இயற்பெயர் : மல்லிகா
கல்வித்தகுதி : M.A. & PGDMC (post graduation diplomo in mass media communication) &
certificate course on feminism and social service
தாமிரபரணி தான் என் தாயகம் என்றாலும்
வாழ்விடமென்னவோ அரபிக்கடலோர மும்பைதான்.
மும்பை மண்ணுக்கு நான் நான்காவது தலைமுறை.
பணி செய்தது பன்னாட்டு வங்கியில். (HSBC-Mumbai)
22 ஆண்டுகளுக்குப் பின் விருப்ப ஓய்வு 2004 ஆம் ஆண்டுமுதல்.
நிழல்களைத் தேடி கவிதை நூலுக்கு 2006 ஆம் ஆண்டின் கவிதை நூலுக்கான
சிற்பி விருது.
மின்சாரவண்டிகள் குறுநாவலுக்கு தந்தை பெரியார் தமிழர் பேரவை விருது.
தமிழ்நேயம் -கோவை பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப் போட்டிகளிலும்
கலை இலக்கிய பெருமன்றம், சென்னை கவிதைப் போட்டியிலும்
பூவரசு இலக்கிய மன்றம், ஜெர்மனி க்விதைப் போட்டியிலும் படைப்புகள்
பரிசுக்குரியவைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாத்ருபூமி கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளது.
மும்பை பல்கலை கழக ஜெர்மன் மொழித்துறை சில கவிதைகளை
ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்துள்ளது.
மும்பை நகரக்கவிதா மண்டலத்தில் வெளியீடுகளில் கவிதைகள் மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளன.
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தை நிறுவியதில் பெரும்பங்கும் நிர்வாகப்பொறுப்பும்-.
PUKAR( partnership for urban development and research org), Mumbai sahitya adkademy நிகழ்ச்சிகளில்
தமிழ் சமுதாய, இலக்கிய குரலாக தொடர்வது.-.
ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபை, ஆதிதிராவிடர் பேரவையின் ஆலோசகராக ...
இதுவரை அச்சில் வெளிவந்துள்ள நூல்கள்:
முகவரி : FLAT 505, HEMA PARK TOWER
BHANDUP (EAST)
MUMBAI 400 042, MAHARASHTRA.
RES TEL: 022 25912414
CELL : 09969 647854
E-MAIL:: puthiya...@hotmail.com
mallika...@gmail.com
my blog: www.puthiyamaadhavi.blogspot.com
--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/
இடப்பக்கமும்
வலப்பக்கமும்
பின்பக்கமும்
இருக்கும் வீடுகளின்
சுவர்களால்
கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது
என் அறைகளின் வடிவம்.
மாடி வீட்டுக்காரனின்
ஒவ்வொரு அறைகளையும்
தாங்கி நிற்கும்
என் வீட்டுக்குள்
கிராமத்து வீட்டை
விற்ற ஏக்கத்தில்
செத்துப்போன
அம்மாவின் நிழற்படம்.
நுழைவாசலில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
அந்நியன் மொழியில்
என் பெயரின் எழுத்துகள்.
இவைதவிர
இது என் வீடு
என்பதற்கான
எந்த அடையாளமும்
என் வீட்டில் இல்லை.
கிராமத்து வீட்டை
விற்ற ஏக்கத்தில்
செத்துப்போன
அம்மாவின் நிழற்படம்.
நுழைவாசலில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
அந்நியன் மொழியில்
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
நானோ
உன் பட்டுப்போன்ற
சானிடரி நேப்கினைத்
தொட்டுப் பார்க்கும்
ஆசையில்
அம்மாவின் கிழிந்தப் புடவை
தொடைகளில் அறுக்க
குனிந்து வளைந்து
ஏறி இறங்கி
பத்துப்பாத்திரம் கழுவி
வீடுவீடாக
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது
என்னை அழைக்கும்
உன் குரல்
ஓடிவந்து உன்வரிசையில்
உன்னோடு ஒருத்தியாய்
என்னையும் நிறுத்தும்
கனவுகளுடன்
விழித்துக்கொள்கிறது
என் பூமி.
ஏதொ ஒன்று....
இனம்புரியாத முள்வேலியாய்
நம் எல்லைகளுக்கு நடுவில்.
எல்லைத் தாண்டிய
உன் மேகங்கள்
என் எல்லைக்குள் நுழைவது
சாத்தியமில்லை
என்கிறார்கள்
பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும்
நட்சத்திரங்கள்.
அவர்களிடம் சொல்
முள்வேலியைத் தாண்டி
ரத்தம் சொட்டும் பாதங்களுடன்
உன் பச்சைப்புல்வெளியில்
தடம் பதிக்கப்போவது
என் பாதங்கள் என்பதை.
அடையாளங்கள்
- புதியமாதவி
"என்னடா குறுந்தாடி செட்டப் எல்லாம்!'
" உனக்கு இந்த வெள்ளாடு மாதிரி தாடி வச்சிருக்கிற பேர்வழிகளைத் தானே ப்டிக்கும்னு சொன்னே!
ப்ராணாப், சேகர்கபூர்னு நீ ரசிக்கிறவனுக்கெல்லாம் இருக்குதே இந்த தாடி.."
"அடப்பாவி நான் தாடியை மட்டுமாடா ரசிச்சேன்! உன்னை...."
அவனை நோக்கி கையை ஓங்கி நீட்டினாள்
"தாடி வச்சிருக்கவன் புத்திசாலித்தனத்தை ரசிச்சேண்டா..
உன் மரமண்டைக்கு அதெல்லாம் எங்கே புரியப்போவது?"
தலையில் அடித்துக் கொண்டாள். செல்லமாக அவன் குறுந்தாடியைப் பிடித்து இழுத்தாள்.
"ஏய் வலிக்குதுடி.. விடு ..விடு...ப்ளீஸ்.." அவன் கத்தினான்.
அவன் தோள்மீது தலைச்சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
அவள் களைத்துப்போட்ட தாடியை தன் விரல்களால் கோதி சரி செய்துக்கொண்டான் அமீர்.
"கல்யாணத்தைப் பற்றி என்ன முடிவு செய்திருக்கே" உஷாவிடம் கேட்டான்.
"என் முடிவில் எந்த மாற்றமும் இல்லைடா"
குரலில் சலனமில்லாமல் உறுதியுடன் அந்த தருணத்திலும் அவள் குரல்
அவனைச் சுற்றி வளையமிட்டது.
எங்கள் முறைப்படி பள்ளிவாசலில் வைத்து திருமணம் செய்து கொள்ள நீ இசுலாமுக்கு
வரவேண்டும். அது முடியாது, தேவையில்லை என்கிறாய்.
எதற்கு மத அடையாளம் என்பதில் ரொம்பவும் தெளிவாக இருக்கிறாய்.
சரி நான் இந்துவாக மாறிக்கொள்கிறேன் என்றால் "ஏன்பா.. நாட் நேசஸரி.."
என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிடுகிறாய்.
