வடக்கு, தெற்கு - திசைப்பெயர்கள்

22 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 21, 2009, 8:18:11 AM4/21/09
to panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com, Santhavasantham, mutht...@googlegroups.com, மின்தமிழ்

மின்தமிழில் இப்பொழுது எழுதியது.

நா. கணேசன்

On Apr 20, 11:59 pm, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:

> Tech - தெற்கு (திசை) / ( Tech as in technic / technology )

> தொடர்புடைய சொற்களா?

தொடர்பில்லாச் சொற்கள்.

Tech - dexterity தொடர்புடையன.

-----------------------

தமிழின் திசைப் பெயர்களைப் பற்றி என் கருத்தை எழுதவேண்டும்.

குணக்கு - (குள்-/குளம்/குண்டம்/குண்டா ....) கடலின் ஆழத்தில் இருந்து
சூரியன் உதிக்கும் திசை.
குடக்கு (கிடக்கு) - கதிரவன் மறையும் திசை
(கிழக்கு - மேற்கு பின்னால் ஏற்பட்டது, கேரளாவிற்குக் கூடப் பொருந்தாது.
பொருள் வெள்ளிடை மலை.)

தெற்கு, வடக்கு தொல்தமிழரின் திரை கடலாடும் திறனால் ஏற்பட்ட
பெயர்கள்.

தெற்கு:
--------------

தெல்/தெள் ( > - தள்(ளு)) காற்றால் படகு, வங்கம், கப்பல் பிரயாணம்
எளிதாவதை
உணர்ந்ததால் ஏற்பட்ட பெயர். பண்டை இந்தியருக்குக் திரைகடல் ஆடும் பொழுது
காற்று உதவிற்றா என்பதை திரு. நரசையா போன்றவர்களிடம் அறிய ஆசை.

(1) புள்ளாங்குழல்/புல்லாங்குழல், (2) தெள்ளவாரி/தெல்லவாரி (கம்பன்
பயன்படுத்தும்
வார்த்தை. கன்னடத்தில் உள்ளதை வை.மு.கோ. காட்டியிருப்பதை ஹரிகிருஷ்ணன்
சொன்னார்), (3) அள்ளைக்கை/அல்லக்கை .... ஆவதுபோல்,  தெள்ளு/தெல்லு
தெற்கு என்ற சொல்லின் வேர். தெல்- > தென்(கு) ஆகும்.

இத்திசையின் சிறப்பான மரம் தெங்கு/தென்னை (< தெல்-).
தமிழர் கடலாடிய காலத்தில் தென்கிழக்கு ஆசியத் தீவுகளில் கண்டறிந்த மரம்.
பயனுக்காக இந்தியா கொண்டுவரப்பட்டது.

வடக்கு:
------------

வடக்கு - வடம்/வளைதல் என்பதால் ஏற்பட்ட பெயர். துருவ நட்சத்திரம்
கடலாடும்போது மிக முக்கியமாய் உதவியது. பண்டை இந்திய இலக்கியங்களில்
இருக்கு வேதம், சமண சமய, ... போன்றவற்றின் நூல்களில் ‘போல் ஸ்டார்’-ஐ
ஆல மரத்துடன் இணைத்து ஏராளமான இடங்களில் பேசப்பட்டுள்ளது.
வட மீன் -துருவ நட்சத்திரம், அது தொடர்பாக ஏற்பட்ட திசைப்பெயர் வடக்கு.

வேதத்தில் ஆலமரத்தின் தமிழ்ப் பெயர் இருக்கிறது -
வட விருக்‌ஷம். வடம் (வளையும் கயிறுபோன்ற) ஆலம் விழுதுகள் - aerial roots
of the Banyan tree.

சிவபிரானுக்கு உகந்தமரம் ஆல். ஆலங்காடு, பழுவூர் > வழுவூர்.
பழு = ஆலம் விழுது. பழுமேடு. ஆல் என்பதும் யாலுதல்/நாலுதல்/ஞாலுதல்
(Cf. யான்/நான்/ஞான் என்பதுடன் ஒப்பிடலாம்) என்னும் அடியாய் ஏற்பட்ட
பெயர்,
யானை/ஆனை என்னும் பெயர்ச்சொல்லிலும் தும்பிக்கை (யால்-/ஆல்- இருக்கிறது).

வடக்கு, தெற்கு தோன்றியதற்கு என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்க
வில்லை இன்னும். பார்க்கணும். உ-ம்: பாவாணர், திராவிடவியல் அறிஞர்கள்
ஃசுலெபில், பி. கிருஷ்ணமூர்த்தி, ....

எனக்குத் தெரிவது வடக்கும், தெற்கும் கடலாடும் பண்டைத் திறனால் ஏற்பட்ட
பெயர்கள் இவை. ஆலும், தெங்கும் அத்திசைக்கான மரங்களின் பெயர்கள்.

பிற பின்,

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages