இளையராஜா இசையில் டி.எம்.எஸ் நண்டூறுது, நரியூது பாடலை பாடினார்.
www.youtube.com/watch?v=smHDFnff6Y8ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே ஏவி.எம்.ஸ்டூடியோவிற்கு வந்திருக்கிறார். டி.எம்.எஸ் பாடுவதை கேட்டுவிட்டு கலைஞானம் கையை பிடித்துக்கொண்டு, “கலைஞானம் சார் .. டி.எம்.எஸ். பாடி அதில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை ” என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
0
இந்த இழையில் எனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதப் போகிறேன்.இந்த
இழையில் யார் வேண்டுமானாலும் தனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதலாம்.
0
பைரவி (1978) , ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்தப்படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினியை உச்சத்தில் ஏற்றியது. இந்தப் படத்தின் வினியோகஸ்தரான தாணு , ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் அளித்தார். எம்.பாஸ்கர் ஸ்ரீதரின் மாணவர், வெண்ணிற ஆடை படத்தில் உதவியாளராகச் சேர்ந்த இவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் ஸ்ரீதரிடம் வேலை பார்த்தார்.
அய்யோ, இப்படிச் சொல்லாதீங்க, மக்கள்ஸ் காப்பி பேஸ்ட் பண்ணி நிரப்பிடுவாங்க.
தயவு செய்து நீங்க மட்டும் எழுதுங்க, நாங்க படிக்கிறோம்.
நோ அப்ஜெக்ஷன் ஃபார் லக்கி.
அப்ஜெக்ஷன் ஃபார் வில்லன் :)
On Jul 27, 5:23 pm, வில்லன் <vom...@gmail.com> wrote:
> so sad.
>
> இந்த செகன்ட் வரை எனக்கு எதும் பாடல் பிடிச்சா அந்த வரிகளை மட்டும் போடலாம்னு
> இருந்தேன். நீங்க அப்ஜெக்சன் பண்ணிட்டிங்க இல்லே. முழுசா கட் பேஸ்ட்டறேன்
கோகுல்ஜி
வில்லன விலைக்கு வாங்கிட்டிங்களே :))
எருமைக் கன்னுக்குட்டி என்னருமைக் கன்னுக்குட்டி :)
அம்பிகாபதி காலத்துல இருந்து எழுது
எருமைக் கன்னுக்குட்டி என்னருமைக் கன்னுக்குட்டி :)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா
இந்தப் பாடலை எழுதியவர் மருதகாசிதான் , இந்தப் பாடலில் எருமையில்
போகிறவர் தான் சுப்பையா, அவரே பாடி நடித்தார்
மருதகாசி எழுதிய முதல் பாடல்
பெண் எனும் மாயப் பேயாம்…
பொய் மாதரை என் மனம் நாடுமோ
மார்டன் தியேட்டர்ஸ் உரிமையாளர் இயக்கிய மாயாவதி என்ற படத்தில் இடம்
பெற்றது.
On Jul 27, 10:39 pm, மோர்சுப்ரா <morsu...@gmail.com> wrote:
> இப்போ சரியா தளபதி படத்துல வர.....
>
> "புத்தம் புது பூ பூத்ததோ கேட்டுகிட்டு இருக்கேன்"
>
வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ ....
இந்த வரிகளை ஜேசுதாஸ் பாடும் போது .. ஆஹா ..
வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ ....
இந்த வரிகளை ஜேசுதாஸ் பாடும் போது .. ஆஹா ..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
“வாராய்… நீ வாராய்” – மந்திரிகுமாரி
“முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல” – உத்தமபுத்திரன்
“காவியமா? நெஞ்சின் ஓவியமா?” – பாவை விளக்கு
4,000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்,
மருதகாசி. “திரைக்கவி திலகம்” என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4
ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.திருச்சி மாட்டம் மேலக்குடிகாடு
கிராமத்தில் 13-2-1920-ல் பிறந்தவர் மருதகாசி. தந்தை அய்யம்பெருமாள்
உடையார். தாயார் மிளகாயி அம்மாள்.விவசாயம் உள்ளூரில் தொடக்கக் கல்வி
பயின்றபின், கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து, “இன்டர்மீடியேட்” வரை
படித்தார்.1940-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர்
தனக்கோடி அம்மாள்.
நாடகப் பாடல்கள்
மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். கல்லூரி
படிப்புக்குப்பிறகு, குடந்தையில் முகாமிட்டிருந்த “தேவி நாடக சபை”யின்
நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். அப்போது, இன்றைய முதல்-அமைச்சர்
கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து, கருணாநிதி
எழுதிய “மந்திரிகுமாரி” போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.
