December 18, 2011People’s Movement Against Nuclear Energy (PMANE)Idinthakarai & P. O. 627 104Tirunelveli DistrictTamil NaduPhone: 98656 83735Email: kooda...@yahoo.comThe Honorable Chief MinisterGovernment of Tamil NaduFort St. GeorgeChennai 600 009Fax: 044-Your Excellency Amma:Greetings! The People’s Movement Against Nuclear Energy (PMANE) and hundreds of thousands of Tamil people from the coastal and farming villages in the southern districts of Tamil Nadu and the concerned Tamil people from all over our state would like to thank you wholeheartedly for your very thoughtful statement of December 17, 2011. We thank you, Your Excellency, for standing up to defend the rights and interests of our Tamil people and our progeny. You have proved once again, Your Excellency, that you are truly a people’s leader and not an externally imposed CEO.The Prime Minister’s assertion that the first Koodankulam reactor will be operational “in a couple of weeks” simply betrays the fact the Tamil Nadu State Cabinet’s resolution to halt the work at the Koodankulam plants was never honored earnestly or implemented effectively. It is also very clear that the Central Government, the Department of Atomic Energy (DAE), the Nuclear Power Corporation of India Limited (NPCIL), and the Koodankulam Nuclear Power Project (KKNPP) authorities have all been working on the Koodankulam reactors secretly against the letter and spirit of the State Cabinet Resolution.If the first Koodankulam reactor has to go operational “in a couple of weeks,” the nuclear authorities must have loaded the fuel rods into the reactor. In that case, the nuclear authorities have breached all the Atomic Energy Regulatory Board (AERB) rules and the various international regulations that mandate compulsory mock drills and evacuation exercises among the local people before loading the fuel rods. Throwing all these Indian and international rules and norms to the air and compromising the safety and security of the Tamil people, the Central Government as well as its nuclear departments has indeed perpetrated a crime against its own people.Hundreds of thousands of Tamil people have been protesting against the KKNPP project for the past four months and the Prime Minister has shown his utter disregard for the protesting people and our democratic struggle. The way the Central Government has responded to the gruesome Tamil genocide in Sri Lanka, the Sri Lankan Navy’s killing of some 570 Tamil fishermen, Colombo’s illegal detention and torture of others, the 3-Tamils capital punishment issue, the Katcha Theevu issue, and the more recent requests of Your Excellency for financial and material help and for CISF security for the Mullaperiyar dam causes concern and worry in our minds that the Tamil people are being systematically discriminated against in India.The Prime Minister, who hardly said anything meaningful to the people of Tamil Nadu or India about the Koodankulam issue, has chosen to speak about it in Russia, one of his major business partners. Obviously, this attitude and approach to the issue gives rise to a suspicion if the Prime Minister is more interested in pleasing the rulers of Russia than the people of India, and in working for the welfare of multinational corporations and foreign countries rather than the wellbeing of Indian people.In this time of national leadership crisis, Your Excellency, you stand out as the most caring and creative leader of the land. Just as you implemented many wonderful plans and projects such as the “rain harvesting scheme” during your earlier tenure, you may please carry out all the innovative alternative energy plans that you had outlined as soon as you took over the mantle of power a few months back. Your visionary leadership along with your original and resourceful plans will be a path breaker not just for our State but for the whole country. If you give a call, we, all the Tamil people, are ready and willing to replace the ordinary round bulbs with CFL bulbs in all our homes and offices. Whatever steps you take to rectify the energy deficiency of our State, we are all ready to help you and your people-oriented government in every possible way we can. As you stand for us, we will stand for you and your government.May we request an opportunity to meet with you in the next couple of weeks in order to submit a copy of the report prepared by the PMANE’s expert team and to apprise you of the ground situation here in Koodankulam please.Thanking you once again, Your Excellency, for your caring and visionary leadership, we send you our best personal regards and all peaceful wishes.Cordially,S. P. Udayakumar, Ph.D.CoordinatorPeople’s Movement Against Nuclear EnergyCopies to:The District CollectorTirunelveli DistrictTirunelveliThe Superintendent of PoliceTirunelveli DistrictTirunelveli
உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.
நேற்று (5.11.2013) இரவு தனது முகநூல் பக்கத்தில் ம.க.இ.க. தோழர்களுக்கு “திறந்த கடிதம்” ஒன்றை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார்.
2011 முதல் இன்றுவரை நிகழ்ந்தவை என்று பல சம்பவங்களைக் குறிப்பிட்டு, அவை குறித்த அவரது விமரிசனங்களையும் அதில் எழுதியிருக்கிறார். இத்தனை நாட்களுக்குப் பின்னர், இப்படியொரு கடிதத்தை அவர் இப்போது எழுதுவதற்கு என்ன காரணம்? அதையும் அக்கடிதத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.”
என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் உதயகுமாரை இடிந்தகரையில் நேரில் சந்தித்திருக்கின்றனர். அக்டோபர் 12 ஆம் தேதி தூத்துக்குடியில் நடத்தவிருந்த பேரணி, பொதுக்கூட்டம் குறித்த துண்டறிக்கைகளைக் கொடுத்து, தாதுமணல் கொள்ளைக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தைப் பற்றியும் விளக்கியிருக்கின்றனர். இச்சந்திப்பு பற்றி உதயகுமாரும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அன்று தாது மணல் கொள்ளை எதிர்ப்பியக்கத்தை வரவேற்று வழக்குரைஞர்களிடம் உதயகுமார் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது கடிதத்தில் வேறு குரலில் பேசுகிறார். சென்ற மாதம் வரை அவரை பல சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்த தோழர்களிடம் பேசாத பல “பிரச்சினைகளை” இப்போது அவர் பட்டியலிட்டு அடுக்குகிறார்.
தாது மணல் கொள்ளை என்ற பிரச்சினை பற்றி அவரது நிலை என்ன? இதனை 16, அக், 2013 ஆனந்த விகடன் பேட்டியில் அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.
“தாதுமணல் கொள்ளையர்களின் அனுதாபிகள் எங்கள் ஊர்களில் இருக்கிறார்கள். அதைப் பேசினால், ஊர் மக்களிடையே பிளவு வரும்; சமுதாயப் பிரச்னைகள் எழும்… நாங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மட்டும்தான். அனைத்து தீய சக்திகளுக்கும் எதிரான மக்கள் இயக்கமல்ல ..”
என்று கூறி தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை தங்களால் எடுக்க இயலாத காரணத்தை விளக்கியிருக்கிறார்.
அவரால் எடுக்க இயலாத தாது மணல் பிரச்சினையை ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும் எடுப்பது குறித்து நியாயமாக அவர் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி, “கடலோர கிராமங்களில் வேலை செய்யாதீர்கள்” என்று ம.க.இ.க வுக்கு ஏன் அறிவுருத்துகிறார் என்று புரியவில்லை. தாது மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கடலோர மக்கள். போராட விரும்புகிறவர்களும் அவர்கள்தான்.
நாங்கள் கடலோர கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கனிம மணல் கொள்ளையர்கள் மட்டுமே என்று இதுகாறும் நாங்கள் எண்ணியிருந்தோம். உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.
அவரது கடிதத்தில் கூறியுள்ளவை அனைத்துக்கும் உடனே பதில் அளிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம் – நிதி தொடர்பான அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டைத் தவிர. தனது கடிதத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மீது உதயகுமார் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை தோழர் ராஜுவுக்குத் தெரிவித்தோம்.
அவர் இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், இதில் தொடர்புள்ள மற்றவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதன் நகலை இத்துடன் இணைத்திருக்கிறோம்.
இவண்,
காளியப்பன்,
மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
________________________
அனுப்புநர்:
ராஜு, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
கை பேசி: 94432 60164
பெறுநர்
ஊர் நலக்கமிட்டி, இடிந்தகரை
பங்குத்தந்தை, இடிந்தகரை
பங்குத்தந்தை சுசீலன், கூட்டப்புளி
சுந்தரலிங்கம், கூடங்குளம்
திரு.சுப.உதயகுமார்,ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை.
ஐயா,
வணக்கம்.
நேற்று (5.11.2013) திரு சுப.உதயகுமார், இணையத்தில் தனது முகநூல் பக்கத்தில் எங்களது வழக்குரைஞர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், பல தவறான தகவல்களை எழுதியிருக்கிறார். அதன் நகலை உங்களுக்கு இணைத்திருக்கிறேன். அதில் கண்டுள்ள எல்லா விசயங்களையும் உங்களிடம் எழுப்புவது என் நோக்கமல்ல. வழக்குகளுக்காக நாங்கள் பெற்ற தொகை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளவை உண்மைக்கு மாறானவை என்பதால், அவை குறித்து உங்கள் அனைவரின் கவனத்துக்கு கொண்டு வருவது அவசியம் என்று கருதுகிறேன்.
சங்கரன் கோயில் இடைத்தேர்தல்முடிந்த பின்னர், மார்ச் 19, 2012 அன்று ஜெயலலிதா அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. கூடங்குளத்தில் போராட்டக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உட்பட 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் வைக்கப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சாலை மறியல் செய்த பங்குத்தந்தை சுசீலன் உட்பட்ட கூட்டப்புளி மக்கள் 178 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டனர்.
இதனை ஒட்டி வள்ளியூர் நீதிமன்றம், நெல்லை நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களில் சிறையில் இருப்பவர்களைப் பிணையில் எடுப்பது தொடர்பான பணிகளை நாங்கள் செய்தோம். 12 வெளியூர் வழக்குரைஞர்கள் சுமார் 15 நாட்கள் இந்த வேலைகளைச் செய்ய வேண்டியிருந்த காரணத்தினால், போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட நடைமுறைச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு ஆயின. இவையன்றி நீதிமன்றச் செலவுகள். குறிப்பாக மக்கள் மீது தேசத்துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடப்பட்டிருந்ததாலும், அதனை அங்கீகரிக்கும் விதத்தில் நீதிமன்றம் நடந்து கொண்டதாலும், மூத்த வழக்குரைஞர் ஒருவரை அமர்த்த வேண்டியதாயிற்று. அவரை வெளியூரிலிருந்து அழைத்து வர வேண்டியிருந்த்தால் அதற்கு குறிப்பிட்ட அளவு செலவிட வேண்டியதாயிற்று. அந்தச் செலவுகள் குறித்த உள்விவரங்கள் அனைத்தும் நாங்கள் உங்களிடம் கொடுத்துள்ள கணக்கில் உள்ளன.
இச்செலவுகளுக்காக கூட்டப்புளி பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் முக்கியஸ்தர்கள் வழியாக பல தவணைகளில் மொத்தம் ரூ. 65,000, மற்றும் கூடங்குளத்தில் கைதானோருக்காக அந்த ஊர் முன்னணியாளரிடமிருந்து ரூ.5000 ஆக மொத்தம் ரூ.70,000 பெற்றிருந்தோம். அதற்கான செலவு கணக்கை, உதயகுமாரிடமும், கூட்டப்புளி பங்குத்தந்தையிடமும், கூடங்குளம் சுந்தரலிங்கத்திடமும் ஆளுக்கொரு நகல் கொடுத்து விட்டோம்.
இதன் பின்னர் கூடங்குளம் மக்கள் மீது போடப்பட்ட ராஜத்துரோக வழக்குகளுக்கு எதிராக நாங்கள் நெல்லையில் நடத்திய கருத்தரங்கினை ஒட்டி ஏப்ரல், 21, 2012 அன்று இடிந்தகரை சென்றிருந்தபோது எமது வழக்குரைஞர்கள் சுமார் 50 பேரை மேடையில் அமரச் செய்து, “நமக்காக ஒருகாசு கூட கட்டணம் வாங்காமல் பணியாற்றிய வழக்குரைஞர்களுக்கு நன்றி கூறுவதாக” உதயகுமாரும் புஷ்பராயனும் மக்கள் மத்தியில் அறிவித்தனர்.
பின்னர் செப்டம்பர், 2012 இல் நடைபெற்ற கடலோர முற்றுகை, போலீசு தாக்குதல், கடலில் மனிதச் சங்கிலி, சகாயம் மரணம் ஆகியவை தொடர்பான பணிகளில் நாங்கள் உங்களோடு இணைந்து ஈடுபட்டோம். இவற்றைத் தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்குகள் எதையும் போராட்டக்குழு எங்களிடம் ஒப்படைக்கவில்லை.