எப்படி நான் மதம் மாறுவதில் எனக்கு உடன்பாடில்லையோ அது போலவே நீயும் மதம்
மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் என் சுயமரியாதையை மதிப்பதாகவும்
என் சைடிலிருந்தும் பேசுகிறாய். நீ பேசும் போது எல்லாமே சரியாகவே
சொல்றமாதிரிதான் இருக்கு. ஆனா தனியா இருந்து யோசித்துப் பார்த்தால்
நடைமுறையில் இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம்னு தோனுது.
உங்கிட்டே சொன்னா மீண்டும் என்னை என் பயங்களை பெரிதாக்கி
கேலிக்குட்படுத்துவாய்..." அமீர் ஸ்கூட்டரில் வேகமாகப் போய்க்கொண்டே
ஓவ்வொரு உரையாடல்களையும் மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தான்.
இப்படித்தான் அவனுடைய வாப்பாவின் நண்பர் ஒருவர் அந்தக் காலத்திலேயே
தன்னுடன் வேலைப்பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
உ.பிக்கார பெண். அவள் இந்து. அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை. அவன் +2 படிக்கும்போது
தீடீரென மூளைக்காய்ச்சல் வந்து இறந்துப்போனான். அவன் இறந்தப் பின்
அவனைப் புதைக்கவோ அவன் இறுதிச்சடங்கைச் செய்யவோ பள்ளிவாசலில்
இருந்து யாரும் முன்வரவில்லை. மகன் இறந்த சோகம் ஒருபக்கம். அந்த உடலை
எந்த மயானத்தில் வைப்பது என்ற பிரச்சனையில் அவரும் அவர் மனைவியும் பட்ட
வேதனைகளும் அனுபவங்களும் அவர்கள் அதுவரை வாழ்ந்த செக்குலர் ஸ்டேட்டஸ்
வாழ்க்கையை அதன் முகத்திரையைக் கிழித்துப் போட்டது. அடிக்கடி அவனுடைய
வாப்பா தன் நண்பனின் இந்தக் கதையை தன் பிள்ளைகளிடம் சொல்லி
ஒரு வேலியைப் போட்டு வைத்திருந்தார்.
இந்தச் செய்தியை உஷாவிடம் சொன்னபோது ஒரு வினாடி மவுனமும் அதன் பின்
அவளுக்கே உரிய சிரிப்பும் அவனைக் கேலி செய்தது.
"அடப்பாவி.. எப்படிடா இப்படி எல்லாம் கதைகளைச் சேகரித்து வருகிறாய்னு"
அவன் தலைமுடியைக் கைகளில் பிடித்து அவனை அசைத்துப் பார்த்தாள்.
"உஷா..ப்ப்பி சீரியஸ் யா..ப்பி பிராக்க்டிகல்.. " அவன் கோபத்தில் தலையைச் சிலுப்பிக்
கொண்டு எழுந்திருச்சான்.
அவனுக்கு மறந்துப் போய்விட்டது அதன் பின் அவன் வாப்பாவின் நண்பரின் கதை.
அவரைப் பற்றி எதையும் அவன் அதன் பின் விசாரிக்கவில்லை. ஒருநாள் உஷாதான்
உனக்கு வேண்டிய ஒருவர் இறந்துவிட்டார்கள், வா போய் அதில் கலந்து
கொண்டு ஆறுதல் சொல்லிவிட்டு வருவோம் என்றாள்:.
"எனக்கு வேண்டியவரா.." குழப்பத்திலேயே அவள் பின்னால் எதுவும் கேட்காமல்
அவள் சொல்கிற வழியில் ஸ்கூட்டரை ஓட்டினான்.
அந்த அபார்ட்மெண்டில் ஒரு அழகான மேல்மாடி த்தெரஸ் ப்ஃ:ளாட்டில் அவர்கள்
போகும்வரை அவன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.
அதன் பின் தான் அவள் அழைத்து வந்திருக்கும் இடம் தன் வாப்பாவின் நண்பரின் இல்லம்
என்பதும் இறந்துப் போனது அவர்தான் என்பதும் தெரியவந்தது.
வீட்டில் அவரது மனைவியைத் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரே எழுந்துப் போய்
அவர்கள் இருவருக்கும் குடிப்பதற்கு தண்ணீர்க் கொண்டுவந்து கொடுத்தார்.
அப்போது தான் வேலைக்காரப் பெண்மணி வந்து விட்டுப் போயிருப்பதாகவும்
அவர்களுக்கு "சாய் வேண்டுமா" என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
வீட்டுத்தரையில் தண்ணீரில் துடைத்து எடுத்த ஈரம் இன்னும் வற்றவில்லை.
அந்த வீட்டில் அன்றுதான் அவள் கணவரின் இறுதிச்சடங்கு நடந்து முடிந்திருப்பதற்கான
எந்த அடையாளமும் இல்லை.
அவள் குளித்து தலையை உலர்த்தி இருந்தாள். ஒரு காட்டன் புடவை..
அணிந்திருக்கும் கண்ணாடி அவர் கண்களின் சோகத்தை மறைத்திருந்தது.
அடிக்கடி கண்ணாடியைக் கழட்டி அவர் தன் சேலைத்தலைப்பால் துடைத்துக் கொள்வதும்
தளர்வான அந்தப் பெண்மணியின் நடையும் அவர் இழப்பின் வலியைக் காட்டத்தான்
செய்தன.
"பத்திரிகையில் பார்த்தேன்..ப்ரெபஸரின் மறைவுச் செய்தியை. உங்களைப் பற்றி ஏற்கனவே அமீர் சொல்லியிருக்கிறான்..
அதுதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்" உஷா தங்கள் இருவரையும் அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள்:.
"என்ன செய்தது.. ப்ரபொசருக்கு" என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான் அமீர்.
'உடம்புக்கு முடியாமல் தானிருந்தார்.. ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனேன்..." அந்தப் பெண்ணின் கண்கள்
மேசையில் வைத்திருந்த அவர் புகைப்படத்தில் பதிந்தன,.
நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து வந்தது. "ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை
எங்களுக்காக வாழ்ந்தோம்" அதைச் சொல்லும் போது அந்த தருணத்திலும் அவள் குரலின்
கம்பீரம் உஷாவுக்குப் பிடித்திருந்தது.
ஏற்கனவே நாங்கள் முடிவு செய்திருந்தப் படி அவர் கண்களைத் தானம் செய்துவிட்டோம்.
அவர் உடலை மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக கொடுத்துவிட்டேன்."
ஒரு நிமிடம் அந்தச் செய்தியின் உண்மையும் அதன் அதிர்வுகளும் அமீரைப் புரட்டிப் போட்டது.
அடுத்தக் கணம் இந்தச் செய்தியைப் பற்றி எதுவுமே பேசிக்கொள்ளாத தன் வாப்பாவும்
வாப்பா போட்டு வைத்திருக்கும் வட்டமும் வேலியும் கண்கள் முன்னே விரிந்தன.
எத்தனையோ எதிர்ப்புகளுக்குப் பின் அமீர் உஷாவைப் பதிவு திருமணம் செய்து கொண்டான்.
அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு வந்து புதுவாழ்க்கையைத் தொடர்ந்தான்.
