--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
தமிழ் என்ற வார்த்தை நம்மிடைய மொழி என்பதையும் தாண்டி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது என்றால் மிகையில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பின்னாலான அரசியல்கள் மிக கேவலமானதாக இருந்தாலும், தமிழுக்கு கிடைத்த இந்த அந்தஸ்து கால தாமதமானது.
உருப்படியான இழை ஆரம்பித்திருக்கும் சுபைருக்கு ஜே!சரி சுபைர் பாளையம் என முடியறாபல் மேலப்பாளையம் புதுப்பாளையம் என்று பல ஊருபேரு வருதே அப்போ அங்க திருடங்க இருக்காங்கன்னு அர்த்தமா?:) பாளையக்காரர்கள்னா வலிமைமிக்கவர்கள் என்று அர்த்தம் இருக்கலாம்!
வந்துட்டோம்
2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>தமிழ் என்ற வார்த்தை நம்மிடைய மொழி என்பதையும் தாண்டி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது என்றால் மிகையில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பின்னாலான அரசியல்கள் மிக கேவலமானதாக இருந்தாலும், தமிழுக்கு கிடைத்த இந்த அந்தஸ்து கால தாமதமானது.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
கைகோத்துச் சென்றனர்கை கோர்த்துச் சென்றனர்இரண்டில் எது சரி சொல்லுங்க ஏன்?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
கை கோர்த்துச்சென்றனர் - இதுதான் சரியா வரும்.
கோர்த்துச் சென்றனர். கோர்த்துச்சென்றனர். (நடுவுல இடைவெளி வருமா வராதான்னு சொல்லுங்க பார்க்கலாம்) :)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஊரணி அல்லது ஊருணி எது சரி???
2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>
ஊரணி சரியா இருக்குமோ?ஊரணி’ன்னா என்ன அங்கிள்?
நீர்நிலைகளைப் பற்றி நண்பர், பதிவர் பழைமைபேசி எழுதி இருக்கும் வலைப்பதிவு இங்கே...
http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_04.html
ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை
கொஞ்சம் குட்டித்தூக்கம் போட்டு வரதுக்குள்ள ஊருணி வந்திடிச்சா?:) முதல்ல எடுத்திட்ட சொல்லை சரியா ஆரய்ந்து தீர்ப்பு சொன்னபிறகுதான் அடுத்த சொல்லுக்கு வரணும் அவசரப்படவேண்டாம் என்ன?:)இப்போ பாளையம் பற்றி ஓரளவு தெரிந்தது விவரம் அல்லது விளக்கம் எனக்குத்தெரியவில்லை ஆகவே அதை இப்போதைக்கு ஒருபுறம் வைப்போம் அடுத்து இப்போ கோர்க்கவோ கோக்கவோ சொல்லை பார்க்கலாம் சரியா?
பாளையம் என்ற பெயரில் தமிழகத்தில் தோராயமாக ஐநூறு ஊர்கள் உள்ளன என்று சொல்லலாம். பாளையம் என்ற ஊர்கள் அனைத்தும் ஒரு குன்று, அல்லது மலை அடிவாரங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. பாளையக்காரர்கள் என்பவர்கள் போர் வீரர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது, மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்கள் முந்தைய காலங்களில் போருக்குச் செல்லும் போது, எதிரிகள் எளிதில் தங்களது படையினனத் தாக்கி விடாமலும் அதே சமயம் படையின் இருப்பிடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், இவ்வாறு மலைகளுக்கு அருகில் வீரர்களைத் தங்க வைத்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. எனவே இவ்வாறு போர் வீரர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களெல்லாம் பாளையம் என்று அழைக்கப்பட்டு, தற்போது, அம்மா பாளையம், பெரியம்மா பாளையம், கோபி செட்டி பாளையம்.. எனப் பல வகைப் பாளையங்கள் உள்ளன.
நன்றி அங்கிள்2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை
<<<<<>இது தமிழ் இழை! நன்றி மாமான்னு சொல்லணும்:)--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
இலக்கணத்தோடு எழுதுவதாய் நினைத்துக்கொண்டு சிலர் கோர்க்கவோ என எழுதுகிறார்கள் இது சரி இல்லை என்று தமிழ் அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்.‘எடுக்கவோ கோக்கவோ என்றான்’ என்றுதான் வில்லிபாரதம் கூறுகிறது.கோர்வை பிழையான சொல் கோவை பிழையற்ற சொல்.உதாரணம்ஆசாரக்கோவைஇன்னொரு கோவை (ஊர் இல்ல) இருக்கே யார் சொல்லப்போறீங்கமுதல்ல?:)
கோவைப்பழம் இருக்கே? <<<>>>>>>>>>>>தங்காய் ! அத்திக்க்காய் காயாதே! தமிழுக்காய் காய்!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
கோவைப்பழமும் கோசாப்பழமும் அண்ணன் தம்பிகளா \ அக்கா தங்கைகளா?
