அன்பினிய தங்கை சாந்தி,நல்ல தலைப்பில் இந்த இழையை ஆரம்பித்திருக்கிறீர்கள்.என் இனிய வாழ்த்துக்கள்
1. இது தேவையா?.
2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.
3. பாதிப்புகள் என்னென்ன?..
4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.
5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?
6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.
7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..
8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.
பெண்களைப் பொருத்தது வேலைக்குப் போவதும் போகாததும். இதில் ஆண்கள் தலையிடக்கூடாது என்பதே என் கருத்து. தானாக விரும்பி வேலைக்குப் போகும் எந்தப் பெண்ணும் அதை பாரமாக நினைக்க மாட்டாள்...
சில பெண்கள் தங்களின் இலட்சியத்திற்காகவே வேலைக்குப் போகின்றனர் என்பதும் பாராட்டத்தக்கது. அத்தகைய பெண்டிருக்கு கணவன்மார்கள் தடையிடக்கூடாது என்பதும் என் கருத்து. இப்போது உங்களின் கேள்விகளுக்கு...
1. இது தேவையா?.
தேவையா இல்லையா என்பது பெண்டிர் சம்பந்தப்பட்டது.
2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.
கணவன் தன் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் நிலை மாற வேண்டும். தன்னால் இயன்றவரை செல்வம் கொணர்ந்து இல்வாழ்க்கை நடத்த வேண்டும்.
ஆனால் இலட்சியத்திற்காக வேலைக்குப் போவது இதில் அடங்காது.
3. பாதிப்புகள் என்னென்ன?..
இல்லறம் சில நேரங்களில் மிகுந்த பாதிப்பை அடைகின்றது. ஆனால் இது கணவன் மனைவி இருவரும் எவ்வளவு சகிப்புத்தண்மையுடன் இருக்கின்றார்கள் என்பதைப் பொருத்தது. இருப்பினும் குழந்தைகள் இருப்பின் இது கண்டிப்பாக வரவேற்கப்படக்கூடாது. குழந்தைகளை இது மிகவும் பாதிக்கும். இலட்சியங்கள் வைத்திருக்கும் பெண்டிர் கூட குழந்தை விஷயத்தில் சற்று கீழிறங்கித்தான் வரவேண்டும் இல்லையென்றால் தாய் என்ற உயர்ந்த ஸ்தானத்திற்கு ஆசைப்படக்கூடாது.
அப்புறம் பெரியோரினால் (கட்டுப்பெட்டிகளால்) வரும் பாதிப்பு. இதை சமாளிக்க இருவருக்கும் தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். பெரியோரின் மனமும் கோணாமல் தன்னுடைய இலட்சியத்தையும் தீர்த்துக்கொள்ளல் வேண்டும்.
4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.
குழந்தைகளுக்கு ஒரு இலாபமும் இல்லை. நஷ்டம்தான். பணம் மட்டுமே குழந்தைகளுக்கான இலாபமாகக் கருத முடியாது. முக்கியமான தாயன்பு கிடைக்காமல் போவதை விட நஷ்டம் வேறு இல்லை.
உறவுகள் பணத்தாசை பிடித்த வல்லூறுகள் அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?
கண்டிப்பாக பாதிக்காது. இன்றைக்கு பல சாதனைகளை புரிந்து நாட்டை உயர்த்திய பெண்டிர் நிறைய இருக்கின்றார்கள்.
6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.
இதுவும் இருவரின் சகிப்புத் தண்மை, பெரியோரின் சம்மதம் ஆகியவற்றைப் பொருத்தது.
7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..
பெண்கள் வருவதால் ஆண்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடுகிறது என்பது ஒத்துக்கொள்ள முடியாது (சில இடங்களில் அப்படி நிகழுவதும் உண்டு). இருப்பினும் திறமையான ஆண்களுக்கு எப்போதுமே வேலை வாய்ப்பு உண்டு.
8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.
அவள் விரும்பினால் கண்டிப்பாக... குழந்தைக்குப் பாதிப்பு இல்லாமலிருந்தால் கண்டிப்பாக...
பெற்றோரை சமாளிப்பது என் பொறுப்பு... :)
கூழுக்கும் அசை மீசைக்கும் ஆசைஎன்றொரு பழமொழி உண்டுஅது போல பெண்கள் வேலைக்குப் போவதும்குழந்தைகள் வளர்ப்பும் , ஆண்களுக்கு அதிக வேலை கிடைப்பதும்அனால் தற்கால சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கு போவதை நிருத்தமுடியாதுவருமானம் பாதிக்கும்காலத்தின் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்
அதற்காக சிலவற்றை இழந்துதான் ஆகவேண்டும்.
மாற்றங்கள் மாற்ற முடியாதது .
2008/6/17 jmms <jmms...@gmail.com>:
============================= இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
என்னுடைய கருத்துக்கள்:மனைவியின் வருமானமும் இருந்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையிருக்குமானால், ஒரு ஆடவன் எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
மனைவியின் லட்சியத்திற்காக, ஒரு தொழிலையோ அல்லது "பாதுகாப்பான" வேலையையோ அமைத்துக்கொடுக்கும் கணவர் பெருமான்கள் பாராட்டுக்குரியவர்கள்.
புகுந்த வீட்டீற்கு அடங்காமல், சொந்தமாக சம்பாதிக்க வேண்டும், கணவர் தயவில் கூட நம் வாழ்க்கை இருக்ககூடாது என்று, குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனியாமல் வேலைக்கு செல்லும் பெண்கள் பழிப்பிற்குரியவர்கள்.
புகுந்த வீட்டின் சம்மதத்துடன், குழந்தை வளர்ப்பில் எந்த குறையும் வைக்காமல், வேலைக்கு செல்லும் பெண்கள்...................ஓ.கே
ஆனால், வேலைப்பளு, மன உலைச்சல்........இதற்கிடையே, வீட்டினர் ஒத்துழைத்தாலும்....அந்த பெண் தன் கடமையில் எங்கோ குறை வைக்கிறாள்............என்பதே இந்த சிறியவனின் கருத்து.
