அணு உலை - ஏன் எதற்கு எப்படி?

221 views
Skip to first unread message

Raja sankar

unread,
May 15, 2012, 1:09:51 PM5/15/12
to panb...@googlegroups.com
கதிர்வீச்சு இழையில் ரமேஷ் வைத்திருந்த கேள்விகளுக்கு பதிலாக இந்த இழை. இந்த இழையில் அறிவியல் சம்பந்தமாக மட்டும் கேள்விகள் பதில்கள் இடம் பெறும். மற்றைய அரசியல் காரணங்கள் தயை செய்து வேறு இழையில் வைத்துக்கொள்ளுங்கள்.

கேட்கப்பட்ட கேள்விகள் கீழே இருக்கின்றன, ஒரு பார்வைக்காக.

1. அணுவுலைன்னா என்ன?
2. அணுவுலையில் பயன்படுத்தபடும் மூலப் பொருட்கள் என்னென்ன??
3. அது எப்படி செயல்படுகின்றது?? (பெரிய கேள்வின்னு நினைக்கிறேன். ஏற்கனவே ஜெயபாரதன் அவர்களின் விளக்கத்தைப் படிச்சிருந்தாலும், அது புரியல. அதனால நீங்க கதை சொல்ற மாதிரி எழுதுங்க)
4. எப்படி ஹீட் எனர்ஜியை, மெக்கானிக்கல் எனர்ஜியா மாத்துறாங்க?? ( நிலக்கரியில் ஓடுன இரயில் இஞ்ஜின் மாதிரியா??)
5. மிக எளிதா அணுவுலையில் ஏற்படும் விபத்துகள் / ஆபத்துகள் என்னென்ன???
6. அணுவுலையின் செயல்பாடுகளை ஏன் உடனே நிறுத்த முடியாது??
7. ஏன் அணுவுலையை குளிர்விக்கும் செயல்பாடுகள் மிக கடினம்??
8. அணுவுலையில் வரும் கழிவுகள்னா என்ன?? அது எப்படி இருக்கும்??
9. கதிர்வீச்சு எப்படி இருக்கும். அதை நாம் எப்படி உணர்வது??
10. கழிவுகளை மக்க வைக்கவே முடியாதா?? அல்லது அணுகுண்டுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியாதா??
11. கதிர்வீச்சு, அணுவுலையின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெளியே வருமா??? காற்றில் கலக்குமா??? பயணிக்குமா???
12. வெளியேவரும் கதிர்வீச்சை அணுவுலை நிலையம் கணக்கிடுமா, கட்டுப் படுத்துமா??
13. அணுவுலையை குளிர்விக்கப் பயன்படுத்தும் நீரில் கதிர்வீச்ச்ய் இருக்குமா?? அதைக் கடலில் கலந்தால் நீரின் வழியாக கலலில் கதிர்வீச்சு கலக்குமா???
14. அணுவுலை வெடித்தால், ஏற்படும் நிகழ்வுகளை வரிசைப் படுத்தி விளக்கவும்.
15. அணுவுலை வெடித்தவுடன் நாம் செய்ய வேண்டியது என்னென்ன???

இவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


முதலில் அணு உலை என்றால் என்ன?

அணு உலை என்பது அணு பிளவின் மூலமாகவோ அல்லது அணு சேர்ப்பின் மூலமாகவோ வெப்பத்தை ஏற்படுத்தி அந்த வெப்பத்தை கொண்டு மின்சாரம் தயாரிப்பது. இதிலே மின்சாரம் தயாரிக்கும் முறையானது அனல் மின்சாரம் அதாவது நிலக்கரி எரித்து மின்சாரம் தயாரிக்கும் முறை போன்றது தான். இங்கு நிலக்கரியை எரித்து கிடைக்கும் வெப்பத்திற்கு பதிலாக அணுப்பிளவின் மூலம் கிடைக்கும் மின்சாரம்.

இதுல இரண்டு விஷயம் சொல்லியிருக்கேன். அணுப்பிளவு, அணு சேர்க்கை. இரண்டின் மூலமும் வெப்பம் வெளிப்படும் இரண்டின் மூலமும் மின்சாரம் எடுக்கலாம். ஆனால் இப்போதைக்கு இருக்கும் அணு உலைகள் அனைத்தும் அணுப்பிளவு மூலம் செயல்படுவை தான். அணுச்சேர்க்கை மூலம் செயல்படும் அணு உலை இயற்கையில் தான் உண்டு. அது சூரியன் போன்ற நட்சத்திரங்கள் தான். அந்த தொழில்நுட்பம் இன்னமும் மனிதனால் கண்டறியப்படவில்லை.

அணுப்பிளவு

அணுப்பிளவு என்பது பற்றி பார்ப்போம். ஒரு அணுவை நீயூட்ரான் மூலம் பிளப்பது தான் அணுப்பிளவு. இதிலே பிளக்கப்படும் அணு தன்னுடைய எடையை விட குறைவான இரண்டு அணுக்களையும் மீதம் இருக்கும் எடையை வெப்பமாகவும் தரும்.

யூரேனியம் 235+ நீயூட்ரான் = பிளக்கப்பட்ட அணு + 2.4 நீயூட்ரான் + 192.9 மெகா எலக்ட்ரான் வோல்ட்(MeV)
புளுட்டோனியம் 239 + நீயூட்ரான் = பிளக்கப்பட்ட அணு + 2.9 நீயூட்ரான் + 198.5 மெகா எலக்ட்ரான் வோல்ட்(MeV)

இந்த எலெக்ட்ரான் வோல்ட் என்பது ஒரு அளவீடு. ஒரு டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்டுகள் ஒரு பறக்கும் கொசுவின் சக்திக்கு சமமானது. (http://rajasankarstamil.blogspot.in/2011/10/45.html)

http://en.wikipedia.org/wiki/File:Fission_chain_reaction.svg
File:Fission chain reaction.svg



இந்த வேலையானது ஐன்ஸ்டைனின் சமன்பாடான E = mC2 என்பதன் மூலம் செயல்படுகிறது.

இந்த அணுப்பிளவின் போது அதிகமாக வரும் நீயூட்ரான்கள் உடனே அடுத்த யூரேனியம் அணுவை தாக்கும். அது இன்னும் மூன்று நீயூட்ரான்களை வெளியிடும். இப்படி வெளியிடுவது கட்டுக்குள் இருந்தால் அது தொடர் வினை என அழைக்கபடுகிறது. அப்படி தொடர்வினையாக இருக்கும் போது வெளிவரும் வெப்பமும் ஒரே போல் இருக்கும்.


அணுச்சேர்க்கை

இது இரண்டு அணுக்களை ஒன்றாக சேர்ப்பதன் மூலம் வரும் வெப்பத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் இதற்கு முதலில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வேண்டும் அப்போது தான் அணுச்சேர்க்கை நடைபெறும். அணுப்பிளவிற்கு அது தேவையில்லை. ஏன் இதற்கு ஓர் குறிப்பிட்ட வெப்பநிலை வேண்டும்? ஏனென்றால் இரண்டு அணுக்களும் ஒன்றை ஒன்று விலக்கும், காந்த துருவங்கள் போல. அதை மீறவே இந்த வெப்பநிலை தேவைப்படுகிறது.

டிட்டூரியம் + டிரிட்டியம் = நீயூட்ரான் + ஹீலியம் + 18 மெகா எலெக்ட்ரான் வோல்ட்

இந்த டிட்டூரியம், டிரிட்டியம் என்பதெல்லாம் ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்.

அடுத்த கேள்விகள் நாளைக்கு.

ராஜசங்கர்
(Rajasankar)

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 15, 2012, 1:36:50 PM5/15/12
to panb...@googlegroups.com, yesbalabharathi, Dhinesh Kumar (முகிலன்), panbudan...@googlegroups.com
பண்புடன் இதழுக்கு பரிந்துரைக்கிறேன். 

Dhinesh Kumar (முகிலன்)

unread,
May 15, 2012, 1:42:13 PM5/15/12
to panbudan...@googlegroups.com, panb...@googlegroups.com, yesbalabharathi
கட்டுக்குள் இருக்காவிட்டால் அணுகுண்டு என்று அழைக்கப்படும் 

2012/5/15 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Ramesh Murugan

unread,
May 15, 2012, 1:55:47 PM5/15/12
to panb...@googlegroups.com
நல்ல இழை. இது இப்படியே பயணிக்கனும். நம்ம குழும நண்பர்களும் அணுவுலையைப் பற்றி தெரிஞ்சிக்கனும். தொடருங்க ராஜசங்கர்.

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

Ram Kameswaran

unread,
May 15, 2012, 2:25:04 PM5/15/12
to panb...@googlegroups.com
+1

Ram Kameswaran

unread,
May 15, 2012, 2:43:07 PM5/15/12
to panb...@googlegroups.com

அணுச்சேர்க்கை, அல்லது அணுப்பிணைவு எனப்படும் Nuclear Fusion மூலம் இன்னும் மின்சார உற்பத்தி நிகழவில்லை என்றாலும் அணுப்பிணைவு பரிசோதனை உலை ITER பிரான்ஸில் உள்ள காடராஷ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் (2030- 40) இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் ITERன் வலைத்தளத்திற்கு சென்று மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஜெயபரதன் அவர்களும் இது பற்றி 2006 ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

இப்பொழுது இது போதும் என நினைக்கிறேன்.

காமேஷ்

unread,
May 15, 2012, 8:40:22 PM5/15/12
to panb...@googlegroups.com
 +1


லை O லைக்



2012/5/16 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Raja sankar

unread,
May 15, 2012, 8:52:10 PM5/15/12
to panb...@googlegroups.com
அணுகுண்டுக்கும் அணு உலைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/15 Dhinesh Kumar (முகிலன்) <maild...@gmail.com>

Raja sankar

unread,
May 15, 2012, 8:54:57 PM5/15/12
to panb...@googlegroups.com

இதுல மின்சாரம் எடுக்க இன்னும் ஒரு ஐம்பது வருசமாவது ஆகும் என நினைக்கிறேன். நிலைபடுத்திக்கொண்ட அணுப்பிணைவு என்பதை அவ்வளவு எளிதில் பூமியில் கொண்டு வந்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஒருவேளை இயற்பியலின் இன்னும் அடிப்படை ஆன ஹிக்ஸ் போசான் போன்றவற்றை தெரிந்தால் அழுத்தம்/வெப்பம் மூலம் இணைக்காமல் வேறு ஏதாவது வழிகொண்டு இணைக்கலாம்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/16 Ram Kameswaran <ram.kam...@gmail.com>

Ramesh Murugan

unread,
May 16, 2012, 11:42:44 AM5/16/12
to panb...@googlegroups.com
தொடர்ந்து எழுதுங்க ராஜசங்கர் & ராம்.

Ramesh Murugan

unread,
May 17, 2012, 9:57:09 AM5/17/12
to panb...@googlegroups.com
பாஸ்,
அப்படியே இந்த இழைக்கும் தலைய காட்டுங்க..

Raja sankar

unread,
May 17, 2012, 1:19:10 PM5/17/12
to panb...@googlegroups.com

இன்றைக்கு அணு உலையில் இருந்து எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள், அது எடுக்க என்னென்ன தேவை என பார்ப்போம்.