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Kavitha
Kannan
2010/7/27 shylaja <shyl...@gmail.com>
இலக்கணத்தோடு எழுதுவதாய் நினைத்துக்கொண்டு சிலர் கோர்க்கவோ என எழுதுகிறார்கள் இது சரி இல்லை என்று தமிழ் அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்.‘எடுக்கவோ கோக்கவோ என்றான்’ என்றுதான் வில்லிபாரதம் கூறுகிறது.கோர்வை பிழையான சொல் கோவை பிழையற்ற சொல்.உதாரணம்ஆசாரக்கோவைஇன்னொரு கோவை (ஊர் இல்ல) இருக்கே யார் சொல்லப்போறீங்கமுதல்ல?:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
இல்லை சுபைர்! கோவை என்று முடியும் ஒரு நூலை சொல்றேன்
தமிழ் இலக்கியத்தில் கோவை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அகப்பொருள் பாடல்கள் தொகை நூல்களில் மிகுதியாக இடம் பெற்றுவிளங்கியபோதும், துறைகள் எல்லாம் தேர்ந்து, நூல் ஒன்று புனைய வேண்டும் என்ற அவாவே "கோவை" இலக்கியம் தோன்றக் காரணம் எனலாம்.
ஐந்திணை நெறி வழுவாது அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம். இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன.
முதலில் தோன்றிய கோவை இலக்கியம், திருக்கோவையார்.
அதைத் தொடர்ந்து பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவை, அம்பிகாபதிக் கோவை, குளத்தூர் கோவை முதலியன எழுந்தன.
"நாணிக்கண் புதைத்தல்" என்ற ஒரே துறையை அடிப்படையாகக் கொண்டு "ஒரு துறைக்கோவை" என்னும் நூல் பின்பு தோன்றியது.
சொற்பிழைகளும் திருத்தங்களும்
ஓம்.
*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
சொற்பிழைகளும் திருத்தங்களும்
*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
நமது பேச்சு வழக்கில் பல சொற்கள் பிழைபட்டனவாகப் பேசப்படுகின்றன. அச் சொற்களின்
உருவங்களும் சிதைந்து காணப்படுகின்றன. பேச்சு வழக்கிலுள்ள பிழைபட்ட சொற்களை
எழுத்து வழக்கிற்கு அப்படியே கொண்டு வருதல் முறையன்று.
திருத்தமும் பொருத்தமும்
திருத்தம பொருத்தம்
அக்கிள் அக்குள்
அகண்ட அகன்ற
அடமழை அடைமழை
அண்ணாக்கயிறு அரைஞாண் கயிறு
அதுகள் அவை
அருவாமணை அரிவாள் மணை
அருகாமை அருகில்
அவைகள் அவை
அவைகளை அவற்றை
ஆத்துக்கு அகத்துக்கு
இடைபோடு எடைபோடு
இத்துப் போதல் இற்றுப் போதல்
இரும்பல் இருமல்
உசிர் உயிர்
உடமை உடைமை
உடம்படிக்கை உடன்படிக்கை
உத்திரவு உத்தரவு
ஊரணி ஊருணி
எழவு இழவு
எண்ணை எண்ணெய்
ஒட்டறை ஒட்டடை
ஒண்ணு ஒன்று
ஒருவள் ஒருத்தி
கண்ணாலம் கல்யாணம்
கயறு கயிறு
கத்திரிக் கோல் கத்தரிக்கோல்
கட்டிடம் கட்டடம்
கம்பிளி கம்பளி
கம்மனாட்டி கைம்பெண்டாட்டி
கருவேப்பிலை கறிவேப்பிலை
காத்து காற்று
கிடா கடா
குடுத்து கொடுத்து
குதவளை குரல்வளை
கெடிகாரம் கடிகாரம்
கேழ்வி கேள்வி
கோடாலி கோடரி
கோர்த்து கோத்து
சக்காளத்தி சக்களத்தி
சமயல் சமையல்
சிகப்பு சிவப்பு
சிலவு செலவு
சுவற்றில் சுவரில்
செரங்கு சிரங்கு
தடுமாட்டம் தடுமாற்றம்
தீவாளி தீபாவளி
துகையல் துவையல்
துகை தொகை
துடங்குதல் தொடங்குதல்
துடை தொடை
