அதியமான் அவர்களே!
யாரும் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தப் பாடலை நிச்சயம் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரத்துக்குக் கூட
எடுத்துக் கொள்ளலாம். சிவவாக்கியர் தொடங்கி கடுவெளி சித்தர் வரைக்கும்
பதினெட்டு சித்தர்களின் பாடல்களையும் எடுத்துக்கொண்டு கொஞ்சம் புருவத்தை
நெரித்துப் படித்தால் ஒரு ஒற்றுமை தெரியும். அவர்கள் ஒரு விதத்தில்
escapists - சொந்த வாழ்க்கையின் சுமைகளைத் தாங்க முடியாமல் தப்பித்துக்
கொள்ள ஆன்மீகத்தை ஒரு மார்க்கமாக எடுத்துக் கொண்டார்கள் என்று கூட
வாதாடலாம்.
அவர்கள் பாடல்களில் உள்ள எளிமை, எது ஆன்மிகம் என்று குழம்புபவர்களுக்கு
சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளதால் தான் அவர்களுக்கும் ரசிகர்கள்
இருக்கிறார்கள். ரஜினியின் ரசிகர்கள் எல்லாருமே சிகரெட்டைத் தூக்கிப்
போட்டு வாயில் பிடித்துக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம்
எப்படியில்லையோ, அதே போல பட்டினத்தாரின் ரசிகர்களும் அவரைப் போல
வாழ்க்கையை எதிர்மறையான கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும் என்கிற கட்டாயமும்
இல்லை.
ஆனால் யாக்கை நிலையாமை, ஜீவகாருண்யம், ஈகை போன்ற உயர்ந்த கருத்துக்களும்
அவர்களது பாடல்களில் நிரம்பவே உண்டு. நண்பர் ஹரூன் ரஷீத்
சுட்டிக்காட்டியுள்ளது போல சிவ வாக்கிய சித்தரின் பாடல்களில் உருவ
வழிபாடு, மூட நம்பிக்கைகள் போன்றவற்றை இடித்துக் காட்டும் பாடல்களும்
உண்டு. பாம்பாட்டி சித்தரின் பாடல்களில் ஒரு மெல்லிய நக்கல் இழையோடும்.
படிப்பதால் பாதகம் ஏதுமில்லை.
அது போகட்டும், நெல்லிக்கனியை எப்போது அனுப்புவதாக உத்தேசம்?
தமிழன் வேணு
On Nov 11, 7:13 pm, "Athiyaman Karur R" <
ath...@gmail.com> wrote:
> சும்மா ஜாலியா ஒரு தலைப்பு வச்சா, அதுக்கு இத்தன சீரியசான பதில்களா ?
> :))))
>
> On 11/11/08, HAROON RASHEED <
haroon...@gmail.com> wrote:
>
>
>
> > இந்த பாடல் சொல்வது குடும்பக் கட்டுப்பாட்டினைப் பற்றியல்ல ....
> > மோட்சம் மொகித்தலையும் யோகி ஒருவரின் (குடும்ப வாழ்வு சலித்துப் போன ஒருவரின்)
> > புலம்பல்
> > விடுங்கள் ...
> > நட்ட கல்லை சுற்றிவந்து நாலு புட்பம் சாத்தியே
> > முன முனென்று நம நமேன்று சொல்லும் மந்திரம் ஏதடா
> > நாதன் உள்ளிருக்கையிலே
> > என்று இவர் போலவே சிவா வாக்கியார் என்பாரும் பற்றுள்ள வாழ்க்கையினை வெறுத்து
> > பலப் பல பாடல்கள் பாடிவிட்டு போய்விட்டார்கள்
> > எதற்குத்தான் ரசிகர்கள் இல்லை ....?- Hide quoted text -
>
> - Show quoted text -