“பிணையெடுப்பதில் காலதாமதமாகிறது” என்று கருதிய மக்கள் சிலர், “நீங்கள் வழக்கை நடத்துங்கள்” என்று எங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் கேட்டனர். “உதயகுமார் யாரிடம் வழக்கை ஒப்படைத்திருக்கிறாரோ அவர்கள்தான் செய்ய முடியும். எங்களிடம் வழக்கு தரப்படவில்லை” என்று அவ்வாறு கேட்டவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம். வழக்குகளை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்களிடமும் வேறு சிலரிடமும் உதயகுமார் ஒப்படைத்திருப்பதாக பின்னர் கேள்விப்பட்டோம்.
இதற்குப் பின்னர் திடீரென்று ஒரு புது வதந்தி பரப்பப் பட்டது. “உங்களுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேல் போராட்டக் கமிட்டி பணம் கொடுத்திருக்கிறதாமே” என்று வள்ளியூர், நெல்லை, நாகர்கோயில் நீதிமன்றங்களில் சில வழக்குரைஞர்கள் எங்கள் வழக்குரைஞர்களிடம் போகிற போக்கில் குறிப்பிட்டனர். யார் சொன்னார்கள், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் இல்லாமல், ஒரு கிசு கிசு செய்தி போல இது பரப்பப் பட்டது. எனவே இதனை மறுத்து, “நாங்கள் கட்டணம் வாங்காமல்தான் பணியாற்றினோம்” என்பதைக் கூறவேண்டியது அவசியமாயிற்று.
இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக கூட்டப்புளி, இடிந்தகரை ஊர்க்கமிட்டியைச் சேர்ந்தவர்களிடமும் கூடங்குளம் முன்னணியாளர்களிடமும் நாங்கள் அப்போதே சொல்லியிருக்கிறோம். “இப்படி கிளப்பி விடுவது யார்” என்று தாங்கள் உதயகுமாரிடமே கேட்டதாகவும், தான் அவ்வாறு கூறவில்லை என்று உதயகுமார் மறுத்ததாகவும் அவர்கள் எங்களுக்கு தெளிவு படுத்தினர். இந்த பொய்ப்பிரச்சாரம் பற்றி நாங்கள் முறையிட்டது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
இப்பிரச்சினையை அரைகுறையாக விடக்கூடாது என்பதால், மே, 9 2013 அன்று இடிந்தகரையில் நேரடியாக உதயகுமாரிடமே நாங்கள் இது பற்றி கேட்டடோம். நாங்கள் வாங்கிய பணம், அதற்கான கணக்கு ஆகியவற்றின் நகலை மீண்டும் ஒருமுறை அவர் கையில் கொடுத்தோம். “இரண்டு இலட்சம் வாங்கியதாகவெல்லாம் யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி யாராவது சொன்னால், என்னிடம் அனுப்புங்கள். நான் விளக்குகிறேன்” என்று அவர் எங்களுக்குப் பதிலளித்தார்.
இப்போது தனது கடிதத்தில், மொத்தம் ரூ.1,95,000 கொடுத்தது போலவும் அதில் 1.25 லட்சம் ரூபாய் இடிந்தகரை மக்கள் எங்களுக்கு கொடுத்ததாகவும் உதயகுமார் எழுதியிருக்கிறார். மார்ச் 2012 நடைபெற்ற கைது தொடர்பான வழக்குகளைத்தான் நாங்கள் கையாண்டோம். அவை கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள். அதற்கான பணத்தைக் கொடுத்த அவர்களிடம் கணக்கும் கொடுத்துவிட்டோம்.
இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகள்- கைது என்பது கடலோர அணுஉலை முற்றுகைப் போராட்டத்துக்குப் பின்னர்தான். இந்த வழக்குகள் எதுவும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டோம். இடிந்தகரை மக்களிடமிருந்து 1.25 இலட்சம் நாங்கள் வாங்கியதாக உதயகுமார் கூறுகிறார். ஒருபைசா கூட நாங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை.
இடிந்தகரை, கூடங்குளம், கூட்டப்புளி மக்கள் அனைவரும் இந்தக் கணம் வரை எங்களுடன் நேசமாகத்தான் பழகுகிறார்கள். யாரும் இப்படி ஒரு கேள்வியை எங்களிடம் கேட்டதில்லை. அவ்வாறு இருக்கும்போது எங்களுக்கு எதிராக இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வேறு ஏதாவது ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அல்லது எங்கள் பெயரைச் சொல்லி 1.25 இலட்சம் ரூபாயை யாரோ கையாடல் செய்திருக்க வேண்டும்.
இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் அது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
எங்கள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளைப் போடும் மிக மோசமான போலீசு அதிகாரிகளுக்குக் கூட, இப்படி ஒரு பொய்க்குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்த மனம் வந்ததில்லை. வெளிநாட்டுப் பணம் வருவதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, கண் கலங்கி குமுறியவர் உதயகுமார். அந்த வலி மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.
எந்த இடிந்தகரை மக்களிடமிருந்து எங்களுக்கு 1.25 இலட்சம் பணம் கொடுக்கப்பட்டதாக உதயகுமார் கூறுகிறாரோ, அந்த இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், கூட்டப்புளி பங்குத்தந்தை மற்றும் ஊர்க்கமிட்டியினருக்கும், கூடங்குளம் முன்னணியாளர்களுக்கும் என்னுடைய இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.
இடிந்தகரை மக்கள் முன்னால் உதயகுமார் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு பகிரங்க விசாரணை நடத்தப்படவேண்டும். அதில் கூட்டப்புளி, கூடங்குளம் முன்னணியாளர்களும், போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும். இந்த வழக்குகளைக் கையாண்ட எமது வழக்குரைஞர்கள் அனைவரும் இடிந்தகரைக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறோம்.
தேதியை இடிந்தகரை ஊர்க்கமிட்டி தெரிவிக்கட்டும்.
நன்றி.
இப்போது தனது கடிதத்தில், மொத்தம் ரூ.1,95,000 கொடுத்தது போலவும் அதில் 1.25 லட்சம் ரூபாய் இடிந்தகரை மக்கள் எங்களுக்கு கொடுத்ததாகவும் உதயகுமார் எழுதியிருக்கிறார். மார்ச் 2012 நடைபெற்ற கைது தொடர்பான வழக்குகளைத்தான் நாங்கள் கையாண்டோம். அவை கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள். அதற்கான பணத்தைக் கொடுத்த அவர்களிடம் கணக்கும் கொடுத்துவிட்டோம்.
கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் தாங்களாக நேரிடையா மகஇக வினரிடம் பணம்
கொடுத்திருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது.ஏனெனில் அதற்க்கான கணக்கு
அந்த மக்களிடம் நேரிடையாக கொடுக்க பட்டு விட்டதாக சொல்ல பட்டுள்ளது.
இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகள்- கைது என்பது கடலோர அணுஉலை முற்றுகைப் போராட்டத்துக்குப் பின்னர்தான். இந்த வழக்குகள் எதுவும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டோம். இடிந்தகரை மக்களிடமிருந்து 1.25 இலட்சம் நாங்கள் வாங்கியதாக உதயகுமார் கூறுகிறார். ஒருபைசா கூட நாங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை.
சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்
in இதர கட்சிகள், தன்னார்வ நிறுவனங்கள், போராட்டத்தில் நாங்கள் by வினவு, November 6, 2013
உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.
நேற்று (5.11.2013) இரவு தனது முகநூல் பக்கத்தில் ம.க.இ.க. தோழர்களுக்கு “திறந்த கடிதம்” ஒன்றை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார்.
இது புதுவையில் நூறு சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டதுது. விண்ணப்பம் கொடுத்து ₹5 கட்டணம் செலுத்தினால் பெரும்பான்மையான இடங்களில் உடனே பிறப்பு ,இறப்பு சான்றிதழ் கொடுத்து விடுவார்கள். சில இடங்களில் அதிகபட்சமாக இரண்டு நாள் ஆகலாம்.
தவிர இப்போது அங்கீகரிக்கப்பட்ட சேவை மைய ங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் அதில் நாம் விரும்பிய நேரத்தில் இவை பெற்றுக்கொள்ளும் வசதி வெகு விரைவில் வரவிருக்கிறது.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
போராட்டக் களத்தில், முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்பது அவருக்கு தெரியாதா ?
Udayakumaran Predicts Your Future
[1] Deciding Your Future
உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்க
http://youtu.be/UbFjK0ybGi8
எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் நமக்கு இயற்கையாகவே அதிகம். ஜாதகம், ஜோதிடம், கைரேகை, எண் கணிதம், குறி கேட்டல் என பல வழிகளில் வருங்காலம் பற்றி தெரிந்துகொள்ள முயல்கிறோம். முதல் முறையாக வாக்களிப்பவர்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள் போன்றோர் உங்கள் எதிர்காலத்தை நீங்களே அமைத்துக்கொள்ளும் ஓர் உன்னதமான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.
[2] The East-West / North-South Divide
கிழக்கு-மேற்கு / வடக்கு-தெற்கு பிரிவு
http://youtu.be/opIDRqCzXC0
பொதுவுடமை கிழக்கு – முதலாளிய மேற்கு என்று பிரிந்துகிடந்த நமது உலகம், இன்று பணக்கார வடக்கு – பாவப்பட்ட தெற்கு என்று பிளவுபட்டிருக்கிறது. இந்த அமைப்புத்தான் நமது நாட்டின் இன்றைய அரசியல் பின்புலத்தை அமைத்துத் தருகிறது.
[3] The Square of Swaraj
தன்னாட்சி சதுரம்
http://youtu.be/CBczTFfLwaI
ஒரு நாட்டை உருவாக்கி வழிநடத்த மக்கள், அரசு, பொருள், சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் எனும் நான்கு தேவைகள் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து நமக்கென ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் அரசியல்.
கன்னியாகுமரி தொகுதி வாக்காளர் தோழர்களே!
உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை நீங்கள் தேர்வு செய்தால், நீண்ட நெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் நமது மாவட்டத்தில் சமச்சீரான வளர்ச்சிக்கு கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
[1] பொதுமக்கள் நலம்:
• சாதி, மத நல்லிணக்கத்தைப் போற்றுவேன்.
• ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவேன். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரபுசாரா இயற்கை மின்பூங்காக்கள் அம...ைத்து மக்களின் மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவேன்.
• தனியார் மற்றும் அரசு தாது மணற்கொள்ளையைத் தடுப்பேன்.
• கல் குவாரிகளை மூடுவதோடு, நில வணிக மாஃபியாக்களை எதிர்ப்பேன்.
• மலைகளை, மரங்களை அழித்து பெரியக் கட்டிடங்களை நிறுவி அமைக்கப்படும் தனியார் நிறுவனங்களைத் தடுத்து இயற்கை வளம் காப்பேன்.
• லஞ்ச ஊழலை ஒழிக்க என்னாலியன்ற அனைத்தும் செய்வேன்.
• பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், குமரி மாவட்டத்து மலையாள மக்கள் போன்றோருக்கு சமூக நீதி கிடைத்திட உழைப்பேன். நாஞ்சில்நாடு வெள்ளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உதவுவேன்.
• அக்கம்பக்கம் குழுக்கள் அமைத்து மக்களுக்கு தன்னாட்சி கிடைக்கப் பாடுபடுவேன்.
• ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களின் முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன்.
[2] போக்குவரத்து:
• மாவட்டமெங்கும் சாலைகளைச் சீராக்கி, பாதுகாப்பான நடைபாதைகள் அமைத்து, பாதசாரிகளின், வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்.
• பொதுப் பேருந்துகளின் தரத்தை, பாதுகாப்பை மேம்படுத்துவேன்.
• மோசமான நிலையில் இருக்கும் சுசீந்திரம் பாலத்திற்கு பதிலாக மாற்றுப் பாலம் அமைப்பேன்.
• கன்னியாகுமரி-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலை விரிவாக்கத்துக்கு உதவுவேன்.
• கன்னியாகுமரி பகுதியில் சிறு விமான தளம் அமைப்பேன்.
