கண்ணதாசன்

221 views
Skip to first unread message

sadayan sabu

unread,
Oct 17, 2014, 12:18:45 AM10/17/14
to panbudan

மனமிருந்தால் பறவைக் கூட்டில்
மாந்தர் வாழலாம்
எனச் சொன்ன கவிஞருக்கு இன்று பிறந்த நாள்

வாருங்கள் வாழ்த்துவோம்

shylaja

unread,
Oct 17, 2014, 12:27:43 AM10/17/14
to பண்புடன்

'மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்..'

என்கிறார் இறைவன் கண்ணனைப்பாடும் பாசுரத்தில் ஆழ்வார் பெருமான்எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான்ஆணிப்பொன்என்று அழைக்கிறோம். ஆணிமுத்தும்  உயர்வானது.

 

  ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலேஎன்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்

 

கண்ணதாசனும் தமிழ்மாதமானஆனியில்  பிறந்த ஆணிமுத்து! இயற்பெயரிலும் முத்தினைக்கொண்டவர்! தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாய் திகழ்பவர் !

 



.திரை இசைப்பாடல்களில் தனி  முத்திரை பதித்த ஒப்பற்ற கவிஞர்! மனவாசமும் கண்டவர் வனவாசமும்  கொடுத்தவர்! இந்தியமண்ணின் உமர்கய்யாம்!  இயேசுகாவியமும் அளித்தவர் அர்த்தமுள்ள இந்துமதமும் படைத்தவர்!

 

 

 கண்ணதாசனே!கங்கைவெள்ளம் நீங்கள்!  தங்களைப்பற்றி ஆயிரம்வரிகளுக்கு மிகாமல் எழுதுவதும் சாத்தியமா என்ன! கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!

 

உங்களைப்பற்றி எழுதும் பொழுதிலும் உங்களது பாடல்வரிகளைத்தான்  உதாரணம் காட்டவேண்டி இருக்கிறது பார்த்தீர்களா!  உங்கள்  பாடல்களில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு ! அவை யாவும்  மனதில் அசைபோடுகிறது! சீர்மிகு செந்தமிழை  சிகரத்திற்குக்கொண்டு சென்றவரல்லவா இந்த செட்டிநாட்டுக்கவிஞர்!

. எளிமை என்பது எவரையும் வசீகரிக்கும்  மாயம்! அவரது பாடல்களில் எளிமை தான் மிகுதி.அதனால்தான்  பாமரனையும் போய் பற்றிக்கொண்டன! என்னையும் மிகக்கவர்ந்து இன்று எழுதவைக்கிறது!


தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான  வாழ்வியல்
 தத்துவங்களைவாழ்வின்வளைவுகளை நெளிவுகளை சுழிவுகளை வார்த்தைகளில் வள்ளலாய் வடித்துக்கொடுத்தவரை வெறும் சிறுகட்டுரைக்குள் சிறைப்படுத்தவும் முடியாதுதான். ஆயினும் கதம்பமாலையின் மலர்க்கூட்டமிடையில், தன்பச்சை இலை மேனிவாசனையை வீசும் மரிக்கொழுந்தாய் கவிஞர்புகழ்பாடும் இந்தக்கட்டுரை, இங்கும் மணக்கும்எனும் நம்பிக்கை!

 

கலை என்பதே  ஆழ்மனம் சார்ந்ததுதான் அதற்கு படிப்பறிவு அவசியமில்லை படித்தபலருக்கு கலையை  ரசிக்கத்தெரிவதில்லை. எங்கள் கவிஞர் எந்தப்பள்ளிச்சாலையிலும் சென்று பட்டம்  வாங்கியதில்லை ஆனாலும் அறிவு  அவர்  மூளையில்  சாலை போட்டுக்கொண்டது.

 

 


 
நூல்களை அல்ல நூலகங்களையே  படித்துமுடித்தவர்..அவரது வாழ்க்கை அனுபவம்  வாகான  வார்த்தைகளில் கவிதையாய் வடிவெடுத்தன.


 
ஐந்தாயிரம்  பாடல்களுக்கு மேல் எழுதிய   கரங்கள், அரத்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியதும்  நாத்திகக்கறை நீங்கப்பெற்று நானிலமெங்கும் அவரது புகழை இன்னமும் உயர்த்தின!


