நள்ளிரவு வே(தொல்) லை

0 views
Skip to first unread message

jmms

unread,
Aug 9, 2008, 7:09:55 AM8/9/08
to



நள்ளிரவு வே(தொல்) லை

அலுவலில் ஒருவர் மாற்றம் ஆகிப்போவதால் அவர் வேலையும் சேர்த்து இப்ப எனக்கு... ( வெச்சுட்டாங்க ஆப்பு..)

அதனால் இண்டர்னல் பயிற்சி இந்த வாரம்.. அதுவும் தாய் பாஷையில்.. சும்மாவே பயிற்சி அறையில் போட்டிருக்கும்

விளக்கு தூங்க ஏற்றாற்போல் இருக்கும்.. இதி அவர் தாலாட்டு பாட தூக்கம் கண்களிடம் கெஞ்சுது... நோ..நோ..

மரியாதையில்லை அவர் வருத்தப்படுவார் என்று சொன்னா கேட்குதா பிடிவாதமா கண் மூடுது... ஆனா இடையிடயே பதில் சொல்லிவிடுவோம்ல..

இப்படி மும்மரமா படைக்கும்போது என் தலைவர் வந்து என்னைமட்டும் அழைக்க ...ஆஹா.. ஈராக்கிலிருந்து தப்பிச்ச கதை...

சந்தோஷமா வந்தா அவர் என்னை கஸ்டமருக்கு  ஏதோ பிரச்னையாம் , உடனே ஓடுங்கள் என்கிறார்...முதலில் தயக்கமாயிருந்தாலும்,

இப்படிப்பட்ட வேலைகள்தான் நம் மதிப்பை கூட்டும் என்பதால் மறுபேச்சு பேசாமல் ஓடினேன் க்ளையண்ட் சைட்டுக்கு...30கிமீ

அங்கு போனதும் தான் தெரிந்தது ஈராக்கிலிருந்து தப்பித்து அ·ப்கானிஸ்தான் வந்திருக்கேன் என்று...

3 மாதம் முன்பு புதிதாக வந்த புராடக்டை இன்ஸ்டால் பண்ணி பயிற்சியும் கொடுத்துவிட்டு வந்தேன்...

என்ன நடந்ததோ என்னவோ, டேட்டாபேஸையே காணும்.. ஹஹஹா.. சிரிக்கவா அழவா..?.. அதெப்படி காணாமப்போக இதென்ன

நகையா... அது சீன புராடகட்  தன் வேலையை காண்பித்து உள்ளது... அதை கிளையண்டிடம் சொல்ல முடியுமா?..

சரி ஒண்ணும் கவலைவேண்டாம் .. இன்னொரு சர்வர் ரெடி பண்ணுங்க.. என்கிட்ட எல்ல சிடியும் இருக்கு இன்ஸ்டால் பண்ணிடலாம்...

என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கும் கணவருக்கும் பேசிவிட்டு...

மதியம் 1 மணிக்கு உட்கார்ந்தேன்... இன்ஸ்டாலேஷன் முடிய ஆன்லைன் அப்கிரேடு பண்ண னு 8 மணி யானது... நெட்வொர்க் அறையில் குளிர் தாங்க முடியவில்லை..

அதைவிட சாப்பிடாதது அப்பத்தான் நியாபகம்  வருது.. கேண்டீன் எல்லாம் இங்கு 7 மணிக்கெல்லாம் மூடிவிடுவார்கள்..

சரி னு தண்ணி குடித்துவிட்டு வேலையை தொடர்ந்தேன்... கிளையண்ட் கேட்டார் சாப்பாடு , காபி ஏதாவது வேணூமா, வாங்கிவரச்சொல்கிறேன் என்று..

நம்ம பெருந்தன்மையை என்ன சொல்ல... சரி அது முக்கியமில்லை னு வேலையை முடித்து சீக்கிரம் வீட்டுக்கு போலாம்னு நினைத்தேன்..

இப்ப பரிசோதனை... நானும் கிளியண்டும் லாகின் பண்ணினால் தோல்வி.. அவர் ·பையர்வால் போய் பார்க்கிறேன் என்று சென்றார்..எல்லாம்

சரி செய்து விட்டு அவர் மட்டும் வெளியிலிருந்து லாகின் பண்ண, நான் குளிருக்குள் உள்ளே..

" கிளையண்ட் கணினி ல லாகின் வந்ததோ வந்ததோ...???""

" வரல்ல...வரல்ல..."

"லைசென்ஸ் போல ஏதோ ஒண்ணு புரோக்கிராம்ல சிக்கிக்கிட்டு மாட்டேன் மாட்டேன் என்று சொல்லுதே..."

சரின்னு பழைய மெஷின் ல உள்ள லைசென்ஸ் சாவி ( usb)  எடுக்கணும்.. இப்பதான் இருக்கு சர்க்கஸ்..

எங்க சர்வரை ரேக்கின் (rack ) கீழே வைத்துள்ளார்கள் .. அதுல இத்துனூண்டு சாவி வெளியில் எடுக்க எல்லா வயர்களையும் நகர்த்தணும்..

குனிந்து பார்த்தால் முடியலை... சாஷ்டாங்கமா படுத்துக்கொண்டு தான் பண்ணியாகணும்...சரி செய்யும் தொழிலே தெய்வம் னு அதையும் செஞ்சு எடுத்துட்டு.

மறுபடியும் பரிசோதனை பண்ணினோம்.. இவர் வெளியிலிருந்து கைகாண்பிக்கிறார்.. இல்லை என்று..

நான் அப்போ சரி மறுபடியும் வேறுவிதமாக இன்ஸ்டால் பண்ணுவோம்னு சொல்லும்போதே அங்கே லாகின் சக்ஸஸ்...

ஆனா இங்கதான் விதின்னு ஒண்ணு இருக்கே.. அது விளையாடுமாமே.. அவர் வெளியிலிருந்து தலையசைக்க நான் ஒஹ்ஹொ இல்லை என்று நினைத்துக்கொண்டு,

அத்தனையும் டிலீட் பண்ணி முடித்து ரீன்ஸ்டால் பண்ண ஆரம்பிக்க, நிதானமா வந்து , லாகின் ஓகே ங்கிறார்...மறுபடியும் சிரிக்கவா அழவா..

இவர்கள் தலையசைப்பு ஆமாவுக்கும் , இல்லைக்கும் ஒரே மாதிரி.. சரி சந்தோஷமா வந்து சொல்லியிருக்கலாமே.. பாவம் தூக்ககலக்கமோ என்னவோ..

மறுபடி அதே வேலை இப்ப மணி 3.. அவருக்கு தூக்கம் வந்துவிட்டது போல.. மேடம் நாளை தொடரலாம்..என்றதும், வெளியில் வந்து

டாக்ஸிக்கு காத்திருந்தோம்.. கம்பெனி வண்டி எடுத்து வரவில்லை..இது நகரத்தை விட்டு 60 கிமீ இருப்பதால் டாக்ஸியும் குறைவு..

எப்ப்டியோ ஒன்று வந்தது.. ஏறி சிறிது தூரத்தில், இன்னொரு டாக்ஸிகாரனைப்பர்த்ததும் நிப்பாட்டினான்.... ஹிஹி பெற்றோல் இல்லை என்றான்..

எபவும் சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு வருவேன் இதுபோல் இரவு வேலைக்கு.. அன்று எதிர்பார்க்கவில்லை... அதுமட்டும்தான் பயம்..

(மற்றபடி என் அழகுக்கு???  என்னை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுடுவான் என்ற நம்பிக்கை 100% உண்டு.. )

வீடுவந்து சேர 4 மணி சாப்பிட கூட பிடிக்கலை..கிட்டத்தட்ட 20 மணி நேரம் தொடர் வேலை.. அப்போதே மண்டையார், தொண்டையார் எல்லாம் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்..

சரியாக 7 மணிக்கு குழந்தைகள் இருவரும் " ஹை. அம்மா வந்தாச்சு என்று வந்து தொப்பென்று விழ தூக்கம் போனது..

அப்பதான் தெரியுது காய்ச்சலும் வந்துவிட்டது...

9 மணிக்கு தலைவரின் போன்.. அன்போடு விசாரித்துவிட்டு 1 மணிக்கு மறுபடியும் போகச்சொன்னார்... சரியென்று மறுபடியும் கிளம்பிப்போய் 6 மணிக்கெல்லாம்

நல்லபடியாய் முடித்து கொடுத்தேன்.. அப்பா.. கிளையண்ட் முகத்தில் சிரிப்பு...

இதற்கிடையில் அவர் ·பையர்வால் செக்க பண்ண சென்ற போது நான் 1 மணி நேரம் காத்துக்கிடக்க, கொஞ்சம் குழுமம் பக்கம் போனால்,

அன்புத்தம்பிங்க வந்து " அக்கா என்ன உங்க கதையே காணோம்".. என் சோகக்கதய சொன்னதும் ஆறுதலடைந்து விட்டார்கள் ஜூட்..

இதுல புதுசா ஒரு தம்பி மலேஷியாவிலிருந்து, என்னை ஆண் என நினைத்து...

" jmms சார், டிஸ்பிளேல இருப்பது உங்க மனைவியா?.."

" ஆமாய்யா ஆமா.."

" சார், இன்னுமா வீட்டுக்கு போகலை, உங்க மனைவி , பிள்ளைகள் தேடுவாங்களே."

" ஆமாய்யா..ஆமா.."