• குமரி ரயில்வேயை மதுரை டிவிஷன் கீழ் கொண்டுவந்து, இருவழி ரயில் பாதை அமைப்பேன்.
• கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை கடல் வழியாக நீர்வழிப் போக்குவரத்துக்கு ஆவன செய்வேன்.
• காலையிலும், மாலையிலும் பள்ளி மாணவருக்கென சிறப்புப் பேருந்துகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயக்க ஆவன செய்வேன்.
[3] பொதுச் சுகாதாரம், உடல் நலம்:
• மாவட்டமெங்கும் இலவசக் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவேன்.
• ஒலி மாசை முற்றிலுமாகத் தடை செய்வேன்.
• நெகிழிப் பைகள், நெகிழிப் பொருட்களை ஒழிப்பேன்.
• குப்பைகள் சேகரித்தல், திடக்கழிவு மேலாண்மைக்கான ஏற்பாடுகள் செய்வேன்.
• தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, ரசாயனங்களைப் பிரித்தெடுத்து, வினியோக அமைப்புகளை திருத்தியமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்பேன். ஏழைகளுக்கு பஞ்சாயத்து அலுவலகங்களில் குடிநீர் வழங்கிட ஆவன செய்வேன்.
• காற்றை மாசுபடுத்தும் ஆலைகள், தொழிற்சாலைகள் தொடங்குவதைத் தடை செய்வேன்.
• ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவமனைகளை தரமுயர்த்தி, உயர்தர மருத்துவ சிகிச்சைகள் ஏழை எளியோருக்கும் கிடைக்க ஆவன செய்வேன்.
• மாவட்டத்தின் மையப் பகுதியில் உயர்தர புற்றுநோய் மருத்துவமனை அமைப்பேன்.
[4] கல்வி, வேலை வாய்ப்பு:
• மார்ஷல் நேசமணி பெயரில் குழித்துறைப் பகுதியில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பேன்.
• திருமதி. லூர்தம்மாள் சைமன் பெயரில் மணக்குடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.
• திரு. எஸ். துரைசாமி பெயரில் கொட்டில்பாடு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பேன்.
• தோழர் ஜீவா பெயரில் பூதப்பாண்டி பகுதியில் விவசாயம், தென்னை, வாழை, ரப்பர், தோட்டக்கலை, வனவளம் போன்ற ஆராய்ச்சிப் பிரிவுகளைக் கொண்ட ஒரு விவசாயக் கல்லூரி தொடங்குவேன்.
• திரு. தாணுலிங்கனார் பெயரில் மருந்துவாழ் மலைப் பகுதியில் மருத்துவ மூலிகைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன். அழிந்து வரும் மூலிகைகளைக் காத்து, பாரம்பரியமிக்க நமது சித்த வைத்தியத்திற்கு புத்துயிரூட்டி, இயற்கை வைத்தியத்தைப் பாதுகாப்பேன்.
• தியாகி சிதம்பரநாதன் பெயரில் நீண்டகரைப் பகுதியில் சட்டக் கல்லூரி அமைக்க ஆவன செய்வேன்.
• கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் & திருமதி மதுரம் பெயரில் இசைக் கல்லூரி ஒன்றை நிறுவவும் முற்சிப்பேன்.
• சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பெயரில் மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் பயன்படும் உயர்தர நவீன ஆய்வு நூலகம் ஒன்றை அழகியமண்டபம் பகுதியில் அமைப்பேன்.
• சிறுபான்மையினர் பயன்பெறும் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் IAS, IPS பயிற்சி மையம் அமைப்பேன்.
• ஐ.டி. தொழிற்நுட்பப் பூங்கா தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.
• காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக நடக்கும் ஆரல்வாய்மொழி பகுதியில், மாற்று வழி மின்சாரம் தொடர்பான தொழிற்பேட்டை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.
[5] மீனவர் நலம்:
• கடல் மீதும் கடற்கரை மீதுமுள்ள மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளைக் காப்பேன்.
• ஆபத்துக்குள்ளாகும் மீனவருக்கு உடனடியாக உதவ கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிகாப்டர் தளமும், விசைப்படகுத் தளமும் அமைப்பேன்.
• கடலுணவுத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்வேன்.
• ஆங்காங்கே மீன் பதப்படுத்தும், பாதுகாக்கும் நிலையங்கள் அமைப்பேன்.
• குளச்சல் மீன்பிடித் துறைமுகம் வேகமாக அமைக்க உதவுவேன்.
• கல்வி, வேலை வாய்ப்பில் மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவேன்.
• மீன் வளத்துறை வேலைகளில் மீனவர்களுக்கே முன்னுரிமை என்று வலியுறுத்துவேன்.
• உறுதியற்ற வீடுகளை அகற்றிவிட்டு உறுதியான வீடுகளும், குடியிருப்புகளும் கட்டித் தருவேன்.
• குமரி மீனவர்களிடம் கேரள அரசு ஆண்டுதோறும் வசூலிக்கும் ரூ. 60,000 சேமநிதியை நீக்கக் கோருவேன்.
[6] விவசாயிகள் நலம்:
• விவசாயத்தைக் காத்து உணவு உற்பத்தியைப் பெருக்குவேன்.
• விவசாயிகளின் விளை பொருட்களை நகரின் மையப்பகுதிகளில் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்வேன்.
• விளை நிலங்களை வீட்டு நிலங்களாக, தொழிற்பேட்டைகளாக மாற்றுவதைத் தடுப்பேன்.
• தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பட்டா விளைநிலங்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் தனியார் காடுகள் என்று வகைப்படுத்துவதை ரத்து செய்வேன்.
• 2006 வன உரிமைச் சட்டம் காணி மக்கள் போன்ற ஆதிவாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கும் நில உரிமைகளை மீட்டுத் தருவேன்.
• கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயப் பகுதிகளையும் பட்டா நிலங்களையும் பாதுகாப்பேன். விவசாய நிலங்கள் விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதைத் தடுப்பேன்.
• ஆகாயத் தாமரைகளை அகற்றி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவேன்.
• மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆழப்படுத்துவேன்.
• முடங்கிக் கிடக்கும் நெய்யாறு இடதுகரை கால்வாய்க்குப் பதிலாக சிற்றாறு-II நீர்த்தேக்கத்திலிருந்து புதிய கால்வாய் அமைப்பேன்.
• திருப்பதிசாரம் விவசாய விரிவாக்க மையத்தை பாரம்பரிய விதைகளைக் காக்கும், இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையமாக மாற்றுவேன். மரபணு மாற்ற விதைகளைக் கடுமையாக எதிர்ப்பேன்.
• தேன் உற்பத்தி செய்யும் தொழிலை உயர்த்தும் விதமாக, மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி நிலையம் அமைப்பேன்.
• ரப்பர் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை களியல் பகுதியில் அமைத்து, ரப்பருக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, ரப்பர் விவசாயிகளைக் காப்பேன்.
• தோவாளையில் மலர் ஏற்றுமதி மையம் அமைப்பேன்.
[7] வர்த்தகர், தொழிலாளர், பெண்கள் நலம்:
• சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தடுப்பேன்.
• கட்டிடத் தொழிலாளர்கள் நலம் பேணும் வாரியம் மற்றும் அவர்களுக்கானப் பள்ளிகள் அமைக்க ஆவன செய்வேன்.
• வெளிநாடுகளில் வேலை செய்யும் குமரி மாவட்டத்தவர் வசதிக்காக பாஸ்போட் மையம், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் அரசு நிறுவனத்தின் பிரிவு, அவர்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் நாகர்கோவிலில் அமைப்பேன்.
• அமைப்புசாரா தொழிலாளர் நலம் பேண வழிவகை செய்வேன்.
• பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்க ஆவன செய்வேன்.
• சுய உதவி குழுக்களிலுள்ள பெண்களுக்கு சிறு தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கொள்முதல் நிலையங்கள், விற்பனை மையங்கள் அமைக்க உதவுவேன்.
• கிராமப்புறப் பெண்களுக்கு கணினிப் பயிற்சி வழங்க ஆவன செய்வேன்.
• மாற்றுத்திறனாளிகளின் சமூக-பொருளாதார, அரசியல் விடுதலைக்கானப் போராட்டத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து உதவுவேன்.
[8] சுற்றுலா மேம்பாடு:
• சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, மக்களுக்கான வசதிகளைப் பெருக்கி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரித்து, சுற்றுலாச் சேவையை விருத்தி செய்வேன்.
• கன்னியாகுமரி, சொத்தவிளை, திற்பரப்பு போன்ற சுற்றுலாத் தலங்களில் தேர்ச்சி பெற்ற உயிர்காப்போர் (Life Guards) நியமிப்பேன்.
• கொட்டாரம் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் அமைப்பேன்.
• குளச்சல் போர் வெற்றித்தூணை இந்திய அரசு வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன்.
என்னைத் தொடர்பு கொள்ள:
சுப. உதயகுமார், 42/27 இசங்கன்விளை மணி வீதி, பறக்கை ரோடு சந்திப்பு, கோட்டார், நாகர்கோவில் 629 002, கன்னியாகுமரி மாவட்டம்; Email: spuday...@gmail.com; skype: spudayakumar; Facebook: spudayakumaran; Twitter: spudayakumar.
//கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவேன்//
ஒரு எம்.பி யால் அணு உலையை மூட முடியுமா? அதற்குறிய அதிகாரம் அந்த பதவிக்கு இருக்கிறதா?
மாங்கா மக்கள் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து கெஜ்ரிவால் பிரதமராக ஆனால் ஒரு வேளை நடக்கலாம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருந்தவரை சமூகச்சூழல் அதில் ஈடுபட வைத்து விட்டது – உதயகுமார் மனைவி !!
Mar. 19 இந்தியச் செய்திகள் no comments
நாகர்கோவில், கோட்டார், இசங்கன்விளையைச் சேர்ந்தவர் உதயகுமார்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலம் ஆனவர். இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் பல மாதங்களாக தங்கியிருந்து போராடி வருகிறார்.
சமீபத்தில் இப்போராட்டக் குழுவினர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். இவர்களில் உதயகுமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட புஷ்பராயன் தூத்துக்குடியிலும், மைபா ஜேசுராஜ் நெல்லை தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களில் உதயகுமாரின் மனைவி மீரா நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:–
எனது கணவர் உதயகுமார் அரசியல் அறிவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு வெளி நாடுகளில் வேலை பார்த்து உள்ளார். அவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது. கணவரின் தந்தை பரமார்த்தலிங்கம் தி.மு.க.வின் நீண்டகால உறுப்பினர்.
எனவே நான் உதயகுமாரை திருமணம் செய்யும் முன்பு அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என வாக்குறுதி கேட்டேன். அவரும் எனக்கு அந்த உறுதிமொழியை தந்ததால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
இருந்தாலும் உதயகுமாருக்கு மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் ஆர்வம் இருக்கும். அதன் காரணமாகவே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்காக குடும்பத்தை மறந்து அங்கேயே தங்கவும் செய்தார். பல மாதங்கள் நடந்த இந்த போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து பார்த்திருக்கிறோம். ஆனால் எனது கணவர் மீது இந்த நாடு பல முனைகளிலும் நெருக்கடி கொடுத்து போரிட்டது. அதை முழு மூச்சாக அவர், எதிர்த்து நின்றார்.
இருந்தும் கோரிக்கைகளை வென்று எடுக்க இயலாத நிலையே காணப்பட்டது. அப்போதுதான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி புரட்சியில் ஈடுபட்டு அரசியலில் குதித்து ஆட்சியிலும் கால் பதித்தது.
அவர்களின் முயற்சியும் வேகமும் அந்த கட்சியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.
கூடங்குளம் போராட்டத்தை வென்றெடுக்க அரசியல் களம் தேவை என்பதாலும் சூழ்நிலை நெருக்கடியாலும் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் நிலை ஏற்பட்டது. இப்போது தேர்தலிலும் ஈடுபடும் நிலை உருவாகி விட்டது. இந்த அரசியல் களத்திலும் என் கணவர் வெற்றி பெறுவார். எந்த நெருக்கடிகளையும் சந்தித்து சாதித்து காட்டுவார் என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருகிற 29–ந்தேதி உதயகுமார் நாகர்கோவிலில் வேட்பு மனுதாக்கல் செய்வார் என தெரிகிறது. அன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் இவர்களில் யாராவது ஒருவர் நாகர்கோவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதயகுமார் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவர், நாகர்கோவிலுக்கு மனு தாக்கல் செய்ய வரும்போது கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பார்லிமெண்டில் தென்னிந்திய குரலை ஒலிக்கலாம்.