.
வீணையின் சுபாவம்  அதனை  மீட்டி முடித்தபின்னும் அதிர்வுகளை சிலக்கணம் பரப்பிக்கொண்டிருக்கும்.

காலவீணையை உந்தன் கவிதைவரிகளில்மீட்டிவிட்டுப்

போய்விட்டாய்  காவியக்கவிஞனே !இனியகானத்தின் அதிர்வு இன்னமும்  ஒலித்துக்கொண்டே இருக்கிறது!




தாய் பாடும் தாலாட்டில் தமிழ் மணம் கமழ்ந்து வருகின்றது. தாய்க்குக் குழந்தை எப்படித் தெரிகிறதா? கவிஞர் பாடலில் காண்போம் அதை!

‘‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே வளர்

பொதிகை மலைதோன்றி

மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே’’

 

தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம்! தமிழுடன் குழந்தையை ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் கவிஞரின் வார்த்தைகளில் பெருமையுடன் வெளிப்படுகிறது. 


 

சிறுகூடற்பட்டியிலே பிறந்து,  சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த  மகா கவிஞனுக்கு கம்பன்மீதான காதல் அலாதியானது!

கம்பன்       தன் காவியத்தின் ஒருபாடலில்,

மழைவண்ணத்து அண்ணலே உன்

கைவண்ணம் அங்கு கண்டேன்

 கால்வண்ணம் இங்கு கண்டேன்’

என்பதாக இராமனைப்புகழ்ந்தபடிஅப்பாடலில் எட்டு வண்ணம் வைத்தான் என்றால் கண்ணதாசனோ பால் வண்ணம் பருவம் கண்டு என்று தொடங்கும் பாட்டில் முப்பத்திரண்டு வண்ணம் வைத்துள்ளார்.! 

 

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்பது கண்ணதாசன் வாக்கு


தனது பாடலின் நடுவே. அவளது  திருப்பாவையின் ஒருபாசுரமான,குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி...என்றவரிகளின் தாக்கமாய், குத்துவிளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க மெத்தைவிரித்திருந்து மெல்லியலாள் காத்திருக்க..என்கிறார் தான் இயற்றிய திரைப்பாடலொன்றில்.


திருப்பாவை மற்றும் திருவெம்பாவையை  மனதில்கொண்டு  வடித்த’ தைப்பாவை’ நூல் இலக்கிய உலகின் அணையாவிளக்கு.


என்னைக்கவலைகள்   தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்றான் பாரதி.

 

  ‘பின்னிவரும் இன்னலைச் சன்னல்வழிவீசியே பிணமாய்புதைக்கவேண்டும்என்றார் கண்ணதாசன்.

 

.பாரதியைப்போலவே கவிஞருக்கும்   உண்டு  ஒரு கனவு ..ஆம்,அந்த முண்டாசுக்கவிஞன்,

 

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்

எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்

அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்

என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்

பாலித் திடவேணும்(காணி நிலம்வேண்டும்)


என்றான்.

அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்

பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!
 

 

என்கிறார் நம் கவிஞர்!

’தொழத்தக்க இளைய கன்னி’ என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது.

 

அத்திக்காய்காய் காய் ஆலங்காய்வெண்ணிலவே என்ற பாடலில் இரண்டு அர்த்தங்கள் வரும்படி எழுதி இருப்பார்.அத்திக்காய் என்பது ஒரு காய் என்று ஒரு பொருள். அடுத்து,அத்திக்காய் எனில் அந்த திக்காய் (திசையில்)

காய் என்றால் நிலா காய்கிறது என்பதுபோல.பொருள். பாடல்முழுவதும் காய்களோடு விளையாடி இருப்பார்.ஆமாம் அத்திக்காயை ஏன் முதல் வார்த்தையாய் கொண்டுவந்தார் தெரியுமா?அத்தி மரம்  சுக்கிரனின் ஆகர்ஷண சக்தி கொண்ட மரம்.சுக்கிரன்  காதல்தேவதை!


காதலை . நிறைவேற்றுவதில் சுக்கிரனின் பங்கு  மகத்தானது. காதலுக்குரிய கிரகம் இவரே. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம் -

 

அத்தி மரத்திலிருந்து வெளிப்படும்  ஒரு வகையான ஆற்றல்  தம்பதிகளின் பிணக்கைத் தீர்த்துவைக்கும்  என்பது ஜோதிடர்களின்  நம்பிக்கை. திரைப்படத்தில் தம்பதிகள் சிறு ஊடலில் பாடும் பாடல் இது  ..எத்தனை விஷய ஞானம் இருந்திருந்தால் கவியரசர் இந்தப்பாடலுக்கு அத்தியை முதல் வார்த்தையாக அமைத்திருப்பார்!' Amazing'என்பார்கள் ஆங்கிலத்தில்! வியப்பில் வாய் அடைத்துத்தான் போகிறது!


’மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்சொல்லாமல் கொள்ளாமல் வந்தது! என்று எதிர்பாராமல்வரும்’ காதலுணர்வைக்குறிப்பிடுகிறார்! காதலைக்காமமின்றி பலப்பலகவிதைகளில்கொடுத்த கவிஞரின் கைவண்ணம் பற்றி எழுத நீள்வானம் தான் ,தாள் ஆக  வரவேண்டும்!


 



அடுத்து  வாழ்க்கை எங்கும் வாசல்கள் இருப்பதை  இந்தப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

 

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை திறந்தால் வாழலாம்!!!

(வாழ நினைத்தால் வாழலாம்)

 வாழ நினைக்கவேண்டுமாம்  நினைத்துவிட்டால் வாழலாம் என்கிறார். ’எண்ணியமுடிதல்வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்என்றான் பாரதி! கவிஞரின் இந்த வரிகள் எளிமைதான் ஆனால் அர்த்தம் கடல் அளவு ஆழமானது. நிறைய சிந்தித்தாலே ஒழிய இந்தவரிகளை நாம் உணர இயலாது.

    

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும்
 அவை யாவும் நீ ஆகுமா,அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?  

 

 இப்படி, தாய்மையை போற்றும் வரிகளிலேதான் எத்தனை நீர்மை !


இன்னும் மனித மன இயல்பை பட்டவர்த்தனமாய் காட்டும் வரிகளாய்.......

ஆடை இன்றி பிறந்தோமே - ஆசை இன்றி பிறந்தோமா? ஆடி முடிக்கையிலே அள்ளி சென்றோர் யாருமுண்டோ?’’என  நம் கன்னத்தில் அறைவதுபோல கேள்விகள் வருகின்றன.


சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலான,

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
வணங்காமல் நீ வாழலாம்!

என்று ஆரம்பமாகும்  பாடலை அறியாதார் யார்!

. 

. இன்று எந்த தன்னம்பிக்கை நூல்களை எடுத்துக்கொண்டாலும்தன்னை அறிவதுஅதாவது SELF-REALISATION தான் அடிப்படை. அதாவது “KNOW YOURSELF - 

இதை உன்னை அறிந்தால்  என்னும் பாடலில் எளிமையாக சொல்லிவிட்டார்.

 

 புராணஇதிகாச ,இலக்கியங்களில் கவிஞர் கண்ணதாசனுக்கு ஆழ்ந்து அறிவு! ஆம்  ஒருசில பாடல்களில் ,அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு தெரியும்.

 

காலங்களில் அவள் வசந்தம், மாதங்களில் அவள் மார்கழி..

 (பகவத்கீதை)


ண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை

கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர் 
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா..(பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;

அருகுள து  ட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்

(மனோன்மணியம் - )

 

தோள் கண்டேன் தோளே கண்டேன்’ (கம்பர்)

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்

நதி செய்த குற்றம் இல்லை’ (கம்பர்)

அன்றொரு நாள் இதே நிலவில்’ (பாரி மகளிர்)

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி(பட்டினத்தார்)


இப்படிப்பல!


நாளைப் பொழுதை இறைவனுக் களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!!

 

சோர்வில் துவளும் மனத்திற்கு இதைவிட ஆறுதலான  வார்த்தைகளை கண்ணதாசனைத்தவிர வேறு யாராலும் தர இயலாது..

 

இன்னமும்  சொல்லிக்கொண்டேபோகலாம்  ஆனால் கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடுமா என்ன?! சர்க்கரை சமுத்திரமாக தமிழ்நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் அற்புதக்கவிஞனுக்கு  இறுதியாக  அவரது வார்த்தைகளினாலேயே  முடிப்பதே சிறப்பு.