குஜராத்தைப் போலில்லை மும்பை. இது ஒரு காஸ்மொபாலிட்டன் சிட்டி.
இரண்டு பிள்ளைகள்.. சந்தோஷமாக இருந்தது ஒவ்வொரு நாட்களும்.
ஆனால் இப்போதெல்லாம் என்னவோ விவரித்து சொல்ல முடியாத ஒரு
பயம் அவனைக் கொஞ்ச காலம் விரட்டிக்கொண்டிருந்தது.
அதுவும் அந்த நிகழ்வுக்குப் பின்...
ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் அவர்களுக்கு முன்.
அதுவும் அவன் தோற்றமும் குறுந்தாடியும் வெள்ளை ஜிப்பாவும் அவர்களுக்கு
வேண்டாத அடையாளங்களாக இருந்திருக்க வேண்டும்.
''
ஏய் இறங்குடா.. கூட்டம் கத்தியது.. பயத்தில் அவனுக்கு ரத்தநாளங்கள் பனிக்கட்டியாக
உறைந்துப் போனது. பார்த்தா தெரியலே.. போடு.. இவனுகளை எல்லாம் பாகிஸ்தானுக்கு
விரட்டனும் ' கத்தினான் கூட்டத்திலிருந்து ஒருவன்.
'ஏய் பேண்டைக் கழட்டுடா.. பாக்கட்டும் நீ யாருங்கறதை" கத்தினான் இன்னொருத்தன்.
பேண்டைக் கழட்டி தன் அடையாளத்தைக் காட்டினால் என்ன நடக்கும் எந்த பயத்திலெயே
அவன் கைகள் உஷாவை இறுகப்பிடித்துக் கொண்டன. மரணபயம்.. அவன் ப்டியில்.
உஷா தன் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை தோளகளில் போட்டுக்கொண்டே
அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தாள்.
"அவள் நெற்றியிலிருந்தக் குங்குமம், அவள் கழுத்திலிருந்த கறுப்புமணி தாலி" அந்தக் கூட்டத்தை
நோக்கி வீசப்பட்ட பாதுகாப்பு அஸ்திரமாக இருந்தது.
"ம்மி ஆஷா. மேரா பதி சுனில் " என்று அவர்களிடம் தங்களைப் பற்றி அவள் சொல்லவும்
'அச்சோ சலோ சலோ .. ஏய் ரோட்சே ஸீதா ஜாவ்.. பாஞ்ச் ரஸ்தா ஷே லெப்ட் மார்க்கே ஜாவ்.
ரைட் சைட்ஷே மத் ஜானா. உதர் முஸல்மான்க்கா மோர்ச்சா சல்ரே"
இதே ரோட்டில் இன்னொரு இடத்தில் முஸ்லீம்களின் மோர்ச்சா அங்கேயும் இந்த மாதிரி
அமீர் சுனில் ஆனது போல சுனில்கள் அமீர்களாக மாறிக்கொண்டிருக்கலாம்..
அதன் பின் ஒவ்வொரு நிகழ்வும் அவனை ரொம்பவும் பாதித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
உஷாவுக்கு ரொம்பவும் ப்டித்தமான தன் குறுந்தாடியை எடுத்துவிட்டு நீட்டா க்ளீஸ் ஷேவ் செய்து
கொண்டு உஷா முன்னால் போய் நின்றான். அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும், சண்டை போடக்கூடும்
என்று நினைத்தான்.
அவனைப் பார்த்தவுடன் அவள்,
" ஏய்.. என்னடா இது .. ஷாருக்கான் மாதிரி க்ளீன்ஷேவ்.. ல.. யு ஆர் லுக்கிங் ஹாட்யா" என்று
சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்ட போது அவனுக்கு அவள் அவனிலிருந்து அந்நியப்பட்டது
மாதிரி இருந்தது.
பல சமயங்களில் குறுந்தாடி இல்லாத அவன் முகத்தைக் கண்ணாடியில்
பார்க்கும் போது அந்த முகம் தன்னுடையதாக என்றுமே அவனுக்குத் தோன்றியதில்லை.
யாரையோ ஒரு அந்நியனைப் பார்ப்பது போலவே இருக்கும். அடிக்கடி அவன் கைகள்
அவன் தாடையைத் தடவிப் பார்த்துக் கொள்ளும்.
அவன் வீடு வாங்கும் விசயத்திலும் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி வந்தது.
அவனுக்குத்தான் அவன் வேலைப்பார்க்கும் அலுவலகத்தில் 2% வீட்டு லோன் கிடைக்கும்.
அவன் லோன் எடுத்தால் வீடு அவன் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்/. அதிலும் சிக்கல்
வரும் என்று நண்பர்கள் பயமுறுத்தினார்கள். நல்ல லோகஷனில் அந்த அபார்ட்மெண்ட்
கட்டிடம் அமைந்திருந்தது. அதை விட்டு விடவும் மனசு வரவில்லை.
வீட்டைக் கடைசியாக உஷாவின் பெயரில் வாங்கி ஐசிஐசிஅய் வங்கியில்
கொள்ளை வட்டிக்கு கடன் வாங்கினார்கள். வயித்தெரிச்சலாக இருந்தது.
இதில் எதுவுமே தன்னைப் பாதிக்காத மாதிரி எப்போதும் போல சிரித்துக்
கொண்டு தன் பிள்ளைகளுடன் வலம் வந்துக் கொண்டிருந்தாள் உஷா.
எப்போதாவது இந்தப் பிரச்சனைகளை தன் மன உளைச்சலை பயத்தைப் பற்றி
அவளுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்று இந்த டாபிக்கை எடுத்தாலே
போதும்..
":ப்பி ப்பிராக்டிக்கல் யா.. நீ, நான், நம்ம பிள்ளைகங்க.. அவுங்க எதிர்காலம்..
அவுங்க ஷேப்டி..இதுக்கு ஏற்ற மாதிரி நம்மை மாத்திக்கொள்வது தானே
புத்திசாலித்தனம்.."
அவளை அவளுடைய புத்திசாலிதனத்திற்காகவே காதலித்து கல்யாணம் செய்து
கொண்ட வாழ்ந்து கொண்டிருக்கும் அமீருக்கு உஷாவின் இந்தப் புத்திசாலித்தனம்
எரிச்சல் தந்தது.
இப்போதெல்லாம் அவனுக்கு அடிக்கடி வாப்பாவின் ஞாபகம் வருகிறது.
கண்களை மூடிக்கொண்டான்..
தலையில் தொப்பியை வைத்துக் கொண்டு வெள்ளை நிற நீண்ட ஜிப்பாவை
அணிந்து கொண்டு தொழுகைக்காக வாப்பாவுடன் மசூதிக்குப் போகிறான் அவன்..
அந்த முகத்தில் அவனைப் பார்க்க பார்க்க அவனுக்குள் சந்தோஷம் பூரித்தது.
எப்படியும் இந்த வருஷம் உஷாவும் குழந்தைகளும் வராவிட்டாலும் பரவாயில்லை
தான் மட்டுமாவது ரம்லானுக்கு அப்பாவிடம் போய்விட வேண்டும்.. என்ற
நினைப்பில் எழுந்து போய் விளக்குகளை அணைத்துவிட்டு
நிம்மதியாக படுக்கப்போனான அவன்.
