|
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமத்தில் படித்தது ... உங்கள் பார்வைக்கு வேண்டி
Assalamu Alaikum,
Forwarding as received,
Masalam,
Nilofer
|
வணக்கம் என்று சொல்வதினாலும், வந்தே மாதரம் என்று பாடுவதினாலும் நாம்
இறைவனுக்கு எந்த விதத்திலும் குற்றமிழைத்தவர்களாக மாட்டோம்.
As long as the intentions are clear, everything is fine.
அகத்திலிருந்து அன்புடன் வெளிப்படும், எந்த விதமான முகமனும் வரவேற்கப்படத்தக்கது தான்.அவற்றில் உள்ளன்பும், பொது நலமும் மட்டும் தான் இருக்க வேண்டும்.
நன்றி நண்பனார் அவர்களுக்கு உங்களின் தெளிவான ஒரு பக்க சார்பில்லாத கருத்துக்கள் வரவேர்க்கப்படலாம் பலரால் ......!
வேண்டுமென்றே ஒரு கருத்து ஒரு சமூகத்தின் மீது திணிக்கப் படுவதும் அதை சகித்திருப்பதும் சிந்தனை தெளிவு இல்லாத காலத்தில் வேண்டுமானால் முடிந்திருக்கலாம்.
நன்றி நண்பனார் அவர்களுக்கு உங்களின் தெளிவான ஒரு பக்க சார்பில்லாத கருத்துக்கள் வரவேர்க்கப்படலாம் பலரால் ......!
வேண்டுமென்ற ஒரு கருத்து ஒரு சமூகத்தின் மீது திணிக்கப் படுவதும் அதை சகித்திருப்பதும் சிந்தனை தெளிவு இல்லாத காலத்தில் வேண்டுமானால் முடிந்திருக்கலாம்.
\\'நோக்கங்கள்' தெளிவாக இருக்கும் பொழுது, இறைவனுக்கு இணை வைத்தல் ஒரு பொழுதும் நிகழாது - ஒரு மொழியைக் கையாள்வதால்.\\
நோக்கங்கள் தெள்வுபட இருந்த சமூகங்களுக்கு மத்தியில் தானே பலதெய்வ வழிபாடு வந்தது....? ஒரு நினைவுக்கு வேண்டி சிலை வடித்தான் பின் கலை என்றான் தன் உன்னத நிலை மறந்து தகுதி இல்லாதவைகளை வணங்க ஆரம்பித்தான்...... தொடர்கிறான் ..... ஒரு தர்க்க ரீதியான காரணம் கூட சொல்ல மாட்டாமல் கண்மூடித்தனமாக நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு அதனை அழுத்தம் திருத்தமாக நியாயப் படுத்திக்கொண்டிருக்கும் பெரும் பெரும் பதவிகளை அலங்கரிக்கும் அறிஞர்களை .....!!!!!!!!!!!!!! சிலைவனங்கிகளை விலங்குகளை வணங்குபவர்களை உலகில் பார்க்கையில் இந்த வணக்கச் சொல்லில் இருக்கும் பொருள் குற்றம் இலேசானதாக படவில்லைதான்.
சிலைவனங்கிகளை விலங்குகளை வணங்குபவர்களை உலகில் பார்க்கையில் இந்த வணக்கச் சொல்லில் இருக்கும் பொருள் குற்றம் இலேசானதாக படவில்லைதான்.
விரும்பாத ஒன்றை திணிக்கப் பார்க்காதீங்க என்கிறேன்
உங்களுக்கு ஏன் அத்தனை கோபம் வருகிறது
அவரவருக்கு அவரவர் கருத்து பெரிது இதில் பின்னோக்கிப் போவதற்கு என்ன இருக்கிறது ....?!!!!!!!!!!
வணக்கம் சொல்லி குனிந்து கொண்டிருங்கள் உங்களை எவர் வேண்டாமென்றது ?
யோசித்துப் பார்த்தால் உங்களை முன்னெடுத்து செல்வதற்கு த்தான் குட்டக் குட்டக் வணங்க வேண்டாம் என்கிறார்கள் ....பிறர் வணங்க வணங்க குட்டவும் வேண்டாம் என்கிறார்கள்
அண்ணாச்சி கொஞ்சம் அனுசரிச்சி பேச வேண்டாம் யோசிச்சி பேசுங்க போதும்
சய்யத் ஆபாத் என்கிற அழஅகான பெயர் (நீதிமன்றத்தின் தலைமை அகம் ) உங்களைப்போன்றவர்களின் அனுசரிப்புகளால் சைதாப்பேட்டை என்று மாறிப் போனது போல
வணக்கமும் பையப் பைய அதன் இலக்கு மறந்து இடம் மாறிப் போகும் என்கிற கவலை உள்ளவர்கள் புலம்பிக்க் கொள்கிறோம்
எதிரில் வருபவர் பாய் என்று தெரிந்தவுடன் வணக்கம் சொன்னால் வேருப்பெரும் என்பது வெட்டவெளிச்சமான பின்னும் வணக்கம் சொல்வார்களா...
அவர்கள் உங்கள் நண்பர்களா நடக்கட்டும்
அய்யா ஆசாத் சாஹிப்
ஆண்டவன் சொன்னா அல்லாரும் கேட்டுத்தான் ஆவணும்
அவன் ஆதத்தை அல்ல ஒரு துரும்புக்கு தலை வணங்கு என்றால் கேள்வி கேக்காம வணங்கித்தான் ஆவணும் இல்லன்னா இபுலீசுக்கு நேர்ந்தது தான் நேரும்
> அவன் ஆதத்தை அல்ல ஒரு துரும்புக்கு தலை வணங்கு என்றால் கேள்வி கேக்காம
> வணங்கித்தான் ஆவணும் இல்லன்னா இபுலீசுக்கு நேர்ந்தது தான் நேரும்
> அது ஆண்டவன் கட்டளை (அவன் padaicchavan )...
> இது மனிதன் ... மனிதன் விருப்பம் நயவஞ்சகமா இருக்கும்போது ஏன் கட்டுப்படணும்
> என்பதுதான் கேள்வி..?
நான் இரண்டு பொருள்படும் அரபி வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
அல் ஜன்னத்தில் வெளிவந்த கேள்வி பதில் பகுதியில் சஜுதாவின் விளக்கத்தை
அந்த மார்க்க அறிஞர் எழுதியது குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள்
அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறீர்கள். எனது மடலைப்
படித்தீர்களா? சஜுதாவின் பொருள் குறித்தது தவிர எங்காவது இறையை வணங்குவது
இப்லீசு வணங்க மறுப்பது என்பதெல்லாம் இருக்கிறதா? சஜுதாவின் பொருள்
நெற்றி நிலத்தின்மீது படும்படியாக வணங்குவது மட்டுமல்ல, அது
ஒப்புக்கொள்வதையும் குறிக்கும், இதுதான் நான் முன்வைத்த பொருள். மீண்டும்
எழுதுகிறேன், இது அல்ஜன்னத்தில் வெளிவந்த பதில்.
இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் எழுதுங்கள். விவாதிக்கலாம்.
இப்படி பூச்சாண்டி காட்டுவது தேவையற்றது.
'அவன் துரும்பை வணங்கு எனச் சொன்னாலும்' என்ற பேச்சுக்கே இடமில்லை
என்பதுதான் இஸ்லாம். அவன் யாரை வணங்க சொன்னான், எப்படி வணங்கச் சொன்னான்,
எந்தெந்த நேரத்தில் வணங்கச் சொன்னான் என்பதெல்லாம் சொல்லப்பட்டு
முழுமையான மார்க்கமாக இஸ்லாம் இருக்கையில் எங்கே வந்தது அவன் துரும்பை
வணங்கச் சொன்னாலும் வணங்கவேண்டும் என்னும் ஒப்புமை? இது சரியான
ஒப்புமையா? 'அவன் துரும்பை வணங்கச் சொன்னாலும்' என்னும் வாசகமே அவனது
பெருமையைக் குறைக்கும் பாதையை நோக்குவதாக நான் உணர்கிறேன்.