மாடர்ன் தியேட்டர்ஸ்
இந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகராக திருச்சி லோகநாதன் கொடிகட்டிப்
பறந்தார். “வானவில்” என்ற நாடகத்தின் பாடலுக்கு அவர் இசை அமைத்தபோது,
மருதகாசியின் கவியாற்றலை நேரில் கண்டார். இதுபற்றி, மாடர்ன் தியேட்டர்ஸ்
அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்தார்.
உடனே டி.ஆர்.சுந்தரம் மருதகாசியை சேலத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த
சமயத்தில், மருதகாசியுடன் கவி. கா.மு.ஷெரீப் இணைந்து பணியாற்றிக்
கொண்டிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு சேலம் சென்றார், மருதகாசி.
அப்போது (1949) சேலம் மாடர்ன் தியேட்டர்சார் “மாயாவதி” என்ற படத்தைத்
தயாரித்து வந்தனர். டி.ஆர்.மகாலிங்கமும், அஞ்சலிதேவியும் இணைந்து நடித்த
இந்தப்படத்தை டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்து வந்தார்.இந்தப் படத்திற்கு
தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். “பெண் எனும் மாயப் பேயாம்… பொய்
மாதரை என் மனம் நாடுமோ…” என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை
அமைத்தார்.
இவ்வாறாக மருதகாசியின் திரை உலகப் பயணம், மாடர்ன் தியேட்டர்ஸ் “மாயாவதி”
மூலமாகத் தொடங்கியது.
பொன்முடி
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “எதிர்பாராத முத்தம்” என்ற
குறுங்காவியத்தை, “பொன்முடி” என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சார்
திரைப்படமாகத் தயாரித்தனர். வசனத்தை பாரதிதாசன் எழுதினார்.இந்தப்
பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். எல்லாப் பாடல்களையும் மருதகாசி
எழுதினார். கதாநாயகனாக நரசிம்மபாரதியும், கதாநாயகியாக மாதுரிதேவியும்
நடித்தனர்.1950 பொங்கலுக்கு வெளிவந்த “பொன்முடி” படத்தின் பாடல்கள் ஹிட்
ஆயின.
மந்திரிகுமாரி
இதன் பிறகு கருணாநிதியின் கதை-வசனத்தில் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த
படம் மந்திரிகுமாரி. இந்தப்படம் மாபெரும் வெற்றி
பெற்றது.இந்தப் படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ்
பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!”
என்ற கிளைமாக்ஸ் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும்
மிகப்பிரமாதமாக அமைந்தன. இந்த டூயட் பாடல்களைப் பாடியவர்கள் திருச்சி
லோகநாதன் – ஜிக்கி.இந்தக் காலக்கட்டத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் கதை
இலாகாவில் கண்ணதாசனும், இசை இலாகாவில் மருதகாசியும் பணிபுரிந்தது
குறிப்பிடத்தக்கது.
பாகவதர் அழைப்பு
மந்திரிகுமாரியில் மருதகாசி எழுதிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை
வெகுவாகக் கவர்ந்தன. சுரதாவின் கதை-வசனத்திலும், எப்.நாகூர் டைரக்ஷனிலும்
உருவாகி வந்த தனது “அமரகவி” படத்துக்கு பாடல் எழுத மருதகாசியை
அழைத்தார்.அதன்படியே, சில பாடல்களை மருதகாசி எழுதினார்.
தூக்குத்தூக்கி
அருணா பிலிம்ஸ் பட நிறுவனம் “ராஜாம்பாள்” என்ற துப்பறியும் கதையை
படமாக்கியது. இந்தப் படத்தில்தான் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக
அறிமுகமானார்.இந்தப் படத்துக்கு மருதகாசி எழுதிய பாடல்கள் பெரும்
வரவேற்பைப் பெற்றன.அதைத்தொடர்ந்து அருணா பிலிம்ஸ் அடுத்து தயாரித்த
“தூக்குத்தூக்கி” படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பை மருதகாசி பெற்றார்.
இந்தப் படத்தில் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி.எஸ்.பாலையா
என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது. ஆர்.எம்.கிருஷ்ணசாமி டைரக்ட்
செய்த இந்த படத்துக்கு, ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.இந்தப் படத்தில்,
சிவாஜிகணேசனுக்கு யாரைப் பின்னணியில் பாட வைப்பது என்ற கேள்வி எழுந்தது.
“மந்திரிகுமாரி”யில், “அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே…” என்று
தொடங்கும் பாடலை, வெகு சிறப்பாக டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார்.