துறவுகோல் திறவுகோல்
தெண்டம் தண்டம்
தொந்திரவு தொந்தரவு
தொப்புள் கொப்பூழ்
நஞ்சை நன்செய்
நாத்தம் நாற்றம்
நாகரீகம் நாகரிகம்
நிலமை நிலைமை
நோம்பு நோன்பு
பட்னி பட்டினி
புடவை புடைவை
புட்டு பிட்டு
புஞ்செய் புன்செய்
பாவக்காய் பாகற்கய்
பொம்பிளை பெண்பிள்ளை
மனவி மனைவி
மானம் வானம்
முந்தாணி முந்தானை
முழுங்கு விழுங்கு
மெனக்கிட்டு வினைகெட்டு
நொம்ப நிரம்ப
வலது கை வலக்கை
விரை விதை
விக்கும் விற்கும்
வெண்ணை வெண்ணெய்
வெய்யில் வெயில்
வேணும் வேண்டும்
விடியகாலம் விடியற்காலம்.
வைக்கல் வைக்கோல்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
நன்றி: பேராசிரியர் மரைக்காயர்
கட்டுரையிலிருந்து.
வெ.சுப்பிரமணியன் ஓம்.
2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>ஊரணி சரியா இருக்குமோ?ஊரணி’ன்னா என்ன அங்கிள்?
நீர்நிலைகளைப் பற்றி நண்பர், பதிவர் பழைமைபேசி எழுதி இருக்கும் வலைப்பதிவு இங்கே...
http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_04.html
ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை
ஊருணி, ஊரணி இரண்டு சொற்களும் ஒன்றையே குறிக்கும். ஊருணி என்ற சொல்
எழுத்துவழக்கிலும் இலக்கியங்களிலும் உண்டு. ஊரணி பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
“ஊருணி நீர்நிறைந்தவற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு” – திருக்குறள்
ஊறணி என்றும் ஒரு சொல் உண்டு. அது நீரூற்றையோ, நீர் ஊரும் நிலத்தையோ, சதுப்பு நிலங்களையோ குறிக்கிறது.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
”பைய போ” ... அப்படின்னா மெதுவா போன்னு அர்த்தம்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
பையத்துயின்ற பரமனடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்கிற ஆண்டாள் பாடலுக்கு பொருள் எப்படி வருகிறதென பார்க்கவேண்டும்.


கோள் சொல்லுதல் மிகவும் கெட்ட குணம்!
நாம் தான், அவன் திருவடிகளை, நெத்தியில் (நாமம்) போட்டுக்கறோம்-ன்னா,
கண் பார்வையும் கெட்டுப் போயி, கண்ணுல பீளை, வாயில நுரை எல்லாம் தள்ளி கஷ்டப்படறப்ப, பேசுறாங்களா பாடுறாங்களான்னு தெரியாத அளவுல இனிமையான குரல் கொண்ட சின்னப் பொண்ணுங்க, தாத்தா மெதுவா நடங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி, இந்த ஆகாயம், மலை, வேதம், வேள்வின்னு எல்லாமே ஆன பெருமாள் இருக்கும் திருநறையூர் சென்று அவனைக் கும்புடலாம். எழுந்து வா என் நெஞ்சமேங்கறார்'.
2010/7/27 Kandavel Rajan <kandav...@gmail.com>பைய பைய
கண் பார்வையும் கெட்டுப் போயி, கண்ணுல பீளை, வாயில நுரை எல்லாம் தள்ளி கஷ்டப்படறப்ப, பேசுறாங்களா பாடுறாங்களான்னு தெரியாத அளவுல இனிமையான குரல் கொண்ட சின்னப் பொண்ணுங்க, தாத்தா மெதுவா நடங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி, இந்த ஆகாயம், மலை, வேதம், வேள்வின்னு எல்லாமே ஆன பெருமாள் இருக்கும் திருநறையூர் சென்று அவனைக் கும்புடலாம். எழுந்து வா என் நெஞ்சமேங்கறார்'.
அருமையான பதிவு. கந்தவேல். நன்றி.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ் மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பரிபாடல்(எட்டுத்தொகை - சங்க இலக்கியங்கள்)13. திருமால்
பாடியவர் :: நல்லெழுதியார் இசையமைத்தவர் :: பெயர் அறியப்படவில்லை பண் :: நோதிறம்
கடவுள் வாழ்த்து திருமாலைத் தொழுவார் பெறும் பேறு |
| தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண், மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத் துளவம் சூடிய அறிதுயிலோனும்-- மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், | 30 |
| திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும் விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின், நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்-- நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி |
35 |
2010/7/28 shylaja <shyl...@gmail.com>நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ் மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
3. கைகேயி சூழ்ச்சிப் படலம்(கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்) |
| கூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்; சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை, வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல், தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள். | 1 |
| விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக் கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும் வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல் அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள். | 2 |
| தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி, நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக் காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப் பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். | 3 |
நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ் மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
நாநிலம் தான் சரியென தோன்றுகிறது...2010/7/28 shylaja <shyl...@gmail.com>நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ் மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
2010/7/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>நாநிலம் தான் சரியென தோன்றுகிறது...2010/7/28 shylaja <shyl...@gmail.com>நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ் மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
திருவாசகம்படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
நால்வகை நிலங்கள் அதாவது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று நால்வகை நிலங்களால் ஆனது இந்த உலகம் .ஐந்தாவது நிலமான பாலை தனி நிலம் இல்லையாம் ’.முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’ என்கிறது ஒரு பாடல்வரி.மலையும் காடும் வயலும் கடலும் இவை சார்ந்த நிலங்களுமே உலகம் முழுமையும் உள்ளன.ஆகவே நான்கு நிலங்களை முதன்மைப் படுத்தி நானிலம் என்றனர்.நான்கு+நிலம்=நானிலம்.நாநிலம் என்பதற்கு நாக்கு ஆகிய நிலம் என்று பெயர் .ஆகவே நானிலம் என்பதே சரியான சொல்.(ஆதாரம் புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய அறிவோம் அருந்தமிழ் நூல்)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
இலக்கணப்படி முயற்சித்தான் வராதுனு ஒருத்தர் சொன்னார்,
முயன்றான் தான் வருமாம்.
முயற்சிக்கிறேன் - முயல்கிறேன்
பயிற்சிக்கிறேன் – பயில்கிறேன்
முயன்றான் ,முயற்சி செய்தான், முயற்சித்தான்.இந்த மூன்று சொற்களின் வேறுபாடு என்ன சொல்ல முடியுமா?
