கௌசல்யா கவிதைகள்

260 views
Skip to first unread message

sree Koushi

unread,
May 23, 2008, 5:01:03 AM5/23/08
to panb...@googlegroups.com
 
 
முகவரி கொடுத்த - உன் 
கொலுசை கொஞ்சம் 
திருப்பி கொடு - என் 
இதய ஒலிக்கு 
உயிர் ஊட்டட்டு ம்

நீ 
என்னை 
அழைக்க கூட வேண்டாம்
உன் கையில் 
எப்பொழுதும் வாழும் 
செல் பேசியாக 
இருந்து விட்டு போகிறேன்

தூக்கி எறிந்த 
கல்லின் நீர்த்திலைளாய் 
வட்டமிடுகிறேன் - உன் 
நினைவுகளின் 
குளம் தன்னில் ...

இதயம் கொத்திய 
மரங்கொத்தியாய் நீ
உன்னை
என்றும் விலகா 
அன்றிலாய் நான் 

நீ மட்டும் 
அழகில்லையடி 
உன் மொழி பேசும் 
கொலுசும் தான் ...
 
நினைவுகளின் 
நிழல்களில் - உன் 
பாதை தொடரும் 
ஒரு வழி 
பயணமாய்...

 என்றும் அன்புடன்
கௌசல்யா



On 5/19/08, கார்த்திக் <karth...@gmail.com> wrote:
//நீ
கொடுத்த
சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?//



sree Koushi

unread,
Jun 9, 2008, 3:26:40 AM6/9/08
to panb...@googlegroups.com
தூரிகையாய்
 
பனித் துளி வந்ர்ந் மலர்களில்
ஒன்றாகவேனும் 
முகில் கூட்டம் குடி கொள்ளும் 
மலையாகவேனும் 
வானவில் கட்டிக்கொண்ட 
நிறமாகவேனும் 
வலி கொண்ட பாதைக்கு 
வழியாகவேனும்
இதழ் சுவை இதளித் 
அதமாவேனும் 
தென்றல் காற்றில் வீ ப்பட்ட
ருகாவேனும் 
நீ 
நினைத்திருந்த 
உன் நிழல் ஓவியங்களின் 
தூரிகையாய் 
நானாகாவேனும்....

ஸ்ரீ

unread,
Jun 9, 2008, 8:48:55 AM6/9/08
to panb...@googlegroups.com
மயிலிறகாய் வருடுகிறது உங்களின் கவிதை. அருமை...

வேனும் = வேணும்???

எனக்குப் பிடித்த வரிகள்:

வலி கொண்ட பாதைக்கு 
வழியாகவேனும்
இதழ் சுவை இதளித் 
அதமாவேனும் 
 
நீ 

நினைத்திருந்த 
உன் நிழல் ஓவியங்களின் 
தூரிகையாய் 
நானாகாவேனும்....

தொடருங்கள்...

--
மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
http://www.sripauljoseph.com/

"நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே!" - மாணிக்கவாசகர்

கோகுலன்

unread,
Jun 9, 2008, 5:43:12 PM6/9/08
to panb...@googlegroups.com
நீ 
என்னை 
அழைக்க கூட வேண்டாம்
உன் கையில் 
எப்பொழுதும் வாழும் 
செல் பேசியாக 
இருந்து விட்டு போகிறேன்
 
பேசாவிட்டாலும் சிணுங்கும் போதெல்லாம் கவனம் குவித்து திரும்புவான்(ள்) அல்லவா?

தூக்கி எறிந்த 
கல்லின் நீர்த்திலைளாய் 
வட்டமிடுகிறேன் - உன் 
நினைவுகளின் 
குளம் தன்னில் ...
 
:))

இதயம் கொத்திய 
மரங்கொத்தியாய் நீ
உன்னை
என்றும் விலகா 
அன்றிலாய் நான் 
வாவ்..

நீ மட்டும் 
அழகில்லையடி 
உன் மொழி பேசும் 
கொலுசும் தான் ...
 
 
:))

 
நினைவுகளின் 
நிழல்களில் - உன் 
பாதை தொடரும் 
ஒரு வழி 
பயணமாய்...
 
நன்று,

 என்றும் அன்புடன்
கௌசல்யா



On 5/19/08, கார்த்திக் <karth...@gmail.com> wrote:
//நீ
கொடுத்த
சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?//








--
நட்புடன்,
கோகுலன்.
http://ninaivukalil.blogspot.com/  
http://gokulansirukathai.blogspot.com/  
http://gokulanpoem.blogspot.com/  
http://gokulanfotos.blogspot.com/

sree Koushi

unread,
Jun 11, 2008, 4:45:19 AM6/11/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி ஸ்ரீ....

வேணும் அல்ல.... வேனும்....
அதுவாகவாது என்ற பொருளில் எழுதி உள்ளேன்.... :)
 
என்றும் அன்புடன்
கௌசல்யா

 

sree Koushi

unread,
Jun 11, 2008, 4:46:47 AM6/11/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி  கோகுன் ....
 
என்றும் அன்புடன்
கௌசல்யா

 

நண்பன்

unread,
Jun 11, 2008, 11:18:44 AM6/11/08
to panb...@googlegroups.com
ஒரு ஓவியத்தைத் தீட்டும் முன்பு, வரைபவன் தன் தூரிகை எந்த எந்த கோணத்தில் ஓட வேண்டுமென்று முதலில் காற்றிலே தூரிகையை ஓடவிட்டு ஒத்திகை பார்த்து விட்டே ஓவியத்தை வரைய ஆரம்பிப்பான். 'வேணும், வேணும்' என்ற சாதாராண வரிகளுக்கிடையில் ஒரு அசாதாரணமான வரிகளும், நுட்பமான கவிதை வரிகளும்... பிரம்மாதம்.
 
பாராட்டுகள் கௌசல்யா.

