நல்ல தமிழ் கற்போம்

247 views
Skip to first unread message

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 4:10:34 AM7/27/10
to பண்புடன்
தமிழ் என்ற வார்த்தை நம்மிடைய மொழி என்பதையும் தாண்டி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது என்றால் மிகையில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பின்னாலான அரசியல்கள் மிக கேவலமானதாக இருந்தாலும், தமிழுக்கு கிடைத்த இந்த அந்தஸ்து கால தாமதமானது.

இந்தத் தமிழுக்கு நான் என்ன செய்தோம் என்ற எண்ணம் நம் மனதில் உதிக்குமாயின் இங்கே களமிறங்குங்கள்.

தமிழில் நம் ஊர்ப்பக்கம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள் மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

உதாரணமாக, கோகுல் அண்ணா சொன்னதைப் போல “ஒலங்கு ஆயுது” என்ற பதம் “கொசு கடிக்கிறது” என்ற நவீன தமிழுக்கு ஈடானது.

கொசு என்பதை கம்பர் உலங்கு என்கிறார். அது இப்போதும் நம் மக்களிடையே புழங்கி வருவது வரவேற்கத்தக்கது.

எமது ஊரில் சிறு பிள்ளைகள் அதிகம் சேட்டை செய்யும்போது பெரியவர்கள் சொல்வார்கள், “இந்த பாளையங்கள் ஏன் இப்படி செய்யுது?” என்பதாகும். இங்கே பாளையம் என்றால் “திருடன்” என்று பொருளாம். பாளையக்காரர்கள் என்றால் திருடர்கள் என்று பொருளாம். பெரியவர்கள் சரியாவென சொன்னால் நல்லது.

வாங்க வாங்க..

shylaja

unread,
Jul 27, 2010, 4:15:11 AM7/27/10
to panb...@googlegroups.com
உருப்படியான இழை ஆரம்பித்திருக்கும் சுபைருக்கு  ஜே!
 
 
சரி  சுபைர் பாளையம் என முடியறாபல் மேலப்பாளையம்  புதுப்பாளையம் என்று  பல ஊருபேரு வருதே அப்போ அங்க திருடங்க இருக்காங்கன்னு அர்த்தமா?:)  பாளையக்காரர்கள்னா வலிமைமிக்கவர்கள் என்று அர்த்தம் இருக்கலாம்!

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 
 
 
ஷைலஜா
 
// வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன் தூய திருமகளாய் வந்த ரங்கனார்க்குத் துழாய் மாலை முடிசூடித் தொடுத்த மாதே... நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும் நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும் அன்புடனே யடியேனுக்கருள் செய் நீயே

shylaja

unread,
Jul 27, 2010, 4:17:05 AM7/27/10
to panb...@googlegroups.com
கந்தவேல் எங்க   கோகுல்  ஜீவ்செல்லாம் எங்கே? பாளையத்துக்கு சரியா பொருள் கொண்டுவாங்கபாக்லாம்!

2010/7/27 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jul 27, 2010, 4:21:50 AM7/27/10
to panb...@googlegroups.com
 கைகோத்துச் சென்றனர்
கை கோர்த்துச் சென்றனர்
 
இரண்டில் எது சரி சொல்லுங்க ஏன்?

2010/7/27 shylaja <shyl...@gmail.com>

Kavitha Kannan

unread,
Jul 27, 2010, 4:22:21 AM7/27/10
to panb...@googlegroups.com
வந்துட்டோம்

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
தமிழ் என்ற வார்த்தை நம்மிடைய மொழி என்பதையும் தாண்டி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது என்றால் மிகையில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பின்னாலான அரசியல்கள் மிக கேவலமானதாக இருந்தாலும், தமிழுக்கு கிடைத்த இந்த அந்தஸ்து கால தாமதமானது.

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 4:23:07 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

உருப்படியான இழை ஆரம்பித்திருக்கும் சுபைருக்கு  ஜே!
 
 
சரி  சுபைர் பாளையம் என முடியறாபல் மேலப்பாளையம்  புதுப்பாளையம் என்று  பல ஊருபேரு வருதே அப்போ அங்க திருடங்க இருக்காங்கன்னு அர்த்தமா?:)  பாளையக்காரர்கள்னா வலிமைமிக்கவர்கள் என்று அர்த்தம் இருக்கலாம்!

பாளையம் என்றால் போர் வீரர்கள் கொண்ட படை என்றும் பொருளாம்.

shylaja

unread,
Jul 27, 2010, 4:23:22 AM7/27/10
to panb...@googlegroups.com
வருக, தமிழ் பருக!   தெரிந்ததைப் பகிர்க:)

2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>
வந்துட்டோம்

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
தமிழ் என்ற வார்த்தை நம்மிடைய மொழி என்பதையும் தாண்டி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது என்றால் மிகையில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பின்னாலான அரசியல்கள் மிக கேவலமானதாக இருந்தாலும், தமிழுக்கு கிடைத்த இந்த அந்தஸ்து கால தாமதமானது.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

stalin felix

unread,
Jul 27, 2010, 4:27:29 AM7/27/10
to panb...@googlegroups.com
உருப்படியான இழை ஆரம்பித்திருக்கும் சுபைருக்கு  ஜே



--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/


சென்ஷி

unread,
Jul 27, 2010, 4:39:15 AM7/27/10
to panb...@googlegroups.com
அதை மிக உருப்படியாய் கொண்டு செல்ல முயற்சிக்கும் ஷைலஜாக்காவிற்கு ஜே! ஜே!!

2010/7/27 stalin felix <stalinf...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 4:39:59 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

 கைகோத்துச் சென்றனர்
கை கோர்த்துச் சென்றனர்
 
இரண்டில் எது சரி சொல்லுங்க ஏன்?

கைகோத்துச் சென்றனர் - சரியாக இருக்கும்...

சென்ஷி

unread,
Jul 27, 2010, 4:46:13 AM7/27/10
to panb...@googlegroups.com
கை கோர்த்துச்சென்றனர் - இதுதான் சரியா வரும்.

கோர்த்துச் சென்றனர். கோர்த்துச்சென்றனர். (நடுவுல இடைவெளி வருமா வராதான்னு சொல்லுங்க பார்க்கலாம்) :)

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 4:51:12 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 சென்ஷி <senshe...@gmail.com>

கை கோர்த்துச்சென்றனர் - இதுதான் சரியா வரும்.

கோர்த்துச் சென்றனர். கோர்த்துச்சென்றனர். (நடுவுல இடைவெளி வருமா வராதான்னு சொல்லுங்க பார்க்கலாம்) :)

கோர்த்து என்பது தவறு சென்ஷி...

கோத்து என்பது தான் சரி... நான் எங்கேயோ படிச்சேன்... சீக்கிரம் அதை தர்றேன்.

ஊரணி அல்லது ஊருணி எது சரி???

சென்ஷி

unread,
Jul 27, 2010, 4:53:24 AM7/27/10
to panb...@googlegroups.com
கோத்து என்பது தவறு சுபைர்.. கோர்த்து என்பது தான் சரி :)

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 4:57:08 AM7/27/10
to panb...@googlegroups.com
”தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்” என்றொரு நூலில் இருந்தது.

கோர்த்து என்பது தவறு :-)

Kavitha Kannan

unread,
Jul 27, 2010, 5:08:04 AM7/27/10
to panb...@googlegroups.com
2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஊரணி அல்லது ஊருணி எது சரி???

ஊரணி சரியா இருக்குமோ?

ஊரணி’ன்னா என்ன அங்கிள்?

Jeevaa KS

unread,
Jul 27, 2010, 5:20:27 AM7/27/10
to panb...@googlegroups.com
கோத்து தான் சரி
எடுக்கவோ கோக்கவோ
எடுக்கவோ கோர்க்கவோ இல்லை

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"

Jeevaa KS

unread,
Jul 27, 2010, 5:27:39 AM7/27/10
to panb...@googlegroups.com
பழம் = கனிந்தது= மூத்தது = பழமை

ஆகவே பழமை சரியானது தான்

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 5:27:47 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>

நீர்நிலைகளைப் பற்றி நண்பர், பதிவர் பழைமைபேசி எழுதி இருக்கும் வலைப்பதிவு இங்கே...

http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_04.html

ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை

shylaja

unread,
Jul 27, 2010, 5:38:45 AM7/27/10
to panb...@googlegroups.com
கொஞ்சம் குட்டித்தூக்கம் போட்டு வரதுக்குள்ள   ஊருணி  வந்திடிச்சா?:)  முதல்ல   எடுத்திட்ட சொல்லை  சரியா ஆரய்ந்து தீர்ப்பு சொன்னபிறகுதான் அடுத்த சொல்லுக்கு வரணும் அவசரப்படவேண்டாம் என்ன?:)
 
இப்போ  பாளையம்  பற்றி  ஓரளவு தெரிந்தது  விவரம் அல்லது விளக்கம் எனக்குத்தெரியவில்லை ஆகவே அதை  இப்போதைக்கு  ஒருபுறம் வைப்போம்  அடுத்து  இப்போ  கோர்க்கவோ  கோக்கவோ  சொல்லை  பார்க்கலாம் சரியா?

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>


2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>


2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>



ஊரணி அல்லது ஊருணி எது சரி???

ஊரணி சரியா இருக்குமோ?

ஊரணி’ன்னா என்ன அங்கிள்?

நீர்நிலைகளைப் பற்றி நண்பர், பதிவர் பழைமைபேசி எழுதி இருக்கும் வலைப்பதிவு இங்கே...

http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_04.html

ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 
 
 

Kavitha Kannan

unread,
Jul 27, 2010, 5:40:20 AM7/27/10
to panb...@googlegroups.com
2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை

நன்றி அங்கிள்

Kandavel Rajan

unread,
Jul 27, 2010, 5:43:55 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

கொஞ்சம் குட்டித்தூக்கம் போட்டு வரதுக்குள்ள   ஊருணி  வந்திடிச்சா?:)  முதல்ல   எடுத்திட்ட சொல்லை  சரியா ஆரய்ந்து தீர்ப்பு சொன்னபிறகுதான் அடுத்த சொல்லுக்கு வரணும் அவசரப்படவேண்டாம் என்ன?:)
 
இப்போ  பாளையம்  பற்றி  ஓரளவு தெரிந்தது  விவரம் அல்லது விளக்கம் எனக்குத்தெரியவில்லை ஆகவே அதை  இப்போதைக்கு  ஒருபுறம் வைப்போம்  அடுத்து  இப்போ  கோர்க்கவோ  கோக்கவோ  சொல்லை  பார்க்கலாம் சரியா?


பாளையம் என்ற சொல்லின் விளக்கம்

பாளையம் என்ற பெயரில் தமிழகத்தில் தோராயமாக ஐநூறு ஊர்கள் உள்ளன என்று சொல்லலாம். பாளையம் என்ற ஊர்கள் அனைத்தும் ஒரு குன்று, அல்லது மலை அடிவாரங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. பாளையக்காரர்கள் என்பவர்கள் போர் வீரர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது, மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்கள் முந்தைய காலங்களில் போருக்குச் செல்லும் போது, எதிரிகள் எளிதில் தங்களது படையினனத் தாக்கி விடாமலும் அதே சமயம் படையின் இருப்பிடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், இவ்வாறு மலைகளுக்கு அருகில் வீரர்களைத் தங்க வைத்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. எனவே இவ்வாறு போர் வீரர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களெல்லாம் பாளையம் என்று அழைக்கப்பட்டு, தற்போது, அம்மா பாளையம், பெரியம்மா பாளையம், கோபி செட்டி பாளையம்.. எனப் பல வகைப் பாளையங்கள் உள்ளன.

நன்றி : விக்கி


அப்போ பாளையங்கோட்டைன்னா குன்று போல் ஊள்ள கோட்டையா ?


--
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

Jeevaa KS

unread,
Jul 27, 2010, 5:52:15 AM7/27/10
to panb...@googlegroups.com
பாளையம் - குறுநாடு(கள் கொண்ட மன்னனுடையது ), சேனை, பாசறை

shylaja

unread,
Jul 27, 2010, 6:07:25 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>


2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>



ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை

நன்றி அங்கிள்

<<<<<>இது தமிழ் இழை! நன்றி மாமான்னு சொல்லணும்:)--
 
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 
 
 

shylaja

unread,
Jul 27, 2010, 6:10:34 AM7/27/10
to panb...@googlegroups.com
பாளையத்தகவல் இன்னும் இருக்கிறதா?  எடுக்கவோ  கோக்கவோ   சொல்லல்லாமா?  பிறகு மாலை சிற்றுண்டியாகிய மசால்வடை செய்ய நான் மறைந்துவிடுவேன் அதனால்தான்:)

2010/7/27 Jeevaa KS <jee...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Jeevaa KS

unread,
Jul 27, 2010, 6:16:52 AM7/27/10
to panb...@googlegroups.com
எடுக்கவோ கோக்கவோ சொல்லுங்க


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jul 27, 2010, 6:19:56 AM7/27/10
to panb...@googlegroups.com

இலக்கணத்தோடு எழுதுவதாய் நினைத்துக்கொண்டு சிலர் கோர்க்கவோ என எழுதுகிறார்கள் இது சரி இல்லை என்று தமிழ் அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்.
 
‘எடுக்கவோ கோக்கவோ என்றான்’  என்றுதான் வில்லிபாரதம் கூறுகிறது.
 
கோர்வை பிழையான சொல் கோவை பிழையற்ற சொல்.
 
உதாரணம்
 
 ஆசாரக்கோவை
இன்னொரு கோவை (ஊர் இல்ல) இருக்கே யார் சொல்லப்போறீங்கமுதல்ல?:)
2010/7/27 Jeevaa KS <jee...@gmail.com>
எடுக்கவோ கோக்கவோ சொல்லுங்க

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 6:20:14 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 Jeevaa KS <jee...@gmail.com>

எடுக்கவோ கோக்கவோ சொல்லுங்க

ஆமாம்...

Kavitha Kannan

unread,
Jul 27, 2010, 6:22:13 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>


இலக்கணத்தோடு எழுதுவதாய் நினைத்துக்கொண்டு சிலர் கோர்க்கவோ என எழுதுகிறார்கள் இது சரி இல்லை என்று தமிழ் அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்.
 
‘எடுக்கவோ கோக்கவோ என்றான்’  என்றுதான் வில்லிபாரதம் கூறுகிறது.
 
கோர்வை பிழையான சொல் கோவை பிழையற்ற சொல்.
 
உதாரணம்
 
 ஆசாரக்கோவை
இன்னொரு கோவை (ஊர் இல்ல) இருக்கே யார் சொல்லப்போறீங்கமுதல்ல?:)

கோவைப்பழம் இருக்கே? 

shylaja

unread,
Jul 27, 2010, 6:23:09 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>


கோவைப்பழம் இருக்கே? <<<>>>>>>>>>>>தங்காய்  ! அத்திக்க்காய் காயாதே!  தமிழுக்காய் காய்!

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

VJagadeesh

unread,
Jul 27, 2010, 6:18:01 AM7/27/10
to panb...@googlegroups.com

கோவைப்பழமும் கோசாப்பழமும் அண்ணன் தம்பிகளா \ அக்கா தங்கைகளா?

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Kavitha Kannan

2010/7/27 shylaja <shyl...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 6:25:16 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>


இலக்கணத்தோடு எழுதுவதாய் நினைத்துக்கொண்டு சிலர் கோர்க்கவோ என எழுதுகிறார்கள் இது சரி இல்லை என்று தமிழ் அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்.
 
‘எடுக்கவோ கோக்கவோ என்றான்’  என்றுதான் வில்லிபாரதம் கூறுகிறது.
 
கோர்வை பிழையான சொல் கோவை பிழையற்ற சொல்.
 
உதாரணம்
 
 ஆசாரக்கோவை
இன்னொரு கோவை (ஊர் இல்ல) இருக்கே யார் சொல்லப்போறீங்கமுதல்ல?:)

மலை???

shylaja

unread,
Jul 27, 2010, 6:26:21 AM7/27/10
to panb...@googlegroups.com
இல்லை சுபைர்!  கோவை என்று முடியும் ஒரு நூலை சொல்றேன்

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

shylaja

unread,
Jul 27, 2010, 6:34:05 AM7/27/10
to panb...@googlegroups.com
நான்மணிக்கோவை!

2010/7/27 shylaja <shyl...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 6:37:08 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

இல்லை சுபைர்!  கோவை என்று முடியும் ஒரு நூலை சொல்றேன்

அகப்பொருட்கோவை, வருக்கக் கோவை, மும்மணிக்கோவை :))

Kandavel Rajan

unread,
Jul 27, 2010, 6:42:09 AM7/27/10
to panb...@googlegroups.com

தமிழ் இலக்கியத்தில் கோவை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அகப்பொருள் பாடல்கள் தொகை நூல்களில் மிகுதியாக இடம் பெற்றுவிளங்கியபோதும், துறைகள் எல்லாம் தேர்ந்து, நூல் ஒன்று புனைய வேண்டும் என்ற அவாவே "கோவை" இலக்கியம் தோன்றக் காரணம் எனலாம்.


ஐந்திணை நெறி வழுவாது அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம். இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன.

முதலில் தோன்றிய கோவை இலக்கியம், திருக்கோவையார்.


அதைத் தொடர்ந்து பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவை, அம்பிகாபதிக் கோவை, குளத்தூர் கோவை முதலியன எழுந்தன.


"நாணிக்கண் புதைத்தல்" என்ற ஒரே துறையை அடிப்படையாகக் கொண்டு "ஒரு துறைக்கோவை" என்னும் நூல் பின்பு தோன்றியது.

[தொகு]

Jeevaa KS

unread,
Jul 27, 2010, 8:10:38 AM7/27/10
to panb...@googlegroups.com
சிதம்பர மும்மணிக் கோவை
கலைசைக்கோவை.
மதுரைக் கோவை
பண்டார மும்மணிக்கோவை

Balaji Baskaran

unread,
Jul 27, 2010, 8:24:38 AM7/27/10
to panb...@googlegroups.com
நல்ல இழை ஆரம்பித்தாய் சுபைர்.
 
மகிழ்ச்சி.
 
நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.
 
நன்றி!
 

--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!

அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!

தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!

http://balaphotoblog.blogspot.com/

Kandavel Rajan

unread,
Jul 27, 2010, 8:44:35 AM7/27/10
to panb...@googlegroups.com


சொற்பிழைகளும் திருத்தங்களும் 

ஓம். 

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~ 
சொற்பிழைகளும் திருத்தங்களும் 
*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~ 
நமது பேச்சு வழக்கில் பல சொற்கள் பிழைபட்டனவாகப் பேசப்படுகின்றன. அச் சொற்களின் 
உருவங்களும் சிதைந்து காணப்படுகின்றன. பேச்சு வழக்கிலுள்ள பிழைபட்ட சொற்களை 
எழுத்து வழக்கிற்கு அப்படியே கொண்டு வருதல் முறையன்று. 

                        திருத்தமும் பொருத்தமும் 

    திருத்தம                           பொருத்தம் 

அக்கிள்                            அக்குள் 


அகண்ட                            அகன்ற 


அடமழை                        அடைமழை 


அண்ணாக்கயிறு     அரைஞாண் கயிறு 


அதுகள்                            அவை 


அருவாமணை            அரிவாள் மணை 


அருகாமை                    அருகில் 


அவைகள்                        அவை 


அவைகளை                    அவற்றை 


ஆத்துக்கு                        அகத்துக்கு 

இடைபோடு                    எடைபோடு 

இத்துப் போதல்            இற்றுப் போதல் 

இரும்பல்                        இருமல் 

உசிர்                                    உயிர் 

உடமை                               உடைமை 

உடம்படிக்கை                உடன்படிக்கை 

உத்திரவு                            உத்தரவு 

ஊரணி                               ஊருணி 

எழவு                                    இழவு 

எண்ணை                        எண்ணெய் 

ஒட்டறை                        ஒட்டடை 

ஒண்ணு                            ஒன்று 

ஒருவள்                        ஒருத்தி 

கண்ணாலம்                கல்யாணம் 

கயறு                            கயிறு 

கத்திரிக் கோல்        கத்தரிக்கோல் 

கட்டிடம்                        கட்டடம் 

கம்பிளி                            கம்பளி 

கம்மனாட்டி                கைம்பெண்டாட்டி 

கருவேப்பிலை            கறிவேப்பிலை 

காத்து                                காற்று 

கிடா                                    கடா 

குடுத்து                            கொடுத்து 

குதவளை                    குரல்வளை 

கெடிகாரம்                    கடிகாரம் 

கேழ்வி                        கேள்வி 

கோடாலி                    கோடரி 

கோர்த்து                    கோத்து 

சக்காளத்தி                சக்களத்தி 

சமயல்                        சமையல் 

சிகப்பு                            சிவப்பு 

சிலவு                            செலவு 

சுவற்றில்                    சுவரில் 

செரங்கு                    சிரங்கு 

தடுமாட்டம்            தடுமாற்றம் 

தீவாளி                    தீபாவளி 

துகையல்                துவையல் 

துகை                        தொகை 

துடங்குதல்            தொடங்குதல் 

துடை                        தொடை 

துறவுகோல்            திறவுகோல் 

தெண்டம்                தண்டம் 

தொந்திரவு            தொந்தரவு 

தொப்புள்                கொப்பூழ் 

நஞ்சை                    நன்செய் 

நாத்தம்                    நாற்றம் 

நாகரீகம்                நாகரிகம் 

நிலமை                    நிலைமை 

நோம்பு                    நோன்பு 

பட்னி                        பட்டினி 

புடவை                    புடைவை 

புட்டு                         பிட்டு 

புஞ்செய்                   புன்செய் 

பாவக்காய்            பாகற்கய் 

பொம்பிளை            பெண்பிள்ளை 

மனவி                    மனைவி 

மானம்                    வானம் 

முந்தாணி            முந்தானை 

முழுங்கு                விழுங்கு 

மெனக்கிட்டு        வினைகெட்டு 

நொம்ப                    நிரம்ப 

வலது கை            வலக்கை 

விரை                        விதை 

விக்கும்                    விற்கும் 

வெண்ணை            வெண்ணெய் 

வெய்யில்                வெயில் 

வேணும்                    வேண்டும் 

விடியகாலம்        விடியற்காலம். 