இனிமேல் அவன் எதுவும் நம்மிடம் சொல்லப்போவதில்லை எனும் உறுதியான
நம்பிக்கையே இஸ்லாம். சொல்லவேண்டிய எல்லாவற்றையும் நபிமார்கள் மூலமாக
சொல்லிவைத்து மறுமை வாழ்விற்கான நற்பண்புகள் நம்மிடையே இம்மை வாழ்வில்
இருக்கின்றதா என கண்கணிக்கப்படுகிறோம் என தீர்மானமாக நம்புவதே இஸ்லாம்.
இப்படிப்பட்ட நம்பிக்கையினூடே எங்கிருந்து வந்தது 'அவன் துரும்பை வணங்கச்
சொன்னாலும்' என்னும் வாதம்?
எனக்கு மார்க்கம் சொல்லித்தந்த யாரும் இப்படி ஒரு கருத்தை
முன்வைக்கவில்லை. 'குன்' என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் அதுதான்
அவனது பலத்திற்கு அறிஞர்கள் உதாரணமாகச் சொல்வது.
இப்பொழுது வணக்கம் குறித்து:
பேராசிரியர் நன்னனின் அந்த பதிலை நானும் கேட்டேன். அது எனக்கு
ஏற்புடையதாக இல்லை. வணக்கம் என்பது தமிழ் மரபு சார்ந்ததல்ல என்பது
நீங்கள் முன்வைக்கும் கருத்தா? ஆம் என்றால் சொல்லுங்கள். பதில்
சொல்லுமுன் உங்கள் பதிலுக்கு எத்தகைய கேள்விகள் வரலாம் என்பதையும்
யோசித்துவைத்துக்கொள்ளுங்கள்.
ஏனென்றால், அது தமிழ் மரபு சார்ந்ததன்று என்று நன்னன் அவர்கள் சொன்ன
பிறகும் அந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்மணி வணக்கம்தான் சொன்னார் இன்னும்
சொல்கிறார்.
கிள்ளியூர் - கெல்லீஸ்
ஹாமில்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் வாராவதி
கோடா பாக் - கோடம்பாக்கம்
சாய் பாக் - சேப்பாக்கம்
இதுல முன்னது ரெண்டுக்கும் வரலாற்று ஆதாரங்களக் காட்ட முடியும். பின்னது
ரெண்டுக்கும் வரலாற்று ஆதாரம் காட்ட முடியாது, ஏன்னா இராயப்பேட்டை
அமீர்மஹால்ல இருந்த நவாப் ஆப் ஆர்க்கோட் (ஆற்காட்டு நவாப்தான் ச்சும்மா
பீட்டர் வுட்டேன்) கோடம்பாக்கத்துல போயி குதுரயக் கட்டுனத வரலாற்று
சேதிங்க கெடையாது. அதே மாதிரி, சேப்பாகம் போயி டீ குடிச்ச சேதியும்
கெடையாது. எல்லாம் அப்படியே சொல்றது, நாமளும் கேட்டுக்கிட்டுப் போகணும்.
அவ்வளவுதாங்க ஹாரூன்ஜி.
எந்த நீதிமன்றம், யாரு ஆட்சிக்காலம், அப்படீனெல்லாம் கேக்கலாம்.
ஆற்காட்டு நவாப் சென்னைல இருந்தாங்க, தாசில்தார் சமாசாரமெல்லாம் உருது
பாதி கலந்து வர்ரர்து டெல்லி சுல்தான்களாலதான தவிர இங்க ஆற்காட்டு நவாபால
இல்லை, அப்புறம் பேட்டை, பாக்கம் எல்லாத்துக்கும் நாம் பார்சி, உருது,
அரபி மூலத்தத் தேடிப்போனா அவ்வளவுதான்.
> வந்தே மாதரம் பாடலைப் பொறுத்தவரை, பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரின்
> வெறியூட்டும் ஆனந்த மடம் எனும் வங்க நாவலின் சூழல் தான், அறிஞர்கள் பலருக்கு
> அந்த பாடலை ஒரு சமத்துவ நாட்டின் தேசியப்பாடலாக அங்கீகரிக்க மனம் ஒப்புவதில்லை
> என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
> இது உண்மை தானே?
உண்மை தான். ஆனந்த மடம் என்ற நாவலின் நாயகன், முஸ்லிம்களையெல்லாம்
அழித்து ஒழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டு, அதற்கான அறைகூவலை
விடுக்கிறான். அவன் அக்காரியத்திற்காக, இந்துக்களை (முஸ்லிம்களை
கருவறுப்பது என்ற நோக்கத்தின் பொருட்டு) ஒன்றிணைப்பதற்கும் எழுதிய,
நாவலில் அவன் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல். கதையின் மைய நோக்கம் இஸ்லாமிய
மக்களுக்கு எதிரானது என்பதால், அதை இஸ்லாமியர்கள் பாட மறுத்தனர். அது
அரசியல். மதம் அல்ல. மற்றபடி அந்த பாடல், தேசத்தைப் புகழ்ந்து, பிறந்த
மண்ணை புகழ்ந்து பாடப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அதனால், இதை
பாடுவதில் (அல்லது வாசிப்பதில்) எந்த மதகாரணங்களும் குறுக்கிடுவது
அவசியமில்லை. அரசியல் நீதியாக நீங்கள் மறுத்தால், அது வேறு விஷயம்.
அவ்வளவு தான். இதில் மதங்களைப் புகுத்துவது தேவையில்லாதது.
அரசியல்வாதிகளின் காலில் விழும் அவலத்தையெல்லாம் விவாதித்து நேரத்தை
வீணடிப்ப்பதில் என்ன புண்ணியம் இருக்கப் போகிறது. விடுங்கள், அந்தக்
கழுதைகளை.
On Nov 18, 11:49 am, "ஒன்றே [நன்றே] சொல்" <kmlra...@gmail.com> wrote:
> 2008 நவம்பர் 18 00:04 அன்று, நண்பன் <nanb...@gmail.com> எழுதியது:
> நன்றி நண்பனார் அவர்களுக்கு உங்களின் தெளிவான ஒரு பக்க சார்பில்லாத
> கருத்துக்கள் வரவேர்க்கப்படலாம் பலரால் ......!
Islam, ….involves the keen perception that life cannot forever be kept
in leading strings; that in order to achieve full self-consciousness
man must finally be thrown on his own resources.
(Muhammed and the Quran – Rafiq Zakaria)
வாழ்க்கை எப்பொழுதுமே வழிகாட்டி என்ற தும்பில் கட்டப்பட்டு உழல்வதாக
இருக்க முடியாது. அவன் தனது சுயத்தின் முழுவடிவையும் கண்டுணரும் வகையில்
அவன் அவனது ஆதாரங்களுடன் தனித்து விடப்பட வேண்டும்.
The call of Islam therefore concerns, above all, the remembrance of a
knowledge deeply embedded in our being, the confirmation of a
knowledge that saves, hence the soteriological function of knowledge
in Islam. Islam addressess the human being not primarily as will, but
as intelligence. If the great sin in Christianity is disobedience,
which has warped the will, the great sin in Islam is forgetfulness and
the resulting inability of the intelligence to function in the way
that God created it as the means to know the One. That is why the
greatest sin in Islam and the only one God does not forgive is shirk,
or taking a partner unto God, which means denying the Oneness of God
or tawhid.