நான் நிரந்தரமானவன் அழிவதில்லைஎன்றார்! ஆம், தமிழைப்போல், கவியரசர் கண்ணதாசனும் நிரந்தரமாக அனைத்துத்தமிழ் நெஞ்சங்களிலும்  வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

 

 

(நன்றி வல்லமை இணையதளம்  இரண்டாம் பரிசு கொடுத்து  பாராட்டியமைக்கு)



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 
அன்புடன்
ஷைலஜா


இனிய உளவாக இன்னாத கூறல் 
கனி இருப்பக்காய்கவர்ந்தற்று

sadayan sabu

unread,
Oct 17, 2014, 12:35:02 AM10/17/14
to panbudan

யக்கோவ்,
கண்ணதாசன் பாதையில் சொல்வதென்றால்
படித்தேன் ரசித்தேன் மலைத்தேன்

shylaja

unread,
Oct 17, 2014, 12:38:08 AM10/17/14
to பண்புடன்
நன்றி சாபண்ணே:)  உங்க  பாணில சொன்னாதான் ரசிப்பேன்:)  
 
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறயாரம்மா?

சிறப்பான இந்தவரிகளுக்கு  பிறப்பெடுத்துக்கொடுத்தவை கம்பனின் காவியவரிகளே  என்கிறார்  கண்ணதாசன்  கம்பனின் அந்தப்பாடல் என்ன  யாராவது சொல்லுங்கள்!

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

shylaja

unread,
Oct 17, 2014, 12:51:29 AM10/17/14
to பண்புடன்
பாரதிபாட்டின் பெரும் தாக்கத்தில்  கண்ணதாசன் எழுதின திரைப்பாடலை சொல்லுங்க பார்க்கலாம்! ்  க்ளூவேண்டுமானால் தரேன்:) சாபண்ணே   உங்களுக்கு இது ஈசி:)

Tthamizth Tthenee

unread,
Oct 17, 2014, 12:59:59 AM10/17/14
to பண்புடன்
“புத்தகங்கள் அறிவுக்கே உணவை யூட்டிப்
 புதிதான காட்சிகளை மனத்தி லேற்றி
 வித்தகனாய்ச் செய்யுமென இலக்கி யத்து
 வேலிக்குள் அடியெடுத்து வைத்தி டாது


 நத்துமனப் பசிதீரப் படித்துப் பார்த்து
 நாலைந்து பேர்களுக்கு விளக்கிக் கூறின்
 அத்தனையும் அறிவாகி மனத்தி லேறும்;
 அறிவாளி எனும் பெயரை உலகம் நல்கும்!”

- கவிஞர் கண்ணதாசன்

என்று  மொத்தக் கருத்த்தையும்  உள்ளடக்கி  எழுதிய கண்ணதாசன்

எழுதாத  தொடாதவையே  இல்லை எனலாம்


அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

எனும் பாடலில்

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலைக் 
கட்டி வைத்தவன் யாரடா?
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்ற போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே  
மனதினால் வந்த நோயடா

என்று   மனித ஜாதிக்கு  துயர் யாவுமே  அவரவர் மனம்தான் காரணம் என்று  சொல்லிச் சென்றார்  கண்ணதாசன்



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



shylaja

unread,
Oct 17, 2014, 1:03:46 AM10/17/14
to பண்புடன்
மனித  ஜாதியின் மனநோயை அழகாக சொல்லிவிட்ட கவிஞரின் வைரவரிகளை தேனி சார் எடுத்துவைத்தமைக்கு நன்றி. நீங்கள் கவிஞரைப்பார்த்துப்பேசி இருக்கிறீர்களா   திரைத்துறையில்  தாங்கள் இருப்பதால் கேட்கிறேன் தேனிசார்.

இனியவன்

unread,
Oct 17, 2014, 1:33:53 AM10/17/14
to panb...@googlegroups.com
2014-10-17 10:07 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
சிறப்பான இந்தவரிகளுக்கு  பிறப்பெடுத்துக்கொடுத்தவை கம்பனின் காவியவரிகளே  என்கிறார்  கண்ணதாசன்  கம்பனின் அந்தப்பாடல் என்ன  யாராவது சொல்லுங்கள்!

