நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!

817 views
Skip to first unread message

Ramesh Murugan

unread,
Jan 23, 2013, 8:11:59 AM1/23/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப் படுகின்றது. இதனால், தமிழரின் தொன்மை குறித்த தேடல், செயற்கையாக கட்டமைக்கப் பட்ட மொழித் தேசியத்தின் இருத்தலுக்கான அத்திவாரமாக உறுதி செய்யப் படுகின்றது. "உலகிலேயே முன் தோன்றிய மூத்தகுடி" என்று இனப்பெருமை பேசுவதற்காக, பண்டைய இனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அமெரிக்காவின் மாயன்களின் வரலாறு முதல், அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் வரை சகோதர உறவு முறை கொண்டாடுகின்றோம். அதே நேரம், ஆங்கிலம், கிரேக்கம், இத்தாலி மொழிகளுக்குள் எத்தனை தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்கிறோம். அதாவது, நாகரீகத்தால் உயர்ந்த ஐரோப்பியர்களின் மூதாதையரும் தமிழர்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த ஆய்வாளர்கள் எல்லோரும், ஒரு முக்கியமான அடிப்படை உண்மையை மறந்து விட்டு, அல்லது மறைத்துக் கொண்டு பேசுகின்றனர்.


உலகிலேயே முதலாவது மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான். உலகில் உள்ள மனித இனங்கள் எல்லாம், ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து சென்றவை தான். தம்மை தனித்துவமாக இனங்களாக கருதிக் கொண்டிருந்த ஐரோப்பியரும், சீனர்களும் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகளும், மரபணு ஆராய்ச்சிகளும் அந்த முடிவுக்கே வருகின்றன. மனித இனத்தின் மூலத்தை ஆராயும் விஞ்ஞானம், ஆப்பிரிக்காவை சுற்றிக் கொண்டிருக்கையில், தமிழர்கள் கடலில் அமிழ்ந்த குமரி கண்டத்தினுள் தமது மூலத்தை தேடிக் கொண்டிருப்பது வியப்பை அளிக்கின்றது. ஐரோப்பியரின் பூர்வீகம் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமான) கொகேசியன் மலைகளில் இருந்து தொடங்கியதாக, காலம் காலமாக கற்பிக்கப் பட்டு வந்துள்ளது. அதனால் இன்றைக்கும் வெள்ளை இனம் என்பதை கொக்கேசியன் என்று குறிப்பிடுகின்றனர். சீனர்கள், தமது பூர்வீகத்தை வட சீனாவில் இருந்து ஆரம்பிக்கின்றனர். அதே போன்று, தமிழர்களும் தமது பூர்வீகத்தை குமரி கண்டத்தில் இருந்து தொடங்குகின்றனர். மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளின் ஒரே நோக்கம், தமது இனத்தின் தனித்துவத்தை வலியுறுத்துவது. துரதிர்ஷ்டவசமாக, அது அரசியலில் தீவிர வலதுசாரிப் போக்குடைய இனவாதிகளுக்கு உதவி வருகின்றது.
    
உலகில் எது முதலில் தோன்றியது? இனமா, அல்லது மொழியா? உதாரணத்திற்கு ஆங்கிலேயர்களை எடுப்போம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் இருந்து குடியேறிய ஜெர்மன் இன மக்களும், பிரித்தானியாவில் வாழ்ந்த கெல்டிக் இன மக்களும் கலந்த இனம் தான் ஆங்கிலேய இனம். அவர்கள் இன்று ஜெர்மன் மொழியும் பேசவில்லை, ஐரிஷ் போன்ற கெல்டிக் மொழியும் பேசவில்லை. ஜெர்மன், பிரெஞ்சு, நார்வீஜியன் மொழிகள் கலந்து ஆங்கிலம் என்ற புது மொழி உருவாகியது. தமிழர்களும் அதே போன்றதொரு அடையாளச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர். இன்று தமிழ் பேசும் மக்கள் பல இனக்கலப்புகளால் உருவானவர்கள். தமிழை ஒத்த திராவிட மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத கலப்பினால் புதிய மொழிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. தமிழ் மொழி மூவாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதை மறுக்க முடியாது. இதனால், மொழியியல் வல்லுனர்கள், திராவிட மொழிகளின் வேர்களை அறிவதற்காக தமிழ் மொழியை ஆழ்ந்து கற்கின்றனர். நாம் பேசும் நவீன தமிழ், பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டது. பழந் தமிழில் இருந்து வேறுபட்டுள்ளது. ஆனாலும், பிற திராவிட மொழிகளைப் போலல்லாது, சம்ஸ்கிருத கலப்பை கூடுமான அளவு தவிர்த்து வந்துள்ளது. தமிழர்களை ஒரு தனி இனமாக வரையறை செய்வதற்கு, அது மட்டும் போதாது. இடப்பெயர்வுகளுக்காளாகும் மக்கள், தாம் தங்கி விடும் இடத்தில் பேசப்படும் மொழியை, சொந்தமாக்கிக் கொள்வது வழக்கம். ஆகவே, தமிழர்கள் என்பதை, ஒரு மொழி பேசும் மக்கள் கூட்டமாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர் என்ற இனம் எங்கே இருக்கிறது? அது பெரும்பாலும் சாதி என்ற பெயரில் மறைந்திருக்கிறது. அகமண உறவுகளின் மூலம், இரத்த சம்பந்தம் பாதுகாக்கப் படுவதால், அந்த சாதி அல்லது இனம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று, நிறமூர்த்தங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முடிகின்றது. அவ்வாறு தான், அண்மையில் தமிழக மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தின் மரபணு, இந்திய உபகண்டத்திலேயே பழமையானது என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதைக் கேள்விப்பட்ட உடனேயே, பழங்குடி இனங்களை ஒதுக்கி வைத்திருக்கும், நகர்ப்புறத்தை சேர்ந்த "நாகரீகமடைந்த" தமிழர்கள், தமது தமிழினவாத பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டனர். தமிழகத்தில் இருளர்கள் போன்ற பழங்குடி இனங்கள், இன்றைக்கு முற்றாக அழிந்து போகும் நிலையில் உள்ளன. அவர்களும் தமிழ் பேசினாலும், ஆப்பிரிக்க கருப்பர்கள் போன்ற தோற்றத்தினால், "இருளர்கள்" என்று அழைக்கப் பட்டனர். எமது மூதாதையரின் வம்சத்தை பத்தாயிரம் வருடங்களாக பாதுகாத்து வரும் பழங்குடி இனங்களின் நல்வாழ்வுக்காக, இதுவரை ஒரு சிறு துரும்பைக் கூட நாம் எடுத்துப் போடவில்லை. ஆனால், நாம் முன்னெடுக்கும் இனவாத அரசியலுக்கு அவர்களை அழகு பொம்மைகளாக பயன்படுத்திக் கொள்கிறோம்.

அண்மைய கண்டுபிடிப்புகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக, பரணில் போட்டு வைத்திருந்த குமரிகண்டம் கோட்பாட்டையும் தூசு தட்டி எடுக்கிறோம். "ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவும், இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் நிலத்தால் இணைக்கப் பட்டிருந்தன. அதுவே குமரி கண்டம். அங்கே வாழ்ந்த தமிழன், இந்தியா ஊடாக உலகம் முழுவதும் சென்றான். அதுவே உலகில் முன் தோன்றிய மூத்த குடியின் வரலாறு," என்று முடிக்கின்றனர். குமரி கண்டம் பற்றிய கதையாடல்கள், தமிழர்கள் மத்தியில் பிரபலமான அளவுக்கு பிற இனங்களினால் பேசப் படுவதில்லை. அந்நிய அகழ்வாராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்களும் அதனை பல்வேறு தொலைந்த நாகரீகங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர். காவிரிப்பூம் பட்டினம் போன்று, கடல்கோளினால் அழிக்கப் பட்ட பண்டைய நாகரீகங்கள் சில கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் குமரி கண்டம் என்ற பிரமாண்டமான கண்டத்தின் இருப்பை உறுதி செய்யப் போதுமானவை அல்ல. குமரி கண்டம் பற்றிய கருதுகோள், ஆதாரம் குறைவான ஊகமாகவே இன்றும் நீடிக்கின்றது.

தமிழரின் முன்னோர்கள், "கடல்கோளால் அழிக்கப் பட்ட, கற்பனையான குமரி கண்டத்தில் இருந்து வந்தனர்" என்று, எதற்காக ஒன்றை கஷ்டப் பட்டு நிறுவ வேண்டும்? இன்று பல அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, "ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் தோன்றிய வரலாற்றில்" இருந்து தொடங்கலாமே? அதற்கான மொழியியல் ஆய்வுகளையும் செய்யலாமே? ஏற்கனவே, பேராசிரியர் அறவாணன் போன்ற சில அறிஞர்கள், "தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறினர்" என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வந்துள்ளனர். இருந்தாலும், இன்றைய தமிழ் இனவாதிகள், "ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய வரலாற்றை" மறைக்கும் காரணம் என்ன? தமிழ் இனவாத கோட்பாடு, ஐரோப்பிய மையவாத சிந்தனையின் பக்க விளைவு ஆகும். "மறுக்கவியலாது, ஐரோப்பியர்களே உலகிற் சிறந்த உன்னதமான நாகரீகத்தை கொண்ட மக்கட் கூட்டம். அவர்களுக்கு அடுத்த நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர். ஆப்பிரிக்கர்கள், நாகரிக வளர்ச்சியில் பின்தங்கியுள்ள காட்டுமிராண்டிகள். " என்ற இனவாத சிந்தனை அவ்வாறான முன் முடிவுகளை எடுக்க வைக்கின்றது.

தமிழர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய இனத்தை சேர்ந்தவர்கள் என்றால், ஆபிரிக்காவில் இன்றைக்கும் வாழும் சில இனங்களுடன் மொழி, கலாச்சார, மத ஒற்றுமைகள் காணப் படுமல்லவா? அவற்றை ஆராய்வதும், தொடர்புகளை விளக்குவதுமே இந்த தொடரின் நோக்கம். ஏற்கனவே பேராசிரியர் அறவாணன் போன்றோர் எழுதிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, நான் மேலும் சில தகவல்களை சேர்த்துள்ளேன். மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னர், சில ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்த பின்னர் தான், எனக்கும் அந்த உண்மை தெரிய வந்தது. எமது மொழி, கலாச்சாரங்களைப் பற்றிய தகவல்களை பறிமாறிக் கொண்டோம். தமிழர்களினதும், ஆப்பிரிக்கர்களினதும் பண்பாட்டுக் கூறுகள் பல, அதிசயப் படத் தக்க ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இதனை நாம் ஐரோப்பியரிடம் எதிர்பார்க்க முடியாது.

தமிழர்களைப் போன்ற தோற்றம் கொண்ட ஆப்பிரிக்கர்கள் இருக்கின்றனர். அவர்கள் வாயைத் திறந்து பேசினால் ஒழிய, அவர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை கண்டு பிடிப்பது கடினம். குறிப்பாக, சோமாலியர்கள், எத்தியோப்பியர்கள், எரித்திரியர்கள் போன்ற இனங்களில், தமிழர்களின் முகச் சாயலைக் கொண்ட பலரைக் காணலாம். சோமாலியர்கள், மற்றும் அரேபியாவை சேர்ந்த யேமனியர்கள், இன்றைக்கும் தமிழர்கள் போன்று சாரம் (லுங்கி, கைலி) உடுத்துகின்றனர். உணவை சமைக்கும் முறைகளும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆகவே, தமிழர்களின் சகோதர இனங்களின் தாயகமான கிழக்கு ஆப்பிரிக்காவிலேயே எமது தேடலைத் தொடங்க வேண்டும்.

சோமாலியாவில் மட்டுமல்லாது, ஜிபூத்தி, எத்தியோப்பியாவின் கிழக்கு மாகாணம், கென்யாவின் வட-கிழக்கு மாகாணங்கள், போன்ற இடங்களிலும் சோமாலிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரேயொரு தேசிய இனம் சோமாலிய இனம் மட்டுமே. இன்றைக்கும், சோமாலியர்கள் தம்மை ஆப்பிரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வித்தியாசப் படுத்திப் பார்க்கின்றனர். சோமாலிய, மற்றும் எத்தியோப்பிய/எரித்தியரின் அம்ஹாரி மொழிகள் அரபு போன்ற செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. யூத, அல்லது இஸ்லாமிய மதங்களின் பரம்பல் காரணமாக, ஹீபுரு, அரபு மொழிகளில் இருந்தே சோமாலிய, அம்ஹாரி மொழிகள் தோன்றின என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரேபியரும், ஹீபுரூக்களும் ஆப்பிரிக்காவில் இருந்து சென்றிருக்கவும் வாய்ப்புண்டு. நாம் உலக வரலாற்றை எதிர்த் திசையில் திருப்பிப் போட்டால், எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
  
வட-கிழக்கு ஆப்பிரிக்காவில், கூஷி சாம்ராஜ்யம் ஆப்ரிக்கர்களின் பண்டைய நாகரீகத்திற்கு சான்றாக திகழ்கின்றது. (Kingdom of Kush http://en.wikipedia.org/wiki/Kingdom_of_Kush) இன்றைய தென் எகிப்து, வட சூடான் பகுதிகளை உள்ளடக்கியது. பண்டைய எகிப்தில் இருப்பதைப் போல், பிரமிட்கள் ஏராளமாக கட்டப்பட்டன. ஒரே மாதிரியான தெய்வங்கள் கூட வழிபடப் பட்டு வந்தன. ஆகவே பண்டைய எகிப்திய மொழிக்கும், கூஷி மொழிக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். இன்று வழக்கத்தில் உள்ள சோமாலிய மொழி, மற்றும் ஒரோமோ (எத்தியோப்பியாவில் ஒரு சிறுபான்மை இனம்) மொழி என்பன, கூஷி மொழியின் கிளை மொழிகளாகும். ஆகவே எகிப்திய, கூஷி, சோமாலிய மொழிகளுக்கும், தமிழ் மொழிக்கும் இடையில் ஒற்றுமைகள் இருக்க வேண்டும். மொழியியல் அறிஞர்கள் இது குறித்து ஏற்கனவே ஆராய்ந்துள்ளனர்.

மொழியியல் ஆய்வைப் பொறுத்த வரையில், தனியே தமிழ் மொழியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ், தெலுங்கு, சிங்களம் இவற்றிற்கு பொதுவான மொழி ஒன்று ஆதி காலத்தில் இருந்திருக்க வேண்டும். தமிழில் பயன்படுத்தப் படாத பல சொற்கள், பிற திராவிட மொழிகளில் பாவனையில் இருக்கலாம். ஆகவே, அவற்றையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உதாரணத்திற்கு, சிங்கள மொழியில் "மால்" என்றால் மீன் என்று அர்த்தம். (South Dravidian etymology http://starling.rinet.ru/cgi-bin/response.cgi?single=1&basename=/data/drav/sdret&text_number=3954&root=config) தமிழில், தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடப் பயன்படுத்துகின்றோம். உதாரணத்திற்கு: மால் முருகன், திரு மால். தமிழிலும் மால் என்பதை மீன் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்துகின்றோம். விஷ்ணுவின் (திருமால்) முதலாவது அவதாரம் மச்சாவதாரம் ஆகும். தமிழகத்தின் முதலாவது தமிழ் ராஜ்யத்தை உருவாக்கிய பாண்டியர்களின் சின்னம் மீன். ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை ஸ்தாபிக்கப் பட்ட, ஆதி கால திராவிட அரசுகள் மீன் இலச்சினையை பயன்படுத்தி உள்ளன. கிறிஸ்தவம் தோன்றிய இடங்களில் வாழ்ந்த மக்களால் வழிபடப்பட்ட மீன் சின்னம், பிற்காலத்தில் சிலுவைக் குறியாக மாறியிருக்கலாம்.

"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்" என்று, முருகனை தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடும் போக்கு காணப் படுகின்றது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், போன்ற பிற திராவிட இன மக்களும் முருகனை வழிபடுகின்றனர். ஆகவே, "முருகன் ஒரு திராவிடக் கடவுள்" என்று அழைக்கலாமா? ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! "முருங்கு கடவுள்" என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது! தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்! ஆப்பிரிக்க கண்டத்தில், இரண்டாவது உயரமான "கென்யா மலை" கிகுயூ மக்களுக்கு புனிதமானது. (Mount Kenya http://en.wikipedia.org/wiki/Mount_kenya) அந்த மக்கள் "கிரி எங்கை" (எங்கை கடவுளின் மலை) என்று அழைக்கின்றனர். தமிழிலும், கிரி என்ற சொல்லுக்கு மலை என்று அர்த்தம்!

உலகின் முதல் மனிதன், கென்யா மலையில் இருந்து இறங்கி வந்ததாக, கிகுயூ மக்கள் நம்புகின்றனர். கிட்டத்தட்ட இதே போன்ற கதை, கதிர்காமத்தை அண்டி வாழும் வேடுவ பழங்குடி இன மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டும் வழக்கம் உள்ளது. கிகுயூ இன மக்கள், வட கிழக்கில் அமைந்துள்ள கென்யா மலையை நோக்கியவாறு, கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டுவது வழக்கம். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் தோன்றுவதற்கு முன்னமே, ஓரிறைக் கொள்கை, ஒரே இறைதூதர் கோட்பாடுகள் கிகுயூ மக்களின் மத நம்பிக்கைகளாக இருந்துள்ளன. ஆதாம்- ஏவாள் கதையை ஒத்த முதல் மனிதனின் கதையும் (கிகுயூ-மும்பி) அவர்களின் பூர்வீகத்தை பற்றி அறியத் தருகின்றது. (Kikuyu People - Myths of Origin http://emmanuelkariuki.hubpages.com/hub/Kikuyu-Other-myths-of-Origin)

பண்டைய சூடானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் திராவிட இனத்தவர்கள், இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். தமிழகத்தின் சில பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்ட முதுமக்கள் தாழிகள் அதற்கு சாட்சியம் பகர்கின்றன. அதே போல, செத்த வீட்டில் ஒப்பாரி வைக்கும் பழக்கமும், அங்கிருந்து இந்தியா வரை தொடர்ந்து வந்துள்ளது. சுமேரியா (இன்று: ஈராக்) மக்களின் ஒப்பாரி வைக்கும் வழக்கம் பற்றி விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. ஆகவே, அங்கேயும் திராவிட மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. திராவிட மக்கள் என்பது, ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி புலம்பெயர்ந்த மக்களைக் குறிக்கும் பொதுப் பெயராகும்.

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களின் பண்டைய ராஜ்யமான கூஷி என்ற பெயர், திராவிட மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் காணப்படுகின்றன. வட இந்தியாவில் காசி நகரத்தை திராவிடர்களே கட்டியிருக்க வேண்டும். காஷ்மீர் என்ற பெயர் கூட, அங்கு கூஷி திராவிடரின் நாடு இருந்தமைக்கான சான்றாகும். சுக்ரீவன் ஆண்ட கிஷ்கிந்தை நகரம் பற்றி இராமாயணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் முதல் வட இந்தியா வரை வியாபித்திருந்த குஷானா சாம்ராஜ்யம், திராவிட நாகரீகத்தை கட்டி வளர்த்தது. மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகளால் செழிப்புற்றது. குஷானா சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற சக்கரவர்த்தி கனிஷ்கா காலத்தில், புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனா வரை பரவி இருந்தது. குஷானா சாம்ராஜ்யத்தின் பௌத்த மதப் பின்னணி காரணமாக, இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, தமிழினவாதிகளும் அதன் திராவிடப் பழம் பெருமையை புறக்கணித்து வந்துள்ளனர்.

அடுத்து வரும் பகுதிகளில், எமது மூதாதையரான கறுப்பின ஆப்பிரிக்கத் தமிழரின் வரலாற்றை விரிவாகப் பார்ப்போம்.
  • "தமிழ்" என்ற சொல் எங்கே, எப்படித் தோன்றியது?
  • தமிழர்கள் பற்றி விவிலிய நூலில், திருக் குர் ஆனில் எழுதப் பட்டுள்ளதா?
  • தமிழ் மொழிக்கும், சோமாலிய மொழிக்கும் பொதுவான சொற்கள் என்ன?
  • பண்டைய கூஷி, எகிப்திய நாகரீகங்களுக்கும், தமிழருக்கும் இடையிலான ஒற்றுமைகள் என்ன?
  • ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த கறுப்பினத் தமிழர்கள், எந்தெந்த இடங்களில் தமது நாகரீகங்களை நிலை நாட்டினார்கள்?
  • சிவன் என்ற திராவிட நாடோடிக் கூட்டத்தின் தலைவன், கடவுளான கதை. 
  • சிவன் - பார்வதி கலியாணத்தை நினைவு படுத்தும், ஈராக்கிய திராவிட மக்களின் காலத்தால் அழியாத காவியம். 
  • முதலாவது சீன சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த, சீனாவின் பூர்வகுடி மக்களான கறுப்பின திராவிடர்கள்.

(தொடரும்)


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Ramesh Murugan

unread,
Jan 23, 2013, 8:51:31 AM1/23/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்

பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்

by கலையரசன்
[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]

(இரண்டாம் பாகம்)

"உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மாவீரன் அலெக்சாண்டர்" பற்றி நிறையக் கதைகள் கேள்விப் பட்டிருப்போம். மேலைத்தேய வரலாற்று ஆசிரியர்கள், அலெக்சாண்டர் எந்தெந்த நாடுகளை வெற்றி கொண்டான் என்று விபரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். வரலாறு என்பதற்கப்பால், அலெக்சாண்டர் பற்றிய புனைகதைகளும் உலாவுகின்றன. அலெக்சாண்டர், இலங்கையில் உள்ள சிவனொளிபாத மலைக்கு விஜயம் செய்ததாக ஒரு கதை உண்டு. அந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை. அதே போல, அலெக்சாண்டரின் படைகள் தென்னிந்தியா வரை வந்ததாகவும், குடகு மலையில் வாழும் மக்கள், கிரேக்க வம்சாவளியினர் என்றும், ஒரு கற்பனைக் கதை உலாவுகின்றது. இந்தக் கதை, இந்தியா பற்றி Lonely Planet வெளியிட்ட பயண நூலிலும் எழுதப் பட்டுள்ளது. அலெக்சாண்டர் இலங்கைக்கு விஜயம் செய்த கதை, காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயரினால் பரப்பப் பட்டது. மேலைத்தேய நாட்டவர்கள் இது போன்ற கதைகளை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். அதன் நோக்கம், காலனிய காலகட்டத்திற்கு முன்னமே, வெள்ளையர்கள் உலகம் முழுவதும் ஆண்டார்கள் என்ற இனவாத கருத்துகளை பரப்புவது.

ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரீகமடைந்திருந்த ஒரே நாடு, கிரேக்கம் மட்டுமே. அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்குப் பின்னர் தான், கிரேக்கர்களுக்கு வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பிற ஐரோப்பியர்களும், கிரேக்கர்கள் மூலமாகத் தான் உலகின் பிற நாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் வாழும் மக்களைப் பற்றி அறிந்து கொண்டார்கள். இன்று மத்திய தரைக் கடல் நாடுகளில் பல கிரேக்கப் பெயர்கள் காணப் படுகின்றன. உதாரணத்திற்கு, எத்தியோப்பியா என்றால், கிரேக்கத்தில் "கருகிய முகத்தை கொண்டவர்கள்" என்று அர்த்தம். கிரேக்க மொழியில், கருப்பர்களை மவ்ரி (μαυροι) என்று அழைப்பார்கள். மவ்ரி என்ற சொல் மருவி, பிற்காலத்தில் "மூர்" என்ற சொல் தோன்றியது. மொரிட்டானியா என்ற நாட்டுப் பெயரின் மூலமும் மவ்ரி தான். அலெக்சாண்டர் காலத்தில் வாழ்ந்த கிரேக்கர்கள், மவ்ரி என்ற சொல்லை கருப்பர்கள் என்ற அர்த்தத்தில் பாவித்தார்களா? அனேகமாக அந்த அர்த்தம் பிற்காலத்தில் வந்திருக்கலாம்.

அலெக்சாண்டரின் படையெடுப்புகளின் பொழுது, ஆப்பிரிக்காவில் கிரேக்கர்கள் சந்தித்த இனம் ஒன்றின் பெயராக "மவ்ரி" இருந்திருக்கலாம். அதன் மூலம் எதுவாக இருக்கும்? பாண்டிய மன்னர்கள் காலத்தில், தமிழகத்தில் "மறவர்கள்" என்றொரு இனக்குழு இருந்தது. ஒரு பழங்குடி இனமாக, அல்லது தனியான சாதியாக கருதப்பட்ட மறவர்கள், ஆதி திராவிட இனக் குழுமத்தை சேர்ந்த மக்கள் என்பதில் சந்தேகமில்லை. வட இந்தியாவில், "மௌரியர்களின் சாம்ராஜ்யம்" இருந்தது. மௌரியர்களும் திராவிட இனத்தவர்கள் தான் என்பதை, வரலாற்று அறிஞர்கள் உறுதிப் படுத்தி உள்ளனர். தென் அரேபிய நாடான யேமனில், "மஹரி அல்லது மேஹ்ரி" என்ற பெயரைக் கொண்ட இனக்குழு ஒன்று வாழ்கின்றது. அவர்கள் அரபி போன்ற, ஆனால் வேறொரு மொழி பேசுகின்றனர். (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) கிரேக்க மவ்ரி தான், அரபியில் மஹரி என்று மருவி வந்துள்ளது. பெயர்ச் சொற்கள் இடத்துக்கிடம் மாறுபடுவதுண்டு. கிரேக்க சொல்லான மவ்ரி, இத்தாலியில் மவ்ரோ என்றும், பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொரிஸ் என்றும் மருவி வந்துள்ளது. இன்றைக்கு அவை எல்லாம், தனி நபர்களின் பெயர்களாக மாறி விட்டன. ஒரு பிள்ளைக்கு, தமிழில் மறவன் என்று பெயரிட்டாலும், ஆங்கிலத்தில் மொரிஸ் என்று பெயரிட்டாலும், இரண்டினதும் அர்த்தம் ஒன்று தான். அதாவது, கருப்பன்!

அலெக்சாண்டர் ஆப்பிரிக்கா வரை படையெடுத்து சென்றது, சரித்திரத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் கிரேக்கப் படைகளால் எகிப்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. நுபியா (இன்று:சூடான்) என்ற ராஜ்யத்தை கைப்பற்ற யுத்தம் நடந்ததாகவும், நுபிய நாட்டின் இராணி, படைகளை வழிநடத்தி தீரத்துடன் போரிட்டதாகவும், சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. அலெக்சாண்டர் நுபியா வரை படையெடுத்து சென்றதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. கறுப்பர்களின் ராஜ்யமான நுபியாவை ஆண்ட இராணியின் மகிமை பண்டைய ஐரோப்பா வரை பரவி இருந்ததை அந்தக் குறிப்புகள் காட்டுகின்றன. பண்டைய எகிப்தியரின் காலத்தில் இருந்து, தேசத்தை நிர்வகித்த பெண்கள் பற்றிய வரலாற்றுக் கதைகள் பல உள்ளன. இன்றைக்கு, வட ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில், கடுமையான ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயம் வேறு. ரோமர்களும், அரேபியர்களும் வட ஆப்பிரிக்கப் படையெடுப்புகளின் பொழுது, பெண்கள் தலைமை தாங்கிய படைகளை எதிர்கொண்டு போரிட்டார்கள்.

இறைதூதர் முகமதுவின் படைகள், அரேபிய தீபகற்பத்தை இஸ்லாமிய மயப் படுத்துவதற்காக நடந்த யுத்தத்தில் நடந்த சம்பவம் ஒன்று விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமதுவின் படைகளை எதிர்த்துப் போரிட்ட, அரேபிய இனக்குழு ஒன்றின் தலைவி ஹிந்த் அல் ஹுனுத் (Hind al-Hunnud) பற்றிய கதை மிகவும் பிரபலமானது. 
Hind al-Hunnud (also known as Hind al-Hunud) was a “Battle Queen” in the Quraish tribe of the kingdom of Kindah who led a battle against Muhammad. In Arabian culture, women played an important role in battle. The emotional center of traditional Arab tribal warfare, the cult of the battle queen, derived from the earliest roots of Arabic culture, evolved through time, and still exists. The battle queen mounted her camel and led them into battle. Sometimes this woman functioned merely as a ritual figure with little direct military purpose: a combination cheerleader, symbolic commander in chief, goddess, and living pinup.

பண்டைய அரேபிய இனக் குழுவினர், கன்னிப் பெண்களை போர்க் களத்திற்கு அனுப்பும் வழக்கத்தை உடையவர்கள். கூந்தலை விரித்து விட்ட படி, திறந்த மார்புடன், கையில் வாளேந்திய கன்னிப் பெண்கள், ஆண்களை வசீகரிப்பதற்காக போர்க்களத்திற்கு அனுப்பப் பட்டனர். உண்மையில், இது ஒரு குறிப்பிட்ட இன மக்களின் பாரம்பரியமாக இருக்கலாம். பெண் வழிச் சமுதாயம், அரசு அமைத்த காலத்தில், பெண்கள் இனக்குழுத் தலைவிகளாக, தளபதிகளாக இருந்துள்ளனர். அதுவே பெண் தெய்வ வழிபாட்டின் மூலமாகவும் இருந்திருக்கலாம். தமிழர்களின் கண்ணகி வழிபாடு, இது போன்ற சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆப்பிரிக்காவில், நுபியாவை ஆண்ட இராணிகளை "கண்டகி" என்று அழைப்பார்கள். கண்டகி என்பது அவர்களது பட்டப் பெயர். ஆகவே, நுபிய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப் படுவதற்கு முன்னமே, அந்தப் பெயர் சம்பிரதாயமாகப் பின்பற்றப் பட்டு வந்திருக்கலாம். விவிலிய நூலில், எத்தியோப்பியாவை ஆண்ட கண்டகி (Candace) இராணி பற்றிய குறிப்புகள் வருகின்றன. கண்ணகிக்கும், கண்டகிக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. அதனை உறுதிப் படுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நம்மூர் கோவலன்-கண்ணகி கதை போன்ற ஒரு புராணக் கதை எகிப்தியர்களின் மத நம்பிக்கையாக இருந்தது. பரோ மன்னர்கள் ஸ்தாபித்த எகிப்திய ராஜ்யத்திலே, அது கடவுளரின் புராணக் கதை போன்றே சொல்லப் பட்டு வந்துள்ளது. ஆகவே, "கண்ணகி வழிபாடு" அல்லது "கண்ணகி கதை", குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இனி, பண்டைய எகிப்தியரின் கண்ணகி கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இந்தக் கதையில் வரும் ஒசிரிஸ் மன்னன் நல்லவனாகவும், அவன் சகோதரனான செத், கெட்டவனாகவும் சித்தரிக்கப் படுகின்றனர். நீதியுடனும், நேர்மையுடனும் நாட்டை ஆண்ட ஒசிரிஸ் மன்னனை கொல்வதற்கு செத் ஒரு சதித் திட்டம் தீட்டுகின்றான். ஒரு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறான். எந்த வித தயக்கமும், சஞ்சலமும் இன்றி, விருந்தில் கலந்து கொண்ட ஒசிரிசுக்கு, மது ஊற்றிக் கொடுத்து விட்டு, ஒரு விபரீத விளையாட்டுக்கு அழைக்கிறான். ஒரு பெட்டியில் வைத்து மூடி, ஆணி அறைந்து, கண்காணாத இடத்தில் வீசி விடுகிறான். கணவன் வீடு திரும்பாததால் கலக்கமடைந்த, ஒசிரிசின் மனைவியான இசிஸ், கணவன் கொலையான சம்பவத்தை கேள்விப் பட்ட பின்னர், அவனது உடலைத் தேடிச் செல்கிறாள். நைல் நதியில் வீசப்பட்ட பெட்டி, கடலில் தவழ்ந்து பில்போஸ் என்ற நாட்டில் போய்ச் சேர்கின்றது. அங்கிருந்து உடலை எடுத்து வந்து, எகிப்தில் அடக்கம் செய்ய விரும்புகிறாள். ஆனால், வன்மம் கொண்ட செத், ஒசிரிசின் உடலை 14 துண்டுகளாக வெட்டி வீசுகின்றான். மீண்டும், கணவனின் உடல் பாகங்களை தேடிச் செல்லும் இசிஸ், அனைத்து பாகங்களையும் தேடி எடுத்து அடக்கம் செய்கின்றாள். அதே நேரம், ஒசிரிஸ், இசிசின் மகன் ஹோருஸ் (கருடன்) பெரியவனாக வளர்ந்து விட்டான். தீய சக்தியான செத் தை பழிவாங்குமாறு, இசிஸ் தனது மகனை ஒரு தர்ம யுத்தத்திற்கு அனுப்புகிறாள். நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் நடக்கிறது. (The Osiris Legend

இந்தக் கதையின் சாராம்சம், கணவனைக் காணாமல் துயருறும் இசிஸ், அவனது உடலை தேடி அலைவது. தீமையின் அவதாரமான செத் மன்னனுக்கு எதிரான தர்மயுத்தம் என்பனவாகும். பண்டைய எகிப்தில் மட்டுமல்ல, நுபிய ராஜ்யத்திலும் பட்டத்து ராணிகளான பெண்களின் பங்கு அளப்பெரியது. சில நேரம், மன்னனை விட சக்தி படைத்தவர்களாக இருந்துள்ளனர். பண்டைய எகிப்தியர்களின் மதத்தில், இசிஸ் என்ற பெண் தெய்வம் சக்தி வாய்ந்ததாக கருதப் படுகின்றது. இந்தியாவில், "பத்தினித் தெய்வம்" என்ற பெயரில் இசிஸ் வழிபடப் பட்டு வந்துள்ளார்.

இசிஸ், பத்தினி, கண்ணகி, இந்த மூன்று தெய்வங்களைப் பற்றிய கதைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. இருப்பினும், இந்த தெய்வங்களை வழிபட்ட மக்களின் காலம், வாழ்விடம், கலாச்சாரம் என்பன கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். பத்தினி தெய்வம் பற்றிய கதைக்கும், கண்ணகி கதைக்கும் இடையில் கூட வேறுபாடு உண்டு. பத்தினியின் கணவன் பெயர் பலாங்கா. இசிஸ் போன்று, பத்தினியும் தனது கணவனின் மரணத்தால் துயருற்று, உடலை தேடிச் செல்கிறாள். இசிஸ் போன்று, தனது மந்திர சக்தியை பாவித்து இறந்த கணவனை உயிர்ப்பிக்கிறாள். கண்ணகியும், தனது கற்பின் வல்லமையினால் கணவனான கோவலனை உயிர்த்தெழ வைக்கிறாள். உயிர்த்தெழுந்த கோவலனை கடவுளர் வாழும் சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, பூமியில் உள்ள தீயவர்களை பழிவாங்க கிளம்புகிறாள். எகிப்திய புராணத்தில், இசிஸ் தனது கணவனான இசிரிசை உயிர்த்தெழ வைத்து, பாதாள லோகத்திற்கு அதிபதி ஆக்குகிறாள். (தெய்வங்களுக்கு மரணம் இல்லை என்பது ஒரு மத நம்பிக்கை.) ஹோருஸ் தலைமையில் நடக்கும் போரில் தீயவர்கள் அழிக்கப் பட்ட பின்னர், இசிரிஸ் மீண்டும் பூலோகத்திற்கு திரும்பி அரசாளலாம்.

உண்மையில், பத்தினி தெய்வ வழிபாடு கோவலன், கண்ணகி கதை நடந்த காலத்திற்கு முன்பிருந்தே நிலவி வந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள், தமிழர்கள் மத்தியில் இருந்த புராணக் கதை ஒன்றுடன், கோவலன் - கண்ணகி கதையையும் இணைத்து, காலத்தால் அழியாத காவியம் ஒன்றைப் படைத்துள்ளார். இருப்பினும், தென்னிந்தியாவில் பரவிய இந்து-பார்ப்பனிய சித்தாந்தம் காரணமாக, கண்ணகி கற்புக்கரசியாக மாற்றப் பட்டார். இன்றைக்கும், சில தமிழ் வித்தகர்கள், "கற்பிற் சிறந்தவள், கண்ணகியா, மாதவியா," என்று மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இசிஸ் அல்லது பத்தினி ஆகிய தெய்வங்கள், "கற்பு" என்ற நல் ஒழுக்கத்திற்காக போற்றப் படவில்லை. ஒரு மனைவி கணவன் மீது கொண்ட அளவு கடந்த காதலுக்காக, மக்களால் போற்றப் பட்டார்கள். "காதல் என்ற உணர்ச்சியின் சக்திக்கும், கற்பு என்ற நெறியின் மகிமைக்கும்" இடையிலான வித்தியாசத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனேகமாக, பிற்காலத்தில் வந்த பார்ப்பனீய கருத்தியல், கண்ணகியின் பெருமை, அவளின் கற்பு எனும் ஒழுக்கத்தின் காரணமாக ஏற்பட்டதாக திரித்திருக்கலாம். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்த அறிஞர்கள், இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கலாம்.


கோவலன்-கண்ணகி கதை நடந்த காலத்திலும், சிலப்பதிகாரம் எழுதப் பட்ட காலத்திலும், தமிழகத்தில் சமண மதம் கோலோச்சியது. இதனால், சிலப்பதிகாரத்தை ஒரு சமண மதக் காவியம் என்றும் கூறுவார்கள். புராதன இந்தியர்களின் பத்தினி வழிபாட்டை, சமண மதம் ஏற்றுக் கொண்டிருந்தது. காலப்போக்கில், பத்தினி என்ற பெயர் மருவி, அந்த தெய்வத்திற்கு கண்ணகி அம்மன் என்ற பெயர் நிலைத்து விட்டது.எகிப்திய இசிஸ் வழிபாடும், பத்தினி தெய்வ வழிபாடும் ஒன்று தான் என்பது, ரோமர் கால ஆவணத்தில் இருந்து தெரிய வருகின்றது. "Oxyrhynchus Papyrus" என்ற ஆவணத்தில் உள்ள தகவல், அது எழுதப் பட்ட காலத்தை விட பழையதாக இருக்கலாம். ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை முழுவதும், பத்தினி தெய்வ வழிபாடு நிலவியது. பத்தினி தெய்வம், கண்ணகி அம்மன் என்ற இரண்டு பெயர்களும் அந்த பெண் தெய்வத்தைக் குறிப்பிட பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன. இலங்கையில், சிங்களவர்களும், தமிழர்களும் பத்தினி தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர்.

இன்றைக்கு ஒரு சில இடங்களில் மட்டுமே "கண்ணகி அம்மன்" கோயில்கள் எஞ்சியுள்ளன. அதற்கு காரணம், இந்து மதத்தின் மேலாதிக்கம். உலகம் முழுவதும், மதங்களின் மேலாதிக்கம் கலாச்சார அழிவுகளை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்து மதமும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழர்களின் பாரம்பரிய மரபை கட்டிக் காப்பாற்றி வந்த கண்ணகி தெய்வம், ராஜராஜேஸ்வரி போன்ற பெயர்களால் சம்ஸ்கிருத மயப் படுத்தப் பட்டது. 19 ம் நூற்றாண்டு வரையில், யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாடு தொடர்ந்து கொண்டிருந்தது. "சைவ - வெள்ளாள" சாதியத்தை, வாழ்க்கை நெறியாக நிறுவிய கோட்பாட்டுவாதியான ஆறுமுகநாவலர், கண்ணகி வழிபாட்டை கடுமையாக எதிர்த்து வந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், "கண்ணகி வழிபாடு சமண மதத்திற்குரியது." தமிழகத்தில், நாயன்மார்களின் பக்தி இயக்கம் காரணமாக, 12 ம் நூற்றாண்டிலேயே, பத்தினித் தெய்வ வழிபாடு மறைந்து விட்டது. தமிழர்களின் மூவாயிரம் ஆண்டு கால தொன்மையை அழித்தவர்கள், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமல்ல. தமிழர்கள் இந்து மதத்தை பின்பற்றிய நாளில் இருந்தே, அவர்களது பண்பாட்டு அழிவு ஆரம்பமாகி விட்டது.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள் :
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!


மேலதிக தகவல்களுக்கு:
Nubia
Candace of Meroë
Osiris myth
The Cult of the Goddess Pattini

2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com
 
)

Ramesh Murugan

unread,
Jan 23, 2013, 9:05:05 AM1/23/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்

நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா!]


(மூன்றாம் பாகம்)
________________________________________________________________________
சோமாலியா என்ற பெயரைக் கேட்டவுடன் பலர் முகத்தை சுழிப்பார்கள். கடும்போக்கு தமிழினவாதிகள் கூட, பழந்தமிழன் பெருமையை சோமாலியாவுடன் இணைத்துப் பார்க்க விரும்ப மாட்டார்கள். சோமாலியா என்றால், "தினம் தினம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க மக்களின் நாடு," என்ற வல்லாதிக்க பிரச்சார விதிகளுக்கு உட்பட்டு தான், தமிழனின் பெருமை பேசப்படுகின்றது. இதனால் தமிழன், தனது முன்னோர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க தாயகத்தை மறக்க விரும்புகின்றான். அதற்குப் பதிலாக, "குமரி கண்டம்" என்ற கற்பனையான தாயகத்தை, தானே உருவாக்கிக் கொள்கிறான். "தனது சொந்த தாய் ஏழையாக இருப்பதால்", அவளை "அம்மா" என்று அழைக்க விரும்பாத பிள்ளை, இன்னொரு கற்பனைத் தாயை மனதில் வரித்துக் கொள்வது போன்றது இது. தங்களை ஆப்பிரிக்காவுடன் இனங் காண விரும்பாத தன்மை, தமிழின வாதிகளுக்கு மட்டுமே உரிய குறைபாடு அல்ல. தூய ஆரிய பூர்வீகத்தை புனைவதற்காக, சிங்கள இனவாதிகள் விஜயனின் வருகையுடன் தமது வரலாற்றை தொடங்குகின்றனர். ஒரு காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், திராவிட இன மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் மூதாதையர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தனர். அவர்களது தாயகம், சஹாரா பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. அங்கிருந்து அரேபியா சென்று, ஈரான் வழியாக இந்தியா வந்து சேர்ந்தார்கள். புராதன ஆப்பிரிக்க-திராவிட இன மக்கள் தங்கி வாழ்ந்த இடங்களில் விட்டுச் சென்ற சாட்சியங்களின் அடிப்படையில், இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப் படுகின்றது.

தமிழ் மக்களுக்கும், சோமாலிய மக்களுக்கும் பொதுவான கலாச்சார ஒற்றுமைகள் நிறைய உள்ளன. ஊறுகாயுடன் சோறு உண்பது முதல், சாப்பிட்டு விட்டு வெற்றிலை போடுவது வரையில், ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைப் பிடிக்கின்றனர். சில சொற்களும் இந்தியாவை நினைவு படுத்துகின்றன. உதாரணத்திற்கு, பரிஸ் பிலாவ் (பிலாவு அரிசி), பான் (பீடா) என்பன. இந்த ஒற்றுமையை, 1330 ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த மொரோக்கோ நாட்டை சேர்ந்த யாத்திரீகர் இபுன் பதூதா, பயணக் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். சோமாலியாவில், மொகாடிஷு அரசரின் விருந்தாளியாக சென்ற இபுன் பதூதா, "ஒரு தட்டில் பாக்கு, வெற்றிலை வைத்துக் கொடுத்து" வரவேற்கப் பட்டார். இந்தியாவில், விருந்தாளிகளை கௌரவிப்பதற்காக பாக்கு, வெற்றிலை கொடுக்கும் பழக்கத்தை இபுன் பதூதா அறிந்து வைத்துள்ளார். அது மட்டுமல்ல, சோமாலியர்களின் உணவுப் பழக்கம் கூட இந்தியர்களை ஒத்திருந்ததை சிலாகித்து பேசுகின்றார். (As soon as he was settled in Mogadishu, the sultan sent him two small welcoming gifts: a plate of betel leaves and areca nuts, and a vial of Damascus rosewater. http://www.saudiaramcoworld.com/issue/200504/the.traveler.ibn.battuta.htm)  தமிழர்களுக்கும், சோமாலியர்களுக்கும் இடையிலான இன்னொரு பொதுவான அம்சம், பாரம்பரிய உடை. ஆண்கள், வேட்டி, சாரம் உடுப்பதும், பெண்கள் சேலை உடுப்பதும், இரண்டு கலாச்சாரங்களுக்கும் பொதுவானது.

இபுன் பதூதா சுற்றுப் பயணம் செய்த காலங்களில், கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரையில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிந்திருந்தது. அதனால் ஏற்பட்ட வர்த்தகத் தொடர்புகளையும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், பல உணவுப் பதார்த்தங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகி இருக்க வாய்ப்பில்லை. அவை யாவும், ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயிரிடப் பட்டுக் கொண்டிருந்தன. வெற்றிலை போன்றதொரு இலைவகை, அந்தப் பிராந்தியத்தில் போதைவஸ்தாக பயன்படுத்தப் படுகின்றது. "காட்" (Khat, Qat, http://en.wikipedia.org/wiki/Khat) வெற்றிலையை விட சிறிய இலை வகை தாவரம். ஆனால், காரம் அதிகமானது. அதன் சாறு தரும் போதை, ஒருவரை மயக்கத்தில் ஆழ்த்தக் கூடியது. காட் இலை சாப்பிடும் பழக்கம், எத்தியோப்பியா, சோமாலியா, யேமன் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. அந்தப் பிராந்தியத்தின் சரித்திரக் காலகட்டத்திற்கு முன்பிருந்தே, காட் இலை உமிழும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த திராவிட இன மக்கள், குடியேறிய நாடுகளில் எல்லாம் வெற்றிலை உமிழும் பழக்கமும் தொடர்ந்து சென்றது. இபுன் பதூதா காலத்தில், "ஆதித் திராவிடரின் இடப்பெயர்வு" பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஆராய்ச்சி செய்யவுமில்லை. அதனால், சோமாலியர்களின், யேமனியர்களின் அரிசி உண்ணும் பழக்கும் கூட, இந்தியாவில் இருந்து சென்றதாக கருதினார்.

தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான காலை உணவுகளில் ஒன்று, "அப்பம்". வட இந்தியாவில் கூட அந்த உணவை கேள்விப் பட்டிருக்க முடியாது. ஆனால், ஆயிரம் மைல்களுப்பால், சோமாலியாவிலும், எத்தியோப்பியாவிலும் வாழும் மக்கள் காலை உணவாக அப்பத்தை உட்கொள்கின்றனர் என்பது வியப்பல்லவா? (injera,http://en.wikipedia.org/wiki/Injera)  தமிழர்களுக்கும், எத்தியோப்பிய, சோமாலிய மக்களுக்கும் இடையிலான, இது போன்ற கலாச்சார ஒற்றுமைகளை அடுக்கிச் சென்றால், அதற்கென தனியாக புத்தகம் எழுத வேண்டி இருக்கும். தமிழ் மொழிக்கும், சோமாலி மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகளை சிறிது பார்ப்போம்.

சோமாலிய மொழி - தமிழ் மொழி
பரஸ் - பரி (குதிரை)
ப(B)ரிஸ் - அரிசி
ஆப்பா - அப்பா
யரான் - சிறுவன்
ஹிந்டிஸ் - சிந்துதல்
அலோல் - அல்குல் (பெண்குறி)
குன் - உண்

சோமாலிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்கு ஆப்பிரிக்க மொழிகளான, செனகல், புலானி மொழிகளுக்கும் இடையில் கூட சில ஒற்றுமைகள் காணப் படுகின்றன. உதாரணத்திற்கு: கண், வாய், கல், குட்டி.... இது குறித்து மேலும் அறிய விரும்புவோர் இந்த நூலை வாங்கி வாசிக்கவும். (Africans In The Americas Our Journey Throughout The World: The Long African Journey Throughout The World Our History A Short Stop In The Americas, http://www.amazon.com/Africans-Americas-Journey-Throughout-World/dp/0595302475)

கிழக்கே சோமாலியா முதல், மேற்கே செனகல் வரையிலான ஆப்பிரிக்க மொழிகளுக்கும், தமிழ் மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையானது, ஒரு அடிப்படை உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. தமிழர்களின் மூதாதையரான ஆதித் திராவிடர்கள், அந்தப் பிராந்தியத்தில் தான் தோன்றி இருக்க வேண்டும். அதாவது, இன்று சஹாரா பாலைவனம் இருக்கும் இடம், ஒரு காலத்தில் செழிப்பான மண் வளம் கொண்ட பூமியாக இருந்துள்ளது. அங்கு பிற ஆப்பிரிக்க பகுதிகளை விட, நாகரீகம் அடைந்த மக்கள் கூட்டம் வாழ்ந்து வந்தது. பூகோள வெப்பம் அதிகரித்த காரணத்தால், சஹாரா பாலைவனம் விரிவடைந்து கொண்டு சென்ற காலத்தில், அவர்களது வாழ்விடங்களும் மண்ணுக்குள் புதையுண்டு போயின. இதனால் அடிக்கடி இடப்பெயர்வுக்கு ஆளான மக்கள், முதலில் அரேபிய தீபகற்பத்திற்கும், பின்னர் ஆசியாவுக்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்று இந்தப் பிராந்தியத்தில் பேசப்படும் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை அதற்கு சாட்சியம். ஏற்கனவே வட ஆப்பிரிக்காவின் துவாரக் (பேர்பர்) பழங்குடி இன மக்கள் பேசும் மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். (பார்க்க :ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்! http://kalaiy.blogspot.no/2012/05/blog-post_21.html) இன்றைய சூடானில், ஒரு காலத்தில் அங்கிருந்த கறுப்பின மக்களின் ராஜ்யமான நுபியாவின் அழிவுற்ற நகரங்களை இன்றும் காணலாம். இன்று அவை, மனிதர்கள் வாழ முடியாத பாலைவனமாக காணப்படுகின்றன. நுபிய ராஜ்யத்தில் வாழ்ந்த மக்களை, கூஷி இனத்தவர்கள் என்று அழைப்பர். அவர்கள் பேசிய கூஷி மொழி இன்றைக்கு அழிந்து விட்டது.

பண்டைய எகிப்திய சாம்ராஜ்யமும், பண்டைய நுபியாவும் அயல் நாடுகள். இரண்டுக்கும் இடையில் நிறைய கலாச்சார பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரச நிர்வாகம், மதம், கட்டிடக் கலை என்பன மட்டுமல்ல, மொழி கூட ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டுக் காணப் படுகின்றது. உதாரணத்திற்கு: பண்டைய எகிப்திய "அனி" என்ற சொல்லை எடுத்து ஒப்பிட்டுப் பார்ப்போம். கூஷி மொழியிலும் "அனி", சோமாலிய மொழியில் "மான்", தமிழ் மொழியில் "நான்"!
இந்த மொழிகளை ஆராய்ந்து கொண்டே போனால், இது போன்ற நிறைய ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். ஆகவே, தமிழர்களுக்கும், சோமாலியர்களுக்கும், எகிப்து அல்லது நுபியா பொதுவான தாயகமாக இருந்திருக்க வேண்டும். புராணக் கதைகள், மத நம்பிக்கைகள் கொண்டும் இந்தத் தொடர்பை விளக்கலாம். அதற்கு, இன்றைய சோமாலிய இனத்தவர்கள் அதிகம் உதவப் போவதில்லை. ஏனெனில், பிற்காலத்தில் நூறு சதவீதம் இஸ்லாமியர்களாக மாறி விட்ட சோமாலிய மக்கள், தங்களது பாரம்பரிய மத நம்பிக்கைகளை மறந்து விட்டனர். இன்றைய சோமாலிய மொழியில் அரைவாசியாவது அரபுச் சொற்களின் கலப்பு காணப்படுகின்றது. அதனால், "தமது மொழியானது, இஸ்லாமிய மதத்தோடு சேர்ந்து இறக்குமதியான அரபி மொழிப் பாதிப்பால் புதிதாக உருவானது" என்று, சோமாலிய மக்களே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரபி, ஹீபுரு, மற்றும் இயேசு கிறிஸ்து பேசிய அரேமிய மொழி என்பன, செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இந்தத் தகவல் உலகம் முழுவதும் தெரிந்தளவுக்கு, ஆப்பிரிக்க செமிட்டிக் மொழிகள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. பிற்காலத்தில், செங்கடலை கறுப்பின ஆப்பிரிக்காவின் எல்லையாக வகுப்பதற்காக, மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய பிழையான படம் ஒன்று காட்டப் பட்டது. இன்றைக்கும் நாங்கள் அந்த பிழையான உலக வரைபடத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம், அரபி, ஹீபுரு, அரமிக் மொழிகளை பேசும் மக்கள் "வெள்ளை இனத்தவர்கள்" என்ற இனவாதக் கருத்துகளை பரப்புவதாகும். ஆனால், ஒரு காலத்தில், இவை எல்லாம் கறுப்பின மக்களின் மொழிகளாக இருந்துள்ளன. இந்திய உபகண்டத்திற்குள் வெள்ளை நிற ஆரியர்கள் நுழைந்த அதே காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளையும் ஆக்கிரமித்தார்கள். இந்திய ஆரியர்கள், திராவிடர்களின் பிராமி மொழியை தமதாக்கி, சமஸ்கிருதம் என்ற புதிய மொழியை உருவாக்கினார்கள். அதே போன்று, அரேபிய தீபகற்பத்திற்குள் நுழைந்த வெள்ளைநிற ஆரியர்கள், உள்ளூர் மக்கள் பேசிய, ஹீபுரு, அரபி, அராமி ஆகிய மொழிகளை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர். பின்னர், அந்த மொழிகளை செழுமைப் படுத்தி வளர்த்தெடுத்தார்கள்.