மிகமிகத் தவறான கண்ணோட்டம். ஒரு பெண் வேலைக்குப் போவது என்பது அவ
ரஸீம், பெண் என்றால் அடிமை என்றா நினைக்கிறீர்கள்? தனக்கென சுயமாக எந்த
அடையாளமுமற்று, கணவனின் குடும்பத்திற்காக உழைப்பதில் எந்தக் குறையும்
வைக்காமல், அதன் பின்னரும் அவள் வேலைக்குச் சென்று வந்தால் திருப்தி
தான், இல்லையா? ஏன் நீங்கள் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள் -
கணவன் படுக்கைக்குக் கூப்பிடும் பொழுதெல்லாம், முழு ஒத்துழைப்புத் தந்து
படுத்துச் சுகம் தருவதில் எந்தக் குறையும் வைப்பது கூடாதென்றும்?
இந்த உலகில், ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள, முதலில் அவள்
தன்னம்பிக்கைப் பெற்றவளாக இருக்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை வருது -
பொருளாதாரச் சுதந்திரத்தினாலும், தன் கருத்துகளைச் சுதந்திரமாக பிறருடன்
பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் அமையப்பெறுவதனாலும் தான். இந்த இரண்டிற்கும்
அவசியம் தேவை, அவள் வெளி உலகுடன், தன் விருப்பத்துக்குற்ற வகையில்
தொடர்புகளை வைத்துக் கொள்வது தான். அவ்வகையான தொடர்புகள் சாத்தியமாவது
பெண்கள் வேலைக்குச் சென்று வருவது தான்.
ஒழுக்கம், பிள்ளைவளர்த்தல், குடும்ப நலனில் அக்கறை, தியாகம், சேவை
இதெல்லாம் ஒரு குடும்ப கட்டமைப்புக்குத் தேவையென்றால், அது கணவனுக்கும்
தேவையான ஒன்றே!!! ஒரு ஆண் இதையெல்லாம் செய்து கொண்டே தன் ஆளுமையையும்,
அறிவாற்றலையும், இன்ன பிற புலமைகளையும் வெளிப்படுத்திக் கொள்ளவும்,
மேலும் வளர்த்துக் கொள்ளவும் உரிமைகள் இருக்கும் பொழுது, ஒரு
பெண்ணிற்கும் அத்தகைய உரிமைகள் இருப்பதில் எந்தத் தவறுமில்லை. அவள் வேலை
செய்தாலும், செய்யாவிட்டாலும். அவள் தனக்கென பொருள் ஈட்டிக் கொள்ளாத
சூழலில், ஒரு கணவன் தன் மனைவியின் ஆளுமைக்கென செலவு செய்வானா என்பது
சந்தேகமே.
அதனால், அவள் சுயமாக பொருளீட்டுக் கொள்ளும் பொருட்டு பணிக்குச்
செல்வதில் எந்தத் தவறுமில்லை.
ரஸீம் - நீங்கள் பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிப்பதற்கு விதிக்கும்
நிபந்தனைகள் - நேர்மையற்றவை. அடிமைத்தனம் மிக்கது.
வேலைக்கு செல்லும் அம்மா விற்குமகனின் கண்ணீர்க்கடிதம்.....................
எந்த காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என அடிக்கடி புரியாமல் போகும் சமயங்கள் பல உண்டு...இந்த விவாதத்தை படித்ததும் அதுபோல் சற்று குழம்ப நேர்ந்து விட்டது.
"குடும்ப சந்தோஷத்துக்கு பெண் வேலைக்கு போகணுமா?"
குடும்பம் என்பது யார்? அதில் யார் யார் உறுப்பினர்கள்? கணவனின் அம்மா, அப்பா,அக்கா,தங்கை, தம்பி, கணவன் வீட்டு நாய் ஜிம்மி...இதெல்லாம் குடும்பத்தில் சேர்த்தியா? சேர்த்தி இல்லையா?ஆண்வழி குடும்பத்தை பற்றியா விவாதிக்கிறோம்?
குடும்பம் என்றால் மனைவி, கணவன் டிபெண்டண்ட் குழந்தைகள்...இது தான் குடும்பம்..இவர்களை தவிர மற்றவர்கள் எல்லாரும் உறவினர்கள் தான்.இவர்களில் மனைவி வேலைக்கு போகாமல் இருந்தால் சந்தோஷப்படுவது யார்?கணவனா?அப்படி என்றால் அந்த ராஸ்கலை அடித்து துரத்த வேண்டாமா?..குழந்தையா??குழந்தை பெற்றோர் தன்கூடவே இருக்கணும் என்று நினைத்தால் கணவன் வேலையை விட்டுவிட்டு குழந்தையை பார்த்து கொள்ளலாமே?
கனடாவில் குழந்தை பிறந்தால் தந்தை அல்லது தாய் இருவரில் ஒருவருக்கு 1 வருட சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறார்கள்.தந்தை கூட வீட்டில் இருந்து குழந்தையை வளர்க்கலாம்.பல வேலைக்கு போகும் பெண்கள் தாய்ப்பாலை பாட்டிலில் எடுத்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டு போவார்கள்.கணவன் அதை எடுத்து குழந்தைக்கு கொடுத்து பார்த்துக்கொள்வான்...
யார் வளர்த்தாலும் குழந்தை வளரும்..குழந்தை சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றால் தகப்பன் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து குழந்தையை வளர்க்கட்டும்.அல்லது இருவரும் வேலைக்கு போய் குழந்தையை டேகேரில் விடட்டும்...குழந்தை தன் வயதை ஒத்த குழந்தைகளுடன் டேகேரில் பழகுவதே நல்லது...
ஹோம்மேக்கராக இருக்க படிக்க வேண்டிய அவசியமே இல்லையே?..என்ன வாழ்க்கையப்பா அது?அடிமை வாழ்க்கை....இப்படி வீட்டில் போட்டு அமுக்கி வைத்துத்தானே பெண்களை கொத்தடிமையாக நடத்திக்கொண்டு இருந்தீர்கள்....மாமியாருக்கு மூத்திரகும்பா தூக்கும் வேலைக்கு ஆள் பிடிக்கவா கல்யாணமும், குடும்ப அமைப்பும்?இதெல்லாம் ஒரு குடும்பம், கலாச்சாரம்...இதன் சந்தோஷத்துக்கு பெண் வேலையை விடுவது..நல்ல விவாதமய்யா இது.
--
செல்வன்
www.holyox.tk
--
சாந்தி.
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
எங்க அம்மாவிடம் நான் அடிக்கடி கேட்பதுண்டு….. நீ ஏம்மா படிக்காம போயிட்டே னு?
எங்க அம்மா சொல்லுவாங்க, வாய்ப்பு வசதிகள் இல்லாம போச்சிடா, நான் லாம் படிச்சி இருந்தாக்கா இந்நேரத்துக்கு ஒரு டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகி இருப்பேன்……….னு ஆதங்கப்படுவாங்க………..
ஆனால் தற்போதய கால கட்டத்தில், பெண்கல்வி கட்டாயமாகிவிட்டது………..
நண்பர், நந்தா….
ஆண்களுடன் பெண்கள் கலந்து, ஆண் பெண் என்ற பாகுபாடின்றி கலாச்சார சீரழிவுகளுடன் வேலை என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்களைத்தான் நான் சாடுகிறேன் தவிர பெண் வேலை வாய்ப்புகளுக்கு நான் ஒன்றும் எதிரி அல்ல……
எங்கள் அலுவலகத்திலே கூட , சில நேரங்களில், நான் இரவு முழுதும் இருந்து வேலை பார்த்து விட்டு கலையில் வீட்டுக்கு போனதுண்டு, அதிலே என்னுடன் பணிபுரியும் பெண்கள் செய்திருக்க வேண்டிய வேலைகளும் அடங்கும்.
"ரொம்ப தாங்க்ஸ்" இது மட்டுமே எனக்கு கிடைக்கும் பரிசு………..
Indians are EQ, emotional quotient,ங்ற மாதிரி……….எல்லோரும் நம்மைப்போலவே இருப்பாங்கன்னு சொல்லமுடியுமா?
என் சிறு வயதில் அப்பா சரியாக வேலைக்கு செல்ல மாட்டார்.
நன்றாக குடிப்பார்.அவரின் வருமானம் அவரின் செலவிற்கே சரியாக இருக்கும்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கே திண்டாடிய வேளைகள் பல. மது அருந்தி வரும் அப்பாவிடம் அடிகள் வாங்கி கொண்டு எங்களுக்கு இரு வேளை சாப்பாடு போட்டதெல்லாம் என் அம்மாவின் பாதங்களே!(தையற் தொழிலாளி)
அவர் உழைக்காமல் இருந்திருந்தால் நான் இன்று படித்து இந்த கணிப்பொறியை தட்டிக்கொண்டிருக்க முடியாது!
தேவையிலாமல் வேலைக்கு செல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. குடும்பச் சூழல் சரியில்லை நாமும் வேலைக்கு போகலாமென் தொன்றினால் போகவேண்டியதுதான்!
இன்றைய விலைவாசி உள்ள நிலையில் நடுத்தரவர்கத்தினரும், ஏழை மக்களும் வீட்டில் இருந்தபடியே எப்படி காலம் தள்ள முடியும்? எதாவது சம்பாதித்தால்தானே பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க, சமூகத்தில் நல்ல மதிப்பை பெற முடியும்.
கணவன் சரியாக அமையாத பல பெண்களை கண்டிருக்கின்றேன் என் கிராமத்தில். அவர்களின் நம்பிக்கையனைத்தும் அவர்களின் வேலைதான். நான் யாரையும் நம்பி இல்லை என்னால் சொந்த காலில் நிற்க முடியும் என்ற உத்வேகத்தை அவர்களுக்கு தருவதும் அதுதான்!
உடல் முழுவது நகைகளை அணிந்து போலியாக சிரிக்கும் விளம்பர பெண்களை பற்றியோ, தினமொரு உதட்டு சாயம் பூசிக்கொண்டு பல்லிளிக்கும் பெண்களை பற்றியோ அல்லது விபச்சாரம் செய்யும் பெண்களை பற்றியோ எனக்கு கவலைகளில்லை.
சில பெண்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி பணமெனில் பணம் சம்பாதிக்கிறார்கள் இல்லையெனில் அனைவரின் அன்பையும் சம்பாதிக்கிறார்கள். சிலர் இரண்டையும் சம்பாதிக்கிறார்கள். இவர்களால் நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைதான். அதேவேளையில்
முற்றும் தவறான பாதைதனில் முடிவற்று செல்கின்றதென் பயணம் காகிதத்தை திருப்பி காய்ந்த இலையை புரட்டி செல்லும் காற்று மட்டும் என்னுடன்
என் சிறு வயதில் அப்பா சரியாக வேலைக்கு செல்ல மாட்டார்.
நன்றாக குடிப்பார்.அவரின் வருமானம் அவரின் செலவிற்கே சரியாக இருக்கும்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கே திண்டாடிய வேளைகள் பல. மது அருந்தி வரும் அப்பாவிடம் அடிகள் வாங்கி கொண்டு எங்களுக்கு இரு வேளை சாப்பாடு போட்டதெல்லாம் என் அம்மாவின் பாதங்களே!(தையற் தொழிலாளி)
அவர் உழைக்காமல் இருந்திருந்தால் நான் இன்று படித்து இந்த கணிப்பொறியை தட்டிக்கொண்டிருக்க முடியாது!
தேவையிலாமல் வேலைக்கு செல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. குடும்பச் சூழல் சரியில்லை நாமும் வேலைக்கு போகலாமென் தொன்றினால் போகவேண்டியதுதான்!
இன்றைய விலைவாசி உள்ள நிலையில் நடுத்தரவர்கத்தினரும், ஏழை மக்களும் வீட்டில் இருந்தபடியே எப்படி காலம் தள்ள முடியும்? எதாவது சம்பாதித்தால்தானே பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க, சமூகத்தில் நல்ல மதிப்பை பெற முடியும்.கணவன் சரியாக அமையாத பல பெண்களை கண்டிருக்கின்றேன் என் கிராமத்தில். அவர்களின் நம்பிக்கையனைத்தும் அவர்களின் வேலைதான். நான் யாரையும் நம்பி இல்லை என்னால் சொந்த காலில் நிற்க முடியும் என்ற உத்வேகத்தை அவர்களுக்கு தருவதும் அதுதான்!
உடல் முழுவது நகைகளை அணிந்து போலியாக சிரிக்கும் விளம்பர பெண்களை பற்றியோ, தினமொரு உதட்டு சாயம் பூசிக்கொண்டு பல்லிளிக்கும் பெண்களை பற்றியோ அல்லது விபச்சாரம் செய்யும் பெண்களை பற்றியோ எனக்கு கவலைகளில்லை.
சில பெண்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி பணமெனில் பணம் சம்பாதிக்கிறார்கள் இல்லையெனில் அனைவரின் அன்பையும் சம்பாதிக்கிறார்கள். சிலர் இரண்டையும் சம்பாதிக்கிறார்கள். இவர்களால் நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைதான். அதேவேளையில்
குளித்து, கோலம் போட்டு,நாற்று நட்டு, களை பறித்து, விறகு பொறுக்கி, அடுப்பூதி, வேளைக்கு வேளை சமைத்து, பகிர்ந்து, துணி துவைத்து, மைல் தாண்டி தண்ணிர் கொணர்ந்து, பாத்திரம் கழுவி, வீடு, வாசல் பெருக்கி, சாணம் அள்ளி, எரிபொருள் தட்டி, பெற்ற மக்களை பேணி காத்து, கணவனை அன்பால் அணைத்து, குடும்ப கணக்கு வழக்குகளை சரிபார்த்து (இவ்வளவையும் இவர்கள் வேலையாக கருதவில்லை. இன்று அலுவலகம் செல்வதை மட்டும் செய்வதை பெரிதாக சிலர் பேசுகிறார்கள். இவை ஆண்களோடு போட்டி போட்டதன் விளைவாக தான் இருக்கும்) குடும்பத்தின் ஆலம் விழுதென என் கிராம பெண்கள் இன்றும் இருக்கும் வேளையில்இங்கு குழந்தைகளை கவனிக்க கூட நேரமில்லையென சோம்பேரிதனம் சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.
2008/6/19, நந்தா <media...@gmail.com>:
//ஒரு ஆம்பளை பத்து பொம்பளைங்க
கிட்ட போனாலும் அவன் பேரு பொம்பளைதான். ஆனால் ஒரு பொம்ப்பளை பத்து
ஆம்பளைங்க கிட்ட போனா அவளுக்கு பேரு வேற".. //
பழமொழில (என்னைக்கேட்டால் இது பழமொழி இல்லை. மொக்கைமொழி)தப்பு வந்ததுக்கு
மாப்பு கேட்டுக்கறேன்.
முற்றும் தவறான பாதைதனில் முடிவற்று செல்கின்றதென் பயணம் காகிதத்தை திருப்பி காய்ந்த இலையை புரட்டி செல்லும் காற்று மட்டும் என்னுடன்
இது மிகவும் சிரமமான காரியம்.இப்படி செய்ய முன்வரும் ஆண், பெண் என்பவள் தனக்கு சமமான பிறவி என்பதை ஏற்க வேண்டியிருக்கும். தனது பிறப்பால் தனக்கு கிடைத்திருக்கும் சலுகைகளை விட்டு தொலைக்க வேண்டியிருக்கும். தனக்கு இருப்பது போன்ற ஆசைகள், கனவுகள், உரிமைகள்,தனிமனித பலவீனங்கள் பெண்பிறப்புக்கும் இருக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். தன்னை விட தனது மனைவி அதிகம் சம்பாதித்து, படித்து சாதனை செய்து வாழ்க்கையில் முன்னேறுவதை பொறுமலுடன் பார்க்க வேண்டியிருக்கும்..."இன்னாரது கணவர் இவர்" என்று மனைவியின் பெயரால் அடையாளம் காணப்படுவதை பொறுக்க வேண்டியிருக்கும்.
இத்தனை கஷ்டத்துக்கு பதில் தன்னை விட குறைவாக படித்த,குறைந்த சம்பளத்தில் வேலைக்கு போகும் பெண் அல்லது ஹோம்மேக்கரை திருமணம் செய்துகொண்டு குடும்பத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, ஆண் என்ற பிறவி அந்தஸ்துடன் வளைய வருவது மிகவும் எளிதான செயலாகத்தான் இருக்கும்..."மனைவிக்கு பயந்தவன்" என்று யாரையாவது சொல்ல வேண்டுமெனில் இவர்களைத்தான் சொல்லவேண்டும்:-)
சாந்தி.
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
என் சிறு வயதில் அப்பா சரியாக வேலைக்கு செல்ல மாட்டார்.
நன்றாக குடிப்பார்.அவரின் வருமானம் அவரின் செலவிற்கே சரியாக இருக்கும்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கே திண்டாடிய வேளைகள் பல. மது அருந்தி வரும் அப்பாவிடம் அடிகள் வாங்கி கொண்டு எங்களுக்கு இரு வேளை சாப்பாடு போட்டதெல்லாம் என் அம்மாவின் பாதங்களே!(தையற் தொழிலாளி)
அவர் உழைக்காமல் இருந்திருந்தால் நான் இன்று படித்து இந்த கணிப்பொறியை தட்டிக்கொண்டிருக்க முடியாது!தேவையிலாமல் வேலைக்கு செல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. குடும்பச் சூழல் சரியில்லை நாமும் வேலைக்கு போகலாமென் தொன்றினால் போகவேண்டியதுதான்!
