[பண்புடன்] வைணவம்- விசிஸ்டாத்வைதம்- கருத்துக்கள்

403 views
Skip to first unread message

Jaisankar Jaganathan

unread,
Aug 29, 2015, 11:00:40 AM8/29/15
to panb...@googlegroups.com
முதலில் விநாயகர் பெருமையில் இருந்து தொடங்குவோம். 

வைணவத்திலும் தும்பிக்கை ஆழ்வார் இருக்காரே. எல்லா வைணவ ஆலயங்களீலும் தூணில் பிள்ளையார் இருப்பார். அவரே தும்பிக்கை ஆழ்வார். அவரையும் சேர்த்தே சுற்றி வருவார்கள்.


விநாயகர் அகவல்


விநாயகர் அகவல்
எழுதியவர்: ஔவையார்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
--
regards,
jaisankar jaganathan

Jaisankar Jaganathan

unread,
Aug 29, 2015, 11:02:15 AM8/29/15
to panb...@googlegroups.com
நானே சொந்தமாக எழுதலாம் என்று நினைத்தேன். என்னை விட அழகாக எழுதியிருக்கிறார் இவர். அதனால் இதையே போடுகிறேன். இந்த தளத்தில் இல்லாத விஷயங்களை சொந்தமாகவும் எழுதுகிறேன். ஐயப்பன் அண்ணன் வருக. விமர்சனம் தருக


பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு


வியூக நிலையில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும்  எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன்  பாவ புண்யங்களால் ப்ரபஞ்சத்தில் ப்ரஜைகள் யாவரும்  இப்பிறவிக் கடலில் தத்தளிப்பதைப் பார்த்து அந்தரங்கத்து மனோ முடிவுகளை அப்போதே மலர்ந்தருள எண்ணினார். திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது புஜங்க சயனமாக தர்மத்தின் தேவனாகிய எமதர்மனின் செயல்பாட்டினை  கவனித்திடுவது போன்ற நிலையில் தென்திசை நோக்கியபடி திருக்கண் மலர்ந்து கடாக்ஷித்தார் ஸ்ரீமந்நாராயணன். "உங்களது பன்னிரு அம்சங்களும் லோகத்தை உத்தாரணம் செய்திட பூவுலகில் பல்வேறு வர்ணங்களில் ஜனனம் கொள்ளட்டும். எமது திருவடியை எப்போதும் சேவித்து சிந்தித்து வாழும் உங்களை ஆழ்வார்கள் என்று யாவரும் அழைப்பர். எம்முடைய சர்வமங்கள கல்யாண குண விசேஷங்களை அருந்தமிழ் தேனால் திருமஞ்சனம் செய்வீராக. வேதத்தின் சாரத்தையெல்லாம் பக்தர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் அமுதத்தமிழில் படைபீராக. நீங்கள் போற்றிய பாமாலை யாவும் "திவ்ய ப்ரபந்தம்" என்று மூவுலகம் போற்றும்".


மண்ணுலகில் அவதரிக்க போகும் ஆழ்வாராதிகள் ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் கேட்டு பேரானந்தம் கொண்டனர். ஆழ்வார்கள் வைஷ்ணவத்திற்கு ஒளிவிளக்காக பிரகாசிகின்ற பரமபதம் தந்த பகவதோதமர்கள் ஆவர். கலியுகத்தின் பாவத்தை அழிக்கும் உலக சூரியனாக பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் பரந்தாமன் நீளாதேவி,பஞ்சாயுதங்கள்ஸ்ரீவத்ஸம்,கெனன்துபம்வானமாலாதி சினைங்களையும் அனந்தன்,கருடன்விஷ்வக்சேனர் முதலானோரையும் பன்னிரு ஆழ்வார்களாக ஆவதரிக்கும் படி கூறிய நிமித்தம் வைஷ்ணவம் தழைத்து ஓங்க திவ்ய ப்ரபந்தம் என்னும் அமுத பாசுரங்கள் நமது நெஞ்சங்களில் எல்லாம் பேரானந்தப் பெருவெள்ளத்தைப் பொங்கி பிரவகிக்கச் செய்தது.

திருமாலின் அவதாரங்கள் அனைத்திலும் ஆழ்வார்கள் மனம் இழந்தார்கள். ப்ராண நிலையில் ஆழ்வார் அருளும் மெய்ப்பொருள் உணர்வுகளும் ப்ரேம நிலையில் பரகால நாயகியாய் உருகும் பக்தப் ப்ரேமையும்நம் ஞானக்கண்ணை  திறப்பதுடன் பரமபக்திக்கும் வழி காட்டுகின்றன. நாலாயிர திவ்ய ப்ரபந்தமளித்த ஆழ்வார்களின் திருக்காவியம் மானுட மன இருளைப் போகும் ஞானவிளக்கு அடங்காத நீண்ட காலபிறவியாக நஞ்சை மாற்றும் அமுதமாகும்.

Jaisankar Jaganathan

unread,
Aug 29, 2015, 11:03:46 AM8/29/15
to panb...@googlegroups.com
http://shrivaishnavam.blogspot.in/2012/05/blog-post_15.html

இந்த தளத்தில் மணிப்பரவாள நடை அதிகம் இருக்கிறது. தூய தமிழில் நான் மாற்றி எழுதுகிறேன்.  தனி மடலுக்கு மன்னிக்கவும்
--
regards,
jaisankar jaganathan

துரை.ந.உ

unread,
Aug 29, 2015, 11:05:59 AM8/29/15
to பண்புடன்
Inline image 1

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Aug 29, 2015, 11:06:49 AM8/29/15
to பண்புடன்
2015-08-29 20:32 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
ஐயப்பன் அண்ணன் வருக. விமர்சனம் தருக