எத்தியோப்பியா/எரித்திரியாவில் பேசப்படும் அம்ஹாரி மொழி, சோமாலி மொழி என்பன, செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான். ஆனால், அவர்களின் மொழிகள் பிற்காலத்தில், ஹீபுரு, அரபி மொழிகளின் செல்வாக்குக்கு உட்பட்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், யூத மதமும், கிறிஸ்தவ மதமும் அபிசீனியாவில் (இன்றைய எத்தியோப்பியா) பரவின. சில நூறாண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமிய மதம், எத்தியோப்பியாவிலும், சோமாலியாவிலும் பரவியது. அதனால், அந்தப் பிராந்திய மக்கள் புதிய நாகரீகங்களை பின்பற்றத் தொடங்கினார்கள். அவர்கள் பேசிய மொழிகளும் மாற்றமடைந்தன. கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத தாக்கத்தின் காரணமாக, தமது மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து உருவான கிளை மொழிகள் என்று நினைத்துக் கொள்கின்றனர். அதாவது, பிற்காலத்தில் உருவான மதங்களின் பாதிப்பு காரணமாக, மக்கள் தமது பூர்வீகத்தையே மறந்து விடுகின்றனர். எந்த மதமும், தான் ஆதிக்கம் செலுத்தும் மக்கள் திரளை நூறு சதவீதம் மாற்றுவதில் வெற்றி பெறவில்லை. எங்காவது ஒரு மூலையில், சில ஆயிரம் பேராவது பழைய மத நம்பிக்கைகளை பின்பற்றுவார்கள். அந்த நூலிழையை பிடித்துச் சென்று தான், நாம் அந்த மக்களின் வேர்களைத் தேட முடியும்.

தமிழர்களின், அதாவது ஆதி திராவிடர்களின் தாயகமான, வட-கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்கள், மத நம்பிக்கையிலும் வளர்ச்சியடைந்த தத்துவத்தைக் கொண்டிருந்தனர். யூதர்களின் தீர்க்கதரிசி மோசஸ் யூத மதத்தை தோற்றுவிக்கும் முன்னர், உலகில் எங்குமே ஓரிறை வழிபாடு இருக்கவில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மூன்றும், "ஒரே கடவுள்" கொள்கையை பின்பற்றுவதாக மார்தட்டிக் கொள்கின்றன. ஆனால், உலக வரலாற்றில் இந்த மூன்று மதங்களும் தோன்றுவதற்கு முன்னரே, ஆப்பிரிக்காவில் ஒரே கடவுளை வழிபடும் மதங்கள் இருந்துள்ளன. இப்பொழுதும் இருக்கிறது. மோசஸ் யார்? எகிப்திய பரோ மன்னனின் அரண்மனையில் வளர்ந்த, ஒரு கறுப்பின தீர்க்கதரிசி அல்லவா? "கடவுள்" என்ற தமிழ்ச் சொல் எங்கே தோன்றியது? அது ஒரு ஆப்பிரிக்க கடவுளின் பெயரா?

(தொடரும்)

2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com
 
)

Ramesh Murugan

unread,
Jan 23, 2013, 9:31:06 AM1/23/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
[நாம் கறுப்பர்!

நமது மொழி தமிழ்!

நம் தாயகம் ஆப்பிரிக்கா!] (நான்காம் பாகம்) 


கடவுள் என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
நமக்குள் இருக்கும் இறைவன் என்ற பொருள் படும். சைவ சமய இறையியல் பாடத்தில் கூறப்பட்ட விளக்கத்தையே, இங்கே கொடுத்துள்ளேன். இதை விட வேறு சிறந்த விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை. தமிழர்களின் "கடவுள் கோட்பாடு" எங்கே தோன்றியது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும், தமிழர்கள் இந்துக்களாக இருந்தனர் என்ற காரணத்தை வைத்து, வேதங்களில் இதற்கு விடை தேடுவோம். இன்றைய தமிழ் இனவாதிகள் என்றால், ஹரப்பா, மொஹஞ்சதாரோ, குமரி கண்டத்திற்கு அப்பால் செல்ல மாட்டார்கள். ஆனால், தமிழர்களின் இறை நம்பிக்கை மட்டுமல்ல, கடவுள் என்ற தமிழ்ச் சொல் கூட, ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ளன! தமது முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த உண்மையை அறியாத, இன்றைய நாகரீகத் தமிழர்கள், தமது "கடவுளையும் மறந்து விட்டார்கள்."

ஆங்கிலத்தில் கடவுளை God என்று அழைப்பார்கள். ஜெர்மன் மொழியில் Gott. இரண்டுமே இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. ஆகவே, "கடா" என்ற பண்டைய ஈரானிய சொல் அதன் மூலமாக இருக்கலாம். நவீன பார்சி மொழியிலும், உருது மொழியிலும் "ஹுடா" என்று அழைக்கிறார்கள். அதே நேரத்தில், "தெய்வம்" என்ற சமஸ்கிருதச் சொல்லும், இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்தப் படுகிறது. பிரெஞ்சில் Dieu, லத்தீனில் Deus, பழைய ஜெர்மன் மொழியில் Deiwos. இன்றைய மொழிகள் எல்லாமே, கலப்பு மொழிகள் தாம். அதனால் தான், ஒரு பொருளுக்கு பல ஒத்த கருத்துச் சொற்கள் காணப்படுகின்றன. இருந்தாலும், அந்தச் சொற்களின் மூலம் வெவ்வேறானதாக இருக்கலாம். பழைய ஈரானியச் சொல்லான "கடா", அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்த வேற்றின மக்களினால் பாவிக்கப் பட்ட சொல்லாக இருக்கலாம். பண்டைய ஈரானில் இருந்த, எலமிய, சுமேரிய ராஜ்யங்களில் பேசப் பட்ட மொழிகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும். எலமிய, சுமேரிய மக்கள், திராவிட இனத்தவர்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அவர்கள், தமது இறைவனை அழைக்க, "கடா" என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர். அந்தச் சொல், தமிழில் கடவுள் என்ற சொல்லுடன் ஒத்திருப்பதை கவனிக்கவும். அது சரி, இரண்டினதும் அர்த்தம் ஒன்றுதானா?

இன்று நாங்கள், ஒரு பொருளுக்கு ஒத்த கருத்துள்ள சொற்களைப் பயன்படுத்துவதைப் போன்று, பண்டைய நாகரீகத்தை சேர்ந்த மக்களும் நடந்து கொண்டுள்ளனர். சுமேரியர்கள், தமது கடவுளை குறிக்க "எங்கை" என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். அக்காடியர்கள், அதனை "எயா" என்றும், ஹீபுரூக்கள் "எல்" அல்லது "எலோஹிம்" என்றும் அழைத்தனர். எந்தப் பெயரில் அழைத்தாலும், கடவுளைக் குறிக்கும் அந்தச் சொல்லின் அடிப்படை ஒன்று தான். சுமேரியர்களின் எங்கை என்ற சொல்லின் மூலமும், ஆப்பிரிக்காவாக இருக்க வேண்டும். இன்றைக்கும், கென்யாவில் வாழும் கிகுயூ இன மக்கள், தமது கடவுளை "எங்கை" என்று அழைப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். (பார்க்க : முதலாம் பாகம்: நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!) இன்றைக்கு ஆங்கில எழுத்துக்களை பாவித்து "Ngai" என்று எழுதுகிறார்கள். ஆனால், உச்சரிப்பு "என் கை" என்று வரும். "ஏ" என்றால், சுமேரிய மொழியில் கடவுளின் வீடு என்று அர்த்தம். அங்கே வசிப்பதால், "எயா" அல்லது "என்" அல்லது "ஏகை" என்று கடவுளுக்கு பெயர். தமிழ் மொழியிலும், கடவுளைக் குறிக்க "ஏகன்" என்ற சொல் உண்டு!

தமிழில் அரசனையும், கடவுளையும் குறிக்கும் "கோ(ன்)" என்ற சொல், "க" என்ற சொல்லில் இருந்து தோன்றியது. "க" என்ற சொல், பல பாரம்பரிய ஆப்பிரிக்க மதங்களில், கடவுளைக் குறிக்கும் புனிதச் சொல்லாக கருதப் படுகின்றது. "க" என்பதன் அர்த்தம், பொதுவாக இறைவன் என்பதல்ல. எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள். மனிதனுக்கு உள்ளே மறைந்திருக்கும் சக்தி. மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் தொடர்பூடகமாக உள்ள ஆத்மா.... இவ்வாறு பல அர்த்தங்கள் வரும். "கடா" என்றால், இறைவனின் ஆட்சி என்று பொருள் படும். (கிறிஸ்தவ இறையியலில், எம்மை ஆள்பவரின் காலம் எனப் பொருள்படும், Anno Domini என்ற லத்தீன் சொல்லை பாவிக்கிறார்கள். அதைத் தான் நாங்கள் "கிறிஸ்துவுக்குப் பின்" என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கிறோம்.) இன்றைக்கும், எத்தியோப்பியாவில் வாழும், ஒரோமோ இன மக்கள், "இறைவனின் ஆட்சி" எனப் பொருள் படும், "கடா" என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். கடவுள் என்ற தமிழ்ச் சொல்லும், இதனோடு தொடர்பு பட்டுள்ளதை, நான் இங்கே விளக்கத் தேவை இல்லை. 

பண்டைய எகிப்தியர்கள் உட்பட, அனைத்து ஆப்பிரிக்க மதங்களும், பல தெய்வ வழிபாட்டைக் கொண்ட "காட்டுமிராண்டி கால மதங்கள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆப்பிரிக்கர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றிய எமது அறிவு மிகவும் குறுகியது. அவர்கள் கல்லையும், மரத்தையும் மட்டுமே வணங்கியதாகவும், எந்த வித இறையியல் தத்துவமும் கொண்டிராதவர்கள், என்று நம்புவது எமது அறியாமையே அன்றி வேறல்ல. "கண்டிப்பாக ஒரே கடவுட் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தும், யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் வருகையின் பிறகு தான், பிற மத நம்பிக்கைகளை புறக்கணிக்கும் வழக்கம் ஆரம்பமாகியது. இருபதாம் நூற்றாண்டில் எழுந்த, பாஸிச அரசியல் கொள்கைக்கும், ஓரிறை மதங்களின் அடிப்படைவாதம் காரணம் என்று குற்றம் சாட்டப் படுவதுண்டு.

ஆப்பிரிக்க மதங்கள் எல்லாமே, பல தெய்வங்களை வழிபட்ட காட்டுமிராண்டி கால மத நம்பிக்கைகள் அல்ல. குறிப்பாக, எத்தியோப்பியாவில் வாழும் ஒரோமோ இனத்தவரின் பாரம்பரிய மதம், ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட மதமாகும். இன்றைய எத்தியோப்பியாவின், சுமார் ஐம்பது வீத நிலப்பரப்பைக் கொண்ட ஒரோமியா என்ற மாநிலத்தில் வாழும் ஒரோமோ மக்கள், அந் நாட்டின் அடக்கப்படும் சிறுபான்மை இனமாகும். ஒரோமோ மொழி, சோமாலிய மொழி போன்றிருக்கும். ஒரோமியா மாநிலத்திற்கு கிழக்கே உள்ள ஒகடான் மாநிலத்தில், சோமாலிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஒரோமோ மொழியும், சோமாலிய மொழியும், இன்று அழிந்து விட்ட கூஷி மொழியில் இருந்து பிரிந்த கிளை மொழிகளாகும். கூஷி மக்களின், நுபிய ராஜ்ஜியம், எகிப்தின் கீழே, சூடானில் இருந்தது. பண்டைய எகிப்தியருக்கும், கூஷிகளுக்கும் இடையில் நெருங்கிய கலாச்சார, மொழியியல் ஒற்றுமைகள் காணப்பட்டன.

ஆகவே, சோமாலிய, ஒரோமிய மக்களின் மொழி மட்டுமல்ல, அவர்களது கலாச்சாரப் பாரம்பரியங்கள், மத நம்பிக்கைகள் கூட, எகிப்திய-கூஷி நாகரீகத்தை ஒத்திருக்க வேண்டும். சோமாலிய, ஒரோமிய இனங்களுக்கு இடையிலான வித்தியாசம், தமிழும், மலையாளமும் போன்றது. இஸ்லாமிய மதத்தை பின்பற்றிய பின்னர், சோமாலியர்கள் தமது பூர்வீகத்தை ஏறக்குறைய மறந்து விட்டனர். ஆனால், ஒரோமிய மக்கள் அப்படி அல்ல. ஒரோமிய மக்கள் முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், பாரம்பரிய மத நம்பிக்கை கொண்டவர்களாகவும், மூன்று பிரிவாக பிரிந்துள்ளனர். இன்றைய தமிழர்களைப் போன்று, வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும், ஒரே மொழியும், கலாச்சாரமும் அவர்களை ஒன்றிணைக்கிறது. இதனால், இன்று, ஒரோமியா என்ற தனி நாட்டின் விடுதலைக்காக போராடும் இயக்கமும், தமிழ் தேசியம் போன்று, ஒரோமிய மொழித் தேசியத்தின் மீது கட்டமைக்கப் பட்டுள்ளது.

ஒரோமிய மக்களின் பாரம்பரிய மதத்திற்கு பெயர், வாக்கேபண்ணா ("Waaqeffannaa"). வாக்கா என்பது கடவுளின் பெயரைக் குறிக்கும். உண்மையில், பண்டைய கூஷி மக்கள் வழிபட்ட, "கா" என்ற கடவுளின் பெயரை தான், ஒரோமியர்கள் வாகா என்கிறார்கள்."கா அடா" என்றால், கடவுள் வகுத்த சட்டங்கள். ஒரோமியர்களின் முக்கிய பண்டிகையான, "கடா (Gadaa)" வின் அர்த்தமும் அது தான். செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் வரும் பண்டிகையானது, தமிழர்களின் பொங்கல் பண்டிகையை ஒத்திருக்கிறது.
("KA" is the first name of God. The name of God that our Cush Fathers have inherited to us before the old period of Christianity and Islam is "KA". Since then, therefore, especially the Oromo, Gurage and the Southern people of Ethiopia have been calling God as "Waka or Waaqa". When we sing EyokaorEyohain New Year, we do praise "KA", the God. "Gadaa" or "KA Aada" is the law or rule of God. "Gadaa" (KA Aada) is the festival by which the laws and orders of God are executed. http://www.gadaa.com/IrreechaaAbout.html

பண்டைய எகிப்தியர்கள், "க்னும்" எனும் தெய்வ சக்தி, மனிதர்களின் உயிர்களை, உடல்களை படைப்பதாக நம்பினார்கள். ஆனால், க்னும் என்பது, ஒரு இறையியல் தத்துவம் ஆகும். எகிப்தியர்களின் இறையியலில், "வா", "கா", என்று இரண்டு சொற்கள் முக்கியமானவை. வா (ba) என்பது, மனிதனின் உயிர் அல்லது ஆத்மா (அது சரியான அர்த்தம் அல்ல. அண்ணளவான மொழிபெயர்ப்பு.) கா என்பது, இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு. "கா" வை படைப்பது க்னுன். குயவர்கள் பானை செய்ய பயன்படுத்தும் சக்கரம் போன்ற ஒன்றில், மனிதர்களின் "கா" படைக்கப் படுகின்றது. (மேலதிக தகவல்களுக்கு, பார்க்க: Every Egyptian was thought to have a ba and a ka.  The ba was sort of how they acted or in other words their personality.  The ka was the life force of all living humans..... A ka is the difference between alive and dead.  Unlike the ba, a ka wasn’t unique.  The ka enters the body at birth.  Like the ba, the ka wasn’t a physical part of the body, though the ka surely has a physical connection..... The "god" that made a person’s ka was called Khnum. Egyptians believed that Khnum shaped everyone’s ka on his trusty potter’s wheel. http://library.thinkquest.org/J002037F/ba_and_ka.htm)

எகிப்திய இறையியலில், "கா" என்ற சொல், தேவலோகத்தில் வாழும் ஆண்டவனைக் குறிக்கவில்லை. மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் தெய்வ சக்தியையும், அதற்கும் இறைவனுக்குமான தொடர்பையும் விளக்குகின்றது. தமிழ் மொழியில் பயன்படுத்தும், "கடவுள்" (கா+டா+உள்) என்ற சொல்லுக்கும், ஒரோமிய மொழியில் பயன்படுத்தம் "கடா" என்ற சொல்லுக்கும் இடையிலான ஒற்றுமை இப்பொழுது புரிந்திருக்கும். கடவுள் சொல்லின் நேரடி அர்த்தம் பண்டைய எகிப்தியரின் இறையியலில் மறைந்திருக்கிறது. தமிழரின் கடவுள் நம்பிக்கை, ஒரோமிய மக்களின் வாகா நம்பிக்கை, இரண்டினதும் தோற்றுவாயும் எகிப்து தான் என்பதில் சந்தேகமில்லை.

ஒரே கடவுட் கோட்பாடு கூட, ஆப்பிரிக்கர்களுக்கு புதிதல்ல. வாகாபண்ணா மதத்தை பின்பற்றும் ஒரோமியர்கள், வாகா என்ற ஒரே இறைவனை வழிபடுகின்றனர். பண்டைய எகிப்தியர்களும் ஒரே கடவுட் கோட்பாடை கொண்டிருந்தனர். அக்நாதன் என்ற எகிப்திய பரோ மன்னன் காலத்தில், "ரா" என்ற சூரியக் கடவுளை வழிபடும் மதம் நடைமுறையில் இருந்துள்ளது. ரா என்ற சொல், சூரியனைக் குறிக்கும் "ரவி" என்ற சமஸ்கிருதச் சொல்லை ஒத்திருப்பதை கவனிக்கவும். சூரியக் கடவுள் வழிபாடு, ஆப்பிரிக்கா முதல் இந்தியா வரையில் பரவி இருந்தது. ஆப்பிரிக்கர்களின், பண்டைய அரேபியரின், சுமேரியரின் மத நம்பிக்கைகளில் சூரியனையும், ஆகாயத்தையும், அல்லது அண்ட வெளியை ஒரே கடவுளாக கருதும் வழக்கம் இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்ட இறையியல் தத்துவம், பிற்காலத்தில், யூத, கிறிஸ்தவ,இஸ்லாமிய மதங்களின் தத்துவங்களுடன் ஒத்துப் போகின்றது.

விவிலிய நூலில், உலகின் முதல் கொலை பற்றிய கதை ஒன்றுண்டு. முதல் மனிதர்களான, ஆதாம், ஏவாளின் பிள்ளைகளான அபெல், கையின் இடையிலான பகைமையின் காரணமாக, கையின் ஆபேலை கொலை செய்து விடுகிறான். ஒரோமியர்களின் மதத்திலும் அதே போன்ற கதை ஒன்றுண்டு. வானத்திற்கும், சூரியனுக்கும் அதிபதியான அசுரா கடவுளின், பிள்ளைகளான ஓரா, செட்டே, அசிஸ் பற்றிய புராணக் கதை முக்கியமானது. விவிலியக் கதை போன்று, பொறாமை காரணமாக, தமையனான செட்டே தம்பியான ஓராவை கொலை செய்து விடுகிறான். தங்கையான அசிஸ், ஓரா இறந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினாள். அன்றிலிருந்து "உலகில் சமாதானம் நிலவுவதாக", என்ற இறைவனின் ஆணைப் பிரகாரம், மழை பெய்து, நினைவுச் சின்னம் இருந்த இடத்தில், ஆல மரம் ஒன்று முளைத்து வளர்ந்தது.

ஒரோமிய மக்களின், ஓரா தெய்வம் பற்றிய புராணக் கதையானது, கிறிஸ்தவர்களின் விவிலியக் கதைகளை நினைவு படுத்துகின்றது. தீய எண்ணம் கொண்ட அண்ணன் செட்டே யினால் கொலை செய்யப்பட்ட நல்லவனான தம்பி ஓரா பற்றிய கதை முக்கியமானது. இயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததை ஞாபகப் படுத்தும், ஓரா உயிர்த்தெழுந்த கதை, ஒரோமிய மக்களின் பூர்வீகக் கதை ஆகும். சூரியக் கடவுளின் மகனான ஓரா, மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தான். அதனை "ஓரா-ஒமோ" என்று கூறுகின்றனர். அதிலிருந்து தான், "ஒரோமியர்கள்" என்ற சொல் தோன்றியது.
(The Ora, the son of sun's God, who had risen up from death (Ora Omo or Or-omo) for the purpose of celebrating the peace made between the two brothers. http://www.gadaa.com/IrreechaaAbout.html)

பாலஸ்தீனம் முதல், யேமன் வரையிலான அரேபியா என்ற குடாநாடும், ஆப்பிரிக்கக் கண்டத்துடன் சேர்ந்த நிலப்பரப்பு தான். அதனால், அங்கு தோன்றிய மூன்று பெரிய மதங்களான, யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பன, "ஆப்பிரிக்க மதங்கள்" என்ற வகையில் சேர்க்கப் பட வேண்டும். யூதர்களின் தீர்க்கதரிசியான மோசஸ், கிறிஸ்தவர்களின் மீட்பரான இயேசு கிறிஸ்து, முஸ்லிம்களின் இறைதூதரான முகமது, இவர்களின் தோற்றம் எப்படி இருந்திருக்கும்? அவர்கள், உண்மையிலேயே அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் என்றால், தோற்றத்தில் கருப்பர்களாகத் தானே இருந்திருப்பார்கள்?

தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள், இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவுடனான தொடர்புகளைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்திருந்தார்கள். சில அரேபிய சித்தர்களும், தமிழகத்தில் இருந்துள்ளனர். நாங்கள் அவற்றைப் பற்றி ஆராய விடாது, எமது குறுகிய இனவாத சிந்தனை தடுக்கின்றது. மெக்காவில் உள்ள புனிதஸ்தலமான காபா பற்றி, அதன் உள்ளே வைக்கப் பட்டுள்ள கல் பற்றி, எந்தளவு தூரம் அறிந்து வைத்துள்ளோம்? வால் வெள்ளி ஒன்று விழுந்திருக்கலாம் என்றும், அல்லது இஸ்லாத்துக்கு முந்திய தெய்வங்களின் உருவச் சிலைகள் என்றும், பல ஊகங்கள் நிலவுகின்றன. ஆனால், அந்தக் கல் முன்னொரு காலத்தில் வெள்ளையாக இருந்து, மனிதர்களின் ஸ்பரிசத்தினால் கருப்பாக மாறி விட்டதாக ஒரு ஐதீகம். இயற்கையில் கிடைக்கும் கனிமப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட கல்லாக இருக்கலாம். அதாவது, பண்டைய அரேபியரின் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்பு.

தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்களும், அதே போன்ற விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏழு பாஷாணங்கள் (நச்சு வேதிப் பொருட்கள்) கொண்டு உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலை, அத்தகைய விஞ்ஞான ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு தான். ஆப்பிரிக்கா, அரேபியாவுடன் பண்டைய தமிழர்களுக்கு இருந்த தொடர்புகளை விளக்கத் தான், இந்த உதாரணத்தை இங்கே குறிப்பிட்டேன். மெக்காவில் உள்ள புனிதஸ்தலமான காபா (Ka'aba) என்ற பெயரில், "கா" மறைந்திருப்பதைக் கவனிக்கவும். அதனை அரபி மொழியில், "Bayt Allah" (இறைவனின் இல்லம்) என்ற இன்னொரு பெயர் கொண்டும் அழைக்கின்றனர். ஆகவே, காபா என்பது, இஸ்லாத்திற்கு முந்திய அரேபியரின் மத வழிபாட்டு ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும்.

(தொடரும்)




மேலதிக தகவல்களுக்கு:
Ancient Egyptian concept of the soul
Ba and Ka
Irreechaa, an Oromo Thanksgiving Holiday
_________________________________________________________________________________

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com
 
)

ஸ் பெ

unread,
Jan 23, 2013, 10:55:54 AM1/23/13
to panbudan
நமக்கும் ஆப்ரிக்கர்களுக்கும் தொடர்பு உண்டு என நம்புவன் நான்.. ஆயுனும், இடதுசாரியான கலையரசன் முன்வைக்கும் சில கருத்துருக்களை லெப்ட்& ரைட் வாங்க தோன்றுகிறது..
முழுவதுமாக வாசித்து விட்டு நேரமிருந்தால் எழுதுகிறேன்....
-- 

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

வேந்தன் அரசு

unread,
Jan 23, 2013, 9:16:15 PM1/23/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன்
பரவலாக படிச்சிருக்கார். ஆனால் தமிழ் அறிவு போதாது
தமிழர்கள் கைலி கட்டுவது இன்றைய வழக்கம்

கிரி, ஏகன் இவை தமிழ் சொற்கள் இல்லை.

சொமாலியாவை தவிர பிற நாடுகளில் இருந்து வடக்கே வருவது இயல்வது அல்ல. பெரிய பாலைவனம் தடுக்கும் அதனால் யேமன் வழியாக இந்தியா வந்து இருக்க வாய்ப்பு அதிகம்


23 ஜனவரி, 2013 9:31 AM அன்று, Ramesh Murugan <rames...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

sadayan sabu

unread,
Jan 24, 2013, 12:18:56 AM1/24/13
to panb...@googlegroups.com


ரமேஷ்...

5 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிமனிதன் ஆதம் அவர் மனைவி ஹவ்வா (ஏவாள்/EVe) (இவரைத்தான் அவ்வை என்கிறோமாம்) இருவரும் திராவிடர்கள்/தமிழர்கள் என ஆதாரத்தோடு கவிக்கோ எழுதி சில இஸ்லாமிய இதழ்களில் வெளி வந்தது. எங்கேயாவது கிடக்கும்/கிடைக்கும். கிடைத்தால் இங்கே பதிகிறேன்

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 2:23:27 AM1/24/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன்
திராவிடர்னா யாரு, தமிழர்னா யாருன்னு பலர் விளக்கம் கொடுத்துட்டாங்க. இவரு கொஞ்சம் வித்தியாசமா சொல்றாரேன்னு இங்க பகிர்ந்திருக்கேன் அம்மட்டே.

நாம் புழங்கும் சில வார்த்தைகளை ஒப்பிட்டு வரலாறு எழுதுறத எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைவு. இருந்தாலும் புதுசா ஏதோ சொல்றாரேன்னு படிச்சிட்டு பகிர்ந்துக்கிட்டு இருக்கேன்.

2013/1/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

பரவலாக படிச்சிருக்கார். ஆனால் தமிழ் அறிவு போதாது
தமிழர்கள் கைலி கட்டுவது இன்றைய வழக்கம்

கிரி, ஏகன் இவை தமிழ் சொற்கள் இல்லை.

சொமாலியாவை தவிர பிற நாடுகளில் இருந்து வடக்கே வருவது இயல்வது அல்ல. பெரிய பாலைவனம் தடுக்கும் அதனால் யேமன் வழியாக இந்தியா வந்து இருக்க வாய்ப்பு அதிகம்

//

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 2:27:54 AM1/24/13
to panb...@googlegroups.com
நீங்க இவரோட சில கருத்துகள் பிடிக்கலைனு சொல்றது எனக்கு ஆசர்யமா இருக்குது.
இவரோட மற்ற கட்டுரைகளை படிச்ச பின்னாடிதான் இந்த கட்டுரைக்கே வந்தேன். உங்களுக்கு இவரோட எழுத்துல உடன்பாடு இருக்கும்னு நினைச்சேன்.

அதுவும் மதங்களை இவரு அனுகிற விதமே ரெம்ப புடிச்சிருந்தது. மத சார்பற்றவன்னா எல்லா மதங்களையும் ஏத்துக்கனும் அல்லது எல்லா மதங்களையும் திட்டனும்ங்கிற பொது கலாச்சாரத்திலிருந்து வெளியில வந்து, மதம்னா என்ன, அதனோட மாற்றங்கள் என்னென்ன, அறிஞர்களைத் தவிர்த்து மக்கள் எப்படி அதை அனுகினார்கள்னு ஆளு பட்டைய கிளப்பியிருக்காரு. அந்த கட்டுரைகள் புடிச்சதாலதான் அவரோட எல்லா கட்டுரைகளையும் படிச்சிக்கிட்டு இருக்கேன்.

2013/1/23 ஸ் பெ <stalinf...@gmail.com>

நமக்கும் ஆப்ரிக்கர்களுக்கும் தொடர்பு உண்டு என நம்புவன் நான்.. ஆயுனும், இடதுசாரியான கலையரசன் முன்வைக்கும் சில கருத்துருக்களை லெப்ட்& ரைட் வாங்க தோன்றுகிறது..
முழுவதுமாக வாசித்து விட்டு நேரமிருந்தால் எழுதுகிறேன்....
//

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 2:30:58 AM1/24/13
to panb...@googlegroups.com
பகிருங்க அண்ணே..
ஆரிய - திராவிட வரலாறு போரடிச்சிட்டு. இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா படிச்சாத்தான் இயல்பா என்ன நடந்திருக்கும்னு யோசிக்கவாவது முடியுது.

2013/1/24 sadayan sabu <sadaya...@gmail.com>



ரமேஷ்...

5 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிமனிதன் ஆதம் அவர் மனைவி ஹவ்வா (ஏவாள்/EVe) (இவரைத்தான் அவ்வை என்கிறோமாம்) இருவரும் திராவிடர்கள்/தமிழர்கள் என ஆதாரத்தோடு கவிக்கோ எழுதி சில இஸ்லாமிய இதழ்களில் வெளி வந்தது. எங்கேயாவது கிடக்கும்/கிடைக்கும். கிடைத்தால் இங்கே பதிகிறேன்


//

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 2:39:03 AM1/24/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்

கோயிலில் பாலியல் தொழில்

by கலையரசன்

[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]
 (ஐந்தாம் பாகம்) 

பூப்புனித நீராட்டு வீழா, அல்லது சாமர்த்திய சடங்கு என்றும் அழைக்கப்படும் பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் சடங்கு, தமிழர் வாழ்வில் பிரிக்கவொண்ணாத ஒன்றாக மாறி விட்டது. புலம்பெயர்ந்து சென்று, மேற்கத்திய நாடொன்றில் வாழ்ந்தாலும், இந்த சடங்குகளை விட்டு விடவில்லை. குறிப்பாக, மேற்கத்திய சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகள் இது போன்ற சடங்குகளை விரும்புவதில்லை. ஏனென்றால், வேற்றின சமூகங்களில் அப்படியான பூப்படைந்த சடங்குகள் எதுவும் இல்லாதபடியால், பிற பிள்ளைகளின் கேலிப் பேச்சுக்கு ஆளாகின்றனர். பெற்றோரைப் பொறுத்த வரையில், இது "தமிழரின் கலாச்சாரம். நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பின்பற்றப் பட வேண்டும்."

நாங்கள் தமிழ் கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டாலும், அது பிற மொழி பேசும் இந்திய இனங்களால் பின்பற்றப் பட்டால், அதனை " இந்தியக் கலாச்சாரம்"  அல்லது "இந்துக் கலாச்சாரம்" என்று கூறிக் கொள்கிறோம். அதையும் கடந்து, ஆப்பிரிக்கர்களும், இந்தியர்களும் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றினால், அதனை எப்படி அழைக்க வேண்டும்? "ஆப்பிரிக்க-இந்திய கலாச்சாரம்"  என்று பெயரிடலாமா? பூப்புனித நீராட்டு விழாவும், நாம் எமது ஆப்பிரிக்க மைத்துனர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரக்கூறு தான். பண்டைய ஆபிரிக்காவில் Kuta சடங்கு என்றொரு வழக்கம் இருந்தது. இன்று பல ஆப்பிரிக்க சமூகங்களில் காணப்படும் பூப்புனித நீராட்டு விழாக்களின் முன்னோடி அது. கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதங்களைப் பின்பற்றும் ஆப்பிரிக்க இனங்களின் மத்தியில், அந்தச் சடங்கு அழிந்து விட்டது. இத்தகைய உலகமயமாக்கப்பட்ட மதங்களை பின்பற்றும் ஆப்பிரிக்கர்கள் தான் புலம்பெயர்ந்து வருகின்றனர். அதனால், அவர்களுக்கும் தமிழர்களின் பூப்புனித நீராட்டு சடங்கு புதுமையாகத் தோன்றுகின்றது. 

உண்மையில், இன்றைக்கும் பல ஆப்பிரிக்க சமூகங்களில் பூப்புனித நீராட்டும் சடங்கு செய்யும் வழக்கம் உண்டு. ஐரோப்பியமயப்பட்ட ஆப்பிரிக்கர்கள், இலகுவில்  அதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், "அது காட்டுமிராண்டி கால கலாச்சாரம். நாகரிக உலகத்தால் ஏற்றுக் கொள்ளப் படாதது" அதில் அப்படி என்ன தான் உண்டு?  பூப்புனித நீராட்டு விழாவின் பூர்வீகத்தை ஆராய்வதற்கு முன்னர், அது இன்று ஏதாவது ஆப்பிரிக்க நாட்டில் பின்பற்றப் படுகின்றதா என்று பார்ப்போம். ஐரோப்பியர்களால் முழுமையாகக் காலனிப் படுத்தாத நாடுகளில் கானாவும் ஒன்று. கானா ராஜ்ஜியம் சக்தி வாய்ந்ததாக இருந்ததுடன், ஐரோப்பியருடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணியது. பிற்காலத்தில் ஆங்கிலேயரின் காலனியாக மாறினாலும், வத்திக்கான் போன்று, கானா மன்னருக்கு குறிப்பிட்டளவு பிரதேசம் ஒதுக்கப் பட்டது. அதனால் அங்கே சில பாரம்பரியப் பழக்க வழக்கங்களும் தொடர்ந்திருக்கின்றன. பூப்படைந்த குமரிகளின் சடங்கும் அவற்றில் ஒன்று. சாமர்த்திய சடங்கு செய்யப்படாத பெண்ணை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு மரபு. பூப்புனித நீராட்டு விழா ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். (Puberty Rites from Ghana,  http://www.ghanaweb.com/GhanaHomePage/tribes/puberty_rites.php)

பிற ஆப்பிரிக்க சமூகங்களில், பெரிய விழாவாக கொண்டாடப் படா  விட்டாலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அது ஒரு குறிப்பிடத் தக்க நிகழ்வு தான். முதலாவது மாதவிடாய் கண்ட சிறுமியை, நீராட்டி, வீட்டுக்கு வெளியே உள்ள குடிசை ஒன்றில் தனிமைப் படுத்தி, விசேட உணவு கொடுப்பது பண்டைய ஆப்பிரிக்க சம்பிரதாயம். குறிப்பாக இந்தியாவில், தாய் மாமன் தண்ணீர் ஊற்றுவதும், திருமணம் முடிக்க தகுதியான முறைமாமன் உறவு கொண்டாடுவதும் தெரிந்தது தான். ஆப்பிரிக்க சமுதாயங்களிலும், தாய் மாமனை மணம் முடிக்கும் வழக்கம் உண்டு.  இன்றைக்கு நாங்கள் நாகரீகமடைந்த உலகில் வாழ்வதால், 18 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்வதை பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். பண்டைய சமுதாயங்களில் அத்தகைய சட்டம் இருக்கவில்லை.

ஒரு பெண் பூப்படைந்து விட்டாலே, அவள் திருமணத்திற்கு தயாராகி விட்டாள் என்று அர்த்தம். இன்று, பூப்புனித நீராட்டு விழாக்களை நிராகரிக்கும் முற்போக்காளர்கள் கூறும் விளக்கம் இது: "நமது வீட்டில் இருக்கும் பெண் கலவிக்கும், மகப் பேற்றுக்கும் தயாராகி விட்டாள்  என்பதை ஊருக்கு அறிவிக்கிறோம்."  பூப்புனித நீராட்டு விழாவின் உண்மையான நோக்கமும் அது தான்.  அன்றைய  தாய் வழிச் சமுதாயத்தில், அது ஒரு  சர்வ சாதாரணமான விடயம். தாய் வழிச் சமுதாயத்தில் மக்களிடையே கட்டற்ற பாலியல் உறவுகள் காணப்பட்டன. ஆனால், தந்தை வழிச் சமுதாயத்தில், அது தலை கீழாக மாற்றியமைக்கப் பட்டது. அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது, என்பது பற்றிப் பின்னர் பார்ப்போம்.  உண்மையில் நாம் இன்று பின்பற்றும் மதங்கள் யாவும், "ஆண்களின் புரட்சியின்" விளைவாக உருவானவை. அதனால் தான், அவற்றில் ஆணாதிக்கக் கருத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

"பாலியல் கல்வி"  என்ற விடயம் இன்றைக்கும் பல சமூகங்களில் பேசுபொருளாக இல்லை. இன்று சில மேற்கத்திய நாடுகளில் பள்ளிகளில் போதிக்கப் படுகின்றது. பிற உலக நாடுகளும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தம், ஐரோப்பாவிலிருந்து வருகின்றது. அதனால் நாங்கள், "பாலியல் கல்வி ஒரு நவீன ஐரோப்பிய நாகரீகம்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு!  ஐரோப்பியர்கள் அதனை மீளக் கண்டுபிடித்தனர் என்று தான் கூற வேண்டும். ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆசியாவிலும், இந்திய உப கண்டத்திலும் பாலியல் கல்வி போதிக்கப் பட்டு வந்தது. அது அவர்களது பண்டைய கலாச்சாரங்களில் ஒன்று.

பூப்புனித நீராட்டு விழாவின் பல சடங்குகளை, நாங்கள் இன்று பின்பற்றுவதில்லை. பூப்படைந்த சிறுமிகளை, தனிமைப் படுத்தி, விசேட உணவு கொடுப்பதுடன் மட்டுமே நின்று விடுகிறோம்.  அத்துடன் பாலியல் அறிவு புகட்டுவதும், பண்டைய காலங்களில்  ஒரு சடங்காக பின்பற்றப் பட்டு வந்தது.  வயதான அல்லது மணம் முடித்த பெண்கள், பாலியல் துறை சார்ந்த அறிவைப்  போதிப்பார்கள். தாள வாத்தியங்கள் இசைத்து, கலவி செய்வதைப் போல அங்கங்களை அசைக்கும் நடனம் அங்கே அரங்கேறும்.  இன்றைய ஆப்பிரிக்க கலாச்சார நடனம், அரேபியரின் வயிற்றுக் குலுக்கல் நடனம், இந்தியர்களின் பரத நாட்டியம் போன்ற பல பாரம்பரிய நடனங்களுக்கு அது மூலமாக அமைந்தது. அந்த பாரம்பரிய நடனங்கள் இன்றைய நிலையை அடைவதற்கு முன்னர், தேவதாசிகளால் தனித்துவமான கலையாக வளர்க்கப் பட்டது. 

தாய் வழிச் சமுதாயத்தில் பல பெண் தெய்வங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.   இந்தப் பெண் தெய்வங்கள், பல நாடுகளில் பல பெயர்களில் அழைக்கப் பட்டாலும், அந்த தெய்வங்களுக்கான கோயில்களில் நடந்த சடங்குகள் ஒரே மாதிரியாக இருந்துள்ளமை ஆச்சரியத்தை அளிக்கின்றது. மூவாயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட, பெண் தெய்வ வழிபாடு பிரபலமடைந்து இருந்ததால், அப்போது கூட பல இடங்களில் தாய்வழிச் சமுதாயம் நிலவியது என்பதை அறிந்து கொள்ளலாம். பாபிலோனியர்களின், கிரேக்கர்களின் வரலாற்றுக் குறிப்புகளில் பெண் தெய்வ வழிபாடு பற்றி எழுதப் பட்டுள்ளன. சைப்பிரசில் பிறந்த அப்ரோடித் என்ற தெய்வத்தை வழிபடும் திருவிழாக்களில், பெண்கள் ஆபாசமாக நடனமாடினார்கள்.

கிரேக்க நாட்டுக் கோயில்களில், பெண் பூசாரிகள் பூசை செய்தனர்.  அவர்கள் இடையை நெளித்து நடனமாடி பூசை செய்வார்கள் என்று, கிரேக்க வரலாற்று அறிஞர் Pausanius  எழுதியுள்ளார். இன்றைக்கும் இந்தியாவில், கர்நாடகா மாநிலத்தில், தேவதாசிகளுக்கு என்று விசேடமான கோயில் உள்ளது. எல்லம்மா என்ற பெண் தெய்வத்தை வழிபடும் கோயில், இன்றைக்கும் தேவதாசி வழக்கத்தை நிறுவனமயப் படுத்தி வைத்துள்ளது. இது ஒரு காலத்தில், கிரேக்கம் முதல் இந்தியா வரை பரவியிருந்த கலாச்சாரத்தின் எச்சமாகும். பெண் பூசாரிகள் பூசை செய்த கிரேக்க கோயில்களும், அந்த நாட்டில் தேவதாசிக் கோயில்களாக இருந்துள்ளன. உண்மையில் "தேவ தாசி"  என்று பெயரிடுவது சரியா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஆணாதிக்க சமுதாயம் ஏற்பட்ட பின்னர் தான் அந்தப் பெண்கள் "தாசிகள்" ஆனார்கள். அதற்கு முன்னர், அவர்கள் சாதாரண குடும்பப் பெண்கள்! அதாவது முழுச் சமூகத்திற்கும் பொதுவாக இருந்த பாலியல் சுதந்திரத்தை, ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த ஆண்கள் தமது பாலியல் இச்சைகளுக்காக பயன்படுத்தத் தொடங்கினார்கள்.  அன்றிலிருந்து தான் விபச்சாரம், கற்பு நெறி, போன்ற சொற்கள் தோன்றின.

விவிலிய நூலை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அதிலுள்ள சுவிசேஷங்களில் பாபிலோனிய நாட்டை பற்றி எதிர்மறையாக எழுதப் பட்டிருக்கும். இயேசுவின் சீடர்கள், அந்த நாட்டில்  நிலவிய கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை விமர்சித்து எழுதி இருப்பார்கள். அத்தகைய சமுதாயச் சீர்கேடுகளால் தான் பாபிலோன் அழிந்தது என்று வசை பாடியிருப்பார்கள். (கடைசி அத்தியாயத்தை வாசிக்கவும்) கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்கள் அதனை உண்மையென்று நம்புவார்கள். ஆனால், உண்மையில் தாய் வழிச் சமுதாயத்தின் வீழ்ச்சியை கொண்டாடும், ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடு தான் அது. முதல் கிறிஸ்தவ  சக்கரவர்த்தி கொன்ஸ்டாண்டின் காலத்தில், பெண் தெய்வ வழிபாடு முற்றாக அழிக்கப் பட்டது. சிரியாவில், லெபனானில் எஞ்சியிருந்த கோயில்கள் இடிக்கப்பட்டு, அங்கே கிறிஸ்தவ தேவாலயங்கள் எழுப்பப் பட்டன.

பிற்காலச் சமயங்கள், தாய் வழிச் சமுதாயத்தை வெறுக்கக் காரணம் என்ன? சொத்துடமை சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், தகப்பன் வழியில் சொத்தை பிள்ளைகளுக்கு உரிமையாக்குவது இலகு. அதே நேரம், "ஆண்களின் கலாச்சாரப் புரட்சி" ஒன்றும் நடந்திருக்கலாம். ஆரம்பத்தில் யூத மதமும், அதற்கு அடுத்ததாக கிறிஸ்தவ மதமும், கடைசியாக இஸ்லாமிய மதமும் ஆண்களின் புரட்சியின் விளைவாக தோன்றியுள்ளன.   இந்த வழக்கம் இன்னமும் சில அரபு நாடுகளில், இஸ்லாமிய கட்டுப்பாடு என்ற பெயரில் பின்பற்றப் படுகின்றது. கிறிஸ்தவ மதம் ஒருவனுக்கு ஒருத்தி என்று போதித்தது. இஸ்லாம் பெண்களை திரைக்குப் பின்னால் மறைந்திருக்குமாறு தள்ளி விட்டது. இதற்கு காரணம், அன்றைய கால சமூகம் வேறு வடிவில் இருந்தது. பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அதுவும், இன்றைய நவ நாகரிக உலகில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு சுதந்திரம்.

பாபிலோன் ராஜ்ஜியத்தில், (இன்றைய ஈராக், ஈரான், குவைத், சிரியா போன்ற நாடுகளில்) தொன்று தொட்டு ஒரு சம்பிரதாயம் நிலவி வந்தது. ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த கன்னிப் பெண்கள், வாழ்க்கையில் ஒரு தடவையாவது, பாலியல் தொழில் செய்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ளலாம்! இஷ்தார் கோயிலில் தங்கியிருந்து, அங்கு வரும்  அந்நிய ஆடவருடன் உடல் உறவு கொள்ள வேண்டும். அதனை அவர்கள் ஒரு மதக் கடமையாக கருதினார்கள்.  பாபிலோனியாவில்  இஷ்தார் கோயில்கள் போன்று, கிரேக்க நாட்டில் அப்ரோடித் (வீனஸ்) கோயில்களில் அந்த நடைமுறை பின்பற்றப் பட்டது.  அந்த மதக் கடமையை நிறைவேற்றினால் தான், அந்த நாட்டு கன்னிப் பெண்களுக்கு  திருமணம் நடக்கும்! இஷ்தார் கோயிலுக்கு  வரும் அந்நிய ஆடவன் ஒருவன், அங்கே காத்திருக்கும் பெண்ணிடம் பணத்தைக் கொடுப்பான். அந்தப் பணம் காணிக்கையாக, கோயில் உண்டியலில் போடப்படும். அதன் பிறகு இருவரும் உடலுறவு கொள்வார்கள். இந்த மதக் கடமை பூர்த்தியடைந்ததும், அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பலாம். அதற்குப் பிறகு திருமணம் செய்து சாதாரண குடும்ப வாழ்க்கை வாழலாம். கோயிலில் பாலியல் தொழில் செய்த பெண்ணை திருமணம் செய்வதற்கு, எந்த ஆண்மகனும் தயங்கியதில்லை.

அன்றைய காலத்தில், பாபிலோனிய பெண்கள் அனைவரும், ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி, இஷ்தார் கோயிலில் பாலியல் தொழில்  செய்வது ஒரு சம்பிரதாயமாக பின்பற்றப் பட்டு வந்தது. (The Whores of Babylonhttp://www.bilderberg.org/babylon.htm ) இஷ்தார் கோயிலுக்கு வரும் ஆண்கள் விபச்சாரம் செய்யும் நோக்கத்துடன் சென்றிருப்பார்கள் என்று கூற முடியாது. ஏனெனில், பெண்களை புனிதமானவர்களாக கருதிய சமூகத்தில், இஷ்தார் கோயில் பெண்களுடன் உறவு கொள்வதை, ஆண்கள் ஒரு மதக் கடமையாகவே நினைத்தார்கள். அதற்காக தம்மை வருத்தி விரதம் இருந்தார்கள். அந்தக் காலத்தில், தாராளமான பாலியல் சுதந்திரம் இருந்தது.  ஒரு பெண், தனது வாழ்க்கையில் ஒரே ஆணுடன் மட்டுமே உடலுறவு வைத்திருக்க வேண்டுமென்ற விதிகள் எதுவும் இருக்கவில்லை. "கன்னி" என்ற சொல்லுக்கு திருமணமாகாத பெண் என்ற அர்த்தம் மட்டுமே இருந்தது. யூத, கிறிஸ்தவ மதங்கள் தான், "கற்பு" என்ற சொல்லைக் கண்டுபிடித்தன. ஒரு கன்னிப் பெண் திருமணத்திற்கு முன்னர், யாருடனும் உடல் உறவு வைத்துக் கொள்ளாமல் பத்திரமாக இருக்க வேண்டும் என்று போதித்தன. முதலிரவன்று ஒரு பெண் கன்னியாக இருக்கா விட்டால், அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லலாம் என்று யூத மதம் அனுமதி வழங்கியது.

கிரேக்கம் முதல் இந்தியா வரை,  "ஆண்களின் கலாச்சாரப் புரட்சி"  நடந்திருக்கலாம்.   மேற்காசியாவில் யூத மதம் தோன்றிய பின்னர், இருபாலாருக்கும் பொதுவான பாலியல் சுதந்திரத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டது. ஒரு ஆண் எத்தனை பெண்ணையும் திருமணம் செய்யலாம், ஆனால் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் கிடையாது என்று, சட்டங்கள் திருத்தப் பட்டன. தெற்காசியாவில் பிராமண மதமும் அதே மாதிரியான சட்டத்தை பின்பற்றியது.  அதற்குப் பிறகு, எல்லா நாடுகளிலும் ஆண் வழிச் சமுதாய அமைப்பு நடைமுறையில் வந்து விட்டது. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மும்மதங்களும் ஆணாதிக்கக் கருத்துகளை போதிப்பதற்கு காரணமாக, அவை தோன்றிய காலகட்டத்தில் நிலவிய, பெண் ஆதிக்க  சமுதாய அமைப்பு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த மூன்று மதங்களிலும், அத்தோடு இந்து மதத்திலும், இன்றைக்கும் ஒரு பெண் மதகுருவாக வரமுடியாது என்பது குறிப்பிடத் தக்கது. கிரேக்க, பாபிலோனிய நாடுகளில், பண்டைய மதங்கள் கோலோச்சிய காலங்களில், பெண்கள் பூசாரிகளாக, மதகுருக்களாக நியமிக்கப்படுவது சர்வ சாதாரணம்.

இந்தியாவில், ஆதிபராசக்தி, காளிமாதா, கண்ணகி போன்ற தெய்வங்களுக்கு, பெண் பூசாரிகள் பூஜை செய்யும் வழக்கம் இருந்தது. அது காலப்போக்கில் மறைந்து விட்டது. சக்தியை வழிபடும் மதத்தின் பெயர் சாக்தம். இன்று அது இந்து மதத்தின் ஒரு பிரிவாக கருதப்பட்டாலும், முற்காலத்தில் அது ஒரு தனியான மதம். தாய் மொழிச் சமூகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் பின்பற்றப் பட்டு வந்தது. இன்று அரிதாகக் காணப்படும், சிவனை காலில் போட்டு மிதித்தபடி நடனமாடும் காளியின் படம் அதனை நிரூபிக்கின்றது. காளியை வழிபடுவோர் ஒரு இரகசிய சமூகம் போன்று இயங்கியதாக, 19 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆங்கிலேயர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.  காளி வழிபாட்டாளர்கள் இரகசியம் பேணியதற்கு காரணம், அது ஒரு தாய்வழிச் சமுதாயத்தின் எச்சம் என்பதாலும் இருக்கலாம். 

பிற்காலத்தில், காளி, துர்க்கை போன்ற தெய்வங்கள் எல்லாம் பார்வதியின் அவதாரங்களாக மாற்றப் பட்டன. பார்வதியை சக்தியாக்கி, சிவனின் மனைவியாக்கினார்கள். வெவ்வேறு மத நம்பிக்கைகளாக சிதறுண்டு கிடந்த கதைகளை, பிற்கால இந்து மதம் ஒன்றுடன் ஒன்று தொடுத்து விட்டிருந்தது. அதனால் தான் இன்றைக்கு பல குழப்பங்கள். அன்று நாகரீகமடைந்த உலகம் முழுவதும், தாய் வழிச் சமுதாயத்தை, தந்தை வழிச் சமுதாயம் வென்று கொண்டிருந்தது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள், தாய் வழிச் சமூகத்தை இருந்த சுவடு தெரியாமல் அழித்து விட்டன. இந்தியாவில் பிராமண மதத்தால் அந்தளவு வெற்றி பெற முடியவில்லை. பிற்கால இந்து மதத்திற்குள் பெண் தெய்வங்களை  உள்வாங்க வேண்டியிருந்தது.  அதனால் தான், இன்றைக்கும் பல பெண் தெய்வ வழிபாடுகள் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன.

மேற்கு ஆசியாவில், யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களும், தெற்கு ஆசியாவில் இந்து மதமும் பிறந்து வளர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், உலக இனச் சமநிலையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த மதங்கள் தோன்றிய காலத்தில் தான்,   வெள்ளையினம் தெற்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.  இன்றைய ஈரான், ஈராக், அரேபியா, கிரேக்கப் பகுதிகளில் எல்லாம் வெள்ளையினம் ஊடுருவி, அங்கே மேலாதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால், இந்தியாவில் அது இலகுவாக இருக்கவில்லை. கறுப்பின இந்தியர்களின் கடுமையான எதிர்ப்பு, வெள்ளையின ஆக்கிரமிப்பாளர்களின் முன்னேற்றத்தை தடுத்திருக்கலாம். அன்றைக்கு நடந்த சமூகவியல் மாற்றம் குறித்து யாரும் எழுதி வைக்கவில்லை. ஏனெனில், அன்று யாருடைய கண்களுக்கும், வெள்ளை-கருப்பு வித்தியாசம் பெரிதாகத் தெரியவில்லை. இன்றைக்கு நாங்கள், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களை பின்பற்றும் மக்களை வெள்ளை நிற மேனியைக் கொண்டவர்களாக உருவகித்துக் கொள்கிறோம். இந்து மதத்தவர்களை வெள்ளை-கறுப்பு கலந்த கலப்பின மக்களாக புரிந்து கொள்கிறோம். 

