கான கந்தர்வன்

30 views
Skip to first unread message

Asif Meeran AJ

unread,
Feb 3, 2011, 2:11:45 AM2/3/11
to பண்புடன்
யேசுதாஸ் என்ற மாபெரும் கலைஞனை தமிழில் நாம் ஏனோ ஜேசுதாஸ் என்றே அழைக்கிறோம்.
ஐந்து வயதில் பாடத்துவங்கிய யேசுதாசுக்கு இப்போது வயது எழுபதாகிறது. திரை இசை உலகில்
தனது பொன்விழாவை நெருங்கும் அவரைப் பற்றி.. அவரது குரலைப்பற்றி உங்களுக்குத் தோன்றுவதை
இந்த இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ahamed Zubair A

unread,
Feb 3, 2011, 2:16:40 AM2/3/11
to panb...@googlegroups.com
அருமையான இழை அண்ணாச்சி...

யேசுதாஸ் எனக்கு அறிமுகமான பாடல் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே".

அப்போது ரஜினியின் நடிப்புக்காக அந்தப் பாடலை விரும்பிப் பார்ப்பேன். பாசத்தை மொத்தமாகக் குழைத்து வந்திருக்கும் அந்தப் பாடலின் அத்தனை வரியும் மனப்பாடம்.

"பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவையெல்லாம் ஒரு தாய்க்கு ஈடாகுமா??"

காலம் செல்லச் செல்ல அந்தப் பாடலில் இன்னுமொரு ஈர்ப்பு இருப்பதாக பிடிபட ஆரம்பித்தது. அந்த ஈர்ப்பு ஜேசுதாஸ்.

வசீகரக் குரலில் அவரின் வார்த்தை ஜாலங்களும், குழைவும் நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும்.

இன்னுமொரு பாடலோடு மீண்டும் வருவேன்.


2011/2/3 Asif Meeran AJ <asifm...@gmail.com>

அச்சு !!!

unread,
Feb 3, 2011, 2:18:31 AM2/3/11
to panb...@googlegroups.com

ஏதோ எனக்கு தெரிஞ்சது

கே. ஜே. யேசுதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கே. ஜே. யேசுதாஸ்
K. J. Yesudas

யேசுதாஸ்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் கட்டசேரி யோசப் யேசுதாஸ்
வேறு பெயர்கள் கான கந்தர்வன்
பிறப்பு சனவரி 10 1940 (அகவை 71)
ஃபோர்ட் கொச்சி, கொச்சி இராச்சியம், இந்தியா
தொடக்கம் கொச்சி, கேரளா, இந்தியா
இசை வகை(கள்) கருநாடக இசை
திரையிசை
இசை இயக்குனர்[1]
இசைத்துறையில் 1961–நடப்பு
வலைத்தளம் www.yesudas.com

கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.[2][3] சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம் , தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] இளமை வாழ்க்கை

யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும் அலைசுகுட்டிக்கும் மகனாக கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார்.துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகாதெமியில் தமது இசைக் கல்வியைத் தொடர்ந்தார்.சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் கருநாடக இசைமேதை செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.[4]

[தொகு] திரைவாழ்வு

யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார்[5] . தமிழ் திரைப்படங்களில் எஸ. பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக "நீயும் பொம்மை,நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார்.ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார். [6]

[தொகு] தனி வாழ்வு

யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத்,விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்குகிறார். இக்குடும்பம் சென்னை மற்றும் திருவனந்தப்புரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.தவிர ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா மற்றும் டெக்சாசில் நிலங்கள் வணிக நோக்கோடு வைத்துள்ளார்.



2011/2/3 Asif Meeran AJ <asifm...@gmail.com>
யேசுதாஸ் என்ற மாபெரும் கலைஞனை தமிழில் நாம் ஏனோ ஜேசுதாஸ் என்றே அழைக்கிறோம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு

ஸ்டாலின் பெலிக்ஸ் ம

unread,
Feb 3, 2011, 2:25:05 AM2/3/11
to panb...@googlegroups.com
அண்ணாச்சிக்கு பண்புடனில் எதிரிகள் அதிகம் என்பதையே அச்சுவின் மடல் காட்டுகிறது ;)))


2011/2/3 அச்சு !!! <achusu...@gmail.com>

சென்ஷி senshe

unread,
Feb 3, 2011, 2:27:23 AM2/3/11
to panb...@googlegroups.com
யேசுதாஸின் பேரைக் கேட்டாலே மென் சோகம்தான் மனசுல அப்பிக்கும். இளையராஜாவின் இசையில் யேசுதாஸின் சோகப்பாடல்களில் எப்பொழுதும் இரவுகளை நனைத்துக் கொண்டிருந்த பொழுதுகள் ஒன்றிருந்தது. பூவே செம்பூவேவில் உருக ஆரம்பிக்கும் மனது, என்ன தேசமோவில் கலங்க வைத்து, தாலாட்டு மாறிப்போனதில் உதடு துடிக்க வைத்துவிடும்.