 

sree Koushi

unread,
Jun 12, 2008, 11:18:51 PM6/12/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி நண்பன்....


என்றும் அன்புடன்
கௌசல்யா

Kasali Mohammed

unread,
Jun 13, 2008, 3:37:53 AM6/13/08
to panb...@googlegroups.com
அட!

On 5/23/08, sree Koushi <sreek...@gmail.com> wrote:

Tamizh Raseegai M

unread,
Jun 14, 2008, 3:08:41 AM6/14/08
to panb...@googlegroups.com
//முகில் கூட்டம் குடி கொள்ளும் 
மலையாகவேனும் 

இதழ் சுவை இதளித் 
அதமாவேனும் //

 

மிகவும் அருமை...
 நல்ல கற்பனை....
வாழ்த்துக்கள் கெளசல்யா...:-)

 
On 6/9/08, ஸ்ரீ <sripau...@gmail.com> wrote:

sree Koushi

unread,
Jun 14, 2008, 4:34:21 AM6/14/08
to panb...@googlegroups.com
நன்றி ஸாலி....

நன்றி தமிழ் ரசிகை.... 
 
என்றும் அன்புடன்
கௌசல்யா.

sree Koushi

unread,
Jun 19, 2008, 12:19:18 PM6/19/08
to panb...@googlegroups.com
பூஞ்சோலை
 
புளியங்காட்டு தோப்புக்குள்ள 
புளி பறிக்க நா போனேன் 
பூஞ்சோலை என் பேரு 
பொன்னாத்தா பெத்த மவ.... 
 
ஆனா ஆவன்னா அறியலையே 
அப்பனாத்தா படிக்கலையே 
கொட்டு வாங்கி படிச்சாலும் 
புத்தியில ஏறலையே

வெளகெண்ணை  வழிச்சு சீவி 
ரெட்டை  சடை பூச்சூடி 
பள்ளிக்கூடம்  போக சொன்னா 
பாண்டியாட போனேனே 

தெம்மாங்கு காத்து வாங்கி 
தெருவெல்லாம் ஆடி புட்டு 
அரச மர நிழலுக்கு தான் 
துணையாக நின்னேனே
 
ஆத்துல மீனு புடிச்சு 
கரையோரம் நெருப்பு மூட்டி
வக்கணையா வறுத்து தின்னு 
வீடு வந்து சேந்தேனே 
ஆண்டிபட்டி அரசம்பட்டி 
அய்யாளத்து பாப்பம்பட்டி 
ஆச மச்சான் நடந்து வந்தான் 
பட்டு சட்டை வேட்டி கட்டி
 
ஆத்தோரம் புள்ளையாரு 
ஆலமர அய்யனாரு 
நேந்துக்கிட்டேன் நிசமாவே 
மூணு முடி நீ போட... 
 
அயித்த மகன் வந்தானேனு - ஆத்தா 
ஆடு வெட்டி குழம்பு வச்சா 
அயிர மீனு வறுத்து வச்சு.... 
உசுரா நானும் நின்னேனே 
 
ஆட்டுக்கடா  வெட்டி போட்டு 
எலும்புக்கறி எடுத்து வச்சேன் 
நறுநறுனு கடிச்சு துப்பி 
நாசூக்கா கண்ணடிச்சான் 

கண்ணால சாடை காட்டி 
கை கழுவ மாமன் போக 
பின்னால நான் போயி 
கம்மாங்கரை சேந்தேனே....  
 
பின்னால மாமன்  வந்து 
முன்னால என்ன கட்டி... 
முழு முகத்த மறைச்சு வச்சு 
முழம் பூவு குடுத்தானே 
 
ஆச மச்சான் திரும்பி வர 
ஆறேழு வருசமாகும் 
ஆறேழு வருசங்கூ ட  
ஆத்து நீரா ஓடி போகும் 
 
நா என்னனு சொல்லி 
புரிய வப்பேன் 
நீ இல்லாத நாள 
எதுக்குள்ள எழுதி வப்பேன் 

வெவரம் புரியா என்ன 
விட்டு தொலைஞ்சு போனா 
நான் எங்க போவேன்டா 
நாண்டுகிட்டு சாவேன்டா 
 
நின்னா உன்ன காங்கேன் 
உக்காந்தா உன்ன நெனைக்கேன் 
உசிரு போயி சேருமுன்னே 
வெரசா நீயும் வந்துடைய்யா 
 
பெத்த மனசு தாங்காம 
மருத்துவச்சிக்கு சொல்ல... 
இது மேலுக்கு வந்த நோயில்ல 
மச்சான் மேல வந்த நோயின்னு ....


மச்சான் உன்ன காங்காம
மாமாங்கமா காத்திருக்கே ன் 
மார்கழி மாசக் குளிரு கூட 
கத்திரி வெயிலா கொளுத்துதய்யா 

எங்க நீ இருந்தாலும் 
பூஞ்சோலை இங்க இருக்கா....
உசிர இறுக்கா புடிச்சுகிட்டேன் 
உன் மடில உசிர விட....
 
என்றும் அன்புடன்
கௌசல்யா
 
  

 

 

 

NilaRaseegan

unread,
Jun 20, 2008, 1:59:25 AM6/20/08
to panb...@googlegroups.com
//அரச மர நிழலுக்கு தான் 
துணையாக நின்னேனே//

நல்ல கற்பனை கெளசல்யா. வாழ்த்துக்கள்.

2008/6/19 sree Koushi <sreek...@gmail.com>:



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

Tamizh Raseegai M

unread,
Jun 21, 2008, 10:17:05 AM6/21/08
to panb...@googlegroups.com
//அரச மர நிழலுக்கு தான் 
துணையாக நின்னேனே//

நல்ல கற்பனை ...

//இது மேலுக்கு வந்த நோயில்ல 
மச்சான் மேல வந்த நோயின்னு .... //
 
வார்த்தை பிரயோகம் மிக நன்று....
 