இன்றைய விலைவாசி உள்ள நிலையில் நடுத்தரவர்கத்தினரும், ஏழை மக்களும் வீட்டில் இருந்தபடியே எப்படி காலம் தள்ள முடியும்? எதாவது சம்பாதித்தால்தானே பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க, சமூகத்தில் நல்ல மதிப்பை பெற முடியும்.கணவன் சரியாக அமையாத பல பெண்களை கண்டிருக்கின்றேன் என் கிராமத்தில். அவர்களின் நம்பிக்கையனைத்தும் அவர்களின் வேலைதான். நான் யாரையும் நம்பி இல்லை என்னால் சொந்த காலில் நிற்க முடியும் என்ற உத்வேகத்தை அவர்களுக்கு தருவதும் அதுதான்!
உடல் முழுவது நகைகளை அணிந்து போலியாக சிரிக்கும் விளம்பர பெண்களை பற்றியோ, தினமொரு உதட்டு சாயம் பூசிக்கொண்டு பல்லிளிக்கும் பெண்களை பற்றியோ அல்லது விபச்சாரம் செய்யும் பெண்களை பற்றியோ எனக்கு கவலைகளில்லை.
சில பெண்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி பணமெனில் பணம் சம்பாதிக்கிறார்கள் இல்லையெனில் அனைவரின் அன்பையும் சம்பாதிக்கிறார்கள். சிலர் இரண்டையும் சம்பாதிக்கிறார்கள். இவர்களால் நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைதான். அதேவேளையில்
குளித்து, கோலம் போட்டு,நாற்று நட்டு, களை பறித்து, விறகு பொறுக்கி, அடுப்பூதி, வேளைக்கு வேளை சமைத்து, பகிர்ந்து, துணி துவைத்து, மைல் தாண்டி தண்ணிர் கொணர்ந்து, பாத்திரம் கழுவி, வீடு, வாசல் பெருக்கி, சாணம் அள்ளி, எரிபொருள் தட்டி, பெற்ற மக்களை பேணி காத்து, கணவனை அன்பால் அணைத்து, குடும்ப கணக்கு வழக்குகளை சரிபார்த்து (இவ்வளவையும் இவர்கள் வேலையாக கருதவில்லை. இன்று அலுவலகம் செல்வதை மட்டும் செய்வதை பெரிதாக சிலர் பேசுகிறார்கள். இவை ஆண்களோடு போட்டி போட்டதன் விளைவாக தான் இருக்கும்) குடும்பத்தின் ஆலம் விழுதென என் கிராம பெண்கள் இன்றும் இருக்கும் வேளையில்இங்கு குழந்தைகளை கவனிக்க கூட நேரமில்லையென சோம்பேரிதனம் சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.
2008/6/19, நந்தா <media...@gmail.com>:
//ஒரு ஆம்பளை பத்து பொம்பளைங்க
கிட்ட போனாலும் அவன் பேரு பொம்பளைதான். ஆனால் ஒரு பொம்ப்பளை பத்து
ஆம்பளைங்க கிட்ட போனா அவளுக்கு பேரு வேற".. //
பழமொழில (என்னைக்கேட்டால் இது பழமொழி இல்லை. மொக்கைமொழி)தப்பு வந்ததுக்கு
மாப்பு கேட்டுக்கறேன்.
முற்றும் தவறான பாதைதனில் முடிவற்று செல்கின்றதென் பயணம் காகிதத்தை திருப்பி காய்ந்த இலையை புரட்டி செல்லும் காற்று மட்டும் என்னுடன்
//சில பெண்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி பணமெனில் பணம் சம்பாதிக்கிறார்கள் இல்லையெனில் அனைவரின் அன்பையும் சம்பாதிக்கிறார்கள். சிலர் இரண்டையும் சம்பாதிக்கிறார்கள். இவர்களால் நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைதான். அதேவேளையில்
நந்தா,
சமம் என்று சொன்னால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்……. ஏன் ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக ஓடுகிறார்கள்……………… அந்த உடற்கட்டு வேற்றுமை….இறைவனால் படைக்கப்பட்டது……..
எதிர் பால்………… ஈர்ப்பும்.இறைவனால் உருவாக்கப்பட்டது தான்….
சத்தியமாக, தவறு நடக்கும் சமயம்…இரு பாலாரும் காரணிகள்தான்.
என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பிகள், என்னுடன் பாலைவன project site க்கு வருவதற்கு எத்தனிப்பதில்லை, machinery shop க்கு போகும் சமயம் அவர்களை நான் அழைப்பதுமில்லை………. அது சரியும் அல்ல………
KG க்ளாஸ்களில் ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பதில்லை, குழந்தை பராமரிப்பு உதவிக்கு நாம் ஆண்களை நியமிப்பதுமில்லை…..nursing கோர்ஸ்களில் பெரும்பாலும் ஆண்களுக்கு அனுமதியே இல்லை……..
இது போல சில வரயரைகள் உண்டு, பிரத்யேகத்தனமுண்டு………..
நாம் வேலைக்கு செல்லும்போது " பார்த்து போடா, ரோடு க்ராஸ் பண்ணும்போது பார்த்து க்ராஸ் பண்ணுடா" னு அம்மா சொல்றாங்க….. "ஏங்க, வண்டி மெதுவா ஓட்டுங்க, வேளைக்கு சரியா சாப்டுங்க" னு மனைவி சொல்லி அனுப்புறாங்க………. நம்மைப்பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக்க்கொள்ளும்போது, அவர்கள் பாதுகாப்புக்கும் நாம் தானே பொறுப்பு…………….நம்மைப்போல எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்களா நண்பா?????????
செல்வன் மிகவும் யதார்த்தமாக சொல்லிருக்கிறார்.. மிகவும் அழகானதும் ஆழமான கருத்தும் கூட. செல்வன் மிகவும் நன்றிசபூர் ஆதம்
எனவே பாதிப்புகள் என்பது அவரவர் மன நிலையை பொருத்தது
என்றும் அன்புடன்
கௌசல்யா.
மிக்க நன்றி முகமது ரஸீம் மற்றும் சபூர் ஆதம்.
சாந்தி அக்கா நீங்கள் சொல்வதும் சரியே, ஆனால் இந்த மாற்றத்திற்கு முற்றிலும் காரணம் சமூக மற்றும் பொருளாதர மற்றங்களே சுருங்க சொல்வதெனில் தலைமுறை வேறுபாடுகள்..