இந்த அணு உலை என்ற சமாச்சாரத்தை புரிந்து கொள்வதற்கு முன்பு இது எவ்வளவு சிக்கலான அமைப்பு என்பதை புரிந்துகொள்ளவேண்டியிருக்கும். ஒரு காலத்தில் நீராவியினால் வண்டி இழுப்பது என்பது மிகப்பெரும் விஷயமாக சொல்லப்பட்டது. நிலக்கரியினால் ஓடும் ரயில்வண்டிகள் வந்தபோது மாடுகள் கன்று போடாது, அது ஓரு பேய் போல வரும் என்றெல்லாம் பயந்தார்கள் என படித்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அந்த நீராவியில்லாமல் எந்த வீட்டிலும் சோறு வேகுவதில்லை. அதே போல் வெப்ப என்ஜின்கள் என சொல்லப்படும் டீசல்/பெட்ரோல் என்ஜின்களின் முன்னேற்றமும். நான் தினமும் அலுவலகம் போகும் யுனிகார்னின் என்ஜின் சக்கரம் ஒரு நிமிடத்திற்கு 5500 முறை சுழலும். அதாவது ஒரு நொடிக்கு 90 தடவை சுழலும். இப்படி சுழல்வதற்கு உள்ளே இருக்கும் பொறியியல் அற்புதங்கள் பலப்பல. ஒரு சாதாரண வண்டிக்கே இப்படி பொறியியல் நுணுக்கம் தேவைப்படுகிறது என்றால் அணு உலைக்கு எவ்வளவு நுண்மாண் நுழைபுலம் தேவைப்படும். இதை புரிந்து கொண்டால் அணு உலையில் இருந்து எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள் என்பது புரியும்.

சரி, அணு உலைக்கு என்னென்ன தேவை.

1. மூலப்பொருளான யுரேனியம். இதுவும் 235 எண்ணுடையது வேணும்.
2. அணுப்பிளவை தொடங்க ஒரு நீயூட்ரான் தேவை. இதை தொடக்க நீயூட்ரான் மூலத்தில் இருந்து பெறலாம். இயற்கையாகவே நீயூட்ரானை வெளியிடும் தனிமங்கள் இதற்கு பயன்படும்.
3. இந்த நீயூட்ரான்களை கட்டுப்படுத்தி தொடர் வினையாக ஆக்க ஒரு பொருள்
4. இதிலேயிருந்து ஏற்படும் வெப்பத்தை வெளியே எடுத்துச்செல்ல ஒரு பொருள். பொதுவாக இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாகவே இருக்கலாம். சில இடங்களில் தனியாகவும் இருக்கலாம்.
5. வெப்பதை அதில் இருந்து எடுத்து மின்சாரமாக மாற்றும் இயந்திரங்கள்.

முதலில் யுரேனியம். தமிழ் விக்கிபீடியாவில் இருந்து http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

யுரேனியம் என்னும் தனிமம் பளபளப்பான வெளிறிய சாம்பல் நிறத்தில் திண்ம நிலையில் இருக்கும் ஒரு பொருள். இதன் அணுவெண் 92, மற்றும் இதன் அணுக்கருவில் 146 நொதுமிகள் உண்டு. இதன் வேதியியல் குறியெழுத்து U ஆகும். இதுவே இயற்கையில் கிடைக்கும் அதிக அணுநிறை கொண்ட தனிமம். இதன் அணுநிறை வெள்ளீயத்தை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம். இது தனிமங்களின் அட்டவனையில் ஆக்ட்டினைடுகள் வரிசையைச் சேர்ந்த ஒரு தனிமம். யுரேனியம் சிறிதளவு கதிரியக்க இயல்பு கொண்ட தனிமம். இத் தனிமம் நில உருண்டையில், மண்ணிலும் பாறைகளிலும், நீரிலும் மிகமிகச் சிறிதளவே கிடைக்கின்றது. பெரும்பாலும் யுரேனைட்டு போன்ற கனிமப்படிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. கிடைக்கும் அளவு மில்லியனுக்கு ஒரு சில என்னும் சிற்றளவிலேயே கிடைக்கின்றது.

இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் அணுக்கள் பெரும்பாலும் யுரேனியம்-238 (99.275%), மற்றும் யுரேனியம்-235 (0.72%) என்னும் வகைகளாகவும், மிக மிகச் சிறிதளவு (0.0058%) யுரேனியம்-235 என்னும் வகையாகவும் உள்ளன. யுரேனியம் மிக மெதுவாக ஆல்ஃவாத் துகள்களை உமிழ்கின்றது. யுரேனியம்-238 இன் அரைவாழ்வுக் காலம் 4.5 பில்லியன் ஆண்டுகளாகும். யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 700 மில்லியன் ஆண்டுகளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நில உலகத்தில் ஒரு பொருளின் தின்மையை அறிய யுரேனிய-தோரிய தொன்மையறி முறை என ஒரு முறை நிறுவப்பட்டுள்ளது. யுரேனியமானது தோரியம், பொலோனியம் ஆகிய இரண்டுடன் சேர்ந்து உள்ள மூன்று அணுச் சிதைவு கொள்ளும் பொருட்கலுள் ஒன்றாகும். இவ்வாறு அணுச்சிதைவு கொள்ளும்பொழுது ஏராளமான வெப்பம் உண்டாவதால் அணு உலைகள் இயக்கி அணுகுண்டு முதலிய அணு ஆயுதங்கள் செய்ய உதவுகின்றது. குறைந்த அளவு யுரேனியம்-235 என்னும் ஓரிடத்தான் கொண்ட யுரேனியத்தை (யுரேனியம்-238), குறைவுற்ற யுரேனியம் என்று கூறுவர். இந்த குறைவுற்ற யுரேனியமும் மிகவும் அடர்த்தியான பொருளாகையால் (வெள்ளீயத்தை விட 70% அதிகம், அடர்த்தி = 19050 கிலோ.கி /மீ3 (kg/m³) ), இதனைக் கொண்டு, வலுவான தடித்த மாழைகளால் (உலோகங்களால்) ஆன சுவர்களையும் பிளக்கமுடியும்.[2]. எனவே போர்க்கருவிகளில் இது மிகவும் பயன்படுகின்றது. இதனால் மாந்தர்களுக்கு பல உடல்நலக் கேடுகளும் விளையும்.

இதிலே கவனிக்க வேண்டியது யுரேனியத்தின் கதிரியக்கம் மிகக்குறைவு. இயற்கையில் கிடைக்கும் அளவும் மிக அதிகம். அரை ஆயுட்காலம் 70 கோடி ஆண்டுகள். அரை ஆயுட்காலம் என்பது ஒரு கிலோ அரைக்கிலோவாக ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம். ஆல்பா துகள் என்பது இரண்டு புரோட்டான், இரண்டு நியூட்ரான் கொண்ட துகள். இவற்றை வெளியிட்டு அதன் எடை குறையும். மனித உடலில் இருந்து யுரேனியம் வெளியேற எடுத்துக்கொள்ளும் நாட்கள் 15 நாட்கள்.

யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டது 1789 இல். அதன் கதிரியக்கம் 1896 இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. என்ரிகோ பெர்மி தான் 1934 இல் அதன் அணுப்பிளவு தன்மையை கண்டறிந்தார்.

யுரேனியம் இயற்கையில் எல்லா தாழ்வான இடங்களிலும் இருக்கும். ஒரு கிலோ மண்ணில் 300 மைக்ரோ கிராமில் இருந்து 11.7 மில்லி கிராம் வரைக்கும் யுரேனியம் இருக்கும். அதிக புரோட்டான் உள்ள தனிமங்களில் இயற்கையில் அதிக அளவில் கிடைப்பது யுரேனியம் மட்டுமே. பூமியின் நடுவில் இருக்கும் யுரேனியம், தோரியம், பொட்டாசியத்தின் கதிரியக்க வெப்பமே பூமியின் நடுப்பகுதியை திரவமாக வைத்திருக்கிறது.

யுரேனியத்தை அணு உலைகளில் உபயோகிப்பது பற்றி நாளை.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/17 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
May 17, 2012, 4:47:41 PM5/17/12
to panb...@googlegroups.com
எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதியிருக்கிங்க... இதை அப்படியே தொடர்ந்து எழுதுங்க பாஸ். உங்களுக்கு புண்ணியம் சேரும்.

2012/5/17 Raja sankar <errajasa...@gmail.com>


இன்றைக்கு அணு உலையில் இருந்து எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள், அது எடுக்க என்னென்ன தேவை என பார்ப்போம்.

Ramesh Murugan

unread,
May 18, 2012, 5:16:02 AM5/18/12
to panb...@googlegroups.com
பாஸ்,
தொடர்ந்து எழுதுங்க. நீங்களும் நந்தாவும் பேசும்போது எப்படி எல்லாரும் அமைதியா படிச்சிக்கிட்டு இருந்தாங்களோ அந்த மாதிரிதான் இந்த இழையும். சந்தேகம் வரும்போது மட்டும்தான் கேள்வி கேட்பாங்க. அதனால தொடந்து இதே மாதிரி எழுதுங்க.

Raja sankar

unread,
May 18, 2012, 5:17:30 AM5/18/12
to panb...@googlegroups.com
நன்றி ரமேஷ்.

தொடர்ந்து எழுதிடறேன். இதையாவது ஓழுங்கா எழுதி முடிக்க பார்க்குறேன். :-))

ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/18 Ramesh Murugan <rames...@gmail.com>

Raja sankar

unread,
May 19, 2012, 12:18:00 AM5/19/12
to panb...@googlegroups.com
இதிலே யுரேனியத்தை அணு உலையில் ஏற்றுதல்

யுரேனியத்தில் இருக்கும் ஐசோடோப்புகளில் யூ235 தான் அணு உலையில் பயன்படுகிறது என பார்த்தோம். இந்த யூ235 இயற்கையாக கிடைப்பது குறைவு என்பதால் அதை சுத்திகரிக்கவேண்டும். யூரேனிய சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுத்துவிட்டு பின்பு நூற்றுக்கணக்கான செண்ட்ரிபியூஜ்கள் கொண்டு சுத்திகரிப்பாங்க. செண்ட்ரிபியூஜ் என்பது வீட்டுல இருக்கும் வாஷிங்மெஷினில் இருக்கும் டிரையர் போன்றது. அதுக்குள்ள ஒரு பெரிய அண்டா சுத்தும், அதன் சுத்தும் வேகத்தில் எடைக்கு தகுந்தவாறு உள்ளே இருக்கும் பொருள் பிரிக்கப்படும். கயிற்றில் ஒரு கல்லைகட்டி வேகமா சுத்தி கல்லை விட்டா கல் தூர போயி விழும் இல்லையா அது தான் செண்ட்ரிபியூஜிலும் நடக்கும். இந்த சுத்திரிகரிப்பு ரொம்ப கடினம். உலகத்திலேயே சில நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், கனடா, இந்தியா) போன்ற நாடுகளிடம் மட்டுமே இந்த தொழில்நுட்பம் உண்டு. இப்படி சுத்திகரித்து எடுக்கப்பட்ட யுரேனியம் உருளைகளாக வார்க்கபட்டு அணு உலையில் ஏற்றப்படும்.

இங்க எவ்வளவு யுரேனியம் தேவைப்படும் என்ற கேள்வி எழுகிறது? ஒரு அணு உலையில் எவ்வளவு யுரேனியம் இருக்கும்? மொத்தமாகவே ஏத்திடுவாங்களா இல்லை கொஞ்சம் கொஞ்சமா ஏத்துவாங்களா?