 
//நறுநறுனு கடிச்சு துப்பி 
நாசூக்கா கண்ணடிச்சான்  //
 
இந்த வரியை படிக்கும் போது... romantic feel varudhu kousalya...:-)
 
 
மொத்தத்தில் ஒரு காதல் கதையை உங்கள் கவிதை மூலம் கண் முன் ஓட செய்துவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்...:-)

 

sree Koushi

unread,
Jun 22, 2008, 1:12:03 AM6/22/08
to panb...@googlegroups.com
நிலா மற்றும் தமிழ் ரசிகைக்கு நன்றி....

Tthamizth Tthenee

unread,
Jun 22, 2008, 11:07:09 AM6/22/08
to panb...@googlegroups.com

இப்படி அருமையாக கவிதை எழுதிய
உம்மை உம் தமிழ் சொல்லாடலுக்காகவேனும்
பாராட்ட வேணும்
 
அருமை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/6/22 sree Koushi <sreek...@gmail.com>:

sree Koushi

unread,
Jun 22, 2008, 9:47:42 PM6/22/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா...


என்றும் அன்புடன்
கௌசல்யா

pandii durai

unread,
Jun 23, 2008, 1:37:15 AM6/23/08
to panb...@googlegroups.com
 

அன்பின் கௌசல்யா பூஞ்சோலை கவிதையாக வரையறுத்துவிட முடியாது.

நாட்டுப்புற, தெம்மாங்கு பாடலுக்கான வடிவம்.
பூஞ்சோலை நன்றாக வந்துள்ளது

 

sree Koushi

unread,
Jun 23, 2008, 1:43:37 AM6/23/08
to panb...@googlegroups.com
நன்றி பாண்டி...

என்றும் அன்புடன்,
கௌசல்யா.

sree Koushi

unread,
Aug 18, 2008, 12:57:21 AM8/18/08
to panb...@googlegroups.com
ஒரு மாலையில்....

பூங்காவின் நெரிசலில் ஒரு
ஓரமாய்
நின்றிருந்தேன்
 

நிஜங்களின்
நிதர்சனங்களும்
நிழலா
டும் எண்ணங்களும்
அலைகளாய் ஆடி
சென்றன மனதுள்....

வார்த்தை பரிமாற்றங்களும் 
வசந்த
த்தின் கற்பனைகளும்
வாயிலின் முன்
நேர்
கோடுகளாய்

வரிசையாய் சென்ற
எறும்புகளின்
தேடல்களும்
எண்ணங்களின் இசை பாடல்களும்
எல்லையில்லா ஆசையாய் ....

வலை கிழிந்து கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவிழந்து ட்டேந்தி
சிறுவனின் வலியும்
கணக்கத்தான் செய்தது
காத்திருத்லாய்...

எப்போதும் அந்த மரத்தின் அடியில்
நிற்கும் கிழவியை காண வில்லை
இன்று யாரும் இல்லை
நாளை யாரோ.....

 
நாளையும் செல்வேன்
வலை பின்னிய சிலந்தியையும்
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும்
கண் முன்னே காண.....
 

 
என்றும் அன்புடன்
கௌசல்யா

சூர்யா

unread,
Aug 18, 2008, 3:00:32 AM8/18/08
to panb...@googlegroups.com
வலை கிழிந்து கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவிழந்து ட்டேந்தி
சிறுவனின் வலியும்
கணக்கத்தான் செய்தது
காத்திருத்லாய்...
வித்தியாசப்படுகிற நல்ல கவிதை.

Shylaja N

unread,
Aug 18, 2008, 3:57:23 AM8/18/08
to panb...@googlegroups.com
ஆமாம்  கௌஸ் . மிகவும் வித்தியாசமான பார்வையில் அழகிய கவிதை இது.

2008 ஆகஸ்ட் 18 03:00 அன்று, சூர்யா <da.ris...@gmail.com> எழுதியது:

இலக்குவண்

unread,
Aug 18, 2008, 10:23:32 AM8/18/08
to panb...@googlegroups.com
//வலை கிழிந்து கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவிழந்து ட்டேந்தி
சிறுவனின் வலியும்
கணக்கத்தான் செய்தது
காத்திருத்லாய்..//

அருமை

2008/8/18 Shylaja N <shyl...@gmail.com>

sree Koushi

unread,
Aug 18, 2008, 11:37:38 PM8/18/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி , ஷைலு அக்கா...சூர்யா....

sree Koushi

unread,
Aug 18, 2008, 11:38:48 PM8/18/08
to panb...@googlegroups.com
நன்றி இலக்குவண்....

என்றும் அன்புடன்
கௌசல்யா

 



 

Gokulan

unread,
Aug 19, 2008, 8:50:19 AM8/19/08
to panb...@googlegroups.com


On 8/17/08, sree Koushi <sreek...@gmail.com> wrote:
ஒரு மாலையில்....

பூங்காவின் நெரிசலில் ஒரு
ஓரமாய்
நின்றிருந்தேன்
 

நிஜங்களின்
நிதர்சனங்களும்
நிழலா
டும் எண்ணங்களும்
அலைகளாய் ஆடி
சென்றன மனதுள்....

வார்த்தை பரிமாற்றங்களும் 
வசந்த
த்தின் கற்பனைகளும்
வாயிலின் முன்
நேர்
கோடுகளாய்

வரிசையாய் சென்ற
எறும்புகளின்
தேடல்களும்
எண்ணங்களின் இசை பாடல்களும்
எல்லையில்லா ஆசையாய் ....

வலை கிழிந்து கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவிழந்து ட்டேந்தி
சிறுவனின் வலியும்
கணக்கத்தான் செய்தது
காத்திருத்லாய்...
 
பிறரின் வலிகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நன்று..