சுமார் இருபது வருடங்களுக்கு முன் பெண்கள் பெரும்பாலோனோர் படிக்கவில்லை. இப்பொழுது அப்படியில்லை அல்லவா? அதிக படித்த பெண் ஒருவள் தனது வகுப்பு ஆண்கள் பெரிய வேலைக்கு செல்ல தான் மட்டும் வீட்டில் உட்கார்ந்து அடுப்பூத ஆசைபடுவாளா என்ன? இதே பிரச்சனைதான் சில குடும்பங்களிலும் நாம் இருவரும் தானே பெற்றோம் நான் மட்டும் எப்படி கவனித்து கொள்வது என மனைவி பேசும்போது ஆரம்பிகின்றது யுத்தம், முடிவில் விவாகரத்து வரை செல்கின்றது!
என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு தம்பதியினர், இருவரும் வேலைக்கு செல்பவர்கள் தான்,
இன்னும் காதலிக்கின்றார்கள், குழந்தையை நன்றாக கவனித்து கொள்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கை அழகாக தான் செல்கின்றது.
உண்மையில் நல்ல புரிதல் உள்ளவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் வருவதில்லை!
அன்றொரு நாள் மாலை நேர உணவகமொன்றில் உணவுக்காக காத்திருந்தேன்! ஒரு தம்பதியினர் அருகில் வந்து அமர்ந்தனர். புதிதாக திருமணமானவர்கள் என பார்த்தவுடன் தெரிந்தது. அவன் கருப்பாக, உயரமாக, தொப்பை சிறிதளவு இருக்கும், அப்படி இருந்தான். அவள் கொஞ்சம் கலராக மற்றும் நகைகள் அதிகம் அணிந்திருக்க அழகாக தெரிந்தாள். அவன் பயம் கலந்த சிரிப்புடன் அவளிட பேச்சு கொடுத்தவாறு இருந்தான். அவளோ அவனை அலட்சியபடுத்தியவாறு சுழலும் மின்விசிறியை கோபமாக பார்த்தவாறு இருந்தாள். அவள் கவனிக்காததை கண்டபின் அவன் மெளனமாகி தலை குனிந்து கொண்டான். சில நிமிடங்கள் அப்படியே கழிந்தன. கடைசியாக உணவக ஊழியர் மூவருக்கும் உணவை கொண்டுவந்து வைத்தார்.அவளுக்கு எங்கிருந்து அப்படியொரு கோபம் வந்ததென்று தெரியவில்லை, எழுந்து அவ்வூளியரை பளீரென்று ஒரு அறைவிட்டு அவள் உதிர்த்த வார்த்தைகளிவை " என்னைய்யா மையிரு கட நடத்துரீங்க மனுசன் எவ்வளவு நேரம் தான் காத்திருகுறது!" கூடவே சில ஆங்கிலத்திலும் திட்டியவாறு அமர்ந்து சாப்பிட தொடங்கினாள். (அவருக்கு 40 வயதிருக்கும் ஏழ்மையில் எதிர்த்து பேச கூட தெம்பில்லாமல் ஒன்னும் சொல்லாமல் போய்விட்டார்). அவள் கணவன் உணவக அலுவலர்களிடம் அவளுக்காக மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான். இவளுக்கு கர்வம் அழகிலா? பணத்திலா? அல்லது வேறெதிலென்று தெரியவில்லை. இப்படிபட்டவளோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்?
இன்னொருவர் தன் மனைவி அழகாக இல்லையெனும் ஒரே காரணத்திற்காக அவரை வெளியில் அழைத்து செல்வதே இல்லை. அழகை ஒரு பொருட்டாக கருதும் இவனெல்லாம் எதற்கு புற அழகில்லா ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்?
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இயற்கை தனது பால் ஈர்ப்பு உணர்ச்சிகளை நிறுத்தும்வரை. என்னை பொருத்தவரையில் உடலால் பலருடன் இருக்கும் உறவு மனதளவில் ஒருவருடன் தான் இருக்கும்.
இதுபோல மனிதர்களின் மனம் சம்பந்தபட்ட பிரச்சனைக்கு தீர்வுகான்பது எளிதல்ல கோடி மக்கள் கோடி பரிமானங்களில் இருக்கையில்.
அன்புடன்
குட்டி செல்வன்
2008 ஜூன் 21 15:55-ல், Saboor Adem <sabo...@gmail.com> எழுதியது:
செல்வன் மிகவும் யதார்த்தமாக சொல்லிருக்கிறார்.. மிகவும் அழகானதும் ஆழமான கருத்தும் கூட. செல்வன் மிகவும் நன்றிசபூர் ஆதம்
--
On 6/22/08, செல்வன் <kutty....@gmail.com> wrote:மிக்க நன்றி முகமது ரஸீம் மற்றும் சபூர் ஆதம்.
சாந்தி அக்கா நீங்கள் சொல்வதும் சரியே, ஆனால் இந்த மாற்றத்திற்கு முற்றிலும் காரணம் சமூக மற்றும் பொருளாதர மற்றங்களே சுருங்க சொல்வதெனில் தலைமுறை வேறுபாடுகள்..
சுமார் இருபது வருடங்களுக்கு முன் பெண்கள் பெரும்பாலோனோர் படிக்கவில்லை. இப்பொழுது அப்படியில்லை அல்லவா? அதிக படித்த பெண் ஒருவள் தனது வகுப்பு ஆண்கள் பெரிய வேலைக்கு செல்ல தான் மட்டும் வீட்டில் உட்கார்ந்து அடுப்பூத ஆசைபடுவாளா என்ன? இதே பிரச்சனைதான் சில குடும்பங்களிலும் நாம் இருவரும் தானே பெற்றோம் நான் மட்டும் எப்படி கவனித்து கொள்வது என மனைவி பேசும்போது ஆரம்பிகின்றது யுத்தம், முடிவில் விவாகரத்து வரை செல்கின்றது!
