கயங்களி முளியிடை. . . .

13 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Apr 25, 2022, 10:08:32 PM4/25/22
to பண்புடன்

கயங்களி முளியிடை. . . .

------------------------------------------------------


கயங்களி முளியிடை பரலிய நனந்தலை

வெய்ய கரிய அழல் சுரம் ஆர்ப்ப‌

அம்பு மூசி மன்னுயிர் சிதைக்கும்

ஆறலை கள்வர் ஆறு தோறும் நிரம்ப‌

பொறிகிளர் பொறையிடை கடாஅத்தந்து

சிலம்பு பொரிய இமிழ்க்கும் ஆரிடை 

பொலங்கிளர் ஒண்ணுதல் நெஞ்சுள் வரிக்கும்.

பொருள்செய் வேட்டல் மறைவ போன்ம்

இறைமுன் நெகிழும் அவள் வளையூடு

நெரிக்கும் நினைவொடு வேர்த்தே மயங்கும்.

முட்புதல் புழையுள் முயல் படுத்தன்ன‌

முரணிய நெஞ்சத்துக் குணில் பாய் முரசின்

அறை படு தலைவ.ஓம்பு மதி ஊக்கம்

நின் வென்றி மாட்டே இந்நெடு விழி நோக்கும்.


____________________________________

"சொற்கீரன்"


பொருள் தேடி சென்ற தலைவன் வழியில் எதிர்ப்படும்

துயர்களால் தளர்வுறும்போது ஊக்கப்படுத்துவதாகத் 

தோன்றும் தோழியின் கூற்று.

_____________________________________________

சங்கநடை செய்யுட்கவிதை.

(எழுதியது பகல் 1.23 மணி.24.04.2022)

Reply all
Reply to author
Forward
0 new messages