வைக்கல்                வைக்கோல் 

-=-=-=-=-=-=-=-=-=-=-=-= 
நன்றி: பேராசிரியர்  மரைக்காயர் 
கட்டுரையிலிருந்து. 
வெ.சுப்பிரமணியன் ஓம். 


http://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/a8795ac8d67c4d0b?pli=1

Kandavel Rajan

unread,
Jul 27, 2010, 8:54:09 AM7/27/10
to panb...@googlegroups.com
2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>


2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>


2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>



ஊரணி அல்லது ஊருணி எது சரி???

ஊரணி சரியா இருக்குமோ?

ஊரணி’ன்னா என்ன அங்கிள்?

நீர்நிலைகளைப் பற்றி நண்பர், பதிவர் பழைமைபேசி எழுதி இருக்கும் வலைப்பதிவு இங்கே...

http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_04.html

ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை



ஊருணி, ஊரணி இரண்டு சொற்களும் ஒன்றையே குறிக்கும். ஊருணி என்ற சொல்
எழுத்துவழக்கிலும் இலக்கியங்களிலும் உண்டு. ஊரணி பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

“ஊருணி நீர்நிறைந்தவற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு” – திருக்குறள்

ஊறணி என்றும் ஒரு சொல் உண்டு. அது நீரூற்றையோ, நீர் ஊரும் நிலத்தையோ, சதுப்பு நிலங்களையோ குறிக்கிறது.

துரை.ந.உ

unread,
Jul 27, 2010, 9:52:33 AM7/27/10
to panb...@googlegroups.com
ஆகா , மிகவும் பயனுள்ள இழை
 
எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
 
ஆர்வலர்களே !  தொடருங்கள்

 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 10:02:37 AM7/27/10
to panb...@googlegroups.com
”பைய போ” ... அப்படின்னா மெதுவா போன்னு அர்த்தம்.
”பைய வா” ... அப்படின்னா மெதுவா வான்னு அர்த்தம்.

இது இப்பவும் மதுரை பேச்சு வழக்கு...

இதை வள்ளுவர் எழுதி இருக்காருப்பா...

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

காதல் கவிதை எழுதணும்னா ஐயனைப் படிச்சா போதும்னு நினைக்கிறேன் :-))


2010/7/27 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

shylaja

unread,
Jul 27, 2010, 11:18:04 AM7/27/10
to panb...@googlegroups.com
பையத்துயின்ற பரமனடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்கிற ஆண்டாள் பாடலுக்கு பொருள் எப்படி வருகிறதென பார்க்கவேண்டும்.

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
”பைய போ” ... அப்படின்னா மெதுவா போன்னு அர்த்தம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 
 
 

Kandavel Rajan

unread,
Jul 27, 2010, 1:00:37 PM7/27/10
to panb...@googlegroups.com

பைய பைய

'என்ன சொல்ற குமரன்? பைய பையன்னா என்ன அருத்தம்?'

'அதுவா? மெதுவா மெதுவான்னு சொன்னேன்.'

'அப்படி சொல்லு. அப்படி சொல்லியிருந்தா தெளிவா புரியும்ல. உங்க ஊரு பேச்சுவழக்கா அது?'

'அப்பிடியும் சொல்லலாம். எங்க ஊருல மட்டும் இல்லை. தெக்கால எல்லா ஊருலயும் அப்படி சொல்லுவாய்ங்க.'

'இப்படி வட்டார மொழியில பேசுனா எனக்கெல்லாம் புரியறதில்லை.'

'இது வட்டார மொழின்னு சொல்ல முடியாது கண்ணா. உனக்குத் தெரியலைன்னு சொல்லு. இது சங்ககாலத்துல இருந்து இருக்கிறத் தமிழ்ச் சொல் தான்.'

'இதான கூடாது. நானும் பொறந்ததுல இருந்து தமிழ்நாட்டுல தான் இருக்கேன். தமிழ்ச் சொல்ன்னா நான் கேள்விபடாமலா இருப்பேன்? நீ வீட்டுலயே தமிழ் பேசறதில்லை. நீ எல்லாம் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வந்துட்ட.'

'யப்பா. அந்த விவகாரத்துக்கே போவேணாம். வீட்டுல வேற மொழி பேசினாலும் எனக்குத் தமிழ் தெரியுமா தெரியாதாங்கற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் செஞ்சுக்கலாம். 'பைய'ங்கற சொல் பழைய தமிழ்ச்சொல்ங்கறத மட்டும் சொல்லிக்கிறேன்.'

'சரி. சொல்லேன் கேட்டுக்கறேன்.'

'குறுந்தொகைன்னு ஒரு பழைய சங்ககால இலக்கியம் இருக்கு. இதுல ஒவ்வொரு திணையிலையும் ஒரு தொடர் பாடலா பாடியிருக்காங்க. அதுல பாலைத்திணையில பாலைக்கலி பாடிய பெருங்கொடுங்கோன்ங்கறவர் சொல்றதக் கேளு

செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று...

நல்லதும் தீயதும் சொல்லி அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டேமெதுவாக, இளைப்பாறுதலாக, மென்மையாக அணைத்து மகிழ்ந்திருந்த அந்தப் பொழுதில்...'

'ம்ம்ம். நல்லா தான் சொல்லியிருக்காரு. பைய முயங்கியன்னா மென்மையா அணைத்துன்னு பொருளா? அருமை. அருமை.'

'ஆமாம் கண்ணா. பையங்கற சொல் அருமையாத் தான் தென்படுது.சிறப்பான சொல். பார்ப்பதற்கும் அரிய சொல்.'

'ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொன்னா போதுமா? இன்னும் ரெண்டு மூனு எடுத்துவுடு.'

'சரி. ஒவ்வொன்னா சொல்றேன் கேளு.

அசையியற்கு உண்டு ஆண்டோர் எ ஏர் யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.

யாரு இவ்வளவு அழகா பாடியிருப்பாரு சொல்லு? நம்ம ஐயன் தான். இன்பத்துப்பால்ல குறிப்பறிதல் அதிகாரத்துல வரும். பொருளை நம்ம திருக்குறள் வாத்தியார் மயிலை மன்னாருக்கிட்ட கேட்டுக்கிட்டு எஸ்.கே. வந்து சொல்றேன்னு சொல்லியிருக்காரு.'

'மயிலை மன்னாரா? படா குஜாலான பேர்வழியாச்சே அவரு.'

'கண்ணா. இப்ப நீ பேசின பாரு. அது தான் வட்டார வழக்கு. நான் சொன்னதை வட்டார வழக்குன்னு சொல்லிட்டு நீயே வட்டார மொழியில பேசறியே?'

'ஹிஹி. மயிலை மன்னாருன்னவுடனே அந்த பாசை தானா வந்துருதுப்பா. என்ன பண்றது?'.

'சரி. சரி. அடுத்த எடுத்துக்காட்டுக்கு போவோம். எனக்கு நேரமாவுது.

நாம படிச்சோமே கிருஷ்ணன்கோவில்; அது பக்கத்துல இருக்கிற வில்லிபுத்தூருல பொறந்த நம்ம அக்கா கோதை சொன்னது தான் உனக்கும் தெரியுமே.

பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி

இதுக்குப் பொருளை இராகவன் பதிவுல போயி பாத்துக்க வேண்டியது தான்.

அடுத்து நம்ம பேயாழ்வார் சொல்லுறதைக் கேளு.

பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்ம்மையே - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.

வெண்பா தான். பதம் பிரிச்சுப் போட்டதால இலக்கணம் சரியில்லாதது போல நம்ம கொத்தனாருக்குத் தோணலாம்.'

'நீ பதம் பிரிச்சுச் சொன்னதுனால பாதி புரிஞ்சிப் போச்சு. இன்னொரு தடவை நிறுத்தி நிதானமா சொன்னேன்னு வையி. முழுசாப் புரிஞ்சிரும்'.

'சரி. இன்னொரு தடவை சொல்றேன். பொருள் என்னன்னு சொல்லு.

பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்ம்மையே - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.'

'பொருள் சொல்றேன் கேட்டுக்க.

சின்னப் பையனைப் போல ஆலமரத்து இலையில மெதுவா, இளைப்பாறுதலா, தூங்கிக்கிட்டே உலகமெல்லாம் அன்னைக்கி ஒரு நாள் உண்டவனே! உண்மையானவனே! மகாலக்ஷ்மியோட புருஷனே! மந்தர மலையை மத்தா வச்சுக்கிட்டு பாற்கடலைக் கடைஞ்சு வான் அமுதத்தை தேவர்களுக்கு அன்று நீ தந்தாய். பொருள் சரியா இருக்கா?'

'கண்ணபிரான் சொன்னா சரியா இல்லாம எப்படி? பாலன்னா சின்ன பையன் தான். ஆனா இங்கே குழந்தைன்னு சொன்னா பொருந்தி வரும். மத்தபடி கலக்கலா பொருள் சொல்லிட்ட'

'சரி. அடுத்த எடுத்துக்காட்டு எங்கே?'

'இதோ இன்னொரு பாசுரம். இது நம்ம திருட்டுப்பயலே ஆழ்வார் பாடுனது'.

'திருட்டுப் பயலே ஆழ்வாரா? யாருப்பா அது?'

'நம்மை திருமங்கையாழ்வார் தான்'.

'ஓ. அவரா? அவர் திருட்டுப்பயலே தான். பாசுரத்தைச் சொல்லு'

'கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே'.

'நில்லு நில்லு நில்லு. இந்தப் பாசுரத்தையும் பதம் பிரிச்சுத் தானே சொன்ன?'

'ஆமாம்'.

'ஆனா எனக்குப் புரியலையே'.

'எப்படி புரியும்? புரியாதுல்ல. நாம எப்பவும் பேசிக்கிட்டு இருப்போமே அதைப் பத்தி தான் ஆழ்வாரும் சொல்றார். நான் சொல்றதுக்கு சாதகமா அவர் சொல்றதால உனக்குப் புரிய மாட்டேங்குது.'

'அப்படியா? அப்படி என்ன சொல்றாரு ஆழ்வார்?'

'சாமியைச் சின்ன வயசுல இருந்தே கும்புட்டுக்கோங்க. வயசான பின்னாடி உடல் உபத்திரவம் தாங்க முடியாம சாமி கும்புட முடியாதுன்னு சொல்றாரு'.
'அதானா? கடைசி காலத்துல சாமியைக் கும்புட்டுக்கலாம். இப்ப எதுக்குன்னு நான் கேட்டுக்கிட்டு இருப்பேனே. அதைச் சொல்றியா?'

'ஆமாம். ஆழ்வார் என்ன சொல்றார் பாத்தியா?

