யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
அதிகாரம்-அறம் செய்வான் திறம்
நம்மாள் செய்யக்கூடிய அறங்களை கூறுகிறார்,
இறைவனை வழிபட எவ்வித பொருள்களும் இல்லை என்றாலும் ஒரு பச்சிலை வைத்து வணங்கினால் போதும்
இறைவழிபாட்டிற்கு இந்த முறையால் தான் வணங்க வேண்டும் என்பதில்லை இந்தப்பொருளைத்தான் இறைவற்கு சூட்ட வேண்டும் என்பதும் இல்லை. நமக்கு கிடைக்கும் ஒரு பசம் தளிர் கூடப்போதும்.
அடுத்து அறம் எது உயிர்களை ஓம்புதல் மற்ற உயிர்களுக்கு பாதுகாப்பாக மனிதன் இருக்க வேண்டும் உயிர்களுக்கு துன்பம் தரக்கூடாது அவைகளை ஆதரிக்க வேண்டும் ஜீவகாருண்யம் வேண்டும் என்பதால் பசுவுக்கு கொஞ்சம் புல். உண்ணப்புகும் போது பிறர்க்கு ஈந்து உண்டல் ஒரு நெறி மரபு இப்போதைக்கு தேவையானவர்களுக்கு அவர்கள் பசிப்பிணியைப்போக்க நம்மாள் ஆனதை செய்தல், ஒவ்வொரு முறை உண்ணும் போதும் மனதில் நிறைவு வேண்டும் என்பதாகவும் கொள்ளலாம். அடுத்து இவைகளில் எதை செய்ய முடியாவிட்டாலும், பிறர்க்கு ஒரு இனிய சொல்லையாவது கூறவேண்டும், மனம் கனிந்து கூறும் சொல் நம் அன்பின் வெளிப்பாடாக இருக்கும் பட்சத்தில் அவ்வன்பு பெருகி உலகை நிறைக்கும். இவை எல்லாம் சாமானியனால் செய்ய இயலக்கூடியவைகளே, இயல்பானதும் கூட. சிலர் அதென்ன ஒரு கைப்பிடி என்று கேட்கலாம், வேறு ஒரு பாடலில் தவ்வி(அகப்பை) கொடுத்துண்மின் என்பார் கொடுப்பதற்கு எதற்கு அளவு இவை சாமானியர்களுக்கு கூறுவது அதனால் உங்களுக்கு முடிந்ததை செய்யுங்கள் என்வாறு எனக்கொள்ளல் வேண்டும்.
இது என் சிற்றிவிற்கு எட்டிய விளக்கம், இன்னும் நல்ல விளக்கத்தை வேண்டுகிறேன்.
--