சூர்யா..
உன் கவிதையின் நெருப்பு மலர்கள்
என் வாசலுக்கு வரும்போது மட்டும்
நீரில் நனைந்த கட்டை விறகுகளாய்
ஏன் புகைந்து போய்விடுகின்றன.?
எதை எல்லாமோ
எழுதிய உன் எழுதுகோல்
நம் நட்பு மண்டலத்தை மட்டும்
எனக்காக இட ஒதுக்கீடு செய்துவிட்டதா?
வானத்தின் சூர்ய மண்டலத்தை
நவக்கிரகங்கள் சுற்றிக்கொண்டிருக்கும் போது
இந்த ஒன்பது விடியல்களிலும்
நான் நம் நட்பு மண்டலத்தைச் சுற்றி சுற்றி வந்திருக்கின்றேன்.
என் சுற்றல் உன் அறிவுமொழியில் சொல்லப்போனால் புலம்பல்
என் உணர்வு மொழியில் சொல்லப்போனால் நம் உயிர்ப்பூ
இது உணர்வுகளின் இதழ்களை மெதுவாக எடுத்து அதன் மெல்லிய இதழ்கள் வலிக்காமல்
வார்த்தைகளில் தொடுத்த அனுபவம்.
நம் புஞ்சைக்காட்டின் முள்செடிகளில் பூக்கும் சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களைக் கூட
அதன் காம்புகள் கசங்காமல் கட்டி வைத்திருக்கின்றேன் பார்த்தாயா..!
சொன்னது துளி..
அனைத்தையும் சொல்ல நினைத்தால்
பதிவுகள் பசிபிக் கடலைச் சின்னதாக்கி விடும் ..
அதன் பின்.. பதிவுகளின் பக்கங்கள் எல்லாம்
நீயும் நானும் மட்டுமே பேசிக்கொண்டிருப்போம்..
இதைப் பதிவுச் செய்ததில் பரமதிருப்தியா என்றுதானே கேட்கின்றாய்?
என் பதில் என்னவாக இருக்கும் என்பது உனக்குத் தெரியாதா?
இது இன்னும் முற்றுப் பெறவில்லை.
உனக்கான .. உன் பக்கங்கள்..
இன்னும் காலியாகவே இருக்கின்றன.
உன் எழுதுகோலின் தரிசனத்திற்காக தவமிருக்கின்றன.
இந்த தவத்தில் இன்னும் எத்தனை எத்தனைக் காலங்கள் கழியுமோ
ஊழிகள் முடியுமோ
உடல் மறைந்து உயிர் கரைந்து உன் தோட்டத்து காற்றில் வந்து
உன் காலடி ஓசைக்காக காத்திருக்குமோ..
இல்லை உதிர்ந்த இலைகளின் நடுவில் விழுந்து
நீ அடையாளம் காணும்முன்னே உன் காலடியில்
நொறுங்கி.. மீண்டும் உன் மண்ணில் உரமாகி.. ..
உயிர் வாழப் போராடுமோ..
சூர்யா..
நம் மெளனங்கள் இனி உடையப் போவதில்லை.
பனிக்கட்டிகளாக பாறைகளாக..
எதையும் உடைக்கும் .. உடைத்து எறியும் மலைகளாக
மாறிவிட்டது..
சூரியா.. உன் கதிர்களின் நேரடிப் பார்வையில் நானில்லை.
நான் பூமத்திய ரேகையை விட்டு வந்து பலகாலமாகிவிட்டது.
துருவங்களில் தான் என் வாசம் என்பது இனி மாற்ற முடியாது..
துருவங்களில் வரும் உன் கதிர்களின் சொற்ப நேர தரிசனத்திற்காக
என் பனிமலை வீடுகள் காத்திருக்கின்றன.
உன் கதிர்கள் என் மலைகளை உருக்கி நதிகளாக்கும் என்ற
நம்பிக்கை .. இன்று இல்லைதான்..
ஆனால் உன் கதிர்கள் தரும் வினாடி நேர வெளிச்சத்தில்
என் இருட்டுக்கு கூட விழிகள் ...
ஆமாம்... இருட்டில் மட்டுமே பார்க்கப் பழகிப்போன விழிகள்..
சூர்யா..
இருட்டிலும் வேட்டையாடும் இதயமற்றவர்கள் சொல்கின்றார்கள்..
ஒருநாள் சூரியன்கூட சிறைவைக்கப் படும் என்று..
அவர்களிடம் சொன்னேன் ..
அந்த நாளில் எங்கள் நட்பு மண்டலத்தின்
நட்சத்திரம் ஒன்று
சூரியனாகி
இந்தப் பூமியைச் சுற்றும் என்று.
சூர்யா..
உதயத்திற்கும் மறைவிற்கும்
காலதேவன் சூரியனுக்கு கணக்கு கெடு வைத்திருக்கின்றான்.
சூரியன் அவன் கணக்கை எழுதும் வெறும் கணக்குப்பிள்ளைதான்.
நட்பு மண்டலத்தில்
இதை எழுத வேண்டும்
இப்படித்தான் எழுத வேண்டும் என்று
கணக்கு எழுதிவைக்க காலதேவனில்லை.
இது வகுப்பறை இல்லை.
கற்றலும் கற்பித்தலும் இல்லை.
உணர்தல் மட்டுமே உண்மை.
உணர்ந்ததைப் பாசாங்கு இல்லாமல்
ஒத்துக்கொள்வது மட்டுமே
நட்புக்கு நாம் செய்யும் மரியாதை.
நட்பு மண்டலத்தின் நட்சத்திரங்களுக்கு
நாம் போட்டு வைத்திருக்கும்
புதியப் பாதை.
இந்தப் பாதையை நீதான்
கற்களும் முட்களும் அகற்றி
உன் கைகளைக் காயப் படுத்திக்கொண்டாய்.
மனிதக் காட்டில்
அந்தச் செம்மண் புழுதியை
தண்ணீர் ஊற்றி ஊற்றி கட்டியாக்கி..
என் கிணறும் காய்ந்து விட்டது..
ஊரும் உறவுகளும்
கிணற்றைப் பார்த்து
என்னைக் கண்டித்தார்கள்..
கிணற்றை தூரெடுக்க
துப்பு இல்லாதவர்கள்..
வானத்தை நம்பாத மேகங்களிடம் நான் என்ன சொல்லிப் புரியவைப்பேன்?
நாளை வானம் பொழியும்..
அப்போது நம் ஊமைக்காயங்கள் அதில் மறந்து போய்விடும்.
கிணறுகள் கூட நிரம்பி வழியும்..
ஊரும் உறவுகளும்..
என் பாத்திரங்களிலும் தண்ணீர் நிரப்பும்.
இந்த நினைவுகளே சுகமாக ..
இந்த சுகானுபவத்தில்..
எல்லா சுகங்களும் இரவல் சுகமாகிவிடுகின்றன.
உடல் கூட்டில் உயிர்ப்பறவை இருக்கும்வரை தானே மற்ற சுகங்கள் எல்லாம்..