முயன்றான் ,முயற்சி செய்தான், முயற்சித்தான்.இந்த மூன்று சொற்களின் வேறுபாடு என்ன சொல்ல முடியுமா?
சரி ----------------/-------தவறு
தட்டித்தடுமாறி --/-- தட்டுத்தடுமாறி
எல்லாரும் --/-- எல்லோரும்
ஏழைமை --/-- ஏழ்மை
ஒருகால் --/-- ஒருக்கால்
பதினொரு --/-- பதினோரு
இரண்டாம் வகுப்பு --/-- இரண்டாவது வகுப்பு
பதற்றம் --/-- பதட்டம்
மனத்தத்துவம் --/-- மனோதத்துவம்
அண்மை --/-- அருகாமை
மனத்தில் --/-- மனதில்
மனம், மனசு --/-- மனது
கயிற்றை --/-- கயிறை
அடையாற்றில் --/-- அடையாறில்
ஆர்க்காடு --/-- ஆற்காடு
தவற்றை --/-- தவறை
இடப்பக்கம், வலப்பக்கம் --/-- இடது பக்கம், வலது பக்கம்
சின்ன பெண் --/-- சின்னப் பெண்
முயன்றான், முயற்சி செய்தான்--/-- முயற்சித்தான்
முயல, முயற்சி செய்ய --/-- முயற்சிக்க
நாகரிகம் --/-- நாகரீகம்
கத்தரிக்கோல் --/-- கத்திரிக்கோல்
சித்திரிக்க --/-- சித்தரிக்க
இன்று, அன்று --/-- இன்றைய தினம், அன்றைய தினம்
மெய்ம்மறத்தல் --/-- மெய்மறத்தல்
செய்ந்நன்றி --/-- செய்நன்றி
இருபத்துநான்கு --/-- இருபத்திநான்கு
உயிர்கொல்லி நோய் --/-- உயிர்க்கொல்லி நோய்
அழத்தொடங்கினாள் --/-- அழுகத்தொடங்கினாள்
அவன் எழுந்தான் --/-- அவன் எழுந்திருந்தான்
எழ முற்பட்டான் --/-- எழுந்திருக்க முற்பட்டான்
எழுத்துகள் --/-- எழுத்துக்கள்
கண்ணீர் துளித்தது --/-- கண்ணீர் துளிர்த்தது
இலைமறை காய் --/-- இலை மறைவு காய் மறைவு
பழுதை (கயிறு) --/-- பழுது
என் மகன், என்னுடைய மகன் --/-- எனது மகன்
கூர்கெட்ட --/-- கூறுகெட்ட
செலவு --/-- சிலவு
ஒருத்தி --/-- ஒருவள்
ஒருவன் --/-- ஒருத்தன்
வல்லுநர் --/-- வல்லுனர்
ஏற்கெனவே --/-- ஏற்கனவே
கோக்க --/-- கோர்க்க
கருமை. கறுப்பு --/-- கருப்பு
புனைபெயர் --/-- புனைப்பெயர்
எண்ணெய் --/-- எண்ணை
எண்ணெய்யை --/-- எண்ணையை
ஒரு நாளுக்கு --/-- ஒரு நாளைக்கு
சுவரில் --/-- சுவற்றில்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60308022&format=htmlசரி ----------------/-------தவறு
அடையாற்றில் --/-- அடையாறில்
எக்ஸ்க்யூஸ்மி ஹெல்ப் மீ,
அடையாறு என்பதை ஆறாக கொண்டால் அடையாற்றில் சரி,
அடையாறு என்பதை இடமாக கொண்டால் அடையாறில் சரி.
நான் சொன்னது சரியா? தவறா?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
சல்லியம்-சிறுசண்டை
சிலாகித்தல் -ஆனந்தப்படல்
சல்லியம்-சிறுசண்டை
சல்யம் என்றால் மலயாளத்தில் தொந்தரவு என்று பொருள்
சிலாகித்தல் -ஆனந்தப்படல்
சிலாகிப்பது ஆனதப்படுவது இரண்டுமே தமிழ் இல்லை என நினைக்கிறேன் ;-)
சிலாகித்தல் என்பது பெருமபாலும் வியத்தல் அல்லது போற்றுதல் என்ற பொருளிலேயே
தற்போது வழங்கப்படுக்கிறது
பாவனாவின் தெற்றுப்பல்லைக் கூட சுபைர் சிலாகித்துக்கொண்டிருந்தான் ஒரு காலம்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
சிலாகித்து என்கிற சொல் வருகிறபோதிலாவது குழும மகளிர் நினைவு வந்து சிலாகித்து சொல்ல சுபைர் உனக்கும் தோணலியா?:)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
சுபைர்.
சல்லிப் பயல் என்று சொல்லுவதற்கு வேறு காரணம் உண்டு.
கொஞ்சம் வேலையா இருக்கேன். வரேன்
சிலாகித்து என்கிற சொல் வருகிறபோதிலாவது குழும மகளிர் நினைவு வந்து சிலாகித்து சொல்ல சுபைர் உனக்கும் தோணலியா?:)
ஏதாவது திட்டிட போறேன்....குழுமத்தில சிலாகித்ததப் பத்தி எழுத முடியும். இங்கே சல்லிப்பயலைப் பத்தி எழுத முடியாதா??
இந்த இழைல தமிழ் பத்தி மட்டும் பேசுங்க... இல்லன்னா கடிச்சு வச்சிடுவேன்...
கலைஞர் கருணாநிதி திருட்டு ரயிலில் சென்னை வந்ததாக ஜெ குற்றச்சாட்டு
தெற்றுப் பல் என்று சொல்லுகிறோம் அல்லவா? அது வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பல். It is a tooth which is jetting out. தெற்றுதல் = வெளியே நீட்டிக் கொண்டிருந்தல். தெற்றுகின்ற பல்லை "தெறுத்திக் கொண்டு இருப்பதா"கவும் சொல்லுவோம்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
நுகர்ந்து பார்த்தார்கள்?