மனித இனம் குறைந்தது ஒரு லட்சம் வருடங்களாவது, நாகரீகம் என்ற பரிணாம வளர்ச்சி கண்டு வந்துள்ளது. நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கும் வெள்ளையின-கறுப்பின வேறுபாடு, குறைந்தது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும். வடக்கே சைபீரியாவில் உள்ள பனிப் பாலைவனங்களில் இருந்து, தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த வெள்ளையினத்தவர்கள் அரேபியா, வட ஆப்பிரிக்கா வரையில் ஊடுருவினார்கள். அதற்கு முன்னரே,  இன்றைய மத்திய கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்த கறுப்பினத்தவரின் ஆப்பிரிக்கா நோக்கிய இடப்பெயர்வு நடந்திருக்க வேண்டும். மத்திய கிழக்கு கறுப்பின மக்கள் நாகரீகத்தில் சிறந்து விளங்கியது மட்டுமல்ல, பரிணாம வளர்ச்சி காரணமாக அவர்களது தோற்றமும் திராவிடர்கள் போன்று மாறியிருந்தது. ஆகவே, யூதர்கள், அரேபியர்கள், சுமேரியர்கள், பாபிலோனியர்கள் ஆகிய இனங்கள் திராவிடர்களாக மாறிய கறுப்பினத்தவராக இருக்க வேண்டும்.

கறுப்பின யூதர்கள் ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்த வரலாறு, From Babylon to Timbuktu (by Rudolph R. Windsor) என்ற நூலில் விரிவாக ஆராயப் பட்டுள்ளது. மேலதிக விபரம் தேவைப்படுவோர் அதனை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன். கறுப்பின - திராவிட மக்களின் இடப்பெயர்வு, தெற்கே ஆப்பிரிக்கா நோக்கியும், கிழக்கே இந்திய உபகண்டம் நோக்கியும் நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வாழ்விடங்கள், வடக்கே இருந்து வந்த வெள்ளையின - ஆரிய மக்களால் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப் பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அவர்களே அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினராக மாறினார்கள். ஆனால், வெள்ளையின - ஆரியர்கள், நாகரீகமடைந்திராத காரணத்தால், கறுப்பினத்தவரின் மொழி, மதம், பண்பாடு ஆகியனவற்றை தமதாக்கிக் கொண்டனர். இன்று வட-தென் அமெரிக்கக் கண்டங்களில் வாழும் கறுப்பினத்தவர்கள், ஐரோப்பியரின் மொழி, மதம், பண்பாட்டை பின்பற்றுவதைப் போன்று தான், அன்று அந்த மாற்றம் நடைபெற்றது. 

ஒரு காலத்தில், அதாவது வெள்ளையின-ஆரியப் படையெடுப்பு நடப்பதற்கு முன்னர், ஐரோப்பியக் கண்டத்திலும் கறுப்பின மக்கள் வாழ்ந்தனர். அதற்கு ஆதாரங்கள் பல உண்டு. பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்ட ஆதி கால மனிதனின் பதப்படுத்தப்பட்ட உடல் (மம்மி), கருப்பினத்தை சேர்ந்த மனிதனுடையதாக இருக்கலாம். (பிரிட்டனில் ஆங்கிலேய, கெல்ட்டிய இனங்கள் குடியேறுவதற்கு முன்னர் வாழ்ந்த இனம் எதுவென்று போதுமான அளவு ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.) சுருள் முடி கொண்ட கறுப்பு மனிதத் தலை, கோர்சிகா தீவின் தேசிய சின்னமாகும். ஒரு காலத்தில் அந்த மத்தியதரைக் கடல் தீவில் வாழ்ந்த கருப்பினம் அழிந்து விட்டது. ஆயினும் ஐரோப்பிய கறுப்பினக் கலாச்சாரக் கூறுகள் சில, இன்றைக்கு ஐரோப்பிய வெள்ளையினக் கலாச்சாரமாக மாறியுள்ளது.

பூமித் தாயாக  வழிபடப் பட்ட பெண் தெய்வம், மரியாள் என்ற பெயரில் இயேசு கிறிஸ்துவின் தாயாக மாற்றப் பட்டது. இன்றைக்கும் சில ஐரோப்பிய நகரங்களில், கன்னி மரியாள்  "கறுப்பு மடோனா" என்ற பெயரில் வழிபடப் படுகின்றார்.  புராதன காலத்தில் அது கறுப்பின மக்களின் பெண் தெய்வ வழிபாடாக இருந்தது. சுமேரியர்கள், பாபிலோனியர்களால் முதன்மையான தெய்வத்தை  பிரசவித்த தாய்த்  தெய்வத்தை வழிபடும் மரபு, இன்று கிறிஸ்தவ மதத்திற்குள் தொடர்கின்றது. ஈஸ்டர் தினத்திற்கும், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்பது ஏற்கனவே  தெரிந்த விடயம்.அதனால் சில புரட்டஸ்தாந்து குழுக்கள் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை. (Pagan Easter and the Queen of Heavenhttp://www.youtube.com/watch?v=nfcznGq_vaw&feature=related )

எஸ்ட்ரே (Eastre) என்ற, சொர்க்க லோகத்திற்கு அதிபதியான பெண் தெய்வத்தின் தினமே அதுவாகும். (அந்த சொல் ஆங்கில மொழியில் ஈஸ்டர் என்று உச்சரிக்கப் படுகின்றது.)  பண்டைய ஐரோப்பாவில், ஈஸ்டர் தினத்தன்று,  வசந்த காலத்தின்  வருகையை கொண்டாடினார்கள். (Eastrehttp://en.wikipedia.org/wiki/%C4%92ostre ) ஆங்கிலேயரின் ஈஸ்டர் என்ற சொல், பாபிலோனியர்களின் இஷ்தார் என்ற பெண் தெய்வத்தின் பெயர் மருவி வந்திருக்கலாம். பெயரில் ஒற்றுமை இருப்பதைக் கவனிக்கவும். பாபிலோனியாவில் இஸ்தார் சொர்க்க லோக அதிபதியாக கருதப்பட்டார். இஷ்தாரின் கணவன்/காதலன் தமுஸ் இறந்த பின்னர், அவனை உயிர்ப்பிப்பதற்காக பாதாள லோகம் செல்கிறாள். அங்கு பல சோதனைகளை சந்தித்த பின்னர் தான், இறந்த உடலை உயிர்த்தெழ வைக்க முடிகின்றது. ஒவ்வொரு வருடமும், வசந்த காலத்தில், அதாவது ஈஸ்டர் தினத்தன்று தமுஸ் உயிர்த்தெழுவதாக பாபிலோனியரின் புராணக்கதை தெரிவிக்கின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த கதையுடன் இது ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது. 

இஷ்தார் தெய்வ வழிபாடு, விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ஒரே மாதிரியான கதைகள் பல நாடுகளில் காணப்படுகின்றன.(Ishtar, http://en.wikipedia.org/wiki/Ishtar ) பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக உள்ளன. சுமேரியர்கள் காலத்தில் அதன் பெயர் "இனானா". கிரேக்கர்களுக்கு "அப்ரோடித்". ரோமர்களுக்கு "வீனஸ்". அதே மாதிரி இந்தியர்களின் துர்க்கை அம்மனும், இஷ்தார் தெய்வத்தைக் குறிக்கும் இன்னொரு பெயராக இருக்கலாம். துர்க்கை அம்மனின் வாகனமாக சிங்கம் காணப்படுகின்றது. அதே போல இஷ்தாரின் வாகனமும் சிங்கம் என்பது ஆச்சரியத்திற்குரியது! இஷ்தாரின் கையில் உள்ள தீப்பந்தம், துர்காதேவி கையில் உள்ள சூலாயுதம் போலத் தெரிகின்றது.  இஷ்தார் காதல் தெய்வம் மட்டுமல்ல, அது ஒரு யுத்த தேவதையுமாகும். (இந்து மதத்தில் வீரத்திற்கு துர்க்கை இருப்பது போல) பாபிலோனிய அரசர்கள் போருக்கு புறப்படுவதற்கு முன்னர்,  இஷ்தாரை வழிபட்டு விட்டுச் செல்வார்கள். பாபிலோனியரின் இஷ்தார் தெய்வ வழிபாடு, தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் துர்க்கை அம்மன் வழிபாடாக தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இஷ்தாரை தனியே துர்க்காதேவியுடன் மட்டும் ஒப்பிட முடியாது. பாபிலோனியாவில் இஷ்தார் பற்றிய கதைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில, பார்வதி தேவியின் கதைகளுடன் ஒத்துப் போகின்றன. பொதுவாக, இஷ்தாரை, ஆதி பராசக்தியுடன் ஒப்பிடலாம்.

தமிழ்ப் பிரதேசங்களில் நிறைய துர்க்கை அம்மன் கோயில்கள் இருக்கின்றன. இன்றைக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் பிரசித்தி பெற்ற கோயில்கள் அவை.  குறிப்பாக திருமணமாகாத கன்னிப் பெண்கள், துர்க்கை அம்மன் கோயிலுக்கு விரதம் இருப்பார்கள். இளம் பெண்கள், தொடர்ந்து ஏழு செய்வாய்க் கிழமைகள், துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால், அவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். மேலே இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில், இஷ்தார் கோயில் வழிபாடு பற்றி நான் எழுதியதை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். பாபிலோனிய நாட்டில், திருமணமாகாத ஒவ்வொரு இளம்பெண்ணும் கட்டாயமாக ஏழு நாட்கள் இஷ்தார் கோயிலில் சென்று தங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் பின்பற்றப் பட்டது. அதற்குப் பிறகு அவர்களுக்கு திருமணம் நடக்கும். ஈஸ்டர், இஷ்தார், துர்க்கை அம்மன், இந்த தெய்வங்களின் பெயர்கள், அறுந்து போன பண்டைய தொடர்பை எமக்கு நினைவு படுத்துகின்றன.  கறுப்பின-திராவிட இனம், ஒரு காலத்தில் ஐரோப்பா முதல் இந்தியா வரையில் வாழ்ந்து வந்தது. அவர்கள் இன்று வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், ஒரே மாதிரியான பண்பாட்டை பகிர்ந்து கொள்கின்றனர். 

(தொடரும்)

3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
________________________________________________________________________________

உசாத்துணை நூல்கள்:
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie

2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

/

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 3:34:25 AM1/24/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்

ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்

by கலையரசன்
[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]

பண்டைய தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு 

(ஆறாம் பாகம்)

சிங்கப்பூர் என்ற நாட்டின் பெயர், ஒரு தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்தது  என்று பெருமை கொள்கின்றோம். (உண்மையில் அது ஒரு சமஸ்கிருதப் பெயர்) ஆனால், ஈராக், ஒரு சுத்த தமிழ்ச் சொல்லைக் கொண்ட  நாட்டின் பெயர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும்? ஹரப்பா போன்று, சம காலத்திய மெசப்பத்தோமிய நாகரீகம் தோன்றிய இடத்தின் பெயர் "ஊர்"! ஊர் என்பது பின்னாளில் உருக், எரேக் என்று மருவி, அதுவே இன்று ஈராக் என்று அழைக்கப் படுகின்றது. அப்படியானால், ஈராக்கில் தமிழர்களின் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்க வேண்டுமல்லவா? தமிழர்களின் ஈராக்கிய மைத்துனர்கள் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட ஒரே காரணத்திற்காக, பண்டைத் தமிழர்களின் வரலாற்றை புறக்கணித்து விட முடியுமா? ஈராக்கியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னர், கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்துள்ளனர். அதற்கும் முன்னர்? இந்து மதத் தெய்வங்களை ஒத்த, திராவிட தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். அவை பற்றி நாம் மேலும் ஆராய்வது அவசியமானது. அப்போது தான், "குமரி கண்ட நாகரீகம்"  என்ற கற்பனைக் கதையாடலுக்கு முரணான, நிஜமான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

"ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையினத்தவர்கள், திராவிடர்கள் எல்லோரும் கறுப்பினத்தவர்கள்" என்ற கூற்று எவ்வளவு தூரம் சரியானது? முதலில் வெள்ளை-கருப்பு பாகுபாடு எப்போது தோன்றியது?

நிச்சயமாக, 16 ம் நூற்றாண்டில், காலனிய கால வரலாற்றுடன் தான் ஆரம்பமாகியது. அதற்கு முன்னர், எந்தவொரு இனத்தையும் வெள்ளை என்றோ அல்லது கருப்பு என்றோ பார்க்கும் வழக்கம் இருக்கவில்லை. ஆகவே, ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்று கருதுவதும் தவறானது. வெள்ளையின மேலாதிக்க கொள்கைக்கு வலுச் சேர்ப்பதற்காகவே அது போன்ற கருத்தியல்கள் பரப்பப் படுகின்றன. தமிழகத் திராவிட இயக்கத்தினரும், தமிழ் தேசியவாதிகளும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளமை ஆச்சரியத்திற்குரியது. மானிடவியல் ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சி முடிவுகளும் வெள்ளையின அறிஞர்களாலேயே தொகுக்கப் பட்டு வந்தன. ஒரு வெள்ளையன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று, நாங்களும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். 

இந்திய உப கண்டத்திற்கு மட்டுமே சிறப்பம்சமான சாதியமைப்பு, இந்து மதம் போன்றன, வெள்ளையினத்தவர் வாழும் பிற நாடுகளில் காணப்படவில்லை. ஆதலால், வர்ணாச்சிரம சாதியமைப்பும், இந்து மதமும் வெள்ளையின ஆரியர்களினால் இறக்குமதி செய்யப்பட்டவை என்று வாதிடுவது தவறானது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த திராவிடர்கள், தாம் தங்கி வாழ்ந்த இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியான சமுதாய அமைப்பை கொண்டிருந்தனர். ஒரே மாதிரியான தெய்வங்களை வழிபட்டனர். இதற்கு முந்திய அத்தியாயங்களில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்பட்ட தமிழரின் (திராவிடரின்) கலாச்சார விழுமியங்களை பார்த்தோம். இனி வரும் அத்தியாயங்களில், ஆப்பிரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதி மீது கவனத்தை செலுத்துவோம்.

ஆபிரிக்க கண்டத்திற்கும், இந்திய உப கண்டத்திற்கும் நடுவில் எந்தெந்த நாடுகள் இருக்கின்றன? அரேபியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் உங்கள் மனக்கண்ணில் தோன்றும். தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தது உண்மையானால், மேற்குறிப்பிட்ட நாடுகளிலும் சில கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுமல்லவா? அது குறித்து ஆராய்வதே, இனி இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமாக இருக்கும். அரேபியருக்கும், தமிழருக்கும் இன அடிப்படையில் ஒற்றுமைகள் உள்ளன.  அரேபிய தீபகற்பத்தின் நாகரீகம் காலத்தால் பிந்தியது என்பதால், அதற்கு முந்திய மத்திய கிழக்கு நாகரீகத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இன்றைய ஈராக்கில் இருந்த பாபிலோனிய நாகரீகம் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். விவிலிய நூலில் அது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளதால், அது பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

ஆனால், அதே ஈராக்கிய பிரதேசத்தில், பாபிலோனியாவுக்கு முன்பிருந்த சுமேரிய சாம்ராஜ்யம் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. அனேகமாக, காலத்தால் பிந்திய பாபிலோனிய சாம்ராஜ்யத்தில், கறுப்பின மக்களும், வெள்ளையின மக்களும் கலந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதே நேரம், காலத்தால் முந்திய சுமேரிய சாம்ராஜ்யத்தின் குடி மக்கள் கறுப்பினத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆப்பிரிக்கர்கள், திராவிடர்களாக இனம் மாறிய காலகட்டமும் அதுவாக இருக்கலாம். அரேபிய தீபகற்பத்திலும் அந்த இனம் (ஆப்பிரிக்க-திராவிடர்கள்) பரவி வாழ்ந்திருக்கின்றது. அங்கிருந்து மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றது. இதற்கு ஆதாரமாக, அந்த மக்கள் பேசும் ஒரே மாதிரியான மொழிகளைக் குறிப்பிடலாம். ஹீபுரு, அரபு ஆகியன செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். அதே மாதிரி, சோமாலி, அம்ஹாரி, திக்ரிஞா (எத்தியோப்பியா) ஆகிய மொழிகளும் செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான்.  (Semitic Languages,  http://en.wikipedia.org/wiki/Semitic_languages)

நாங்கள் இப்பொழுது, உலகில் நாகரிக சமூகங்கள் தோன்றிய காலகட்டம் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலகட்டம், மூவாயிரம் அல்லது ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தியது. (விவிலிய நூல் அதனை மனித இனம் தோன்றிய காலகட்டம் என்று கூறுகின்றது.) குறைந்தது எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னராவது, மனித இனம், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச்  சென்று, குடியேறி வாழ்ந்து வந்தது. மனித இனம், வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்ட உடல் தோற்றங்களைப் பெறுவதற்கு பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம். அந்த பரிணாம மாற்றம் நடைபெற்ற காலப்பகுதியில், மிருகங்களைப் போன்று வேட்டையாடியும், கனிகளைப் பறித்துண்டும் வாழ்ந்த மனித இனம், பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னரே நாகரிக சமுதாயங்களை உருவாக்கி இருப்பார்கள். ஆகவே, பிற்காலத்தில் "நாகரீகமடைந்த சமுதாயங்கள்" பெரும் படை திரட்டிப்  போரிட்டு, ஒன்றை மற்றது அழித்த காலத்தில் மனித நேயம் காணாமல் போய் விட்டது. அதற்கு முன்னர், "காட்டுமிராண்டிகளாக"  வாழ்ந்த மக்கள், பெரும்பாலும் மிருகங்களை மட்டுமே வேட்டையாடிக் கொன்றார்கள்.   கறுப்பினத்தவராயினும், வெள்ளயினத்தவராயினும் ஒருவரை மற்றவர் அழிக்கும் யுத்தங்கள், இன்றைக்கும் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. "இனப்பற்று, இன ஒற்றுமை, இன ஐக்கியம்..." இன்னோரன்ன வார்த்தைகள், உலகில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இன்றைக்கும் அது போன்ற கருத்தியல்கள் ஆக்கிரமிப்புப் போர்களை கருத்தில் கொண்டே உருவாக்கப் படுகின்றன.  

சுமேரியர் நாகரீகம் பற்றிய தகவல்களும், சுமேரிய சாம்ராஜ்யத்தில் இருந்தே கிடைக்கின்றன. அதாவது, சுமேரியர் போன்ற இன மக்கள் இன்றைய ஈராக்கில் மட்டுமல்லாது, வட ஆப்பிரிக்கா, அரேபியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலும் குடியேற்றங்களை அமைத்துள்ளனர். குறிப்பாக, அரேபிய தீபகற்பம் "மூதாதையரின் பூமி" என்பதான தகவல்கள், சுமேரியரின் புராணக் கதைகளிலேயே எழுதப் பட்டுள்ளன. அதற்குமப்பால், இன்றைய சோமாலியாவின் வட முனைப் பகுதியிலும் சுமேரியரின் மூதாதையர் வாழ்ந்திருக்கலாம். சுமேரியரின் நாகரீகம் தோன்றிய எரிடு நகர மக்கள், வேறொரு நாட்டில் இருந்து கப்பலில் வந்ததாக கர்ணபரம்பரைக் கதை ஒன்று நிலவியது. எரிடு  என்றால் கடற்கரை என்று அர்த்தம். அனேகமாக, அங்கிருந்து சோமாலியா வரை கப்பற் போக்குவரத்து இடம்பெற்றிருக்கலாம். சுமேரிய கோயில்களில், தெய்வச் சிலைகளுக்கு சாம்பிராணி புகை காட்டி வழிபடப் பட்டது. இந்த சாம்பிராணி மரம், வட  சோமாலியா, யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டுமே வளர்கின்றது. (உலகில் வேறெங்கும் சாம்பிராணி மரம் முளைப்பதில்லை.)இன்றைக்கும் இந்திய உபகண்டத்தை சேர்ந்த இந்துக்கள், சாம்பிராணி தூபம் காட்டி வழிபடுவது வழக்கம். ஆகவே, இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே, சோமாலியா, யேமனில் விளைந்த சாம்பிராணி இந்தியா வரை ஏற்றுமதி செய்யப் பட்டு வந்தது. பிற்காலத்தில் தோன்றிய யூத மதம், சாம்பிராணி காட்டி வழிபடுவதை தடை செய்தது.  

ஏன் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்? என்று பிற மதத்தினர் நையாண்டி செய்யும் பொழுது, இந்து மத நம்பிக்கையாளர்கள் பதில் கூறத் தெரியாமல் முழிப்பார்கள். "இவை ஒரே கடவுளின் அவதாரங்கள்" என்று,ஆன்மீக பண்டிதர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத உண்மை, இந்த தெய்வங்கள் முன்பு வெவ்வேறு இனக்குழுக்களால் வெவ்வேறு பிரதேசங்களில் வழிபடப் பட்டு வந்தன. நகர்மயமாகிய சிறு தேசங்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனியான தெய்வங்களை கொண்டிருந்தன. சுமேரியாவிலும் முன்பு அப்படித் தான் இருந்துள்ளது. எரிடு, ஊர், உருக், நிப்பூர், லகாஷ், கிஷ்  போன்ற பல சிறிய தேசங்களை, பிற்காலத்தில் தோன்றிய சுமேரிய சாம்ராஜ்யம் ஒன்று சேர்த்து, ஒரே நாடாக்கியது. அதனால், அந்தந்த பிராந்திய தெய்வங்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். இவை எல்லாம், ஒரே கடவுளின் பல பெயர்கள் என்று கூறப்பட்டன.  சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான ஆக்கிரமிப்புப் போர்கள், தெய்வங்களின் பரிணாம வளர்ச்சியை மேலும் சிக்கலாக்கின. பிற்காலத்தில் பலம் பொருந்திய வல்லரசுகாக தோன்றிய,  அக்காடிய (வட ஈராக்),பாபிலோனிய (தென் ஈராக்), அசிரிய (இன்றைய சிரியா) சாம்ராஜ்யங்கள், சுமேரியரின் தெய்வங்களை உள்வாங்கிக் கொண்டன. அவற்றிற்கு தமது மொழியில் வேறு பெயர்களை சூட்டின. 

ஒரே கடவுளை வேறு பெயரால் அழைக்கும் வழக்கம் தோன்றுவதற்கு, சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள் மட்டும் காரணமல்ல. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வேறொரு இடத்தில் சென்று குடியேறினால், அங்கே புதிய மொழிகள் உருவாகின்றன. தாயகத்துடனான தொடர்பு அறுதல், தலைமுறை இடைவெளி போன்ற காரணங்களினால், மனிதர்களின் மொழி, பண்பாடு என்பன மாறுபடலாம். ஆனால், அவர்களின் மத நம்பிக்கைகள் பெருமளவு மாறுபடுவதில்லை. காலனிய காலத்தில், தென்னாபிரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் கூலிகளாக சென்ற இந்தியர்களை அதற்கு உதாரணமாக காட்டலாம்.  

பாபிலோனியர்கள் இஷ்தார் என்று அழைத்த பெண் தெய்வத்தின் சுமேரியப் பெயர் "இனானா". (http://en.wikipedia.org/wiki/Inanna)சுமேரியரின் பல பெண் தெய்வங்கள், இனானாவின் அவதாராமாக கருதப்பட்டன. அதாவது, இந்து மதத்தில் ஆதிபராசக்தி போன்று, ஒரு தாய் தெய்வம். அதன் பூர்வீகப் பெயர் "நின் அனா", அதன் அர்த்தம் தமிழில் "அகிலாண்டேஸ்வரி!" நம்மூர் பராசக்தி போன்று, உயிர்களின் பிறப்புக்கும், பயிர்களின் செழிப்புக்கும், இல்லறத்திற்கும் நன்மை வேண்டி வழிபடப் பட வேண்டிய தெய்வம் இனானா. சுமேரியர்கள் அந்த தெய்வத்தை, "அம்மா இனானா"  என்று அழைத்தார்கள். சுமேரிய மொழியில் அம்மா என்றாலும், தமிழ் மொழியில் அம்மா தான்! ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர், பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம், இனானா என்ற பூமி மாதாவை, "மரியாள்" என்று பெயர் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் தாயாக்கி வழிபட வைத்தது. 

அது மட்டுமல்ல, "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்ற பிரபலமான கிறிஸ்தவ மும்மூர்த்திகளின் தத்துவமும் சுமேரியர்களிடம் இருந்து கடன்வாங்கியது தான். பண்டைய சுமேரியாவில், மூன்று கடவுட் கோட்பாடு முக்கியமானது. இந்து மத தத்துவத்தில் கூறப்படுவதைப் போல, இந்த மூன்று கடவுளரும் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்கின்றனர். மீண்டும் இன்னொரு தமிழ்ச் சொல், சுமேரியாவில் முக்கிய இடம் பிடித்திருந்தது. "அணுவில் இருந்து அனைத்தும் தோன்றியது" அந்த அணு யார்? சுமேரியரின் படைத்தல் தெய்வம்! அண்டவெளி, ஆகாயம் அனைத்துக்கும் கடவுளான அணு தான் உயிர்களை படைப்பதாக  சுமேரியர்கள் நம்பினார்கள். அதாவது, இந்து மதத்தில் பிரம்மாவின் தொழிலைச் செய்பவர். அடுத்ததாக, எயா அல்லது என்கி என்ற காக்கும் கடவுள். இந்து மதத்தில் விஷ்ணு போன்றவர். விஷ்ணுவின் முதலாவது அவதாரம் மச்சாவதாரம் என்று விஷ்ணுபுராணம் கூறுகின்றது. அதே போன்று, எயா ஆதி காலத்தில் கடலில் மீனாக அவதரித்ததாக சுமேரியரின் புராணக் கதை ஒன்றுண்டு. மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில். இவர் சிவனோடு, அல்லது உருத்திரனோடு ஒப்பிடத் தக்கவர்.  

 இந்து மதத்தில், பிற ஆண் தெய்வங்கள் எல்லாம், ஒன்றில் விஷ்ணுவின், அல்லது சிவனின் அவதாரங்களாக கருதப்படுகின்றன. சுமேரிய மதத்திலும், எயா, என்லில் ஆகிய கடவுளரின் மனித வடிவிலான அவதாரங்கள் பற்றிய பல்வேறு கதைகள் உலாவின. தமூஸ் என்ற தெய்வத்தின் கதை, சுமேரியர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. வேறெந்த தெய்வத்திற்கும் அந்தளவு மகிமை கிட்டவில்லை. சுமேரிய மொழியில் தமுசி, பாபிலோனிய மொழியில் தமுஸ், கிரேக்க மொழியில் அடோனிஸ். தமிழ் மொழியில் சிவன்? எந்த நாட்டில் எந்தப் பெயரில் அழைக்கப் பட்டாலும், அந்தப் புராணக் கதை மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தது. ஒரு காலத்தில், கிரேக்கம் முதல் ஈரான் வரையில் வாழ்ந்த மக்களால் வழிபடப் பட்டு வந்த தெய்வத்தின் கதை, அத்தனை இலகுவாக மறக்கப் பட்டிருக்காது. அது இன்றைக்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் நிலைத்து நிற்கலாம். அதிசயப் படத் தக்கவாறு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதைக்கும், தமுஸ் தெய்வத்தின் புராணக் கதைக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இயேசு பிறந்த பாலஸ்தீனம் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. பாபிலோனியாவில் நடந்ததை எல்லாம் விவிலிய நூலில் விலாவாரியாக எழுதத் தெரிந்த ஆண்டவருக்கு, மிகவும் பிரபலமான தமுஸ் தெய்வத்தின் கதை தெரியாதது ஆச்சரியத்திற்குரியது. 

(தொடரும்)
5.கோயிலில் பாலியல் தொழில்_________________________________________________________________________ உசாத்துணை நூல்கள்:
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie

2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்ஸ்,

இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

/

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 3:44:11 AM1/24/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
திராவிட நாகரீகம் ஆப்ரிக்கவிலிருந்து இந்தியா பயணம் செய்ததாக கட்டுரையாளர் கருதுவதால் அங்கு தோன்றிய மிகப் பெரிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதங்களை ஆதாரமாக/வம்புக்கு இழுத்திருப்பார். இது மதம் சம்மந்தமான கட்டுரையாக யாரும் கருத வேண்டாம்.

ஒரு ஆராய்ச்சியாளனின் பார்வையில் எந்தஒரு விசயமும் புனிதமானதாகக இருக்காது. எல்லாமே கேள்விக்குட்பட்டதாகவே இருக்கும். அதனால கட்டுரையில் உடன்படாதவங்க தயவுசெய்து இந்த இழையை ஃபில்ட்டர் போட்டிடுங்க.

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 4:32:03 AM1/24/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்! 
நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா!

 (பண்டைய தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு )

  (ஏழாம் பாகம்)


"  பின் அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் வடக்கு வாயிலுக்குக் கூட்டிவந்தார். அங்கே பெண்கள் உட்கார்ந்து தம்மூசுக்காக அழுது கொண்டிருந்தனர். அவர் என்னை நோக்கி, "பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா. இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப்போகிறாய்" என்றார். அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்."   
- விவிலியம், எசேக்கியேல், அதிகாரம் 8 (14-16)
"ஆடி மாதத்தில், திருமணம் போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவதில்லை" என்பது, இன்றைக்கும் தமிழர்கள் பின்பற்றும் வழக்கமாகும். அது ஏன் என்ற காரணம் பலருக்கு தெரியாது. அதே நேரம், "ஆடிப் பட்டம் தேடி விதை"  என்ற பழமொழி ஒன்றுண்டு. விவசாயிகளுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதம், எதற்காக அப்படி ஒரு கெட்ட  பெயரை சம்பாதித்துள்ளது? நாங்கள் தமிழ் மொழி பேசும் ஆப்பிரிக்க கருப்பர்கள் என்பதால், எமது முன்னோரின் பழக்க வழக்கங்களை விடாமல் பின்பற்றி வருகின்றோம்.

ஆடி மாதம்,தமிழர்களின் அறுந்து போன தொடர்பு ஒன்றை இன்றைக்கும் நினைவுபடுத்துகின்றது. உலகில் முன்தோன்றிய மூத்தகுடி என்ற பெருமை பாடுவதில் தமிழன் சளைத்தவன் அல்ல. ஆயினும், அந்த மூத்த குடிக்கு அன்றிருந்த பெயர் வேறு. அதிலிருந்து கிளைகளாக பிரிந்தவை இன்று பல்வேறு திராவிட மொழிகளைப் பேசிக் கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நமது முன்னோர்கள், இன்றைய ஈராக் பிரதேசத்தில் குடியேறிய பின்னர் தான் நாகரீகமடைந்தனர். அங்கே "ஊர்"  என்ற பெயரில் நகரங்களை அமைத்து, தேச பரிபாலனம் செய்தனர். பேச்சு மொழிக்கு எழுத்து வடிவத்தைக் கண்டுபிடித்தார்கள். ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில், இயற்கையோடொன்றி வழிபட்டு வந்த தெய்வங்களுக்கு, பல்வேறு புராணக் கதைகளை உருவாக்கினார்கள். அந்தக் கதைகளின் மூலம், சிக்கலான தத்துவார்த்த கேள்விகளுக்கு விடை காண முயற்சித்தார்கள். தமது தெய்வங்களை வழிபடுவதற்காக, அவற்றை போற்றிப் புகழ் பாடும் செய்யுள்களை இயற்றினார்கள். இந்த செய்யுள் இயற்றும் கலை, வட இந்தியாவில் வேத காலத்திலும், தென் இந்தியாவில் சங்க காலத்திலும் தொடர்ந்தது. 

ஈராக்கில் வாழ்ந்த தமிழர்களினதும், பிற திராவிட இனங்களினதும் மூதாதையரின் பெயர் சுமேரியர்கள். உலகில் முதல் தோன்றிய நாகரீகத்தைக் கொண்டவர்கள். சுமேரிய நாகரீகம், ஹரப்பா நாகரீகத்திற்கும் முந்தியது. சில ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் அது பாபிலோனிய நாகரீகமாக உருமாறியது. கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில், ஒரு சிறுபான்மையினமான யூதர்களின் நாகரீகமும் துளிர் விட்டிருந்தது. பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக வாழ்ந்த யூதர்கள், அன்று நிலவிய முக்கிய கதைகளை விவிலிய நூலில் (யூத மதப்பெயர் "தோரா") பதிவு செய்தனர். அதனால், அன்றைய ஈராக்கிய நாகரீகம் பற்றி நாம் சிறிதளவேனும் அறிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும், யூதர்களின் புனித நூல் உருவான காலத்தில், பல பெயர்கள் மாறி விட்டிருந்தன. குறிப்பாக தெய்வங்களின், இடங்களின் பெயர்கள், அவற்றின் மூலப் பெயர்களில் இருந்து பெருமளவு மாறுபட்டிருந்தன. பாபிலோனியர்கள், அசிரியர்கள்  தமது மொழிகளில் இட்ட பெயர்கள் அப்படியே பைபிளில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆயினும், அதே தெய்வங்களுக்கு, அதே இடங்களுக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், சுமேரியர்கள் வைத்த பெயர்கள் மறைந்து விட்டன. அதே போன்று, சுமேரியர்களின் புராணக் கதைகள், பிற்காலத்தில் பாபிலோனியர்களால் சிறிய மாற்றங்களுடன் பாதுகாக்கப் பட்டு வந்தன. யூதர்கள், அவற்றை "ஆண்டவரால் அருளிச் செய்யப்பட்ட"  கதைகளாக விவிலிய நூலில் எழுதி வைத்து விட்டனர். கிறிஸ்தவர்களும் தம் பங்கிற்கு சிலவற்றை பயன்படுத்த தொடங்கினார்கள். 

உதாரணத்திற்கு, ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கதையும், அதிலிருந்து தப்புவதற்கு நோவா கப்பல் ஒன்றை தயாரித்த கதையும் விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. அதே ஊழிப் பெருவெள்ளம்  மாதிரியான கதை, யூத மதம் தோன்றுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சுமேரியர்களினால் பாடப் பட்டு வந்த புராணக் கதையை நினைவு படுத்துகின்றது.  சுமேரியர்கள் தமது தெய்வங்களின் கதைகளை களிமண் தட்டுகளில் எழுதி வைத்துள்ளனர். அவை இன்றைக்கும் ஈராக் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அட்ராகாசிஸ் என்ற கதை, விவிலிய நோவா கதையுடன் பெருமளவு ஒத்துப் போகின்றது. (The Story of Atrahasishttp://faculty.gvsu.edu/websterm/Atrahasi.htm ) நமது காலத்தில் இதனை ஒரு மோசடி, இலக்கியத் திருட்டு என்றெல்லாம் கூறலாம். ஆனால், அனைத்து மதங்களும், அனைத்து இனங்களும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்பதை நாங்கள் மறந்து விட்டதால் ஏற்பட்ட குழப்பம் இது. நாகரிக வளர்ச்சி காரணமாக, தமக்கென தனியான மதங்களையும், மொழிகளையும் உருவாக்கிக் கொண்ட மக்கள், ஒரே பூர்வீகத்தை கொண்ட சகோதர இனங்களை,எதிரிகளாக கருதும் குறுகிய மனப்பான்மை, இன்றைக்கும் காணப்படுகின்றது. தான் மட்டுமே சிறந்தவன் என்ற அகந்தையும், தன் முனைப்பும் இல்லாதவர்கள் மட்டுமே மூத்தகுடிப் பெருமை பேச தகுதியுடையவர்கள். மத்திய கிழக்கை சேர்ந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கதைகளை தமது புனித நூல்களில் எழுதி வைத்திருப்பது தற்செயலானதல்ல. இந்த மும்மதங்களுக்கும் மூலம் ஒன்று தான். ஈராக்கில் தோன்றிய நாகரீகத்தில் இருந்து தான் அந்த நதிமூலம் தொடங்குகின்றது. அந்த நாகரீகம் கறுப்பின மக்களுடையது என்பதை நாம் மறந்து விடலாகாது. 

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை, பாபிலோனியர்களின் இஷ்தார் தெய்வத்திற்கான பண்டிகை என்பதனை ஏற்கனவே பார்த்தோம். பாபிலோனியர்களின் வேறெந்தக் கலாச்சாரக் கூறுகள், கிறிஸ்தவ மதத்தில் காணப்படுகின்றன என்பதனை, நாம் இப்போது பார்ப்போம். இந்துப் புராணக் கதைகள் போன்று, சுமேரியர்களின் அல்லது பாபிலோனியர்களின் கடவுளரும் மனித வடிவில் அவதாரம் எடுப்பதுண்டு. சுமேரியர்களால் தமுசி என்றும், பாபிலோனியர்களால்  தம்முஸ் என்றும் அழைக்கப்பட்ட அவதார புருஷனின் கதை மிகவும் பிரபலமானது. அந்த தெய்வத்தை போற்றிப் பாடும் செய்யுள்கள் அளவுக்கு அதிகமாகவே காணப்படுகின்றன. குழந்தையாக அவதரித்த தினத்தில் இருந்து மரணமடைந்த இறுதிக் கணம் வரை ஒரு தனி மனிதனின் காவியம் போன்று பாடப் பட்டு வந்தது. அந்தக் கதையில், தமுசி/தம்முஸ் ஒரு ஆடு, மாடு மேய்க்கும் இடையனாக அறிமுகமாகிறார். பருவ வயதை அடைந்ததும், அவரை மணம் முடிக்க காத்திருக்கும் அரசனின் மகளாக, இஷ்தார் கடவுள் அவதாரம் எடுத்துள்ளார். இருவரையும் சுற்றி புனையப் பட்ட காதல் காவியம், ரோமியோ-ஜூலியட் கதையை விடப் பழமையானது.  தம்முஸ், தனக்கேற்ற கணவனா என்று கண்டறிவதற்காக , இஷ்தார் பல சோதனைகளை வைக்கிறார். அதிலே கேட்கப்படும் கேள்விகள், விவசாய சமூகம் சம்பந்தமானவை. அதாவது, கால்நடைகளை மேய்த்து வந்த புராதன கால சமுதாயத்திற்கும், விவசாய தொழில்நுட்பம் தெரிந்த நவீன கால சமுதாயத்திற்கும் இடைப்பட்ட முரண்பாடுகளை அதில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விவசாய சமூகம், தன்னை நாகரீகமடைந்த சமூகமாக கருதிக் கொண்ட காலத்தில் இந்தப் புராணக் கதை தோன்றியுள்ளது. இஷ்தாரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தம்முஸ், கால்நடை வளர்ப்பின் சிறப்பைப் பற்றிப் பாடுகின்றார். இறுதியில், இருவரும் திருமணம் செய்து கொள்வதன் மூலம், புராதன சமுதாயமும், நவீன சமுதாயமும் ஒன்று சேருகின்றன. 

தம்முஸ்-இஷ்தார் காதல் ஜோடியின் இல்லற வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. தம்முசை ஒரு காட்டுப் பன்றி அடித்துக் கொன்று விடுகின்றது. செய்தி கேள்விப்பட்ட இஷ்தார், கணவன் இறந்ததால் ஏற்பட்ட  துயரத்தால் தவிக்கிறார். தனது பிரியத்திற்குரிய கணவனை உயிர்ப்பிப்பதற்காக, எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராகிறார். அதற்காக பாதாள உலகம் நோக்கி பயணிக்கிறார். பாதாள லோகத்தில் உள்ள ஏழு வாயில்களிலும், ஆபரணங்களையும் உடைகளையும் களைந்து விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. இறுதியில், பாதாள லோகத்தின் அதிபதி விதிக்கும் சோதனைகளை எல்லாம் கடந்து, கணவனின் உயிரை மீட்கிறார். மரணித்து ஆறு மாதங்களுக்குப் பின்னர், தம்முஸ் உயிர்த்தெழுகின்றார்.  இந்தக் கதை, எகிப்தியரின் "இஸ்ரிஸ்-இசிஸ் கதை"  போன்றுள்ளது. அந்தக் கதையை ஏற்கனவே எழுதியுள்ளேன். (பார்க்க: தொடரின் இரண்டாம் பாகம்: பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம் கண்ணகி அம்மன்) இந்தியாவைப் பொறுத்த வரையில், அதனை கோவலன் - கண்ணகி கதை, அல்லது சத்தியவான்-சாவித்திரி கதையுடன் ஒப்பிடலாம். அந்தக் கதைகளிலும், பிரிவுத் துயரால் வாடும் மனைவி, இறந்த கணவனை உயிர்ப்பிக்க முயல்வதாக கூறப்படுகின்றது. ஆனால், "தம்முஸ் - இஷ்தார்" கதை இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. கணவனின் மரணம் தொடர்பாக, இஷ்தார் பிறப்பித்த உத்தரவுகள், மக்களால் பல ஆயிரம் வருடங்களாக பின்பற்றப் பட்டு வந்துள்ளன. அந்தப் பழக்கங்கள் இன்றைய உலகில் மறைந்து விடவில்லை. இன்றைக்கும் வேறு வடிவில் தொடர்கின்றன என்பது ஆச்சரியத்திற்குரியது. 

தம்முஸ் ஒரு ஆடி மாதத்தில் கொல்லப் பட்டதால், ஆடி மாதம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். சுமேரியரின் நாட்காட்டியில், ஆடி மாதம் என்பது, ஜூலையில் அரைவாசி, ஆகஸ்டில் அரைவாசி நாட்களைக் கொண்டது. தமிழ் நாட்காட்டியிலும், ஆடிமாதம் கிட்டத்தட்ட அதே காலப் பகுதியில் தான் வருகின்றது. தமிழர்கள் எதற்காக, ஆடி மாதத்தில் எந்தவித நல்ல காரியங்களிலும் ஈடுபடுவதில்லை என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். தமிழர்களுக்கும், சுமேரியர்களுக்கும் இடையிலான பிணைப்பை இனி வரும் பகுதிகளில் விளக்குகிறேன். உங்களை ஆச்சரியக் கடலில் மூழ்கடிக்குமளவிற்கு, இதை விட இன்னும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்ப்போம். அன்றைய சுமேரிய/பாபிலோனிய மக்கள் ஆடி மாதம் முழுவதும் கோயிலில் இருந்து அழுது, ஒப்பாரி வைப்பது வழக்கம். பைபிளில்  பழைய ஏற்பாட்டில் அது குறிப்பிடப் பட்டுள்ளது. (பார்க்கவும்: எசேக்கியேல்) அனேகமாக, பிற்காலத்தில் பரவிய, யூத மதமும், கிறிஸ்தவ மதமும் அந்தப் பழக்கத்தை அடியோடு அழித்து விட்டன. (அழும் வழிபாட்டாளர்களை ஆண்டவரின் உத்தரவுப் படி கொன்றதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது.) ஆனாலும், பிற்காலத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம், தம்முஸ் வழிபாட்டில் இருந்து பலவற்றை கடன்வாங்கிக் கொண்டது. தம்முசின் மரணத்தை நினைவுகூரும் வகையில், ஈச்சமர ஓலையை எரித்த சாம்பலை எடுத்து நெற்றியில் திலகமிட வேண்டும். ஒவ்வொரு பக்தரும், தம்முஸ் தெய்வத்தின் சின்னமான சிலுவையை தமது நெற்றியில் சாம்பலால் இட்டுக் கொண்டனர். அந்த வழக்கம் இன்றைக்கும் கிறிஸ்தவர்களால், "சாம்பல் புதன்"  என்ற பெயரில் பின்பற்றப் படுகின்றது. (Ash Wednesdayhttp://en.wikipedia.org/wiki/Ash_Wednesday)  சைவ சமயத்தை சேர்ந்தவர்கள், சாம்பலை திருநீறாக பூசிக் கொள்ளும் வழக்கமும் சுமேரியாவில் இருந்து வந்திருக்க வேண்டும்.

சிலுவைக் குறியை வழிபடுவது, இயேசு கிறிஸ்துவுடன் ஆரம்பித்த வழக்கம் அல்ல. அது தம்முஸ் தெய்வத்தின் சின்னம். தம்முஸ் என்ற பெயரைக் குறிக்கும் எழுத்து சிலுவை அல்லது சக அடையாளம் போன்றிருக்கும். அன்றைய சுமேரியர்களும், பாபிலோனியர்களும் அதனை தம்முஸ் கடவுளைக் குறிக்கும் மதச் சின்னமாக வழிபட்டு வந்தார்கள். (The Sign of the  Crosshttp://www.piney.com/His56.htmlகொஞ்சம் அமைதியாக இருங்கள். சுமேரியரின் தம்முஸ் வழிபாட்டிற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. தம்முஸ் மரணமடைந்ததும், "அவர் தனது தந்தையிடம் சென்று விட்டார்." என்று இஷ்தார் மக்களுக்கு தெரிவித்தார். அந்தப் புராணக் கதையில், "எயா அல்லது என்கி" என்ற கடவுளின் குமாரனாகவே தம்முஸ் பூமியில் அவதரிக்கின்றார். அதனைக் குறிப்பிடும் இஷ்தார், "தந்தையையும், தனயனையும் ஒன்று சேர்க்கும் பரிசுத்த ஆவியைக் குறிக்கும் விளக்கு ஏற்றப்பட வேண்டும்"  என்று இஷ்தார் மக்களுக்கு அறிவுறுத்தினார். அதாவது, கிறிஸ்தவ சமயத்தில் "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்று இன்று பலரையும் குழப்பிக் கொண்டிருக்கும் கோட்பாடு சுமேரியர்களுடையது.  இயேசு கிறிஸ்துவை, "ஒரு நல்ல மேய்ப்பராக"  கிறிஸ்தவ மதம் சித்தரிக்கின்றது. தம்முஸ் கூட, ஆடுகளை மேய்ப்பவராக எமக்கு அறிமுகமாகின்றார். மரணமடைந்த யாரும் உயிர்த்தெழுவதில்லை என்பது உலக நியதியாக இருக்கையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து சுவர்க்கத்தை அடைந்ததாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. தம்முஸ் பற்றிய கதையிலும், உயிர்த்தெழுந்து சுவர்க்கம் செல்வது முக்கியமாக குறிப்பிடப் படுகின்றது. என்ன அதிசயம்!  

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்று, எமது முன்னோர்கள் காரணமில்லாமல் கூறவில்லை. தமிழரின் மூதாதையர் வாழ்ந்த பண்டைய ஈராக்கில், அடுத்த போகத்திற்கு தேவையான தானியங்களை விதைப்பது ஆடி மாதத்தில் தான். தம்முஸ் ஒரு விவசாயக் கடவுளாகும். சுமேரியர்களின் கதை ஒன்று அவரை சூரியக் கடவுளின் குமாரராக சித்தரிக்கின்றது. ஆண்டவரின் குமாரனான ஏசு கிறிஸ்துவை பெற்றெடுத்த கன்னி மரியாள் போன்று, தம்முஸ் ஒரு கன்னித்தாய்க்கு  (அதுவும் இஷ்தார் தெய்வம் தான்)  மகனாகப் பிறக்கிறார்.   இஷ்தார்-தம்முஸ் வழிபாடு ஈராக்குடன் மட்டும் நின்று விடவில்லை. சிரியா, ஜெருசலேம் வரை பரவியிருந்தது. பாபிலோனியாவில் இருந்து விடுதலையாகி ஜெருசலேம் வந்த யூதர்கள், அங்கேயும் தம்முஸ்-இஷ்தார் தெய்வங்களை வழிபட்டதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. ஹீபுரு மொழியில் தமுசுக்கு "பக்குஸ்" (அழுபவர்களின் கடவுள் என்ற அர்த்தம்) என்று பெயரிட்டிருந்தனர். கிரேக்கர்கள் தமது மொழியில், தம்முசை அடோனிஸ் என்றும், இஷ்தாரை அப்ரோடித் என்றும் பெயரிட்டார்கள். அதே போன்று, இஷ்தாரின் பெயரும் மாரி என்று மாறியிருக்கலாம். இன்றைய சிரியாவில், மாரி என்ற பெயரில் பண்டைய நகரம் ஒன்றிருந்தது. (Mari, Syria, http://en.wikipedia.org/wiki/Mari,_Syria )  அந்த நகரத்தில் இஷ்தார் தெய்வத்திற்கு மிகப்பெரிய கோயில் கட்டப் பட்டிருந்தது. மேலும், மாரி நகர பெண் தெய்வம், உயிர்களின் பிறப்புக்கு காரணமான தாய்த் தெய்வமாக வழிபடப் பட்டு வந்தது. மேலும் தம்முஸின் தாயாகவும், மனைவியாகவும் இஷ்தார் குறிப்பிடப் படுவதைப் போன்று, இயேசு கிறிஸ்துவின் தாயாகவும், சிஷ்யையாகவும் (மனைவி என்று ஒரு சுவிஷேசம் கூறுகின்றது.) மரியா என்ற ஒரே பெயரைக் கொண்ட இரண்டு பெண்களைக் குறிப்பிடுவது தற்செயலானதா? 

உலகின் மூத்தகுடி இனங்களான, தமிழர்கள், அரேபியர்கள், ஹீபுருக்கள் எல்லாம், ஒரு காலத்தில் ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்து பிரிந்திருக்க வேண்டும். பண்டைய சுமேரியர்களின் சொற்கள் தமிழ் மொழியில் மட்டுமல்ல, அரபு, ஹீபுரு மொழிகளிலும் காணப்படுகின்றன.  தம்மூஸ் என்பது, அரபு, ஹீபுரு மொழிகளில் ஆடி மாதத்தை குறிக்கும் சொல்லாகும். சுமேரியர்கள், ஹீபுருக்கள், அரேபியர்கள், தமிழர்கள், எல்லோரும் சந்திரக் கலண்டரை பயன்படுத்தி வந்துள்ளனர். (Lunar Calendarhttp://en.wikipedia.org/wiki/Lunar_calendar) அதாவது, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை வருவதைக் கணிப்பிட்டு மாதங்களை உருவாக்கினார்கள். எமது முன்னோர்களான சுமேரியர்கள், ஒரு வருடத்திற்கு 12 மாதங்களையும், 365 நாட்களையும் சரியாகக் கணித்து வைத்திருந்தார்கள். ஐரோப்பியர்கள் சூரியக் கலண்டரை பயன்படுத்தியதால், அவர்களின் மாதத்தின் நடுப்பகுதியில் சுமேரியரின் மாதம் தொடங்குகின்றது. சுமேரியரின் நாட்காட்டியை பின்பற்றித் தான், தமிழர்கள் சித்திரை 15 அன்று, புது வருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட அதே சித்திரை மாத காலத்தில், சுமேரியர்கள் "அகிது" என்ற பெயரில் புதுவருடப் பிறப்பைக் கொண்டாடினார்கள். அன்றைய தினம், பண்டைய சுமேரியாவில் அறுவடைக் காலமாகும். சுமேரியர்களின் நாட்காட்டியின் படி, நான்காவது மாதமான ஆடி மாதமே, தம்முஸ் தெய்வத்தின் மரணமும், உயிர்த்தெழுதலும் நிகழ்ந்த மாதமாகும். ஐரோப்பியரின் நாட்காட்டியில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறியப் பட்டதும், உயிர்த்தெழுந்ததும்  நான்காவது மாதமான ஏப்ரல் மாதம் வருகின்றது. எல்லாமே தற்செயலாக நடந்திருக்க முடியுமா?

(தொடரும்)


6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்_____________________________________________________________________ உசாத்துணை நூல்கள்: 

1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5.Mythology, by C. Scott Littleton


2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

/

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 6:24:36 AM1/24/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்!  நமது மொழி தமிழ்!  
நம் தாயகம்  ஆப்பிரிக்கா!
 (எட்டாம் பாகம்)


Marduk & Murugan

ஒரு காலத்தில், ஈராக், சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த திராவிட இன மக்கள் முருகனை கடவுளாக வழிபட்டு வந்தனர். அவர்கள், அந்தக் கடவுளை பேல் (வேல்)  மார்டுக் (முருகன்) என்ற பெயரில் வழிபட்டு வந்தார்கள். வடக்கே இருந்து படையெடுத்து வந்த வெள்ளையின ஆரியர்கள், மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து, அங்கிருந்த திராவிடர்களின் நாகரீகத்தை அழித்தார்கள். அவர்களின் கோயில்களை சூறையாடி, தெய்வச் சிலைகளை கொள்ளையடித்து சென்றனர். அந்த வரலாற்று உண்மைகள், விவிலிய நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளன!

"மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்; பறைசாற்றுங்கள்; கொடியேற்றுங்கள்; முழக்கம் செய்யுங்கள்; "பாபிலோன் கைப்பற்றப்பட்டது; பேல் சிறுமையுற்றது; மெரோதாக்கு உடைக்கப்பட்டது; அதன் சிலைகள் சிறுமையுற்றன; அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன, "என்று மறைக்காமல் அறிக்கையிடுங்கள். ஏனெனில், வடக்கினின்று ஓர் இனம் அதை எதிர்த்துவரும். அது பாபிலோனைப் பாழாக்கும். ஒருவனும் அதில் குடியிருக்கமாட்டான். மனிதனும் விலங்கும் அங்கிருந்து தப்பியோடுவர்."
- விவிலியம், எரேமியா (அதிகாரம் 50-2)

கறுப்புத் தலையும், குள்ளமான உருவமும் கொண்ட  சுமேரியர்கள், எங்கேயிருந்து ஈராக்கிற்கு வந்தார்கள் என்று எழுதி வைக்கவில்லை. ஆயினும், அந்தப் பிராந்தியத்தில், அன்றைய காலகட்டத்தில் அறிவில் சிறந்த மக்கள் அவர்களாக இருந்தனர். எந்த மொழிக் குடும்பத்தை சேர்ந்தது என்று இலகுவாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, விசித்திரமான மொழி ஒன்றைப் பேசினார்கள். சுமேரியர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள், சுமேரிய நாகரீகத்தின் வீழ்ச்சியுடன் அழிந்து விடவில்லை. கிரேக்கர்களாலும், அரேபியர்களாலும் பாதுகாக்கப் பட்டு வந்தன. 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் அவற்றை உலகம் முழுவதும் போதித்தார்கள். அப்போது நாங்கள், ஐரோப்பியர்களின் அறிவியல் திருட்டை தெரிந்து கொள்ளாமல், வெள்ளை இனத்தின் அறிவுக் கூர்மையை எண்ணி மெச்சினோம். ஈராக்கை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்களும், சிரியாவை ஆக்கிரமித்த பிரெஞ்சுக் காரர்களும், பல அறிவுச் செல்வங்களை கொள்ளையடிச் சென்று விட்டார்கள். சிலவற்றை மட்டும், லண்டன், பாரிஸ் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்தார்கள். 

இருப்பினும், 20 ம் நூற்றாண்டு, ஈராக்கில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சில பெறுமதி மிக்க ஆவணங்கள் கிடைத்தன. நிலத்திற்கடியில் புதைந்திருந்த களி மண் தட்டுகளில் இருந்து புதிய தகவல்கள் கிடைத்தன. நாம் கற்று வந்த உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அளவுக்கு முக்கியமான தகவல்களைக் கொண்டிருந்தன. அந்த களிமண் தட்டுகள், சுமேரியர் காலத்தில் நூல்களாகவும், செய்தி மடல்களாகவும் பயன்பட்டன. சுமேரியர்கள் தமது கடவுள்களைப் போற்றும் புராணக் கதைகளை மட்டும் அவற்றில் எழுதி வைக்கவில்லை. பண்டைய சரித்திரம், தற்கால சரித்திரம், இலக்கியம், அறிவியல், வான சாஸ்திரம், கணிதம், சட்டம்..... அதாவது, நவீன உலகில் பல்வேறு புலமை சார் நூல்கள் எழுதப் படுவதைப் போல, ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார்கள். சுமேரியர்கள், 60 என்ற இலக்கத்தை வைத்து அனைத்தையும் கணித்து வந்தனர். 360 பாகையில் அளவிட தெரிந்து வைத்திருந்தனர்.  60 நொடிகள், 60 நிமிடங்கள் என்று நேரத்தை கணக்கிட கற்றிருந்தனர். ஒரு நாளில் 12 மணித்தியாலங்கள் என்று கணித்திருந்தனர். ஆனால், அவை முற்பகல், பிற்பகல் என்று பிரிக்கப்பட்ட இரட்டை மணித்தியாலங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கின்றன, அதிலும் கால்வாசி, அரைவாசி நாள் மிச்சம் வருகின்றது என்றும் தெரிந்து வைத்திருந்தனர். காலத்தை அத்தனை துல்லியமாக கணக்கிட தெரிந்தவர்கள், அன்றைய உலகில் வேறெங்கும் தோன்றியிருக்கவில்லை. 

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் அறிவியலில் சிறந்து விளங்கிய, புத்திக் கூர்மை மிக்க சுமேரியர்களின் நாகரீகத்தை, பிற இனங்கள் பின்பற்றியதில் வியப்பில்லை. அந்தப் பிராந்தியத்தில், வேறொரு இடத்தில் இராணுவப் பலம் பெற்று, சாம்ராஜ்யங்களை ஸ்தாபித்த அக்காடியர்கள், பாபிலோனியர்கள், அசிரியர்கள்  எல்லோரும் சுமேரிய நாகரீகத்தை பின்பற்றினார்கள். அவர்கள் மட்டுமல்ல, பிற்காலத்தில் மதத்தை முதன்மைப் படுத்தி ஆண்ட, யூதர்கள் அரேபியர்கள் கூட, ஏதோ ஒரு வகையில் சுமேரியர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளனர். அத்தகைய பெருமைக்குரிய சுமேரியர்கள் யார்? அவர்களது முன்னோர்கள், வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்து குடியேறியிருக்கலாம் என்ற கதை சுமேரியர் காலத்திலேயே பிரபலமாக இருந்தது. கோள்களையும், நட்சத்திரங்களையும் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், அவர்கள் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், பண்டைய உலகில் சுமேரியர்கள் மட்டும் வான சாஸ்திர அறிவியல் தெரிந்திருக்கவில்லை. எகிப்தியர்களும் அவற்றை அறிந்திருந்தனர். இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் வாழும், டோகொன்  என்ற பழங்குடி இன மக்கள், வான சாஸ்திரத்தை தமது முன்னோர்களிடம் இருந்து கற்று வந்துள்ளனர். சுமேரியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து குடிபெயர்ந்து சென்று சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வரக் கூடிய ஆதாரங்கள் பலவுள்ளன. 

சுமேரியர்கள் பேசிய மொழியில் காணப்பட்ட சில சொற்கள், மற்றும் மத நம்பிக்கைகள் ஆகியனவற்றை வைத்து, சில முடிவுகளுக்கு வரலாம். அவர்களது மத நம்பிக்கைகள், பண்டைய எகிப்தின் பாரோ மன்னர்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றது. மேலும், "என்கி" என்ற முழுமுதற் கடவுட் கோட்பாடும், இன்றைய கென்யாவில் நிலவுவதை ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். ஆகையினால், சுமேரியர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்று, மத்திய கிழக்கில் குடியேறி இருக்கலாம். ஏற்கனவே அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த, பல்வேறு செமிட்டிக் மொழிகளைப் பேசும் மக்களும், சுமேரியர்களுடன் ஒன்று கலந்திருக்கலாம். (அன்றைய காலத்தில் ஹீபுரு, அரபு போன்ற மொழிகள் தோன்றியிருக்கவில்லை.) செமிட்டிக் மொழிகளைப் பேசிய மக்கள், சுமேரியர்களிடம் இருந்து தான் நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். மேலும் இவர்கள் எல்லோரும், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து, திராவிடர்களாக மாறிய இனங்களாக இருக்கலாம். அதனால் தான் பிற்காலத்தில் சுமேரியர்களை வென்று, மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அக்காடியர்கள் காலத்திலும், மிகப்பெரிய பண்பாட்டு மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை. பாபிலோனிய நாகரீகத்திலும் அது தான் நிலைமை. அக்காடிய, பாபிலோனிய ஆளும் வர்க்க பிரதிநிதிகள் பேசிய மொழி ஆட்சி மொழியாகியது. அதனால், தெய்வங்களின் பெயர்களும், புராணக் கதைகளும் சில மாற்றங்களுக்குட்பட்டன. 

பூமி தோன்றியது பற்றிய சுமேரியர்களின் புராணக்கதை சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் ஆகாயம், பூமி, நீர், வளி  மண்டலம் எல்லாம் ஒன்றாக பந்து போல இருந்தனவாம். சமுத்திரத் தேவதை தியாமட்டின் அடாவடித்தனங்களை அடக்குவதற்காக, கடவுளர் எல்லாம் ஒன்று கூடி, மார்டுக் என்ற தெய்வத்திற்கு வல்லமை கொடுத்து அனுப்புகின்றனர். முழுமுதற் கடவுளான என்கிக்கும், அவர் துணைவி தம்கினாவுக்கும் பிறந்த புதல்வன் தான் மார்டுக். ராட்சத தேவதையான தியாமட்டும், மார்டுக்கும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். இந்து புராணங்களில் வரும் அசுரர்களைப் போன்ற தீய சக்திகளைக் கொண்ட படைகளை எதிர்த்துப் போரிட்டு துவம்சம் செய்த மார்டுக், இறுதியில் தியாமட்டை கொல்கிறார். அசுர கணங்களின் தலைவியான  தியாமட்டின் உடல் இரண்டாகப் பிளக்கப் படுகின்றது. அதில் ஒரு பகுதி ஆகாயமாகவும், மறு பகுதி பூமியாகவும் மாறியது. மார்டுக், மும்மூர்த்திகளான அணு, எயா, என்லில் ஆகிய கடவுளர்களை, முறையே ஆகாயம், பூமி, வளிமண்டலம் ஆகிய பகுதிகளுக்கு அதிபதி ஆக்குகிறார்.

சுமேரியாவில் மார்டுக் கடவுளுக்கு பிரதான இடம் கிடைத்திருந்தது. ஏறக்குறைய முழுமுதற் கடவுளாக வழிபடப் பட்டு வந்தது. சுமேரியர்கள் வழிபட்டு வந்த மார்டுக் கடவுளின் கதை, இந்து மதத்தில் முருகக் கடவுளை நினைவு படுத்துகின்றது. கந்தபுராணத்தில் வரும் சூரன் போர் பற்றிய கதை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். மார்டுக், தியாமட்  அனுப்பிய தீய சக்திகளுடன் மோதியதைப் போன்று, முருகனும் சூரனின் படைகளுடன் மோதுகின்றார். இறுதியில், சூரனைக் கொன்று, அவன் உடலை இரண்டாகப் பிளந்து, சேவலும், மயிலுமாக ஆக்குகின்றார். இரண்டு கதைகளுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சூர சம்ஹாரத்தில், முருகன் வேல் வீசி சூரனைக் கொல்கிறார். சுமேரியரின் கதையில், மார்டுக் சூலம் போன்ற ஆயுதத்தை வீசி தியாமட்டை கொன்றார். 

ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த மார்டுக் சிற்பங்கள் சிலவற்றில், மார்டுக் கையில் உள்ள சூலாயுதம் வேல் போன்று காட்சியளிக்கின்றது. சுமேரியர்கள் பயன்படுத்திய முத்திரைகளிலும், அது வேல் மாதிரியே தெரிகின்றது. சூரனின் உடலைப் பிளந்த முருகன், அதில் ஒரு பகுதியை மயிலாக்கி, தனது வாகனமாக பயன்படுத்தியதாக கந்த புராணம் கூறுகின்றது.  சுமேரியர்களின் புராணக்கதை ஒன்று, தியாமட் ஒரு பறக்கும் டிராகன் என்கிறது. மார்டுக் அதனை ஒரு வாகனமாக பயன்படுத்தி பறந்து திரிவதுண்டு. இது எல்லாவற்றையும் விட, "மார்டுக் - முருகன்" ஆகிய  இரண்டு பெயர்களிலும்  உள்ள ஒற்றுமையைக் கவனிக்கவும். மேலும், சுமேரியர்கள் மார்டுக்கை "பேல்" (Bēl) என்ற பெயராலும் வழிபட்டு வந்துள்ளனர். சுமேரிய மொழியில், பேல்  என்றால் பிரபு  என்று அர்த்தம். அக்காடிய மொழியில் அதனை "பேலு"  என்று அழைத்தார்கள். தமிழ் மொழியில், "B" உச்சரிப்பு கிடையாது. அதற்குப் பதிலாக "வே"  என்ற எழுத்தைப் பாவிப்பதுண்டு. ஆகவே பேல், வேல் என்று மாறியிருக்கும். பேலு, வேலு வாகியிருக்கும். இது போன்ற மாற்றங்கள், வேறு சொற்களிலும் ஏற்பட்டுள்ளன. 

ஆரியர்கள் இமயமலைப் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று கூறப்படும் கோட்பாட்டில், பல குறைபாடுகள் காணப்படுவதை ஏற்கனவே பல தடவைகள் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். மத்திய ஆசியாவை சேர்ந்த ஆரியர்கள், இடையில் எந்த நாட்டையும் கைப்பற்றாமல், நேராக இந்தியா நோக்கி வந்ததாக சொல்லப்படுவது ஒரு புனைவு ஆகும். ஆரியர்களின் குடிபெயர்தல், இன்றைய துருக்கியில் இருந்து தொடங்கியது என்று, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்தக் கட்டுரையிலும், அந்தக் கோட்பாட்டை வலியுறுத்தும் சான்றுகளை நாம் தேடலாம். அதாவது, இந்தியா மீதான ஆரியரின் படையெடுப்பு நடப்பதற்கு முன்னர், அல்லது சம காலத்திலாவது, கறுப்பின திராவிடர்களின் ஈராக், வெள்ளையின ஆரியர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டது. 

இன்றைய ஈராக் நாட்டிற்கு மேலே, துருக்கி இருப்பது வரைபடத்தை பார்த்தாலே புரியும். இன்றைக்கும், வட ஈராக்கிய பகுதிகளிலும், அதன் எல்லையோரமான கிழக்கு துருக்கியிலும் குர்து மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். குர்து மொழியானது, "ஆரிய மொழிகளான"  பார்சி, சமஸ்கிருதம் போன்றவற்றுடன் தொடர்புடையது. மேலும், 19 ம் நூற்றாண்டு வரையிலும் கூட, கிழக்கு துருக்கியின் சில பகுதிகள் ஆர்மேனியா நாட்டிற்கு சொந்தமாக இருந்தன. கிறிஸ்துவுக்கு முன்னர், இன்றைய சிரியா வரை விரிந்திருந்த மாபெரும் ஆர்மேனிய சாம்ராஜ்யத்தின் எல்லையில், ஈரானிய பார்த்திய சாம்ராஜ்யம் இருந்தது. பார்த்தியர்களும், ஆர்மேனியர்களும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சுருக்கமாக, இற்றைக்கு 2500 - 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஈராக், ஈரான், சிரியா ஆகிய நாடுகள் வெள்ளையின ஆரியர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டு விட்டது. அப்படியானால், அதற்கு முன்னர் கூட, ஆரியர்களின் படையெடுப்புகள் நடந்திருக்குமல்லவா?  

கறுப்பின திராவிடர்களான சுமேரியர்களின் நாகரீகம், மெல்ல மெல்ல அக்காடியர்களினால் உள்வாங்கப் பட்டது. அக்காட்  என்ற ஊரை சேர்ந்த அரச பரம்பரை என்பதால், அக்காடியர்கள் என்ற பெயர் வந்தது. இன்று மறைந்து விட்ட செமிட்டிக் மொழி ஒன்றை பேசிய அக்காடியர்களும், உலகில் வேறெங்கும் பேசப்படாத தனித்துவமான மொழி ஒன்றைப் பேசிய சுமேரியர்களும் மொழியால் வேறுபட்டவர்கள். ஆனால் இனத்தால் ஒன்று பட்டவர்கள். அவர்களுக்கு இடையில் கலாச்சார ஒற்றுமைகளும் இருந்தன. உதாரணத்திற்கு, தமிழர்களும், கன்னடர்களும்,சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசினாலும், அவர்கள் எல்லோரும் ஒரே திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. பண்டைய ஈராக்கில், இராணுவ பலத்தினால் மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டிய அக்காடியர்கள் மட்டுமல்ல, பாபிலோனியர்கள், காசியர்கள் எல்லோருமே ஒரே திராவிட இனத்தை சேர்ந்த, ஆனால் வேறுபட்ட மொழிகளைப் பேசிய மக்களாக இருக்கலாம். காலப்போக்கில், சுமேரியர்கள் தம்மீது மேலாதிக்கம் செலுத்திய அக்காடிய, அல்லது பாபிலோனிய மொழிகளை பேசத் தொடங்கி விட்டனர். அதனால், சுமேரியர்கள் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர். காசியர்கள் ஒரு ஆளும் வர்க்கமாக இருந்த போதிலும்,  தமது மொழியை புறக்கணித்து, அக்காடிய மொழியை உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

காசியர்களின் சாம்ராஜ்ய காலத்தில் தான் ஆரியர்களின் பெருமளவிலான படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில், பாபிலோன் நகரம் செல்வச் செழிப்பில் சிறந்து விளங்கியது. அன்றிருந்த மத்திய கிழக்கு ஆசியாவிலும், முழு ஐரோப்பாவிலும், பாபிலோன் போன்ற உன்னத நாகரீகமடைந்த நகரம் தோன்றியிருக்கவில்லை. அன்று, மேற்கே துருக்கி பகுதிகளில் வாழ்ந்த, ஹித்தித் இன மக்கள், பாபிலோனியாவின் செழிப்பில் பொறாமை கொண்டிருக்கலாம். பெரும் படையெடுத்து வந்து பாபிலோனியாவை ஆக்கிரமித்தனர். பாபிலோன் நகரத்தை அழித்து  நாசமாக்கினார்கள். அங்கிருந்த, மிகப்பெரிய மார்டுக் தெய்வச் சிலையை கொள்ளையடித்து சென்றார்கள். 

காசி மக்களும் கறுப்பினத் திராவிடர்களாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்காவில் பண்டைய குஷ் ராஜ்யத்தின் பெயர், அங்கிருந்து குடிபெயர்ந்த மக்களைக் குறிக்கவும் பயன்பட்டது. அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உச்சரிப்பில் சொல்லப்பட்டாலும், மூலம் ஒன்றாக இருக்கலாம். இன்றைய பாகிஸ்தானில் இருந்த குஷானா சாம்ராஜ்யம், வட இந்தியாவில் காசி நகரம், என்பன ஆப்பிரிக்க குஷ் இன மக்களுடனான தொடர்பை குறிக்கின்றது. காசி அரச பரம்பரையினர், ஹித்தித் ஆக்கிரமிப்பாளர்களுடன் போரிட்டு, பாபிலோனியாவை விடுதலை செய்தது மட்டுமல்ல, கொள்ளையடிக்கப் பட்ட மார்டுக் சிலையையும் மீட்டுக் கொண்டு வந்தனர். பாபிலோன் நகரில் உடைந்த கோயிலை மீண்டும் கட்டி, மார்டுக் சிலையை அதிலே பிரதிஷ்டை செய்து வைத்தனர். இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், காசி மக்கள் வேறு மொழி பேசினாலும், அவர்களும் மார்டுக் போன்ற தெய்வம் ஒன்றை வழிபட்டு வந்தனர். மார்டுக் கடவுளுக்கு அவர்களது மொழியில், ஷுகமுனா என்று பெயர். அந்தப் பெயர்ச்சொல், முருகக் கடவுளின் இன்னொரு பெயரான ஷண்முகனை நினைவு படுத்துகின்றதல்லவா? நிச்சயமாக, வெள்ளையின ஆரியர்கள் திராவிடர்களின் மத நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அதனால், படையெடுப்புகளின் பொழுது கோயில்களை சூறையாடினார்கள். அங்கிருந்த தெய்வச் சிலைகளை உடைத்தார்கள். அத்தகைய சம்பவம் ஒன்று விவிலிய நூலிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

"மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்; பறைசாற்றுங்கள்; கொடியேற்றுங்கள்; முழக்கம் செய்யுங்கள்; "பாபிலோன் கைப்பற்றப்பட்டது; பேல் சிறுமையுற்றது; மெரோதாக்கு உடைக்கப்பட்டது; அதன் சிலைகள் சிறுமையுற்றன; அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன, "என்று மறைக்காமல் அறிக்கையிடுங்கள். ஏனெனில், வடக்கினின்று ஓர் இனம் அதை எதிர்த்துவரும். அது பாபிலோனைப் பாழாக்கும். ஒருவனும் அதில் குடியிருக்கமாட்டான். மனிதனும் விலங்கும் அங்கிருந்து தப்பியோடுவர்." - விவிலியம், எரேமியா (அதிகாரம் 50-2)

விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ள "பேல்", மார்டுக் (மெரோதாக்கு) கடவுளைக் குறிக்கும். ஈராக்கில் மட்டுமல்லாது, சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் அந்தக் காலத்தில் மார்டுக் தெய்வத்திற்கு கோயில்கள் இருந்துள்ளன. அந்த நாடுகளில், மார்டுக் BEL/BAAL  என்று அழைக்கப் பட்டது. பேல் அல்லது பால் என்றால், (எம்மை ஆளும்) பிரபு அல்லது ஆண்டவர் என்று அர்த்தமாகும். பைபிளில் குறிப்பிடப் படும், "பாபிலோனை பாழாக்கிய, வடக்கிலிருந்து வந்த இனம் எது?" உலக வரைபடத்தை எடுத்து பார்த்தால், அதற்கான விடை கிடைக்கிறது. பாபிலோனுக்கு வடக்கே இருந்து வந்தவர்கள், ஆரிய மொழிகளைப் பேசிய வெள்ளையினத்தவர் அன்றி வேறு யார்? அதற்கான சான்றுகள் இன்றைக்கும் உள்ளன. பாபிலோன் அல்லது இன்றைய பாக்தாதிற்கு மேலே, குர்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் பேசும் குர்து மொழி, இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. அங்கிருந்து வடக்கே, ஆர்மேனியா, அசர்பைஜான் போன்ற நாடுகள் உள்ளன. ஆர்மேனியர்கள் ஐரோப்பியர்கள். அசெரிகள் துருக்கியர்கள். இவ்விரண்டுமே வெள்ளையின ஆரிய இனங்கள். அப்படியானால், இந்து மத வேதங்களில் எழுதப்பட்ட, தேவர்கள், அசுரர்களுக்கு இடையிலான போர்களும் பண்டைய ஈராக்கில் நடந்திருக்க வேண்டுமல்லவா?  ஆமாம், அதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.  

(தொடரும்)




 உசாத்துணை நூல்கள்:
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5.Mythology, by C. Scott Littleton
6.Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7.Civilisation One, by Christopher Knight and Alan Butler


2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)


//

Ramesh Murugan

unread,
Jan 24, 2013, 6:41:18 AM1/24/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா!

(ஒன்பதாம் பாகம்)


தமிழ் மொழிக்கு, தமிழ் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? நிச்சயமாக, அது தமிழர்கள் பேசிய மொழிக்கு அன்னியர்கள் சூட்டிய பெயர் தான். 19 ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர் தமது உச்சரிப்புக்கு ஏற்றதாக சுருக்கி வைத்த தமிழ் (Tamil ) என்ற பெயரே இன்றளவும் நிலைத்து விட்டது. அவர்களுக்கு முன்னர், போர்த்துக்கேயர்கள் "மலபார்" என்று அழைத்தார்கள். பிரெஞ்சுக் காரர்கள் "தமுள்" (Tamoul) என்று அழைத்தார்கள். இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், இந்த ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னரே, தமிழர்களுக்கு பிற இனங்களுடன் தொடர்பிருந்தது.

மலபார் என்பது அரேபியர்கள் சூட்டிய பெயர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே, கேரளாவில் மலையாளிகளுடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்த அரேபியர்கள்,   தமிழர்களையும் சேர்த்து மலபார் என்று பெயரிட்டனர். 16 ம் நூற்றாண்டில், இந்து சமுத்திர வணிகத்தில் ஈடுபட்ட போர்த்துக்கேயரும், அரேபியர்கள் மூலமாகவே தமிழர்களைப் பற்றி அறிந்து கொண்டார்கள். அதே போன்று, உலகில் ஏதாவது ஒரு விடயம் பிரெஞ்சுக் காரர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால், அந்தப் பிரெஞ்சு சொல்லையே ஆங்கிலேயர்களும் பயன்படுத்தி வந்தார்கள். ஆகவே, Tamil  என்ற ஆங்கிலச் சொல், Tamoul  என்ற பிரெஞ்சுச் சொல்லில் இருந்து வந்திருக்க வேண்டும். பிரெஞ்சுக் காரர்கள், தமிழர்கள் பற்றி சிரியாவில் அல்லது எகிப்தில் கேள்விப் பட்டிருப்பார்கள். 

இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது Tamoul  என்ற பிரெஞ்சு சொல். அது, நாம் இன்று பயன்படுத்தும் தமிழ் என்ற சொல்லுக்கு நெருக்கமானது மட்டுமல்ல, மிகவும் தொன்மையான சொல்லும் கூட. ஏனெனில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது இஸ்லாமிய சாம்ராஜ்யம்  தோன்றுவதற்கு, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, சிரியா, எகிப்தில் புராதன நாகரிக சமுதாயங்கள் உருவாகி  இருந்தன. சிரிய, எகிப்திய நாட்டவருடன், தமிழ்நாட்டுக்கு தொடர்பிருந்தது. ஆகவே, பண்டைய காலத்தில், தமுள் அல்லது அது போன்ற வேறு பெயர் ஒன்றினால், தமிழர்கள் அழைக்கப் பட்டிருக்கலாம்.

தமிழ், தமுள் ஆகிய மொழிகளுக்கு அடிப்படையாக, "தம்"  என்ற சொல் இருப்பதைக் கவனிக்கவும். "தம்", அல்லது "தாம்" என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்ட பெயர்ச் சொற்கள் தமிழ் மொழியில் உள்ளனவா? தம்பி, தமையன், தமக்கை  போன்ற உறவுச் சொற்கள் எமக்குத் தெரிந்தவை தான். அது போன்று, தாமிரபரணி, தாம்பரம் என்ற பெயரில் பல இடங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. இலங்கையில், தம்பபண்ணி, தம்பலகாமம் ஆகிய இடங்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். தாமிரபரணி, தம்பபண்ணி  ஆகிய இடங்களில் ஆதி கால மனித நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆகவே, இந்தியாவிலும் இலங்கையிலும், தமிழர்களின் நாகரீகம் தோன்றிய இடங்களில் எல்லாம், "தம்/தாம்" என்ற சொல்லை அடிப்படையாக கொண்ட பெயர் வைத்துக் கொண்டார்கள். அதனாலும் தமிழர்கள் என்ற பெயர் வந்திருக்கலாம். 

தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்கள் ஆண்டனர். இவர்களில் பாண்டியர்கள் மட்டுமே காலத்தால் முந்திய அரச பரம்பரையினர். அது மட்டுமல்ல, உண்மையான தமிழர்களும் அவர்கள் தான். சோழர்கள் தெலுங்கர்களாகவும், சேரர்கள் மலையாளிகளாகவும் இருந்திருக்க சாத்தியமுண்டு. பல்வேறு பிராந்திய மொழிகள் பேசப்பட்ட காலத்தில், இது தான் தமிழ், தெலுங்கு, அல்லது மலையாளம் என்று வரையறுப்பது கடினம். இன்றைக்கு இருப்பதைப் போன்ற "தேசிய இனம்"  எதுவும் அன்று தோன்றியிருக்கவில்லை. ஆகவே, புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக மட்டுமே, தென்னிந்திய திராவிட இனங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவாக "தமிழர்கள்" என்று பெயரிடப் பட்டது.

உலகில் பிற இனங்களுடன் தமிழர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உறவிருந்தது. ஆனால், அதற்காக அவர்கள் எல்லோரும் தமிழ் பேசினார்கள் என்று நினைப்பது மடமைத்தனம். பாண்டிய மன்னர்கள், பூர்வீகத் தமிழரின் பரம்பரையினர் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு என்பதால், அவர்களுக்கும், உலகில் நாகரீகமடைந்திருந்த புராதன இனங்களுக்கும் தொடர்பிருந்ததா என்று பார்க்க முடியும்.  ஆரம்ப கால பாண்டிய மன்னர்களின் பெயர்ப் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதில் ஒரு பெயர் "தம்முழ் " என்றிருப்பது ஆச்சரியத்திற்குரியது. ஆங்கில மொழி உச்சரிப்பில் "Tammuzh". தமிழில் வரும் "ழ்" என்ற எழுத்தை, ஆங்கிலத்தில் "zh"  என்று குறிப்பிட்டு எழுதுவது நமக்குத் தெரியும். அந்த எழுத்தின் சரியான உச்சரிப்பு, பிற மொழிகளில் உள்ள அண்ணளவான உச்சரிப்பு என்பது இன்று வரைக்கும் சர்ச்சைக்கு  உரிய ஒன்றாகவே உள்ளது. தமிழர்களே அதனை சரியாக உச்சரிப்பதில்லை என்பது வேறு விடயம்.  

தம்முள் பாண்டியனின் தலைநகரம், தமிழகத்தின் தென் முனையான கபாடபுரம் ஆகும். அது, "குவாடம்" அல்லது "கூடம்" என்றும் அழைக்கப் பட்டு வந்தது. அந்தப் பெயரை நினைவில் வைத்திருங்கள். பண்டைய கபாடபுரத்தின் அருகில் தான், முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அமைந்துள்ளது. அதையும் நினைவில் வைத்திருங்கள்.  இப்போது நாங்கள், மீண்டும் சுமேரியரின் காலத்திற்கு திரும்பிச் செல்வோம். சுமேரியர்கள் தமது வரலாற்றையும், புரானங்களையும் களிமண் தட்டுகளில் எழுதி வைத்துள்ளமை எமக்குத் தெரியும். ஏட்டில் பதிவு செய்யப் பட்ட சம்பவங்களை சரித்திரங்கள் என்றும், அதற்கு முந்திய காலத்தில் நடந்தவற்றை புராணங்கள் என்றும் வகைப் படுத்தலாம். சுமேரிய சரித்திர ஆசிரியர்களும் அது போன்ற நிச்சயமற்ற பல கதைகளையும் எழுதி வைத்துள்ளனர்.

குறிப்பாக, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் சுமேரியாவை ஆண்ட மன்னர்களைப் பற்றிய சரித்திரபூர்வமான குறிப்புகள் எதுவும் அவர்களிடமும் இருக்கவில்லை. ஆயினும் சுமேரியர்களும், தமது ஆரம்ப கால மன்னர்களின் பட்டியலை தயாரித்து வைத்துள்ளனர். அவற்றில் ஒரு பெயர் "தம்முழ்"! (Tammuzh) அந்த மன்னன் ஆண்ட தலைநகரத்தின் பெயர் "குவாரா" (Kuara). திருச்செந்தூரில் உள்ள முருகன் ஆலயம் போன்று, சுமேரியரின் குவாரா நகரிலும் மார்டுக் கடவுளுக்கு மிகப்பெரிய கோயில் ஒன்று இருந்துள்ளது. (மார்டுக், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஏற்கனவே எழுதியுள்ளேன். பார்க்க: வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்.) பாண்டிய மன்னன் தம்முழ் ஆண்ட குவாடம் என்ற நகரமும், சுமேரிய தம்முழ் மன்னன் ஆண்ட குவாராவுக்கும் இடையில் பெயரில் ஒற்றுமை இருப்பது கவனிக்கத் தக்கது.  ஆப்பிரிக்க - திராவிட  மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளுக்கு இடையில், "ரா", "டா" என்று மாறி வரும். இதனை முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். இப்போதும் ஈழத் தமிழில் "ta"  என்ற ஆங்கில உச்சரிப்புக்கு இணையாக "ரா" எழுத்து பயன்படுத்தப் படுவது குறிப்பிடத் தக்கது. 

தமிழர்களின் முன்னோர்கள், சுமேரியா (இன்று, ஈராக்) வில் இருந்து குடிபெயர்ந்த மக்களாக இருக்க வேண்டும். அதனை நிரூபிக்கும் மேலதிக ஆதாரங்களை பின்னர் தருகின்றேன். அதற்கு முன்னர், "குமரி கண்டம் கோட்பாட்டை" இங்கே பிரயோகிக்க முடியுமா என்று பார்ப்போம். குமரி கண்டக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், மேற்குறிப்பிட்ட உதாரணத்திற்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கலாம். அதாவது, குமரி கண்டத்தில் தோன்றிய தமிழினம், இந்தியா வழியாக சுமேரியாவில் (ஈராக்கில்)  சென்று குடியேறியிருக்கலாம். சில தமிழ் அறிஞர்களும் அதனை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளனர். நாம் இங்கே கவனிக்க வேண்டியது, காலம். சுமேரியர்களின் நாகரீகம் இருந்த அதே காலகட்டத்தில், இன்றைய பாகிஸ்தானில் மொஹஞ்சதாரோ,ஹரப்பா நாகரீகம் இருந்துள்ளது. இன்றைக்கும், அதைத் தான் புராதன இந்திய நாகரீகம் என்று கூறுகின்றனர். அதன் அர்த்தம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகம் நிலவிய காலத்தில், இந்தியாவில் வேறெங்கும் நாகரிக சமுதாயம் இருக்கவில்லை.

ஈராக்கில் சுமேரிய நாகரீகமும், அதன் மறைவில் தோன்றிய அக்காடிய நாகரீகமும் அழிந்து, பாபிலோனிய நாகரீகம் தோன்றியது. இவை எல்லாம் கி.மு. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்துள்ளன. தமிழகத்தின் சங்க காலம், இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியது. சுமேரிய நாகரீகம் மறைந்த பின்னரும், தமிழகத்தின் சங்க கால நாகரீகம் தொடர்ந்திருந்தது. மேலும், இரண்டு நாகரீகங்களுக்கு இடையில் வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகள் இருந்திருக்கலாம். ஈராக்கில் இருந்து குறைந்தது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னராவது, தமிழகத்தில்  குடியேறி விட்ட தமிழர்கள், தமது மூதாதையரின் பூர்வீக மண்ணான சுமேரியாவுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளனர். இந்த விபரமெல்லாம், எமது சங்க கால முன்னோருக்கு தெரிந்திருக்கும். பிற்காலத்தில் தோன்றிய ஆரிய நாகரீகம், ஈராக்கில் இருந்து இந்தியா வரை பரவியதால், பாபிலோனுடனான தொடர்பு அறுந்து விட்டது.  

பாபிலோனியர்களின் தெய்வமான தம்முஸ் (Tammuz) பற்றி ஏற்கனவே பார்த்தோம். (பார்க்க: ஆடியில் உயிர்த்தெழுந்த கருப்பு இயேசு!) தம்முஸ் என்ற சொல்லுக்கும் தம்முழ் என்ற சொல்லுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதை கவனிக்கவும். தம்முஸ் என்பது பாபிலோனிய மொழிப் பெயர் ஆகும். சுமேரிய மொழியில் "துமுழி" (Dumu Zi) என்று அழைத்தார்கள். அதனை அக்காடியர்கள் "தம்முசி"  என்று மாற்றினார்கள். ஆகவே, துமுழி, தம்முசி, தம்முஸ் என்றெல்லாம் மாறிய சொல், தமிழ் ஆகியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தம்முஸ் என்பது ஒரு தெய்வத்தின் பெயர் என்பதால், அந்தத் தெய்வம் தமிழ் மக்களால் வழிபடப் பட்டு வந்திருக்குமல்லவா? பாபிலோனியாவில் வாழ்ந்த மக்கள், ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் தம்முஸ் தெய்வத்தின் இறப்பை கொண்டாடுவார்கள். அந்த மாதம், தம்முசின் வாழ்க்கை வரலாற்றை பாட்டாக பாடி, ஒப்பாரி வைப்பது ஒரு மரபாக கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.

இது குறித்து விவிலிய நூலிலும் எழுதப் பட்டுள்ளது. "பின் அவர் என்னை ஆண்டவரின் இல்லத்தின் வடக்கு வாயிலுக்கு கூட்டி வந்தார். அங்கே பெண்கள் தமுசுக்காக அழுது கொண்டிருந்தனர்." (எசேக்கியேல், 8:14) செத்த வீட்டில் ஒப்பாரி வைக்கும் மரபு, இன்றைக்கும் தமிழர்களால் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது. தமிழர்களின் நாட்டார் பாடல்களும், அதற்கென பாடப்பட்டு வந்தன. பாபிலோனியாவில் தம்முஸ் கடவுளின் சரிதத்தை பாடி ஒப்பாரி வைப்பது போன்று, தமிழர்களின் செத்த வீடுகளிலும், இறந்தவரின் நற்பண்புகளை, செயல்களை குறிப்பிட்டு ஒப்பாரி வைப்பது வழக்கம். அப்படியானால், தமிழர்கள் தம்முஸ் கடவுளையும் வழிபட்டு வந்திருக்க வேண்டும். அது இப்போது எங்கே? தம்முஸ், சிவன் என்ற பெயரில் ஆரியக் கடவுளாக பெயர் மாற்றப் பட்டுள்ளது. ஈராக்கில் இருந்து இந்தியா நோக்கி குடிபெயர்ந்த தமிழர்கள், அங்கிருந்த சிவபெருமானையும் தம்மோடு காவிக் கொண்டு வந்து விட்டார்கள்.  

(தொடரும்)



 உசாத்துணை நூல்கள்:
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5.Mythology, by C. Scott Littleton
6.Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7.Civilisation One, by Christopher Knight and Alan Butler
8.Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9.precolonial Black Africa, by Cheikh Anta Diop


2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

/

sk natarajan

unread,
Jan 25, 2013, 5:24:30 PM1/25/13
to தமிழ்ச் சிறகுகள், Ramesh Murugan, பண்புடன்
அருமையான பகிர்வு ரமேஷ்
தொடருங்கள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>

sk natarajan

unread,
Jan 25, 2013, 5:26:15 PM1/25/13
to தமிழ்ச் சிறகுகள், Ramesh Murugan, பண்புடன்
தொடர்கின்றேன் .......

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Jan 26, 2013, 3:10:52 AM1/26/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன்
மேலும்,
ஆப்ரிக்காவிலும், தமிழகத்திலும் இருக்கும் தமிழ் மொழி தொடர்பு ஏன் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இல்லைங்கிற சந்தேகமும் வருது. ஆப்ரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு நிலம் வழியே வந்திருந்தால், அந்த மிச்ச சொச்சம் இந்தியாவின் மேற்கு பகுதியிலும் இருந்திருக்கனுமே... தொடரை முழுசா படிச்ச பின்னாடிதான் அவரு என்ன சொல்ல வர்றாருன்னு தெரியும்.

2013/1/25 செல்வன் <hol...@gmail.com>
கட்டுரையில் மிகபெரிய வரலாற்று பிழைகள் உள்ளன.

குறைந்தது ஒன்று ஒன்றரை லட்சம் வருடங்களுக்கு முன்பே இன்றைய தமிழர்களின் முன்னோடிகள் ஆபிரிக்காவில் இருந்து அரேபியா வழியாக வெளியேறி விட்டார்கள். தமிழ் மொழி தோன்றியது இரண்டாயிரம், இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன்பு. ஆக மொழியிலும், கலாசாரத்திலும், மதத்திலும் ஆபிரிக்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பை தேடுவது சுத்தமாக பொருந்தவில்லை. காரணம் மொழியும், கலாசாரமும், மதமும் சில ஆயிரம் ஆன்டுகள் முன்பு தோன்றியவை. நம் முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்தபோது தோன்றியவை அல்ல. அதனால் இஞ்சிராவுடன் அப்பத்தஒ ஒப்பிடுவதும், முருகனும் முருங்குவை ஒப்பிடுவதும் வரலாற்றுபிழை


Ramesh Murugan

unread,
Jan 26, 2013, 3:51:42 AM1/26/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 10

(பத்தாம்  பாகம்)

"நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம், வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப் போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கின படியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார்."
- விவிலியம் (ஆதியாகமம், அதிகாரம் 11)

சைவ சமயத்தில், சிவராத்திரி அனுஷ்டிப்பதை பற்றிய கதை ஒன்றுண்டு. ஊழிப் பிரளயம் (சுனாமி எனும் ஆழிப் பேரலை) ஏற்பட்டு, உலகில் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கின. அதிலே எஞ்சியவர்கள், சிவபெருமானை நினைத்து வருடத்திற்கு ஒரு நாள் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும். பிரளயத்தில் தப்பிய மக்களின் கதை, உலகில் பல இன மக்களால் நினைவுகூரப் படுகின்றது. ஒவ்வொருவரும் தமது மொழியில் அதற்கு பெயரிடுகின்றனர். ஆயினும் எல்லாக் கதையும் ஒரே மாதிரி இருக்கின்றன. விவிலிய நூலில் வரும், பிரளயத்தில் இருந்து நோவாவும், பிள்ளைகளும், தெரிந்தெடுக்கப்பட்ட விலங்குகளும் தப்பிய கதை நிறையப் பேருக்குத் தெரியும். பைபிள் ஒரு மத நூலாக இருந்ததால், நோவாவின் கதை பிரபலமானது. இது பழைய ஏற்பாட்டில் வருவதால், அதனை யூதர்களின் நம்பிக்கையாக கருதப்பட வேண்டும். தமது மூதாதையர்கள் மட்டுமே, உலகில் முதலில் தோன்றிய மூத்தகுடி என்று யூதர்கள் நம்புகின்றனர். ஆனால், விவிலிய நூலில் எழுதியிருப்பதை ஆராய்ந்தால், "யூதர்களின் மூதாதையர்" என்று குறிப்பிடப் படும் பெயர்கள், புராதன இனங்களை குறிக்கின்றன. ஆகவே, அந்தப் பெயர்கள் தனி ஒரு நபரை குறிக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்ளக் கூடாது.

ஊழிப் பிரளயம் ஒன்று ஏற்பட்டு, அதில் பல நாடுகள் அழியும் என்று ஆண்டவர் நோவாவுக்கு எச்சரிக்கின்றார். ஆண்டவர் உத்தரவுப்படி, ஒரு பெரிய கப்பலைக் கட்டும் நோவா, அதில் தனது குடும்பத்தையும், சில விலங்குகளையும் ஏற்றிக் கொண்டு தப்புகின்றார். பிரளயத்தில் இருந்து தப்பிய நோவாவின் குடும்பத்தினர், புதிய இடத்தில் குடியேறி சந்ததியை பெருக்குகின்றனர். நோவாவின் புதல்வர்களில் ஒருவன் ஹம். அவர் மகனின் பெயர் குஷ். குஷ்ஷுக்கு ஆறு புதல்வர்கள். அதில் ஒருவர் நிம்ரூட் (அல்லது நிம் ரொட்). உலகில் முதல் மனிதர்களான, ஆதாம், ஏவாள் அணிந்திருந்த ஆடை, இந்த பரம்பரை வழியாக நிம்ரூட் வசம் வந்து சேர்ந்ததாக யூத மத நம்பிக்கை ஒன்றுண்டு. நிம்ரூட் பற்றி பல்வேறு கதைகள் கூறப் படுகின்றன. அவற்றை பிறகு பார்ப்போம். விவிலிய நூலில் கூறப்படும், ஹம், குஷ் என்பவர்கள் ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். "ஹமித்தியர்கள்", "குஷ்ஷித்தியர்கள்" போன்று, அவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இனக்குழுமங்களை, விவிலியம் கறுப்பர்களாக அடையாளம் காண்கின்றது. ஆகவே நிம்ரூட் கூட ஒரு கறுப்பனாக இருந்திருக்க வேண்டும்.

நிம்ரூட் என்ற பெயர் ஏற்படக் காரணம் பலவாக இருக்கலாம். ஈராக்கில் இருந்த மராட் என்ற நாட்டின் அதிபதி என்ற அர்த்தத்தில், நி+மராட் என்ற பெயர் மருவி வந்திருக்கலாம். மேலும் அது ஒரு ஹீபுரு, அல்லது அரபி போன்ற செமிட்டிக் மொழிகளில் மட்டுமே அவ்வாறு கூறப் படுகின்றது. நிஜப்பெயர் வேறாக இருக்கலாம். அது இனிமேலும் தெரிய வருவதற்கான சாத்தியமும் குறைவு. பண்டைய ஈராக்கிய நகரங்களான பாபிலோன், ஏரேக், ஊர் போன்றவற்றை இணைத்து ஒரே நாடாக ஆண்ட மன்னனாக, நிம்ரூட்  யூதர்களால் நம்பப் படுகின்றான். சுமேரியர்களும் அது போன்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர். ஊழிப் பிரளயம் ஏற்பட்ட பின்னர் தப்பிய குடிகள் எல்லாம் புதிய நகரங்களை அமைத்துக் கொண்டன. அவற்றை நிம்ரூட் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இது சுமேரியர்களின் புராணக் கதை ஆகும். அதாவது, சுமேரியர்களின் சரித்திர காலகட்டத்திற்கு முன்பிருந்த கர்ணபரம்பரைக் கதை ஆகும். இந்து, யூத, சுமேரிய நம்பிக்கைகளை வைத்து பார்க்கும் பொழுது, உலகில் ஒரு பகுதியில் ஆழிப் பேரலை ஏற்படுத்திய அழிவுகளின் பின்னர், குறிப்பிட்டளவு மக்கள் தப்பியுள்ளனர். அவர்கள் புதிய நாகரீகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மூன்று மதங்களும் ஒன்று சேரும் புள்ளியாக, மேற்கு ஆசியா உள்ளது. ஆகவே, ஊழிப் பிரளயமும் அங்கே தான் ஏற்பட்டிருக்கலாம். அதிலிருந்து தப்பி, உலகின் வேறு பகுதிகளில் குடியேறிய மக்கள், ஒரே கதையை காவிச் சென்றுள்ளனர். ஆப்பிரிக்கர்கள், யூதர்கள், அரேபியர்கள், திராவிடர்கள், தமிழர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்து சென்றிருக்கிறார்கள். (அதற்காக, "உலகம் முழுவதும் தமிழன் ஆண்டான்" என்று சொன்னால், எல்லோருமாக சேர்ந்து எதிர்க்க வந்து விடுவார்கள்.)

பாபிலோனியாவில் நிம்ரூட் மன்னன் ஆண்ட காலத்தில், "உலகம் முழுவதும் ஒரே மொழி" பேசப்பட்டது. சொர்க்கத்திற்கு செல்லும் நோக்குடன், பாபெல் கோபுரம் கட்டியதால் சீற்றமடைந்த ஆண்டவர், மக்கள் எழுபதுக்கும் பேற்பட்ட மொழிகளைப் பேசுமாறு ஆணையிட்டதாக ஒரு பைபிள் கதை உண்டு. நான் முன்னர் குறிப்பிட்ட, "புராதன மக்கள் ஒரு மூல இனத்தில் இருந்து பிரிந்து வந்திருக்கலாம்." என்ற கூற்றை இந்த பைபிள் கதை எடுத்துக் காட்டுகின்றது. யூதர்களாலும், இஸ்லாமியராலும் மதிக்கப்படும் தீர்க்கதரிசியான ஆப்பிரஹாம் (அரபியில்: இப்ராஹீம்), நிம்ரூட் மன்னனுக்கும் இடையில் நடந்த விவாதம் பற்றி ஒரு கதை வருகின்றது. நிம்ரூட் பல கடவுட் கோட்பாட்டை ஆதரித்து வாதம் செய்கையில், ஆபிரஹாம் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்தி வாதம் செய்தார். "மனிதனை வாழ வைப்பதும், மரணிக்க வைப்பதும் இறைவனின் செயல்." என்று ஆபிரஹாம் கூறினார். அதனை மறுத்த நிம்ரூட், இரண்டு அடிமைகளை அழைத்து, ஒருவனின் கட்டுகளை அவிழ்த்து விட்டு, மற்றவனைக் கொல்லுமாறு பணித்தார். அப்போது ஆபிரஹாம், நிம்ரூட்டை மடக்கும் வகையில், "கிழக்கில் உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்க வைக்க முடியுமா?" என்று கேட்டதாகவும், அதனால் ஆத்திரமுற்ற மன்னன் ஆபிரஹாமை நாடுகடத்தியதாக கூறப்படுகின்றது. அதற்குப் பிறகு தான், நிம்ரூட் மன்னனின் நாட்டை ஆண்டவர் அழித்ததாக ஹீபுருக்கள் நம்புகின்றனர்.

"வானுயர  பாபேல் கோபுரம் கட்டியதன் காரணமாகவே, பாபிலோனிய நாகரீகம் அழிந்தது." என்பதை இன்றைக்கும் யூத, கிறிஸ்தவ மதவாதிகள் நம்புகின்றனர். ஐரோப்பாவில் வாழும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெருந் தேசக் கட்டமைப்பை எதிர்க்கின்றனர். அதற்காக அவர்கள், பாபேல் கோபுரத்தை உதாரணமாகக் காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், பல்வேறு மொழிகளை பேசும் ஐரோப்பிய இனங்களை ஒன்று சேர்த்து, ஒரே மொழி பேச வைக்கும் நோக்கம் கொண்டது. இது பாபேல் கட்டப்பட்ட காலத்தில் மக்கள், ஒரே மொழியை பேசியதை நினைவுபடுத்துகின்றது என்று கூறுகின்றனர். அதே போன்று, 2001, செப்டம்பர் 11 அன்று, நியூ யோர்க் நகரில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்ட தாக்குதலை கொண்டாடும் மதவாதிகளும் உள்ளனர். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, யூத, கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளும், 9/11 தாக்குதலானது ஆண்டவரின் தண்டனை என்று நம்புகின்றனர். தமது கருத்தை நியாயப்படுத்த, பைபிளில் இருந்து பாபேல் கோபுரம் பற்றிய உதாரணத்தை காட்டுகின்றனர்.

ஹீபுருக்களின் மத நம்பிக்கையின் படி, "நிம்ரூட் ஒரு வில்லன். தானே கடவுள் என்ற மமதையில், பாபெல் கோபுரத்தை கட்டினான்." "ஆண்டவர் அதற்கு தண்டனை வழங்கினார்." இந்து மதத்தில், பிரகலாதன் கதையிலும் அதே மாதிரியான ஒற்றுமையைக் காணலாம். "கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்." என்று கூறிய பிரகலாதனை பரிகசித்த, அவனின் தந்தையும் மன்னனுமான இரணியகசிபு, நரசிம்மனால் கொல்லப் படுகின்றான். பிரகலாதன் ஒரு விஷ்ணு பக்தன் என்றும், இரணியன் அதனை தடுத்ததாகவும் கூறப் படுகின்றது. அப்படியானால், இரணியன் சிவனை வழிபட்டு வந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கதைகள் இரண்டும் நடந்திருப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. இருப்பினும், ஆப்ரஹாம் கதையில் இருந்தும், பிரகலாதன் கதையில் இருந்தும் நாங்கள் சில உண்மைகளை புரிந்து கொள்ளலாம். இரண்டு முரண்பாடான தத்துவங்களைக் கொண்ட மதங்கள் அங்கே மோதிக் கொள்கின்றன. ஒன்று, பொருள் முதல்வாத தத்துவம் கொண்ட பண்டைய மதம், மற்றது கருத்தியல் முதல்வாதத்தை கொண்ட புதிய மதம். இரண்டுக்கும் இடையிலான போராட்டம், மேற்குறிப்பிட்ட கதைகளில் கூறப்படுகின்றது. அந்தக் காலத்தில், உலகில் நடந்த கலாச்சாரப் புரட்சி ஒன்றையும் குறிக்கலாம். அதாவது, ஒரு காலத்தில், பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக சமுதாயம் ஒன்றிருந்தது. அதற்கு மாறாக, நமது காலத்தில் "பாசிசம்" என்று அழைக்கப்படும், ஒரே மாதிரியான பண்பாட்டை வலியுறுத்தும் சமுதாயம் உருவானது. ஒரு வேளை, சிவபெருமானின் பூர்வீகம் பற்றிய தகவலும், அந்தக் கலாச்சாரப் புரட்சி நடந்த காலத்தில் தொலைந்து போயிருக்கலாம்.

யூதர்களின் தோரா, கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு, முஸ்லிம்களின் குரான், இந்த மூன்றும் ஒரே மூலத்தை கொண்டுள்ளன. ஆகவே, ஒரே மாதிரியான கதைகள் இம் மூன்று நூல்களிலும் காணப்படுவது இயல்பான விடயம். நான் இங்கே குறிப்பிடும் பைபிள் கதைகள், மும்மதத்வர்களாலும் நம்பப் படுபவை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், பைபிளில் எழுதப்படாத ஹீபுரு மக்களின் நம்பிக்கைகளும், குர்ஆனில் எழுதப்படாத அரபு மக்களின் நம்பிக்கைகளும் இருக்கின்றன. அவற்றையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கி.பி. 10 ம் நூற்றாண்டில், அரபு-இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் முசுட் (Musud), அந்தப் பிராந்தியத்தில் வாழும் மக்களின் வரலாறு பற்றிய செவி வழிக் கதைகளையும் தொகுத்திருந்தார். அரேபியர்களின் புராதன நாகரீகமாக, இன்றைய ஜோர்டானில் அழிந்து போன நபெத்தியர்களின் நாகரீகம் கருதப் படுகின்றது. நபெத்தியர்கள் என்ற இனமும், அவர்கள் பேசிய மொழியும் கூட இன்று இல்லை. இருப்பினும், அவர்கள் இன்றைய அரேபியரின் மூதாதையராக இருந்திருக்க வாய்ப்புண்டு. நிம்ரூட் என்ற மன்னன், நபெத்தியர்களை 500 ஆண்டுகள் ஆண்டதாக, அந்த மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. அதனையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட தரவுகளில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம். ஒரு காலத்தில், ஈராக்கில் இருந்து ஜோர்டான் வரையில், நிம்ரூட் என்ற பெயரைக் கொண்ட மன்னன் ஆட்சி செய்துள்ளான். அவனது ஆட்சிக் காலம், வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கு முந்தியது.