கவன ஈர்ப்பைக் கொண்டு வருவார் என்பதில் சந்தேகம் ஏதுமில்லைதனது போராட்டத்தை இன்னும் தீவிரமாக முன்னெடுப்பார் என்பதிலும்ஐயமில்லைஆனால் அணு உலையை மூடுவேன் என்று வாக்குறுதி அளித்திருப்பதுதான்சுசாமி மாதிரி இருக்குன்னு சொல்ல வந்தேன்
எனது தேர்தல் வாக்குறுதிகள்
எனது தேர்தல் வாக்குறுதி துண்டறிக்கையைப் படித்தவர்கள் சிலர் இவையெல்லாம் சாத்தியமா, நிதி ஆதாரத்துக்கு என்ன செய்வீர்கள், ஐந்து வருடங்களில் இவற்றையெல்லாம் எப்படி செய்து முடிப்பீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அவர்களில் பலர் பா.ஜ.க.வினர் என்பதும், அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
எனது பதில் இதோ:
[1] "மனமுண்டானால் மார்க்கமுண்டு" என...்று நினைக்கிறவன் நான்.
[2] அனைத்துத் திட்டங்களையும் நானே இழுத்துப்போட்டுச் செய்வதென்றால் நிச்சயம் நடக்காது. எனவே ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் கொண்ட ஒரு செயல்திட்டக் குழு (Task Force) உருவாக்குவேன். அந்த குறிப்பிட்டத் திட்டத்துக்கான முழுப் பொறுப்பை அவர்களிடம் கொடுத்து, அவ்வப்போது எனக்கு முன்னேற்ற அறிக்கை (Progress Report) தரச் சொல்வேன். எனது தலையீடு, உதவி தேவை என்றால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்வேன். இந்த கூட்டுமுயற்சி நிச்சயம் பலிக்கும்.
[3] மக்கள் எனக்குத் தரும் அதிகாரத்தை பயன்படுத்தி அரசிடம் உரிய அனுமதிகள், உதவிகள் வாங்குவேன்.
[4] நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை (நமது அம்மாக்களும், மனைவியரும் குடும்ப பட்ஜெட் போட்டு, திட்டமிட்டு கவனமாக செலவு செய்வது போல) பத்து பேர் குழுவின் உதவியோடு நேர்த்தியாக பயன்படுத்துவேன்.
[5] அரசின் பணத்தை, உதவிகளை மட்டும் நம்பிக்கொண்டிராமல், பொதுமக்கள் பங்களிப்பையும் கேட்டுப் பெறுவேன். தேவைப்பட்டால், மக்களோடு மக்களாக ரோட்டில் இறங்கி பிச்சை எடுப்பதற்கும் தயாராகயிருப்பேன்.
[6] வெளிநாடுகளில் வேலை பார்க்கும் குமரி மாவட்டத் தோழர்களின் உதவிகளையும், நேர்மையான தனியார் நிறுவனங்களின் உதவிகளையும் கேட்டுப் பெறுவேன். தங்கள் பணம் திருடப்படாமல் மக்களுக்கு, இளைய தலைமுறைக்கு, எதிர்கால சந்ததிகளுக்கு பயன்படுகிறது என்பது தெரிந்தால், உதவிகள் செய்வதற்கு பலரும் அணியமாகவே இருக்கிறார்கள்.
[7] செயல்திட்டக் குழுவும், நானும் திருட்டும், ஊழலும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். இயலும்போதேல்லாம் நானே நேரில் சென்று மேலாண்மை செய்வேன்.
[8] எனது உடலுழைப்பு, நேரம், சக்தி, அதிகாரம் அனைத்தையும் மற்றும் என்னாலியன்ற சிறிய அளவு பணத்தையும் எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உண்மையாக, உறுதியாக பயன்படுத்துவேன்.
சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மார்ச் 25, 2014See More
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் குமரி மாவட்டத் தோழர்களின் உதவிகளையும், நேர்மையான தனியார் நிறுவனங்களின் உதவிகளையும் கேட்டுப் பெறுவேன்.
APRIL 8, 2014 BY SAVUKKU 8 COMMENTS
ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடிந்தகரையை விட்டு வெளியே வந்துள்ளார் உதயக்குமார். சென்னைக்கு வந்திருந்த அவரை சவுக்கு சார்பாக எடுத்த நேர்காணல்.
அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருந்த அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டிய கட்டாயம் என்ன? வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான உத்தியா ?
அணு உலைக்கு எதிரான போராட்டத்தைத் நாங்கள் தொடங்கும்போது எந்தக் காரணம் கொண்டும் அரசியலுக்கு வரமாட்டோம் என்று உறுதி அளித்து இருந்தோம். போராட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றது. அப்போது தேசியக் கட்சிகள், மற்ற மாநிலங்களில் செயல்படும் கட்சிகள் என ஏறத்தாழ இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி, தேசிய அணுசக்திக் கொள்கை நாடு முழுவதும் விவாதிக்கப்பட வேண்டும். வெளிப்படைத் தன்மை வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், எந்தக் கட்சியிடம் இருந்தும் எங்களுக்கு பதில் வரவில்லை. கடிதம் கிடைத்தது என்று கூட எங்களுக்குப் பதில் வரவில்லை.
தமிழகத்தில் எங்களை ஆதரித்த விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் மீது நாங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தோம். அணு உலை விவகாரத்தில் அவர்கள் ஒரு போதும் எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார்கள் என்று நம்பினோம். ஆனால், தேர்தல் நெருங்கியதும் எங்களை விட்டுவிட்டு, எங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளோடு அவர்கள் உடன்பாடு செய்து கொண்டார்கள். நாங்கள் தனித்துவிடப்பட்டோம்.
ஒரே இடத்தில் முடக்கப்பட்டோம். போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தி, கைதாகி சிறைக்குப் போகலாம்.
ஆனால், அதனால் என்ன நேர்ந்துவிடும் ? இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைந்து போராட்டப் பந்தலை பிரித்துப் போட்டுவிட்டு போய்விடும். இதுநாள் வரை எங்கள் மக்கள் போராடிய போராட்டம், செய்த தியாகம், எதுவும் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடும். இதைப் பற்றி எங்கள் மக்களோடு நாங்கள் விவாதித்து, இந்தப் போராட்டத்தை அரசியல் தளத்திற்கு கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
அந்த நேரத்தில்தான், டிசம்பர் 28 அரவிந்த கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அதற்கு மறுநாள் பிரஷாந்த் பூஷன் அவராகவே எங்களை வந்து சந்தித்து அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு பற்றி எங்கள் மக்களிடம் விவாதித்தோம். ஐந்து நிபந்தனைகள் விதிப்பது என்று முடிவு செய்தோம். அவற்றை ஏற்றுக் கொள்வதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பினார்கள். அந்தப் பதிலையும் எங்கள் மக்கள் முன்னால் வைத்து விவாதித்தோம். அதன்பிறகு, அதில் அறுதிப்பெரும்பான்மை மக்களின் முடிவின்படி நாங்கள் எளிய மக்கள் கட்சியில் இணைந்தோம்.
அந்த முடிவுதான் இன்றுவரை எங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அந்த முடிவை எடுத்திருக்காவிட்டால், என்றோ நாங்கள் நீர்த்துப் போய் இருப்போம். நீங்கள் எல்லாம் எங்களை முழுக்க மறந்திருப்பீர்கள். இந்த முடிவால் எங்கள் மக்களுக்கு கிளைப் பயன்களும் கிடைத்துள்ளன. போராடிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு போராட்டக் களத்தில் இருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது.
எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளுக்குப் பயந்து கொண்டு, நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று விமர்சிப்பவர்கள் ஒன்றை உணர வேண்டும். எங்கள் கொள்கைக்கு நேர் முரணாக நிற்கக்கூடிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் கால்களில் போய் நாங்கள் விழுந்துவிடவில்லை. நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல், இயங்கிக் கொண்டு இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு மாற்றாக செயல்படக்கூடிய ஒரு கட்சியில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். இதில் எந்தத் தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இதற்காக நிறைய பணம் கைமாறியதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?
அணு உலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது எங்களுக்கு எத்தனை கோடிகள் விலை வைக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியாது. நான் விரும்பும் நாட்டில் சகல வசதிகளுடன் குடும்பத்தோடு குடியேற்றுவதற்கு எனக்கு தூது அனுப்பப்பட்டது. அதற்கு இணங்காத நாங்களா பணத்திற்கு இப்போது இணங்கிவிடப்போகிறோம். ஆம் ஆத்மி கட்சி இதுவரை எங்களுக்கு பணம் எதுவும்
கொடுக்கவில்லை. இனிமேல் கொடுப்போம் என்றும் சொல்லவில்லை. நாங்களும் பணம் பற்றி எதுவும் கேட்கவும் இல்லை.
கூடங்குளம் அணு உலைப் போராட்டம் குறித்து பற்றி ஆம் ஆத்மியின் நிலைப்பாடு . அவர்கள் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா ?
நாங்கள் விதித்த 5 நிபந்தனைகளில் இந்தக் கேள்வியைத்தான் முதல் நிபந்தனையாக வைத்திருந்தோம். அதற்கு எழுத்துப்பூர்வமாக அவர்கள் அளித்த பதில், “உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் சம்மதமும் இல்லாமல் அணுசக்தி திட்டம் உள்பட எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கமும்” என்பது. எங்களுடைய போராட்டத்தை முழுமையாக அங்கீகரிப்பதாக உறுதியளித்தார்கள். எங்களுக்கும் அதில் திருப்தி. ஏனென்றால், நாங்கள் கூடங்குளம் அணு உலையை மட்டும் எதிர்க்கவில்லை. கல்பாக்கம் அனல் மின்நிலையம், தேனி தேவாரம் நியூட்ரினோ திட்டம், மதுரை வடபழஞ்சி, மீத்தேன், கெயில் என அனைத்தையும் எதிர்க்கிறோம். இந்தியாவின் அணு சக்தி கொள்கை பற்றி நாடு முழுவதும் பரந்துபட்ட விவாதம் நடத்தி அதன்பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கையும். அதையே அவர்களும் உறுதியளித்தார்கள்.
அணு உலைப் போராட்டத்தில் ஜாதி, மதம் கடந்து உங்கள் பின்னால் மக்கள் இருந்தனர். மாற்றுக் கட்சிக்காரர்களும் உங்களை ஆதரித்தார்கள். தற்போது நீங்கள் ஆம் ஆத்மியில் சேர்ந்து ஒரு கட்சி சார்புடையவராக மாறி இருப்பது அந்த மக்களுக்கு செய்த ஓர துரோகம் இல்லையா?
கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க, அதிமுக போன்ற கட்சிகளோ அந்தக் கட்சிகளுடைய தொண்டர்களோ எங்களுடைய போராட்டத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அவர்கள் போராட்டப் பந்தல் பக்கம் கூட ஒதுங்கவில்லை. ஆனால், மாநிலக்கட்சிகளான பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க.,வினர் எங்களை ஆதரித்தனர். ஆனால், அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அணு உலையை ஆதரிக்கக்கூடிய தி.மு.க.வுடனும், ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. அணு உலையை ஆதரிக்கக்கூடிய பி.ஜே.பி.யுடனும் கைகோர்த்துவிட்டனர். இதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். மேலும், மற்றக் கட்சிக்காரர்கள் யாரையும் நாங்கள் இழுத்துப் போகவில்லை. எங்களோடு தோளோடு தோள் நின்ற மக்கள், அவர்கள் போராட்டத்தை யார் ஆதரிப்பார்களோ அவர்கள் பக்கம் வந்துள்ளனர். இதுவும் நான் தனியொருவனாக எடுத்த முடிவல்ல. ஜனநாயகப்பூர்வமான முறையில், சமுதாயத் தலைவர்களை ஒன்றுகூட்டி, எங்கள் மக்களோடு ஆலோசித்து எடுத்த முடிவு தான்.