இதுக்கு பதில் சொல்ல முன்ன சொன்ன தொடர் வினை என்பது பற்றி நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். தொடர்வினை என்றால் என்ன? ஒரு யுரேனியம் அணு அணுப்பிளவில் மூன்று நியூட்ரான்களை தரும். இந்த மூன்று நீயூட்ரான்களும் இன்னும் மூன்று அணுக்களை தாக்கி 9 நீயூட்ரான்களை தரும். இந்த 9 நீயூட்ரான்கள் 9 அணுக்களை தாக்கி 81 நீயூட்ரான்களை தரும். இப்படியாக நடக்கும் வினையை கட்டுக்குள் வைக்கவேண்டும். ஏட்டுக்கு இது சொல்லப்பட்டால் அணுப்பிளவில் வெளியேறும் எல்லா நீயூட்ரான்களும் போய் இன்னோர் அணுவை தாக்காது. வெளியேறும் வாய்ப்புகள் அதிகம். நீயூட்ரான்கள் மின்காந்த புலத்திற்கு கட்டுப்படாததால் அவற்றை பிடித்து வைக்கமுடியாது. அப்படி வெளியேறும் நீயூட்ரான்களுக்கு பதிலாக நீயூட்ரான்களை தந்துகொண்டே இருக்கவேண்டும். ஒருவேளை எல்லா நீயூட்ரான்களும் அணுக்களை தாக்கிவிட்டால் அதிகமாக வெளிப்படும் நீயூட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் அமைப்பும் இருக்கவேண்டும்.

இந்தமாதிரி இருக்கும் நிலையை சமநிலைத்தனமை என சொல்லலாம். ஆங்கிலத்தில் criiticallity  என சொல்வார்கள். அணு உலை கிரிட்டிகல் நிலையை அடைந்தது என செய்திகளில் கேட்டிருக்கலாம். அந்த கிரிட்டிகாலிட்டி இது தான். இதிலே மூன்று வகை.

1. குறைவான சமநிலைத்தன்மை : ஒன்றிற்கும் நீயூட்ரான் மட்டுமே அடுத்த அணுப்பிளவிற்கு ஏதுவாகிறது. இதிலே அணுபிளவு தொடர்ந்து நடைபெறாது

2. அதிக சமநிலைத்தனமை : ஒன்றிற்கு அதிகமான நீயூட்ரான்கள் அடுத்த அணுப்பிளவிற்கு ஏது. இதிலே அணுப்பிளவு தொடந்து தேவைப்படுதலை மீறி நடைபெறும். ஆனால் இது அணு குண்டு ஆகாது. ஏன் ஆகாது என கீழே விளக்குகிறேன்.

3. சமநிலைத்தன்மை. ஒரே ஒரு நீயூட்ரான் மட்டுமே அடுத்த அணுப்பிளவிற்கு தயாராக இருக்கிறது.

அடிப்படை அணு உலையில் வடிவமைப்பே குறைவான சமநிலைத்தன்மைக்கு போகுமே தவிர அதிக சமநிலைத்தன்மைக்கு போவதாக இருக்காது என்பது தான். அதிகமாக வெளிப்படும் நீயூட்ரான்களை கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருப்பதால் இது போவதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கும். இந்த அமைப்பை ஆங்கிலத்தில் Inherent safety என சொல்லுவார்கள். தமிழிலே அடிப்படையிலே பாதுகாப்பு உடைய அமைப்பு என சொல்லலாம். இதற்கு மாறானது engineered safety,  இந்த அமைப்பிலே ஏதேனும் தவறு அல்லது விபத்து ஏற்படும் பட்சத்தில் வெளியில் இருந்து மட்டுமே அணு உலையை பாதுகாக்க இயலும். இப்போது வரும் அணு உலைகள் அடிப்படையிலேயே பாதுகாப்புடன் வருகின்றன. இதை passive nuclear safety எனவும் சொல்வார்கள்.

அணு குண்டு என்றால் எப்படி இருக்கும்? அணு குண்டில் இருக்கும் அனைத்து யுரேனியம் அணுக்களும் ஒரே நேரத்தில் அணுப்பிளவிற்கு ஈடுபடுத்தப்படும். இதுவே மிகப்பெரும் வெப்பத்தை வெளிப்படுத்தும். இப்படி ஒரு அமைப்பை கொண்டுவருவது கடினம். இந்த கணக்கை போட்டு அதை பல முறை சோதனை செய்தால் மட்டுமே சாத்தியம். இல்லாவிடில் அது அணுகுண்டாக இருக்காது வெறும் புஸ்வாணம் தான்.

இங்கே ஒரு சிறு பெயர் விளக்கம். நான் அணு உலை எனப்படும் ஆங்கிலத்தில் core எனப்படும் யுரேனியம்+நீயூட்ரான் கம்பிகளை கொண்ட அமைப்புதான். ஒட்டு மொத்த அமைப்பையே அல்ல. அது அணு மின்சார நிலையம். அதை பின்பு விளக்குகிறேன்.

அணுவில் இருந்து வெப்பத்தை எடுப்பதில் இருக்கும் சிக்கலை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அணு உலையில் சமநிலைத்தன்மை கொண்டு வருவது எப்படி கடினமோ அப்படி அணு குண்டு தயாரிப்பதும் கடினம். ஆக இந்த சிக்கலான அமைப்பிலே பல வேலைகள் செய்தே வெப்பத்தை தொடர்ந்து தயாரிக்கிறார்கள்.

அணு உலை எப்படி இருக்கும் என்பதற்கு சில படங்களை போடுகிறேன். புரியாத இடங்களை சொல்லுங்கள்.


ராஜசங்கர்
(Rajasankar)

Raja sankar

unread,
May 19, 2012, 1:17:48 AM5/19/12
to panb...@googlegroups.com
அணு உலையில் இருந்து மின்சாரம் எப்படி எடுக்கிறார்கள் என விளக்கும் படம்

File:PressurizedWaterReactor.gif


அணு உலைக்கு உள்ளே என்னென்ன இருக்கும் என்பதை சொல்லும் படம்

File:Reactorvessel.gif

அணு உலையின் உள்ளே எப்படி வினை நடக்கிறது என விளக்கும் படம்

File:Thermal reactor diagram.png



ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/19 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
May 19, 2012, 1:38:11 AM5/19/12
to panb...@googlegroups.com
அணு உலையின் தலைப்பகுதி எப்படி இருக்கும் என்பதன் படம்

File:Reactor Vessel head.jpg


உருக்கப்பட்ட உப்பை எரிபொருளாக கொண்ட அணு உலையின் அமைப்பு

File:MSRE Core.JPG


ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/19 Raja sankar <errajasa...@gmail.com>
அணு உலை எப்படி இருக்கும் என்பதற்கு சில படங்களை போடுகிறேன். புரியாத இடங்களை சொல்லுங்கள்.

Raja sankar

unread,
May 19, 2012, 1:39:38 AM5/19/12
to panb...@googlegroups.com
RMBK எனப்படும் அணு உலை வகையின் எரிபொருள் கம்பிகள்

File:Rbmk fuel rods holder.png

அதன் உலை வடிவமைப்பு

File:RBMK English.PNG

அதன் கட்டுப்படுத்தும் கம்பிகளின் வடிவமைப்பு


File:RBMK Reaktor ChNPP-4.PNG

நீலம் - ஆரம்ப நீயூட்ரான் மூலங்கள்
மஞ்சள் - உலையின் அடிப்பகுதியில் இருக்கும் கட்டுப்படுத்தும் கருவிகள்.
பச்சை - கட்டுப்படுத்தும் கம்பிகள்
சிகப்பு - தானாக இயங்கும் கட்டுப்படுத்தும் கம்பிகள்

ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/19 Raja sankar <errajasa...@gmail.com>
அணு உலை எப்படி இருக்கும் என்பதற்கு சில படங்களை போடுகிறேன். புரியாத இடங்களை சொல்லுங்கள்.

Raja sankar

unread,
May 19, 2012, 1:41:22 AM5/19/12
to panb...@googlegroups.com
லித்துவேனியா நாட்டில் இருக்கும் இக்கலீனா அணு உலையின் உலை அறை.

File:RBMK reactor from Ignalina.gif


செர்னோர்வ் கதிரொளி எனப்படும் ஒளியில் ஒளிரும் அமெரிக்க ஓரிகான் மாநிலத்தில் இருக்கும் ரீட் கல்லூரியில் இருக்கும் ஆராய்ச்சி அணு உலை

File:Cerenkov Effect.jpg

அமெரிக்காவில் நார்த் கரோலினா மாநில பல்கலைகழத்தில் இருக்கும் அணு உலையின் கோர்


File:Pulstar2.jpg



ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/19 Raja sankar <errajasa...@gmail.com>
அணு உலை எப்படி இருக்கும் என்பதற்கு சில படங்களை போடுகிறேன். புரியாத இடங்களை சொல்லுங்கள்.

Raja sankar

unread,
May 19, 2012, 11:19:27 AM5/19/12
to panb...@googlegroups.com
அமெரிக்காவில் கல்லூரிகளில் அணு உலை இருக்கிறது என்பது கொஞ்சம் ஆச்சரியமானதாகவும் இருக்கிறதா? சிலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். என்னது அணு உலையைக்கொண்டு போய் ஒரு கல்லூரியில் வைப்பார்களா? என்று.

எக்ஸ்ரே எந்திரம், எம் ஆர் ஐ போன்று அதுவும் ஒரு எந்திரமே. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டால் கல்லூரியில்மட்டும் அல்ல தனியார் கம்பெனிகள் கூட அதை உபயோகப்படுத்தலாம். சமீபத்தில் திவாலான கோடாக் இப்படி ஒரு வேலையை செய்து வந்தது இப்போது தான் தெரிந்திருக்கிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல பல நாடுகளில் ஆராய்ச்சி அணு உலைகள் கல்லூரிகளில் அணு உலைகள் உண்டு. கனடா, சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த அணு உலைகளை மற்ற நாடுகளுக்கு கொடுக்கின்றன.

http://en.wikipedia.org/wiki/Research_reactor

டிரிகா எனப்படும் அணு ஆராய்ச்சி உலையை உலகின் பல இடங்களில் காணலாம்.

http://en.wikipedia.org/wiki/TRIGA


ஒருவேளை அந்த அமைப்பு இங்கிருந்திருந்தால் எல்லோரையும் கூட்டிக்கொண்டு போய் காண்பித்திருக்கலாம். அணு உலையை பற்றிய தேவையில்லாத பயமும் குறைந்திருக்கும்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/19 Raja sankar <errajasa...@gmail.com>
அமெரிக்காவில் நார்த் கரோலினா மாநில பல்கலைகழத்தில் இருக்கும் அணு உலையின் கோர்

Ramesh Murugan

unread,
May 19, 2012, 11:55:45 AM5/19/12
to panb...@googlegroups.com
நல்ல விளக்கம் பாஸ்.
உண்மையிலேயே இந்த இழை ஓடுறதுல கொஞ்சம் சந்தோசமா இருக்குது.

கேள்வியின் அடிப்படையில் இந்த இழை ஓடுவதால், அடுத்த கட்டத்துக்கு நகர்விங்கன்னு நினைக்கிறேன். தமிழகம் முழுக்க விவாதப் பொருளாயிருக்கும் அணுவுலை விபத்தைப் பற்றியும் விளக்கிடுங்க.

என்னோட இந்த பின்னூட்டம் உங்கள் தொடருக்கு தடங்கலாக இருக்காது. உங்க விருப்பப்படியே இந்த தொடரைக் கொண்டுபோங்க. அப்படியே எங்கள் இடைச்சொருகல் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்திடுங்க பாஸ்.

2012/5/19 Raja sankar <errajasa...@gmail.com>
அணு உலையில் இருந்து மின்சாரம் எப்படி எடுக்கிறார்கள் என விளக்கும் படம்


File:PressurizedWaterReactor.gif


அணு உலைக்கு உள்ளே என்னென்ன இருக்கும் என்பதை சொல்லும் படம்


Ramesh Murugan

unread,
May 19, 2012, 11:58:22 AM5/19/12
to panb...@googlegroups.com
படத்தை வச்சே அணுவுலை எப்படி இருக்கும்ங்கிறதை கணிக்க முடியுது. இதுல ஏதாவது முக்கியமா சொல்ல வேண்டிய விசயம் இருந்தா மறக்காம சொல்லிடுங்க பாஸ். அந்த தொழில்நுட்பம் எங்களுக்கும் புரியாட்டியும் பரவாயில்லை.

2012/5/19 Raja sankar <errajasa...@gmail.com>
லித்துவேனியா நாட்டில் இருக்கும் இக்கலீனா அணு உலையின் உலை அறை.


Ramesh Murugan

unread,
May 19, 2012, 12:01:06 PM5/19/12
to panb...@googlegroups.com
ஏற்கனவே அட்டாச் பண்ணியிருக்கிற படத்தை வச்சே அணுவுலையை தேவைக்கேற்ற அளவில் (size) அமைக்க முடியும்ங்கிறது புரியுது. ஆனா இந்தளவுக்கு சகஜமா புழங்க முடியும்ங்கிற விசயம் ஆச்சரியத்தைத் தருது. கூடங்குளம் மாதிரியான பெரிய ப்ளாண்டுக்கும் இந்த மாதிரியான சின்ன ப்ளாண்டுக்கும் சேஃப்ட்டி ப்ரிகாசிசன் ஒன்னுதானே??? இதுல கதிர்வீச்சு வெளியேறாதா??? பாதுகாப்பு அம்சமும் ஒரேமாதிரியானதுதானா???

2012/5/19 Raja sankar <errajasa...@gmail.com>
அமெரிக்காவில் கல்லூரிகளில் அணு உலை இருக்கிறது என்பது கொஞ்சம் ஆச்சரியமானதாகவும் இருக்கிறதா? சிலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். என்னது அணு உலையைக்கொண்டு போய் ஒரு கல்லூரியில் வைப்பார்களா? என்று.

Raja sankar

unread,
May 20, 2012, 8:27:04 AM5/20/12
to panb...@googlegroups.com
சேப்டி ஒன்னு தான். இயக்கும் முறையும் ஒன்னுதான். ஆனா என்ன வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து யார் யாரை கிட்ட அனுமதிக்கலாம் என்பது மாறுபடும்.

உதாரணத்திற்கு 50 சிசி டூவீலர் வண்டிய 16 வயசு ஆளுங்க கூட ஓட்டலாம். 100 சிசி டூவீலர்ன்னா லைசென்ஸு எடுக்கனும். கார்னா அதுக்கு தனி லைசென்ஸு. லாரின்னா தனி லைசென்ஸு கூடவே பேட்ச் எடுக்கனும். இப்படி வண்டிய பொறுத்து லைசென்ஸு மாறுவது மாதிரி அணு உலையும். :-)

நம்மவீட்டு பிரிட்ஜ் அளவுக்கும் அணு உலை வைக்கலாம். ஒரு அப்பார்ட்மெண்ட் காம்பெளக்ஸ் அளவுக்கும் அணு உலை வைக்கலாம்.

தொழிற்சாலையில் இருக்கும் பாய்லர் கிட்ட போகவே லைசென்ஸ் வேணும் கிறது இண்டஸ்டிரியல் சேப்டி. வீட்ல தண்ணி யார்வேண்டுமனாலும் கொதிக்க வைக்கலாம். குக்கர்ல சாதம் வைக்கலாம். :-)

அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறாது. அப்படி வெளியேறினா அங்க யாரும் வேலை செய்யமுடியாது. யுரேனியமே பாதிக்கப்படும் அளவு கதிர்வீச்சு வெளியிடாத தனிமம் தான். அணு உலை தயாரிக்கும் போதே இதுக்கெல்லாம் வழிமுறைகள் வச்சிட்டு தான் கட்டுவாங்க.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/19 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
May 20, 2012, 3:39:30 PM5/20/12
to panb...@googlegroups.com
விளக்கத்துக்கு நன்றி பாஸ்..
அடுத்ததை தொடருங்க..

2012/5/20 Raja sankar <errajasa...@gmail.com>

சேப்டி ஒன்னு தான். இயக்கும் முறையும் ஒன்னுதான். ஆனா என்ன வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து யார் யாரை கிட்ட அனுமதிக்கலாம் என்பது மாறுபடும்.

Raja sankar

unread,
May 22, 2012, 1:56:53 AM5/22/12
to panb...@googlegroups.com
இதிலே நீயூட்ரான் மூலங்கள் மற்றும் நீயூட்ரான் கட்டுப்படுத்துவான்கள்.

எப்படி மரமோ, டீசலோ எரிய ஆக்சிஜன் தேவைப்படுகிறதோ அப்படி அணுப்பிளவு தொடர்ந்து நடக்க நீயூட்ரான் தேவை. இந்த நீயூட்ரான் இரண்டு வகைப்படும்.

முதல்நிலை மூலம்: இவை அணு உலையை ஆரம்பிக்கும் போது மட்டும் வைத்திருந்து பின்பு நீக்கிவிடுவார்கள். இவை கலிபோர்னியம் 252, புளுட்டோனியம்-பெரிலியம் கலவை போன்றவை

இரண்டாம் நிலை மூலம்: இவை உள்ளேயே இருக்கும். ஆன்டிமொனி-பெல்லூரியம் கலவை, போரான் போன்றவை உபயோகப்படும்.

அடுத்து நீயுட்ரான் கட்டுப்படுத்துவான்கள்

இவை நீயுட்ரான்களை உறிஞ்சி அணுப்பிளவு சரியான முறையில் நடக்க உதவுகின்றன.

பார்க்க படம்




[Chain reaction with moderator.]



ராஜசங்கர்
(Rajasankar)

Raja sankar

unread,
May 22, 2012, 2:19:57 AM5/22/12
to panb...@googlegroups.com
இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு இந்த இழைக்கு லீவு. காரணம் : நான் ஊருக்கு போவதால்.

ஒருவேளை ஊரில் நெட் இருந்தால் தொடரும். இல்லையேல் அடுத்த செவ்வாய்கிழமை தான்.

ராஜசங்கர்
(Rajasankar)

காமேஷ்

unread,
May 22, 2012, 2:24:34 AM5/22/12
to panb...@googlegroups.com
அப்படியா வாழ்த்துகள் ,
நல்லபடியா போயிட்டு வந்து பயண கட்டுரை போடுங்க....

உங்க ஊர் பக்கம் தானே இடிந்தகரையும் அப்படியே ஒரு எட்டு பாத்திட்டு வந்து
உண்மையில் உண்மை நிலவரத்தை எழுதவும்.





2012/5/22 Raja sankar <errajasa...@gmail.com>

செல்வன்

unread,
May 22, 2012, 2:31:28 AM5/22/12
to panb...@googlegroups.com


2012/5/22 Raja sankar <errajasa...@gmail.com>

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு இந்த இழைக்கு லீவு. காரணம் : நான் ஊருக்கு போவதால்.

ஒருவேளை ஊரில் நெட் இருந்தால் தொடரும். இல்லையேல் அடுத்த செவ்வாய்கிழமை தான்.


Have fun.

--
செல்வன்


ஸ் பெ

unread,
May 22, 2012, 2:49:50 AM5/22/12
to panb...@googlegroups.com
What a inner punch :)

2012/5/22 காமேஷ் <kame...@gmail.com>

அப்படியா வாழ்த்துகள் ,
நல்லபடியா போயிட்டு வந்து பயண கட்டுரை போடுங்க....

உங்க ஊர் பக்கம் தானே இடிந்தகரையும் அப்படியே ஒரு எட்டு பாத்திட்டு வந்து
உண்மையில் உண்மை நிலவரத்தை எழுதவும்.



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்; ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கவுரவம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Srimoorthy.S

unread,
May 22, 2012, 3:04:10 AM5/22/12
to panb...@googlegroups.com

இலக்கணப்பிழை உள்ளது ஐயா. A க்கு பதில் an வர வேண்டும்.
:)

Ramesh Murugan

unread,
May 22, 2012, 1:15:54 PM5/22/12
to panb...@googlegroups.com
பாஸ்,
தமிழ் சிறகுகள் குழுமத்தில் சாகி ஐயா அணு, அண்டம், அறிவியல்னு ஒரு இழையை தொடங்கியிருந்தாரு. படிக்க படிக்க செம இண்டெரெஸ்ட்டிங்கா இருந்துச்சி. சம்மந்தப்பட்ட ப்ளாக்கில் போயி பார்த்தா மயங்கியே விழுந்திடுவோம் அவ்ளோ தகவல் இருக்குது. படிக்கிறவங்களிக்கு சோம்பல் வராதபடி மிக நகைச்சுவையா அதே நேரம் அறிவியல் தகவல்களை கொட்டிக் குவிச்சு வச்சிருக்காரு இந்த சமுத்ரா. நேரமிருந்தா நீங்களும் போயி படிங்க.

Raja sankar

unread,
Jun 8, 2012, 2:18:59 PM6/8/12
to panb...@googlegroups.com
இன்னைக்கு இந்த இழைய தூசி தட்டறது முடிவு பண்ணியாச்சு. :-)

நான் ஊருக்கு போன சமயத்தில் மாற்று வழி மின்சாரம் பற்றி கொஞ்சம் காரசாரமா விவாதம் ஓடியிருக்கு. அதுக்கும் கொஞ்சம் விரிவா பதில் சொல்லனும்.

அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்கள் பெரும்பாலானோர் அணு உலையை ஆதரிப்பவர்களை கொடூரர்களாக, மனித உயிர்களை பலி கொடுத்து தன்னுடைய சுயநலத்தை அடைபவர்களாக சித்தரிப்பது வழக்கமாக நடக்கிறது. அணு உலைக்கு ஆதரவு என சொன்னாலே அடுத்த நிமிடமே அணு குண்டு நாட்டின் மீது வீசப்படுவது போன்ற சித்தரிப்பு நடக்கும் போது ஏன் வேண்டும் அணு உலை என சொல்லியாகவேண்டும்.

கூடவே அணு உலையை தயாரித்து இயக்கி அதிலே வேலை செய்யும் அனைவரும் முட்டாள்களா? அவர்களுக்கு இது எதுவுமே தெரியாதா? மாற்று வழி இருக்கும் போது அதிலே போகவேண்டியது தானே எதற்கு இந்த வேண்டாத வெட்டி வேலை போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டும்.

பதிலை ஆற்றலின் அழியா விதியில் இருந்து ஆரம்பிப்போம். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும். இந்த விதி பெரும்பாலானோருக்கு தெரியும் என நினைக்கிறேன். :-)

இங்கே இரண்டு கேள்விகள். அதிகமாக கிடைக்கும் ஆற்றல் எது? அதை எதற்கு இன்னோர் ஆற்றலாக மாற்றவேண்டும்?

இந்த உலகத்தில் அதிகமாக கிடைப்பது வெப்பம். அது சூரிய ஒளி என சொல்லித்தெரியவேண்டியதில்லை. அடுத்து கிடைப்பது வேதிவினை ஆற்றல். மரத்தை எரிப்பதில் இருந்து டீசல், பெட்ரோலை எரிப்பது வரை எல்லாம் வேதிவினையே.
இதுவும் வெப்பமாகவே மாறும். சரி எதுக்கு இதை இன்னோர் ஆற்றலாக மாற்றவேண்டும்?