சிந்து பைரவி எல்லாப் பாடல்களையும் யேசுதாஸ் பாடியதும், சோக கொண்டாட்டமாய் தண்ணித்தொட்டி பாடலுமாக ஒரு மழைபெய்து ஓய்ந்த நினைவுகள்.

sadayan sabu

unread,
Feb 3, 2011, 2:48:27 AM2/3/11
to panb...@googlegroups.com
அரபியில் புகழ் பெற்ற பிரபல பாடகர்களான
 
ஃபரிதுல் அத்ரஷ்
அப்துல்லாஹ் பில் கேர்
முஹம்மது அப்து
சமீரா தவ்ஃபீக்
உம் குல்சும்
 
இவர்கள் பாடலை மிகவும் விரும்பிக் கேட்பேன். ஜேசுதாசின் அரபி பாடலைக் கேட்ட பிறகு அரபி பாடல்கள் கேட்பதையே விட்டு விட்டேன்

2011/2/3 Asif Meeran AJ <asifm...@gmail.com>
யேசுதாஸ் என்ற மாபெரும் கலைஞனை தமிழில் நாம் ஏனோ ஜேசுதாஸ் என்றே அழைக்கிறோம்.

Asif Meeran AJ

unread,
Feb 3, 2011, 3:21:13 AM2/3/11
to panb...@googlegroups.com
இடும்பனுக்கு எப்பவுமே தனிவழிதான்

யேசுதாஸ் தமிழ்ப்பாட்டைப்பத்திப்பேசுய்யான்னா அரபிப்பாடலைக் கேக்குறதை விட்டுட்டாராம்.
நல்லா வருது...

sadayan sabu

unread,
Feb 3, 2011, 4:16:08 AM2/3/11
to panb...@googlegroups.com
ஓய்,
 
எஸ்.பி.பி, கவிதா கிருஷ்ணமூர்த்தி,ஏ.ஆர் ரஹ்மான் இவர்களை ஏற்றுக் கொண்ட வடக்கத்தியர்கள் ஜேசுதாஸை ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன் ?
 
ஹி..ஹி..ஹி மீண்டும் கோடாலி

2011/2/3 Asif Meeran AJ <asifm...@gmail.com>
இடும்பனுக்கு எப்பவுமே தனிவழிதான்

Asif Meeran AJ

unread,
Feb 3, 2011, 5:55:49 AM2/3/11
to panb...@googlegroups.com
யோவ் பெருசு

உதை வாங்கப் போறீரு
 
எஸ்.பி.பி,

எஸ்பிபியை ஏத்துக்கிட்டாஙக்ளா? உமக்கு வயசாயிடுச்சு
 
கவிதா கிருஷ்ணமூர்த்தி,


இந்தம்மா அந்த ஊருலயே வளர்ந்தது அதனால. என்னமோ லதாவுக்கு அடுத்ததா இந்தமமாதாங்குற மாதிரில்ல சொல்லுதீரு>
 
ஏ.ஆர் ரஹ்மான்

உலகமே ஏத்துக்கிட்டது இவனுங்க ஏத்துக்கலைன்னா என்னாயிடப் போவுது?
 
இவர்களை ஏற்றுக் கொண்ட வடக்கத்தியர்கள் ஜேசுதாஸை ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன் ?

இளையராஜாவையே அவனுங்க ஏத்துக்கலை
அவனுங்களுக்கு அன்னு மாலிக், பப்பி லஹரி வகையறாக்கள்தான்  சரிப்படும்


வடக்கத்திக்காரனைப்பத்திப் பேசி என்னை கொலைகாரனா மாத்தித் தொலையாதீரும்
வயசான காலத்துல ‘அல்ஹம்துலில்லாஹ்’ன்னு ஓரமா இரும்

மரவண்டு

unread,
Feb 3, 2011, 7:01:18 AM2/3/11
to பண்புடன்
எனது மூத்த அண்ணன் யேசுதாசின் தீவிர ரசிகன்.அவன் மூலமாகத் தான் யேசுதாஸ்
என்ற பாடகரை
முதன்முதலில் அறிந்து கொண்டேன்.காதல் பாடல்களில் கூட இவரது குரலில் கவலை
தோய்ந்திருக்கும்..

sadayan sabu

unread,
Feb 3, 2011, 8:43:20 AM2/3/11
to panb...@googlegroups.com


சரி
கலாய்த்தது போதும் விஷயத்திற்கு வருகிறேன்.
மஹாலிங்கபுரத்தில் இருக்கும் குருவாயூரப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 தேதியில் யேசுதாசின் கச்சேரி கட்டாயம் உண்டு அலுவலகத்தில் பணி செய்யும் மல்லு ஒருவரால் (தாயகத்திலும் மல்லுவின் அலவலாதி ) அறிமுகப்படுத்தப் பட்டு கடந்த இரு வருடமாக கச்சேரிக்கு போய்வருகிறேன். திரைப்பாடல்களை விட சாஸ்திரிய சங்கீதத்தில் வெளுத்து வாங்குகிறார்.

ஒரு டவுட்டு குருவாயூரப்பன் கோயிலில் வாதாபி கணபதி(ம்) பஜே பாடுகிறார். பாடலாமோ ?

Raja sankar

unread,
Feb 3, 2011, 8:53:57 AM2/3/11
to panb...@googlegroups.com
//குருவாயூரப்பன் கோயிலில் வாதாபி கணபதி(ம்) பஜே பாடுகிறார். பாடலாமோ //

கணபதி பற்றி எந்தக்கோயிலிலும் பாடலாம். முதல் மரியாதை கணபதிக்கே. 


ராஜசங்கர்



2011/2/3 sadayan sabu <sadaya...@gmail.com>

--
Reply all
Reply to author
Forward
0 new messages