(The Heart of Islam – Enduring Values for Humanity by Seyyed Hossein
Nasr)
மற்றெவற்றைக் காட்டிலும், இஸ்லாத்தின் அழைப்பு கவனம் கொள்வது, நம்முள்
ஆழ்ந்துறைந்திருக்கும் (இறையைப் பற்றிய) அறிவின் பரிமாணத்தை
நினைவிலிருத்துவதைக் குறித்தானது. நம்மைக் காப்பதை நிச்சயப்படுத்தும்
அறிவின் பரிமாணம். அதுவே இஸ்லாத்தின் மீட்டெடுக்கும் பண்பைக் கொண்ட
ஞானம். இஸ்லாம் மனிதர்களை ‘ இச்சையுடைத்தவனாக ’ முதன்மைப்படுத்தாமல்,
அவனது அறிவை சுட்டுகிறது. இச்சைகளின் வடிவங்களை உருக்குலைக்கும்
கீழ்ப்படியாமை (ஆதிபாவம் - ஆணை மறுத்து கனி உண்ணுதல்) என்பது
கிறித்துவத்தில் பெரும் பாவமாகக் கருதப்படுகையில், இஸ்லாத்தில்,
மறத்தலும் அதனால் விளையும் அறிவின் இயலாமையினால், இறைவன் எவ்வகையில்
அறிவையுண்டாக்கினோ, அவ்வகையில் இறைவனின் ஒருமையுணரும் தன்மையிழத்தலையுமே
பெரும்பாவமாகக் கொள்கிறது. அதனால் தான் இறைவனை மறந்து, (இணைவைத்தல் -
ஷிர்க்) இறைவனின் ஒருமை குறித்த அறிவை இழத்தலின் மூலம் அவனுக்கு சமமாக
மற்றொன்றைப் படைத்தலும் பாவமாகக் கொள்ளப்படுகிறது
தனித்த இறைவன், ஒவ்வொரு மனிதனுக்குமுண்டான ஆத்ய செய்தியாக சொல்வது -
இறைவனிடத்தில் அடிபணியுங்கள் - எவனது முழுமையின் முன்பு மற்றனைத்தும்
இருப்பற்றுப் போகிறதோ, அவனிடத்தில் அடிபணியுங்கள். மேலோட்டமாகப்
பார்த்தால், கடவுளின் முன் நம்மை அர்ப்பணித்தல் என்றே தோன்றும். மற்றொரு
தளத்தில், அவனது பூரணத்துவத்தின் முன்பு, நமது ‘இல்லாமை’ குறித்த
விழிப்பே (அறிவே) என்றாகும். (இறைவனிடத்தில் அடிபணிதல் என்றாகும்) அதைத்
தான் குரானும் சொல்கிறது. “All that dwells in the heavens and the
earth perishes, yet there abideth the Face of thy Lord, Majestic,
Splendid” (55:26-27)
இஸ்லாத்தின் பெயர்க்காரணமும் இந்த யதார்த்தத்திலிருந்து தான் வருகிறது.
அல்-இஸ்லாம் என்பதன் பொருள், அடிபணிதல், சரணடைதல் என்பது தானே! அதையும்
தாண்டி, தன் ஒன்றுமற்ற தன்மையை இறைவனின் பூரணத்துவத்தில் அடங்கக்
கொடுப்பது. இந்த வகையில், ஏக இறை வணக்கத்தில், வடிவ வழிபாடுகளற்று
வழிபடும் அனைத்து மனிதர்களும் - எம்மதமாயினும் - இஸ்லாத்திற்கு ஏற்பு
உடையவர்களே. உலகின் அனைத்து மதங்களுமே, இந்த அடிபணிதலின் தத்துவத்திலே
தான் கட்டமைக்கப்பட்டிருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. அதனால், அல்-இஸ்லாம்
என்ற நிலை, இறைவனிடத்தில் அடிபணிந்திருத்தல் என்ற ஒன்றை மட்டுமே சாரும்.
அந்த நிலைக்கு மத எல்லைகள் கிடையாது.
இணைவைத்தலை எந்த தளத்தில் வைத்துப் பேசுகிறார்கள் என்று இப்பொழுதாவது
புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இறைவனை உணர்வதற்கு, நீங்கள்
அறிவுத் திறன் மிக்கவராக இருக்க வேண்டும். தனது இயலாமையைப் புரிந்திருக்க
வேண்டும். இறைவனின் மகாபெரும் சக்தியை உணர்ந்திருக்க வேண்டும்.
ஒரு குடிசைக்குள் உட்கார்ந்திருப்பவனுக்கு, அவனது கூரை தாண்டிய வானம்
பூரணத்துவமாக இருக்கலாம். விண்கலம் ஏறி, வான் வெளி பறப்பவனுக்கு, அவனது
அறிவு விரியும் வேகத்தை விட, இந்தப் பிரபஞ்சம் விரியும் வேகம் அவனை
ஒன்றுமில்லாதவனாக்கலாம். ஆக, இறைவனை உணரும் வகையில், ஒருவனின் அறிவின்
விசாலமே அதிமுக்கியமானது. அதனாலயே, அறிவைப் பெறும் வகையில், கல்வி
இஸ்லாத்தில் கட்டாயக் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில், கணிதத்தில், மருத்துவத்தில், விஞ்ஞானத்தில்,
வானசாஸ்திரத்தில், இலக்கியத்தில் என்று அறிவின் விசாலத்தை, அதன்
உச்சத்தைத் தொட தொடர்ந்து முயன்றவர்கள் தான் இஸ்லாமியர்கள். இன்று தங்கள்
பெண் மக்களை கல்வி சாலைக்கு அனுப்ப மாட்டேன், ஆங்கிலம் படிக்க மாட்டேன்
என்று குறுகிய புத்திமான்களின் வலையில் வீழ்ந்து அழிந்தோம்.
இனியும், இந்த பித்தலாட்டங்கள், அரங்கேறாது. கூடாது.
இறைவனின் முன் தனது ஒன்ருமின்மையை உணர மறுத்தல் ஒன்றின் மூலமே இணை
வைத்தல் நிகழும் என்ற புரிதல் இருந்தால், மற்ற எதுவும், இணை வைத்தலாகாது.
அதில்லாமல், வணக்கம் சொல்வது, வந்தே மாதரம் பாடுவது, பக்கத்து
வீட்டுக்காரனின் விழாக்களில் போய் நிற்பது, அன்பாக அடுத்த வீட்டுக்காரன்
நெற்றியில் திலகமிட்டுவிட்டால் பதறிப் போய் விடுவது என்பதெல்லாம்
இணைவைத்தல் ஆகாது.
மக்களே, இன்னமும் பழங்குடிகளாக இருக்காதீர்கள். அறிவார்ந்த உலகிற்கு
வாருங்கள். இறைவன் கொடூரமானவன் அல்ல. அவனுக்கு உங்களைத் தெரியும். எது
இணை வைத்தல் என்பதுவும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.
வாழ்த்துக்கள் பாலா.
இதழின் வருகைக்காக காத்திருக்கிறேன்.
சென்னையில் பண்புடன் நண்பர்களில் ஒருவருக்கு சில இதழ்களை அனுப்பிவைத்தால் பண்புடன் சந்திப்பில் பகிர்ந்துகொள்ளவர்.
அல்லது எனக்கு அனுப்பும் இதழ்களில் கூடுதல் பிரதி அனுப்பினால் நான் பண்புடன் சென்னை நண்பர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்
பாண்டித்துரை
--
www.pandiidurai.wordpress.com
சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்
Best Wishes. Couldn't write in Tamil. Sorry.
(What? Panbudan is suffering from lack of space?!! It seems, two
interesting subjects are competing each other for space! May be
somebody would look into it and allocate proper space to ecah of
them... :-))
அன்பான ஆசாத் சாஹிப்
நான் பூச்சாண்டியும் காட்டவில்லை நீங்களும் குழந்தை இல்லை ...