​என்ன இருந்தாலும் பெரியவரு ...பெரியவருதான் !​
 


Jaisankar Jaganathan

unread,
Aug 29, 2015, 11:07:46 AM8/29/15
to panb...@googlegroups.com
ஓம் தமிழில் வரும்படி செய்யுங்கள் துரை அண்ணே
regards,
jaisankar jaganathan

Jaisankar Jaganathan

unread,
Sep 2, 2015, 11:00:57 AM9/2/15
to panb...@googlegroups.com
பொய்கையாழ்வர்
முதலாழ்வார்களைப்பற்றி இருக்கும் தகவல்கள் குறைவு. பாடல் பெரிது என்று எண்ணாதீர்கள்.அருமையான பாடல். அடுத்த 2 இழையிலும் பாடல் போட்டுவிட்டு அப்புறம். கதைக்கு வருகிறேன். முதலில் திருவந்தாதி

பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார்.காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில்திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதிஎனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

பொய்கைவாழ்வார் 12 ஆழ்வார்களில் முதலாழ்வார் ஆவர். காஞ்சியில் ஐப்பசி மதம் திருவோணம் நட்சத்திரத்டில் திருவெஃகா எனும் ஊரில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பது செவி வழி செய்தி.
திருமாலின் 10 அவதாரங்களையும் பாடியிருக்கார்.

பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் ஆவார்.

பொய்கை ஆழ்வார் 

முதல் திருவந்தாதி

வையம் தகளியா வார் கடலே நெய் ஆக 
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய 
சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை- 
இடர்-ஆழி நீங்குகவே என்று (1)



என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?- 
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது- 
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ 
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் (2)



பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த 
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் 
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்- 
நீ அளவு கண்ட நெறி (3)



நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து 
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்- 
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த 
ஆலம் அமர் கண்டத்து அரன் (4)



அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி 
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் 
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி 
உருவம் எரி கார் மேனி ஒன்று (5)



ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான் 
இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று 
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்- 
திருவரங்கம் மேயான் திசை (6)



திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து 
இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க் 
கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத 
வண்ணன் படைத்த மயக்கு (7)



மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து 
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் 
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!- 
போர் ஆழிக் கையால் பொருது? (8)



பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன 
்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட 
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க 
மா வடிவின் நீ அளந்த மண் (9)



மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் 
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் 
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் 
உலகு அளவும் உண்டோ உன் வாய்? (10)



வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் 
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு 
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்- 
காணா கண் கேளா செவி (11)



செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ 
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத 
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே- 
ஏனமாய் நின்றாற்கு இயல்வு (12)



இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல 
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக 
நீதியால் ஓதி நியமங்களால் பரவ 
ஆதியாய் நின்றார் அவர் (13)



அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி 
இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச் 
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த 
மூர்த்தி உருவே முதல் (14)



முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும் 
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய 
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் 
பல்லார் அருளும் பழுது (15)



பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி 
அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்- 
கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண் 
அடல் ஓத வண்ணர் அடி (16)



அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல 
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் 
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள் 
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று (17)



நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய் 
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் 
பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்- 
மருது இடை போய் மண் அளந்த மால் (18)



மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு 
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக் 
கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும் 
திருமேனி நீ தீண்டப்பெற்று? (19)



பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய் 
செற்றார் படி கடந்த செங்கண் மால் நல் தா- 
மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி 
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று (20)



நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால் 
சென்று திசை அளந்த செங்கண் மாற்கு என்றும் 
படை ஆழி புள் ஊர்தி பாம்பு-அணையான் பாதம் 
அடை ஆழி நெஞ்சே அறி (21)



அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்- 
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும் 
காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத் 
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு (22)



தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை 
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த- 
பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த 
வீங்கு ஓத வண்ணர் விரல் (23)



விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி 
உரலோடு உறப் பிணித்த நான்று குரல் ஓவாது 
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே? 
ஓங்கு ஓத வண்ணா உரை (24)



உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் 
வரைமேல் மரகதமே போலத் திரைமேல் 
கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி 
இடந்தானை ஏத்தி எழும் (25)



எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை 
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் 
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர் 
மனச் சுடரைத் தூண்டும் மலை (26)



மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து 
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப் 
போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்- 
கார்க் கோடு பற்றியான் கை (27)



கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து 
ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய 
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த 
இறையான் நின் ஆகத்து இறை (28)



இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் 
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின் 
பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த 
செங்கண் மால் கண்டாய் தெளி (29)



தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து 
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத் 
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே 
போய் நாடிக்கொள்ளும்-புரிந்து (30)



புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி 
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ 
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று 
எண்ணத்தான் ஆமோ இமை? (31)



இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி 
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் 
ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய் 
நாகத்து அணையான் நகர் (32)



நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் 
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே 
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் 
அந்தியால் ஆம் பயன் அங்கு என்? (33)



என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில் 
முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப் 
பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண் 
ஆய்த் தாய் முலை தந்த ஆறு? (34)



ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் 
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி 
நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து 
முடியான் படைத்த முரண்? (35)



முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் 
தரணி தனது ஆகத்தானே இரணியனைப் 
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ 
மண் இரந்து கொண்ட வகை? (36)



வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் 
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் 
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் 
ஊதிய வாய் மால் உகந்த ஊர் (37)



ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை 
பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய 
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர் 
எம் என்னும் மாலது இடம் (38)



இடந்தது பூமி எடுத்தது குன்றம் 
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும் 
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே- 
பேர் ஓத வண்ணர் பெரிது (39)



பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ 
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில் 
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்- 
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று (40)



குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் 
இன்று முதலாக என் நெஞ்சே என்றும் 
புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான் 
திறன் உரையே சிந்தித்திரு (41)



திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் 
திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல் 
பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த 
மால் ஓத வண்ணர் மனம்? (42)



மன மாசு தீரும் அரு வினையும் சாரா 
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய 
பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி 
தம் தொழாநிற்பார் தமர் (43)



தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே 
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து 
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே 
அவ் வண்ணம்-ஆழியான் ஆம் (44)



ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க 
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய 
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை 
பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு (45)



பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற 
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த 
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம் 
போகத்தால் பூமி ஆள்வார் (46)



வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும் 
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய 
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள 
்கைந் நாகம் காத்தான் கழல் (47)



கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல் 
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் 
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல 
மருவு ஆழி நெஞ்சே மகிழ் (48)



மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை 
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த 
சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் 
ஆதி காண்பார்க்கும் அரிது (49)



அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் 
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய் 
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர் 
ஏற்றானைக் காண்பது எளிது (50)



எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் 
தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில் 
பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய் 
இருந்தான் திருநாமம் எண் (51)



எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர் 
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி 
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும் 
திருமாலைக் கைதொழுவர் சென்று (52)



சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் 
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் 
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் 
அணை ஆம் திருமாற்கு அரவு (53)



அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் 
குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி 
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு 
அட்டு எடுத்த செங்கண் அவன் (54)



அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன் 
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல்
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் (55)



பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை
ஆரே அறிவார்? அது நிற்க நேரே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன் (56)



அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி 
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற
நல் மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது (57)



தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி 
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான் 
அந்தரம் ஒன்று இல்லை அடை (58)



அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் 
தன் வில் அங்கை வைத்தான் சரண் (59)



சரணா மறை பயந்த தாமரையானோடு 
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது 
ஓர் ஆழி சூழ்ந்த உலகு (60)



உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியில் ஆய புணர்ப்பு (61)



புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து 
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ
ஏழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் 
சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் (62)



தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே 
நாணாமை நள்ளேன் நயம் (63)



நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு 
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன் 
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் 
வரும் ஆறு என் என்மேல் வினை? (64)



வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார் 
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண்
கரியானைக் கைதொழுதக்கால் (65)



காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் 
பேர் ஆழி கொண்டான் பெயர் (66)



பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு (67)



உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி?
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர் 
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்? (68)



பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின் 
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு (69)



சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை நல் இதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் 
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று (70)



நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் 
அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு (71)



அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும் 
பூண் ஆரம் பூண்டான் புகழ் (72)



புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை 
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும் 
உடலும் உயிரும் ஏற்றான் (73)



ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் 
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான் 
கங்கையான் நீள் கழலான் காப்பு (74)



காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள் 
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி (75)



வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும்
வாராதவண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திருவேங்கடம் (76)



வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே 
என்றால் கெடுமாம் இடர் (77)



இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய
பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும் 
கொய்ந் நாகப் பூம் போது கொண்டு (78)



கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்?
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரம் கை தோய அடுத்து? (79)



அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி 
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள்? (80)



ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று 
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை (81)



படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள் 
மான் மாய எய்தான் வரை (82)



வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர்மேல்
பேர் ஆழி கொண்ட பிரான் (83)



பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்?
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை
அடிக்கு அளவு போந்த படி? (84)



படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள் 
கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி 
நெறி நின்ற நெஞ்சமே நீ (85)



நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா! வாசல்
கடை கழியா உள் புகா காமர் பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி (86)



இனி யார் புகுவார் எழு நரக வாசல்?
முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு (87)



நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு 
என் ஆகில் என்னே எனக்கு? (88)



எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம் 
பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ 
மா மேனி காட்டும் வரம் (89)



வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை 
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? (90)



ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி 
ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்? (91)



வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய் 
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு? (92)



வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச 
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் 
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின்
சேவடிமேல் ஈடு அழிய செற்று? (93)



செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும் 
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால் 
இறையேனும் ஏத்தாது என் நா (94)



நா வாயில் உண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர்
தீக் கதிக்கண் செல்லும் திறம்? (95)



திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம்
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கண் பிடி (96)



பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன்? (97)



பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும் 
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)



உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும் 
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (99)



ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும் 
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில்
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை (100)

yesu rajan

unread,
Sep 2, 2015, 11:41:03 PM9/2/15
to panb...@googlegroups.com
//

திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து 
இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க் 
கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத 
வண்ணன் படைத்த மயக்கு (7)//

அன்பரே

அனைத்து திசை உறு தெய்வங்களுக்கும் கண்ணன் தான் செயல் வழங்குவாரோ

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 12:13:46 AM9/3/15
to panb...@googlegroups.com
ஆமாம். யேசுராஜன். எவரெவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும் என்னை வணங்குவதே ஆகும் என்று கீதையில் கண்ணன் சொல்லியிருக்கார் 
--
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Sep 3, 2015, 1:04:53 AM9/3/15
to panb...@googlegroups.com
நன்றி அன்பரே

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 2:49:32 AM9/3/15
to panb...@googlegroups.com
பேயாழ்வார்

பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎனவழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறுவெண்பாக்களைக் கொண்டது.

சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.

