானவை

**

என் உடைந்த கனவுகளால்
உன் வீட்டைக்கட்டிக்கொள்
உன் இதயத்தில்
எரியும் நெருப்பால்
உன் விளக்கை ஏற்றிக்கொள்

உன் நினைவு வருமுன்
வந்துவிடு

**

நான்
எங்கே சென்றாலும்
அது உன் சபையாகவே
இருக்கிறது

கூட்டவோ குறைக்கவோ
தேவையில்லை
நீ எல்லா வகையிலும்
சரியாக இருக்கிறாய்

**

இந்தக் கவிதைகள்
பழைய காயங்களைத்
திறக்கின்றன

சந்திப்பு
உன் ஆடை
பிரிவு
உன் நிர்வானம்

கண்ணைவிட்டு
நீ புறப்படுவது போல
உன்னை விட்டு
நான் புறப்படுகிறேன்

**

உன் நினைவுகள்
என் சிதை
அதில் எரிந்து கொண்டேயிருப்பது
என் வாழ்க்கை


--
ப்ரியத்துடன்,
கோகுல்

N Suresh

unread,
Oct 14, 2008, 1:16:14 AM10/14/08
to panb...@googlegroups.com
நன்றி கோகுலன்,

இந்த இழையில் எல்லோரும் தங்களுக்கு பிடித்த கவிக்கோ ஐயாவின் கவிதைகளை இட்டால் நன்று

அன்புடன்
என் சுரேஷ்

On 13/10/2008, Gokul Kumaran <gokul...@gmail.com> wrote:
> *இதுவும் அப்துல் ரஹ்மான் கவிதைகள்:*
>
>
> **
>
> *உன் பாதையும்


> என் பாதையும்
> வெவ்வேறாக இருக்கலாம்
> ஆனால் அவை
> ஒரே கையின்
> ரேகைகள்
> *
>

> ***


> *
>
> *நீ
> கண்ணீரை விட
> ஆழமானவள் (ன்)
> சோகத்தை விட
> அழகானவள் (ன்)
> *
>

> ***
> *
>
> *பாவத்திற்கு கிடைத்த


> மன்னிப்பை போல
> நீ எனக்குக் கிடைத்தாய்

> *
>
> *என்னை மறந்துவிட்டதாகச்


> சொல்கிறாய்
> பிறகு ஏன்
> உன் கண்ணில் நீர்

> *
>
> *ஒவ்வொரு மூச்சும்


> உன்னை சந்திக்கப்
> புறப்படுகிறது
> ஏமாற்றத்தோடு
> திரும்புகிறது
> *
>

> ***
> *
>
> *நான் உன் மூச்சு


> என்னை நீ விட்டாலும்
> மீண்டும்
> வாங்கித்தான் ஆகவேண்டும்
> *
>

> ***
> *
>
> *உன் மௌனத்தில்


> என் காயம் உறங்க
> இடம் கொடு
> *
>

> ***


> *
>
> *நீ
> சொல்ல முடியாத
> சொல்
> சொல்ல முடியாததைச்
> சொல்லும் சொல்
> *
>

> ***


> *
>
> *உன் வேர்கள்
> என் கண்ணீரை
> தேடி வருகின்றன
> *
>

> ***
> *
>
> *தண்ணீர்த் தொட்டி


> மீன்களைப்போல
> உனக்குள்ளேயே
> நீந்திக் கொண்டிருக்கின்றது
> என் எண்ணங்கள்
> *
>

> ***


> *
>
> *உன் கண்ணில்
> நான் செத்து
> மிதக்கிறேன்
> *
>

> ***


> *
>
> *கூடு கட்டத்
> தன் உதிர்ந்த இறகுகளையே
> பொறுக்கும் பறவையைப் போல
> நான் உன் நினைவுகளைப்
> பொறுக்குகிறேன்
> *
>

> ***


> *
>
> *என்னை
> என்னிடத்தில் ஒப்படைத்தாய்
> என்னை வைத்துக்கொண்டு
> என்ன செய்வது என்று
> தெரியவில்லை எனக்கு
> *
>

> ***
> *
>
> *என் வாழ்க்கைப்


> பயணத்திற்குக்
> கட்டுச் சோறாய்
> உன் நினைவுகள்
> தாகத்திற்கு அருந்தக்
> கண்ணீர்
> *
>