காலத்துக்கு ஏற்ப பொருள் விளங்கிக்கொள்ளத்த் க்கவாறு பல விஷயங்கள் உண்டு அவைகளைப் பற்றியல்ல இங்குள்ள விமர்சனகள்
ஒரு சொல் உணர்த்தும் பொருள் நலன் விளைவிக்காது எண்டு அறிந்த பின்னரும் அதனை தொடர்வது வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றிய விவாதமிது நான் கேட்டிருந்த கேள்விக்கு இன்னமும் பதில் வரவில்லை
"நோக்கங்கள் தெள்வுபட இருந்த சமூகங்களுக்கு மத்தியில் தானே பலதெய்வ வழிபாடு வந்தது."...?
வணக்கம் என்கிற சொல் வழஅக்கத்தில் உள்ள மாற்றுமத அன்பர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளட்டும் தடுத்தது யார் ...? என் சமுகம் அதனை விரும்பவில்லை ...
அவர்கள் முகம் சுளிப்பார்கள் என்பதற்காக நான் என்னுடைய சுயம் இழக்க வேண்டுமா என்கிறேன் ...?
என் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வந்து பிராமண நண்பன் ஒருவருக்கு அருமையான ஆட்டு பிரியாணி சுவையானது உடம்புக்கு உகந்து எண்டு ஊட்டினால் நானெல்லாம் நல்ல நண்பனாக இருக்க தகுதி அற்றவன் என்பதை சொல்லாமல் சொல்வதாகாதா...?
அதுமட்டுமா ஒரு கருத்து தீமை விளைவிக்கும் நோக்கத்துடன் புழக்கத்துக்கு வந்து விட்டதை கண்டு கொள்ளும் ஒருவர் அந்த தீமை அரசியல் ரீதியாக சரியானது மதரீதியாக சரியற்றது என்றேல்லமா அலசிக் கொண்டிருப்பார் என்ன த்தை சொல்ல .... இப்படி சொல்வது அவர்களையும் கொஞ்சகாலம் ஆள்வதற்கு அனுமதித்துத்தான் பார்க்கலாமே என்று முடிவெடுத்த கதைபோல அல்லவா இருக்கிறது.
தெளிவானவைக்கும் தெளிவற்றவைக்கும் இடைப்பட்ட ஒன்றான சந்தேகத்துக்கு உட்பட்ட விடயங்களை விட்டிவ்ட்டு தெளிவாக உள்ளதை மட்டும் எடுத்துக் கொள்ள கறக்கவேண்டும் நாம் சந்தேகமாக உள்ளதை சாக்கு போக்கு சொல்லி க்கொண்டு அனுசரித்து போக முயன்றால் விபரீதம் தான் விளையும் ... இப்போதும் பூச்சாண்டி காட்டவில்லை உள்ளதைத்தான் சொல்கிறேன்
உங்களது இந்தப் பதில் தெளிவாகவே இருக்கிறது.
ஹாரூன்ஜி,
பேராசிரியர் நன்னனின் பார்வைகளுடன் என்னால் முழுதுமாக ஒத்துப்போக
இயலவில்லை. மொழிக்கலப்பிற்கு நன்னன் அவர்கள் வைத்திருக்கும் அளவுகோல்
சிறிது வித்தியாசமானது. சமக்கிருதத்தைத் தொட்டாலே அதனை மதத்துடன்
தொடர்புபடுத்தி இனத்துடன் தொடர்புபடுத்தி எங்காவது ஒரு புள்ளியில் இது
தமிழ் பண்பாட்டைக் கெடுப்பதற்காக சமக்கிருதத்தினர் செய்த சூழ்ச்சி
என்பதான பர்வையை முன்வைக்கிறார். அப்படி நன்னன் அவர்களால் வைக்கப்பட்ட
பார்வைதான் வணக்கம் சொல்வதில் இறைவணக்கம் கலப்பது. வணக்கம் சொல்வது
தொடர்பான விவாதங்களில் இணைவைப்பதை மட்டுமே பேசிவந்த இஸ்லாமியர்கள்
இப்பொழுது புதிதாக அதனை தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்னும் பார்வையை
முன்வைக்கிறார்கள். இதன் தோற்றுவாய் நன்னன் அய்யா அவர்களா என்பதை நான்
அறியேன்.
அத்வைதம் இஸ்லாமியர்களின் கோட்பாட்டில் கிடையாதென்பது தெளிவான
விடயமாயிற்றே, வணக்கம் சொல்வதன் ஒரே பொருள் அத்வைதத்தை முன்னிறுத்திதான்
என்பதை அறுதியிட்டு யாரேனும் நிரூபித்தார்களென்றால் வணக்கம் சொல்வதை
இஸ்லாமியர்கள் தவிர்த்துக்கொள்ளத்தான் வேண்டும், அதில் மாற்றுக் கருத்து
கிடையாது. தெளிவான நிரூபணங்கள் இல்லாமல், வணக்கம் என்பது இறைவணக்கத்துடன்
தொடர்பானது என்று வார்த்தைகளின் அர்த்தத்தில் மேம்போக்கான பார்வைகளை
முன்வைத்தார்களென்றால் ஏற்க இயலாது.
நான் உலவிய இஸ்லாமிய வட்டாரங்களில் வணக்கம் சொல்வதற்கு எதிரான பார்வையை
வைத்தவர்கள் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர....' இப்படியாகவே
துவங்குவார்கள். சொற்கட்டுகளின் பொருள் ஒன்றே ஒன்றுதான் என்பதை ஏற்க
இயலுமா? கடிகாரத்துக்கும் 'சஆ'தான் நேரத்துக்கும் 'சஆ'தான் மணிக்கும்
'சஆ'தான் என வேர்ச்சொல்லிலிருந்தே மற்றதை விரித்துச் செல்லும் அரபியில்
பாண்டித்யம் பெற்றிருக்கும் இஸ்லாமியப் பெரியோர்களுக்கு, வணக்கம்
சொல்லிவிடாலே அத்வைதத்தை ஆதரிக்கிறோம் என்று பொருளாகிவிடாது, அது
வாழ்தாகக்கூட இருக்கலாம், ஒருவேளை தோற்றுவாய் அத்வைதத்தை
ஆதரித்திருந்தாலும் இன்றைக்கு அதன் பொருள் வாழ்த்தாக ஆகியிருக்கலாம்,
ஏற்றுக்கொள்ளலாம் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் ஆகாது.
மொழிவல்லுனர், கலாசார ஆய்வாளர்கள் இவ்விருவரும் பாரபக்கமின்றி ஆய்ந்து
முடிவெடுக்கவேண்டிய விடயத்தை சாதாரணமாக நாம் வணக்கம் சொன்னால்
இணைவைப்பதற்கிணையாகும் என்று பேசுவது எப்படிச் சரியாகும்?
அத்வைதக் கருத்தை நிக்கி இன்னொரு பார்வையில் இதனைப் பார்த்தால்,
மேட்டுக்குடியினரின் ஆணவப் போக்கால் மற்றவர் தன்னை இறையையாக நினைத்து
வணங்கவேண்டும் என்பதன் அடிப்படையில் வணக்கம் சொல்வதை
வழக்கத்திற்குள்ளாக்கினார்கள் என்றால், அங்கே வணக்கம் சொல்லிக்கொள்வது
இருவழித் தொடர்பல்ல என்பது நிரூபணமாகிறது. கீழ்க்குடியினர்
மேட்டுக்குடியினரைப் பார்க்கும்போது 'வணக்கம்' சொல்வார், அப்போது
மேட்டுக்குடியினர் 'நன்றாக இருங்கள்' என்பார் இப்படியான வழிமுறைதான்
வணக்கம் என்றால், அது இன்றைக்கு எங்கே? மேட்டுக்குடியினரும் மற்றவரும்
வணக்கம் சொல்லிக்கொள்ளும்போதும் வணக்கத்த்திற்கு வணக்கம்தானே பதிலாக
வருகின்றது.