சரி வேலை பாருங்க சார்.. "

" சரிய்யா சரி"   கடி தாங்க முடியாமல் பாவம்  ...ஓடிவிட்டார்..

கொஞ்சம் உற்சாகத்துடன் மீண்டும் தொடர்ந்தேன் என் வேலையை...

பி.கு..

யாருக்காவது வேலை கடினமா இருந்தால் என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.

இல்லை என் வேலையை விட கடினமாயிருந்தால் கண்டிப்பாக எழுதுங்கள் ..நான் பரவாயில்லை என நினைத்துக்கொள்கிறேன்..

( அப்பாடா கட்டுரை வரும் )  என்னைவிட நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன்..

அதனால் ஜாலியாகவே எடுத்துக்கொள்வேன்..என்ன இப்ப அடுத்த 1 வாரம் ஒரே லொக்கு லொக்கு தான்.. ( அதாங்க இருமல்...) 



--
  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

lucky shajahan

unread,
Aug 9, 2008, 9:46:07 AM8/9/08
to panb...@googlegroups.com

கணினி சார் பெண்மணியா நீங்கள்.. பாவம்பா :-)
ஆனா அதைகூட பதிவா போட்ருக்கீங்க பாருங்க..அங்கதான்...
 
2008/8/9, jmms <jmms...@gmail.com>:

jmms

unread,
Aug 9, 2008, 1:22:28 PM8/9/08
to panb...@googlegroups.com
On 8/9/08, lucky shajahan <luckys...@gmail.com> wrote:

கணினி சார் பெண்மணியா நீங்கள்.. பாவம்பா :-)
 
:-((

ஆனா அதைகூட பதிவா போட்ருக்கீங்க பாருங்க..அங்கதான்...
 
 
நிக்கிறேனா//... :-)))))
 

 
 
 

 
2008/8/9, jmms <jmms...@gmail.com>:
============================= நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

ஸ்ரீ

unread,
Aug 10, 2008, 2:16:17 AM8/10/08
to panb...@googlegroups.com
அன்பு சாந்தி,

உங்களின் கஷ்டங்களைக் கூட சந்தோஷங்களாக மாற்றிவிடும் வல்லமை மிகப் பெரிய வரம். கடந்து போன எந்தக் கஷ்டத்தையும் நினைக்கும்போது நம்மையறியாமல் ஒரு புன்னகை வருமே அது வியப்புதான். ஆனால் அதையே இவ்வளவு சுவாரஸ்யமாக கொடுப்பது உங்களால்தான் முடிந்திருக்கின்றது.

நானும் இந்தத் துறையில் நிறைய கஷ்டங்கள் பட்டிருக்கின்றேன். ஆனால் இப்போது பிராஜக்ட் மேனேஜராக பார்க்கும்போது எந்தக் கஷ்டமும் கண்ணில் தெரியவில்லை... :))

மிக்க நன்றி...

2008/8/9 jmms <jmms...@gmail.com>



--
மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
http://tamil.sripauljoseph.com/
தீட்டாத ஓவியங்களும் தீராத எண்ணங்களும்...

தமிழமுதம் - http://www.tamizhamutham.org/
இயல், இசை, நாடகம்...

"வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏற்றி இனிதருள் பருக மாட்டார்
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே" --- மாணிக்க வாசகர்

jmms

unread,
Aug 10, 2008, 3:19:47 AM8/10/08
to panb...@googlegroups.com
On 8/9/08, ஸ்ரீ <sripau...@gmail.com> wrote:
அன்பு சாந்தி,

உங்களின் கஷ்டங்களைக் கூட சந்தோஷங்களாக மாற்றிவிடும் வல்லமை மிகப் பெரிய வரம். கடந்து போன எந்தக் கஷ்டத்தையும் நினைக்கும்போது நம்மையறியாமல் ஒரு புன்னகை வருமே அது வியப்புதான். ஆனால் அதையே இவ்வளவு சுவாரஸ்யமாக கொடுப்பது உங்களால்தான் முடிந்திருக்கின்றது.

நானும் இந்தத் துறையில் நிறைய கஷ்டங்கள் பட்டிருக்கின்றேன். ஆனால் இப்போது பிராஜக்ட் மேனேஜராக பார்க்கும்போது எந்தக் கஷ்டமும் கண்ணில் தெரியவில்லை... :))
 
 
மிக்க நன்றி ஸ்ரீ.. வாழ்க்கையில் பல கஷ்டங்கள் அனுபவிக்கும்போது  அதுவும் தனிமையில்  , பழகிப்போகிறது... வருந்துவதினால் பலன் ஏதுமில்லை...
 
அவரவர்க்குண்டானதை அவரவரே சுமக்கணூம்... கடவுள் துணையுடன்..:-)))
Reply all
Reply to author
Forward
0 new messages