கண் பார்வையும் கெட்டுப் போயி, கண்ணுல பீளை, வாயில நுரை எல்லாம் தள்ளி கஷ்டப்படறப்ப, பேசுறாங்களா பாடுறாங்களான்னு தெரியாத அளவுல இனிமையான குரல் கொண்ட சின்னப் பொண்ணுங்க, தாத்தா மெதுவா நடங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி, இந்த ஆகாயம், மலை, வேதம், வேள்வின்னு எல்லாமே ஆன பெருமாள் இருக்கும் திருநறையூர் சென்று அவனைக் கும்புடலாம். எழுந்து வா என் நெஞ்சமேங்கறார்'.

'நல்ல பாட்டு தான்பூ. இன்னிக்கே நானும் கோவிலுக்குப் போவேன் போலிருக்கே.'

'கோவிலுக்குத் தான் போகணும்ன்னு இல்லை கண்ணன். இங்கன இருந்தே சாமி கும்புடலாம்'.

'ஆமாமா.'

Kandavel Rajan

unread,
Jul 27, 2010, 1:16:22 PM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

பையத்துயின்ற பரமனடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்கிற ஆண்டாள் பாடலுக்கு பொருள் எப்படி வருகிறதென பார்க்கவேண்டும்.


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி,


மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்.



ஆண்கள் எல்லாம் வெளியே கிளம்பணும்-ன்னா, மொதல்ல என்ன செய்வாங்க? = கூகுள் மேப்! பாக்கெட்டில் பர்ஸ்!
பெண்கள் எல்லாம் வெளியே கிளம்பணும்-ன்னா, மொதல்ல என்ன செய்வாங்க? = அலங்காரம்! அலங்காரம்! அலங்காரம்! :)

அதுக்கு வேட்டு வைக்கிறாள் கோதை! மை இட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்! ஏன்? அவளே ஒரு அழகான பெண் தானே! ஆண்டாள் கொண்டை எம்புட்டு ஃபேமஸ்? ஏன் அலங்காரம் வேண்டாம்-னு சொல்லுறா?
புற அலங்காரத்தில் அதிக நேரம் செலவழிக்காமல், அக அலங்காரம் செய்து பார்க்கச் சொல்லுறா! அதான்!

அலங்காரம் எப்பமே மத்தவங்க பாத்து வியக்கணும்-னு தானே செஞ்சிக்கறீங்க? சரி தான்! தப்பில்லை! ஆனா அலங்காரத்தை உங்களுக்காகவும் செஞ்சிக்கலாமே?-ன்னு கேக்குறா!
* மையிட்டு எழுதோம் = கண்ணில் மை பூசிக்காம, மை வண்ணனைப் பூசிப்போம்!
* மலரிட்டு நாம் முடியோம் = இதயத்தில் ஒரு துளசி தளம் போதாதா! ஜென்ம ஜென்மத்துக்கும் மணக்குமே!

மத்தவங்களுக்காக வருஷம் முழுக்க அலங்காரம் செஞ்சிக்கறீங்க! மார்கழியிலாவது, நோன்பிலாவது, உங்களுக்காகவும் அலங்காரம் செஞ்சிக்குங்க! உங்களை நீங்களே மதிச்சாத் தானே! - என்று சொல்கிறாள்!
இதோ கோதை தரும் அலங்கார டிப்ஸ்..............


நெய்யுண்ணோம் பாலுண்ணோம் = நெய்யும் பாலும் ஆயர்களின் அடிப்படை உணவு! அதையே உண்ண மாட்டோம், நோன்பு முடியும் வரை-ன்னு சொல்லுறாளே! ஏன்?
நெய் சூடு! பால் குளிர்ச்சி! ரெண்டும் கலந்து கலந்து அடிச்சா, நாம மிதப்புல தான் இருப்போம்! ஒன்னும் ஏறாது! அதான் முதலில் உடலைத் தயார் பண்ணுறா கோதை! :)

(மேலும், பாலைக் கறந்து, கடைந்து கடைந்து தயிராக்கி, வெண்ணையாக்கி, உருக்கி உருக்கி நெய்யாக்கி...பொழுது விடிஞ்சிரும்! அப்புறம் எங்க நோன்பு நோற்பது?
அதான் ஆயர் பொண்ணுங்க ஒரு மாசத்துக்கு அதெல்லாம் தள்ளி வைக்குதுங்க! கீரை போன்ற மற்ற உணவைச் சாப்பிடுதுங்க! நாமும் அதனால் தான் மார்கழியில் கல்யாணம் போன்றவற்றைத் தள்ளி வைக்கிறோம்! நோன்புக்கு நேரம் ஒதுக்கணுமே-ன்னு தான்! ஆனா நோற்கிறோமா? :))

நாள் காலே நீராடி = சிற்றஞ் சிறு காலையிலேயே சுளீர்-ன்னு நீராடினா ஒரு சுகம்! லிரில் சோப் விளம்பரம் போல அன்னிக்கு ஃபுல்லா ஒரு ஃப்ரெஷ்னஸ்! குளிச்சாப் பாத்தாத் தான் தெரியும்! அதுனால நான் சொல்லப் போவதில்லை! :)
ஆனா நாளைத் துவக்கும் போதே புத்துணர்ச்சியா துவங்கிட்டா, அது யோகா மாதிரி தான்! ஆபீஸ்-ல பிரச்சனை-ன்னாலும் சிரிச்சிக்கிட்டே எதிர் கொள்வோம்! அதான் அடுத்த முக்கியமான நீதிகளைச் சொல்லு முன்னர், நம்மை ஃப்ரெஷ் ஆக்கிடறா ஆண்டாள்!

செய்யாதன செய்யோம் = எது செய்யத் தகாதது-ன்னு அடி மனசுக்கு நல்லாவே தெரியும்! ஆனா மேல் மனசு தான் வலிந்து வலிந்து நியாயம் கற்பிச்சிக்கும்! ஹிஹி! ஏன்?
ஏன்னா மேல் மனசில் நாம இருக்கோம்! அடி மனசில் அவன் இருக்கான் (அந்தர்யாமி, உள்ளத்துள்ளான்)!
அதனால் எப்பவாச்சும் ஒரு முறையாவது, அடி மனது என்ன தான் சொல்லுது-ன்னு காது கொடுத்தாச்சும் கேப்போம்! அது செய்யாதே-ன்னு சொல்வதைச் செய்யாம இருக்க முயற்சிப்போம்!


* தீக் குறளை சென்று ஓதோம்!
ஆகா! திருக்குறளை ஓதாதே-ங்கிறாளா கோதை? அவளும் ஒரு தமிழச்சியா? சேச்சே! ஹிஹி! அவசரப்பட்டு பதிவு கிதிவு போட்டுறாதீங்க! பொருள் முழுக்கத் தெரியலைன்னாலும், என்ன சொல்ல வரா-ன்னு கொஞ்சமாச்சும் தெளிவு படுத்திக்கிட்டு அப்புறம் பதிவு போடலாம்! மேல் மனசுப் பதிவை விட, அடி மனசுப் பதிவு தான் உண்மை பேசும்! :)

குறளை = குறுகிய
* பாக்களில் குறுகிய வடிவம் உள்ள பா = குறள் பா!
* அவதாரங்களில் குறுகிய வடிவம் உள்ளவன் = குறள் அப்பன் (வாமனன்)!
* அதே போல் குணங்களில், குறுகிய குணம் = குறளை-கோள் சொல்லுதல்!

குறளி என்பது பாண்டி நாட்டு வட்டார வழக்கு! குறடு-ன்னு எங்கூர்ல சொல்லுவாய்ங்க! திண்ணைக்கும் குறடு-ன்னு ஒரு பேரு! நம்ம வீட்டை விட திண்ணை குறுகலா இருக்குல்ல! அதான் குறடு! இப்படி ஒரே வேர்ச்சொல்லில் பல முகம் காட்டவல்ல பெருமை செந்தமிழுக்கே உண்டு!
கோள் சொல்லுதல் மிகவும் கெட்ட குணம்!
சனிக் கோள் கூட ஏழரை ஆண்டில் ஓடி விடும்!
ஆனால் இந்தக் கோள் மனசுக்குள் வந்து உட்கார்ந்து விட்டால்...?


ஒருவரின் வளர்ச்சியை எதிர்க்கவும் துப்பில்லை! வளரவும் முயற்சி இல்லை!
இப்படித் தன்னையும் தாழ்த்தி, அவரையும் தாழ்த்தி, யாருக்குமே எந்தப் பயனும் இல்லாமல் போவதற்கு முதல் படி தான் இந்தக் "கோள்" சொல்லுதல்!
அவர் சொல்லாதவற்றை எல்லாம் சொன்னதாக ஏற்றிச் சொல்லுதல்!
உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசல்! இந்த உறவு நம்முள் கலவாமை வேண்டும்!

"கோள்" சொல்பவரைக் கோள்கள் எல்லாம் சூழ்ந்து வாட்டும்! கோளறு பதிகங்களும் கைவிட்டு விடும்! அதான் "செய்யாதன செய்யோம்" என்று பொதுவாகச் சொன்ன ஆண்டாள், இதை மட்டும் "கோளைக் கொள்ளாதே"-ன்னு குறிப்பிட்டுச் சொல்கிறாள்!

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி = ஐயம்= நம்மை ஒத்தவர்களுக்குக் கொடுப்பது!
பிச்சை= நம்மை விட மேல் நிலையில் உள்ள (துறவிகள்)/ கீழ் நிலையில் உள்ள இரப்பவர்களுக்குக் கொடுப்பது! ஆக மொத்தம் கொடுக்கணும்!
அன்பு வேணும் வேணும்-ன்னா அன்பு வராது!
அன்பைக் "கொடுத்தா" அன்பு "வரும்"!


அதனால் ஆந்தனையும், ஆகும் தனையும், முடிஞ்ச வரை, கொடுக்கவும் செய்வோம்! நல்ல செயலைக் கொடுக்கலீன்னா கூட, நல்ல சொல்லையாவது கொடுப்போம்!


இவ்வளவு தான் அக அலங்கார டிப்ஸ்! அக-அலங்காரம் செஞ்சிக்கிட்டா அக(அல)ங்காரம் அகன்று விடும்!
உய்யும் ஆறு என்று எண்ணி = இது நமக்கு உய்யும் வழி!
உகந்து = அதனால் விதியே-ன்னு (நோன்புக்காக மட்டும்) செய்யாது, உகந்து செய்வோம்!
ஏல்-ஓர் எம் பாவாய் = பொண்ணுங்களா (எம் பாவாய்), என்ன ஓக்கேவா? :)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு, செய்யும் கிரிசைகள் கேளீரோ? = உலக மக்களே, எங்கள் நோன்புக்கு வேண்டிய சமாச்சாரங்களை (கிரியை) நாங்கள் சொல்லிட்டோம்! எங்கள் வார்த்தையைக் கேளீரோ? (கேட்டு, உதவிகளும் செய்யீரோ?)