அவரைப் பாடச் சொல்லலாம் என்று மருதகாசியும், டைரக்டர்
ஆர்.எம்.கிருஷ்ணசாமியும் கூறினார்கள். ஆனால், சிதம்பரம் ஜெயராமனைப்
போடும்படி, சிவாஜி கூறினார்.
முடிவில் “3 பாடல்களை சவுந்தரராஜனை வைத்து பதிவு செய்வோம். சிவாஜிக்கு
பிடிக்கிறதா என்று பார்த்து இறுதி முடிவு எடுப்போம்” என்று மருதகாசியும்,
கிருஷ்ணசாமியும் தீர்மானித்தார்கள்.அதன்படியே, மூன்று பாடல்களை பதிவு
செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்கள். டி.எம்.சவுந்தரராஜனின்
குரல் சிவாஜிக்குப் பிடித்து விட்டது. அன்று முதல், சிவாஜிக்கு தொடர்ந்து
டி.எம்.சவுந்தரராஜன் பாடலானார்.
26-8-1954-ல் வெளியான “தூக்குத்தூக்கி”, மகத்தான வெற்றிப்படமாக அமைந்து,
வசூல் மழை கொட்டியது. எங்கு திரும்பினாலும், அந்தப் படத்தின் பாடல்கள்
எதிரொலித்தன. மருதகாசிக்கு பல்வேறு படக்கம்பெனிகளில் இருந்து அழைப்பு
வந்தது.மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் மருதகாசி வல்லவர். எனவே, இசை
அமைப்பாளர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.அந்தக் காலக்கட்டத்தில்
ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் –
ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி
பாடல் எழுதினார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார்,
மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன்
மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது. பிறகு உண்மையை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ்
அதிபர் டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆர். நடித்த “அலிபாபாவும் 40
திருடர்களும்” படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுத வாய்ப்பளித்தார்.
எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல் கவிஞர் மருதகாசியும், சாண்டோ
சின்னப்பதேவரும் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றியபோதே நெருங்கிய
நண்பர்கள் ஆனார்கள். பிறகு தேவர் சென்னைக்கு வந்து, `தேவர் பிலிம்ஸ்’
படக்கம்பெனியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து “தாய்க்குப்பின் தாரம்”
என்ற படத்தைத் தயாரிக்கத் தீர்மானித்தார்.
மருதகாசியை அழைத்து, “எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, புரட்சிகரமான
கருத்துக்களுடன் ஒரு பாடலை எழுதுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் . அதன்படி
மருதகாசி எழுதிய பாடல்தான், “மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே”
என்ற பாடல்.
“நீல வண்ண கண்ணா வாடா”
1955-ல் சிவாஜிகணேசனும், பத்மினியும் நடித்த “மங்கையர் திலகம்” படம்
வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இதில், சிவாஜிக்கு அண்ணியாக,
குணச்சித்திர வேடத்தில் பத்மினி நடித்தார்.இப்படத்தில் மருதகாசி எழுதிய
“நீலவண்ண கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!” என்ற பாடலை, பத்மினிக்காக
பாலசரஸ்வதி பாடினார். கருத்தாழம் மிக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர்
தட்சிணாமூர்த்தி.
இதே படத்தில், சிவாஜி பாடுவது போல் அமைந்த “நீ வரவில்லை எனில் ஆதரவேது?”
என்ற பாடலையும் மருதகாசி எழுதினார். உருக்கமான இந்தப்பாடலை
தெலுங்குப்பாடகர் சத்யம் பாடினார்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் – விஜயகுமாரி
நடிக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “பெற்ற மகனை விற்ற அன்னை” படம்
சரியாக ஓடவில்லை. ஆனால், இப்படத்தில், மருதகாசி எழுதிய “தென்றல்
உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும், கண்கள் உறங்கிடுமா?” என்ற பாடல்
சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
உத்தமபுத்திரன்
ஸ்ரீதரின் திரைக்கதை – வசனத்தில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த
“உத்தமபுத்திரன்” படத்தில், சிவாஜியும், பத்மினியும் படகில் செல்லும்போது
பாடுவதுபோல அமைந்த “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே” என்ற பாடலை,
ஜி.ராமநாதன் இசை அமைப்பில் மருதகாசி எழுதினார். ரசிகர்களின் உள்ளத்தை
அள்ளியது இப்பாடல்.