மனித குல வரலாற்றிலே போன இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வரை இந்த ஆற்றலை மாற்றவேண்டிய அவசியம் வரவே இல்லை. வெப்பத்தை அப்படியே பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். ஆற்றல் மாற்றத்தின் முதல் அவசியம் நீராவி இயந்திரத்தின் மூலம் வருகிறது. அதிலே வெப்பத்தை சுழலும் ஆற்றலாக மாற்றினார்கள். பின்பு பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதை கொண்டு வெப்ப இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் சாதனங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு பெரும்பாலான வெப்பம் மின்சாரம் ஆக்கவே செலவிடப்படுகிறது.

இங்க இன்னும் சிலகேள்விகள் கேக்கனும்.

இப்படி ஒரு ஆற்றலை இன்னோன்றாக மாற்றும் போது முழுவதுமாக மாறுமா இல்லை ஆற்றல் வீணாகுமா அதாவது பயன்படாமல் போகுமா? கூடவே ஏன் எல்லாத்தையும் மின்சாரம் ஆகவே மாத்தனும்? வீட்டுக்கொரு டீசல் என்ஜின் வச்சு அதன் மூலம் பேன், மிக்சி, கிரைண்டர், ஏசி கம்ப்ரஸர், பிர்ட்ஜ் கம்ப்ரஸர் எல்லாத்தையும் பெல்ட் போட்டு சுத்த விடக்கூடாதா? வீட்டுக்கொரு சோலார் பேனல் வைக்கலாம் என்றால் வீட்டுக்கொரு காற்றாலையும் டீசல் என்ஜினும் வைக்கலாம் அல்லவா?. அப்படிப்பட்ட யோசனை ஏன் உலகில் இருக்கும் அறிவாளிகளுக்கு தோணலை? :-)

ஏன் தோனலைன்னா வெப்ப எந்திரங்களின் பயனுறு திறன் மிகவும் குறைவு. டீசல் எந்திரங்கள் 30 சதம் தரும். அதிகப்படியா 50%. இது என்ஜினில் இருந்து வெளியே வரும் போது தான். அப்புறம் சக்கரத்தை சுழலவச்சு வண்டிய தள்ள வைக்கும் போது 10% சதம் தான் வரும். டுடால்ப் டீசல் 1892 இல் முதல் டீசல் என்ஜினை கண்டுபிடித்ததில் இருந்து இன்னைக்கு வரைக்கும் இப்படித்தான் இருக்கு. :-)
ஆனா மின்சாரத்தை வெப்பமாக மாற்றும் போதோ சுழல் ஆற்றலாக மாற்றும் போதோ 90% சதவீதம் வரை கிடைக்கும்.

அடுத்து வெப்பத்தை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கடத்துவதோ அல்லது அந்த தொழிற்சாலைகளில் அருகில் மனிதர்கள் வசிப்பதோ முடியாத காரியம். மின்சாரம் என்றால் கடத்தல் வெப்பத்தை விட மிக எளிது.

இப்போ வெப்பத்தை நேரிடையாக மின்சாரமாக மாற்றும் அமைப்பு ஒன்னே ஒன்னு தான். அது சோலார் பேனல். அதை விட்டா சுழல் இயக்கத்தை கொண்டு தான் மின்சாரம் தயாரிக்கமுடியும். சுழல் இயக்கம் தர்ற டர்பனை நீராவி கொண்டோ அதிக உயரத்தில் இருந்து வரும் தண்ணீர் கொண்டோ சுழல வைக்கலாம். இல்லாவிடில் டீசல்/பெட்ரோல் என்ஜின் கொண்டு சுழல வைக்கலாம். நீராவி கொண்டு தான் டர்பைன் சுழல வச்சு அணு உலையிலும் மின்சாரம் எடுக்கப்படுதுன்னு முன்பே சொல்லியிருக்கேன்.

டீசல் என்ஜின் தான் ஒரு நூத்தி பத்து இருபவது வருசமா மாறலை அப்படீன்னா சோலார் பேனலும் அப்படித்தான் இருக்கு. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற முடியும் என கண்டுபிடிச்சும் நூறு வருசத்துக்கு மேலாகுது. ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு கிடைச்சதும் இந்த கண்டுபிடிப்புக்கு தான். ஆனா இன்னமும் சோலார் பேனலில் பயனுறு திறன் 20% வீதத்தை தாண்டல. அதிலே ஒரு சதவீதம் கூட்ட முயற்சி செய்த அமெரிக்க கம்பெனி போன வருடம் திவால் ஆனது.

சரி இன்னும் ஏதாவது இருக்கா? இருக்கு. டீசல், பெட்ரோல், நிலக்கரி இவற்றை எரித்தால் வரும் மாசை விட அவை முக்கியமான ஒன்றை தின்று தீர்க்கின்றன. அது உயிர் வாழ தேவையான ஆக்சிஜன். ஆக்சிஜன் அளவு குறைய குறைய நோய்கள் வருவது பல மடங்கு பெருகும். சென்னையில் இருக்கும் காற்று அசுத்தத்தாலே பெரும்பாலான நோய்கள் வருகின்றன என சமீபத்திலே வந்த ஆய்வு ஒன்று சொல்லியது.

ஆகவே தான் இவற்றுக்கு மாற்றாக அணு உலை முன் வைக்கப்படுகிறது. அணு உலையின் இருந்து கிடைக்கும் வெப்பத்திற்கு ஆக்சிஜன் தேவையில்லை. புகை போன்ற பிரச்சினைகள் கிடையா. பாதுகாப்பாக கட்டினால் இயக்கினால் சுத்தமான சுகாதாரமான நோய் நொடி தராத மின்சாரம் கிடைக்கும்.

இதனாலே தான் ஆவ்சம் அமெரிக்கா 140 அணு உலைகளை இயக்குகிறது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலே அணு உலை வைத்திருக்கிறது. சீனாவும் அதன் வழியிலே போய் 120 அணு உலைகளை கட்டப்போகிறது.

இதை முன்னெடுப்பவர்கள் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதை தடுக்க முயல்கிறார்கள் என பாராட்டப்படவேண்டுமே தவிர கொலைகாரர்களாக சித்தரிக்கப்படக்கூடாது.

அணு உலையின் பாதுகாப்பு பற்றி நாளை.

ராஜசங்கர்
(Rajasankar)


Prakash Sugumaran

unread,
Jun 8, 2012, 2:44:03 PM6/8/12
to panb...@googlegroups.com
அணு உலை வேண்டாம் எனச் சொன்னாலே அவர்கள் அறிவில்லாத, காட்டுவாசிகள் என கருதும் நிலை என ஒன்றும் இருக்கிறது. ஏ. சி. இல்லாமல் வாழ்வதே வசதியில்லாத, வாழத் தெரியாத, படிப்பறிவற்ற முட்டாள்களின் வாழ்க்கை எனக் கருதும் பலர் உள்ள நிலையில், அணு உலைக்குள் வேலை செய்யும் புத்திசாலிகளின் மனநிலை இன்னும் விகாரமாக திரிந்திருக்கும் வாய்ப்பு உள்ளதல்லவா ? ஏற்கனவே வானியலை ஆராய்கிறேன் எனச் சொல்லி மக்களை தரித்திரத்தில் வீழ்த்தி விட்ட விஞ்சான உலகத்தவர்க்கு.. மானிடனே நீ வாழ்வது அதனால் அல்ல.. அதெல்லாம் இல்லாதபோதும் நீயும், உன் மூதாதையரும் மிகச் சிறப்பாக வாழ்ந்தவர்கள்.. எனச் சொல்லி புரிய வைப்பது எப்படி ?
 


 
2012/6/8 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Prakash Sugumaran

unread,
Jun 8, 2012, 2:51:49 PM6/8/12
to panb...@googlegroups.com
உன் போட்டி எதனுடன் ?
சக மனிதனை விட நான் புத்திசாலி என காட்டிக் கொள்வதிலா ?
சக மனிதர்களை கொண்ட நாட்டை விட உயர்ந்தவன் என சொல்வதிலா ?
இல்லை பிற நாட்டினரிடமிருந்து தற்காத்துக் கொள்வதிலா ?
பிற நாட்டிடமிருந்து தற்காத்துக் கொள்வதென்ற பெயரில் சக மனிதனை கொல்வதிலா ? உன் போட்டி எதனுடன் ?
நீ முதலில் நிம்மதியாக வாழு..
முடிந்தால் பிறருக்கும் அதன் பயனை விளக்கி அவர்களும் வாழ உதவு..

2012/6/9 Prakash Sugumaran <praka...@gmail.com>

செல்வன்

unread,
Jun 8, 2012, 2:56:09 PM6/8/12
to panb...@googlegroups.com
பயனுள்ள இழை ராஜாசங்கர். ஓரிரு வாரமாக நிறைய இழைகள் படிக்காமல் விட்டுபோனது. இதை முதலிலிருந்து படிக்கவேண்டும்.

2012/6/8 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Srimoorthy.S

unread,
Jun 8, 2012, 3:10:27 PM6/8/12
to panb...@googlegroups.com

அறிவியலின் சில அடிப்படை விதிகளை போற போக்குல அம்புட்டுதான்டா இதுங்கற ரேஞ்சுல மிகச்சாதாரணமா சுருக்கமா இந்த மடல்ல சொல்லி இருக்கீங்க. அருமை. இவற்றை நான் சொல்லி இருந்தேன்னா எப்படி சொதப்பி இருப்பேன்னு என்னால கற்பனை பண்ணி கூட பாக்க முடியலை.

டீசல், பெட்ரோல் எஞ்சின்களில் சுத்தமா எந்த முன்னேற்றமும் இல்லைன்னு சொல்ல முடியாது. கற்பனையில் சிக்கா அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கு எனும் போதிலும் நீங்க சொன்ன எஃபிசியன்ஸி என்பது இன்னமும் முன்ன பின்ன 30% லயே இருப்பது ஒப்புக்கொள்ளக்கூடியது. எபிசியன்சி அதிகமாகவில்லையெனினும், வேறு வகையில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது. மாசுக்குறைவு எனும் வகையில்.

ஒளி, காற்று மின்சாரத்தின் உற்பத்தி திறன் என்பது 20 சதவீதமெனிலும், அது நம்மால் மாற்ற முடியா இயற்கை சூழலினை மூலாதரமாகக் கொண்டு உபயோகப்படுத்திக்கொள்வது.
மற்ற அனைத்து கன்வென்ஷனல் உற்பத்தி முறைகளும் 50% ஏன் 100% ஏ ஆயினும் சூழலை மாற்றி நம் தேவைக்கு பயன்படுத்திக்கொள்வது.

பயனுறு திறன் (பயங்கரமா தமிழ்ப்படுத்தறேனோ???)  அதாவது எஃபிஸியன்ஸி என்பதைக் கொண்டு அணு உலைதான் மிகச்சிறந்தது என எப்படி சொல்ல வருகிறீர்கள் என தெரியவில்லை. எரிபொருளின் ஆபத்தைப் பொருத்து அதற்கான பாதுகாப்புகளும் வெளிப்படும் சக்தியில் ஒரு பங்கை செலவிடப்பட்டே பெறப்படுகிறது என்பது பொறியலில் மீற முடியாத, பொதுவில் சொல்லப் படாதவொரு நிகழ் வழக்கம்.