கிரிசை = கிரியை = கர்ம யோகம் = என்ன அழகா கிரிசை-ன்னு நாட்டுப்புறத் தமிழா ஆக்கிட்டா பாருங்க இந்தப் பொண்ணு? கண்ணன் கீதையில் கர்ம யோகம் பற்றிக் கத்தோ கத்து-ன்னு கத்திட்டான்! இவளோ கிரிசை-ன்னு ஒரே போடா போட்டுட்டா! :))

ஆன்மீகத்துக்கு வாய்ப் பேச்சு மட்டும் போதாது! கிரிசையும் வேணும்! செயலும் செய்யணும்!
* பக்தி என்னும் சோறு!
* அது கூட ஞானம், கர்மம் (அனுஷ்டானம்) ரெண்டுமே தொட்டுக்கணும்!
ஆனால் அதையே பிடிச்சித் தொங்கிக்கிட்டு இருக்காம, நீயே கதி! சரணா கதி! அவ்ளோ தான்! ஸோ சிம்ப்பிள்! :))

பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் = பாற்கடல் பீச்சில் நைசாத் தூங்கறானாம் அவன்! பைய = மெல்ல
(தென்பாண்டித் தமிழ் தான் திருப்பாவை முழுக்க...பெரும் புலவர்கள் எல்லாம் யாப்பு செய்ய, அவர்களுக்கு ஆண்டாள் ஆப்பு செய்கிறாள் :)
அவள் அடியொற்றித் தான் அடியேனும், இப்படி "லோக்கலா" எழுதறேன்! எங்காச்சும் தவறாப் பட்டாக்கா, அன்பர்களான நீங்கள் உடனே ஆண்டாளைச் சுட்டிக் காட்டுங்கப்பா :)

பையத் துயின்ற "பரமன்" = அவன் தான் "பரமன்"! "பரம்"பொருள்! "பர"ப்பிரும்மம்!
நாராயண "பரோ" தேவம், விஸ்வம் நாராயணம்!
விஸ்வம் நாராயணம் தேவம்! அக்ஷரம் "பரமம்" பதம்!
அக்ஷரம் "பரமம்" பதம் = அகர "முதல" எழுத்தெல்லாம்....

* இப்படி தமிழர் மறையும், வட வேதமும், ஒருங்கே சொன்னதை ஆண்டாள் சொல்ல,
* ஆண்டாள் சொன்னதையே, மூன்று ஆச்சார்யர்களும் (சங்கரர், இராமானுசர், மாத்வர்) "பரம்"பொருளாகச் சொல்கிறார்கள்.

பரமன் "அடி" பாடி = அவனைப் பாடாது, அவன் "அடி"யைப் பாடுவோம்!
ஏன்னா அவனைக் காப்பதே அவன் அடிகள் தான்!
நாம் தான், அவன் திருவடிகளை, நெத்தியில் (நாமம்) போட்டுக்கறோம்-ன்னா,
அவனும் தன் திருவடிகளை, தானே நெத்தியில் போட்டுக்கறான்! :)

ஏன் இப்படி? பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு...உன் செவ் "அடி", செவ்வித் திருக்காப்பு! 

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

http://madhavipanthal.blogspot.com/2008/12/02.html

Gokul Kumaran

unread,
Jul 27, 2010, 2:01:30 PM7/27/10
to panb...@googlegroups.com
2010/7/27 Kandavel Rajan <kandav...@gmail.com>

கண் பார்வையும் கெட்டுப் போயி, கண்ணுல பீளை, வாயில நுரை எல்லாம் தள்ளி கஷ்டப்படறப்ப, பேசுறாங்களா பாடுறாங்களான்னு தெரியாத அளவுல இனிமையான குரல் கொண்ட சின்னப் பொண்ணுங்க, தாத்தா மெதுவா நடங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி, இந்த ஆகாயம், மலை, வேதம், வேள்வின்னு எல்லாமே ஆன பெருமாள் இருக்கும் திருநறையூர் சென்று அவனைக் கும்புடலாம். எழுந்து வா என் நெஞ்சமேங்கறார்'.



அருமையான பதிவு. கந்தவேல். நன்றி.


--
கோகுல்குமரன்

உள்ளதைச் சொல்வேன்..சொன்னதைச் செய்வேன்
வேறொன்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை..வார்த்தையில் மறைக்கும்
கபடம் தெரியாது


Kandavel Rajan

unread,
Jul 27, 2010, 2:10:00 PM7/27/10
to panb...@googlegroups.com
2010/7/27 Gokul Kumaran <gokul...@gmail.com>

2010/7/27 Kandavel Rajan <kandav...@gmail.com>

பைய பைய


கண் பார்வையும் கெட்டுப் போயி, கண்ணுல பீளை, வாயில நுரை எல்லாம் தள்ளி கஷ்டப்படறப்ப, பேசுறாங்களா பாடுறாங்களான்னு தெரியாத அளவுல இனிமையான குரல் கொண்ட சின்னப் பொண்ணுங்க, தாத்தா மெதுவா நடங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி, இந்த ஆகாயம், மலை, வேதம், வேள்வின்னு எல்லாமே ஆன பெருமாள் இருக்கும் திருநறையூர் சென்று அவனைக் கும்புடலாம். எழுந்து வா என் நெஞ்சமேங்கறார்'.



அருமையான பதிவு. கந்தவேல். நன்றி.




ஓ... ஸ்ரீவில்லிப்புத்தூர் உங்க ஊரு.....

நன்றி ஜீ......


shylaja

unread,
Jul 27, 2010, 9:25:53 PM7/27/10
to panb...@googlegroups.com
கந்தவேல் அள்ளித்தந்துவிட்டார்!  நன்றி. கோகுலுக்கும்.
பைநாகப்பாய்  என்று  பாசுரத்தில் வரும் அதையும் என்னன்னு பார்க்கணும்.

2010/7/27 Kandavel Rajan <kandav...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

shylaja

unread,
Jul 27, 2010, 11:45:59 PM7/27/10
to panb...@googlegroups.com
நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான  சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ்  மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

2010/7/28 shylaja <shyl...@gmail.com>

Kandavel Rajan

unread,
Jul 27, 2010, 11:57:23 PM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/28 shylaja <shyl...@gmail.com>

நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான  சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ்  மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.


பரிபாடல்

(எட்டுத்தொகை - சங்க இலக்கியங்கள்)


13. திருமால்

பாடியவர் :: நல்லெழுதியார்
இசையமைத்தவர் :: பெயர் அறியப்படவில்லை
பண் :: நோதிறம்
 

கடவுள் வாழ்த்து

திருமாலைத் தொழுவார் பெறும் பேறு

பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்--
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால்,
30

திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்--
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி
35



Kandavel Rajan

unread,
Jul 28, 2010, 12:16:55 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 Kandavel Rajan <kandav...@gmail.com>



2010/7/28 shylaja <shyl...@gmail.com>
நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான  சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ்  மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.



3. கைகேயி சூழ்ச்சிப் படலம்

(கம்ப இராமாயணம் - அயோத்தியா காண்டம்)

   


கூனி சென்றபின் கைகேயி தன் கோலம் அழித்தல்

கூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்;
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை, 
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,
தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.
1

விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்
கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள்.
2

தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள்.
3




Ahamed Zubair A

unread,
Jul 28, 2010, 12:24:11 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 shylaja <shyl...@gmail.com>

நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான  சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ்  மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

நாநிலம் தான் சரியென தோன்றுகிறது...

Kandavel Rajan

unread,
Jul 28, 2010, 12:35:29 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>



2010/7/28 shylaja <shyl...@gmail.com>
நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான  சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ்  மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

நாநிலம் தான் சரியென தோன்றுகிறது...

திருவாசகம்

 படி உறப் பயின்ற பாவக போற்றி 
            அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி 
    நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் 
            பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி 
    ஒழவற நிறைந்த ஒருவ போற்றி 
            செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 
    கழு நீர் மாலைக் கடவுள் போற்றி 
            தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி 
    பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் 
            குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220 

Ahamed Zubair A

unread,
Jul 28, 2010, 12:38:05 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 Kandavel Rajan <kandav...@gmail.com>



2010/7/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>


2010/7/28 shylaja <shyl...@gmail.com>
நானிலம், நாநிலம்.... இதில் எது சரியான  சொல்? நாநிலம்தான் என்கிறார் ஜீவ்ஸ்  மற்றவர்கள் கருத்து தெரிந்ததும் தமிழ் அறிஞர் கூறியதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

நாநிலம் தான் சரியென தோன்றுகிறது...

திருவாசகம்

 படி உறப் பயின்ற பாவக போற்றி 
            அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி 
    நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் 
            பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி 
    ஒழவற நிறைந்த ஒருவ போற்றி 
            செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 
    கழு நீர் மாலைக் கடவுள் போற்றி 
            தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி 
    பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் 
            குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220


நால்வகை நிலம் என்பது நாநிலம் என திரிந்திருக்க வேண்டும். நானிலம் என்பது வேறு பொருள் தரலாம்.

 

shylaja

unread,
Jul 28, 2010, 12:48:46 AM7/28/10
to panb...@googlegroups.com
நால்வகை நிலங்கள் அதாவது குறிஞ்சி முல்லை  மருதம் நெய்தல்  என்று நால்வகை நிலங்களால் ஆனது  இந்த உலகம் .ஐந்தாவது நிலமான பாலை தனி நிலம் இல்லையாம்  ’.முல்லையும் குறிஞ்சியும்  முறைமையின் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’   என்கிறது ஒரு பாடல்வரி.
 
மலையும் காடும் வயலும் கடலும்  இவை சார்ந்த நிலங்களுமே  உலகம் முழுமையும் உள்ளன.
ஆகவே நான்கு நிலங்களை முதன்மைப் படுத்தி நானிலம் என்றனர்.
 
 நான்கு+நிலம்=நானிலம்.
நாநிலம் என்பதற்கு நாக்கு ஆகிய நிலம் என்று பெயர் .
ஆகவே  நானிலம் என்பதே சரியான சொல்.
 
(ஆதாரம்  புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய  அறிவோம் அருந்தமிழ் நூல்)


 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 28, 2010, 1:37:32 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 shylaja <shyl...@gmail.com>

நால்வகை நிலங்கள் அதாவது குறிஞ்சி முல்லை  மருதம் நெய்தல்  என்று நால்வகை நிலங்களால் ஆனது  இந்த உலகம் .ஐந்தாவது நிலமான பாலை தனி நிலம் இல்லையாம்  ’.முல்லையும் குறிஞ்சியும்  முறைமையின் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’   என்கிறது ஒரு பாடல்வரி.
 
மலையும் காடும் வயலும் கடலும்  இவை சார்ந்த நிலங்களுமே  உலகம் முழுமையும் உள்ளன.
ஆகவே நான்கு நிலங்களை முதன்மைப் படுத்தி நானிலம் என்றனர்.
 
 நான்கு+நிலம்=நானிலம்.
நாநிலம் என்பதற்கு நாக்கு ஆகிய நிலம் என்று பெயர் .
ஆகவே  நானிலம் என்பதே சரியான சொல்.
 
