கிருஷ்ணனை கொல்ல கம்சன் ஒரு சூப்பரான திட்டம் போட்டானாம். ஊர்ல இருக்கற எல்லா குழந்தையையும் கொன்னுட்டா, கிருஷ்ணனும் சேந்து செத்துடுவான்னு சொல்லி பூதகிய அனுப்பி எல்லா குழந்தையையையும் கொன்னான்.
அந்த மாதிரி கருப்பு, வெள்ள, பச்ச, மஞ்சள், சிகப்புன்னு எல்லா கலர் கரன்சியையும் கொன்னுட்டா கருப்பு பணமும் சேந்து ஒழிஞ்சிடும்னு ஒரு அதிமேதாவி அங்குராசு திட்டம் போட்டு பிரதமருக்கு ஐடியா கொடுத்து இப்ப அல்லாரும் பேங்குக்கும், ஏடிஎம்முக்கும் அல்லாடிகிட்டிருக்காங்க.
இருக்கற பணத்தில் 86% அளவு 500, 1000 ரூவா நோட்டுக்கள் தானாம். இருக்கும் பணத்தில் 86% பணத்தை சர்க்குலேசனில் இருந்து எடுத்தா என்ன ஆகும்?
கருப்புபணத்தை ஒழிக்க சிறந்தவழி
1) ஒரு பொதுமன்னிப்பு அளித்து 25% வரியில் பிளாக்மணியை ஒயிட் ஆக்கலாம்னு ஒரு அறிவிப்பு வெளியிடணும். 90களில் மன்மோகன் ஆட்சியில் இப்படி ஒரு அறிவிப்பு வந்தது
2) அதன்பின் வரிகளை குறைத்து, விதிகளை எளிமைபடுத்தினால் வணிகம் சிறக்கும். வரிவிதிப்பும் அதிகரிக்கும். பிளாக்மணியும் குறையும்
நாட்டின் பொருளாதாரத்தில் பாதி கருப்புபணம் தான் என்கையில் அதை இப்படி ஒட்டுமொத்தமாக முடக்கினால் பொருளாதாரமே அல்லவா முடங்கிவிடும்?
--