நம் நினைவுகள் தரும் சுகம் அப்படி அல்லவே..
உதிரத்தில் கலந்த பிள்ளையும்
உயிரணுவில் கலந்த துணைவனும்
உயிர் இருக்கும் வரைதானே..
உடலுக்கும் உயிருக்கும் உறவு இருக்குவரை தான்
இந்த உறவுகள் எல்லாம்..
நமக்கான உறவு..
உடலும் உயிரும் உறவு கொள்ளும் முன்பே
உயிர்த்த உயிர்ப்பூ..
தாய்-மகன்
தந்தை-மகள்
இந்த உன்னத உறவில் கூட எட்டிப் பார்க்கும் பாலியல் சுரப்பிகள்
நம் உறவில் மட்டும்
சரணடைந்துவிட்டன.
பின்பக்கமாக பார்ப்பவனின் பார்வையில் இருக்கும் காமத்தைக்கூட கண்டுபிடிக்கும்
என் விழிகள்
உன் தோள்களில் மட்டும்
என்றும் நிம்மதியாய்..
நித்திரையில்..
ஒடி ஓடி உழைத்தோம்
எதை எதையோ நாடினோம்
யார் யாருக்காகவோ ஒடினோம்
இந்த ஓட்டத்தில்
நாம் சேர்த்த சேமிப்புக்கிடங்கில்
நமக்கானப் பங்கு எதுவுமில்லை.
நாம் என்றும்
நட்புக்கு மட்டுமே
பங்குதாரர்கள்.
இங்கே-
உன் கடன்
என் கடனாவதும்
என் கடன்
உன் கடனாவதும்
என்றும் சாத்தியம்..
ஒன்பது விடியல்கள்
உன்னுடன் நான்..
என் ஒன்பது பிறவிகளின்
ஒவ்வொரு பக்கம்..
அவ்வளவுதான்.
உனக்கு இதெல்லாம் நினைவிருக்கின்றதா?
வால்கா நதிக்கரையில்
வானவில் தேடி ஓடியது நினைவிருக்கின்றதா?
நைல் நதிக்கரையில்
நம் மணல்வீடு மரப்பாச்சி
மறந்துவிட்டதா?
ப·றுளி ஆற்றின் பாலத்தில்
என் பக்கமிருந்து
பின்னலைப் பிடித்திழுத்தாயே
சிந்துவில் தானே
நம் சண்டைகள் ஆரம்பமானது?
கங்கையில் தானே
என் கண்ணீரைத்துடைத்து
சமாதானப்படுத்தினாய்..
கோதாவரியில்
குதிக்கச்சொல்லி
தள்ளி விட்டாயே
கிருஷ்ணாவில்
கீழே தள்ளி
விழுந்தால் தான்
எழுந்திருப்பாய்
என்று தத்துவம் பேசினாயே..
நினைவிருக்கின்றதா?
காவேரியின் குடகுமலையில்
நம் முற்றங்கள்
பிரிக்கப்படாமல்
ஒரே புள்ளிக்கோலத்தில்
இணைந்து கிடந்ததே..
அந்தக் கோலவரிசை
நினைவிருக்கின்றதா?
நேற்று-
வைகையில்
உன் காதலி மீனாட்சி
உனக்காக காத்திருக்க
இந்த
தாமிரபரணியைத் தேடி
பொதிகைக்கு
புறப்பட்டு வந்தாயே..
நாம் நட்பின் ஜீவநதிகளாடா..
இந்த நதிகள் வற்றாது..
பூமியின் நதிகள்தான்
அணைகளில் சிறைப்படும்
இந்த
நட்பு மண்டலத்தின்
ஜீவநதிகள்
எந்த அணைகளாலும்
சிறைவைக்கப்படாது.
தனிமை அறையின் மவுன மொழிகள்
- புதியமாதவி
தனிமையின் மவுனம்
பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது.
தனிமைத் தேடி ஓடும் மனிதர்கள்
கண்டதில்லை தனிமையை
காட்டிலும் கடலிலும்.
கைவீசி நடக்க இடமில்லாத மனிதர்களின் சாலையில்
எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சக்கரங்களின் பற்களுக்கு நடுவில்
சிக்கித் தவிக்கிறது தனிமையில் ஓர் ஜீவன்.
துணை தேடும் அன்றில் பறவையாய்
உறவுகள் தேடும் காக்கையின் கரைதலாய்
காலம் காலமாய் தன் குஞ்சுகளைக்
காக்கைகளின் கூட்டில் பொறிக்கவைக்கும்
இயலாமைக்காக
ஏங்கித்தவிக்கும் குயிலின் பாடலாய்
இங்கே ஒரு மனித ஜீவன்
தனிமை கவிந்த அறையில்...
தன் தாள்களைக் கிழித்து
வாழ்வின் நாட்களைக் கடக்கிறது.
மாநகரச் சதைக்கோளத் தாக்குதலில்
கைப்பிடியில் தொங்கிக் கொண்டு
துணையற்ற தனிமையை
விழுங்கி செரித்து,
காலங்களின் பயணங்களில்
மின்ரயில்களின் பேரோசையில்
இதுகாறும் கேட்க மறந்துவிட்ட தன்னிசையை
அடையாளம் காணுகிறது.
"தொட்டிச்செடிகளின் சங்கீதம்
புரியாமல் போனது இக்காலம் வரையில்
அறிந்தேனில்லை ரயிலில் பாடி யாசிக்கும்
சின்னஞ்சிறுமியின் குரலில் வழியும் தேனின்ருசி
கவனிப்பாரின்றி காற்றில் சிதறுகிறது
குழல் விற்பவனின் மூங்கில் கானம்"
"கவிதை ஒரு மோகனமான கனவு "என்றார் புதுமைப்பித்தன்.
இவர் அறையின் கனவுகளில்தான் எத்தனை விதம் விதமான
மோகனப்புன்னகைகள் முகம் காட்டுகின்றன.
முரண்களின் சூழலில் மீறலும் சுகமாகும் கனவுகளில்
நனவிலி மனதின் உருவமற்ற ஸ்பரிசத்தில்
நேரம்போவது அறியாமல் நீந்தி விளையாடியதில்
ஈரம் அழித்த கவிதைகளின் நடுவே
புதியக்கவிதைகளுக்காய் காத்திருக்கிறது
மாநகரத்தின் மனிதக் கொக்குகள்.
வயிற்றுக்கும் மனசுக்குமிடையே அல்லாடும்
மனசின் கதை
மனித வாழ்க்கையில் புதிய கதையுமல்ல
புதியத்தடமும் அல்ல.
பொருள்வழிப் பிரிவு என சொல்லிவைத்தார்கள்
அகமும் புறமும் பாடிய
நம் சங்ககாலத்து சான்றோர்கள்.
பிரிவும் தனிமையும்
கவிதை அறியாத அறிவியல் கணிதங்களையும்
கவிதை எழுத வைத்தக் கதை
கற்பனையின் ராஜ்யமல்ல.
அப்படியிருக்க,
நெருப்பில் காய்ச்சிய
செம்பழுப்பு சூரியனை
தனிமை கவிந்த அறையில்
சிறைப்பிடிக்க நினைக்கிறது காலம்.
காலத்தை தன் கவிதைகளால்
எட்டி உதைத்து
கவிதையின் திசைகாட்டியாய்
சன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டு
எட்டிப்பார்க்கிறது
கவிதைகள் மிதக்கும் பால்வீதியை
வழிதவறி வடக்கே வந்துவிட்ட
தெற்குவானத்தின் துருவநட்சத்திரம்.
கவிஞர் அன்பாதவனின் முந்தைய கவிதைகளிலிருந்து
விலகி நிற்கிறது
தனிமை கவிந்த அறை.
கவிதைக்குப் பல முகங்கள்,
பல குரல்கள்.
கவிஞனின் வாழ்க்கைப் பின்ணணி,
சூழல், காலம், வயது எல்லாம் சேர்ந்து
கவிஞனின் முகத்திற்கு
முகம் கொடுக்கிறது.
மாநகரம் மும்பை
தனிமையின் தொட்டில்களை மட்டுமே
ஆட்டுவதில்லை.
100 கோடி செலவில் வேடிக்கை விருந்துகள்
இந்த வெளிச்சத்திற்கு நடுவில்தான்
100 பைசாவுக்கு கடலை விற்கும் கனவுகளுடன்
சிறுவனும் நடக்கிறான்.
தனிமை என்ற பெருநகரச் பிசாசை
விரட்டி, வதம் செய்து
இந்த மாநகரத்தின் எல்லா அறைகளுக்குள்ளும்
எட்டிப் பார்க்க வேண்டும்
செம்பழுப்பு சூரியனின் வெளிச்சம்.
வாழ்த்துகளுடன்,
புதியமாதவி,
மும்பை 400 042.
14.02.06
அறையின் எதிரொலி:
தனிமை கவிந்த அறை
அவனுக்கு கவிதையின் மகுடம்!
அவளுக்கு...?
பி.கு: கவிஞர் அன்பாதவனின் 'தனிமை கவிந்த அறை'
கவிதை தொகுப்புக்கு வழங்கியிருக்கும் அணிந்துரை.
நூல் வெளியீடு: அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை 11.
பக்: 96, விலை: ரூபாய்: 40/
தனிமை அறையின் மவுன மொழிகள்
- புதியமாதவி
காலப்போக்கில் கலந்துவிட்ட பிற இனக்குழுக்களின் பெண்ணியப்பார்வை
தமிழரின் பெண்ணியப்பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தது.
மதம் என்ற நிறுவனமும் ஆட்சி அதிகாரத்தின் மூளையாகச் செயல்பட்ட குறிப்பிட்ட
சில இனத்தாரின் சாணக்கியமும் தமிழ்ப் பெண்ணியத்தின் மீது ஏற்படுத்திய
பண்பாட்டு தாக்குதல்களைச் செந்தமிழன் தன் நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்
கட்டுரைகளில் அலசி ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வருகிறார்..
மாலதி மைத்ரி, அ.மங்கை ஆகியோரின் நூல்களான 'விடுதலையை எழுதுதல்',
'பெண்ணிய அரசியல்' ஆகிய இரண்டு நூல்களின் 'போலிப் பெண்ணியத்தின்'
கருத்துகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு அவர் தன் கட்டுரைகளில்
தமிழ்ப் பெண்ணியத்தின் தன் பார்வையை வைத்திருப்பதாக மிகத் தெளிவாகச்
சொல்லியிருக்கிறார். அவர் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட இருவரின் நூல்களை
இன்றுவரை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் , அவ்விருவரின் கருத்துகளுக்குள்
புகாமல், தோழர் செந்தமிழன் கட்டுரைகளின் பெண்ணியப் பார்வைகளை
முன்வைத்து அதன் அடுத்தக் கட்ட சிந்தனைத் தளத்திற்கு நகர்வதே
என் இக்கட்டுரையின் நோக்கம்.
காமக்கிழத்தியும் விபச்சாரமும்:
காமக்கிழத்தி என்று அழைக்கப்படும் சங்க இலக்கியப் பெண்கள் பாலுறவை
ஒரு தொழிலாக - தன் உடலை விற்றுப்பிழைக்கும் இன்றைய பரத்தமை
தொழிலிருந்து மாறுபட்டவர்கள். சட்டென வெகுஜன பத்திரிகை மொழியில்
சொல்வதானால் காமக்கிழத்தி விபச்சாரி அல்லள். இன்றைக்கு 'விபச்சாரம்,
விபச்சாரி என்ற பொருளில் கையாளும் குறியீடல்ல.
தலைவன் - தலைவி என்ற சங்க கால ஆண்-பெண் வாழ்க்கையில் பேசப்படும்
காமக்கிழத்தி ஒரு தார மணம் ஏற்றுக்கொள்ளப்படும் காலத்திற்கு முந்திய
பலருடன் பாலுறவு கொண்ட சமூகத்தின் எச்சம்.
சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல் வரிகளைக் கொண்டும்
அன்றைய பொருளாதர கோட்பாட்டைக் கொண்டும் விளக்குகிறார்.
தமிழினம் பண்டமாற்றையும் தம் குழுவிற்குள் கொடைப் பொருளாதரத்தையும்
கடைப்பிடித்ததால் பரத்தையர் உறவு பொருளாதர மறுபயனுக்கானதாக
இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்.
'ஆண்களுக்கும் மணமாகாத பெண்களுக்கும் மணநிலைக்குப் புறம்பாக
நிலவிய உறவே பரத்தையர் உறவு " என்ற மார்க்கனின் குறிப்பை
முன்மொழிந்து ஏற்றுக்கொள்கிறார். (பக் 53)
"ஆகவே , பரத்தையர் விபசாரிகள் அல்லர்" என்ற முடிவை
ஆணித்தரமாக மனித இனக்குழு வரலாற்றுப் பார்வையுடன்
ஆய்ந்து முடிவுக்கு வருகிறார்.
இந்தக் கருத்துகளின் உச்சக்கட்டமாக தமிழரின் பொருளாதரம் பெண்களின்
பங்களிப்பைச் சார்ந்திருந்தது என்ற முடிவுக்கு வருகிறார். (பக் 91)
சமூக உற்பத்தியில் ஆண் - பெண் தவிர்க்கவியலா கடமைகளையும் உரிமைகளையும்
கொண்டிருந்தனர் என்று சொல்ல வரும்போதுதான் இக்கருத்தை உதிர்க்கிறார்.
'தமிழரின் பொருளாதரம் பெண்களின் பங்களிப்பைச் சார்ந்திருந்தது ' என்று சொல்வதற்கும்
'தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தங்கள் பொருளாதர நிலையில் ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை'
என்று சொல்வதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு.
குறிப்பாக நெய்தல் நில வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்/
நெய்தலின் பரதர் தொழில் கடலில் மீன்பிடித்தல்..
அப்படி அவன் பிடித்து வருகிற மீனை விற்பதும் காயவைத்து பதப்படுத்தி
சந்தைப் பொருளாக்குவதில் உதவுவதும் பெண்ணான பரத்தி/ நுளைச்சியின் வேலை.