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of shylaja
Sent: Thursday, July 29, 2010 12:04 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] நல்ல தமிழ் கற்போம்
மலரை முகர்ந்தார்கள்
ஓ எஸ். நுகர்வோர்
முகர்ந்து - எழுத்துல
மோந்து - பல மாவட்டங்களில் பேச்சு வழக்கிலே....
பேச்சும் எழுத்தும் ஒன்னா இருக்கனுமா என்ன?
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Paamahan
Sent: Thursday, July 29, 2010 12:18 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] நல்ல தமிழ் கற்போம்
நுகர்தல் என்பது வாங்குதல் என்று பொருள்படும். ஆகவே முகர்ந்தார்கள்தான் சரி.
2010/7/29 VJagadeesh <VJaga...@prouindia.com>
நுகர்ந்து பார்த்தார்கள்?
ஓ எஸ். நுகர்வோர்
முகர்ந்து - எழுத்துல
மோந்து - பல மாவட்டங்களில் பேச்சு வழக்கிலே....
பேச்சும் எழுத்தும் ஒன்னா இருக்கனுமா என்ன?
நம்மைக் கொச்சைப்படுத்தினால் நம் மதிப்பு மட்டும்தான் குறையும். மொழியைக் கொச்சைப்படுத்தினால் நம் முன்னோர்கள் கண்ட அனைத்து அறிவும் கொச்சைப்பட்டு குறைகின்றது. தன்மானம், இனமானம் என்று மேடையில் முழங்கும் போலிகளுக்கு மொழிமானம் என்கின்ற ஒன்று தெரிவதேயில்லை. உண்மையில் மொழிமானமே எல்லா மானங்களுக்கும் மூலமும் முதலும்.
இதை சுட்ட இடத்தை சொல்லவே இல்லையே
மலரை முகர்ந்தார்கள்மலரை மோந்து பார்த்தார்கள்இதில் எது சரியெனப்படுகிறது?
போன தலைமுறை போன தலைமுறைக்கும் தலைமுறைக்கும் தலைமுறை அப்படியே 40-50வது தலைமுறைனுலாம் நினைச்சிட்டு இருந்தா இப்ப இருக்க தமிழே இருக்காது.
From: panb...@googlegroups.com
[mailto:panb...@googlegroups.com] On Behalf Of Kandavel Rajan
Sent: Thursday, July 29, 2010 12:32 PM
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
தமிழில் முகர்ந்து என்னும் சொல்லே இல்லை என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.முகந்து என்ற சொல் உண்டு இதன் பொருள் அள்ளி அல்லது அள்ளுதல். உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ என்கிறார் பாரதி இதை முகர்ந்தால் என பலர் பாடுவது அபத்தம்!முகத்தல் அளவை என்பதை நினையுங்கள்.நுகர்ந்து என்னும் சொல் உண்டு நுகர்ச்சி நுகர்வோர் இப்படி உண்டுமோந்துபார்த்தான் மோப்பம் பிடித்தான் என்று பலர்பேசக்கேட்டிருக்கிறோம்.மோப்பக்குழையும் அனிச்சம் என்பார் திருவள்ளுவர்/ மோப்பநாய் கேள்விப்பட்டிருப்பீர்களே! காலப்போக்கில் மோந்தான் என்பது செவிக்கு இனிமையாக இல்லை என்பதால் முகர்ந்தான் எனத்திரித்துவிட்டார்கள் ஆனால் மலரை மோந்துபார்த்தான் என்பதே சரியான சொல்.
மோ, [ mō, ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. [com முகரு, மோரு.] To smell a thing, மணக்க. 2. [for முக.] To draw water, மொள்ள. இவன்அவளைமோந்துகொண்டேயிருக்கிறான். He is scenting [following] her. நான்மோவேன். I will not smell. குடமோக்கவில்லை. The pitcher does not take water.
மோந்துகொடுக்க, inf. To smell and give to another.
மோப்ப, inf. [poet. form of மோக்க.] To smell. See under குழை, v.
மோப்பு, v. noun. The sense of smell. See மோப்பம்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
மொண்டு, [ moṇṭu, ] s. Refractoriness, unruliness, முரண்டு. (R.).
இதை அப்படியே கந்தவேல் மாம்ஸ் சுட்ட இடத்துல ரிப்ளையா போட்டு விடுங்க.