அவர் பாடிய மூன்றாம் திருவந்தாதி

நாலாயிர திவ்ய பிரபந்தம்

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி


2281 திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் 
என் ஆழி வண்ணன்பால் இன்று             (1)

 
2282 இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் 
பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டுகொண்டு என் மனம்             (2)

 
2283 மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள்
தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச்
செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன் 
வரு நரகம் தீர்க்கும் மருந்து             (3)

 
2284 மருந்தும் பொருளும் அமுதமும் தானே 
திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி             (4)

 
2285 அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே 
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு             (5)

 
2286 அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்?
அழகு அன்றே அண்டம் கடத்தல்? அழகு அன்றே 
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ 
கங்கை நீர் கான்ற கழல்?             (6)

 
2287 கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க் கடல் நீர் வேலைப்
பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் எழில் அளந்து அங்கு
எண்ணற்கு அரியானை எப் பொருட்கும் சேயானை 
நண்ணற்கு அரியானை நாம்             (7)

 
2288 நாமம் பல சொல்லி நாராயணா என்று 
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி 
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் 
கண்ணனையே காண்க நம் கண்             (8)

 
2289 கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் 
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் 
கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன் 
திரு மா மணி வண்ணன் தேசு             (9)

 
2290 தேசும் திறலும் திருவும் உருவமும் 
மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத 
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு             (10)

 
2291 நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும்
பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் சங்கு ஓதப்
பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூல் கடலான் நுண் அறிவினான்             (11)

 
2292 அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும்
நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்தோறும்
பைங்கோத வண்ணன் படி             (12)

 
2293 படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று 
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் 
ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே 
மா காயமாய் நின்ற மாற்கு             (13)

 
2294 மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு 
நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து             (14)

 
2295 பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத 
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து             (15)

 
2296 வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை 
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் 
திருவல்லிக்கேணியான் சென்று             (16)

 
2297 சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் 
மறவாது வாழ்த்துக என் வாய்             (17)

 
2298 வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண்
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின்
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி 
அஞ்சாது இருக்க அருள்             (18)

 
2299 அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது 
முந்தையராய் நிற்பார்க்கு முன்?             (19)

 
2300 அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது 
ந்தையராய் நிற்பார்க்கு முன்?             (20)

 
2301 பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே 
வாச மலர்த் துழாய் மாலையான் தேசு உடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு             (21)

 
2302 வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடி ஆர் மலர் தூவி காணும் படியானை 
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே 
மெய்ம்மையே காண விரும்பு             (22)

 
2303 விரும்பி விண் மண் அளந்த அஞ் சிறைய வண்டு ஆர்
சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும்
புனந் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே
மனம் துழாய் மாலாய் வரும்             (23)

 
2304 வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் 
நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் பொருந்தும்
சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும் 
தொடர் ஆழி நெஞ்சே தொழுது             (24)

 
2305 தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம்
முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து?             (25)

 
2306 சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் 
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் 
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே 
தாம் கடவார் தண் துழாயார்             (26)

 
2307 ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார் 
காரே மலிந்த கருங் கடலை நேரே
கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து?             (27)

 
2308 அடைந்தது அரவு அணைமேல் ஐவர்க்கு ஆய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே! வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான்             (28)

 
2309 பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து 
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்த்
தெருளா மொழியானைச் சேர்ந்து             (29)

 
2310 சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் 
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறைபாடி ஆய இவை             (30)

 
2311 இவை அவன் கோயில் இரணியனது ஆகம்
அவைசெய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்             (31)

 
2312 பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் 
நூல் கடலும் நுண் நூல தாமரைமேல் பாற்பட்டு 
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் 
குருந்து ஒசித்த கோபாலகன்             (32)

 
2313 பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம்
மேல் ஒருநாள் உண்டவனே! மெய்ம்மையே மாலவனே 
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று             (33)

 
2314 அன்று இவ் உலகம் அளந்த அசைவேகொல்?
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண்             (34)

 
2315 காண் காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண்கண்
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன்
கழல் பாடி யாம் தொழுதும் கை             (35)

 
2316 கைய கனல் ஆழி கார்க் கடல் வாய் வெண் சங்கம் 
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய
படை பரவை பாழி பனி நீர் உலகம்
அடி அளந்த மாயன் அவற்கு             (36)

 
2317 அவற்கு அடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான் 
உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் துவர்க்கும்
பவள வாய்ப் பூமகளும் பல் மணிப் பூண் ஆரம் 
திகழும் திருமார்பன் தான்             (37)

 
2318 தானே தனக்கு உவமன் தன் உருவே எவ் உருவும் 
தானே தவ உருவும் தாரகையும் தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இறை             (38)

 
2319 இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய் 
மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்             (39)

 
2320 உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் 
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்             (40)

 
2321 மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் 
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ             (41)

 
2322 கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி 
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி 
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் 
தெரி உகிரால் கீண்டான் சினம்             (42)

 
2323 சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து 
புனம் மேய பூமி அதனைத் தனமாக 
பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார்
ஓர் அகலத்து உள்ளது உலகு             (43)

 
2324 உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என் நெஞ்சே புரி             (44)

 
2325 புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி 
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் 
மண் கோட்டுக் கொண்டான் மலை             (45)

 
2326 மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி 
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் 
பிண்டமாய் நின்ற பிரான்             (46)

 
2327 நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய்! நங்கள்
நரக வாய் கீண்டாயும் நீ             (47)

 
2328 நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்?
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? நீ அன்றே 
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் 
தேவாசுரம் பொருதாய் செற்று?             (48)

 
2329 செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்கு ஆய் முற்றல்
முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச்
சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து             (49)

 
2330 சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த அருவித் தட வரைவாய் ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் 
அணி நீல வண்ணத்தவன்             (50)

 
2331 அவனே அரு வரையால் ஆ நிரைகள் காத்தான் 
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர் 
இலங்காபுரம் எரித்தான் எய்து             (51)

 
2332 எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் 
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ சென்று குறள் உரு ஆய்
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று             (52)

 
2333 முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர் வேலை
இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய் 
தண் அலங்கல் மாலையான் தாள்             (53)

 
2334 தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி 
கீளா மருது இடை போய் கேழல் ஆய் மீளாது
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப்
பெண் அகலம் காதல் பெரிது             (54)

 
2335 பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு 
கரிய முகிலிடை மின் போல தெரியுங்கால் 
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன் தன்
நீள் நெடுங் கண் காட்டும் நிறம்             (55)

 
2336 நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே 
பூ மங்கை கேள்வன்பொலிவு?             (56)

 
2337 பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி 
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த 
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே 
தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57

 
2338 தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி 
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய 
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள் 
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58

 
2339 வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்த் 
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும் 
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் 
பெருமான் அடி சேரப்பெற்று 59

 
2340 பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம் 
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்றுக் 
குணிலை விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் 
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60

 
2341 பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் 
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு 
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை 
இளங் குமரன் தன் விண்ணகர் 61

 
2342 விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் 
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த 
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி 
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62

 
2343 தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் 
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் 
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு 
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63

 
2344 இசைந்த அரவமும் வெற்பும் கடலும் 
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து 
கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் 
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64

 
2345 அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து 
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி 
அரி உருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே 
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65

 
2346 காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் 
ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த 
மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் 
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66

 
2347 ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய் 
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத் 
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில் 
பகரும் மதி என்றும் பார்த்து 67

 
2348 பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு 
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த 
களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள் 
விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68

 
2349 வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் 
கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற 
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான் 
பூண்ட நாள் எல்லாம் புகும் 69

 
2350 புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி 
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன் 
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே 
கண்டு வணங்கும் களிறு 70

 
2351 களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி 
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி 
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் 
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71

 
2352 குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை 
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று 
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை 
இளங் குமரர் கோமான் இடம் 72

 
2353 இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி 
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த 
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே 
நாத்தன்னால் உள்ள நலம் 73

 
2354 நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய் 
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் 
வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான் 
தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து? 74

 
2355 சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய் 
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து 
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு 75

 
2356 பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால் 
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து? 76

 
2357 ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப் போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப் போது நங்கட்கு அரண் 77

 
2358 அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன் 
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல் 
ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே 
ஓது கதி மாயனையே ஓர்த்து 78

 
2359 ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து 
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி
நிரை ஆர மார்வனையே நின்று 79

 
2360 நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் 
ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும்
ஆர் படு வான் நேமி அரவு அணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு 80

 
2361 நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ 
ஓராது நிற்பது உணர்வு? 81

 
2362 உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய 
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி? 82

 
2363 இனி அவன் மாயன் என உரைப்பரேலும் 
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் 
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான் 
உள்ளத்தின் உள்ளே உளன் 83

 
2364 உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே
கண்டார்? உகப்பர் கவி 84

 
2365 கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய் 
செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய்
ஏற்று உயிரை அட்டான் எழில்? 85

 
2366 எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில்கொண்டு தான் முழங்கித் தோன்றும் எழில்கொண்ட
நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல 
கார் வானம் காட்டும் கலந்து 86

 
2367 கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும்
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
அந்தி வான் காட்டும் அது 87

 
2368 அது நன்று இது தீது என்று ஐயப்படாதே 
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து 88

 
2369 முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த தடிந்து எழுந்த
வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89

 
2370 சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு 
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண் திசையும் சூழ இடம் போதாது என்கொலோ
வண் துழாய் மால் அளந்த மண்? 90

 
2371 மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் 
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான் 
வயிற்றினோடு ஆற்றா மகன் 91

 
2372 மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச்
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே 
நிறைசெய்து என் நெஞ்சே நினை 92

 
2373 நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்?
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் கனைத்து உலவு 
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து 93

 
2374 உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி 
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே 
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து 
பொன்றாமை மாயன் புகுந்து             (94)

 
2375 புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் 
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் 
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே 
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து     (95)

 
2376 வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் 
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே கேழ்த்த 
அடித் தாமரை மலர்மேல் மங்கை மணாளன் 
அடித் தாமரை ஆம் அலர்               (96)

 
2377 அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய 
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த 
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு 
எண்ணத்தான் ஆமோ இமை?             (97)

 
2378 இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் 
அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ் 
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் 
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு             (98)

 
2379 தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் 
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக் 
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் 
தாள் முதலே நங்கட்குச் சார்வு             (99)

 
2380 சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் 
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த 
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங் கண் 
தேன் அமரும் பூமேல் திரு             (100)

 
 


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Sep 3, 2015, 2:51:12 AM9/3/15
to பண்புடன்
எத்தனை அருமையான பாடல்கள்... நன்றி ஜெ.

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 3:40:25 AM9/3/15
to panb...@googlegroups.com
இந்த நிகழ்வு வைணவர்களால் பெரிதும் விரும்பப்படுவது.முதலாழ்வார்கள் மூவரும் தனித்தனியே திருத்தல யாத்திரை போனார்கள். இவர்கள் திருக்கோவிலூரில் சந்திக்க வைத்தார் திருமால். பெருமழை பெய்தது. அப்பொழுது பொய்கையாழ்வார் அந்த இடைக்கழியில் படுத்து இருந்தார். அங்கே  வந்த பேயாழ்வார் தனக்கும் இடம் கேட்க இங்கே ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். என்று கூறினார்.அதாவது இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அடுத்தது பூதத்தாழ்வார் வந்து மேலும் இடம் கேட்டார். அதற்கு இருவரும் ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம்.என்று கூறி மூவரும் நின்றனர். இந்த சத்சங்கத்தில் கலந்துகொள்ள திருமாலும் விரும்பினார். தனால் கரியமால் வந்தார். மூவரையும் நெருக்கி நின்றார். இருட்டில் யார் என்று மூவருக்கும் தெரியவில்லை. ஆனால் ஆனந்தம் பொங்கியது அவர்களுக்கு

அதனால் முதலில் பொய்கையாழ்வார் தனது பாடலின் மூலம் விளக்கு வெளிச்சம் உருவாக்கினார்.