ஆணின் வேலை- பங்களிப்பும் மூலதனம்.
பெண்ணின் வேலையும் அவள் பங்களிப்பும் அந்த மூலதனத்தைச் சார்ந்தது.
அதைச் சார்ந்து தொடர்வது.
மீன்பிடித்தல் இன்றி மீன்விற்பனை சாத்தியமில்லை.
பொருளாதரம் என்பதை முதலில் உற்பத்தி/ மூலதனம் என்பதுடன் தொடர்பு
படுத்தி இருக்க வேண்டும்., அதைவிடுத்து அடுத்தக்கட்டமான விற்பனை/சந்தை
என்ற நிலையை வைத்து தீர்மானிப்பது சரியல்ல.
பக்: 91 ல் நிலம், நிலம் சார்ந்த ஆண்கள், பெண்களின் பெயர்களை அட்டவணையிட்டு
காட்டியிருக்கிறார்.
இந்தப் பெயர்களின் மூலம் ஆண்களுக்கு நிகரான பால் தொகுதியினராக பெண்கள்
விளங்கினார்கள் என்றும் , இதன் உள்ளார்ந்தப் பொருள் ஆண்களுடன் இணைந்து அவர்களுக்கு
நிகராக பெண்களும் சமூக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்." என்கிறார்.
தன் கருத்துக்கு அவர் சொல்லும் பெண் அடையாளச் சொற்கள்,
குறத்தியர், எயிற்றியர், ஆய்ச்சியர், உழத்தியர், பரத்தியர். என்பதே.
இச்சொற்கள் அனைத்தும் தொழில் சார்ந்த பெயர்களே என்று சொல்லும் கட்டுரையாளர்
பாலை நிலம் குறித்து சொல்ல வரும்போது ஏற்படும் முரணில் சிக்கி
அவரையும் அறியாமல் மாலதிமைத்ரியின் கருத்துவலைக்குள் வந்துவிடுகிறார்!
பாலை நிலம்: ஆண் : எயினர், மறவர்
பெண்: எயிற்றியர், மறத்தியர்.
"பாலைநிலத்தொழில் வழிப்பறி செய்வது என்பதால் எயிற்றியர் அதில் நேரடியாக
ஈடுபட்டதாகத் தெரியவில்லை" - பக்: 92
அப்படியானால் அடுத்தக் கேள்வி, எந்த சாதாரண வாசகனுக்கும் எழும் கேள்வி
-அந்தப் பெண் ஏன் எயிற்றி என்றழைக்கப்பட்டாள்?- என்பதுதான்.
அவள் அந்தத் தொழிலைச் செய்யவில்லை. ஆனால் அந்தத் தொழிலைச் செய்பவனின்
மனைவி/மகள். எனவே அவள் எயிற்றி ஆனாள்.
இந்த அடையாளத்தின் வழி வந்த பெண் அடையாளங்கள் தான்
>குறிஞ்சி நிலத்து குறவனின் மனைவி குறத்தி
முல்லை நிலத்து இடையனின் மனைவி இடைச்சி
மருத நிலத்து உழவனின் மனைவி உழத்தி
நெய்தல் நிலத்து பரதனின் மனைவி பரத்தி.
இதைத் தான் மாலதி மைத்ரி "பெண்ணுக்கு மனைவி அல்லது பரத்தை என்ற இரு
பாத்திரங்கள் மட்டுமே தமிழ் நிலத்தில் வழங்கப்பட்டிருந்தது:"
என்று சொல்லியிருந்தார்.
கட்டுரையாளர் இன்னொரு கருத்தையும் சிந்திக்க வேண்டும்.
மருத நிலத்து பெண் முல்லை/குறிஞ்சி நிலத்து ஆணைத் திருமணம் செய்து
வாழ்ந்ததற்கு இலக்கியச் சான்றுகள் சங்க இலக்கியத்தில் உண்டு.
அவள் முல்லை/குறிஞ்சி நிலத்து ஆணைத் திருமணம் செய்தப் பின்
"என்னவாக அழைக்கப்பட்டிருப்பாள்?"
உழத்தி என்றா? அல்லது இடைச்சி/ குறத்தி என்றா?
உழத்தியாக மருத நிலத்தில் பிறந்தவள் இடையனுடன் களவொழுக்கம்
கண்டு கற்பொழுக்கத்துடன் வாழும் போது அவள் என்ன தொழில்
செய்திருப்பாள்?
தினைப்புலம் காத்திருப்பாளா? அல்லது பால் விற்றிருப்பாளா?
பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் அவள் ஏற்றுக்கொண்ட
இல்லறம் சார்ந்தும் அவள் தொழிலும் அதைச் சார்ந்துமே இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் 'ஒரு தார மணம்' என்ற கற்பொழுக்க
இல்லற வாழ்க்கைக்கு பெண் கொடுத்த மிகப்பெரிய விலை
இதுதான்.
எனினும் பால்விற்பது, மோர் விற்பது, நாற்று நடுவது, மீன்விற்பது,
கால்நடை பராமரிப்பு, இத்தியாதி உபதொழில்கள் மூலம் நிகழ்ந்த
பண்டமாற்று பொருளாதர நிலையில் பெண் இல்லறத்தில்
அனைத்துக்கும்(ஆம் அனைத்துக்கும்) ஆணின் கையை எதிர்ப்பார்த்து நிற்கும்
அடிமைநிலையுடன் வாழவில்லை என்ற தமிழ் மரபுக்குப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
மேலும் கணினியின் உலகமயமாதலின் தொழில் அடையாளத்துடன் வாழும்
இன்றைய தலைவியிடம் சம்பளம் வந்தவுடன் காசோலையை வாங்கி தனதாக்கிக்
கொள்ளும் தலைவனாக அன்றைய தமிழ்ச் சமூகத்து ஆண் இருக்கவில்லை.
பெண்ணின் உழைப்பு சுரண்டப்படவில்லை. அவள் உழைப்பிற்கான பயனை
இல்லறத்தினர் அனுபவித்தாலும் அவள் பொருளாதர உரிமை மதிக்கப்ட்டிருந்தது.
ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மரபுகளின் மறுபக்கம்
மரபு என்பதாலும் எம் முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்பதாலும் அனைத்துமே
பெருமைப் படக்கூடியதாகவும் போற்றிப் பாதுகாக்க வேண்டியதாகவும் எண்ணும்
ஒரு கருத்துப் பிழையைத் நாம் பல்வேறு தளங்களில் தொடர்கிறோம்.
தேவரடியார் பற்றிய கட்டுரை இந்தப் பாதையில் பயணிக்கிறது.
"தேவரடியார் சமூகம் அழிந்துப் போனது" என்பதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டுமா?
இல்லை ஆடல், பாடலை வளர்த்த ஒரு பெண் சமூகம் அழிந்து விட்டதே என்று கட்டுரையாளரைப்
போல வருத்தப்பட வேண்டுமா?
ஆமாம் இந்த தேவரடியார்களில் ஆடல்-பாடல் கலை யாரை மகிழ்விக்க?