(ஆதாரம்  புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய  அறிவோம் அருந்தமிழ் நூல்)

நாக்கு ஆகிய நிலம்...அதுவும் சரி தான்....இதை வச்சு எத்தனை பேர் ஆட்சியையே பிடிக்கிறாங்க ;-)

shylaja

unread,
Jul 28, 2010, 3:20:58 AM7/28/10
to panb...@googlegroups.com

முயன்றான்  ,முயற்சி செய்தான்,  முயற்சித்தான்.
இந்த மூன்று சொற்களின் வேறுபாடு என்ன  சொல்ல முடியுமா?
2010/7/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

VJagadeesh

unread,
Jul 28, 2010, 3:19:34 AM7/28/10
to panb...@googlegroups.com

 

இலக்கணப்படி முயற்சித்தான் வராதுனு ஒருத்தர் சொன்னார்,

 

முயன்றான் தான் வருமாம்.

 

முயற்சிக்கிறேன்  -  முயல்கிறேன்

 

பயிற்சிக்கிறேன் – பயில்கிறேன்

Kandavel Rajan

unread,
Jul 28, 2010, 3:27:43 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 shylaja <shyl...@gmail.com>


முயன்றான்  ,முயற்சி செய்தான்,  முயற்சித்தான்.
இந்த மூன்று சொற்களின் வேறுபாடு என்ன  சொல்ல முடியுமா?

முயற்சித்தல் என்ற வினைச் சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுவதே சரியாகும்


முயன்றான், முயற்சி செய்தான் சரி

முயற்சித்தான் - தவறு

Kavitha Kannan

unread,
Jul 28, 2010, 3:28:11 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 shylaja <shyl...@gmail.com>


முயன்றான்  ,முயற்சி செய்தான்,  முயற்சித்தான்.
இந்த மூன்று சொற்களின் வேறுபாடு என்ன  சொல்ல முடியுமா?

இலக்கணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


Kandavel Rajan

unread,
Jul 28, 2010, 3:29:15 AM7/28/10
to panb...@googlegroups.com

சரி ----------------/-------தவறு

தட்டித்தடுமாறி --/-- தட்டுத்தடுமாறி

எல்லாரும் --/-- எல்லோரும்

ஏழைமை --/-- ஏழ்மை

ஒருகால் --/-- ஒருக்கால்

பதினொரு --/-- பதினோரு

இரண்டாம் வகுப்பு --/-- இரண்டாவது வகுப்பு

பதற்றம் --/-- பதட்டம்

மனத்தத்துவம் --/-- மனோதத்துவம்

அண்மை --/-- அருகாமை

மனத்தில் --/-- மனதில்

மனம், மனசு --/-- மனது

கயிற்றை --/-- கயிறை

அடையாற்றில் --/-- அடையாறில்

ஆர்க்காடு --/-- ஆற்காடு

தவற்றை --/-- தவறை

இடப்பக்கம், வலப்பக்கம் --/-- இடது பக்கம், வலது பக்கம்

சின்ன பெண் --/-- சின்னப் பெண்

முயன்றான், முயற்சி செய்தான்--/-- முயற்சித்தான்

முயல, முயற்சி செய்ய --/-- முயற்சிக்க

நாகரிகம் --/-- நாகரீகம்

கத்தரிக்கோல் --/-- கத்திரிக்கோல்

சித்திரிக்க --/-- சித்தரிக்க

இன்று, அன்று --/-- இன்றைய தினம், அன்றைய தினம்

மெய்ம்மறத்தல் --/-- மெய்மறத்தல்

செய்ந்நன்றி --/-- செய்நன்றி

இருபத்துநான்கு --/-- இருபத்திநான்கு

உயிர்கொல்லி நோய் --/-- உயிர்க்கொல்லி நோய்

அழத்தொடங்கினாள் --/-- அழுகத்தொடங்கினாள்

அவன் எழுந்தான் --/-- அவன் எழுந்திருந்தான்

எழ முற்பட்டான் --/-- எழுந்திருக்க முற்பட்டான்

எழுத்துகள் --/-- எழுத்துக்கள்

கண்ணீர் துளித்தது --/-- கண்ணீர் துளிர்த்தது

இலைமறை காய் --/-- இலை மறைவு காய் மறைவு

பழுதை (கயிறு) --/-- பழுது

என் மகன், என்னுடைய மகன் --/-- எனது மகன்

கூர்கெட்ட --/-- கூறுகெட்ட

செலவு --/-- சிலவு

ஒருத்தி --/-- ஒருவள்

ஒருவன் --/-- ஒருத்தன்

வல்லுநர் --/-- வல்லுனர்

ஏற்கெனவே --/-- ஏற்கனவே

கோக்க --/-- கோர்க்க

கருமை. கறுப்பு --/-- கருப்பு

புனைபெயர் --/-- புனைப்பெயர்

எண்ணெய் --/-- எண்ணை

எண்ணெய்யை --/-- எண்ணையை

ஒரு நாளுக்கு --/-- ஒரு நாளைக்கு

சுவரில் --/-- சுவற்றில்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60308022&format=html

ராஜா

unread,
Jul 28, 2010, 3:35:22 AM7/28/10
to panb...@googlegroups.com

28 ஜூலை, 2010 10:29 am அன்று, Kandavel Rajan <kandav...@gmail.com> எழுதியது:

சரி ----------------/-------தவறு

 

ஆஹா ..இந்த இழை தொடர்ந்தா
தட்டுத்தடுமாறி இனி எழுத மாட்டோம்
கே.ஆர் & அனைவருக்கும் நன்றி !
 

VJagadeesh

unread,
Jul 28, 2010, 3:57:42 AM7/28/10
to panb...@googlegroups.com

அடையாற்றில் --/-- அடையாறில்

 

எக்ஸ்க்யூஸ்மி ஹெல்ப் மீ,

 

அடையாறு என்பதை ஆறாக கொண்டால் அடையாற்றில் சரி,

 

அடையாறு என்பதை இடமாக கொண்டால் அடையாறில் சரி.

 

நான் சொன்னது சரியா? தவறா?

shylaja

unread,
Jul 28, 2010, 5:13:35 AM7/28/10
to panb...@googlegroups.com
நன்றி  கந்தவேல். மற்றும் எல்லோர்க்கும்
 
 முயற்சித்தான் தவறு மற்றவை சரியே
 
இதுபோல பயிற்சி தொழில்பெயர் பயிற்சி செய்கிறேன் என்றுவருமே தவிர பயிற்சிக்கிறேன் என்றுவராது. முயற்சி பயிற்சி என்பவை தொழிற்பெயர்கள் அவற்றை வினையாக்கி முயற்சிக்கிறேன் பயிற்சிக்கிறேன் என்பது பிழை.
 


 
2010/7/28 Kandavel Rajan <kandav...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Kandavel Rajan

unread,
Jul 28, 2010, 9:46:31 AM7/28/10
to panb...@googlegroups.com
வழக்கொழிந்த தமிழ் சொற்கள்


தூரிகை -பிர‌ஷ்

பனுவல்-நூல்,புத்த‌க‌ம்

தூவ‌ல்- பேனா

புரிசை- ம‌தில்

மேழி - ஏர்

வ‌துவை-ம‌ண‌மாலை

ம‌தி-நில‌வு

சாளர‌ம்-ஜ‌ன்ன‌ல்

க‌ட‌வுச்சீட்டு-பாஸ்போர்ட்

சல்லியம்-சிறுச‌ண்டை

ச‌ர‌க்குந்து-லாரி

சால‌ம்-மாஜிக்

சுழியம்-பூஜ்ய‌ம்

சிலாகித்த‌ல் -ஆன‌ந்த‌ப்ப‌ட‌ல்

ந‌ற‌வு- தேன்

ந‌ர‌லுத‌ல்- ஒலித்த‌ல்

நுத‌ல்- நெற்றி

http://iyarkai09.blogspot.com/2009/03/blog-post.html

Asif Meeran AJ

unread,
Jul 28, 2010, 10:00:16 AM7/28/10
to panb...@googlegroups.com
சல்லியம்-சிறுச‌ண்டை

சல்யம் என்றால் மலயாளத்தில் தொந்தரவு என்று பொருள்

சிலாகித்த‌ல் -ஆன‌ந்த‌ப்ப‌ட‌ல்

சிலாகிப்பது ஆனதப்படுவது இரண்டுமே தமிழ் இல்லை என நினைக்கிறேன் ;-)
சிலாகித்தல் என்பது பெருமபாலும் வியத்தல் அல்லது போற்றுதல் என்ற பொருளிலேயே
தற்போது வழங்கப்படுக்கிறது

பாவனாவின் தெற்றுப்பல்லைக் கூட சுபைர் சிலாகித்துக்கொண்டிருந்தான் ஒரு காலம்

Ahamed Zubair A

unread,
Jul 28, 2010, 10:23:37 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>


சல்லியம்-சிறுச‌ண்டை

சல்யம் என்றால் மலயாளத்தில் தொந்தரவு என்று பொருள்
 
 
நம்ம ஊர்ப்பக்கம் ”சல்லிப்பயலுவ” அப்படின்னு சொல்றதுக்கு அர்த்தம் இது தானா??
 
சிலாகித்த‌ல் -ஆன‌ந்த‌ப்ப‌ட‌ல்

சிலாகிப்பது ஆனதப்படுவது இரண்டுமே தமிழ் இல்லை என நினைக்கிறேன் ;-)
 
சிலாகித்தல் என்பது பெருமபாலும் வியத்தல் அல்லது போற்றுதல் என்ற பொருளிலேயே
தற்போது வழங்கப்படுக்கிறது

பாவனாவின் தெற்றுப்பல்லைக் கூட சுபைர் சிலாகித்துக்கொண்டிருந்தான் ஒரு காலம்
 
அண்ணாச்சி, அது ஒரு கனாக் காலம்.
 
வளவு - தளத்திலிருந்து
 
தெற்றுப் பல் என்று சொல்லுகிறோம் அல்லவா? அது வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பல். It is a tooth which is jetting out. தெற்றுதல் = வெளியே நீட்டிக் கொண்டிருந்தல். தெற்றுகின்ற பல்லை "தெறுத்திக் கொண்டு இருப்பதா"கவும் சொல்லுவோம்

shylaja

unread,
Jul 28, 2010, 10:27:41 AM7/28/10
to panb...@googlegroups.com
சிலாகித்து என்கிற சொல் வருகிறபோதிலாவது  குழும மகளிர் நினைவு வந்து  சிலாகித்து சொல்ல சுபைர் உனக்கும் தோணலியா?:)

2010/7/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Jeevaa KS

unread,
Jul 28, 2010, 10:29:22 AM7/28/10
to panb...@googlegroups.com
சுபைர்.

சல்லிப் பயல் என்று சொல்லுவதற்கு வேறு காரணம் உண்டு.

கொஞ்சம் வேலையா இருக்கேன். வரேன்
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Jeevaa KS

unread,
Jul 28, 2010, 10:33:34 AM7/28/10
to panb...@googlegroups.com

2010/7/28 shylaja <shyl...@gmail.com>

சிலாகித்து என்கிற சொல் வருகிறபோதிலாவது  குழும மகளிர் நினைவு வந்து  சிலாகித்து சொல்ல சுபைர் உனக்கும் தோணலியா?:)


அதானே ?