சிம்பிளா சொல்லணும்னா பெட்ரோல் டீசலை தேக்க 1 மிமீ திக்கான இரும்புக் கலம் இருந்தாலே அதன் அபாயகரத்தை குறைக்க போதுமானது. ஆனால் புலுட்டோனியத்தை பயன்படுத்தும்போது அப்படிப்பட்ட சாதாரண கலத்தில் வைக்கமுடியுமா? பெட்ரோலை விட அணுப்பிளவு அதிக பட்ச வெப்பத்தை  வெளிப்படுது என்பதைக் கொண்டு மட்டும் சக்தி அதிகம் என முடிவுக்கு வர இயலாதே.

அதனால் அணு மின்சாரமே அதிகபட்ச பயனுறு திறன் கொண்டது என்பதை புரிந்து கொள்ள எனக்கு மேலும் சில காலாவகாசமும், உங்கள் உதவியும் தேவைப்படலாம்.

உங்க கடைசி மடலைத்தான் படிச்சிருக்கேன். முன் மடல்களையும் படிக்க ஆரம்பிக்கிறேன்.

Srimoorthy.S

unread,
Jun 8, 2012, 3:25:09 PM6/8/12
to panb...@googlegroups.com

அணுப்பிணைவின் மூலம் மின்சாரம் எடுக்கும் வேலை எப்பவோ தொடங்கியாச்சு. ஆனால் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை.

மூலப்பொருள்கள் இருபங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன். அட தண்ணிதாங்க :)
பல செயல்முறை சிக்கல்களால் அது சிறு அளவில் மட்டுமே குறிப்பாக வாகனங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

இம்முறையானது நீங்க சொன்னதுக்கு மாறா அணுப்பிளவை விட மிகவும் பாதுகாப்பானது.

On May 16, 2012 6:25 AM, "Raja sankar" <errajasa...@gmail.com> wrote:

இதுல மின்சாரம் எடுக்க இன்னும் ஒரு ஐம்பது வருசமாவது ஆகும் என நினைக்கிறேன். நிலைபடுத்திக்கொண்ட அணுப்பிணைவு என்பதை அவ்வளவு எளிதில் பூமியில் கொண்டு வந்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஒருவேளை இயற்பியலின் இன்னும் அடிப்படை ஆன ஹிக்ஸ் போசான் போன்றவற்றை தெரிந்தால் அழுத்தம்/வெப்பம் மூலம் இணைக்காமல் வேறு ஏதாவது வழிகொண்டு இணைக்கலாம்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/5/16 Ram Kameswaran <ram.kam...@gmail.com>
அணுச்சேர்க்கை, அல்லது அணுப்பிணைவு எனப்படும் Nuclear Fusion மூலம் இன்னும் மின்சார உற்பத்தி நிகழவில்லை என்றாலும் அணுப்பிணைவு பரிசோதனை உலை ITER பிரான்ஸில் உள்ள காடராஷ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் (2030- 40) இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.

Srimoorthy.S

unread,
Jun 8, 2012, 3:51:03 PM6/8/12
to panb...@googlegroups.com

எதிர்த்தகவலை அவ்வப்போது கொடுப்பது தகவலுக்காக மட்டுமே,  எதிர்ப்பதற்கல்ல என்பதை நான் சொல்லாமல் புரிந்துகொண்டு தொடர்வீராக.

Raja sankar

unread,
Jun 8, 2012, 11:17:32 PM6/8/12
to panb...@googlegroups.com
எதிர்த்தகவல் என்பதை விட அணு உலையோ ஒன்றும் கொடூரமானது அல்ல. டீசல் என்ஜின் ஒன்றும் தூயதும் அல்ல என புரிந்து கொண்டால் போதும்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/9 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jun 9, 2012, 4:24:13 AM6/9/12
to panb...@googlegroups.com

புனல், ஒளி, காற்று மின் உற்பத்திகளை விட மற்றவனைத்தும் மாசுக்காரணிகளாக உள்ளன என்பதைப் புரிந்துள்ளேன். தொடருங்கள்.

Ramesh Murugan

unread,
Jun 9, 2012, 1:32:19 PM6/9/12
to panb...@googlegroups.com
தொடருங்க பாஸ்...
கடந்த ஒருவாரமா சமுத்ரசுகியோட ப்ளாக்கைத்தான் படிச்சிக்கிட்டு இருந்தேன்.. பண்புடனில் மற்றுமொரு நல்ல இழைஇது. தொடந்து எழுதுங்க.

2012/6/8 Raja sankar <errajasa...@gmail.com>

இன்னைக்கு இந்த இழைய தூசி தட்டறது முடிவு பண்ணியாச்சு. :-)

Ramesh Murugan

unread,
Jun 9, 2012, 1:35:13 PM6/9/12
to panb...@googlegroups.com
பாஸ்,
அணுவுலையின் பின்புலத்திலிருக்கும் அரசியலைப்பற்றி பேச பல இழைகள் பண்புடனில் இருக்குது. குறிப்பாக இந்த இழையில் தொழிநுட்பம் சம்மந்தமாக மட்டும் பேசினால் நலம்னு டைடில் போட்ட பின்னாடிதான் தொடங்கினாங்க. ப்ளீஸ், நம்ம கும்மிகளை வேற இழையில் வச்சிக்கலாம்.

2012/6/8 Prakash Sugumaran <praka...@gmail.com>

உன் போட்டி எதனுடன் ?
சக மனிதனை விட நான் புத்திசாலி என காட்டிக் கொள்வதிலா ?
சக மனிதர்களை கொண்ட நாட்டை விட உயர்ந்தவன் என சொல்வதிலா ?
இல்லை பிற நாட்டினரிடமிருந்து தற்காத்துக் கொள்வதிலா ?
பிற நாட்டிடமிருந்து தற்காத்துக் கொள்வதென்ற பெயரில் சக மனிதனை கொல்வதிலா ? உன் போட்டி எதனுடன் ?
நீ முதலில் நிம்மதியாக வாழு..
முடிந்தால் பிறருக்கும் அதன் பயனை விளக்கி அவர்களும் வாழ உதவு..


Ramesh Murugan

unread,
Jun 9, 2012, 1:39:51 PM6/9/12
to panb...@googlegroups.com

பெட்ரோல் சல்லிசான விலையில் கிடைக்கும் சவுதியில்கூட அணுவுலை பற்றி பேசுறது ஆச்சரியமாத்தான் இருக்குது 

Prakash Sugumaran

unread,
Jun 9, 2012, 1:45:27 PM6/9/12
to panb...@googlegroups.com
உங்க தொழில் நுட்ப அறிவு போட்டி யாருடன் ? அது விலை போவது யாரிடம் ? என முதல்ல கொஞ்சம் விளக்கமா சொல்லிட்டு அந்த நுட்பத்த பத்தி பலரும் அறிய பேசலாம் பாஸ். தொழில் நுட்ப அறிவு ஜீவின்னு சொல்லப்பட்ட, அப்போதைக்கு வேற வழியில்லாம ஆதிக்க சக்திகளுக்கு அடங்கி ( கவனிக்கவும் ), அணுமின் உற்பத்திக்கு ஆதரவு தெரிவிச்ச மாண்புமிகு முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் நேத்து விட்ட அறிக்கைய படிச்சீங்களா பாஸ் ? 2020 ல் இந்தியா வல்லரசாகிடும்னு சொன்னவர், இப்போ பேச்சை மாத்திகிட்டு, இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் சூரிய மின்சாரம் 2020 ல் நிச்சயம் கிடைக்கும்னு சொல்லியிருக்கார். ஒய் ?   

2012/6/9 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Prakash Sugumaran

unread,
Jun 9, 2012, 1:46:52 PM6/9/12
to panb...@googlegroups.com
தவிர இது போன்ற இழைகளில் இனி என் பதிவு இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2012/6/9 Prakash Sugumaran <praka...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jun 10, 2012, 4:06:09 AM6/10/12
to panb...@googlegroups.com

கான்செப்டுகளை விளக்கும் இடத்தில் எதார்த்தத்தை பேசாதீர்கள் யாரும். எதார்த்தத்தைப் பேச பல இழைகள் உள்ளன.

இழை தொடர்வதை நானும் விரும்புகிறேன்.

Snabak Vinod (SV)

unread,
Jun 10, 2012, 10:33:29 PM6/10/12
to panb...@googlegroups.com


2012/6/10 Srimoorthy.S <srimoo...@gmail.com>

கான்செப்டுகளை விளக்கும் இடத்தில் எதார்த்தத்தை பேசாதீர்கள் யாரும்

 
:))))) 

Srimoorthy.S

unread,
Jun 13, 2012, 3:33:02 AM6/13/12
to panb...@googlegroups.com

Google

*404.* That’s an error.
The requested URL / was not found on this server. That’s all we know.

கூகிள் ஏன் இப்படி சொல்லுது?
லிங்கை விட்டுட்டு டைப் பண்ணியும் பாத்தேன். அப்பவும் இதே எர்ரர்தான்.

இனியவன்

unread,
Jun 13, 2012, 3:45:31 AM6/13/12
to panb...@googlegroups.com
எனக்கும் நேற்று இதே அனுபவம். நான் சமுத்ராவின் புதிய ரசிகன். 2010 தொடங்கி அவரின் எல்லா பழைய பதிவுகளையும் ஒவ்வொன்றாய் படித்து வருகிறேன். நேற்று முழுவதும் தளம் திறக்கவில்லை. செம டென்சன்.

இன்று சரியாகிவிட்டது. நான் செய்த முதல் வேலை "அணு, அண்டம், அறிவியல்" எல்லா பதிவுகளையும் (சுமார் 68) காப்பி செய்து ஒரு வேர்டு டாக்குமென்ட்டில் save பண்ணிக் கொண்டேன். (For off line reading).

A must read blog.

2012/6/13 Srimoorthy.S <srimoo...@gmail.com>



--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர
மாட்டேன். துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்]

Srimoorthy.S

unread,
Jun 13, 2012, 3:56:22 AM6/13/12
to panb...@googlegroups.com

இப்பவும் திறக்கல.
முடிஞ்சா அந்த வேர்டு ஃபைலை கர்ட்டசி போட்டு குழுமத்தில் பகிரவும்.

இனியவன்

unread,
Jun 13, 2012, 4:10:19 AM6/13/12
to panb...@googlegroups.com
By all means.

But there are some points to note.

1. The posts are saved in descending way. i.e 68,67,66... It will be a little annoying unless we modify the file to 1,2,3... order.
 
2. Reading in blog is a visual experience. But in a word file...???
 if i will be given time, i could make it a nice PDF version for a good reading experience. (But what if samudra plan to bring it a "PAPER BOOK"?)
 

Anyway here is your book. Enjoy.

2012/6/13 Srimoorthy.S <srimoo...@gmail.com>

இப்பவும் திறக்கல.
முடிஞ்சா அந்த வேர்டு ஃபைலை கர்ட்டசி போட்டு குழுமத்தில் பகிரவும்.

சமுத்ரா.docx

Raja sankar

unread,
Jun 21, 2012, 10:07:58 AM6/21/12
to panb...@googlegroups.com
இந்த இழைய திரும்பவும் தூசி தட்டுவோம். :-)

இனி அணு உலை விபத்து பற்றி பார்க்கலாம்.

அணு உலையில் இந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் கேட்காத கேள்வி ஒன்னு இருக்கு. அது

அணு உலை எல்லாம் சரியாத்தான் கட்டியிருக்கு என சொல்றீங்க.
பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் வராத இடத்தில் கட்டியிருக்கு என சொல்றீங்க.

ஆனா யாராச்சும் அந்த இடத்துல குண்டு வச்சுட்டா?
அணு உலைக்கு வைக்கலீன்னாலும் அதோட கண்ட்ரோல் ரூம்முக்கு வச்சுட்டா என்ன செய்ய?
குண்டு கூட வேணாம் போர் வந்து மேலேருந்து குண்டு வீசினா என்ன செய்ய?
இல்லாட்டி 9/11 தாக்குதல் மாதிரி விமானத்தோடு மோதினா?

ஆபத்து தானே? (எப்படி எல்லாம் எதிர் தரப்புக்கு எடுத்து சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்குது  :-))))) )

சரியான கேள்வியே. இதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.

மிக எளிமையான தீர்வே. மொத்த அணு உலையும் ஒரு பெரிய காங்கிரீட் கட்டிடத்திற்குள் இருக்கும். வெளியில் இருந்து எதுவும் உள்ளே போகாது, உள்ளே இருந்தும் எதுவும் வெளியே வராது. என்ன குண்டு போட்டாலும் எதுவும் ஆகாது.

இதை செர்னோபில் போன்ற விபத்துக்களுக்கு அப்புறம் கத்துக்கிட்டாங்க. இப்பவும் புகுஷிமாவில் அணு உலை பார்க்கமுடியும். ஆனால் கூடங்குளத்திலோ மற்ற இந்திய அணு உலைகளிலோ பார்க்கமுடியாது. நமக்கு தெரிவது இந்த காங்கரீட் கட்டிடமே.

ராஜசங்கர்
(Rajasankar)

Srimoorthy.S

unread,
Jun 21, 2012, 10:18:37 AM6/21/12
to panb...@googlegroups.com

ஹா ஹா ஹா. இந்த அளவுக்கு கேள்வி கேக்க எல்லாராலும் முடியாது.

உலையை கான்கிரீட்டால முழுசா மூடிட்டா வெப்பத்தை எப்படி பயன்படுத்துவதாம்?

அச்சு !!!

unread,
Jun 21, 2012, 10:24:08 AM6/21/12
to panb...@googlegroups.com
2012/6/21 Srimoorthy.S <srimoo...@gmail.com>

ஹா ஹா ஹா. இந்த அளவுக்கு கேள்வி கேக்க எல்லாராலும் முடியாது.

உலையை கான்கிரீட்டால முழுசா மூடிட்டா வெப்பத்தை எப்படி பயன்படுத்துவதாம்?


கான்க்ரீட்டோட சைடு வாக்குல, 11/2இன்ச்க்கு ஓட்டைய போட்டு அதுல ஒரு 11/2இன்ச் பி.வி.சிய சொருகி, அதுக்குள்ள வயரை வெப்பம் முட்டுற வரைக்கும் சொருகி, அதில இருந்து வெப்பத்தை எடுத்து ட்ரான்ஸ்ஃபார்மர்ல கனக்ட் பண்ணி (வழியில வெப்பத்தை,மின்சாரமா கன்வர்ட் பண்ற ப்ராசஸ் முடிஞ்சிடும்) அந்த கரண்ட்ட டிஸ்ட்ரிப்யூட் பண்ணுவாங்க..
 


 



--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


Srimoorthy.S

unread,
Jun 21, 2012, 10:42:02 AM6/21/12
to panb...@googlegroups.com

சீரியஸாவா?
பிவிசியேதானா?
வயரை வெப்பமூட்டணுமா?

Raja sankar

unread,
Jun 21, 2012, 10:47:50 AM6/21/12
to panb...@googlegroups.com
அச்சு காமெடிக்கு சொல்றார்.

ஆக்சுவலி அந்த டிசைன் எல்லாம் போட்டா போரடிக்கும். வெப்பத்தை வெளியே எடுத்துப்போகும் அமைப்பும் இதே போன்ற பாதுகாப்பில் தான் இருக்கும்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/21 Srimoorthy.S <srimoo...@gmail.com>

அச்சு !!!

unread,
Jun 21, 2012, 10:52:29 AM6/21/12
to panb...@googlegroups.com
2012/6/21 Srimoorthy.S <srimoo...@gmail.com>

வயரை வெப்பமூட்டணுமா?


வயரை வெப்பமூட்ட தேவைஇல்லை, வெப்பம் முட்டனும். அதாவது பிவிசி வழியா வயரை கொஞ்ச கொஞ்சமா உள்ள சொருகனும், உள்ள இருக்கிற வெப்பம் அந்த வயர்ல படற அளவுக்கு சொருகனும், எப்போ அந்த வெப்பம் வயரல படுதோ அத்தோட உள்ள சொருகிறத நிறுத்திட்டு வெளிய மின்சாரம் எடுக்க ஆரம்பிச்சிடனும்..


 

Snabak Vinod (SV)

unread,
Jun 21, 2012, 11:40:13 AM6/21/12
to பண்புடன்
கூடங்குளம் அணு உலை வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
 
 

கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் உய்ர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.

கூடங்குளம் அணு உலை தொடர்பான 7 வழக்குகளின் விசாரணை சென்னை உய்ர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜோதி மணி, துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது கூடங்குளம் அணுஉலை தொடர்பான உயர்மட்டக் குழுவின் அறிக்கை மற்றும் நிபுணர் கமிட்டி அறிக்கைகளை மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும், அணு உலை விவகாரத்தில் இந்தியா – ரஷ்யா ஒப்பந்த அறிக்கையின் விவரமும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் மத்திய அரசுக்கு எழுப்பிய கேள்விகள் பற்றிய விவரம் பின்வருமாறு : 

சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிதாக தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டதா என்றும், அணு உலை பதப்படுத்துதல் தொடர்பான 2 நிபுணர் கமிட்டிகளிடையே முரண்பாடு ஏன் என்றும் கேள்விகளை எழுப்பினர். மேலும், முதல் கமிட்டி 6 டிகிரி வெப்பம் எனவும், இரண்டாவது கமிட்டி 7 டிகிரி வெப்பம் எனவும் கூறியது ஏன் என்றும், ரேடியேஷன் விதிப்படி அணு உலை அமைப்பு பின்பற்றப்பட்டுள்ளதா என்றும் கேள்விகளை எழுப்பினர்.

மேலும் இரண்டாவது நிபுணர் குழு அறிக்கையினை ஏற்றுக்கொள்வீர்களா என்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடங்குளத்திற்கு நீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்பினர். இதேபோன்று சுனாமிக்குப் பிறகு அணு உலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிபதிகள் கேள்விஎழுப்பினர். மேலும் இந்த வழக்கை வரும் 26ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இத்தகைய கேள்விகளால் மத்திய மாநில அரசுகளிடம் பதில் இல்லை என தெரிகிறது. அதனால் கூடங்குளம் விடயத்தில் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. 

Srimoorthy.S

unread,
Jun 21, 2012, 11:52:18 AM6/21/12
to panb...@googlegroups.com

அட. அவ்வளவுதானா அணு உலை.

மோரு

unread,
Jun 21, 2012, 11:59:42 AM6/21/12
to panb...@googlegroups.com
எல நீ என்ன பெரிய படிப்பாளி சுபைரா ஆயிட்டியா உம்ம ரோல் என்னவே  மொக்கை போடுறத விட்டுட்டு....எங்கடா நண்பன காணோம்னு பார்த்தா இங்கன வந்து பேசிகிட்டு இருக்கவ.....

2012/6/21 Srimoorthy.S <srimoo...@gmail.com>

அட. அவ்வளவுதானா அணு உலை.



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Srimoorthy.S

unread,
Jun 21, 2012, 12:01:13 PM6/21/12
to panb...@googlegroups.com

புது டெக்னாலஜியோன்னு நெனச்சிட்டேன். கொஞ்சம் லேட்டாத்தான் காமெடின்னு புரிஞ்சிகிட்டேன். :)

போரோ காம்ப்ளிகேட்டடோ உங்க புரிதலை மேலோட்டமாவாவது சொல்லுங்க. எனக்கு கொஞ்சம் தீப்பொறி தேவை. அதை நீங்க தந்தா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன்.

வெப்பம் கொண்டு செல்லப்படும் பாதையும் அதைப்போல பாதுகாப்பானது எனிலும் வெப்பத்தை பயன்படுத்த முடியாது என்பது முன்வந்த என் சந்தேகத்தின் நீட்சியாக உள்ளது.

Srimoorthy.S

unread,
Jun 21, 2012, 12:06:37 PM6/21/12
to panb...@googlegroups.com

எதாச்சும் கத்துக்கலாம்னு பாத்தா நட்பு விட மாட்டேங்குது. :)

Raja sankar

unread,
Jun 21, 2012, 12:07:17 PM6/21/12
to panb...@googlegroups.com
சிலருக்கு எவ்வளவு முறை எப்படி சொன்னாலும் புரிவதில்லை.

இந்த இழை அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான விளக்கங்கள் கேள்விகளுக்கு என பல முறை பலர் சொல்லிய பின்பும் இழையில் வந்து குறுக்குச்சால் ஓட்டித்தான் தங்களின் இருப்பை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் போலும்.

தனி இழை தொடங்கி அதிலே கொண்டு போய் இந்த குப்பை கூளங்களை போட்டால் என்ன?


ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/21 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
Jun 21, 2012, 12:14:36 PM6/21/12
to panb...@googlegroups.com


2012/6/21 Raja sankar <errajasa...@gmail.com>

 

தனி இழை தொடங்கி அதிலே கொண்டு போய் இந்த குப்பை கூளங்களை போட்டால் என்ன?
 
 
:)))))))
 
நடப்பு செய்தியை அணு உலை ஆபத்தில்லை என்ற ஏமாற்று இழையில் போட்டால் தப்பா? :)))))

Raja sankar

unread,
Jun 21, 2012, 12:19:06 PM6/21/12
to panb...@googlegroups.com
திருந்தாத ஜென்மங்கள்

எவ்வளவு சொன்னாலும் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து நன்றாக போய் கொண்டிருக்கும் இழையில் கும்மி அடித்து பிரச்சினை செய்ய வேண்டும்.

அப்போது தான் தின்ன சோறு செரிக்கும் போல. பாவம்

ராஜசங்கர்
(Rajasankar)

Snabak Vinod (SV)

unread,
Jun 21, 2012, 12:27:17 PM6/21/12
to panb...@googlegroups.com


2012/6/21 Raja sankar <errajasa...@gmail.com>

திருந்தாத ஜென்மங்கள்
 
:)))) [நல்ல வார்த்தகைகள் விவாதங்களை செம்மைப் படுத்தும், மனிதத்தை வளர்க்கும் என்று நம்புகிறேன் :)]
 
ஏன் முரணாக என்ன வேண்டும்?
 
//சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிதாக தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டதா என்றும், அணு உலை பதப்படுத்துதல் தொடர்பான 2 நிபுணர் கமிட்டிகளிடையே முரண்பாடு ஏன் என்றும் கேள்விகளை எழுப்பினர். மேலும், முதல் கமிட்டி 6 டிகிரி வெப்பம் எனவும், இரண்டாவது கமிட்டி 7 டிகிரி வெப்பம் எனவும் கூறியது ஏன் என்றும், ரேடியேஷன் விதிப்படி அணு உலை அமைப்பு பின்பற்றப்பட்டுள்ளதா என்றும் கேள்விகளை எழுப்பினர்.

மேலும் இரண்டாவது நிபுணர் குழு அறிக்கையினை ஏற்றுக்கொள்வீர்களா என்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடங்குளத்திற்கு நீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்பினர். இதேபோன்று சுனாமிக்குப் பிறகு அணு உலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிபதிகள் கேள்விஎழுப்பினர். //
 
நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில்/முட்டுக்கொடுக்க ஏதாவது இருந்தால் இங்கே பதில் வரும் என்று எதிர்பார்த்தேன்... இல்லை இது இன்னாரின் இடம், அணு உலை ஆதரவாளர்கள் மட்டும் தான் வர வேண்டும் என்றால் நான் என வரப்போகிறேன்... :))

Raja sankar

unread,
Jun 21, 2012, 12:27:06 PM6/21/12
to panb...@googlegroups.com
தீப்பொறிதானா

பெட்ரோலே ஊத்திடுவோம். :-))

சரி சொல்றேன்.

அணு உலையில் இருந்து வெப்பத்தை இரண்டு விதமா எடுப்பாங்க.

1. ஹெவி வாட்டர்/ கனமான வாட்டர் மூலம். இது சாதாரண தண்ணி அதாவது குடிநீரில் இருந்து ஹைட்ரஜனின் ஐசோடோப்பான தண்ணீ மூலக்கூறை பிரித்து எடுத்தால் கிடைக்கும் நீர். ஆயிரம் கிலோ தண்ணியில் சில கிராம்கள் இருக்கும். இதை நேரடியா அணு உலைக்குள் செலுத்தி வெளியே நீராவியா எடுத்து அதை டர்பைனுக்கு செலுத்துவாங்க.

2. உருகிய தனிமம் மூலம். இது பொதுவா சோடியம் உப்பு உருகியதா இருக்கும். இதன் மூலம் அணு உலையில் இருக்கும் வெப்பத்தை வெளியே எடுத்து அதிலிருந்து நீராவி எடுத்து அது டர்பைனுக்கு போய் மின்சாரம் வரும்.

இதிலும் நீராவியே வரும் அல்லது அழுத்தப்பட்ட நீர் அதிக வெப்ப நிலையில் வரும் என பலவகை இருக்கு.

கீழிருக்கும் படங்களை பாருங்கள். பெரிய சுவர் போல் இருப்பது தான் நான் சொல்லும் அமைப்பு. அதற்குள் பம்புகள் என பலதும் இருப்பதை பார்க்கலாம்.



Inline image 1


Inline image 2


Inline image 3


ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/21 Srimoorthy.S <srimoo...@gmail.com>

போரோ காம்ப்ளிகேட்டடோ உங்க புரிதலை மேலோட்டமாவாவது சொல்லுங்க. எனக்கு கொஞ்சம் தீப்பொறி தேவை. அதை நீங்க தந்தா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன்.

Raja sankar

unread,
Jun 21, 2012, 12:34:16 PM6/21/12
to panb...@googlegroups.com
தமிழ் புரியவில்லையா இல்லை புரியாத மாதிரி நடிப்பா?

கோர்ட் கேட்டது? அரசு கேள்வி கேட்கவில்லை என்பதற்கும் அணு உலை தொழில் நுட்பத்திற்கும் என்ன சம்பந்தம்?

அறிவியல், தொழில் நுட்பம் பற்றி மட்டுமே பேசுகிறோம் என பலர் பல முறை சொன்ன பிறகும் அரசியல் தான் பேசுவேன் என அடம் பிடித்தால் அதற்கு பாராட்டா வரும்?

பண்புடனில் இழைக்கா பஞ்சம்? இல்லை அதற்கு காசு கீசு கேட்கிறார்களா?

தனி இழை தொடங்கி அதிலே இதையெல்லாம் போட்டால் யார் கேட்க போகிறார்கள்?

ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/21 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில்/முட்டுக்கொடுக்க ஏதாவது இருந்தால் இங்கே பதில் வரும் என்று எதிர்பார்த்தேன்... இல்லை இது இன்னாரின் இடம், அணு உலை ஆதரவாளர்கள் மட்டும் தான் வர வேண்டும் என்றால் நான் என வரப்போகிறேன்... :))

Ramesh Murugan

unread,
Jun 26, 2012, 11:58:52 PM6/26/12
to panb...@googlegroups.com

பாஸ்,
இந்த இழைக்கும் வந்துட்டுப் போங்க.

Raja sankar

unread,
Jun 27, 2012, 12:27:43 AM6/27/12
to panb...@googlegroups.com
அணு உலையில் இருந்து கழிவு நீர்.

அணு உலையில் இருந்து வெளியேறும் நீரால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு என இங்கு பலர் சொல்லக்கேட்டிருப்பீர்கள்

ஆனால் அணு உலையின் வடிவமைப்பை பார்த்தாலே இது நடக்க முடியாத ஒன்று என புரியும். அணு உலையின் குளிர்விக்கும் நீர் பாய்லர்களில் எப்படி பயன்படுகிறதோ, நிலக்கரி கொண்டு செயல்படும் அனல் மின்நிலையத்தில் எப்படி பயன்படுகிறதோ அப்படி மட்டுமே பயன்படும். ஆனால் இது ஏன் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது.

இது புரிதலில் இருக்கும் பிரச்சினை.

அணு உலையை அனல் மின்சாரம் போல் நினைத்து

நிலக்கரி = யுரேனியம்
ஆக்சிஜன் = யுரேனியம்

என்று நினைத்துக்கொள்வதால் வரும் பிரச்சினை. ஆனால் அணு உலையில் மின்சாரம் எடுக்க ஆக்சிஜன்/காற்று தேவையில்லை என தெரிந்தால் இது புரியும். ஆனால் இதிலே இன்னோன்றும் இருக்கிறது.

சென்னையின் கூவத்தை கடலில் விட்டுவிட்டு அதனால் குறையும் மீன் வளத்திற்கு கல்பாக்கத்தை காரணமாக சொல்வது. நாம் பயன்படுத்தும் சோப்பு, கிருமிநாசினிகள் என பலவும் கூவம் வழியாக கடலுக்கே செல்கினறன. அதனால் விளையும் அபாயங்கள் பல. ஆனால் இதை வசதியாக மறைந்துவிட்டு அணு உலையின் மீது பழிபோடுவது எளிதான செயல் என்பதால் இது நடக்கிறது.


ராஜசங்கர்
(Rajasankar)

Raja sankar

unread,
Jun 27, 2012, 12:28:40 AM6/27/12
to panb...@googlegroups.com
மனம் ஒரு குரங்கு.
அப்பப்போ தடிய காமிச்சாத்தான் வேலை செய்யும்.

நன்றி ரமேஷ்

ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/27 Ramesh Murugan <rames...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jun 27, 2012, 12:37:58 AM6/27/12
to panb...@googlegroups.com
கருமம் கருமம்......

2012/6/27 Raja sankar <errajasa...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 27, 2012, 12:51:15 AM6/27/12
to panb...@googlegroups.com
சுபைரு... பப்ளிக் பப்ளிக்.....

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



Raja sankar

unread,
Jun 27, 2012, 1:18:45 AM6/27/12
to panb...@googlegroups.com
ஆசிப்போட சிஷ்ய கேடி ச்சீ கோடி அப்படீன்னு நீருபிக்கறீங்க.

:-)))))

ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Jun 27, 2012, 3:21:16 AM6/27/12
to panb...@googlegroups.com
கண்ட பயலும் கண்டதையும் சொல்றதுக்கெல்லாம் ஏன்யா என் பேரை இழுக்குறிங்க?? ;-)
ஏம்ல சுபைரு.. தடியைக் காட்டுனாத்தான் மனம் வேலை செய்யும்னு சொன்னதுக்கு ஏம்ல
கருமம்னு சொன்னே..கருமம் புடிச்சவனே? பாரு ராஜாசங்கர் அண்ணாச்சி என்னைல்லா திட்டுதாரு??

சரி சரி இந்த இழைல வேண்டாம்
விட்டுடலாம்னு சொன்னா அதுக்கும் ஏதாவது காரணம் கண்டு புடிப்பானுங்க

Ahamed Zubair A

unread,
Jun 27, 2012, 3:24:26 AM6/27/12
to panb...@googlegroups.com


2012/6/27 Asif Meeran AJ <asifm...@gmail.com>

கண்ட பயலும் கண்டதையும் சொல்றதுக்கெல்லாம் ஏன்யா என் பேரை இழுக்குறிங்க?? ;-)

ராஜசங்கரை கண்ட பயன்னு சொல்றீங்க.... அவரு மனம் ஒரு குரங்குன்றாரு.... அவரு எதைக் கண்டபின்ன இப்படி பேசுதாருன்னு வெளங்கல எனக்கு....
 
ஏம்ல சுபைரு.. தடியைக் காட்டுனாத்தான் மனம் வேலை செய்யும்னு சொன்னதுக்கு ஏம்ல
கருமம்னு சொன்னே..கருமம் புடிச்சவனே? பாரு ராஜாசங்கர் அண்ணாச்சி என்னைல்லா திட்டுதாரு??

நீங்க தானே அண்ணாச்சி பண்புடனைப் பலரும் பார்வையிடுகிறார்கள். இலக்கிய அரங்கில் தீவிரமாக கவனிக்கப்படுதுன்னு சொன்னீங்க... இப்ப அந்த குழுமத்தில ஒரு தப்பான செய்தி வந்தா “சின்னத் தலைமைப் பண்பாளரா” என்னோட கருத்தை தெரிவிக்கணுமா இல்லையா? 

அதைத்தானே செஞ்சேன்...
 
சரி சரி இந்த இழைல வேண்டாம்
விட்டுடலாம்னு சொன்னா அதுக்கும் ஏதாவது காரணம் கண்டு புடிப்பானுங்க

:)))))) 

ஸ் பெ

unread,
Jun 27, 2012, 3:33:25 AM6/27/12
to panb...@googlegroups.com
விழியன் கூட சொன்னாரு.. ஊட்டி இலக்கிய கூட்டத்தில்  பண்புடன் பெயர் வலம் வந்ததாம்... 

2012/6/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நீங்க தானே அண்ணாச்சி பண்புடனைப் பலரும் பார்வையிடுகிறார்கள். இலக்கிய அரங்கில் தீவிரமாக கவனிக்கப்படுதுன்னு சொன்னீங்க... இப்ப அந்த குழுமத்தில ஒரு தப்பான செய்தி வந்தா “சின்னத் தலைமைப் பண்பாளரா” என்னோட கருத்தை தெரிவிக்கணுமா இல்லையா? 


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Raja sankar

unread,
Jun 27, 2012, 7:24:41 AM6/27/12
to panb...@googlegroups.com
விளங்கிடும்.

:-)))))))))

ராஜசங்கர்
(Rajasankar)



2012/6/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நீங்க தானே அண்ணாச்சி பண்புடனைப் பலரும் பார்வையிடுகிறார்கள். இலக்கிய அரங்கில் தீவிரமாக கவனிக்கப்படுதுன்னு சொன்னீங்க... இப்ப அந்த குழுமத்தில ஒரு தப்பான செய்தி வந்தா “சின்னத் தலைமைப் பண்பாளரா” என்னோட கருத்தை தெரிவிக்கணுமா இல்லையா? 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 27, 2012, 7:27:40 AM6/27/12
to panb...@googlegroups.com
விளங்கிடும்னு நம்பித்தானே சொல்றீங்க.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/6/27 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Jun 27, 2012, 7:29:58 AM6/27/12
to panb...@googlegroups.com
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த ஆட்டைக்கு நான் வரல.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/6/27 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Ramesh Murugan

unread,
Jun 27, 2012, 8:12:39 AM6/27/12
to panb...@googlegroups.com
பாஸ்,
தொடர்ந்து எழுதுங்க.

2012/6/27 Raja sankar <errajasa...@gmail.com>

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த ஆட்டைக்கு நான் வரல.

ராஜசங்கர்
(Rajasankar)

Reply all
Reply to author
Forward
0 new messages