நிம்ரூட் மன்னனின் ஆட்சிக் காலத்தில், மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசியதாகவும், கோபுரம் கட்டியதாகவும், விவிலிய நூலில் கூறப்பட்ட கதையை மீண்டும் ஒரு தடவை நினைவு படுத்திப் பார்ப்போம். தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து அரேபியா வழியாக இந்தியா வந்து சேர்ந்திருக்கலாம், என்று நான் எழுதி வருவதற்கு சான்றாக இதைக் கருதலாம். எகிப்திய, சோமாலிய, சுமேரிய மொழிகளுக்கும், தமிழுக்கும் இடையிலான ஒற்றுமைகள் பற்றி ஏற்கனவே பல உதாரணங்களை காட்டி இருக்கிறேன். அதன் அர்த்தம், இவை எல்லாம் ஒரு மூல மொழியில் இருந்து பிறந்தவை. மேலும், பாபேல் கோபுரம் பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். எகிப்தியர்கள் பிரமிட்கள் கட்டியது போன்று, சுமேரியர்கள் (அல்லது பாபிலோனியர்கள்) சிகுரத் என்ற பெயரில் உயரமான கோயில்களை கட்டி வழிபட்டு வந்தனர். பிரமிட் என்பது ஒரு கோயில் அல்ல, ஆனால் ஒரு சமாதி என்பது உண்மை தான். ஆனால், இன்றளவும் அது ஒரு உலக அதிசயமாகவே பார்க்கப் படுகின்றது. அத்தகைய பிரமாண்டமான கட்டிடங்களை கட்டும் அறிவியல் தெரிந்தவர்கள், இன்றைய விஞ்ஞான யுகத்திலும் இல்லை. ஆகவே, அவற்றை கட்டிய மக்கள் அபாரமான தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர். அது எப்படி சாத்தியமாயிற்று? நமது அறிவுக்கெட்டிய வரையில் எதுவும் புலனாகாததால், வேற்றுக் கிரக வாசிகள் கட்டியிருக்கலாம் என்று கூட நினைக்கிறோம்.

சுமேரியர்கள் கட்டிய சிகுரத் கோபுரங்களும் ஒரு உலக அதிசயம் தான். எகிப்தியர்கள் பாறைகளை கொண்டு பிரமிட்கள் கட்டினார்கள். சுமேரியர்கள், செங்கற்களை வைத்து சிகுரத் கட்டினார்கள். அவரவர் நாட்டில் கிடைத்த இயற்கை வளத்தை பயன்படுத்திக் கட்டினார்கள். அது மட்டுமே வித்தியாசம். பிரமிட், சிகுரத் ஆகிய கோபுரங்கள், வானை நோக்கி உயரமாக கட்டப்பட்ட காரணம் என்ன? அண்டவெளியில் இன்னொரு கிரகத்தில் இருந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காகவா? அந்த மர்மம் இன்னும் துலங்கவில்லை. இருப்பினும், பெருஞ் செலவில் கட்டப்பட்ட பாபிலோன் கோபுரத்தின் விளைவாக, பொருளாதார நெருக்கடிகள் தோன்றியிருக்கலாம். அதன் விளைவாக கலகங்கள் ஏற்பட்டு, உள்நாட்டுப் போர்கள் நடந்து, மக்கள் சிதறி இருக்கலாம். நிச்சயமாக, பைபிள் போன்ற மத நூல்கள், இப்படி எல்லாம் விளக்கமாக எழுதப் போவதில்லை. மத நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரையில், "கடவுளுக்கு எதிரான மனிதனின் விஞ்ஞான வளர்ச்சி கண்டு, கடும் சீற்றமுற்ற கடவுள் அவர்களை தண்டித்தார்." அவர்களால் அப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். 

எகிப்தியர்களும், சுமேரியர்களும் கட்டி வளர்த்த விஞ்ஞான அறிவியல், பிற்காலத்தில் தொலைந்து போனது, என்பது மட்டும் நிச்சயம். அந்த நாகரீகத்தின் வீழ்ச்சியின் பின்னர் தான், யூத மற்றும், ஆரிய நாகரீகங்கள் தோன்றின. அவை இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. இருப்பினும், பாபிலோனியாவில் இருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் குடியேறிய திராவிட இனங்கள், தமது முன்னோரின் அறிவியலை முழுமையாக மறந்து விடவில்லை. பாபிலோனிய தெய்வங்கள், மத நம்பிக்கை, மற்றும் கோயில் கட்டும் தொழில்நுட்பத்தையும் காவிக் கொண்டு வந்திருந்தார்கள். இந்திய திராவிடர்கள், தமக்குத் தெரிந்த வகையில், சில மாற்றங்களுடன் கோயில்களை கட்டினார்கள். பாபிலோனியர்களின் சிகுராத் மாதிரி, கூம்பு வடிவில் அமைந்த கோபுரங்களை கட்டினார்கள். சுமேரியரின் சிகுரத் என்ற சொல்லும், தமிழரின் சிகரம் என்ற சொல்லும் ஒரே மாதிரி ஒலிப்பது தற்செயல் அல்ல.

(தொடரும்)




 உசாத்துணை நூல்கள்:
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5.Mythology, by C. Scott Littleton
6.Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7.Civilisation One, by Christopher Knight and Alan Butler
8.Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9.precolonial Black Africa, by Cheikh Anta Diop


2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்ஸ்,

இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

/

Ramesh Murugan

unread,
Jan 26, 2013, 5:15:56 AM1/26/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 11

(பதினொன்றாம்  பாகம்)

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே"
- சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் 

ஈராக்கிய பிரதேசத்தில் உருவான முதலாவது வெள்ளையின சாம்ராஜ்யம், ஆர்மேனியர்களுடையது. (இது பற்றி பின்னர், இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.) ஆர்மேனியர்களின் பூர்வீகத்தை குறிப்பிடும் புராணக்கதை ஒன்று இங்கே முக்கியமானது. ஆர்மேனியா என்ற தேசத்திற்கு, ஆர்மேனிய மொழியில் "ஹய்" என்று பெயர். ஹய்க் என்ற ஆர்மேனிய இனக்குழுத் தலைவன் உருவாக்கிய நாடு என்று அர்த்தம். ஆர்மேனிய மக்கள், ஒரு காலத்தில் பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்குள் வாழ்ந்த  சிறுபான்மை இனமாக இருந்திருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் பாபிலோனியாவை ஆண்ட, நிம்ருட், அல்லது பேல் என்ற சக்கரவர்த்திக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அவனை போரில் வென்று தான், ஆர்மேனிய தேசம் உருவானது. நிம்ரூட் என்ற பெயர் மட்டுமல்ல, பேல் (பார்க்க: வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்) என்ற பெயரும், பாபிலோனிய மன்னர்களின் விருப்பத்திற்குரிய தெரிவாக இருந்துள்ளது. ஆகவே, இவ்விரண்டு பெயர்களும், தெய்வங்களை மட்டுமல்ல, பாபிலோனியாவை ஆண்ட மன்னர்களையும் குறிக்கலாம். பெயர் ஒரே மாதிரியாக இருப்பதால், பல விதமான கதைகள் எம்மைக் குழப்புகின்றன. எது எப்படி இருப்பினும், என்றோ ஒரு காலத்தில் நிம்ரூட் என்ற வீர புருஷர் ஒருவர் வாழ்ந்திருக்க வேண்டும். அவருக்குப் பின்னர், அவரின் பெயர் தாங்கிய மன்னர்களின் காலத்தில் நடந்த கதைகளும், "நிம்ரூட் கதைகளாக" மக்களால் பேசப் பட்டு வந்திருக்கலாம்.

ஆர்மேனியர்களின் பூர்வீகம் பற்றிய கர்ணபரம்பரைக் கதையில், அவர்களின் தலைவனான ஹய்க் எதிர்த்துப் போராடிய, நிம்ரூட் (அல்லது பேல்), ஒரு ராட்சத தோற்றம் கொண்டவனாக வர்ணிக்கப் படுகின்றான். இந்து புராணங்களின் நம்பிக்கையின் படி, அசுரர்கள் ராட்சத தோற்றம் கொண்ட மனிதர்கள் ஆவர். இது இன்றைக்கும் காணப்படும், ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் பற்றிய பொது அபிப்பிராயத்துடன் ஒத்துப் போகின்றது. ஒரு காலத்தில், இன்றைய ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் வாழ்ந்த மக்கள், ஆபிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்த கறுப்பினவர்களாக இருக்க வேண்டும். சுமேரியர்கள், அக்காடியர்கள், பாபிலோனியர்கள் எல்லோரும் கறுப்பர்கள் தான். ஆகவே அவர்களின் மன்னனும் ஒரு கறுப்பனாகவே இருந்திருக்க வேண்டும். இந்து மதத்தில், சிவன், விஷ்ணு, காளி ஆகிய கடவுளரும் கறுப்பாகவே உள்ளனர்.

இந்துக்களின் காளி, துர்க்கை ஆகிய பெண் தெய்வங்கள், பாபிலோனியாவில் இஷ்தார் (அல்லது இனானா) என்ற பெயரில் வழிபடப் பட்டு வந்ததை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இந்தக் கட்டுரையில், பண்டைய சுமேரியர்கள் சிவனையும் வழிபட்டு வந்தனரா என்று பார்ப்போம். சுமேரியர்கள்/பாபிலோனியர்கள் பல தெய்வ வழிபாடு கொண்ட மதத்தை பின்பற்றினார்கள். இருப்பினும், எயா அல்லது என்கி என்ற கடவுளுக்கு தனி மரியாதை கிடைத்து வந்தது. பல இடங்களில் முழுமுதற் கடவுளாக கருதப் பட்டார். அதை விட, தம்முஸ் (அல்லது தமுசி) என்ற தெய்வமும் பிரபலமாக இருந்ததை நாம் ஏற்கனவே பார்த்தோம். தம்முஸ், எயா கடவுளின் மனித அவதாரம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனால், இவ்விரண்டு தெய்வங்களுக்காகவும் கட்டப்பட்ட கோயில்கள் ஒரே மாதிரியாக இருந்ததில் வியப்பில்லை.

எயா/என்கி கடவுளின் தோற்றம் பற்றிய கதை, ஆப்பிரிக்காவின் பண்டைய இறை நம்பிக்கையை பறை சாற்றுகின்றது. இரண்டு கொம்புகளுக்கு நடுவில் சூரியனை வைத்துள்ள எருதின் சிலை, ஆப்பிரிக்கர்களால் கடவுளாக வழிபடப் பட்டு வந்தது. ஒரு காலத்தில் யூதர்களும் அந்த எருமைக் கடவுளை வழிபட்டதாகவும், அதனால் கோபமுற்ற மோசேஸ் ஆண்டவர் அருளிய பத்துக் கட்டளைகளை கொண்ட களிமண் தட்டுகளை போட்டு உடைத்ததாகவும், பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ஆப்பிரிக்கர்களின் அதே எருமைக் கடவுள், சுமேரியர்களாலும் வழிபடப் பட்டது. எருதின் கொம்புகளுக்கு நடுவில் உள்ள சூரியன், சூரியக் கடவுளைக் குறிக்கும். ஹீபுரு, அரபு மொழியில் சூரியனுக்குப் பெயர் ஷாம்ஸ். பாபிலோனியர்கள், குறிப்பாக செமிட்டிக் மொழி பேசிய அக்காடியர்கள், ஷாமாஸ் கடவுள் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். எயா, என்கி ஆகிய பெயர்களும், சூரியக் கடவுளைக் குறிக்கும்.

தம்முஸ் சூரியக் கடவுளின் புதல்வனாகவும் நம்பப் பட்டார். தம்முசின் தாய், கன்னியாகவே மகனை ஈன்றெடுத்த கதையை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இது இயேசு கிறிஸ்து, கன்னி மரியாளுக்கு பிறந்த கதையை ஒத்திருக்கின்றது. மேலும், அக்காடிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சார்கோன் மன்னன் பிறந்த கதையும் ஒரே மாதிரியாக உள்ளது. சார்கொனின் தாய், சூரியதேவனின் அருளால் கருத்தரித்ததாக அந்தக் கதை கூறுகின்றது. மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதையும் ஒரே மாதிரி இருக்கின்றது. கர்ணனும், கன்னியான குந்திதேவிக்கு,  சூரியதேவன் அருளால் பிறந்த குழந்தை தான். குழந்தை ஏசுவும், குழந்தை சார்கொனும், குழந்தை கர்ணனும் அநாதை போன்று வேறு இடத்தில் வளர்க்கப்பட்டு, வளர்ந்த பின்னர் ஆட்சியாளர்களுக்கு சவாலாக விளங்கினார்கள். இங்கே நாங்கள், சில உண்மைகளை மறந்து விடக் கூடாது.

பண்டைய சமுதாயத்தில் சூரியக் கடவுள் முக்கியமான பாத்திரம் வகித்தது. அந்த சூரியக் கடவுளின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ளது. சூரியதேவனும், எருமையும் சேர்ந்திருக்கும் தெய்வச் சிலையை வழிபடும் மரபு, சூடான், எகிப்து, இஸ்ரேல், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் எல்லாம் பரவியிருந்தது. ஆப்பிரிக்கர்களின், குறிப்பாக எகிப்தியர்களின் மத நம்பிக்கைகளை சுமேரியர்களும் பின்பற்றியதை ஏற்கனவே பார்த்தோம். பெரும்பாலும் ஒரே மாதிரியான புராணக் கதைகளும் அந்த தொடர்பை வலுப் படுத்தின. உதாரணத்திற்கு, இசிஸ், இசிரிஸ் தெய்வங்களின் பெயர்கள், சுமேரியரால் இனன்னா, துமுசி என்று மாற்றப்பட்டது. ஆயினும், புராணக் கதை கிட்டத்தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளது.

இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், சில தெய்வங்களைப் பற்றிய கதைகளும், ஆன்மீக விளக்கங்களும் சுமேரியர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன. ஆப்பிரிக்கர்கள் சூரியனை ஏந்திய எருமையை முதன்மையான  கடவுளாக நம்பி வழிபட்டார்கள்.  சுமேரியர்கள், சூரியனை தனியான முழுமுதற் கடவுளாக்கினார்கள். 
சூரியன், என்கி, எயா, தம்முஸ்... இவை எல்லாம் ஒரே கடவுளைக் குறித்தன. சூரியக் கடவுளின் கோயில் வாசலில் எருமைகளின் சிலைகள் வைக்கப் பட்டிருந்தன.
சுமேரியர்களால் டில்முன் என்று அழைக்கப் பட்ட பாஹ்ரைன் நாட்டில், பாபர் எனும் இடத்தில் இருந்த புராதன கோயிலின் இடிபாடுகளை நீங்கள் இப்போதும் பார்க்கலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் அந்தக் கோயில் எப்படி இருந்தது என்ற வரைபடத்தை, அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றனர். அந்தக் கோயிலின் மூல மூர்த்தி,  எயா/என்கி என்பதும், வாசலில் எருமைகளின் சிலைகள் காணப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இன்று இந்து மதம் கோலோச்சும் இடங்களில், சிவன் கோயில்களுக்கு முன்னால், நந்தி என்ற மாட்டின் சிலை இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

அப்படியானால், அரேபியாவிலும், ஈராக்கிலும் வாழ்ந்த மக்கள் ஒரு காலத்தில் சிவனை வழிபாட்டு வந்தனரா? ஆம், நிச்சயமாக. ஹரப்பாவில் கண்டெடுத்த முத்திரை ஒன்றில், "மகாதேவா" என்ற சிவனின் உருவம் இருந்த தகவல் பலருக்கு தெரியும். அதை சுட்டிக் காட்டி, "ஹரப்பா நாகரீகம் தமிழர்களுடையது" என்று பெருமைப் பட்டுக் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து சென்ற தமிழர்களின் முன்னோர்களே ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கினார்கள் என்று கூறிக் கொள்கிறோம். அப்படியானால், ஈராக்கில், அரேபியாவிலும் இருந்த புராதன நாகரீகங்களையும் தமிழர்கள் தானே உருவாக்கி இருக்க வேண்டும்? அதே போன்று, எகிப்திய நாகரீகமும் தமிழர்களுடையதாக இருக்க வேண்டும். தமிழர்கள், இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா சென்றனரா? அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தனரா? அப்படியானால், அரேபியர்கள், ஈரானியர்கள் எல்லோரும் தமிழர்களா? இப்படியான கேள்விகள், இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களின் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும். மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால், அவர்கள் வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் என்று நினைப்பது தவறு. ஒரு மொழியை யாரும் பேசக் கற்றுக் கொள்ளலாம். அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினர் ஆங்கிலத்தை தாய்மொழி போன்று பேசுகின்றனர். அதற்காக அவர்களை யாரும், "ஆங்கில இனத்தவர்கள்"  என்று கூறுவதில்லை. ஆனால், 500 வருடங்களுக்குப் பின்னர் அப்படி நடந்தாலும் அதிசயப் பட எதுவுமில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த மக்களால் வழிபடப்பட்ட முழுமுதற் கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சிவனின் வாகனமான நந்தி மட்டும் ஒரேயொரு ஒற்றுமையல்ல.
சிவன் தலையில் இருக்கும் பிறைச் சந்திரன், என்கி கடவுள் படம் பொறித்த பாபிலோனிய முத்திரைகளில் காணப்படுகின்றது. சிவனின் கழுத்தை சுற்றியிருக்கும் பாம்பு, என்கியின் காலின் கீழ் உள்ளது. சிவனின் தலையில் இருந்து கங்கை ஆறு ஊற்றெடுக்கின்றது. ஈராக்கில், எயுபிராத், தீக்ரிஸ் ஆகிய நதிகளின் மூலம், என்கி கடவுள் என்பது சுமேரியரின் நம்பிக்கை ஆகும்.

என்கியின் அவதாரமான தம்முஸ்/துமுசி, இஷ்தார்/இனானா என்ற பெண் தெய்வத்தை திருமணம் செய்யும் கதை, சிவன்-பார்வதி கதையை நினைவுபடுத்துகின்றது. சிவராத்திரி பற்றிய கதையில், சிவனை நினைத்து விரதம் இருக்க வேண்டுமென பார்வதிதேவி  சிவபக்தர்களை கேட்டுக் கொள்கிறாள். அதே போல, தம்முசின் மறைவை நினைத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று, இஷ்தார் தனது பக்தர்களை கேட்டுக் கொள்கிறாள். சைவ சமயத்தை பின்பற்றுவோர், சிவனைக் குறிக்கும் விபூதி என்ற சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வார்கள். அதே போன்று, தம்முஸ் கடவுளை வழிபட்ட சுமேரிய/பாபிலோனிய மக்கள், சாம்பலை எடுத்து நெற்றியில் சிலுவைக் குறி வைத்துக் கொண்டார்கள். இவ்வாறு சிவ வழிபாட்டில் உள்ள பல அம்சங்களை, நாங்கள் சுமேரியர்களின் வழிபாட்டிலும் காணலாம்.

சிவபெருமான் இடையில் புலித்தோலை உடுத்தி இருப்பதாகத் தான் படங்களில் வரைகின்றார்கள். புலித்  தோலை உடுத்திய சிவன் படம், வேடுவர்களாக இருந்த நமது முன்னோர்களை ஞாபகமூட்டுகின்றது. மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில், மிருகங்களின் தோலை ஆடையாக அணிந்து கொண்டார்கள். அந்த வழக்கம், இன்றைய நாகரிக காலத்திலும் சில இடங்களில் தொடர்பின்றது. உதாரணத்திற்கு, ரஷ்யாவிலும், ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் துருவத்தை அண்டிய வட பிரதேசங்களில் வாழும் மக்கள், இன்றைக்கும் துருவ மான்களின் தோலை பதப்படுத்தி ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர். சிவன் வேட்டைக்கு செல்வதாக, சைவப் புராணக் கதைகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. வேட்டையாடி விட்டு வீட்டுக்கு வந்த சிவன், உமாதேவியாரின் அழுக்கில் இருந்து உருவான பிள்ளையார் தடுத்ததால் கோபமுற்று தலையை வெட்டியதாக ஒரு கதை உண்டு.

சைவ மத நம்பிக்கையிலும், சிவபெருமானை ஒரு வேட்டைக்காரனாக சித்தரிப்பதை காட்டவே, அந்தக் கதையை இங்கே குறிப்பிட்டேன். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நிம்ரூட் மன்னனின் கதையை, இப்போது மீண்டும் ஞாபகப் படுத்த விரும்புகின்றேன். நிம்ரூட் மன்னன் ஒரு சிறந்த வேட்டைக்காரன் என்று, சுமேரியர்களின் புராணக் கதைகளில் எழுதப் பட்டுள்ளது. நிம்ரூட் என்ற பெயரைக் கொண்ட மன்னர்கள் பற்றிய கதைகள், வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த, வெவ்வேறு மொழிகளைப் பேசிய மக்களால் பேசப் பட்டு வந்துள்ளன. சுமேரிய, பாபிலோனிய, அக்காடிய, ஹீபுரு, அரபு மொழிகளைப் பேசிய மக்களின் "நிம்ரூட் கதைகளில்", அந்த மன்னன் ஒரு வேட்டைக்காரனாகவே சித்தரிக்கப் படுகின்றான். அப்படியானால், "நிம்ரூட் கதை" மேற்கு ஆசியாவில் உன்னத நாகரீகங்கள் தோன்றுவதற்கு முன்னர் வாழ்ந்த வீர புருஷர் ஒருவரின் வரலாற்றுக் கதையாக  இருக்க வேண்டும். ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இருந்து அழிந்து போன புராதன நாகரீகத்தின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

இன்றைய சூடானில், நுபியாவில் இருந்த நாகரிக சமுதாயம் ஒன்றைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். (பார்க்க: முதலாம் பாகம்: நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!) நுபிய மன்னர்கள், இடுப்பில் புலித்தோலை உடுத்திக் கொள்வது வழக்கம். சிவபெருமான் போன்று அவர்களும், புலித் தோல் ஆடையினால், இடுப்பையும், மார்பையும் மூடி உடுத்தி இருப்பார்கள். பிற்காலத்தில், ஆப்பிரிக்க நாடுகளை ஆண்ட மன்னர்கள், தமது ஆடைக்கு மேலே புலித்தோலை உடுத்திக் கொள்ளும் சம்பிரதாயத்தை பின்பற்றினார்கள். ஆப்பிரிக்க மன்னர்கள் புலித்தோல் உடுக்கும் சம்பிரதாயம், இருபதாம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருந்தது.

தென் ஆப்பிரிக்காவில், சூளு அரச பரம்பரையை சேர்ந்தவர்கள், விசேட தினங்களில் புலித்தோல் அணிந்தது வருகின்றனர். பண்டைய காலத்தில், நுபியர்களின் சம்பிரதாயத்தை பின்பற்றி, எகிப்திய பாரோ மன்னர்களும் புலித்தோல் அணிந்த படங்கள் காணப்படுகின்றன. பண்டைய ஈராக்கில், அரேபியாவில் வாழ்ந்த மக்களும் கறுப்பினத்தவர்கள் என்பதால், அவர்களது மன்னர்களும் புலித்தோல் ஆடை அணிந்திருப்பதற்கு சாத்தியமுண்டு. அப்படியானால், பிரபலமான நிம்ரூட் மன்னனும் இடுப்பில் புலித்தோல் அணிந்து, மக்கள் முன்  காட்சி தந்திருக்க வேண்டும். அக்காடிய, ஹீபுரு மொழிகளில் "நிம்றி" என்றால், புலி வேட்டையாடும் மக்கள் என்றும் அர்த்தம் உள்ளது. நிம்றி என்ற சொல்லில் இருந்து, நிம்ரூட் என்ற பெயர் வந்திருக்கலாம். இது குறித்து மேலதிக விபரம் தேவைப்படுவோர், Henry Rawlinson (http://en.wikipedia.org/wiki/Sir_Henry_Rawlinson,_1st_Baronet) எழுதிய அகழ்வாராய்ச்சிக் குறிப்புகளை வாசிக்கவும்.

(தொடரும்)




 உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie

5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters


Web Sites: 
1.Tammuz,http://en.wikipedia.org/wiki/Tammuz_(deity)
2.Dumuzid the Shepherd, http://en.wikipedia.org/wiki/Dumuzid_the_Shepherd
3.Inanna, http://en.wikipedia.org/wiki/Inanna
4.Ishtar, http://en.wikipedia.org/wiki/Ishtar
5.Nimrod, http://en.wikipedia.org/wiki/Nimrod

2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

/

Jaisankar Jaganathan

unread,
Jan 26, 2013, 6:16:53 AM1/26/13
to panb...@googlegroups.com
ஆண்டவர் என்பது ஒரு காலத்தில் இந்த மாநிலத்தை ஆண்டவர்கள் போல

ஸ் பெ

unread,
Jan 26, 2013, 6:49:23 AM1/26/13
to panbudan

Ramesh Murugan

unread,
Jan 26, 2013, 7:09:32 AM1/26/13
to panb...@googlegroups.com
:))

கார்பரேட் இந்து, கிறிஸ்தவ, இஸ்லமிய மதங்களை அவர்களின் புனித நூலைக் கொண்டே நடைமுறையில் இருக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்கனவே பின்பற்றிருந்த நம்பிக்கைகளையும் வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்திருந்தார். அதாவது மதங்களை புனித தன்மையுடன் அனுகாமல், மக்களின் நம்பிக்கை & கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்தி எழுதியிருந்தார். அந்த கட்டுரையை படிச்ச பின்னாடிதான் RSS Reader ல் போட்டு கம்னியூச கட்டுரைகளை வாசிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போத்தான் இந்த தொடர் கண்ணுல பட்டுச்சி.

இப்போ கட்டுரை உயிர்மையின் ராஜ் சிவா மாதிரி அ = அம்மா, ஆ = ஆடு ந்க்கிற ரேஞ்சில போயிக்கிட்டு இருக்குது. :))

2013/1/26 ஸ் பெ <stalinf...@gmail.com>
கடவுளே...

ஸ் பெ

unread,
Jan 26, 2013, 7:14:48 AM1/26/13
to panb...@googlegroups.com
கலையரசனை முன்பே பின் தொடர்ந்துக் கொண்டு இருந்தேன்.. ஆனால், இவளவு மொன்னையான வாதங்களை வைப்பார் என நம்பவில்லை..
செனகல் போன்ற ஆப்ரிக்க மொழிகளில் நமது தமிழ் சொற்களும் புழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறேன்..
அவர் கட்டுரையின் மிக பெரிய பலவீனம் எந்த கால அளவவையும் முன்வைக்காமல் நீட்டி, முழக்கி கொண்டு போவது..
அயன் ஏஜ் காலத்து ஆயுதங்கள் அனைத்தும் ஒரே மாதிரியே இருந்திருக்கும் இதற்காக நம்முடைய வேலும், முருகனும் அவர்களுக்கும் சொந்தம் என எழுதுவதில் எனக்கு உவப்பில்லை..
இதற்க்கு நம்முடைய இலக்கியங்கள் சற்றேவேனும் முன்வைக்கும் குமரிக்கண்டத்தை நம்பி விட்டு போவேன்.. :))

2013/1/26 Ramesh Murugan <rames...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Ramesh Murugan

unread,
Jan 26, 2013, 7:20:59 AM1/26/13
to panb...@googlegroups.com
:))

அவரைப் பொறுத்தளவில் எந்த மதங்களையும் நம்பவேயில்லை. டார்வினை நம்புவதால் எல்லா மதங்களையும் உதறி தள்ளுகிறார். அதுதான் அவர்கிட்ட எனக்கு பிடிச்ச விசயம். அதே நேரம் பழங்குடியினரின் நம்பிக்கைகளை அடிப்படையாக முன்வைக்கிறார்.

அரசியல், மதம், கடவுள்கள், மொழி, இனம், வரலாறு என எந்த விசயமும் இதுவரை யாரும் எழுதாத, சிந்திக்காத புதிய கோணத்துல எழுதுறாரு. அதனால இந்த கட்டுரையில் நிறைய எதிர்பார்க்கிறேன். கட்டுரையை முடிக்கும்போதுதான் என்ன சொல்ல வர்றாருன்னு தெரியும்னு நினைக்கிறேன் :))


2013/1/26 ஸ் பெ <stalinf...@gmail.com>
இதற்க்கு நம்முடைய இலக்கியங்கள் சற்றேவேனும் முன்வைக்கும் குமரிக்கண்டத்தை நம்பி விட்டு போவேன்.. :))

Ramesh Murugan

unread,
Jan 30, 2013, 7:16:07 AM1/30/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
 நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 12  

(பன்னிரண்டாம்  பாகம்)

"யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, கரானை நோக்கிச் சென்றான். அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்கினான். அப்போது அவன் கண்ட கனவு இதுவே; நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். யாக்கோபு தூக்கம் தெளிந்து, "உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்" என்று அச்சமடைந்து, "இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்" என்றார். பிறகு யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து, "Luz" என்று வழங்கிய அந்த நகருக்குப் "பெத்தேல்(Bethel)" என்று பெயரிட்டார்." -  விவிலியம், ஆதியாகமம் (28:11-19)

"சிவன்", "சைவர்கள்" என்ற சொற்பதங்கள் எங்கே தோன்றின?  எமது அறிவுக்கெட்டிய தூரத்தில், இந்திய உபகண்டத்தில் அந்தச் சொற்களுக்கான மூலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் பிழையான இடத்தில் தேடினால் கிடைக்குமா? சிவ வழிபாடு, ஆதி தமிழர்களுக்கு உரிய சிறப்பம்சம் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறி வருகின்றனர். அப்படியானால், ஆதித் தமிழர்கள் வாழ்ந்த, அரபு நாடுகளிலும் சிவ வழிபாடு இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆச்சரியப் படத் தக்கவாறு, பல அரபு நாடுகளில் "சிவா" என்ற பெயரிலான இடங்கள் பலவுள்ளன. எகிப்தில் உள்ள "சிவா" பாலைவனச் சோலையில், வருங்காலத்தில் நடக்கப் போவதை அறிவிக்கும் தேவதை இருப்பதாக நம்பப் பட்டது. இன்றைய இஸ்ரேலில், சிவதா (Shivta), டெல் சிவா (Tel Sheva) என்ற பெயரிலான இடங்கள், நாகேவ் பாலைவனப் பிரதேசத்தில் உள்ளன. பண்டைய நாகாரீக காலத்திய நபெத்திய மக்கள் கட்டிய நகரங்கள் அவை.  ஹீபுரு மொழியில், ஆனி மாதத்திற்கு சிவன் என்று பெயர்!  அரேபியரின் பூர்வீகம், ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னமே நாகரிக வளர்ச்சி கண்ட யேமனில் உள்ளது. அன்று அது, ஷீபா நாகரீகம் என்று அழைக்கப் பட்டது. "ஷீபா" என்பது ஆங்கில உச்சரிப்பு. ஹீபுரு மொழியில், "ஷ்' வா". அரபு மொழியில் "சபா" (Saba). சபா என்ற சொல் மருவி, தமிழில் "சைவா" என்று மாறியிருக்குமா?  "B" உச்சரிப்பு கொண்ட சொற்கள், தமிழில் "வ" என்று மாறுவது பற்றி, ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.   

சிவலிங்க வழிபாடு, "இந்தியாவை சேர்ந்த இந்துக்களுக்கே உரியது"  என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சிவலிங்கத்தை கடவுளாக காணும் இந்துக்களும், அதனை "ஆண்குறித் தெய்வம்" என்று பரிகாசம் செய்யும் பிற மதத்தவரும் ஒரு உண்மையை அறியாமல் இருக்கின்றனர். அது ஒரு மத நம்பிக்கை என்பதற்கு அப்பால், ஆதி கால ஆப்பிரிக்க-திராவிடர்களின் பிரபஞ்சம் பற்றிய அறிவியலை எடுத்துக் காட்டுகின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும், சிவலிங்கத்தை மூல மூர்த்தியாக கொண்ட கோயில்களில், அது "சுயம்பு லிங்கம்"  என்று அழைக்கப் படுகின்றது. "சுயம்பு லிங்கம்", அல்லது "தான்தோன்றீஸ்வரர்" என்று ஏன் சொல்கிறார்கள்? மத நம்பிக்கை கொண்ட இந்துக்கள், "கடவுள் அந்த இடத்தில் தானாகவே தோன்றினார்."  என்று விளக்கம் கொடுக்கலாம். இன்றைக்கு அறிவியல் வளர்ந்து விட்ட உலகில், அதற்குப் பொருத்தமான காரணம் என்னவாக இருக்கும்?  

அரேபியாவில், முஸ்லிம்கள் புனித யாத்திரை செல்லும் மக்கா (மெக்கா என்பது ஆங்கில உச்சரிப்பு ) நகரில் உள்ள காபாவின்  உள்ளே, தெய்வச் சிலைகள் வைக்கப் பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இல்லை, அது ஒரு பூமியில் விழுந்த விண்வெளிக் கல் என்றும் நம்பப் படுகின்றது.  அதை எல்லாம் ஆராய்வது, இன்றைய நிலையில் சாத்தியமில்லாத விடயம் என்றாலும், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகின்றது. மக்கா நகரமும், அங்குள்ள காபா வழிபாடும் இஸ்லாத்திற்கு முந்தியது. பல்லாயிரம் வருடங்கள் பழமையானது. வரலாறு எழுதப்படாத காலத்தில் இருந்தே, அங்கு விழுந்த விண்வெளிக் கல்லும், அதைச் சுற்றி எழுப்பப் பட்ட கோயிலும் மக்களால் வழிபடப் பட்டு வந்திருக்க வேண்டும்.

ஆதி கால மனிதன், இடியை, மின்னலை கண்டு அஞ்சியதால், கடவுள் நம்பிக்கை தோன்றியது. அதிலே நாங்கள் இந்த விண்வெளிக் கல்லையும் சேர்த்துக் கொள்ளலாம்.  அந்தக் கற்கள், அண்டவெளியில் வெடித்துச் சிதறிய நட்சத்திரம் ஒன்றின் துண்டுகளாக இருக்க வேண்டும். அண்டவெளியில் நட்சத்திரங்களுக்கிடையில் மோதல்களும், வெடிப்புகளும் ஏற்படுவதாக விஞ்ஞானமும் கூறுகின்றது. அவ்வாறு வெடித்து சிதறி, பூமியில் வந்து விழுந்த துண்டுகளை, ஆதி மனிதன் கடவுளாக கருதி வழிபட்டு வந்திருக்கலாம். ஒருவேளை, நோய்களை குணப்படுத்தும் அதிசய சக்தி கூட அந்தக் கல்லுக்கு இருந்திருக்கலாம். பகைமை பாராட்டும் குழுக்கள், அந்தக் கல்லுக்கு அருகில் சென்று சமரசம் செய்து கொள்வது, பண்டைய அரேபியரின் சம்பிரதாயமாக இருந்தது. 

அண்டவெளியில் வெடித்து சிதறிய துகள்களில், ஒன்றேயொன்று மட்டுமே நமது பூமியில், அதுவும் மக்காவில் வந்து விழுந்திருக்குமா? உலகில் நாகரீகம் சமுதாயம் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பூமிக்கு அருகில் வெடித்த நட்சத்திரம் ஒன்றின் துண்டுகள் உலகின் பல பாகங்களிலும் விழுந்திருக்கின்றன. ஒரு கல்லை வைத்து, கடவுள் என்று வழிபடும் முறை அதிலிருந்து தோன்றி இருக்கலாம். அதுவே சிவலிங்க வழிபாட்டின் தோற்றமாகவும் மாறி இருக்கலாம். அது, மனித வடிவில் கடவுள் சிலைகளை அமைப்பதற்கு முந்திய, மிகவும் பழமையான வழிபாடாகவும் இருக்கலாம். சைவ சமய நம்பிக்கையாளர்கள், தான்தோன்றீஸ்வரர், சுயம்பு லிங்கம் என்று அழைப்பது கூட, மண்ணில் விழுந்த விண்வெளிக் கற்களாக இருக்க வேண்டும்.

மத்திய கிழக்கில் யூத, கிறிஸ்தவ மதங்கள் தோன்றுவதற்கு முன்னர், விவிலிய நூலில் "பெத்தெல்" என்ற கல்லை கடவுளாக வழிபடும் முறை இருந்தது பற்றி, விவிலிய நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. (ஆதியாகம், 28:11-19) யாகோபு கடவுளாக நம்பிய கல்லுக்கு, எண்ணை வார்த்து வழிபட்டதாக கூறுகின்றது. அர்ச்சர்கர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை, இன்றைக்கும் நீங்கள் சிவன் கோயில்களில் காணலாம். பண்டைய காலத்து மக்கள், தெய்வச் சிலைக்கு பாலால் மட்டும் அபிஷேகம் செய்யவில்லை. ஆடு, கோழி போன்றவற்றை வெட்டி, அவற்றின் இரத்தத்தை கல்லின் மேல் ஊற்றியும் அபிஷேகம் செய்தனர். மிருகங்களை பலிகொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் இந்தியாவிலும், இலங்கையிலும் "சிறுதெய்வ வழிபாடு", அல்லது "நாட்டார் வழிபாடு"  என்ற பெயரில் பின்பற்றப் படுகின்றது. இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவில் வாழ்ந்த மக்களும், தெய்வமாக கருதி வழிபட்ட கல்லுக்கு, மிருகங்களை பலிகொடுத்து வந்தனர். இன்றைய அரேபியரின் மூதாதையரான நபெத்தியர்களும், அது போன்ற வழிபாட்டை கடைப்பிடித்து வந்தனர். 

புராதன அரேபியாவில், முக்கோண வடிவிலமைந்த கல்லை வைத்து வழிபட்டு வந்தனர். இந்தியாவிலும், இலங்கையிலும் குறிப்பாக கிராமங்களில் வாழும், தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள், இன்றைக்கும் முக்கோண வடிவிலமைந்த கல்லை வைத்து, அதற்கு படையல் செய்து வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழர்களில் உயர் சாதியினர், ஆரிய மத வழிபாட்டை பின்பற்றுவதும், அதே நேரம் தாழ்த்தப் பட்ட சாதியினர், ஆதி கால  திராவிட மத மரபை தொடர்ந்தும் பேணி வருவதையும், கருத்தில் கொள்ள வேண்டும். முக்கோண வடிவிலான நடு கல் வைத்து வழிபடுவது, ஆதித் தமிழரின் பண்பாடு என்று தான் தொல்காப்பியமும் கூறுகின்றது. "தமிழ் நாட்டில் பல பகுதிகளில் வெறும் கற்களை நட்டு, அவைகளுக்கு காடன், மாடன், வீரன், சூரன், என்று பெயர் வைத்து வணங்கும் வழக்கத்தை இன்றும் பார்க்கிறோம். இது தமிழர்களின் பரம்பரை வழக்கம்." (தொல்காப்பியத் தமிழர், சாமி சிதம்பரனார்) நாம் நாட்டார் வழிபாடு என்று அழைக்கும், சிறுதெய்வ வழிபாடு, ஒரு காலத்தில் திராவிடர்கள் வாழ்ந்த அரேபியாவிலும் இருந்துள்ளது. ஹீபுரு, அரபு போன்ற செமிடிக் மொழிகளில், அதற்குப் பெயர்  "Bethel".    கிரேக்க மொழியில், "Omphalos".

சிவலிங்கத்தை "ஆண்குறித் தெய்வம்" என்று குறிப்பிடுவது, எப்போதும் சரியானதல்ல. ஆண்குறியை வழிபடும் மத நம்பிக்கை, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் இருந்துள்ளது. இன்று தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஐரோப்பியர்களும், ஒரு காலத்தில் "ஆண்குறித் தெய்வங்களை" வழிபட்டு வந்தனர். புராதன மதங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வரையப்பட்ட ஓவியங்களில் எல்லாம், ஆண் தெய்வங்கள், ஆண் குறியுடன் காட்சி தந்தன. அவற்றை இன்று, இத்தாலிக்கும், கிரேக்கத்திற்கும் சுற்றுலா செல்லும் பயணிகள் நேரில் காணலாம். மனித இனங்கள் காட்டுவாசிகளாக வாழ்ந்த காலங்களில், இயற்கை அழிவுகள், பிற விலங்குகளால் அல்லது போர்களில் கொல்லப்படுதல், போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் போராட்டங்களினால், பெருமளவு மனித உயிர்கள் இழக்கப் பட்டன. அந்த இழப்பை ஈடுசெய்வதற்காக,பெருமளவில்  இனப்பெருக்கம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தனர்.  "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்" என்ற தமிழ்ப் பழமொழி எல்லாம் அப்பொழுது தான் தோன்றின.

அந்தக் காலத்து மக்கள், பாலியலை ஒரு முக்கியமான சமூகக் கடமையாக் கருதினார்கள். இனப்பெருக்கத்திற்கு காரணமான ஆண்குறி, தெய்வீக சக்தி பொருந்தியது என்று நம்பினார்கள்.  அதனால் தான், ஆண்குறியை கடவுளாக வழிபடும் மத நம்பிக்கைகள் உருவாகின. இது ஒரு வகையில், ஆணாதிக்க சமுதாயம் உருவாவதற்கு வழிவகுத்தது எனலாம். ஐரோப்பாக் கண்டத்தில் முதலாவது வெள்ளையின நாகரீகம் தோன்றிய பல்கேரியாவில், கி.மு. 4000 வருடங்களுக்கு முந்திய புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டன. அங்கே, ஆண்குறிக்கு தங்கக் கவசம் அணிந்திருந்த மதகுரு ஒருவரின் எலும்புக்கூடும்  கண்டெடுக்கப் பட்டது. பசுபிக் சமுத்திரத் தீவான, பபுவா நியூ கினியாவில், ஆண்குறிக்கு கவசம் அணியும் வழக்கமுடைய பழங்குடி இனம் ஒன்று வாழ்கின்றது. ஆனால், பண்டைய பல்கேரியாவில், சக்தி வாய்ந்த மதத் தலைவர்கள், தமது மேலாண்மையை காட்டிக் கொள்வதற்காக, ஆண்குறிக்கு தங்கக் கவசம் அணிந்து வந்தனர். (100.000 jaar Sex, over liefde, vruchtbaarheid en wellust, Drs. V.T. van Vilsteren)

சிவலிங்க வழிபாடு, இரண்டு வேறுபட்ட பண்பாட்டுக் காலத்தை எடுத்துக் காட்டுகின்றது.  வட இந்தியாவில், சில கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கம், ஒரு தூண் போன்று நீளமானதாகவும், மேல் முனை ஆண் குறி போன்றும் காணப்படுகின்றது.  இது போன்ற சிவலிங்க வழிபாடு, அப்போது அங்கு தோன்றியிருந்த ஆணாதிக்க சமுதாயத்தை உணர்த்துகின்றது. ஆனால், சிவலிங்கத்திற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. "ஆணும், பெண்ணும் சேர்ந்ததே இவ்வுலகம்" என்ற இரட்டைத் தன்மைக் கோட்பாட்டை வலியுறுத்தும் சிவலிங்கங்கள், திராவிட மத நம்பிக்கைக்கு உரியவை. ஆதி கால மனித சமுதாயமும், ஆப்பிரிக்க-திராவிடர்களும் தாய் வழி  சமுதாயத்தை கொண்டிருந்தனர். சமூகத்தில் பெண்ணின் பாத்திரம், சில நேரம் ஆணை விட உயர்ந்து காணப்பட்டது. இந்தியாவில் இந்து மதம் பரவுவதற்கு முன்பிருந்த தாந்திரீக மதம், சிவனையும் பார்வதியையும், "அர்த்த நாரீஸ்வரர்"  என்ற பெயரில் வழிபட்டது. அந்த வழிபாட்டின் தொடர்ச்சி தான், ஆண்குறியும், யோனியும் இணைந்த சிவலிங்கங்கள். 

சிவலிங்கம் அல்லது பெத்தேல் வழிபாட்டுக்கு, இன்னொரு அர்த்தமும் இருந்தது. நடுவில் இருக்கும் பகுதி பூமி அல்லது கோளாகவும், அதை சுற்றியுள்ள பகுதி அண்டவெளியாகவும் கருதப் பட வேண்டும். இந்த நம்பிக்கையானது, "பூமி தட்டையானது"  என்று கூறிய கிறிஸ்தவ இறையியலுக்கு முரணானது. அதாவது, யூத, கிறிஸ்தவ மதங்கள் தோன்றுவதற்கு முன்னமே, பூமி உருண்டை என்பதும், அதை சுற்றி வளிமண்டலம் இருப்பதையும், நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். (T and O map, http://en.wikipedia.org/wiki/T_and_O_map)  நிச்சயமாக, ஹீப்ரூ, அரபு மொழி பேசிய திராவிடர்களும், அதே காரணத்திற்காக "பேத்தல்" (Bethel ) என்ற கல்லை கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர். நபெத்தியர்களின் நாகரீகம் சிறப்புற்று விளங்கிய  பேட்ரா (ஜோர்டான்) நகரிலும், அதற்கான சான்றுகள் கண்டெடுக்கப் பட்டன.

ஜெருசலேமில் உள்ள, இயேசு பரலோகம் சென்ற இடத்தில் கட்டப்பட்ட தேவாலயத்தில், ஒரு "பேத்தல் கல்" வைத்துப் பாதுகாக்கப் படுகின்றது.
ஆமாம், விண்கல் இருப்பது, மக்காவில் உள்ள முஸ்லிம்களின் காபாவில் மட்டும் அல்ல. ஜெருசலேமில், கிறிஸ்தவர்களுக்கு புனிதமான தேவாலயத்திலும் அதே விண்கல் உள்ளது.   (In the Church of the Holy Sepulchre in Jerusalem there is also an omphalos. The existence of this stone is based upon the medieval cosmology which saw Jerusalem as the spiritual if not geographical center of the world (see: T and O map). This tradition is likely based on an ancient Jewish tradition that saw Jerusalem as the navel of the world.(Church of the Holy Sepulchre, http://en.wikipedia.org/wiki/Church_of_the_Holy_Sepulchre )

(தொடரும்)





 உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters





2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

//

Ramesh Murugan

unread,
Jan 30, 2013, 9:23:16 AM1/30/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 13


(பதின்மூன்றாம் பாகம்)


புராதன குகைக் கோயில்கள்: 1.பெட்ரா (ஜோர்டான்), 2.எல்லோரா (மத்திய இந்தியா), 3.மாமல்லபுரம் (தமிழ் நாடு)
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, அதாவது கி.மு. 3 ம்  நூற்றாண்டில் இருந்து, தமிழர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் சிறந்த வர்த்தகத் தொடர்பு இருந்தது. ஒமானிலும், எகிப்திலும் கண்டெடுக்கப் பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டங்கள், இதனை உறுதிப் படுத்துகின்றன. (Potsherd with Tamil-Brahmi script found in Oman, http://www.thehindu.com/news/national/potsherd-with-tamilbrahmi-script-found-in-oman/article4038866.ece) இந்து சமுத்திரத்தின் ஊடாக, இரண்டு சமூகங்களும் தமது கலாச்சாரங்களை பரிமாறிக் கொண்டன. இரு நாடுகளின் பொருளாதாரங்களில் மட்டுமல்ல, மொழி, மத நம்பிக்கை ஆகியவற்றில் கூட, ஒன்றின் மேல் மற்றது செல்வாக்கு செலுத்தியது. அது, இரண்டு சகோதர இனங்களுக்கு இடையிலான நட்புறவாக இருந்தது. யாரும் யாரையும் ஆக்கிரமிக்கவில்லை.  

இருபது வருடங்களுக்கு முன்னர், இன்றைய ஓமானின் தென் பகுதி பாலைவன மணலுக்குள் புதையுண்டிருந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. (Atlantis of the Sands, http://en.wikipedia.org/wiki/Atlantis_of_the_Sands) ஒரு காலத்தில் செல்வச் செழிப்பில் சிறந்து விளங்கிய "உபார்" (Ubar) என்ற பண்டைய நகரம் பற்றிய விபரங்கள், குர்ஆனில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தன. (குர்ஆனில் "இராம்" என்று குறிப்பிடப் பட்டது.) பாலைவனத்தில் புதைந்திருந்த உபார், நாசாவின் செய்மதிப் படங்களின் மூலம், தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்ட நகரம் ஒன்றின் அழிவு பற்றிய கர்ண பரம்பரைக் கதை ஒன்று, அந்த இடத்தில் வாழ்ந்த மக்களிடையே பேசப் பட்டு வந்தது.  ஆதி காலத்தில் வாழ்ந்த, 12 அரேபியப் பழங்குடி இனங்களில் ஒன்றான, "ஆத்" (தமிழில்: ஆதி?)   என்ற பெயரைக் கொண்ட மக்களின் நாடு என்று, குரானில்  குறிப்பிடப் பட்டிருந்தது. "வானுயர கோபுரங்களை கட்டிய ஆத் மக்களும், குகைக் கோயில்களை கட்டிய தம்மூட் மக்களும், அல்லாவை ஒரே இறைவனாக வழிபட மறுத்ததால் அழிக்கப் பட்டனர்."  என்று குரான் கூறுகின்றது. குரான் ஒரு மத நூல் என்பதால், இயற்கை அழிவுக்கு இறைவனை தொடர்பு படுத்திப் பேசுவது எதிர்பார்க்கத் தக்கதே. பல நாட்களாக வீசிய பாலைவனப் புயலினால், உபார் நகரையும், மக்களையும் மணல் மூடியது என்று குர்ஆனில் எழுதப் பட்டுள்ளது. சுனாமி என்ற கடல் பேரலலைகள் அழித்த, தமிழகத்தின் பூம்புகார் நகரம் போன்று, உபார் நகரமும் இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப் பட்டது.   

உபார் (இராம்) தேச மக்கள், ஆயிரம் தூண்களைக் கொண்ட கட்டிடங்களை கட்டியதாக, குரான் தெரிவிக்கின்றது. ("யாருமே உருவாக்கியிராத மகிமை பொருந்திய தூண்களைக் கொண்ட இராம்....."திருக்குர்ஆன், Sura Al Fajr, 6:14)  தமிழகத்தில் இராமேஸ்வரம் (இராம்+ஈஸ்வரம்) கோயிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும்,  இலங்கையில்   அனுராதபுரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும், இதே போன்று பல நூறு தூண்களைக் கொண்டு கட்டப் பட்ட உலக அதிசயங்கள் தாம். இராமேஸ்வரம் கோயில் கழட்டிய தமிழ்-திராவிடர்களும், அனுராதபுரத்தில் விகாரை கட்டிய சிங்கள-திராவிடர்களும், உபார் கோயிலைக் கட்டிய அரபு-திராவிடர்களும் ஒரே இனத்தை சேர்ந்த, ஒரு தாய் மக்கள் தான். அதனால் தான், உலகில் வேறெந்த இனமும் அறிந்திராத, பிரமாண்டமான கட்டிடங்களை கட்டும் தொழில்நுட்ப அறிவை பெற்றிருந்தனர். குரான் இன்னொரு நாகரீகமடைத்த இனத்தின் பெயரையும் குறிப்பிடுகின்றது. அரேபியாவில் வாழ்ந்த தம்முத் மக்கள், மலைப் பாறைகளை  குடைந்து அழகிய கோயில்களை கட்டுவதில் வல்லவர்கள். ("திறந்த வெளிகளில் மாளிகைகளையும், கோட்டைகளையும் கட்டினீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளைக் கட்டினீர்கள்." -திருக்குர்ஆன், sura, Al-A'raf 7:74) அவர்களின் குகைக் கோயில் கட்டும் திறமைக்கு சாட்சியமாக, ஜோர்டானில் பேட்ரா, சவூதி அரேபியாவில் மடாயின் சலே,  மத்திய இந்தியாவில் அஜந்தா, எல்லோரா, மற்றும் தமிழ் நாட்டில் மாமல்லபுரம் ஆகிய இடங்கள் சான்று பகர்கின்றன.  இவை எல்லாம் ஒரே மாதிரியான கலை நேர்த்தியுடன் செதுக்கப் பட்டுள்ளதை, இன்றைக்கும் பார்த்து இரசிக்கலாம். 

தமிழ் என்ற பெயர்ச்சொல், அந்நியரால் சூட்டப்பட்டது. அதன் மூலம் அரேபியாவில் இருந்து வந்திருக்கலாம் என்பதை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். (பார்க்க: சிரியாவில் தமிழுக்கு தம்முழ் என்றும் பெயர்) குர்ஆனில் குறிப்பிடப் படும் தம்முட் என்ற இனத்தின் பெயர் மருவி,  தமிழர் என்று வந்திருக்கலாம். ஆனால், அதற்கான  ஆதாரம் எதுவும் கிடையாது.    எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருந்தன என்பது மட்டும் தெளிவானது. குரான் குறிப்பிடும் தம்முட் மக்கள், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து, வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர்.  ஜோர்டானில் பேட்ரா நகரக் கோயில்களைக் கட்டிய நபெத்தியர்களும், தம்முட் என்ற பெயரில் குறிப்பிடப் பட்டிருக்கலாம்.  ஏனெனில், குர்ஆனில் எழுதப்பட்ட குறிப்புகள், நபெத்திய நாகரீகத்துடன் பொருந்துகின்றன.  (தம்முத் அல்லது நபெத்தியர்கள், இதில் எந்தச் சொல், அந்த மக்களின் உண்மையான பெயரைக் குறிக்கின்றது என்று தெரியவில்லை.)  