 
எப்போதும் அந்த மரத்தின் அடியில்
நிற்கும் கிழவியை காண வில்லை
இன்று யாரும் இல்லை
நாளை யாரோ.....
 
அக்கறை தோய்ந்த வரிகள்..

 
 
நாளையும் செல்வேன்
வலை பின்னிய சிலந்தியையும்
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும்
கண் முன்னே காண.....
 
 

கவிதை நன்று.. வாழ்த்துக்கள்..

sree Koushi

unread,
Aug 19, 2008, 10:44:45 AM8/19/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி கோகுன் 


என்றும் அன்புடன்
கௌசல்யா.

Asif Meeran AJ

unread,
Aug 19, 2008, 4:24:37 PM8/19/08
to panb...@googlegroups.com
ஒருவகையாய் கவிதை எழுதத் துவங்குகிறீர்கள் கௌசலயா :-)
வாழ்த்துகள்.

sree Koushi

unread,
Aug 20, 2008, 2:51:11 AM8/20/08
to panb...@googlegroups.com
நன்றி ஆசிஃப் அண்ணா... :)


என்றும் அன்புடன்
கௌசல்யா

sree Koushi

unread,
Aug 20, 2008, 2:52:56 AM8/20/08
to panb...@googlegroups.com
காதல் கவிதைகள்....
 
ஒரு விழி பார்வையால் 
தீண்டுகிறாய்
ஓராயிரம் அர்த்தங்கள் 
தந்து விலகுகிறாய் 
 
###############

முத்து மாலை 
அருந்து விட்டதாக 
கூறினேன் ...
நீ
முத்த மாலை 
சூட வா என்கிறாய்....
 
###############
 
எவ்வளவு நேரம் 
காத்திருப்பது 
உன் வருகைக்காகவும் 
கை பற்றி நீ கொடுக்கும் 
மறை முத்த்திற்காவும் 
 
##############
 
வானத்தையே சேலையாக 
தருகிறேன் என்றாய்...
பிங்க் வண்ணம் கிடைக்குமா 
என்கிறேன் நான்.....
 
##############
 
தீந்தமிழாய்  இசைகிறது 
மொழி என்றால்.....
தேன் மொழியாய் 
இனிக்கிறது 
உன் முத்தம்.....

##############

குடை கொண்டு 
வந்தாலும் 
நனையவே 
விரும்புகிறேன்
மழையிலும் உன் 
முத்தத்திலும் 
 
#############
 
இரு கைப்பற்றி 
முத்தமிடுகிறாய் 
ஒரு ஓசையும் 
இல்லாமல் 
ஓவியமாகிறேன் .....
 
##############
 
இதழோர புன்னகை வீசி
விட்டு செல்கிறாய்
என் இதயமும் 
சென்று விட்டதடா 
உன் புன்னகையுடன் 
 
 
என்றும் அன்புடன்
கௌசல்யா


Gokulan

unread,
Aug 20, 2008, 2:59:17 AM8/20/08
to panb...@googlegroups.com


2008/8/19 sree Koushi <sreek...@gmail.com>

காதல் கவிதைகள்....
 
ஒரு விழி பார்வையால் 
தீண்டுகிறாய்
ஓராயிரம் அர்த்தங்கள் 
தந்து விலகுகிறாய் 
 
அருமை.. அதானே காதலின் பார்வை.. :)
 
ஒரு விழி / ஓர விழி ?

 
###############

முத்து மாலை 
அருந்து விட்டதாக 
கூறினேன் ...
நீ
முத்த மாலை 
சூட வா என்கிறாய்....
 
நல்ல கருத்து (அறுந்து)
###############
 
எவ்வளவு நேரம் 
காத்திருப்பது 
உன் வருகைக்காகவும் 
கை பற்றி நீ கொடுக்கும் 
மறை முத்த்திற்காவும் 
 
இங்கே காத்திருப்பது தப்பேயில்லை...
##############
 
வானத்தையே சேலையாக 
தருகிறேன் என்றாய்...
பிங்க் வண்ணம் கிடைக்குமா 
என்கிறேன் நான்.....
 
அந்திவானத்தில் தேடச்சொல்லுங்கள் தோழி..இன்னும் பெயரிப்படாத வண்ணங்கள் கூட அதிகம் கிடைக்கும் அங்கே..
##############
 
தீந்தமிழாய்  இசைகிறது 
மொழி என்றால்.....
தேன் மொழியாய் 
இனிக்கிறது 
உன் முத்தம்.....

##############

குடை கொண்டு 
வந்தாலும் 
நனையவே 
விரும்புகிறேன்
மழையிலும் உன் 
முத்தத்திலும் 
 
#############
 
இரு கைப்பற்றி 
முத்தமிடுகிறாய் 
ஒரு ஓசையும் 
இல்லாமல் 
ஓவியமாகிறேன் .....
 
வாவ்.. வாவ்.. அருமையான வரிகள்.. 
##############
 
இதழோர புன்னகை வீசி
விட்டு செல்கிறாய்
என் இதயமும் 
சென்று விட்டதடா 
உன் புன்னகையுடன் 
 
 :-)
 
வாழ்த்துக்கள் தோழி!
 
என்றும் அன்புடன்
கௌசல்யா


On 8/20/08, sree Koushi <sreek...@gmail.com> wrote:
நன்றி ஆசிஃப் அண்ணா... :)

என்றும் அன்புடன்
கௌசல்யா
On 8/20/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
ஒருவகையாய் கவிதை எழுதத் துவங்குகிறீர்கள் கௌசலயா :-)
வாழ்த்துகள்.

நாளையும் செல்வேன்
வலை பின்னிய சிலந்தியையும்
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும்
கண் முன்னே காண.....

 

sree Koushi

unread,
Aug 20, 2008, 3:27:45 AM8/20/08
to panb...@googlegroups.com
நன்றி கோகுன் 
 
ஒரு விழி / ஓர விழி ?
ஓர விழி பார்வையால் .... 