இதே காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். நடித்த “மன்னாதி மன்னன்” படத்தில்
எம்.ஜி.ஆர். பாட அதற்கேற்ப பத்மினி நடனம் ஆடும் ஒரு காட்சி இடம்
பெற்றிருந்தது. இந்த பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் – ராமமூர்த்தி அமைத்து
விட்டனர். ஆனால் அந்த மெட்டுக்கு பல்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள்,
எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.
பிறகு, விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் அழைப்பின் பேரில், “ஆடாத மனமும்
உண்டோ?” என்ற பாடலை, மருதகாசி எழுதினார். அது எம்.ஜி.ஆருக்கு
பிடித்துவிட, பாடல் பதிவு செய்யப்பட்டு, காட்சியும் படமாக்கப்பட்டது.
மணப்பாறை மாடுகட்டி…
ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து “லட்சுமி பிக்சர்ஸ்” என்ற
படக்கம்பெனியை தொடங்கி, “மக்களைப் பெற்ற மகராசி” படத்தைத் தயாரித்தனர்.
இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.இந்தப்படத்தில்
இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக,
“மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாட்டு, மூலை
முடுக்கெல்லாம் எதிரொலித்தது. கே.வி.மகாதேவன் இசை அமைப்பில்,
டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இது.
சம்பூர்ண ராமாயணம்
சிவாஜிகணேசன் பரதனாகவும், என்.டி.ராமராவ் ராமராகவும், பத்மினி
சீதையாகவும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்த படம் “சம்பூர்ண ராமாயணம்.”
கே.சோமு டைரக்ஷனில் எம்.ஏ.வேணு தயாரித்தார்.இந்தப் படத்துக்கான எல்லாப்
பாடல்களையும், கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எழுதியவர் மருதகாசி.
அனைத்துப் பாடல்களும் நன்றாய் அமைந்தன.குறிப்பாக சிதம்பரம் ஜெயராமன்,
டி.கே.பகவதிக்காக பாடிய “இன்று போய் நாளை வாராய்…” என்ற பாடலும், ஒவ்வொரு
ராகத்தையும் எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்த “சங்கீத சவுபாக்கியமே”
என்ற பாடலும் பெரும் புகழ் பெற்றவை.
இதேபோல், என்.டி.ராமராவ் – அஞ்சலிதேவி நடித்த “லவகுசா” படத்திற்கும்
எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். அதில், லவனும், குசனும்
பாடுவதுபோல் அமைந்த “ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே – உங்கள்
செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே” என்ற பாடலை, இப்போதும்கூட
தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது.
மாடர்ன் தியேட்டர்சில் உரசல்
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசி மீது அதிக அன்பு
கொண்டிருந்தார். அதனால் அவர் தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் மருதகாசி
பாடல் எழுதுவது வழக்கம்.ஒருமுறை டி.ஆர்.சுந்தரம் வெளிநாடு
சென்றிருந்தபோது, மருதகாசியிடம் பொறாமை கொண்டிருந்த ஸ்டூடியோ நிர்வாகி
ஒருவர், வேறொரு கவிஞருக்கு அதிக தொகையும், மருதகாசிக்கு குறைந்த தொகையும்
கொடுத்தார். இதனால் மனம் நொந்த மருதகாசி, “இனி மாடர்ன் தியேட்டர்ஸ்
படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை” என்ற முடிவுடன் சென்னைக்குத்
திரும்பினார்.
வெளிநாடு சென்றிருந்த டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்ததும்,
எம்.ஜி.ஆரையும், பானுமதியையும் வைத்து “அலிபாபாவும் 40 திருடர்களும்”
படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவு செய்தார். “அலிபாபா” படம் ஏற்கனவே
இந்தியில் வெளிவந்திருந்தது. புதிதாக ஒரு பாடலை இசை அமைப்பது என்றும், 9
பாடல்களுக்கு இந்தி அலிபாபா படத்தின் மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்வது
என்றும் சுந்தரம் தீர்மானித்தார்.
பாடல்களை எழுத மருதகாசியை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால்
நிர்வாகியோ, “மருதகாசி முன்போல் இங்கு வருவதில்லை. சென்னை கம்பெனிகளுக்கு
பாட்டு எழுதுவதில் பிசியாக இருக்கிறார்!” என்று கூறிவிட்டார்.
உடனே சுந்தரம், “அப்படியானால் உடுமலை நாராயணகவிக்கு போன் செய்து,
பாடல்களை எழுத உடனே இங்கே வரச்சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்.சுந்தரம்
வரச்சொன்னார் என்று அறிந்ததுமே, அவருடன் உடுமலை நாராயணகவி டெலிபோனில்
தொடர்பு கொண்டார். மருதகாசியிடம் சகோதர அன்பு கொண்டவர் உடுமலை நாராயணகவி.