> ***


> *
>
> *நீ நதி
> நான் உன்னில் விழுந்த
> சருகு
> நீ எங்கே கொண்டு போகிறாயோ
> அங்கேதான்
> நான் போகமுடியும்
> *
>

> ***
> *
>
> *ஆயுள் முழுவதும்


> உனக்காகக்
> காத்திருக்கத் தயார்
> மரணம் போல்
> நீ நிச்சயமாக வருவதாயிருந்தால்
> *
>

> ***
> *
>
> *உன்னிடம் நடந்து


> காயங்களோடு
> திரும்புகிறது மனம்
> *
>

> ***


> *
>
> *மனம்
> பசித்து அழும்போது
> உன் நினைவுகள்
> அள்ளி எடுத்து
> பாலூட்டுகிறது
> *
>

> ***
> *
>
> *உன் நினைவுகளும்


> தொட முடியாத
> தூரத்திற்கு
> போகிறேன்

> *
>
> *என் பூக்களில் நீ


> வசவுகளை எழுதிகிறாய்
> *
>

> ***


> *
>
> *நீ நடந்த
> பாதையில் நடந்தேன்
> காலில் தைத்தது
> இதயச் சில்
> *
>

> ***
> *
>
> *உன் இதயத்திற்குள் நுழைய


> வழி பார்க்கிறேன்
> ஊசியில் காதைத் தேடும்
> பார்வை மங்கிய
> கிழட்டுத் தையல்காரணைப்போல
> *
>

> ***
> *
>
> *பல் பிடுங்கிய பாம்பாய்


> என்னை
> உன் பெட்டிக்குள்
> வைத்திருக்கிறாய்
> நீ விரும்பும் போது
> மகுடி ஊதி
> ஆட வைக்கிறாய்

> *
>
> *பிரிந்து போகின்றவளே


> நீ திரும்பிப் பார்க்காவிட்டாலும்
> உன் இதயம்
> திரும்பிப்பார்கிறது
> *
>

> ***


> *
>
> *நீ பலவீனமானவள்
> ஆனால்
> உன் ஆயுதங்கள்
> பயங்கரமானவை
> *
>

> ***
> *
>
> *என் உடைந்த கனவுகளால்


> உன் வீட்டைக்கட்டிக்கொள்
> உன் இதயத்தில்
> எரியும் நெருப்பால்
> உன் விளக்கை ஏற்றிக்கொள்

> *
>
> *உன் நினைவு வருமுன்


> வந்துவிடு
> *
>

> ***


> *
>
> *நான்
> எங்கே சென்றாலும்
> அது உன் சபையாகவே
> இருக்கிறது

> *
>
> *கூட்டவோ குறைக்கவோ


> தேவையில்லை
> நீ எல்லா வகையிலும்
> சரியாக இருக்கிறாய்
> *
>

> ***
> *
>
> *இந்தக் கவிதைகள்


> பழைய காயங்களைத்
> திறக்கின்றன

> *
>
> *சந்திப்பு


> உன் ஆடை
> பிரிவு
> உன் நிர்வானம்

> *
>
> *கண்ணைவிட்டு


> நீ புறப்படுவது போல
> உன்னை விட்டு
> நான் புறப்படுகிறேன்
> *
>

> ***
> *
> *உன் நினைவுகள்


> என் சிதை
> அதில் எரிந்து கொண்டேயிருப்பது
> என் வாழ்க்கை
>
>
> --
> ப்ரியத்துடன்,
> கோகுல்

> *
>
> >
>

மீறான் Anwar

unread,
Oct 14, 2008, 1:18:22 AM10/14/08
to panb...@googlegroups.com
கவிக்கோவின் வரிகளை இங்கு தந்தமைக்கு நன்றி சுரெஷ் அண்ணா & கோகுல்.

பேரன்புடன்
காணாமல் போனவன் :)

N Suresh

unread,
Oct 14, 2008, 1:23:14 AM10/14/08
to panb...@googlegroups.com
நன்றி தம்பி
நீங்கள் எங்கும் காணாமல் போகவில்லை, நாங்கள் உங்களை காண்பது உங்களுக்கு
காணவில்லை, அவ்வளவு தான்:-))

அன்புடன்
என் சுரேஷ்

Reply all
Reply to author
Forward
0 new messages