வணக்கம்.
வரும் செவ்வாய் நவம்பர் 15 இரவு கனடா,டொராண்டோ நகர் கிளம்புகிறேன். நித்யாவிற்கு அங்கே பணிமாற்றம் கிடைத்துள்ளது. இரு ஆண்டுகள் அங்கே. நித்யாவும் குழந்தைகளும் போன மாதம் அங்கே போய், அங்குள்ள நண்பர்கள் உதவியால் வீடு பிடித்து, பள்ளியிலும் சேர்த்தாச்சு.
எனக்கு ஒரு பக்கம் நண்பர்களையும், மண்ணையும் பிரியும் வருத்தம். மறுபக்கம் நித்யாவையும் குழந்தைகளையும் காணப் போகும் மகிழ்ச்சி, என கலவையான தருணங்கள்.
வாழ்வை இனிமையால் நிரப்பிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
த.சீனிவாசன்
--