என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு தம்பதியினர், இருவரும் வேலைக்கு செல்பவர்கள் தான்,
இன்னும் காதலிக்கின்றார்கள், குழந்தையை நன்றாக கவனித்து கொள்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கை அழகாக தான் செல்கின்றது.
உண்மையில் நல்ல புரிதல் உள்ளவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் வருவதில்லை!
அன்றொரு நாள் மாலை நேர உணவகமொன்றில் உணவுக்காக காத்திருந்தேன்! ஒரு தம்பதியினர் அருகில் வந்து அமர்ந்தனர். புதிதாக திருமணமானவர்கள் என பார்த்தவுடன் தெரிந்தது. அவன் கருப்பாக, உயரமாக, தொப்பை சிறிதளவு இருக்கும், அப்படி இருந்தான். அவள் கொஞ்சம் கலராக மற்றும் நகைகள் அதிகம் அணிந்திருக்க அழகாக தெரிந்தாள். அவன் பயம் கலந்த சிரிப்புடன் அவளிட பேச்சு கொடுத்தவாறு இருந்தான். அவளோ அவனை அலட்சியபடுத்தியவாறு சுழலும் மின்விசிறியை கோபமாக பார்த்தவாறு இருந்தாள். அவள் கவனிக்காததை கண்டபின் அவன் மெளனமாகி தலை குனிந்து கொண்டான். சில நிமிடங்கள் அப்படியே கழிந்தன. கடைசியாக உணவக ஊழியர் மூவருக்கும் உணவை கொண்டுவந்து வைத்தார்.அவளுக்கு எங்கிருந்து அப்படியொரு கோபம் வந்ததென்று தெரியவில்லை, எழுந்து அவ்வூளியரை பளீரென்று ஒரு அறைவிட்டு அவள் உதிர்த்த வார்த்தைகளிவை " என்னைய்யா மையிரு கட நடத்துரீங்க மனுசன் எவ்வளவு நேரம் தான் காத்திருகுறது!" கூடவே சில ஆங்கிலத்திலும் திட்டியவாறு அமர்ந்து சாப்பிட தொடங்கினாள். (அவருக்கு 40 வயதிருக்கும் ஏழ்மையில் எதிர்த்து பேச கூட தெம்பில்லாமல் ஒன்னும் சொல்லாமல் போய்விட்டார்). அவள் கணவன் உணவக அலுவலர்களிடம் அவளுக்காக மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான். இவளுக்கு கர்வம் அழகிலா? பணத்திலா? அல்லது வேறெதிலென்று தெரியவில்லை. இப்படிபட்டவளோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்?முடியும் செல்வன், அன்பால் பொறுமையால் , விவேகத்தால் அவளுக்கு புரிய வைக்கணும்... ஏனந்த ஆண் அடங்கிப்போனான்...பளாரென்று ஒரு அறை விட்டிருக்க வேண்டாமா அவளுக்கு...
//அழகு, பணம், பதவிக்காக ஆண் அடங்கிப்போவது ஆணுக்கு அழகல்ல...//
இன்னொருவர் தன் மனைவி அழகாக இல்லையெனும் ஒரே காரணத்திற்காக அவரை வெளியில் அழைத்து செல்வதே இல்லை. அழகை ஒரு பொருட்டாக கருதும் இவனெல்லாம் எதற்கு புற அழகில்லா ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்?முதுகெலும்பில்லாத கோழை...
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இயற்கை தனது பால் ஈர்ப்பு உணர்ச்சிகளை நிறுத்தும்வரை. என்னை பொருத்தவரையில் உடலால் பலருடன் இருக்கும் உறவு மனதளவில் ஒருவருடன் தான் இருக்கும்.
இதுபோல மனிதர்களின் மனம் சம்பந்தபட்ட பிரச்சனைக்கு தீர்வுகான்பது எளிதல்ல கோடி மக்கள் கோடி பரிமானங்களில் இருக்கையில்.அருமையான கருத்துகள் செல்வன்...
அன்புடன்
குட்டி செல்வன்
2008 ஜூன் 21 15:55-ல், Saboor Adem <sabo...@gmail.com> எழுதியது:
செல்வன் மிகவும் யதார்த்தமாக சொல்லிருக்கிறார்.. மிகவும் அழகானதும் ஆழமான கருத்தும் கூட. செல்வன் மிகவும் நன்றிசபூர் ஆதம்
--நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================
நண்பர்களுக்கு சலாம் / வணக்கம்,
விடுப்பிலிருந்து திரும்பிய எனக்கு கிடைத்த நல்ல கேள்விகள். இப்படி அழகான கேள்விகளை உதிர்த்திருக்கும் சாந்திக்கும் மற்றும் அதனை தொடர்ந்து பதில் அளித்த / அளிக்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கு தெரிந்த சில கருத்துக்களை சொல்ல ஆசை படுகிறேன்.
இப்போது, வேலைக்கும் போய் வீட்டையும் பராமரித்து, அதிக உடல் மற்றும் மனச்சுமை. எல்லோருக்கும்
1. இது தேவையா?.
ஆம், இது தேவைதான். இன்றைய உலகில் பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. பெண்கள் வேலைக்கு போவது குடும்பத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.
ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்து இன்று பெரும்பான்மை மக்கள் ஏற்று வரும் நிலையில், இருவருக்கும் சரியான விழுக்காடு வேலை மற்றும் சம்பளம் அரசும் / தனியாரும் தர வேண்டும்.
3. பாதிப்புகள் என்னென்ன?
பெண்கள் வேலைக்கு போவதால் வீட்டில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் பெண்கள் வேலைக்கும் போய் விட்டு, வீட்டையும் பராமரிப்பதால் அவர்களுக்கே பாதிப்பு உண்டாகின்றது. ஓய்வில்லாமல் உழைக்கும் சூழ்நிலை. போக பொருளாக பார்க்கும் பிற ஆண்களின் பார்வையில் சிக்கி தவிக்கும் பெண்களும் உண்டு.
4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.
பொருளாதாரம் அதிகமாக கிடைப்பதால் எல்லோருக்குமே அது லாபம் தானே! தேவைகள் சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?