என்றும் அன்புடன்
கௌசல்யா.

 

lucky shajahan

unread,
Aug 20, 2008, 4:12:45 AM8/20/08
to panb...@googlegroups.com
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பொருள் தரும் இதம் இதம்
தொடருங்கள்...

 
2008/8/20, sree Koushi <sreek...@gmail.com>:

பிரேம்குமார்

unread,
Aug 20, 2008, 10:02:38 AM8/20/08
to panb...@googlegroups.com
//வானத்தையே சேலையாக 

தருகிறேன் என்றாய்...
பிங்க் வண்ணம் கிடைக்குமா 
என்கிறேன் நான்//
 
எது கிடைக்காதோ அதைத்தான்யா தேடித்தேடி கேப்பாய்ங்க.... அருமையான கவிதைகள் கௌசல்யா

இலக்குவண்

unread,
Aug 20, 2008, 2:32:57 PM8/20/08
to panb...@googlegroups.com
"ஒரு மாலையில்.... " கவிதைக்கும் பின் இப்பொழுது எழுதியிருக்கும் பதிவிற்கும்   தூரம் மிக அதிகம்.

 

sree Koushi

unread,
Aug 20, 2008, 11:33:53 PM8/20/08
to panb...@googlegroups.com
நன்றி ஷாகான் .....

sree Koushi

unread,
Aug 20, 2008, 11:52:46 PM8/20/08
to panb...@googlegroups.com
நன்றி பிரேம்....

பின்ன சும்மாவா.....சேலையாச்சே..... :)

sree Koushi

unread,
Aug 20, 2008, 11:53:30 PM8/20/08
to panb...@googlegroups.com

நன்றி க்குண் ....

Raseem

unread,
Aug 21, 2008, 1:49:16 AM8/21/08
to panb...@googlegroups.com

சூப்பரப்பூ
 
அருமை அருமை
கெளசிக்கா என்னமோ தெரில, இப்டி கவிதைகள்? தான் நமக்கு ரொம்போ புடிச்சிப்போகுது
 
தொடருங்கள், காத்திருக்கிறோம் (நானும், என் அலுவலக நண்பர்களும்)
--
பிராத்தனைகளுடன்
-M.ரஸீம்
www.raseems.blogspot.com

Asif Meeran AJ

unread,
Aug 21, 2008, 2:19:32 AM8/21/08
to panb...@googlegroups.com
அய்ஸ்
இது உனக்குப்பாடம் :-)


அருமை அருமை
கெளசிக்கா என்னமோ தெரில, இப்டி கவிதைகள்? தான் நமக்கு ரொம்போ புடிச்சிப்போகுது
 தொடருங்கள், காத்திருக்கிறோம் (நானும், என் அலுவலக நண்பர்களும்)
"ஒரு மாலையில்.... " கவிதைக்கும் பின் இப்பொழுது எழுதியிருக்கும் பதிவிற்கும்   தூரம் மிக அதிகம்.
இலக்குவணின் இதே எண்ணம்தான் எனக்கும் :-)

கவிதைக்குத்தான் எத்தனை விதமான வாசகர்கள்..

sree Koushi

unread,
Aug 21, 2008, 7:40:43 AM8/21/08
to panb...@googlegroups.com
நன்றி ஸீம் ...

இலக்குவண்

unread,
Aug 24, 2008, 12:43:20 AM8/24/08
to panb...@googlegroups.com
அடையாளச்சிக்கல் னால இருக்கலாம் அண்ணாச்சி ;)

2008/8/21 Asif Meeran AJ <asifm...@gmail.com>

sree Koushi

unread,
Sep 18, 2008, 4:17:13 AM9/18/08
to panb...@googlegroups.com
எனக்கான நீ
 
நினைவுகளின் விசும்பினின்று  நீ
நித்தமும் மழை பொழிகிறாய்
தீர்க்கையின்றி நானிருக்கையில்
தீநுரையாய் வந்து போகிறாய்...
வசந்தம் வந்தெதிர்பார்க்க
வாழ்க்கைக் கடலில் நீந்தலானோம்
காத்திருப்பு தாளாமல்
கல்யாணம் எதிர் கொண்டோம்
ஓதவனம் தாண்டி- வாழ்க்கை
ஒளி சேர்க்க சென்று விட்டாய்
ஓமிடி வருவதறியாமல்
ஓகையில் தான் திளைத்திருந்தோம்
தொலைபேசியில் வாழ்வு கண்டோம்
ஒருவருக்கொருவர் ஒருவாமை இல்லாமல்....
ஒரு கால் நீ போகாமலிருந்திருந்தால்
ஓராயிரம் இன்பங்கள் காலடியில்...
 
வரும் நாளை எதிர் பார்த்து
வாயிலில் நின்றிருந்தேன்
வருடம் போனது தெரியவில்லை
வயிறும் பெருத்து போனதடா
 
வளை  சூட நாள் பார்த்து
தொலைபேசியில் ஒலி கண்டாய்
தொப்புள் கொடி  அறும் முன்னே
என் முன்னே நீ இருந்திடடா
 
பிள்ளை அழுகுரல் கேட்டவுடனே
உன் வதனம் என் முன் ஆடும்...
கிலேசத்துடன் நானிருந்தேன்
மயங்கிய நிலையினளாய்
 
எண்ணியது நடவாமல்...
வீடு வருவாய் என்றிருந்தேன்...
நம் குலக்கொழுந்தோடு
 
என்றுமில்லாமல்...
எனக்கான நீ
சுவற்றில் காத்திருந்தாய்...
நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி....
 
என்றும் அன்புடன்
கௌசல்யா.