நதியின் பிழையன்று நறும் புனலின்மை???

 


--
ப்ரியங்களுடன்,
இனியவன்.
[தன்னை அறிய தனக்கொரு கேடில்லை. உன்னையே நீ அறி]

இனியவன்

unread,
Oct 17, 2014, 1:34:53 AM10/17/14
to panb...@googlegroups.com
2014-10-17 10:21 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
பாரதிபாட்டின் பெரும் தாக்கத்தில்  கண்ணதாசன் எழுதின திரைப்பாடலை சொல்லுங்க பார்க்கலாம்! ்  க்ளூவேண்டுமானால் தரேன்:) சாபண்ணே   உங்களுக்கு இது ஈசி:)

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா 
மார்பு துடிக்குதடி.

shylaja

unread,
Oct 17, 2014, 1:45:07 AM10/17/14
to பண்புடன்
மிகச்சரி
முழுப்பாடலும் அதன் பின்னனிக்கதையும்  கம்பராமாயணத்தில் இப்படி..
 
முடிசூட்டல்  இராமனுக்கே என  தசரதன் முடிவு செய்கிறான்.  கூனி இதனைக்கேட்டு  வெகுண்டு எழுகிறாள்.

 கைகேயியைக்கண்டு அவளைத்தூண்டிவிடுகிறாள். அவளும் 
தசரதனிடம் முன்னர் கேட்ட வரங்களை நினைவுபடுத்தி அவற்றை இப்போது பெற்றுக்கொண்டு அதனபடி  பிறகுஅவள் பேசியவிதம் அனைவரும் அறிந்த கதைதான்

ஆனால்  அதுகேட்டு இலக்குவன் குதிக்கிறான் கோபத்தில்.

அதைக்கம்பனின்  தமிழ்  கூறுவதைப்பாருங்கள்..கோபத்தில் குதிப்பது இலக்குவன் என்பதை குதித்தாடும் சொற்கள்  கூவுவதில் தெரிகிறது அல்லவா?


வலக்கார் முகம்என் கையதாக அவ்வானுளோரும்
விலக்காரவர் வந்துவிலக்கினும் என்கை வாளிக்கு
இலக்கா எரிவித்துலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குலக்காவலு மின்றுனக்கு யான்தரக் கோடியென்றான்"

(தேவர்களே வந்தாலும் அவர்களை என் அம்புகளுக்கு இரையாக்குவேன்,
ஈரேழு உலகங்களையும் யான் அளித்து உனக்கு முடி நான் சூட்ட
நீ பெற்றுக்கொள்வாயாக! - இதுதான் இதன் பொருள்)


தம்பியின் கோபம் கண்டு நம்பி  திகைக்கிறான்.
அவனை  சமாதானப்படுத்துகிறான்

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான்
மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

shylaja

unread,
Oct 17, 2014, 1:46:46 AM10/17/14
to பண்புடன்
உன் கண்ணில் நீர்வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
 
நான் இதை நினைத்தேன்   உங்கள்பாடலும் சரியாக இருக்கிறது

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Tthamizth Tthenee

unread,
Oct 17, 2014, 2:44:13 AM10/17/14
to பண்புடன்
திரு கண்ணதாசனின்  பாடல்கள்  என்றுமே  எனக்கு இனியவை

அவரை  நேரில் ஒரு முறை தூரத்திலிருந்து  கண்டிருக்கிறேன்

ஆனால் அவரிடம் நெருங்கிப் பேச  வாய்ப்பு கிட்டவில்லை


ஆனால் திரு கண்ணதாசன் அவர்களைப் பற்றிய கவிதை ஒன்று  எனக்குத் தெரிந்த வரையில்  எழுதினேன்

அந்தக் கவிதையை   கூடிய விரைவில் அளிக்கிறேன்


​​


அன்புடன் 
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




R.VENUGOPALAN

unread,
Oct 17, 2014, 4:09:06 AM10/17/14
to பண்புடன்
காட்டு மனமிருந்தால் கவலை மறைந்து விடும்
கூட்டைத் திறந்துவிட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விளங்கும் இட்டோம் கடமை என்றழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகின்றோம்...

அதென்ன நாலு விலங்கு? குமுதம் பத்திரிகையில் கேட்டிருந்தார்கள். 

'அவன் நாலு எழுத்துப் படிச்சவன், நாலு பேறு சொல்றதைக் கேளு, நாலு இடத்துலே விசாரி'ன்னு சொல்றதில்லையா...? நாலுன்னா நாலுன்னு அர்த்தமில்லை நிறையன்னு அர்த்தம்...அத மாதிரி நாலு விளங்குன்னா நிறைய விலங்குன்னு அர்த்தம்.... டக்குன்னு பதில் சொல்லியிருந்தாரு கவிஞர்

'மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா...?
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைத்ததை அறிவாய் இல்லையா..?'

இதை விட எளிமையா சினிமாப்பட்டுலே கவிதையை கொண்டு வர யாராலே முடியும்..?

மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் சங்கீதக் குயில்கள்...
மேகம் இல்லாமல் இடியும் இல்லாமல் மழையில் நனைகின்ற கிளிகள்...

சிருங்காரத்தில் சொட்ட சொட்ட நனைந்த ஒரு கவிஞன் தான் இப்படியெல்லாம் எழுத முடியும். 

'பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா...
சோதனையை பங்கு வைச்சா சொந்தமில்லே பந்தமில்லே...

வாழ்க்கையின் எதார்த்தத்தை இதை விட அழகா யாரு புட்டுப் புட்டு வைக்க முடியும்...?

மாதாவுடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவும் கைசலித்து விட்டானே நாதா இருப்பையூர் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமல் கா...என்ற பட்டினத்தார் பாட்டை....

பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் 
படைத்தவன் கைசலித்து சோர்ந்தானம்மா மீண்டும்
பாவியொரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா... என்று எளிமைப்படுத்தியதும் அவர் தான்.

கண்ணதாசன் வாழ்க்கையின் பல இன்ப துன்பங்களில் உடனிருப்பது போல தோன்றுவது தவிர்க்க முடியாமல் போய் விட்டது. 

Tthamizth Tthenee

unread,
Oct 17, 2014, 7:04:55 AM10/17/14
to பண்புடன்
கண்ணதாசனைப் பற்றி  நான் எழுதிய கவிதை

​​
திரு கண்ணதாசனின்  பாடல்கள்  என்றுமே  எனக்கு இனியவை. அவரை  நேரில் ஒரு முறை தூரத்திலிருந்து கண்டிருக்கிறேன். ஆனால் அவரிடம் நெருங்கிப் பேச  வாய்ப்பு கிட்டவில்லை.  ஆனால் திரு கண்ணதாசன் அவர்களைப் பற்றிய கவிதை ஒன்று  எனக்குத் தெரிந்த வரையில்  எழுதினேன்  
இதோ கீழே அந்தக் கவிதை

திரு கண்ணதாசனின்  பாடல்கள்  என்றுமே  எனக்கு இனியவை. அவரை  நேரில் ஒரு முறை தூரத்திலிருந்து கண்டிருக்கிறேன். ஆனால் அவரிடம் நெருங்கிப் பேச  வாய்ப்பு கிட்டவில்லை.  ஆனால் திரு கண்ணதாசன் அவர்களைப் பற்றிய கவிதை ஒன்று  எனக்குத் தெரிந்த வரையில்  எழுதினேன் 

இதோ கீழே அந்தக் கவிதை

 

 

​​

" கண்ணதாசன் "

 

எட்டடுக்கு  மாளிகையில் இவனிருக்கவில்லை

ஏழு பிள்ளை பெற்றவர்க்கே  எட்டாய்ப் பிறந்த பிள்ளை

ஆழ்கடலில் முத்தெடுக்கும் மீனாய் வாழுகின்ற வரையில்

தமிழ்க் கடலில் மூழ்கியே முத்தெடுக்க


தாழ்ந்தே உயர்ந்தே  வாழுகின்ற போதினிலே

வறுத்தெடுத்த துயரத்தையும்  வாட்டுகின்ற

கோமகனாய்  வாழ்ந்தே அனுபவ முத்துக்களை

அள்ளியே வாரித் திரட்டி  மனமென்னும் கூடையிலே


போட்டு வைத்து  யார் வந்து கேட்டாலும் வாரி

இறைத்து  வறுமையிலே  தாழ்ந்தாலும்  செல்வ

வளத்திலே வாழ்ந்தாலும்  சந்தனமும் வெந்தணலும்

பூக்கடையாய் மனதிருத்தி அத்தனையும் அனுபவமே 


என்றுணர்ந்து  சரம் சரமாய் அனுபவ முத்துக்களை

கோர்த்து வைத்து விண் முட்டப் பாட்டெழுதி

மண்ணிலே புகழ்கொண்ட கவி மன்னன்

மூன்றெழுத்தில் மூச்சு வைத்த தான்தோன்றிக் கவிஞன்,

 

எட்டாத உயரத்திலும் தமிழ் மணம் பரப்பி

கிட்டுகின்ற சொற்களையே  தமிழ்க் கள்ளாக்கி

சுட்டுகின்ற  மதுவினையே சுடுகின்ற நெருப்பினையே

கோப்பையிலே ஏந்திக் குடித்தே தேவர்களை


சந்திக்க புறப்பட்டான் கோப்பையிலே வாழ்ந்த இவன்

தமிழ்க் கோட்டையிலே கவிஞனானான்

தமிழெட்டி எட்டி அவன் பாக்கோனாக மாறி 

தன் பாட்டையையே  பாட்டாக மாற்றி வாழ்ந்தான்


முதல் முதலில் நாத்திகமாய் வாழ்ந்திருந்தும்

ஆத்திகத்தின் வாசலிலே கவி படைத்தான்

நாத்திக வாதத்தில்  ஒன்றுமில்லை என்றுணர்ந்து

ஆத்திக வேதத்தின்  உரையெழுதி கீதை தனையே


எழுதி கண்ணனிடம் பித்தானான் கண்ணனுக்கே

சொத்தானான்  முத்தான  பாட்டெழுதி சத்தான

வித்துக்களை சொத்துக்களாய்க் குவித்தான்

தொடக்க முதல் முடிவு வரை தானெழுதி 


ஆத்திகமே முடிவில்லாப் பேரொளி என்றெழுதி  

முடிவில்லாப் புகழடைந்தான் மூத்த கவி இவனானான்

தமிழ் பெருமை கொண்டது தரணியிலே இவன்

புகழ் பாடி படிக்கின்ற பாடமெல்லாம் பரவசத்தை


ஊட்டும்  வடிக்கின்ற  கவிதைகளும்  பா ரசத்தை

காட்டும்  இலக்கியத்து வாசலிலே மழைக்காக

ஒதுங்கியவன் முற்றும் நனைந்தபடி மூழ்கி

மூழ்கி முத்தெடுத்தான் வலக்கையால் வாழ்த்தி


நம்மை வரவேற்கும் நாமகள் கலைமகளருள் புரிந்தாள் 

முடிசூடா மன்னனிவன் இனி ஒருவன் உண்டா

இறையே உன் படைப்பில் இவனோர் அதிசியம்

இவன் உனக்கே புரியாத  ரகசியம்


இனிக்கும்  கவியான கண்ணதாசன் என்னும்

இவன்   இன்னொரு சிவன் அடி முதல் முடிவரை 

இவன் தொடாத இலக்கியமா பாடாத பாட்டுண்டா 

வன் போல் பாட்டெழுத உனக்குண்டோ திறமை

உன்னை நீ அறிய முயன்று பார்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

​​
அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




மஞ்சூர் ராசா

unread,
Oct 17, 2014, 7:47:53 AM10/17/14
to பண்புடன்
மிக அழகான, அருமையான நினைவஞ்சலி ஷைலஜா.

நம் காலத்தில் பாரதியாரும் கண்ணதாசனுமே மாபெரும் கவிஞர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

sadayan sabu

unread,
Oct 17, 2014, 9:29:31 AM10/17/14
to panbudan

சமரசம்( இஸ்லாமிய )  மாத இதழ் ஆசிரியரின் பதிவிலிருந்து


கண்ணதாசனும் ஹிஜாபும்
~~~~~~~~~~~~~~~~~~~~

ஹிஜாப் பற்றி இரண்டு கட்டுரைகள்
அண்மையில் வாசித்தேன்.

ஹிஜாப் அல்லது பர்தா என்றதும் நம் இதயங்களில்
சட்டென்று நினைவுக்கு வருவது குர்ஆனின்,
“உங்கள் பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ளுங்கள்” எனும் வசனம்தான்.

இந்தக் குர்ஆன் வசனத்தை அடுத்து
ஹிஜாப் தொடர்பாக எனக்கு எப்போதும்
நினைவுக்கு வருவது கண்ணதாசன் எழுதிய
ஒரு திரைப்படத்தின் பாடல் வரிகள்..

“கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா?
உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா?”

ஹிஜாபின் நோக்கத்தை இந்த நான்கு வரிகளில்
உள்ளடக்கிவிட்டார் கவியரசர்.

சரி, கவியரசருக்கு இந்தச் சிந்தனை
எப்படி உதித்தது என்று ஆராய்ந்தபோது
பண்டைய தமிழ் இலக்கியங்களில்
ஹிஜாபை வலியுறுத்தும் பல செய்திகள் உள்ளன என்பதும்
அவற்றை உள்வாங்கிக் கொண்டுதான்
கவியரசர் இதை எழுதினார் என்றும் தெரிய வந்தது.

By Sirajul Hussain

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க, ரூம் இல்லை ஹால் போட்டு யோசிப்பாய்ங்களோ

அது கிடக்கட்டும், எந்த பண்டைய தமிழ் இலக்கியங்கள் என யாராச்சும் சொல்லுங்களேன்

sadayan sabu

unread,
Oct 17, 2014, 10:05:45 AM10/17/14
to panbudan

1972 ம் ஆண்டு கிறித்துவக் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருந்த ஆண்டு. விடுதி மாணவர்கள் Alistair Mclain,Fredrick Forsyth,Mario Puzo, Sidney Sheldon என படித்துக் கொண்டிருந்த காலத்தில் தீபம் பார்த்தசாரதி,கல்கி,சாவி,நாடோடி என படித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ, விடுதி தமிழ்ப் பேரவைக்கு என்னை துணைத் தலைவராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். நானும் ஓ.பி போல தேம்பி அழுது (ஆனந்தக் கண்ணீர்) பதவியை ஏற்றுக் கொண்டேன்.

பேரவை தொடக்க விழாவிற்கு கவிஞர் கண்னதாசனை அழைப்பது என முடிவாயிற்று. நானும் , பேரவைத் தலைவரும் கவிஞரை அழைக்க தாம்பரத்திலிருந்து சென்னைக்கு வந்தோம். கவிஞர் மயிலையில் அவருக்கு சொந்தமான  Hotel  ல் (கவிதா ) தங்கியிருந்தார். அனுமதி பெற்று சந்தித்து, தகவலைச் சொன்னோம். வருகிறேன் எனச் சம்மதித்தார். சாப்பிட்டு விட்டு போங்கள் என வற்புறுத்தினார், மறுத்து விட்டு கல்லூரிக்கு திரும்பி விட்டோம்.

அமிஞ்சிக்கரயிலிருந்து ஆழ்வார் பேட்டை வருவதற்கே எனக்கு ஏ.சி கார் வேண்டும், ஸ்டார் ஹோட்டல் பிரியாணி வேண்டும் எனக் கேட்கும் தலைவர்களிடமிருந்து இவர் வித்தியாசமானவர், சொந்தக் காரிலேயே  தாம்பரம் வந்தார். கூட்டம் துவங்கியது, விடுதி ஹாலில் இருந்தது மொத்தம் 30 மாணவர்கள் மட்டுமே. எங்களுக்கு வெட்கமாக போய்விட்டது. கணீரென்ற குரலில் பேச்சைத் துவங்கினார். மடை திறந்தது போல பேச்சு,

புஸ் புஸ் என நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு திரியும் தமிழ் மாணவர்கள், கவிஞரின் பேச்சில் கவரப்பட்டு இருக்கையில் வந்தமர்ந்து ரசிக்க துவங்கினார்கள். தான் எழுதிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த பாடல்,

பார்த்தேன், சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்


 பாட்டுத்தான் எனச் சொல்லி அப்பாடலை ராகத்தோடு பாடிக்காட்டினார்.

சாவே உனக்கொருநாள் சாவு வராதா எனக் கேட்ட கவிஞனை சாவு தழுவிக் கொண்டது.

Reply all
Reply to author
Forward
0 new messages