நாடு இன்னும் முன்னேறவே செய்யும், பாதிப்புகள் எப்படி வரும்? எல்லா பெண்களுகுமே வேலைக்கு
போகும் பட்சத்தில் நிறுவனங்கள், வேலைகள் பல உருவாகும். ஆதலால் அதற்கு ஆட்கள் இல்லாமல்
போகும்பட்சத்தில், வெளிநாடுகளின் உதவியை நாம் நாட வேண்டி இருக்கும்.
6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.
கண்டிபாக குறையும். பெண்கள் வீட்டில் இருந்தால்தானே பிரச்சினையே :-)
7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..
கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் பெண்கள் தங்களுக்கு கீழ் ஆண்களை வேலைக்கு அமர்த்துவதையே பெரிதும் விரும்புவர். அலுவலகத்திலாவது ஆண்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்து கொள்ளல்லாம்
என்ற எண்ணம் வருவது இயல்பே.
8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.
ஆம், இன்று பெண்கள் பல உயர்ந்த படிப்புகளை ஆண்களைவிட சிறப்பாக படிக்கிறார்கள். அப்படி இருக்க,
படித்துவிட்டு ஏன் சும்மா இருக்க வேண்டும். வேலைக்கு செல்வதால் அது எல்லோருக்குமே பெருமைதானே!
இப்படி எல்லாம் நான் எழுதிவிட்டு சும்மா இருந்திடலாம், ஆனால் மனதில் ஏதோ இடிக்கின்றது. பெண்கள்
வேலைக்கு போவதே சிறந்தது என்று என்னால் எழுத முடிகிறது. ஆனால் பெண்கள் வீட்டை (குடும்பத்தை மட்டும்) பராமரிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று எனது உள் மனம் சொல்கிறது.
இந்த உலகில் எந்த ஒரு கேள்விக்கும் இரண்டு பதில்கள் உண்டு. தீர்வு என்பது நாமாக, எல்லோரும் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையான் மக்கள் ஒன்று சேர்ந்து ஒத்து போவதே தீர்வாக இருக்கிறது.
ஆனால் உண்மை என்பது ஒரு மறைவான ஒன்று, அது நமக்கு முழுமையாக தெரியாத ஒன்று!
கடவுள் பற்றிய ஆராய்ச்சி போல்!
www.thanjai-meera.blogspot.com
எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.
கடவுள் பற்றிய ஆராய்ச்சி போல்!//
--
என்றும் அன்புடன்
தணிகை.ஜெ.
http://jthanigai1.blogspot.com/
நண்பர்களுக்கு சலாம் / வணக்கம்,
விடுப்பிலிருந்து திரும்பிய எனக்கு கிடைத்த நல்ல கேள்விகள். இப்படி அழகான கேள்விகளை உதிர்த்திருக்கும் சாந்திக்கும் மற்றும் அதனை தொடர்ந்து பதில் அளித்த / அளிக்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கு தெரிந்த சில கருத்துக்களை சொல்ல ஆசை படுகிறேன்.
இப்போது, வேலைக்கும் போய் வீட்டையும் பராமரித்து, அதிக உடல் மற்றும் மனச்சுமை. எல்லோருக்கும்
1. இது தேவையா?.
ஆம், இது தேவைதான். இன்றைய உலகில் பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. பெண்கள் வேலைக்கு போவது குடும்பத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.
ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்து இன்று பெரும்பான்மை மக்கள் ஏற்று வரும் நிலையில், இருவருக்கும் சரியான விழுக்காடு வேலை மற்றும் சம்பளம் அரசும் / தனியாரும் தர வேண்டும்.
3. பாதிப்புகள் என்னென்ன?
பெண்கள் வேலைக்கு போவதால் வீட்டில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் பெண்கள் வேலைக்கும் போய் விட்டு, வீட்டையும் பராமரிப்பதால் அவர்களுக்கே பாதிப்பு உண்டாகின்றது. ஓய்வில்லாமல் உழைக்கும் சூழ்நிலை. போக பொருளாக பார்க்கும் பிற ஆண்களின் பார்வையில் சிக்கி தவிக்கும் பெண்களும் உண்டு.
4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.
பொருளாதாரம் அதிகமாக கிடைப்பதால் எல்லோருக்குமே அது லாபம் தானே! தேவைகள் சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?
நாடு இன்னும் முன்னேறவே செய்யும், பாதிப்புகள் எப்படி வரும்? எல்லா பெண்களுகுமே வேலைக்கு
போகும் பட்சத்தில் நிறுவனங்கள், வேலைகள் பல உருவாகும்.
ஆதலால் அதற்கு ஆட்கள் இல்லாமல்
போகும்பட்சத்தில், வெளிநாடுகளின் உதவியை நாம் நாட வேண்டி இருக்கும்.
6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.
கண்டிபாக குறையும். பெண்கள் வீட்டில் இருந்தால்தானே பிரச்சினையே :-)
7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..
கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் பெண்கள் தங்களுக்கு கீழ் ஆண்களை வேலைக்கு அமர்த்துவதையே பெரிதும் விரும்புவர். அலுவலகத்திலாவது ஆண்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்து கொள்ளல்லாம்
என்ற எண்ணம் வருவது இயல்பே.
8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.
ஆம், இன்று பெண்கள் பல உயர்ந்த படிப்புகளை ஆண்களைவிட சிறப்பாக படிக்கிறார்கள். அப்படி இருக்க,
படித்துவிட்டு ஏன் சும்மா இருக்க வேண்டும். வேலைக்கு செல்வதால் அது எல்லோருக்குமே பெருமைதானே!
இப்படி எல்லாம் நான் எழுதிவிட்டு சும்மா இருந்திடலாம், ஆனால் மனதில் ஏதோ இடிக்கின்றது. பெண்கள்
வேலைக்கு போவதே சிறந்தது என்று என்னால் எழுத முடிகிறது. ஆனால் பெண்கள் வீட்டை (குடும்பத்தை மட்டும்) பராமரிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று எனது உள் மனம் சொல்கிறது.