அந்த பாடலே முதலாம் திருவந்தாதி என்று சொல்லப்படுகிறது. (அது இந்த இழையில் இருக்கிறது.

ஒரு பாடல் மட்டும் சொல்லுகிறேன்

வையம் தகளியா வார் கடலே நெய் ஆக 
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய 
சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை- 
இடர்-ஆழி நீங்குகவே என்று

உலகம் ஒரு அகல்விளக்காக இருக்க கடல் முழுவதும் நெய்யாக இருக்க வெய்ய கதிரோன் விளக்காக இருக்க என்று பாடினார். 
 

அடுத்து பூதத்தாழ்வார் பாடல்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு 
ஞானத் தமிழ் புரிந்த நான்     


இந்த இருவரும் ஏற்றிய விளக்கின் ஒளியில் திருமாலை மூவரும் தரிசனம் செய்தனர்.

அப்பொழுது பேயாழ்வார் மெய்சிலிர்த்து பாடிய பாடல்

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் 
என் ஆழி வண்ணன்பால் இன்று   


இந்த பாடலுக்கு விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

மேலும் நான் போரடிக்க போவதில்லை.  கதைகளில் இறங்குவோம்


Iyappan Krishnan

unread,
Sep 3, 2015, 3:49:15 AM9/3/15
to பண்புடன்
​சவ்வாசு....

ஷைலஜாக்கா வருவாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல... 

2015-09-03 13:10 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் 
என் ஆழி வண்ணன்பால் இன்று   




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 4:01:42 AM9/3/15
to panb...@googlegroups.com
இரண்டாம் திருவந்தாதி இல்லை. சீக்கிரம் போடுகிறேன்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 4:04:58 AM9/3/15
to panb...@googlegroups.com

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

இரண்டாம் திருவந்தாதி தனியன்

திருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

  என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.  



ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி

2182 அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1

2183 ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்
தணியமர ராக்குவிக்கு மதன்றே, நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு? 2

2184 பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர். 3

2185 நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி. 4

2186 அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து? 5

2187 அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
காரோத வண்ணன் கழல். 6

2188 கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
μராழி நெஞ்சே. உகந்து. 7

2189 உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
அலைபண்பா லானமையால் அன்று. 8

2190 அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,
பெருமுறையா லெய்துமோ பேர்த்து? 9

2191 பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை. 10

2192 கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்? 11

2193 அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12

2194 தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் - றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு? 13

2195 பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14

2196 திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15

2197 தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று? 16

2198 மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,
சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17

2199 கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு. 18

2200 வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி. 19

2201 பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம். 20

2202 தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, - வாமன்
திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே
அருநரகம் சேர்வ தரிது. 21

2203 அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து? 22

2204 தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். 23

2205 அவன்கண்டாய் நன்னெஞ்சே.ஆரருளும் கேடும்,
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், - அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத,
சீற்றத்தீ யாவானும் சென்று. 24

2206 சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,
கொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்
வாயோங்கு தொல்புகழான் வந்து. 25

2207 வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், - உந்திப்
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,
படியமரர் வாழும் பதி. 26

2208 பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம். 27

2209 மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன். 28

2210 மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
அகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ. 29

2211 நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,
நீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,
பேரோத மேனிப் பிரான். 30

2212 பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு, - வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31

2213 மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32

2214 துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
வாய்திறங்கள் சொல்லும் வகை. 33

2215 வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி. 34

2216 இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது. 35

2217 சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர், - அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டேன் னெஞ்சே. இரு. 36

2218 இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,
திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லா மெமக்கு. 37

2219 எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,
தமக்கென்றும் சார்வ மறிந்து, - நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
μதுவதே நாவினா லோத்து. 38

2220 μத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமி னேழைகாள், μத்தனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே μத்தின் சுருக்கு. 39

2221 சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
போகத்தா லில்லை பொருள். 40

2222 பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளா லறமருளு மன்றே, - அருளாலே
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
நீமறவேல் நெஞ்சே. நினை. 41

2223 நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,
துறந்தார் தொழுதாரத் தோள். 42

2224 தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும்,
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு? 43

2225 சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
μதுவதே நாவினா லுள்ளு. 44

2226 உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,
தளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பயின்று. 45

2227 பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால். 46

2228 மாலை யரியுருவன் பாத மலரணிந்து,
காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47

2229 உணர்ந்தாய் மறைநான்கும் μதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை. 48

2230 மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
அஞ்சாதென் னெஞ்சே. அழை. 49

2231 அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய
ஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து. 50

2232 மதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம்,
மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை, - மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம். 51

2233 நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,
அறம்பெரிய னார தறிவார்? - மறம்புரிந்த
வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து,
நீளிருக்கைக் குய்த்தான் நெறி. 52

2234 நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,
அறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாது
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53

2235 வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்
திளங்கோயில் கைவிடேல் என்று. 54

2236 என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
நின்று நினைப்பொழியா நீர்மையால், - வென்றி
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
கடலாழி நீயருளிக் காண். 55

2237 காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,
நாணப் படுமென்றால் நாணுமே? - பேணிக்
கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,
திருமாலை நாங்கள் திரு. 56