எளிய மக்கள் கட்சியின் வேட்பாளரான உதயக்குமார் எளியவர் அல்ல… அவருக்கு ஏழு கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளதே…. ?
எளிய மக்கள் கட்சி என்பதன் அர்த்தம் எளிய மக்களுக்காக நிற்கிற கட்சி என்பதுதான். அந்தக் கட்சியின் கொள்கையைப் ஏற்றுக் கொண்டவர்கள் அதில் சேர்ந்து பணியாற்றலாம். அவர்கள் படித்தவர், ஏழை, பணக்காரர் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எளியமக்கள் கட்சி என்பதால், அதன் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் சைக்கிள் வைத்திருக்கக்கூடாது, நல்ல ஆடைகள் உடுத்தி இருக்கக்கூடாது, வீடு வைத்திருக்கக்கூடாது என்றெல்லாம் அர்த்தம் இல்லை.
ஏழு கோடி ரூபாய் சொத்து….
இந்த சொத்துக்கள் எனது பரம்பரை சொத்துக்கள். நான் இப்போது சம்பாதித்தவை கிடையாது. அந்த சொத்துக்களை நான் குறைத்து மதிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்க முடியும். தற்போது சொத்துக் கணக்கை தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் சந்தை மதிப்பை விட குறைத்தே காட்டியிருக்கிறார்கள். ஆனால், நான் அந்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பை அப்படியே தாக்கல் செய்துள்ளேன். வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, மத்திய புலனாய்வுத் துறை என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அத்தனை துறைகளும், என்னை எப்படியாவது சிக்க வைக்க முடியுமா என்ற கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரித்து வந்துள்ளனர். ஆனால், நான் சட்டவிரோதமாக எந்த காரியத்தையும் செய்ததாக அவர்களால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நானும் போராட்டக் குழுவினரும் உண்ணாவிரதம் இருந்தபோதே, நாங்கள் சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தனர். அது போலத்தான் என் மீது தற்போது தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டும்.
ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ், பி.ஜே.பி.க்கு மாற்று என்று சொல்கிறீர்கள் ? ஆனால், ஆம் ஆத்மி கட்சி பல்வேறு விஷயங்களில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வில்லையே ?
ஆம் ஆத்மி கட்சி தொடக்க நிலையில் இருக்கிற கட்சி. அதன் கொள்கைகள் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் இருக்கிற மற்றக் கட்சிகளுக்கு எல்லாம் தெளிவான கொள்கை ஒன்று உள்ளதாக நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இன்று இந்தியாவில் இருக்கக்கூடிய எந்தக் கட்சிக்காரனையாவது அழைத்து அவருடைய கட்சியின் கொள்கை பற்றிப் பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். தலைவர்களுக்கே தங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று தெரியாத காலம் இது. அண்ணா நாமம் வாழ்க என்பது ஒரு கட்சியின் கொள்கை. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பது மற்றொரு கட்சியின் கொள்கை. இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கே என்ற கோஷம் ஒரு கட்சிக்கு. இதெல்லாம் கொள்கைகளா?
ஆனால், இந்தக் கட்சிகளோடு ஒப்பிடும் போது, ஆம் ஆத்மி ஒரு குழந்தை. குழந்தை இப்போதே ஏன் மாரத்தானில் ஓடமாட்டேன் என்கிறது என்று கூச்சல் போடுவது சரியல்ல. அது தவழ வேண்டும். நடை பழக வேண்டும். அதன்பிறகு தான் ஓடும். தற்போது ஆம் ஆத்மியில் கொள்கைகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது. அதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கிறது. குறிப்பாக மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, நதி நீர் இணைப்பு, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை, தாது மணல் கொள்ளை உள்ளிட்ட விஷயங்களில் கட்சி ஒரு நிலைப்பாடு எடுக்கும்போது எங்களின் கருத்துக்களை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். கொள்கை வகுப்பதை பொறுத்தவரை அதற்கு இன்னும் பத்து வருடங்கள்கூட ஆகலாம்.
உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்காகவோ அல்லது தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலோ நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை, அணுசக்திக் கொள்கை என தேசியக் கொள்கைகள் அனைத்திலும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. ஏனென்றால், இந்தக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸும் பி.ஜே.பி.யும் முற்றிலுமாக தோற்றுவிட்டன. இப்போது ஒரு மாற்று தேவை. அந்த மாற்றை நாங்கள் முன்வைக்கிறோம். அதற்கு ஆதரவாக நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த நாட்டை மீண்டும் பழைய அரசியல் வியாபாரிகளிடமே கொடுத்து உங்களின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வையும் நசுக்கப்போகிறீர்களா? அல்லது மாற்று அரசியலுக்காக விளைந்து நிற்கிற எங்களை ஆதரிக்கப்போகிறீர்களா? என்ற கேள்வியை முன்வைத்து நான் போட்டியிடுகிறேன். இதன் முடிவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்.
கோடிக்கணக்கில் வாரி இறைக்கும் பெரிய கட்சிகளுக்கு மத்தியில் நீங்கள் தேர்தல் செலவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
மக்களிடம் வரி பிரிக்கிறோம். வேட்பாளர் என்ற முறையில் நான் சற்று கணிசமான தொகையை செலவழிக்கிறேன். அதற்கு கூடுதலாக நான் ஒரு பைசா செலவு செய்யமாட்டேன் என்பதையும் கட்சிக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன். எனக்கு சொத்துக்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அந்த சொத்துக்கள் தினம்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டித் தரக்கூடிய சொத்துக்கள் அல்ல. எனக்கு 54 வயதாகிவிட்டது. இந்த நேரத்தில் என்னிடம் இருக்கும் சொத்துக்களை எல்லாம் விற்று தேர்தலில் போட்டியிட்டு அதன்பிறகு நான் விற்ற சொத்துக்களைவிட பலமடங்கு திருடி வாங்கும் திட்டமும் எனக்குக் கிடையாது. என்னால் எதை சமாளிக்க முடியுமோ அதை நான் செலவழிக்கிறேன்.
விளம்பரம் மற்றும் பிரச்சாரங்களில் மற்றக் கட்சிகளுடன் எங்களால் நிச்சயமாக போட்டியிட முடியாது. நாங்கள் மக்கள் கூடும் இடங்களில் பேசப்போகிறோம். முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களைப் போய் சந்திக்கிறோம். அவர்களுக்கு மாற்று அரசியல் பற்றி புரியவைத்துப் பேசுகிறோம். அவர்களும் நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். அது ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளாக இருக்கிறது. வர்த்தகர்கள், மீனவர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களைச் சந்தித்து அவர்கள் தொடர்பான பிரச்சினைகளையும் பேசுகிறோம்.
உச்ச நீதிமன்றம் சொன்னதுபோல், உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படவில்லையே. இதில் தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழக அரசின் ஏமாற்று வேலை. உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் மே 6ம் தேதி தீர்ப்புச் சொல்லும்போது அத்தனை வழக்குகளையும் அணு உலை தொடர்பாக அந்த மக்களின் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்று தீர்ப்புச் சொன்னது. அப்படியில்லாமல் 248 வழக்குகளை மட்டும் வாபஸ் வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழக அரசு எங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக நடத்தும் ஒரு நாடகம். ஆனால், மீதமிருக்கும் நூற்றிச் சொச்சம் வழக்குகளைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதில் எங்களுக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றால் கிடைத்து விட்டுப் போகட்டும்.
ஆம் ஆத்மி கட்சியில் வட இந்திய அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. தமிழகத்தில் எடுபடுமா? இல்லை இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வரப்படுமா?
தமிழகத்தில் எளிய மக்கள் தலைப்பாகை கட்டுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அவர்கள் தற்போது பயன்படுத்தும் குல்லாய் நமக்கு அந்நியமாக இருக்கிறது. நான் அது பற்றி அவர்களிடம் பேசி வருகிறேன். அதுபோல், தனிப்பட்ட நபரை முன்நிறுத்துவது, வட இந்திய சிந்தாந்தத்தை முன்னிறுத்துவது கூடாது என்று இங்குள்ளவர்களிடம் வலியுறுத்தி வருகிறேன். இதுபோல், சிற்சில மாற்றங்களை கொண்டுவருவது குறித்து பேசி வருகிறேன். துடைப்பம் சின்னத்தைப் பொறுத்தவரை அது அப்படியே இருக்கட்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். குப்பைகளை அப்புறப்படுத்தும் ஆயுதம் அல்லவா அது.
மோடி அலை மற்றும் வலுவாக அமைந்துள்ள பாரதிய ஜனதாக் கூட்டணி பற்றி?
அது மோடி அலை அல்ல. மோசடி அலை. நான் பார்த்தவரை மோடி அலையும் இல்லை. வலையும் இல்லை. நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதைப்போட்டு பாப்புலாரிட்டி உருவாக்குகிறார்கள். பாரதிய ஜனதாக் கட்சியில் இருக்கும் தே.மு.தி.க.வின் அரசியல், பா.ம.க., ம.தி.மு.க.வின் அரசியலை எல்லாம் தமிழக மக்கள்
ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள். இனியும் அவர்களிடம் ஏமாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
சிறையோ, சாவோ, எதுவோ வரட்டும்!
இந்திய உளவுத் துறை (IB) பிரதமர் அலுவலகத்துக்கு ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறார்களாம். அதாவது தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு குறுக்கே நிற்கிறார்கள், மதமாற்றத்துக்கு வழி வகுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியிருக்கிறார்களாம். இரண்டு இடங்களில் எனது பெயரைக் குறிப்பிட்டு, அமெரிக்காவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தோடு எனக்குத் தொடர்பு இருந்ததாகவும், நான் அவர்களுக்கு தொடர்ந்து அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தவறாக எழுதியிருக்கிறார்கள். ஓஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் (Ohio State University, Columbus, OH) இயங்கிய கிர்வான் ஆய்வு நிலையத்தின் (Kirwan Institute for the Study of Race and Ethnicity) சர்வதேச ஆய்வு வல்லுனராக (Research Fellow) நான் பணி புரிந்தேன். இந்தியாவிலிருந்தபடியே உலகமயமாதல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தேன். இந்தியாவின் அணுசக்தி பற்றியோ, வளர்ச்சி பற்றியோ நாங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை.
நான் அமெரிக்காவில் 1997 முதல் 2001 வரை மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் Institute on Race and Poverty, University of Minnesota எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் தலைவராக செயல்பட்ட பேராசிரியர் ஜான் பவல் கிர்வான் ஆய்வு நிலையத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றபோது, என்னை அவரது புதிய முயற்சிக்கு உதவும்படிக் கேட்டுக் கொண்டார். வேலை செய்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் IB ஆட்கள் வேறுமாதிரி திரித்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ராய்னர் தனது மடிக்கணினியில் இந்தியாவின் அணுசக்தி நிறுவனங்களை ஒரு வரைபடத்தில் குறித்து வைத்திருந்தாராம், அதை நான் உட்பட பலருக்கு அனுப்பிக் கொடுத்தாராம். இப்படியெல்லாம் IB தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். இவர் ஹிப்பி போன்று உலகம் சுற்றித் திரிபவர். நாகர்கோவிலில் சந்தித்த பிறகு, எங்கள் நிகழ்வுக்கு வருவார். வேறு எந்தத் தொடர்பும் இருந்தது இல்லை. பிப்ருவரி 27, 2012 அன்று இந்தியாவை விட்டு அவர் வெளியேற்றப்பட்டபோதே நான் கேட்டேன். அவர் தவறு செய்திருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்காமல் அவசரம் அவசரமாக வெளியேற்றுகிறீர்கள் என்று. இப்போது புதிய கதை சொல்லுகிறார்கள்.
உளவுத் துறையும், மத்திய அரசும் ஒரு சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்:
[1] சாதாரண மக்களான மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் சிந்திக்கவும், சீர்தூக்கிப் பார்க்கவும் தெரியும். தங்கள் மண்ணில் ஓர் அழிவுத் திட்டம் வரும்போது, அதை எதிர்த்து ஒரு நிலைப்பாடு எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும்.
