> Balaji R wrote:
இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன. படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்.
மேலோட்டமாக இருப்பினும் தெரிந்துகொள்ளவேண்டிய விவரங்கள். 'தொடுவர்மம் தொண்ணூற்றாறு படுவர்மம் பன்னிரெண்டு' ஒரு நாவலில் அல்லது கதையில் படித்த ஞாபகம். அந்த ஆசிரியர் எழுதும் கதைகளில் வர்மம் கட்டாயம் இருக்கும். ராணி பத்திரிகையில் எழுதியிருப்பதாக நினைவு. வர்மக்கலை என்று ஒரு இதழும் படித்த நினைவு. அதன் ஆசிரியரும், நான் சொல்லும் கதையின் ஆசிரியரும் ஒருவரே என்பதாகவும் நினைவு.
வர்மம் உண்டு. சிலர் நம்பாமல் இருக்கலாம்.
என்னுடைய வாலிப வயதில் ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட லூசுத்தனமாக இருந்த ஒருவருக்கு வர்மம் தெரியும் என்றார்கள், நான் நம்பவில்லை,
'யோவ் உனக்கு உண்மையிலேயே வர்மம் தெரியுமுன்னா என் கைல தொட்டு எதாவது பண்ணுய்யா' என்றேன்.
'வேண்டாங்க எதாவது ஆகிருச்சுன்னா' என்றார்.
'உனக்கு தெரியுமுன்னா செய்யி, இல்லேன்னா ரீல் வுர்ரேன்னு அர்த்தம்' என்றேன்.
'இது தாய் நரம்புங்க' என்று சொல்லிக்கொண்டே கட்டை விரலும் மணிக்கட்டும் சேருமிடத்தில் லேசாகத் தொட்டார். அடுத்த நிமிடம் எனக்கு வலித்தது. சரியான வலி. துடித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. வீம்புக்காக அவரிடம் வலியைச் சரிசெய்யச் சொல்லவில்லை. வலிக்கிறது என்று மட்டும் சொன்னேன்.
வெந்நீர் ஊற்றி, கையை அசைக்காமல் வைத்திருந்து, வலியைக்குறைத்து, மீண்டும் வலித்து, ஓரிருமணிநேரத்திற்குப் பின்னரே கை சகஜ நிலைக்கு வந்தது.
நல்ல கலை ஏனோ பரவலாக மக்களைச் சென்றடையாமற்போனது.