மருதகாசிக்கும், நிர்வாகிக்கும் ஏற்பட்ட தகராறை சுந்தரத்திடம் அவர்
கூறினார். “சரி. அவரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றார்,
சுந்தரம்.
பாடல் எழுதினார்
டி.ஆர்.சுந்தரத்தை உடுமலை நாராயணகவியும், மருதகாசியும்
சந்தித்தனர்.“அலிபாபாவில் வரும் பாடல்களுக்கு, இந்தி அலிபாபா மெட்டுகளையே
பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்று கூறிய சுந்தரம், சில
இந்தி இசைத்தட்டுகளை கவிராயரிடம் கொடுத்தார்.
உடனே கவிராயர், “மெட்டுக்கு பாட்டு அமைப்பது எனக்கு சரிப்படாது. புதிதாக
பாட்டு எழுதுவதானால் எழுதுகிறேன். மெட்டுக்கு பாட்டு என்றால், அது
மருதகாசிக்கு கைவந்த கலை” என்றார்.இதனால், “மாசில்லா உண்மைக் காதலே”,
“அழகான பொண்ணுதான்… அதற்கேற்ற கண்ணுதான்…” உள்பட 9 பாடல்களையும்
மருதகாசியே எழுதினார்.மாடர்ன் தியேட்டர்சுடன் மருதகாசிக்கு ஏற்பட்ட
பிரச்சினை தீர்ந்தது.
பாசவலை
மாடர்ன் தியேட்டர் “பாசவலை” படத்தை தயாரித்தபோது, பாடல் எழுத
மருதகாசிக்கு அவசர அழைப்பு அனுப்பினார்கள். அப்போது சென்னையில் இரவு –
பகலாக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார்.உடனே அவர் டி.ஆர்.சுந்தரத்துக்கு
போன் செய்து, “உடனடியாக தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பி
வைக்கிறேன். அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
மிக நன்றாக பாட்டு எழுதக்கூடியவர். நான் நாலைந்து நாட்களுக்குப்பின்
வந்து கலந்து கொள்கிறேன்” என்று சொன்னார்.
அதன்படி, பல பாட்டுகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். “குட்டி
ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா
குறவனுக்கு சொந்தம்” என்ற பாடல் மூலம், கல்யாணசுந்தரம் பெரும் புகழ்
பெற்றார்.“அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை – அதை அணைந்திடாத தீபமாக்கும்
பாசவலை” என்ற மருதகாசியின் பாடலும் `ஹிட்’ ஆயிற்று.
உடுமலை நாராயணகவியை தன் அண்ணன் போலவும், கல்யாணசுந்தரத்தை தம்பி போலவும்
கருதி பாசம் செலுத்தியவர் மருதகாசி.
டைரக்டர் பீம்சிங் இயக்கத்தில் தயாரான “பதிபக்தி” படத்துக்கு “ரெண்டும்
கெட்டான் உலகம் – இதில் நித்தமும் எத்தனை கலகம்” என்ற பாட்டை எழுதினார்.
இந்த பாடல் பீம்சிங்குக்கு பிடிக்கவில்லை. “இன்னும் சிறந்த பல்லவி
வேண்டும்” என்றார். மருதகாசி சிறிது யோசித்துவிட்டு, “அண்ணே! நீங்கள்
எதிர்பார்ப்பது போல எழுதக்கூடியவர் தம்பி கல்யாணசுந்தரம். அவரை வைத்து
எழுதிக்கொள்ளுங்கள்” என்று கூறி, ஒதுங்கிக்கொண்டார்.
சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது
இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக
திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.
இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-
“1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில்
இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.
அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு,
பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார்.
சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன்,
தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா,
நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள்
குறிப்பிடத்தக்கவை.
எம்.ஜி.ஆர். உதவி
கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை
எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத
முடியாத நிலை ஏற்பட்டது.கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை
படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என்
சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி
திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.
1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு
எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.
1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை
நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர்.
ஒப்புக்கொண்டார். “பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்” என்று
தேவரிடம் சொல்லிவிட்டார்.
மறுபிறவி
அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். “நான் அடுத்து
எடுக்கப்போகும் படத்தின் பெயர் “மறுபிறவி.” எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும்
மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4
ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு
சென்னைக்கு வாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும்,
தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின்
திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.
“மறுபிறவி” படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக,
“தேர்த்திருவிழா” படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப்
பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.
தேவருக்கு பெரும் பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின்
படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான்
நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.எம்.ஜி.ஆர். என்
அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன்
திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.” இவ்வாறு பேராசிரியர் முத்தையன்
கூறினார்.
நண்பர்கள்
மருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில்
மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள்.
பிறகு தனித்தனியாக எழுதினார்கள். தமிழரசு கழகத்தின் முக்கிய
பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி
காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு
என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.
புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக
சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.
ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி “தை
பிறந்தால் வழி பிறக்கும்” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு,
“தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” என்ற பாடலை மருதகாசி
எழுதினார்.
அதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை
மருதகாசி எழுதினார். “பொன்னித்திருநாள்” என்ற படத்துக்கு எல்லாப்
பாடல்களையும் எழுதினார்.
உடுமலை நாராயணகவி
உடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. “என்னுடைய 2
ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது” என்று மனந்திறந்து
பாராட்டுவார்.அத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும்,
அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க
மறுத்த சந்தர்ப்பங்களில், “இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை
எழுதச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.குறிப்பாக,
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த “தசாவதாரம்” படத்துக்கு
பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர்,
“மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்”
என்று கூறிவிட்டார்.இதன் காரணமாக “தசாவதாரம்” படத்துக்கு எல்லாப்
பாடல்களையும் மருதகாசி எழுதினார்.
மறக்க முடியாத பாடல்கள்
4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, முத்திரை பதித்தவர், மருதகாசி.
ரசிகர்களின் நினைவில் நீங்காத இடம் பெற்ற பாடல்கள் ஏராளம். அவற்றில் சில
பாடல்கள்:-
“சத்தியமே லட்சியமாய் கொள்ளடா…
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…”
(“நீலமலை திருடன்”)
“ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்”
(“ரத்தக்கண்ணீர்”)
“சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே!”
(“ரம்பையின் காதல்”)
“சிரிப்பு… இதன் சிறப்பை
சீர்தூக்கிப் பார்ப்பதே
நம் பொறுப்பு”
(“ராஜா ராணி”யில் என்.எஸ்.கிருஷ்ணன் பாடியது)
“கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மவுனம்?”
(“தூக்குத்தூக்கி”)
`ஆனாக்க அந்த மடம்…
ஆகாட்டி சந்தமடம்…”
(“ஆயிரம் ரூபாய்”)
“கோடி கோடி இன்பம் பெறவே
தேடி வந்த செல்வம் – கொஞ்சும்
சலங்கை கலீர் கலீர் என ஆடவந்த
தெய்வம்!”
(படம்: “ஆட வந்த தெய்வம்”)
“ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே
இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே
இல்லே!”
(“பிள்ளைக்கனியமுது”)
“விவசாயி… விவசாயி!
கடவுள் என்னும் முதலாளி”
(விவசாயி)
“வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே!
ஏனோ அவசரமே எனை
அழைக்கும் வானுலகே!”
(மல்லிகா)
“மாமா… மாமா… மாமா…
ஏம்மா… ஏம்மா… ஏம்மா…
சிட்டுப் போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா?”
(“குமுதம்”)
ஒருகாலத்துல பாட்டு எவ்ளோ நேரம் ஸ்கிரீன்ல ஓடுமோ அதுக்கேத்தாப்ல காசு
குடுன்னு டிமாண்ட் பண்ற அளவுக்கு உடுமலையாருக்கு வாய்ஸ் சினிஃபீல்டுல
இருந்திருக்கு.
தத்துவத்துல தலைவர் கலக்குவாருன்னா காதல்லயும் கலக்குவாரு.
காதல் எந்தன் மீதில் என்றால் (விவசாயி) - இவருதான
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது
http://www.youtube.com/watch?v=v-tn4VycSPM
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
http://www.youtube.com/watch?v=4rF4kxUzl5g
//கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை//
அந்த இழுவை தான் செம்ம இழுவை...
தேன் சிந்துதே வானம் படம். இசை குமார்( யாரு இந்த குமாரு...) எழுதியவர் வாலி...
மற்றும் தேடியது கிடைச்சாலே சந்தோசப்படும் மனசுவந்து கூடியது விட்டுப்போனா வருத்தப்படுவதென்னஎன பிட் சாங்ஸ் போட்டிருப்பார்,(தயவு செய்து பிட் என்றதும் கோகுல் ஜி உள்ளே வர வேண்டாம் இது வேற பிட்)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
வில்லன்.. இது ஜானகி பாடியது மட்டும் தான்.. இளையராஜா பாடியது படத்தில் கிடையாது.