மைபாவை சிலாகிக்காத ஆட்கள் உண்டா ?
டேமேஜரின் எழுத்துப் பிழை சிலாகிக்காத ஆட்கள் உண்டா?
கவிதாவின் ஒற்றைச் சிரிப்பானை சிலாகிக்காதவர்கள் உண்டா ?
லாவண்யா / ஸ்வாதி அக்காவின் கவிதை ?
அப்புறம் இந்த தடவை பிட் போட்டில முதல் பதினைஞ்சில் இடம் பிடிச்ச துளசியக்கா ?


( பெரிய லிஸ்டா வருதே... மத்தவங்களும் தொடருங்க )

shylaja

unread,
Jul 28, 2010, 10:35:39 AM7/28/10
to panb...@googlegroups.com
மகளிரைப்  போற்றும்(சிலாகிக்கும்) மா மனிதர் ஜீவ்ஸ் வாழ்க:)

2010/7/28 Jeevaa KS <jee...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 28, 2010, 10:36:52 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 Jeevaa KS <jee...@gmail.com>

சுபைர்.

சல்லிப் பயல் என்று சொல்லுவதற்கு வேறு காரணம் உண்டு.

கொஞ்சம் வேலையா இருக்கேன். வரேன்
 
ஏதாவது திட்டிட போறேன்....
 
குழுமத்தில சிலாகித்ததப் பத்தி எழுத முடியும். இங்கே சல்லிப்பயலைப் பத்தி எழுத முடியாதா??

Ahamed Zubair A

unread,
Jul 28, 2010, 10:37:34 AM7/28/10
to panb...@googlegroups.com


2010/7/28 shylaja <shyl...@gmail.com>

சிலாகித்து என்கிற சொல் வருகிறபோதிலாவது  குழும மகளிர் நினைவு வந்து  சிலாகித்து சொல்ல சுபைர் உனக்கும் தோணலியா?:)
 
மகளிரால் சில் ஆகிப் போனதால் சிலாகிக்க தோன்றவில்லை...

Asif Meeran AJ

unread,
Jul 28, 2010, 10:39:00 AM7/28/10
to panb...@googlegroups.com
ஆக
சிலாகித்தல் என்றால் போற்றுதல் என்பதுதான் பொருள் :-)

மகளிரை சிலாகிப்பதற்கு மண் தரையை சிலாகிக்கலாம் :-)

Asif Meeran AJ

unread,
Jul 28, 2010, 10:40:13 AM7/28/10
to panb...@googlegroups.com
 ஏதாவது திட்டிட போறேன்....
 குழுமத்தில சிலாகித்ததப் பத்தி எழுத முடியும். இங்கே சல்லிப்பயலைப் பத்தி எழுத முடியாதா??

இந்த மாதிரியான நடவடிக்கையைத்தான் சல்லித்தனம் என்கிறோம் :-)
உதாரணத்தோடு புரிய வைத்த ஜீவ்ஸுக்கு நன்றி

Ahamed Zubair A

unread,
Jul 28, 2010, 10:41:25 AM7/28/10
to panb...@googlegroups.com
2010/7/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அண்ணாச்சி,
 
”மூதி” என்றால் என்ன??
 
இந்த இழைல தமிழ் பத்தி மட்டும் பேசுங்க... இல்லன்னா கடிச்சு வச்சிடுவேன்...

Asif Meeran AJ

unread,
Jul 28, 2010, 10:55:55 AM7/28/10
to panb...@googlegroups.com
கலைஞர் கருணாநிதி திருட்டு ரயிலில் சென்னை வந்ததாக ஜெ குற்றச்சாட்டு
 
இந்த இழைல தமிழ் பத்தி மட்டும் பேசுங்க... இல்லன்னா கடிச்சு வச்சிடுவேன்...

கருணாநிதிதானே தமிழ்
தமிழ்தானே கருணாநிதி

என்று நான் சொன்னால் கடுப்பாகி மூதி என்று திட்டத் தோன்றும்
மூதேவி என்பதன் சுருக்கமான விளிதான் மூதி.

(மூதிக்குப் புரிஞ்சுதோ என்னமோ/)

Ahamed Zubair A

unread,
Jul 28, 2010, 10:58:48 AM7/28/10
to panb...@googlegroups.com
எந்த இழையா இருந்தாலும் ஏன் சாமி கும்முறீக???
 
இது ஒன்னாவது நல்லா இருந்திட்டு போகட்டும். தமிழ்நாட்டுக்கு கருணாநிதின்னா பண்புடனுக்கு நீங்க தான்...
 
அதனால் ஒழுங்கா ஓடிப் போயிடுங்க... இல்லன்னா மூதின்னாவது திட்டிட்டு ஓடிடுங்க...
 
(இதில 4 இடத்தில தப்பா எழுதி இருக்கேன்... கண்டுபிடிங்க மக்கா..)

2010/7/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>
கலைஞர் கருணாநிதி திருட்டு ரயிலில் சென்னை வந்ததாக ஜெ குற்றச்சாட்டு

Jeevaa KS

unread,
Jul 28, 2010, 11:07:01 AM7/28/10
to panb...@googlegroups.com
சல்லிப் பயல் / சல்லித் தனத்துக்கான விளக்கம் கொஞ்சம் பெருசா போனதால தனி இழைல போட்டுட்டேன் சுபைரு. பார்க்கவும்.

Gokul Kumaran

unread,
Jul 28, 2010, 1:52:25 PM7/28/10
to panb...@googlegroups.com
2010/7/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
 
தெற்றுப் பல் என்று சொல்லுகிறோம் அல்லவா? அது வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பல். It is a tooth which is jetting out. தெற்றுதல் = வெளியே நீட்டிக் கொண்டிருந்தல். தெற்றுகின்ற பல்லை "தெறுத்திக் கொண்டு இருப்பதா"கவும் சொல்லுவோம்




ஓ, இதைத் தான் எங்க ஊருல “துருத்துக்கிட்டு வருது”ன்னு சொல்றாங்களா?

நன்றி சுபைர்.

--
கோகுல்குமரன்

உள்ளதைச் சொல்வேன்..சொன்னதைச் செய்வேன்
வேறொன்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை..வார்த்தையில் மறைக்கும்
கபடம் தெரியாது


shylaja

unread,
Jul 29, 2010, 2:34:24 AM7/29/10
to panb...@googlegroups.com
மலரை  முகர்ந்தார்கள்
மலரை மோந்து பார்த்தார்கள்
 
 
இதில் எது சரியெனப்படுகிறது?
 


 
2010/7/28 Gokul Kumaran <gokul...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

பிரபு சுந்தரம்

unread,
Jul 29, 2010, 2:36:20 AM7/29/10
to panb...@googlegroups.com
முகர்ந்தார்கள்
 இது தான் 

2010/7/29 shylaja <shyl...@gmail.com>



--
@@@
பிரபு
தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமல்ல தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பழக்கும்

VJagadeesh

unread,
Jul 29, 2010, 2:34:41 AM7/29/10
to panb...@googlegroups.com

நுகர்ந்து பார்த்தார்கள்?

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of shylaja
Sent: Thursday, July 29, 2010 12:04 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] நல்ல தமிழ் கற்போம்

 

மலரை  முகர்ந்தார்கள்

Paamahan

unread,
Jul 29, 2010, 2:47:49 AM7/29/10
to panb...@googlegroups.com
நுகர்தல் என்பது வாங்குதல் என்று பொருள்படும். ஆகவே முகர்ந்தார்கள்தான் சரி.

2010/7/29 VJagadeesh <VJaga...@prouindia.com>



--
live like an Angel, die like a legend.

VJagadeesh

unread,
Jul 29, 2010, 2:43:42 AM7/29/10
to panb...@googlegroups.com

ஓ எஸ். நுகர்வோர்

 

முகர்ந்து - எழுத்துல

 

மோந்து - பல மாவட்டங்களில் பேச்சு வழக்கிலே....

 

பேச்சும் எழுத்தும் ஒன்னா இருக்கனுமா என்ன?

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Paamahan
Sent: Thursday, July 29, 2010 12:18 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] நல்ல தமிழ் கற்போம்

 

நுகர்தல் என்பது வாங்குதல் என்று பொருள்படும். ஆகவே முகர்ந்தார்கள்தான் சரி.

2010/7/29 VJagadeesh <VJaga...@prouindia.com>

நுகர்ந்து பார்த்தார்கள்?

 

Kandavel Rajan

unread,
Jul 29, 2010, 2:57:33 AM7/29/10
to panb...@googlegroups.com
" இந்தப் பூவினை மோந்துபார் " என்று சொல்கிறோம். மோந்துபார் என்பதன் உண்மையான வடிவம் " முகர்ந்து பார் " என்பதுதான்.

முகர் - முகர்தல் - முகர்ந்து பார்த்தல் - மோர்ந்து பார்த்தல் - மோந்து பார்த்தல் என்றுதான் இச் சொல் சிதைந்தது.


முகர் - முகர்ப்ப நாய் - மொகர்ப்ப நாய் - மோர்ப்ப நாய் - மோப்ப நாய் என்றெல்லாம் இந்த வகையில்தான் நாம் இன்று பேசியும் எழுதியும் வருகிறோம்.


திருவள்ளுவரும் இந்த எளிய பேச்சு வழக்கினை ஒத்துக்கொண்டு " மோப்பக் குழையும் அனிச்சம் " என்றே சொல்லியுள்ளார்.

Kandavel Rajan

unread,
Jul 29, 2010, 3:01:51 AM7/29/10
to panb...@googlegroups.com
2010/7/29 VJagadeesh <VJaga...@prouindia.com>

ஓ எஸ். நுகர்வோர்

 

முகர்ந்து - எழுத்துல

 

மோந்து - பல மாவட்டங்களில் பேச்சு வழக்கிலே....

 

பேச்சும் எழுத்தும் ஒன்னா இருக்கனுமா என்ன?

நம்மைக் கொச்சைப்படுத்தினால் நம் மதிப்பு மட்டும்தான் குறையும். மொழியைக் கொச்சைப்படுத்தினால் நம் முன்னோர்கள் கண்ட அனைத்து அறிவும் கொச்சைப்பட்டு குறைகின்றது. தன்மானம், இனமானம் என்று மேடையில் முழங்கும் போலிகளுக்கு மொழிமானம் என்கின்ற ஒன்று தெரிவதேயில்லை. உண்மையில் மொழிமானமே எல்லா மானங்களுக்கும் மூலமும் முதலும்.


VJagadeesh

unread,
Jul 29, 2010, 2:59:19 AM7/29/10
to panb...@googlegroups.com

இதை சுட்ட இடத்தை சொல்லவே இல்லையே

Ahamed Zubair A

unread,
Jul 29, 2010, 3:08:16 AM7/29/10
to panb...@googlegroups.com


2010/7/29 shylaja <shyl...@gmail.com>

மலரை  முகர்ந்தார்கள்
மலரை மோந்து பார்த்தார்கள்
 
இதில் எது சரியெனப்படுகிறது?