2238 திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், - உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,
நாற்றிசையும் கேட்டீரே நாம்? 57

2239 நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து
μம்பி யிருந்தெம்மை μதுவித்து, - வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,
அருள்நீர்மை தந்த அருள். 58

2240 அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, - இருள்திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,
μக்கினே னென்னையுமங் கோர்ந்து. 59

2241 μருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், μருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று. 60

2242 நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம், - அன்று
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு. 61

2243 பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்
பெருத்தெருத்தம் கோடொசியப் பெண்நசையின் பின் போய்,
எருத்திருந்த நல்லாயர் ஏறு. 62

2244 ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
ஏறேறிப் பட்ட இடுசாபம் - பாறேறி
உண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
கண்டபொருள் சொல்லின் கதை. 63

2245 கதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே,
இதய மிருந்தவையே ஏத்தில், - கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,
பருமொழியால் காணப் பணி. 64

2246 பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், - துணிந்தேன்
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது. 65

2247 இது கண்டாய் நன்னெஞ்சே.இப்பிறவி யாவது,
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய்
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,
காரணமும் வல்லையேல் காண். 66

2248 கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் μட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி. 67

2249 வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரைமத் தாக, வலிமிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணாகம் கொம்பொசித்த கோ. 68

2250 கோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் - பூவேகும்
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,
தண்கமல மேய்ந்தார் தமர். 69

2251 தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம். 70

2252 இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்
றடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும்
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,
பூவா ரடிநிமிர்ந்த போது. 71

2253 போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் - போது
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங் கடவன்பே ராய்ந்து. 72

2254 ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
வாய்ந்த மலர்தூவி வைகலும், - ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்
இறைக்காட் படத்துணிந்த யான். 73

2255 யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், - யானே
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
பெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74

2256 பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று,
இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,
வான்கலந்த வண்ணன் வரை. 75

2257 வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,
விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
μதிப் பணிவ தூறும். 76

2258 உறுங்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன்நற் பாதம்,
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், - உறுங்கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்_ றெப்பொழுதும்,
சாற்றி யுரைத்தல் தவம். 77

2259 தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி
நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம், - சிவந்ததன்
கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்
பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78

2260 பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல் நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர். 79

2261 நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், - ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல்? 80

2262 பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
வான்திகழும் சோதி வடிவு. 81

2263 வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், - அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
கோலத்தா லில்லை குறை. 82

2264 குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
மறையாங் கெனவுரைத்த மாலை, - இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,
மாயன்கண் சென்ற வரம். 83

2265 வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
உரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,
அங்கண்மா ஞாலத் தமுது. 84

2266 அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், - அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று. 85

2267 நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று? 86

2268 இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை, - அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,
திருக்கோட்டி எந்தை திறம். 87

2269 திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு. 88

2270 கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,
அதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப்
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,
மாணியாய்க் கொண்டிலையே மண். 89

2271 மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, - நண்ணித்
திருமாலை செங்க ணெடியானை, எங்கள்
பெருமானைக் கைதொழுத பின். 90

2272 பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,
முன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல்
அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்
அளந்தா னவஞ்சே வடி. 91

2273 அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்
படியான் கொடிமேல்புள் கொண்டான், - நெடியான்றன்
நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும்
காமமே காட்டும் கடிது. 92

2274 கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,
கொடிதென் றதுகூடா முன்னம், - வடிசங்கம்
கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்
சுண்டானை ஏத்துமினோ உற்று. 93

2275 உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. 94

2276 என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான். 95

2277 அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான். (2) 96

2278 எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,
செங்க ணெடுமால் திருமார்பா, - பொங்கு
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,
குடமூக்கில் கோயிலாக் கொண்டு. 97

2279 கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,
உண்ட துலகேழு முள்ளொடுங்க, - கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை. 98

2280 இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல
சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால். (2) 99

2281 மாலே. நெடியானே.கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா.வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு. (2) 100


பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.


yesu rajan

unread,
Sep 3, 2015, 4:12:02 AM9/3/15
to panb...@googlegroups.com
அன்பர்கள் மன்னிக்கவும்

இந்த அன்பரும் எதோ ஒரு இடத்தில் இருந்துதானே எடுத்து போடுகிறார்

அதை குறிப்பிடவில்லையே

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 4:13:55 AM9/3/15
to panb...@googlegroups.com
இந்த பாடல்கள் பொதுவானதை. கதை என் கை வண்ணம். அதனால் போடவில்லை.
--
regards,
jaisankar jaganathan

துரை.ந.உ

unread,
Sep 3, 2015, 4:15:24 AM9/3/15
to பண்புடன்
2015-09-03 13:42 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
அன்பர்கள் மன்னிக்கவும்

இந்த அன்பரும் எதோ ஒரு இடத்தில் இருந்துதானே எடுத்து போடுகிறார்

அதை குறிப்பிடவில்லையே

​அதை நீங்களே கேட்கலாம் ஐயா .... நீங்களும் சேர்ந்ததுதான் குழுமம் ... தனிப்பட்ட அதிகாரம் மையமெல்லாம் இங்கில்லை 

கேளுங்கள் கேளுங்கள் ​
 

துரை.ந.உ

unread,
Sep 3, 2015, 4:16:42 AM9/3/15
to பண்புடன்
2015-09-03 13:43 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
இந்த பாடல்கள் பொதுவானதை.

​அனால் எடுத்த இடம் இருக்கும் தானே ... அதைக் குறிப்பிடணும் ஜெய்சங்கர் ஜெகன்னாதன் அவர்களே ..