[2] அந்த சக்தியற்ற மக்களின் மண்ணையும், நீரையும், காற்றையும், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும், வருங்காலத்தையும் மீட்பதற்காக எங்களில் சிலர் எழுந்து நிற்கும்போது, எங்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகள், கடத்தல்காரர்கள், ஹவாலாப் பேர்வழிகள் என்று கொச்சைப்படுத்துவது மிகவும் தவறு. இந்த மக்களையும், இந்த நாட்டையும் நேசிப்பதால்தான் நாங்கள் இதனைச் செய்கிறோம்.
[3] நேர்மையான, பொறுப்பான, சட்டத்தை மதிக்கும் எங்களை இப்படி அசிங்கப்படுத்தினால், அது நமது இளைஞர்களுக்கு தவறான செய்தியைக் கொடுக்கும்; அவர்கள் வன்முறையிலும், தீவிரவாதத்திலும் நம்பிக்கை கொள்ளச் செய்யும்.
உளவுத் துறையின் இந்த பாசிச நோக்கும், போக்கும் என்னைப் போன்ற தனிநபர்கள், குழுக்கள், மக்கள் இயக்கங்கள், சிறுபான்மையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் என்று நினைக்கிறேன். எனது பெயரைக் குறிப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதால் எனது உயிருக்கும், எனது குடும்பத்தார் பாதுகாப்புக்கும் ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன்.
நான் நேர்மையானவன், வெளிநாடுகளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டுப் போராடவில்லை என்று எத்தனயோ முறை சொல்லிவிட்டேன். சீதாப்பிராட்டிப் போல தீயிலாக் குதிக்க முடியும் இனி? பாரதியார் சொல்வது போல, “சிந்தையொன்று இனியிலை, எது சேரினும் நலமெனத் தெளிந்துவிட்டேன்.”
சிறையோ, சாவோ, எதுவோ வரட்டும்!
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்
யூன் 11, 2014
ஐ பி யின் ரிப்போர்ட் உதயகுமாரை மட்டும் குறி வைக்க வில்லை. கிரீன்பீஸ் நிறுவனத்தையும் குறிவைத்துள்ளது!நாட்டின் பொருளாதரத்திற்கு முட்டுக்கட்டை என்று வார்னிங் குரல் எழுப்பியிருக்கிறது...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்...
அக்டோபர் 10, 2014
முனைவர் சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்
திரு. ரஜினிகாந்த் அவர்கள்
போயஸ் கார்டன், சென்னை
அன்பார்ந்த ஐயா:
வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
ஆனாலும் தமிழகத்தின் வாக்காளர் என்ற முறையில் எனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
தங்கள் சொந்த மாநிலமான கர்நாடகத்திலிருந்து வேலை நிமித்தம் இங்கே தமிழகத்துக்கு வந்தீர்கள். கடினமாக உழைத்து ஓர் உயர்ந்த நிலையையும் அடைந்தீர்கள். தங்கள் நடிப்பை தமிழக இளைஞர்கள் விரும்பி, தங்களை ஆதரித்து மாபெரும் வெற்றிபெறச் செய்தனர். கேளிக்கையும், வேடிக்கையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த உறவை மாற்றியமைத்து தமிழ் மக்களை வழிநடத்துவதற்கும், வருங்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அனுமதியாக தாங்கள் பார்க்கக்கூடாது.
திரைப்படத்துறையினர் தமிழக அரசியலில் புகுந்து, அசிங்கத்தையும், அவலத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். தமிழக அரசியல் அறிந்த அனைவரும் இதனை ஆமோதிப்பார்கள். நடிகர் அரசியல்வாதிகளையும், அரசியல் நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டினாலொழிய தமிழினத்துக்கு விடிவு கிடையாது எனக்கொண்டு, கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமான தொடர்பை அறுத்தெறிய என் போன்ற பலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்போது, தாங்கள் பொதுவாழ்வுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகிறது.
தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுத்துவிட்டு, மாநிலத்தின் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாது, எந்தப் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுக்காது, தங்கள் சுயநலன்களை மட்டுமேப் பேணிக்கொண்டு, தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
தமிழகப் பொதுவாழ்வில் இந்தத் துறையினரின் ஆதிக்கம் முடிவுக்கு வராதா என்று நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தங்களின் அரசியல் வருகை தமிழ் மக்களை பெரும்புயலாகத் தூக்கிச் செல்லாது என்றாலும், ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம். பாரதீய ஜனசங்க காலத்திலிருந்தே முயன்றும், தமிழகத்தில் ஒரு கல்லைக்கூட அசைக்கமுடியாத ஒரு மதவாதக் கட்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சில அரசியல் மாற்றங்களை பயன்படுத்தி தங்கள் தோளில் ஏறி கரைசேர விரும்புகிறது. அதேபோல வாழ்நாள் முழுவதும் தாங்களுக்காக உழைத்து தங்கள் வாழ்க்கையை இழந்துநிற்கும் ரசிகர்கள், தங்களால் ஓர் அரசியல் முக்கியத்துவம் வராதா, அதிகாரம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே தமக்கு ஓர் அரசியல் வாழ்வை ஏற்படுத்திக்கொள்ள தங்களை பயன்படுத்தப் பார்க்கின்றனர்.
இதனால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் காலூன்றியிருக்கும் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலைதூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் “சூப்பர் ஸ்டார்” எனும் புகழையும் இழந்து விடுவீர்கள். தங்களின் இனப் பின்புலம் கேள்விக்குள்ளாக்கப்படும். இந்தியர் ஒருவரை மணந்து, இந்தியாவை தாயகமாக ஏற்று, இந்தி மொழியினை சரளமாகப் பேசி, இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகும், திருமதி சோனியா காந்தி இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்பதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல, கன்னடத்துக்காரரான தாங்கள், தமிழகத்துக்கு தலைவராவதை தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இதனை இனவெறி என்று தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நடிகர் ராஜ்குமார் விவகாரம் முதல் எத்தனையோ பிரச்சினைகளில் தாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள், நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய தாங்கள் தமிழ் மக்கள் இன்னல் களைய எதுவும் செய்யாத நிலை என பல விடயங்கள் மக்களால் பேசப்படும், அலசப்படும். இம்மாதிரியான பல கேள்விகளுக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிவரும்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் பேசிய நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் தமிழர்களுக்கு இப்படி அறிவுரைத்தார்: “நீங்கப் பாக்குறீங்க. அக்ட் நல்லா செய்றோம். சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்கோ. கோவிலுக்குள் போறீங்கோ, சாமியைக் கும்பிடுங்கோ, மரியாதையா வெளியே வாங்கோ. சாமிகிட்டேயே உக்காந்துக்கிட்டு குடும்பம் நடத்தாதீங்க. நல்லாருக்காது. அதேமாதிரி எங்களப் பார்த்தா அபிப்பிராயம், நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போயிடணும். அதனால நாங்கதான் பெரிசுண்ணும், காலம்பூரா எங்களையேவா நெனச்சுக்கிட்டு இருக்கிறது.” இந்த அறிவுரை தங்கள் ரசிகர்களுக்கும், பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்தும்.
சினிமாக்காரர்கள் தலைவராவது பற்றி, எம். ஆர். ராதா அவர்கள் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய பணத்தாலே முன்னேறியக் கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள். அதை விட்டுட்டு எங்களை தலைவராக்கிட்டு ரொம்பப் பேரு இருக்காங்க. அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது.” இதையும் மீறி ஒரு நடிகர் தலைவராக விரும்பினால், ராதா அவர்கள் அறிவுரைத்தார்: “ஜெயிலுக்குப் போய்ட்டு அப்புறம் அரசியலுக்கு வரணும். அரசியல் நடத்துறதா இருந்தா மொதல்ல ஜெயிலுங்கிற காலேஜில போய் படிக்கணும்.”
தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்கவும், வாழ்வுரிமைகளை மீட்கவும், வருங்காலத்தைப் பேணவும் தமிழகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களோடு ஜெயிலுக்கு வாருங்கள். சேர்ந்து படிப்போம். பட்டறிவும், பாங்கான தகுதிகளும் பெற்ற பிறகு, அரசியலுக்கு வாருங்கள். தங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் சினிமாப் புகழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பல்லக்குத்தூக்கிகள் துணையோடு தலைவராக எத்தனித்தால், தங்களை கீழேத் தள்ள என்னாலான அனைத்தையும் செய்ய நான் உறுதி பூணுகிறேன். தங்களின் பிரபலம், பணபலம், படைபலத்தில் ஒரு விழுக்காடுகூட எனக்குக் கிடையாதுதான். ஆனால் தமிழன் எனும் செருக்கும், தமிழினம் காக்க விரும்பும் அடிவயிற்று நெருப்பும் நிறையவே இருக்கின்றன.
தங்கள் அன்புள்ள,
:))))))
Comedy....
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்...
:))))))
Comedy....
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
//எனக்குத் தெரிஞ்சு நிறைய அத்தைங்க மீசையோட இருக்காங்க. மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சாத்தானே...? :-)//மீசை முடி இருக்குறது உங்களூக்கு எப்படி தெரியும்? கிட்ட போய் பாத்தீஙக்ளா சேட்டை
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நன்றி. சுபைர் அவர்களே. இன்றிலிருந்து ரெஸ்ட். இன்னும் கொஞ்ச நாளைக்கு ரீடராக இருக்கிறேன்
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ # உமக்கும் அப்படித்தான்னு பதில் வரப்போகுதுன்னு தெரிஞ்சும் ..உம்ம நலனுக்காகப் போட்ட பதில் )



ஆம் ஆத்மியும் நானும்
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்
அக்டோபர் 16, 2014
ஆம் ஆத்மி கட்சியோடான எனது உறவை மாற்றியமைத்திருக்கிறேன். செப்டம்பர் 19, 2014 அன்று நெல்லை மாவட்டம் காவல்கிணறைச் சார்ந்த தம்பி ஸ்டீபன் அமிர்தராஜ் மற்றும் பிகார் நண்பர் குமார் சுந்தரத்தோடு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை தில்லியிலுள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். தமிழகத்திலும், கேரளத்திலும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க வேலைகளை முனைப்புடன் செய்து கொண்டிருப்பதால் கட்சிப் பொறுப்புக்களை என்னால் ஏற்க முடியாது. அதுபோல இவ்விரண்டு மாநிலங்களிலும் பல தரப்பு மக்களோடு இணைந்து வேலை செய்ய வேண்டியிருப்பதால், ஒரு கட்சியோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்வது உகந்ததல்ல எனும் நிலையையும் விளக்கிச் சொன்னேன்.
ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் அணுசக்திக் கொள்கை பற்றி ஒரு தெளிவான, வெளிப்படையான நிலையை எடுக்கவில்லை, கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை இந்தப் பிரச்சினை குறித்து எதுவும் சொல்லவில்லை எனும் எனது ஆதங்கங்களைப் பதிவு செய்தேன். இருவருமாக மனந்திறந்து நடத்திய ஒரு விவாதத்துக்குப் பிறகு, தமிழகத்திலும், கேரளத்திலும் நான் சுதந்திரமாக இயங்குவது என்றும், தில்லி சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது நான் கட்சிக்காக என்னாலான வேலைகளைச் செய்வதாகவும் ஒத்துக் கொண்டோம்.
ஆம் ஆத்மியோடான உறவை ஒட்டுமொத்தமாக அறுத்துக்கொள்ள விரும்பாததற்கு பல காரணங்கள் இருகின்றன. மதவாத பாரதீய ஜனதா கட்சிக்கும், ஊழல்வாத காங்கிரசு கட்சிக்கும் இந்திய அளவிலே ஒரு மாற்று தேவைப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறேன். தோழர் திருமாவளவன், தோழர் கணேசமூர்த்தி போன்றோர் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் தில்லியிலே நமக்குத் தோழர்கள் வேண்டும் என்பதை உணர்கிறேன். கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில், காவிரி, முல்லைப் பெரியார் உள்ளிட்ட அனைத்து தமிழர் பிரச்சினைகளும் தில்லியிலே முடிவு செய்யப்படுவதால், நாம் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன். கேரளத்தையும் தமிழகத்தோடு இணைத்துக் கொள்வதற்கு காரணம் கூடங்குளம், நியூட்ரினோ பிரச்சினைகளில் அவர்கள் நம்மை ஆதரிப்பதால்தான். இம்மாதிரியான ஒத்துழைப்பின் மூலம், கேரளாவோடான பிற சிக்கல்களில் நியாயமான தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுவதால்தான்.
அரசியலில் முனைவர் பட்டம் பெற்று, கிரேக்க அரசியல் முதல் கட்டுடைப்பு (deconstruction) விழுமியம் வரை பயின்ற நான் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து, அவர்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நடவடிக்கைகளுக்குத் தலைவணங்கி, தலைவர்களுக்கு ‘ஜே’ போட்டு அரசியல்வாதியாய் நடப்பேன், தேர்தலில் நிற்பேன், வீடு வீடாக வாக்கு சேகரிப்பேன் என்றெல்லாம் நான் கற்பனைசெய்ததுகூடக் கிடையாது. என்னை ஒரு பசுமைச் சிந்தனையாளன், தமிழ்த்தேசியன், சமத்துவவாதி, மனிதநேயன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நான், கொள்கைகளில் தெளிவில்லாத ஆம் ஆத்மி கட்சியில் எப்படி நிலைத்திருக்க முடியும் என்ற குழப்பம் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. கேப்டன் கோபிநாத்தும், மீரா சான்யாலும் அங்கம் வகிக்கும் கட்சியில் நானும் எப்படி இயங்குவது என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் மேதா பட்கர், தயாமணி பர்லா, சோனி சோரி, ரச்னா டிங்க்ரா, அனிதா பிரதாப், அலோக் அகர்வால் போன்ற போராளித் தோழர்களுடன் இணைந்து நின்றது ஒருவித மகிழ்ச்சியைத் தந்தது.
ஆம் ஆத்மி கட்சியோடு இணைந்து பயணிக்க தீர்மானித்தது குறித்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே அட்டவணையிடுகிறேன்:
[1] செப்டம்பர் 2012
தமிழக அரசின், காவல் துறையின் மிகப் பெரிய அடக்குமுறைக்கு நாங்கள் ஆளானபோது அரவிந்த் கேஜ்ரிவால் இடிந்தகரைக்கு வந்தார்; தன்னந்தனியாக கூடங்குளம் காவல் நிலையம் சென்று எங்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரித்தார்; நாங்கள் ஏன் சரணடைய வேண்டும் என்று கேள்வி கேட்டார்.
[2] நவம்பர் 27, 2013
மதவாத, ஊழல் கட்சிகளான காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் மாற்றாக புது தில்லி மாநிலத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்தது. இந்தியா ஒரு புதிய விடியலுக்காக ஏங்கி நிற்கும் வேளையில், நமக்கு புது கனவுகளும், புது பார்வைகளும், புது கருத்துக்களும், புது அணுகுமுறைகளும், புது தலைமையும் தேவைப்படுகின்றன. இந்த புது விடயம் புது தில்லியிலிருந்து துவங்கட்டும் என்று வாழ்த்தினோம்.
[3] டிசம்பர் 10, 2013
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவான தமிழக அரசியல் கட்சிகளை நாடாளுமன்றத் தேர்தலில் கைகோர்த்து நிற்கவைக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், டிசம்பர் 1௦, 2௦13 அன்று பிரசாந்த் பூஷண் இடிந்தகரைக்கு வந்து எங்களை ஆம் ஆத்மி கட்சியில் சேரும்படி அழைத்தார். அன்றைய தினமே எங்களின் நெல்லை நகர ஆதரவுக் குழுவையும், வேறு சில நண்பர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டக் குழுவினர் கலந்தாலோசித்தோம். ஐந்து நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அந்தக் கட்சி தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுவது என்று தீர்மானித்தோம்.
[4] சனவரி 6, 2014
ஆம் ஆத்மி கட்சியினரின் அழைப்பைப் பற்றியும், எங்கள் நிபந்தனைகள் பற்றியெல்லாம் போராட்டக் குழுவினரும், தோழர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், தோழர் அரிமாவளவன் ஆகியோர் விவாதித்து ஒரு கடிதம் எழுதினோம். கட்சி அணுசக்திக் கொள்கை பற்றிய தங்கள் நிலையினைத் தெரிவிக்க வேண்டும்; கட்சிக்கு தமிழ் பெயர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்; தமிழ் ஈழம், தமிழ் மீனவர் மீதான தாக்குதல், கடற்கரை கபளீகரம், தாதுமணற் கொள்ளை, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற தமிழகம் தொடர்பான பிரச்சினைகளில் எங்கள் உணர்வுகளைக் கேட்டுத்தான் முடிவுகள் எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.
[5] சனவரி 12, 2014
இடிந்தகரையில் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் நடத்தினோம். இரண்டரை ஆண்டுகளாக அறவழியில் போராடி, அதிகார வர்க்கம் பெரிதாகக் கண்டுகொள்ளாத நிலையில், அரசியல் தளத்திற்குச் சென்றேனும் ஒரு விடிவை உருவாக்க இயலுமா என்று போராடிய மக்களும், நாங்களும் சிந்தித்தோம்.
[6] சனவரி 26, 2014
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரம் மற்றும் உள்ளூர் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் இடிந்தகரையில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. சுமார் 2௦௦ பேர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், தங்கள் ஊர் மக்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர். தென்தமிழக மக்களும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் சேர்ந்து நடத்திவரும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை அரசியல் தளத்துக்கு நகர்த்துவது என்றும், ஆம் ஆத்மியுடன் பேச்சு நடத்துவதும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு நகர்வையும், முடிவையும் போராட்டக் குழுவில், இடிந்தகரை ஊர் நிர்வாகக் குழுவில், பெண்கள் குழுமத்தில், இளைஞர்கள் மத்தியில், ஒட்டுமொத்த சமுதாயக் கூடுகையில் விவரித்து, விவாதித்து, விரிவாகப் பேசித்தான் முடிவெடுத்தோம். முழுக்க முழுக்க திறந்தவெளித் தன்மையுடன், சனநாயகப் பண்புடன், மக்கள் நலத்தை முன்னிறுத்தியே இயங்கினோம். பற்பல கூட்டங்கள், நீண்ட விவாதங்கள், கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் என இந்த காலகட்டம் எளிதானதாகவோ, இனிமையானதாகவோ இருக்கவில்லை. தேர்தலில் சுயேச்சையாக நின்று குறைவான வாக்குகள் பெற்றால், போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சினோம். ஆம் ஆத்மியின் தில்லி வெற்றி; ஊழலுக்கும், நிர்வாகத் திறமையின்மைக்கும் எதிராக இந்திய மக்கள் எழுந்து நின்ற நிலை; போராட்டத்தை இடிந்தகரையிலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்; நாங்கள் ஊரை விட்டு வெளியே வரவேண்டியத் தேவை – என பல விடயங்களை சிந்தித்துப் பார்த்தோம். கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை தில்லியிலே முடிவு செய்யப்படுவது. தொங்கு பாராளுமன்றம் அமைந்து ஆம் ஆத்மி கட்சிக்கு 3௦-40 எம்.பி.க்கள் கிடைத்துவிட்டால் அதை பயன்படுத்தி நம் மக்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாமே என்ற ஆசையும் இருந்தது.
[7] பிப்ரவரி 12, 2014
“வேறு கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொள்ள இயலாது” எனக் குறிப்பிட்ட ஆம் ஆத்மி கட்சி, இதர நான்கு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. பின்னர் இடிந்தகரை மக்கள், சமுதாயத் தலைவர்கள் போன்றோரோடு பலமுறை மிக விரிவாக விவாதித்துத்தான் ஆம் ஆத்மி கட்சியில் சேருவது என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்றும் தீர்மானித்தோம்.
[8] மார்ச் 29, 2014
இடிந்தகரையிலிருந்து வெளியே வந்த அன்றைய தினமே தேர்தல் பரப்புரைத் துவங்கினோம். போதிய நேரமின்றி, பணமின்றி, தொண்டர்களின்றி, அனுபவமின்றி ஏப்ரல் மாதம் மூன்று வாரங்கள் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்தோம். கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினையை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்றோம்.
[9] யூலை 4, 2014
தோழர்கள் மை.பா., தயாமணி பர்லா, மு. பாஸ்கர், ஸ்டீபன் அமிர்தராஜ் போன்றவர்களோடு அரவிந்த் கேஜ்ரிவாலை அவர் வீட்டில் சந்தித்தேன். மனீஷ் சிசோடியா, அஷுதோஷ், சஞ்சய் சிங் போன்றோர் அவருடன் இருந்தனர். அரவிந்த் என்னைப் பார்த்து “தமிழகத்தில் கட்சியைத் தலைமையேற்று நடத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டார். மரியாதைக்காக ‘சரி’ என்று சொல்லிவிட்டு, முதலில் இதைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்லி ஏற்கனவே தயாரித்துக் கொண்டுபோயிருந்த கோரிக்கை மனுவை அனைவரிடமும் கொடுத்தேன். அதில் கீழ்க்காணும் கேள்விகள் உட்பட பல கேள்விகள் கேட்டிருந்தேன்:
[] இராஜீவ் காந்தி கொலைவழக்குக் கைதிகளுக்கு எதிராக அரவிந்த் கருத்துத் தெரிவித்து, அதை நான் உட்பட பலர் எதிர்த்த பிறகும், கட்சியின் தில்லி தலைமை எந்த விளக்கமும் அளிக்காதது ஏன்?
[] கட்சியின் உயர்மட்ட அரசியல் விவகாரக் குழுவிலிருக்கும் இந்தி மொழி பேசுகிற ஒன்பது ஆண்கள் மட்டுமே கட்சி மற்றும் நாடு தொடர்பான முடிவுகளை எடுக்கிறீர்கள்; தென்னிந்தியாவிலிருந்தும், வடகிழக்குப் பிரதேசத்திலிருந்தும் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளாதது ஏன்?
[] காங்கிரஸ், பி.ஜே.பி. கட்சிகள் போல அனைத்து முடிவுகளும் தில்லியிலே எடுக்கப்பட்டு, மாநிலங்களில் உள்ளவர்கள் தில்லி எசமானர்களுக்கும், இந்தி ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு; மாநில அமைப்புக்களுக்கு தன்னதிகாரம் வழங்க வேண்டும்.
[] தமிழக அரசியல் பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது; இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாடெங்கும் பி.ஜே.பி. வெற்றி பெற்றபோது, இங்கே அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதிலிருந்து இதை உணரலாம். அதனால்தான் கட்சிக்கு தமிழ்ப் பெயர் வேண்டுமேன்றோம். தில்லி ஏற்றுக் கொண்டாலும், தமிழகக் கிளை அதை பயன்படுத்தவில்லை.
அரவிந்த் உட்பட அனைவரும் மனுவை வாங்கிக் கொண்டாலும் யாரும் அதைப் படிக்கவுமில்லை, பார்க்கவுமில்லை என்பதை நான் கவனித்தேன். அடுத்த இரண்டு நாட்கள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் தில்லியில் நடந்தது. முழுக்க முழுக்க இந்தியில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் “இந்தியில் மட்டுமே பேசாதீர்கள், ஆங்கிலத்திலும் பேசுங்கள்” என்று தமிழக வேட்பாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு மினிப் போராட்டமே நடத்தினோம். நான் கொடுத்திருந்த மனு பற்றியோ, அதிலுள்ள விடயங்கள் பற்றியோ ஏதாவது விவாதம் வரும் என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பச்சைத் தமிழ்த் தேசிய அரசியல்
மதவாத பாரதீய ஜனதாவுக்கும், ஊழல்மிக்க காங்கிரசுக்கும், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு தேசியக் கட்சி வேண்டும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். அந்த அளவில் ஏழை எளிய மக்களின் அரசியல் ஆசாபாசங்களுக்கும், தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்பும் ஆம் ஆத்மி கட்சி வாழட்டும், வளரட்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் தமிழக நிலைமைகளை அறியாத, புரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத தில்லி தலைவர்களுக்கு காவடித் தூக்க நான் விரும்பவில்லை. தமிழர் பிரச்சினைகளை உண்மையாக, உணர்வுபூர்வமாக அணுகாத ஒரு கட்சி தமிழகத்தில் காலூன்ற உதவிய வரலாற்றுப் பிழையையும் நான் செய்ய விரும்பவில்லை. அரசியல்வாதி ஆவதோ, தலைவராவதோ எனது நோக்கமோ, விருப்பமோ அல்ல.
இந்த நேரத்தில் தேர்தலின்போது பல வழிகளில் எனக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான பொருளாதார நெருக்கடியில் குடும்பம் உழன்று கொண்டிருந்த நிலையிலும், நானும் எனது மனைவியும் குடும்பத்தாரும் பல லட்சம் ரூபாய்களை எனக்காகவும், கட்சிக்காகவும் தேர்தலில் செலவிட்டோம். கட்சிக்கும், உதவிய தோழர்களுக்கும் விசுவாசமாகவே இருந்தேன். கட்சித் தலைமையோடு தொடர்பில் இருந்து, தில்லி சென்றபோதெல்லாம் தலைவர்களைச் சென்று சந்தித்து, எனது கருத்துக்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். அனைத்து வழிகளிலும் முட்டிமோதி பார்த்துவிட்டுத்தான், இப்போது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.
அடுத்து என்ன செய்வது என்ற ஒரு கேள்வி எழுகிறது. தமிழகத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை, வருங்காலத்தை பேணிக்கொள்ளும் பச்சைத் தமிழ்த் தேசிய உணர்வினை, அரசியலை வளர்த்தெடுக்க என்னாலியன்ற சின்னச்சின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருக்கிறது. இது குறித்த புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிடவிருக்கிறேன். டி. எஸ். இலியட் எனும் அமெரிக்கக் கவிஞர் சொல்வதுபோல, “For good or ill, let the wheel turn!” (வரப்போவது நல்லதோ நாசமோ, சக்கரம் சுழலட்டும்). உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால், நல்லதே நடக்கும்! வணக்கம்!
இனம் கண்டு கொள்வீர், தோழர்களே!
[1] யார் அமெரிக்கக் கைக்கூலி?
நாங்கள் அமெரிக்காக்காரனிடம் பணம் வாங்கி போராட்டம் நடத்துகிறோம், அமெரிக்காக்காரனுக்காக வேலை செய்கிறோம் என்றெல்லாம் காங்கிரசுத் திருடர்களும், காவி பாசிஸ்டுகளும் கொக்கரித்தார்களே? இன்று ஒருவர் 'பாரக், பராக், பாரக் பராக்' என்று குதூகலிக்கிறாரே, குத்தாட்டம் போடுகிறாரே? ஒரு தாயும் சேயும் வரிசை கட்டி வந்து ஒபாமா காலில் விழுந்து வணங்கி மகிழ்கிறார்களே? யார் அமெரிக்கக் கைக்கூலி?
[2] யார் தேசத் துரோகி?
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு போன்ற நாடுகளிடமிருந்து ஆபத்தான, அதிகவிலை கொண்ட அணுஉலைகளை வாங்காதே, எம் மக்களை அழிவில் சிக்க வைக்காதே என்று போராடிய எங்களை தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டினார்களே காங்கிரசுத் திருடர்களும், காவி பாசிஸ்டுகளும்? இப்போது அணுசக்தி பற்றி "ஒபாமாவிடம் எல்லாம் பேசிவிட்டோம், உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டோம்" என்று ரோம் லேடி அரசு செய்ததையே ராம் மோடி அரசும் செய்கிறதே? யார் தேசத் துரோகி?
[3] யார் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்?
வெறும் 500 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால்கூட இழப்பீடு, காப்பீடு கேட்டுப்பெறும் நமது நாட்டில், இவ்வளவு செலவு மிகுந்த அணுஉலைக்கு ஏன் இழப்பீடு வாங்கவில்லை என்று கேட்டதால் நாட்டைக் காட்டிக்கொடுக்கிறோம் என்று கதறினார்களே காங்கிரசுத் திருடர்களும், காவி பாசிஸ்டுகளும்? இன்று "இழப்பீடு வேண்டாம், நாங்களே இன்சுரன்ஸ் ஏற்பாடு செய்துகொள்கிறோம்;" "விபத்து நடந்தால் விற்ற நீங்கள் பொறுப்பல்ல, இயக்கிய நாங்களே பொறுப்பு" என்றெல்லாம் மழுப்பி, மயக்கி இந்திய இழப்பீடுச் சட்டத்தையே ஒபாமாவிடம் அடகு வைக்கிறார்களே? யார் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்?
[4] யார் தேசத்தின்மீது போர் தொடுப்பவர்?
"இந்திய மக்களின் உயிருக்கும் விலை இருக்கிறது, எங்களுக்கு உரிய மரியாதையைக் கொடு" என்று அறவழியில் போராடிய எங்கள் மீது தேசத்தின்மீது போர் தொடுக்கிறோம் என்று வழக்கு போட்டார்களே? இன்று இந்திய நலன்களை ஒட்டுமொத்தமாகக் காவு கொடுக்கிறார்களே காவி பாசிஸ்டுகள்? அமைதியாய் நின்று ஆமோதிக்கிறார்களே காங்கிரசுத் திருடர்கள்? யார் தேசத்தின்மீது போர் தொடுப்பவர்?
காங்கிரசுத் திருடர்களும், காவி பாசிஸ்டுகளும் ஒண்ணு,
இதை அறியாத இந்திய மக்கள் வாயிலே ஈர மண்ணு!
--
"குங்குமம் என்பதை நானறிவேன், அது மஞ்சள் போல வெண்மையாய் இருக்கும்" என்கிறது இந்திய அணுசக்தித் துறை.
இந்திய அணுசக்தித் துறைக்கு அணுக்கழிவு சேகரிப்பு நிலையம் (AFR) மற்றும் ஆழ்நிலக் கிடங்கு (DGR) போன்றவை அமைக்கும் தொழிற்நுட்பம் தெரியாதாம். எனவே கூடங்குளத்தில் இவற்றைக் கட்டுவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமாம்.
அணுக்கழிவை கண்ணாடிப் பந்தாக உருட்டி வீட்டு வரவேற்பறையில் வைக்கும் தொழிற்நுட்பம் எங்களுக்குத் தெரியும் என்று எஸ். கே. ஜெயின் என்கிறவர் பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் புருடா விட்டாரே? பேசா மடந்தை அதை அப்படியே ஏற்றுக்கொண்டாரே?
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடக்கும் பொய்கள், பித்தலாட்டங்கள், கோளாறுகள், குளறுபடிகள் உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காது, நடக்க விடவும் மாட்டார்கள். இடி அமீனின் உகாண்டாவில்கூட மனித உயிர்களுக்கு கொஞ்சம் விலையும், மரியாதையும் இருந்தது. தமிழர் உயிர்கள் அவர்களுக்கு மயிர்கள். இனி தானைத் தலைவர்கள் கமலும், ரஜினியும் நம்மைக் காப்பார்கள்.
எலும்பு திருட்டு குற்றச்சாட்டு - பச்சைத் தமிழகம் கட்சி கண்டனம், கோரிக்கை அறிக்கை
காஞ்சிபுரம் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் உள்ள "செயின்ட் ஜோசப்" கருணை இல்லத்தில், ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள், நல்வுள்ளங்களின் நன்கொடையால், பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு கடந்த 3 மாதத்தில் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சராசரியாக 3 பேர்
நாள்தோறும் மரணமடைவதாக கருணை இல்லத்தின் நிர்வாகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரியும் நிலையில், எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்ககூடும் என்று வருகிற தகவல்கள் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்கள், தமிழக தெருக்களில் இருந்து உதவுகிறோம் என்ற பெயரில் அழைத்துவரப்பட்டுள்ளார்கள். பொது மக்களிடம் நன்கொடை பெற்றே இல்லம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அழைத்து வரப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் விருப்பம் இன்றியே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பணத்திற்காக அவர்களின் உறுப்புகள் கடத்தப்படுவதாகவும், அவர்களின் உடல் அழுகிய பிறகு எழும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முதியவர்கள் இயற்கை மரணமடைகின்றனரா அல்லது அவர்களின் எலும்புகளுக்காக கொல்லப்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுப்பபட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த சர்ச்சைக்குரிய கருணை இல்லத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. மக்களுக்கு இதன் மூலம் உண்மை விரைவில் தெரியவரும் என்று நம்புகிறோம். மானுடவியலுக்கு எதிரான இந்த செயலை, பச்சைத் தமிழகம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
மேலும், 1985ல் இந்திய அரசு எலும்பு ஏற்றுமதியை தடை செய்தப் போதும், மருந்து ஆராய்ச்சி, பயிற்சிக்கு தேவைப்படும் எலும்புகள் உலகளவில் இந்திய கள்ள சந்தையில் இருந்தே செல்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். இதனடிப்படையில், இந்த நடவடிக்கைகளை ஒரு இல்லத்தில் நடந்த செயல் என்று மட்டும் விசாரித்திடாமல், விசாரனையை
தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான முதியோர் இல்லங்களுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும்.
மேலும், எலும்பு திருட்டு என்றளவில் சுருங்கிடாமல், உறுப்புகள் திருட்டு என்ற கோணத்திலும் அணுகி, உடனடியாக தமிழக முழுவதும் உள்ள அனைத்து கருணை இல்லங்களையும் விசாரித்து, முறைப்படுத்திட வேண்டும்.
உறுப்பு, எலும்பு கள்ள சந்தையை அறிந்திட, தடுத்திட, போர் கால அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளையும், மருத்துவ கல்லூரிகளையும் விசாரனை வலையத்துக்குள் கொண்டு வரவேண்டும். உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், எலும்பு பரிவர்த்தனைகளை உடனடியாக விசாரித்திட வேண்டும்.
இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு, தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விசாரனையை தமிழகம் முழுவதும் கருணை இல்லங்கள், மருத்துவமனை, கல்லூரிகளுக்கு, விரிவுப்படுத்திட வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
சுப.உதயகுமாரன்,
தலைவர்,
பச்சைத் தமிழகம் கட்சி.
25.02.2018
தொடர்புக்கு,
பா.ச.பாலசிங்
9962897070
அணு உலை எதிர்ப்பாளரான சுப.உதயகுமாரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அணு உலைக்கு எதிராக மக்கள் இயக்கம் சார்பாக இரு வருடங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக சுப.உதயகுமாரன் செயல்பட்டார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உதயகுமாரன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் மீது காவல்துறையினர் நூற்றுக்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைய இருப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்தப் போராட்டங்களிலும் சுப.உதயகுமாரன் பங்கேற்றுப் போராடி வருகிறார். அதனால் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை குறித்த விசாரணைக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று மார்ச் 6-ம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இது குறித்து சுப.உதயகுமாரனிடம் கேட்டதற்கு, ‘’எனக்கு சம்மன் கிடைத்ததும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் எனது வங்கிக் கணக்கு, ஆடிட் ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆஜரானேன். என்னிடம் சில கேள்விகளைக் கொடுத்து எழுத்துப் பூர்வமாக பதில் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்னர், என்னிடம் விசாரணை நடந்தது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன்.
என்னிடம் ஒரு அதிகாரி, ’நீங்கள் ஏன் எப்போதும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மட்டுமே முன்னெடுக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் அவரிடம், அரசுக்கு எதிராக மட்டும் அல்லாமல் மக்கள் நலனுக்கு எதிரான தனியார் நிறுவங்களுக்கு எதிராகவும் போராடி வந்துள்ளேன். குறிப்பாக, ஸ்டெரிலைட் நிறுவனம், டி.சி.டபிள்யூ., வைகுண்டராஜனின் தாது மணல் ஆலைகள் உள்ளிட்டவைக்கு எதிராவும் கூட போராடி இருக்கிறேன் என்பதை எடுத்துச் சொன்னேன்.
இந்த விசாரணையின் பின்னணியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார். குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கு வலுக்கும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எனக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமலாக்கத் துறையினரை ஏவிவிட்டுள்ளார். என்னிடம் தவறு இல்லாததால் நான் எந்த விசாரணைக்கும் பயப்படவில்லை’’ என்றார்.