முகர்ந்தார்கள் என்பதே சரி...


Kandavel Rajan

unread,
Jul 29, 2010, 3:16:55 AM7/29/10
to panb...@googlegroups.com
2010/7/29 VJagadeesh <VJaga...@prouindia.com>

இதை சுட்ட இடத்தை சொல்லவே இல்லையே


ஓஹ்.....


அதே இடம்.....


VJagadeesh

unread,
Jul 29, 2010, 3:28:25 AM7/29/10
to panb...@googlegroups.com

போன தலைமுறை போன தலைமுறைக்கும் தலைமுறைக்கும் தலைமுறை அப்படியே 40-50வது தலைமுறைனுலாம் நினைச்சிட்டு இருந்தா இப்ப இருக்க தமிழே இருக்காது.

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Kandavel Rajan
Sent: Thursday, July 29, 2010 12:32 PM

shylaja

unread,
Jul 29, 2010, 4:03:46 AM7/29/10
to panb...@googlegroups.com
தமிழில் முகர்ந்து  என்னும் சொல்லே இல்லை என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
முகந்து  என்ற சொல் உண்டு இதன் பொருள் அள்ளி அல்லது அள்ளுதல்.  உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ என்கிறார் பாரதி  இதை முகர்ந்தால் என  பலர் பாடுவது அபத்தம்!
 
முகத்தல் அளவை என்பதை  நினையுங்கள்.
 
 நுகர்ந்து என்னும் சொல் உண்டு நுகர்ச்சி நுகர்வோர்  இப்படி உண்டு
மோந்துபார்த்தான்  மோப்பம் பிடித்தான்  என்று பலர்பேசக்கேட்டிருக்கிறோம்.
மோப்பக்குழையும் அனிச்சம்  என்பார் திருவள்ளுவர்/ மோப்பநாய் கேள்விப்பட்டிருப்பீர்களே!  காலப்போக்கில் மோந்தான் என்பது செவிக்கு இனிமையாக இல்லை என்பதால் முகர்ந்தான் எனத்திரித்துவிட்டார்கள் ஆனால்  மலரை மோந்துபார்த்தான் என்பதே சரியான சொல்.

2010/7/29 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 29, 2010, 4:09:09 AM7/29/10
to panb...@googlegroups.com


2010/7/29 shylaja <shyl...@gmail.com>

தமிழில் முகர்ந்து  என்னும் சொல்லே இல்லை என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
முகந்து  என்ற சொல் உண்டு இதன் பொருள் அள்ளி அல்லது அள்ளுதல்.  உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடீ என்கிறார் பாரதி  இதை முகர்ந்தால் என  பலர் பாடுவது அபத்தம்!
 
முகத்தல் அளவை என்பதை  நினையுங்கள்.
 
 நுகர்ந்து என்னும் சொல் உண்டு நுகர்ச்சி நுகர்வோர்  இப்படி உண்டு
மோந்துபார்த்தான்  மோப்பம் பிடித்தான்  என்று பலர்பேசக்கேட்டிருக்கிறோம்.
மோப்பக்குழையும் அனிச்சம்  என்பார் திருவள்ளுவர்/ மோப்பநாய் கேள்விப்பட்டிருப்பீர்களே!  காலப்போக்கில் மோந்தான் என்பது செவிக்கு இனிமையாக இல்லை என்பதால் முகர்ந்தான் எனத்திரித்துவிட்டார்கள் ஆனால்  மலரை மோந்துபார்த்தான் என்பதே சரியான சொல்.

புதுமையாக இருக்கிறது.... மிக்க நன்று...


Jeevaa KS

unread,
Jul 29, 2010, 4:17:03 AM7/29/10
to panb...@googlegroups.com

மோ, [ mō, ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. [com முகரு, மோரு.] To smell a thing, மணக்க. 2. [for முக.] To draw water, மொள்ள. இவன்அவளைமோந்துகொண்டேயிருக்கிறான். He is scenting [following] her. நான்மோவேன். I will not smell. குடமோக்கவில்லை. The pitcher does not take water.

மோந்துகொடுக்க, inf. To smell and give to another.
மோப்ப, inf. [poet. form of மோக்க.] To smell. See under குழை, v.
மோப்பு, v. noun. The sense of smell. See மோப்பம்.

சென்ஷி

unread,
Jul 29, 2010, 4:24:14 AM7/29/10
to panb...@googlegroups.com
எங்க ஊர் பக்கத்துல மோந்துகொடுன்னு வார்த்தை இருக்குது. மோந்துகொடுன்னா எடுத்துக்கொடு அல்லது அள்ளிக்கொடுன்னு சொல்லலாம். மொண்டு கொடுங்கறது மருவி மோந்துகொடுன்னு ஆகியிருக்கலாம்.

2010/7/29 Jeevaa KS <jee...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

Jeevaa KS

unread,
Jul 29, 2010, 4:28:07 AM7/29/10
to panb...@googlegroups.com

மொண்டு, [ moṇṭu, ] s. Refractoriness, unruliness, முரண்டு. (R.).


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/29 சென்ஷி <senshe...@gmail.com>

VJagadeesh

unread,
Jul 29, 2010, 4:23:12 AM7/29/10
to panb...@googlegroups.com

இதை அப்படியே கந்தவேல் மாம்ஸ் சுட்ட இடத்துல ரிப்ளையா போட்டு விடுங்க.

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of shylaja
Sent: Thursday, July 29, 2010 1:34 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [
பண்புடன்] நல்ல தமிழ் கற்போம்

 

தமிழில் முகர்ந்து  என்னும் சொல்லே இல்லை என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.

ராஜா

unread,
Jul 29, 2010, 4:32:14 AM7/29/10
to panb...@googlegroups.com


29 ஜூலை, 2010 11:24 am அன்று, சென்ஷி <senshe...@gmail.com> எழுதியது:

எங்க ஊர் பக்கத்துல மோந்துகொடுன்னு வார்த்தை இருக்குது. மோந்துகொடுன்னா எடுத்துக்கொடு அல்லது அள்ளிக்கொடுன்னு சொல்லலாம். மொண்டு கொடுங்கறது மருவி மோந்துகொடுன்னு ஆகியிருக்கலாம்.
 
தெற்கத்தி  தமிழில் மோண்டு  என்றால் வேற அர்த்தம் சொல்லுவாங்களே ...... யாருக்கும் தெரியுமா ? 
 
எ.கா : " பையன் வீட்டுக்குள்ளவே மோண்டுட்டான்"  :-)
 
 
 

Kandavel Rajan

unread,
Jul 29, 2010, 4:34:41 AM7/29/10
to panb...@googlegroups.com
2010/7/29 ராஜா <trp...@gmail.com>
ஆமா ....

உச்சா போனத சொல்வாங்க.....


Kandavel Rajan

unread,
Jul 29, 2010, 4:44:52 AM7/29/10
to panb...@googlegroups.com
அர்த்தமுள்ள தமிழின் ‘ஓர்’ எழுத்துக்கள்!




தமிழ் மொழி பலவித சுவை மிகுந்தது. அமிர்தம் போல இனிமையானது. கேட்க இனிமை, பேச அருமை, படிக்க எளிமை. தமிழ் கடலில் ஆழ்ந்து மூழ்கினால் நல் முத்துக்களை பெறலாம். இன்பத்தமிழ் மொழி பேசும் தமிழனாய் பிறந்ததே ஒரு பெரு மைதான். அதை உணரவேண்டிய தருணம் இதுதான். முத்தமிழ் வித்தகர் கலைஞர், தமிழுக்கு பெருமை சேர்க்க பெருவிழா நடத்தும் இந்த காலம் தமிழுக்கு பொற்காலம். உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் இந்த நேரத்திலாவது தமிழ் மொழியின் அழகையும், பெருமையையும் சற் றேனும் சிந்தித்து பார்ப்போம். தமிழன் பெருமைக்குரியவன் என்பதை உண ர்ந்து தலை நிமிர்ந்து நிற்ப்போம். அழகிய தமிழ் மொழியில் அற்புதங்கள் பல உள்ளன. எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று “ஓர் எழுத்து ஒரு பொருள்“ என்னும் சிறப்பு ஆகும். அதாவது தமிழில் ஒரு எழுத்து கூட பொருள் தரக்கூடியது. இதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் தனித்து நின்றாலும் பொருள் கொடுக்கும். அது எப்படி என்கிறீர்களா. அதுதான் நம் தமிழ்மொழியின் தனிச்சிறப்பு அந்த 42 எழுத்துக்களையும் அதன் பொருளையும் பார்ப்போம்.

ஆ- பசு, எருது, ஆச்சா மரம்

ஈ- பறக்கும் பூச்சி, தேனீ, வண்டு, அழிவு, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

ஊ- இறைச்சி, உணவு, விகுதி.

ஏ- அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு

ஐ- அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்

ஒ- சென்று தாக்குதல், மதகுநீர், ஒழிவு, பலகை

மா-பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ- மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு

மூ- மூப்பு(முதுமை),மூன்று

மே- மேல், மேன்மை

மை- கண்மை, கருமை, இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்

மோ- முகர்தல்

தா- கொடு, குறை, கேடு, குற்றம், பகை

தீ-நெருப்பு, இனிமை, அறிவு, இடம்

தூ- வெண்மை, இறைச்சி, பறவை இறகு

தே- கடவுள்

தை- தைமாதம், தையல், திங்கள்

பா& அழகு, பாட்டு, நிழல்

பூ- மலர், சூதகம்

பே- அச்சம், நுரை, வேகம்

பை- கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை

போ& செல்

நா& நாக்கு, தீயின் சுவாலை

நீ& நீ

நை- வருந்து, இகழ்ச்சி

நோ-நோவு, துன்பம், வலி

கா- சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்

கூ- பூமி, ஏவல், கூழ், கூவு

கை- உடல் உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள்,

கோ- வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

வா- வருகை

வீ- மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு, வீழ்தல்

வை& வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்

வெ- வவ்வுதல்,

சா- சாதல், சோர்தல், பேய், மரணம்

சீ- வெறுப்புச்சொல், சீத்தல், சீழ், சளி, லட்சுமி, அடக்கம், நித்திரை

சே- சிவப்பு, எருது, அழிஞ்சால் மரம்

சோ- மதில், அரண்

யா- ஒருவகை மரம், யாவை, அசைச்சொல்

நொ- வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

து- உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல். 





http://www.symbianspot.com/forum/indian-subcontinental/7210-2970;-3014;-2990;-3021;-2990;-3018;-2996;-3007;-2991;-3006;-2965;-3007;-2991;-2980;-2990;-3007;-2996;-3021;.html

Kandavel Rajan

unread,
Jul 29, 2010, 4:49:37 AM7/29/10
to panb...@googlegroups.com

2.16. சுந்தர சோழரின் பிரமை

(பொன்னியின் செல்வன்)


அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் காட்டு மிருகம் இன்னதென்பதைஅவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டுபிடிக்க அவளால் முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு? இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை? அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன. எத்தனை நாள் அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான். 
It is loading more messages.
0 new messages