2011/7/28 வில்லன் <vom...@gmail.com>
பாரதி படத்தில் மது பாலகிருஷ்ணா பாடிய எதிலும் இங்கே இருப்பான் அவன் யாரொ.இசை இளையராசா பாடலை எழுதியவர் புலமைபித்தன்.
// தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை..
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை..
உடுக்கலில் சரம் தொடுப்பவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுக்கலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படி ஆகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கை பிடியாகும் //
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
தேன் சிந்துதே வானம் படம். இசை குமார்( யாரு இந்த குமாரு...)
> உடுமலை நாராயணகவிஒருகாலத்துல பாட்டு எவ்ளோ நேரம் ஸ்கிரீன்ல ஓடுமோ அதுக்கேத்தாப்ல காசு குடுன்னு டிமாண்ட் பண்ற அளவுக்கு உடுமலையாருக்கு வாய்ஸ் சினிஃபீல்டுல இருந்திருக்கு.
On Jul 29, 8:45 am, AbulKalam Azad <banua...@gmail.com> wrote:
> > Ganesh kumar marava...@gmail.com
> > வி.குமார் நல்ல இசையமைப்பாளர்,
>
> கன்ஸ்,
>
> பழைய பாடல்களை ரசிப்பதற்கும் விவரங்கள் சேர்ப்பதற்கும் வயதானவர்களுக்குத்தான்
> ஆர்வம் இருக்கும் என்பதை உடைக்கின்றீர்கள். வாழ்த்துகள்.
>
ஹா ஹா
ஒரு தடவை சுக்ரவதனி தள ரசிகர்கள் கூட்டம் போட்டாங்க....
அங்கே போனா எல்லாம் ரிட்டையர்ட் ஆன பெருசுங்க
ஒருத்தர் என்னையப் பார்த்ததும் உங்களுக்கு குறைஞ்சது அம்பது வயசாவது
இருக்கும்னு நின்னைச்சேன்னாரு :)
வி.குமார் பத்தி த்னிய ஒரு பதிவு போடணும் அண்ணாத்த ..
குமார் என்றதும் எனக்கு டக்குன்னு 3 பாட்டு ஞாபகத்துக்கு வரும்..
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே - ஒருவனுக்கு ஒருத்தி
அசைந்தாடும் ஓவியம் அழகான காவியம் - புதுயுகம் பிறக்குது
ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு - நங்கூரம்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா
On Jul 29, 12:20 pm, மோர்சுப்ரா <morsu...@gmail.com> wrote:
> மரவண்டு ஜி....எனக்கு பிடித்த பாடல்களையும் இதில் சொல்லலாம் இல்லையா ? இழை தடம்
> மாற்றுவதை ஆகாதே ?
>
தாராளமாக ஜி
நீங்கள் வில்லனைச் சீண்டுவதற்காக அனுப்பும் மடல்களைத் தவிர மற்ற மடலகளை
மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.
தாராளமாக ஜி
நீங்கள் வில்லனைச் சீண்டுவதற்காக அனுப்பும் மடல்களைத் தவிர மற்ற மடலகளை
மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
நான் பல குழுக்களில் இருந்தாலும் பண்புடனில் மட்டும் தான் எழுதுகிறேன்.
நான் இருக்கும் இடம் சண்டை சச்சரவாக இருக்கக் கூடாது என நினைப்பேன் :)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
> புதுமை பித்தன்??இல்லை வில்லன். இவர் புலமைப்பித்தன்.
தாமரை மலர்க்கும் நிறத்தைத் தந்தவன். தங்கம் வெட்கிட ஒளியைத் தந்தவன்பாமலர் எங்கும் பொருளாய் நிற்பவன். பகலவன் மறைந்தால் பகலாய் நிற்பவன்வுடு ஜூஊஊட்...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
நல்ல மிக்சிங் :-)))
நீங்க நல்லா சந்த நயத்தோட பாட்டு எழுதி என்ட்ட குடுங்க , டைரக்டர்ஸ்
யாரவது சிக்குனா குடுத்துப் பாப்போம்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
இந்தப் பாட்டோட Prelude எப்படி இருக்கு ? இளையராஜாவே தோத்துப் போவாரு
கூர்மதியும் கூறும் கொண்ட வில்லன் அவர்களே
ஒரு வேண்டுகோள் .. துண்டு அறிக்கை மாதிரி பாடல் போட வேண்டாம்.. கொஞ்சம்
அனுபவிச்சு எழுதுனிங்கன்னா நல்லா இருக்கும்.