ஒரு காலத்தில், தென் அரேபியப் பகுதி, மேற்கு ஆப்பிரிக்காவுடன் ஒரே நிலப்பகுதியாக சேர்ந்திருந்திருக்க வேண்டும். அதாவது, இன்றைய சோமாலியாவும், யேமனும் ஒன்றாக இணைந்திருந்தன. அப்போது ஆப்பிரிக்க கறுப்பின மக்கள், அரேபிய தீபகற்பத்தில் குடியேறி வாழ்ந்திருக்கலாம். இன்றைக்கும், சோமாலிய மக்களுக்கும், யேமன் மக்களுக்கும் இடையில், அதிசயப் படத் தக்க ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தோற்றத்தில், தோல் நிறத்தில் உள்ள ஒற்றுமை முக்கியமானது. அடுத்ததாக, சடங்கு, சம்பிரதாயம், பண்பாடு, உணவுப் பழக்கம் என்பன ஒரே மாதிரியாக உள்ளன. மூன்றாவதாகவும் ஒன்றைக் குறிப்பிடலாம். உலகில் வேறெந்த அரபு நாட்டிலும் இல்லாத சாதி அமைப்பு முறை யேமனில் மட்டுமே உள்ளது. அதே போன்று, முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், சோமாலியாவில் மட்டுமே சாதி ஒரு முக்கியமான சமூகப் பிரிவாக உள்ளது. இந்திய உப கண்டமும், சாதிப் பிரிவினைகளுக்கு பேர் போனது, என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. இந்தியர்களும் (குறிப்பாக தென்னிந்தியர்கள்), சோமாலியர்களும், யேமானியர்களும் ஆதியில் ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.  இவர்களுக்கு இடையில் வேறென்ன ஒற்றுமைகள் உள்ளன என்பதைப் பார்ப்போம். 

அரேபியரிலும், யேமன்  நாட்டவர்கள் தான், எம்மைப் போல மூன்று வேளையும் சோற்றை விரும்பி உண்பார்கள். அரபி மொழியில் அதன் பெயர் அரூஸ், சோமாலிய மொழியிலும் அரூஸ் தான். தமிழில் நாங்கள் அரிசி என்று சொல்வோம். அரிசியில் செய்யப்படும் உணவு வகையான பிரியாணியை (ஒரே பெயர்), சோமாலியா, யேமன், ஓமான் ஆகிய நாடுகளில் பிரதான உணவாக விரும்பி உண்பார்கள். சாப்பிட்ட பின்னர் வெற்றிலை போடும் வழக்கம் பற்றி, ஏற்கனவே ஒரு தடவை எழுதி இருக்கிறேன். இந்த மென்மையான போதைவஸ்துக்கு அடிமையாவது, யேமன், சோமாலியாவில் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. உணவில் மட்டுமல்ல, உடையில் கூட ஒற்றுமை உண்டு.  இடுப்பை சுற்றி உடுக்கும் சாரம் (லுங்கி, கைலி) என்ற ஆடையை, ஆண்கள் எல்லோரும் அணிந்து கொள்வார்கள். தினசரி மஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கம், சோமாலிய, தெனிந்திய, யேமன் பெண்கள் மத்தியில் பிரபலமானது. இப்படிப் பல கலாச்சார ஒற்றுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்தியாவுக்கும், அரேபியாவுக்கும்  இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்தில், அரேபியர்கள் இந்தியாவிலும், இந்தியர்கள் அரேபியாவிலும் சென்று குடியேறினார்கள். இது ஈழத்திற்கும், தமிழகத்திற்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்பைப் போன்றது. அதற்கு ஆதாரமாக, இந்து சமுத்திரத்தில் உள்ள  சொகொத்ரா தீவை (Socotra Island)   குறிப்பிடலாம். இன்று யேமனுக்கு சொந்தமான தீவில், இன்றைக்கும் அங்கே இந்திய, அரேபிய, ஆப்பிரிக்க கலாச்சாரங்கள் ஒன்று சேர்வதைக் காணலாம். தீவு மக்கள், "சொகொத்ரி மொழி"  என்ற தனியான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். அது அரபி மொழியின் கிளை மொழி அல்ல!  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதால், ஒரு காலத்தில் சிங்கப்பூர் போன்று பணக்காரத் தீவாக இருந்தது. இன்று அங்கே, அமெரிக்க இராணுவம் தளம் அமைத்துள்ளது.

சொகொத்ரா  தீவின் பூர்வீகப் பெயர், "சுகாதார தீபம்"! அதன் மூலம் சமஸ்கிருதமா அல்லது தமிழா என்பது எனக்குத் தெரியாது. எது எப்படி இருந்தாலும், தமிழர்களின் அல்லது இந்தியர்களின் மூதாதையருக்கு, அரேபியாவுடன் நெருங்கிய தொடர்பிருந்ததை இது எடுத்துக் காட்டுகின்றது. ஓமானில், ராப் அல் காலி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப் பட்ட புராதன நகரான உபார் (இராம்) கூட, இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்பினால் தான், ஒரு பணக்கார நாடாக திகழ்ந்தது. இன்றைக்கு இருக்கும் உலக ஒழுங்கிற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு உலகம் அன்றிருந்தது. இன்று நியூ யார்க், லண்டன், டோக்கியோ ஆகிய நகரங்கள் சர்வதேச வர்த்தகத்தை கட்டுப் படுத்துவதைப் போல, அன்று பல வர்த்தக நகரங்கள் மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் இருந்துள்ளன. இவற்றிற்கு இடையிலான நெருங்கிய வர்த்தகத் தொடர்பு காரணமாக, உலகிலேயே அதிகளவு பணம் புரளும் செல்வந்த நகரங்களாக இருந்தன. 

தொன்மையான உபார் நகரம் போன்று, சிரியாவிலும் மறைந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. எப்லா (Ebla) என்ற பெயரைக் கொண்ட நகரம், ஒரு தனி நாடாக விளங்கியது. உபாருக்கும், எப்லாவுக்கும் இடையில் நெருங்கிய வர்த்தகத் தொடர்பிருந்தது. எப்லா நாட்டின் நிர்வாகத்தையும், வணிகத் தொடர்புகளையும் குறிப்பிடும் களிமண்  தட்டுகள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டன. எப்லா அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட களிமண் தட்டுகள், பாபிலோனிய மொழியிலும், அந் நாட்டு மக்கள் பேசிய எப்லா மொழியிலும் எழுதப் பட்டிருந்தன. நவீன செமிட்டிக் மொழிகளான ஹீபுரு, அரமைக், அரபி ஆகிய மொழிகள் தோன்றுவதற்கு, ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, எப்லா மொழி பேசப்பட்டது. அதுவே நவீன செமிட்டிக் மொழிகளின் தாயாக இருந்திருக்கலாம்.  சிரியாவில் பிற்காலத்தில் தோன்றிய கானான் நாட்டு மக்கள், எப்லா தேசத்தவர் பயன்படுத்திய எழுத்துக்களை மேலும் மெருகூட்டினார்கள். அதுவே தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீபுரு, அரபி எல்லாவற்றிற்கும் அடிப்படையான அரிச்சுவடி ஆகும். சிரியாவில், லடாக்கியா நகருக்கு அருகாமையில் உள்ள உகாரிட் (Ugarit) என்ற பண்டைய நகரின் இடிபாடுகளை சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், இது பற்றி நீங்கள் விரிவாக அறிந்து கொள்ளலாம். 

ஹீபுரு, அரபி ஆகிய செமிட்டிக் மொழிகளில் நிறைய தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. சாலமன் மன்னன் ஆண்ட இஸ்ரேலுக்கும்,  தமிழகத்தில்  பாண்டிய நாட்டிற்கும் இடையில் வர்த்தகத் தொடர்பிருந்தது. இதனை சிலப்பதிகாரமும் பதிவு செய்துள்ளது.  அன்றைய தமிழகத்தில், அரேபியர், ஹீபுருக்கள், கிரேக்கர்கள் எல்லோரும் "யவனர்கள்"  என்றே அழைக்கப் பட்டனர். யூதர்களின் விவிலிய நூலில், "ஆகாஸ்வரோஷ்" என்ற மன்னனின் சாம்ராஜ்யம் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது. ஆகாஸ்வரோஷின் சாம்ராஜ்யம், எத்தியோப்பியாவில் இருந்து இந்தியா வரை  வியாபித்திருந்தது. (Ahasuerus, a Persian king, identical with Xerxes (486-465 B.C.). The Book of Esther deals only with one period of his reign. It tells us that he ruled over one hundred and twenty-seven provinces—"from India, even unto Ethiopia" (Esth. i. 1);  http://www.jewishencyclopedia.com/articles/967-ahasuerus )   உலகின் பெரும்பாலான பகுதிகளில், நாகரீகத்தின் அறிகுறியே தோன்றியிராத காலத்தில், எத்தியோப்பியா தொடக்கம் தென்னிந்தியா வரையிலான பகுதிகள், அதி உன்னத நாகரிக வளர்ச்சி கண்டிருந்தன. அதனை நிரூபிப்பதற்கு, மேற்குறிப்பிட்ட தரவுகள் போதுமானவை.    

கி.மு. 5000 வருடங்களுக்கு முன்னரே, ஆப்பிரிக்க-எத்தியோப்பியர்கள்  தென் அரேபியாவில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தனர். அங்கே அவர்கள் பேசிய மொழிகள், இன்று பழைய அரபு மொழி என்ற பெயரில், குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே பேசப்படும் வட்டார மொழிகளாக சுருங்கி விட்டன. மிகவும் தொன்மையான அரேபியர்கள் என்று கருதப்படும் யேமனியர்கள், இன்றுள்ள அரபி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதவில்லை. வித்தியாசமான எழுத்து வடிவம் ஒன்றைக் கொண்டிருந்தனர். கி.மு. 3 ம்  நூற்றாண்டில் உருவான தமிழ் எழுத்துக்களும், கி.மு. 9 ம் நூற்றாண்டில் உருவான யேமன்  அரபி எழுத்துக்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பது ஒன்றும் தற்செயல் அல்ல. கி.மு. 1000 ம்  ஆண்டளவில், லெபனான் அல்லது சிரியாவை சேர்ந்த  பீனிசியர்கள் அல்லது கானானியர்கள் பயன்படுத்திய எழுத்துக்கள் தான், கிரேக்கர்களாலும், பிற ஐரோப்பிய மொழிகளாலும் கடன்வாங்கப் பட்டன.

"எமது இனத்தவர்கள் மட்டுமே, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் ஆண்டார்கள்..."  என்று கூறுவது மடமைத்தனம். அது மட்டுமல்ல, சகோதர இனத்தவர் மத்தியில் வெறுப்பையும் தோற்றுவிக்கும். மொழி என்பது காலத்திற்கு காலம் மாறக் கூடியது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய தமிழைப் பேசும் மக்கள் கூட்டம் ஒன்று, இன்றைக்கும் எம் மத்தியில் வாழ்ந்து வந்தால், அவர்களை வேற்றினமாக கருதி ஒதுக்கி வைத்திருப்போம். ஏனெனில், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட தமிழில் ஒரு சொல் கூட எங்களுக்குப் புரியாது. மேலும், ஒரு மொழியைப் பேசுவதால், அந்த மக்களை தனியான இனமாக கருதுவது தவறானது. எத்தியோப்பியர்கள், யேமனியர்கள், அரேபியர்கள், ஹீபுருக்கள், தமிழர்கள் ஆகியோர், ஆதி காலத்தில் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் தான். ஆனால், காலப்போக்கில் பிற இனங்களுடன் கலந்து, இன்றைய பிரிவினைகள் தோன்றின. மத நம்பிக்கைகள் மட்டுமல்ல, மொழிகள், அரிச்சுவடிகள், கலாச்சாரங்கள் எல்லாவற்றையும், உலக மக்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக் கொண்டுள்ளனர்.

எத்தியோப்பியர்கள் அல்லது சோமாலியர்கள், யேமனில் அரேபியர்களாக மாறினார்கள். அங்கே அவர்கள் சபா (Sabaen) நாகரீகத்தை உருவாக்கினார்கள். வடக்கு நோக்கி குடிபெயர்ந்தவர்கள், பாலஸ்தீனம், ஜோர்டான், வட சவூதி அரேபியா  ஆகிய இடங்களில் நபெத்திய நாகரீகத்தை உருவாக்கினார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், யேமனில் இருந்து இன்னொரு பிரிவினர் ஈராக் நோக்கி குடிபெயர்ந்து சென்றனர். பானு லக்கும் என்ற இனக்குழுத் தலைவனின் தலைமையில், மெசப்பத்தொமியாவில் லக்மிடிய ராஜ்யத்தை உருவாக்கினார்கள். அது ஒரு கிறிஸ்தவ ராஜ்யமாக இருந்தது. அந்த கிறிஸ்தவ நாடு, மேற்கே கிரேக்க-ரோம சாம்ராஜ்யத்திற்கும் கிழக்கே பாரசீக சாம்ராஜ்யத்திற்கும் இடையில் நடுநிலை வகித்தது.

பாரசீகர்கள் லக்மிடியர்களின் ராஜ்யத்திற்கு, "அராபிஸ்தான்"  என்று பெயரிட்டு அழைத்தனர். கிரேக்கர்கள், இன்றைய அரேபிய தீபகற்பம் முழுவதையும், "அரேபியா பெலிக்ஸ்"  என்று அழைத்தனர். பிந்திய வரலாற்றில் அரேபியா என்ற பெயர் நிலைத்து விட்டது. அதனால், அரேபியர்கள் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கும் சொல்லாக  நாங்கள்  கருத முடியாது. தற்செயலாக அந்தப் பிரதேசத்தில் தங்கி வாழ நேர்ந்து விட்ட அனைவரும், பிற்காலத்தில் அரேபியர்களாகி விட்டார்கள். அவர்கள் வெள்ளையின கிரேக்கர்களாக இருந்தாலும், அரேபியர்கள் என்றே அழைக்கப் பட்டனர். ஆகவே, அரேபியர்களும், தமிழர்களும், எந்த வித தொடர்புமற்ற வெவ்வேறு இனங்கள் என்று நினைப்பது, எமது அறியாமையின் வெளிப்பாடாகும்.


(தொடரும்)





  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters

Ramesh Murugan

unread,
Jan 30, 2013, 9:31:36 AM1/30/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்! 
நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 14

(பதினான்காம் பாகம்)
____________________________________________
இஸ்லாமிய மதத்திற்கும், இந்து மதத்திற்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன. உதாரணத்திற்கு, புனிதமான நாளான வெள்ளிக்கிழமை.  சாமி கும்பிடுவது எப்படி என்று, இந்து மத நூல்களில் எழுதப் பட்ட விதிகளில் ஒன்று: "பஞ்சாங்க நமஸ்காரம்". அதாவது, முழந்தாளிட்டு, நெற்றி நிலத்தில் படுமாறு இறைவனை வணங்குதல்.  இந்துக் கோயில்களில் பெண்கள் இவ்வாறு சாமி கும்பிடுவதைக் காணலாம்.  முழந்தாளிட்டு, நெற்றி நிலத்தில் படுமாறு இறைவனை தொழுவதை முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர். ஆகவே, அந்த தொழுகை முறை, இஸ்லாத்திற்கு முன்பிருந்த அரேபியாவிலும் இருந்திருக்க வேண்டும். தொழுகை மட்டுமல்ல, பிறைச்சந்திரன் கூட, இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவில் கடவுளின் சின்னமாக இருந்துள்ளது. ஆதி கால அரேபியர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் சந்திரனுக்கு கோயில் கட்டி வழிபட்டனர்.  

பண்டைய அரேபியரின் மத சம்பிரதாயங்களை பின்பற்றினாலும், இஸ்லாம் ஒரு புரட்சிகரமான புதிய மதமாகும். விக்கிரக வழிபாட்டை ஒழித்துக் கட்டியது மட்டுமல்ல, அரேபியர் வழிபட்ட பல தெய்வங்களில் ஒன்றான அல்லாவை, ஒரேயொரு இறைவனாக ஆக்கியமை, அந்தக் காலத்தில் நடந்த மாபெரும் கலாச்சாரப் புரட்சி ஆகும். மோசேஸ் (யூதர்கள்), இயேசு (கிறிஸ்தவர்கள்), அகநாதன் (எகிப்தியர்கள்), சரதூசர் (ஈரானியர்கள்) ஆகிய தீர்க்கதரிசிகளும், முகமதுவுக்கு முன்னரே அது போன்ற மதப் புரட்சிகளை நடத்தி உள்ளனர். ஆகவே, இஸ்லாத்தையும், அதன் இறைதூதர் முகமதுவையும், மேற்குறிப்பிட்ட மதப்புரட்சிகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். அதனை இந்து மதம் போன்ற இன்னொரு மதமாக ஒப்பிடுவது அபத்தமானது. இருப்பினும், பண்டைய அரேபியரின் மத நம்பிக்கைகள், எந்தளவு தூரம் பண்டைய தமிழரின் அல்லது இந்துக்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றது என்று பார்ப்பதில் தவறில்லை. வரலாற்று உண்மைகளை நாங்கள் இலகுவாக புறக்கணித்து விட முடியாது.   

யேமனில் குடியேறிய எத்தியோப்பியர்கள், அரேபிய - திராவிடர்களாக மாறினார்கள் என்பதை முன்னைய கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், அரேபிய - திராவிடர்களின் மத நம்பிக்கையை பார்ப்போம். 5000 வருடங்களுக்கு முன்னர், யேமன் "சபியர்களின் ராஜ்ஜியம்"  என்று அழைக்கப்பட்டு வந்தது. விவிலிய நூலில் குறிப்பிடப்படும், ஷீபா (அரபியில் சபா) வின் வழித்தோன்றல்கள் சபிய அரச வம்சத்தை உருவாக்கினார்கள். 20 ம்  நூற்றாண்டு வரை எத்தியோப்பியாவை ஆண்ட மன்னர்களும், சபிய அரச வம்சம் என்று தான் கூறிக் கொண்டனர். சபியர்களின் பிரதான தெய்வமாக சந்திரக் கடவுள் இருந்தது. அதற்கு நீங்கள் ஆதாரம் தேடி அலையத் தேவையில்லை. யேமன் சென்றால், அங்கே மாரிப் (Maribhttp://www.yementourism.com/tourism2009/destinations/index.php?ELEMENT_ID=2668) என்ற இடத்தில், அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட, சந்திரக் கடவுளுக்கு கட்டப்பட்ட அழகிய தூண்களைக் கொண்ட கோயிலைக் கண்டு களிக்கலாம்.  சபியர்கள் சந்திர தெய்வத்தை, "இலு முகா" என்று அழைத்தனர். இலு என்பது அக்காடியர்கள் காலத்திலும், பிரதான தெய்வத்தைக் குறித்தது. அல்லா என்ற சொல்லின் மூலம், "இலு" விலும் இருக்கலாம். ஆனால், அல்லா என்ற சொல் கூட இஸ்லாத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. 

அரேபியாவைப் பற்றி, நமக்குத் தான் பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால், பண்டைய இந்தியர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். வாயு புராணத்தில், ஏழு கண்டங்கள் பற்றிய குறிப்பு ஒன்று வருகின்றது. சப்த துவீபங்கள் என்று அவற்றைக் குறிப்பிடுகின்றது. அதில் ஒன்று, கூஷ துவீபம், இன்றைக்கு அது அரேபியா என்று அழைக்கப் படுகின்றது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் அரேபியர் என்ற இனம் இருக்கவில்லை. ஆனால், அரபு மொழி போன்ற மொழிகளைப் பேசிய, பல்வேறு இனக்குழுக்கள் இருந்துள்ளன. சந்திரக் கடவுளுக்கு, அவர்களின் மொழிகளில் பெயரிட்டிருந்தனர். ஆச்சரியப் படத் தக்கவாறு, அந்தச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் போன்றுள்ளன. 

கதாபானியன் (Qatabanian) என்ற  அரபி இனக்குழு, சந்திரனை "அம், அம்பை" என்ற பெயர்களில் வணங்கியது.  அம்மா, அம்பை என்ற பெயரில், இந்து மத பெண் தெய்வங்கள் இருப்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவயில்லை. அரேபியர்கள், சந்திரனை சில சமயம்  ஆணாகவும், சில சமயம் பெண்ணாகவும் கருதி வழிபட்டு வந்தனர். ஆகவே, ஹடாமிஸ் என்ற இன்னொரு அரபி இனக்குழு, "சின்" என்ற பெயரில் ஆண் தெய்வமாக வழிபட்டதில் வியப்பில்லை. சின் என்ற சொல் பாபிலோனியர்கள் காலத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. அவர்களது மத நம்பிக்கையின் படி, என்லில், நின்லில் கடவுளரின் மகன் தான் சின் என்ற சந்திரக் கடவுள். சின் என்ற சொல்லில் இருந்து தான், சமஸ்கிருதச் சொல்லான சந்திரன் தோன்றியது. தமிழர்களும் அந்தக் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர்.  உதாரணத்திற்கு, நிலா என்பது பெண். சந்திரன் என்பது ஆண். பண்டைய தமிழர்களும், சந்திரனை ஒரு பெண் தெய்வமாக வழிபட்டு வந்தமை தொல்காப்பியத்தில் எழுதப் பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களை, இன்னொரு இடத்தில் ஆராய்வோம்.   

இனி, சந்திரக் கடவுளின் பூர்வீகம் பற்றி அறிந்து கொள்வோம். மாரிப் கோயில் இடிபாடுகளில், அந்தக் கடவுளைக் குறிக்கும் பின்வரும் சொல் கண்டுபிடிக்கப்  பட்டது: "LMQH".  இதனை "அல்மகா" என்றும் "இல்முகா" என்றும் மொழிபெயர்க்கின்றனர்.  அல்லா என்ற சொல் கூட அதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்பது சில அறிஞர்களது வாதம். அல்மகா என்பதை, முழுக்க முழுக்க சந்திரக் கடவுளாக புரிந்து கொள்ள முடியாது. அல்மகா தெய்வம், மாரிப்  கோயிலுக்கு அருகில் உள்ள தடாகத்தில் நீராடுவதாக ஐதீகம். அந்தக் கோயிலில் திருவிழாக்கள் நடைபெற்ற காலங்களில், மூலமூர்த்தி சிலையை எடுத்து வந்து தீர்த்தக் கேணியில் நீராட்டி எடுத்துச் செல்வார்கள். அது இந்துக் கோயில்களில் சாமி தீர்ததமாடுவதைப் போன்று அதே நடைமுறை தான். இது பண்டைய எகிப்தியரின், சூடானியரின் எருமை மாட்டு தெய்வம் நீராடும் மத நம்பிக்கையை ஒத்திருக்கின்றது. 

இன்றைக்கும், சூடானில், கென்யாவில் வாழும் மாசாய் என்ற ஆப்பிரிக்க இனத்தவர் வாழ்வில், மாடு இன்றியமையாத விலங்கு. தமிழர்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதைப் போன்று, ஆப்பிரிக்கர்கள் மாட்டுக்கு மரியாதை கொடுத்து வந்தனர். பண்டைய கால ஆபிரிக்க மக்கள், எருமை மாடு குளத்தில் நீராடுவதை புனிதமாக கருதினார்கள். அதிலிருந்து அவர்களின் மத நம்பிக்கை உருவானது. "ஒரு மாட்டை கடவுளாக வழிபடலாமா?"  என்று நாகரீகமடைந்த சமூகத்தை சேர்ந்த நாங்கள் வியப்படைகிறோம். அந்த எண்ணம், அன்றைய அரேபிய - திராவிடர்கள் மனதிலும் தோன்றியிருக்கலாம். அதனால், பண்டைய யேமனில் வாழ்ந்த மக்கள், மாட்டுத் தெய்வத்தை வெறும் குறியீட்டுடன் மட்டும் நிறுத்திக் கொண்டார்கள். ("இந்துக்கள்" அதனை சிவபெருமானின் வாகனமாக்கினார்கள்) அதாவது, ஆப்பிரிக்கர்களின் பூர்வீக மத நம்பிக்கை, வேறு வடிவம் எடுத்தது. கடவுள் குழந்தையாக அவதரித்து நீராடுவதாக காட்டும் திருவிழாக்கள், அரேபியா தீபகற்பம் முழுவதும் நடந்துள்ளன. 

முருகன் ஒரு தமிழ்க் கடவுள் என்று கூறுகின்றார்கள். முருகக் கடவுள், குழந்தையாக சரவணப் பொய்கையில் நீராடுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். சரவணப் பொய்கையில் நீராடும் முருகனின் கதையும், யேமன் அல்மகா தெய்வத்தின் கதையும் ஒரே மாதிரியாக உள்ளன. மேலும் பெயர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளன. பண்டைய யேமனியர்கள் வழிபட்ட, அல்மகா அல்லது இல்முகா என்ற சொல்லும், ஷண்முகா என்ற சொல்லும் ஒரே மாதிரி ஒலிக்கின்றன. சின் என்பது ஷன் என்றும் மாறியிருக்கலாம். அதனை நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

இருப்பினும், தமிழர்களும், அரேபியரும் ஒரே இடத்தில் இருந்து குடிபெயர்ந்த ஓரின மக்கள் என்றால், அவர்களது தெய்வ நம்பிக்கையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டுமல்லவா? அதற்கான ஆதாரங்கள் தாராளமாகவே கிடைக்கின்றன. சங்க காலத் தமிழர்கள், சேயோன் என்ற குழந்தைக் கடவுளை வழிபட்டனர். சேயோனும், முருகனும் ஒன்று என தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர்கள், கொற்றவை என்ற பெண் தெய்வத்தையும் வழிபட்டனர். கொற்றவையின் மகன் தான் சேயோன் அல்லது முருகன். சங்ககாலத்திற்கு பிந்திய இலக்கியங்களான, கலித்தொகை, திருமுருகாற்றுப் படையில் மட்டுமே, முருகன், சிவனுக்கும், பார்வதிக்கும் மகனாக குறிப்பிடப் படுகின்றது. ஆகவே, தாயும், மகனுமான கொற்றவையும், சேயோனும் தமிழர்களின் தெய்வங்கள் என்றால், அவை அரேபியாவிலும் இருந்திருக்க வேண்டுமல்லவா? 

பண்டைய தமிழகத்தில், அரசர்களும் படையினரும், போருக்கு போவதற்கு முன்னர், கொற்றவையை வழிபட்டு விட்டுச் செல்வார்கள். ஈராக்கில் வாழ்ந்த எமது முன்னோர்கள் காவிக் கொண்டு வந்த சம்பிரதாயங்களில் ஒன்றாக அது இருக்கலாம். ஏனெனில், பண்டைய ஈராக்கில், போருக்கு புறப்படுவதற்கு முன்னர், சுமேரிய அல்லது பாபிலோனிய அரசர்களும், படையினரும் இஷ்தார் அல்லது இனானா என்ற பெண் தெய்வத்திற்கு பூஜை செய்யும் சம்பிரதாயம் நிலவியது. கொற்றவை, அரபு நாடுகளில் வழிபடப் பட்டு வந்தமைக்கு,  இன்னொரு ஆதாரமும் உண்டு. பண்டைய அரேபியர்கள், "அல் குற்றவை" (Al Kutbay ) என்ற தெய்வத்தை வழிபட்டனர். இது இந்துக்களின் சரஸ்வதி போன்று, கல்வித் தெய்வமாகும். அந்த தெய்வத்தின் பெயரில் இருந்து தான், கிதாப் (ktb) என்ற அரபிச் சொல் வந்தது. அரபி மொழியில் கிதாப் என்றால், எழுதுதல் என்ற வினைச் சொல்லுக்கும், புத்தகம் என்ற பெயர்ச் சொல்லுக்கும் வரும். தமிழ் மொழியில், கற்றல், புத்தகம் ஆகிய சொற்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதை அவதானிக்கவும். தமிழ் பண்பாட்டுக்கும், அரபி பண்பாட்டுக்கும் இடையிலான அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள், இத்துடன் முடியவில்லை. இன்னும் நிறைய இருக்கின்றன. 

நமது காலக் கணிப்பில் (கி.பி.) 4 ம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மதம் பரவியிருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. முதன்முதலாக கிறிஸ்தவமயமான நாடுகளில் சைப்பிரசும் ஒன்று. சைப்பிரசில் சலாமிஸ் என்ற நகரில் இருந்த தலைமை மதகுரு (பிஷப்) எபிபானியுஸ் (Epiphanius), அரேபியரின் மத நம்பிக்கைகள் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். (http://en.wikipedia.org/wiki/Epiphanius_of_Salamis)  இன்றைய ஜோர்டானில் வாழ்ந்த நபெத்தியர்கள், அல்லாவின் பிறப்பைக் கொண்டாடும் திருவிழா பற்றிய குறிப்புகள் அவை. அந்தக் குறிப்புகள் எமக்கு குழந்தை ஏசுவை நினைவு படுத்துகின்றன. கோயில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த குழந்தைக் கடவுளின் சிலையை, வெளியே எடுத்துக் கொண்டு வந்து, பக்தர்கள் வணங்குவதற்கு வைத்து விட்டு, பின்னர் உள்ளே கொண்டு செல்வார்கள். இன்றைய இந்துக் கோயில்களில் நடப்பதைப் போன்ற, தீர்த்தத் திருவிழா, தேர்த் திருவிழா எல்லாம் பண்டைய ஜோர்டான் நாட்டில் நடந்துள்ளன. (இந்துக் கோயில்களில் நடைபெறும் சடங்குகளான, சுவாமி வீதி உலா வருதல், தீர்த்தமாடுதல் போன்ற திருவிழாக்களின் தாயகம் எகிப்து ஆகும்.)  

அல்லா என்ற குழந்தைக் கடவுளின், தாய்க் கடவுளின் பெயர்: "அல் லாத்". பண்டைய அரேபியரின் மத நம்பிக்கையில், அல்லா என்பது ஆண் தெய்வத்தையும், அல் லாத் என்பது பெண் தெய்வத்தையும் குறிக்கும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, தாய் வழிச் சமுதாயம் நிலவியதால், "தகப்பன் கடவுள்" இருக்கவில்லை. அதனால் அல் லாத் என்ற பெண் தெய்வத்தையும், அதன் மகனான  அல்லா என்ற குழந்தைத் தெய்வத்தையும் மட்டுமே பிரதானமாக கருதினார்கள். தமிழர்கள் கொற்றவையையும், அந்த தெய்வத்தின் மகனான சேயோனையும் பிரதானமாக கருதி வழிபட்டனர். பண்டைய அரேபியர் போன்று, பண்டைய தமிழர்களும் தாய் வழிச் சமுதாயத்தை நீண்ட காலத்திற்கு பின்பற்றி வந்தனர். இந்தியாவில் தந்தை வழிச் சமூக அமைப்பு வந்த பின்னர் தான், அதாவது  சங்க காலத்திற்கு பிந்திய காலம், முருகனுக்கு சிவன் தகப்பனாக மாறினார். அதே போன்ற ஒரு பண்பாட்டு மாற்றம் அரேபியாவிலும் இடம்பெற்றது. பெண் தெய்வமான அல் லாத் பின்தள்ளப் பட்டு, ஆண் தெய்வமான அல்லா முக்கியத்துவம் பெற்றது. 

தென்னிந்தியாவில், முருகக் கடவுளை குழந்தை தெய்வமாக வழிபடுவது குறிப்பிடத் தக்கது. குழந்தை முருகன், குழந்தை ஏசு, குழந்தை அல்லா, எல்லாம் ஒரே மூலத்தில் இருந்து பிறந்த மத நம்பிக்கைகள் தான். பண்டைய ஜோர்டான் நாட்டில் வாழ்ந்த நபெத்தியர்கள், குழந்தை அல்லாவை, "துஷாரா" என்று பெயரிட்டு அழைத்தனர். துஷாரா என்பது, அந்தப் பிரதேசத்தில் உள்ள மலையில் (ஷாரா) வாழும் கடவுள் ஆகும். (Dhu i Shara) தமிழர்கள் முருகனை மலை வாழ் தெய்வமாக, குறிஞ்சிக் கடவுள் என்று வழிபடுவது குறிப்பிடத் தக்கது.  துஷாரா என்ற மலைக் கடவுள் சிவனையும் குறிக்கலாம். ஏனெனில், நபெத்தியர்கள் துஷாராவை குறிக்க மாட்டையும் சின்னமாக பயன்படுத்தினார்கள். ஆப்பிரிக்க மக்கள் புனிதமாக கருதி வழிபட்ட மாடு, நபெத்தியர்களால் துஷாராவாகவும், இந்துக்களால் நந்தியாகவும் கருதப் பட்டது. ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட, மாட்டு சின்னம் பொறித்த முத்திரையை இங்கே நினைவு படுத்திக் கொள்வோம். தமிழர்கள், அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள் ஆகிய "மூவினத்தவர்களும்", ஒரே நாகரீகத்தை பகிர்ந்து கொள்கின்றனர் என்பதற்கு, இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்? இப்போதும் நம்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்காக, இன்னும் தேடுவோம். 

(தொடரும்)




  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters

Ramesh Murugan

unread,
Feb 2, 2013, 4:18:13 AM2/2/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்

நாம் கறுப்பர்! 
நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 15

(பதினைந்தாம்  பாகம்)


கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற 
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் 
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே 
(தொல்காப்பியம், புற. 27)

ஒரு முறை, சூடான் நாட்டை சேர்ந்த நண்பி ஒருவரின் திருமண விருந்துக்கு செல்லூம் வாய்ப்புக் கிடைத்தது. சூடானில் திருமணம் செய்து கொண்டு வந்தவர், அந்த வீடியோவை எமக்குப் போட்டுக் காட்டினார். ஒரு மண விழாவுக்குரிய, வழக்கமான சடங்குகளை காட்டும் வீடியோ முடிந்த பின்னர், "மணப் பெண் நடனம் என்ற வீடியோ ஒன்று இருக்கின்றது. அதனை இங்கேயுள்ள ஆண்கள் யாரும் பார்க்கக் கூடாது."  என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.  அனால், அந்த வீடியோவை நாங்கள் எல்லோரும் பார்த்து இரசிப்பதில் அவருக்கு ஆட்சேபனை ஒன்றும் இருக்கவில்லை. உண்மையில், சூடான் நாட்டு சம்பிரதாயப் படி, திருமணத்திற்கு முதல் நாள், மணமகளின் வீட்டில் நடக்கும், "மணப்பெண் நடனத்தை" பார்க்க ஆண்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. மணப்பெண்ணின் தோழிகள் மட்டுமே அங்கே இருக்கலாம். இன்றைய நாகரீகமடைந்த உலகில், "மணப்பெண் நடனம்" வெறும் சடங்காக மட்டும் பின்பற்றப் படுகின்றது. 

ஆண்களும், பெண்களும் பிரித்து வைக்கப் பட்டுள்ள இஸ்லாமிய சமூகத்தில், "ஒரு பெண் நடனமாடுவதை பெண்கள் மட்டுமே பார்க்க வேண்டும்" என்ற அளவில் சுருங்கி விட்டது. இது பற்றி மேலும் ஆராய்ந்த பொழுது, பல ஆச்சரியத்திற்குரிய தகவல்கள் கிடைத்தன. இஸ்லாத்திற்கு முந்திய வட ஆப்பிரிக்காவில், நமது பார்வைக்கு பாலியல் விரசம் உள்ளதாக தோன்றும் நடனங்கள், ஒரு மரபாக பின்பற்றப் பட்டு வந்துள்ளன. ஒரு சிறுமிக்கு சாமத்திய சடங்கு (மஞ்சள் நீராட்டு விழா) நடக்கும் காலத்தில், அந்த ஊரில் உள்ள பெண்கள் பாலியல் அங்க அசைவுகளை காட்டும் நடனம் ஆடுவார்கள். சிலநேரம், மதக் கடமை காரணமாகவும் அது போன்ற நடனங்களை ஆடுவார்கள். இதற்கு முந்திய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள, பண்டைய காலத்தில், தம்முஸ் கடவுளின் மரணத்தை நினைவுகூரும் சடங்காக, இஷ்தார் கோயிலில் கூடும் பெண்கள் அந்த நடனத்தை ஆடுவார்கள். எந்தவொரு மதக் கடமையும், கோயிலுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அது ஒவ்வொரு குடும்பத்தினாலும், அவரவர் வீடுகளில் கொண்டாடப் படுவதுண்டு. இன்று உலகம் எவ்வளவோ மாறி விட்டது. இருந்தாலும், பண்டைய மரபின் தொடர்ச்சி எங்கோ ஒரு இடத்தில் நிலைத்து நிற்கின்றது.

1920 ல், பிரிட்டிஷ் காலனிய கால எகிப்தின் இரகசிய பொலிஸ் உயர் அதிகாரியான McPherson, இது போன்ற நடனம் ஒன்றை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தை பற்றி, தனது குறிப்புகளில் எழுதியுள்ளார். அந்தக் காலத்திய எகிப்தில் கூட, இது போன்ற நடனங்களை பார்க்க வெளியாரை அனுமதிப்பதில்லை. எங்காவது ஒரு கிராமத்தில், மிகவும் இரகசியமாக நடக்கும். பெரும்பான்மை எகிப்தியர்கள் இஸ்லாமியராக இருந்த போதிலும், அந்த நடனத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவெனில், ஒரு தெய்வச் சிலையை சுற்றி, பெண்கள் நடனமாடுவார்கள். அந்த நடனமானது, நம்மூர் பூசாரி கலையாடுவதைப் போன்றிருக்கும். எகிப்திலும் நடனம் என்ற பெயரில், சாமியாடுவது தான் நடக்கின்றது. தம்மை மறந்து கலையாடும் பெண்கள், உச்சத்தை அடைந்ததும் மயங்கி விழுந்து விடுவார்கள். அதே நேரம், இன்னொரு பக்கத்தில் ஆடு, கோழி போன்ற மிருகங்களை அறுத்து, அவற்றின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்திருப்பார்கள். அந்த இரத்தத்தை எடுத்து, அங்கிருக்கும் தெய்வச் சிலைக்கு அபிஷேகம் செய்வார்கள். 

இந்த தகவல்கள் எல்லாம் McPherson  எழுதிய குறிப்புகளில் காணக் கிடைக்கின்றன. இஸ்லாமிய மதத்தில் சிலை வணக்கத்திற்கு இடமில்லை என்பது, எங்கள் எல்லோருக்கும் தெரியும். சாமியாடுவது, மிருகங்களை பலி கொடுப்பது போன்ற சடங்குகளையும், இஸ்லாமிய மதத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆகவே, இவை எல்லாம் இஸ்லாத்திற்கு முந்திய மத நம்பிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாத்திற்கு முந்திய வட-ஆப்பிரிக்க மக்களின் மரபு, எமது கிராமங்களில் நடக்கும் சிறு தெய்வ வழிபாட்டுடன் ஒத்துப் போவது ஆச்சரியத்திற்குரியது அல்லவா? அப்படியானால், தமிழராகிய நாங்களும், எகிப்திய, சூடானிய மக்களும், ஒரு காலத்தில், ஓரிடத்தில் வாழ்ந்த, ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்திருக்க வேண்டும். இந்த உண்மையை யாராவது மறுக்க முடியுமா? 

இஸ்லாம் என்பது ஒரு மதமாக மட்டுமல்லாமல், அரசியல் இயக்கமாகவும் இருந்து வருகின்றது. அது ஒரு சமூகத்தில், கிறிஸ்தவ மதம் ஏற்படுத்தியதை விட, பாரிய சமூக மாற்றத்தை உருவாக்கியது. இன்றைக்கிருக்கும் முஸ்லிம்கள் கூட, இஸ்லாத்திற்கு முந்திய மத நம்பிக்கைகளை, மரபுகளை பற்றி அறிந்து கொள்வதற்கு விரும்புவதில்லை. அதனால், அவற்றைப் பற்றி யாரும் ஆராய்வதில்லை. இஸ்லாமிய மயமாக்கல் என்பது, ஒரு புது யுகத்தின் தொடக்கமாக, புதியதொரு நாகரீகமாக கருதப் படுகின்றது. அரேபியர்கள் முஸ்லிம்களாக மாறுவதற்கு முன்னர், சிலை வணக்கத்தை கடைப்பிடித்து வந்தனர் என்பது திருக்குரானில் கூட எழுதப் பட்டிருக்கிறது. இஸ்லாத்திற்கு முந்திய அரேபியர்கள், எந்த தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள்? அதனை ஆராய்ந்தால், பல ஆச்சரியத்திற்குரிய தகவல்கள் கிடைக்கின்றன. புராதன அரேபியரின் மத நம்பிக்கையில், சந்திரக் கடவுளை வழிபடுவது பிரதான இடத்தை பிடித்திருந்தது. சில அரபு குலங்கள் சந்திரனை ஆண் தெய்வமாகவும், வேறு சில குலங்கள் பெண் தெய்வமாகவும் வழிபட்டு வந்தன. தமிழரின் கலாச்சாரத்திலும், சந்திரனை நிலா என்று பெண்ணாக உருவகிப்பது வழக்கம். 

அரேபியர்கள் மூன்று பெண் தெய்வங்களை வழிபட்டனர். அந்த மூன்று தெய்வங்களும், நிலாவின் மூன்று வளர்ச்சிப் படிநிலைகளை குறிக்கின்றன. கோரை  (Q're) வளர்பிறையை குறிக்கும் தெய்வம். அல் உஷா (Al Uzza) முழு நிலவைக் குறிக்கும். அல் மனாத் (Al Manat) தேய் பிறையை குறிக்கும். (கோரை என்பது வளர்பிறையை குறித்தாலும், மக்களால் அல் லாத் என்ற பெயரில் வழிபடப் பட்டது) உஷா என்ற பெயர், இந்து மதத்தில் உமாதேவியாரை குறிக்கும் சொல்லாகும். அரேபியரின் மூன்று பெண் தெய்வங்களும், இந்து மதத்தில் வரும் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற மூன்று பெண் தெய்வங்களை ஒத்திருப்பதையும் அவதானிக்கலாம். அந்த மூன்று பெண் தெய்வங்களும், அல் லாத் (அல்லா) என்ற தலைமைக் கடவுளின் புதல்விகள். அதாவது, அந்த மூன்று தெய்வங்களும், மூன்று வெவ்வேறு கடமையில் ஈடுபடும் கடவுளின் அவதாரங்கள். அல்  லாத், அல் உஷா என்பன படைத்தல், காத்தல் தொழில்களையும், அல் மனாத் அழித்தல் தொழில்களையும் செய்கின்றன. இந்து மதத்தில், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளைப் போன்றது. கிறிஸ்தவ மதத்தில் வரும், பிதா, சுதன், பரிசுத்த ஆவி தத்துவமும் ஒன்று தான்.

அரேபியா, ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான பின்னரும், அரேபியரின் மத நம்பிக்கை பெருமளவு மாறவில்லை. ஆனால், எல்லா சாம்ராஜ்யங்களிலும் நடப்பதைப் போல, அரேபியரின் தெய்வங்களுக்கு கிரேக்கப் பெயர்கள் சூட்டப் பட்டன. நாம் இன்று கிறிஸ்துமஸ் தினம் என்று கொண்டாடும் டிசம்பர் 25, பண்டைய உலகில் சூரிய வழிபாட்டுக்குரிய தினமாகும். அதாவது, டிசம்பர் 21 சூரியனின் பாதை மாறுகின்றது (winter solstice). அன்று பூமியில் மிகக் குறைந்த நேரம் சூரிய ஒளி கிடைக்கும். இந்துக்களின் நவராத்திரி, பத்தாவது நாள் "தஷாரா" பண்டிகையுடன் நிறைவடைகின்றது. சமஸ்கிருதத்தில் தஷாரா என்பது, பத்தாவது என்ற அர்த்தத்தில் வரும் சொல்லாகும். அரபி மொழியில், ஆஷாரா என்றால் பத்து. இன்றைய ஜோர்டானில் உள்ள நபெத்தியர்களின் பேட்ரா நகரத்தில், தஷாரா பண்டிகை கொண்டாடப் பட்டு வந்தது. அவர்கள் அதனை "Dhu i- Shara" என்று அழைத்தனர். அது அல்லா என்ற குழந்தைக் கடவுளின் பிறப்பாக, டிசம்பர் 25 அன்று கொண்டாடப் பட்டு வந்தது. (சைப்பிரஸ் கிறிஸ்தவ மதகுரு எபிபானியுஸ் http://en.wikipedia.org/wiki/Epiphanius_of_Salamis)

அல் லாத் என்ற கன்னித் தாயின் மகனாக, அல்லா என்ற ஆண் குழந்தை பிறந்ததாக, பண்டைய அரேபிய மக்களின் புராணக் கதை ஒன்று தெரிவிக்கின்றது. அதே நேரம், அல் உஷா வேல மரத்தில் குடியிருக்கும், தஷாரா என்ற குறிஞ்சித் தெய்வத்தை  பெற்றெடுத்த கன்னித் தாய் என்றும் வழிபடப் பட்டார். (St. Epiphanius, கி.பி. 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மதபோதகர் எழுதிய குறிப்புகள்.)  பண்டைய தமிழர்களின் சங்க கால இலக்கியங்களில், கொற்றவை என்ற கன்னித் தாயின் மகனாக, சேயோன் என்ற ஆண் குழந்தை பிறந்ததாக எழுதப் பட்டுள்ளது. இது கிறிஸ்தவர்களின் கன்னி மரியாளுக்கு இயேசு பிறந்த கதையுடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கது. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதை மறந்து விட்ட மனித இனம், இன்று வெவ்வேறு மதங்களாக, இனங்களாக பிரிந்து நின்று மோதிக் கொண்டிருக்கிறது. நாம் இன்று நாகரிக உலகத்தில் வாழ்கின்றோமா, அல்லது காட்டுமிராண்டி காலத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கிறோமா?  

சேயோன், கொற்றவையின் மகன் என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது பாபிலோனியரின், சுமேரியரின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றது. தமுசி/தம்முஸ் என்ற ஆண் தெய்வம், இனானா/இஷ்தார் என்ற தாய்த் தெய்வத்தின் மகனாக பிறந்ததாக அவர்கள் நம்பினார்கள். ஆதி கால ஆப்பிரிக்க சமுதாயத்திலும்,அவ்வாறானதொரு  நம்பிக்கை இருந்தது.  தாய்க் கடவுளான சூரியனின் மகனாக, காளை மாட்டுக் கடவுள் பிறந்ததாக ஆப்பிரிக்கர்கள் நம்பினார்கள். தமிழர்கள் பொங்கல் பண்டிகை அன்று, சூரியக் கடவுளுக்கு பொங்குவதும், அடுத்தநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதும், பண்டைய ஆப்பிரிக்க மத நம்பிக்கை தான்.  ஆதித் தமிழரின் மத நம்பிக்கையும், அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய, மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போவது ஆச்சரியத்திற்குரியதல்ல. 

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஓரிறைக் கொள்கை கொண்ட மதங்கள் தோன்றுவதற்கு முன்னர், உலகம் முழுவதும் பல தெய்வ வழிபாடு இருந்து வந்தது. உண்மை தான். ஆனால், உலகில் பல தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு முன்னர், "இரு தெய்வ வழிபாடு" இருந்தது என்பது பலருக்கு தெரியாது. அது என்ன இரு தெய்வ வழிபாடு? ஒரு ஆண்  தெய்வமும், ஒரு பெண் தெய்வமும் முதன்மைக் கடவுளராக வழிபடப் பட்டு வந்தன. ஆணும், பெண்ணும் சேர்ந்ததே இவ்வுலகு என்பது, புராதன மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. பெண்ணை தாய்க் கடவுளாகவும், ஆணை குழந்தைக் கடவுளாகவும் உருவகித்தனர். பின்னர், அதே பெண் கடவுளை, ஆண் கடவுளின் மனைவியாக சித்தரித்தனர். இந்த தத்துவம், அன்றைய தாய் வழிச் சமுதாயத்திற்கு சிறப்பாகப் பொருந்துகின்றது. சுமேரிய/பாபிலோனிய மத நம்பிக்கையின் படி, இனானா/இஷ்தார் என்ற பெண் தெய்வம், தமுசி/தம்முஸ் என்ற ஆண் தெய்வத்தின் தாயாகவும், மனைவியாகவும் இருக்கிறது. சங்க கால தமிழர்கள் மத்தியிலும், இதே போன்ற நம்பிக்கை நிலவியது. கொற்றவையின் மகன் சேயோன். கொற்றவைக்கு வள்ளி என்றும், சேயோனுக்கு முருகன் என்றும் வேறு பெயர்கள் உள்ளன. சுமேரிய/பாபிலோனியரின் மத நம்பிக்கை போன்று, தாயான  கொற்றவை, முருகனின் மனைவியான வள்ளி யாக உருவகிக்கப் படுகிறாள். 

இன்றைய தமிழரின் ஆண் ஆதிக்க சமுதாயத்தில், வள்ளியின் பாத்திரம் முக்கியமற்றதாக தரமிறக்கப் பட்டுள்ளது. ஆனால், புராதன தாய் வழிச் சமூகத்தின் எச்சமாக இருந்த சங்க கால தமிழர்கள், வள்ளியை பிரதானமான பெண் தெய்வமாக வழிபட்டு வந்தனர். அதனை தொல்காப்பியமும் உறுதிப் படுத்துகின்றது:
"கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற 
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் 
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே" 
(தொல்காப்பியம், புற. 27)
இதன் விளக்கம்: சூரியன், நெருப்பு, சந்திரன் என்ற மூன்றையும் வாழ்த்துவதும், கடவுள் வாழ்த்து போலவே. சங்க காலத் தமிழில், வள்ளி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி தருவது, அல்லது சந்திரன் என்ற அர்த்தம் இருந்தது.
(பார்க்க: சாமி. சிதம்பரனார் எழுதிய "தொல்காப்பியத் தமிழர்")

தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து அரேபியாவுக்கும், பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கும் சென்றனர். அதற்கான சாத்தியக்கூறுகளையும், சான்றுகளையும், இதுவரையும் விரிவாகப் பார்த்தோம். இதற்கு முன்னர் இங்கே அலசப்பட்ட விடயங்கள் எல்லாம், எமக்கு இவ்வளவு காலமும் தெரியாமல் போனது எப்படி? தமிழர்கள் தமது முன்னோர்கள் வாழ்ந்த மண்ணை மறக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? அதற்குக் காரணம், தமிழரின் வரலாற்றுத் தொடர்ச்சி, எங்கோ ஒரு இடத்தில் அறுந்து விட்டது. அதற்கான காரணத்தை பலர் மிகச் சரியாக அனுமானித்திருப்பார்கள். அதாவது, ஆரியரின் வருகையின் பின்னர் அந்த மாற்றம் ஏற்பட்டது என்பது சரியானது தான். ஆனால், யார் இந்த ஆரியர்கள்? அவர்கள் ஒரு தனியான இனமா? உண்மையிலேயே ஆரியர்கள் என்ற இனத்தவர்கள், படையெடுத்து வந்து திராவிடர்களின் மண்ணை ஆக்கிரமித்தார்களா? ஆரியர்கள் இந்தியாவை மட்டும் இலக்காக கொண்டு படையெடுத்து வந்தனரா? ஆரியர்கள் அரேபியாவுக்கும், அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்கும் படையெடுத்து சென்றிருக்கக் கூடாதா? ஆரியர் பற்றிய கதைகளில், உண்மைகள் எவை? பொய்கள் எவை? அவற்றைப் பற்றி விரிவாக, அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். 



  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters

Ramesh Murugan

unread,
Feb 2, 2013, 4:32:34 AM2/2/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
by கலையரசன்

நாம் கறுப்பர்! 
 நமது மொழி தமிழ்! 
 நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 16

                         
(பதினாறாம் பாகம் )

திராவிட அரசியலாளரும், இந்திய சரித்திரம் பற்றி எழுதிய அறிஞர்களும், "ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்த வெள்ளை இனத்தவர்கள்,"  என்று நம்பி வந்தார்கள். ஆனால், "ஆரியப் படையெடுப்பு" பற்றிய கோட்பாடுகள், வேறு பல அறிஞர்களால் மறுத்துரைக்கப் பட்டன. எனது ஆய்வு கூட அப்படி ஒரு படையெடுப்பு நிகழவில்லை என்று தான் தெரிவிக்கின்றது. உண்மையில் ஆரியர்களின் படையெடுப்பு என்று கூறுவதை விட, "ஆரியமயமாக்கல்" என்ற சொற்பத்தை பாவிப்பதே பொருத்தமானது. அனேகமாக, வெள்ளை நிறவெறிக் கொள்கைகளை ஆதரிக்கும் சரித்திர ஆசிரியர்கள் தான், "ஆரியர் படையெடுப்பு" என்ற கோட்பாட்டை உருவாக்கி பரப்பி வந்திருக்க வேண்டும். "வெள்ளை இனத்தவர்கள், உலகம் முழுவதும் அடக்கி ஆண்டார்கள்."  என்று இனப் பெருமிதம் கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்துள்ளது. 

உண்மையில், வெள்ளை-கருப்பு என்று இனவாத அடிப்படையில் சிந்திப்பது, 19 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய அரசியல் கோட்பாடு ஆகும். புராதன நாகரிகங்களில் அப்படியான நிறவேற்றுமை இருக்கவில்லை. தமிழர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் மத்தியில், வெள்ளை, கருப்பு, பொது நிறம் என்றெல்லாம் கூறக் கூடியவர்கள் கலந்துள்ளனர். அவர்களது மேனியின் தோல் நிறம் காரணமாக, யாரும் அவர்களை வேறு இனமாக கருதுவதில்லை. அவர்களது சிந்தனை, மொழி, குணம் எதிலுமே வித்தியாசம் காண முடியாது. இந்திய உப கண்டத்திற்கு "படையெடுத்து வந்து ஆக்கிரமித்ததாக" நம்பப்படும் ஆரியர்களும், தமிழர்கள் போன்ற கலப்பினம் தான். இது பற்றி விரிவாகப் பார்ப்போம். 

வரலாற்றில் ஒரு மிகப் பெரிய வில்லனை நாங்கள் கண்டுகொள்வதில்லை. காலநிலை மாற்றம், மக்கள் இடப்பெயர்வுகளை மட்டுமல்ல போர்களையும் உருவாக்க வல்லது. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகளையும், கலவரங்களையும், தோற்றுவிக்க வல்லது. கோடிக் கணக்கான வருடங்களாக, நாம் வாழும் பூமியில் காலநிலை என்றும் ஒரே மாதிரி இருந்ததில்லை. வளமான புல்வெளிகள் மறைந்து பாலைவனங்கள் தோன்றலாம். வெப்பமான பிரதேசத்தில் பனி மழை பொழியலாம். எதுவுமே நிரந்தரமல்ல. இன்று மனிதர்கள் வாழ முடியாத, கடுங்குளிர் பிரதேசங்கள் என்று கருதப்படும், வட துருவத்தை அண்டிய ரஷ்யாவின் சைபீரியாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சமுதாயமே, வெள்ளையின ஆரியரின் மூதாதையராக இருக்க வேண்டும். 10000 வருடங்களுக்கு முன்னர், அந்தப் பிரதேசத்தின் காலநிலை ஓரளவு வெப்பமானதாக இருந்தது. அதனால் அங்கே சனத்தொகையும் அடர்த்தியாக காணப்பட்டது. குறைந்தது 5000 வருடங்களுக்கு முன்னர், அந்தப் பிரதேசத்தின் வெப்பநிலை தாழ்ந்து, குளிர் அதிகரித்தது. அதனால் அங்கு வாழ்வதும் இயலாத காரியமானது. வெப்பமான புதிய வாழிடங்களை தேடி, சைபீரிய மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். அதைத் தான் நாங்கள் "ஆரியப் படையெடுப்பு" என்று படித்திருக்கிறோம். 

ஆரம்பத்தில், "ஆரியரின் வருகை" குறித்து எந்த நாட்டு சரித்திர ஆவணங்களிலும் குறிப்பிடப் படவில்லை. அதற்கு பின்வரும் காரணங்களை குறிப்பிடலாம்: 
1. அன்று வாழ்ந்த மனிதர்கள் யாரும், வெள்ளை-கருப்பு வித்தியாசம் பார்க்கவில்லை. ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் பின்னர் தான், தோல் நிறத்தை வைத்து சரித்திரத்தை ஆராயும் வழக்கம் தோன்றியது.
2. அன்றைய நாகரிக சமுதாயங்கள் எல்லாமே கலப்பின மக்களால் உருவானது தான். பாபிலோனியா மட்டுமல்ல, "திராவிட நாடு" என்று கருதப்பட்ட எலமிய ராஜ்யத்திலும் (ஈரான்), கருப்பர்களும்,வெள்ளையர்களும் கலந்து வாழ்ந்தார்கள். 
3. ஆரியர்கள் பெருந்திரளாக  படையெடுத்து வரவில்லை. இன்று வறிய நாடுகளை சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளை நோக்கி புலம்பெயர்வதைப் போல, வடக்கே இருந்து புலம்பெயர்ந்த வெள்ளையினத்தவர்கள், கறுப்பினத்தவரின் இராச்சியங்களில் குடியேறினார்கள். இன்று வட அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் பணக்கார நாடுகளாக கருதப் படுகின்றன. ஆனால், அன்றிருந்த நிலைமை வேறு. வட ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் மட்டுமே நாகரிக வளர்ச்சி கண்ட பணக்கார நாடுகள் இருந்தன. அதனால், சைபீரியாவில் மாடு மேய்க்கும் நாடோடி சமூகமாக வாழ்ந்த வெள்ளையினத்தவர்கள், நாகரீகமடைந்த மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் சென்று குடியேறியதில் வியப்பில்லை. பொருளாதார வசதிகளை பெருக்கிக் கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. யாரும் நாடு பிடித்து ஆள நினைக்கவில்லை. 

இன்றைய மொங்கோலியா, சீனா (உள்ளக மொங்கோலியா மாநிலம்) ஆகிய நாடுகளை இணைக்கும் எல்லையில் கோபி பாலைவனம் இருக்கின்றது. சஹாரா பாலைவனம் போன்றல்லாமல், மணல் மேடுகளையும் கட்டாந் தரைகளையும் கொண்டது. கோடை காலத்தில் அதி உச்சத்தில் இருக்கும் வெப்பநிலை (+40° C), குளிர் காலத்தில் தாழ்ந்து விடும் (-40° C).  அங்கே பனிமழை பொழியும். பொதுவாக மனிதர்கள் வாழ முடியாத இடமாக இருந்தாலும், ஒரு காலத்தில் அது பச்சைப் பசேல் என்று வளம் கொழிக்கும் பூமியாக இருந்தது. குறைந்தது 10000 வருடங்களுக்கு முன்னர், மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. கோபி பாலைவனத்தில், ஒரு காலத்தில் பல நகரங்கள் இருந்திருக்கலாம். அவை பின்னர் மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கலாம். மொங்கோலிய நாடோடிக் குழுக்கள், அப்படியான பாழடைந்த நகரங்கள் இருக்கும் இடங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதைப் பற்றி யாரும் வெளியே சொல்வதில்லை. 

ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் மத்திய ஆசியாவில் மறைந்த மனித நாகரீகங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சிகளை செய்துள்ளனர். அவர்களிடமும் அது பற்றிய தகவல்கள் கிடைக்கலாம். ஆனால், அவை எல்லாம் ரஷ்ய மொழியில் இருக்கின்றன. இதுவரையில் எதுவும் மொழிபெயர்க்கப் படவில்லை. கோபி பாலைவனத்திற்கு மேலாக பறந்த ரஷ்ய விமானிகளும், விசித்திரமான நில அமைப்புகளை கண்டதாக தெரிவித்துள்ளனர். இன்று தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில், வீட்டில் இருந்த படியே "கூகுள் ஏர்த்" செய்மதிப் படங்களை பார்த்தவர்களும் அவற்றைக் கண்டுள்ளனர். (Lost cities? Bizarre structures spotted in China's Gobi desert by Google Map, http://www.whatsonningbo.com/news-6101-lost-cities-bizarre-structures-spotted-in-china-s-gobi-desert-by-google-map.html) ஆகவே, அந்தப் பிரதேசம் பாலவனமாவதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள், காலநிலை மாற்றம் காரணமாக தெற்கு, அல்லது மேற்குத் திசை நோக்கி புலம்பெயர்ந்திருக்கலாம். 

சீனர்கள் போல தோற்றம் கொண்ட துருக்கி மொழி பேசும் இனங்கள் மட்டுமே, மத்திய ஆசியாவில் பூர்வீகத்தை கொண்டதாக, பல்லாண்டுகளாக நம்பப்பட்டது. ஆனால், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய வெள்ளையர் போன்ற தோற்றமளிக்கும் இனங்கள் பல அங்கே வாழ்ந்துள்ளன. சீனாவின் உய்குர் மாநிலத்தில் வாழ்ந்த தொக்காரியன் இனம், மற்றும் சீனாவின் மேற்கு எல்லையில் இருந்த சொக்டியா நாட்டு மக்களை உதாரணமாக குறிப்பிடலாம். இவை தவிர வேறு பல வெள்ளை இனங்களும் வாழ்ந்துள்ளன. ஆனால், தொச்சாரியன், சொக்டியா ஆகிய நாகரீகங்கள் பற்றிய   வரலாற்று ஆவணங்கள் பல அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை எல்லாம் வெள்ளை இன மக்களின் நாகரீகங்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. 

இப்போது அந்த இனங்கள் எங்கே? ஒரு பகுதியினர், இன்றைய துருக்கி மொழி பேசும் உய்குர் மக்களுடன் கலந்திருக்கலாம். இன்னொரு பிரிவினர், இன்றைய தஜிக்கிஸ்தான் தேசத்திலும், வட ஆப்கானிஸ்தானிலும் தாஜிக் மொழி பேசும் மக்களாக மாறி இருக்கலாம். தாஜிக் இன மக்களை, அயலில் வாழும் பல்வேறு துருக்கி மொழிகளை பேசும் மக்களிடம் இருந்து இலகுவாக வித்தியாசம் காண முடியும். மேலும் அவர்கள் பேசும் மொழி கூட முழுக்க முழுக்க வித்தியாசமானது. தாஜிக் என்பது பார்சி என்ற ஈரானிய மொழிக்கு நெருக்கமானது. தாஜிக், பார்சி, பஷ்ட்டூன், சமஸ்கிருதம், ஹிந்தி, உருது ஆகிய மொழிகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்ட மொழிகள். ஆகவே இவர்களின் பூர்வீகமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

ரோமர்களும், கிரேக்கர்களும் தமக்கு சவாலாக விளங்கிய "சீத்தியர்கள்" (Scythian) என்ற போர்வெறி கொண்ட இனம் குறித்து எழுதி வைத்துள்ளனர். சீத்திய வம்சாவளியினர் பற்றிய எந்த தகவலும் பிந்திய வரலாற்றில் கிடைக்கவில்லை. அவர்கள் இன்றைய உக்ரேனியர்களின் மூதாதையராக இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. கிரேக்கர்கள் தான் அவர்களை சீத்தியர்கள் என்று அழைத்தார்கள். சீன நாட்டு சரித்திரக் குறிப்புகளில் அந்த இனத்தின் பெயர் "சாய்". இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஒரு காலத்தில் வாழ்ந்த "சாகா" இனத்தவரும், சீத்தியரும் ஒருவரே என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மை இனமான பட்டாணியர்கள் பேசும்  பஷ்டூன் மொழியில் சாகா என்ற சொல், இரத்த உறவுகளை குறிக்கும். ஆகையினால், அவர்களின் முன்னோர்கள் சாகா அல்லது சீத்தியராக இருக்க வாய்ப்புண்டு.(Indo-Scythians, http://en.wikipedia.org/wiki/Indo-Scythians) அந்த இனத்தவர்கள் இந்தியாவிலும் குடியேறி இருக்கலாம். சீத்தியர்கள், சம்ஸ்கிருத மொழி பேசிய வட இந்திய பிராமணர்களின் மூதாதையராக இருக்கலாம். அதனை உறுதிப்படுத்த நிறைய சான்றுகள் உள்ளன. தமிழில் நாம் பாவிக்கும் வடமொழிச் சொற்களான,  "சகோதரர்", "சகா" என்பன, சாகா இனத்தின் பூர்வீகத்தை சுட்டி நிற்கின்றது. (Scythians, http://en.wikipedia.org/wiki/Scythians) இதைவிட இந்து மத கலாச்சாரமாக அறியப்பட்ட, கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் கூட, சீத்திய (சாகா) இன மக்களுக்குரியது.(Chandragupta Maurya, By: Purushottam Lal Bhargava இந்திய உப கண்டத்தில் ஒருபோதும் இருந்திராத, இது போன்ற வழக்கங்களை, மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளையின மக்கள் புகுத்தினார்கள். 

நாங்கள் "இந்து மதம்"  என்ற பெயரில் வெள்ளையின குடியேறிகளின் பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றோம். "இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்று நான் முன்பொரு தடவை எழுதிய கட்டுரைகளுக்கு பல காரசாரமான எதிர்வினைகள் வந்திருந்தன. அவர்கள் கேட்க விரும்புகிறார்களோ இல்லையோ, இந்துக்களின் பூர்வீகம் இந்தியா அல்ல என்பது மட்டும் உறுதியானது. அப்படியானால், ஆரியர்கள் யார்? ஆரியர்கள் என்பது தனித்துவமான வெள்ளைநிற மேனியைக் கொண்ட இனத்தவரைக் குறிக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. அது, 19 ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் காலனிப் படுத்திய ஐரோப்பிய நிறவெறியர்களின் புனைவு. இன்று இந்திய உபகண்டத்தை சேர்ந்த, நாகரீகமடைந்த மொழிகளை பேசும் இனங்கள் எல்லாம் ஆரியமயமாக்கப் பட்டவர்கள். பலருக்கு கேட்க கசப்பாக இருந்தாலும், தமிழர்களும், சிங்களவர்களும் ஆரியமயமாக்கப் பட்ட இனங்கள் தான். 

எங்களது மொழி, மதம், கலாச்சாரம் எல்லாவற்றிலும் ஆரியம் கலந்திருக்கிறது. நாங்கள் எல்லோரும் கலப்பினம் தான் என்பதை, எம் மத்தியில் எத்தனையோ பேர், வெள்ளையாகவும், கருப்பாகவும் தோன்றுவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். "மத்திய ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆரியர்களில் ஒரு பகுதியினர் கிழக்குத் திசை  நோக்கி சென்று,  இந்தியாவில் குடியேறினார்கள். இன்னொரு பகுதினர் மேற்குத் திசை  நோக்கி சென்று ஐரோப்பாவில் குடியேறினார்கள்," என்று ஆரியக் கோட்பாட்டை ஆதரிக்கும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  அப்படியானால், எதற்காக ஐரோப்பாவில் குடியேறியவர்கள்,"ஆரியர்" என்ற சொல்லைப் பாவிக்கவில்லை? இதற்கான விடை மிக எளிது. உண்மையில் வரலாற்றில் ஆரிய ராஜ்ஜியம் என்று அழைக்கப் பட்ட தேசம் ஒன்று இருந்தது. ஈரானியரின் வேத நூலான அவெஸ்தாவில் "அர்யானம் டக்யுனம்"  என்றும், இந்துக்களின் ரிக் வேதத்தில் "ஆரிய வர்த்தா" என்றும், ஆரிய நாட்டின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.  அது இந்தியாவின் மேற்கு எல்லையோரம், இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி இருந்தது. பல இந்து மத புராணக் கதைகள் அங்கே தான் உற்பத்தியாகின. காலப்போக்கில் ஆரிய ராஜ்ஜியம் அழிந்து விட்டாலும், அந்நாட்டு மக்கள் இந்தியாவில் குடியேறி இருந்தனர். தமது மத நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் விடாமல் பின்பற்றி வந்தனர். இதற்குப் பிறகு நடந்தவை எல்லாம், இந்திய சரித்திரத்தில் பதியப் பட்டுள்ளன.

(தொடரும்)





  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress


2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

/

Ramesh Murugan

unread,
Feb 2, 2013, 5:40:36 AM2/2/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 17



(பதினேழாம் பாகம்)


வெள்ளையின மக்களின் பூர்வீகம் என்ன? அவர்கள் தான் ஆரியர்களா? இது போன்ற "இனவாத அறிவியலை" நான் ஆராயவில்லை. மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய வரலாற்றுக் காலகட்டத்திலே இந்தியா நோக்கிய வெள்ளையின குடிப்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான வரலாற்று, கலாச்சார சான்றுகளை மட்டுமே ஆராய்கின்றேன். பிரதேச மேலாதிக்கத்திற்காக, இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காக அன்றும், இன்றும் பல போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தப் போர்கள் எல்லாமே, கருப்பினத்திற்கும், வெள்ளை இனத்திற்கும் இடையிலான இன ஆதிக்க போட்டியாக இருந்ததில்லை. கருப்பு நிற இனங்களும், வெள்ளை நிற இனங்களும் தமக்குள்ளேயே போர் புரிந்த கதைகள் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கின்றன. அதே நேரம், சில நாகரீகங்கள் கருப்பரும், வெள்ளையரும் கலந்து உருவாகி இருந்தன. இது ஒரு முக்கியமான விடயம் ஆகும். 

உலகில் எந்தவொரு இனமும், இன்னொரு இனத்துடன் கலக்காமல் நாகரீகம் அடைந்ததாக சரித்திரமே கிடையாது. அப்படி இனக்கலப்பு செய்யாமல், இனத் தூய்மை பேணிய இனங்கள் எல்லாம் ஒன்றில் அழிந்து விட்டன, அல்லது காட்டுவாசிகளாக வாழ்கின்றன. உதாரணத்திற்கு, அவுஸ்திரேலியாவில் தாஸ்மானியா தீவில் வாழ்ந்த இனம், தனிமைப் படுத்தப் பட்ட புவியியல் அமைப்பு காரணமாக, உலகில் வேறெந்த இனத்துடனும் தொடர்பற்று வாழ்ந்து வந்தது. அதனால் அவர்கள் பல தொழில்நுட்ப நிபுணத்துவங்களை  மறந்து விட்டார்கள். புதிய கருவிகளை உருவாக்கவோ, அல்லது வள்ளம் கட்டவோ அவர்களால் முடியவில்லை. இதன் விளைவாக, 19 ம் நூற்றாண்டில் குடியேறிய ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் அந்த மக்களை இலகுவாக இனவழிப்பு செய்ய முடிந்தது. 

நமது காலத்திற்கு முன் (கி.மு.) பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், சைபீரியா, வட ஐரோப்பிய பகுதிகளில் காலநிலை மாறியது. உறைநிலையும், பனி மூடிய நிலங்களும், இரத்தத்தை உறைய வைக்கும் குளிரும், மனிதர்கள் வாழ முடியாத சூழலை தோற்றுவித்தது.  அங்கு வாழ்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் நாடோடி மக்களாக இருந்ததால், குதிரை வளர்ப்பு அவர்கள் வாழ்வில் முக்கிய இடம்பிடித்தது. சமஸ்கிருதத்தில் குதிரைக்கு அஸ்வம் என்று பெயர். லிதுவேனியாவிலும் குதிரைக்கு அதே பெயர் என்பது, இவ்விரு மொழி பேசும் மக்களுக்கு இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது அல்லவா?  மாட்டைக் குறிக்க, சமஸ்கிருதத்தில் "கோ", ஜெர்மன் மொழியில் "கூ" (Kuh). இவ்வாறு நிறைய உதாரணங்களை காட்டலாம். மேலும், இன்றைக்கும் மத்திய ஆசிய துருக்கி இன மக்கள், தமது கூடார வீடுகளை இடத்திற்கு இடம் நகர்த்துவது வழக்கம். அங்கே நீங்கள் ஒரு வீட்டின் முகவரியை தேடிச் சென்று, அந்த இடத்தில் வீடு இருந்த தடயமே இல்லை என்றால் ஆச்சரியப் படாதீர்கள். 

அது மட்டுமல்ல, பெண்களின் கற்பு நெறி "இந்திய-இந்து" சமூகத்தில் எந்தளவு முக்கியமாக கருதப்பட்டதோ, பண்டைய கிரேக்க சமுதாயத்தில் அதேயளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. இன்று துருக்கி மொழி பேசும் மத்திய ஆசிய நாடுகளில், பெண்களின் கற்பு நெறி, "இஸ்லாமிய நெறி" என்ற போர்வையின் கீழ் பின்பற்றப் பட்டு வருகின்றது. இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன என்றால், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், தோற்றத்தில் வேறு விதமாக இருந்தாலும், வெவ்வேறு மொழிகளை பேசினாலும்; இவர்கள் அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், அல்லது ஒரே மரபை பின்பற்றி வருகின்றனர். இன்றைக்கும் நம் மத்தியில் வாழும் எத்தனையோ பேர், "கலாச்சாரம், பாரம்பரியம்," என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையா? 

ஈரானுக்கு மேலே இருக்கும், ஆர்மேனியா என்ற சிறிய தேசத்தை "ஐரோப்பிய நாடு" என்று வரையறுக்கிறார்கள். அது ஒரு காலத்தில்,  ஈரானிய சாம்ராஜ்யத்திற்குட்பட்ட  ஒரு மாகாணமாக இருந்தது. இன்று எல்லோரும், ஆர்மேனியாவை ஐரோப்பா என்றும், ஈரானை ஆசியா என்றும் கூறுகிறார்கள். 19 ம் நூற்றாண்டின் இறுதியில், ஆர்மேனிய தேசத்தின் அரைவாசிப் பகுதியை துருக்கி விழுங்கி விட்டது. ஆனால், துருக்கி ஒரு ஆசிய நாடு என்று சொல்கிறார்கள். இந்த முரண்நகை எப்படி தோன்றியது? எந்த நாடு ஐரோப்பாவுக்குள் அடங்குகின்றது? எந்த நாடு ஆசியாவுக்குள் அடங்குகின்றது? இதிலே நிறைய குழப்பம் இருப்பது தெரிகின்றது அல்லவா? ஏனென்றால், இவை எல்லாம் தற்கால அரசியல்வாதிளால் ஏற்படுத்தப் பட்ட பிரிவுகள். ஒரு காலத்தில் ஆர்மேனியர்களின் சாம்ராஜ்யம் பாலஸ்தீனம் வரையில் விரிந்திருந்தது. அதை நிரூபிக்கும் வகையில், இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் ஆர்மேனியர்களின் பகுதி ஒன்றுண்டு.  மேலும், லெபனான், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிலும் ஆர்மேனியர்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர்.இன்றைக்கும், அந்த நாடுகளில் எல்லாம், ஆர்மேனியருகென  தனியான தேவாலயங்கள் உள்ளன.

சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆர்மேனியர் என்ற வெள்ளை இனம் பாபிலோனியர்களின் சாம்ராஜ்யத்திற்குள் பல சிறுபான்மை இனங்களுள் ஒன்றாக வாழ்ந்தனர். அனேகமாக பாபிலோனிய சாம்ராஜ்யம் பலவீனமடைந்து வீழ்ந்த காலத்தில், வடக்கே ஆர்மேனியர்களின் அரசு தோன்றியது. அப்போது தோன்றிய மித்தானி (இது பற்றி கீழே விரிவாக எழுதப் பட்டுள்ளது.) என்ற ராஜ்யத்தில் ஆதிக்கம் செலுத்திய வெள்ளை இனம், ஆர்மேனியரின்  மூதாதையராக இருக்கலாம். அன்றைய காலத்தில், தெற்கில் இருந்த கறுப்பர்களின் நாடான எகிப்து, உலகில் பலமான வல்லரசாக திகழ்ந்தது.மித்தானியர்கள், பிராந்திய மேலாதிக்கத்திற்காக எகிப்தியர்களுடன் போரிட்டு வந்தாலும், பல தடவை அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேணி வந்தனர். எகிப்திய அரச பரம்பரையினர், ஆர்மேனிய- மித்தானி அரச வம்சத்து மணமக்களை மணந்து கொண்டனர். எகிப்தின் பிரபலமான பாரோ மன்னர் அகநாதன், மற்றும் இராணி நெபெர்தித்தி ஆகியோர் ஆர்மேனிய- ஆப்பிரிக்க கலப்பினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 

அரச குடும்பங்களின் மண உறவுகள் என்பதால், அந்தத் தகவல்கள் வரலாற்றில் பதியப் பட்டுள்ளன. அப்படியானால், சாதாரண பொது மக்களும் ஒன்று கலந்திருக்க வாய்ப்புண்டல்லவா? நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, இனக்கலப்பு காரணமாக எகிப்திய, ஆர்மேனிய நாகரீகங்கள் வளர்ந்தனவே ஒழிய, யாருக்கும் எந்த தீங்கும் நேரவில்லை. நான் சொல்வது சரியானால், எதற்காக ஐரோப்பாவில் எங்கேயும் கறுப்பின மக்களை காணவில்லை என்று யாராவது எதிர்க்கேள்வி கேட்கலாம். அன்றைய காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று ஆயிரக்கணக்கான தெற்காசிய மக்கள், அமெரிக்காவிலோ,மேற்கு ஐரோப்பாவிலோ வேலை வாய்ப்பு, வசதியை பெருக்கிக் கொள்வதற்காக  குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக, அமெரிக்க, மேற்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசிய நாடுகளில் குடியேறியோர் எத்தனை பேர்? அப்படி நடக்காததற்கு என்ன காரணம்? பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் வாழும் மக்கள், வளர்ச்சி அடைந்த பொருளாதார மையங்களை நோக்கி இடம்பெயர்வது புராதன நாகரீகங்களின் காலத்திலும் நடந்தது. 

முதலில் மத்திய கிழக்கில் குடியேறிய வெள்ளையின மக்கள், வட ஆப்பிரிக்காவில் மொரோக்கோ வரை சென்றனர். அவர்கள் எங்கெங்கு குடியேறினார்களோ, அங்கு பேசப்பட்ட மொழிகளையும், கலாச்சாரங்களையும் பின்பற்றினார்கள். இன்று மேற்கத்திய நாடுகளில், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், சொந்த இனத்தின் பிறப்புவீதம் குறைவாக இருப்பதாலும், பொருளாதார அபிவிருத்திக்காக மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். அது போன்ற சூழ்நிலை, அன்றிருந்த எகிப்திய, பாபிலோனிய நாகரீகங்களிலும் ஏற்பட்டிருக்கலாம். "பிலிஸ்தீன்" என்ற கிரேக்க பழங்குடி இன மக்கள் இஸ்ரேலில் குடியேறி, நாகரிக சமுதாயமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. (பிலிஸ்தீன் என்ற சொல்லில் இருந்து தான் பாலஸ்தீனம் பிறந்தது.) வட ஆப்பிரிக்காவில் வாழும், பெர்பர் மக்களும் வெள்ளையினத்தவர்கள் ஆவர். 15 ம் நூற்றாண்டு வரையில் கூட, வெள்ளையின பெர்பர் மக்கள் செறிவாக வாழ்ந்த நகரங்கள், கானா சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளன.

இன்று துருக்கி என்று அறியப்படும் நாட்டின் மத்தியில், ஹித்தித் நாகரீகம் தோன்றியிருந்தது. (Hittites, http://en.wikipedia.org/wiki/History_of_the_Hittites) ஐரோப்பிய கண்டத்தில் முன்தோன்றிய வெள்ளையின நாகரீகம், அல்லது முழுவதும் வெள்ளையின மக்களைக் கொண்ட  இராஜ்ஜியம், அதுவாகத் தான் இருக்க வேண்டும். ஹித்தித் இன மக்களின் அரசு போர்வெறி கொண்டது. அதனால், தனது பிரஜைகளை சிறந்த இராணுவவீரர்களாக மாற்றுவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டது. (கிரேக்கத்தில் இருந்த இன்னொரு ஆதிகால ஐரோப்பிய நாகரீகமான ஸ்பார்ட்டா வும், ஒரு இராணுவ சமுதாயமாகவே திகழ்ந்தது.)  ஹித்தித் தலைநகரமான "ஹதுசா" வில், கடுமையான இராணுவக் கட்டுப்பாடுகள், எவ்வாறு அந்நாட்டு பிரஜைகளின் அன்றாட வாழ்வை பாதித்தன, என்பன போன்ற  விபரங்கள் களிமண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அழிந்து போன ஹித்தித் தலைநகர இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டன. 

ஹித்தித் நாட்டவர்கள், சுமேரியர்கள், அல்லது பாபிலோனியரிடம் இருந்து எழுத்து வடிவங்களை கற்றுக் கொண்டனர். அதாவது இன்று ஐரோப்பிய மொழிகள், லத்தீன் எழுத்துக்களில் எழுதப் படுவதைப் போல, அன்று பல இனங்கள் சுமேரியரின் எழுத்து வடிவங்களை கடன்வாங்கி பயன்படுத்தினார்கள். சுமேரிய மொழி தெரிந்த ஒருவர் அதனை வாசிக்கலாம், ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது. ஹித்தித் மக்களுக்கு அருகாமையில், ஹூரியன் (அல்லது கூரியன்) என்ற இன்னொரு வெள்ளையின மக்கள் வாழ்ந்தனர். ஹூரியன் நாகரீகமும் அந்தப் பிராந்தியத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியது.

குர்து மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும், இன்றைய ஈராக்கின் வட பகுதியில், துருக்கி எல்லையோரம் "இசுவா" என்றொரு நாடு இருந்தது. (Isuwa, http://en.wikipedia.org/wiki/Isuwa) இசுவா என்றால் "குதிரைகளின் நாடு" என்று அர்த்தம். சம்ஸ்கிருத சொல்லான அஸ்வம் என்ற குதிரையை குறிக்கும் சொல்லின் மூலமும், இசுவா நாடாக இருக்கலாம். கூரியன், ஹித்தித் இன மக்கள், குதிரைகளை போருக்கு பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். அந்தத் திறமை, பிற்கால உலக சரித்திரத்தை மாற்றி அமைத்தது. கூரியன், ஹித்தித் மக்களின் வரலாற்றை பார்க்கும் பொழுது, "வேத கால ஆரியர்கள் குதிரைகளில் படையெடுத்து வந்த கதையை" பெருமளவு ஒத்துள்ளது.  மகாபாரதக் கதையில் குறிப்பிடப் படுவது போன்ற குதிரை வண்டிகளையும், போருக்கு பயன்படுத்தி வந்தனர்.

டேவிட் மன்னனின் ராஜ்ஜியம் தோன்றுவதற்கு முன்னர், ஜெருசலேமில் "யெபுசீத், அல்லது ஹொரித்" என்ற இன மக்கள் வாழ்ந்ததாக, யூதர்களின் பைபிளில் (பழைய ஏற்பாடு) எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின் டேவிட் மன்னனும், இஸ்ரேலின் பிரஜைகளும் கறுப்பர்களாக இருந்திருக்க வேண்டும். பெரும்பான்மை கறுப்பர்களைக் கொண்ட மத்திய கிழக்கில், சிறுபான்மை வெள்ளையின மக்கள் குடியேறி வாழ்ந்தார்கள் என்ற எனது கூற்றை, விவிலிய நூல் நிரூபிக்கின்றது. இன்றைய நவீன துருக்கி நாட்டில், "ஹூரியத்" என்றால் குடியரசு என்று அர்த்தமாகும். அந்தச் சொல்லின் மூலம், ஹூரியன் இன மக்கள் என்பதில் சந்தேகமில்லை. ஹூரியன் இன மக்கள், ஒரு காலத்தில் சீரும் சிறப்புடனும் விளங்கிய "மித்தானி" என்ற நாட்டின் நாகரீகத்தை உருவாக்கி இருக்கலாம்.(Mitanni, http://en.wikipedia.org/wiki/Mitanni

மித்தானி ராஜ்யத்தின் உத்தியோகபூர்வ மொழியாக சமஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும். மேலும், அந்நாட்டு மக்கள் இந்திரன், மித்ரா, வர்ண பகவான், போன்ற பல "இந்துக்" கடவுளரை வழிபட்டு வந்துள்ளனர். ஆனால், மித்தானி நாட்டின் பிரஜைகள் அனைவரும் வெள்ளையின மக்கள் என்று உறுதியாக கூற முடியாது. சில ஐரோப்பிய மையவாத சரித்திர ஆசிரியர்கள், வெறும் பத்து அல்லது இருபது சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு, அந்த முடிவுக்கு வருகின்றனர். ஏனெனில், அந்த சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மூலத்தை கொண்டிருக்கின்றன. மித்தானி ராஜ்யத்தின் சனத்தொகை வெள்ளையர், கறுப்பர், அல்லது இரண்டும் கலந்த கலப்பினத்தவரைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், ஆட்சியாளர்களான மேட்டுக்குடி சமூகம், முழுக்க முழுக்க வெள்ளையராக இருந்திருக்கலாம். அதுவே வர்ணாச்சிரம நால்வர்ண சாதி அமைப்பின் தோற்றுவாயாக இருக்க வேண்டும். பண்டைய இந்தியாவில் மட்டுமல்லாது ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் நால்வர்ண சாதியமைப்பு இருந்துள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

கூரியன், ஹூரியன் என்ற பல பெயர்களால் அழைக்கப் பட்ட வெள்ளையின மக்களின் பூர்வீகம் எது? அவர்களின் ஹூரிய மொழி, இன்றைய குர்து மொழியுடனும், ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் வாழும், செச்செனியர் போன்ற கொகேசிய இனங்களின் மொழியையும் ஒத்துள்ளது. (இன்றைக்கும் உத்தியோகபூர்வ படிவங்களில், வெள்ளையின மக்களை "கொகேசியன்" என்று வகைப் படுத்துகின்றனர்.) அவர்களுக்கு ஹூரியன் என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது? பல இன மக்களின் பெயர்கள், காரணப் பெயராக இருந்து புழக்கத்தில் வந்தவை தான். ஆகவே, ஹூரிய மக்களின் பெயரும் ஏதாவது காரணத்தை அடியொற்றி வந்திருக்கலாம். அந்தப் பிரதேசத்தில் இன்றைக்கும் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழியான பார்சி (ஈரான்) மொழியில், "ஹரா" என்றால் மலை என்று அர்த்தம். அதே மொழிக் குடும்பத்தை சேர்ந்த சமஸ்கிருதத்தில், ஹரா அல்லது ஹரி  (ஹிரான்) என்றால் தங்கம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. 

துருக்கியில் குடியேறிய, ஐரோப்பியரின் மூதாதையரான, ஹூரிய மக்களின் பூர்வீகம் பற்றிய கதைகளில், அவர்கள் "ஹரியின் மக்கள்" என்று குறிப்பிடப் படுகின்றனர்.  ஹூரியர்களின் முன்னோர்கள், "வடக்குத் திசையில் உள்ள தங்க மலையில் இருந்து" வந்து குடியேறியதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. வேதங்களில் சில இடங்களில், இந்திரன் தங்கமலையை காக்கும் கடவுளாக குறிப்பிடப் படுகின்றார். பிற்காலத்தில் மகாத்மா காந்தி கண்டுபிடித்த "ஹரிஜன்" என்ற சொற்பதம், வேத கால ஆரியர்களின் மூலத்தைக் குறித்தது என்பது ஒரு முரண்நகை.  இந்த "தங்கமலை இரகசியம்" வெறும் புராணக் கட்டுக்கதை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 

ஹூரிய புராணக் கதைகளை ஆழமாக ஆராய்ந்தால், அவர்களின் பூர்வீகம் தெளிவாகத் தெரிகின்றது. அந்த இன மக்கள் உயரமான மலைகளை கடந்து வந்திருக்கிறார்கள். அந்த மலைகள், தெற்கு ரஷ்யாவில் உள்ள யூரல் மலைகளாக இருக்கலாம். அப்படியானால், அந்த மக்களின் தாயகம் அதற்குமப்பால் வடக்குத் திசையில் இருக்க வேண்டும். தமது முன்னோரின் பூமியில், நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் கிடைக்கும் என்பதால், அதனை தங்கம் என்ற அடைமொழியில் அழைத்து வந்தனர். வட துருவத்தை அண்டிய, ரஷ்யாவின் வட பகுதியில், கோடை காலத்தில் சூரியன் மறைவதில்லை. பகல் போன்று, இரவிலும், 24 மணிநேரமும் சூரிய வெளிச்சம் கிடைக்கும். ஆகவே, ஹூரிய இன மக்கள், ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது இத்தால் உறுதியாகின்றது.  மேலும், "சூரியன்", "ஹரி " போன்ற, எமக்கு நன்கு தெரிந்த சம்ஸ்கிருத சொற்களுக்கும், ஹூரியன் என்ற ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லுக்கும் இடையிலான  ஒற்றுமையை கவனிக்கவும். 

(தொடரும்)  

************************************

  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber


2013/1/23 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்ஸ்,
இவரோட தொடரை படிச்சிக்கிட்டு வர்றேன். ஆரம்பம் கொஞ்சம் போரடிச்சாலும் போகப் போக சுவாரஸ்யமா இருக்குது. ஒப்புக்கு கதையெழுதாமல், நிறைய புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதுறார். நம்ம குழும மக்களும் படிக்கட்டும்னு இங்கே பகிர்ந்துக்குறேன்.

நன்றி: திரு. கலையரசன் (http://kalaiy.blogspot.com)

//

வேந்தன் அரசு

unread,
Feb 2, 2013, 10:04:06 AM2/2/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன்


30 ஜனவரி, 2013 7:16 AM அன்று, Ramesh Murugan <rames...@gmail.com> எழுதியது:

. அரபு மொழியில் "சபா" (Saba). சபா என்ற சொல் மருவி, தமிழில் "சைவா" என்று மாறியிருக்குமா?  "B" உச்சரிப்பு கொண்ட சொற்கள், தமிழில் "வ" என்று மாறுவது பற்றி, ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.   



தமிழில் சை சொல் முதல் வராது என்பது இலக்கணம்’

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Ramesh Murugan

unread,
Feb 6, 2013, 3:22:21 AM2/6/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 18

(பதினெட்டாம் பாகம்)

"பெலோப்பெனோஸ் நாட்டிற்கு எகிப்தியர்கள் எவ்வாறு வந்தார்கள்? இந்த கிரேக்கப் பகுதியில் எவ்வாறு அரசர்களானார்கள்?" - ஹெரோடொதுஸ் (வரலாறு, VI.55) 

 ஐரோப்பியர்கள், தமது நாகரீகம் பிறந்த இடம் என்று பெருமைப் படும், கிரேக்கத்தில் வாழ்ந்த ஹெரோடொதுஸ் என்பவர் தான், முதன் முறையாக கிரேக்கர்களின் வரலாற்றை விரிவாக எழுதி வைத்தார். இன்றைக்கு ஐரோப்பிய நாகரீகம் பற்றி ஆராயும் சரித்திர ஆசிரியர்கள், ஹெரோடொதுஸ் எழுதிய குறிப்புகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் எழுதியவை எல்லாம் உண்மைகள் அல்ல. பல நாடுகளை, மக்களை பற்றிய தவறான தகவல்களும் அவரது எழுத்துக்களில் காணப்படுகின்றன. அனேகமாக, பிற இனங்களின் நாகரிக முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட ஒருவரின் கருத்துக்களாகவே அவை தெரிகின்றன. ஆயினும், பண்டைய கால ஐரோப்பா பற்றி மட்டுமல்ல, மத்திய கிழக்கு, எகிப்து போன்ற நாடுகளை பற்றி அவரது குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில், கிரேக்கத்தின் பெலோப்போனோஸ் பகுதியில், எகிப்தியர்கள் (கறுப்பினத்தவர்) வாழ்ந்து வந்ததை ஹெரோடொதுஸ் எழுதிய சரித்திரத்தில் இருந்து தெரிகின்றது. நான் ஒரு சுற்றுலா பயணியாக கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்த பொழுது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே, சுருளான தலைமுடியுடன் ஆப்பிரிக்க கறுப்பின தோற்றத்தை கொண்ட ஒரு பெண்ணின் சிலை ஒன்று இருந்தது. அதைத் தவிர, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில், கறுப்பின மக்கள் போன்று தோற்றம் கொண்டவர்களின் ஓவியங்கள் காணப்பட்டன. ஆகவே, ஒரு காலத்தில் இன்றைய கிரேக்கப் பகுதிகளில் கறுப்பின மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.

இன்றைய எகிப்துக்கும், கிரீஸுக்கும் நடுவில் கிரேட்டா  (Creta) தீவு அமைந்துள்ளது.  அந்த தீவை ஆண்ட மீனோ அரச வம்சத்தினர், அந்தப் பிராந்தியத்தில் வல்லமை மிக்க கடற்படையை கொண்டிருந்தனர். கிரேக்க நாடு அவர்களுக்கு அடங்கி திறை செலுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் இயற்கைப் பேரழிவு, கிரேக்கப் படையெடுப்புகள் காரணமாக, கிரேட்டாவின் மீனோ நாகரீகம் அழிந்து விட்டது. அதன் பிறகு தான் கிரேக்க நாகரீகம் ஆரம்பமாகியது. இதிலே கவனிக்கப் பட வேண்டிய விடயம், கிரேட்டா நாட்டவர்கள் கிரேக்க இனத்தவர் அல்ல. அவர்கள் தனியான மொழியை பேசினார்கள். எகிப்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். ஆகவே அவர்கள் பண்டைய எகிப்தில் இருந்து குடியேறிய இனமாக இருக்கலாம். கிரேட்டா அரச வம்சமான மீனோ என்ற பெயர், தமிழ்ச் சொல்லான மீனில் இருந்து வந்திருக்கலாம் என, பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் ஒரு நூலில் எழுதியிருக்கிறார். அதனை நிரூபிப்பது போல, அண்மையில் ஆராயப்பட்ட கல்வெட்டு ஒன்றில், "மீனு ரொஜா" (மீன் ராஜா) என்று மன்னரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது.

ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், வட இந்தியாவிலும், சீனாவிலும், வெள்ளையினத்தவர்கள் பெருமளவில் குடியேற ஆரம்பித்த காலம் அதிகமில்லை. எப்படியும், மூவாயிரம் அல்லது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் அந்த குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அனேகமாக, இன்று நடைபெறும் குடிசனப் பரம்பல் போன்று, தனி நபர்களாக, சிறு குழுக்களாக வந்து குடியேறினார்கள். கறுப்பினத்தவரின் நாடுகளில், மன்னர்களுக்கு விசுவாசமான கூலிப் படைகளாக இருந்துள்ளனர். அவ்வாறு இராணுவத்தில் சேவையாற்றிய வெள்ளையின ஆண்கள், உள்ளூர் பெண்களை மணம் முடித்து அங்கேயே தங்கி விட்டனர். உள்ளூர் மக்களின் மொழிகளை பேசக் கற்றுக் கொண்டனர். அந்தக் காலங்களில், இன்றிருப்பதைப் போன்ற இன/மத துவேஷங்கள் இருக்கவில்லை. அந்நியர்களாக இருந்தாலும், குடியேறிய நாட்டின் மொழியை பேசி, அந்நாட்டு மக்களைப் போன்றே வாழ்வதற்கு தடையேதும் இருக்கவில்லை. அதனால் தான், இன்றைக்கு வெள்ளை நிறம் கொண்ட மக்கள், பல்வேறு மொழிகளை பேசுகின்றனர். அரபு மொழி பேசும் நாடுகளில் குடியேறியவர்கள் அரபி பேசினார்கள். சமஸ்கிருதம் பேசும் இந்திய நாடுகளில் குடியேறியவர்கள், சமஸ்கிருதம் (இன்று உருது அல்லது ஹிந்தி) பேசினார்கள்.

வெள்ளையின மக்கள், கறுப்பின அரசர்களின் கூலிப் படைகளாக இருந்ததால், இராணுவ அறிவு கைவரப் பெற்றவர்களாக இருந்தனர். கறுப்பினத்தவரின் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலங்களில், புதிதாக தோன்றிய ராஜ்யங்களில் வெள்ளையின அல்லது கலப்பின மக்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அவர்கள் மத்தியில் இருந்து புதிய அரச வம்சங்கள் தோன்றவாரம்பித்தன. உண்மையில், அவர்களின் தோல் நிறம் மட்டுமே வெள்ளையாக இருந்தது. ஆனால், அவர்களின் மொழியும், கலாச்சாரமும் மாறுபட்டிருந்தது.

உதாரணத்திற்கு, லைபீரியா என்ற நாட்டில் பெருமளவு அமெரிக்க கருப்பர்கள் குடியேறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கும், சுற்றவர உள்ள பிற ஆப்பிரிக்க இனங்களுக்கும் இடையில் தோல் நிறத்தில் மட்டுமே ஒற்றுமையுண்டு. மற்றும்படி, அவர்களது மொழி, கலாச்சாரம், நடையுடை பாவனை யாவும் அமெரிக்கர்களை போன்றிருக்கும். அவ்வாறு தான், பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள், எகிப்தியரிடம் இருந்து நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். அவ்வாறு நாகரீகமடைந்த வெள்ளையர்கள், தமது அயலில் வாழ்ந்த பிற வெள்ளை இனங்களை "காட்டுமிராண்டிகள்" என்று அழைத்தார்கள். வட ஈராக்கில் தோன்றிய மித்தானி என்ற நாட்டை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அங்கு அரச கரும மொழியாக சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழி அல்லது, புராதன இந்திய மொழி கோலோச்சியது. நமக்கு நன்கு அறிமுகமான இந்து மத தெய்வங்கள், புராணக் கதைகள் என்பன, இன்றைய ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கான சாத்தியப்பாடுகளை நாம் விரிவாக ஆராய்வோம்.

விநாயகர் என்ற இந்து தெய்வத்திற்கு, கணபதி, கணேஷ் என்ற பெயர்கள் உண்டு. கணபதி என்றால், இராணுவ தளபதி என்ற பொருள் படும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, வெள்ளையின மக்கள், இராணுவ மயமாக்கப்பட்ட சமுதாயமாகவே வாழ்ந்து வந்தனர். ஸ்பார்ட்டா (தென் கிரேக்கம்), ஹதூசா (மத்திய துருக்கி) போன்ற இடங்களில் தோன்றிய ஆதி கால வெள்ளையின நாகரீகங்கள், முழுக்க முழுக்க இராணுவ அடிப்படையைக் கொண்டிருந்தது. ஆண்கள் சிறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும். அவர்களது வாழ்நாளில் பெரும் பகுதியை இராணுவ முகாம்களில் கழிக்க வேண்டும். அந்த நகர-தேசங்களின் வளங்கள் முழுவதும் இராணுவத்தை பராமரிப்பதிலேயே செலவிடப் பட்டன. அவ்வாறான இராணுவவாத கொள்கை கொண்ட சமுதாயத்தில், "கணபதி" என்ற தெய்வத்தை  வழிபட்டிருக்க கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. 

"கணேஷ்" என்ற பெயரில் ஒரு பண்டைய நகரம் இருந்தது. ( Kanesh, http://en.wikipedia.org/wiki/Kültepe) இன்றைய துருக்கி நாட்டில், Kayseri எனும் நகரத்தில் இருந்து சிறிது தூரத்தில் அது உள்ளது.  கணேஷ் நகரம் பாபிலோனியருடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் வெளிநாடுகளிலும் உணரப் பட்டது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கு வாகனமாக விலங்கினங்கள் இருந்துள்ளன. எலி, மாடு, மயில் போன்ற விலங்கினங்களை வாகனங்களாக கொண்ட இந்து மத கடவுளரை இது நினைவுபடுத்துகின்றது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள், ஹித்தித் அல்லது ஹத்தி இனத்தவர் எனத் தெரிகின்றது. ஏதோ காரணத்தால் கணேஷ் நகரம் கைவிடப் பட்டு, ஹதூசா என்ற புதிய நகரம் உதயமாகியது. அவர்கள் அங்கிருந்த படியே ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள்.

இன்றைய துருக்கி பகுதிகளில் வாழ்ந்த வெள்ளயின ஹித்தித் மக்களுக்கும், இன்றைய ஈராக்கில் வாழ்ந்த அசிரியர்களுக்கும் இடையில் அடிக்கடி போர் மூண்டன. அவை எல்லாம் அரசியல் ஆதிக்கத்திற்கான போர்களே அன்றி, இன மேலாண்மைப் போர்களல்ல. அவர்களுக்கு சவாலாக விளங்கிய அசிரிய பேரரசன் ஒருவனின் பெயர் "நரம் சின்". இந்தப் பெயர், விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன் என்ற மன்னனை நினைவு படுத்துகின்றது அல்லவா? அசிரியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களால் தோற்கடிக்கப் பட்ட நாடுகளில் பல அழிவுகளை உண்டாக்கினார்கள். அதனால், அவர்களால் பாதிக்கப்பட்ட பிற இனங்கள் அசிரியர்களை கொடியவர்களாக கருதியிருக்க வாய்ப்புண்டு. அனேகமாக, இந்து மத புராணங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்படும் "அசுரர்கள்" என்ற சொல் அங்கிருந்து தோன்றி இருக்கலாம். ஏனெனில், அசிரியர்களின் தலைநகரத்தின் பெயர் "அசுரா"! 

அசிரியர்களின் சாம்ராஜ்யத்தில் பல்லின மக்கள் வாழ்ந்தனர். அந்தக் காலத்திலேயே பிரஜைகள் மதித்து நடக்க வேண்டிய சட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்தன என்பது ஒரு சிறப்பம்சம். இருந்தாலும் சில சட்டங்கள் பிற்போக்கானவையாக இருந்தன. உதாரணத்திற்கு, பெண்கள் வெளியே போகும் பொழுது, உடலையும், முகத்தையும் மூடும் பர்தா (அல்லது பூர்க்கா) என்ற ஆடை அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு அது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. விலை மாதுக்கள் மட்டுமே முகத்தை மூடாமல் ஆடை அணிந்திருக்க வேண்டும். (The Code of the Assyrians, http://www.fordham.edu/halsall/ancient/1075assyriancode.asp) இந்த வழக்கம் பிற்காலத்தில், பல இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப் பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, வட இந்தியாவை சேர்ந்த இந்துப் பெண்களும், கிரேக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண்களும், முகத்தை மூடி பர்தா அணிந்து தான் வெளியே சென்றனர்.

கற்பு என்ற ஒழுக்க நெறி கூட, மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த கலாச்சாரம் தான். பெரியாரும், திராவிட இயக்க அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்தனர். நான் முன்பு ஒரு தடவை எழுதியது போல (பார்க்க: கோயிலில் பாலியல் தொழில்) தமிழர்களும் ஒரு காலத்தில் தாய்வழிச் சமுதாயமாக இருந்தனர். மத்திய கிழக்கில் மாறிக் கொண்டு வந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பு, தமிழர் மத்தியிலும் பரவியது. திராவிட கொள்கையாளர்கள், அதனை ஆரியர்கள் புகுத்தினார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் யார் அந்த ஆரியர்கள்? தமது கலாச்சாரம், மொழி என்பனவற்றை அவர்களால் எவ்வாறு எம்மீது திணிக்க முடிந்தது ?

உண்மையில், நாங்கள் தான் அந்த ஆரியர்கள்! அங்கிலேயரின் காலனிய ஆட்சிக் காலத்தில், நாங்கள் ஆங்கில மொழி பேசவும், ஆங்கிலேயரை போன்ற நடை, உடை, பாவனைகளை கற்றுக் கொள்ளவில்லையா? அதே போன்று,  நாங்களாகவே  ஆரியரின் மதத்தை, கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினோம்! அந்தக் கருதுகோளை நிரூபிக்கும் ஆதாரங்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், ஈரானில் இருந்து வந்த வெள்ளை இனத்தவர்கள். அவர்கள் தமது ஈரானிய (ஆரிய) கலாச்சாரத்தை கொண்டு வந்து புகுத்தி இருப்பார்கள். ராஜராஜ சோழன் காலத்தில் சைவ மதத்துடன், ஆரிய மயமாக்கலும் விரைவாக பரவியது.

பண்டைய காலத்து வரலாற்றை தேட வேண்டுமானால், அலெக்சாண்டரின் படையெடுப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம். உலகம் முழுவதும் வென்ற அலெக்சாண்டர் இந்தியாவில் தோற்று திரும்பினான். இந்த வரலாறு ஒரு பாதி மட்டுமே உண்மை. இன்னொரு பாதிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வட-மேற்கு இந்தியாவில் சில பகுதிகளை அலெக்சாண்டரின் படைகள் கைப்பற்றின. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில், உள்ளூர் பெண்களை மணம் முடித்துக் கொண்டு, அலெக்சாண்டரின் கிரேக்க படையினர் தங்கி விட்டார்கள். பிற்காலத்தில் அங்கே பல வெள்ளையின ராஜ்ஜியங்கள் தோன்றின. அவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தமது ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்தார்கள். அவர்கள் மூலம் கிரேக்கர்களின் கலாச்சாரம், இந்தியாவில் பரவி இருக்கலாம் அல்லவா? கிரேக்க கலாச்சாரம் என்றால் என்ன?

கிரேக்கர்களின் புராணக் கதைகளில், "மெடூசா" என்ற அரக்கி பற்றிய கதை பிரபலமானது. தலையில் பாம்புகள் நெளியும், விகாரமான தோற்றம் கொண்ட சூனியக் கிழவி போன்ற மெடூசாவின் கதையை, குழந்தைகளை பயமுறுத்த சொல்லப் படுவதுண்டு. அந்தக் கதையின் படி, மெடூசா ஒரு காலத்தில், கிரேக்க நாட்டின் பேரழகியாக இருந்தவள். அவளை மணம் முடிப்பதற்கு எத்தனையோ ஆண்கள் போட்டி போட்டார்கள். ஏதென்ஸ் நகர தேவதையான அதினாவின் கோயிலுக்கு, மெடூசா வழிபட செல்வது வழக்கம். ஒரு நாள், யாருமற்ற நேரத்தில் அங்கு வந்த பொசெய்டொன், மெடூசாவை கோயிலில் வைத்தே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினான். தனது கோயிலிலேயே இவ்வாறான அக்கிரமம் நடந்ததால், அதினா கோபமுற்றாள். ஆனால், பொசெய்டொன் கிரேக்கர்களின் சமுத்திரக் கடவுள். அதனால் அவனை தண்டிக்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணான மெடூசா மீது பழி போடப்பட்டது. தெய்வ சந்நிதானத்தில் கற்பிழந்த மெடூசா, அந்தக் கணமே விகாரமான வயோதிப மாதுவாக மாற வேண்டுமென சபிக்கப் பட்டாள். 

"சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் நஷ்டம் சேலைக்கு தான்..." என்று பெண்ணின் கற்பை பத்திரமாக பாதுகாக்கக் கோரும், பிற்போக்கான இந்தியக் கலாச்சாரம் உங்கள் மனக்கண்ணில் வரலாம். கிரேக்கர்கள் மத்தியிலும் அதே மாதிரியான கலாச்சாரம் இருந்ததை மெடூசா கதை மூலம் அறிய முடிகின்றது.  ஹோமர் எழுதிய காவியமான "ஒடிசி"யிலும், ஒரு திருமணமான பெண், கணவன் கடல் கடந்து சென்று வருடக் கணக்காக திரும்பி வரா விட்டாலும், சோரம் போகாமல் கற்பெனும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று போதிக்கின்றது. ஹோமர் எழுதிய ஒடிசி எனும் காவியத்தில், பல இடங்கள் இராமாயணத்தை நினைவூட்டுகின்றன. ஒடிசி காவியத்தில்,  த்ரோய் நாட்டவரால் கடத்திச் செல்லப்பட்ட கிரேக்க அரசியை  மீட்பதற்காக பெரும் போர் நடந்தது. இராமாயணத்தில் இலங்காபுரியை சேர்ந்த இராவணனால் கடத்தப் பட்ட  சீதையை மீட்பதற்காக போர் நடந்தது.  "யாராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்த கதை", இராமாயணத்திலும், ஓடிசியிலும் ஒரே மாதிரி சொல்லப் படுகின்றது.

த்ரொய் நாட்டுடன் போருக்கு சென்ற ஓடிசியின் கப்பல், திரும்பி வரும் வழியில் திசை மாறி கடலில் தத்தளிக்கின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலாக பல புதிய நாடுகளை கண்டு, அங்கெல்லாம் தீரச் செயல்களை செய்து களைத்த ஒடிசி, இறுதியில் தாயகம் திரும்புகின்றான். வீடு வந்து சேர்ந்த பின்னர், தனது மனைவி இத்தனை வருடங்களாக கற்புடன் இருந்தவளா என்று சோதிப்பதற்காக ஒரு பரீட்சை வைக்கிறான். இது சீதையின் கற்பை சோதித்த இராமனின் கதையை நினைவுபடுத்துகின்றது. இதே நேரம், ஒடிசி கண்டுபிடித்த நாடுகளில் எல்லாம், பல பெண்களுடன் உறவு கொள்கிறான். இந்தக் காவியத்தை எழுதிய ஹோமருக்கு, அது தவறாக தெரியவில்லை. அதாவது, வெளிநாடு சென்ற  ஆண் எத்தனை பெண்களோடு உறவு வைத்துக் கொண்டாலும் அதில் தவறில்லை. ஆனால், கணவன் வெளிநாட்டுக்கு  சென்றதால் தொடர்புகள் அறுந்து விட்ட நிலையிலும், அவனை பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தாலும்,  தனிமையில் வாடும் மனைவி, வேறெந்த ஆண்  மகனையும் மனத்தால் கூட தீண்டக் கூடாது. அதுவே பெண்களை மகிமைப் படுத்தும் கற்பெனும் ஒழுக்க நெறி.   கிரேக்க புராணக் கதைகள் போதிக்கும் நீதி நெறியும் அது தான்.இந்திய புராணங்களையும், கிரேக்க புராணங்களையும் ஒப்பிட்டால், இது போன்ற பல ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். இவ்வாறு "கற்பின் சிறப்பை" எடுத்துக் கூறும் கிரேக்க கதைகள் பல உள்ளன.

கிரேக்கர்களின் ஒர்பெயுஸ் (Orpheus), எயுரிடிசே (Eurydice) என்ற புராணக்கதையும், இந்தியர்களின் சத்தியவான்-சாவித்திரி கதையும் ஒரே மாதிரி அமைந்துள்ளன. பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒபெயுஸ் ஒரு சிறந்த இசைக் கலைஞன். அவன் யாழ் இசைத்துப் பாடினால் மயங்காதவர் எவருமில்லை. ஒபெயுஸ், எயுரிடிசே என்ற அழகிய நங்கையை காதல் திருமணம் செய்து கொண்டான். துரதிர்ஷ்டவசமாக அவர்களது மணவாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. சத்தியவான், சாவித்திரி கதையிலும் அவர்களின் மணவாழ்க்கை சில வருடங்களே நீடித்தது. எயுரிடிசே காமுகன் ஒருவனால் கானகத்தில் விரட்டப்பட்டு, பாம்பு கடித்து இறந்து போகிறாள். அவளது உயிர் மாண்டவர் வாழும், (எமலோகமான) பாதாள லோகத்திற்கு செல்கின்றது. சத்தியவான் கானகத்தில் கனி பறிக்க சென்ற வேளை உயிர் பிரிகிறது. மனைவியின் இழப்பை தாங்க முடியாத ஒர்பெயுஸ், எமலோகத்திற்கு சென்று உயிரை மீட்டு வருவதாக சூளுரைக்கிறான். யாரும் துணியாத காரியமாக, பாதாள லோகம் நோக்கிச் செல்கிறான். 

கணவனின் இழப்பை ஏற்றுக் கொள்ளாத சாவித்திரி, சத்தியவானின் உயிரை கவர்ந்து செல்லும் எமதர்மனை பின்தொடர்ந்து செல்கிறாள். கிரேக்க பாதாள லோகத்தில், அதன் அதிபதியான ஹாடெஸின் (எமதர்மன்) காவல் நாய்கள் (எருமை வாகனம்?) ஒர்பெயுசை மேற்கொண்டு செல்ல விடாது தடுக்கின்றன. அதனால் வாசலில் உட்கார்ந்து கொள்ளும் ஒர்பெயுஸ், யாழ் எடுத்து கல்லும் கரையும் வண்ணம் சோக கானத்தை இசைக்கிறான். அவனது இசை காலனையும் கரைய வைக்கிறது. இசையினால் இளகிய ஹாடெஸ், எயுரிடிசேயை உயிருடன் மீட்டுச் செல்லலாம் என வரம் கொடுக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. ஒர்பெயுஸ் திரும்பிப் பாராமல் நடந்து செல்ல வேண்டும். அவன் மனைவி அவனைத் தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவன் மனைவி மீண்டும் எமலோகத்திற்கே திரும்பி விடுவாள். நிபந்தனைக்கு சம்மதிக்கும் ஒர்பெயுஸ், தனது மனைவியை கூட்டிச் செல்கிறாள். வழி நெடுகிலும், அவள் தன்னை பின்தொடர்ந்து வருகின்றாளா என்ற சந்தேகம் வருகின்றது. ஒர்பெயுஸ் பூலோகத்தை வந்தடையும் நேரத்தில், சந்தேகம் வலுக்கவே திரும்பிப் பார்க்கிறான். அந்த நிமிடமே எயுரிடிசே மீண்டும் எமலோகத்திற்கு திரும்பிச் சென்று விடுகிறாள். கடும்பிரயத்தனத்திற்கு மத்தியில் மனைவியின் உயிரை மீட்டு வந்து பறிகொடுத்த ஒர்பெயுஸ், எமலோகம் சென்று திரும்பிய அனுபவத்தை பாடி பொழுதைப் போக்கினான். கிரேக்க மக்கள் மத்தியில் ஒர்பெயுஸ் - எயுரிடிசே கதை காலத்தால் அழியாத காவியமாகி விட்டது.

"சத்தியவான்-சாவித்திரி-எமதர்மன்" கதை, வட இந்தியர்களுடையது. வட இந்தியர்களும், ஈரானியர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் ஐரோப்பிய இனமான கிரேக்கர்களுக்கும் பொதுவான மூதாதையர் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ஒரே மாதிரியான புராணக் கதைகளை கேள்விப்பட முடிகின்றது. இந்த மக்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசினாலும், சில பாரம்பரிய பிணைப்புகள் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனை இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது நவீன கால தேசியவாத கற்பிதங்களை தகர்க்கின்றது. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால், வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் காலத்திற்கு, இடத்திற்கு ஏற்றவாறு வேறு வேறு மொழிகளை பேசி வருகின்றனர். அது தான் உலக நியதி.

இந்து மத கடவுளரும், இந்திய புராணக் கதைகளும், அசுரர்கள் பற்றிய கதைகளும், சமஸ்கிருதத்திற்கு முந்திய புராதன இந்திய மொழியும்; ஈராக், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியிருக்கலாம் என்பதை பார்த்தோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தால், அதாவது இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள ஈரானுக்குள் நுழைந்தால், இதை விட ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கும்.  இந்திய இந்துக்கள் எம தர்மனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிப்பதில்லை. எமனை அச்சத்திற்குரிய மரண தேவதையாக உருவகிக்கின்றனர். இது அனேகமாக, கிரேக்க கலாச்சாரத்தின் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். கிரேக்கர்களின் மரண தேவதையான ஹாடெஸ், எமனைப் போன்ற பாதாள லோகத்தின் அதிபதி ஆகும். ஆனால், எம தர்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. ஈரானில், எம தர்மன்  ஒரு தேசத்தை ஸ்தாபித்த அரசனாக போற்றப் படுகிறான். ஆதி கால ஈரானிய அரசர்கள், எமனின் பெயர் வருமாறு பதவிப் பெயரை சூட்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்ல, ஈரானியரின் புராதன தலைநகரமும் எமனின் பெயரால் சிறப்புற்று விளங்கியது. சில நேரம், கற்பனையை விட நிஜம் எம்மை ஆச்சரியக் கடலுக்குள் மூழ்கடித்து விடும். 

(தொடரும்)

***********************




*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, Christopher I. Beckwith

Ramesh Murugan

unread,
Feb 6, 2013, 3:34:19 AM2/6/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
by கலையரசன்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 19

(பத்தொன்பதாம் பாகம்)


இன்று பல இந்துத் தமிழர்கள், பகவத் கீதை மற்றும் அது சம்பந்தமான சுவரொட்டிகளை, அலங்காரப் பொருட்களை,  தமது வீடுகளில் வைத்திருக்கின்றனர். யார் பகவத் கீதையை, "இந்துக்களின் புனித                   நூல்" ஆக்கினார்கள் என்று தெரியவில்லை. "கிறிஸ்தவர்களுக்கு விவிலியம் போல,  முஸ்லிம்களுக்கு குர் ஆன் போல, எமது புனித நூலாக பகவத் கீதை இருப்பதாக," இந்துக்கள் கூறிக் கொள்கின்றனர். உண்மையில், இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என்ற நான்கு வேதங்களையும், ஒரே நூலாக சுருக்கினால், அதுவே இந்துக்களின் புனித நூலாக இருந்திருக்கும். ஆனால், அங்கே ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. பிராமணர்களை தவிர பிற சாதியினர் வேதம் படிக்கக் கூடாது. அந்த தடையை மீறி யாராவது படித்தால் நாக்கை அறுக்கலாம், படிப்பதை கேட்டுக் கொண்டிருந்தால் காதை அறுக்கலாம், என்று "பிராமண ஷரியா சட்டம்" ஒன்றை போட்டிருக்கிறார்கள்.  இன்றும் கூட, பிராமணரல்லாத பிற சாதி இந்துக்கள் அதனை மதித்து நடக்க வேண்டியுள்ளது. 

இங்கே எமக்கு தேவையானது பகவத் கீதை அல்ல. தேரோட்டும் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை ஒரு தடவை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். தேரோட்டும் கண்ணனும், அம்பெய்யும் அர்ச்சுனனும், தேரை இழுக்கும் குதிரைகளும் இந்தக் கட்டுரைக்கு முக்கியமானவை. பல ஓவியர்கள், தமது கற்பனைக்கு எட்டியவாறு அதனை தீட்டியுள்ளனர். மகாபாரதமும், அதில் வரும் பாத்திரங்களும், கீதோபதேசமும் வரலாற்றில் உண்மையாகவே நடந்தனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது மாதிரியான போர்கள் வரலாற்றில் நடந்துள்ளன. அதிலும், கண்ணனும், அர்ச்சுனனும் அமர்ந்திருப்பது போன்ற இரதங்கள் போரில் பயன்படுத்தப் பட்டன. ஒரு சிறிய வித்தியாசம். சரித்திர கால இரதம், அர்ச்சுனனின் இரதம் போன்று அவ்வளவு பெரிதாக இருக்காது. ஒரு ஆள் தூக்குமளவு பாரம் குறைந்தது. அனேகமாக இரண்டு சக்கரங்கள் பூட்டப் பட்டிருக்கும். இரண்டு குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும். குதிரைகளை சாட்டையால் அடித்து தேரை ஓட்டும் ஒருவரும், அம்பு, வில்லுடன் இன்னொருவரும் அமர்ந்திருப்பார்கள். 

பண்டைய காலத்தில், குதிரைகள் பூட்டிய இரதங்களின் பாவனை போரில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாக விளங்கியது.  இருபதாம் நூற்றாண்டில், இராணுவ கவச வாகனம், அல்லது யுத்த தாங்கி எந்தளவு பிரயோசனமாக கருதப் பட்டதோ, அந்தளவு நவீனமான கண்டுபிடிப்பாக அது இருந்தது. குதிரைகளை போருக்கு பழக்கப் படுத்தியது மட்டுமல்ல, சில்லுகள் பூட்டிய வாகனமும், வடக்கே இருந்து குடிபெயர்ந்த வெள்ளையின மக்களுக்கு சரித்திரத்தில் நிலையான இடத்தை பிடித்துத் தந்தது. அதற்காக, "சரித்திரத்தில் வெள்ளையினத்தவர் மட்டுமே குதிரை வண்டிகளை போரில் பயன்படுத்தினார்கள், அதனால் கறுப்பினத்தவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்..." என்று அர்த்தம் கொள்வது சரியல்ல. பல மேலைத்தேய சரித்திர ஆய்வாளர்கள், வேண்டுமென்றே அது போன்ற தவறான தகவல்களை, "ஆரியரின் படையெடுப்பு" என்ற கோட்பாட்டின் பேரில் பரப்பி வந்துள்ளனர். 

எத்தகைய நவீன ஆயுதமும், ஆரம்ப காலங்களில் அதனை கண்டுபிடித்தவர்களுக்கு சாதகமான விளைவுகளை தரும். ஆனால், காலப்போக்கில் எதிர் தரப்பினரும், அதன் பாவனையை அறிந்து கொண்டு பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். அமெரிக்கா அணுவாயுதத்தை காட்டி உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டிருந்த  காலம் ஒன்றிருந்தது. சிறிது காலத்தின் பின்னர்,  அதன் எதிரி நாடுகளும் அணுவாயுதங்களை  உற்பத்தி செய்யத் தொடங்கவில்லையா? அது போன்று தான் பண்டைய காலத்திலும் நடந்தது. இன்றைய ஈராக்/துருக்கியில் தோன்றிய வெள்ளையின ராஜ்யத்திடம் (பார்க்க: கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்.)  இருந்து, எகிப்தின் கறுப்பின ராஜ்ஜியம் குதிரை வண்டிகளின் பாவனையை கற்றுக் கொண்டது. நவீன காலத்தில் நடப்பதைப் போல, ஆரம்பத்தில் அவற்றை அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்தாலும், பின்னர் அதனை தமது நாட்டில் உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்டனர். மேலும், வெள்ளையின குழுக்கள், தமக்குள் போரிட்டுக் கொண்ட பொழுதும், குதிரை வண்டிகளை பயன்படுத்தி வந்தன. உதாரணம்: மகாபாரதம். மகாபாரதக் கதையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், எதிரெதிரான இரண்டு முகாம்களாக பிரிந்து போரிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

வண்டி என்பது ஒரு தமிழ்ச் சொல். நாங்கள் அடிக்கடி "வாகனம்" என்ற  இன்னொரு சொல்லையும் பாவிப்போம். வாகனம் என்பது ஒரு வட மொழிச் சொல்லாகும். "வாகன்" (Wagon) என்ற சொல் இன்று பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றது. அப்படியானால், சமஸ்கிருதம் பேசிய இன மக்களும், ஐரோப்பிய இனங்களும், புராதன காலத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும். மத்திய ஆசியாவில் இருந்து குடிபெயர்ந்த வெள்ளையினத்தவர்கள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா என்று உலகின் பல பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு குதிரைகள் பூட்டிய "வாகன்" இன்றியமையாத கருவியாக இருந்தது. 

மகாபாரதக் கதையில் சித்தரிக்கப் பட்டதைப் போன்ற, அதே மாதிரியான இரதங்கள், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஈராக், துருக்கி, கிரேக்கம் ஆகிய நாடுகளை பெயர் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  அங்கெல்லாம் அகழ்வாராய்ச்சியாளர்கள்,  மண்ணுக்குள் புதைந்திருந்த, புராதன கால  குதிரை வண்டிகளை தோண்டி எடுத்துள்ளனர். மகாபாரதக் கதையில் வருவதைப் போன்ற இரதங்கள், போருக்கு மட்டும் பயன்படுத்தப் படவில்லை. அவற்றை வைத்து ஓட்டப் பந்தயங்கள் நடத்தினார்கள். வெற்றிவிழா அணிவகுப்புகளில் பயன்படுத்தினார்கள். நமது நாட்டில் உள்ள சைவக் கோயில் திருவிழாக்களில், சுவாமி இரத (தேர்) பவனி வருவதும், ஆரிய இன மன்னர்கள் காலத்து சம்பிரதாயம் ஒன்றின் தொடர்ச்சி ஆகும்.   

எப்போதும் அந்நிய நாடுகளில் குடியேற விரும்புவோரின் குடிசன பரம்பல் நாற்திசையிலும் நடைபெறும். வெள்ளையின மக்கள் ஐரோப்பாவில் மட்டும் சென்று குடியேறவில்லை. மத்திய கிழக்கு, வட இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் சென்று குடியேறினார்கள். எதற்காக ஐரோப்பியர்கள் மட்டும் தூய வெள்ளையினத்தவராக தெரிகின்றனர்? அனேகமாக ஐரோப்பாவில் குடியேறிய வெள்ளையர்கள், எந்தவொரு இனத்துடனும் கலக்காமல் இருந்ததால், தனித் தன்மையை பேணியிருக்கலாம். அதனால் தான் அவர்கள் நாகரீகத்தில் பின்தங்கி இருந்தனர் என்பதையும், இங்கே குறிப்பிட வேண்டும். ஈரான், ஈராக், அரேபியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் குடியேறிய வெள்ளையின மக்கள்,  உள்ளூர் கறுப்பின மக்களுடன் ஒன்று கலந்து, பல புதிய இனங்களாக உருவாகி உள்ளனர். 

மத்திய கிழக்கிலும், இந்திய உப கண்டத்திலும் குடியேறிய இந்தோ-ஆரிய வெள்ளையினத்தவர்கள், உள்ளூர் கறுப்பின மக்களுடன் ஒன்று கலந்த பின்னர், சமஸ்கிருதம், பார்சி போன்ற புதிய மொழிகள் தோன்றின. இதிலே எந்த இனம் எத்தனை சதவீதம் கலந்திருந்தது என்றெல்லாம் கண்டுபிடிப்பது கடினம். புதிய கலப்பினத்தில், வெள்ளையின விகிதாசாரம் அதிகமாக இருந்த இடங்களில் சமஸ்கிருதம் (இன்று ஹிந்தி- உருது) போன்ற "ஆரிய மொழிகள்" பேசப் பட்டன.  கறுப்பினத்தவரின் விகிதாசாரம் அதிகமாக இருந்த இடங்களில் தமிழ் போன்ற "திராவிட மொழிகள்" பேசப்பட்டன. எது எப்படி இருந்தாலும், இன்றைக்கு நாகரீகமடைந்த மொழிகளை பேசும் மக்கள் எல்லோரும், கலப்பினத்தை சேர்ந்தவர்கள் தான். அவ்வாறு இனக் கலப்படையாமல், இனத் தூய்மை பேணியோர் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்றனர். அவர்களை நாங்கள் "நாகரீகமடையாத பழங்குடி இனம்" என்று கூறி ஒதுக்கி வைத்திருக்கிறோம். 

இந்தியாவில் ஆரிய படையெடுப்பு நடக்கவில்லை. ஆனால், ஆரிய குடியேற்றம் நடந்துள்ளது. அதிலும் கி.மு. 3000 வருடங்களுக்கு முன்னர், தெளிவாகத் தெரியக் கூடிய ஆரியப் படையெடுப்புகள்/குடியேற்றங்கள்  நடந்ததாக சரித்திரத்தில் சான்றுகள் கிடையாது. அந்த "ஆரியரும்" ஒரே இனமாக, ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தமக்குள் மோதிக் கொண்டார்கள். அரசியல் ஆதிக்கத்திற்காக, ஒரே இனத்தை சேர்ந்தவர்களையும் அழித்தனர். அது மட்டுமல்ல, கறுப்பின அரசர்களுக்கு விசுவாசமான கூலிப்படையாக இருந்தார்கள். அப்படியானவர்கள் தாம் குடியேறிய அல்லது தொழில் செய்த நாடுகளில், கறுப்பின பெண்களை மணந்து கொண்டனர். கறுப்பின மக்களின் நாட்டை பாதுகாப்பதற்காக, படையெடுத்து வந்த இன்னொரு ஆரிய இனத்திற்கு எதிராக போராடினார்கள். 

ஆனால், அது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் வெள்ளையின மக்கள் குடியேறிய ஆரம்ப காலகட்டம் ஆகும். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அல்லது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர்,  உண்மையிலேயே சில "ஆரிய-வெள்ளையின" படையெடுப்புகள்  இடம்பெற்றன. மேற்கே இருந்து படையெடுத்த, ஈரானியர்கள் தமது சாம்ராஜ்யத்தை இந்தியா வரை விஸ்தரித்தார்கள். அவர்கள் தான் இந்து மதத்தவர்கள். அதே நேரம், வடக்கே இருந்து வந்த வெள்ளை இனங்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் "காந்தாரம்" என்ற சாம்ராஜ்யத்தை ஆண்டனர். அது இந்து மதமும், பௌத்த மதமும் கலந்த நாடாக விளங்கியது. இவர்களை அடுத்து, கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் தலைமையில் இன்னொரு வெள்ளையினம் படையெடுத்து வந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று வெவ்வேறான வெள்ளை இன மக்களும், ஈரானிலும், இந்திய உபகண்டத்திலும் வாழ்ந்த கறுப்பின (திராவிட) மக்களுடன் கலந்து விட்டனர். அதனால், அவர்களை எல்லாம் தூய வெள்ளை இன ஆரியர்களாக கருத முடியாது. 

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்


*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

Ramesh Murugan

unread,
Feb 12, 2013, 7:21:03 AM2/12/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
by கலையரசன்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 20

(இருபதாம் பாகம்)

கிரேக்க தத்துவ ஞானிகள் பலர் எகிப்தில் கல்வி கற்றவர்கள். ஆனால், பண்டைய எகிப்தியரின் அறிவியலை, இன்று பாடசாலைகளில் "கிரேக்கர்களின் அறிவியல்" என்று கூறி  கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? இன்றைய கிரீஸ் ஒரு காலத்தில் எகிப்திய காலனியாக இருந்திருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டிய கிரேக்கர்கள், எகிப்தையும் அதற்குள் கொண்டு வந்தனர். எகிப்து மட்டுமல்ல, சூடான் கூட கிரேக்க சாம்ராஜ்யத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. ஆனால், அன்றைய கிரேக்கர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்று நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது. நானே நேரில் கண்ட உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன்.

சைப்ரஸ் நாட்டில், கிரேக்க மொழி பேசும் கறுப்பின சூடானியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எல்லோரும் நமது காலத்தில் அகதியாக வந்தவர்கள் தான். ஆனால், அவர்களது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். சூடானிய அகதிகளை நாடுகடத்தும் பிரச்சினை வந்த நேரம், சைப்ரஸ் ஊடகங்களின் கவனம் இவர்களின் மேல் திரும்பியது. ஒரு காலத்தில் சூடானில் கிரேக்கர்களின் காலனி இருந்ததால், அவர்கள் கிரேக்க மொழி பேசுகின்றனர் என்றே பெரும்பாலான சைப்ரஸ் மக்கள் அபிப்பிராயப் பட்டனர். ஆனால், அது "வெள்ளையின நிறவாத" கருத்தியலாகவே எனக்குப் படுகின்றது. கிரேக்கர்கள் என்றால், அவர்களின் தோல் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்பது பொதுப் புத்தியில் உறைந்துள்ளது. இன்றைக்கு தமிழ் என்பது மொழி என்பதைக் கடந்து இனம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றது. அதே நிலைமை தான் கிரேக்க மொழிக்கும். ஒரு காலத்தில், கிரேக்க மொழி பல இனத்தவர்களின் தாய்மொழியாக, அல்லது இரண்டாம் மொழியாக இருந்தது.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவை, கிரேக்கர்கள் "ஹேலியோபோலிஸ்" என்று அழைத்தார்கள். (அது இன்று கெய்ரோ மாநகரின் ஒரு பிரிவு.) கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடோதுஸ், மற்றும் தத்துவஞானி பிளேட்டோ ஆகியோர், கிரேக்க அறிஞர்கள் ஹேலியொபொலிசில் கல்வி கற்ற அனுபவங்களைப் பற்றி எழுதி உள்ளனர். எகிப்திய மதகுருக்கள் பற்றி அவர்கள் எழுதி இருப்பவை, எமக்கு படிப்பதற்கு சுவாரஸ்யமானவை. பல்துறை அறிஞர்களாக இருந்த எகிப்திய மதகுருக்களிடம் கல்வி கற்ற கிரேக்கர்களும், தாயகம் திரும்பியதும் அவர்களைப் போன்று பாவனை செய்து கொண்டனர். தமது தலையை மொட்டையாக வழித்து, பின்புறம் கொஞ்சம் தலைமுடியை வைத்துக் கொண்டனர். இந்த விவரணைகள், இந்திய பிராமணர்களின் கலாச்சாரத்தை ஒத்துள்ளது.

பண்டைய இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே கல்வியறிவு பெற்ற பிரிவினராக இருந்தனர். அவர்களே கோயில் பூசாரிகளாகவும், மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்தனர். பண்டைய எகிப்திலும், பிராமணர் போன்ற சாதி ஒன்று இருந்தது. எகிப்திய "பிராமண" சாதியினரும், கோயில் பூசாரிகளாகவும், மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும், சிலநேரம் அவர்களே ஆட்சியாளர்களாகவும் இருந்துள்ளனர். கல்வி கற்கும் உரிமையும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டிருந்தது. கிரேக்க அறிஞர்கள் எகிப்தில் கல்வி கற்ற போதிலும், அவர்கள் தமது தாயகத்தில் ஒரு "பிராமண சாதியை" உருவாக்க முனையவில்லை. அதற்கு காரணம், அவர்களது அறிவியல் கிரேக்க மண்ணுக்கு உரியதல்ல, அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதியானது. உதாரணத்திற்கு, நமது நாட்டு அறிவுஜீவிகள் பலர் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கல்வி கற்று திரும்பினார்கள். அந்த அறிவுஜீவிகள் ஆங்கிலேயரின் நடை உடை பாவனையை பின்பற்றி வாழ்ந்தாலும், தனியான சாதியாக உருமாற முடிந்ததா? அதே நிலைமை தான் பண்டைய கிரேக்கத்தில் காணப்பட்டது.

கேத்திர கணிதம் (Geometry) என்ற அறிவியல், கிரேக்கர்களிடம் இருந்து ஆங்கிலேயர் படித்து, பின்னர் அதை எமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அந்த கணிதத்தை கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள் என்பது பலருக்கு தெரியாது. நைல் நதியில் ஏற்படும் வெள்ளத்தினால், கரையோரப் பகுதிகள் பாதிக்கப் பட்டதால், அவற்றை அளப்பதற்கு கேத்திர கணித அறிவியலை பயன்படுத்தி வந்தனர். பிரபல கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், எகிப்து "கணித அறிவியலின் தொட்டில்" என்று வர்ணிக்கிறார். எகிப்திய மதகுருக்கள், "கணிதக் கலை" ( Mathematikai technai) எனப்படும், எண் கணிதம், கேத்திர கணிதம், வானியல் சாஸ்திரம் போன்ற அறிவியலை கண்டுபிடித்ததாக புகழ்ந்து எழுதியுள்ளார். (பார்க்க: Black Athena, by Martin Bernal)

இந்த தகவல்கள் எல்லாம் எமக்குத் தெரியாமல் போனது எப்படி? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ரோம சாம்ராஜ்யத்தில் பரவிய கிறிஸ்தவம் என்ற புதிய மதமும், அந்த மத அடிப்படைவாதிகள் முன்னெடுத்த கலாச்சார புரட்சியும் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. எகிப்தில் கல்வி கற்ற கிரேக்க அறிஞர்கள் எழுதி வைத்த அறிவியல் நூல்களை எல்லாம், "பழைய பஞ்சாங்கம்" என்று கூறி குப்பையில் வீசி விட்டார்கள், அல்லது எரித்து விட்டார்கள்.

பல நூறாண்டுகளுக்கு பின்னர், அரேபியரின் இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவான பின்னர் தான் அவை கண்டெடுக்கப் பட்டன. அரேபியர்கள் அவற்றை அரபி மொழியில் மொழிபெயர்த்தார்கள். அரபி மொழியில் எழுதப்பட்ட கிரேக்க அறிவியல் நூல்கள், பண்டைய "இஸ்லாமிய ஸ்பெயினுக்கு" (கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் ஸ்பெயின் அரபு-மூர்களால் ஆளப்பட்டது.) கொண்டு செல்லப்பட்டன. சுமார் 500 வருடங்களுக்கு முன்னர், ஸ்பானிஷ்- கிறிஸ்தவ படைகள் போரில் வென்று, முழு ஸ்பெயினையும் கிறிஸ்தவமயமாக்கினார்கள். அப்போது அரேபியர்கள் விட்டுச் சென்ற கிரேக்க அறிவியல் நூல்கள், லத்தீன் மொழியிலும், பின்னர் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டன.

கடந்த 500 வருட கால ஐரோப்பிய வரலாற்றில் நடந்த போர்கள், கறுப்பின மக்களின் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்வதற்கு வழிவகுத்தன. முதலாவதாக, ஸ்பெயினில் நடந்த புனிதப் போர், அரேபியர்களை வட ஆப்பிரிக்க கடல் எல்லைக்குள் முடக்கியது. இரண்டாவதாக, 19 ம் நூற்றாண்டின் இறுதியில், ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, துருக்கியரின் ஓட்டோமான் சாம்ராஜ்யம் பல பிரதேசங்களை இழந்தது. கிறிஸ்தவ- ஐரோப்பிய நாடுகள் பெற்ற இவ்விரண்டு வெற்றிகளும், வரலாற்றை ஐரோப்பிய மையவாத சிந்தனையுடன் எழுதுவதற்கு ஏடு தொடக்கி வைத்தன.

இனி, இந்தியாவில் "ஆரிய படையெடுப்பு" என்ற புனைவு எப்படி உருவானது என்று பார்ப்போம். ஆரியர் வருகைக்கு முன்னரே, ஹரப்பா நாகரீகம் அழிந்து விட்டது என்று, இன்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக் கொள்கின்றனர். அதாவது ஹரப்பாவில் இருந்த திராவிட நாகரீகம் அழிந்து, பின்னர் அங்கே ஆரிய நாகரீகம் தோன்றியது. ஆனால், அந்த மாற்றத்தை "மெக்சிகோவில் மாயன்களின் நாகரீகம் அழியக் காரணமாக இருந்த, ஸ்பானிஷ் படையெடுப்பு" போன்று நினைத்துக் கொள்வது அபத்தமானது. அப்படி ஒரு படையெடுப்பு நடந்ததற்கான எந்தவொரு சரித்திர சான்றும் கிடையாது. மேலும் அந்நிய படையெடுப்புகளால் மட்டுமே, ஒரு ஆதிக்க மொழி, மதம், கலாச்சாரம் பரவும் என்று கூற முடியாது. அதற்கு உதாரணமாக அரபு-இஸ்லாமிய மயமாகலை கூறலாம். பல நாடுகளில், இராஜதந்திர, வர்த்தக உறவுகள் மூலமாகவும் இஸ்லாம் என்ற புதிய மதம் பரவியது. "ஆரிய படையெடுப்பு", "இஸ்லாமிய படையெடுப்பு", இவை எல்லாம் ஐரோப்பிய மையவாத சிந்தனையில் இருந்து தோன்றிய கருதுகோள்கள் ஆகும்.

 (தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்

Ramesh Murugan

unread,
Feb 12, 2013, 7:29:28 AM2/12/13
to பண்புடன், தமிழ் சிறகுகள்
by கலையரசன்
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
 நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 21 

 (இறுதிப் பாகம்)

இந்து மதத்தவரின் புனித நூலான இருக்கு வேதத்தில், சோம பானம் பற்றிய செய்யுள்கள் இயற்றப் பட்டுள்ளன. தேவர்களுக்கு பிரியமான சோம பானத்தை பருகினால், சாகா வரம் பெறலாம் என்பது வேத கால மனிதர்களின் நம்பிக்கை. இப்போது அந்த சோம பானம் எங்கே? இந்து மத நம்பிக்கையாளர்களைக் கேட்டால், அது வேத காலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப் பட்டது. இன்றைய கலி காலத்தில் அந்தப் பானமும், அதன் மூலப்பொருளான செடியையும் கண்டுபிடிக்க முடியாது." என்று கூறுவார்கள். அது உண்மையா? இல்லை. நீங்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றால், அங்கே இப்போதும் சோம பானம் அருந்தலாம்! சாதாரணமாக தெருவோர தேநீர்க் கடையிலேயே விற்கிறார்கள்.

சீனாவில் இன்றைக்கும் சோம செடியில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள். ஆஸ்துமா, மற்றும் பல சளி சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்து அது. அந்த மருந்து அல்கஹோல்  போல சக்தி அளிப்பதற்கும் பயன்படுவதால், அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் தடை செய்யப் பட்டுள்ளது. சோமா செடியின் இன்றைய தாவரவியல் பெயர்: Ephedra Sinica. (http://en.wikipedia.org/wiki/Ephedra) 5000 வருடங்களாக, சீனர்கள் சோமா செடியின் சாறு பிழிந்து அருந்தி வருகின்றனர்.   அப்படியானால், இந்து மதத்தவரின் மூதாதையர், சீனாவில் இருந்து குடிபெயர்ந்தவர்களா? அந்த திசையில் ஆராய்ந்தால், நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இந்து மதம் என்பது இந்திய மண்ணில் பிறக்கவில்லை. அது  இந்தியர்களின் மதம் அல்ல என்பதை நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன். அதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாதவர்களிடம், சோம பானம் எங்கே கிடைக்கும் என்று கேட்டால் சொல்வார்களா?

நாம் தமிழில் பாவிக்கும் "சகோதரர்" என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதம் ஆகும். அந்த சொல்லின் பூர்வீகம் எதுவென்று தெரியுமா? இன்றைய ஆப்கானிஸ்தானிலும், அதன் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாநிலங்களிலும் பஷ்டூன் இன மக்கள் வாழ்கின்றனர். அவர்களது மொழியில் "சகா" என்றால் இரத்த உறவினர் என்று அர்த்தம். (தமிழில் சகா என்பது கூட்டாளி என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது.) பண்டைய காலத்தில், அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் "சாகா இனத்தவர்கள்" என்று அழைக்கப் பட்டனர். கிரேக்கர்கள் அவர்களை சீத்தியர்கள் (Scythian) என்று பெயரிட்டு அழைத்தனர். கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள், துருக்கியில் இருந்து வட இந்தியா வரையில் வாழ்ந்த ஈரானிய மொழிகளைப் பேசிய இனங்களை எல்லாம், சீத்தியர்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்தார்கள்.

பண்டைய கிரேக்க வரலாற்றை எழுதிய ஹெரோடோதுஸ், "Oiorpata" என்ற பெண்களின் கதையை ஓரிடத்தில் எழுதியுள்ளார். கஸ்பியன் கடலோர பகுதியில் வாழ்ந்த ஈரானிய இனம் ஒன்றின் வீர மகளிர் பற்றிய கதை அது. அந்த இனத்தில் பெண்களே போருக்கு செல்வார்கள் என்பதால், "ஆண்களை வெட்டிச் சாய்ப்பவர்கள்" என்ற பொருளில்,  Oior (ஆண்கள்) pata (வெட்டுபவர்கள்) என்று கிரேக்கர்கள் பெயரிட்டார்கள். உண்மையில் இயர் (Oior) என்பது, "வீர்" (வீரர்) சொல்லின் திரிபடைந்த வடிவமாகும். இங்கே இந்தக் கதையை குறிப்பிடுவதற்கு காரணம், ஒரு காலத்தில் உக்ரைன் முதல் வட இந்தியா வரையில், பல்வேறு ஈரானிய மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்தனர் என்பதை நிரூபிப்பதற்காகத் தான்.

"இனம்" என்ற சொல், ஒரு இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாகும். உலக வரலாற்றில், எந்தக் காலத்திலும், "இன உணர்வு" கொண்ட மக்கள் வாழவில்லை  அந்தக் காலத்தில், ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், பல்வேறு இனக் குழுக்களாக பிரிந்து போரிட்டனர். ஒருவரின் பிரதேசத்தை மற்றவர் அபகரித்தனர். சீனாவில் உள்ள யுவேசி என்ற வெள்ளையின மக்கள், இன்றைய தஜிக்கிஸ்தான் - உஸ்பெகிஸ்தான் பகுதியில் வாழ்ந்த சாகா (அல்லது சீத்திய) இன மக்களை தெற்கு நோக்கி தள்ளினார்கள். அங்கிருந்து விரட்டப்பட்ட சாகா இன மக்கள், இன்றைய காஷ்மீரை தமது புதிய தாயகமாக்கிக் கொண்டனர். அங்கிருந்து விந்திய மலை வரையில் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் ஆக்கினார்கள். (The Ethnic of Sakas, http://www.iranchamber.com/history/articles/ethnic_of_sakas.php)  இதெல்லாம் எங்கே எழுதியிருக்கிறது?  புராதன சீனாவின் வரலாற்றை எழுதிய சீமா கியான்  (Sima Qian, கி.மு. 145-86), மற்றும் சங் கியான் (Zhang Qian, கி.மு.195-114) என்ற இராஜதந்திரி ஆகியோர் இவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 

நான், "இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதிய பொழுது, எதிர்பார்த்த படியே நிறைய எதிர்ப்புகள் வந்தன. நிறையப் பேருக்கு அது ஒரு அதிர்ச்சியான தகவல் தான். சீனா என்றவுடன், சப்பை மூக்கு, சிறிய கண்கள் கொண்ட, குள்ளமான சீனர்களை மட்டுமே நாம் நினைத்துக் கொள்கிறோம். சீனாவின் பெரும்பான்மை இனமான "ஹான்" இனத்தவர்களும் (அவர்கள் பேசுவது தான் சீன மொழி என்ற மாண்டரின் மொழி) தாம் மட்டுமே, அந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று நம்புகின்றனர். சீனாவில் ஒரு காலத்தில், ஐரோப்பியர் போன்ற வெள்ளையின மக்கள் வாழ்ந்தனர். குறிப்பாக மேற்கு சீன மாநிலமான "உரும்கி" யில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.

அதற்கான ஆதாரங்கள் பல அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டன. "மம்மி" முறையில் பதப்படுத்தப் பட்ட, இரண்டாயிரம் ஆண்டு பழமையான மனித உடல்கள் பல கண்டெடுக்கப் பட்டன. அவர்களின் உடைகள், உடைமைகள் பல மண்ணின் அடியில் இருந்து தொண்டி எடுக்கப் பட்டன. வரலாற்றில் இருந்து மறைந்து விட்ட சீன வெள்ளையின மக்கள், சீனாவின் பிற இனங்களுடன் ஒன்று கலந்திருக்கலாம். (இன்றைக்கும் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட இனங்களும் வாழ்கின்றன.)  குறிப்பாக இன்றைய உரும்கி பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் உய்குர் மக்கள் அவர்களின் வம்சாவளியினராக இருக்கலாம். மொழி என்பது மாறுபடும் தன்மை கொண்டது. 

சீனாவின் உரும்கி மாநிலத்திலும், அதை அடுத்துள்ள கான்சு மாநிலத்திலும் முற்காலத்தில் இரண்டு வகையான வெள்ளையினங்கள் வாழ்ந்ததாக, புராதன சீன இலக்கியங்கள் கூறுகின்றன. நீலக் கண்கள், செந்நிற தாடி கொண்ட  தோற்றங்களுடன் அவர்கள் காணப் பட்டதாக அவற்றில் எழுதப் பட்டுள்ளது. ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த மண்டையோடுகளும் அவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள் போன்ற மக்கள் என்பதனை உறுதிப் படுத்துகின்றன. சீனர்கள் தமது மொழியில் அவர்களை முறையே வூசுன்  (Wusun), யுவேசி (Yuezhi) என்று பெயரிட்டு அழைத்தனர். வூ சூன் என்பது பல இனக் குழுக்களை குறித்த பொதுப் பெயராக இருக்கலாம். 

வூசுன்  (Wusunhttp://en.wikipedia.org/wiki/Wusun) மக்களிடையே பொதுவான ஒரு மொழி பேசப் பட்டதாக தெரியவில்லை. சில குழுக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியையும், சில குழுக்கள் துருக்கி மொழியையும் பேசி வந்தனர். ஆனால், அவர்களின் பூர்வீகம் பற்றிய பொதுவான கதை ஒன்று உலவியது. "வூசுன்" என்ற சீனப் பெயர் ஒரு பட்டப் பெயர் ஆகும். வூசுன் இன மக்களின் முதல் மனிதன் பற்றிய கதை அது. கானகத்தில் கைவிடப் பட்ட  ஒரு மனிதக் குழந்தையை, ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்ததாகவும், அந்தக் குழந்தைக்கு காகங்கள் இரை தேடிக்  கொண்டு வந்து கொடுத்ததாகவும், ஒரு கர்ண பரம்பரைக் கதை அந்த மக்களிடையே உலாவியது. "ஓநாய் பாலூட்டி வளர்த்த முதல் மனிதனின்  கதை", இன்றைக்கும் துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த பல்வேறு இன மக்களிடையே நம்பப் பட்டு வருகின்றது. அது மட்டுமல்ல, இத்தாலியில் வாழ்ந்த ரோமர்களும் அதே மாதிரியான பூர்வீகக் கதையை நம்பி வந்தனர். ஐரோப்பிய வெள்ளை இனத்தவரும், மத்திய ஆசியாவின் துருக்கி இனத்தவரும், ஆரம்பத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்திருக்கலாம்.

யுவேசி இன மக்கள், தொக்காரிய (Tocharian) என்ற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியதாக தெரிகின்றது. அண்மைக் கால அகழ்வாராய்ச்சிக்கு பின்னர், யுவேசி அல்லது தொக்காரிய இன மக்கள் குறித்து நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. சீனாவில், Dunhuang  எனும் இடத்தில் இருக்கும் மலைக் குகைகளில், ஆயிரக் கணக்கான நூல்கள், ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வைத்த நூலகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்தப் பிரதேசத்தில், ஒரு காலத்தில் பல்லாயிரம் மக்கள் வாழ்ந்த நாகரீகமடைந்த நகரம் இருந்தது.  1907 ம் ஆண்டு, திபெத்திய பௌத்த துறவிகள் மூலம் அந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்ட, Sir. Aurel  Stein  என்ற அகழ்வாராய்ச்சியாளர், நிறைய சுவடிகளை அள்ளிச் சென்று விட்டார். அவற்றை அவர் காசு கொடுத்து வாங்கினாரா, அல்லது திருடிச் சென்றாரா என்று தெரியவில்லை. 


புராதன கால தொக்காரியன் இன மக்களின் பொக்கிஷங்கள், இன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை திருப்பித் தருமாறு சீனா கேட்டுக் கொண்டிருக்கிறது. இன்று நிறைய சுற்றுலாப் பயணிகள்,  Dunhuang குகைகளை பார்வையிட சென்று வருகின்றனர். அந்தக் குகைகளுக்குள் ஏராளமான புத்தரின் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. புத்தருக்கு அருகில் நிற்கும் மனிதர்களின் படங்களை கொண்டு, அன்று அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதிலே ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அவர்களது தோற்றம் ஐரோப்பிய வெள்ளையர்களைப் போல உள்ளது. ஆனால், ஆடை, ஆபரணங்கள் இந்தியர்களைப் போல உள்ளன. அவர்கள் இந்திய கலாச்சாரத்தின் படி, நெற்றியில் பொட்டு வைத்திருப்பது இன்னும் விசேடமானது. 

நாங்கள் இப்போது சில முடிவுகளுக்கு வரலாம். சீனாவில் யுவேசி (Yuezhi,   http://en.wikipedia.org/wiki/Yuezhi)  என்று அழைக்கப் பட்ட தொக்காரிய மொழி பேசிய மக்கள் இந்திய- ஐரோப்பிய இனத்தை சேர்ந்தவர்கள். அதாவது அவர்கள் தோற்றத்தில் ஐரோப்பியர்கள், ஆனால் கலாச்சாரத்தில் இந்தியர்கள். மதத்தால் பௌத்தர்கள். மொத்தத்தில் பண்டைய காலத்தில் நாகரீகமடைந்த ஒரு இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களையும் நாங்கள் ஆரியர்கள் என்று நம்பி வந்துள்ளோம். உரும்கியில் இருந்து குடிபெயர்ந்த தொக்காரியன் இன மக்கள், பிற்காலத்தில் காந்தாரம் என்ற ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். காந்தாரம் என்பது என்றைய, அப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. அப்போதே அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த கறுப்பின மக்களுடன் இனக் கலப்பு நடந்துள்ளது. அதன் விளைவாக புதிய இனங்களும், புதிய மொழிகளும் உருவாகின. இதனை பலுசிஸ்தான் பிராந்தியத்தில் வாழும் மக்களின் உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம்.

பலுச்சிஸ்தான் நாடு, இன்றைய ஈரான், பாகிஸ்தானுக்கு இடையில் இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது. பலுச்சி மக்கள் பேசும் மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. அதே பிரதேசத்தில், பிராஹுய் என்ற திராவிட மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ் போன்ற திராவிட மொழிகளுக்கு நெருக்கமான, பிராஹுய் மொழி, எவ்வாறு பாகிஸ்தானில் தனித்து விடப் பட்டது என்று எண்ணி வியக்காதவர் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், முற்றிலும் மாறு பட்ட இரண்டு மொழிகளைப் பேசலாம். பலுச்சி மொழி பேசும் மக்களுக்கும், பிராஹுய் மொழி பேசும் மக்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. 

அவர்கள் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். அவர்களின் பூர்வீகம் பற்றிய கதைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆகவே, அவர்கள் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் என்பதை நிரூபிக்க இந்த ஆதாரங்கள் போதுமானவை. பிராஹுய் என்பது திராவிட தனித்துவத்தை கொண்ட மொழியாகவும், பலுச்சி என்பது ஆரிய மேலாதிக்கத்தால் உருவான புதிய  மொழியாகவும் இருக்கின்றன. யார் எந்த மொழியை தேர்ந்தெடுத்தனர் என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்திருந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களே, இரண்டு வெவ்வேறு மொழிகளைப் பேசும் இனங்களாக பிரிந்திருக்கலாம். இதே மாதிரியான வித்தியாசம் தான், இலங்கையில் சிங்களவர், தமிழர் ஆகிய  மொழிகளைப் பேசும் மக்களிடையே உள்ளது. 

இதிலே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். பலுச்சி மக்கள், தமது மூதாதையர் அரேபியாவில் இருந்து குடிபெயர்ந்து வந்ததாக கூறுகின்றனர். ஈரானில் சாலமன் மன்னனின் விமான தளம் என்று அழைக்கப் படும் மலை ஒன்றுள்ளது. மேற்கு பாரசீக நாட்டில், பிற்கால பார்சி மொழி பிரபலமடைவதற்கு முன்னர், அரமிய மொழி போன்ற ஒரு மொழி அரச கரும மொழியாக இருந்துள்ளது. எத்தியோப்பியா முதல், வட இந்தியா வரையிலான பிரதேசம் ஒரு ஹீபுரு சக்கரவர்த்தியின் ஆட்சிக்குட்பட்ட சாம்ராஜ்யமாக இருந்ததாக, யூதர்களின் பைபிளில் எழுதப் பட்டுள்ளது. அதே சாம்ராஜ்யம் விக்கிரமாதித்தன் என்ற சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்ததாக, இந்திய வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இந்தக் கதைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைய எத்தியோப்பியா, அரேபியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்  செமிட்டிக்-திராவிட மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். அதாவது, அரபு, ஹீபுரு, அரேமிக் போன்ற செமிட்டிக் மொழிகள், ஒரு காலத்தில் திராவிட மக்கள் பேசிய மொழிகளாக இருந்திருக்க வேண்டும். சமஸ்கிருதம், அல்லது ஈரானிய மொழிகள் பிரபலமடையத் தொடங்கியதும் அந்த மொழிகள் மறைந்து விட்டன. சமஸ்கிருதம் (இந்தியா), அவஸ்தான் (ஈரான்) ஆகிய மொழிகளுக்கு இடையில் பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை. அவை இரண்டும் மக்களின் பேச்சு மொழிகளாக இல்லாமல், இலக்கிய மொழிகளாக இருந்தன. ஆனால், அவை அரச நிர்வாக மொழிகளாக இருந்ததால், மக்களின் பேச்சு மொழிகள் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. 

இன்றுள்ள இந்திய மத்தியதர வர்க்கத்தினரால், அமெரிக்க கலாச்சாரம் மிக வேகமாக பின்பற்றப்  பட்டு வருவதைப் போல; அன்றிருந்த இந்திய மேட்டுக் குடியினர் ஆரிய கலாச்சாரத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தனர். அதன் ஆதிக்கம் பிற்காலத்தில் தென்னிந்தியா, இலங்கை வரை பரவியது. "ஆரியர்கள்" என்பது ஒரு இனத்தை அல்லது சாதியை குறிக்கும் சொல் அல்ல. அதன் உண்மையான அர்த்தம் "மேன் மக்கள்" என்பதாகும். நாம் இன்று மேட்டுக்குடி வர்க்கம் என்று அழைக்கும் பிரிவினரை, புராதன கால மக்கள் ஆரியர்கள் என்று அழைத்திருக்கலாம். யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் சிலர், தமக்கு "ஆரியச் சக்கரவர்த்தி" என்று பெயர் சூட்டிக் கொண்டனர். ஈரான் என்பதன் அர்த்தம் "ஆரியர்களின் நாடு". ஆனால் அதனை ஆரிய இனத்தவரின் தாயகம் என்று பொருள் கொள்வது அபத்தமானது. ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இஸ்லாமிய மயமாவதற்கு முன்னர், அங்கே நால் வர்ண சாதி அமைப்பு இருந்தது. அதாவது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய சாதியினர் அரச கட்டமைப்பின் தூண்களாக இருந்தனர். 

வரலாற்றில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு மொழியை பேசிய மக்கள், பின்னர் ஏதாவது ஒரு காரணத்தினால் வேறு மொழியை பேசத் தொடங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது. இன்றுள்ள தமிழர்கள் கூட, ஒரு காலத்தில் பல மொழிகளைப் பேசிய, பல் வேறுபட்ட இனங்களின் கலவை தான். அவுஸ்திரேலியாவில் வாழும் அபோரிஜின் இனத்தோடு தொடர்புடைவர்களே ஆதி தமிழர்கள். ஆனால், அன்று அவர்கள் தமிழ் மொழி பேசவில்லை.   பிற்காலத்தில் புலம்பெயர்ந்து வந்த மராட்டியர்கள், காஷ்மீரிகள், ஆப்கானியர்கள், ஈரானியர்கள் (பல்லவர்கள்) போன்ற "ஆரியர்களுடன்" இனக்கலப்பு நடந்த பின்னர் தான், தமிழர்கள் தோன்றினார்கள். ஒரு மொழியை அடிப்படையாக கொண்டு, ஒரு இனத்தை வரையறுப்பது, ஒரு மடத்தனமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட  இனவாதக் கோட்பாடு ஆகும். 

(முற்றும்)



இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்
19.தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!


*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

Reply all
Reply to author
Forward
0 new messages