--

Iyappan Krishnan

unread,
Sep 3, 2015, 4:19:24 AM9/3/15
to பண்புடன்
​ஜெ,
வெறும் பாடல்கள் மட்டுமே தேவை இல்லை. அதை யாரும் தேடிப் படித்துக் கொள்ளலாம். 


yesu rajan

unread,
Sep 3, 2015, 4:20:06 AM9/3/15
to panb...@googlegroups.com
அன்பர் மஞ்சூர் ராசா அவர்கள் வந்து கண்டிப்பு செய்வாரே  அவரை காணவில்லையே

ஒவ்வொரு இழைக்கும் என்னை தொடுப்பு போட சொன்னாரே அகமது அவரை காணவில்லையே

ஏன் இந்த நிலை எனக்கு

Iyappan Krishnan

unread,
Sep 3, 2015, 4:25:16 AM9/3/15
to பண்புடன்
​எல்லா நேரத்துலயும் எல்லாரும் இருக்கனும்னு எதிர் பார்க்க முடியாது.   அவங்க சொல்லல இவங்க சொல்லலைன்னு இல்லாம நீங்களே சொல்லுங்க. ஜெ நல்ல பிள்ளை. சொல்றத கேப்பார். 

2015-09-03 13:50 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
அன்பர் மஞ்சூர் ராசா அவர்கள் வந்து கண்டிப்பு செய்வாரே  அவரை காணவில்லையே

ஒவ்வொரு இழைக்கும் என்னை தொடுப்பு போட சொன்னாரே அகமது அவரை காணவில்லையே

ஏன் இந்த நிலை எனக்கு



Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 4:25:27 AM9/3/15
to panb...@googlegroups.com
கதை என் வண்ணம். தகவல்கள் என் புத்தகம். பாடல்கள் ஒட்டு வேலை. அதை எங்கே எடுத்தேன் என்று போடுகிறேன். டைப் பண்ணினால் தவறு நேர்ந்த்விடுமோ என்றூ போட்டேன்

2015-09-03 13:49 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ஜெ,
வெறும் பாடல்கள் மட்டுமே தேவை இல்லை. அதை யாரும் தேடிப் படித்துக் கொள்ளலாம். 


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Sep 3, 2015, 4:29:00 AM9/3/15
to panb...@googlegroups.com
//எல்லா நேரத்துலயும் எல்லாரும் இருக்கனும்னு எதிர் பார்க்க முடியாது.   அவங்க சொல்லல இவங்க சொல்லலைன்னு இல்லாம நீங்களே சொல்லுங்க. ஜெ நல்ல பிள்ளை. சொல்றத கேப்பார். //

////எல்லா நேரத்துலயும் எல்லாரும் இருக்கனும்னு எதிர் பார்க்க முடியாது//

ஆனால் யாருக்குமே தெரியாமல் இருக்காது


//அவங்க சொல்லல இவங்க சொல்லலைன்னு இல்லாம நீங்களே சொல்லுங்க.//

நானே எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியாது

அவங்க சொல்லலை இவங்க சொல்லலை என நான் ஏன் சொல்லனும்

எல்லாருக்கும் ஒரே மாதிரி சொன்னால்

//ஜெ நல்ல பிள்ளை. சொல்றத கேப்பார்//

அவரல்ல இப்போது கேட்காதவர்


அன்பரே , நல்லா சமாளிக்கிறீர்கள்  நானும் கவனித்துகொண்டுதான் உள்ளேன்

நடக்கட்டும்

Iyappan Krishnan

unread,
Sep 3, 2015, 4:30:25 AM9/3/15
to பண்புடன்
​ஆஹா.. ஏன் என்மேல பாயறீங்க... எல்லாரும் எழுதுங்கன்னு  சொல்றது ஒரு தப்பா :((



2015-09-03 13:58 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
அன்பரே , நல்லா சமாளிக்கிறீர்கள்  நானும் கவனித்துகொண்டுதான் உள்ளேன்

நடக்கட்டும்



Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 4:32:37 AM9/3/15
to panb...@googlegroups.com

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Sep 3, 2015, 4:33:28 AM9/3/15
to panb...@googlegroups.com
திருவந்தாதி
இணையத்தில் இவை காண கிடைக்கின்றன அன்பரே

//இந்த பாடல்கள் பொதுவானதை. கதை என் கை வண்ணம். அதனால் போடவில்லை.//

நீங்கள் அங்கிருந்து எடுக்கவில்லை என சொல்லலாம் ஆனால்

அங்கிருந்து எடுத்திருந்தால் சொல்லி இருக்கனும்

அவ்வாறு நீங்கள் சொல்லாமல் இருந்தால் பரவாயில்லை

மற்றவர்கள் சுட்டி காட்டி இருக்கனும் அல்லவா

yesu rajan

unread,
Sep 3, 2015, 4:38:50 AM9/3/15
to panb...@googlegroups.com
அனைத்து அன்பர்களும் ,

நான் கேட்டிருப்பதில் ஏதும் தவறு இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்

அன்பர் ஜெய்சங்கர் தனது வேலையை தொடரட்டும்


Ahamed Zubair A

unread,
Sep 3, 2015, 7:48:37 AM9/3/15
to பண்புடன்
எனக்கெதுக்கு வம்பு...?

நானும் ஆசிரியரான்னு கேப்பாங்க இந்தக் குழுமத்துல :))

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 7:49:26 AM9/3/15
to panb...@googlegroups.com
அபப்டின்னா நீங்க டீச்சர் இல்லையா சுபைர் . என்சினியரா

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2015, 7:51:18 AM9/3/15
to panb...@googlegroups.com
என் இழையில் நானே மொக்கை போட்டதுக்க்கு வருந்துகிறேஎன். வேண்டாம் மொக்கை
--
regards,
jaisankar jaganathan
Reply all
Reply to author
Forward
0 new messages