அரசர்கள் அவர்களுக்குக் கொட்டிக்கொடுத்த பரிசுகள்- நிலங்கள் எதற்காக கொடுக்கப்பட்ட விலை?
தேவரடியார்கள் விபச்சாரிகள் அல்ல. உண்மைதான்.
ஆனால் என்றைக்கு அவர்களின் கலைக்கு நிலம் பரிசளிக்கப்படுகிறதோ அப்போதே
அதற்கு ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று தான் அர்த்தம்.
தன் கருத்துகளுக்கு ஆதாரமாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் தேவரடியார்களுக்கு
வழங்கப்பட்ட நில உரிமைகளை, வீடுகளைப் பட்டியலிடுகிறார்.
தஞ்சைக் கோவில் எழுப்பப்பட்ட சோழரின் காலம்தான் ஆரியர்களின் ஆதிக்கம் மதத்திலும்
அரசு அதிகாரத்திலும் தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட பொற்காலம்!
ஆனால் அதைத்தான் தமிழர்களின் பொற்காலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறொம்!
"தேவரடியார்களின் பொருளாதர ஆதாரம் கோயில் சார்ந்திருந்ததால் இம்முறையின் ஒழிப்பு
அவர்களை வாழ வழியற்றவர்களாக்கியது. கோயில்களிலிருந்து துரத்தப்பட்ட பிறகு தேவரடியார்கள்
வசமிருந்த ஒரே தொழில் வாய்ப்பு விபசாரம் மட்டுமே. முற்போக்கு சக்திகளின் மூளை"
இதுகுறித்துச் சிந்திக்கவில்லை" என்று குறைப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுரையாசிரியர்
சான்றுகளுடன் நிறுவ முடியுமா
எத்தனை தேவரடியார்கள் தேவரடியார் ஒழிப்புக்குப் பின் விபசாரிகளானார்கள் என்பதை.
உண்மைநிலை விபசாரிகளாக வாழ்ந்த தேவரடியார்கள் அந்த அடிமைத்தனத்திலிருந்து
விடுபட்டார்கள் என்பதுதானே.
'கோயில்களை ஆணாதிக்க சாதி ஆதிக்க நிலவுடமையாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து,
தேவரடியார்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தால் .." என்று வாதமிடுவது
இல்லாத ஊருக்கு வழிச்சொல்வது போல இருக்கிறது.
தமிழர் வாழ்வியலில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நெசவு, சிற்பம், தச்சு, நகைத்தொழில்
உள்ளிட்ட பல்வேறு மரபுத் தொழில்கள் முதலாளியத்தால் அழிக்கப்பட்டு வருவதையும்
கூட்டுக் குடும்பமுறை கூட்டு உற்பத்தி முறை ஆகியவை முதலாளிய கருத்தாக்கங்களால்
சிதைக்கப்பட்டதையும் விவரிக்கும் போது "மரபுத் தொழில்கள் உயிர்ப்பிக்க வேண்டும்"
என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த முடிவுகளின் வழிப் பயணிக்கும் போது சாதியக் கட்டுமானத்தின் ஆணிவேர்களை
நாம் அடையாளம் காண முடிகிறது.
கீதாரிகளின் வாழ்வு குறித்தக் கட்டுரையில் நடோடி சமூகத்தின் இனக்குழுவில்
பொதிந்து கிடக்கும் கால்நடை மருத்துவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு காப்பாற்ற
பட வேண்டியவைதான்.அதற்காகவே கீதாரியின் எஞ்சினியர் மகன் இரவில் கிடையில்
ஆடைகளைக் கவனிக்க வருவதில் எமக்கு உடன்பாடில்லை.
கீதாரியின் மகனின் தொழில் கிடையைக் கவனித்தல் என்ற மரபு தொழில்
தொடர்வதில் சாதியம் பாதுகாக்கப்படும். இவை உடைக்கப்பட வேண்டிய மரபுகள்.
இவைகளை உடைப்பதிலும் இவை உடைக்கப்பட்டதிலும் என் போன்றவர்களுக்கு
துளியும் வருத்தமில்லை.
ஒரு எழுத்தின் வெற்றி அதன் தொடர்ச்சியாக எழும் பல்வேறு சிந்தனைகள்.
செந்தமிழன் கட்டுரைகள் வாசகனுக்கு சிந்தனை அலைகளை எழுப்புவதில்
மிகச்சிறந்த வெற்றி பெற்றுள்ளன. தோழர் செந்தமிழனுக்கும் இந்நூலை வாசிக்கும்
வாய்ப்பைக் கொடுத்த தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழுவுக்கும்
நூலைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் தஞ்சை பன்மைவெளி வெளியீட்டகத்திற்கும்
வாழ்த்துகள்.
புதியமாதவி - அறிமுகம்புதியமாதவியின் தன் குறிப்புகள்:இயற்பெயர் : மல்லிகா
//சகோதரி புதியமாதவியைப் பற்றி எனது குறிப்புகள்துபாயிலிருந்து உடல்நிலை ச்ரியில்லை என ஊருக்கு திரும்பியவுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நல்ம் குறித்து உசாவியது மட்டுமல்லாமல் முடிந்தால் மும்பைக்கு வநது செல்லுங்கள் அல்லது உங்களின் மருத்துவக் கோப்புகளை அனுப்பி வையுங்கள் மும்பையின் மிகச் சிறந்த மருத்துவ்ர்களின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பி வைப்பதாக சொன்ன உடன் பிறவா சகோதரி.//
ஒத்துக்கொள்கிறேன்
நான் உன் அடிமை என்பதை.
உணர்ந்து கொண்டேன்
இழந்துப்போன
என் உரிமைகளை.
நானே வலிய வந்து
ஏற்றுக்கொண்டு விட்டேன்
-என் சுதந்திரம்
பறிக்கப்பட்டதை-
என்னைக் கட்டிப்போட்டிருக்கும்
சங்கிலியின் மறுமுனை
உன் வசம்.
நீ ஆட்டுகிறாய்
என்னை ஆட்டுவிக்கிறாய்
காட்சிப்படுத்துகிறாய்.
என்னைக்
காட்சிப்பொருளாக்கும்
கண்காட்சிகளை
என் சம்மதத்துடனேயே
அரங்கேற்றுகிறாய்.
என்னை விடுவிக்க
என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால்கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி
பேசாதே.
உன் வாசலுக்கு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச்சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும்
சிவந்த சவுக்கள்
கெட்டுப்போன
எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும்
ராட்சதக்கைகள்
என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.
களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியப்பின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.
என் உதடுகளைப்
பற்றிக்கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.
எதுவும் மிச்சமில்லை
என்வசம் இப்போது.
கண்களில்
தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:
உன் தட்டில்
எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை
தருவாயா
என் பசித்தீர்க்க?
---- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan)
கவிதை நூல் "தத்புருஷ்" ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின்
தமிழாக்கம்.)
On 09/11/2008, பண்புடன் ஆண்டு விழா குழுவினர் <panbu...@gmail.com> wrote:
> *என் பசி : மராத்திய மொழிக்கவிதை*
> *தமிழாக்கம் - புதியமாதவி*