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of shylaja
Sent: Thursday, July 29, 2010 1:34 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] நல்ல தமிழ் கற்போம்
தமிழில் முகர்ந்து என்னும் சொல்லே இல்லை என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
எங்க ஊர் பக்கத்துல மோந்துகொடுன்னு வார்த்தை இருக்குது. மோந்துகொடுன்னா எடுத்துக்கொடு அல்லது அள்ளிக்கொடுன்னு சொல்லலாம். மொண்டு கொடுங்கறது மருவி மோந்துகொடுன்னு ஆகியிருக்கலாம்.
அர்த்தமுள்ள தமிழின் ‘ஓர்’ எழுத்துக்கள்!
தமிழ் மொழி பலவித சுவை மிகுந்தது. அமிர்தம் போல இனிமையானது. கேட்க இனிமை, பேச அருமை, படிக்க எளிமை. தமிழ் கடலில் ஆழ்ந்து மூழ்கினால் நல் முத்துக்களை பெறலாம். இன்பத்தமிழ் மொழி பேசும் தமிழனாய் பிறந்ததே ஒரு பெரு மைதான். அதை உணரவேண்டிய தருணம் இதுதான். முத்தமிழ் வித்தகர் கலைஞர், தமிழுக்கு பெருமை சேர்க்க பெருவிழா நடத்தும் இந்த காலம் தமிழுக்கு பொற்காலம். உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் இந்த நேரத்திலாவது தமிழ் மொழியின் அழகையும், பெருமையையும் சற் றேனும் சிந்தித்து பார்ப்போம். தமிழன் பெருமைக்குரியவன் என்பதை உண ர்ந்து தலை நிமிர்ந்து நிற்ப்போம். அழகிய தமிழ் மொழியில் அற்புதங்கள் பல உள்ளன. எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று “ஓர் எழுத்து ஒரு பொருள்“ என்னும் சிறப்பு ஆகும். அதாவது தமிழில் ஒரு எழுத்து கூட பொருள் தரக்கூடியது. இதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் தனித்து நின்றாலும் பொருள் கொடுக்கும். அது எப்படி என்கிறீர்களா. அதுதான் நம் தமிழ்மொழியின் தனிச்சிறப்பு அந்த 42 எழுத்துக்களையும் அதன் பொருளையும் பார்ப்போம்.
ஆ- பசு, எருது, ஆச்சா மரம்
ஈ- பறக்கும் பூச்சி, தேனீ, வண்டு, அழிவு, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
ஊ- இறைச்சி, உணவு, விகுதி.
ஏ- அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு
ஐ- அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்
ஒ- சென்று தாக்குதல், மதகுநீர், ஒழிவு, பலகை
மா-பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ- மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
மூ- மூப்பு(முதுமை),மூன்று
மே- மேல், மேன்மை
மை- கண்மை, கருமை, இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்
மோ- முகர்தல்
தா- கொடு, குறை, கேடு, குற்றம், பகை
தீ-நெருப்பு, இனிமை, அறிவு, இடம்
தூ- வெண்மை, இறைச்சி, பறவை இறகு
தே- கடவுள்
தை- தைமாதம், தையல், திங்கள்
பா& அழகு, பாட்டு, நிழல்
பூ- மலர், சூதகம்
பே- அச்சம், நுரை, வேகம்
பை- கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை
போ& செல்
நா& நாக்கு, தீயின் சுவாலை
நீ& நீ
நை- வருந்து, இகழ்ச்சி
நோ-நோவு, துன்பம், வலி
கா- சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்
கூ- பூமி, ஏவல், கூழ், கூவு
கை- உடல் உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள்,
கோ- வேந்தன், தலைவன், இறைவன், அரசன்
வா- வருகை
வீ- மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு, வீழ்தல்
வை& வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்
வெ- வவ்வுதல்,
சா- சாதல், சோர்தல், பேய், மரணம்
சீ- வெறுப்புச்சொல், சீத்தல், சீழ், சளி, லட்சுமி, அடக்கம், நித்திரை
சே- சிவப்பு, எருது, அழிஞ்சால் மரம்
சோ- மதில், அரண்
யா- ஒருவகை மரம், யாவை, அசைச்சொல்
நொ- வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு
து- உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்.
2.16. சுந்தர சோழரின் பிரமை(பொன்னியின் செல்வன்)அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் காட்டு மிருகம் இன்னதென்பதைஅவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டுபிடிக்க அவளால் முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு? இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை? அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன. எத்தனை நாள் அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான். |