 
2008/8/24 இலக்குவண் <nanum...@gmail.com>

jmms

unread,
Sep 18, 2008, 4:20:23 AM9/18/08
to panb...@googlegroups.com
நல்ல கவிதை. ஆனா ரொம்ப சோகமா முடிச்சிட்டீங்க.. உங்க பேச்சு கா..
 
 
ம்.ம்.ம்.

 
ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு
அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible நீ பிறரின் குணாதிசயங்களைக்
கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/ =============================

ezhil

unread,
Sep 18, 2008, 4:57:07 AM9/18/08
to panb...@googlegroups.com
>என்றுமில்லாமல்...
எனக்கான நீ
சுவற்றில் காத்திருந்தாய்...
நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி....<
 

ரொம்ப சாதாரணமாய் முதலில் உள்ள வரிகள் எல்லாம் தோன்றின. எத்தனையோ பேர் இப்படி சுவற்றில் படமாய் இருந்ததை சொல்லி இருக்கிறார்கள். இது என்னமோ மனதை செய்கிறது! வெறும் சொற்கள் அல்ல படைக்கப்படுபவை எல்லாம் என்ற என் நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுகிறது.இந்த கடைசி வரிகள் சாதாரணமாய் இருந்தாலும் உணர்வை வெளியே கொண்டு வந்ததில் அசாத்திய வெற்றி பெற்று விட்டன!

உங்கள் உணர்வை, படித்த என் போன்ற சடத்துக்கும், பதித்ததில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்!



 
On 9/18/08, sree Koushi <sreek...@gmail.com> wrote:

Gokul Kumaran

unread,
Sep 18, 2008, 5:10:01 AM9/18/08
to panb...@googlegroups.com
கடைசி நான்கு வரியை எதிர்பார்க்கவில்லை.

துக்கம்.


--
ப்ரியத்துடன்,
கோகுல்

sree Koushi

unread,
Sep 18, 2008, 5:19:41 AM9/18/08
to panb...@googlegroups.com

நன்றி சாந்தி அக்கா....
 
அக்கம் பக்கம் நடந்த நிகழ்வுகள் ....
மனம் கணக்க வைத்த முடிவுகள்....
என்ன சொல்வது....?
இன்னும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன...
விடையில்லா  கேள்வியாக....
 
 
2008/9/18 jmms <jmms...@gmail.com>

jmms

unread,
Sep 18, 2008, 6:05:08 AM9/18/08
to panb...@googlegroups.com
On 9/18/08, sree Koushi <sreek...@gmail.com> wrote:

நன்றி சாந்தி அக்கா....
 
அக்கம் பக்கம் நடந்த நிகழ்வுகள் ....
மனம் கணக்க வைத்த முடிவுகள்....
என்ன சொல்வது....?
இன்னும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன...
விடையில்லா  கேள்வியாக....
 
 
ம்.உண்மைதான் ..:-(

மஞ்சூர் ராசா

unread,
Sep 18, 2008, 7:08:36 AM9/18/08
to panb...@googlegroups.com
சோகமுடிவை எதிர்ப்பார்த்தேன் ஆனால் இப்படியல்ல.

நினா.கண்ணன்

unread,
Sep 18, 2008, 7:13:17 AM9/18/08
to panb...@googlegroups.com

மன அழுதது
 நல்ல கவிதை!! கௌசல்யா.
 



--
நினா.கண்ணன்



sree Koushi

unread,
Sep 18, 2008, 10:28:59 AM9/18/08
to panb...@googlegroups.com
நன்றி எழில்...

2008/9/18 ezhil <nan...@gmail.com>

sree Koushi

unread,
Sep 18, 2008, 10:31:51 AM9/18/08
to panb...@googlegroups.com
நன்றி கோகுல் 


2008/9/18 Gokul Kumaran <gokul...@gmail.com>

sree Koushi

unread,
Sep 18, 2008, 10:36:31 AM9/18/08
to panb...@googlegroups.com
என்ன செய்வது மஞ்சூர் அண்ணா...பலருடைய வாழ்க்கையின் 
முடிவுகள் இவ்வாறு எழுத வைக்கிறது...

2008/9/18 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

sree Koushi

unread,
Sep 18, 2008, 10:37:20 AM9/18/08
to panb...@googlegroups.com
ம் ம் ம்...
நன்றி நினா கண்ணன்

2008/9/18 நினா.கண்ணன் <kann...@gmail.com>

பிரேம்குமார்

unread,
Sep 18, 2008, 11:45:13 AM9/18/08
to panb...@googlegroups.com


நல்ல கவிதை கௌசல்யா. நிறைய வழக்கத்தில்லாத வார்த்தைகள் இருக்கிறதே கவிதையில். அவற்றுக்கு அருஞ்சொற்பொருள் தந்தால் என்னை மாதிரி ஆட்களுக்கும் கொஞ்சம் புரியும்

N Suresh

unread,
Sep 18, 2008, 6:03:44 PM9/18/08
to panb...@googlegroups.com
பலருக்கும் நடக்கும் ஒரு கவலை நிகழ்வை சொல்லியுள்ளீர்கள். படமாவது
குங்குமத்தோடு மிஞ்சியதே! பீகார் வெள்ளத்தால் பாதித்தவர்களின்
நிலை............:-(

sree Koushi

unread,
Sep 18, 2008, 11:40:07 PM9/18/08
to panb...@googlegroups.com
நன்றி பிரேம்...
 
விசும்பு -  வானம் 
தீர்க்கை - ஏதும் இல்லாமல்
தீநுரை - கடல் நுரை
தவனம் தாண்டி - கடல் தாண்டி
ஓமிடி - பெரும் துன்பம் 
ஓகை - மகிழ்ச்சி 
கிலேத்துடன் - சந்தேகத்துடன் 

என்றும் அன்புடன்
கௌசல்யா.