இந்த பாட்டு பாடுறாரே ஒரு ஆளு.... வாயெல்லாம் வெத்தலையோட.... அவருக்கு வயசு என்னா??
2011/7/29 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இந்த பாட்டு பாடுறாரே ஒரு ஆளு.... வாயெல்லாம் வெத்தலையோட.... அவருக்கு வயசு என்னா??
மாணிக்க விநாயகமா ?
2) மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி - தீராத விளையாட்டுப் பிள்ளை
.....
10) வாலிபமே வா வா தேனிசையே வா- ராம் லக்ஷ்மண்
11) மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான் - ரோஜாப்பூ ரவிக்கைக்காரி
12) நாத விநோதங்கள் நடன சந்தோசங்கள் - சலங்கை ஒலி
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ரொம்ப காலம் நான் தூங்கணும்னா இந்தப் பாட்டு கேக்கணும்னு அடிக்ட் ஆகி இருந்தேன். :))2. வைதேகி காத்திருந்தாள்பாடல் - இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமேஇசை - இளையராஜாவரிகள் - வைரமுத்துபாடியவர் - ஜெயச்சந்திரன், சுசீலாமுதல்ல வர்ற அந்த ஆலாப் கேக்கும்போது அப்படியே உருகிடுவோம்...
அப்படியே இழையோடும் இந்தப் பெண் குரலுக்கு ஆண்டவன் ஏன் இப்படி ஒரு அற்புதமான ஈர்க்கும் தன்மையைக் கொடுத்தான்???
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
கைக்குழந்தையை தொலைத்த அவஸ்தைக்கு ஈடானது அது..
பாட்டு என்பது மனம் போடும் பெரிய கூச்சல்..ஒரு மாதிரியான கதறல்..நாகரீகமான அழுகை, தனக்குதானே உரக்க பேசிக் கொள்வதின் இன்னொரு வடிவம்..தெருவில் உரக்கப்பேசிக் கொண்டு போக முடியாதவர்கள் பாட்டு பாடுகிறார்கள்.. ( நன்றி : பாலகுமாரன் )
முதல் குழந்தை எனக்கு ஆண்.. பிறந்த நான்கு நாட்களில் இறந்து போனான். நான் அப்போது சவூதியில் இருந்தேன்.
யாரிடமும் மனம் விட்டு அழ முடியாத சூழலில் இளையராஜாவின் பாட்டொன்றை முணுமுணுத்தபடி நிறைய நேரம் தனிமையிலேயே இருந்தேன்.. அந்த பாடல் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. இன்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் பார்க்கையில் என்னால் அழாமலிருக்க முடியவில்லை. குறிப்பாய் கண்ணே நவமணியே பாடலில் கேவி கேவி அழுகிறேன். சுற்றிலும் யார் இருப்பினும் வெட்கம் பார்ப்பதில்லை. எனக்கான வேதனையை யார் அறிந்து கொள்ள முடியும்..?
http://www.youtube.com/watch?v=EJcDJ0t1Vvc
கண்ணே நவமணியே
உன்னை காணமல் கண்ணுறங்குமோ
ஆயிரம் பிச்சிப்பூவு அரும்பரும்பா பூத்தாலும்
வாசமுள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எந்நாளும்...
ஐயா உங்க பதிலே ஒரு கவிதைப்போலே இருக்கிறதய்யா...
--
நல்ல பொழுது போக்கு மற்றும் ஒரு சேஸிங் திரில்லர் கலந்த இரண்டரை மணி நேர உத்தரவாத பொழுதுபோக்கு படத்திற்கு என் அடுத்த தலைமுறைக்கு இணைந்த கைகள் திரைப்படத்தை பரிந்துரைக்கிறேன்.
அந்தப் பாட்டு
மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்டக் கண் மலர்ந்து தூது விடுத்தாள்
லக்கியண்ணா
அருமை .. நல்லா எழுதி இருக்கிங்க .
>> மாலையில் யாரோ பாடல்
இந்தப் பாட்ட ஜானகி தான் பாடுனாங்கன்னு ஆரம்ப காலத்தில் நினைத்துக்
கொண்டிருந்தேன்.
ஆட்டமா தேரோட்டமா பாட்டு பாட்டுக் கச்சேரில போட்டு தாக்குவாய்ங்க...
கேப்டன் பிரபாகரன் படத்தோட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரும் கேப்டனும்
க்ளாஸ் மேட்.
என்றும் அன்பகலா
கணேஷ்