அன்பிற்கினிய பதிவர், கவிஞர்
மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய
கனவின் இசைக்குறிப்பு நூல் வெளியீடு நேற்று (2024, சனவரி 07) மனம் நெகிழ நிறைவேறியது.
இரண்டு இறக்கைகளிலும் கவிதைகளையே சிறகுகளாய்ச் சுமந்து இணைய வானில் உலவிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பறவையின் கனவு நனவான அந்தச் சிறந்த நாள் உலகம் போற்றும் பெருங்கவிஞர் கலீல் கிப்ரானின் பிறந்தநாளாகவும் அமைந்தது காலம் செய்த வாணவேடிக்கை!
மாபெரும் படைப்புலகப் பயணத்தில் சகா மைதிலி அவர்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த முதல் அடிக்கு என்னாலும் உதவ முடிந்ததில் இந்தத் துறைக்குள் மீண்டும் வந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்! மேலும் விவரங்கள் அறியப் படித்துப் பாருங்கள் இதோ அந்த இன்மாலைப் பொழுது பற்றி -
https://agasivapputhamizh.blogspot.com/2024/01/kanavin-isaikurippu-an-important-evening-of-my-life.html