 
2008/9/18 பிரேம்குமார் <prem.kav...@gmail.com>

sree Koushi

unread,
Sep 18, 2008, 11:41:41 PM9/18/08
to panb...@googlegroups.com
உண்மை தான் அண்ணா....
இயற்கை கூடுமான வரை விளையாடுகிறது...
விபரீதமாய்.....

2008/9/19 N Suresh <nsuresh...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Sep 19, 2008, 4:43:50 AM9/19/08
to panb...@googlegroups.com
//விசும்பு -  வானம் 
தீர்க்கை - ஏதும் இல்லாமல்
தீநுரை - கடல் நுரை
தவனம் தாண்டி - கடல் தாண்டி
ஓமிடி - பெரும் துன்பம் 
ஓகை - மகிழ்ச்சி 
கிலேத்துடன் - சந்தேகத்துடன் //


நன்றி.

N Suresh

unread,
Sep 19, 2008, 4:52:50 AM9/19/08
to panb...@googlegroups.com
கிலேசம் என்பதற்கு கவலை என்று கூட ஒரு பொருள் உண்டு தானே!!

2008/9/19 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

ezhil

unread,
Sep 19, 2008, 7:12:01 AM9/19/08
to panb...@googlegroups.com

>தீநுரை<

மன்னிக்கவேண்டும்! இது கடலின் நுரையல்ல! கடல்நுரை என்பது ஒரு வகை மீனின் ஓடு! நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் பெயரே தீநுரை! கடலின் நுரையல்ல! நான் கௌச‌ல்யா அவ‌ர்க‌ள் திராவ‌க‌ம் என்ற பொருளில் சொல்கிறாரோ என்று நினைத்துக் கொண்டிருதேன்.

 

ஓமிடியை இப்படி பயன்படுத்தலாமா என்று தெரியவில்லை! ஓ நாசமானோம் என்னும் பொருள் செப்புவது போல் வரும்.


கிலேச‌ம் என்ப‌த‌ன் பொருள்  துக்கமும், துயரமும் தான்! 

Ganesh kumar

unread,
Sep 19, 2008, 9:20:57 AM9/19/08
to panb...@googlegroups.com


2008/9/19 ezhil <nan...@gmail.com>

>தீநுரை<

மன்னிக்கவேண்டும்! இது கடலின் நுரையல்ல! கடல்நுரை என்பது ஒரு வகை மீனின் ஓடு! நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் பெயரே தீநுரை! கடலின் நுரையல்ல! நான் கௌச‌ல்யா அவ‌ர்க‌ள் திராவ‌க‌ம் என்ற பொருளில் சொல்கிறாரோ என்று நினைத்துக் கொண்டிருதேன்.

 

 
sponge - நுரைபஞ்சு

sree Koushi

unread,
Sep 19, 2008, 9:49:06 AM9/19/08
to panb...@googlegroups.com
அன்பு எழில்....

பொருள் ஒவ்வொரு புத்தகத்திலும் வேறு வேறாக இருப்பதாக எண்ணுகிறேன்.
புலவரேறு அரிமதி தென்னன் அவர்கள் எழுதிய தமிழ் அகராதி 
புத்தகத்தில் இருந்து தான் இந்த வார்த்தைகளை கண்டெடுத்தேன்

தீநுரைக்கு கடல் நுரை என்று தான் பொருள் குறிப்பிட்டு இருக்கிறது

கிலேம் - துன்பம்,ஒரு வகையான சந்தேகம் என்ற பொருள் 
தான் குறிப்பிட்டு இருக்கிறது.
நான் இரண்டாவது பொருளை எடுத்துக் கொண்டேன்.

ஓமிடி - கேடு, அழிவு மற்றும் துன்பம் என்ற பொருள் குறிப்பிட்டு இருக்கிறார்.
அகராதிளுக்குள் பொருள்களும் வேறுபடும் போல இருக்கிறதே..:(
 
என்றும் அன்புடன்...
கௌசல்யா.





2008/9/19 ezhil <nan...@gmail.com>

ezhil

unread,
Sep 19, 2008, 10:43:28 AM9/19/08
to panb...@googlegroups.com

ஆமாம் கௌசல்யா அவர்களே! Cuttle-bone    எனும் அந்த பொருளுக்கு கடல்நுரை என்றுதான் பெயர்.  நீங்கள் படித்த அகராதியில் பக்கத்தில் ஆங்கில பெயரை போடாததால் நீங்கள் குழம்பியிருக்கலாம். சென்னை பல்கலைக்கழக அகராதியில் போட்டிருக்கிறார்கள் பாருங்கள்!


1. தீநுரை tī-nurai : (page 1940)

வடிநீர். 3. Sweet liquid of the tender coconut; இனிய இளநீர். தாழைத் தீநீரோடு (புறநா. 24). 4. Acid; திராவகம். (மூ. அ.)

தீநுரை tī-nurai
, n. Cuttle-bone; கடல் நுரை. (யாழ். அக.)

தீப்தம் tīptam
, n. < dīpta. 1. Splendour,

ezhil

unread,
Sep 19, 2008, 10:48:14 AM9/19/08
to panb...@googlegroups.com

>sponge - நுரைபஞ்சு<

எப்படி நுரை பஞ்சு என்று ஸ்பான்ஜை சொல்கிறோமோ அப்படி cuttle-boneஐயும் கடல் நுரை என்று சொல்கிறோம் என்று சொல்ல வருகிறீரா கணேஷ்? நான் புரிந்துக் கொண்டது சரியா?

Ganesh kumar

unread,
Sep 19, 2008, 10:53:35 AM9/19/08
to panb...@googlegroups.com


2008/9/19 ezhil <nan...@gmail.com>

>sponge - நுரைபஞ்சு<

எப்படி நுரை பஞ்சு என்று ஸ்பான்ஜை சொல்கிறோமோ அப்படி cuttle-boneஐயும் கடல் நுரை என்று சொல்கிறோம் என்று சொல்ல வருகிறீரா கணேஷ்? நான் புரிந்துக் கொண்டது சரியா?