எனக்குத் தெரியவேண்டுவதெல்லாம் வணக்கம் என்ற சொல் அத்வைதக் கருத்தை
மட்டுமே முன்வைக்கிறதா? இல்லை என்கிறேன் நான். அதற்கான எனது பக்க நியாயமக
நான் சொல்ல விரும்புவது இதனை அத்வைதமென அணுகுவதைவிட 'மரியாதை செய்கிறேன்'
என்ற அர்த்தத்தில் அணுவது எனக்கு இணக்கமாகிறது.
மலிக் ஒருவன்தான் என அடிக்கடி இஸ்லாமியப் பெரியோர்கள் கூறுவர். மர்ஹூம்
மன்னர் பஹத் அவர்களை எப்படி அழைத்தோம்? மலிக் பஹத் இப்னு அப்துல் அஜீஸ்.
மலிக் என்னும் வார்த்தையை மன்னன் என்னும் அளவில்தானே எடுத்துக்கொண்டோம்.
இப்போதைய சவூதி மன்னரின் பட்டயம் என்ன? ஹாத்தம்அல் ஹரமைன்அல் ஷெரிபைன் -
Custodian of The Two Holy Mosques. இதற்கான பொருளை நாம்
எப்படிக்கொள்கிறோம், சாதாரணமாகத்தானே எடுத்துக்கொள்கிறோம். தவறில்லைதானே.
அதேபோலத்தான் வணக்கம் என்னும் வார்த்தையின் பொருள் வாழ்த்துச்சொல்வதின்
ஒரு அணுகுமுறையாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டுமேயன்றி இதில் இணைவைத்தலை
இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
இந்த இழையில், பாலாவின் செய்தியும், வாழ்த்துகளா, வணக்கமா என்ற விவாதமும்
மாறி, மாறி நிகழ்ந்த்து கொண்டேயிருக்கிறதல்லவா, அதைத் தான்
குறிப்பிட்டேன்.
குழப்பமேற்படுகிறது. மேலும், பலர் இந்த இழையை தவிர்த்து விடுவதால், பாலா
சொல்ல விரும்பிய தகவல் பல நண்பர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா என்ற
அச்சமும் இருக்கிறது.
பாலா மீண்டும் இந்தப் பதிவைத் தனியே தலைப்பிட்டு கொடுத்தால், இது
வரையிலும் வாசித்திராதவர்கள் வாசித்து, அவர்கள் நடத்தும் பத்திரிக்கையைப்
பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்று நினைக்கின்றேன்.
அன்புடன்
நண்பன்
தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் எழில்ஜீ.
நான், எனக்கு எதிரிலிருக்கும் மனிதரின் ஆன்மாவின் உள்ளிருக்கும் இறையை
வணங்குவதான அமைப்பாக 'வணக்கம்' எனும் சொல் இருப்பதாக எங்களில் சிலர்
என்னிடம் கருத்துகளை முன்வைத்துப் பேசுவதுண்டு. அதன் அடிப்படையில்
குறிப்பிட்டதுதான் அய்யா எனது கருத்து. இது எங்களிடையே (இஸ்லாமியரிடையே)
சில நாள்களாகவே நடந்துவரும் கருத்துப் பரிமாறல்.
> நிச்சயம் கோவிலில் செய்யும் வணக்கத்திற்கும் சக மனிதருக்கு செய்யும்
> வணக்கத்திலும் நல்ல வித்தியாசம் மனதில் இருந்துதான் இருக்கிறது.
என்னைப்போன்ரோர்கள் முன்வைக்கும் கருத்து இதுதான் எழில்ஜீ. சிலர் அந்த
சொல்லைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்கள். காரணத்தை சரியாகச் சொல்லிவிட்டு
தவிர்க்கச் சொல்லுங்கள் மேம்போக்கான விளக்கங்கள் வேண்டாம் என்கிரோம்
நாங்கள்.
தெளிவை நோக்கியே நாங்கள் செல்வதாக நினைக்கிறேன்.
நீங்கள் சொன்னவற்றில் சிலவற்றுடன் உடன்படுகிறேன். சிலவற்றில் மாறுபட
வேண்டியதிருக்கிறது.
வணக்கம் தமிழ் மொழியின் ஆதிகாலத்தில் இல்லவேயில்லை என்பதைச்
சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வாழி, வாழிய வாழி என்பதே பழக்கத்தில் இருந்த வாழ்த்து என்று
இலக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். இந்த வணக்கம் என்பது, பின்னர்
ஆர்யர்களுடன் கலந்து வாழ நேரிட்ட பொழுதிலே பழக்கத்திற்கு வந்தது என்பதே
அவர் வாதம். அவர் அதை சமயத்துடன் இணைத்துப் பேசினாரா, இல்லையா என்பது
நாம் அதை நோக்கும் விதத்தில் தான் இருக்கிறது என்கின்றேன்.
எப்படியிருந்தாலும், வணக்கம் என்ற வார்த்தையைக் குறித்த மனக்கிலேசம் நம்
நண்பர்களுக்குத் தேவையேயில்லை. வணக்கம் என்ற வார்த்த்தை நீங்கள்
சொன்னதைப் போல, மறுமொழியாக வணக்கம் என்ற சொல்லைத் தான் எடுத்து வருகிறது.
அரபு மொழியில், ஒருவர் ஒரு வாழ்த்தைச் சொன்னால், அதைவிட பலமடங்கு
சிறப்பான வார்த்தையைக் கொண்டு, வாழ்த்துவது என்பது ஒரு மரபாக இருக்கிறது.
ஆனால், நமது மொழியில், ஒரு வாழ்த்தை அப்படியே வாழ்த்தாக சொல்வது தான்
வழக்கமாக இருக்கிறது. இருவரும் சமம் என்ற அளவில் தான் அந்த வார்த்தைப்
பயன்படுத்தப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் வேற்று மொழியினர், நமஸ்காரம் என்று சொன்னால் கூட,
நாமும் அதையே சொல்கிறோம். இத்தனைக்கும் நமஸ்கரித்தல் என்ற சொல்லிலிருந்து
வந்தது தான் அந்த வார்த்தை. நமஸ்கரித்தல் என்ற தாழ்பணிதலையே வாழ்த்து
விளியாகவும் பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் அவ்வாறு கூட இல்லை.
நான் உன்னை தாழ் பணிகிறேன் என்ற பொருளில் வணக்கம் என்ற சொல்
பயன்படுத்தப்படவேயில்லை.
மேலும் அத்வைதம் பற்றி சரியாகக் குறிப்பிட்டீர்கள். இஸ்லாத்தில் அத்வைதம்
என்றெல்லாம் ஒன்றில்லை. இஸ்லாத்தின் ஆன்மீகம், ஒரே வரியில் முடிந்து
போய்விடுகிறது. 'There is no God, but God' என்ற ஒற்றை வரியுடன்,
இஸ்லாமிய ஆன்மீகம் முடிந்து விடுகிறது. இதைப் புரியாதவர்கள் தான்,
என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏன் இத்தனை சிரமப்படுகிறார்கள்,
இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள என்று. நடைமுறை வாழ்க்கை குறித்து, இஸ்லாம்
பேசுவதைப் போன்று வேறு எந்த மதமும் பேசவில்லை. அவற்றைப் புரிந்து கொள்ள
முயற்சிக்காமல், இல்லாதவற்றைப் பற்றிக் கவலை கொள்வது அத்தனை தேவையா,
என்ன?
நீங்கள் நாகூர் ரூமி எழுதிய 'வார்த்தைகளின் சீனப்பெருஞ்சுவர்' என்ற
புத்தகம் படித்திருக்கிறீர்கள் தானே?
மற்றவர்களும் அதைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். சில்வற்றை ஏற்கலாம்.
சிலவற்றை ஏற்க முடியாது என்ற நிலையில், அருமையான விவாதத்திற்குரிய
புத்தகம்.
(உங்களுடன் விவாதிக்கும் பொழுது, ஏனோ, புத்தகங்களைக் குறித்தும் பேச
வாய்ப்பு கிடைக்கிறது, அடிக்கடி. தொடரட்டும்.)
அதிலும், இணையத்தளம் வசதியாக ஒருவரின் அடையாளங்களை மூடி மறைத்து
விடுகிறது. அதனால், நேரிலே முகம் பார்த்து பேசத் தயங்கும் விஷயத்தைக்
கூட, எளிதாகப் பேசி விட்டு சென்று விடுகிறார்கள். மனசாட்சியற்ற ஒரு உலகம்
இயங்குகிறதென்றால், அது இணையம் தான். அந்த வழியைத் தவறாகப் பயன்படுத்திக்
கொள்பவர்களால் தான், விவாதம் என்ற பெயரில் அற்பத்தனங்கள்
நிகழ்த்தப்படுகின்றன. ஒருமுறை நானும், ஆசாத்தும் விவாதித்துக் கொண்டே
வந்தோம் - ஆசிப்பின் வீட்டிலிருந்து திரும்பும் சமயம்.
விவாதம் - இணையத்தில் இயங்குபவர்கள் நேர்மையுடன் இயங்க இயலாதா? என்ற
கேள்வி குறித்து தான். அப்பொழுது நான் சொன்னேன் - அனைத்து சேவை
வழங்குபவர்களும், தங்கள் சேவையைப் பெற - தங்களது அடையாளங்களை நிரூபிக்க
வேண்டும் என்று சொல்லட்டும் - பின்னர் பாருங்கள், 90% சதவிகித இணைய
உபயோகிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று. எப்படி, நிரூபிப்பது -
பாஸ்போர்ட் காப்பி, ரேஷன் கார்டு அட்டை, தேர்தல் அட்டை, என எத்தனையோ
வழிகள். மில்லியன் கணக்கில் இருக்கும் இவற்றை இனி கட்டுப்படுத்துவது
சாத்தியாமா, என்றால், நிச்சயம் சாத்தியம் தான். இன்று கைபேசிகள் கணிணியை
விட அதிகம் பயன்படுத்தப்படுகிறது - ஆனால், அதைப் பெறுவதற்கு
அநாமதேயங்களால் முடியாது. ஒரு முகவரியைக் கொடுக்க வேண்டும். சில நபர்கள்
அங்கேயும் ஏமாற்றலாம். ஆனால், நிச்சயமாக இன்றைய அநாமதேயங்கள்
போன்றிருக்காது.
தங்கள் அடையாளங்கள் நிச்சயமாகும் பொழுது, தாங்கள் என்ன பேசுகிறோம் என்ற
அச்சம் வரும். ஒவ்வொரு தளத்தில் ஒரு முகமூடி அணிவதும், காழ்ப்புணர்ச்சி
மிக்க செய்திகளை - திரித்து ஒரு மதத்தின் மீது இழிவுண்டாக்குவது போல்
எழுதுவதுவும், பின்னர் மற்றொரு தளத்தில் நலம் விரும்பியாக மாறுவதுவும்
என்று பல இழிந்த பிறவிகள் ஒழிந்திட முடியும். இந்த வகையான பொறுப்பேற்கும்
வகையில் இணையம் மாறும் வரையில், எங்கும் இந்த வகை விவாதங்கள் நிகழத் தான்
செய்யும்.
ஆனால், பாருங்கள் எழில், இந்த விவாதம் எந்தக் காழ்ப்புணர்ச்சியுமின்றி,
உண்மையாகவே ஒன்றை அறிந்து கொள்ளும் பொருட்டு, ஒரே மதம் சார்ந்தவர்களால்
நடத்தப்படுகிறது. அதில் பிறரும் ஆக்கபூர்வமாகக் கலந்து கொள்வதை
வரவேற்கிறோம். ஆனால், இதைக் குறித்து சலிப்படைய வேண்டிய அவசியமில்லை.
இந்த மாதிரி விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டும். துர்நோக்கம் கொண்டு,
சலிப்பூட்டும் வகையில் கட் அண்ட் பேஸ்ட் மாஸ்டர்களைப் போன்றதல்ல, இந்த
விவாதம்.
> யாருமே அவரவர்
> மத நம்பிக்கையை அல்லது கொள்கையை இழக்க போவதில்லை.
விவாதங்களினால், நம்பிக்கையை யாரும் இழக்கப் போவதில்லை தான்.. ஆனால்,
நம்பிக்கை பலம் பெறும் பாருங்கள். மேலும், ஒரு மதத்தின் ஊடாக
நடத்தப்படும் இந்த விவாதத்தின் நோக்கம் மோதல் அல்ல - தெளிவு.
பெறுபவர்கள், அதைப் பெற்று கொள்வார்கள்.
ஆகையால், தொடரட்டும் - இந்த விவாதம்...
அவ்வளவே தான்.
ஆனால், அதற்காக மதத்தை எந்த ஒரு தளத்திலும் அணுகக் கூடாது என்று
ஒரேயடியாக விட்டு விலகிப் போவதும் கூடாது தான். நம்பிக்கையாளர்கள் என்ற
பெயரிலே, அங்கு நம்பமுடியாத விஷயங்களும் நடந்தேறி விடக் கூடும்.
கண்காணிப்பு தேவை. தலையீடு இல்லாத கண்காணிப்பு. அடக்குமுறைகள்
நம்பிக்கைகளின் பேரிலே தான் நடத்தப்படுகின்றன. ஒடுக்குமுறைகள் நம்பிக்கை
என்ற பெயரிலே தான் அரங்கேறுகின்றன. பெண்கள் நம்பிக்கைகளின் பேரிலே தான்
இழிவு செய்யப்படுகிறார்கள். ஆக, நம்பிக்கை என்பது என்ன என்ற அடிப்படை
கேள்வியே விவாதிக்கப்பட வேண்டியதாகி விடுகிறது.
அவரவர் மதம் அவரவர்க்கு, அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதெல்லாம், ஒரு
அடிப்படை வாதம் மற்றொரு அடிப்படை வாதத்திடம் ஆதரவு தேடுகிறது என்பது
மட்டுமே. விவாதங்கள் இல்லாமல், இனிதாக இருப்போம் என்ற பேச்செல்லாம்,
"நான் என் மதத்திற்குள் நாட்டாண்மை பண்ணிக் கொள்கிறேன், நீ உன்
மதத்திற்குள் நாட்டாண்மை பண்ணிக் கொள் - நாம் இருவர் மட்டும் மோதி
காயப்பட்டுக் கொள்ளவேண்டாம்" என்று சொல்வது போல் ஆகிவிடும். ஆக,
விவாதங்கள், விமர்சனங்கள் கண்டிப்பாகத் தேவை.
நாம் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவோம், கண்டிக்கப்படுவோம் என்பது கூட,
சிலரையாவது, சிந்தித்து, சமூகத்தின் பிற அங்கங்களுடன் உண்டான சீரிய
உறவிற்கு வழி வகுக்குமாறு கேட்கத்தூண்டும். இந்தப் புரிதல் இருப்பவர்கள்
- விவாதத்தினால், மனக்கசப்பு அடைய மாட்டார்கள், நம்பிக்கை இழக்க
மாட்டார்கள், மாறாக, தங்களைப் பற்றி எத்தகைய எண்ணங்கள் பிறரிடமிருக்கிறது
என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகத் தான் கருதுவார்கள்.
ஆனால், எப்பொழுது இது சாத்தியம்?
எதிரில் இருப்பவர் நம்பிக்கைகுப் பாத்திரமானவராக இருந்தால்.
காழ்ப்புணர்ச்சி கொண்டு விமர்சிப்பவர்களாகத் தங்களை ஏற்கனவே நிரூபித்து
விட்டவர்கள், நலம் விரும்பிகள் மாதிரி தோற்றம் தருபவர்கள் என வரும்
பொழுது, அதன் உள்நோக்கங்கள் விளங்கிவிடும் பொழுது தான், விவாதங்கள்
கசப்பை நோக்கி நகர்கின்றன.
அவ்வாறில்லாமல், விவாதங்கள் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். ஏனென்றால்,
ஒவ்வொரு மதமும் தன்னுள்ளே கொன்ண்டிருக்கும் கருத்துகளை அவ்வப்பொழுது,
காலத்திற்க்கேற்ப உரசிப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.
ஆக, நீங்கள் சொல்லக்கூடிய விவாதங்களை விட்டுவிடுவோம், என்பது,
அடிப்படைவாதிகளுக்கும், ஒடுக்குமுறையாளர்களுக்கும் சிவப்பு ரத்தின
கம்பளம் விரித்து விடுவது போலாகிவிடும்.
I will not let them have a free run, Boss.
On Nov 19, 11:22 pm, "ezhil arasu" <nand...@gmail.com> wrote:
> நண்பன்...
>
> read more »
நீங்கள் நாகூர் ரூமி எழுதிய 'வார்த்தைகளின் சீனப்பெருஞ்சுவர்' என்ற புத்தகம் படித்திருக்கிறீர்கள் தானே?
மற்றவர்களும் அதைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். சில்வற்றை ஏற்கலாம். சிலவற்றை ஏற்க முடியாது என்ற நிலையில், அருமையான விவாதத்திற்குரிய புத்தகம்.
ஆனால் எங்கேயும் இதே கதைதான். மதத்தில் வாதிட என்ன இருக்கிறது? யாருமே அவரவர் மத நம்பிக்கையை அல்லது கொள்கையை இழக்க போவதில்லை. அதை மீறி அல்லவா இங்கே இணைந்திருக்கிறோம்.
அய்யா ஆசாத் சாஹிப் அவர்களுக்கு
நான் ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் வணக்கம் என்கிற சொல்லின் பொருள் உருவானதன் மூலத்தையும் போட்டு உடைத்திருக்கிரீர் அதற்க்கு நன்றிஅந்த சொல் வெறும் மரியாதை செய்வதற்கு சொல்வதற்கு கூட ஆளப்படும் என்பதை என்னால் ஏற்க முடிய வில்லை என்பதற்கு காரணத்தை முன்வைத்து விட்டேன் ( மரியாதைக்காக பயன்படுத்தும் அதே வஜிமுரையினைத்தான் தங்களைப் படைத்து பரிபாளிப்பதாக கருதும் ஒன்றின் முன் நின்று அவர்கள் செய்து வருகிறார்கள்..... நீங்கள் உலகத்தை கண்ணை மூடிக்கொண்டு பார்க்கிறீர்களா என்ன ....?)
நீங்கலாக வேறுவேறு விஷயங்களை உள்ளுக்கு இழுத்து வருகிறீர்கள் ,,, அவைகளெல்லாம் தெளிவாக்கப் பட்டுவிட்ட விஷயங்கள்
படைத்தவனை சுட்டும் சொல்லுக்கும் படைப்பினங்களை சுட்டும் சொல்லுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு இறைவனின் திருநாமம் மற்றும் அதன் பண்புகள் பற்றி இங்கு பாடமெடுக்க வேண்டுமெண்பது உங்கள் நோக்கமா....?
அன்பர் எழில் அவர்கள்
பரிதவிக்க வேண்டியதில்லை.
பொய்யான ஒரு தகவலை மெய்ப்படுத்த எத்தனை பிரயத்தனம் மேற்கொள்ளப் படுகிறது உலகில் கையும் மெய்யுமாய் அகப்பட்ட பின்புகூட
இஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள் தான் என்று ஜனரஞ்சக மான் ஒரு ஊடகமொன்றில் கேள்வி என்கிற பெயரில் கருத்து திணிக்கும் முயர்ச்சி நடைபெறும் இந்தக் காலத்தில்
உணமயினை உண்மை என்று உரத்து சொல்லிக் கொள்ளக்கூட அவசரம் தரவிடாமல் நீங்கள் எங்களின் விவாதத்தினை திசை திருப்ப முனைகிறீர்கள் ... என்கிறேன் நான் ... அது ஏன்
இன்றைய தினத்தில் இருந்து இந்த ஹரமுககுள் ஈமான் கொண்டவர்கள் தவிர்த்து வேறெவரையும் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என்று இறைவன் நபி அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தபோது மதி மயங்கி நின்றார்கள் நபி அவர்கள்.
அப்போது மார்க்கத்தின் காவலன் இறைவன் சொன்னான் நீங்கள் உக்கி உருக வேண்டாம் இந்த பொட்டல் வெளியினை பெரும் அபிவிருத்தி நிறைந்த இடமாக ஆக்கும் வல்லமை படைத்த என் சொல்லின் பொருளை உலகம் உணர்ந்து கொள்ளும் என்று அந்த நிதர்சன உண்மையினை மீண்டும் மீண்டும்போய் பார்த்துவிட்டு மெய்சிலிர்த்துப் போகிறேன். இறைவன் அல்லா நித்தியன் அவன் ஆற்றல் நிறைந்தவன் நிராகரிப்பாளர்கள் வராவிட்டால் வணிகம் மூலம் வந்து கொண்டிருக்கும் வளங்கள் குறைந்தா போய்விட்டது அங்கு ... ஸுப்ஹாநக்க யாறப்
பிரிவினை நோக்காமல்ல எனக்கு அந்த நோக்கமுள்ளவர்கள் வெல்வது ஒழியவேண்டும் அது என் ஆசை அவ்வளவுதான்.
பிரிவினை நோக்காமல்ல எனக்கு அந்த நோக்கமுள்ளவர்கள் வெல்வது ஒழியவேண்டும் அது என் ஆசை அவ்வளவுதான்.
இந்த ஞானச்செருக்கான வார்த்தை இறைவனுக்கு ஏற்புடையதென நினைக்கிறீர்களா?
எதனைப்பற்றிப் பேசப்போகிறீர்கள்? பேசலாமே! அதற்குத்தானே குழுமம்.
துவங்குங்களேன். இறைவனின் திருநாமங்களையும் அதன் பண்புகளையும்
இன்னொருமுறை படிப்பதால் நான் குறைந்துவிடப்போவதில்லை, ஆனால், உங்களுக்கு
சில வேண்டுகோள்கள்.
இறைவனின் திருநாமங்கள், படைப்பினங்களின் பெயர்கள் இவற்றுக்கிடையே உள்ள
வித்தியாசங்கள் குறித்தும் அரபு மொழியின் இலக்கணங்கள், தோற்றுவாய், ஆகி
வந்த பெயர்கள், திரிந்திருக்கும் பெயர்கள், அரபு கலாசாரத்தில்
மனிதர்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் பின்புலங்கள், விலங்கினங்களின்
பெயர்களிலும் மனிதர்களின் பெயர்கள் ஆகிவந்த பெயரிடும் கலாசாரம்,
இப்படியான பல தளங்களைத் தொட்டு உங்கள் பாடம் ஆழமாக அமையவேண்டும் என
எதிர்பார்க்கிறேன்.
மேலெழுந்தவாரியாக பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடாவாக எங்கோ இருப்பதை மறுபதிப்பு
செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அதனை அறையிலிருக்கும்
புத்த்கங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அல்லவா. மேலும், இன்னொரு
வேண்டுகோள், இப்படியானன செருக்குடன் துங்காதீர்கள். அர்ரஹ்மான் அவன்
என்பதற்காக நாம் எதைச் செய்தாலும் மன்னித்துவிடமாட்டான் எல்லாவற்றிற்கும்
கணக்குகள் எழுதப்படுகின்றன.
> நீங்கலாக வேறுவேறு விஷயங்களை உள்ளுக்கு இழுத்து வருகிறீர்கள் ,,, அவைகளெல்லாம்
> தெளிவாக்கப் பட்டுவிட்ட விஷயங்கள்
ஏற்கெனவே தெளிவாக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் கூறும் விவரங்களிலிருந்து
எங்களுக்கு ஏதாவது தெளிவுகிடைக்காதா என்பதே எனது எண்ணம்.
> அந்த சொல் வெறும் மரியாதை செய்வதற்கு சொல்வதற்கு கூட ஆளப்படும் என்பதை என்னால்
> ஏற்க முடிய வில்லை என்பதற்கு காரணத்தை முன்வைத்து விட்டேன் ( மரியாதைக்காக
> பயன்படுத்தும் அதே வஜிமுரையினைத்தான் தங்களைப் படைத்து பரிபாளிப்பதாக கருதும்
> ஒன்றின் முன் நின்று அவர்கள் செய்து வருகிறார்கள்..... நீங்கள் உலகத்தை கண்ணை
> மூடிக்கொண்டு பார்க்கிறீர்களா என்ன ....?)
அவர்கள் எங்கே என்ன செய்கிறார்கள் என்பதையும் தவறாகப்
புரிந்துவைத்திருக்கிறீர்களே.
சைவ, வைணவ கோயில் வழிபாட்டு முறைகளாகட்டும், குலதெய்வ பூசைகளாகட்டும்,
விவசாயம் தொடர்பான வழிமுறைகளாகட்டும் அதாவது, இந்துக்கள் தெய்வம்
தொடர்பான வணக்க வழிபாட்டு முறைகளைப் போன்ற அதே முறைகளில்தான் மனிதனுக்கு
மரியாதை செய்கிறார்களா?
அதாவது, நீங்கள் சுற்றி வளைத்துச் சொல்வதை தெளிவான முறையில்
எழுதவேண்டுமென்றால், சிலைகளுக்குச் செய்யும் மரியாதையைத்தான்
மனிதனுக்கும் செய்கிறார்கள் என்கிறீர்களா? நீங்கள் சொல்லவந்தது
இதுதானென்றால் இதனை நான் மறுக்கிறேன். நீங்கள் தவறான கருத்தைக்
கொண்டிருக்கிறீர்கள் என உறுதியாக்ச் சொல்கிறேன்.
அதுவல்ல, நீங்கள் சொல்ல வந்தது வேறென்றால், அது என்னவென எனக்குப்
புரியவில்லை. அதனைக் கொஞ்சம் தெளிவாக எழுதுங்கள்.
> நான் ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள்
> வணக்கம் என்கிற சொல்லின் பொருள் உருவானதன் மூலத்தையும் போட்டு
> உடைத்திருக்கிரீர் அதற்க்கு நன்றி
நான் ஒன்றும் போட்டு உடைக்கவில்லை ஹாரூன், அது நீண்ட நாள்களாக
விவாதங்களில் உழன்றுகொண்டுதான் இருக்கிறது, நீங்கள் அதனை
அறிந்திருக்கவில்லையென்பதை 'போட்டு உடைத்துவிட்டேன்' என்னும் வாசகத்தின்
வாயிலாக அறிவித்துக்கொள்கிறீர்கள், சல்தாஹை.
விஷயத்திற்கு வருகிறேன், பாடம் எடுக்கவேண்டுமா என்று கேட்டீர்களல்லவா,
எடுங்கள். நான் முன்வைத்த வேண்டுகோள்களான, அரபு மொழியில் ஆகி வந்த
பெயர்கள், மருவி வந்த பெயர்கள், அந்தப் பெயர்களுக்கும் இறைவனின்
திருநாமங்களுக்கும் உள்ள தொடர்பு, அப்படி மருவிய பெயர்கள் இறைவனின்
திருநாமத்தை ஒட்டியவையாக இருந்தாலும் அவற்றை ஏன் இறைவனின் திருநாமமாகக்
கணக்கில் கொள்ளக்கூடாது என்பதற்கான விளக்கங்கள், இப்படியான பரந்த
தளத்தில் உங்கள் பாடங்களை / கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன், முயற்சியும்
இறையருளும் இருக்குமானால் உங்களால் முடியும்.
நான் புரிந்த வரை...
நண்பர் ஹாரூன் சொல்ல வருவது...
சிலை வணக்கம் முற்றிலும் மறுக்கும் ஒரு சமுதாயத்தினரிடம், சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்க விழையும் அவர் போன்றவர்கள், சாதாரண வார்த்தையில் கூட அந்த சாயல் புலப்படக்கூடாதே என்று ஆவல் கொள்வதில் தவறில்லை தானே! இந்த மாதிரியான சிறு சிறு கருத்துப்பிழைகள்/ சொற்பிழைகள், அவர்களின் கொள்கை அடிப்படையையே தகர்க்கும் வண்ணம் பிறழ்ந்து விடக்கூடாது என்று அவர் எண்ணுவதில் தவறில்லை தானே நண்பா!
நாமாக அதற்கு ஏதேனும் பொருள் கொண்டு, அவர் சொல்ல வந்த கருத்தை/ அதன் ஓட்டத்தைத் தடை செய்ய வேண்டாமே!
அதற்காக, நான் வணக்கம் என்ற வார்த்தையைச் சொல்லக்கூடாது என்றெல்லாம் கூறவில்லை.
புரிதலுக்கு நன்றி!
அன்பின் ஹாரூன்,
//படைத்தவனை சுட்டும் சொல்லுக்கும் படைப்பினங்களை சுட்டும் சொல்லுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு இறைவனின் திருநாமம் மற்றும் அதன் பண்புகள் பற்றி ...//
ஒரு நபர் நம்பிக்கையாளர்/ விசுவாசி என்று சொல்வதற்கு, அரபியில் "முஃமின்" என்று சொல்வார்கள்.
அதே சமயம், அல்லாஹ்வின் அழகியத் திருப்பெயர்களில் ஒன்று "முஃமின்" என்பது.
உங்களுக்குத் தெரியும்: இறைத்திருப்பெயர்களை மனிதர்களுக்குப் பெயரிடும் போது, அதற்கு prefix ஆக [முன்னொட்டியாக] "அப்துல்" [அடியான்] என்ற சொல்லைச் சேர்த்து இடுவார்கள்.
இப்போது நான் கேட்கிறேன்:
ஒரு நல்லடியாரான/ இறை விசுவாசியான மனிதரை "முஃமின்" என்பதா? "அப்துல் முஃமின்" என்பதா?
நீங்கள் சொல்வது போல் வார்த்தைக்கு நேரடிப்பொருள் மட்டும் கருதிக்கொண்டு விவாதிப்போமானால், வெறுமனே முஃமின் என்றால் தவறாகிவிடும். உங்கள் கருத்துப்படி அப்துல் முஃமின் என்று தான் சொல்ல முடியும்.
ஆனால், இறை நம்பிக்கையாளரை முஃமின் என்று அழைக்கும் வார்த்தைகள் அருள்மறை குர்ஆனில் கூட நிறைந்து இருக்கின்றன.
இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்றால்.....
வார்த்தையை விட அதன் நோக்கம் முக்கியம்.
சரி தானே?
பிழை இருப்பின் திருத்தவும்.
custodian