(இதய பலகீனர்கள், பயன்ந்த சுபாவம் உடையவர்கள் இன்று மட்டும் இதை படிக்காமலே போயிடுங்க, எனக்கே ஒரு மாதிரியா இருக்கு இன்றைய கட்டுரை)
ஓரளவுக்கு நல்ல முறையில் துவங்கும் சிuறீt|கள்கூடப் போகப் போகக் கெட்டுப்போய்ச் சீரழியக்கூடும்| குறிப்பாக, அதன் தலைவருக்குக் கிறுக்குப் பிடித்தால்! பக்தகோடிகள் பெருகப் பெருக, தலைவர் தன்னை நிஜமாகவே கடவுள் என்று நினைக்க ஆரம்பிப்பார்
உண்மையில் இவர் சாமான்ய மனிதர்தான் என்பதால், கடவுளிடம் நாம் எதிர்பார்க்கும் கருணை, கனிவு, அன்பு எல்லாம் இவருக்கு இருக்காது!
போகப்போக தலைவருக்கு சர்வாதிகார மனப்பான்மை வந்துவிடும். மேன்மையான லட்சியங்கள் என்கிற போர்வைக்குள்ளே தலைவன் என்கிற தனிமனிதனின் பேராசை, பண ஆசை, செக்ஸ் ஆசை மூன்றும் தலைதூக்கும்.
முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண்சிஷ்யைகள் தேமேனென்று இயக்கத் தலைவரின் பாலியல் தேவைகளுக்கு இரையாகி, ஏதோ இறைவனிடம் உடலுறவுகொண்ட பரவசத்தை அடைவார்கள்!
கொரேஷ், ஜிம்ஜோன்ஸ் இருவரும் வக்கிரமான செக்ஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 12 வயதான பெண்குழந்தைகளைக்கூட விட்டு வைக்கவில்லை கொரேஷ். பல பக்தைகள் அவனால் கர்ப்பமுற்றார்கள். ‘ஆசிரமத்தில் வளைய வந்த முக்கால்வாசிக் குழந்தைகள் அவருடையதே!
ஜோன்ஸ் பை செக்சுவல் அதாவது ஆண், பெண் இருவரிடமும் செக்ஸ் வைத்துக்கொள்பவர். பக்தர்களின் மனைவிகளுடன் உடலுறவு கொள்வதில் இருவரும் விருப்பம் காட்டினார்கள். ‘பாவங்களிலிருந்து விடுபட்டுப் பரிசுத்தம் அடைய நேரடியான வழி இது!’ என்றார்கள் இருவரும்!
சில சமயங்களில் வந்து சேரும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள், இயக்கத் தலைவருக்கு பிரச்னையாக அமைவார்கள். குழந்தைகளுக்கு அடிமைத்தனம் இருக்காது. முரண்டு பிடிப்பது, தலைவருக்குப் பணியாமல் இருப்பது.. இதெல்லாம் தர்மசங்கடமான பிரச்னைகள்!
ஆகவே குழந்தைகளுக்கு கொரேஷ், ஜிம்ஜோன்ஸ் இருவருமே கடுமையான தண்டனைகள் தந்தார்கள். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை ஒரு டின்னுக்குள் பூட்டிவைப்பது இவர்கள் வழக்கம்!
கடைசியில் முழு அடிமைகளாக ஆகி, எளிமையான உணவையே உண்டு இளைத்துப் போய் சிறைப்பட்ட நாடோடிகளைப் போல, வெறித்த பார்வையுடன் ஆசிரமக் கோட்டைக்குள் வளைய வரும் பக்தர்கள் ‘விஷத்தைக் குடி’ என்று தலைவன் ஆணையிட்டவுடன் அதைக் குடிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?!
சீரழிவதற்குப் பெரிய இயக்கம் என்று ஒன்று தேவையில்லை. வீட்டுக்குள்ளேயே ‘சாத்தானை வழிபடுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு விசித்திரமாகவும் விபரீதமாகவும் வாழும் குடும்பங்கள் உண்டு!
ஒரு தொழில் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கும் 34 வயது (பெயர் சொல்லப்படாத) பெண்மணி மனோதத்துவ மாநாடு ஒன்றில் கண்ணீருடன் வெளிப்படையாக விவரித்த நிகழ்ச்சி இது |
அந்தப் பெண்ணின் குடும்பம் சாத்தான் வழிபாடு என்ற பெயரில் கொடூரமான, விசித்திரமான, வக்கிரமான சடங்குகளைப் பின்பற்றியது. பாட்டனார்தான் எல்லாவற்றையும் துவக்கிவைத்த தலைவர்.
சிறுமியாக இருந்தபோது அவளை பாட்டனார், தந்தை, சித்தப்பா மூவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர் திரும்பத் திரும்ப அவளுக்கு இரண்டு வயதான போது இளைஞன் ஒருவனுக்கு ‘சாத்தான்’ முன்பு திருமணம் செய்வித்தார்கள்.
அந்த இளைஞனும் திருமணமானதிலிருந்து சிறுமியிடம் செக்ஸ் வைத்துக்கொண்டான். சிறுமிக்கு 13 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரட்டைக் குழந்தைகளின் தலைகளையும் அரிவாளால் வெட்டி (சாத்தானுக்காக) பலிகொடுத்தார் பாட்டனார்.
பிறகு அவள் கர்ப்பமுற்றபோது ஆறாவது மாதத்திலேயே கருவை செயற்கையாக வெளிவரச் செய்து, அந்த கருக்களை பூஜைக்குப் பிறகு வெட்டித் துண்டு துண்டாக்கி குடும்பத்தினர் சமைத்து உண்டனர்!
சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் பெண் மறுபடி கர்ப்பம் அடைந்தாள். ‘இதுதான் கடைசி என்று சாத்தான் ஆணையிட்டுவிட்டார்’ என்று சொல்லிய பாட்டனாரும் தந்தையும் அவளை ஓரிரவில் பின்னாலிருந்த மாட்டுத்தொழுவத்துக்குத் தூக்கிச் சென்று படுக்கவைத்து கட்டிப் போட்டனர்.
பிறகு, கைகளில் தீப்பந்தங்கள் ஏந்தியவாறு சுற்றி வந்து குடும்பத்தினரும், உறவினர்களும் நடனமாடினார்கள். வெறியோடு நடனமாடி நிறுத்திய பாட்டனார் சில மந்திரங்களை உரக்க உச்சரித்துவிட்டு, நீண்ட கத்தி ஒன்றை எடுத்து, அவளுடைய பிறப்பு உறுப்பில் வேகமாகப் பாய்ச்சினார். ரத்தம் பீறிட பயங்கரமாக அலறிய அந்தப் பெண் மயக்கமுற்றாள்.
பல வருடங்கள் கழித்து, எப்படியோ தப்பித்துப் பிற்பாடு நல்லவேலையில் அமர்ந்த அந்தப் பெண்மணி தன் கதையைச் சொன்னவுடன் மாநாட்டில் பெரிய மௌனம் நிலவியது. பல பிரதிநிதிகள் அதிர்ச்சியோடு விசும்ப ஆரம்பித்தார்கள்.
ஆகவே, வீட்டுக்குள்ளேயும் உறவினர்களிடமும்கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.
(தொடரும்ம்ம்ம்)