 
ஏதோ எனக்குத் தெரிஞ்சத சொன்னேன்..
மத்ததுக்கு சம்பந்தமான்னு எனக்குத் தெரியாது
 

ezhil

unread,
Sep 19, 2008, 10:56:05 AM9/19/08
to panb...@googlegroups.com

கௌசல்யா அவர்களின் அனுமதியோடு இந்த இழையில் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.

தீநுரை என்ற பெயருக்கு வடிநீர் என்ற பொருள் உண்டு. ஏனென்றால் தீயினால் ஆவியாகி பின் குளிரசெய்வதன் மூலம் அதை பெறுவதால்!

தீநுரை என்று இளநீருக்கு பெயருண்டு. இங்கே தீ என்றால் இனிப்பான என்று பொருள்.

தீநுரை என்று திராவகத்துக்கு பெயர். காரணம் சொல்ல வேண்டுமா என்ன? Acid   எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தான் தெரியுமே!

தீநுரை என்று கடல்நுரைக்கு (cuttle-bone)   க்கு ஏன் பெயர் தெரியுமா? மிக அதிக அளவில் அது உஷ்ணத்தை தாங்கும். பொற்கொல்லர்கள் அதை மோல்டாக பயன்படுத்துவர். அதனால் தீநுரை என்று பெயர். :)

ezhil

unread,
Sep 19, 2008, 11:07:28 AM9/19/08
to panb...@googlegroups.com

கிலேசத்திற்கு ஒரு வகையான சந்தேகம் என்ற பொருள் வருமா என்று தெரியவில்லை.

கிலேசம் kilēcam
, n. < klēša. Affliction, distress, pain, anguish, sorrow, grief; துக்கம்.

கிலேசி-த்தல்

க்லேசம் எனும் சொல் வடமொழி சொல். சரியான உச்சரிப்பு க்லேஷம். அதன் பொருளையும் பாருங்கள்.

1 kleza m. pain , affliction , distress , pain from disease , anguish 

இங்கே z    என்பது ஷ என்ற எழுத்தை transliterationல் சொல்லுகிறது!



On 9/19/08, sree Koushi <sreek...@gmail.com> wrote:

sree Koushi

unread,
Sep 19, 2008, 11:55:01 AM9/19/08
to panb...@googlegroups.com
//நீங்கள் படித்த அகராதியில் பக்கத்தில் ஆங்கில 
பெயரை போடாததால் நீங்கள் குழம்பியிருக்கலாம்//

 உண்மை தான் எழில்.....நான் வைத்திருக்கும் அகராதியில்   தமிழ் - தமிழ் மட்டுமே உள்ளது.
தமிழ் - ஆங்கிலம் இருக்கும் புத்தகம் வாங்குகிறேன்..உங்கள் இந்த பதிவின் மூலம் 
நான் பயன்படுத்திய சொற்களின் அர்த்தமும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி...



என்றும் அன்புடன்

கௌசல்யா.

Kasali Mohammed

unread,
Sep 20, 2008, 7:34:02 AM9/20/08
to panb...@googlegroups.com
On 9/19/08, sree Koushi <sreek...@gmail.com> wrote:
//நீங்கள் படித்த அகராதியில் பக்கத்தில் ஆங்கில 
பெயரை போடாததால் நீங்கள் குழம்பியிருக்கலாம்//

 உண்மை தான் எழில்.....நான் வைத்திருக்கும் அகராதியில்   தமிழ் - தமிழ் மட்டுமே உள்ளது.
தமிழ் - ஆங்கிலம் இருக்கும் புத்தகம் வாங்குகிறேன்..உங்கள் இந்த பதிவின் மூலம் 
நான் பயன்படுத்திய சொற்களின் அர்த்தமும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி...



என்றும் அன்புடன்
கௌசல்யா.

 
என்னமோ போங்க. பெரியவக, புலவருங்க விவாதிக்கிரீக. நமக்குத்தேன் ஒண்ணும் மண்டையில ஏரல (பாடப் புத்தகம் மாதிரியே!).
 
அன்புடன்
கஸாலி

Asif Meeran AJ

unread,
Sep 20, 2008, 4:52:27 PM9/20/08
to panb...@googlegroups.com
என்னமோ போங்க. பெரியவக, புலவருங்க விவாதிக்கிரீக. நமக்குத்தேன் ஒண்ணும் மண்டையில ஏரல (பாடப் புத்தகம் மாதிரியே!).

இல்லன்னா மட்டும் என்னத்த ஏறிடப் போவுது?
மொதல்ல படத்தோட சுவரொட்டியை ஒழுங்கா எழுத்துக்கூட்டிப் படிச்சுட்டு வாரும்வோய் :-)

கௌசல்யா

கவிதையில் உபயோகப்படுத்தும் வாரத்தைகளை வலியச் சேர்க்காதீர்கள்
அது பல்லிடுக்கில் சிக்கிய பாக்கு போல உறுத்திக் கொண்டே இருக்கும்
நல்ல கவிதை இயல்பான வரிக்ளினால்தான் மெருகு பெறும். இதன் பொருளென்ன
என்றறியும் ஆர்வம் அனைவருக்கும் இருக்க முடியாது.எனவே அதில் கவனமாக இருங்கள்

மற்றபடி..கவிதை உங்களின் வேறு சில கவிதைகளை விட ந்ன்றாகவே வந்திருக்கிறது :-)

sree Koushi

unread,
Sep 21, 2008, 9:46:50 AM9/21/08
to panb...@googlegroups.com

சுட்டி காட்டியமைக்கு நன்றி ஆசிஃப் அண்ணாச்சி....
தங்களுடைய கருத்தை ஏற்று கொள்கிறேன்..

என்றும் அன்புடன்
கௌசல்யா



2008/9/21 Asif Meeran AJ <asifm...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages